திங்கள், 24 பிப்ரவரி, 2014

யஜுர் வேதம் ... கோமுகம்

புகைப்படம்: உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின?

அதர்வண வேதம் ....பிரச்ன உபநிஷதம் 

அறிவைத் தேடிய ஆறு பேர்

1.1 ஓம் பரம்பொருளுக்கு வணக்கம். ஹரி ஓம். பரத்வாஜரின் மகனான சுகேசன், சிபியின் மகனான சத்தியகாமன், சூரியனின் பேரனான கார்க்கியன், அச்வலரின் மகனான கௌசல்யன், விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன், காத்யரின் மகனான கபந்தி ஆகியோர் இறைவனை நாடுபவர்கள்; இறையுணர்வில் நிலைபெற்றவர்கள். அவர்கள் கடவுளைத் தேடினார்கள். தெய்வ முனிவரான பிப்பலாதர் கடவுளைப்பற்றி முற்றிலும் விளக்கக்கூடியவர் என்று அறிந்ததும் கையில் விறகுடன் அவரை அணுகினர். 

1.2. பிப்பலாத முனிவர் அவர்களிடம், உரிய முறையில், இங்கே இன்னும் ஒரு வருடம் வாழுங்கள். குறிப்பாக, தவத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் செயல்பாட்டுன்கூடிய நம்பிக்கையுடனும் வாழுங்கள், அதன்பிறகு நீங்கள் விரும்புவதுபோல் கேள்விகளைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரியுமானால் நிச்சயமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறோம் என்று கூறினார்

உலகம் (3-16)
பிப்பலாத முனிவர் உபதேசித்ததுபோல் ஆறு மாணவர்களும் ஒரு வருடம் தவ வாழ்வில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவரை அணுகி முதல் கேள்வியைக் கேட்கின்றனர். ஆன்மீகத்தை நாடி ஆறு பேரும் புறப்பட்டிருந்தாலும் அவர்களின் பாதை படிப்படியாக அமைவதை இந்த உபநிஷதத்தில் காண்கிறோம். எதையும் விட்டுவிட்டோ, திடீரென்றோ தாவுகின்ற முயற்சி அவர்களிடம் காணப்படவில்லை. கண்ணுக்குத் தெரிகின்ற, நாம் வாழ்கின்ற உலகத்தைப் பற்றியதாக அவர்களது முதல் கேள்வி அமைந்துள்ளது. 

எல்லாம் எங்கிருந்து வந்தன? 

3. ஒரு வருடத் தவ வாழ்விற்கு பிறகு கபந்தி பிப்பலாத முனிவரை அணுகி அவரிடம், தெய்வ முனிவரே! இந்த உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? என்று கேட்டார்.

4.கபந்தியிடம் பிப்பலாத முனிவர் கூறினார்:
உயிரினங்களைப் படைக்க விரும்பிய படைப்புக் கடவுள் தவத்தில் ஈடுபட்டார், அதன்பிறகு ஆகாசத்தையும் பிராணனையும் படைத்தார். இவை இரண்டும் சேர்ந்து பல்வேறு உயிரினங்களை எனக்காக உற்பத்தி செய்யும் என்று உணர்ந்திருந்தார் அவர். 

சுவாமி விவேகானந்தரின் விளக்கத்தைக் காண்போம்

இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே...
எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியினால்.... இந்த பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் வெளிப்பாடுகளே.
சுவாமிஜி ஜடப்பொருளை ஆகாசம் என்றும், ஆற்றலை பிராணன் என்றும் குறிப்பிடுகிறார்; இயக்கம், அதிர்வு, எண்ணம் என்று நாம் அறியும் சக்திகள் எல்லாம் பிராணனுடைய பல்வேறு நிலைகள். உருவம், தடை என்று நாம் அறியும் ஜடப்பொருள் எல்லாம் ஆகாசத்தின் வேறு நிலைகள்.புகைப்படம்: ஆன்ம அனுபூதியும் அதன் பலனும்: 

யஜுர் வேதம் ....ஈசாவாஸ்ய உபநிஷதம்...

ஆன்மாவாகத் தன்னைத் உணர்ந்தவன், அதாவது ஆன்ம அனுபூதி பெற்றவன் பெறும் பலன் என்ன? அவன் உலகின் துன்பங்களிலிருந்து விடுபடுகிறான்.

6. யார் எல்லா உயிரினங்களையும் ஆன்மாவிலும், ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ அவன் யாரையும் வெறுப்பதில்லை.

7. ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கின்ற ஒருமையுணர்வைப்  பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மயக்கம்? என்ன கவலை?

பிடிக்காத ஒன்றை வெறுக்கிறோம். ஒன்றை மற்றொன்றாகக் காண்பதால் மனமயக்கம் உண்டாகிறது. விரும்பிய ஒன்று கிடைக்காதபோது கவலை ஏற்படுகிறது. ஆன்ம அநுபூதி பெற்றவனுக்கு இந்த மூன்றும் இல்லை என்று மந்திரம் 6,7 கூறுகிறது.

ஆன்ம அநுபூதி, இறைக் காட்சி என்றெல்லாம் கூறப்படுவது ஓர் அக அனுபவம், உணர்வில் ஒரு மாற்றம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தையும், வாலிபனும், வயோதிகனும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் காண்கின்ற உலகம் ஒன்றல்ல. அவர்களின் காட்சி வெவ்வேறாக அமைவதற்குப் புறவுலகம் காரணம் அல்ல; அவர்களது உணர்வின் விரிவே, உணர்வின் மாற்றமே காரணம். வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கிறோம்.சுற்றிருப்பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடம் நிகழ்ந்தது--- நமது உணர்வு விரிந்தது.

ஆன்ம அனுபூதியில் உணர்வு விரிந்து அதன் எல்லைகளைத் தொட்டுவிடுகிறது. இனி எந்த மாற்றமும் ஏற்பட முடியாத அறுதி மாற்றம் அது. இனி விரிய முடியாத அளவுக்கு விரிந்தவிட்ட நிலை அது. பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது; அவர்கள் எங்கும் தன்னையே தனது உணர்வையே காண்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பற்று இல்லாததால் உலகின் இன்ப துன்பங்கள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை. 'எனது செல்வத்திற்கு எல்லையே இல்லை. ஆனால் உண்மையில் "எனது" என்று எதுவும் இல்லை. எனவே, மிதிலை நகரமே பற்றிஎரிந்தால் கூட நான் எதையும் இழப்பதில்லை' என்று மிதிலை மன்னர் ஜனகர் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது. ஆன்ம அநுபூதி பெற்றவர்கள், இவ்வாறு சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமைகளைக் கடந்துவிடுகிறார்கள்; வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி  விடுகிறார்கள்.உபநிஷத்துகளின் வலிமை .......

உபநிஷத்துக்கள் எப்படி ஒருவனுக்கு வலிமையைக் கொடுத்து பயத்தை போக்கும் என்பதை புரிய வைப்பதற்கு சுவாமி விவேகானந்தர் ஒரு நிகழ்வை சித்தரிக்கின்றார்.

"என் மனக்கண் முன்னே, பேரரசர் அலெக்ஸ்சாண்டர் , சிந்து நதிக்கரையில் நின்று கொண்டு, அங்கே காட்டில் வசித்துக் கொண்டிருக்கும் நமது சந்நியாசி ஒருவருடன் உரையாடுகின்ற சித்திரம் விரிகிறது. ஒரு கற்பாறையின் மீது அமர்ந்து கொண்டு, சந்நியாசியின் பேரறிவைக் கண்டு வியந்து, பொன் ஆபரணங்களைக் காட்டி கிரீஸ் நாட்டிற்கு வந்து விடுங்கள் உங்களுக்கு பதவி தருகிறேன் என்று ஆசையூட்டுகிறார். அந்தத் துறவியோ பொன்னையும் மணியையும் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து, பின் சிரித்தபடி, எதுவும் வேண்டாம் என்று நிராகரித்து விடுகிறார். பேரரசர் அலெக்ஸ்சாண்டர் கோபமுற்று எழுந்து, ஒரு பேரரசனுக்கே உரிய அதிகாரத்துடன், "நீங்கள் என்னுடன் வரவில்லை என்றால், உங்களை இப்போதே ... இங்கேயே கொன்று விடுவேன்" என்கிறார். அந்தத் துறவி குபீர் என்று சிரித்து, "இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை இனி உன் வாழ்க்கையில் பேசாதே..... என்னை யார் கொல்ல முடியும்? நீ ... என்னைக் கொன்று விடுவாயா? வியாபார உலகத்தின் பேரரசரான நீ என்னைக் கொன்று விடுவாயா? முடியாது, நா பிறவாத ....அழியாத ஆத்மா ... நான் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. நான் எல்லைகள் அற்றவன். எங்கும் நிறைந்திருப்பவன். அனைத்தும் அறிந்தவன் நீ .... என்னைக் கொண்டுவிடுவாய? சிறு பிள்ளை போல் பேசுகிறாய் என்றார். இதுதான் வலிமை.....
புகைப்படம்: முக்தி பற்றி அனுமனுக்கு ஸ்ரீராமரின் உபதேசம்....

முக்திகோபநிஷத்து ....யஜுர் வேதம் .......

15-17. ஸ்ரீராமா! முக்தி ஒன்றே என்று சிலர் கூறுகின்றனர். சிலர் உம்முடைய நாம பஜனையாலும் காசியில் தாரக மந்திர உபதேசத்தாலும் முக்தி என்கின்றனர். வேறு சிலர் சாங்கிய யோகத்தால் என்றும் பிறர் பக்தி யோகத்தால் என்றும் கூறுகின்றனர். சிறந்த ரிஷிகள் சிலர் வேதாந்த மகா வாக்கியங்களின் அர்த்த விசாரத்தால் முக்தி என்கின்றனர். ஸாலோகம் முதலிய பாகுபாட்டால் நான்காகவும் கூறுகின்றனர்.

18-25. ஸ்ரீராமர் கூறியது: பாரமார்த்திகமான கைவல்ய முக்தி என்பது ஒன்றே என்றாலும் துர்நடத்தையுடையவன் கூட என்னுடைய நாம பஜனையால் ஸாலோக முக்தியை அடையக்கூடும்; அவன் வேறு உலகங்களுக்கு செல்வதில்லை. உலகின் பிரம்ம நாடியான காசியில் ஒருவன் மரித்தால் அவன் என்னுடைய தாரக மந்திரத்தை பெறுகிறான். அம்மனிதன் மீண்டும் பிறவாத முக்தியை அடைவான். காசியில் எங்கு மரணமெய்தினாலும் மகேஸ்வரன் எங்கு தோன்றி அந்த ஜீவனுடைய வலது காதில் என்னுடைய தாரக, மந்திரத்தை உபதேசிக்கிறார். மிச்சமில்லாமல் பாவக்குவியல் நாசமாகி அந்த ஜீவன் என் ஸ்வருபத்தை  அடைகிறான். இது ஸாலோகிய  ஸாரூபய முக்தி. ஸதாசாரமுடைய துவிஜன் என்னிடத்தில் பக்தி செய்தால் அவன் அடைவது ஸாலோக-ஸாமீப-ஸாரூப்ய  முக்தி. குரு உபதேசித்த மார்க்கத்தில் என்னுடைய குணங்களை இடைவிடாது தியானிக்கும் துவிஜன் பிரமரகீட நியாயத்தால் என்னிடம் லயத்தை அடைகிறான். அது மங்களமான பிரம்மானந்தத்தை அளிக்கும் ஸாயுஜ்ய முக்தி. இங்ஙனம் என்னுடைய உபாசனையால் நான்கு விதமான முக்தி  அடையப்படுகிறது ..

தொடரும் ......ஆன்ம அனுபூதியும் அதன் பலனும்:

யஜுர் வேதம் ....ஈசாவாஸ்ய உபநிஷதம்...

ஆன்மாவாகத் தன்னைத் உணர்ந்தவன், அதாவது ஆன்ம அனுபூதி பெற்றவன் பெறும் பலன் என்ன? அவன் உலகின் துன்பங்களிலிருந்து விடுபடுகிறான்.

6. யார் எல்லா உயிரினங்களையும் ஆன்மாவிலும், ஆன்மாவை எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ அவன் யாரையும் வெறுப்பதில்லை.

7. ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கின்ற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மயக்கம்? என்ன கவலை?

பிடிக்காத ஒன்றை வெறுக்கிறோம். ஒன்றை மற்றொன்றாகக் காண்பதால் மனமயக்கம் உண்டாகிறது. விரும்பிய ஒன்று கிடைக்காதபோது கவலை ஏற்படுகிறது. ஆன்ம அநுபூதி பெற்றவனுக்கு இந்த மூன்றும் இல்லை என்று மந்திரம் 6,7 கூறுகிறது.

ஆன்ம அநுபூதி, இறைக் காட்சி என்றெல்லாம் கூறப்படுவது ஓர் அக அனுபவம், உணர்வில் ஒரு மாற்றம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தையும், வாலிபனும், வயோதிகனும் ஒரே உலகில்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் காண்கின்ற உலகம் ஒன்றல்ல. அவர்களின் காட்சி வெவ்வேறாக அமைவதற்குப் புறவுலகம் காரணம் அல்ல; அவர்களது உணர்வின் விரிவே, உணர்வின் மாற்றமே காரணம். வீட்டினரை மட்டுமே நேசிக்கின்ற நாம் நமது உணர்வு விரியவிரிய படிப்படியாக சுற்றத்தினரை, நண்பர்களை, பிறரை, நாட்டை, உலகை நேசிக்கிறோம்.சுற்றிருப்பவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; மாற்றம் நம்மிடம் நிகழ்ந்தது--- நமது உணர்வு விரிந்தது.

ஆன்ம அனுபூதியில் உணர்வு விரிந்து அதன் எல்லைகளைத் தொட்டுவிடுகிறது. இனி எந்த மாற்றமும் ஏற்பட முடியாத அறுதி மாற்றம் அது. இனி விரிய முடியாத அளவுக்கு விரிந்தவிட்ட நிலை அது. பிரபஞ்சமே அவர்களுடையதாகி விடுகிறது; அவர்கள் எங்கும் தன்னையே தனது உணர்வையே காண்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பற்று இல்லாததால் உலகின் இன்ப துன்பங்கள் எதுவும் அவர்களைப் பாதிப்பதில்லை. 'எனது செல்வத்திற்கு எல்லையே இல்லை. ஆனால் உண்மையில் "எனது" என்று எதுவும் இல்லை. எனவே, மிதிலை நகரமே பற்றிஎரிந்தால் கூட நான் எதையும் இழப்பதில்லை' என்று மிதிலை மன்னர் ஜனகர் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது. ஆன்ம அநுபூதி பெற்றவர்கள், இவ்வாறு சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி, நன்மை-தீமை போன்ற இருமைகளைக் கடந்துவிடுகிறார்கள்; வெறுப்போ, மனமயக்கமோ, கவலையோ இல்லாதவர்களாகி விடுகிறார்கள்.             

புகைப்படம்அனுமனுக்கு ஸ்ரீராமரின் உபதேசம்.....

முக்திகோபநிஷத்து ....யஜுர் வேதம் .......

4-6. 'ஸ்ரீராமா! நீர் ஸச்சிதானந்த வடிவான பரமாத்மா. ரகுசிரேஷ்டரே! இப்பொழுது உம்மைப் பன்முறை வணங்கி முக்தியை நாடி உம்முடைய ஸ்வருபத்தை உள்ளபடி அறிய விரும்புகிறேன். ஆயாசமில்லாமல் உம்முடைய கிருபையால் பிறவிப் பற்றினின்று விடுபட்டு எப்படி நான் முக்தி அடைவேனோ அதை உபதேசித்தருளுங்கள்.

7. 'தோள் வலிபடைத்தோனே! நீ கேட்டது நல்ல கேள்வி. தத்துவத்தை கூறுகிறேன் கேள். நான் வேதாந்தத்தில் நிலைபெற்றிருக்கிறேன். வேதாந்தத்தை உபாசனை செய்'.

8-9. ரகுசிரேஷ்டரே ! வேதங்கள் எவை? எங்குள்ளன? அதை கூறுங்கள். 'ஹனுமானே! வேதாந்தத்தின் இருப்பை சுருக்கிக் கூறுகிறேன் கேள். விஷ்ணுவாகிய என்னுடைய மூச்சு காற்றிலிருந்து விஸ்தாரமான வேதங்கள் தோன்றின. எள்ளினுள் எண்ணெய்போல் வேதங்களில் வேதாந்தம் அடங்கியுள்ளது.'

10. 'ஸ்ரீராமா! ராகவா! வேதங்கள் எத்தனை? சாகைகள் எத்தனை? கிருபை செய்து கூறுங்கள்?

11-14. ஸ்ரீராமர் கூறியது:- ருக்வேதம் முதலிய பாகுபாட்டால் வேதங்கள் நான்கு எனப்படுகின்றன. அவற்றுள் சாகைகள் அநேகம், உபநிஷதங்களும் அநேகம். ருக்வேத சாகைகள் 21. யசுர்வேத சாகைகள் 109. சாம வேத சாகைகள் 1000. அதர்வண வேத சாகைகள் 50. ஒவ்வொரு சாகையிலும் ஒவ்வொரு உபநிஷத்து உண்டு. என்னிடம் பக்தி வைத்து அவற்றுள் ஒரு ருக்கை ஒருவன் படித்தாலும் முனிவர்களாலும் அடைவதற்கரிய ஸாயுஜ்யப் பதவியை அடைவான்.'                     

புகைப்படம்: அஷ்டாங்க யோகத்தை (ராஜ யோகம்)  பற்றி வேதம் கூறுவது:

அதர்வண வேதம் ..... சாண்டில்யோபநிஷத்து  ....

