செவ்வாய், 29 செப்டம்பர், 2015

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...?


குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...
குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.
அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...
விஞ்ஞான முறையில் யோசித்தால்...
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.
இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.
ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...
ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ள�
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...
குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."
எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2015

நவகிரகங்களின் கதிர்விச்சு

நவகிரகங்களின் கதிர்விச்சு நீளங்கள் நிறங்கள் மற்றும் ரத்தினங்களின் அலை நீளங்கள் பார்ப்போமா நண்பர்களே 1.சூரியன் என்கிற கிரகத்தின் அலை அதிர்வு நீளங்கள் 65.ஆயிரம்.ஆகும் சூரியன் வெளியிடும் நிறம் சிகப்பு மாணிக்ககல் 70. ஆயிரம் அலை அதிர்வு நீளங்கள் சூரியனின் சக்தியை உள்வாங்கும் தன்மை உடையது அதனால் நல்ல மாணிக்கம் உடனடியாக சிறப்பான பலன்கள் தரும் அதே நேரத்தில் யார் எல்லாம் மாணிக்க மோதிரம் அல்லது டாலர் பயன்படுத்த முடியும் என்பதை அவரவர் ஜாதகத்தின் மூலம் தான் தீர்மானிக்க முடியும் 2.அடுத்து சந்திரனை பார்ப்போம் சந்திரன் என்கிற கிரகத்தின் அலை அதிர்வு நீளங்கள் 65.ஆயிரம் .ஆகும் சந்திரன் வெளியிடும் நிறம் ஆரஞ் முத்து என்கிற ரத்தினம் 70.000 அலை அதிர்வு நீளங்கள் சந்திரனின் சக்தியை உள்வாங்கும் தன்மை உடையது அதனால் நல்ல முத்து மோதிரம் அணிந்து கொள்ளலாம் இதற்கும் அவரவர் ஜாதகத்தின் மூலம் தான் தீர்மானிக்க முடியும்..... அடுத்து 3.குருவினை பார்ப்போம் குரு என்கிற கிரகத்தின் அலை அதிர்வு நீளங்கள் 1.30.000 .ஆகும் குரு வெளியிடும் நிறம் மஞ்சள் .கனக புஷ்பராகம் என்கிற ரத்தினம் 50. ஆயிரம் அலை அதிர்வு நீளங்கள் மட்டுமே உள்வாங்கும் தன்மை உடையது அதனால் கனக புஷ்பராகம் மோதிரம் போட்டா உடன் பலன் தராது நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறப்பான பலன்கள் தரும் என்பது உண்மை இதற்கும் அவரவர் ஜாதகத்தின் மூலம் தான் தீர்மானிக்க முடியும்..... அடுத்து 4. ராகு பகவான் என்கிற கிரகத்தின் அலை அதிர்வு நீளங்கள் 35.