திங்கள், 29 ஆகஸ்ட், 2016

குழந்தை பாக்கியம் தடை ஏன்

ஒரு பெண்ணிற்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவளுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் பரஸ்பரம் ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணும். திருமணமான அடுத்த ஆண்டே அது நிகழ வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாவது அந்நிகழ்வு ஏற்பட வேண்டும். அம்மணிக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லையா? குழந்தை உண்டு என்றால் உடனே பிறந்ததா? அல்லது தாமதமாகப் பிறந்ததா? குழந்தை இல்லை என்றால், ஏன் இல்லை? குழந்தை பிறக்க வேண்டுமானால். அந்த குழந்தை உருவாகி வளரத் தேவையான தோல் மற்றும் நரம்பு சத்துக்கள், எலும்புச் சத்துக்கள்,இதயம் உருவாக மற்றும் இயங்கத் தேவையான சத்துக்கள்,மூளை உருவாகத் தேவையான சத்துக்கள், இரத்தமும் இரத்தநாளங்களும் உருவாகத்தேவையான சத்துக்கள் என பல சத்துக்களும் தாய்மார்களுக்கு தேவையான அளவில் உடம்பில் இருக்க வேண்டும். அவர்கள் உண்ணும் உணவிலிருந்து இந்த சத்துக்களை உருவாக்கும் வல்லமை அவர்களது உடம்பிற்கு இருக்க வேண்டும். இந்த உருவாக்கத்திறனில் ஏதேனும் ஒன்றில் குறையிருந்தாலும் தேவையான சத்துக்களில் ஏதேனும் ஒன்றில் பற்றாக்குறையாக இருந்தாலும் குழந்தை உருவாகுவதில் சிக்கல் ஏற்படத்தானே செய்யும். 1.சுக்ரன் பலம்:- சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் ஆகியிருக்கும் பெண்கள் மூளைக்கு அதிக வேலை தருபவர்கள். இத்தகைய பெண்களுக்கு இவர்கள் சாப்பிடும் உணவுச் சத்துக்கள் பெரும்பாலனவை மூளைக்கே சென்றுவிடுகின்றன. இதனால் சுக்கிரபலம் குறைந்த பலமற்ற கருவகங்கள் உருவாகின்றன. இதன் காரணமாக குழந்தையின்மை ஏற்படுவதும் உண்டு. 2. சனி பலம்:- சிலருக்கு சனியினால் உடல் வலு முழுவதும் கடின வேலைக்கு சென்றுவிடலாம். அப்படிப்பட்டவர்களுக்கு உண்ணும் உணவுச் சத்துக்களில் பெருமளவு இந்த சனி ஆற்றலை நிறைவு செய்ய செல்லும். இதனாலும் பலமற்ற கருவகங்கள் உருவாகும் 3. செவ்வாய் பலம்:- குறைந்திருந்தால் இத்தகைய தாய்மார்களுக்கு போதிய இரத்த அணுக்கள் இருப்பதில்லை. இரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கே இரத்தம் போதாத நிலையில் கருவகங்களுக்கு சரியான அளவில் இரத்தம் கிடைக்குமா? 4. குரு பலம்:- நாள்தோறும் இயங்கிவரும் இதயத்திற்கும் அது செயல்படும்திறனுக்கும் நிறைய அதுசார்ந்த சத்துக்கள் தேவைப்படும். இத்தகைய சத்துக்ளை உடம்பில் குறைவாக பெற்றுள்ளவர்களுக்கு குருபலம் குறைந்த கருவகங்களே உருவாகும். இப்படியாக உற்பத்தியாகும் கருக்கள் சத்துக்கள் குறைவுகளால் பாதிக்கப்ட்டிருக்குமானால் எப்படி குழந்தை உருவாகும்? மேலே சொல்லப்பட்டவைகள் சில உதாரணங்களே. ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , எதிரி ஸ்தானம் எனும் ஆறாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஆறாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகனுக்கு பிறக்கும் குழந்தையால் ஜாதகன் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் . ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , ஆயுள் ஸ்தானம் மற்றும் திடீர் இழப்பு எனும் எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எட்டாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையை இழக்கும் தன்மையையோ அல்லது நிரந்தரமாக பிரியும் தன்மையையோ பெற கூடும் . ஒருவரின் ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ,விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று எட்டாம் பாவகம் சர ராசியாக இருந்தால் , ஜாதகன் தனது குழந்தையின் அமைப்பில் இருந்து அதிக வீண் விரயங்களையும் , மன நிம்மதி இழப்பினையும் சந்திக்க வேண்டி வரும் . சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகிஇருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு. இதையும் தாண்டி, 99.9999 சதவீதம் வாய்ப்பில்லாத நிலையில் சூரியன், ஒன்பதாம் பாவம் 5ம் பாவம், 3ம் பாவம் சரியாக அமைந்த குழந்தையை தத்து எடுத்து உடன் வளர்த்து வர வாய்ப்புகள் பிரகாசமாகும். சூரியன் சுக்கிரன் தாக்கத்திற்கு உடலிற்கும், சந்திரன் சுக்கிரன் தாக்கத்திற்கு மனதிற்கும் இயற்கை வைத்தியமளித்தால் மிக விரைவில் தகுதியுள்ள அனைவரும் பெற்றோராகிவிடலாம். 5-ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது. 5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை,சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும். லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோ`ம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு.12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும். லக்கினத்திற்கு 10-க்கு உடையவன். 8-இல் இருந்தாலும் சந்தான தோஷம் உருவாகும். லக்னாதிபதி புதனாக இருந்து சந்திரன் 10-இல் இருந்து, சுக்கிரன் 7-லிலும், 4-ஆம் இடத்தில் ஏதாவது ஒரு பாவக்கிரகம் இருந்தால்,வம்சம் விருத்தியாகாது. குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா? புத்திர தோஷம் அறிவது எப்படி? தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்து ஒருவருக்காவது புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் . இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும் சில தம்பதிகளுக்கு ஆண்குழந்தைகளே பிறக்கின்றன ஏன்? தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம் சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் . சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகளே பிறக்கின்றன.ஏன்? தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் பெண் குழந்தைகளாக பிறக்கும் . சில தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.ஏன்? இது மேற்கண்ட அமைப்பில் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து , கருத்தரித்த நேரமும் , இடமும் இரட்டை குழந்தைகளுக்கு உண்டான அமைப்பை நிர்ணயம் செய்யும் . சிலபேருக்கு குழந்தைகளே இல்லை.