1. சாண்டில்யர் அதர்வணரை அணுகி 'ஆத்ம லாபத்திற்கு வழிவகுக்கும் அஷ்டாங்க யோகத்தை (ராஜ யோகம்) கூறியருளுங்கள் என்று கேட்டார். 

2. அதர்வணர் கூறலானார்: யமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டு அங்கங்கள். அவற்றுள் யமம் பத்து, நியமம் பத்து, பிராணாயாமம் மூன்று பிரத்யாஹாரம் ஐந்து, தாரணை ஐந்து, தியானம் இரண்டுவகை, சமாதி ஏகரூபம்.

அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மசரியம், தயை, ஜபம், பொறுமை, திடம், மிதமான ஆஹாரம், பரிசுத்தம் என யமம் பத்து. 

தவம், சந்தோஷம், ஆஸ்திக்யம், தானம், ஈஸ்வர பூஜை, ஸித்தாந்த சிரவணம், அதர்மத்தில் வெட்கம், நிச்சியபுத்தி, ஜபம், விரதானுஷ்டானம் என நியமம் பத்து.

ஸ்வஸ்திகம், கோமுகம், பத்மம், வீரம் ஸிஹிமம், பத்ரம், முக்தம், மயூரம், வஜ்ராசனம்  என  முக்கியமான ஆசனங்கள் எட்டு.

யம நியமத்துடன் கூடிய புருஷன் பிராணாயாமத்தைக் கைக்கொள்ள வேண்டும். வலது நாசியால் பன்னிரண்டு மாத்திரை மூச்சை உள்ளே இழுத்துப் பூரகம்; அதே அளவு உள்ளே அடக்கி வயிற்றில் அக்னி மண்டலத்தை தியானித்து கும்பகம்; அதே அளவு மூச்சை மெதுவாக இடது நாசியால் வெளியே விட்டு ரேசகம். இங்ஙனம் பிராணனையும் அபானனையும் சமப்படுத்துதல் பிராணாயாமம்.

வெளிவிஷயங்களில் சஞ்சரிக்கும் இந்திரியங்களை பலாத்காரமாக உள்முகப்படுத்துதல் பிரத்யாஹாரம். வேதத்தில் விதிக்கப்பட்ட நித்ய கர்மத்தைப் பயனை விரும்பாமல் அனுஷ்டித்தல் பிரத்யாஹாரம். எதெதைப் பார்த்தாலும் அதையெல்லாம் ஆத்மா எனக் கருதுதல் பிரத்யாஹாரம். பதினெட்டு மர்ம ஸதானங்களில் வரிசையாக மனதை நிறுத்துதல் பிரத்யாஹாரம். பாதம், கட்டைவிரல், கால் மணிக்கட்டு, முழுங்கால், முழங்கால் சந்தி, துடை, அபானத்துவாரம், குறி, நாபி, இருதயம், கழுத்து, தொண்டைக்குழி, தாடை, மூக்கு, கண், புருவமத்தி, நெற்றி, உச்சி என்பவை அந்த ஸதானங்கள்.

ஆத்மாவில் மனதை நிறுத்துதல்; த்ஹாரகாசத்தில் வெளி ஆகாசம் அடங்கியதாகச் சிந்தித்தல்; பிருத்வியில் பிரம்மா, அப்புவில் விஷ்ணு, தேயுவில் ருத்ரன், வாயுவில் மகேச்வரேன், ஆகாசத்தில் சதாசிவன் என்ற பஞ்ச மூர்த்தி தியானம் என்ற படி தாரணை மூவ்வகைத்து. 

தியானம் ஸகுணம் நிர்க்குணம் என்று இருவகை.

சமாதி ஜீவாத்மா பரமாத்மாவில் அடங்கிய நிலை அறிவு அறிபவன் அறியப்படுவது என்ற தர்புடீ இல்லாதது. சுத்த சைதன்ய வடிவான பரமானந்தா நிலை.அஷ்டாங்க யோகத்தை (ராஜ யோகம்) பற்றி வேதம் கூறுவது:

அதர்வண வேதம் ..... சாண்டில்யோபநிஷத்து ....

1. சாண்டில்யர் அதர்வணரை அணுகி 'ஆத்ம லாபத்திற்கு வழிவகுக்கும் அஷ்டாங்க யோகத்தை (ராஜ யோகம்) கூறியருளுங்கள் என்று கேட்டார்.

2. அதர்வணர் கூறலானார்: யமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டு அங்கங்கள். அவற்றுள் யமம் பத்து, நியமம் பத்து, பிராணாயாமம் மூன்று பிரத்யாஹாரம் ஐந்து, தாரணை ஐந்து, தியானம் இரண்டுவகை, சமாதி ஏகரூபம்.

அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மசரியம், தயை, ஜபம், பொறுமை, திடம், மிதமான ஆஹாரம், பரிசுத்தம் என யமம் பத்து.

தவம், சந்தோஷம், ஆஸ்திக்யம், தானம், ஈஸ்வர பூஜை, ஸித்தாந்த சிரவணம், அதர்மத்தில் வெட்கம், நிச்சியபுத்தி, ஜபம், விரதானுஷ்டானம் என நியமம் பத்து.

ஸ்வஸ்திகம், கோமுகம், பத்மம், வீரம் ஸிஹிமம், பத்ரம், முக்தம், மயூரம், வஜ்ராசனம் என முக்கியமான ஆசனங்கள் எட்டு.

யம நியமத்துடன் கூடிய புருஷன் பிராணாயாமத்தைக் கைக்கொள்ள வேண்டும். வலது நாசியால் பன்னிரண்டு மாத்திரை மூச்சை உள்ளே இழுத்துப் பூரகம்; அதே அளவு உள்ளே அடக்கி வயிற்றில் அக்னி மண்டலத்தை தியானித்து கும்பகம்; அதே அளவு மூச்சை மெதுவாக இடது நாசியால் வெளியே விட்டு ரேசகம். இங்ஙனம் பிராணனையும் அபானனையும் சமப்படுத்துதல் பிராணாயாமம்.

வெளிவிஷயங்களில் சஞ்சரிக்கும் இந்திரியங்களை பலாத்காரமாக உள்முகப்படுத்துதல் பிரத்யாஹாரம். வேதத்தில் விதிக்கப்பட்ட நித்ய கர்மத்தைப் பயனை விரும்பாமல் அனுஷ்டித்தல் பிரத்யாஹாரம். எதெதைப் பார்த்தாலும் அதையெல்லாம் ஆத்மா எனக் கருதுதல் பிரத்யாஹாரம். பதினெட்டு மர்ம ஸதானங்களில் வரிசையாக மனதை நிறுத்துதல் பிரத்யாஹாரம். பாதம், கட்டைவிரல், கால் மணிக்கட்டு, முழுங்கால், முழங்கால் சந்தி, துடை, அபானத்துவாரம், குறி, நாபி, இருதயம், கழுத்து, தொண்டைக்குழி, தாடை, மூக்கு, கண், புருவமத்தி, நெற்றி, உச்சி என்பவை அந்த ஸதானங்கள்.

ஆத்மாவில் மனதை நிறுத்துதல்; த்ஹாரகாசத்தில் வெளி ஆகாசம் அடங்கியதாகச் சிந்தித்தல்; பிருத்வியில் பிரம்மா, அப்புவில் விஷ்ணு, தேயுவில் ருத்ரன், வாயுவில் மகேச்வரேன், ஆகாசத்தில் சதாசிவன் என்ற பஞ்ச மூர்த்தி தியானம் என்ற படி தாரணை மூவ்வகைத்து.

தியானம் ஸகுணம் நிர்க்குணம் என்று இருவகை.

சமாதி ஜீவாத்மா பரமாத்மாவில் அடங்கிய நிலை அறிவு அறிபவன் அறியப்படுவது என்ற தர்புடீ இல்லாதது. சுத்த சைதன்ய வடிவான பரமானந்தா நிலை                .
புகைப்படம்: ஆத்ம அனுபவத்தை பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர் வேதம் .....தேஜோபிந்து உபநிஷத்து....

மூன்றாவது அத்தியாயம்.

குமரன் தந்தை சிவனிடம்  ஆத்மானுபவத்தைப் பற்றிக் கூறும்படி கேட்டார்.

பரமசிவன் கூறியது:  நான் பரப்பிரம்மஸ்வரூபி, பரமானந்த  வடிவினன், ஞான வடிவினன். வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவன். நான் மாறுபாடற்றவன், என்றுமுள்ளவன். மாசற்ற ஸச்சிதினாந்தப் பொருள். எனக்கு உடலுமில்லை சிந்தையுமில்லை. நான் பார்க்கப்படும் பொருளாயில்லாமல் அனைத்தையும் பார்ப்பவனாயிருக்கிறேன். நானே வேறு விதமாகவும் உடல் படைத்தார்போலும் தோன்றுகிறேன். நானே சீடனைப்போலும் மூவுலகத்தையும் ஆசிரயித்தவனைப்போலும் காணப்படுகிறேன். 'நீ' என்பது 'அது' என்பதும் சிறிதளவும் என்னைக் காட்டிலும் வேறானதன்று. எல்லா உருவத்திலும் நானே இருக்கிறேன். எனக்கு இந்திரியங்கள் ஏதுமில்லை. ஸ்தூலம்  ஸூஷமம் காரணம் என்ற உடலும் இல்லை. சென்றது, நிகழ்வது, வருவது என்ற காலமும் இல்லை. முக்குணங்களும் இல்லை. நான் பரிசுத்தமான சத்ய ஸ்வருபி. எது மனதால் நினைக்கப்படுகிறதோ எது வாக்கினால் பேசப்படுகிறதோ அது 'அஸத்' உண்மைப் பொருளாகாது.

'அஹம் ப்ரஹ்மாஸ்மி' நான் பிரம்மமாயிருக்கிறேன். என்ற இந்த மந்திரம் காணப்படும் உலகிலுள்ள பாவத்தைப் போக்கும்; தேகத்திலுள்ள தோஷத்தை போக்கும்; சாவைப் போக்கும்; துவைத துக்கத்தைப் போக்கும்; கோபத்தின் வலிமையைப் போக்கும்; மனதின் திரிசலை நீக்கும்; அனாத்மா எனும் அசுரனை ஸம்ஹரிக்கும்; ஞானாந்தத்தை அளிக்கும். எல்லா மந்திரங்களையும் விட்டு 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' எனும் இந்த ஒரு மந்திரத்தை அப்பியசித்தால் போதும். உடனே மோட்சத்தை அடையலாம். இதில் அணுவளவும் சந்தேகமில்லை.   என்று கூறினார்....                                               ஆத்ம அனுபவத்தை பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர் வேதம் .....தேஜோபிந்து உபநிஷத்து....

மூன்றாவது அத்தியாயம்.

குமரன் தந்தை சிவனிடம் ஆத்மானுபவத்தைப் பற்றிக் கூறும்படி கேட்டார்.

பரமசிவன் கூறியது: நான் பரப்பிரம்மஸ்வரூபி, பரமானந்த வடிவினன், ஞான வடிவினன். வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவன். நான் மாறுபாடற்றவன், என்றுமுள்ளவன். மாசற்ற ஸச்சிதினாந்தப் பொருள். எனக்கு உடலுமில்லை சிந்தையுமில்லை. நான் பார்க்கப்படும் பொருளாயில்லாமல் அனைத்தையும் பார்ப்பவனாயிருக்கிறேன். நானே வேறு விதமாகவும் உடல் படைத்தார்போலும் தோன்றுகிறேன். நானே சீடனைப்போலும் மூவுலகத்தையும் ஆசிரயித்தவனைப்போலும் காணப்படுகிறேன். 'நீ' என்பது 'அது' என்பதும் சிறிதளவும் என்னைக் காட்டிலும் வேறானதன்று. எல்லா உருவத்திலும் நானே இருக்கிறேன். எனக்கு இந்திரியங்கள் ஏதுமில்லை. ஸ்தூலம் ஸூஷமம் காரணம் என்ற உடலும் இல்லை. சென்றது, நிகழ்வது, வருவது என்ற காலமும் இல்லை. முக்குணங்களும் இல்லை. நான் பரிசுத்தமான சத்ய ஸ்வருபி. எது மனதால் நினைக்கப்படுகிறதோ எது வாக்கினால் பேசப்படுகிறதோ அது 'அஸத்' உண்மைப் பொருளாகாது.

'அஹம் ப்ரஹ்மாஸ்மி' நான் பிரம்மமாயிருக்கிறேன். என்ற இந்த மந்திரம் காணப்படும் உலகிலுள்ள பாவத்தைப் போக்கும்; தேகத்திலுள்ள தோஷத்தை போக்கும்; சாவைப் போக்கும்; துவைத துக்கத்தைப் போக்கும்; கோபத்தின் வலிமையைப் போக்கும்; மனதின் திரிசலை நீக்கும்; அனாத்மா எனும் அசுரனை ஸம்ஹரிக்கும்; ஞானாந்தத்தை அளிக்கும். எல்லா மந்திரங்களையும் விட்டு 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' எனும் இந்த ஒரு மந்திரத்தை அப்பியசித்தால் போதும். உடனே மோட்சத்தை அடையலாம். இதில் அணுவளவும் சந்தேகமில்லை. என்று கூறினார்...
         புகைப்படம்: ஜீவன் உடலை விட்டுக் கிளம்பி எந்த வழியாக எப்படி செல்லுகிறது?

யஜுர் வேதம்  ........ஸீபாலோபநிஷத்து.......   

பதினோராவது கண்டம் 

ரைக்வர் (கோர ஆங்கிரஸராகிய) அவரை கேட்டது:

'பகவானே! விஞ்ஞானமயமான ஜீவன் உடலை விட்டுக் கிளம்பி எந்த வழியாக எப்படி செல்லுகிறது?' என்று வினாவினார்.

அவர் கூறிய விடை: 'இருதயத்தின் நடுவில் ரமா, அரமா, இச்சா, அபுனர்ப்பவா  என்று நான்கு நாடிகள் இருக்கின்றன. ரமா என்பது புண்ணியத்தின் பயனாக புண்ணியலோகத்திற்கு(அதற்கேற்ப மறுபிறவி)  ஜீவனை அழைத்து செல்லுகிறது. அரமா பாவத்தின் பயனாக பாவிகளின் உலகிற்கு (அதற்கேற்ப மறுபிறவி) அழைத்துச் செல்லுகிறது. இச்சா என்பது மரண காலத்தில் எதை நிணைக்கிறானோ அதற்குரிய நிலையை அடைகிறான். அபுனர்ப்பவா எனும் நாடியில் கிளம்பும் ஜீவன் விஞ்ஞானமய கோஷத்தைப் பிளந்து, தலை உச்சியைப் பிளந்து, பிறகு மனதைப் பிளந்து, பஞ்ச பூதங்களின் ஆதியைக் கடந்து, அக்ஷரத்தைக் கடந்து சாவைக் கடந்து பரமாத்மாவுடன் ஒன்றுபடுகிறது. பரமாத்மாவுக்கப்பால் ஸத்தோ அஸத்தோ ஸதஸத்தோ எதுவுமில்லை. அதுதான் நிர்வாணம் எனும் மோக்ஷம்நிலை என்பது வேதத்தின் உபதேசம்.ஜீவன் உடலை விட்டுக் கிளம்பி எந்த வழியாக எப்படி செல்லுகிறது?

யஜுர் வேதம் ........ஸீபாலோபநிஷத்து.......

பதினோராவது கண்டம்

ரைக்வர் (கோர ஆங்கிரஸராகிய) அவரை கேட்டது:

'பகவானே! விஞ்ஞானமயமான ஜீவன் உடலை விட்டுக் கிளம்பி எந்த வழியாக எப்படி செல்லுகிறது?' என்று வினாவினார்.

அவர் கூறிய விடை: 'இருதயத்தின் நடுவில் ரமா, அரமா, இச்சா, அபுனர்ப்பவா என்று நான்கு நாடிகள் இருக்கின்றன. ரமா என்பது புண்ணியத்தின் பயனாக புண்ணியலோகத்திற்கு(அதற்கேற்ப மறுபிறவி) ஜீவனை அழைத்து செல்லுகிறது. அரமா பாவத்தின் பயனாக பாவிகளின் உலகிற்கு (அதற்கேற்ப மறுபிறவி) அழைத்துச் செல்லுகிறது. இச்சா என்பது மரண காலத்தில் எதை நிணைக்கிறானோ அதற்குரிய நிலையை அடைகிறான். அபுனர்ப்பவா எனும் நாடியில் கிளம்பும் ஜீவன் விஞ்ஞானமய கோஷத்தைப் பிளந்து, தலை உச்சியைப் பிளந்து, பிறகு மனதைப் பிளந்து, பஞ்ச பூதங்களின் ஆதியைக் கடந்து, அக்ஷரத்தைக் கடந்து சாவைக் கடந்து பரமாத்மாவுடன் ஒன்றுபடுகிறது. பரமாத்மாவுக்கப்பால் ஸத்தோ அஸத்தோ ஸதஸத்தோ எதுவுமில்லை. அதுதான் நிர்வாணம் எனும் மோக்ஷம்நிலை என்பது வேதத்தின் உபதேசம்.
புகைப்படம்: பிராணாயமம் பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர் வேதம் .....அம்ருத நாதோபநிஷத்து ....