ஆயிரம்.ஆகும் ராகு பகவான் வெளியிடும் நிறம் அல்ட்ரா வைல்ட் கோமேதகம் என்கிற ரத்தினம் 70.000 அலை அதிர்வு நீளங்கள் வரை சென்று ராகுபகவனின் சக்தியை உள்வாங்கும் தன்மையுடையது மற்றும் இதே அளவில் தான் கேதுவும் பலன்தரும் வைடுரியமும் பலங்கள் தரும் அடுத்து 5. புதனை பார்ப்போம் புதன் என்கிற கிரகத்தின் அலை அதிர்வு நீளங்கள் 65.ஆயிரம் ஆகும் புதன் வெளியிடும் நிறத்தின் கலர் என்னவென்றால் பச்சை இது உங்கள் அனைவருக்கும் தெரியும் மரகதம் என்கிற ரத்தினம் புதனுக்குரியது அந்த மரகதம் 75.ஆயிரம். அலை அதிர்வு நீளங்கள் புதனின் சக்தியை உள்வாங்கும் தன்மை உடையது அதனால் நல்ல மரகதம் உடனடியாக சிறப்பான பலன்கள் தரும் அதே நேரத்தில் யார் எல்லாம் மரகத மோதிரம் அல்லது டாலர் பயன்படுத்த முடியும் என்பதை அவரவர் ஜாதகத்தின் மூலம் தான் தீர்மானிக்க முடியும் அடுத்து 6.சுக்கிரபகவான் 1.30.000 அலை அதிர்வு நீளங்கள் கொண்டது அது வெளிபடுத்தும் நிறம் இண்டிகோ சுக்கிரனின் ரத்தினம் வைரம் . வைரம் 60.ஆயிரம் அலை அதிர்வு நீளங்கள் மட்டுமே உள்வாங்கும் தன்மை உடையது அதனால் வைரம் மோதிரம் போட்ட உடன் பலன் தராது நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறப்பான பலன்கள் தரும் என்பது உண்மை இதற்கும் அவரவர் ஜாதகத்தின் மூலம் தான் தீர்மானிக்க முடியும்..... அடுத்து 7. நம்ப சனிபகவானை பார்ப்போம் சனிபகவான் 65.000 அலை அதிர்வு நீளங்கள் என்கிற நிலையில் உள்ளார் அவர் வெளிபடுத்தும் நிறம் ஊதா நிறம் சனிபகவானின் ரத்தினம் நீலம் இந்த நீலம் 70.ஆயிரம். . அலை அதிர்வு நீளங்கள் வரை சென்று சனிபகவானின் சக்தியை பெற்று தரும் வல்லமை உடையது நீலம் அணிவதற்கும் அவரவரின் ஜாதகத்தின் முலமே தெரிந்து கொள்ளமுடியும் அடுத்து செவ்வாய் செவ்வாய் பகவான் 85.000 அலை அதிர்வு நீளங்கள் என்கிற நிலையில் உள்ளார் அவர் வெளிபடுத்தும் நிறம் மஞ்சள் நிற கதிர்கள் செவ்வாய் பகவானின் ரத்தினம் பவளம் அது 65.ஆயிரம். . அலை அதிர்வு நீளங்கள் வரை சென்று செவ்வாய் பகவானின் சக்தியை பெற்று தரும் வல்லமை உடையது பவளம் அணிவதற்கும் அவரவரின் ஜாதகத்தின் முலமே தெரிந்து கொள்ளமுடியும் குறிப்பு எந்த ஒரு ரத்தினமும் ஜோதிடரின் அறிவுரை இல்லாமல் அணியகூடாது  