ஏன்? இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் , தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் புத்திர தோஷங்கள் எத்தனை வகை? மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன. 1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் பூர்வீக சொத்துப் பிரச்சனையில், அதற்கு உரிய உறவுகளுக்கு உரிய பங்கைத் தராமல் போனாலும்,உறவுப்பகை, புத்திரர்களால் பகை, அவமரியாதை உருவாகும். இதன் விளைவாக, இப்பிறவியில் தான் பெற்ற பெண், கண்முன்னே வாழாவெட்டியாக வந்த நிற்பதையும், விவாகரத்து பெற்று வாழ்க்கையில் இருந்து விலகி நிற்பதையும் வேதனையுடன் பார்க்க வேண்டிவரும். புத்திர தோஷம் நீங்க - கோயில்கள் அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர், ஈரோடு பாடகப்பிள்ளையார் திருக்கோயில், மலையான்குளம், திருநெல்வேலி பேராத்துச்செல்வி திருக்கோயில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, சிவகங்கை வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை, சிவகங்கை கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல் ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர், சிவகங்கை கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம், திருவள்ளூர் பிரளயகால வீரபத்திரர் திருக்கோயில், குட்டஹள்ளி, பெங்களூர் கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில், மாநெல்லூர், திருவள்ளூர் வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி ஆஞ்சநேயர் திருக்கோயில், பாலாற்றின் கரை, கோயம்புத்தூர் கைலாசநாதர் திருக்கோயில், வேம்பத்தூர், சிவகங்கை மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோயம்புத்தூர் சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், புதுச்சேரி திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர் கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில், சென்னை ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், காஞ்சிபுரம் செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி சிவந்தியப்பர் திருக்கோயில், விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி பரிகாரம் உங்கள் நட்சத்திரமும் அமா வாசையும் கூடும் ஒருநாளில் கணவர்- மனைவி இருவரும் இராமேஸ்வரம் கடலில் 21 தடவை மூழ்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் ஒம்பவசிவ என்று 10 தடவை செபித்து மூழ்க வேண்டும். பின்பு கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பின்பு புத்திர பாக்கியம் வேண்டி சுவாமியை மனதில் நிறுத்தி ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். பின்பு அடுத்து வரும் அமாவாசை அன்று தனது சாதகம் சம்பந்தப்பட்ட கோவில் களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம். ஐந்தாம் இடத்தில் ராகு இருந் தால் அல்லது கேது இருந்தால் திருநாகேஸ் வரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இராகுவை தரி சனம் செய்து அங்கு இராகுவை ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உடனே குழந்தை பிறக்கும். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும் சனி ஈஸ்வரன் 5-ம் இடத்தில் இருந்தால் திருநள்ளாறு சென்று அங்கு தீர்த்தமாடி சனி பகவானை தியானித்து ஒரு மணி நேரம் கோவிலில் தியானம் செய்ய வேண்டும். செவ்வாய் பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தீர்த்தமாடி அங்கு கோவிலில் ஒருமணி நேரம் தியானம் செய்ய வேண்டும். புத்திர தோஷம் – 51 தீபங்கள் தீபங்களை உங்கள் வீட்டில் நாக படம் உள்ள எந்த தெய்வத்தின் முன்பும் ஏற்றி வாருங்கள்.நவதானிய சுண்டல் செய்து சிறுவர்களுக்கு அளியுங்கள்.நல்லது நடக்கும். குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம். குருவாலும், சந்திரனாலும் புத்திரதோஷம் உண்டானால், குருவிற்கு உரிய தலத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். குரு வேறு தட்சிணாமூர்த்தி வேறு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், அது குருவிற்குச் செய்ததாகக் கருத முடியாது வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம். திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சந்தானகோபாலரும் சந்தான பாக்கியம் தரவல்லவர். , புதன், சுக்கிரனால் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் சிவனை வழிபடலாம். செவ்வாய், சனியால் ஏற்படும் புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்யலாம். குரு பகவானுக்கு வியாழன்று அர்ச்சனை செய்வது சிறப்பு, வியாழக்கிழமை, திருச்செந்தூரில் அன்னதானம் செய்தால் புத்திர தோஷத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமான சிறப்பு நாட்களில், பௌர்ணமி, தமிழ்மாதம் பிறப்பு, தமிழ்வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அமிதிஸ்ட் கற்கள் நன்மைகள்

அமிதிஸ்ட் கற்கள் பதித்த மோதிரங்கள் அணிவதனால் ஏற்படும் பயன்கள்: இந்த கற்கள் அணியும் இறைவனின் தெய்விக அருளை ஆகர்ஷித்துத் தரும் வல்லமை உடையதாகும். நிலையான புகழைப் பெற விரும்பும்3,12,21,30,ஆம்-எண் தேதியில் பிறந்த அன்பர்கள் இந்த கற்கள் பதித்த மோதிரம் அணிவதால் அவன் எதிர்பார்த்த புகழ் கிட்டுகிறது. அமிதிஸ்ட் கற்கள் மோதிரம் அணிவதால் தீரும் நோய்கள்: 1)உடலில் எவ்விதத் தோல்வியாதிகள் இருந்தாலும் அதனை நீக்குகிறது. 2)மாலைக்கண் எனப்படும் வியாதியை இது நிவர்த்தி செய்கிறது. 3)தூக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் 3-ஆம் எண் சாதகன் இதனை அணிவதால் நிம்மதியான உறக்கம் நேரிடுகிறது. 4)கை கால்களில் உண்டாகும் மூட்டுவலியினை இது கண்டிக்கிறது. 5)கொடிய வயிற்றுவலியிலிருந்து 3ஆம் எண்காரருக்கு நிவாரணம் அளிக்கிறது. 6)உடலில் தோன்றும் வியாதிகளை, படை, அரிப்பு ஆகியவற்றை நீக்குகிறது. 7)பெண்கள் இதனை அணிவதால் வயிற்று வலி, மூட்டுவலி, மாதவிடாய் சம்மந்தப்பட்ட தொல்லைகளை நீக்குகிறது. 8)இந்த கல்லை அணிந்தால் முக்கியமாக (குடியிணை மறக்க முடியாதவர்கள் (Drink Adicts)போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்கள்) இக்கல்லை மோதிரமாக பயன்படுத்துவதன் மூலம் குடிபழக்கத்தையே விரைவில் விட்டு விடலாம். அதிலிருந்து திருந்திவிட முடியும். 9)இக்கல் எதிர்பாராத லாபங்களையும் பொருள் வரவையும் உண்டாக்குகின்றது. கோபம், விரக்தி அகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முன்கோபத்தையும் தடுக்கும். தீய அமானுஷ்ய கற்களிலிருந்தும் (காற்று,கருப்பு) மந்திரக் கட்டுக்களிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் பணம் பல மடங்கு பெருகும்  வியாபாரத்திலுள்ள தடைகள் யாவும் நீங்கும்.திருஷ்டியையும் போக்கும். இக்கல்லை அணிந்திருக்கும் 3 என்ற எண்ணுக்குரிய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து வெற்றியை அடைவார்கள். இதனை அணிந்து கொண்டு பயணம் செய்யும் 3ஆம் எண்காரர்களுக்கு விபத்து எதுவும் நேரிடாது காக்கும். தொடர்ந்து பொன்-பொருள் சேர்க்கையை உருவாக்க வல்லது இந்த அமிதிஸ்ட் கற்கள் பதித்த மோதிரம். இந்த கற்களை எல்லோரும் பயன்படுத்தலாம் . திருமணத் தடை,குழந்தையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கும் அமிதிஸ்ட் கல் பதித்த மோதிரம் அணிந்து தீர்வுகள் காணலாம். எல்லோருக்கும் அதிக நன்மை தரக்கூடிய கல் இதுவேயாகும். தேவைக்கு தொடர்பு கொள்க....