18 - 22. சமமானதும்  மனதிற்கினியதும், மாசற்றதுமான பூமிபாகத்தில்  அமர்ந்து மானசீகமான ரஷையைச் செய்து கொண்டு பரிசுத்தமான அந்த சூழ்நிலையில் ஸ்தோத்திரங்களை ஜபித்து, பத்மாஸனமோ, ஸ்வஸ்திகாஸனமோ, பத்ராஸனமோ  ஆகிய யோகாஸனத்தை நன்றாக வடக்கு முகமாக அமைத்துக் கொண்டு பின்வரும் முறையில் யோகாப்பியாஸம் செய்ய வேண்டும். நாசித்துவாரம் ஒன்றை விரலால் அழுத்திக்கொண்டு மற்றொன்றால் வாயுவை இழுத்து (இரு நாசித்துவாரங்களையும் மூடிக்கொண்டு) அந்த உஷ்ணமான வாயுவை உள்ளே நிறுத்தி ஓங்கார த்வனியை மனதில் தியானிக்க வேண்டும். ஓம் என்ற ஓரெழுத்து  தான் பிரம்மம். ஓம் என்ற தியானத்துடன் பிறகு மூச்சை வெளியே விடவும். தெய்வீகமான இந்த மந்திர தியானத்துடன், உடலையும் மனதையும் பரிசுத்தமாக்குவதற்காகப் பல தடவை இவ்வாறு அப்பியாஸம் செய்ய வேண்டும். அத்துடன் அகாரம், உகாரம், மகாரம், பிந்து நாதம் ஆகியவற்றுடன் கூடிய ஓங்கார மந்திரத்தை (அகார அதிதேவதை பிரம்மா, உகார அதிதேவதை விஷ்ணு, மகார அதிதேவதை ருத்ரன், பிந்துவின் அதிதேவதை ஈஸ்வரன், நாதத்தின் அதிதேவதை சதாசிவன் என்ற) முறைப்படி தியானம் செய்ய வேண்டும். (இது ஸ கர்ப்ப பிராணாயாமம் எனப்படும்). பிராணாயமம் செய்வதில் உடலை வருத்தும் வகையில் அளவுக்கு மீறி அப்பியாஸம் செய்யக் கூடாது.

23. திருஷ்டியை (கண்பார்வையை) குறுக்காகப் புருவமத்தியை நோக்கியோ, அல்லது மேல்நோக்கியோ, அல்லது கீழாக மூக்குநுனியை நோக்கியோ வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்திரமாக நீண்ட காலம் தலையையும் உடலையும் அசைக்காமல் இந்த யோகாப்பியாஸத்தை புத்தியில் சிறந்தவன் செய்ய வேண்டும்.                                                           பிராணாயமம் பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர் வேதம் .....அம்ருத நாதோபநிஷத்து ....

18 - 22. சமமானதும் மனதிற்கினியதும், மாசற்றதுமான பூமிபாகத்தில் அமர்ந்து மானசீகமான ரஷையைச் செய்து கொண்டு பரிசுத்தமான அந்த சூழ்நிலையில் ஸ்தோத்திரங்களை ஜபித்து, பத்மாஸனமோ, ஸ்வஸ்திகாஸனமோ, பத்ராஸனமோ ஆகிய யோகாஸனத்தை நன்றாக வடக்கு முகமாக அமைத்துக் கொண்டு பின்வரும் முறையில் யோகாப்பியாஸம் செய்ய வேண்டும். நாசித்துவாரம் ஒன்றை விரலால் அழுத்திக்கொண்டு மற்றொன்றால் வாயுவை இழுத்து (இரு நாசித்துவாரங்களையும் மூடிக்கொண்டு) அந்த உஷ்ணமான வாயுவை உள்ளே நிறுத்தி ஓங்கார த்வனியை மனதில் தியானிக்க வேண்டும். ஓம் என்ற ஓரெழுத்து தான் பிரம்மம். ஓம் என்ற தியானத்துடன் பிறகு மூச்சை வெளியே விடவும். தெய்வீகமான இந்த மந்திர தியானத்துடன், உடலையும் மனதையும் பரிசுத்தமாக்குவதற்காகப் பல தடவை இவ்வாறு அப்பியாஸம் செய்ய வேண்டும். அத்துடன் அகாரம், உகாரம், மகாரம், பிந்து நாதம் ஆகியவற்றுடன் கூடிய ஓங்கார மந்திரத்தை (அகார அதிதேவதை பிரம்மா, உகார அதிதேவதை விஷ்ணு, மகார அதிதேவதை ருத்ரன், பிந்துவின் அதிதேவதை ஈஸ்வரன், நாதத்தின் அதிதேவதை சதாசிவன் என்ற) முறைப்படி தியானம் செய்ய வேண்டும். (இது ஸ கர்ப்ப பிராணாயாமம் எனப்படும்). பிராணாயமம் செய்வதில் உடலை வருத்தும் வகையில் அளவுக்கு மீறி அப்பியாஸம் செய்யக் கூடாது.

23. திருஷ்டியை (கண்பார்வையை) குறுக்காகப் புருவமத்தியை நோக்கியோ, அல்லது மேல்நோக்கியோ, அல்லது கீழாக மூக்குநுனியை நோக்கியோ வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்திரமாக நீண்ட காலம் தலையையும் உடலையும் அசைக்காமல் இந்த யோகாப்பியாஸத்தை புத்தியில் சிறந்தவன் செய்ய வேண்டும்.
  புகைப்படம்: ஜீவன் பிறப்பு பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர்வேதம்………..கர்ப்போபநிஷத்து 

1.2. ஏழு தாதுக்கள் என்பது எதனால்? எப்போது மனிதனுக்கு விஷயபோகத்திற்குரிய திரவியங்கள் உண்டாகின்றனவோ, அப்போது அவற்றின் கூட்டுறவால் நல்ல குணத்தால் ஆறுவிதமான ரஸங்கள் தோன்றுகின்றன. ரஸத்திலிருந்து ரத்தம்,ரத்தத்திலிருந்து மாம்ஸம்,மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.அதை இயக்குமிடம் இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து வாயுவஜம் தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.இது இறைவனின் நீதி.

1.3. ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில் போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள் உண்டாகின்றன.ஏழுாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.மனக்கலக்கத்தோடு இருந்தால் குருடர்களாகவும், முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும் பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.பஞ்ச பூதவடிவான சரீரம் ஸாமர்த்யமுடையதாகும் போது ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும் அதனால் கந்தம்,ரஸம் முதலியவற்றை அறியும் திறமையும் உண்டாகிறது.அப்போது அந்த ஜீவன் அழியாத அஷரமாகிய ஓங்கார பரம்பொருளை சிந்திக்கிறான்.
அந்த பரம்பொருளை உணர்ந்ததும்(பஞ்ச பூதங்கள்,மனம்,புத்தி,அகங்காரம்)  என்ற எட்டு பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகியாகிய ஜீவனுடையவை ஆகின்றன என்பதும் உணரப்படுகிறது. தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை அடைகின்றன.அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் வருகிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும். பாபச்செயல்களையும் உணர்கிறது.

1.4. என்னால் முன்பு  ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார் பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான்.                                                        ஜீவன் பிறப்பு பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர்வேதம்………..கர்ப்போபநிஷத்து

1.2. ஏழு தாதுக்கள் என்பது எதனால்? எப்போது மனிதனுக்கு விஷயபோகத்திற்குரிய திரவியங்கள் உண்டாகின்றனவோ, அப்போது அவற்றின் கூட்டுறவால் நல்ல குணத்தால் ஆறுவிதமான ரஸங்கள் தோன்றுகின்றன. ரஸத்திலிருந்து ரத்தம்,ரத்தத்திலிருந்து மாம்ஸம்,மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.அதை இயக்குமிடம் இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து வாயுவஜம் தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.இது இறைவனின் நீதி.

1.3. ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில் போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள் உண்டாகின்றன.ஏழுாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.மனக்கலக்கத்தோடு இருந்தால் குருடர்களாகவும், முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும் பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.பஞ்ச பூதவடிவான சரீரம் ஸாமர்த்யமுடையதாகும் போது ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும் அதனால் கந்தம்,ரஸம் முதலியவற்றை அறியும் திறமையும் உண்டாகிறது.அப்போது அந்த ஜீவன் அழியாத அஷரமாகிய ஓங்கார பரம்பொருளை சிந்திக்கிறான்.
அந்த பரம்பொருளை உணர்ந்ததும்(பஞ்ச பூதங்கள்,மனம்,புத்தி,அகங்காரம்) என்ற எட்டு பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகியாகிய ஜீவனுடையவை ஆகின்றன என்பதும் உணரப்படுகிறது. தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை அடைகின்றன.அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் வருகிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும். பாபச்செயல்களையும் உணர்கிறது.

1.4. என்னால் முன்பு ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார் பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான்                                             

புகைப்படம்: கிருஷ்ண அவதாரம் பற்றி வேதங்கள் கூறுவன:

அதர்வண வேதம் ..... கிருஷ்ணாபநிஷத்து  

1.1. ஸச்சிதானந்த  லக்ஷணரான மஹாவிஷ்ணுவின் அவதாரமும் ஸர்வாங்க சுந்தரருமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வனவாசிகளான முனிவர்கள் தரிசித்தபொழுது ஆச்சரியம் மேலிட்டு மெய் மறந்து 'உங்களை ஆலிங்கனம் செய்துக்கொள்ள ஆசைபடுகிறோம் என்றார்கள். பகவான் 'கிருஷ்ணாவதார காலத்தில் வேறு பிறப்பில் நீங்கள் கோபிகைகளாகத் தோன்றி ஆலிங்கனம் செய்துகொள்ளலாம்' என்றார். (அவர்களுடைய ஆசை கிருஷ்ணாவதாரத்தில் பூர்த்தியாயிற்று).

1.2. (கிருஷ்ணாவதாரத்தின் பொழுது) கோகுலம் வன வைகுண்டமாயிற்று. தவம் புரிந்தோர் அங்கு மரங்களாகத் தோன்றினார்கள். உலோபம் கோபமும் அசுரர்களாக வந்தன, வந்துகொண்டிருந்த கலிகாலம் தள்ளிவைக்கப்பட்டது. மாயா விக்ர்ஹம் தரித்த ஹரியானவர் கோப வடிவில் அவதரித்தார். அவருடைய லீலை அறியவொண்ணா ரகசியம். அதனால் உலகம் மயங்கிற்று. உபநிஷதங்களும் வேதங்களின் ருக்குகளும் 16,108 ஸ்திரீகளின்  வடிவாக வந்தன. தயையே தாய் ரோஹினியாகவும் பூதேவியே ஸத்யபாமையாகவும் ஆயினர். மனவடக்கம் நண்பன் ஸிதாமாவாகவும் புலனடக்கம் உத்தவராகவும், சத்தியம்  அக்ரூராகவும் ஆயின. வீட்டில் உடைக்கப்பட்ட தயிர்சட்டியே விளையாட்டுக் கிருஷ்ணனுக்கும் முன்போல் லீலை புரியும் பாற்கடலாக இருந்தது. சத்ருக்களை அழிக்கவும்  சாதுக்களைக் காக்கவுமே அவ்வவதாரம். கிருஷ்ணன் கையிலிருந்த பிரகாசமான வாள் (ஸம்ஹாரக் கடவுளான) மகேஸ்வரனே. கசியபர் (யசோதை வீட்டில்) உரலாக இருந்தார்; தேவ மாதா அதிதிதேவி (கிருஷ்ணனை உரலில் கட்டிய) கயிறாக இருந்தாள். எல்லாச் சத்ருக்களையும் நாசம் செய்யும் காளிகா தேவியே கதாயுகமாயிருந்தாள். சார்ங்கம் எனும் வில் பகவானுடைய மாயை. அறுவடைக் காலமான சரத்ருது போஜனமாயிற்று. விளையாட்டாக கையில்  ஏந்திய தாமரை உலகின் வித்து. இவற்றினின்று வேறுபடாததாயினும் உலகம் வேறுபட்டாற்போல் தோன்றிற்று. பகவானும் வேறுபடாதவன். ஸ்வர்க்கவாசிகளின் வைகுண்டம் பூமியில் கொண்டுவரப்பட்டது. இதை உள்ளபடி அறிந்தவர் எல்லாப் புண்ணிய பலனையும் அடைவர். தேக பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி எய்துவர்.                                                           கிருஷ்ண அவதாரம் பற்றி வேதங்கள் கூறுவன:

அதர்வண வேதம் ..... கிருஷ்ணாபநிஷத்து

1.1. ஸச்சிதானந்த லக்ஷணரான மஹாவிஷ்ணுவின் அவதாரமும் ஸர்வாங்க சுந்தரருமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வனவாசிகளான முனிவர்கள் தரிசித்தபொழுது ஆச்சரியம் மேலிட்டு மெய் மறந்து 'உங்களை ஆலிங்கனம் செய்துக்கொள்ள ஆசைபடுகிறோம் என்றார்கள். பகவான் 'கிருஷ்ணாவதார காலத்தில் வேறு பிறப்பில் நீங்கள் கோபிகைகளாகத் தோன்றி ஆலிங்கனம் செய்துகொள்ளலாம்' என்றார். (அவர்களுடைய ஆசை கிருஷ்ணாவதாரத்தில் பூர்த்தியாயிற்று).

1.2. (கிருஷ்ணாவதாரத்தின் பொழுது) கோகுலம் வன வைகுண்டமாயிற்று. தவம் புரிந்தோர் அங்கு மரங்களாகத் தோன்றினார்கள். உலோபம் கோபமும் அசுரர்களாக வந்தன, வந்துகொண்டிருந்த கலிகாலம் தள்ளிவைக்கப்பட்டது. மாயா விக்ர்ஹம் தரித்த ஹரியானவர் கோப வடிவில் அவதரித்தார். அவருடைய லீலை அறியவொண்ணா ரகசியம். அதனால் உலகம் மயங்கிற்று. உபநிஷதங்களும் வேதங்களின் ருக்குகளும் 16,108 ஸ்திரீகளின் வடிவாக வந்தன. தயையே தாய் ரோஹினியாகவும் பூதேவியே ஸத்யபாமையாகவும் ஆயினர். மனவடக்கம் நண்பன் ஸிதாமாவாகவும் புலனடக்கம் உத்தவராகவும், சத்தியம் அக்ரூராகவும் ஆயின. வீட்டில் உடைக்கப்பட்ட தயிர்சட்டியே விளையாட்டுக் கிருஷ்ணனுக்கும் முன்போல் லீலை புரியும் பாற்கடலாக இருந்தது. சத்ருக்களை அழிக்கவும் சாதுக்களைக் காக்கவுமே அவ்வவதாரம். கிருஷ்ணன் கையிலிருந்த பிரகாசமான வாள் (ஸம்ஹாரக் கடவுளான) மகேஸ்வரனே. கசியபர் (யசோதை வீட்டில்) உரலாக இருந்தார்; தேவ மாதா அதிதிதேவி (கிருஷ்ணனை உரலில் கட்டிய) கயிறாக இருந்தாள். எல்லாச் சத்ருக்களையும் நாசம் செய்யும் காளிகா தேவியே கதாயுகமாயிருந்தாள். சார்ங்கம் எனும் வில் பகவானுடைய மாயை. அறுவடைக் காலமான சரத்ருது போஜனமாயிற்று. விளையாட்டாக கையில் ஏந்திய தாமரை உலகின் வித்து. இவற்றினின்று வேறுபடாததாயினும் உலகம் வேறுபட்டாற்போல் தோன்றிற்று. பகவானும் வேறுபடாதவன். ஸ்வர்க்கவாசிகளின் வைகுண்டம் பூமியில் கொண்டுவரப்பட்டது. இதை உள்ளபடி அறிந்தவர் எல்லாப் புண்ணிய பலனையும் அடைவர். தேக பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி எய்துவர்.                     
புகைப்படம்: ஏழு சக்கரங்கள் பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர் வேதம் ..... ஹம்ஸோபநிஷத்து .......

1. கௌதமர் கூறியது: எல்லா தர்மங்களையும் உணர்ந்தவரே! எல்லா சாஸ்திரங்களிலும் நிபுணரே! எந்த உபாயத்தால் பிரம்ம வித்தையின் தெளிவான ஞானம் ஏற்படும்.

2. ஸநத்குமாரர் கூறியது: எல்லா தருமங்களையும் ஆராய்ந்து பிநாகபாணியான பரமசிவனுடைய உள்ளக்கருத்தை உணர்ந்து பார்வதியால் எந்த தத்துவம் உபதேசிக்கப்பட்டதோ அதை என்னிடமிருந்து கேட்பாயாக.

3. இது ரகசியமானது; யோகிகளிடம் பொக்கிஷம் போல் வைக்கப்பட்டது, ஹம்ஸத்தின் ஸ்வரூபத்தை விளக்க வைப்பது; புத்தியையும், முக்தியையும் பயனாக அளிப்பது;

4. பிரம்மசாரியாகவும், புலனடக்கம் உடையவனாகவும், குருபக்தி உடையவனாகவும் உள்ளவனுக்கு 'ஹம்ஸ ஹம்ஸ' என்ற மந்திர தியானத்தை எவ்வாறு செய்யவேண்டும்  என்பதையும் ஹம்ஸபரமஹம்ஸ நிர்ணயத்தையும் இனி வியாக்கியானம் செய்வோம்.

5. விறகில் தீ போலும், எள்ளில் எண்ணெய்போலும்  எங்ஙனம் எல்லா உடல்களிலும் எங்கும் நிறைந்ததாக உள்ளது எதுவோ அதை அறிந்து ஒருவன் சாவை அடையமாட்டான்.

