ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஜோதிட பாடம் LKG அடிப்படை 1

 

உங்களது வாழ்க்கை எங்கே?

சிலர்  எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க்கம் என சொந்த ஊரிலேயே தமது வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்.

 

ஜாதகத்தில் இரண்டாம் பாவம் கெட்டுவிட்டால் அந்த ஜாதகர் சொந்த ஊரில் இருந்தால் வாழ்க்கை மிக கடினமானதாக இருக்கும். அத்தகையவர்கள் சொந்த மண்ணை விட்டு வெளியூர் சென்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பல வேதனைகளை தவிர்க்கலாம்.

கிரக தோஷங்களை எதிர்கொள்வது எப்படி?

ஒரு பாவத்தில் நிற்கும் கிரகம் அதன் அம்சத்தை தான் நிற்கும் அந்த பாவத்தில் ஏதேனும் ஒரு வகையில் நிலைநாட்டும்.

 

கிரகங்கள் தாங்கள் நிற்கும் பாவத்தின் பலனையும் எடுத்து நடத்த கடமைப்பட்டுள்ளன. எனவே ஒரு பாவத்தில் நிற்கும் கிரகம் முதன்மையாக  தனது காரக அடிப்படையிலும் பிறகு தாங்கள் நிற்கும் பாவம் எதனை குறிப்பிடுகிறதோ அதன் அடிப்படையிலும் மேலும் தாங்கள் எந்த பாவங்களுக்கு அதிபதிகளோ அந்த பாவங்கள் எதனை குறிப்பிடுகிறதோ அதன் அடிப்படையிலும் தாங்கள் நிற்கும் குறிப்பிட்ட அந்த பாவத்தில் தங்களது அம்சத்தை நிலை நாட்டும். இதில் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர அதிபதிகளின் பங்கு குறிப்பிட்ட கிரகங்களின் செயலுக்கு அதன் திசா புக்திகளில் தெளிவாக வெளிப்படும்.

 

உதாரணமாக இரண்டாம் பாவம் 1.தனம், 2.வாக்கு, 3.குடும்பம் ஆகியவற்றை முதன்மையாக குறிக்கும்.

 

2 ல் ராகு உள்ளதாகக்கொண்டால் ராகுவின் காரக அடிப்படையில் ஜாதகருக்கு வெளிநாட்டுத்தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் சம்பாத்தியம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி ஏற்பட்டால் அதன்பிறகு வாக்கு, மற்றும் குடும்ப வகையில் ராகு பாதிப்பை தர வாய்ப்பு மிகக்குறைவே. இதற்கு ஜீவன காரகன் சனி ஜல ராசிகளுடனோ அல்லது 9, 12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்க வேண்டும். இதனால் வெளிநாட்டு சம்பாத்தியம் ஏற்படும். அடுத்து வாக்கு காரகன் புதன் கெடாமல் சுபர்களுடன் இருந்தால் பொய், புரட்டு இல்லாமல் இருப்பார். அடுத்து குரு கெடாமல் இருக்க வேண்டும் ஏனெனில் குடும்ப காரகன் குரு கெட்டு குடும்ப பாவமும் ராகுவால் பாதிக்கப்பட்டால் குடும்பம் குளறுபடியாகும்.

 

எனவே இரண்டில் ராகு இருந்தால் இரு தாரம், பொய்யன், மதுவருந்துவான் போன்ற வகையில் மட்டும் பார்க்காமல் இரண்டாமிடம் குறிக்கும் பாவ காரகங்களை தெளிவாக அறிய அதற்குரிய கிரக காரகர்களின் நிலைமையையும் ஆராய்வது அவசியம். இதனை இங்கு குறிப்பிட மற்றொரு முக்கிய காரணம் தற்போது சில பகுதிகளில் திருமணப்பொருத்தம் பார்க்கையில் ராகு-கேது தோஷம் என்ற வகையில் நல்ல ஜாதகங்களையும் பொதுவாக ஒதுக்கி விடுகின்றனர். இது தவறு என்பதற்காகத்தான்.

 

லக்னத்திற்கு ஏழில் சூரியன் நின்றால் பிரிவினை ஜாதகம் என்றுகூறி பொருத்தமே பார்க்க விரும்பாத ஜோதிடர்கள் கூட உண்டு. சூரியன் ஏழில் நிற்பதால் அரசுப்பணி வரனாகப் பார்ப்பது நல்லது. ஏழாமிடத்தில் நிற்கும் சூரியன் அரசாங்கத்திற்கு  காரகத்துவம் பெற்ற கிரகம் என்பதால் இது பொருந்தும். மேலும் 7 நின்று லக்னத்தை பார்க்கும் சூரியன் ஜாதகரையும் தனது அம்சமாக அரசுப்பணி செய்பவராக அல்லது ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றிவிட வாய்ப்புண்டு. அப்படி நிகழ்ந்தால் தனது காரகத்தை ஒரு வகையில் நிலை நாட்டிய சூரியன் 7 ஆமிடத்தை பாதிக்கமாட்டார் என நம்பலாம். இது ஒரு உபாயம் அவ்வளவே. 

 

இது போல ஏழாம் அதிபதி நீசமாகிவிட்டால் குறையுள்ள வாழ்க்கைத்துணைவரை பார்ப்பது நல்லது.

 

குறை என்பது உடல் ஊனம், வாழ்க்கைத்துணையை இழந்தவர், மனமுரிவுற்றவர் என்ற வகையில் இருக்கலாம். அப்படி இல்லாமல் குறையில்லா நல்ல துணையை தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும் என்றால் நீசமான ஏழாமதிபதி கிரகம் , வாழ்க்கைத்துணைவர் வகையில் தனது அம்சத்தை நிலைநாட்டும். அதாவது துணைவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. துணைவர் நீச குனங்களை பெற்றவராக இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் துணைவரின் ஜாதகம் வலுவாக இருந்தால் தனது அம்சத்தை நிலைநாட்ட முயலும் ஜாதகத்தோடு போரிட இயலாமல் மண முறிவுக்கு கொண்டு செல்லவும் வாய்ப்பு ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

 

எனக்கு நன்கு அறிந்த ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆமதிபதி நீச கிரகத்தோடு சேர்க்கை பெற்றுள்ளது. இவ்வமைப்பு அவரின் மனைவிக்கு மோசமானகுணத்தை ஏற்படுத்த வேண்டும். மனைவி மிக நல்லவர். ஆரோக்யமாகவும் உள்ளார். குறிப்பிடும் நபர் மோசமான நண்பர்களோடு (அரசியல்வாதிகள்) சேர்ந்து தொழில் செய்கிறார். 7 ஆமிடம் களத்திர ஸ்தானம் மட்டுமல்ல ஒருவரது தொடர்புகளையும் குறிக்கும் என்ற வகையில் அந்த நபரின் 7 ஆமிட தோஷம் மோசமான நண்பர்களோடு தொழில் ரீதியாக இணைத்து வைத்து மனைவியை பாதிக்காமல் விட்டுள்ளது. 

 

12 ஆமிடத்தில் பாவிகள் இருந்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று சம்பாதித்து வரும் கணவனை தேடுவது நல்லது. அப்படி இல்லாமல் கணவன் எப்போதும் அருகிலேயே இருந்தால் 12 ஆமிடம் குறிப்பிடும் படுக்கை அறை போர்க்களமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விடத்தில் மற்றொரு விஷயம். ஒருவேளை 12 ல் பாவிகள் அமையப்பெற்ற ஜாதகர் ஒரு ஆண் எனக்கொள்வோம். அவர் இரவுப்பணி ஆற்றுபவாராக இருந்தால் அவருக்கு தூக்கம் கெடும் என்ற வகையில் தனது பாதிப்பை அங்கு நிற்கும் பாவிகள் வழங்கும். ஏனெனில் 12 ஆமிடம் தூக்கத்தையும் குறிப்பிடும்.இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால் அதன் பிறகு தம்பதிகளின் தாம்பத்யத்தில் கிரகங்கள் பாதிப்பை வழங்காது ....

 

உங்களை எல்லாம் இந்த இணையதளத்தின் மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜோதிடம் ஒரு சாரார் மட்டுமன்றி எல்லோரும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பாடங்களை எழுதுகிறோம். குறைந்தளவு கல்வி அறிவு உள்ளவர்களும், ஜோதிடம் தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை எழுதுகிறோம். இந்தப்பாடங்களை மிக எளிய தமிழில் கதை சொல்வதுபோல் எழுதப் போகின்றோம்.

 

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

 

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

 

1. சூரியன்

2. சந்திரன்

3. செவ்வாய்

4. புதன்

5. குரு

6. சுக்கிரன்

7. சனி

8. ராகு

9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

 

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன .

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

 

1. அஸ்வினி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகினி

5. மிருகசீரிஷம்

6. திருவாதரை

7. புனர்ப்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. ஹஸ்தம்

14. சித்திரை

15. ஸ்வாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி

27. ரேவதி

ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

என்னுடைய ஜன்ம நட்சத்திரம் அவிட்டம். ஒருவருக்கு ரேவதியாக இருக்கலாம், இன்னும் ஒருவருக்கு கார்த்திகையாக இருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் ஒன்று ஜன்ம நட்சத்திரமாக இருக்கும். நம் ஜன்ம நட்சத்திரத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது? பஞ்சாங்கத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

பஞ்சாங்கம் என்றால் என்ன ?

 

பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் கொண்டது.

 

 

 

அவையாவன :

 

1.திதி

2.வாரம்

3.நட்சத்திரம்

4.யோகம்

5.கரணம்.

 இந்த ஐந்தையும் நாம் பஞ்சாங்கதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். முதலில் நட்சத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு நாம் திதி, வாரம், யோகம், கரணம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நாம் எல்லா கிரகங்களும் வான மண்டலத்தைச் சுற்றி வருகின்றன என்று கூறி இருந்தோம். வான மண்டலத்தில் 27 நட்சத்திரங்களும் பரவி இருக்கின்றன. அவைகளின் மேல் தான் 9 கிரகங்களும் வலம் வருகின்றன. சென்ற பாடத்தில் வான மண்டலத்தை 12 பகுதியாகப் போட்டு காட்டி இருந்தோம். அந்தப் 12 பகுதியையும் நாம் ராசி என்றோ அல்லது வீடு என்றோ இனிக் கூறுவோம்.

 

ராசியில் 1ம் எண் போடப்பட்ட வீடு அல்லது ராசியின் பெயர் மேஷம்.

 

1 - மேஷம்

2 - ரிஷபம்

3 - மிதுனம்

4 - கடகம்

5 - சிம்மம்

6 - கன்னி

7 - துலாம்

8 - விருச்சிகம்

9 - தனுசு

10 - மகரம்

11 - கும்பம்

12 - மீனம்.

 

இப்போது 12 ராசிகளின் பெயர்களைத் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 12 ராசியிலும் நாம்

27 நட்சத்திரத்தையும் அடைக்கப்போகிறோம்.

ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர். ஆக 4 பாதங்கள் கொண்டது ஒரு நட்சத்திரம். இப்போது ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம். முதல் ராசி அல்லது வீடான மேக்ஷத்திற்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம். ஆக மொத்தம் 9 பாதங்கள். அதைப் போல் ஒவ்வொரு ராசிக்கு எந்தெந்த நட்சத்திரங்கள் அடங்கி இருக்கின்றன எனப் பார்ப்போம்.

திதி என்றால் என்ன ?

 

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் தான். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதற்குப்பின் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். தினமும் சுமார் 12டிகிரி வரைநகர்ந்து செல்வார். பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அதாவது சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார். சூரியன் இருந்த வீட்டையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற வீடு 7-வது வீடாக இருக்கும். அம்மாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள். அதேபோல் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசைக்கு 15 நாட்கள். மொத்தம் 30-நாட்கள். சந்திரன் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் சேர்ந்து கொள்வார். அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் என்று சொன்னோம் அல்லவா. அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அல்லவா ? அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை. 4-ம் நாள் சதுர்த்தி. 5-ம் நாள் பஞ்சமி. 6-ம் நாள் சஷ்டி. 7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பௌர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.

 

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, .........அம்மாவாசை முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்க்ஷம் என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித்திதிகளில் நல்ல காரியங்கள் எதுவும் செய்வது இல்லை. நாம் இப்போது ஒரு சிறிய கதை கூறப் போகிறோம்.

 

அஷ்டமித்திதியும், நவமித்திதியும் நம் நாட்களில் எல்லோரும் நல்ல காரியங்கள் செய்வதில்லையே என்று வருத்தப் பட்டனவாம். அவைகள் மஹாவிஷ்ணுவிடம் சென்று வருத்தப்பட்டன. உடனே பகவான் அவைகளிடம் "நீங்கள் வருத்தப்படாதீர்கள். நான் உங்கள் திதிகளில் அவதாரம் செய்கின்றேன்" எனக் கூறினார். ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் அவர் முறையே நவமியிலும், அஷ்டமியிலும் அவதாரம் செய்தார். நாமும் ஸ்ரீராமநவமி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இப்போது திதிகளைத் தெரிந்து கொண்டீர்கள். அடுத்தது வாரம். வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.

நட்சத்திரம்

 

நட்சத்திரட்த்தைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். 27நட்சத்திரங்களும் இப்போது மனப்பாடமாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறோம். இதை மனப்பாடம் செய்வது மிக முக்கியம். இது மனப்பாடமாகத் தெரியாமல் ஜோதிடம் யாரும் பார்க்க முடியாது. ஆக 27-நட்சத்திரத்தையும் அவைகள் இருக்கும் ராசிகளையும் எப்போதும் மனதில் வைத்திருத்தல் அவசியம். அடுத்தது கரணம் ஆகும்.

 

கரணம்

 

கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன,

 

1.பவ

2.பாலவ

3.கௌலவ

4.தைதூலை

5.கரசை

6.வணிசை

7.பத்தரை

8.சகுனி

9.சதுஷ்பாதம்

10. நாகவம்

11.கிம்ஸ்துக்னம்.

 

 

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் நாம் சமயம் வரும் போது எழுதுகிறோம். அடுத்தது யோகம்.

சென்ற பாடத்தில் கிரகங்களின் சொந்த வீடுகளைத் தெரிந்து கொண்டீர்கள். சரி! கிரகங்களுக்குச் சொந்த வீடு இருந்து என்ன பயன் ? அது ஜோதிடத்திற்கு எந்த விதத்தில் உதவுகிறது ? இப்போது அதைத் தெரிந்து கொள்வோம். ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருந்தால் அது அதிக பலம் உள்ளதாகக் கருதப் படுகிறது. அதிக பலம் உள்ள கிரகம் தன் சொந்த தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்யும். உதாரணத்திற்குக் கீழே உள்ள ராசிக் கட்டத்தைப் பாருங்கள்.

 இதில் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். கடகம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருப்பதால் அவருக்கு பலம் அதிகரிக்கிறது. ஆகவே அவர் தன் தசா, புக்திக் காலங்களில் நல்லதையே செய்வார். சந்திர தசையோ, அல்லது சந்திர புக்தியோ அவருக்கு நல்லதையே செய்யும். அதே போன்று மூலத்திரிகோண வீட்டில் இருந்தாலும் அவர் நல்லதையே செய்வார். கிரகங்களின், உச்ச, மூலத் திரிகோண, மற்றும் நீச்ச வீடுகளைப் பற்றி நாம் கீழே எழுதி இருக்கிறோம். சொந்த, உச்ச, மூலத் திரிகோண வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதையே

 செய்யும் என்பது ஜோதிட விதி. நீச்ச வீடுகள கிரகங்கள் நல்லதைச் செய்யாது என்பதுவும் ஜோதிட விதி. இதைத் தவிர சந்திரன் மனது, தாயார்- ஆகியவைகளுக்கு காரகம் வகிப்பவர். சந்திரனை வைத்துத்தான் நாம் ஒருவரின் மனநிலையையோ, அல்லது தாயாரையோ கூற வேண்டும்.

நீச்ச வீடுகளைப் பற்றி நாம் கீழே எழுதி இருக்கிறோம். சொந்த, உச்ச, மூலத் திரிகோண வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதையே

 

செய்யும் என்பது ஜோதிட விதி. நீச்ச வீடுகளில் இருக்கும் கிரகங்கள் நல்லதைச் செய்யாது என்பதுவும் ஜோதிட விதி. இதைத் தவிர சந்திரன் மனது, தாயார்- ஆகியவைகளுக்கு காரகம் வகிப்பவர். சந்திரனை வைத்துத்தான் நாம் ஒருவரின் மனநிலையையோ, அல்லது தாயாரையோ கூற வேண்டும். மேற் கண்ட உதாரண ஜாதகத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பதால் நல்ல மனநிலையுடன் இருப்பார் எனக்கொள்ளலாம். தாயாரும் நல்ல விதமாக இருப்பார் எனக்கொள்ளலாம். சந்திரனுடன் ராகு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அந்த ஜாதகர்மிகுந்த சுயநல வாதியாக இருப்பார். சனி இருந்தால் அவர் எதையும் மறைக்கக் கூடியவறாக இருப்பார். வெளிப் படையாக எதையும் கூற மாட்டார். . கீழே உச்ச, நீச்ச, மூலத்திரிகோண வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.

நட்சத்திர அதிபதிகள் முதலில் பார்ப்போம்.

நட்சத்திர அதிபதிகள்

அஸ்வினி - கேது

பரணி - சுக்கிரன்

கார்த்திகை - சூரியன்

ரோகிணி - சந்திரன்

மிருகசீரிஷம் - செவ்வாய்

திருவாதிரை - ராகு

புனர்பூசம் - குரு (வியாழன்)

பூசம் - சனி

ஆயில்யம் - புதன்

மகம் - கேது

பூரம் - சுக்கிரன்

உத்திரம் - சூரியன்

அஸ்தம் - சந்திரன்

சித்திரை - செவ்வாய்

சுவாதி - ராகு

விசாகம் - குரு (வியாழன்)

அனுஷம் - சனி

கேட்டை - புதன்

மூலம் - கேது

பூராடம் - சுக்கிரன்

உத்திராடம் - சூரியன்

திருவோணம் - சந்திரன்

அவிட்டம் - செவ்வாய்

சதயம் - ராகு

பூரட்டாதி - குரு (வியாழன்)

உத்திரட்டாதி - சனி

ரேவதி - புதன்

ஆட்சி பெற்ற கிரகங்கள்

ஒரு ராசியின் சொந்த காரர் தனது  ராசியில் தனியாக (வேறு கிரக சேர்க்கை இல்லாமல் ) தங்கி இருக்கும்போது அதிக பலமுடனும், தனது ஸ்தானத்திற்கு நல்ல பலன்களை அள்ளி தரும்.

செவ்வாய்  -   மேஷம், விருச்சிக ராசிகளுக்கு சொந்தகாரர்

புதன்          -     மிதுனம், கன்னி  ராசிகளுக்கு சொந்தகாரர்

குரு                 தனுசு, மீன ராசிகளுக்கு சொந்தகாரர்

சுக்கிரன்         ரிஷபம், துலாம்  ராசிகளுக்கு  சொந்தகாரர்

சனி          -       மகரம், கும்ப வீட்டிற்கு சொந்தக்காரர்

சந்திரன்          கடக ராசிக்கு சொந்தக்காரர்

சூரியன்   -       சிம்ம ராசிக்கு சொந்தக்காரர்

ராகு கேது ஆகிய இரு நிழல் கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது.

௧. ஒரு கிரகம் தனது ஆட்சி வீட்டில் வக்கிரம் பெறலாம் (பொது விதி)

௨. ஒரு கிரகம் ஆட்சி வீட்டில் ராகு கேதுவுடன் சேர்ந்து அஸ்தங்க தோஷம் அடைந்தால் நல்ல பலன் தர இயலாது.

௩. இரு கிரகங்கள் நல்ல நிலையில் ஆடசி பெற்றால் ஒரு சாதகன் பூபதி போல் வாழ்வான்

என ஜோதிட கலை கூறுகிறது.

உச்சம் பெற்ற கிரகங்கள்

ஒரு உச்சம் பெற்ற கிரகம், பகை பெற்ற ஒரு கிரகத்தின் நட்சத்திர காலில் (நட்சத்திரத்தில் பிறந்த ) உருவானதாக இருந்தால் பலன் இல்லை. இரு உச்ச கிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தாலோ பரிவர்த்தனை கொண்டாலோ துன்பமே. நீட்ச வீட்டின் எதிர் வீடு உச்சவீடாகும். நல்ல கிரகங்கள் நல்ல இடத்தில (6,8,12,தவிர) உச்சம் பெற்றால் சுபம். கெட்ட கிரகங்கள் கெட்ட இடத்தில உச்சம் பெறுவதும் நல்லது

சூரியன்  -   மேஷத்தில் உச்சம்

சந்திரன்  -  ரிஷப ராசியில் உச்சம்

குரு        -    கடகத்தில் உச்சம்

புதன்      =    கன்னி ராசியில் உச்சம்சுக்கிரன்     மீன ராசியில் உச்சம்சனி             துலா ராசியில் உச்சம்ராகு        -    ரிஷபத்தில் உச்சம்கேது            விருட்சிகத்தில் உச்சம்.

சில ஜாதகருக்கு உச்சம் பெற்ற கிரகம் தனது திசை புக்தியில் கூட செயல் இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். அதாவது உச்சம் பெற்றும் பலன் இல்லை என்பது போல்அதற்க்கு டிகிரி கணிதம் என்று ஒன்று உள்ளது. அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் எந்த டிகிரியில் உச்சம் பெறுகிறது என்பதை பொறுத்து உச்ச கிரகத்தின் நல்ல பலன் அமையும்.

நீச்சம் பெற்ற கிரகங்கள்

உச்சத்தின் எதிர்விளைவு நீச்சம். உச்ச கிரகங்கள் நன்மை செய்கின்றது என்றால் நீட்ச கிரகங்கள் தீமை செய்யும். ஆனால் சில இடங்களில் (லக்னத்திற்கு இத்தனையாவது வீடு என்ற கணக்கில்) நீச்ச கிரகங்கள் நன்மையும் செய்யும். நீச்சம் பெற்ற கிரகம் உள்ள ராசியின் அதிபதி ராசியிலோ அல்லது அம்சத்திலோ ஆட்சி,  உச்சம், லக்ன கேந்திரம் என்ற அமைப்பினை பெற்றால் அதுவே நீச்ச பங்க ராஜயோகம் என்று பொருள்.

 சூரியன்       துலாம் ராசியில் நீச்சம்

சந்திரன்      - விருச்சிகம்  ராசியில் நீச்சம்

செவ்வாய்  - கடக ராசியில் நீச்சம்

புதன்           மீன ராசியில் நீச்சம்

குரு             மகர ராசியில் நீச்சம்

சுக்கிரன்     -கன்னி ராசியில் நீச்சம்

சனி            - மேஷ ராசியில் நீச்சம்

ராகு           -விருச்சிக ராசியில் நீச்சம்

கேது          -ரிஷப ராசியில் நீச்சம்

மூலதிரிகோணம்

திரிகோணம் என்பதற்கும் மூலதிரிகோணம் என்பதற்கும் ஜோதிடத்தில் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் திரிகோணம் என்பது லக்னம் மற்றும் ராசியில் இருந்து எண்ணிவர முறையே 1,5,9 இடங்களாகும். ஆனால் மூலதிரிகோணம் என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆட்சி உச்சம் பெறும் அமைப்பை போன்று இந்த மூலதிரிகோண அமைப்பு ஏற்படுகிறது. அதாவது ஒரு கிரகத்திற்கு மூலதிரிகோண வீடு ஒரு வீடு மட்டுமே. ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் ஆகியவை ஒரு ஜாதகருக்கு நன்மை செய்வதில் ஒன்றை விட ஒன்று உயர்ந்தது.

இப்போது ஒரு கிரகத்தின் மூலதிரிகோண வீடு என்ன வென்று பாப்போம்:

சூரியன்          -    சிம்மராசி மூலதிரிகோண வீடு.

சந்திரன்            ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.

செவ்வாய்        மேஷ ராசி மூலதிரிகோண வீடு.

புதன்              -    கன்னி ராசி மூலதிரிகோண வீடு.

குரு                -   தனுசு ராசி மூலதிரிகோண வீடு.

சுக்கிரன்        -   துலா ராசி மூலதிரிகோண வீடு.

சனி                    கும்ப ராசி மூலதிரிகோண வீடு.

ராகு                -    ரிஷப ராசி மூலதிரிகோண வீடு.

கேது              -     விருச்சிக ராசி மூலதிரிகோண வீடு.

ஆக திரிகோணம் என்பது ஒரு வீட்டிற்கும் மூலதிரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கும் உண்டானது என்பது இப்போது புரியும்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. அவற்றின் குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை பலன் சொல்லப் பயன் படும்.

 

ஆண், பெண் ராசிகள் :

 

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். ராசிகளை ஆன், பெண் எனப் பிரிப்பதின் அவசியம் தெரிகிறது அல்லவா?

மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் இந்த நான்கு இராசிகளும் எந்த கிரகத்திற்கும் உச்ச பலத்தையும் தருவதில்லை, நீச பலவீனத்தையும் தருவதில்லை, இந்த இராசிகள் யாவும் நான்கு எதிர் திக்கு இராசி மண்டலங்கள் ஆகும்.

சிம்மம் இராசி - என்பது ராஜாவின் நாற்காலி அதில் ராஜாவான சூரியனுக்கு மட்டுமே உயரிய இடம்.

கும்பம் இராசி - என்பது இறைவன் வந்து குடி கொண்ட கலசம் எல்லாருக்கு நீர் தரும் பாத்திரம் அதனால்.