திருப்பதி தரிசன சம்பிரதாயம்:

203 பாசுரங்கள் பெற்றது திருப்பதி. இது 3 பிரிவுகள் கொண்டது.
கீழ்க் காணும் வரிசையில் தரிசிப்பதுதான் சம்பிர தாயம்.
முதலில் கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளையும் அடுத்து திருச்சானூரில் அலர்மேல் மங்கைத் தாயாரையும் பின் மேல் திருப்பதியில் சுவாமி புஷ்கரணியருகேயுள்ள வராஹரையும் தரிசித்த பின்பே மூலவர் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வேண்டும்.
கோயில் அமைப்பு:
முதல் வாயிலை படிக்கரவலி என்பர். கோபுரத்தை அழகு செய்யும் வாசல் இது.
முதற்பிராகாரத்தை கடந்தால் வெள்ளி வாயில், அதன்பின் தங்க விமானத்தில் விமான வெங்கடேசரை தரிசிக்கலாம்.
பின் துவாரபாலகர்களை தரிசித்து உத்தரவு பெற்றபின் கருவறைக்குச் செல்லலாம்.
முதலில் சாதாரணமாகக் கட்டப்பட்ட இந்த அனந்தபுரமான திருப்பதி, 13ம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது.
சயன மண்டபம், முக்கோடி பிரதட்சிணம் (வைகுண்ட ஏகாதசியன்றும், அதற்கு முன் நாள், பின் நாள் என 3 நாட்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்)
அடுத்து ராமமேடை, ஸ்நபன மண்டபம், தங்கக் கதவுகள் கொண்ட பங்காரு வாகினி (இங்குதான் தினம் அதிகாலையில் சுப்ரபாதம் இசைக்கப்படுகிறது.
மார்கழி மாதம் முழுதும் ஆண்டாளின் திருப்பாவை தமிழில் இசைக்கப்படுவதும் இங்குதான்.)
கோயில் கடல் மட்டத்தினின்று 3000 அடி உயரத்தில் உள்ளது.
மலைப்பாதையில் பாதயாத்திரை வழி 6 கி.மீ. தூரம்.
பல ஆண்டுகளுக்கு முந்தையதான சிலா தோரணம் என்ற கல் வளைவு உலகப்புகழ் பெற்றது.
ரோம் நகரில் திருப்பதி போலவே 7 மலைகளும், சிலா தோரணம் என்ற கல் வளைவும் உள்ளதாகக் கூறுகின்றனர்.
ஸ்ரீபாத மண்டபம்:
பாத யாத்திரையாகச் செல்லும் வழியில் இந்த மண்டபம் உள்ளது.
இங்குள்ள பாதங்களை தரிசித்த பின்பே பாத யாத்திரை செய்யும் பக்தர்கள் மலை ஏறுவார்கள்.
சுப்ரபாத தரிசனம் என்ற விஸ்வரூப தரிசனத்தை அதிகாலை 3:00-3:30 மணிக்கு கட்டணம் செலுத்தியோர் காணலாம்.
ஏழுமலையானை துயில் எழுப்ப 6 பேர் அதிகாலை 3.00 மணிக்கு சந்நதி முன் உள்ள தங்க வாயிலுக்கு வருவார்கள்.
2 அர்ச்சகர்கள், தீவட்டி தூக்குபவர், வீணை இசைப்பவர் ஆகியோர் கொண்ட ஒரு குழு முதலில் தங்க துவார பாலகர்களை வணங்கிய பின் சந்நதி கதவு திறக்க சுவாமியை வணங்குவர்.
பின் உள்ளே சென்று கதவுகளை மூடிக்கொள்வர்.
வெளியில் ஒரு குழுவினர் சுப்ரபாதம் இசைப்பார்கள்.
உள்ளே சென்றதும் தீவட்டியால் விளக்கேற்றும்போது வீணை இசைக்கப்படும். பிறகு கதவுகளைத் திறப்பார்கள்.
அதன்பின் தொட்டிலில் உள்ளே போக ஸ்ரீனிவாசனை உற்சவர் காலடியில் வைப்பர்.
அவருக்கு இடுப்பில் ஒரு துண்டு கட்டுவார்கள்.
பின்பு வெண்ணெய் படைப்பார்கள்.
ஆகாய கங்கையில் இருந்து 3 குடம் அபிஷேக நீர் எடுத்து வருவார்கள்.
அது காலை, நண்பகல், இரவு என 3 அபிஷேகத்திற்கு பயன்படும்.
இந்த நீரை ஒரு உத்திரிணியில் எடுத்து ஏழுமலையான் முகத்தருகே காட்டுவர்.
சுவாமி தன் முகம் கழுவிக் கொள்வதாக பாவனை.
பின் திருவடிக்கு மட்டும் அபிஷேகம்.
அடுத்து போக ஸ்ரீனிவாசனுக்கு முழு அபிஷேகம் செய்வர்.
பசும்பால், சந்தனம், தேன், திருமஞ்சன நீர் அபிஷேகம் செய்து நவநீத ஆராதனை காட்டுவர்.
இத்துடன் காலை சுப்ரபாத தரிசனமான விஸ்வரூப தரிசனம் நிறைவடையும்.
4 மண்டப ஸ்தலங்கள்:
ஸ்ரீரங்கம், போக மண்டபம், கர்நாடகா திருநாராயணபுரம், ரங்க மண்டபம் இவைதான் வைணவ திவ்ய தேச மண்டப ஸ்தலங்கள்.
ரங்க மண்டபம் என்றால் என்ன தெரியுமா?
டில்லி படையெடுப்பால் ஸ்ரீரங்கம் உற்சவத்திருமேனியான நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கோழிக்கோடு, கர்நாடகா என்று சுற்றிவிட்டு திருமலை வந்து சேர்ந்தார்.
இங்குள்ள மண்டபத்தில் 10 வருடம் தங்கினார். அந்த மண்டபத்தின் பெயர் ரங்க மண்டபம்,
குபேர தரிசனம்:
வியாழன் மாலை 6:00-6:30 மணி வரை உள்ள காலம் குபேர காலம்.
அப்போது மூலவரை பாதம் தொடங்கி சிரசு வரை தரிசிப்பதுதான் குபேர தரிசனம்.
இதனால் செல்வம், புகழ், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