6.(ஸாதகன்  ஸித்தாஸனத்தில்ருந்து கொண்டு இடது காலில் மணிக்கட்டால்) ஆசனத்வாரத்தை அழுத்திக்கொண்டு மூலாதாரத்தில்ருந்து வாயுவைக் கிளப்பி( பிராணனையும் அபானனையும் ஐக்கியப்படுத்தி குண்டலினியை எழச்செய்து ஸீஷீம்னையின்  வாயிலைத்திறந்து கொண்டு மூலாதார சக்கரத்தினுள் சென்று(பிறகு) ஸ்வாதிஷ்ட்டானத்தை அடைந்து மூன்று தடவை பிரதஷஷினம் செய்து, மணி பூரகம் சென்று அதன்பின் அநாஹத  சக்கரம் வந்து(தியானத்தில்) அதையும் தாண்டி விசுத்தி சக்கரத்தின் கிழ்பாகத்தில் லிங்கவடிவில் உள்ள உள்  நாக்கின் இருபுறமும் உள்ள மார்க்கங்களை விட்டு நடுவிலுள்ள நாடிவழியாக விசுத்தி சக்கரத்தில் பிரவே சித்துப் பிராணனை அடக்கிப் பிறகு ஆக்ஞாசக்ரத்தையடைந்து ஹம்ஸ மந்திரத்தை தியானித்து அதன் மேல் பிரம்மரந்த்ரம்  எனும் ஸஹஸ்ராரசக்ரத்தை அடைந்து மூன்று மாத்திரை வடிவான பிரம்மமே நான் என்று சமாதியில் நின்று( பிறகு கீழ் நிலைக்கு இறங்கியபொழுதும்) எக்காலத்தும் அதையே பார்த்து(உடலிலிருந்தும்) உருவமில்லாதவனைப்போல் ஆகிவிடுகிறான். 

7.அவ்வாறு துரீய நிலை எய்திய இவன் பரமஹம்ஸன். கோடி சூரியப்பிரகாசம் பொருந்தியவனும் எவனால் இவ்வுலகனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளதோ அந்த பரமாத்வாகவே  அவன் ஆகிவிடுகிறான். 

9. மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை துரீய ஸ்வருபம் சுத்தஸ்ப்படிகம் போல் பிரகாசிக்கும். அந்த நாதப்பிரம்மம் பரமாத்மா எனக் கூறப்படுகிறது.ஏழு சக்கரங்கள் பற்றி வேதங்கள் கூறுவன:

யஜுர் வேதம் ..... ஹம்ஸோபநிஷத்து .......

1. கௌதமர் கூறியது: எல்லா தர்மங்களையும் உணர்ந்தவரே! எல்லா சாஸ்திரங்களிலும் நிபுணரே! எந்த உபாயத்தால் பிரம்ம வித்தையின் தெளிவான ஞானம் ஏற்படும்.

2. ஸநத்குமாரர் கூறியது: எல்லா தருமங்களையும் ஆராய்ந்து பிநாகபாணியான பரமசிவனுடைய உள்ளக்கருத்தை உணர்ந்து பார்வதியால் எந்த தத்துவம் உபதேசிக்கப்பட்டதோ அதை என்னிடமிருந்து கேட்பாயாக.

3. இது ரகசியமானது; யோகிகளிடம் பொக்கிஷம் போல் வைக்கப்பட்டது, ஹம்ஸத்தின் ஸ்வரூபத்தை விளக்க வைப்பது; புத்தியையும், முக்தியையும் பயனாக அளிப்பது;

4. பிரம்மசாரியாகவும், புலனடக்கம் உடையவனாகவும், குருபக்தி உடையவனாகவும் உள்ளவனுக்கு 'ஹம்ஸ ஹம்ஸ' என்ற மந்திர தியானத்தை எவ்வாறு செய்யவேண்டும் என்பதையும் ஹம்ஸபரமஹம்ஸ நிர்ணயத்தையும் இனி வியாக்கியானம் செய்வோம்.

5. விறகில் தீ போலும், எள்ளில் எண்ணெய்போலும் எங்ஙனம் எல்லா உடல்களிலும் எங்கும் நிறைந்ததாக உள்ளது எதுவோ அதை அறிந்து ஒருவன் சாவை அடையமாட்டான்.

6.(ஸாதகன் ஸித்தாஸனத்தில்ருந்து கொண்டு இடது காலில் மணிக்கட்டால்) ஆசனத்வாரத்தை அழுத்திக்கொண்டு மூலாதாரத்தில்ருந்து வாயுவைக் கிளப்பி( பிராணனையும் அபானனையும் ஐக்கியப்படுத்தி குண்டலினியை எழச்செய்து ஸீஷீம்னையின் வாயிலைத்திறந்து கொண்டு மூலாதார சக்கரத்தினுள் சென்று(பிறகு) ஸ்வாதிஷ்ட்டானத்தை அடைந்து மூன்று தடவை பிரதஷஷினம் செய்து, மணி பூரகம் சென்று அதன்பின் அநாஹத சக்கரம் வந்து(தியானத்தில்) அதையும் தாண்டி விசுத்தி சக்கரத்தின் கிழ்பாகத்தில் லிங்கவடிவில் உள்ள உள் நாக்கின் இருபுறமும் உள்ள மார்க்கங்களை விட்டு நடுவிலுள்ள நாடிவழியாக விசுத்தி சக்கரத்தில் பிரவே சித்துப் பிராணனை அடக்கிப் பிறகு ஆக்ஞாசக்ரத்தையடைந்து ஹம்ஸ மந்திரத்தை தியானித்து அதன் மேல் பிரம்மரந்த்ரம் எனும் ஸஹஸ்ராரசக்ரத்தை அடைந்து மூன்று மாத்திரை வடிவான பிரம்மமே நான் என்று சமாதியில் நின்று( பிறகு கீழ் நிலைக்கு இறங்கியபொழுதும்) எக்காலத்தும் அதையே பார்த்து(உடலிலிருந்தும்) உருவமில்லாதவனைப்போல் ஆகிவிடுகிறான்.

7.அவ்வாறு துரீய நிலை எய்திய இவன் பரமஹம்ஸன். கோடி சூரியப்பிரகாசம் பொருந்தியவனும் எவனால் இவ்வுலகனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளதோ அந்த பரமாத்வாகவே அவன் ஆகிவிடுகிறான்.

9. மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை துரீய ஸ்வருபம் சுத்தஸ்ப்படிகம் போல் பிரகாசிக்கும். அந்த நாதப்பிரம்மம் பரமாத்மா எனக் கூறப்படுகிறது.
                   

புகைப்படம்: இல்லற நெறி பற்றி வேதங்கள் கூறுவன :

அதர்வண வேதம் ....பிரச்ன உபநிஷதம் ....

உயர் வழியை நாடுபவர்கள் ஆன்ம அனுபூதி பெறுகிறார்கள். அப்படியானால், சாதாரண வழியைத் தேர்ந்தெடுத்து இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள் உலகியலிலே உழல வேண்டியதுதானா? இல்லை. அவர்களும் நெறியாள வாழ்க்கை வாழ்வதன்மூலம் ஆன்மீக முன்னேற்றம் காணலாம் என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன. 

13பகலும் இரவுமே படைப்புக் கடவுள். இதில் பகலே பிராணன், இரவே ஜடம். யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சரியமே. 

பிரம்மச்சரியமே என்று கூறியதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். பிரம்மச்சரியம் என்பது உடலுறவை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆகும். ஒருவன் தன் மனைவியுடன் மட்டுமே, அதிலும் இரவில் மட்டுமே உறவுகொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகக் கூறப்பட்ட புகழ்மொழியே இது என்கிறார் அவர். 

14.உணவே படைப்புக் கடவுள். உணவிலிருந்தே விந்து உண்டாகிறது. அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன. 

உண்ணும் உணவிலிருந்தே ரத்தம், தசை, எலும்பு என்று உடம்பிலுள்ள அனைத்தும் உற்பத்தியாகின்றன. அவ்வாறு ஆணின் உடம்பில் உருவாகின்ற ஒன்றே விந்து; இது பெண்ணிடம் வைக்கப்படும்போது உயிர் தோன்றுகிறது. இவ்வாறு உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பதால் உணவு படைப்புக் கடவுளாகப் போற்றப்படுகிறது. 

15.படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் ஜோடியை உருவாக்குகிறார்கள். யாரிடம் தவமும் பிரம்மச்சரியமும் உள்ளதோ, யாரிடம் உண்மை நிலைபெற்றுள்ளதோ அவர்களுக்கு மட்டுமே இறையுலகம் வாய்க்கிறது. 

இல்லறத்தாரும் ஒழுக்க நெறியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வை வாழ வேண்டும் என்பதை 13-15 மந்திரங்கள் வற்புறுத்துகின்றன. இந்த உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது படைப்புக் கடவுளின் திட்டம். அதற்கு இனப்பெருக்கம் அவசியம். சந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள் (ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸீ தைத்திரீய உபநிஷதம், 1.11.1) என்று தைத்திரீய உபநிஷதம் ஆணையிடுகிறது. அதற்கு ஆணும் பெண்ணும் இணைய வேண்டியது அவசியம் ஆண்-பெண் உறவை இந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும் என்பது உபநிஷதங்களின் உபதேசமாக உள்ளது. அதாவது, ஆணும் பெண்ணும் இணைவது என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே, உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று படைப்புக் கடவுள் வகுத்த நியதியைக் கடைப்பிடிப்பதற்காக மட்டுமே, அதற்குமேல் வேறு எந்த முக்கியத்துவமும் அதற்கு இல்லை.

இவ்வாறு நியதிக்காக மட்டும் இணைய வேண்டும் என்பது இல்லறத்தாரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோடி என்று இந்த மந்திரம் குறிப்பிடுகின்ற ஆண், பெண் குழந்தைகளை உருவாக்கலாம். ஆனால் இதனால் இறை யுலகத்தைப் பெற முடியாது.

இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெற வேண்டுமானால், ஆன்மீக உயர்வு பெற வேண்டுமானால் நெறியான வாழ்க்கை வாழ வேண்டும், தவம், பிரம்மச்சரியம், உண்மை போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

எனவே இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெறலாம், ஆன்ம முன்னேற்றம் காணலாம், அதற்கு நெறியான வாழ்வு அவசியம் என்பதை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது. 

16.ஒழுக்கநெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான அந்த இறையுலகம் வாய்க்கிறது. சூதும் பொய்யும் வஞ்சனையும் நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடையாது. 

இவ்வாறு பிரச்ன உபநிஷதத்தின் முதற்பகுதி நிறைவுறுகிறது.இல்லற நெறி பற்றி வேதங்கள் கூறுவன :

அதர்வண வேதம் ....பிரச்ன உபநிஷதம் ....

உயர் வழியை நாடுபவர்கள் ஆன்ம அனுபூதி பெறுகிறார்கள். அப்படியானால், சாதாரண வழியைத் தேர்ந்தெடுத்து இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள் உலகியலிலே உழல வேண்டியதுதானா? இல்லை. அவர்களும் நெறியாள வாழ்க்கை வாழ்வதன்மூலம் ஆன்மீக முன்னேற்றம் காணலாம் என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

13பகலும் இரவுமே படைப்புக் கடவுள். இதில் பகலே பிராணன், இரவே ஜடம். யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சரியமே.

பிரம்மச்சரியமே என்று கூறியதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். பிரம்மச்சரியம் என்பது உடலுறவை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆகும். ஒருவன் தன் மனைவியுடன் மட்டுமே, அதிலும் இரவில் மட்டுமே உறவுகொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகக் கூறப்பட்ட புகழ்மொழியே இது என்கிறார் அவர்.

14.உணவே படைப்புக் கடவுள். உணவிலிருந்தே விந்து உண்டாகிறது. அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன.

உண்ணும் உணவிலிருந்தே ரத்தம், தசை, எலும்பு என்று உடம்பிலுள்ள அனைத்தும் உற்பத்தியாகின்றன. அவ்வாறு ஆணின் உடம்பில் உருவாகின்ற ஒன்றே விந்து; இது பெண்ணிடம் வைக்கப்படும்போது உயிர் தோன்றுகிறது. இவ்வாறு உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பதால் உணவு படைப்புக் கடவுளாகப் போற்றப்படுகிறது.

15.படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் ஜோடியை உருவாக்குகிறார்கள். யாரிடம் தவமும் பிரம்மச்சரியமும் உள்ளதோ, யாரிடம் உண்மை நிலைபெற்றுள்ளதோ அவர்களுக்கு மட்டுமே இறையுலகம் வாய்க்கிறது.

இல்லறத்தாரும் ஒழுக்க நெறியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வை வாழ வேண்டும் என்பதை 13-15 மந்திரங்கள் வற்புறுத்துகின்றன. இந்த உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது படைப்புக் கடவுளின் திட்டம். அதற்கு இனப்பெருக்கம் அவசியம். சந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள் (ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸீ தைத்திரீய உபநிஷதம், 1.11.1) என்று தைத்திரீய உபநிஷதம் ஆணையிடுகிறது. அதற்கு ஆணும் பெண்ணும் இணைய வேண்டியது அவசியம் ஆண்-பெண் உறவை இந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும் என்பது உபநிஷதங்களின் உபதேசமாக உள்ளது. அதாவது, ஆணும் பெண்ணும் இணைவது என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே, உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று படைப்புக் கடவுள் வகுத்த நியதியைக் கடைப்பிடிப்பதற்காக மட்டுமே, அதற்குமேல் வேறு எந்த முக்கியத்துவமும் அதற்கு இல்லை.

இவ்வாறு நியதிக்காக மட்டும் இணைய வேண்டும் என்பது இல்லறத்தாரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோடி என்று இந்த மந்திரம் குறிப்பிடுகின்ற ஆண், பெண் குழந்தைகளை உருவாக்கலாம். ஆனால் இதனால் இறை யுலகத்தைப் பெற முடியாது.

இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெற வேண்டுமானால், ஆன்மீக உயர்வு பெற வேண்டுமானால் நெறியான வாழ்க்கை வாழ வேண்டும், தவம், பிரம்மச்சரியம், உண்மை போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

எனவே இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெறலாம், ஆன்ம முன்னேற்றம் காணலாம், அதற்கு நெறியான வாழ்வு அவசியம் என்பதை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.

16.ஒழுக்கநெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான அந்த இறையுலகம் வாய்க்கிறது. சூதும் பொய்யும் வஞ்சனையும் நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடையாது.

இவ்வாறு பிரச்ன உபநிஷதத்தின் முதற்பகுதி நிறைவுறுகிறது.                            

புகைப்படம்: சூரியனே பிராணன் :

அதர்வண வேதம் ....பிரச்ன உபநிஷதம் 

5.சூரியன் ஆற்றல், சந்திரன் ஜடப்பொருள். தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாவும் இந்த உலகில் உள்ள அனைத்தும் ஜடப்பொருளே. எனவே பொருள் என்றால் அது ஜடப்பொருளே.

சூரியனும் சந்திரனும் இங்கே உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. சந்திரனுக்கென்று ஒளி கிடையாது. சூரியனின் ஒளியைப் பெற்று அது பிரதிபலிக்கிறது. சந்திரன் மட்டும் இருந்தால் ஒளியில்லை. அது வெறும் ஜடப்பொருளே. சூரியனாகிய ஆற்றல் அதில் புகும்போது சந்திரன் ஒளி வீசுகிறது அதாவது செயல்படுகிறது.
உலகிலுள்ள தூல மற்றும் நுண்பொருட்கள் அனைத்தும் ஜடப்பொருளே. அதில் பிராணன் செயல்படும்போது மட்டுமே செயல் நிகழ்கிறது. இவ்வாறு உலகம் அனைத்தும் ஆகாசம், பிராணன் என்ற அடிப்படைப் பொருட்களின் விளைவாக உள்ளது. 

6.சூரியன் உதித்து, ஒளி கிழக்குத் திசையில் பரவும்போது, அவன் தன் கதிர்களால் கிழக்கில் பிராணனை வழங்குகிறான். அதுபோலவே தெற்கு, மேற்கு, வடக்கு, கீழே, மேலே மற்றும் அந்தரப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் ஒளி பரவும்போது, அந்தந்தப் பகுதிகளுக்கு, தன் கதிர்களால் பிராணனை வழங்குகிறான்.

ஓர் அழகிய காலைக் காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறார் பிப்பலாத முனிவர். கிழக்கில் சூரியன் உதிக்கிறது. அதன் பொன்னிறக் கதிர்கள் திசைகள் தோறும் பரவுகின்றன. பரவுகின்ற திசையெல்லாம் பிராணனை வழங்குகிறான் கதிரவன்.
கதிரவன் பிராணனுக்குத் தலைவனாக, பிராணனை வழங்குபவனாகக் கொள்ளப்படுகிறான். பிராணன் என்றால் சக்தி, ஆற்றல். வாழ்க்கைக்கான ஆற்றலை அளிப்பவன் சூரியன். தூங்கிக் கிடக்கின்ற உயிரினங்கள் அவனது ஸ்பரிசத்தால் எப்படி எழுந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுகின்றன என்பது நமது அன்றாட அனுபவம். தாவரங்கள்கூட இதற்கு விதி விலக்கு அல்ல. எனவே இங்கு சூரியன் போற்றப்படுகிறான். 

7.வைசுவானரனும் விசுவரூபனும் பிராண சக்தியும் ஆகிய சூரியன் இவ்வாறு ஒரு நெருப்புப் பிழம்புபோல் உதிக்கிறான். ரிக்வேத மந்திரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வைசுவானரன்: வைசுவானரன் என்றால் அனைத்து உயிர்களின் தொகுதியாக உள்ளவன். அனைத்து உயிர்களும் இயங்குவதற்கான ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.

விசுவரூபன் : அனைத்து உருவங்களின் வடிவாக உள்ளவன். சூரிய ஒளி இருப்பதாலேயே உருவங்களைப் பார்க்க முடிகிறது. சூரியனின்றி எந்த உருவத்தையும் நம்மால் பார்க்க முடியாது. எனவே சூரியன் அனைத்து உருவங்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.