தனுசு இராசி - என்பது வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடம் அதில் குருவுக்கு மட்டுமே பக்குவமான இடம்.

மிதுனம் இராசி - என்பது ஆழ்ந்து கவனிக்கும் இராசி ஒரு நேரத்தில் ஒன்றை கவனிக்கும் போது மற்றொன்றுக்கு எப்படி உயரிய இடம் தரும்.

ராசிகளும் இடங்களும் -

1 .மேசம்

வேலூர் மாவட்டத்தின் மத்திய பகுதி, மேற்கு பகுதிகள், தர்மபுரி மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி

2. ரிசபம்

சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்

3 மிதுனம்

கடலூர், அரியலூர், நாகை, திருவாரூர்

4 கடகம்

தஞ்சை மாவட்டம்

5 சிம்மம்

சிவகங்கை , புதுக்கோட்டை -

6 கன்னி

தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி

7. துலாம்

திரு ெநல்வேலி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி ; விருதுநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதி.

8. விருச்சகம்

தேனி, திண்டுக்கல், மாவட்டத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதி, கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதி, ஈரோடு மாவட்டத்தின் தெற்குப் பகுதி.

9. தனுசு

கோவை மாவட்டத்தின் வடகிழக்கு பகுதி, ஈரோடு மாவட்டத்தின் மத்திய பகுதி.

10. மகரம்

நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்ட வடக்கு, சேலம் மாவட்டத்தின் வடமேற்கு, தர்மபுரி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி

11. கும்பம்

சேலம் மாவட்டத்தின் தெற்கு, நாமக்கல், திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள்; கரூர் மாவட்ட வடக்கு பகுதி

12. மீனம்

மதுரை, கரூர் தெற்கு பகுதி, திருச்சி மாவட்ட தெற்கு பகுதி, திண்டுக்கல் மாவட்ட கிழக்கு பகுதிகள் ஆகும்.

ஜோதிட அமுதம் வள்ளி மயில். நன்றி.

ராசிகளும் உலக நாடுகளும் ஃ....

மேசம்

இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர் லேண்ட், சிரியா, பிரான்ஸ், பெரு, போலந்து, ஜப்பான், பாலஸ்தீனம், லெபனான்.

 

ரிசபம்

அயர்லாந்து, பாரசீகம், ஹாலண்டு, ரஷ்யா | ஜார்ஜியா, பெர்சியா, வெள்ளை ரஷியா

 

மிதுனம்

 

பெல்ஜியம், வட அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, வேல்ஸ்,எகிப்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா

 

கடகம்

சைனா, நியுஜிலாந்து, அல்ஜீரியா,ஹாலண்டு, ஸ்காட் லேண்ட், மௌரிசியஸ் ,ஆப்க பிரிக்கா வடக்கு மற்றும் மேற்கு.

 

சிம்மம் ஃ

 

இத்தாலி, பிரான்ஸ், ருமேனியா, ஸிஸி வி ,

பொஹிமியா, ஆப்கானிஸ்தான், திராவிடம்

 

கன்னி

இந்தியா, துருக்கி, பிரேஸில், மேற்கு இந்திய தீவுகள், அஸிரியா, வர்ஜீனியா, கலிபோர்னியா, கிரேக்கம், பாபிலோனியா, மெஸ படோமியா, குர்திஸ்தான்

 

துலாம்

போர்ச்சுக்கல், ஜப்பான், திபெத், பர்மா, ஆஸ்ட்ரியா, இந்தோசைனா, சைனாவின் வட பகுதி, எகிப்தின் சில பகுதிகள், அர்ஜென்டைனா, இந்தியாவின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு

 

விருச்சிகம்

நார்வே, மொராக்கோ, அல்ஜீரியா , ஸ்வீடன், பிரேஸில், சிரியாவின் வட பகுதி, குயின்ஸ் & லாண்ட், ஜீட் லேண்ட், ட்ரான்ஸ்வால்

 

தனுசு

 

அரபு நாடுகள், மத்திய ஐரோப்பா ஆஸ்திரேலியா , ஸ்பெயின், ஹங்கேரி .

 

மகரம்

இந்தியாவின் சில பகுதிகள், அல்பேனியா , பல்கேரியா, கீரிஸ்.

 

கும்பம்

ஸ்வீடன், ஜப்பான், சூடான், ரஷ்யாவின் சில பகுதிகள், அபிசினியா, சிவப்பு ரஷ்யா, ேபாலந்து, ஸ்வீடன்

 

மீனம்

எகிப்து, சஹாரா போர்ச்சுக்கல், சிலோன்

சோதிட அமுதம் வள்ளி மயில்.

 

அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

 

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம்

இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும்

கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம்

10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

வக்ர அஸ்தமன கிரகங்களின் பலன்கள் புதன் சூரியனிடமிருந்து 28°பாகைக்கு மேல் நகராது என வானிலை சாஸ்திரம் கூறுகிறது ஒரு வருடத்தில் மூன்று தடவையாக செயல் படும் நமது ஜனன ஜாதகத்தில் ஏதாவது ஒரு கோளை பார்க்கவோ சேர்க்கையுரவோ செய்யும் அப்பொழு அந்தந்த கிரகங்களின் ஆதிபத்ய காரக தன்மைக்கு ஏற்ப பலன்கள் நடைபெறும் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் அடைந்தால் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பார்கள் தனது வயதுக்கு கிழ் உள்ள மணமகனை தேர்ந்துஎடுப்பார்கள் ஆண்கள் ஜாதகத்தில் சுக்ரன் வக்கிரம் அடைந்தால் திருமணம் நடந்து 6/7 வருடங்களுக்குள் தாம்பத்ய விருப்பம் இல்லாமல் போகும் ராகு கேது இவர்களை தவிர ஏனைய கிரகங்கள் சூரியனை நெருங்கும் போது அஸ்தமனம் அடைந்து விடுகிறது நிச ராசியில் எவ்வாறு கிரகங்கள் பலமிலந்து போகிறதோ அதே போல் அஸ்தமன கிரகங்களும் பலமிலந்து விடுகிறது தனது காரக ஆதிபத்ய பலன்களை செய்யாது சூரியன் ராகு சேர்க்கை அஸ்தமனம் என்று சொல்லமுடியாது சூரியகிரகணம் என்றும் சந்திரன் ராகு சேர்க்கை சந்திரகிரகணம் சூரியன் கேது சேர்க்கை சூரியகிரகணம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சூரியன் ராகு சேர்க்கை இருந்தால் அரசாங்காத்தை எதிர்ப்பது விபத்துக்கள் நடப்பது வெடி மருந்துகளால் விபத்துக்களை கூறிக்கும் புதன் சூரியனை நெருங்கும் புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது  வக்கிர புதன் சூரியனிடமிருந்து 12°பாகை தொலைவிலேயே அஸ்தமனம் அடைந்து விடுகிறது சூரியன் புதன் சேர்க்கை ஜாதகரின் புத்திசாலிதனத்தையும் அறிவு திறனையும் வளர்க்கும் என பராசார் கூறுகிறார்

வக்கிர அஸ்தமன கிரககளின் பலன்கள் நேற்றய தொடர்ச்சி பதிவு m.சரோஜினி 💐சந்திரன்12° செவ்வாய் 17° புதன் 14°குரு11° சுக்ரன் 10°சனி15°சூரியனை நெருங்கும் போதே அஸ்தமனம் ஆகிவிடும் அஸ்தமன கிரகங்களின் திசையில் தனது ஆதிபத்ய காரக பலன்களை சம்பந்தபட்ட கிரகங்கள் வலிமையற்று போகும் என சர்வார்த்த சிந்தாமணி கூறுகிறது  9க்குடையவர் அஸ்தமனம் அடைவது நிச ராசியில் இருப்பது ஏழ்மையை கூறிக்கும் அமைப்பாகும் சனி 6-8-12ல் நீசம் அடைந்தோ நீசராசியில் இருந்தால் விஷத்தால் ஆயுதத்தால் இட மாறுதாலால் தொழில்நஷ்டத்தால் தீமையான பலன்கள் நடைபெறும் புதன் வக்கிரகதியில் இருப்பின் அறிவு புத்தி கூர்மை கண்டு பிடிப்பு முயர்ச்சி தனக்குத்தனே பேசிக்கொள்வது பிறர்சொல்வதை நம்பாமல் தானே பிரச்னைகளின் காரணம் அறிந்து தீர்வு காண்பது புதன் அஸ்தமனம் ஆனால் சூரியனின் பலன்களை கிரகித்துக்கொள்வார் சூரியன் அஸ்தமனபுதன் சேர்க்கை புத ஆதித்ய யோகம் சித்திக்கும் இலக்கியம் நாவல் பத்திரிக்கையாளர் கவிஞர் சட்டநிபுணராக செயல்படவைக்கும் அமைப்பாகும் சூரிய புதன் சேர்க்கை 5ல் அமைவது மிகவும் சிறப்பை தரும் மேஷம் சிம்மம் மிதுனம் கன்னி ராசிகள் 5ம்மிடமாக அமைந்து சூரிய அஸ்தமன புதன் சேர்க்கை சிறப்பான பலன்கள் தரும் படித்தவராகவும் அரசு பணியில் மேலதிகாரியாக சமயோசிதமாக பேசுவார் கொள்கையில் பிடிப்பு இருக்காது 💐💐

 

      ஒரு ஜாதகத்தில் குரு தனது மூலதிரிகோணத்திலும், 2ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.

      இந்த அமைப்பை பெற்ற‌வர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார்.

மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து, சனி லக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் இந்த யோகத்திற்க்கு மகுட யோகம் என்று பெயர்

      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த‌ தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....

      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்

பாரிஜாத யோகம்

 

      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ, கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்

      இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.

பேரியோகம் ஜோதிடக்குறிப்பு

 

1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,

2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,

3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,

அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.

      இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல வழிகளில் வருமான‌ம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.

நன்மை செய்யாத அமைப்புகள்- ஜோதிடக்குறிப்பு

 

 ஒரு ஜாதகத்தில் சனியின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......

1) அதிக நன்மை தராத வேலை, அதிகவேலையால் பளு.

2) பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது

3) எதிரிகளால் தொல்லை

4) சகமனிதர்கள் ஒத்துழையாமை

5) நோய்களால் தொல்லை

6) திருமண முறிவு

7) தொழில் தொடர்புகள் முறிவு

போன்றவை ஏற்படலாம்...

வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில், 11ம் இடத்ததிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் கூடி லக்கினாதிபதிக்கு கேந்திரம் பெற வேண்டும், அவ்வாறு அமைந்தால் அது வித்யுத் யோகம் எனப்படும்.

      அந்த அமைப்பு உடைய‌ ஜாதகர் ஒரு உயந்தமனிதர், அன்பானவர், பண்பானவர், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர், பெரும் புகழுடையவர், பொருளுடையவர், அரசனுக்கு நிகரானவர்

நன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் குருவின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......

1) கடவுள் நம்பிக்கை குறையும்

2) ஆன்மீக எண்ணமே தவறு என்ற முடிவுக்கு வரலாம்

3) தான் என்கிற ஆகங்காரம் தலை தூக்கும்

4) மத நம்பிக்கை குறையும்

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......

      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌ பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.

      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.

      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌ சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.

      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.

எப்போது திருமணம்? 

 

ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்

1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்

2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.

3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)

4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்

5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்

6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்

7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்

8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்

9) ஏழரைச் சனி காலத்திலும்

10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்

11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்

 

 

இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.

      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்.

நன்மை செய்யாத அமைப்புகள்-4 ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் சந்திரனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 12ல் இருக்கும் கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......

1) எதிலும் ஒரு குழப்பமான நிலை, சரியாக முடிவெடுக்க முடையாத தன்மை.

2) எதிலும் அதிகமான அலைச்சல்,பெற்றோர்களிடம் இணக்கம் குறைந்து போதல்.

3) எல்லாவற்ரிலும் கவலை, சோர்வு.

4) ஏமாற்றம், நம‌க்குறியவர்கள் கூட நம்மை அரவணைக்கதது போன்ற உணர்வு.

5) எல்லாவற்றிலும் தவறான முடிவு எடுத்து, அதனால் பாதிக்கப்பெறுதல், இதனால் நிம்மதி குறைந்து போதல்.

 

      ஒரு ஜாதகத்தில் 6ம் இடத்து அதிபதி நீச்சம் அடைந்து, 10ம் இடத்து அதிபதி உச்சம் பெற்றால் அந்த யோகத்திற்க்கு பெயர் ஜெய யோகம் எனப்படும்.

      ஜாதகத்தில் இந்த ஜெயயோகம் உள்ள ஜாதகர், வாழ்க்கையில் நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளுடன், தோல்வி என்பதே இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வார்.

      அவர் தொடும் காரியமெல்லாம் வெற்றியிலேயே முடியும். கடன் என்பதே இருக்காது, அவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். வாழ்க்கையில் எதிலும் தடை என்பதே இருக்காது. வெற்றி மேல் வெற்றி தான்.

துர்யோகம் ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் 10ம் இடத்ததிபன் 6ம் இடம்,8ம் இடம் மற்றும் 12ம் இடத்தில் அமைந்தால் துர்யோகம் எனப்படும்.

1) வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த கடுமையான உழைப்பு தேவைப்படும். ஏனென்றால் ஒருவருக்கு 10ம் இடத்ததிபதி பலம் பெற வேண்டும் இல்லாவிட்டால் உழைப்புக்கு தகுந்த ஊதியமும், சரியான திறமைக்கேற்ற வேலையோ தொழிலோ அமையாது.

2) மற்றவர்களின் பார்வையில் மதிப்பு குறைந்தவராகவே காணப்படுவார். மேலே சொன்னபடி 10ம் அதிபதியின் மறைவால், அவர் எந்த சிறந்த விஷயங்களையும் செய்ய மாட்டார்.

3) மிகுந்த சுயநல வாதியாகவும், மற்றவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்பவர்களாகவும் இருப்பர்.

4) இவாறான இவர்களின் குணநலன்க‌ளால் இவர்களின் வாழ்கைக்கே இவர்கள் மிகவும் போராட வேண்டியதிருக்கும்.

5) பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தால் இவர்களுக்கு நன்மை.

6) வேறு எந்த யோகமும் இவர்களின் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், நல்ல கிரகங்கள் வலுக்காதிருந்தால், வேறு நன்மையான அமைப்புகள் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், இவர்கள் கூலித்தொழிலாளியாக வாழ வேண்டியதிருக்கும்.

7) அவ்வாறு பிரகிரகங்களின் உதவியால் நல்ல நிலையில் ஜாதகர் இருந்தாலும் இவர் நிலைக்கு மற்றவர்களுக்கு(இவர் நிலையில் உள்ள) கிடைப்பதைக் காட்டிலும் சமுதய மதிப்பு என்பது இவர்களுக்கு மிகக்குறைந்ததாகவே இருக்கும்.

      இதில் 12ம் இடம் மிகவும் குறைவான பலன்களை வழங்கக்கூடிய இடமாகும். சில இடங்களில் இவர்களுக்கு மதிப்பு கிடைக்கும்.

திரிலோச்சண யோகம் ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தால் அது திரிலோச்சண யோகம் எனப்படும்.

      இந்த யோகம் உடையவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், ஆயுள் நீளம் உடையவர்களாகவும், நல்ல வசதி படைத்தவர்களாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவர்.

      இந்த மூன்று கிரகம் மட்டுமல்லாது ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தாலே அந்த அமைப்பு விசேசமானதே! இவ்வாறு அமைதவர்கள் நல்ல அமைதியான‌ வாழ்க்கையை பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எந்த சக்தியாலும் தடங்கல்கள் விளைவிக்கமுடியாது.

நன்மை செய்யாத அமைப்புகள்-5 ஜோதிடக்குறிப்பு

 

      ஒரு ஜாதகத்தில் சூரியனின் தசை நடக்கும் போது சூரியனுக்கு 6ல் இருக்கும் கிரகம் தன்னுடைய புக்தியில் நன்மைகள் தாரா! அதன் புக்தியில் பலன்களாவன‌.......

1) உடல் நலக்குறைவு.

2) தன்னம்பிக்கை குறைந்துபோதல்.

3) பொருளாதாரத்தில் சற்று பின் தங்குதல்.

4) கடவுள் நம்பிக்கை குறைதல்.

5) பொதுவாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள்.

6) நற்பெயருக்கு களங்கங்கள்.

7) தந்தைக்கு உடல்ந‌லக்குறைவு.

தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு

      12ம் இடத்ததிபன் லக்கினத்தில் இருந்தாலோ, 12ம் இடத்ததிபன் கேந்திரத்தில் இருந்து லக்கினாதிபதி பார்வை பெற்றாலோ, 12ம் இடத்ததிபன் ஆட்சி/உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்றாலோ, 12ம் வீட்டில் சுபர் அமர்ந்தாலோ, 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ, 12ம் வீட்டில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம் அமைந்தாலோ, அந்த ஜாதகர் எந்த மாதிரியான இடத்தில் படுத்தாலும் உடனே தூங்கிவிடுவர், அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடப்பர்.

வியாதியுள்ள கணவன்/மனைவி ஜோதிடக்குறிப்பு

 

      7ம் அதிபதி 6ம் அதிபதி அல்லது 8ம் அதிபதியுடன் இணைந்து ஜாதகத்தில் ஏதொ ஒரு இடத்தில் அமைந்து சுபர் பார்வை அல்லது சேர்க்கை இல்லாவிடில் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.

      7ம் அதிபதி 6ம் அதிபதியுடனோ அல்லது 8ம் அதிபதியுடனோ பரிவர்த்தனை பெற்றால் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்

தெய்வபலம் ஜோதிடகுறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 9ம் இடத்தில் ச‌ந்திரன், புதன், சுக்கிரன், குரு, கேது போன்ற கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கையும், அதனால் தெய்வ பலமும் உண்டாகும். குறிப்பாக 9ல் சந்திரனிருக்கும் ஜாதகர் தெய்வ பலம் மிகுந்தவராக இருப்பர் அவருக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் தெய்வபலம் துணை புரியும்

காதல் திருமணம் ஜோதிடக்குறிப்பு

      7ம் இடத்திற்க்கு ராகு, செவ்வாய் சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்கிறது. அந்த ராகு, செவ்வாய் சம்பந்தத்துடன், 7ல் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் : வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை ஜோதிடக்குறிப்பு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடக்கிறது

      லக்கினத்தில் கேது,  7ல் ராகு, 10ல் புதன் எனும் அமைப்பு ஆண்களின் ஜாதகத்தில் இருக்குமானால், அவர்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மேல் இச்சை ஏற்படுகிறது. அவர்கள் விதவைக்கு வாழ்வளித்தால் வாழ்வு சுகப்படும்.

மகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு

 

      1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.

      2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.

      3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.

      4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.

      5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம் தேடுபவர்கள்.

      6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.

      7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.

      8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில் சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.

 

1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.

2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.

3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வர் எப்பொழுதும்.

4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.

5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.

6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.

7) புதன் கேது லாபத்தில்(11ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உத‌வுவதால் புண்ணியம் கூடும்.

8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.

9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உத‌வும்.

10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வீட்டில் இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும் அமைப்பு.

11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியும்.

சூரியன் தரும் சுகங்கள்

 

சூரியன் ஆட்சி, உச்ச பலத்துடன் சுபர் பார்வை சம்பந்தம்  பெற்று நின்றால் ஜாதகருக்கு கிடைக்கும் சுகங்களாவன:‍

1. ஜாதகருக்கு அரசு/அர‌சியல் தொடர்புகளால் லாபமுண்டு.

2. வி.ஐ.பிக்களின் தொடர்பு சுலபமாக கிடைக்கும், ஜாதகரும் வி.ஐ.பியாக திகழ‌முடியும்.

3. ஜாதகர் ஒழுங்கு நன்னடத்தை காரணமாக, பாரட்டுகளையும், நல்ல நல்ல வாய்ப்புகளையும் பெறமுடியும்.

4. ஜாதகர் தனது கெளரவம், ஆளுமைத்திறன் இவற்றை உணர்ந்து சமுதாயத்தில் தன்னை எல்லோரும் நல்ல விதமாக பேசுமாறு நடந்து கொள்வார்.

5. எதிரிக்கு அஞ்சமாட்டார், தனது வழியில் குறிக்கிடுபவர்களை பந்தாடுவார். வீரன், சூரன் என பெயர் வாங்குவார்.

6. ஆண்மையும் வீரமும் தரும் சூரியன், தனது வாழ்நாளில் எளியவர்களைக் காப்பாற்றுவார், தான தருமங்கள் செய்வார். ஆலய பணி, தெய்வகாரியங்களுக்கு உதவுவது என அனைத்து நல்ல காரியங்களும் தன்னால் இயன்றவரை செய்வார்.

சூரியன் ஜாதகத்தில் பகை, நீசம், கெட்டவர்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால்:

1. ஜாதகர் இம்சை அரசனாக மாறி மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் கான்பார்.

2. தனது சுயநலத்திற்க்காக உலக பாவங்கள், பாதகங்கள் அனைத்தையும் செய்வார்.

3. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யோக்கியனைப் போல் நடமாடும் மாகாநடிகனாக விளங்குவார்.

அதிர்ஷ்டசாலி1‍‍-ஜோதிடக்குறிப்பு

அனைத்து லக்கினத்தில் உதித்தவர்களுக்கும், லக்கினாதிபதி கேந்திர வீடுகளில் ஒன்றில் கெடாது இருக்க அதை 5க்கு உடையவர் லக்கினாதிபதிக்கு சப்தம ஸ்ப்தம ஸ்தானத்தில் இருந்து பார்க்கும்( அதாவது 1, 5க்கு உடையவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க) அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவார்.

அதிபுத்திசாலி-ஜோதிடக்குறிப்பு

மகரம் கும்பத்தில் புதனும் செவ்வாயும் இனைந்து நிற்ப்பது நல்லதல்ல. அவ்வாறு இனைந்து நின்றால், ஜாதகர் உலகில் உலாவி எல்லோரையும் விட நான் தான்  மகாபுத்திசாலி எனும் கர்வம் உடையவராக எல்லோரையும் கேலி செய்துகொண்டும், பிறரது செயல்களில் குற்றம் கண்டுபிடுத்துக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பார். தனது இந்த குண இயல்பால் விரோதிகளை நிறையவே தேடிக்கொள்வார்.

தொட்டது துலங்க ஜோதிடக்குறிப்பு

 

      ஒருவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், கெடாது நல்ல இடங்களில் இருக்க அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது அல்லது ஜீவனஸ்தானத்திற்க்கு சுபர் பார்வை, சுபர் சம்பந்தம் இருக்குமானால் ஜாதகர் தொட்டது துலங்கும். அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் நல்ல லாபம் பெறுவார். இவருக்கும் நிறைய ஊதியம் கொடுத்து மகிழ்விப்பார். ஜாதகர் சுயதொழில் செய்தாலும் உயர்வடைவார்.

     ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். ஜாதகர் திறமைசாலியாக இருந்தாலும் பெரிதாக ஏதும் சோபிக்க முடியாது. அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் சுமாரான‌ லாபம் பெறுவார். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் சுமாரான ஊதியம் பெறுவார். ஒரு இடத்தில் வேலை செய்யும் போது இவர் ப‌த்தோடு பதினொன்றாக இருப்பர். இவருக்கு மற்றவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் போது இவருக்கும் கிடைக்கும். வாழ்வு இவர் அதிர்ஷ்டக்கட்டை என்று நொந்து கொள்ளக்கூடிய விதமாகத் தான் இருக்கும்.

     ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை கொடியவர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் கொடியவருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். இவர்கள் எந்த இடத்திலும் வேலைக்கு ஒழுங்காக இருக்கமாட்டார். இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிக்கு நஷ்டம் தான் வரும். இவர்களை முதலாளி வேலையை விட்டு நீக்கி விடுவர் அல்லது ஊதியம் போதவில்லை என்று இவர்களாகவே வேலையை விட்டு நின்று விடுவர்.

இந்த மாதிரி அமைப்புடையவர்கள் நீச்சத்தொழில்கள் எனப்படுகிற பொருட்களை அழிக்கும் தொழிலை காண்ட்ராக்ட் எடுத்து செய்தால் சோபிக்கலாம்

நீச தொழில்கள்:

1. பழைய கட்டிடங்களை இடிப்பது

2. பழைய பாலங்களை இடிப்பது,

3. பாழடைந்து கிடக்கும் தோட்டம், துறவு இவைகளை சுத்தம் செய்யும் தொழில்

4. மருத்துவமனைக் கழிவுகளை அகற்றுவது போன்றவை.

      இவர்கள் இதைக் க‌ருத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் சோபிக்கலாம்.

தெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு

 

      பேச்சிலும் செயலிலும் தெளிவு இருந்தால்தான் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் மதிப்பார்கள்! வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக் கொள்ளமுடியுமல்லவா.

      தரும ஸ்தானங்கள் எனப்படுகிற 1,5,9க்கு உடையவர்களும் அந்த இடங்களும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால் உயர் எண்ணங்களுடன் தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அளவான ஆசைகள், அவற்றிட்க்கு ஏத்த திட்டமிட்ட உழைப்பு, பலருக்கு உத‌வுவதால் பலருடைய அரவணைப்பு எல்லாமே எளிதில் வசப்படும்.

      கீழ்கண்ட அமைப்பில் ஒன்றிரண்டு ஜாத‌கத்தில் இருக்குமானால் நீங்கள் தெளிவும் சந்தோசமும் மிக்க யோகசாலியாக விளங்க முடியும்.

1. ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் நல்ல விதமாக நிற்ப்பது.

2. லக்கினத்தில் குரு, 9ல் சூரியன், 5ல் செவ்வாய் நிற்ப்பது.

3. லக்கினத்தில் சூரியன், 9ல் செவ்வாய், 5ல் குரு நிற்ப்பது. மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு இவ்வாறு இருந்தால் தெளிவும் சந்தோச மிக்க வாழ்க்கை அமைய உதவும்.

      1,5,9க்குடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் பிரபல யோகமாக அமையும்.

      1,5,9க்குடையவர்கள் அவரவர் வீடுகளில் ஆட்சி பலத்துடன் நின்றாலே யோகமுண்டு.

      9ம் இடம் திரிகோண ஸ்தானம் என்பதால் அங்கு நிற்க்கும் கெட்டவர்களும் நல்லது செய்வர் என்ற விதிக்கேற்ப்ப ஸ்திர லக்கினகாரர்களுக்கு 9ம் இடம் பாதக ஸ்தானம் ஆனாலும் அங்கு அமர்ந்த 9ம் அதிபதி யோகாதிபதியே என்றே கருதவேண்டும். யோகமே செய்வார்.

      1,5,9க்குடையவர்கள் கேந்திர திரிகோணங்கள், தனலாப ஸ்தானங்களில் கெடாது அமர்ந்திருந்தால் தெளிவும் சந்தோசமும் மிக்க வாழ்க்கையே அமையும்.

      1,5,9க்குடையவர்கள் 6,8,12ல் மறைந்து விட்டால் ஜாதகர் குழப்பவாதியாகத் திகழ்வார். சின்ன சின்ன விசய‌ங்களில் கூட முடிவெடுக்க திண‌றுவர். சிறு வயதில் பெற்றோரும், வாலிப வயதில் மனைவியும், முதுமையில் பிள்ளைகளும் வழிகாட்டியாக வேண்டும்.

      1,5,9க்குடையவர்கள் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தாலும் பகை, நீசம் பெற்று கெட்டிருந்தாலும் அல்லது 1,5,9க்குடையவர்கள் கெட்டு சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் சில சமயம் ஜாதகர் குழப்பவாதியாகவும், சில சமயம் தெளிவானவராகவும் காட்சி த‌ருவார்.

      1,5,9க்குடையவர்கள் ஜாதகத்தில் கெட்டு, 1,5,9ம் இடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டால் தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

      மேலும் ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் மூவருமே சுத்தமாக கெட்டிட வாய்ப்பில்லை. ஒருவர் நன்றாக அல்லது ஒரு இடம் நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

11ம் இடத்ததிபதி

லாப ஸ்தானத்தில் லாபாதிபதி ஆட்சி பலத்துடன் விளங்கினால் அவர் பூர்வபுண்ணிய ஸ்தானத்தினை பார்ப்பார். தொழிலில் மிதமான லாபம், சகோதரர்கள் ஆதரவு, அமைதியான வாழ்க்கை ஜாதகருக்கு அமையும். வாழ்வில் படிப்படியான முன்னேற்றத்தினை அடைவார். தெய்வீக வழிபாடுகளை ஜாதகர் சிறப்பாக செய்வார். குடும்ப கெளரவம் மேண்மையாக இருக்கும்

தொழிலில் நஷ்டம் ஜோதிடக்குறிப்பு

லாபதிபதி 8ல் மறைந்தால் சுயதொழில் உதவாது. அடிமைத்தொழில் செய்யும் இடத்திலும் பிரச்சனைகள் வரும். பொறுமை காக்க வேண்டும், நல்ல வேலை அமைந்துவிட்டால் அதனை நல்ல முறையில் உழைத்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பணத்தை தொழிலில் முதலீடு செய்வதை விட நீண்டகால் வங்கி டெபாசிட்டுகள் அல்லது நிலபுலன்களில் முதலீடு செய்வது நல்லது.

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்1

 

      விரயாதிபன் எனில் 12க்குடையவன், விரயாதிபன், விரயஸ்தானம் என்றாலே நம்மில் பலர் முகத்தை சுளிக்கிறோம். ஆனால் முன்னோர் விரயஸ்தானத்தை சுகசயன ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்று கூறிச் சென்றுள்ளனர்.

      விரயாதிபன் என்று சொல்லக்கூடிய 12க்குடையவன் உச்சம் பெற்று நிற்க, அவனை பாக்கியாதிபன் என்று சொல்ல்க்கூடிய 9க்குடையவன் பார்த்தால் ஜாதகர் அநேகசுகங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்லாம்.

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி குரு சுக கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியதிபதியும் ஆகிறார். அவர் கடகத்தில் உச்சம் பெறுதலே வாழ்வில் எல்லாசுகங்களையும் தரும்.

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் ஆகி அவர் 9ம் இடமான பாதகஸ்தானத்தில் உச்சமடைவார். அவரை 9ம் அதிபதி சனி பார்ப்பதை விட குரு அல்லது லக்கினாதிபதி பார்ப்பது கூடுதல் நல்லது. சனியும் பாக்கிய, யோக, பாதகதிபதி என்பதால் யோகம் சுமாராக அமையும்.

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன் அவர் 10ம் இடமான கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். அவரை 9க்குடைய சனி பார்ப்பது யோகம் தரும் என்றே கருத வேண்டியுள்ளது.

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன் அவர் 3ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி குரு பார்ப்பது யோகம் தான்.

      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சந்திரன் அவர் 10ல் உச்சம் பெற அவரை பக்கிய பாதகதிபதி செவ்வாய் பார்த்தால் சந்திரமங்கள யோகம் எற்ப்படுகிறது. பிரபல யோகமே.

      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சூரியன் அவர் 8ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி சுக்கிரன் பார்ப்பது யோகம் தான்.

      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன், அவர் விரயத்திலேயே உச்சம் பெற 9க்குடையவரும் அவரே என்பதால் யோகபலன்க‌ளைத் த‌ருவார். லக்கினாதிபதி குருவின் பார்வை அவருக்கு கிடைகுமானால் யோகம் சிறப்பாக இருக்கும்.

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்2

 

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன், அவர் 5ம் இடமான மீனத்தில் உச்சம் பெறுவார். அவரை பாக்கியதிபதி சந்திரன் பார்த்தாலே யோகம் பிரமாதமாக இருக்கும்.

      தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் அவர் 2ல் உச்சம், அவரை பக்கியதிபதி சூரியன் நண்பர் பார்த்தாலே யோகம் நன்றாக இருக்கும்.

      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி லக்கினாதிபதி சனியே ஆகிறார், அவர் 9ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியாதிபதி சுக்கிரன் பார்க்கும் போது தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறது. பாதக யோகதிபதி சுக்கிரனால் நல்ல பலன்களே நடக்கும் என்பதில் ஐயமில்லை.

      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சனி, அவர் 8ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியதிபதி செவ்வாய் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் யோக பலன் கிடைக்கும்.

      எனவே விரயாதிபன் உச்சம் பெற்று, பாக்கியதிபதி பார்வையை பெறுவது யோகமே. விரையாதிபன் மறைவு ஸ்தனங்களில் இருப்பதை விட, உச்சம் பெற்று சுபர் பார்வை பெறும் போது நல்ல பலன்கள் கூடுதலாக நடக்க வாய்ப்பு அதிகம்

5ல் சூரியன்

சூரியன் 5ல் நின்றால் பிள்ளைகளால் நிம்மதி, சந்தோசம் கெடும். சக்திக்கு மீறிய செலவுகளை பிள்ளைகள் உருவாக்குவர். அனுதினமும் சூரிய நமஸ்காரமும், சிவனை ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து வழிபடவேண்டும்

இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

சுகமான, இன்பமான வாழ்க்கை அமைய கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்குரியவர்களுக்கு 6,8,12க்கு உரியவர்கள் பார்வை சேர்க்கை கூடாது. மேலும் 6,8,12ம் பாவங்களில் கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்கு உரியவர்கள் மறைந்து விடக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் நல்லவர்கள் மறைந்தால் வாழ்க்கையில் சாண் ஏற முழம் சறுக்குகிறது எனும் நிலை தான் உருவாகும்.

குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு

 

      ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........

      லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

      2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.

      3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.

      4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.

      5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.

      6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.

      7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.

      8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.

      9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.

      10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.

      11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.

      12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.

       இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

ஜோதிடக்குறிப்பு

 

 

      வெளிநாட்டில் படிப்பத‌ற்காகவும், தொழில் அல்லது வேலை நிமித்தமாகவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் செல்லுவோர் ஜாதக‌ அமைப்பு பற்றி ஒரு சிறு அலசல்.

 

1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாது, வலுவாக(ஆட்சி, உச்சம், நட்பு, சுபர் பார்வை அல்லது சேர்க்கை) இருக்க வேண்டும்.

 

2. குரு, சனி( வாயு கிரகங்கள்), சந்திரன், சுக்கிரன்( நீர் கிரகங்கள்) ஆகியோர் கெடாது நீர் ராசிகளில்(கடகம், விருச்சிகம், மீனம்) அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

 

3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாடு சென்று வரலாம்.

 

4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆமிடங்கள்(3-9,6-12,5-11,1-7 என அமர்ந்திருப்பது) நின்றாலும் வெளிநாட்டு யோகம் அமையும்

லாபதிபதி யார்? ஜோதிடக்குறிப்பு

      சரலக்கினகாரர்களுக்கு(மேஷம், கடகம், துலாம், மகரம்) லாபாதிபதியாகிரவர் பாதகாதிபதியாவதால் நன்மைகளை செய்வதில்லை. பாதகாதிபதி எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் பெரும் நன்மைகளை செய்வதில்லை.

      மற்ற லக்கினகாரர்களுக்கு.......

      ரிஷப லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி குரு அவர் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு பகை, குருவுக்கு மற்றொரு அதிபத்தியம் 8ம் இடம் ஆதலால் அவருடைய திசா புத்தி காலங்களில் நன்மைகள் கிடைப்பதில்லை.

      மிதுன லக்கினகாரகளுக்கு லாபாதிபதி செவ்வாய் லக்கினாதிபதி புதனுடன் பகை, செவ்வய்க்கு மற்றொரு ஆதிபத்தியம் 6ம் இடம் ஆதலால் நன்மைகள் செவ்வாயும் தனது திசா புத்தி காலங்களில் அளிப்பத்ற்கில்லை.

      சிம்ம லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி புதன் லக்கினாதிபதி சூரியனுடன் நட்பு அதலால் மற்ற லக்கினகாரர்களை விட இந்த லக்கினத்திற்க்கு மட்டும் பலன் பரவாயில்லாமல் இருக்கும்.

      கன்னியா லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சந்திரன் இவரும் அமர்ந்த இடத்தைப்பொறுத்து சாமன்ய பலன்களை அளிப்பார். ஆனாலும் லக்கினதிபதியுடன் அவ்வளவாக சுமூகமான உறவு இல்லை என்பதால் பரவாயிலாமல் பலன்கள் கிடைக்கும்.

      அதே போல் துலாலக்கினகாரர்களுக்கும் ஒரே அத்பத்தியம் உள்ள சூரியன் லாபாதிபதியானாலும், லாபதிபதியே பாதகாதிபயாவதாலும், லக்கினாதிபதி சுக்கிரனுக்கு சூரியன் நல்லவனல்ல என்பதாலும் பெரும்பாலும் துலாலக்கின காரர்களுக்கு சூரியனின் காரகங்கள் கிடைப்பதில்லை. மூத்த சகோதரர்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அவர்களால் குடும்பத்திற்க்கு பிரயோஜனம் இருக்காது. த‌ந்தை மகனின் பாசங்கள் காரணத்திற்க்கு உட்பட்டே இருக்கும், காரணம் முடிந்தவுடன் பாசமிருக்காது. ஆதலால் இவர்களுக்கு சூரியன் நன்மையை செய்வான் என்று நம்புவதற்கில்லை.

      விருச்சிக லக்கினகாரர்களுக்கு புதன் அஷ்டமலாபாதிபதியாகிரார். லக்கினாதிபதி செவ்வாயுடன் பகை ஆத்லால் இவர்களுக்கும் லாபாதிபதியால் நன்மையில்லை.

      த‌னுசு லக்கினகாரர்களுக்கும் லாபதிபதி சுக்கிரன் ஆறாம் ஆதிபத்தியம் வருவதாலும், லக்கினாதிபதியுடன் சுமூகமான நிலையில்லாததாலும் சுக்கிரன் தனது திசா புத்திகாலங்களில் நன்மைகள் செய்வார் என்பத‌ற்கில்லை.

      கும்ப லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி குரு லக்கினாதிபதி சனியுடன்  பெருத்த பகையில்லை, ஆகையால் பரவயில்லாத் பலன்களை அளிப்பார்.

      மீன லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சனி விரயாதிபதியும் ஆவதால் லாபம் நிஷ்பலம் ஆகும். ஆனால் பயப்படுவதிற்க்கு ஒன்றும் இல்லை.

      மொத்தத்தில் லாபாதிபதியால் எந்த லாபமும் இல்லை. எதனால் என்றால்...

லக்கினத்திக்கு மூன்றுக்குடையவன் ஒரு பாபி,

 

லக்கினத்திற்க்கு ஆறாமிடத்திர்குறியவன் மூன்றாம் இடத்ததிபனை விட பாபி,

 

ஆறுக்கு ஆறாம் இடத்ததிபன் 11ம் இடத்திற்குறியவன் இவர்கள் இருவரையும் விட பாபி.

 

ஆதலால் 11ம் இடத்ததிபனை லாபாதிபன் என்று எப்படி சொல்லுவது?

குறைகூறும் மனைவி யாருக்கு? ஜோதிடக்குறிப்பு

 

      ஆண்களின் ஜாதகத்தில் 7ம் இடத்ததிபன் மிதுனம்/கன்னியில் கெட்டு நிற்க அல்லது 7 அதிபன் புதனாக இருந்து பகை நீசம் பெற்றோ அல்லது பாவிகளுடன் இனைந்தோ கெட்டு நின்றால்,

      அவர்களுக்கு வாய்த்த மனைவி வாயாடிகளாகவும், வெட்டிப் பேச்சு பேசுபவர்களாகவும், கணவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லிக்கொண்டு கண‌வனை வார்த்தைகளால் வறுத்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்து தின்று கொண்டு இருக்கிறவர்களாகவும்.

       எனக்கு வீட்டு வேலையே சரியாக இருக்கிறது, நான் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும். அந்த வீட்டு வேலையையும் சரிவர செய்யாமல் பேச்சு செயல் அனைத்திலும் பதட்டம் கொண்டு செயல் படுபவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு சந்தோசம் இல்லை நீயும் சந்தோசமாக இருக்ககூடாது என்று செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.

      இவர்கள் முழுக்க முழுக்க கணவனை குறைகூறிக்கொண்டு இருந்தாலும், இவர்களை சமூகம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இந்த ஜாதகர்கள் சகித்துக் கொண்டு வாழ்பவர்களாக இருப்பதைப்பார்க்க முடிகிறது. இந்த ஜாதகர்களின் வாழ்க்கை தாமரை இலை தண்ணிர் போல் அமையும் வாழ்க்கை என்று குறிப்பிடலாம் அல்லவா?

உள்ளங்கவர் கள்வன் ஜோதிடக்குறிப்பு

 

      சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகு இருந்து, அவரை பாவிகள் பார்க்கும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், ஜாதகர் வெளிப்பார்வைக்கு பரம யோக்கியவானாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருப்பர். ஆனால் உள்ளே முழுவதும் கள்ளத்தனமானவர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருப்பர். பேச்சும் செயலும் நல்லது செய்வது போல் இருக்கும், ஆனால் இவர்களை நம்பினவர்களை சீர்குலைக்கும் போக்கு இவர்களது செயல்களில் மறைந்திருக்கும். பிசினஸ் பார்ட்னர்களை ஏமாற்றிக் கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பர்.

      இதே போல் சுகஸ்தானத்தில் மற்ற பாபகிரகங்கள் இருந்து பாபகிரகங்கள் பார்த்தாலும் இதே நிலை தான், அதாவது ஜாதகர் ஒழுக்ககுறைவானவராக மிகுந்த கள்ளம் நிறைந்தவராக இருப்பார்.

கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு

 

 

பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

 

      இவ்விச‌யத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

 

      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 1

 

      முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........

நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான‌ வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.

 

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும்.

9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்

 

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

 

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

 

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான‌ ராஜயோக அமைப்பு 2

 

      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் சுபர்கள், இவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இனைந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம், திரிகோணம் பெற்றாலோ முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும். லக்கினத்தில் குரு, 4ல் செவ்வாய் எனும் அமைப்பு சிறப்பான யோகபலனைத் தரும்.

 

      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். 1,2ம் இடங்களில் அல்லது 9,10ம் இடங்களில் புதன் சுக்கிரன் இனைந்து நிற்ப்பது, 2, 9ல் சுக்கிரன் மட்டும் தனித்து நின்றாலும் முதல் நிலை ராஜயோகம் சிறக்கும்.

 

      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,5க்குடைய சனி நல்லவர். 9, 10க்குடைய புதனும், சுக்கிரனும் நல்லது செய்வர், ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று, புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் முதல் நிலை ராஜயோகத்தினை சிறப்பாக அனுபவிப்பார்.

 

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் மிக நல்லதைச் செய்வர். இவர்களுக்கு தர்மகருமாதிபதி யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம் இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலே ஜாதகர் சிறப்பான பலன்களை அனுபவிப்பார். சூரியன் சந்திரன் 9,10ல் ஆட்சி அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் சந்திரன் அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் குரு மிகச்சிறப்பைத் தரும்.

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 3

 

 தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன் நல்லவர்கள் இவர்களில் இருவர் ஆட்சி உச்ச பலத்துடன் நின்றாலே போது முதல் நிலை ராஜயோகம் அமையும்.

 

      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்படுமால் முதல் நிலை ராஜயோகம் அமையும்.

 

      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் நல்லவர்கள். செவ்வாய் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்பட்டாலும். அல்லது மூன்று நாயகர்களில் ஜாதகத்தில் ஏதேனும் இருவருக்கு சுபத்துவ சம்பந்தம் ஏற்ப்பட்டாலும் முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.

 

      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி குரு, பாக்கியாதிபதி செவ்வாய் ஆகிய இருவரால், தருமகருமாதிபதி யோகமோ, அல்லது குருமங்கள யோகமோ, 5ம் அதிபதி சந்திரனால், குரு சந்திரயோகமோ, சந்திரமங்கள யோகமோ ஏற்ப்பட்டால் முதல் நிலை ராஜயோகத்தினை பூரணமாக அனுபவிக்கலாம்.

12ம் இடம் ஜோதிட‌க்குறிப்பு

 

      12ஆம் இடம் நித்திரைக்கான இடம். 1, 2 என்று 12 வீடுகள் இருக்கிறது. 1 லக்னம், உடல், தோற்றம் இதெல்லாம் அடங்கும். 2ஆம் இடம் வாஸ்து, குடும்பம் என்று சொல்கிறோம். இதுபோல 12ஆம் இடம் சயனத்தானம். இந்த சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும்.

      சயனத் தானத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இந்த மாதிரியான கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. கோழித் தூக்கம் என்று சொல்வார்களே அந்த மாதிரியான அமைப்புகள் இருக்கும். இதை ஜாதக அமைப்பை வைத்து கண்டுபிடிக்கலாம்.

      இவர்கள் சரியாக உறங்குவார்களா, நிம்மதியா உறங்க முடியாதா? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம். அதனால், இந்த 12ஆம் இடமான சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால் அவர்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வார்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

      பொதுவாக சந்திரன் உடலிற்குரிய கிரகம். இந்த சந்திரன் சனி, ராகு மாதிரியான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நிம்மதியான தூக்கம் வரவே வராது. சந்திரன் சனி, ராகுவுடன் சேர்ந்திருந்தால் சிறு வயதில் ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இதை நடுநடுவில் நினைத்து நினைத்து தூக்கம் கெட்டுப்போய் பரிதவிப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புகளும் உண்டு.

      இதேபோல பார்த்தீர்களென்றால், 12இல் செவ்வாய், 6க்குரிய கிரகங்கள் இருந்தாலும் ஏதேனும் கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கும். 12இல் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் தரையில் படுத்து உறங்குதல், சரியான படுக்கை இல்லாமல் போவது, காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து உறங்குதல், உட்கார்ந்த நிலையில் தூங்குதல் இந்த மாதியான பாதிப்புகளும் உண்டாகும்.

      அதனால் இந்த சயனத்தானமான 12ஆம் இடம் மிகவும் முக்கியமான இடம். இந்த 12ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால்(குரு,சுக்கிரன்ம, புதன்), “படுத்தால் தூக்கம் வருதுங்க, ஒன்றும் பிரச்சனை இல்லைங்க, நிறைய பேர் கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தூக்கம் இல்லாம தவிக்கிறார்கள். அந்தப் பிரச்சனை எனக்கு இல்லைங்கஎன்பார்கள்.

7ல் நீச்ச கிரகம்? ஜோதிடக்குறிப்பு

 

      பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு எதிலுமே மனத்திருப்தி இல்லாத நிலை காணப்படும்.

      ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் எந்த கிரகம் நீச்சமடைந்தாலும், ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கைத் துணை மனதிற்கு பிடிக்காமல் போகும். ஆனால் உண்மையிலேயே அந்த பெண்/ஆண் சிறப்பான குணநலன்களையும், அழகையும் பெற்றிருப்பர். இவரது மனதிற்கு அப்படித் தோன்றும் நிலை காணப்படும்.

      தனக்குப் பார்த்த பெண் சிறப்பாக படித்திருந்தாலும், குறிப்பிட்ட கல்லூரியில் படித்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று அந்த ஜாதகர் கருதுவார். இதன் காரணமாகவும் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்படும். 7இல் நீச்ச கிரகம் இருப்பதும் இதனை உணர்த்துவதற்காகவே.

      எனவே, 7இல் நீச்ச கிரகம் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு (படிப்பு/பொருளாதாரம்) குறைந்த இடத்தில் குணத்தில் உயர்ந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

      பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகம் இருப்பவர்கள் மனதளவில் திருப்தியடைய முயல வேண்டும். வாழ்க்கைத் துணை வசதி குறைவாக இருந்தாலும் நல்ல ஒழுக்கமான, படித்த ஆண்/பெண் ஆக இருந்தால் உடனே திருமணத்தை முடித்துவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.

7ம் இடத்தில் சனி? ஜோதிடக்குறிப்பு

 

      பொதுவாகவே ஏழாவது வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில் எந்த லக்னத்திற்கு 7ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

      உதாரணமாக ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். ரிஷபத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

      ஏனென்றால் அனுஷம் சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். இதன் காரணமாக அனுஷ நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி 7இல் இருந்தால் அதிகம் படித்த, தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.

      இதேபோல் மிதுனம், கன்னி ஆகிய லக்னத்திற்கும் 7இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும். கடகம், சிம்ம லக்னத்திற்கு 7இல் சனி இருப்பது (சொந்த வீட்டில் உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.

      ஆனால் மேஷ லக்னத்திற்கு 7இல் சனி இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.

      பொதுவாக 7இல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.

      எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

      ஒருவருக்கு 7இல் சனியுடன், குரு, புதன் போன்ற சில சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பலன்கள் வேறுபடுமா? 7ல் சனி இருந்து அதனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர்.

  8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வ‌தால் பலன் ஜோதிடக்குறிப்பு

 

      பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்என வேதங்கள் கூறுகின்றன.

      ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

      எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.

      சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.

      உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

  கண்களில் கோளாறு? ஜோதிடக்குறிப்பு

 

      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறு, நோய்  போன்றவற்றை கணிக்க வேண்டும். 2ம் வீடு வாலது கண்ணையும், 12ம் வீடு இடது கண்ணையும் குறிக்கும். கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க வேண்டும்.

      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள், 6,8,12ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்.

      ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை போன்றவை ஏற்படும், அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண் போன்றவை ஏற்ப்படும்

  லக்கினப்படி கோடீஸ்வரயோகம் அமையும் வாய்ப்பு1

 

1) மேஷ லக்கினதில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஜாதகத்தில் பிரகாசித்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.

2) ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு  சனி நட்பு நிலையில் நல்லவர்கள் சம்பந்தம் பெற்றிருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.

3) மிதுன லக்கினத்தில் உதிதவர்களுக்கு புதன், சுக்கிரன் ஜாதகத்தில் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் ஆக முடியும்.

4) கடக லக்கினத்தில் குரு, செவ்வாய் பலம் கோடீஸ்வர யோகம் பெற உதவும்.

5) சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர்களது சுபத்துவ சம்பந்தம் கோடீஸ்வரர் ஆக உதவும்.

6) கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் உச்சம், சுக்கிரனின் சுபத்துவ சம்பந்தம் பெற்று வலுவுடன் விளங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

  லக்கினப்படி கோடீஸ்வர யோகம் 2

 

7) துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் சிறந்து விளங்கினாலே கோடீஸ்வரர் ஆக முடியும்.

8) விருச்சிக‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரிய சந்திரர்கள் பிராகாசிப்பதைப் பொறுத்து கோடீஸ்வர யோகம் அமையும். குரு பலம் மற்றும் குரு பார்வை அதில் விசேட சிறப்பைத்தரும்

9) தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம், 10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரு இடங்களாவது குரு பார்வை பெறுவது மற்றும் சூரியன் புதன் குரு பார்வை பெற்று சிற‌ப்பான இடங்களில் இருந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.