புதன், 9 செப்டம்பர், 2015

கிரக பாதிப்பு விலக அதிஷ்ட மோதிரம் அணியுங்கள்

அணைத்து வகை இரத்தின மோதிரம் எங்களிடம் கிடைக்கும் வாசகர்கள் வாங்கி பயன்படுதிகொள்ளவும்  வெள்ளி மோதிரம்  அதன் விலை பட்டியல் தருகிறேன்    1.மாணிக்கம் 3+ காரட்  வலது கை    RS 5000                                                                            2.முத்து              3+ காரட்  வலது கை     RS.5000                                                                        3.கனக புஷ்பராகம் 3+ காரட்  வலது கை  RS.5000                                                                  4.மரகதம்          3+ காரட்  வலது கை   RS.5000                                                                            5.வெள்ளை  ஜீர்கன்   3+ காரட்  வலது கை   RS.4500                                                              6.நீலம்    3+ காரட்  வலது கை    RS.5000                                                                                     7.பவளம்   7+ காரட்  வலது கை   RS.7500                                                                                   8.கோமேதகம் &  வைடுரியம்   RS.5500    3+3 காரட் இடது கை மோதிர விரல்      மேலும் ஜாதகத்தை பார்த்த பிறகே இரத்தின மோதிரம் தேர்வு செய்யப்பட  வேண்டும்  நீங்கள் என்ன ரத்தினம் அணிய வேண்டும் என்று எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்  ஸ்ரீ சிவ சக்தி ஜோதிடம் திருவொற்றியூர்  சென்னை   செல்  8667710736  வாட்சப் 8124812470 

பணபுழக்கம் அதிகமாக , பண கஷ்டம் நீங்க....

1;ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.அங்கு எப்போதும் கூட்டமாக இருக்கும் இல்லையா? நீங்கள் திங்கட்கிழமையன்று பெருமாளை தரிசித்துவிட வேண்டும்.இப்படி 12 திங்கட்கிழமைகள் அதாவது ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும்.இப்படி செய்தால் நீங்கள் கோடீஸ்வரராவது உறுதி.
2.அமிதிஸ்டு என்ற ரத்தினம் அதாங்க ஜெம் நகைக்கடைகளில் கிடைக்கிறது.இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா.இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும்.பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. இது ஒரு காரட் ரூ.200 அல்லது அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.குறைந்தது 5 காரட் வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும்.உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம்.நிறைய பணம் மிச்சமாகும்
ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை 4.30 மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருக!!! அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு , கிரிவலம் செல்ல வேண்டும். குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து , பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்.
வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வருக!
உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் உண்மை.நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். 

தீப பரிகார பலன்கள்

1 தீபம்: மன அமைதி
* 9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
* 12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
* 18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.
* 27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது
கிட்டும்.
* 48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
* 108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
* 508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.
* 1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும்

புதன், 2 செப்டம்பர், 2015

குபேர பண வரவு உண்டாக ரகசிய பரிகாரங்கள்

பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும்.
All Spice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.
இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.
புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.
AlfaAlfa எனப்படும் 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.
வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.

செல்வத்திற்குரிய வீட்டு பூஜை குறிப்புகள்-

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

ரகசிய சூட்சும பரிகாரங்கள்

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத் துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும். மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும்
நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.
புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள், பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது. பணம், முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால், வாங்கியவர் வளமடைவார்.
கார்த்திகை,மகம்,உத்திரம்,சித்திரை,மூலம்,ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.
வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
(1) எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.
(2) மாமனார் மச்சினர் மச்சினி மாமியார் போன்ற உறவுகளிடம் இருந்து எதுவும் உதவி வரவில்லை எனில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இலவச குடிநீர் வசதி செய்து வர, உதவிகள் வர ஆரம்பிக்கும்.
(3) அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர அவர்களின் கொட்டம் நிற்கும்
(4) கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்
(5) விலை உயர்ந்த பொருட்களை இழந்து கொண்டே இருந்தால் சனிக்கிழமைகளில் வெளிர் நீல துணியில் எள் உருண்டைகள் வைத்து இரவு நேரத்தில் (8-9) தானம் செய்ய, விரயம் நிற்கும்.
(6) சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பண கஷ்டம் மற்றும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்-அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் இனாமாகவோ அல்லது நன்கொடையாகவோ எதுவும் பெறக் கூடாது. அதே போல் செய்யாத வேலைக்கு பணம் பெறுவது கூடாது. ஒவ்வொரு திங்களும் ஏதேனும் கோவிலில் 5 பாதாம் பருப்புகள் தானமாக வழங்கி வர நிலையில் நிச்சயமான மாற்றம் ஏற்படும்.
(7)உடல் நிலை மற்றும் நீண்ட ஆயுளுக்கு தினசரி 'ஓம் சாவித்ரியாயை நமஹ' மந்திரம் கூறி வர உடலில் முன்னேற்றம் உண்டாகும் .
(8) தினசரி அரச மர வழிபாடு செய்து வர நேர் மறை சக்திகள் நம்முடனே இருக்கும். நல்லவை சித்திக்கும்.