பிராண சக்தி: ஜடப்பொருள், பிராணன் ஆகிய இரண்டையும் அடிப்படையாக உடையது படைப்பு. இங்கே பிராணனின் தூல வடிவாகச் சூரியன் போற்றப்படுகிறான். இவ்வாறு உலகிற்கே, உலக வாழ்க்கைக்கே ஆதாரமான சூரியன் ஒரு நெருப்புப் பிழம்புபோல் கிழக்கில் உதிப்பதாக உதயகால அழகை, அதன் உண்மைப்பொருள் விளக்கத்துடன் படம் பிடித்துக் காட்டுகிறார் முனிவர்.

ஆன்மீக உயர்வுக்கும் அறிவின் ஒளிக்கும் இணையாக உபநிஷத முனிவர்களிடம் நாம் காண்பது அவர்களின் பணிவு மற்றும் தங்கள் முன்னோர்களாகிய ரிஷிகளிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தி, உபநிஷத உண்மைகளை அறிந்தவர்களாக இருந்தும், அந்த உண்மைகளை உலகிற்குச் சொல்கின்ற பெருமையை முன்னோர்களுக்குக் கொடுக்கவே அவர்கள் விரும்பினர். பிப்பலாதரும் சூரியன் உலகிற்கே ஆதாரமானவன் என்று கூறிவிட்டு, அது தமது கண்டுபிடிப்பு அல்ல, ஏற்கனவே ரிக்வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பெருமையை ரிக்வேத முனிவருக்கு அளிக்கிறார். ரிக்வேத பகுதி அடுத்த மந்திரமாக வருகிறது. 

8.சூரியன் அனைத்து உருவினன், கதிர்கள் நிறைந்தவன், அனைத்தும் அறிந்தவன், அனைத்து உயிர்களின் ஆதாரம், ஒன்றேயான ஒளிப்பொருள், வெப்பத்தைக் கொடுப்பவன், உயிர்களின் பிராணனாகிய அந்தச் சூரியன், இதோ, ஆயிரம் கதிர்களுடன் உதிக்கிறான்; நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறான்.                                                                        சூரியனே பிராணன் :

அதர்வண வேதம் ....பிரச்ன உபநிஷதம்

5.சூரியன் ஆற்றல், சந்திரன் ஜடப்பொருள். தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாவும் இந்த உலகில் உள்ள அனைத்தும் ஜடப்பொருளே. எனவே பொருள் என்றால் அது ஜடப்பொருளே.

சூரியனும் சந்திரனும் இங்கே உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. சந்திரனுக்கென்று ஒளி கிடையாது. சூரியனின் ஒளியைப் பெற்று அது பிரதிபலிக்கிறது. சந்திரன் மட்டும் இருந்தால் ஒளியில்லை. அது வெறும் ஜடப்பொருளே. சூரியனாகிய ஆற்றல் அதில் புகும்போது சந்திரன் ஒளி வீசுகிறது அதாவது செயல்படுகிறது.
உலகிலுள்ள தூல மற்றும் நுண்பொருட்கள் அனைத்தும் ஜடப்பொருளே. அதில் பிராணன் செயல்படும்போது மட்டுமே செயல் நிகழ்கிறது. இவ்வாறு உலகம் அனைத்தும் ஆகாசம், பிராணன் என்ற அடிப்படைப் பொருட்களின் விளைவாக உள்ளது.

6.சூரியன் உதித்து, ஒளி கிழக்குத் திசையில் பரவும்போது, அவன் தன் கதிர்களால் கிழக்கில் பிராணனை வழங்குகிறான். அதுபோலவே தெற்கு, மேற்கு, வடக்கு, கீழே, மேலே மற்றும் அந்தரப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் ஒளி பரவும்போது, அந்தந்தப் பகுதிகளுக்கு, தன் கதிர்களால் பிராணனை வழங்குகிறான்.

ஓர் அழகிய காலைக் காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறார் பிப்பலாத முனிவர். கிழக்கில் சூரியன் உதிக்கிறது. அதன் பொன்னிறக் கதிர்கள் திசைகள் தோறும் பரவுகின்றன. பரவுகின்ற திசையெல்லாம் பிராணனை வழங்குகிறான் கதிரவன்.
கதிரவன் பிராணனுக்குத் தலைவனாக, பிராணனை வழங்குபவனாகக் கொள்ளப்படுகிறான். பிராணன் என்றால் சக்தி, ஆற்றல். வாழ்க்கைக்கான ஆற்றலை அளிப்பவன் சூரியன். தூங்கிக் கிடக்கின்ற உயிரினங்கள் அவனது ஸ்பரிசத்தால் எப்படி எழுந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுகின்றன என்பது நமது அன்றாட அனுபவம். தாவரங்கள்கூட இதற்கு விதி விலக்கு அல்ல. எனவே இங்கு சூரியன் போற்றப்படுகிறான்.

7.வைசுவானரனும் விசுவரூபனும் பிராண சக்தியும் ஆகிய சூரியன் இவ்வாறு ஒரு நெருப்புப் பிழம்புபோல் உதிக்கிறான். ரிக்வேத மந்திரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வைசுவானரன்: வைசுவானரன் என்றால் அனைத்து உயிர்களின் தொகுதியாக உள்ளவன். அனைத்து உயிர்களும் இயங்குவதற்கான ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.

விசுவரூபன் : அனைத்து உருவங்களின் வடிவாக உள்ளவன். சூரிய ஒளி இருப்பதாலேயே உருவங்களைப் பார்க்க முடிகிறது. சூரியனின்றி எந்த உருவத்தையும் நம்மால் பார்க்க முடியாது. எனவே சூரியன் அனைத்து உருவங்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.

பிராண சக்தி: ஜடப்பொருள், பிராணன் ஆகிய இரண்டையும் அடிப்படையாக உடையது படைப்பு. இங்கே பிராணனின் தூல வடிவாகச் சூரியன் போற்றப்படுகிறான். இவ்வாறு உலகிற்கே, உலக வாழ்க்கைக்கே ஆதாரமான சூரியன் ஒரு நெருப்புப் பிழம்புபோல் கிழக்கில் உதிப்பதாக உதயகால அழகை, அதன் உண்மைப்பொருள் விளக்கத்துடன் படம் பிடித்துக் காட்டுகிறார் முனிவர்.

ஆன்மீக உயர்வுக்கும் அறிவின் ஒளிக்கும் இணையாக உபநிஷத முனிவர்களிடம் நாம் காண்பது அவர்களின் பணிவு மற்றும் தங்கள் முன்னோர்களாகிய ரிஷிகளிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தி, உபநிஷத உண்மைகளை அறிந்தவர்களாக இருந்தும், அந்த உண்மைகளை உலகிற்குச் சொல்கின்ற பெருமையை முன்னோர்களுக்குக் கொடுக்கவே அவர்கள் விரும்பினர். பிப்பலாதரும் சூரியன் உலகிற்கே ஆதாரமானவன் என்று கூறிவிட்டு, அது தமது கண்டுபிடிப்பு அல்ல, ஏற்கனவே ரிக்வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பெருமையை ரிக்வேத முனிவருக்கு அளிக்கிறார். ரிக்வேத பகுதி அடுத்த மந்திரமாக வருகிறது.

8.சூரியன் அனைத்து உருவினன், கதிர்கள் நிறைந்தவன், அனைத்தும் அறிந்தவன், அனைத்து உயிர்களின் ஆதாரம், ஒன்றேயான ஒளிப்பொருள், வெப்பத்தைக் கொடுப்பவன், உயிர்களின் பிராணனாகிய அந்தச் சூரியன், இதோ, ஆயிரம் கதிர்களுடன் உதிக்கிறான்; நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறான்.
உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின?
புகைப்படம்: தத்வமஸி --நீயே அது..

சாம வேதம் ...... சந்தோக்கியோபநிஷத்து .....

ஆறாவது அத்தியாத்தில் சுவேதகேதுவின் கதையும் சாமவேதத்தின் சிகரமாக விளங்கும் தத் -த்வ-மஸி மஹா வாக்கியத்தின் உபதேசமும் அடக்கம். சுவேதகேதுவை பார்த்து அவன் தகப்பனார் உத்தாலகர், 'சுவேதகேது! நீ குருகுலத்தில் பிரம்மச்சாரியாக இருந்து கல்வி கற்று வரவேண்டும். நமது குலத்தோர் எவரும் வேதத்தை கற்காமல் பெயரால் மட்டும் பிராம்மனாராக இருந்ததில்லை' என்றார். அதன்படி சுவேதகேதுவும் பன்னிரண்டு வயது முதல் இருப்பது நான்கு வயது வரை குருகுலவாசம் செய்து வித்தியாகர்வத்துடன் வீடு திரும்பி வந்தான். 'மகனே! எல்லாம் படித்தறிந்து விட்டதாக நீ எண்ணுகிறாய் போலிருக்கிறது. படைப்புக்கு எட்டாத பொருளை எப்படி உணர்வது என்று தெரிந்து கொண்டாயா?' என்று தகப்பனார் கேட்டார். 'எனது குருமார்களாகிய பெரியோர் இதை அறியமாட்டார் போலும். அறிந்திருந்தால் சொல்லியிருக்க மாட்டார்களா? நீங்களே இதை உபதேசிக்க வேண்டும் என்றான். 'அங்கனமே யாகுக' என்று தகப்பனார் உபதேசிக்கலானார்.

குழந்தாய்! நதிகள் கிழக்கிலும் மேற்கிலும் பாய்ந்து செல்லுகின்றன. சமுத்திரத்திலிருந்து தோன்றி சமுத்திரத்திலேயே மறைகின்றன. சமுத்திரமாகவே ஆகிவிடுகின்றன. அவை 'நான் இது' என்று எங்கனம் அறியமாட்டாவோ அங்ஙனமே, குழந்தாய்! இப்பிராணிகளெல்லாம் ஸத்திலிருந்து தோன்றி ஸத்திலிருந்து தோன்றினோம் என்று உணரவில்லை. எது அணு மாத்திரமான ஸுசம வஸ்துவோ அதுவே நீயாக உள்ளாய், (தத் -த்வ-மஸி).

ஆலம் பழம் ஒன்றைக் கொண்டவா.
'இதோ ஐயனே.'
'அதைப் பிள.'
'பிளக்கப்பட்டது ஐயனே'.
'அங்கு என்ன காண்கிறாய்'.
'அணுவடிவான விதைகள், ஐயனே!'
'குழந்தாய், அவற்றுள் ஒன்றைப் பிள.'
'பிளக்கப்பட்டது ஐயனே'.
'அங்கு என்ன காண்கிறாய்?'
'ஒன்றுங் காணவில்லை'.

உன் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சிறு ஆலவிதைக்குள் நுட்பமாக இலைகளும் கிளைகளும் விழுதுகள் கொண்ட ஆலமரம் எப்படி அடங்கியிருக்கிறதோ அவ்வாறே உலகம் முழுவதும் ஆத்மா சக்தியில் அடங்கியிருக்கிறது (தத் -த்வ-மஸி)

தண்ணீரில் போட்ட உப்பு தண்ணீரில் கரைந்து கண்ணுக்குத் தெரியாமல் போனாலும் எப்படி தண்ணீர் முழுவதிலும் வியபித்து இருக்கிறதோ, அப்படியே இவ்வுலகில் பரம்பொருள் மறைந்து நிற்கிறது.அதுவே ஸத்து. அதுவே ஆன்மா. நீயும் அதுவே (தத் -த்வ-மஸி)

ஒருவனைக் கண்ணைக் கட்டி காட்டில் திருடர் கொண்டு போய் விடுவது போல், முன் செய்த கருமங்கள் நமது ஞானத்தை மறைத்து ஆசைகளாகிய மோகக் கட்டுகளால் கண்ணைக் கட்டி, உலகம் என்ற காட்டில் நம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. நாம் இருக்கும் இடம் எது, நம்முடைய ஊருக்கு திரும்பிப்போக வழி எது என்றறியாமல் பயத்திலும் மயக்கத்திலும் கிடக்கிறோம். தகுந்த ஆசிரியன் கிடைத்தக் கட்டுகளை அவிழ்த்தால் கண்கள் திறந்து, வழிதேடி ஊர்போய் சேரலாம். இல்லாவிடில் எந்த முயற்சியும் பயன் தராது.
அதர்வண வேதம் ....பிரச்ன உபநிஷதம்

அறிவைத் தேடிய ஆறு பேர்

1.1 ஓம் பரம்பொருளுக்கு வணக்கம். ஹரி ஓம். பரத்வாஜரின் மகனான சுகேசன், சிபியின் மகனான சத்தியகாமன், சூரியனின் பேரனான கார்க்கியன், அச்வலரின் மகனான கௌசல்யன், விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன், காத்யரின் மகனான கபந்தி ஆகியோர் இறைவனை நாடுபவர்கள்; இறையுணர்வில் நிலைபெற்றவர்கள். அவர்கள் கடவுளைத் தேடினார்கள். தெய்வ முனிவரான பிப்பலாதர் கடவுளைப்பற்றி முற்றிலும் விளக்கக்கூடியவர் என்று அறிந்ததும் கையில் விறகுடன் அவரை அணுகினர்.

1.2. பிப்பலாத முனிவர் அவர்களிடம், உரிய முறையில், இங்கே இன்னும் ஒரு வருடம் வாழுங்கள். குறிப்பாக, தவத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் செயல்பாட்டுன்கூடிய நம்பிக்கையுடனும் வாழுங்கள், அதன்பிறகு நீங்கள் விரும்புவதுபோல் கேள்விகளைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரியுமானால் நிச்சயமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறோம் என்று கூறினார்

உலகம் (3-16)
பிப்பலாத முனிவர் உபதேசித்ததுபோல் ஆறு மாணவர்களும் ஒரு வருடம் தவ வாழ்வில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவரை அணுகி முதல் கேள்வியைக் கேட்கின்றனர். ஆன்மீகத்தை நாடி ஆறு பேரும் புறப்பட்டிருந்தாலும் அவர்களின் பாதை படிப்படியாக அமைவதை இந்த உபநிஷதத்தில் காண்கிறோம். எதையும் விட்டுவிட்டோ, திடீரென்றோ தாவுகின்ற முயற்சி அவர்களிடம் காணப்படவில்லை. கண்ணுக்குத் தெரிகின்ற, நாம் வாழ்கின்ற உலகத்தைப் பற்றியதாக அவர்களது முதல் கேள்வி அமைந்துள்ளது.

எல்லாம் எங்கிருந்து வந்தன?

3. ஒரு வருடத் தவ வாழ்விற்கு பிறகு கபந்தி பிப்பலாத முனிவரை அணுகி அவரிடம், தெய்வ முனிவரே! இந்த உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? என்று கேட்டார்.

4.கபந்தியிடம் பிப்பலாத முனிவர் கூறினார்:
உயிரினங்களைப் படைக்க விரும்பிய படைப்புக் கடவுள் தவத்தில் ஈடுபட்டார், அதன்பிறகு ஆகாசத்தையும் பிராணனையும் படைத்தார். இவை இரண்டும் சேர்ந்து பல்வேறு உயிரினங்களை எனக்காக உற்பத்தி செய்யும் என்று உணர்ந்திருந்தார் அவர்.

சுவாமி விவேகானந்தரின் விளக்கத்தைக் காண்போம்

இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே...
எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியினால்.... இந்த பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் வெளிப்பாடுகளே.
சுவாமிஜி ஜடப்பொருளை ஆகாசம் என்றும், ஆற்றலை பிராணன் என்றும் குறிப்பிடுகிறார்; இயக்கம், அதிர்வு, எண்ணம் என்று நாம் அறியும் சக்திகள் எல்லாம் பிராணனுடைய பல்வேறு நிலைகள். உருவம், தடை என்று நாம் அறியும் ஜடப்பொருள் எல்லாம் ஆகாசத்தின் வேறு நிலைகள்.
புகைப்படம்: இரண்டு வகை அறிவுகள்.......  

அதர்வண வேதம் .......முண்டக உபநிஷதம்.......

அனைத்திற்கும் அடிப்படையான அறிவு ஒன்று உண்டா என்பது கேள்வி. உண்டு என்று கூறி, அந்த அடிப்படை அறிவு மட்டுமே மிக உயர்ந்தது, மற்ற அனைத்து அறிவுகளும் இரண்டாம் பட்சமானவை, சாதாரணமானவை என்று அங்கிரஸ் சௌனகருக்கு உபதேசிக்கிறார்.

1.1.4. அங்கிரஸ் சௌனகரிடம் கூறினார்: 'உயர்ந்தது மற்றும் சாதாரணமானது என்று இரண்டு வகை அறிவுகள் உள்ளன. இவற்றை அறிய வேண்டும் என்று இறையனுபூதி பெற்ற மகான்கள் கூறுகிறார்கள்'.

1.1.5. ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், உச்சரிப்பு, சடங்குகள், இலக்கணம், அகராதி, யாப்பு, வானவியல், ஜோதிடம் போன்றவை சாதாரண அறிவைச் சேர்ந்தவை. அழிவற்றவராகிய இறைவன் எந்த அறிவால் அடையப்படுகிறாரோ அது உயர்ந்த அறிவு.

இந்து மதத்தின் ஓர் ஒப்பற்ற தனித்தன்மையை இங்கே நாம் காண்கிறோம். வேதங்களைக் கடவுளின் மூச்சாக கொள்கின்ற அதே வேளையில் வேதங்களும் சாதாரண அறிவே என்று கூறுவதை இந்து மதத்தில் மட்டுமே நாம் காண முடியும். 'வேதங்களின் சிறப்பு என்ன?' என்று கேட்ட போது சுவாமி விவேகானந்தர், 'தங்கள் போதனையையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்ப திரும்ப வற்புறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெறும் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்  என்கிறார். வேதங்கள் இறை வாக்காக இருக்கலாம், இறைவனின் மூச்சாக இருக்கலாம். ஆனாலும் அவை இறைவன் அல்ல. இறைவனை அடைவது மட்டுமே உயர்ந்தது, மேலானது.