10) மகர‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் யோகம் அமையும்.

11) கும்ப‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் சிறந்து விளங்குவதை பொறுத்து கோடீஸ்வரர் யோகம் ஏற்படும்.

12) மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்ல விதமாக அமைந்து, நல்ல இடங்களைப் பார்ப்பது மற்றும் செவ்வாய் பலத்தினால் கோடீஸ்வர யோகம் அமையும்.

  12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு

முதல் பாவம்:

      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் பாவம்:

      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

மூன்றாம் பாவம்:

      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

நான்காம் பாவம்:

      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

ஐந்தாம் பாவம்:

      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி குழந்தைகள் பிறப்பது எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.

ஆறாவது பாவம்:

      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

ஏழாவது பாவம்:

      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.

எட்டாவது பாவம்:

      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

ஒன்பதாம் பாவம்:

      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

பத்தாம் பாவம்:

      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

பதினொன்றாம் பாவம்:

      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.

பன்னிரண்டாம் பாவம்:

      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

 புத்திர பாவம்

 

 

குழந்தை செல்வம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை முழுமை பெற வைப்பதாகும். திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் அடுத்து எதிர்பார்ப்பது ஓரு குழந்தை செல்வத்தைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை தனக்கென ஒரு வாரிசு உருவாவதையே பெரிய பாக்கியமாகக் கருதுகிறார். அவரவர் சக்திக்கேற்ப குழந்தையை நல்லபடி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். யாருமே தங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள் நிறைய பேர் உண்டு.

ஜோதிட ரீதியாக நாம் ஆராய்கின்ற போது யாருக்கு சிறப்பாக குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை பாக்கியமே இல்லாதவர் யார் என்பதை கண்டுபிடித்து விடலாம். குறிப்பாக ஒருவரின் 5ம் பாவமானது பலமாக அமைந்திருந்தால் குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.

ஜோதிட ரீதியாக புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும். அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.

  ஆண் வாரிசு

நவ கோள்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று 5ல் இருந்தாலும் 5ம் அதிபதியுடன் இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக் கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேற்கூறிய பாவங்களில் குரு அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் வாரிசு உண்டாகும்.

பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரன் சந்திரன் 5ல் வலுவாக அமைந்தாலும் 5ம் அதிபதியாக சுக்கிரன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல இரட்டை படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் 5ம் அதிபதி அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகத்தைக் கொடுக்கும்.

  சர்புத்ரபாக்யம்

சர்புத்திர பாக்கியம் யாருக்கு அமையும் என்று பார்த்தால் 5ம் பாவத்தில் ஆண் கிரகங்களும் பெண் கிரகங்களும் இணைந்து அமைந்திருந்தால் சர்புத்திர பாக்கியமான ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உண்டாகும். 5ம் அதிபதி ஆண் கிரகமாக இருந்து பெண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் பெண் கிரகமாக இருந்து ஆண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் சர்புத்திர பாக்கியம் அமையும்.

புத்திர ஸ்தானமான 5ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி

காலங்களிலும், 5ம் அதிபதி மற்றும் 5ம் அதிபதி சாரம் பெற்ற தசா புக்தி காலங்களிலும், குரு மற்றும் குரு சாரம் பெற்றுள்ள தசா புக்தி காலங்களிலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும். சனி, ராகு, கேது, புதன் போன்ற கிரகங்கள் 5 ஆம் வீட்டில் அமைந்திருந்தாலும், 5ம் அதிபதியாக இருந்தாலும் 5ம் அதிபதி நீசம் அஸ்தங்கம் பெற்றாலும் ராகு கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம் உண்டாவதில் தடை ஏற்படுகிறது. அதுபோல சந்திரனுக்கு 5ல் பாவிகள் இருப்பதும் 5ம் அதிபதி பலவீனம் அடைவதும் புத்திர தோஷமாகும். 5ம் வீட்டிற்கு இருபுறமோ, குருவுக்கு இருபுறமோ பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகிறது.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு பகவானையும், சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின் தசா புக்திகள் நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும். கருச்சிதைவு, கருத்தறிக்கத் தடை ஏற்படும்.

ஜெனன காலத்தில் 5ம் இடம் புதனின் வீடான மிதுனம், கன்னியாகவோ, சனி வீடான மகரம் கும்பமாகவோ இருந்து அதில் சனி மாந்தி அமையப் பெற்று, புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருந்தால் தத்து புத்திர யோகம் அதாவது பிறருடைய குழந்தையை தத்து எடுத்து வளர்க்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் இடம் சுப கிரகங்களால் சூழப்பட்டு குரு பகவான் வலுவாக அமையப் பெற்றாலும், 5ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கை மற்றும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் அமையும் கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருந்தாலும் பெருமையையும், உயர்வையும் அடைய முடியும்.

அதுவே 5ம் அதிபதி பகை பெற்றோ 6, 8, 12களில் மறைந்தோ, பாதக அமையப் பெற்றோ, ராகு சனி சாரம் பெற்றோ, பாதகாதிபதி சாரம் பெற்றோ குரு பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றோ இருந்தால் புத்திரர் அனுகூலம் இருக்காது. தேவையற்ற பிரச்சனைகளையும் வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

  இந்த வாரம் நாம் ஐந்தாம் பாவகம் ஆய்வு செய்வோம்.

 

ஐந்தாம் பாவகத்தில் குழந்தைகளின் முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்கள், முற்பிறப்பில் செய்த நல்வினைகள், மந்திர சாஸ்திரங்களும், அதிர்ஷ்டம் , மற்றும் சாதகனின் பொழுது போக்கு விசயங்களை அறியலாம் .

மேலும் சாதகனின் அறிவை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்,

சாதகனின் காதலை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்

இந்த பாவகத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அதன் காரகம் சம்ம்நதபட்ட அறிவு ஜாதகனுக்கு கிடைக்கும்

இந்த பாவக அதிபதி கெட்டுவிட்டால் பூர்வீக சொத்து கிடைக்காது

இந்த பாவகதில் ராகு, கேது நின்றாலும் புத்திர ஸ்தானம் பாதிக்கும்.

சாதகனின் காதல் ஸ்தானாதிபதி இவர் தான் இந்தி அதிபதி ஆறில் போனால் காதல் பிரச்சனை ஆகும் ,எட்டில் போனால் காதலால் அவமானபடுவான்

வளர்ச்சி ஸ்தானமான பத்து, பதினொன்றில் போனால் காதல் வெற்றி அடையும்

ஐந்தாம் அதிபதி ஆருக்கு போனால் பூர்வீக சொதினில் ,சண்டை, சச்சரவு வரலாம்,

ஐந்தாம் பாவ அதிபதி நாலுக்கு போனாலும் ஜாதகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்காது

ஐந்தாம் பாவ அதிபதி ஆறாமிடம் போனாலோ அல்லது எட்டாம்மிடம் போனாலோ நாலாம் மிடம் போனாலோ குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்

தனித்த குரு ஐந்தில் நின்றாலும் புத்திர பாக்கியம் தடைபடும்

ஐந்தில் சனி செவ்வாய் நின்றாலும் பிரச்சனை தான்

இனி ஐந்தாம் பாவகத்தில் மற்ற கிரகங்கள் நின்றாள் என்ன பலன் என்பதை கொஞ்சம் பாப்போம்

ஐந்தாம் மிடம் சூரியன் நின்றாலோ  -  ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான் சிறந்த அறிவு படைத்தவனாக இருப்பான்

 ஐந்தாம் மிடம் சந்திரன்  நின்றாலோ

ஜாதகனுக்கு நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம், சிறந்த ஓவிய திறமை, காதல்  ஆர்வம் இருக்கும்,

ஐந்தாம் மிடம் செவ்வாய்  நின்றாலோ

ஜாதகனுக்கு மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்த ஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து விளையாட்டில் யுக்க்தியுடன் செயல்படுவார் . குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத்தனமாக வளரலாம்,

ஐந்தாம் மிடம் புதன்  நின்றாலோ ஜாதகனுக்கு மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், இளமைகளந்த காதல் இருக்கும், தத்துபுத்திர  யோகம் ஜாதகனுக்கு உண்டு (புதன் அலி கிரகம் என்பதால் )

ஐந்தாம் மிடம் சுக்கிரன்  நின்றாலோ

ஜாதகனுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும் ,காதல் எண்ணம் அதிகம் இருக்கும் , ஆடல், பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் , கவர்ச்சியின் வழிகளில் ஜாதகன் செயல்படுவார்

ஐந்தாம் மிடம் குரு  நின்றாலோ

ஜாதகனுக்கு ஒழுக்கம் அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும் ,ஆன்மீக விசயங்களில் கவனம் இருக்கும், ஆனால் குழந்தை தாமதமாக பிறக்கும் ( குரு புத்திர காரகன் ,காரகனே புத்திர ஸ்தானத்தில் இடம் பெறகூடாது )

ஐந்தாம் மிடம் சனி  நின்றாலோ

ஜாதகனுக்கு சிறந்த தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம் இருக்காது,

ஐந்தாம் மிடம்  ராகு  இருந்தாலோ ஜாதகனுக்கு சூதாட்டத்தில் கவனம் ஏற்படும், பூர்வீக சொத்தில் பிரச்சனை வரலாம் , குழந்த பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம்

ஐந்தாம் மிடம்  கேது  இருந்தாலோ ஜாதகனுக்கு ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக  நாட்டம் வரலாம்,  தெளிவான வார்த்தைகளுடன் பேசுவார், சித்தர்களை போல இருக்க ஆசைபடுவார் ,குழந்த பிறப்பதில்  thaamatham  உருவாகும்  .

ஐந்தாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றாலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு ,புத்திரம், பூர்வீகம், அறிவு உண்டு

ஐந்துகுடையவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதலில் அதிக ஈடுபாடு இருக்கும்

ஐந்துகுடையவன் ஏழில் நின்றாலோ அல்லது ஏழுக்கு உடையவன் ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதல் திருமணம் உண்டு

ஐந்தாம் பாவகதில் பாவகிரகம் நிற்கக்கூடாது

ஐந்தாம்  பாவகதிர்க்கு இருபுறமும் பாவாகிரகம்  நிற்ககூடாது

விரயாதிபதி, அட்டமாதிபதி இந்த பாவகத்தில் நின்றாள் குழந்தை, அறிவு,காதல் தடைபடும்

ஐந்தாம் பாவகதில் சனி ,செவ்வாய் சேர்கை இந்த பாவக சிதிலமடைய வாய்ப்பு உண்டாகும்

ஐந்தாம் பாவகம் பெண் ராசியாகி ஐந்தாம் அதிபதி பெண் ராசிகளில் நின்று பெண் கிரகங்கள் இந்த பாவகத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்கும்

ஐந்தாம் பாவகம் ஆண் ராசியாகி ஐந்தாம் பாவ அதிபதி ஆண் ராசியில் நின்று ஆண் கிரகங்கள் இந்த பாவகதில் நின்றாள் பிறக்கும் குழந்தை ஆண்குளந்தையாகும்

ஐந்தாம் அதிபதி நீசம், அச்தன்கதம் அடைந்து இருந்தால் ஜாதகருக்கு குல தெய்வ வழிபாடு குறை இருக்கும்

ஐந்தாம் அதிபதி ஆட்சி, உச்சம், வர்கோத்தமம் பெற்று இருந்தால் இவரின் குல தெய்வம் இவரை நன்கு காக்கும் .

ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் குழந்தையின் அன்பும் ஆதரவும் ஜாதகருக்கு உண்டு,

  ஐந்தாம் அதிபதி நாளில்,ஆறில்,எட்டில் இருந்தால் குழந்தையின் அன்பு, ஆதரவு ஜாதகருக்கு கிடைக்காது

ஐந்தாம் பாவகம் தொழில் ஸ்தானத்திற்கு துன்ப பாவகமாகும்

ஐந்தாம் பாவகம் மனைவிக்கு லாப பாவகமாகும்

ஐந்தாம் பாவகம் தாய்க்கு வாக்கு, தான பாவகமாகும்

ஐந்தாம் பாவகம் தந்தைக்கு சௌரிய பாவகமாகும்

இளைய சகொதிரனுக்கு தைரிய ,வெற்றி பாவகம்,

ஐந்தாம் பாவகம் மூத்த சகொதிரனுக்கு களத்திற பாவகமாகும்

  கர்ப்பம் தரிப்பு தசா புத்தி அடிப்படையில் :

 

பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசா புத்தி காலங்களே கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.

ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால், குருவின் தசா புத்தி காலங்களும் கர்ப்பமடைய ஏற்ற காலமாகும்.

பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசையில், குரு புத்தியிலும் கர்ப்பமடையலாம்.

குரு தசையில், பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின் புத்தியிலும் கர்ப்பமடையலாம்.

ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானாதிபதியை குரு பார்த்தால், களஸ்திர ஸ்தானாதிபதியின் தசாகாலத்தில் வரும் குரு புத்தியிலும் கர்ப்பம்தரிக்கலாம்.

 

கர்ப்பம் தரிப்பு கோட்சார அடிப்படையில் (குரு பெயர்ச்சி):

கோட்சாரத்தில், ஜனன ஜாதகத்தில் குரு நின்ற இடத்துக்கு குருப் பெயர்ச்சியாகும் காலங்களிலும், ராசி அடிப்படையில் குரு ராசி நாதனை பார்க்கும் காலங்களிலும், ராசிக்கு 5ஆம் இடத்தைப் பார்க்கும் காலங்களிலும்,   ஜாதகரின் குழந்தைகளை நிர்ணயிப்பதற்கு தம்பதியர் இருவரின் ஜாதகமும் தேவை , இவருடைய ஜாதக அமைப்பை வைத்து மட்டுமே குழந்தை பாக்கியம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் தன்மையை நிர்ணயம்  செய்ய முடியும் , அதன் அடிப்படையிலேயே குழந்தை பாக்கியம் உண்டா ? இல்லையா என்று தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் . ஒருவரின் ஜாதக அமைப்பை மட்டும் வைத்து குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்வது என்பது ஒரு  கை ஓசைக்கு சமமானது அன்பரே ! மேலும் தம்பதியரின் சுய ஜாதக அமைப்பில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் Sகடுமையாக பாதிக்க பட்டு இருந்தாலும் , ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் நிச்சயம் பெண் குழந்தைக்கு கிடைப்பதற்கு  உண்டான வாய்ப்பு நிச்சயம் உண்டு . இதிலிருந்து ஒருவருக்காவது  புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் . இருவருக்கும் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து ஆண் குழந்தை இல்லத்திற்கு காரணம் தம்பதியர் தங்களுக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்காமல் , பாதகத்தை தரும் வாயிர்ப்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை . தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் சர ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் சர ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் ஆண் குழந்தைகளாக பிறக்கும் . மேற்கண்ட அமைப்பில் இருந்து அதாவது  ஜாதகர் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருந்து, தனது பூர்விகத்தை விட்டு வெளியே சென்று குடியிருந்தால் , ஜாதகருக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்க கூடும் , தனது பூர்வீகத்திற்கு திரும்ப வந்தவுடன் ஆண் வாரிசு நிச்சயம் அமையும் , இதையெல்லாம்  சுய ஜாதகம் கொண்டே பலன் நிர்ணயம் செய்ய முடியும் தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் , அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்கும் அல்லது , புத்திர ஸ்தானம் உபய  ராசியாக இருந்து புத்திர ஷ்தானதுடன் சம்பந்தம் பெற்று 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருந்தால் , நிச்சயம் பெண்  குழந்தைகளாக பிறக்கும் .

சிலபேருக்கு குழந்தைகளே இல்லை. இதற்க்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் ,  தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , பூர்வ புண்ணியம் எனும் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும் .

  மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம்  அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி, வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும்.

 

சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி வணிகம், வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டு  தொடர்புடையவைகளாலும், கொடுக்கல், வாங்கல், ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குருபகவானுக்கு 10ம்  வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம் பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்று புதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக பணியுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும்.

 

மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10ல் அமைந்து உச்சம், திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில்  சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல் செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும்.

 

சனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நிலை, அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

  ஜாதகத்தில் முதல் வீட்டிற்கு இலக்கினம் என்று பெயரென்று உங்களுக்குத் தெரியும். முதல்வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகியவை கேந்திரஸ்தானங்கள் என்றழைக்கப்படும். அதேபோல் ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் என்றழைக்கப்படும். இந்த கேந்திரஸ்தானங்களும், திரிகோணஸ்தானங்களும் மிக நல்ல வீடுகளாக அழைக்கப் படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன. அதாவது அந்த வீட்டின் காரகத்துவம் கெட்டு விடும். உதாரணமாக ஒருவருக்கு 5-ம் வீட்டில் சனி இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 5-ம் வீடு திரிகோணஸ்தானம் ஆகும். அந்த வீடு புத்திர பாக்கியத்தைக் குறிக்கிறது. அங்கு பாபக் கிரகமான சனி இருப்பதனால் அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் போகும். குழந்தையே இல்லாமலும் போகலாம். "5-ல் சனி தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவார்கள். அங்கு சுபக்கிரகமான சுக்கிரன் இருந்தால் அவருக்குப் புத்திர பாக்கியம் இருக்கிறது எனக் கூறலாம். எந்த வீடாக இருந்தாலும் அங்கு சுபக்கிரகங்கள் அந்த வீட்டின் காரகத்துவத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் கெட்ட கிரகங்களோ அந்த வீட்டின்காரகத்துவத்தைக் கெடுத்து விடுகின்றன. ஒருவருக்கு ஜாதகத்தில் கேந்தரஸ்தானாதிபதியும், திரிகோணஸ்தானாதிபதியும் சேர்ந்து இருப்பார்களேயானால் அவர்கள் ராஜ யோகத்தைக் கொடுப்பர்கள். உதாரணமாக கன்னியாஇலக்கினத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுக்கிரனானவர் 9-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது திரிகோணஸ்தானாதிபதி. புதன் 10-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது கேந்திராதிபதி. இருவரும் சேர்ந்து ஒருவீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 4-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். இந்த சேர்க்கையானது இவருக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும். படிப்பு, வீடு, வாசல், யோகம் எல்லாம் இருக்கும். எந்த வீட்டில் ராஜயோக கிரகசேர்க்கை இருக்கிறதோ அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். 9-ம் வீடு, 10-ம் வீட்டின் அதிபதிகள் சேர்ந்தால் அது தர்ம, கர்மாதிபதியோகம் என அழைக்கப் படும். தர்மஸ்தானம் என்பது 9-ம் வீடு, கர்மஸ்தானம் என்பது 10-ம் வீடு. இருவீடுகளின்அதிபர் சேர்க்கை தர்ம, கர்மாதிபதி யோகம் என்றழைக்கப்படும்.

 கடகஇலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாயானவர், 5-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதி. அதாவது கோண, கேந்திர வீடுகளுக்கு அதிபதி. 5-ம் வீடு திரிகோணஸ்தானம், 10-ம் வீடு கேந்திரஸ்தானம் அல்லவா! ஆகவே செவ்வாயானவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகன் என்றழைக்கப் படுகிறார். அதேபோல் செவ்வாயானவர் சிம்மஇலக்கினத்திற்கும் 4-ம் மற்றும் 9-ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார். கேந்திர, கோண வீடுகளுக்கு அதிபதியாவதால் அவர் சிம்ம இலக்கினத்துக்கும் யோக காரகனாகிறார். அதே போல் மகர, கும்ப இலக்கினங்களுக்கு சுக்கிரனானவர், கேந்தரஸ்தானத்திற்கும், திரிகோணஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் அவர் இந்த இரண்டு இலக்கினங்களுக்கும் யோககாரகனாகிறார். ரிஷப இலக்கினத்திற்கு சனியானவர் 9-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். துலாஇலக்கினத்திற்கும் சனியானவர் 4-ம் வீட்டிற்கும், 5-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். இந்த யோக காரகர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். அதேபோன்று 2, 6, 8, 11-ம் வீடுகள் பணபரம் என்றும், 3, 12 வீடுகள் ஆபோக்லிபம் என்றழைக்கப்படும். இந்த வீடுகளைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். சரி!இப்போது நாம் விட்ட இடத்திலிருந்து முதலாம் வீட்டிற்கு வருவோம்.

  இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவை ஒருவரின் ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆயுளைக் கணிக்க இந்த மூன்று வீடுகளையும் ஆராய வேண்டும். ஒருவரின் ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள் எனப்படும். 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் எனப்படும். 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் எனப்படும். சரி! ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது? இது மிகவும் கடினமான வேலை. ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.

 

1. இலக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.

2. 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.

3. இலக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.

4. இலக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.

5. இலக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்

6. எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது இலக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்

7. சந்திரனும், இலக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.

8. குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.

 

இதைப் போல் பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நாம் கூறியுள்ளோம். நமது வாசகர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் பார்த்தால் ஆயுளைப் பற்றி விரிவாகக் கூறி இருப்பது தெரிய வரும்.

 

கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.

 

1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.

2. இலக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்

3. இலக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,

6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,

4. பொதுவாக இலக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள்

 

இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.

  சர ராசி : மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.

 

சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது.

 

3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.

 

ஸ்திர ராசி : மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா, புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.

 

உபய ராசி : உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள் இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.

  ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப் படும். அதாவது அதுதான் இலக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு 2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.

 

முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.

 

இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?

  மூன்றாம் வீடு : இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

 

நான்காம் வீடு : இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?

  ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இலக்கினாதிபதி இலக்கினத்தில் இருந்தால் அவர் ஆட்சியில் இருக்கிறார் எனப் பொருள். அதாவது அது அவருக்குச் சொந்த வீடு அல்லவா? நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர். 2-ம் வீட்டில் இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் இருப்பர். 2-ம் இடம் வாக்குஸ்தானம் அல்லவா ? சுய சம்பாத்தியம் உள்ளவர். குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர். 3-ம் வீட்டில் இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் கூடி வாழ்பவனாகவும், நல்ல தைரியசாலியாகவும் இருப்பர். 3-ம் வீடு இளைய சகோதரத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது அல்லவா? அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது. 4-ம் வீட்டில் இருந்தால் தாயிடம் மிக்க அன்பு உள்ளவராகவும், குடும்பத்தில் ஈடுபடு உள்ளவராகவும், பந்துக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருப்பான். கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், தாய் வழி மாமன்கள் ஆதரவைப் பெற்றவராகவும், சொத்துக்கள் இருப்பவராகவும் இருப்பர்.

 

5-ம் வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் புத்திர சந்தானங்களைப் பெற்றவராகவும் அவர்களால் சாந்தோஷத்தையும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார். தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், மகான்களின் சத்சங்கத்துடனும நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்.

  இந்தப் பாடத்தில் நாம் 4-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். நாலாம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம். வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம். சரி! எப்படி கூறுவது? செவ்வாயானவர் ஸ்த்ர சொத்துக்களுக்கு அதிபதி அல்லவா? அவர் 4-ம் வீட்டில் இருந் தாலோ அல்லது 4-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்கயோகம் உண்டு என்று கூறலாம்.

 

4-ம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் என்ன கிடைக்கும்? சுக்கிரன் வாகனகாரகன் அல்லவா? அவர்களுக்கு வாகனம் கிட்டும். வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ளகாராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம்; எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு. படிப்பை பற்றிக் கூற வேண்டுமானால் 4-ம் வீட்டுடன் புதன் சம்மந்தப்பட்டுள்ளாரா? எனப்பார்ப்பது அவசியம். புதன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவர் ஒரு பட்டப்படிப்பு முடியப் படிப்பார் எனக் கொள்ளலாம். 4-ம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது. அதற்கு மேலுள்ள படிப்பை 9-ம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.

  சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார். சுக்கிரன் கலைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார். சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எறிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை. 4-ம் வீடு மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் சொத்துக்களைக் குறிக்கிறது. ஒருவருக்குப் புதையல் கிடக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

  ராசிகளில் சர ராசி; ஸ்திர ராசி; உபய ராசி என்று இருக்கிறது என நாம் எழுதி இருந்தோம். மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள். உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள். இவைகள் எல்லாம் பலன் சொல்ல எப்படிப் பயன்படுகின்றன? உதாரணமாக ஒருகிரகம் ஒருவருக்கு உடல் உபாதையைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது எனக் கொள்ளுவோம். அந்த கிரகம் சர ராசியில் இருந்தால் பரம்பரை நோய் வரக் கூடும். ஸ்திர ராசியில் இருந்தால் குணப்படுத்தாத முடியாத நோயாக வரக் கூடும். உபய ராசியில் இருக்கும் கிரகங்கள் மூலமாக அவ்வப்போது வந்து போகும் நோய் வரக்கூடும். இவ்வாறு இந்த ராசிகளின் தன்மைகள் பலன் சொல்லப் பயன்படுகின்றன. ஒருவர் ஜாதகத்தில் 4-ம் இடம் சர ராசியாக இருந்து அதன் அதிபதியும் சரராசியில் இருந்தால் அந்த ஜாதகருக்குப் பல இடத்தில் வீடுகள் இருக்கும். இது வீட்டுயோகம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். வீடுயோகம் இல்லாதவர்களுக்கு 4-ம் வீட்டு அதிபர் சரராசியிலும், 4-ம் வீடு சர ராசியிலும் இருந்தால் அவர் பல வீடுகளில் வசிப்பர் எனக் கொள்ளலாம். ஸ்திர ராசியில் இருந்தால் ஒரே வீட்டில் வசிப்பர் எனக் கொள்ளலாம்.