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

சுக்கிரன் யோகம் தரும் கிரகம்

சுகபோகம் தரும் பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்யமான நீண்ட ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார். ஒருவருக்கு பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவைகளை சிறப்புடன் வாழும் யோகத்தை தருவது சுக்ரன் ஆகும். அசுர குரு சுக்ரன் ஆவார். இவர் இகலோக ஆசையை அளிப்பவர். சுக்ரன் விடி வெள்ளி பிரகாஷமாக தெரியும் - இளமையாக இருப்பவர்கள் ஜொலிப்பார்கள் ஆக இளமையும், ரசனையையும் அளிப்பவர். ஆடல் பாடல் முதலான நளின கலைகளுக்கு நாயகன், மனைவியைக் கொடுத்து மகிழ்ச்சிகாரமான இல்லற வாழ்க்கையைத் துவக்கி வைத்துப் பரிபாலனம் செய்வர். சுக்ரன் தொழில் வேஷக்காரன், நடிகர்கள், கலைத்துறைக்காரன்கன், ஒப்பனைப் பொருட்கள், அலங்கார வஸ்த்துக்கள், ஆடம்பர வஸ்துகள், சுக்ரன் என்றால் வெள்ளை என்று பொருள், வெண்மை பொருள்கள் அனைத்துக்கும் காரகன், சுக்கில பட்சம் , வைரம் மிக பிரகாஷம் ஜொலிப்பது போல் எல்லாம் சுக்கிரன் , இளம் பெண் குறிப்பது சுக்ரன், விடியற் காலை பொழுத்தைக் குறிப்பவர் இவர், வான் மண்டலத்தில் விடியல் காலை பொழுதில் சுக்ரன் தெரிகிறார். அதிகாலையில் மனிதனுக்கு காமக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இவர் தான். காமத்துக் காரன் சுக்ரன். களத்திரகாரகன் சுக்ரன் சுக்ரன் இல்லற் வாழ்வுக்குறியவர், சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். உலக வாழ்கையில் இன்பமும் செளபாக்கியங்களையும் சுக போக செளரியங்களையும் தருபவன் சுக்ரன். வாகன வசதிகளை அளிப்பவர் இவர், மிக உயர்ந்த வாகனமா, நடுத்தரமான வாகனமா, கடைசி நிலை வாகனமா, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனமா என குறிப்பவர் இவர்தான். ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர் இவர். கையில் காசுடையவர்களாய் வைப்பரும், சொந்த வீடு அளிப்பவரும் இவர்தான், கலை உலகில் சிறப்பான நிலையை அளிப்பவர். பெண்களிடம் மோகத்தை அளிப்பவரும், வாழ்நாள் முழுவதும் அதே நினைப்பில் இருக்க வைப்பவர் இவர்தான். ஜாதகத்தில் சுக்கிரன் தரும் யோக பலன்கள் வலுப் பெற்ற சுக்ரன் (சுக்ரன் ஆட்சி, சுக்ரன் உச்சம்) கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், அழகு, அழகின் படைப்பான ஆரணங்கு, அந்த ஆரணங்கத்தின் மீது காதல் கொண்டு சுகமடையும் தகுதி, சிற்றின்பம், திருமணம் முதலான ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். மாட மாளிகையில் வாழ்க்கை நடத்தும் பாக்கியத்தை இரு பாலருக்கும் அளிப்பவர். தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம். ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிட்டும். கார் - பங்களா நிலம், பூமி ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். ஆனால், அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள் அடுக்குமாடிகள் சொகுசு பங்களாக்கள், தோட்ட வீடுகள் போன்ற நவீன கட்டிடங்களுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் சுக்கிர பலம் இருந்தால்தான் இதைப் போன்ற வசதியான யோகம் கிடைக்கும். அதேபோல், சுக்கிரனின் அருள் யோகம் இருந்தால்தான் ஒருவருக்கு விதவிதமான வாகனங்கள், ஆடம்பரகார்கள் சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சுகங்களைத் தரும் சுக்ரன் சுக்ரன் என்றால் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்ரன். இவர் கலை உணர்வால் இன்பம் உண்டாக்குவார். அழகு, ஆராதனையால் இன்பம் ஏற்படுத்துவார். கலையம்சமுள்ள பொருட் சேர்க்கையால் இன்பம் தருவார். அழகு வனிதையால் ஆடவருக்கு சுகம் ,வாசனைத் திரவியங்களால் உற்சாகம் ஊட்டுவார். இசையால், இசையுணர்வால் இன்பம் தருவார், கற்பனை வளத்தால் மாபெரும் இன்பம் தருவார் வாசனை திரவியங்களால் சுகானுபவம் அளிப்பவார். கவியின்பம் தருவார். காவிய இன்பம் தருவார். கற்பனை வளத்தால் மா பெரும் இன்பம் தருவார். நடன நாகரீக மணிகளை உருவாக்குவார். நாடகக் கலைஞர்களைத் தோற்றுவிப்பார். வெண் திரைச் சலனப்படத்திற்கு ஆதாரம் அவர். கண்களைப் பிரதிபலிப்பவர், ஜனன உறுப்புகளைக் காப்போன். மேலே குறிப்பிட்ட இன்பத்தை யாருக்கு தருவார் என்றால் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருக்க, அவருக்கு நட்பு கிரகங்களின் தொடர்பும், பகை கிரக தொடர்பு இன்றி இருத்தால் கண்டிப்பாக கிடைக்கும். அதே போல் சுக்ரன் ஆட்சி வீடான ரிஷபம் மற்றும் துலாமில் இருந்தாலும் சுக வாழ்வு உண்டு. [சுக்ரனுக்கு புதன் நட்பு கிரகம். புதனின் வீடான கன்னியில் சுக்ரன் நீசம் அடைகிறார். அங்கு நீச பங்கம் பெறாமல் இருந்தால் சுக வாழ்வு எதிர்பார்க்க முடியாது... ஜோதிடத்தில் சுக்ரன் தரும் யோக பலன்கள் சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல. சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும். சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும். சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள். சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும். சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும். சுக்கிரன் 7ல் இருந்தால் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும். சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும். சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும். சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும். சுக்கிரன் 12ல் இருந்தால் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும். ஜாதகத்தில் சுக்ரன் நிலையும் காமக் கலையும் துலாம் லக்னத்திற்கு சுக்கிர பகவான் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். துலாம் ராசி சுக்கிரனுக்கு மூலத்திரிகோண வலுவுள்ள இடமும் ஆகும். இங்கிருக்கும் சுக்கிரன் சனியும்சேர்ந்து , உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் அதீத காம ஈடுபாட்டுடன் இருப்பார். பெண் பித்தராகவும் இருக்கலாம். ஜாதகர் சும்மா இருந்தாலும் பெண்கள் அவரைச் சும்மா இருக்க விட மாட்டார்கள். சனியும் பலம் பெற்றிருப்பதால் ஜாதகர் கடின உழைப்பிற்கு அஞ்சாதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும், கருணையற்ற முடிவுகளை எடுப்பவராகவும், பிடிவாதக்காரராகவும், உயரம் குறைந்தவராகவும் இருப்பார். அதேநேரம் சனி வக்ரம் அடைந்திருந்தாலோ அல்லது வேறு வகையில் பலம் இழந்திருந்தாலோ இந்த பலன்கள் மாறும். மற்றபடி இங்கு தனித்த நிலையில் வலுவுடன் இருக்கும் சுக்கிரனின் தசையில் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சிறந்த மாளவ்ய யோகம் கிடைக்கும்.லக்னாதிபதிக்கு வேறு கெட்ட ஆதிபத்தியங்கள் இருந்தாலும் லக்ன பலனே வலுப்பெறும் என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் அனுபவத்தில் அது சரியாக வரவில்லை. துலாம் லக்னத்திற்கு அஷ்டமாதிபத்திய பலனையும் சுக்கிரன் செய்யத்தான் செய்கிறார்.