யஜுர் வேதம் ........பிருஹதாரண்யக உபநிஷதம்......

2.4.10. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் எல்லாம் எல்லையற்ற இறைவனின் மூச்சாகும்.                                                                                                                                                                        கடவுள் யார்?

யஜுர் வேதம் .........தைத்தீரிய உபநிஷதம்.....

வருண முனிவரின் மகன் பிருகு. அவன் தன் தந்தையை அணுகி, 'கடவுள் என்பவர் யார்?' என்று கேட்டான். அதற்கு வருணர் ஒருசில விளக்கங்களை கூறி, தவம் செய்து உண்மையை அறியுமாறு கூறினார். தவம் செய்து படிப்படியாக உண்மையை உணர்ந்தான் பிருகு.

3.1.1.வருண முனிவரின் மகன் பிருகு.அவன் தந்தையை அணுகி, 'தெய்வத்திற்கு நிகரானவரே கடவுள் என்பவர் யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள்' என்று கேட்டான். அதற்கு அவர், 'உணவு, பிராணன், கண், காது, மனம், பேச்சு, ஆகியவையே கடவுள்' என்று கூறினார்.

இந்த பதிலிலிருந்து பிருகுவால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. 'உணவு, பிராணன் போன்றவை எப்படி கடவுளாக முடியும்' என்று குழம்பி நின்றான் அவன். அவனது நிலைமையை கண்ட வருண முனிவர், அவன் புரிந்து கொள்வதற்காக, தாம் கூறியதை சற்று தெளிவுப்படுத்தினார்.

3.1.2. வருண முனிவர் உபதேசத்தைத் தொடர்ந்தார்:
'யாரிடமிருந்து இந்த உயிரினங்கள் அனைத்தும் பிறக்கின்றனவோ, பிறந்தவை யாரால் வாழ்கின்றனவோ, மரணத்திற்கு பிறகு யாரிடம் ஒடுங்குகின்றனவோ அவரே கடவுள். அவரை அறிய முயற்சி செய்'. இந்த உபதேசத்தைக் கேட்டதும் பிருகு தவத்தில் ஈடுப்பட்டான்.

அனைத்திற்கும் ஆதாரமானவர் அவர். அவரிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, வாழ்கின்றன, ஒடுங்குகின்றன. இவ்வாறு கூறி, உண்மையைக் கண்டுப்பிடிக்கும் பொறுப்பை பிருகுவிடம் விட்டுவிடுகிறார் வருணர்.

தவம் என்பது என்ன? 'மனத்தையும் புலன்களையும் வசப்படுத்துவது' என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர்.

எல்லா உண்மைகளும் நமக்குள்ளே உள்ளன. மனத்தையும் புலன்களையும் வசப்படுத்தி, நம்முள் ஆழ்ந்து பார்த்தால் நம்மைப் பற்றிய, பிரபஞ்சத்தைப் பற்றிய,இறைவனைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிய முடியும். அதற்கான வழி தவம். எனவே பிருகு தவத்தில் ஈடுப்பட்டான்
    
புகைப்படம்: மரணத்திற்குப் பின்னால் உயிரின் நிலை:

யஜுர்வேதம்----கட உபநிடதம்

நசிகேதன் என்ற சிறுவனுக்கு எமதர்மன் உபதேசிக்கிறார்...

2.2.6. நசிகேதா! நல்லது. மரணத்திற்கு பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், இரகசியமானதும், அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன்.

2.2.7. மரணத்திற்கு பிறகு சில உயிர்கள் மனித உடம்பை பெறுகின்றனர்; சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றன. வினைபயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.(மறுபிறவி கோட்பாடு)

2.2.8. புலன்கள் தூங்கும்போது தனுக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உயிர்களும் அதனையே சார்ந்து இருகின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை.

2.2.9. ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்தந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

2.2.10. ஒன்றான காற்று உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்தந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

2.2.11. எல்லோருடைய காட்சிக்கு ஆதாரமாக இருப்பவன் சூரியன். ஆனால் பார்வைக் கோளாறுகளோ மற்ற புறக் குறைப்பாடுகளோ சூரியனைப் பாதிப்பதில்லை. அதுபோல் ஒன்றேயான ஆன்மா எல்லோரிலும் இருந்தாலும் உலகின் துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.        மரணத்திற்குப் பின்னால் உயிரின் நிலை:

யஜுர்வேதம்----கட உபநிடதம்

நசிகேதன் என்ற சிறுவனுக்கு எமதர்மன் உபதேசிக்கிறார்...

2.2.6. நசிகேதா! நல்லது. மரணத்திற்கு பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், இரகசியமானதும், அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன்.

2.2.7. மரணத்திற்கு பிறகு சில உயிர்கள் மனித உடம்பை பெறுகின்றனர்; சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றன. வினைபயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.(மறுபிறவி கோட்பாடு)

2.2.8. புலன்கள் தூங்கும்போது தனுக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய, மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உயிர்களும் அதனையே சார்ந்து இருகின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை.

2.2.9. ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்தந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

2.2.10. ஒன்றான காற்று உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்தந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

2.2.11. எல்லோருடைய காட்சிக்கு ஆதாரமாக இருப்பவன் சூரியன். ஆனால் பார்வைக் கோளாறுகளோ மற்ற புறக் குறைப்பாடுகளோ சூரியனைப் பாதிப்பதில்லை. அதுபோல் ஒன்றேயான ஆன்மா எல்லோரிலும் இருந்தாலும் உலகின் துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.
          
புகைப்படம்: நசிகேதன் என்ற சிறுவன் எமதர்மனிடம் கேட்ட கேள்விகள் ....

யஜுர்வேதம்----கட உபநிடதம்

1.1.20. நசிகேதன்----மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும்,இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவுபெற விரும்புகிறேன்

1.1.21. எமன்-----நசிகேதா இந்த விஷயத்தில் தேவர்களுக்கு கூட சந்தேகம் உள்ளது.(தேவர்களுக்கு கூட தெரியாது) இந்த விஷயம் நுட்பமானது,எளிதாக அடையக்கூடியது அல்ல. எனவே வேறு ஏதாவது கேள்.

1.1.22. நசிகேதன்------இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறியமுடியாது என்று நீயும் சொல்கிறாய்.ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல வேறொருவர் கிடைக்க மாட்டார்கள். வேறு எந்த வரமும் இதறகு இணையாகாது.

1.1.23. எமதர்மன்---நுாறு ஆண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள்.ஏராளம் பசுக்கள்,யானை பொன்,குதிரை போன்றவற்றை கேள், புமியில் பரந்த அரசைகேள்,நீயும் எவ்வளவு நாள் வாழவிரும்புகிறாயோ அவ்வளவு நாள் வாழ்ந்துகொள்.

1.1.24,25.எமதர்மன்---- செல்வம்,நீண்ட ஆயுள் உட்பட இந்த உலகத்தில் உனக்கு எதுதேவையோ சொல் அதை நிறைவேற்றித்தருகிறேன்.சாரதிகளுடன் தேர்களை தருகிறேன்.வாத்திய கலைஞர்களைத்தருகிறேன்,தேவலோக கன்னியர்களை கேள் அதைவேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால் மரணத்திற்கு பின் நடப்பது பற்றிகேட்காதே.

1.1.26.27,28நசிகேதன்-----எமதர்மரே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை.இவைகள் மனிதனின் ஆற்றலை வீணாக்குகின்றன.வாழ்க்கையோ குறுகியது.அதனால் இவைகள் வேண்டாம்.செல்வத்தால் மனிதனுக்கு திருப்தி ஏற்படாது.அதிக ஆயுள் வாழ்வதாலும் திருப்தி ஏற்படாது.

1.1.29.எமதர்மரே! எந்த விஷயத்தில் பலருக்கு சந்தேகம் உள்ளதோ,எதை தெரிந்துகொண்டால் பெரும் பயன்கிடைக்குமோ,எது ரகசியமாக வைக்கப்ட்டுள்ளதோ,அதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.வேறு எதுவும் வேண்டாம்.

1.2.1 எமதர்மன்---மேலானது மற்றும் சுகம் தருவது என இரண்டு உள்ளது.இரண்டும் வேறுபட்ட பலனை தருகிறது.மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை கிடைக்கிறது.சுகம் தருவதை தேர்ந்தெடுப்பவன் வீழ்ச்சியடைகிறான்.

1.2.2,3. மூடன் உடம்புக்கு சுகம் தருவதை தேர்ந்தெடுக்கிறான்.ஆனால் நசிகேதா நீயோ மேலான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறாய்.

1.2.4,5.இறைநெறி மேலானது, உலகியியல் இன்பம் கீழானது உடலுக்கு சுகம் தருவது.நீ இறை நாட்டம் உடையவன்உலகியல் இன்பங்களை விரும்புபவர்கள் குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறார்கள்.

1.2.7,8.அறிய வேண்டிய ரகசியம் இந்த ஆன்மாபற்றியது.ஏற்கனவே ஆன்மாவை அறிந்தவன் உபதேசத்தை பின்பற்றினால் குழப்பம் இல்லை.உலகியல் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி தெரியாது.

1.2.9,10 வாதங்கள் மூலம் இதை அறியமுடியாது.உண்மையை உணர்ந்தவர் ஒருவர் மூலம் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

1.2.11.நசிகேதா! சொர்க்கலோகத்தில் அளவற்ற இன்பங்கள் நிறைந்துள்ளன.அங்கே பயம் இல்லை.நீண்ட நாட்கள் வாழலாம்.புத்திசாலியான நீ இதை நன்கு அறிந்திருந்தும் சொர்க்கத்தை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

1.2.12.நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடையவேண்டியது.இதயக்குகையில் ஒளிர்வது,இருண்டபகுதியில் உள்ளது,பழமையானது,ஒளிமயமானது. புத்தி விழிப்புற்றவன் அத்யாத்ம யோகத்தால் தியானத்தின் மூலம் அதை அறிகிறான்.
(அத்தியாத்மயோகம் என்பது ஆன்மாவுடன் இணைதல் என்று பொருள்)
இங்கே இதயம் என்று சொல்வது இரத்தஓட்டத்திற்கு காரணமான இதயம் அல்ல.)  நசிகேதன் என்ற சிறுவன் எமதர்மனிடம் கேட்ட கேள்விகள் ....

யஜுர்வேதம்----கட உபநிடதம்

1.1.20. நசிகேதன்----மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும்,இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவுபெற விரும்புகிறேன்

1.1.21. எமன்-----நசிகேதா இந்த விஷயத்தில் தேவர்களுக்கு கூட சந்தேகம் உள்ளது.(தேவர்களுக்கு கூட தெரியாது) இந்த விஷயம் நுட்பமானது,எளிதாக அடையக்கூடியது அல்ல. எனவே வேறு ஏதாவது கேள்.

1.1.22. நசிகேதன்------இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறியமுடியாது என்று நீயும் சொல்கிறாய்.ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல வேறொருவர் கிடைக்க மாட்டார்கள். வேறு எந்த வரமும் இதறகு இணையாகாது.

1.1.23. எமதர்மன்---நுாறு ஆண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள்.ஏராளம் பசுக்கள்,யானை பொன்,குதிரை போன்றவற்றை கேள், புமியில் பரந்த அரசைகேள்,நீயும் எவ்வளவு நாள் வாழவிரும்புகிறாயோ அவ்வளவு நாள் வாழ்ந்துகொள்.

1.1.24,25.எமதர்மன்---- செல்வம்,நீண்ட ஆயுள் உட்பட இந்த உலகத்தில் உனக்கு எதுதேவையோ சொல் அதை நிறைவேற்றித்தருகிறேன்.சாரதிகளுடன் தேர்களை தருகிறேன்.வாத்திய கலைஞர்களைத்தருகிறேன்,தேவலோக கன்னியர்களை கேள் அதைவேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால் மரணத்திற்கு பின் நடப்பது பற்றிகேட்காதே.

1.1.26.27,28நசிகேதன்-----எமதர்மரே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை.இவைகள் மனிதனின் ஆற்றலை வீணாக்குகின்றன.வாழ்க்கையோ குறுகியது.அதனால் இவைகள் வேண்டாம்.செல்வத்தால் மனிதனுக்கு திருப்தி ஏற்படாது.அதிக ஆயுள் வாழ்வதாலும் திருப்தி ஏற்படாது.

1.1.29.எமதர்மரே! எந்த விஷயத்தில் பலருக்கு சந்தேகம் உள்ளதோ,எதை தெரிந்துகொண்டால் பெரும் பயன்கிடைக்குமோ,எது ரகசியமாக வைக்கப்ட்டுள்ளதோ,அதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.வேறு எதுவும் வேண்டாம்.

1.2.1 எமதர்மன்---மேலானது மற்றும் சுகம் தருவது என இரண்டு உள்ளது.இரண்டும் வேறுபட்ட பலனை தருகிறது.மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை கிடைக்கிறது.சுகம் தருவதை தேர்ந்தெடுப்பவன் வீழ்ச்சியடைகிறான்.

1.2.2,3. மூடன் உடம்புக்கு சுகம் தருவதை தேர்ந்தெடுக்கிறான்.ஆனால் நசிகேதா நீயோ மேலான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறாய்.

1.2.4,5.இறைநெறி மேலானது, உலகியியல் இன்பம் கீழானது உடலுக்கு சுகம் தருவது.நீ இறை நாட்டம் உடையவன்உலகியல் இன்பங்களை விரும்புபவர்கள் குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறார்கள்.

1.2.7,8.அறிய வேண்டிய ரகசியம் இந்த ஆன்மாபற்றியது.ஏற்கனவே ஆன்மாவை அறிந்தவன் உபதேசத்தை பின்பற்றினால் குழப்பம் இல்லை.உலகியல் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி தெரியாது.

1.2.9,10 வாதங்கள் மூலம் இதை அறியமுடியாது.உண்மையை உணர்ந்தவர் ஒருவர் மூலம் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

1.2.11.நசிகேதா! சொர்க்கலோகத்தில் அளவற்ற இன்பங்கள் நிறைந்துள்ளன.அங்கே பயம் இல்லை.நீண்ட நாட்கள் வாழலாம்.புத்திசாலியான நீ இதை நன்கு அறிந்திருந்தும் சொர்க்கத்தை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

1.2.12.நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடையவேண்டியது.இதயக்குகையில் ஒளிர்வது,இருண்டபகுதியில் உள்ளது,பழமையானது,ஒளிமயமானது. புத்தி விழிப்புற்றவன் அத்யாத்ம யோகத்தால் தியானத்தின் மூலம் அதை அறிகிறான்.
(அத்தியாத்மயோகம் என்பது ஆன்மாவுடன் இணைதல் என்று பொருள்)
இங்கே இதயம் என்று சொல்வது இரத்தஓட்டத்திற்கு காரணமான இதயம் அல்ல.)                       

புகைப்படம்: பிரம்மத்தை பற்றிய விவாதம் ...

ஜனகரின் அரசபையில் பல்வேறு ரிஷிகள் மத்தியில் பிரம்மத்தை பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாக்ஞவல்கியரிடம் பலரும் கேள்விகள் கேட்டு அவரை சோதிக்கிறார்கள்.அவர்களுள் கார்க்கி என்ற பெண் ரிஷியும் ஒருத்தி
--------------
யஜுர்வேதம்----பிருஹதாரணியகோபநிஷத்
------------------
விதேகதேசத்து மன்னர் ஜனகர் ஒரு யாகத்தை செய்தார்.அதற்கு குருதேசம்,பாஞ்சால தேசம் போன்ற தேசங்களிலிருந்து பிராமணர்கள் (ரிஷிகள்)கூடினார்கள்.இவர்களுள் யார் பிரம்மஞானத்தில் சிறந்தவர் என அறியவேண்டும் என ஜனகருக்கு விருப்பம் உண்டாயிற்று.அவர் ஆயிரம் பசுக்களை கூட்டினார்.ஒவ்வொரு பசுவின் கொம்புகளிலும் பத்துபாதம் தங்கம் வைத்து கட்டப்பட்டது.பிரம்மஞானத்தில் சிறந்தவர் இந்த பசுக்களையும் தங்கதைதையும் எடுத்துசெல்லாம் என ஆணையிட்டார்
அப்போது யாக்யவல்கியர் என்ற ரிஷி தன் சிஷ்யனை அழைத்து இந்த பசுக்களை ஓட்டிச்செல்லும் படி ஆணையிட்டார்.
அப்போது மற்ற பிராமணர்கள்(ரிஷிகள்) உம்மைசோதிக்க வேண்டும் என்று கூறி அவரிடம் பல கேள்விகளை கேட்கிறார்கள்…….
பலரின் கேள்விகளுக்கு பதிலளித்தபின் ஒருபெண் ரிஷி எழுந்து கேள்விகேட்கிறாள்……

8.1. வாசக்னுவின் புத்திரியான கார்க்கி எழுந்து..”பிராமணர்களே!(ரிஷிகளே!) நான் இவரை(யாக்ஞவல்கியரை) இரண்டு கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்.இவர் இக்கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் உங்களில் ஒருவரும் இந்த பிரம்மவாதியை(யாஞ்யவல்கியரை) ஜயிக்க முடியாது. என்றாள்(பிராமணர்கள் அவளிடம்) கார்க்கி கேள் என்றார்கள்

8.2. யாஜ்ஞவல்கியரே! எது வானத்திற்கு மேலும்,
பூமிக்கு கீழும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ளதெனவும்,எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ எதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டுள்ளது? என்று கேட்டாள்.