  4-ம் வீட்டு அதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபருடனோ சேர்ந்து இருப்பாரேயாகில் அவருக்கு சகோதரன் மூலமாக ஸ்திர சொத்துக்கள் கிடைக்கும். அதேபோல இலக்கினாதிபதி பலம் பெற்று 4-ம் இடத்திலும், 4-ம் வீட்ட்டதிபர் பலம் பெற்று இலக்கினத்திலும் இருந்தால் அவர் சுய முயற்சியில் வீடு கட்டுவர். சிலருக்கு மனைவி மூலமாக வீடு கிடைக்கிறது அல்லவா? அதற்கு எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்? களத்திர காரகனான சுக்கிரன் 4-ம் இடத்திலும், 4-க்குடையவன் 7-ம் இடத்திலும் இருப்பார்களேயானால் களத்திரம் மூலம் வீட்டு லாபம் உண்டாகும். சத்துருக்கள் மூலம் எப்படி பூமி லாபமுண்டாகுமெனப் பார்ப்போம். 6-ம் இடம் சத்துரு ஸ்தானம் அல்லவா? 6-ம் வீட்டதிபன் 4-ம் வீட்டிலோ அல்லது நாலாம் வீட்டதிபன் 6-ம் வீட்டிலோ இருந்து 4-ம் வீட்டதிபன் 6-ம் வீட்டதிபனை விட பலம் பொருந்தி இருந்தால் அவருக்கு விரோதிகளிடமிருந்து பூமிலாபம் கிடைக்கும்.

 

ஒருவருக்கு மாடி வீடு எப்படிக் கிடைக்குமெனப் பார்ப்போம்? நவாம்ச இலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இவர்களிருந்தால் மாடி வீடு கட்டுவர். அல்லது நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் உச்சமடைந்த கிரகமிருக்குமேயகில் அவருக்கும் மாடி வீட்டு யோகம் உண்டு. நாம் இதுவரையில் வீட்டு யோகத்திப் பற்றிப் பார்த்தோம். காரகத்துவங்களையும் இனிப் பார்ப்போம். தாயாரைக் குறிப்பதும் 4ம் வீடு அல்லவா? 4-ம் வீட்டிற்கதிபதி இலக்கினாதிபதியினால் பார்க்கப் பட்டு கேந்திரத்தில் இருந்தாலும், அல்லது சுபகிரகங்களினால் பார்க்கப் பட்டு இருந்தாலும் தாயரிடத்தில் மிக்க அன்புடன் இருப்பர். மாதுர்காரகனான சந்திரன் இரண்டு பாப கிரகங்களின் நடுவில் இருந்தால் அல்லது சேர்ந்து இருந்தால் மாதாவிற்குக் கெடுதல் உண்டாகும்.

  7-ம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

* இலக்கினத்தில் இருந்தால் ஜாதகர் தமக்கு நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.

 

* 2-ம் வீட்டில் இருந்தால் தமது கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு இருக்கும். பணவரவு என்றால் சொத்துடன் வர வேண்டும் என்று எண்ன வேண்டாம். வேலையிலிருந்தாலும் பண வரவுதான். சரி! இரண்டாம் வீடு தனஸ்தானம்; 7-வது வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. ஆகக் கணவன் அல்லது மனைவி மூலமாகப் பண உதவி கிடைக்கும் எனக் கூறிவிட்டோம். அவ்வாறு 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.

 

* 7-ம் வீட்டதிபன் 3-ல் இருந்தால் இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.

 

* 4-ல் இருந்தால் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்.

 

* 5-ல் இருந்தால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.

 

* 6-ம் வீட்டில் 7-ம் வீட்டு அதிபதி இருப்பது அவ்வளவு நல்லதல்ல; திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. ஏனெனில் 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடல்லவா? மாமன் மகள் அல்லது மகனை மணம் செய்து கொள்ளக் கூடும். 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது அல்லவா?

 

* 7-ம் வீட்டில் இருந்தால் கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமைவாள்.

 

* 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும். பொதுவாகத் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. ஏனெனில் 8-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா?

 

* 7-ம் வீட்டிற்கதிபதி 9-ம் வீட்டில் இருந்தால் ஜாதகருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் அடிக்கலாம். 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு தர்மத்தையும், ஒரு நெறியான வாழ்க்கையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையக் கூடும்.

 

* 10-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர். அல்லது மிகவும் நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்.

 

* 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும். இன்னும் சிலருக்கு அவர்கள் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமையும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கும் வீடு அல்லவா!

 

* 12-ம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது. பொதுவாக 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும். ஒருவருக்கு 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில் இருக்குமேயாகில் அவர் மனதிற்கேற்றபடி மனைவி அமைவாள்.

  இப்போது 8-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கலாம். பொதுவாகவே 8-ம் வீடு என்பது துஸ்தானம் என்று கூறுவார்கள். 8-ம் வீட்டை வைத்து ஒருவரின் ஆயுள், தோல்விகள், துன்பங்கள், அகெளரவமான செயல்கள், தடைகள், அபகீர்த்தி ஆகியவற்றைக் கூறலாம். பெண்களுக்கு 8-ம் வீடென்பது மாங்கல்யஸ்தானம் ஆகும். ஒருபெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா அல்லது விதவையாக ஆவாளா என்றும் 8-ம் வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் ஆயுளைக் கூறும்போது 8-ம் வீட்டுடன் இலக்கினத்தையும், 3-ம் வீட்டையும் பார்த்துத்தான் கூறவேண்டும். அப்போதுதான் சரியாக வரும்.

 

இவைகளைத்தவிர மூதாதையர் சொத்துக்கள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். மற்றும் உயில்கள், இன்ஷரன்ஸ், பிராவிடண்ட் பண்டு  ஆகியவைகள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.

 

ஒருவருக்கு மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் இலக்கினாதிபதி 8-ல் இருந்தாலோ அல்லது 8-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ அவரின் மரணத்திற்கு அவரே காரணமாகிறார். ஒருவர் ஜாதகத்தில் 3-ம் வீட்டு அதிபர் 8-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 3-ம் வீடு என்பது என்ன? 3-ம் வீடு குறுகிய பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே அவர் பயணம் செய்யும் போது மரணம் சம்பவிக்கலாம். 12-ம் வீட்டின் அதிபதி 8-ல் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது அயலூரினையோ அல்லது அயல் நாட்டைனையோ அல்லது மருத்துவமனையையோ குறிக்கிறது அல்லவா? ஆகவே அந்த இடத்தில் மரணம் சம்பவிக்கலாம். 9-ம் வீட்டுக்காரர் 8-ம் வீட்டில் இருந்தால் நீண்ட பயணம் செய்யும்போதோ அல்லது அயல் நாட்டிலோ மரணம் சம்பவிக்கலாம்.

 

மரணத்திப் பற்றிக் கூற முதலில் இவர் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கண்டு பிடிக்க வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல; இதற்குப் பல கணித முறைகள் இருக்கின்றன. அவைகளை நாம் இப்போது சொல்லிக் கொடுக்க இயலாது. பாடம் முழுவதையும் முடித்தபின் அவைகளைப் பார்ப்போம். 8-ம் வீடு ஜல ராசியில் வருமானால் ஒருவருக்கு நீரால் மரணம் வரக் கூடும். நெருப்பு ராசியாக வருமேயானால் நெருப்பால் அபாயமுண்டு. துர்மரணமும் சம்பவிக்கும்.

  எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவர் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.

 

2-ம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.

 

3-ம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.

 

4-ம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.

 

5-ம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.

 

6-ம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.

 

7-ம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் - மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

 

8-ம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.

 

9-ம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.

  10-ம் வீடென்பது ஒருவரின் ஜீவனஸ்தானமாகும். ஜீவனஸ்தானத்தில் 8-ம் வீட்டதிபர் இருந்தால் தொழிலில் முன்னேறுவது சிரமமாக இருக்கும். போட்டிகள் நிறைய இருக்கும். இவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்தவருக்குப் பதவி உயர்வு கிட்டும். இவருடைய கெளரவத்திற்குப் பங்கம் விளைகின்றது போன்ற காரியங்கள் நடக்கும். 8-ம் வீடென்பது தகப்பனாரின் Investments, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது என இதற்கு முந்தைய பாடங்களில் எழுதி இருக்கிறோம். ஆக தகப்பனாரின் இத்தைகைய சொத்துக்கள் இந்த ஜாதருக்குக் கிட்டும்.

 

11-ம் வீட்டில் : 11-ம் வீடு மூத்த சகோதரத்தின் வீடல்லவா! 8-ம் வீட்டின் அதிபர் 11-ல் இருந்தால் மூத்த சகோதரத்திற்குத் தொந்தரவுகள் இருந்து வரும். அல்லது மூத்த சகோதரத்தால் ஜாதகருக்குத் தொந்தரவுகள் இருந்து வரும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது அல்லவா? நண்பர்களாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீடு Insurance, P.F., Gratuity, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது எனக் கூறி இருந்தோம். ஆக 8-ம் வீட்டதிபர் 11-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் மேற்கண்டவைகளிலிருந்து பணம் கிடைக்கும்.

 

12-ம் வீட்டில் : 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திகாலங்களில் வீண் தண்டச் செலவுகளும், விரயங்களும் இருந்து வரும். பல விதக் கஷ்டங்கள் இருக்கும். பொதுவாக 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.

  5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.

 

6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

 

7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

 

8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.

  9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.

 

10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.

 

11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

 

12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

 

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.

  நம்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs) : எல்லா ஜல ராசிகளும் இந்த வகையைச் சேர்ந்தன. ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை பாதி நம்மை (Semi Fruitful Signs) பயக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். ஒருவருக்குக் குழந்தை இல்லை எனக்கொள்ளுங்கள். இவர் ஜாதகத்தில் 5-ம் வீடு Fruitful Sign ஆகி 5-க்குடையவன் மற்றொரு Fruitful Sign-ல் இருப்பாரேயாகில் அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு எனக் கொள்ளலாம். இந்த Fruitful Sign ஆனது அதில் உள்ள கிரகங்களையும் நன்மைபயக்கும் கிரகங்கள் ஆக்குகின்றன. அதே போன்று கணவர் மனைவியர் ஏதோ சந்தர்பத்தின் காரணமாகப் பிரிந்து இருக்கின்றனர் எனக் கொள்ளுங்கள். அவர்கள் எப்போது சேருவார்கள் என்ற கேள்வி எழும். அப்போது இந்த ராசியில் உள்ள கிரகங்கள் பலன் சொல்லப் பயன் படும். நீங்கள் ஆரூடத்திப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அதாவது ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன் படும் ஜாதகம். அதாவது அவர்கள் கேள்வி கேட்க்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுவார்கள். ஒருவர் நம்மிடம் வந்து "நான் தேர்வில் வெற்றி பெருவேனா?"- என்று கேட்கிறார் எனக் கொள்வோம். அவரிடம் ஜாதகம் இல்லை. நாம் அந்த நேரத்திற்கு ஜாதகம் கணித்துப் பார்க்கிறோம். தேர்வு, படிப்பு ஆகியவைகளை 4-ம் வீடு குறிக்கிறது. 4-ம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்து 4-ம் வீட்டிற்குடையவர் 11-ம் வீட்டில் அதுவும் 11-ம் வீடு Fruitful Sign ஆகவும் இருந்து விட்டால் நாம் எளிதாகச் சொல்லலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள் என்று அடித்துச் சொல்லலாம். இவ்வாறு பலவழிகளில் இந்த Fruitful Signs - உதவி புரிகிறது.கடகம், விருச்சிகம், தனுசு ஆகியவைகல் Fruitful signs எனப்படும்.

 

வறண்ட ரசிகள் (Barren Signs) : Fruitful Signs - களுக்கு எதிர் மறையான ராசிகள் இந்த வறண்ட ராசிகள் அல்லது Barren Signs. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் எனப்படும். இந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மையான பலன்களைக் கொடுக்காது.

 

ஊமை ராசிகள் (Mute Signs) : எல்லா ஜல ராசிகளும், அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை Mute Signs அல்லது ஊமை ராசிகள் எனப்படும். இதை சற்று விளக்கமாக எழுதுகின்றோம். ஒருவருக்கு ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது. 2-ம் வீடு ஊமை ராசியாக வந்து அதில் புதன் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் அவர் திக்கித், திக்கிப் பேசுவார். செவ்வாய் பார்த்தால் மிக வேகமாகப் பேசுவார். குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ராசிகள் பயன் படுகின்றன.

 

முரட்டு ராசிகள் : மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் எனப்படும். இவற்றிற்கு அதிபதி செவ்வாய் அல்லவா? செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் அல்லவா ? அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் எனப்படும்.

 

நான்கு கால் ராசிகள் : மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும். செம்மரிக் கடா (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள் அல்லவா? அதனால் தான் இவைகள் நாலுகால் ராசிகள் என்றழைக்கப் படுகின்றன. சரி! இந்த ராசிகள் பலன் சொல்ல எப்படிப் பயன் படுகின்றன? எனக்கு மிகவும் வேண்டியவர்" நான் கார் வாங்க ஆசைப் படுகிறேன்? என்னால் வாங்க முடியுமா?" என்று கேட்டார். அவர் ஜாதகத்தை பார்த்தோம். அவருக்கு அப்போது சனிதசை, சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தது. நம்முடைய கணக்குப்படி அந்த தசா புக்தியில் அவருக்கு வாகன யோகம் வந்து இருந்தது. அவர் கார் வாங்குவாரா அல்லது மோட்டார் சைக்கிள் வாங்குவாரா என்று எப்படிச் சொல்வது? புக்தி நாதன் சூரியன் அவருக்கு மகரத்தில் இருந்தார். மகரம் நாலுகால் ராசியல்லவா? ஆகவே சூரியன் நாலுகால் ராசியின் பலனைக் கொடுப்பார் என்று நீங்கள் கார் வாங்குவீர்கள் என்று கூறினோம். இப்போது புரிகிறதா ? நாலுகால் ராசியின் உபயோகத்தை. அவரும் நாம் கூறியபடி அப்போது கார் வாங்கினார்.

  இரட்டை ராசிகள் (Dual Signs) : மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். இந்த ராசிகளின் உபயோகம் என்ன? ஒருவருக்கு இரண்டு மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் சொல்லலாம். புதனுக்கு இரட்டைக் கிரகம் என்ற பெயர் உண்டு. அவர் ஒருவரின் ஜீவனஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது அதில் இருந்தாலோ அவருக்கு இரட்டை வருமானம் வரும் எனக் கூறலாம். இரட்டை வருமானம் எப்படிக் கிடைக்கும்?

 

ஒருவர் ஓர் அலுவலகத்தில் பணிபுரியலாம். மாலை நேரத்தில் வேறொரு இடத்தில் Part-time வேலை செய்யலாம். இது இரட்டை வருமானம் அல்லவா? சிலர் வேலை பார்த்துக் கொண்டே Insurance Agent ஆக இருப்பார்கள். இதுவும் இரட்டை வருமானம் தான். சிலர் அரசாங்கத்தில் வேலை செய்வார்கள். சம்பளம் கிடைக்கும். அதைத்தவிர மேஜைக்கு அடியிலும் வாங்குவார்கள். இதுவும் இரட்டை வருமானம்தான். இந்த மாதிரி மேஜைக்கு அடியில் வாங்குபவர்களுக்கு 10-ம் வீட்டில் புதனுடன் சனியும் சேர்ந்து இருக்கும். அல்லது சனியின் பார்வையாவது இருக்கும். சனியின் தொடர்பு இருந்தால்தான் இந்த மாதிரி மேஜைக்கு அடியில் பணம் வாங்க முடியும். சனி எதையும் ரகசியமாகச் செய்யக்கூடியவர் அல்லவா? 1983-ல் நாம் குடியிருந்த வீட்டின் பக்கத்தில் இருந்த ஒருவர் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் தான் வீடு கட்ட முயற்சி செய்வதாயும் தன் ஜாதகப்படி வீடு கட்டமுடியுமா எனக் கேட்டார். அவர் ஜாதகத்தில் அவர் கன்னி இலக்கினம். 4-ம் வீட்டில் புதன். செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருந்தார். மற்ற கிரகங்கள் ஞாபகத்தில் இல்லை. நாம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்கு வீடு கட்ட யோகம் வந்துவிட்டது. "நன்றாகக் கட்டுங்கள்" என்று கூறினோம். அவர் "கடன் வாங்கித்தான் கட்ட வேண்டும். கட்ட முடியுமா?" என்று திரும்பவும் கேட்டார். நாம் "உங்கள் ஜாதகப் படி இரண்டு வீட்டிற்கு யோகம் இருக்கிறது. ஏன் தயங்குகிறீர்கள்?" எனக் கூறினோம். அவர் உடனே "ஒரு வீட்டிற்கே வழி இல்லை; இரண்டு வீடு கட்டுவேன் என்கிறீர்களே" என்று கூறிவிட்டுப் போய்விட்டார். சிலமாதங்களில் நாம் வீடு ஒன்று கட்டிக் கொண்டு அங்கிருந்து வந்து விட்டோம். பல ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பழைய நண்பர் திரும்பவும் என்னைத் தேடிக் கொண்டு வந்தார். "நீங்கள் முன்பு கூறியபடி நான் இப்போது 2-வது வீட்டிற்குப் பணம் கொடுத்து விட்டேன். ஆனால் FLAT இன்னும் கைக்குவரவில்லை; எப்போது கிடைக்கும் என்று உங்களைக் கேட்க்கத்தான் வந்தேன்" என்று கூறினார். நாம் அவர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கூறி அனுப்பினோம்." நாம் எப்படி அவருக்கு இரண்டு வீடு கிடைக்கும் என்று கூறினோம்?" என்று உங்களுக்குக் கூறுகிறோம். அவர் ஜாதகத்தில் 4-ம் வீடு இரட்டை ராசி. அதாவது தனுசு. அந்த வீட்டில் இரட்டைக் கிரகமான புதனும் இருக்கிறார். பூமிகாரகனான செவ்வாயும் 4-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே நாம் அவருக்கு இரண்டு வீடுகள் உண்டு என்றுகூறினோம். அது பலித்து விட்டது. ஆக இரட்டை ராசிகளின் உபயோகம் தெரிகிறதல்லவா?

 

இத்துடன் இந்தப் பாடத்தை முடித்துக் கொள்வோம். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

  சனியானவர் எதையும் ஒளித்து வைக்கும், மறைத்து வைக்கும் குணம் கொண்டவர். அவர் தனஸ்தானத்தையோ அல்லது ஜீவனஸ்தானத்தையோ குறிப்பவராகி 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்து இருப்பர் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினக் காரரான ஒருவருக்கு சனியானவர் 10-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் கடகத்தில் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். 4-ம் வீட்டில் இல்லாமல் பார்த்தாலும் அதே பலன்தான். காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார். 4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.

 

நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

 

முதல் வீட்டில் : மிகுந்த படித்தவராக இருப்பர்.

 

இரண்டாம் வீட்டில் : தாய் வழிச்சொத்து இவருக்குக் கிடைக்கும். கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பார்.

 

மூன்றாம் வீட்டில் : நான்காம் வீட்டு அதிபதி 3-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல; நான்காம் வீடு குறிக்கின்ற காரகத்துவங்களெல்லாம் சரியாக இருக்காது.

 

நான்காம் வீட்டில் : தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பார்.

 

5-ம் வீட்டில் : இவருடைய தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பார். மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பார்.

 

6-ம் வீட்டில் : முன்கோபியானவர். நல்ல எண்ணங்கள் இல்லாதவர்.

 

7-ம் வீட்டில் : வீடு, வாசலுடன் இருப்பவர். 7-ம் வீடு சராசியாக இருந்தால் வெளியூரிலும், ஸ்திர ராசியாக இருந்தால் உள்ளுரிலும் சம்பாத்தியம் செய்வர்.

 

8-ம் வீட்டில் : இது துஸ்தானம் அல்லவா? மறைவிடமும் ஆகும். செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம்.

 

9-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் மன நிறைவு உண்டாகும். தகப்பனாராலும் அனுகூலம்.

 

10-ம் வீட்டில் : அரசியலில் புகழ் பெறுவர். பலர் மதிக்கும் வண்ணம் வாழ்வர்.

 

11-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம். தாயாரால் அனுகூலம்.

 

12-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் துன்பம். இளம் வயதிலேயே தாயார் மரணம்.

  சூரியன் : பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

 

சந்திரன் : சுற்றத்தாரால் மகிழ்ச்சியுண்டு. சிற்றின்பங்களில் பிரியம் அதிகம். சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு.

 

செவ்வாய் : வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை. அரசியலில் முன்னேற்றமுண்டு. தாயாருடன் சண்டை போடக் கூடிய நிலை இருக்கும். ராகுவோ அல்லது கேதுவோ கூட இருக்குமேயாகில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும்.

 

புதன் : படிப்பில் தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும்.

 

குரு : படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை.

 

சுக்கிரன் : வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல்

 

சனி : சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு, வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை ஆகியவை.

 

ராகு : முட்டாள்தனமான காரியங்கள் செய்வர், நம்பகத்தன்மை இல்லாது நடந்து கொள்வர்.

 

கேது: தாயாரால் அனுகூலமில்லை; வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை; வழ்க்கையில் பலதரப் பட்ட அனுபவங்கள்;

  6-ம் வீடு நமக்குப் பிரியமான சாப்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரின் 6-ம் வீட்டில் சனியிருந்தால் போஷாக்கற்ற உணவுவகைகளை உட்கொள்ளுவார். போதுமான அளவு சாப்பாடும் கிடைக்காது. சுக்கிரன் இருக்குமேயாகில் வகை, வகையான உணவுவகைகளை உட்க்கொள்ளுவர். ஒரளவிற்கு மதுபானத்திலும் பிரியம் இருக்கும். சந்திரன் ஒரு நீர்க்கிரகம் அல்லவா? நீர்சம்மந்தப்பட்ட உணவுவகைகளை விரும்பி உட்கொள்ளுவார். அதுவும் 6-ம் இடம் நீர்ராசிகளாகிவிட்டால் கேட்க்கவே வேண்டாம். மதுபானப் பிரியராக இருப்பார். அதைத் தவிர பாட்டில்களில்வரும் குளிர்பானங்களையும் விரும்பிச் சாப்பிடுவார். குரு இருக்குமேயாகில் நல்ல உணவுவகைகளை உட்கொள்ளுவார். செவ்வாய் இருந்தால் தேவைக்கு அதிகமாக உட்கொள்வர். இவ்வாறாக கிரகங்களின் குணாதிசயங்களை வைத்துப் பலன் சொல்லவேண்டும்.

 

6-ம் வீடு கடன் என்றும் கூறுவார்கள். 6-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பாரேயானால் ஒருவருக்குக் கடன் தொல்லைகள் அதிகம் இருக்கும். 6-ம் வீட்ட்டின் அதிபதி 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கொடுத்த கடன் திரும்பி வரும். அல்லது உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடிவரும். 6-ம் வீடு 12-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் நாம் வீங்கியகடனைக் கொடுப்போம். அதாவது 6-ம் வீடு கடனைக் குறிக்கிறது. 12-ம் வீடு செலவைக் குறிக்கிறது. 6-ம் 12-ம் சேர்ந்தால் நாம் வாங்கிய கடனைத்திருப்பிக் கொடுப்போம்.

 

சரி! நமக்கு வங்கியிலிருந்து பணம் கடனாகப் பெறவேண்டும். எப்படிப் பதில் சொல்வது? 7-ம் வீடு நாம் ஒருவருடன் செய்யும் Transaction-ஐக் குறிக்கிறது. அதாவது 7-ம் வீடு வங்கியைக் குறிக்கிறது. நமக்குப் பணம் கொடுப்பதென்றால் வங்கியின் பணம் குறைகிறது அல்லவா? நமது பணம் இருப்புக் கூடுகிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வங்கியின் பண இழப்பையும் 11-ம் வீடு அல்லது 2-ம் வீடு நாம் பணம் பெறுதலையும் குறிக்கிறது. 6-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்ட்டிலோ அல்லது 2-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டிலோ இருக்குமேயாகில் ஒருவருக்கு வங்கியிலிருந்து பணம் கிடைக்குமெனக் கூறலாம்

  6-ம் வீடு நம்முடைய எதிரிகளைக் குறிக்கிறது அல்லவா? அதில் பாப கிரகங்கள் இருப்பார்களேயாகில் எதிரிகள் ஓரளவிற்குக் குறைவாகவே இருப்பர். நல்ல கிரகங்கள் இருந்தால் எதிரிகள் அதிகம் இருப்பர். 6-ம் வீட்டில் சூரியன் இருந்தால் ஒருவர் அரசியலில் பெயர் வாங்க முடியும். 6-ம் வீடு எதிராளியின் தோல்வியைக் குறிக்கும் வீடல்லவா? சூரியன் அரசியலுக்குண்டான கிரகம். 6-ம் வீட்டிலுள்ள சூரியனை சனி பார்த்தால் இருதய சம்மந்தமான நோய் வரக் கூடும். 6-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இளம் வயதில் உடல் உபாதை நிறைய இருக்கும். அது சிலருக்கு பாலாரிஷ்டமாகக் கூட இருக்கும். சமையல்கலையில் வல்லவராக இருப்பர். 6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளை எளிதாக வெல்லுவர். 6-ம் வீட்டில் புதன் இருந்து ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் நரம்புசம்மந்தமான வியாதிகளோ, சித்தப் பிரமையோ ஏற்படக் கூடும். குரு இருந்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். சிலர் துர்தேவதைகளை வசியம் செய்வதில் ஈடுபடுவர். சுக்கிரன் இருந்து கெட்ட கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் பிறபெண்களுடன் தொடர்பு இருக்கும். சனி இருந்தால் இவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். 6-ம் வீடு செய்யும் வேலையையும் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டில் சனி இருந்தால் இரும்புத் தொழில், சுரங்கவேலைகள் ஆகியவற்றில் வேலை செய்வர். ராகு பாபியருடன் சேர்ந்து இருந்தால் அந்தரங்க உறுப்புக்களில் வியாதி இருக்கும். ராகுவுடன் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஹிஸ்டீரியா நோயினால் அவதிப் படுவர். கேது 6-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு கெடுதல் இல்லை.