வலுவுடன் இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகர் சிறந்த கலாரசிகராக இருப்பார். திறந்தமனது, அழகுணர்ச்சி, வெளிப்படையான பேச்சு. உண்மைக்குணம் ஆகியவை ஜாதகரிடம் நிரம்பியிருக்கும். சிற்றின்பப் பிரியராக இருப்பார். உண்மைக் காதலராக இருப்பார் என்பதால் பெண்களால் விரும்பப்படுவார். சிறந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை சுக்கிரனால் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மேலான நிலைக்குச் செல்ல முடியும். விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை அளிப்பார். சுக்கிரன் இங்கிருப்பது களத்திர தோஷத்தை அளிக்கும் என்பதால் இங்கு அவர் பலம் பெறும் நிலையில் தாமத திருமணம் அல்லது முறையற்ற திருமணத்தை அளிப்பார். ஆயினும் இயற்கைச் சுபரான சுக்கிரன் இங்கிருந்து லக்னத்தைப் பார்வையிடுவார் என்பதால் ஜாதகர் நல்ல குணங்களைப் பெற்றிருப்பார். இந்த லக்னத்திற்கு சுக்கிரன் பனிரெண்டுக்குடைய போக ஸ்தானாதிபதியுமாவார். அவர் அயன சயன போகஸ்தானத்திற்க்கு எட்டில் மறைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது ஒரு வகையில் நல்ல நிலை தான்.விருச்சிக லக்னத்திற்கு ஏழாமிடத்தில் பலம் பெற்று தசை நடத்தும் நிலையில் இங்கிருக்கும் சுக்கிரன் பெண்கள், காதல், காமம் சம்பந்தப்பட்ட பலன்களையே பெரும்பாலும் செய்வார். மேலும் ரிஷபம் சுக்கிரனின் பெண்ராசி என்பதாலும் அது பற்றிய பலன்கள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும். விருச்சிக லக்னத்தவர்களுக்கு சுக்கிரனின் காரகத்துவங்களான வீடு, வாகனம் போன்றவைகளை சுக்கிரன் செய்வது கடினம். தனது தசையில் அவர் பெண்கள், காமம், உல்லாசம், கேளிக்கை, வெளிநாட்டு வேலை, அயல்தேசவாசம், பெண்களால் செலவு, முறை தவறிய போகம் ஆகிய பலன்களையே செய்வார்.சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் வழியாக ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார். தனுசு லக்னத்திற்கு நான்காம் இடமாகிய மீனத்தில் சுக்ரன் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை சுக்கிரன் செய்வார். தனுசு லக்னத்திற்கு ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி இவர். ஒரு சூட்சும நிலையாக தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் அவரது காரகத்துவங்களை வலிமையாகச் செய்ய வேண்டுமெனில் சுக்கிரனை விட லக்னாதிபதி குருபகவான் வலிமை பெற்றிருக்க வேண்டும் ஏனெனில் நமது ஞானிகளால் ஜென்ம விரோதிகளாக உருவகப் படுத்தப்பட்ட கிரகங்களின் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு எதிரிக் கிரகங்கள் லக்னாதிபதியை விட வலுப்பெற்றால் யோகத்தை அனுபவிக்க முடியாது. லக்னாதிபதி குரு வலுப்பெறும் நிலையில் இந்த லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம் பெற்று திக்பலமும் பெறும் சுக்கிரன் தனது தசையில் அவரது நல்ல காரகத்துவங்களைச் செய்வார். ஆயினும் இந்தக் கட்டுரைகளின் ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல எதிரியின் லக்னங்களுக்கு கிரகங்கள் முழுமையான யோகம் தராது. நிச்சயமாக மனைவி தாம்பத்திய சுகம் காமம் போன்றவற்றில் ஏதாவது ஒரு குறையை சுக்கிரன் செய்தே தீருவார். இங்கு இருக்கும் சுக்கிரன் மிகச்சிறந்த வசதியான ஆடம்பரமான வாழ்வை ஜாதகருக்கு தருவார். நல்ல வீடு அமையும். உயர்தர வாகனம், கல்வி, ஆரோக்கியம், தன் சுகத்திற்காக எதுவும் செய்தல், மற்றும் அம்மா வழியில் மிகச்சிறந்த லாபங்கள், தாயைத் தெய்வமாகக் கருதுதல் போன்ற பலன்களை அளிப்பார். சில நிலைகளில் மேற்சொன்ன எல்லா வசதிகளையும் ஜாதகருக்கு அளித்து திருமண வாழ்வில் நாட்டம் இல்லாத நிலையை சுக்கிரன் உண்டு பண்ணுவார் இங்கிருந்து அவர் பத்தாம் இடத்தை பார்வையிடுவார் என்பதாலும் மீனம் குருவின் வீடு என்பதாலும் ஜாதகரை ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இனங்கள் மற்றும் தனது காரகத்துவங்கள் ஏதேனுமொன்றில் ஈடுபடுத்தி செல்வம் தருவார். இந்த லக்னத்திற்கு அவர் ஆறுக்குடையவர் என்பதால் தசையின் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சில சிக்கல்களையும் ஏற்படுத்துவார். ஆனால் சுக்கிரன் இயற்கைச் சுபர் என்பதாலும் சுபகாரகத்துவங்கள் உள்ளவர் என்பதாலும் பெரிதாக பாதிக்காது. மகரம் மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து மற்றும் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி பத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். சுக்கிரன் இயற்கைச் சுபக்கிரகம் என்பதால் பெருங்கேந்திரமான பத்தாமிடத்திற்குப் பதிலாக திரிகோணமான ஐந்தில் அவர் ஆட்சி பெறுவதே நன்மைகளைத் தரும். ஆயினும் பத்தாமிடத்தில் அவர் மாளவ்ய யோகம் தருவார் என்பதால் தனது காரகத்துவங்களுக்கு உட்பட்ட சினிமா, தொலைக்காட்சி, மாடலிங், டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல், டிராவல்ஸ், லாட்ஜிங், பேன்சி அயிட்டங்கள், அவசியம் இல்லாத ஆடம்பர பொருட்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் ஜாதகரை வழி நடத்தி செல்வம் அளிப்பார். துலாம் சரராசி என்பதாலும் சரராசியில் வலுப்பெறும் கிரகங்கள் மிகப் பெரிய யோகத்தைச் செய்யும் என்பதாலும் மாளவ்யயோகம் மகர லக்னத்திற்கு நன்கு பலன் தரும். ஆயினும் இங்கிருக்கும் சுக்கிரனுடன் சனி இணைய கூடாது. மகர லக்னத்திற்கு சனி லக்னாதிபதியாகி பத்தாமிடமாகிய துலாத்தில் உச்சம் பெறுவார். என்னுடைய கருத்தின்படி சனி லக்னாதிபதியே ஆனாலும் நேரடியாக உச்சம் பெற்று வலிமை பெறக்கூடாது. அவ்வாறு வலுப்பெற்றாலும் வேறுவகையில் கெட்டு சூட்சும வலுதான் பெற வேண்டும் இங்கு பூரண வலுவுடன் உச்சமாகும் சனிபகவான் சுக்கிரன் தர இருக்கும் நல்ல பலன்களைக் கெடுப்பார். எனவே இங்கு சனி சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலும் வக்ரம் போன்ற நிலைகள் பெற்று வலிமை இழந்து இருப்பது நல்லது. இந்த இடத்தில் திக்பலத்தை சுக்கிரன் இழந்து கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார். அவர் தனித்து இருக்கும் நிலையில் தோஷம் வலுப்பெறும். இது நன்மைகளைத் தராது. புதனுடன் இணைத்திருப்பது நல்ல யோகம் பத்தாமிடத்தில் அவர் இருக்கும் நிலையில் நான்காமிடத்தை பார்வையிடுவார் என்பதால் தனது தசையில் அழகிய பெரிய வீடு, நல்ல வாகனம், சுகமான வாழ்க்கை, உயர்கல்வி, தனக்கு ஈடுகொடுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை, தாயார் வழியில் முன்னேற்றம் ஆகியவற்றை சிறப்புடன் வழங்குவார். கும்பம் : கும்ப லக்னத்திற்கு நான்காமிடத்தில் ஆட்சி பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். மேலும் கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியும் ஆவார். இந்த லக்னத்திற்கு சுக்கிரன் இரண்டில் உச்சம் பெறுவதை விட தனது பாதக ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு எட்டில் மறைந்து நான்கில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலைதான். மேலும் சுக்கிரன் இந்த இடத்தில் திக்பலமும் பெறுவார். இந்த இடத்தில் இருக்கும் சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார் என்பதால் சிம்ம லக்னத்திற்கு நான் சொன்னது கும்பத்திற்கும் பொருந்தும் இங்கிருக்கும் சுக்கிரன் பத்தாமிடத்தை தொடர்பு கொள்ளும் நிலையில் தனது தசையில் தனது காரகத்துவங்களான சினிமா, தொலைக்காட்சித் துறை, வீடியோ சாதனங்கள், பெண்களின் பொருட்கள், உணவுக் கூடம், துணி விற்பனை, வெண்மையான பொருட்கள், வாகனத்துறை, ஆடம்ப சொகுசுப் பொருட்கள் போன்றவற்றில் ஜாதகரை வழி நடத்தி பணக்காரர் ஆக்குவார். நான்காமிடத்தில் இருப்பதால் பெரிய வீடு, நல்ல வாகனம், கல்வி, ஆடம்பரமான வாழ்க்கை, தாயாரை தெய்வமாக மதித்தல் போன்ற நல்ல பலன்களை தனது தசையில் ஜாதகருக்கு அருளுவார். இங்கு யோகம் தரும் நிலையில் சுக்கிரன் இருந்தாலும் கும்ப லக்னத்திற்குப் பாவிகளான சூரிய சந்திர செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரத்தில் தான் அவர் இருக்க முடியும். எனவே