8.7.ஆகாயத்தில் எது குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது?
யாஜ்ஞவல்கியர் பதில் சொன்னார்

8.8.கார்க்கி, பிரம்மஞானிகள் அதை அளிவற்றது(அக்ஷரம்) என்று கூறுகிறார்கள்.அதை கண்களால் காணமுடியாது(ஸ்துலம்அல்ல) அது சூட்சுமஉடல் உடையதும் அல்ல,அது குடைடையமல்ல நெட்டையுமல்ல,அது நெருப்புபோல் சிவந்த்தல்ல,தண்ணீர்போல் ஈரமுள்ளதல்ல,அதற்கு உள்ளுமில்லை புறமுமில்லை,அது ஒன்றையும் உண்வதும் இல்லை ஒன்றால் உண்ணப்படுவதும் இல்லை.

8.9.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே சூரியனும் சந்திரனும் த்த்தம் இடங்களில் சுற்றுகின்றன.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே வானமும் பூமியும் செயல்படுகின்றன.இந்த அக்ஷரத்தை அறியாமல் பல்லாயிரம் வருஷங்கள் யாகம் செய்தாலும்,ஹோம்ம் செய்தாலும் கிடைக்கும் பலன் முடிவுடைய பலன்.இந்த அக்ஷரத்தை அறியாமல் இந்த உலகைவிட்டு செல்பவன் கிருபணன் எனப்படுவான்.இந்த அக்ஷரத்தை அறிந்துகொண்டு ஒருவன் இவ்வுலகை விட்டு சென்றால் அவன் பிராமணன் எனப்படுவான்.

8.11கார்க்கி இந்த அக்ஷர வஸ்துவினால் தான் ஆகாயம் இவ்வாறு குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.

8.12.பெருமை வாய்ந்த பிராமணர்களே! இந்த பிரம்மஞானியை நமஸ்கரியுங்கள்.இவரை ஜெயிக்க்கூடியவர் உங்களில் ஒருவரும் இல்லை என்று கூறி கார்க்கி அமர்ந்தாள்.பிரம்மத்தை பற்றிய விவாதம் ...

ஜனகரின் அரசபையில் பல்வேறு ரிஷிகள் மத்தியில் பிரம்மத்தை பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாக்ஞவல்கியரிடம் பலரும் கேள்விகள் கேட்டு அவரை சோதிக்கிறார்கள்.அவர்களுள் கார்க்கி என்ற பெண் ரிஷியும் ஒருத்தி
--------------
யஜுர்வேதம்----பிருஹதாரணியகோபநிஷத்
------------------
விதேகதேசத்து மன்னர் ஜனகர் ஒரு யாகத்தை செய்தார்.அதற்கு குருதேசம்,பாஞ்சால தேசம் போன்ற தேசங்களிலிருந்து பிராமணர்கள் (ரிஷிகள்)கூடினார்கள்.இவர்களுள் யார் பிரம்மஞானத்தில் சிறந்தவர் என அறியவேண்டும் என ஜனகருக்கு விருப்பம் உண்டாயிற்று.அவர் ஆயிரம் பசுக்களை கூட்டினார்.ஒவ்வொரு பசுவின் கொம்புகளிலும் பத்துபாதம் தங்கம் வைத்து கட்டப்பட்டது.பிரம்மஞானத்தில் சிறந்தவர் இந்த பசுக்களையும் தங்கதைதையும் எடுத்துசெல்லாம் என ஆணையிட்டார்
அப்போது யாக்யவல்கியர் என்ற ரிஷி தன் சிஷ்யனை அழைத்து இந்த பசுக்களை ஓட்டிச்செல்லும் படி ஆணையிட்டார்.
அப்போது மற்ற பிராமணர்கள்(ரிஷிகள்) உம்மைசோதிக்க வேண்டும் என்று கூறி அவரிடம் பல கேள்விகளை கேட்கிறார்கள்…….
பலரின் கேள்விகளுக்கு பதிலளித்தபின் ஒருபெண் ரிஷி எழுந்து கேள்விகேட்கிறாள்……

8.1. வாசக்னுவின் புத்திரியான கார்க்கி எழுந்து..”பிராமணர்களே!(ரிஷிகளே!) நான் இவரை(யாக்ஞவல்கியரை) இரண்டு கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்.இவர் இக்கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் உங்களில் ஒருவரும் இந்த பிரம்மவாதியை(யாஞ்யவல்கியரை) ஜயிக்க முடியாது. என்றாள்(பிராமணர்கள் அவளிடம்) கார்க்கி கேள் என்றார்கள்

8.2. யாஜ்ஞவல்கியரே! எது வானத்திற்கு மேலும்,
பூமிக்கு கீழும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ளதெனவும்,எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ எதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டுள்ளது? என்று கேட்டாள்.

8.7.ஆகாயத்தில் எது குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது?
யாஜ்ஞவல்கியர் பதில் சொன்னார்

8.8.கார்க்கி, பிரம்மஞானிகள் அதை அளிவற்றது(அக்ஷரம்) என்று கூறுகிறார்கள்.அதை கண்களால் காணமுடியாது(ஸ்துலம்அல்ல) அது சூட்சுமஉடல் உடையதும் அல்ல,அது குடைடையமல்ல நெட்டையுமல்ல,அது நெருப்புபோல் சிவந்த்தல்ல,தண்ணீர்போல் ஈரமுள்ளதல்ல,அதற்கு உள்ளுமில்லை புறமுமில்லை,அது ஒன்றையும் உண்வதும் இல்லை ஒன்றால் உண்ணப்படுவதும் இல்லை.

8.9.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே சூரியனும் சந்திரனும் த்த்தம் இடங்களில் சுற்றுகின்றன.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே வானமும் பூமியும் செயல்படுகின்றன.இந்த அக்ஷரத்தை அறியாமல் பல்லாயிரம் வருஷங்கள் யாகம் செய்தாலும்,ஹோம்ம் செய்தாலும் கிடைக்கும் பலன் முடிவுடைய பலன்.இந்த அக்ஷரத்தை அறியாமல் இந்த உலகைவிட்டு செல்பவன் கிருபணன் எனப்படுவான்.இந்த அக்ஷரத்தை அறிந்துகொண்டு ஒருவன் இவ்வுலகை விட்டு சென்றால் அவன் பிராமணன் எனப்படுவான்.

8.11கார்க்கி இந்த அக்ஷர வஸ்துவினால் தான் ஆகாயம் இவ்வாறு குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.

8.12.பெருமை வாய்ந்த பிராமணர்களே! இந்த பிரம்மஞானியை நமஸ்கரியுங்கள்.இவரை ஜெயிக்க்கூடியவர் உங்களில் ஒருவரும் இல்லை என்று கூறி கார்க்கி அமர்ந்தாள்.
புகைப்படம்: இறைவன் பற்றி வேதங்கள் கூறுவன 

சாம வேதம் ......சாந்தோக்கியோபநிஷத்து...... 

14.3. என் ஆத்மாவாகிய இது நெல்லலினும் யவத்தினினும் கடுகினும் தினையினும் தினையரிசியினும் நுண்ணியதாய் என் இருதயத்தினுள்(விளங்குவதாம்). என் ஆத்மாவாகிய இதுவே பூமியினும் பெரியதாயும், வானுலகினும் பெரியதாயும், அந்தரிஷத்தனினும் பெரியதாயும், வானுலகினும் பெரியதாயும் இவ்வுலகங்களெல்லாவற்றினும் பெரியதாயும் என் இதயத்தினுள்(விளங்குவதாம்)

14.4. எல்லாக் கருமங்களும், எல்லா ஆசைகளும், எல்லா வாசனைகளும் எல்லா ருசிகளும் தானேயாகி இவ்வுலகனைத்தையும் வியாபித்து நிற்பதாயும். வாக்கு(முதலிய இந்திரியங்கள்) இல்லாததாயும்(அடையாத ஒன்றை அடைந்ததாலுண்டாகும்) பூரிப்பு இல்லாததாயும் உள்ள அந்த பிரம்மமே என் இருதயதினுள் விளங்கும் எனது ஆத்மா இச்சரீரத்தை விட்டு இந்த பிரம்மத்தையே அடைவேன். இங்ஙனம் எவனுக்கு நிச்சியம் உண்டோ அவனுக்கு சந்தேகங்கள் கிடையாது என்று கூறியுள்ளார் சாண்டில்யர்.

யஜுர் வேதம் ..... கட உபநிஷதம் .....

6.15. எப்போது இருதயத்திலுள்ள முடிச்சிகள் எல்லாம் இங்கேயே அவிழ்ந்து போகின்றனவோ அப்போதே சாகும் இயல்புடைய மனிதன் சாகாதவனாகின்றான். இதுவே உபநிஷத்தின் முடிவு.   

அதர்வணவேதம் ...... முண்டக உபநிஷதம்...

2.2.1 அந்த ஆன்மா ஒளிமயமானது, வேறெதை விடவும் மிக அருகில் இருப்பது, இதயகுகையில் உறைவது. வாழ்க்கையின் மேலான லட்சியம் அந்த ஆன்மாவே. செயல்படுகின்ற, மூச்சு விடுகின்ற, இமைக்கின்ற அனைத்து உயிரினங்களும் அதனையே சார்ந்துள்ளன. தூலமானதும் நுண்ணியதும் அதுவே. உயிரினங்களின் அறிவிற்கு அப்பாற்பட்டது அது. போற்றத்தக்க அந்த ஆன்மாவையே அறிய வேண்டும்.

2.2.2. இனியவனே! அந்த ஆன்மா ஒளிமயமானது, அணுக்களுக்கெல்லாம் அணுவானது. உலகங்களும் உயிரினங்களும் அதிலேயே நிலைபெற்றுள்ளன. அந்த ஆன்மா அழிவற்றது. அதுவே இறைவன். பிராணன், வாக்கு, மனம் அனைத்தும்  அதுவே. அது உண்மையானது, மரணமற்றது. அதனையே அறிய வேண்டும். அதனை அறிவாய்.இறைவன் பற்றி வேதங்கள் கூறுவன

சாம வேதம் ......சாந்தோக்கியோபநிஷத்து......

14.3. என் ஆத்மாவாகிய இது நெல்லலினும் யவத்தினினும் கடுகினும் தினையினும் தினையரிசியினும் நுண்ணியதாய் என் இருதயத்தினுள்(விளங்குவதாம்). என் ஆத்மாவாகிய இதுவே பூமியினும் பெரியதாயும், வானுலகினும் பெரியதாயும், அந்தரிஷத்தனினும் பெரியதாயும், வானுலகினும் பெரியதாயும் இவ்வுலகங்களெல்லாவற்றினும் பெரியதாயும் என் இதயத்தினுள்(விளங்குவதாம்)

14.4. எல்லாக் கருமங்களும், எல்லா ஆசைகளும், எல்லா வாசனைகளும் எல்லா ருசிகளும் தானேயாகி இவ்வுலகனைத்தையும் வியாபித்து நிற்பதாயும். வாக்கு(முதலிய இந்திரியங்கள்) இல்லாததாயும்(அடையாத ஒன்றை அடைந்ததாலுண்டாகும்) பூரிப்பு இல்லாததாயும் உள்ள அந்த பிரம்மமே என் இருதயதினுள் விளங்கும் எனது ஆத்மா இச்சரீரத்தை விட்டு இந்த பிரம்மத்தையே அடைவேன். இங்ஙனம் எவனுக்கு நிச்சியம் உண்டோ அவனுக்கு சந்தேகங்கள் கிடையாது என்று கூறியுள்ளார் சாண்டில்யர்.

யஜுர் வேதம் ..... கட உபநிஷதம் .....

6.15. எப்போது இருதயத்திலுள்ள முடிச்சிகள் எல்லாம் இங்கேயே அவிழ்ந்து போகின்றனவோ அப்போதே சாகும் இயல்புடைய மனிதன் சாகாதவனாகின்றான். இதுவே உபநிஷத்தின் முடிவு.

அதர்வணவேதம் ...... முண்டக உபநிஷதம்...

2.2.1 அந்த ஆன்மா ஒளிமயமானது, வேறெதை விடவும் மிக அருகில் இருப்பது, இதயகுகையில் உறைவது. வாழ்க்கையின் மேலான லட்சியம் அந்த ஆன்மாவே. செயல்படுகின்ற, மூச்சு விடுகின்ற, இமைக்கின்ற அனைத்து உயிரினங்களும் அதனையே சார்ந்துள்ளன. தூலமானதும் நுண்ணியதும் அதுவே. உயிரினங்களின் அறிவிற்கு அப்பாற்பட்டது அது. போற்றத்தக்க அந்த ஆன்மாவையே அறிய வேண்டும்.

2.2.2. இனியவனே! அந்த ஆன்மா ஒளிமயமானது, அணுக்களுக்கெல்லாம் அணுவானது. உலகங்களும் உயிரினங்களும் அதிலேயே நிலைபெற்றுள்ளன. அந்த ஆன்மா அழிவற்றது. அதுவே இறைவன். பிராணன், வாக்கு, மனம் அனைத்தும் அதுவே. அது உண்மையானது, மரணமற்றது. அதனையே அறிய வேண்டும். அதனை அறிவாய்.
புகைப்படம்: நமது கடமைகள் பற்றி வேதங்கள் கூறுகின்றன ....

யஜுர் வேதம் --- தைத்திரீய உபநிஷதம் ..
1:11.1-11.8

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியர் அளிக்கும் செய்திபோல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுலவாசம் முடிந்த பின் மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான  கடமைகள் இதில் கூறப்படுகின்றன.

11.1. வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியார் மாணவர்களுக்கு சில அறநெறிகளைப் போதிக்கிறார்: உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். சந்ததிச் சங்கலியை வெட்டாதீர்கள்.

11.2. உண்மையில்ருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்பதிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிருந்து விலகாதீர்கள்.

11.3. தாயைத் தெய்வமாகப்  போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப்  போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

11.4. தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது. நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக்கூடாது.

11.5. நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

11.6. நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

11.7. உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவை பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிக்க, சுதந்திரமான, கோணல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்த சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகும் போதும், அதுபோலவே, சான்றோர்களைப் பின்பற்றுங்கள். 

11.8. இதுவே கட்டளை. இதுவே அறிவுரை. இதுவே வேத ரகசியம். இதுவே இறையானை. இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறே செய்யப்பட வேண்டும்.

இவ்வாறாக ஆச்சாரியார் சீடர்களுக்கு உபதேசித்தார்.
நமது கடமைகள் பற்றி வேதங்கள் கூறுகின்றன ....

யஜுர் வேதம் --- தைத்திரீய உபநிஷதம் ..
1:11.1-11.8

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியர் அளிக்கும் செய்திபோல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுலவாசம் முடிந்த பின் மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கடமைகள் இதில் கூறப்படுகின்றன.

11.1. வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியார் மாணவர்களுக்கு சில அறநெறிகளைப் போதிக்கிறார்: உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள். ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். சந்ததிச் சங்கலியை வெட்டாதீர்கள்.

11.2. உண்மையில்ருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்பதிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிருந்து விலகாதீர்கள்.

11.3. தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

11.4. தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது. நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக்கூடாது.

11.5. நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும்.

11.6. நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.

11.7. உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவை பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிக்க, சுதந்திரமான, கோணல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்த சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகும் போதும், அதுபோலவே, சான்றோர்களைப் பின்பற்றுங்கள்.

11.8. இதுவே கட்டளை. இதுவே அறிவுரை. இதுவே வேத ரகசியம். இதுவே இறையானை. இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறே செய்யப்பட வேண்டும்.