 

6-ம் வீட்டிற்கதிபதி இலக்கினத்தில் இலக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால் அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும். 6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும். பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும். வரப்போகும் வியாதிகளைப் பற்றி Medical Astrology- என்ற தலைப்பில் பார்ப்போம்.

  7-ம் வீடு விட்டு, விட்டுச் செல்லும் பயணத்தைக் குறிக்கிறது. 3-ம் வீடு குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு நீண்ட பயணத்தையும் குறிப்பதுபோல் 7-ம் வீடு விட்டு விட்டுச் செல்லும் பயணத்தையும் குறிக்கிறது. இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் ஒருவர் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். இது பயணத்தைக் குறிக்கிறது. இந்த மாதிரிப் பயணம் செய்வதை 3-ம் வீடும் 9-ம் வீடும் குறிக்கும். எப்படி? 3-ம் வீடு சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர்தலைக் குறிக்கிறது. 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது. சரி! ஒருவர் நேராக டெல்லி செல்லாமல் 4 அல்லது 5 இடங்களைப் பார்த்துவிட்டு டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். அப்போது 7-ம் வீடு சம்மந்தப் பட்டு இருக்கும். சிலர் ஊர் ஊராக தெய்வ தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு அப்போது 3, 7, 9-ம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரங்கள் நடந்து கொண்டிருக்கும். அப்போதுதான் அந்த மாதிரி ஊர், ஊராகப் பயணம் செய்ய முடியும்.

 

7-ம் வீடு மாரகத்தையும் குறிக்குமென நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். ஒருவருக்கு ஆயுள் முடியும்போது 7-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது 7-ல் உள்ள கிரகங்களின் தசையோ, புக்தியோ நடந்து கொண்டிருந்தால் அவர் மரணத்தைக் கொடுப்பார். இதைப் போன்று பல காரகத்துவங்கள் 7-ம் வீட்டிற்கு இருக்கின்றன.

  7-ம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

* இலக்கினத்தில் இருந்தால் ஜாதகர் தமக்கு நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.

 

* 2-ம் வீட்டில் இருந்தால் தமது கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு இருக்கும். பணவரவு என்றால் சொத்துடன் வர வேண்டும் என்று எண்ன வேண்டாம். வேலையிலிருந்தாலும் பண வரவுதான். சரி! இரண்டாம் வீடு தனஸ்தானம்; 7-வது வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. ஆகக் கணவன் அல்லது மனைவி மூலமாகப் பண உதவி கிடைக்கும் எனக் கூறிவிட்டோம். அவ்வாறு 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.

 

* 7-ம் வீட்டதிபன் 3-ல் இருந்தால் இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.

 

* 4-ல் இருந்தால் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்.

 

* 5-ல் இருந்தால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.

 

* 6-ம் வீட்டில் 7-ம் வீட்டு அதிபதி இருப்பது அவ்வளவு நல்லதல்ல; திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. ஏனெனில் 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடல்லவா? மாமன் மகள் அல்லது மகனை மணம் செய்து கொள்ளக் கூடும். 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது அல்லவா?

 

* 7-ம் வீட்டில் இருந்தால் கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமைவாள்.

 

* 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும். பொதுவாகத் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. ஏனெனில் 8-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா?

 

* 7-ம் வீட்டிற்கதிபதி 9-ம் வீட்டில் இருந்தால் ஜாதகருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் அடிக்கலாம். 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு தர்மத்தையும், ஒரு நெறியான வாழ்க்கையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையக் கூடும்.

 

* 10-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர். அல்லது மிகவும் நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்.

 

* 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும். இன்னும் சிலருக்கு அவர்கள் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமையும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கும் வீடு அல்லவா!

 

* 12-ம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது. பொதுவாக 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும். ஒருவருக்கு 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில் இருக்குமேயாகில் அவர் மனதிற்கேற்றபடி மனைவி அமைவாள்.

 7-ம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருப்பது விரும்பத்தக்கது அல்ல; ஒருவர் ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் அதற்கு "புனர்ப்பூ" என்று பெயர். இது ஒரு தோஷம் ஆகும். இது கல்யாணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். நிச்சயம் ஆனால்கூட திருமணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். சனியும் புதனும் 7-ம் வீட்டில் இருந்தால் ஒரு விதவையோ அல்லது மனைவி இறந்த ஆண்மகனோ வாழ்க்கைத் துணைவராக அமைவர். 7-ம் வீடு பார்களால் பாதிக்கப்பட்டு அங்கு புதனும் இருப்பாரேயாகில் 2 தாரம் அமையும். பொதுவாக 7-ம் வீட்டில் 6-ம் வீட்டு அதிபதியோ அல்லது 8-ம் வீட்டு அதிபதியோ இருப்பது அமைதியான வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கிறது. அதேபோண்று 6-ம் வீட்டு அதிபதியும் 7-ம் வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அவர்கள் மனத்தாங்கலினால் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. திருமண வாழ்க்கை சோபிப்பது இல்லை.

  இனி 7-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

சூரியன் : திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும்.

 

சந்திரன் : காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார்.

 

செவ்வாய் : திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும்.

 

புதன் : பாபருடன் இருந்தால் 2-வது திருமணம் உண்டு. வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர்.

 

குரு : நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

 

சுக்கிரன் : மனதுக்கு இனிமையான வாழ்க்கை அமையும். காமம் மிகுந்தவர்.

 

சனி : திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது.

 

ராகு : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள். ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.

 

கேது : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.

  எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவர் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.

 

2-ம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.

 

3-ம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.

 

4-ம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.

 

5-ம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.

 

6-ம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.

 

7-ம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் - மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

 

8-ம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.

 

9-ம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.

  10-ம் வீடென்பது ஒருவரின் ஜீவனஸ்தானமாகும். ஜீவனஸ்தானத்தில் 8-ம் வீட்டதிபர் இருந்தால் தொழிலில் முன்னேறுவது சிரமமாக இருக்கும். போட்டிகள் நிறைய இருக்கும். இவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்தவருக்குப் பதவி உயர்வு கிட்டும். இவருடைய கெளரவத்திற்குப் பங்கம் விளைகின்றது போன்ற காரியங்கள் நடக்கும். 8-ம் வீடென்பது தகப்பனாரின் Investments, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது என இதற்கு முந்தைய பாடங்களில் எழுதி இருக்கிறோம். ஆக தகப்பனாரின் இத்தைகைய சொத்துக்கள் இந்த ஜாதருக்குக் கிட்டும்.

 

11-ம் வீட்டில் : 11-ம் வீடு மூத்த சகோதரத்தின் வீடல்லவா! 8-ம் வீட்டின் அதிபர் 11-ல் இருந்தால் மூத்த சகோதரத்திற்குத் தொந்தரவுகள் இருந்து வரும். அல்லது மூத்த சகோதரத்தால் ஜாதகருக்குத் தொந்தரவுகள் இருந்து வரும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது அல்லவா? நண்பர்களாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீடு Insurance, P.F., Gratuity, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது எனக் கூறி இருந்தோம். ஆக 8-ம் வீட்டதிபர் 11-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் மேற்கண்டவைகளிலிருந்து பணம் கிடைக்கும்.

 

12-ம் வீட்டில் : 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திகாலங்களில் வீண் தண்டச் செலவுகளும், விரயங்களும் இருந்து வரும். பல விதக் கஷ்டங்கள் இருக்கும். பொதுவாக 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.

  இனி 8-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.

 

சூரியன் : 8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் சூரியன் அங்கு மறைந்து விடுகிறார். ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும்.

 

சந்திரன் : நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சந்திரன் தாயாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? தாயாரால் இந்த ஜாதகருக்கு அனுகூலங்கள் மிகவும் குறைவாக இருக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.

 

செவ்வாய் : விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும்.பைல்ஸ் போன்ற இரத்த சம்மந்தமான நோய்களால் அவதிப் படுவர்.

 

புதன் : மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர்.

 

குரு : குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் அல்லவா? 8-ம் வீடு ஆயுள்ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும்.

 

சுக்கிரன் : சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லதே. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். ஜாதகருடைய கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். இளம்வயதில் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக பக்தி மார்க்கத்தை நாடுவார்.

 

சனி : நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகரின் கணவன் அல்லது மனவிக்குப் பொருளாதாரம் சுகப்படாது. சொற்பக் குழந்தைகள். வாயுத் தொந்தரவு இருக்கும்;

 

ராகு : ராகு இருந்தால் பல தொந்தரவுகள் இருந்து வரும். பொதுவாழ்வில் நற்பெயர் இருக்காது. ராகுவுடன் சந்திரனும் கூட இருந்தால் மன நோயால் பீடிக்கப்படுவர்.

 

கேது : கேதுவுக்கு சுபர்கள் பார்வையோ அல்லது சுபர்களோ சேர்ந்து இருந்தால் தொந்தரவு எதுவுமில்லை. கெட்டவர்கள் சேர்க்கைஇருப்பின் நற்பயன் எதுவுமில்லை. சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கொடுப்பார்.

  மிக முக்கியமானவீடான 9-ம் வீட்டைப், பற்றி நாம் இப்போது பார்க்கப் போகிறோம். ஒருவருடைய குருவைப் பற்றிக் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். பொதுவாக இதைப் பிதா ஸ்தானமென்றுதான் கூறுவோம். அதாவது ஒருவரின் தகப்பனாரை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். கிரகங்களில் சூரியனை வைத்து எப்படி தகப்பனாரைக் கூறுகின்றோமோ அதைப் போல் 9-ம் வீட்டை வைத்து தகப்பனாரைப் பற்றிக் கூறவேண்டும். ஒருவருடைய நீண்ட பயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் செய்கின்ற தர்மத்தையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 9-ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் அவர் செய்கின்ற தருமங்கள் எல்லோராலும் போற்றப்படும். பாப கிரகங்கள் இருப்பின் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும். சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்கள் இருந்தால் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும்.

 

5-ம் வீடும் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றுதான் அழைக்கப் படுகிறது. 9-ம் வீடு போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. ஆக திரிகோண ஸ்தானமான 5-ம் வீடும் 9-ம் வீடும் கெடாமல் இருந்தால் ஒருவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாமல்லவா? அதாவது சுபக் கிரகங்களான குரு, சந்திரன், புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்து அல்லது 9-ம் வீட்டைப் பார்த்தால் அவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாம். அதாவது போன ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்து அதன் விளைவாக இந்த ஜென்மத்தில் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றார் எனக் கூறலாம்.

 

9-ம்வீடு ஒருவரின் மத நம்பிக்கை, வேதாந்தங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. குருவானவர் வேதாந்தத்தைக் குறிக்கும் கிரகம். 9-ம் வீட்டில் குரு இருந்தால் ஒருவர் மதம், வேதாந்தங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். சனி இருந்தாலும் அவ்வாறே மத சம்மந்தமான விஷயங்களில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். கோவில்கள், சத்சங்கங்கள் மற்றும் தெய்வ தரிசனங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். கல்லூரிக்கு மேற்பட்டப் படிப்பையும் குறிப்பது இந்த வீடுதான். இதில் சுப கிரகங்கள் இருந்து நடப்பு தசா, புக்திகளும் 9-ம் வீட்டைக் குறித்தால் அவர் கல்லூரிப் படிப்பிற்கு மேற்பட்டப் படிப்பைப் படிப்பார் எனக் கொள்ளலாம்.

 

சட்டப் படிப்பைக் குரிப்பதும் இந்த வீடுதான். (கிரகங்களில் குருவானவர் சட்டப் படிப்பைக் குறிப்பார்.) ஆன்மீக சிந்தனைகள், உபாத்தியாயர் தொழில், புரோஹிதம் தொழில் ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். தேவதைகளை வசியம் செய்தலையும் இந்த வீடுதான் குறிக்கும்.

  நீண்டபயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் வெளிநாடு செல்கிறார் என்றால் 9-ம் வீட்டின் தொடர்பு இன்றி அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதாவது 9-ம் வீட்டின் அதிபதி அல்லது 9-ம் வீட்டிலுள்ள கிரகங்களின் தசா, புக்திகளில்தான் ஒருவர் வெளிநாடு செல்ல முடியும். ஒருவர் "உங்களிடம் நான் வெளிநாடு செல்ல முடியுமா?" எனக் கேட்கிறார் எனக் கொள்வோம். இதற்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். வெளி நாடு செல்வது என்றால் என்ன?

 

1. நாம் இருக்கும் இடத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும்.

 

2. நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

 

3. சற்றும் பழகாத முன், பின் தெரியாத இடத்தில் இருக்க வேண்டும். இவைதான் வெளிநாடு செல்லுதலைக் குறிக்கிறது.

 

நாம் தற்போது இருக்கும் வீட்டை/ நாட்டைக் குறிப்பது 4-ம் வீடு. அந்த வீட்டிற்குப் 12-ம் வீடான 3-ம் வீடு தான் இடம் பெயர்தலைக் குறிக்கிறது.

 

நீண்ட பயணம் மேற்கொள்ளுவதை 9-ம் வீடு குறிக்கிறது. சற்றும் பழகாத, முன் பின் தெரியாத இடத்திற்குச் செல்வதை 12-ம் வீடு குறிக்கிறது. ஆக 3, 9, 12-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திகாலங்களில்தான் ஒருவர் வெளி நாடு செல்ல முடியும். ஆக 9-ம் வீட்டின் உபயோகம் வெளிநாடு செல்ல எப்படிப் பயன் தருகிறது பார்த்தீர்களா?

 

சற்றும் முன்பின் தெரியாதவர்களையும் வெளி நாட்டவர்களையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் தனக்கு சொந்தத்தில் திருமணமாகுமா? அல்லது அந்நியத்தில் திருமணமாகுமா? எனக்கேட்கிறார் எனக் கொள்ளுங்கள். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கிறது அல்லவா? 7-ம் வீடும் சந்திரனும் சம்மந்தப் பட்டால் தாயார் வழி உறவில் திருமணமாகுமென்று கூறலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் தகப்பனார் வழி உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். புதன் சம்மந்தப்பட்டால் தாய் மாமன் உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். 9-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டல் அந்நியத்தில் திருமணமாகும் எனக்கூறலாம். ஏன் அந்நிய நாட்டினராகக் கூட இருக்கலாம்.

  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருகுலதெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் அனுகூலமாக உள்ளதா இல்லையா என்பது பற்றியும் நாம் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இயற்கையிலேயே உள்ள சுபக்கிரகங்கள் 9-ம் வீட்டில் இருந்தால் குலதெய்வத்தின் ஆதரவு இருக்கிறது எனப் பொருள். 9-ம் வீட்டின் அதிபதியும் நல்ல இடத்தில் இருப்பாரேயாகில் குல தெய்வத்தின் ஆதரவு இருக்கிறது எனப் பொருள். நல்ல இடமென்றால் கேந்திர ஸ்தானங்களிலோ அல்லது திரிகோண ஸ்தானங்களிலோ அல்லது லாப ஸ்தானமான 11-ம் வீட்டிலோ இருந்தால் குலதெய்வம் கைகொடுக்கு மெனக் கூறலாம்.

 

3-ம் இடமானது புத்தகங்கள், பத்திரிக்கைகள் வெளியிடுதலைக் குறிக்கிறது. அதாவது பொழுது போக்கு அம்சமான புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் தான் குறிக்கிறது. ஆனால் 9-ம் இடமோ மதம் சம்மந்தமான புத்தகங்கள், ஆன்மீக சம்மந்தமான புத்தகங்கள், வெளிநாட்டு சம்மந்தமுள்ள புத்தகங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. 9-ம்வீடு அதிபதியானவர் இலக்கினத்தையோ அல்லது சந்திரனையோ பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் செய்யும் பரிகாரகங்களுக்குப் பலன் இருக்கும். 9-ம் வீடு குலதெய்வத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே குல தெய்வத்தின் பக்கபலம் அந்த ஜாதகருக்குக் கிடைக்கும்.

  9-ம் வீட்டிற்குடைய கிரகம் இலக்கினத்தில் இருந்தால் பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். தருமங்கள் செய்பவராகவும் இருப்பர். தெய்வ வழிபாடு நிரம்ப இருக்கும்.

 

9-ம் வீட்டதிபதி 2-ம் வீட்டில் இருந்தால் அயல் நாட்டுத் தொடர்பு மூலம் பணவரவு இருக்கும். தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.

 

3-ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதரர், சகோதரிகளின் ஆதரவு இருக்கும். 4-ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். நல்ல செல்வாக்குடன் இருப்பார்கள்.

 

5-ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்.

 

6-ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும். தகப்பனார் உடல் நிலை பாதிக்கக் கூடும்.

 

7-ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும். அந்நியத்திலிருந்து பெண் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் கிடைக்கும்.

 

8-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கண்டம் எனக் கொள்ளலாம். பிதாவின் உடல் நிலையும் பாதிக்கப்படும்.

 

9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார். தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து இருக்கும். தகப்பனார் சொத்துக்கள் ஸ்திரமாக இருக்கும்.

 

10-ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர். தகப்பனாருடைய சொத்துக்கள் சிறந்த முறையில் விருத்தியாகும். பெரிய மனிதர்களின் நட்புக் கிடைக்கும்.

 

11-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். தெய்வ காரியங்கள் வீட்டில் நிறைந்து இருக்கும். அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் உண்டாகும்.

 

12-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கெடுதி உண்டாகும். தகப்பனாரின் சொத்துக்கள் நிலைக்காது. வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.

  இனிமேல் 9ம் வீட்டில் கிரகங்கள் நின்ற பலனைப் பார்ப்போம்.

 

சூரியன் : பொதுவாக ஒரு கிரகம் எதற்குக் காரகம் வகிக்கிறதோ அந்தக் காரகத்தைக் குறிக்கும் வீட்டில் அந்த கிரகம் இருப்பது நல்லது அல்ல என்று ஜோதிட

உலகம் கூறுகிறது. உதாரணமாக தாயாரைக் குறிப்பது சந்திரன்; 4-ம் வீடும் சந்திரனைக் குறிக்கிறது. ஆக தாயாரைக் குறிக்கின்ற கிரகமான சந்திரன், தாயாரைக் குறிக்கின்ற 4-ம் வீட்டில் இருப்பது தாயாருக்கு நல்லது அல்ல என்று கூறுவார்கள். இதைத்தான் "காரகோ பாவன சாய" என் சமஸ்கிருதத்தில் கூறுவார்கள். அதேபோன்று சகோதரத்தைக் குறிக்கும் கிரகமான செவ்வாய், சகோதரத்தைக் குறிக்கும் 3-ம் வீட்டில் இருப்பது நல்லது அல்ல; களத்திரத்தைக் குறிக்கும் வீடான சுக்கிரன், களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில்; இருப்பது நல்லது அல்ல; அதேபோல் தகப்பனாருக்குக் காரகம் வகிப்பவரான சூரியன், 9-ம் வீட்டில் இருப்பது நல்லது அல்ல; அதாவது தகப்பனாருக்கு தோஷம் என்றும் கூறலாம். ஆனால் இந்த விதிக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. ஆயுள்காரகனான சனி, ஆயுள்ஸ்தானமான 8-ம் வீட்டில் இருந்தால் தீர்க்க ஆயுள் உண்டு என்று ஜோதிட உலகம் கூறுகிறது. குரு பணத்திற்கு அதிபதி. 2-ம் வீடு தனஸ்தானத்தைக் குறிக்கிறது. "காரகோ பாவன சாயன" விதியின்படி குரு, 2-ம் வீட்டில் இருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது குரு 2-ம் வீட்டில் இருக்கப் பிறந்தவர்கள் நல்ல பண வசதியுடன் இருந்து வருகிறார்கள். இது அனுபவபூர்வமான உண்மை. சரி! நமது பாடத்துக்கு வருவோம்; 9-ம் வீட்டில் சூரியன் இருப்பது தகப்பனாருக்கு நன்மை அல்ல; இதைப் பிதுர் தோஷம் என்றும் கூறலாம். 9-ம் வீடு உயர் படிப்பைக் குறிக்கிறது அல்லவா? இங்கு சூரியனும் புதனும் சேர்ந்து இருக்கப் பிறந்தவர்கள் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். படிப்பில் அவர்கள் எதேனும் ஒரு Professional Course-ல் வல்லமை பெற்று இருப்பார்கள். சுறுக்கமாகச் சொல்லப் போனால் 9-ல் சூரியன், புதன் இருக்கப் பிறந்தவர்கள் படிப்பில் வல்லவர்களாக இருப்பார்கள்.

 

சந்திரன் : இங்கு சந்திரன் இருப்பது நல்லது அதுவும் தாயாருக்கு. நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இங்கு செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தாயாருக்கு காயம்படும்.தாயாரை கடும் வார்த்தைகளால் பேசுவர்.

  செவ்வாய் : தகப்பனாருக்கு உபாதைகளைக் கொடுக்கும். குருவோ அல்லது புதனோ இருக்கப் பிறந்தவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும், மத விஷயங்களில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

 

புதன் : இங்கு இருப்பது ஒருவரை மிக அறிவாளியாக ஆக்கும்.எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குருவும் சேர்ந்து கொண்டால் மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசுவர்.

 

குரு : சட்டப் படிப்பில் முன்னேற்றம் காணமுடியும். தன் சொந்த சகோதரர்களுடன் மிகவும் பிரியமாக இருப்பர். மிகவும் தெய்வபக்தியுடன் வாழ்க்கை நடத்துவர். வெளிநாடு செல்லும் யோகம் இவருக்கு இருக்கும். ஒரு குறிக்கோளுடைய வாழ்க்கை இருக்கும்.

 

சுக்கிரன் : மிக செளக்கியமான வாழ்க்கை நடத்துவர். அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர். கலைகளில் திறமைசாலியாக இருப்பர்.

 

சனி : ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை இருக்கும். தகப்பனருடன் நல்ல உறவு இருக்காது. மேல் படிப்பில் மந்தத்தன்மை இருக்கும். புதனும், சனியும் சேர்ந்தால் இவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருக்கமாட்டார்.

 

ராகு : தகப்பனாரை தூஷிப்பர். கடவுள் மேலும், அவர் சார்ந்துள்ள மதத்தின் பேரிலும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது.

 

கேது : தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது. மிக்க தைரியம் உள்ளவராக இருப்பர்.

 

இத்துடன் 9-ம் வீட்டைப் பற்றி முடித்துக் கொள்வோம். இனி அடுத்த பாடத்தில் 10-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.

  ஜோதிட குடும்பத்திற்கு வணக்கம். இன்றைய ஆய்வு சாதகம் சீனிவாசன் . வயது 38 முடிந்து 4 மாதம் 6 நாள் ஆகின்றது.

2. சாதகருக்கு லக்னத்தில் சூரியன். அதிக கோபம் உள்ளவர்.

3.2 ம் இடத்தில் சுக்ரன் புதன் சேர்க்கை மனைவியால் வருமானம்.

 

3ல் ராகு சகோதரனால் நன்மை இல்லை.

4.4க்கு உடையவர் லக்னத்தில் சுகம் உண்டு. 4ல் குரு, அங்சனி சேர்ந்து இருப்பதால் தாய் கடின உழைப்பாளி. ஆன்மீகவாதி.

5.5 க்கு உடைய புதன் 2ல் ராகு சாரம் இவர் தத்துப்பிள்ளையை வளர்ப்பார். சுக்ரன் cவ) மாகி கரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகி உள்ளதால் சாதகருக்கு குழந்தை இல்லை.

6.2க்கு உடையவர் ஆட்சி. திருவாதிரை நட்சத்திரம் Soசாதகர் ராகு திசை ராகு புத்தியில் மீடியாவில் வேலை செய்கிறார்.சாதகர் குரல் வளம் மிக்கவர். அறிவாளி

7 ச ந்திரன் 3 க்கு உடையவர் ஆகி 7, 12க்கு உடையவன் வீட்டில் 1,6 க்கு உடையவன் சாரம் சந்திரன் திசை சுக்கிர புத்தியில் வெளிநாட்டு வருமானம் கிடைத்தது.

87 க்கு உடையவன் சூரியன் வீட்டில் . மனைவி வழியில் அரசாங்க வேலை உண்டு. 2,5க்கு உடையவர் ஒருவரே . மனைவியின் அப்பா ஆசிரியர்

9.7க்கு உடையவன் 11ம் அதிபதி, சனியுடன் சேர்க்கை சாத கர் மனைவி மூத்தவர்.

10. மேசத்தில் உள்ள  கிரகம் பயன்படாது. 3 க்கு 2 டையவன் அங்கே.சகோதர உறவு பயன்பட வில்லை.