யோகம் செய்யும் நிலையிலும் சில குறைகள் இருக்கும். மேலும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் சிற்றின்பப் பிரியராக இருப்பார். காம இச்சையில் அதிக ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் இருப்பார். பெண்கள் இவரை விரும்புவார்கள். பெண்களுக்காக எதையும் செய்வார். கிருத்திகை நட்சத்திரத்திலிருந்தால் ஏழுக்குடையவரின் சாரம் பெறுவதால் காதல், உல்லாசம், கேளிக்கை, இளமை விளையாட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவராகவும், வருமானத்தை பெண்கள் விஷயத்தில் செலவு செய்பவராகவும் இருப்பார். மீனத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். ஆயினும் இந்த லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி ஆவார். அஷ்டமாதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவது நல்லதல்ல என்றாலும் அவர் இயற்கை சுபர் என்பதால் எட்டுக்குடையவனின் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஆயினும் தனுசு லக்னத்திற்கு நான் சொன்னதைப்போலவே சுக்கிரன் இங்கு உச்சம் பெற்றால் அவர் தரும் யோகத்தை முறைப்படி அனுபவிக்க லக்னாதிபதி குருபகவானும் அதிவலு அடைந்திருக்க வேண்டும். சுபர் உச்சம் பெறுவதால் இந்த அமைப்பு உள்ள பெரும்பாலானவர்கள் அழகான தோற்றம் உடையவராக இருப்பார்கள். இவர்களுக்கென்று தனித்துவமான சிந்தனை இருக்கும். வேறு கிரகங்களின் பாதிப்பு இருந்தால் இவர்களின் வழி தனிவழியாக இருக்கும். இளமையில் எந்நேரமும் காதலின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள். தான் காதலிப்பவரின் மேல் அதீத ஈடுபாடும் வெறித்தனமான அன்பும் இருக்கும். அதனாலேயே சிக்கலான ஒத்துவராத முடிவுகளை எடுப்பார்கள். இங்கிருக்கும் சுக்கிரன் ஏழாமிடத்தை உச்சமாகிப் பார்ப்பதால் இவர்களுக்கு காம உணர்ச்சி மிகுதியாக இருக்கும். எப்போதுமே இளமையில் வரும் சுக்கிரதசை இவர்களை திசை திருப்பி விடுகிறது. மீனலக்னத்திற்கு சுக்கிரன் தனது சுப காரகத்துவங்களைச் செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக தனது தசை,புக்திகளில் ஜாதகரை வெளிநாட்டு இனங்களில் தொடர்பு படுத்துவார். வெளிநாட்டில் அல்லது தூர இடங்களில் வேலை செய்ய வைப்பார். அயல்தேசக் குடிமகன் ஆக்குவார். வாழ்க்கைத்துணையை வெளிநாட்டில் காண வைப்பார். விருந்துகள் கேளிக்கைகள் உள்ளிட்ட இளைமையின் அத்தனை பரிமாணங்களிலும் ஜாதகரை ஈடுபடுத்துவார். சொகுசு வாழ்க்கையும் தருவார் களத்திரகாரகன் என்பதால் மாளவ்யயோகம் எனும் வாழ்க்கையின் தேவைகளை திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் மூலமாக சுக்கிரதிசையில் செய்வார். சுக்கிரனால் வரும் நோய்கள் சுக்கிரன் பலம் குறைந்து ஜாதகத்தில் இருந்தால் கட்டி, பிளவை, மர்மஸ்தான நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவை ஏற்படும். கண்நோய், கண் பார்வைக் கோளாறு போன்றவை உண்டாகும். சுக்கிலத்திற்கு அதிபதியாக இருப்பதால் விந்து குறைபாடு, விந்து அணு குறைபாடு ஏற்படும். ஆகையால் குழந்தை பாக்கியம், குழந்தை பாக்கியத்தடை குறைகள் ஏற்படும். சுக்ரன் பரிகாரம் சுக்கிரன் பலம் பெற்றோ, குறைந்தோ இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். பௌர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசிக்கலாம். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர தலத்தில் தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார், சுக்கிர பகவான். இவரை வழிபட்டால் எல்லாவகைத் திருமணத் தடைகளும் நீங்கும். கருத்துவேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று சேர்வார்கள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்து வைத்து, அவர்களிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடியது கஞ்சனூர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் கோயில், சுக்கிரனுக்கு உரிய தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் கோளாறுகள் நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கிழமை - வெள்ளி தேதிகள் - 6, 15, 24 நட்சத்திரம் -பரணி, பூரம், பூராடம் ஆட்சி வீடு -ரிஷபம், துலாம் உச்சம் -மீனம் நீச்சம் - கன்னி ரத்தினம் -வைரம் உலோகம் - வெள்ளி தானியம் -மொச்சை நிறம் -வெண்மை ஆடை - வெண்பட்டு தசா காலம் - 20 ஆண்டுகள் கிரக அமைப்பு - பெண் வாகனம் - கருடன் புஷ்பம் -வெள்ளை தாமரை சுவை -இனிப்பு. சுக்ரன் வரலாறு நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர். இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும் தூய வெண்மையாக வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது. மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது. ஒவ்வொருவர் வாழ்க் கையிலும் இன்ப-துன்பங்கள், ஏற்ற-இறக்கங்கள், லாப- நஷ்டங்கள் மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் நியதிதான் என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணியமே காரண மாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக தசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ராசிப்படி தொழில்

ஜோதிடப்படி ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான தொழில்கள் என உள்ளது. உங்கள் ராசிக்கு பொருத்தமான தொழிலை தெரிவு செய்து தொடங்குவீர்களாயின், நீங்கள் வெகு சீக்கிரத்திலேயே அத் தொழிலில் சைன் பண்ண முடியும். மேஷம் பத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். ரிஷபம் பத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். மிதுனம் மிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும். கடகம் கடக ராசிக்காரர்கள் துணி சம்பந்தமான தொழில் செய்தால் நல்ல லாபம் பெறலாம். இவர்கள் உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றமடைந்த நபராக இருப்பார். இவர்கள் மானசீகமாக பணியாற்றுபவர். கலையார்வம் மிக்க பணிகளில் ஆர்வம் கொண்டவர். உணவு தயாரித்தல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், கலைப் பொருட்கள், திரவம், புகைப்படம் ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். இவர்கள் எப்போதும் எதிர்காலத்தின் மீது கவலை கொள்பவராக இருப்பார். பெரிய பணிகளை எளிதாக செய்து முடிப்பர். சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி அடைவது நிச்சயம். கனிமம் மற்றும் கல் தொடர்பான வேலைகளில் இவர்கள் லாபம் அடையலாம். தனது விருப்பத்தையும், தொழிலையும் தனித்தனியாக வைத்திருப்பர். விளையாட்டு இவர்களுக்கு பிடிக்கும். இவர்கள் வழக்கறிஞராக இருந்தால் சிறப்பாக இருக்கும். கன்னி இவர்கள் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். சவால்களையும், போராட்டங்களையும் ரசித்து எதிர்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் தொழிலில் இவர்கள் விருத்தி அடைவார்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள். துலாம் துலாம் ராசிக்காரர்கள் சிறந்த வியாபாரியாக இருப்பர். இரும்பு, தங்கம் போன்ற வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். துணி தொடர்பான வியாபாரம் சிறப்பாக இருக்கும். விருச்சகம் விருட்சிக ராசிக்காரர்கள் புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மருத்துவம், மின்சார பொருட்கள் விற்பனை, மின்சாரம் தொடர்பான வேலை, ரசாயனம் தொடர்பான வேலைகள் செய்வது உகந்தது. வெளிநாட்டு வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதியில் இவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான லாபம் கிடைக்கும். தனுசு சுய தொழில் செய்வது உத்தமம். கூட்டாளியாகவும் செயல்படலாம். தனது ஆசைப்படி தொழில் செய்யலாம். எதிலும் அதிக லாபம் கிட்டும். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். துணி, விளையாட்டு சாமான்கள் தயாரிப்பு தொழிலில் லாபம் அடைவர். ஏதாவது ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் நிலையாக இருப்பது நல்லது. மகரம் வழக்கறிஞர், உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி, சுரங்கம் போன்றவைகளில் நல்ல லாபம் கிட்டும். இந்த ராசிக்காரர்கள் நல்ல வழக்கறிஞராக செயல்படுவார். கும்பம் கும்ப ராசிக்காரர்கள் ஜாதகப்படி வியாபாரத்தில் அதிக நாட்டமுடையவர்களாக இருப்பர். இவர்கள் வணிகம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான வேலைகளில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம். இந்த ராசிதாரர்கள் சினிமா துறையிலும் பெரிய புகழை அடைவர். மீனம் மீன ராசிக்காரர்களுக்கு வேலை செய்வதில் ஆர்வம் இருக்காது. இவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது சிறந்தது. புதிய ஆடை வடிவமைப்பு, சங்கீதம் தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.

ஆண்மீக ஜோதிட தகவல்

ஞானத்தை வழங்கும் கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார்; கல்விக்கு கடவுளாக ஹக்ரீவர் கருதப்படுகிறார்; செல்வத்தின் கடவுளாக ஸ்ரீமஹாவிஷ்ணு,ஸ்ரீமஹாலக்ஷ்மி,ஸ்ரீகுபேரன் இருக்கிறார்;இவர்களுக்கு செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்த கடவுள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? வீரத்தின் கடவுளாகவும்,செவ்வாயின் அம்சமாகவும் முருகக் கடவுள் இருக்கிறார்; மருத்துவத்தின் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி இருக்கிறார்; மும்மூர்த்திகளின் அம்சமாக ஸ்ரீத்த்தாத்தரேயர் இருக்கிறார்; ஆனால்,மும்மூர்த்திகளையும் தன்னுள் கொண்டிருப்பவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்! படைத்தல் தொழிலை பைரவப்பெருமானின் கையில் உள்ள உடுக்கையும், காத்தல் தொழிலை பைரவப் பெருமானின் கையில் உள்ள கபாலமும்; (பாவ வினைகளை)அழித்தல் தொழிலை அவர் உடலில் பூசிய விபூதியும் செய்து வருகின்றன; கடவுள்களின் கடவுளாக ஸ்ரீமஹாகால பைரவர் இருக்கிறார்; ஜோதிடத்தின் கடவுள் ஸ்ரீகாலபைரவப் பெருமானே! உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் இறைவன் ஒருவனே! என்று கூறுகின்றன;அந்த ஒரே இறைவனே நமது இந்து தர்மத்தில் ஆதிசிவன் என்ற சதாசிவன் என்று அழைக்கிறோம்;கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் முனீஸ்வரன்,ஸ்ரீகாலபைரவப் பெருமானே தான்;சிவனும் பைரவப் பெருமானும் வேறு வேறானவர்கள் அல்ல;அதே போல முனீஸ்வரனும் காலபைரவரும் ஒருவரே! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,நவக்கிரக நாயகர்களாகிய சூரியன்,சந்திரன்,குரு,ராகு,புதன்,சுக்கிரன்,கேது,சனி,செவ்வாய் அனைவரும் ஸ்ரீகாலபைரவப் பெருமானைப் பணிந்து வணங்கி,தமது ஏக்கத்தைத் தெரிவித்தனர்; “பூமியில் வாழ்ந்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் கர்மவினைப்படி நன்மைகளையும்,தீமைகளையும் நாங்களே தங்களின் உத்தரவுப்படி வழங்கிவருகிறோம்;ஆனால்,எங்களை மனிதர்கள் வழிபடுவதில்லை;இந்தக் குறையைத் தாங்கள்தான் போக்க வேண்டும்;” ஸ்ரீகாலபைரவப்பெருமான் தம்மீது அர்ச்சனையாக விழுந்த செவ்வரளி மற்றும் மரிக்கொழுந்து மலர்களை நவக்கிரகங்கள் மீது தூவி ஆசிர்வாதம் செய்தார்; “ ஜம்புத்வீபத்தின்(நமது இந்தியாவின் புராதனப்பெயர்) தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் காவிரிக்கரையோரம் செல்லுங்கள்;அங்கே லிங்கம் அமைத்து தொடர்ந்து தன்னை வழிபடச்” சொல்லி அருளினார்; இதன்படி, சூரியன் சூரியனார் கோவிலிலும் சந்திரன் திங்களூரிலும் குரு ஆலங்குடியிலும் ராகு திருநாகேஸ்வரத்திலும் புதன் திருவெண்காட்டிலும் சுக்கிரன் கஞ்சனூரிலும் கேது கீழப்பெரும்பள்ளத்திலும் சனி திருநள்ளாறிலும் செவ்வாய் வைத்தீஸ்வரன்கோவிலிலும் லிங்கப் பிரதிஷ்டை செய்தனர்;லிங்க வடிவத்தினுள் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானை வழிபட்டுவந்தனர்;பலகோடி ஆண்டுகள் இவ்வாறு வழிபட்டு ஸ்ரீகாலபைரவ தரிசனம் பெற்றனர்;அவரது அருளால் பூமியில் மனிதர்கள் வழிபடும் பேறு பெற்றனர்; குரு பகவான் தேவகுருவாக இருந்தமையால்,அவரது உபதேசத்தால் வானவர்கள் பலவிதமான சாபங்களில் இருந்து விமோசனம் பெற்றனர்;அந்த சாபவிமோசனத்தால் குருவை கர்மாக்கள் பிடித்துக் கொண்டன;அதிலிருந்து விடுபட அவர் வழிபட்ட ஸ்தலமே கும்பகோணத்தில் அமைந்திருக்கும் வியாழசோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;(ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது) சுக்கிரபகவான் அசுரகுருவாக இருந்தமையால்,அவருக்கும் அசுரர்களின் கர்மாக்கள் பிடித்துக்கொண்டன;அதிலிருந்து விடுபட அவர் வழிபட்ட ஸ்தலமே அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டானம் ஆகும்; நவக்கிரகங்கள் ஒவ்வொருவரையுமே அஷ்டபைரவர்கள் சூட்சுமமாக இயக்கிவருகிறார்கள்; "சூரியனின் பிராணதேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரும் சந்திரனை ஸ்ரீகபால பைரவரும் குருவை அசிதாங்க பைரவரும் ராகுவை சம்ஹார பைரவரும் புதனை உன்மத்த பைரவரும் சுக்கிரனை ருரு பைரவரும் கேதுவை பீஷண பைரவரும் சனியை குரோதன பைரவரும்" செவ்வாயை சண்ட பைரவரும் பிராணதேவதையாக இருந்து இயக்கிவருகிறார்கள்;எனவேதான் யாரெல்லாம் கடந்த மூன்று பிறவிகளில் சித்தரின் சீடராக இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இப்பிறவியில் பைரவ வழிபாடு செய்ய முடியும்;அல்லது முப்பிறவிகளில் முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்தால் மட்டுமே இப்பிறவியிலும் பைரவ வழிபாட்டைத் தொடரமுடியும்; ஒரு சாஃப்ட்வேர் என் ஜினியரின் சிந்தனையில் படைப்புத்திறனும்,ஒருங்கிணைந்து பணிபுரியும் தன்மையுமே இருக்கும்; ஒரு அனிமேட்டரின் சிந்தனையில் கலைத்திறன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்; ஒரு திரைப்பட இயக்குநரின் சிந்தனையில் ஒரு காட்சியை எப்படியெல்லாம் சிறப்பாக வெளிப்படுத்துவது என்ற சிந்தனை மட்டுமே இருக்கும்; ஆனால்,ஒரு ஜோதிடரின் சிந்தனையில் அவரது தொழிலில்,அதாவது ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும் போதும் நவக்கிரகங்களின் இயக்கம் மட்டுமே இருக்கும்;எனவே,நியாயமான விதத்தில் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜாதகப்படி உண்மையை உரைப்பது ஒவ்வொரு ஜோதிடரின் கடமை; எந்த ஒரு ஜோதிடரும் ஒரு போதும் (தோஷம் நீங்கிட) பரிகாரத்துக்கு பணம் வாங்கக் கூடாது;மீறி வாங்கினால்,அந்த தோஷத்தின் முழுப் பரிமாணமும் ஜோதிடரையும்,அவரது குடும்பத்தாரையும்,வம்சத்தையும் பல தலைமுறைகளுக்குப் பாதிக்கும்;எந்த ஒரு ஜாதகரும் தனது தோஷத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு,அதிலிருந்து விடுபட தாமே முயற்சி செய்ய வேண்டும்;நமது கர்மவினையை நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.அன்னதானத்தை மட்டுமே ஒரு ஜாதகர் சார்பாக யார் வேண்டுமானாலும் செய்யலாம்; இந்து தர்மத்தின் நேரடிப்பிரதிநிதிகளாக அகோரிகள்,மடாதிபதிகள்,ஆச்சாரியர்கள்,ஆதினங்கள்,சங்கராச்சாரியார்கள்,ஜோதிடர்கள் இருந்தாலும்,இந்து சமுதாய மக்களுக்கு ஒவ்வொரு நாளும் நேரடியாக வழிகாட்டுவது ஜோதிடர்கள் மட்டுமே! முற்பிறவியில் ஒருமுறையாவது பைரவ வழிபாடு செய்து பைரவ அனுக்கிரகம் கிடைத்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் ஒருவர் ஜோதிடராக முடியும் என்பது சித்தர் ரகசியம்!!! ஜோதிடர்களின் கடவுளாக ஸ்ரீகாலபைரவப் பெருமான் திகழ்ந்து வருகிறார் என்பது பல யுகங்களாக மறைக்கப்பட்ட உண்மை!