கடுகு எண்னை பரிகாரங்கள்

கடுகு எண்னை கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும்.
கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.
வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நில மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணையில் மாதம் ஒரு முறை உடல் முழுதும் தடவி குளிக்க நன்மை பெருகும். மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம்.
திருமணம் தாமதம் ஆகும் இளைஞ்ச இளைஞ்சிகளும் இப்படி செய்யலாம்.
ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணையை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும்.
வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்ற தாந்த்ரீக பரிகாரம்

இந்த பரிகாரத்தை ஞாயிற்று கிழமை தொடங்கி தினமும் செய்துவர பலன் தெரிய துவங்கும்
ஞாயிற்றுகிழமை காலை 6முதல் 7மணிக்குள் குளித்து முடித்து சூரியனை பார்த்து நின்று கிழ்கண்ட சூரிய மந்திரத்தை 9முறை கூறி பின்பு இருகைகளிலும் சுத்தமான பன்னிரை ஊற்றி உங்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் நினைத்துக்கொண்டு 3முறை பன்னிரை சூரியனுக்கு வார்க்க வேண்டும்
சூரிய மூல மந்திரம்:
"
ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ
இதை தொடங்கியவுடன் ஞாயிறு தோறும் யாராவது ஒருவர் அல்லது அதற்க்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி வர உங்களின் தேவைகள் நிறைவேற தொடங்கும்
வீட்டில் ஒருவர் இதை செய்தாலே போதுமானது
அன்னதானம் வழங்குவது உங்கள் வசதியை பொருத்தது
பன்னிர் 1லிட்டர் பாட்டில்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள் !

1.வீட்டின் முன் இரண்டு மீன்கள் இருக்கும்படியான படத்தை ஒட்டி வைத்து தினசரி பார்த்து வர நன்மைகள் உண்டாகும். ஒற்றை மீன் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.
2.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.
3.வழியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள்
ஏற்படாமல் இருக்கும்.
4.முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.
5.தனியாகவும்,மன சோர்வுடனும்,தனக்கு யாருமே இல்லை என்ற மன நிலை காணப்பட்டாள் மழை நீரில் நினைய, மாற்றம் ஏற்படும்.

நீங்கள் செல்வந்தராக ஒரு ரகசியம்

எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமேஅன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனைஅடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும்கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . , அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம் பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூலஉடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமைமுதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும்பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேசகலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர்அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையேசோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,எனவாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது. பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்.
இவர்இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார்ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள்உலகம் முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள்விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது. . அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்துவெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலைமணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள் அமாவாசை திதிமுடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணிதியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.
இந்த இரண்டு மணிநேரத்திற்குள் சுமார் 5 நொடிப் பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்தமொத்தப் பிரபஞ்சமும் வரும். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல்,பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும். அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அதுகிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.
பலவாக இருக்கக்கூடாது.ஒன்றுநிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம். இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்யவேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சிலமாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது)கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப்பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள்வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம்அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாகஇருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவுஅதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில்இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில்அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவதுஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில்தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன்வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை
( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன்தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்குவெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும்) நினைத்த வண்ணம் கண்களை மூடிஇருந்தால்போதும்.தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம்பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்தஎவரும் செய்யலாம்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...