11. சூரி, சுக்(வ) அஸ்தமனம் ஆவதால் சாதகருக்கு காம ஈடுபாடு இல்லை.

12. செவ் சனி கும்பத்தை ஒரே பார்வையில் பார்க்கிறது.சாதகருக்கு விபத்தில் முழங்கால் அடிபட்டு, காயம் .

13.9ல் கேது இருப்பதால் ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டு.

14. முகத்தை குறிக்கும் பாவத்தில் சுக், புதன் சாதகர் அழகானவர்.

15. 12ல் சந்திரன் அம்மா Uயன் இல்லை.

16. சந்திரன் பாணியில் சாதகரின் அம்மா அப்பாவுக்கு 2 ம் தாரம்.

17.9க்கு உடையவரே 10க்கு உடையவர் மகரம் திதிகன்யம் சாதகருக்கு கருமம் செய்ய குழந்தை இல்லை.

18. சரி. இனி சாதகர் எப்படி இருப்பார்.

19.40 வயதில் இருந்து

  இதுவரை நாம் 9-வீடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இப்போது 10-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். இது மிகவும் முக்கியமான வீடாகும். இது ஒரு கேந்திரஸ்தானம் ஆகும். இதை ஜீவன ஸ்தானம் என்றழைப்பார்கள். ஒருவருக்கு மதிப்பு, கெளரவம் ஆகியவற்றையும் கொடுப்பது இந்த வீடுதானாகும். ஒருவரின் தொழிலைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருடைய பொதுவாழ்வைக் குறிப்பதும் இந்த வீடுதான். (Public Life). ஒருவரின் மதிப்பு, மரியாதை, உலகத்திலுள்ள சுகங்கள், இவைகளையெல்லாம் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் பதவி உயர்வு, வியாபார விருத்தி ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் வீட்டில் சனியிருந்து சுபரால் பார்க்கப்பட்டால் ஒருவரின் வாழ்க்கை உயர்வு மெதுவாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். உயர்வு மெதுவாகத்தான் இருக்கும். சனி சுபரால் பார்க்கப் படாமல் இருந்தால், வலுவில்லாமலும் இருந்தால் மிகச் சாதாரணமான பதவியே வகிப்பர். உயர் நிலைக்கு வருவது கடினம்.

 

சூரியன் : சூரியன் ஒருவருக்கு நல்லவிதமாக அமைந்துவிட்டால் மதிப்பு, மரியாதை ஆகியனவெல்லம் கிட்டும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். ஏனெனில் அரசாங்கத்தைக் குறிப்பவர் அவர்தான். சூரியன் சம்மநதப் பட்டால் செய்யும் தொழிலில் மரியாதை அல்லது கெளரவம் கிட்டும். சூரியன் மேலதிகாரிகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? அவர்கள் துணையுடன் பதவி உயர்வு பெற்று முன்னேற முடியும். சூரியன் தொழிலில் நிரந்திரத்தைக் கொடுப்பவர். அரசியலுக்கும் இவர் காரகம் வகிப்பதனால் அரசியலில் இவர் முன்னேற முடியும். மற்றவர்கள் இவர்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வார்.

 

சந்திரன் : பொதுவாக சந்திரனானவர் நிலையில்லாத தன்மை கொண்டவர். அவர் எங்கு இருந்தாலும் மாற்றத்தைக் கொடுப்பார். அதையும் தவிர மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர். நல்ல கிரகங்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மக்கள் தொடர்பு காரணமாக மிகவும் பிரபலமானவராக இருப்பர். பாவர் சேர்க்கை பெற்றிருப்பின் பொதுவாழ்க்கையில் கெட்ட பெயரே வந்து சேரும். வியாபரத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். தொழிலில் இருந்தாலும் வருமானத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டியதுவரும். சந்திரன் சரராசியில் இருந்து 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் தொழில் சம்மந்தமாகப் பிரயாணம் செய்ய வேண்டியது வரும். இதை நீர்க்கிரகம் என்பார்கள். நீர் சம்மந்தப்பட்ட தொழிலைக் கொடுப்பார். சிலர் கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் பணிபுரிவர்.

 

செவ்வாயானவர் தைரியத்தைக் குறிக்கும் கிரகம். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் தொழில் இருக்கும். தொழிற்சாலைகள், இயந்திரங்கள் போன்றவற்றையும் இவர் குறிப்பதால் இது சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நெருப்புக்கும் இவர் அதிபதியாவதால் நெருப்பு சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நிலம், வீடு போன்ற ஸ்திர சொத்துக்களுக்கும் இவர் அதிபதியாவதால் இது சம்மந்தமான வேலைகளிலும் இந்த ஜாதகர் ஈடுபடுவர். செவ்வாய் நன்கு இருக்கப் பிறந்தவர்கள் வீடு வாங்கி விற்பது போன்ற Real Estate - Business-ல் இருப்பார். செவ்வாய் வலுவற்று இருப்பவர்கள் வீட்டு வீலை செய்யும் தொழிலாளியாக இருப்பார்.

  புதன் பத்தாம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கமிஷன் வியாபாரம், ஏஜென்சித் தொழில் ஆகியவற்றில் இருப்பார். புதன் அறிவு கூர்மையைக் குறிக்கும் கிரகம் அல்லவா? புத்திகூர்மையைக் கொண்டுள்ள தொழில்களில் எல்லாம் இவர் சிறந்து விளங்குவார். ஆலோசனைத் தொழில், ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்ரில் இவர் சிறந்து விளங்குவர். புதன் இரட்டைக் கிரகம் அல்லவா? சிலருக்கு இரண்டுவிதமான தொழில் செய்ய முடியும். பொதுவாக புதன் 10-ம் இடத்துடன் சம்மந்தப் பட்டவர்கள் எஜமானராக இருப்பதைவிட ஒருவருக்குக் கீழ் இருப்பதையே விரும்புவார்கள்.

 

குரு ஒரு சுபக் கிரகம். அவர் 10-ம் வீட்டில் இருந்தால் புகழையும், பதவியையும் கொடுப்பார். அவர் தனகாரகன் அல்லவா? பணம் புழங்குகின்ற இடத்தில் வேலை கிடைக்கக் கூடும். பேங்குகள், கருவூலங்கள், போன்ற பணம் புழங்குகின்ற இடங்களில் வேலை கிடைக்கும். மிகவும் நியாயமான முறையில் சம்பாதிப்பார். குரு வேதாந்தம், மதங்களைக் குறிக்கிறது அல்லவா? இது சம்மந்தமான வேலையும் கிடைக்கும். பொதுவாக குருவானவர் உயர்ந்த பதவியைக் கொடுப்பார். இவருக்குப் பாவரின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மிகச் சாதாரண பதவியிலேயே இருப்பார்.

 

சுக்கிரன் : கலைக்கு அதிபதியான கிரகம். 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் கலைத் தொழில் சம்மந்தப் பட்ட துறையில் பணிபுரியலாம். வண்டி, வாகனங்களைக் குறிப்பதும் சுக்கிரன்தான். வாகனங்கள் சம்மந்தப்பட்ட துறையிலும் பணிபுரியலாம். சுக்கிரன் பெண்களுக்குக் காரகம் வகிப்பவர். சுபர்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் பெண்களால் அனுகூலம் அடைவர். இரண்டாம் வீட்டுடனும் சம்மந்தப்பட்டால் தேனொழுகப் பேசி காரியத்தை முடிப்பர். அழகு சாதனங்களை குறிப்பவரும் அவரே. ஆக அழகு சாதனங்கள் சம்மந்தப் பட்ட தொழிலிலும் இருப்பர்.

  நாம் இதுவரையில் 10-ம் வீட்டை தொழில் ஸ்தானம் என்றும், ஜீவன ஸ்தானமென்றும் கூறி வந்தோம். 10-ம் வீட்டில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எப்படித் தொழில் அமையும் எனவும் பார்த்தோம். இந்த வீட்டைக் கர்மஸ்தானமென்றும் கூறுவார்கள். அதாவது தாயார், தகப்பனருக்குக் கர்மம் செய்யும் வீடாகும். எப்படி? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் வீடு என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு. 2-ம் வீடு மாரகத்தைக் கொடுக்குமன்றோ! ஆகவே இந்த வீடு தகப்பனாருக்கு மாரகத்தைக் கொடுக்கும் வீடாக அமைந்து விடுகிறது. அதேபோல் 4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் வீடு என்பது 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடல்லவா? 7-ம் வீடும் மாரக ஸ்தானமன்றோ! ஆக 10-ம் வீடு தாயாருக்கு மாரகஸ்தானமாக அமைந்து விடுகிறது. ஒருவருக்கு 10-ம் வீட்டிலுள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 10-ம் வீட்டிற்குடையவனின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும் போது அவரின் தாயோ அல்லது தந்தையோ மரணமடையலாம். அப்போது அவருக்குக் கர்மம் செய்ய நேரம் வந்து விட்டது எனக் கூறுவார்கள். ஆக 10ம் இடம் ஜீவனத்தை மட்டும் குறிக்கவில்லை. தாய், தகப்பனாரின் மாரகத்தையும் அது குறிக்கிறது. ஆக ஒருவரின் 10-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திகளில் தாய் அல்லது தந்தையை இழக்க நேரிடும் எனத் தெரிந்து கொண்டீர்களல்லவா?

 

ஒருவருக்குப் "பதவி உயர்வு கிட்டுமா?" - என்ற கேள்வி எழலாம். அதற்கு 10-ம் வீட்டை மட்டும் வைத்துப் பதில் சொல்ல முடியாது. 2-ம் இடமான தன ஸ்தானம், 6-ம் வீடான தொழில் ஸ்தானம், 10-ம் வீடான ஜீவன ஸ்தானம், 11-ம் வீடான லாபஸ்தானம் ஆகியவற்றை வைத்துத்தான் கூறமுடியும். இந்த நான்கு வீட்டையும் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில்தான் ஒருவருக்குப் பதவி, உயர்வோ அல்லது வேலையோ கிட்டும்.

 

10-ம் வீடென்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு என்று மேலே கூறி இருந்தோம். 2-ம் வீடு தனஸ்தானம் அல்லவா? ஆக தகப்பனாரின் பொருளாதாரம், பணவசதி, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

  பத்தாம் வீட்டைப் பற்றி ஓரளவிற்கு நாம் தெரிந்து கொண்டோம். இப்போது மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். முதலில் ஒருவரின் "தொழிலை நிர்ணயிப்பது எப்படி?" எனப் பார்ப்போம்.

 

10-ம் வீட்டிலுள்ள கிரகம், 10ம் வீட்டைப் பார்க்கும் கிரகம், 10-ம் வீட்டின் அதிபதி, 10-ம் வீட்டின் அதிபதி இருக்கும் நவாம்சாதிபதி ஆகியவற்றை வைத்துத்தான் ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சில ஜாதகங்களை கீழே கொடுத்துள்ளோம். அவைகள் உங்களுக்கு மிக்க உதவியாக இருக்கும். ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : இலக்கினம்-தனுசு; மகரம்-சூரியன், சந்திரன், புதன்; மீனம்-கேது; மேஷம்- குரு, சனி; கன்னி-ராகு; விருச்சிகம்- செவ்வாய்;

 

நவாம்சம் : இலக்கினம்-தனுசு; மகரம்-செவ்வாய்; மேஷம்-ராகு; ரிஷபம்-சூரியன்; கடகம் - சந்திரன்; சிம்மம் - சனி, புதன், குரு; துலாம் - கேது; விருச்சிகம் - சுக்கிரன்.

 

10-ம் வீட்டின் அதிபதியார்? புதன்; அவர் நவாம்சத்தில் சூரியனின் வீட்டில் இருக்கிறார்;

 

10-ம் வீட்டில் ராகு; ராகுவுக்கு சொந்த வீடு எதுவும் கிடையாது. ஆகவே வீட்டின் அதிபதியான புதனின் பலனைத்தான் கொடுப்பார். ஆக புதன், சூரியன் சார்ந்த தொழிலைத்தான் கொடுக்க முடியும்.

 

1. சூரியன் சம்மந்தப் பட்டதால் அரசு சம்மந்தமான துறையில் வேலை செய்ய முடியும். ஏனெனில் சூரியன் அரசுத்துறைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் Accounts சம்மந்தமான தொழிலைக் கொடுப்பவர். ஆக புதனும் சூரியனும் சேர்ந்து இவரை அரசாங்கத்தில் Accounts சம்மந்தமான தொழிலைக் கொடுத்து இருக்கலாம்.

 

அல்லது

 

2. புதன் கமிஷன் தொழிலுக்கு அதிபதி. சூரியன் அரசாங்கத்திக் குறிப்பவர் அல்லவா? ஆக இவர் அரசாங்கம் சம்மந்தப்பட்ட சிறு சேமிப்பிலோ அல்லது பங்குகளிலோ வியாபாரம் செய்து அதற்குண்டான கமிஷன் பெறலாம்.

 

அல்லது

 

3. சூரியன் தன்வந்திரி என்றழைக்கப் படுகிறார். அவர் மருத்துவத் தொழிலுக்கு அதிபதி. புதன் எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் புத்தி கூர்மையைக்கொடுக்கின் றவர். ஆக இருவரின் சேர்க்கை இவரை ஒரு மருத்துவராக ஆக்கி இருக்கலாம்.

 

அல்லது

 

4. சூரியன் தங்கம், தாமிரம் போன்ற உலோகங்களுக்கு அதிபதி. ஆக இவர் தங்க வியாபாரமோ அல்லது தாமிர வியாபாரமோ செய்பவராக இருக்கலாம்.

 

இவ்வாறாக பலவிதமான தொழில்களைச் சொல்லலாம். ஆக ஒருவரின் தொழிலைக் கூறுவது என்பது மிகவும் கடினமான காரியம். உண்மையில் இவர் ஒரு அரசாங்க வங்கியில் பணி புரிந்தார். ஆக 10-ம் வீட்டிற்குடைய புதன், நவாம்சாதிபதி சூரியனுடன் சம்மந்தப்பட்டதால் அரசாங்க சம்மந்தமுடைய தொழில் செய்து வந்தார். வங்கித் தொழிலுக்கு வருவதற்கு முன்பு அரசாங்கப் பள்ளிகளில் கணித ஆசிரியராகத் தன்வாழ்க்கையைத் தொடங்கினார். புதன் கணிதத்திற்கும் அதிபதியல்லவா? ஆக இவர் அரசாங்கப் பள்ளிகளில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதனும், சூரியனும் எப்படி இவர் ஜீவனத்தைக் கொடுத்தது பார்த்தீர்களா?

 : இன்னும் ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : இலக்கினம் - மகரம்; இலக்கினத்தில் கேது, சந்திரன்; கும்பத்தில் செவ்வாய்; கடகத்தில் சுக்கிரன், ராகு; சிம்மத்தில் சூரியன், புதன்; துலாத்தில் சனி; விருச்சிகத்தில் குரு;

 

நவாம்சம் : இலக்கினம்-மிதுனம்; இலக்கினத்தில் புதன், சந்திரன்; கன்னியில் சுக்கிரன், கேது; விருச்சிகத்தில் சூரியன்; தனுசில் செவ்வாய், சனி; மகரத்தில் குரு; மீனத்தில் ராகு.

 

இவர் தொழில் என்னவாக இருக்குமென உங்களால் யூகிக்க முடிகிறதா? 10-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன்; 10-ம் வீட்டில் சனி; 10-ம் வீட்டிற்குடைய சுக்கிரன் நவாம்சத்தில் கன்னியில்; கன்னிக்கு அதிபதி புதன். ஆக இவருக்கு சுக்கிரன், சனி, புதன் சம்மந்தப்பட்ட தொழில்தான் அமையும். சரி! பலவித சாத்தியக் கூறுகளைப் பார்ப்போம்.

 

1. சுக்கிரன் காரகம் வகிக்கும் தொழில்களான கலைத் தொழில், வாகனங்கள் சம்மந்தமான தொழில்கள், பெண்கள் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்கள், ஆகியவற்றில் வேலையில் இருக்கலாம். சுக்கிரன் ஜாதகத்தில் கடகத்தில் ஜலராசியில் இருக்கிறார். சுக்கிரன் வாகனக்களுக்கு அதிபதி; ஜலராசியில் இருப்பதால் ஜலம் சம்மநதப்பட்ட தொழிலில், அதாவது கப்பலில் இருக்கலாம். சுக்கிரன் கால்நடைகளுக்கு அதிபதி. அவர் ஜல ராசியில் இருப்பதால் நீர் சம்மந்தப்பட்ட அதாவது பால் வியாபாரத்தில் இருக்கலாம்.

 

சுக்கிரன் புதன் நவாம்சத்தில் இருப்பதால் சுக்கிரனும், புதனும் சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கலாம். சுக்கிரன் ராசியில் சர ராசியில் இருக்கிறார். சரம் என்றால் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டுமல்லவா? வாகனங்கள் நகர்ந்து கொண்டே இருப்பன அல்லவா? சுக்கிரன் வாகனத்திற்குக் காரகம் வகிப்பதனாலும், புதன் கணக்கு மற்றும் Accounts களுக்குக் காரகம் வகிப்பதனாலும் இவர் Transport சம்மந்தமான தொழிலில் கணக்கராக இருக்கலாம்.

  10-ம் இடத்தில் சனி. சனி பூமியில் புதைந்து இருக்கும் கனிமங்களைக் குறிக்கிறது. சுக்கிரன் ஜலராசியில் இருப்பதனால் இவர் Petrol போன்ற திரவியங்கள் சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கலாம். அதாவது Madras Refineries, Indian Oil Corporation போன்ற நிறுவனங்களில் பணிபுரியலாம்.

 

இவ்வாறு பல தொழில்கள் நமக்குக் கிடைப்பதால் ஒருவரின் தொழிலைத்துல்லியமாகக் கூறுதல் மிகவும் கடினம். இதற்கு அனுபவம்தான் கைகொடுக்க வேண்டும். மேலா கூறிய ஜாதகத்தில் அவர் Transport Department - ல் கணக்கராகப் பணிபுரிகிறார்.

 

இந்த ஜாதகத்திக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : சிம்ம இலக்கினம்; இலக்கினத்தில் குரு, சந்திரன்; 3-ம் வீட்டில் அதாவது துலாத்தில் செவ்வாய்; 4-ம் வீட்டில் அதாவது விருச்சிகத்தில் சூரியன், சனி, புதன், ராகு; 5-ல் அதாவது தனுசில் சுக்கிரன்; ரிஷபத்தில் அதாவது 10-ல் கேது.

 

நவாம்சம் : இலக்கினம் - ரிஷபம்; மிதுனத்தில் குரு; கடகத்தில் சனி; சிம்மத்தில் சுக்கிரன், கேது. 7-ம் வீட்டில் அதாவது விருச்சிகத்தில் சந்திரன்; மகரத்தில் சூரியன், புதன், செவ்வாய்; 10-ல் அதாவது கும்பத்தில் ராகு.

 

இவர் தொழிலக் கூற முடியுமா? 10-ம் வீட்டு அதிபது சுக்கிரன். அவர் நவாம்சத்தில் சூரியனின் வீட்டில் இருக்கிறார். ஆக சூரியன், சுக்கிரன் சம்மந்தப் பட்ட தொழிலாகத்தான் இருக்க வேண்டும். சூரியன் தனவந்த்ரி என்றழைக்கப் படுகிறார். அதாவது மருத்துவத்திற்கு அதிபதி. இந்த ஜாதகர் ஒரு மருத்துவர். மருத்துவத்தில் பல துறைகள் இருக்கிறது அல்லவா?. இவர் எந்தத் துறையைச் சேர்ந்தவர் ? 10-ம் வீட்டிற்கதிபதி சுக்கிரன்; இவர் பெண்களைக் குறிக்கிறார். சுக்கிரன் 5-ம் வீட்டைக் குறிக்கிறது. 5-ம் வீடு மகப்பேற்றைக் குறிக்கிறது அல்லவா? இவர் மகப்பேரு பார்க்கும் மருத்துவர். என்ன விளக்கம் புரிகிறதா? இவ்வாறாக ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆராய வேண்டும்.

  நம்மிடம் பலர் தொழில் சம்மந்தமான கேள்விகளைக் கேட்ப்பதுண்டு. அத்தகைய கேள்விகளை உங்கள் முன் வைத்துவிட்டு அதற்கு பதிலும் அளிக்கப் போகின்றோம்.

 

கேள்வி : ஒருவர் துணி வியாபாரம் செய்ய எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்?

 

பதில் : சுக்கிரன் துணிகளுக்குக் காரகன். புதன் வியாபரத்திற்கு அதிபதி. ஆக புதனும், சுக்கிரனும் 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு துணி வியாபாரம் அமையும்.

 

கேள்வி : கட்டிடம் Contract எடுத்துத் தொழில் செய்ய எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்?

 

பதில் : கட்டிடங்களுக்கு அதிபதி செவ்வாய். புதன் Contract அல்லது Agency-க்கு அதிபதி. ஆக செவ்வய்-புதன் சேர்க்கை இந்தத் தொழிலுக்குத் தேவை.

 

கேள்வி :தையல் தொழில் செய்யத் தேவையான கிரகங்கள் என்ன?

 

பதில் : இதில் மூன்று வித கிரக் சேர்க்கை இருக்க வேண்டும். துணிகளுக்கு சுக்கிரன் காரகம் வகிக்கிறார். செவ்வாயானவர் மிஷின் சம்மந்தப் பட்ட தொழிலைக் குறிக்கிறார். சனி உடல் வருத்திச் செய்யும் தொழிலைக் குறிப்பார். ஆகவே சுக்கிரன், செவ்வய், சனி சம்மந்தப் பட்டவர்கள் தையல் சம்மந்தமான தொழிலில் இருப்பார்கள்.

 

கேள்வி :சுறுக்கெழுத்தாளராக என்ன சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : புதன் புத்தகங்களையும், Clerical work - களையும் குறிக்கிறது. செவ்வாய் மெஷினரிகளைக் குறிக்கிறது. சனி எதையும் சுறுக்கமாகத் தெரிவிப்பதைக் காட்டுகிறது. Short-hand என்பதே எதையும் சுறுக்கமாகத் தெரிவிப்பது அல்லவா? ஆக புதன், செவ்வய், சனி சம்மந்தப்பட்டால் ஒருவர் சுறுக்கெழுத்தாளராக முடியும்.

 

கேள்வி : போலீஸ் அல்லது ராணுவத்திற்கு ஏந்த கிரக சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : செவ்வாய். அவர்தான் ஒருவருக்கு தைரியத்தைக் கொடுப்பவர். ஒருவரின் ஜீவனஸ்தானத்துடன் செவ்வாய் சம்மந்தப் பட்டால்தான் ஒருவர் போலீஸ் ஆக முடியும். செவ்வாயுடன் சுக்கிரனும் சம்மந்தப் பட்டால் ஒருவர் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவராக இருப்பார். ஏனெனில் சுக்கிரன் வாகனங்களுக்குக் காரகம் வகிப்பவர். குரு சம்மந்தப் பட்டால் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பவராக இருப்பார். குரு சட்டம், ஒழுங்குகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா!

 

கேள்வி : விவசாயக் கருவிகளை விற்பனை செய்ய என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

  பதில் : விவசாயத்திற்குக் காரகம் வகிப்பவர் சுக்கிரன். மெஷினரிகளுக்குக் காரகம் வகிப்பவர் செவ்வாய். ஏஜென்சிகளுக்குக் காரகம் வகிப்பவர் புதன். இந்த மூவர் சேர்க்கை இருக்க வேண்டும்.

 

கேள்வி : "எவர் சில்வர்" பாத்திரங்களை விற்பனை செய்ய என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : துருப்பிடிக்காத இரும்புதான் எவர்சில்வர் என்பது. இரும்பைக் குறிப்பது சனி. சுத்தம் செய்து பொலிவுபடுத்துதலைக் குறிப்பது சுக்கிரன். ஆக இந்த இரண்டு கிரகச் சேர்க்கைதான் எவர்சில்வர் வியாபாரத்தைக் குறிக்கிறது.

 

கேள்வி : இனிப்புப் பண்டங்களை வியாபாரம் செய்ய எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : இனிப்புக்களுக்குக் காரகம் வகிப்பவர் சுக்கிரன். அவர் ஜீவன ஸ்தானத்துடன் சம்மந்தப்பட வேண்டும்.

 

கேள்வி :பெட்ரோல் சம்மந்தமான தொழிலைக் குறிப்பது எந்த கிரகம்?

 

பதில் : சனியானவர் பூமிக்கு அடியில் இருக்கும் பொருள்களைக் குறிக்கிறார். பெட்ரோல் என்பது நீர்சம்மந்தமானது அல்லவா? ஆக நீர்க் கிரகமான சந்திரனும் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் அல்லவா பெட்ரோல் என்பது; ஆக சுக்கிரனும் சேர்ந்திருக்க வேண்டும்.சனி-சந்திரன் -சுக்கிரன் சேர்ந்ததுதான் பெட்ரோல் என்பது.