ஏனினில்,ஸ்ரீகாலபைரவப் பெருமானின் சுவாசமே வாக்கியப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணிதப் பஞ்சாங்கமாகவும் விரிவடைகிறது; ஜோதிடத் தொழிலில் பேரும் புகழும் அடைந்து,இப்பிறவியோடு பைரவப் பெருமானின் திருவடியை அடைய விரும்புவோர் ஸ்ரீகாலபைரவப்பெருமானை பின்வருமாறு வழிபட வேண்டும்:- அவரவரின் ஜன்ம நட்சத்திர பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.எப்படித் தெரியுமா? ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் ஜன்ம நட்சத்திர பைரவர் இருக்கும் ஊருக்குச் சென்று அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால் ஒரு லிட்டர்,அரகஜா போன்ற பொருட்களால் பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;அபிஷேகம் முடிந்தப் பின்னர்,கோவில் பூசாரிக்கு ரூ.30/-இன் மடங்குகளில் கண்டிப்பாக தட்சிணை தர வேண்டும்;அபிஷேகம் முடிந்தப் பின்னர் வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமல் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்;இவ்வாறு 27 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்ய வேண்டும்; அசுபதி =பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்) பரணி =பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்) கார்த்திகை=அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ரோகிணி=திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது) மிருகசீரிடம்=க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை) திருவாதிரை=திருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி) புனர்பூசம்=சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே. பூசம்=ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர் ஆயில்யம்=காளஹஸ்தி பாதாளபைரவர் மகம்=வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர் பூரம்=பட்டீஸ்வர பைரவர் உத்திரம்=சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர் அஸ்தம்=திருப்பத்தூர் யோகபைரவர் சித்திரை=தர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர் சுவாதி=பொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே விசாகம்=திருமயம் கோட்டை பைரவர் அனுஷம்=ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் கேட்டை=சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்) மூலம்=சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர் பூராடம்=அவிநாசி காலபைரவர் உத்திராடம்=கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர் திருவோணம்=வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர் அவிட்டம்=சீர்காழி அஷ்டபைரவர் சதயம்=சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர் பூரட்டாதி=(திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர் உத்திரட்டாதி=(கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர் ரேவதி=தாத்தையங்கார்பேட்டை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர் அல்லது தொடர்ந்து 27 நாட்களுக்குச் செய்யலாம்;ஜன்ம நட்சத்திரத்தில் ஆரம்பித்து அடுத்த ஜன்ம நட்சத்திர நாளில் தினசரி அபிஷேககத்தை நிறைவு செய்யலாம்; சில ஜோதிடர்களுக்கு ஜன்ம நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம்;அவர்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அவதார நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தன்று இதே வழிபாட்டைச் செய்யலாம்; ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்பவர்கள் மட்டுமே இந்த வழிபாடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது;ஜோதிடத்தை கற்றுக் கொண்டிருப்பவர்களும்,ஜோதிடத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களும்,ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்துபவர்களும்,ஜோதிடம் அறிந்த பூசாரிகள்,பட்டர்கள்,சிவாச்சாரியார்கள்,வாஸ்து நிபுணர்கள்,எண்கணித வித்தகர்கள்,பஞ்சாங்கம் வெளியிடுபவர்கள்,ஜோதிட பயிற்சிப் பள்ளி நடத்துபவர்களும் இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்றலாம்; ஜோதிடத்தின் மூலமாக தர்மத்தை நிலைநாட்டுபவர்கள்,நேர்மையான வழியில் ஜோதிடப் பலன்களைச் சொல்பவர்களுக்கு ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருள் உடனடியாகக் கிட்டும்; மேலும் அஷ்டபைரவர்களின் அமைவிடமான காசியில் பின்வரும் ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஜோதிடரும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும்; லட்பைரவர் கோவிலில் சந்திரனின் பிராணதேவதையான ஸ்ரீகபால பைரவர் அருள்பாலித்துவருகிறார்; வருத்தகாளேஸ்வரத்தில் குருவின் பிராணதேவதையான அசிதாங்கபைரவர் அருள்பாலித்துவருகிறார்; த்ரிலோசனக்கஞ்சில் ராகுவின் பிராணதேவதை சம்ஹாரபைரவர் அருள்பாலித்துவருகிறார்; தேவராகிராமத்தில் புதனின் பிராணதேவதை உன்மத்தபைரவர் அருள்பாலித்துவருகிறார்; அனுமன் கட்டில் சுக்கிரனின் பிராணதேவதை ருருபைரவர் அருள்பாலித்துவருகிறார்; காசிபுராவில் கேதுவின் பிராணதேவதை பீஷணபைரவர் ஆட்சிபுரிந்துவருகிறார்; காமாச்சாவில் சனிபகவானின் பிராணதேவதை குரோதனபைரவராக(இங்கே வடுகபைரவர் என்ற பெயரில்) அருள்புரிந்துவருகிறார்; துர்காமந்திரில் செவ்வாயின் பிராணதேவதை சண்டபைரவர் அருள்புரிந்துவருகிறார்; நிறைவாக காசி விஸ்வநாதரை வழிபட்டுவிட்டு,வீடு திரும்பவேண்டும்; இதுவும் செய்ய முடியாதவர்கள் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானை ஜன்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தொடர்ந்து 27 முறை அபிஷேகம் செய்தும் வழிபடலாம்;

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி

(1) தினப்பொருத்தம்:- கணவன் மனைவிக்கிடையே தினமும் சண்டை இல்லாமல் மனம் ஒத்து வாழக்கூடிய யோகம் உண்டா என்று கண்டறிய பயன்படும் வழிமுறையே தினப்பொருத்தம் ஆகும். பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம். 2) கணப்பொருத்தம் கணம் என்றால் கூட்டம் என பொருள் படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப் பட்டுள்ளன. இதன்மூலம் இருவரின் இல்லறசுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப் படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவகணம் - அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி மனுஷ கணம் - பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி ராட்சஸ கணம்-கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம். பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது) பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம். பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது) பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது) பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது. 3) மகேந்திர பொருத்தம் :- சந்ததி விருத்தி உண்டா இல்லையா என்பதை இதன் மூலம் கண்டறியலாம். பொருத்தம் இருந்தால் சந்ததி விருத்தி பற்றி அறிய இது உதவுகிறது. இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது என்றால் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்த இல்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக்கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார். 