இவ்வாறாக ஆச்சாரியார் சீடர்களுக்கு உபதேசித்தார்                        

புகைப்படம்: யஜுர்வேதம்………..கர்ப்போபநிஷத்
(உடல்கூறுபற்றி ஆராயும் வேதம்)
……………………………………………………..
1. ஓம் குரு சிஷ்யர்களாகிய எங்கள் இருவரையும் ப்ரம்மம் காப்பாற்றட்டும்.அவைருக்கும் சாந்தி உண்டாகட்டும்
சரீரம் ஐந்து பொருட்களாகி ஐந்தில் நிலைபெறுவது,
ஆறு ஆசிரமுடையது,ஆறு குணங்களுடையது,ஏழு தாதுக்களும்,மும்மலங்களும்,இரண்டு பிறப்பிடமும் உடையது,நாலுவிதமான ஆகாரமுடையது.
1.1 .பஞ்சாத்மகம் என்பது ஏன்? பிரதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம் என்ற ஐந்து பொருளாகியிருப்பதால்
1.2. அதில் எது பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம்?
எது திடமான கடினப்பகுதியோ அது பிருதிவி,எது திரவப்பகுதியோ அது அப்பு,எது உஷ்ணப்பகுதியோ அது தேயு.எது சலிக்கிறதோ அது வாயு,எது இடம் கொடுக்கிறதோ அது ஆகாயம்.இவற்றுள் பிரதிவி தாங்குவது.அப்பு பிண்டமாக்குவது,தேயு பிரகாசமானது,வாயு கூட்டத்தை இயக்குவது,ஆகாயம் அவகாசம் அளிப்பது. தனித்தனியாக காது சப்தத்தை கேட்கவும்,த்வக் ஸ்பர்சத்தை உணரவும்,கண்கள் ரூபத்தை காணவும்,நாக்கு ரஸத்தை அறியவும்,மூக்கு முகரவும்,உபஸ்த்தம் ஆனந்தமனுபவிக்கவும்.அபானம் மலத்தை கழிக்கவும் ஏற்பட்டதாகும். புத்தியால் ஜீவன் அறிகிறான்.மனத்தால் ஸஸ்கல்பம் செய்கிறான்.வாக்கால் பேசுகிறான்.
1.3. ஆறு ஆசிரமம் என்றது எதனால்? இனிப்பு,புளிப்பு,உப்பு, கைப்பு,காரம்,துவர்ப்பு, என்ற ரஸங்களை உணர்வதால் ஷட்ஜம்,ருஷபம்,காந்தாரம்,மத்தயமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் என்ற ஏழு ஒலிகளும் இஷ்டம்,அநிஷ்டம்.ப்ரணிதானம் என்பவற்றுடன் சப்தம் பத்து விதமாகிறது. வெண்மை,சிவப்பு,புகைவண்ணம்,மஞ்சள் பொன்னிறம் சேர்ந்த வெளுப்பு என வர்ணங்கள் ஏழு
1.4.ஏழு தாதுக்கள் என்பது எதனால்? எப்போது மனிதனுக்கு விஷயபோகத்திற்குரிய திரவியங்கள் உண்டாகின்றனவோ,அப்போது அவற்றின் கூட்டுறவால் நல்ல குணத்தால் ஆறுவிதமான ரஸங்கள் தோன்றுகின்றன. ரஸத்திலிருந்து ரத்தம்,ரத்தத்திலிருந்து மாம்ஸம்,மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.அதை இயக்குமிடம் இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து வாயுவஜம் தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.இது இறைவனின் நீதி.
3. ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில் போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள் உண்டாகின்றன.ஏழுாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.மனக்கலக்கத்தோடு இருந்தால் குருடர்களாகவும்,முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும் பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.பஞ்ச பூதவடிவான சரீரம் ஸாமர்த்யமுடையதாகும் போது
ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும் அதனால் கந்தம்,ரஸம் முதலியவற்றை அறியும் திறமையும் உண்டாகிறது.அப்போது அந்த ஜீவன் அழியாத அஷரமாகிய ஓங்கார பரம்பொருளை சிந்திக்கிறான்.
அந்த பரம்பொருளை உணர்ந்ததும்(பஞ்ச பூதங்கள்,மனம்,புத்தி,அகங்காரம்) என்ற எட்டு பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகியாகிய ஜீவனுடையவை ஆகின்றன என்பதும் உணரப்படுகிறது. தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை அடைகின்றன.அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் வருகிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும்.பாபச்செயல்களையும் உணர்கிறது.
4. முன்பு என்னால் ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார் பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான்.
பிறகு யோனித்துவாரத்தை அ்டைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு நினைவிழந்து முற்பிறவியையொ புண்ணிய பாபச்செயல்களையோ எதையும் அறிவதில்லை.
6. சரீரம் என்ற பெயர் எதனால் வந்தது? ஞானாக்கினி,தர்சனாக்னி,கோஷ்டாக்கினி என்ற அக்கினிகள் இதை ஆசிரயித்திருப்பதால். அவற்றுள் கோஷ்டாக்னி என்பது உண்பது பருகியது லேஹ்யம் சோஷ்யம் எல்லாவற்றையும்(வயிற்றில் மீண்டும்)அரைத்து(உடலில் சேர்க்கப்) பக்குவப்படுத்துவது. தர்சனாக்கினி ரூபங்களைக்காண்பது. ஞானாக்கினி என்பது நல்லதையும் கெட்டதையும் பகுத்தறிவது. முகத்தில் ஆஹவநீயாக்னியாகவும்,தக்ஷியாக்கினியாகவும் அம்மூன்றும் இடங்கொண்டுள்ளது
இந்த உடம்னில் இருப்பவைகள் எலும்பு,நரம்பு,சதை,மர்மஸ்தாங்கள் 107,ஸ்ந்திகள் 180. ஸ்நாயு என்ற நரம்புகள் 109. மற்ற நரம்புகள் 700. ஊன் 500, எலும்புகள் 360, உரோமங்கள் நாலரைகோடி,எட்டு பலம் எடையுள்ள இதயம்,பன்னிரண்டு பலம் நாக்கு,ஒரு சேர் பித்தம், இரண்டுசேர் கபம்,கால் சேர் சுக்ரம்,இரண்டுசேர் கொழுப்பு, மலமூத்திரம் உண்ணும் ஆகாரத்தை பொறுத்து நியமமில்லாதது.இவ்வாறு சரீர தத்துவத்தை ஆராய்ந்து அறியவேண்டும்.பின்வு இந்த சரீரத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும்…இந்த மோக்ஷசாஸ்த்திரம் இங்ஙனம் பிப்பலாத மகரிஷியால் உபதேசிக்கப்பட்டது.


நன்றி Swami Vidyananda...யஜுர்வேதம்………..கர்ப்போபநிஷத்
(உடல்கூறுபற்றி ஆராயும் வேதம்)
……………………………………………………..
1. ஓம் குரு சிஷ்யர்களாகிய எங்கள் இருவரையும் ப்ரம்மம் காப்பாற்றட்டும்.அவைருக்கும் சாந்தி உண்டாகட்டும்
சரீரம் ஐந்து பொருட்களாகி ஐந்தில் நிலைபெறுவது,
ஆறு ஆசிரமுடையது,ஆறு குணங்களுடையது,ஏழு தாதுக்களும்,மும்மலங்களும்,இரண்டு பிறப்பிடமும் உடையது,நாலுவிதமான ஆகாரமுடையது.
1.1 .பஞ்சாத்மகம் என்பது ஏன்? பிரதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம் என்ற ஐந்து பொருளாகியிருப்பதால்
1.2. அதில் எது பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம்?
எது திடமான கடினப்பகுதியோ அது பிருதிவி,எது திரவப்பகுதியோ அது அப்பு,எது உஷ்ணப்பகுதியோ அது தேயு.எது சலிக்கிறதோ அது வாயு,எது இடம் கொடுக்கிறதோ அது ஆகாயம்.இவற்றுள் பிரதிவி தாங்குவது.அப்பு பிண்டமாக்குவது,தேயு பிரகாசமானது,வாயு கூட்டத்தை இயக்குவது,ஆகாயம் அவகாசம் அளிப்பது. தனித்தனியாக காது சப்தத்தை கேட்கவும்,த்வக் ஸ்பர்சத்தை உணரவும்,கண்கள் ரூபத்தை காணவும்,நாக்கு ரஸத்தை அறியவும்,மூக்கு முகரவும்,உபஸ்த்தம் ஆனந்தமனுபவிக்கவும்.அபானம் மலத்தை கழிக்கவும் ஏற்பட்டதாகும். புத்தியால் ஜீவன் அறிகிறான்.மனத்தால் ஸஸ்கல்பம் செய்கிறான்.வாக்கால் பேசுகிறான்.
1.3. ஆறு ஆசிரமம் என்றது எதனால்? இனிப்பு,புளிப்பு,உப்பு, கைப்பு,காரம்,துவர்ப்பு, என்ற ரஸங்களை உணர்வதால் ஷட்ஜம்,ருஷபம்,காந்தாரம்,மத்தயமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் என்ற ஏழு ஒலிகளும் இஷ்டம்,அநிஷ்டம்.ப்ரணிதானம் என்பவற்றுடன் சப்தம் பத்து விதமாகிறது. வெண்மை,சிவப்பு,புகைவண்ணம்,மஞ்சள் பொன்னிறம் சேர்ந்த வெளுப்பு என வர்ணங்கள் ஏழு
1.4.ஏழு தாதுக்கள் என்பது எதனால்? எப்போது மனிதனுக்கு விஷயபோகத்திற்குரிய திரவியங்கள் உண்டாகின்றனவோ,அப்போது அவற்றின் கூட்டுறவால் நல்ல குணத்தால் ஆறுவிதமான ரஸங்கள் தோன்றுகின்றன. ரஸத்திலிருந்து ரத்தம்,ரத்தத்திலிருந்து மாம்ஸம்,மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.அதை இயக்குமிடம் இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து வாயுவஜம் தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.இது இறைவனின் நீதி.
3. ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில் போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள் உண்டாகின்றன.ஏழுாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.மனக்கலக்கத்தோடு இருந்தால் குருடர்களாகவும்,முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும் பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.பஞ்ச பூதவடிவான சரீரம் ஸாமர்த்யமுடையதாகும் போது
ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும் அதனால் கந்தம்,ரஸம் முதலியவற்றை அறியும் திறமையும் உண்டாகிறது.அப்போது அந்த ஜீவன் அழியாத அஷரமாகிய ஓங்கார பரம்பொருளை சிந்திக்கிறான்.
அந்த பரம்பொருளை உணர்ந்ததும்(பஞ்ச பூதங்கள்,மனம்,புத்தி,அகங்காரம்) என்ற எட்டு பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகியாகிய ஜீவனுடையவை ஆகின்றன என்பதும் உணரப்படுகிறது. தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை அடைகின்றன.அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் வருகிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும்.பாபச்செயல்களையும் உணர்கிறது.
4. முன்பு என்னால் ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார் பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான்.
பிறகு யோனித்துவாரத்தை அ்டைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு நினைவிழந்து முற்பிறவியையொ புண்ணிய பாபச்செயல்களையோ எதையும் அறிவதில்லை.
6. சரீரம் என்ற பெயர் எதனால் வந்தது? ஞானாக்கினி,தர்சனாக்னி,கோஷ்டாக்கினி என்ற அக்கினிகள் இதை ஆசிரயித்திருப்பதால். அவற்றுள் கோஷ்டாக்னி என்பது உண்பது பருகியது லேஹ்யம் சோஷ்யம் எல்லாவற்றையும்(வயிற்றில் மீண்டும்)அரைத்து(உடலில் சேர்க்கப்) பக்குவப்படுத்துவது. தர்சனாக்கினி ரூபங்களைக்காண்பது. ஞானாக்கினி என்பது நல்லதையும் கெட்டதையும் பகுத்தறிவது. முகத்தில் ஆஹவநீயாக்னியாகவும்,தக்ஷியாக்கினியாகவும் அம்மூன்றும் இடங்கொண்டுள்ளது
இந்த உடம்னில் இருப்பவைகள் எலும்பு,நரம்பு,சதை,மர்மஸ்தாங்கள் 107,ஸ்ந்திகள் 180. ஸ்நாயு என்ற நரம்புகள் 109. மற்ற நரம்புகள் 700. ஊன் 500, எலும்புகள் 360, உரோமங்கள் நாலரைகோடி,எட்டு பலம் எடையுள்ள இதயம்,பன்னிரண்டு பலம் நாக்கு,ஒரு சேர் பித்தம், இரண்டுசேர் கபம்,கால் சேர் சுக்ரம்,இரண்டுசேர் கொழுப்பு, மலமூத்திரம் உண்ணும் ஆகாரத்தை பொறுத்து நியமமில்லாதது.இவ்வாறு சரீர தத்துவத்தை ஆராய்ந்து அறியவேண்டும்.பின்வு இந்த சரீரத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும்…இந்த மோக்ஷசாஸ்த்திரம் இங்ஙனம் பிப்பலாத மகரிஷியால் உபதேசிக்கப்பட்டது.
                                  

புகைப்படம்: கல்லில் கடவுள்:

பிப்பலாத மகரிஷியிடம் ஸ்கேச மகரிஷி கேட்கும் கேள்வி:

கல்லையும், கருங்கல்லையும் சிலைகளாகச் செய்து வைத்துக்கொண்டு 'இதுதான் தான் கடவுள் எல்லோரும் வணங்குங்கள்' என்று சொல்வது சரியா? கல்லில் கடவுள் எப்படி இருக்க முடியும்?

பிப்பலாத மகரிஷியின் பதில்:

"பிரஜாபதியானவர் பிரஜைகளின் சேஷமத்திற்காக தவம் செய்து ரயி,பிராணன், வாயு, பிருதுவி, அப்பு, தேயு வாயு  முதலியவைகளை சிருஷிடித்துள்ளார். இந்தப் பிராண சக்தியானது கல்,மண்,மரம்,செடி,புல்பூண்டு முதலிய சகல பண்டங்களிலும், பொருள்களிலும் ஊடுருவி வியாபித்திருக்கிறது இந்த பிராண சக்தியையே, ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும் இருக்கும் 'ஜீவன்' என்று வேதங்கள் கூறுகின்றன. அதனால் ஒவ்வொரு பொருளையும், 'கல்லையும் கடவுள்' என்று சொல்லி வணங்கி வழிபாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

விஞ்ஞான விளக்கம்:

முன் காலத்தில் நெருப்புப் பெட்டிக்குப் பதிலாக இரண்டு வெள்ளைக்கல் துண்டுகளை ஒன்றுடன் ஒன்றை உரசியே நெருப்பு உண்டாக்கிச் சகல காரியங்களையும் செய்து வந்தார்கள்.

இதிலிருந்து 'வெள்ளைக்கல் துண்டுகளில் மின்சக்தி அலைகள் உள்ளன' என்பது நிருபணம் ஆகிறது.

அதனால் இந்தக் கற்களில் சிலைகள் செய்து வைத்து மந்திரங்கள் ஜெபிப்பதன் மூலம் மேலும் மேலும் அவைகளின் மின் சக்தி அலைகள் பதிவு செய்யப்படுகிறது.அதனால் இவ்விதம் இச்சிலைகளில் சேரும் மின் சக்தி அலைகள் தரிசிபோருடைய உள்ளங்களில் பாய்ந்து அவரவர் கோரிக்கை நிறைவேற ஊக்கத்தையும் உறுதியையும் கொடுகிறது.

கிராமபோன், பிளேட்டுகளில், டேபிரிகார்டுகளில் பேச்சுக்கள், பாட்டுக்கள் பதிவு செய்யப்படுகிறது. ஒரு அங்குலம் அகலமுள்ள சினிமா பிலிம் சுருளில், பிரதி பிம்பங்களும், காட்சிகளும் பதிவு செய்யபடுகிறது, ஒரு நூல் இழை அகலம் உள்ள இடத்தில பேச்சுக்கள் பாட்டுக்கள் பதிவு செய்யபடுகிறது.

இதே போலவே கோவில்களில் உள்ள விக்ரஹங்களிலும் சக்தி அலைகள் பதிவு செய்யப்பட்டு மந்திரங்களின் மூலம் இச்சக்தி அலைகள் மேலும் மேலும் வளர்க்கப்பட்டு அவரவர் கோரிக்கைகளை. நிறைவேற்றச் சக்தியை கொடுக்கிறது.

இவ்விதம் கோவில்களில் உள்ள விக்ரஹங்களில் கல்லில் கடவுள் இருக்கிறார்.கல்லில் கடவுள்:

பிப்பலாத மகரிஷியிடம் ஸ்கேச மகரிஷி கேட்கும் கேள்வி:

கல்லையும், கருங்கல்லையும் சிலைகளாகச் செய்து வைத்துக்கொண்டு 'இதுதான் தான் கடவுள் எல்லோரும் வணங்குங்கள்' என்று சொல்வது சரியா? கல்லில் கடவுள் எப்படி இருக்க முடியும்?

பிப்பலாத மகரிஷியின் பதில்:

"பிரஜாபதியானவர் பிரஜைகளின் சேஷமத்திற்காக தவம் செய்து ரயி,பிராணன், வாயு, பிருதுவி, அப்பு, தேயு வாயு முதலியவைகளை சிருஷிடித்துள்ளார். இந்தப் பிராண சக்தியானது கல்,மண்,மரம்,செடி,புல்பூண்டு முதலிய சகல பண்டங்களிலும், பொருள்களிலும் ஊடுருவி வியாபித்திருக்கிறது இந்த பிராண சக்தியையே, ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும் இருக்கும் 'ஜீவன்' என்று வேதங்கள் கூறுகின்றன. அதனால் ஒவ்வொரு பொருளையும், 'கல்லையும் கடவுள்' என்று சொல்லி வணங்கி வழிபாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

விஞ்ஞான விளக்கம்:

முன் காலத்தில் நெருப்புப் பெட்டிக்குப் பதிலாக இரண்டு வெள்ளைக்கல் துண்டுகளை ஒன்றுடன் ஒன்றை உரசியே நெருப்பு உண்டாக்கிச் சகல காரியங்களையும் செய்து வந்தார்கள்.

இதிலிருந்து 'வெள்ளைக்கல் துண்டுகளில் மின்சக்தி அலைகள் உள்ளன' என்பது நிருபணம் ஆகிறது.

அதனால் இந்தக் கற்களில் சிலைகள் செய்து வைத்து மந்திரங்கள் ஜெபிப்பதன் மூலம் மேலும் மேலும் அவைகளின் மின் சக்தி அலைகள் பதிவு செய்யப்படுகிறது.அதனால் இவ்விதம் இச்சிலைகளில் சேரும் மின் சக்தி அலைகள் தரிசிபோருடைய உள்ளங்களில் பாய்ந்து அவரவர் கோரிக்கை நிறைவேற ஊக்கத்தையும் உறுதியையும் கொடுகிறது.

கிராமபோன், பிளேட்டுகளில், டேபிரிகார்டுகளில் பேச்சுக்கள், பாட்டுக்கள் பதிவு செய்யப்படுகிறது. ஒரு அங்குலம் அகலமுள்ள சினிமா பிலிம் சுருளில், பிரதி பிம்பங்களும், காட்சிகளும் பதிவு செய்யபடுகிறது, ஒரு நூல் இழை அகலம் உள்ள இடத்தில பேச்சுக்கள் பாட்டுக்கள் பதிவு செய்யபடுகிறது.

இதே போலவே கோவில்களில் உள்ள விக்ரஹங்களிலும் சக்தி அலைகள் பதிவு செய்யப்பட்டு மந்திரங்களின் மூலம் இச்சக்தி அலைகள் மேலும் மேலும் வளர்க்கப்பட்டு அவரவர் கோரிக்கைகளை. நிறைவேற்றச் சக்தியை கொடுக்கிறது.

இவ்விதம் கோவில்களில் உள்ள விக்ரஹங்களில் கல்லில் கடவுள் இருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...