4) ஸ்திரி தீர்க்கம்:- பெயரை வைத்தே கண்டறியலாம். பெண்ணின் ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறு பாடு ஏற்படுகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் இருந்தால் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை என்றால் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேலன்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது 8ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில்12ம் ஸ்தானம் அல்லது 2ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும். 5) யோனிப் பொருத்தம்:- இது முக்கியமானதாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை ஆகியவறறை தீர்மானிக்கும் அளவுகோல் என்றறு சொல்லலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் றை இதுவாகும். நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண்& பெண் எனப்பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனற்றும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகைமிருகம் உண்டு. ஆண்&பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை என்க. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமம்தான்! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமம்தான். பகை மிருகம் மட்டும் சேர்க்கக் கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது மிக முக்கியம். 6) ராசி பொருத்தம்:- பெண் ராசி தொட்டு ஆண் ராசி6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறதுசாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம்மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் எண் ராசி தொட்டு ஆண் ராசிஎட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை. எனவே பெண் ராசி முதல் ஆண்ராசி 1, 7, 9, 10, 11, 12 ஆகிய 6 ராசிகள் பொருந்தும் எனலாம். இதன் அட்டவணை. 7) ராசி அதிபதி பொருத்தம் பனிரெண்டு ராசிகட்கு அதிபதிஉண்டு. அந்த அதிபதிகிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்குபகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம்எனில் பொருத்தம் உண்டு. 8) வசிய பொருத்தம் இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னி யோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளேவசியமாக அமையும். இது அமைந்தால் இன்னம் சிறப்பாகும். மற்றபடி இப்பொருத்தம்இல்லை எனினும் அட்டவணை இதோ. 9) ரச்சுப் பொருத்தம் சரசோதிமலை எனும் தமிழ் ஜோதி காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன்எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திமகுறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டுபுற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின்படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு&அதன்ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனையபொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லை யெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமேபலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள்நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சுபொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனிஇது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்துவகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவைபாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது. 10) வேதை பொருத்தம் வேதை எனும்சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம்வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சுபொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகியகால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதைநட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மணவாழ்வும் துன்பமாகவே அமையும். தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள். பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். பொருத்தம் பார்த்த பின்பு ஜாதகத்தில் என்னன்ன தோஷம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் செவ்வாய் தோஷம். சர்ப்ப தோஷம் புனர்பூ தோஷம் மாங்கல்ய தோஷம் ஷஷ்டாஷ்டக தோஷம் துவி துவாதச தோஷம் ஆகியவை சரி பார்க்கபடவேண்டும். அடுத்து குடும்ப ஸ்தானம் புத்ர பாக்ய ஸ்தானம் களத்திர ஸ்தானம் ஆயுள் ஸ்தானம் ஆகியவைகளையும் ஆராய வேண்டும்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சந்திராஷ்டமம்

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது. அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம். இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம். சந்திரனின் முக்கியத்துவம் ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம். சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது. அதுதான் சந்திராஷ்டமம் ஆகும். நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும். சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது. இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது. அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது. நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம். சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும். இரண்டாம் ராசியில் இருக்கும் போது, பணவரவு உண்டு. பேச்சில் நளினமிருக்கும். வேகம், விவேகம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும். மூன்றாம் ராசி: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம். நான்காம் ராசி: பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம். ஐந்தாம் ராசி: நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி. ஆறாம் ராசி: எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல். ஏழாம் ராசி: பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம். எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கோயில், குளம் என்று சென்று வரலாம். கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம். ஒன்பதாம் ராசி: காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள். பத்தாம் ராசி: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள். பதினொன்றாம் ராசி: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம். பனிரெண்டாம் ராசி: அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பிரபஞ்சம் அதன் சக்தி

பிரபஞ்சம் என்றால் என்ன? இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.கற்பனைக்கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம். எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்? அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே. பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம். ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்? மிக மிகக் குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி? தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும். நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும். ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...