 

கேள்வி :ஒருவர் பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் அதற்கு என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : ஒருவர் அச்சு ஆபீஸ் வைத்து பத்திரிகை நடத்தலாம். பத்திரிகைகளுக்குக் காரகம் வகிப்பவர் புதன். அச்சு அடிக்கிற மெஷினைக் குறிப்பது செவ்வாய். ஆக செவ்வாய், புதன் சேர்க்கை அச்சு அடிக்கும் மெஷின் வைத்து பத்திரிகை நடத்துபவர்களைக் குறிக்கிறது. ஒருவர் எந்த மாதிரியான பத்திரிகை நடத்துவர் என்று கூடக் கூறலாம். செவ்வாய், புதனுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் பெண்கள் சம்மந்தமான அல்லது சினிமா சம்மந்தமான பத்திரிகை நடத்தலாம். இல்லை ஆபாசப்புத்தகங்கள் கூட வெளியிடலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் அரசியல் அல்லது மருத்துவப் பத்திரிகை நடத்தலாம். குருவாக இருந்தால் குழந்தைகள் அல்லது ஆன்மீகப் பத்திரிகை அல்லது சட்டம் சம்மந்தமான பட்த்திரிகை நடத்தலாம். பாடப் புத்தகங்கள் அல்லது ஜோதிடப் பத்திரிகை நடத்துவதற்கு புதனின் சேர்க்கையும் இருக்க வேண்டும். சனி சேர்ந்தால் தொழிலாளர் சம்மந்தமான பத்திரிகை நடத்தலாம்.

 

கேள்வி : தோல் வியாபாரம் செய்ய எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

  பதில் :கால் நடைகளைக் குறிப்பது சுக்கிரன். தோலைக் குறிப்பது சனி. தோல்பதனிடும் இயந்திரங்களைக் குறிப்பது செவ்வாய். ஆக இந்த மூன்றின் சேர்க்கைதான் ஒருவருக்கு தோல் பதனிடும் வேலையைக் கொடுக்க முடியும்.

 

கேள்வி : இப்போது எல்லோரும் Engineering College -ல் சேர்ந்து படிக்கிறார்கள். அப்படிப் படிக்க என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் :பொதுவாக Engineering என்றாலே புதன்தான் அதற்குக் காரகம் வகிக்கிறார். Mechanical Engineering என்றால் புதனுடன் செவ்வாயும் சேர வேண்டும். Marine Engineering என்றால் புதன், செவ்வாயுடன் சந்திரனும் சேர வேண்டும்.

 

நாம் மேலே பல தொழில்களுக்குண்டான கிரகச் சேர்க்கையைக் கூறி இருந்தோம். உங்களுக்கு பல தொழில்களை எப்படி கிரகச் சேர்க்கை மூலம் தேர்ந்தெடுப்பது என்பதை விளக்குவதற்காகவே கூறி இருந்தோம். ஒருவரின் தொழிலைக் கூறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் ஒரு கிரகத்துக்குப் பல காரகத்து வங்கள் இருப்பதால் அதைக் கூர்ந்து கவனித்துக் கூற வேண்டும். இல்லையென்றால் நகைப்புக்குள்ளாவீர்கள்.

 

இப்போது ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்:

 

ராசி : தனுர் இலக்கினம்; இலக்கினத்தில் சுக்கிரன்; 2-ம் வீட்டில் சந்திரன்; 4-ம் வீட்டில் கேது; 5-ம் வீட்டில் செவ்வாய்; 10-ம் வீட்டில் ராகு; 11-ம் வீட்டில் குரு; 12-ம் வீட்டில் சூரியன், புதன், சனி;

 

நவாம்சம் : ரிஷப இலக்கினம்;இலக்கினத்தில் சுக்கிரன்; 2-ல் குரு;4-ல் சிம்மத்தில் சந்திரன், ராகு; 6-ல் புதன்; 8-ல் செவ்வாய்;10-ல் கேது; 11-ல் சூரியன், சனி;

 

இவர் என்ன தொழில் என்று கூற முடியுமா? 10-ம் வீட்டிற்கு அதிபதி புதன்; அவர் சுக்கிரன் நவாம்சத்தில் இருக்கிறார்; புதன் ராசியில் செவ்வாய் வீட்டில் இருக்கிறார். ஆக புதன், செவ்வாய், சுக்கிரன் இவருக்கு தொழிலைக் கொடுக்க வேண்டும். நாம் சாத்தியக் கூறுகளைப் பார்ப்போம்.

 

1. புதன் Engineering கல்விக்கு அதிபதி; கூட செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் இவர் ஒரு Mechanical Engineer- ஆக இருக்கக் கூடும். சுக்கிரனும் சேர்ந்து இருப்பதால் போக்குவரத்து சம்மந்தமான துறையில் இவர் Engineer ஆக இருக்கக்கூடும்.

 

2. புதன் புத்தகங்களுக்கு அதிபதி; அவர் செவ்வாய் வீட்டில் இருப்பதால் புத்தகம் அச்சிடும் வேலையில் இருக்கலாம்; சுக்கிரனும் சம்மந்தப் பட்டுள்ளதால் பெண்கள் சம்மந்தமான புத்தக வெளியீடுகளிலோ அல்லது சினிமா சம்மந்தப் பட்ட புத்தகங்களிலோ இருக்கலாம்; இவ்வாறு பல தொழில்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இருப்பினும் இவர் எங்கு வேலை பார்த்தார் என்று சொல்லிவிடுகிறோம்.

 

புதன் அதிபதியாக இருக்கும் Accounts - தொழிலில் B.Com பட்டதாரியானார். சுக்கிரன் சம்மந்தப்பட்ட Fertiliser-களைத் தயாரிக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்தார். ஒருகிரகம் பல தொழில்களைக் குறிப்பதால் ஒருவர் தொழிலைக் குறிப்பிடுவது மிக சிரமமான காரியம். அனுபவம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தர வேண்டும்.

  ஒருவர் எந்த மாதிரியான தொழில் செய்ய முடியும் என்பதைப் போன பாடத்தில் பார்த்தீர்கள். பலவகைப் பட்ட கிரகங்களின் சேர்க்கையால் எந்தத் தொழில் செய்ய முடியும் என்பதையும் விளக்கி இருந்தோம். ஒருவருக்கு எப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். பதவி உயர்வு கிடைக்க நாம் 2, 6, 10 மற்றும் 11-ம் வீடுகளை ஆராய வேண்டும். இந்த வீட்டைக் குறிக்கும் கிரகங்களால்தான் பதவி உயர்வைக் கொடுக்க முடியும். ஏன்? இரண்டாம் வீடென்பது பண வரவைக் குறிக்கிறது. பதவி உயர்வென்றால் பண வரவும் இருக்க வேண்டுமல்லவா? பணவரவைக் குறிப்பது 2-ம் வீடல்லவா? ஆக இரண்டாம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் ஒருவருக்குப் பதவி கிடைக்கும். 6-ம் வீடென்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. நாம்செய்யும் தொழிலிலிருந்துதானே நாம் பதவி உயர்வை எதிர்பார்க்கிறோம். ஆக நாம் 6-ம் வீட்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.10-ம் வீடென்பது ஜீவனஸ்தானம். ஜீவனமென்பது தொழிலாக இருக்கலாம். அல்லது உத்தியோகமாக இருக்கலாம். அதில் உயர்வு பெற வேண்டுமென்றால் அந்த வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் தானே முடியும். ஆக 10-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 11-ம் வீடென்பது லாப ஸ்தானம். அதாவது நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்ற வீடாகும். ஆக 11-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு வீடுகளைக் குறிக்கும் தசாபுக்தி காலங்களில்தான் ஒருவர் பதவி உயர்வு பெற முடியும்.

 

6-ம் வீடென்பது, ரண, ரோகம், வியாதி, கடன் ஆகியவற்றைத்தான் குறிக்குமென்று என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது தவறு. 6-ம் வீடு ஒருவருக்கு வெற்றியையும் கொடுக்கும் வீடாகும். 7-வது வீடு நம்முடன் போட்டி போடுபவரைக் குறிக்கிறது. அவருக்கு தோல்வியைக் கொடுப்பது 12-ம் வீடல்லவா?

 

7-க்குப் 12-ம் வீடு எது? 6-ம் வீடல்லவா? ஆக ஒருவர் 6-ம் வீடு குறிக்கின்ற தசாபுக்திக் காலங்களில் எடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

மிதுன இலக்கினம்.

கடகத்தில் சூரியன், சுக்கிரன்; சிம்மத்தில் புதன்;

துலாத்தில் ராகு;

தனுசில் சந்திரன்;

மகரத்தில் செவ்வாய்;

மீனத்தில் குரு;

மேஷத்தில் சனி, கேது;

  இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு செவ்வாய் தசை அப்போதுதான் ஆரம்பமாயிற்று; செவ்வாய் 6-ம் வீட்டிற்கு அதிபதி; 8-ம் வீட்டில் இருக்கிறார்; ஆகக் கடனால் கஷ்டப்படுவார் என்று பலர் ஆரூடம் கூறினார்கள். அப்பொழுது அவருடைய கம்பெனியில் பதவி உயர்வுக்கு பலரைப் பரிசீலனை செய்தார்கள். இவரைக் காட்டிலும் அனுபவத்தில் அதிகமுள்ள அதிகம் படித்த பலர் இருக்க இவரைத் தேர்வு செய்தார்கள்.

 

அதற்கான காரணங்களைப் பார்ப்போம். செவ்வாயானவர் 6-ம் வீட்டிற்கும் 11-ம் வீட்டிற்கும் அதிபதி. 6-ம் வீடு என்பது நாம் மேலே கூறியதுபோல் மற்றவருக்குத் தோல்வியையும், ஜாதகருக்கு வெற்றியையும் கொடுக்கும் வீடல்லவா? 6-ம் வீடென்பது செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடல்லவா? 11-ம் வீடு லாபத்தைக் குறிக்கும் வீடு. ஆக செவ்வாய் தசை சுய புக்தியில் இவருக்குத் தொழிலில் பதவி உயர்வைக் கொடுத்தது. பார்த்தீர்களா 6-ம் வீடு எப்படித் தொழிலில் வெற்றியைக் கொடுத்தது என்று! அதேபோன்று 10-ம் இடத்தைக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் ஒருவருக்குப் பதவி உயர்வு கிட்டும்.

 

5ம் வீட்டையும் 9-ம் வீட்டையும் திரிகோண ஸ்தானமென்று கூறுவார்கள். ஆகையால் இந்த வீடுகள் மிக உயர்வாகக் கருதப்படுகின்றன. ஆனால் செய்யும் தொழிலைப் பொருத்தவரையில் 5-ம் வீடும் 9-ம் வீடும் நன்மை பயக்காதவை. ஏனெனில் 5-ம் வீடு என்பது 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு; 9-ம் வீடென்பது 10-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு. எந்த வீட்டிற்கும் அதற்குப் 12-ம் வீடு நன்மை பயக்காதவை அல்லவா!உதாரணத்திற்கு கீழே கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

 

ராசி :

 

தனுசு இலக்கினம்;

4-ம் வீடான மீனத்தில் செவ்வாய், கேது;

6-ம் வீடான ரிஷபத்தில் குரு, சனி;

7-ம் வீடான மிதுனத்தில் சூரியன், புதன்;

8-ம் வீடான கடகத்தில் சுக்கிரன்;

9-ம் வீடான சிம்மத்தில் சந்திரன்;

10-ம் வீடான கன்னியில் ராகு;

 

நவாம்சம்:

 

இலக்கினம்: மேஷம்;

2-ம் வீடான ரிஷபத்தில் குரு;

4-ம் வீடான கடகத்தில்

கேது, சுக்கிரன்;

5-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;

7-ம் வீடான துலாத்தில் புதன்;

8-ம் வீடான விருச்சிகத்தில் சனி, சந்திரன்;

10ம் வீடான மகரத்தில் ராகு;

11ம் வீடான கும்பத்தில் சூரியன்.

 

ஜெனன காலத்தில் இருப்பு தசை சுக்கிரன்: 3 வருஷம்; 2 மாதம் 7 நாள்

  இவர் ஒரு Chartered Accountant. கல்விக்கு அதிபதியாகிய புதன் தன் சொந்த வீட்டில் சூரியனுடன் இருப்பது இவருக்கு ஒரு நல்ல கல்வியைக் கொடுத்துள்ளது. 4-ல் செவ்வாய். பூமிகாரகனாகிய செவ்வாய், ஸ்திர சொத்துக்களைக் குறிக்கும் 4-ம் வீட்டில் இருப்பதால் இவருக்கு சொந்தத்தில் வீடு உள்ளது. 8-ம் வீட்டில் சுக்கிரன். 8-ம் வீடு என்பது இவருடைய வாழ்க்கைத் துணைவியின் தன ஸ்தானம் அல்லவா! மனைவியினுடைய தன ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் ஒரு வசதியான வீட்டிலிருந்து ஒரு பெண் மனைவியாக வாய்த்தாள். 10-வது வீட்டின் அதிபதியான புதன் சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் இவர் தொழிலில் சேரும் போதே ஒரு அதிகாரியாகவே சேர்ந்தார். Sun Gives authority and Power. இதெல்லாம் இவருடைய ஜாதகத்தைப் பற்றிய விளக்கங்கள். இவருக்கு ராகு தசை, செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்த போது இவர் வேலையை இழக்க நேரிட்டது. ராகு 10-ல் இருந்தாலும் 9-ம் வீட்டிற்குடைய சூரியனின் சாரத்தில் அதாவது உத்திர நட்சத்திரத்தில் இருக்கிறார். புக்தி நாதனாகிய செவ்வாய் 5ம் வீட்டிற்கும், 12-ம் வீட்டிற்கும் அதிபதி. ராகு 9-ம் வீட்டுப் பலனையும், செவ்வாய் 5-ம் வீட்டுப் பலனையும் கொடுத்து விட்டார்கள். நாம் மேலே கூறியதுபோல் 9-ம் வீடும், 5-ம் வீடும் செய்கின்ற தொழிலுக்கு எதிர் மறையான பலனைக் கொடுக்கக் கூடிய வீடுகள் அல்லவா? ஆகவே அவர் தன்னுடைய வேலையை இழக்க நேரிட்டது. எப்படி 5-ம் வீடும், 9-ம் வீடும் வேலை செய்கின்றனவென்று பார்த்தீர்களா?

 

இதைப்போல் பல ஜாதகங்களை நம்மால் உதாரணம் காட்ட முடியும். அவைகளைப் பற்றி விளக்கமாகப் "பலன் சொல்வது எப்படி?" என்று எழுதும் போது உதாரணமாக அளிப்போம். நாம் இப்போது 12- பாவங்களையும் பற்றி விளக்கமாக எழுதி வருகிறோம். இதை முடித்தபின்பு பலன் எப்படிச் சொல்வது என்று எழுதப் போகின்றோம். அப்போது இதைப்போல் பல ஜாதகங்களை விளக்கமாக எடுத்துக் கொண்டு எழுதுவோம். 5-ம் வீடும் 9-ம் வீட்டினுடைய மறு பக்கத்தைத்தான் நாம் மேலே எழுதியுள்ளோம்.

  நாம் இதுவரையில் எந்தெந்த கிரகச் சேர்க்கை இருந்தால் எந்த மாதிரியான தொழில் அமையும் என்றும், பதவி உயர்வு எப்போது வரும் என்றும், பதவிக்கு எப்போது பங்கம் வரும் என்றும் எழுதி இருந்தோம். நீங்களும் ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறோம். சிலருக்கு இரண்டுவிதமான வருமானம் வரும். அதாவது ஒரு தொழிலில் இருப்பார். மாலை நேரங்களில் அல்லது நேரம் கிடைக்கும்போது வேறு வேலை செய்வர். சிலர் வேலை செய்து கொண்டே L.I.C Agent, அல்லது அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள சிறு சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு Agent ஆக இருப்பர். மருத்துவரை எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்க மருத்துவ மனைகளில் மருத்துவராக இருந்து அரசாங்க ஊதியம் பெறுவர். காலை அல்லது மாலையில் தனிப்பட்ட முறையில் மருத்துவம் பார்த்து சம்பாதிப்பர். இந்த மாதிரி சம்பாதிக்க Professional - ஆகப் படித்து இருக்க வேண்டும். ஒரு டாக்டர் அல்லது Engineer அல்லது வக்கீலால் மட்டுமே இவ்வாறாக சம்பதிக்க இயலும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரத்தில் வேறொரு இடத்தில் கணக்கெழுதிப் பணம் சம்பாதிப்பர். இவ்வாறு இரண்டு விதவருமானத்தைத்தான் இரட்டை வருமானம் என்று கூறுகிறோம். சிலரின் மனைவி வேலை பார்த்து சம்பாதிப்பர். இதுவும் ஒரு விதத்தில் இரட்டை வருமானம்தான். இவ்வாறாக இரண்டு வித சம்பாதியத்திற்கு எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டுமென்பதைப் பார்ப்போம்.

 

புதனுக்கு இரட்டைக் கிரகமென்று பெயர். உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவைகளுக்கு இரட்டை ராசிகளென்று பெயர். புதன் வருமானத்தைக் கொடுக்கக்கூடிய 2-ம் வீடு அல்லது 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவருக்கு இரட்டை வருமானத்திற்கு யோகமுண்டு. உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். புதன் எதையும் இரண்டாகக் கொடுக்கக் கூடியவர்.

 

தனுர் இலக்கினம்;

இலக்கினத்தில் சூரியன், புதன்;

3-ல் அதாவது கும்பத்தில் குரு;

மீனத்தில் சனி;

மேஷத்தில் கேது;

கடகத்தில் சந்திரன்;

துலாத்தில் செவ்வாய், ராகு;

12-ல் சுக்கிரன்.

 

தனுர் இலக்கினத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி புதன்; அதாவது அவர் மனைவியைக் குறிப்பது புதன்; அவரே 10-ம் வீட்டிற்கும் அதிபதியாகி இலக்கினத்தில் இருக்கிறார். இவர் மனைவி இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே பணி புரிகிறார். ஆக இவருக்கு இரட்டைக் கிரகமான புதன் இரட்டை வருமானத்திக் கொடுத்து விட்டார்.

  இன்னும் ஒரு ஜாதகத்தை குறித்துக் கொள்ளுங்கள்.

 

மிதுன இலக்கினம்;

கன்னியில் ராகு;

10-ல் சந்திரன், கேது;

11-ல் சூரியன், புதன், குரு, சனி;

12-ல் செவ்வாய், சுக்கிரன்;

 

இவருக்கு 7, 10-க் குடையவன் குரு லாப ஸ்தானமான மேஷத்தில்; குருவுடன் புதன்; ஆக இவருக்கும் மனைவி மூலமாக வருமானம் உண்டு. ஆக இவருக்கும் இரட்டை வருமானம் கிடைக்கிறது. இதுவரையில் மனைவி மூலமாக வருமானம் வருபவரின் ஜாதகங்களைப் பார்த்தோம்.

 

சிலர் அரசாங்கத்தில் வேலை பார்ப்பர். சம்பளம் என்று மாதம் பிறந்தால் வாங்குவர். மேஜைக்கு அடியிலும் தினமும் பணம் வாங்குவர். இதுவும் ஒரு வகை வருமானம்தானே. நிரந்தரமான சம்பளம். அதைத்தவிர தினமும் மேல் வரும்படி. ஆக இரண்டு வகையில் வருமானம். இவருக்கு எப்படிப் பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டும்? 10-ம் வீடு என்பது ஜீவனஸ்தானம் ஆகும். 2-ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 6-ம் வீடு நீங்கள் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. இந்த மூன்று வீடுகளில் ஒன்றுடன் சனி சம்மந்தப்பட்டு இருப்பர். சனிதான் எதையும் ரகசியமாகச் செய்பவராயிற்றே! மேஜைக்கு அடியிலும் வாங்க வேண்டுமென்றால் ரகசியமாகத்தானே வாங்க வேண்டும். ஆக சனி இந்த வீடுகளுடன் சம்மந்தப்பட்டு இருப்பர். சனிமட்டும் போதுமா? போதாது. இந்த வீடுகளுடன் இரட்டை ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளோ அல்லது இரட்டை ராசியான புதனோ சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்த மாதிரியான வருமானம் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள். நாம் மேலே கூறியபடி கிரக நிலகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். உண்மை விளங்கும்.

 

நம்முடைய வாசகர்களில் ஒருவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் 6-ம் வீடு ரணம், ரோகம், வியாதி, கடன், செய்யும் உத்தியோகம், மனவியிடமிருந்து பிரிந்து இருத்தல், போட்டியில் வெற்றி பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது என்று கூறுகின்றீர்கள். ஒருவருக்கு 6-ம் வீட்டு அதிபதியின் தசை நடக்கிறது எனக் கொள்ளுங்கள். இதில் எது நடக்கும்? அவர் உடல் நிலை பாதிக்கப் படுமா? வேலை கிடைக்குமா? இல்லை போட்டியில் வெற்றி பெறுவாறா? இல்லை மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு Divorce செய்வாறா? எப்படிப் பலன் சொல்வது? எனக் கேட்டார்.

 

மிகவும் நியாயமான கேள்வி? நாம் பதில் சொல்லியே தீர வேண்டும். ஒருவருக்கு 6-ம் வீட்டின் அதிபதி தசையோ அல்லது 6-ல் உள்ள கிரகத்தின் தசையோ நடக்கிறது எனக்கொள்வோம். தசை முழுவதும் உடல் நிலை பாதிக்காது. இலக்கினத்தைக் குறிக்கும் கிரகத்தின் புக்தியோ அல்லது இலக்கினத்தில் உள்ள கிரகத்தின் புக்தியோ நடக்க வேண்டும். அப்போதுதான் உடல் நிலை பாதிக்கப்படும்.

  இலக்கினம் என்பது ஒருவரின் உடலைக் குறிக்கிறது அல்லவா? அப்போது உடல் நிலை பாதிக்கப்படும். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக்கொள்ளுங்கள். 6-ம் வீட்டிற்கு அதிபதியான சனியின் தசை நடைபெறுகிறது எனக்கொள்ளுவோம். 19-ஆண்டுகளுமா உடல் நிலை பாதிக்கப்படும். புதனானவன் இலக்கினாதிபதி. ஆக புதன் புக்தியில் உடல் நிலையில் பாதிப்பு இருக்கும். அப்போது உடல் நிலை குன்றும். இலக்கினத்தில் வேறு ஏதாவது கிரகம் இருந்தாலும், உதாரணமாக கேது இருக்கிறது எனக் கொள்ளுங்கள். கேது புக்தியிலும் உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். அதாவது எந்த கிரகம் இலக்கினத்தைக் குறிக்கிறதோ அந்த கிரகத்தின் புக்தியில் உடல் பாதிப்பு இருந்துவரும். சரி! புதனானவர் 12-ம் வீட்டில் இருக்கிறார். என்ன பலன்?

 

புதன் இலக்கினாதிபதி; 12-ம் வீட்டில் இருக்கிறார். ஆக புதன் 1ம்வீட்டையும் 12ம் வீட்டையும் குறிக்கிறார். 12-ம் வீடு மருத்துவமனையைக் குறிக்கிறது அல்லவா? தசாநாதன் உபாதையையும் புக்தி நாதன் அதனால் மருத்துவமனையில் இருத்தலையும் குறிக்கிறார். ஆக சனிதசை, புதன் புக்தியில் ஒருவர் நோய்வாய்ப் பட்டு மருத்துவமனையில் இருப்பார்.

 

சரி! புதன் 12-ம் வீட்டில் இல்லாமல் 8-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 8-ம் வீடு தண்டச் செலவுகளைக் குறிக்கிறது அல்லவா? ஆக சனிதசை, புதன்புக்தியில் உடல் உபாதைகாரணமாக தண்டச் செலவு செய்வார்.

 

சுக்கிரன் புக்தி நடக்கிறது எனக் கொள்ளுங்கள். கன்னியா இலக்கினத்திற்கு சுக்கிரன் 2-ம் வீட்டிற்கு அதிபதி அல்லவா? சரி! அப்போது அவர் வங்கியில் கடன் வாங்க மனுச் செய்து இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 7-ம் வீடு என்பது நாம் மனுச்செய்துள்ள வங்கியைக் குறிக்கிறது. நமக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வங்கியில் உள்ள பணம் குறைகிறது அல்லவா? பணம் கொடுப்பதை அல்லது பணம் குறைவதைக் குறிப்பது 7-க்குப் 12-ம் வீடான 6-ம் வீடல்லவா? ஆக 6-ம் வீட்டைக் குறிக்கின்ற தசா, புக்திக்காலத்தில் ஒருவருக்குப் பணம் கிடக்கும். நாம் மேற்கூறிய உதாரணத்தில் சனி 6-ம் வீட்டின் அதிபதி. அவர் தசையில் பணம் கிடைக்கும். எந்த புக்தியில் கிடைக்கும். தனவரவைக் குறிக்கின்ற 2-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகத்தின் புக்தியிலோ அல்லது லாபத்தைக் கொடுக்கும் 11-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகத்தின் புக்தியிலோ பணம் கிடைக்கும். இங்கு சுக்கிரன் 2-ம் வீட்டின் அதிபர். ஆக சனிதசை, சுக்கிர புக்தியில் ஒருவருக்கு எதிர்பார்த்த கடன் கிடைக்கும். அதேபோல் இந்த தசை, புக்தியில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். அல்லது வேலை செய்து கொண்டிருப்பவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். 6-ம் வீடு உத்தியோகத்தையும் 2-ம் வீடு பணவரவையும் குறிக்கிறது அல்லவா?

 

சரி! இவருக்கு குரு புக்தி நடக்கிறது எனக் கொள்ளுங்கள். குரு 9-ம் வீட்டில் இருக்கிறார் எனவும் கொள்ளுங்கள். 7-ம் வீடு மனைவியையும் 9-ம் வீடு அயல் நாட்டுப்பயணத்தையும் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீடு கணவன் மனைவி பிரிதலைக் குறிக்கிறது. ஆக இவர்மனைவி இவரை விட்டு அயல் நாட்டுப் பயணம் செய்வார் எனக்கொள்ள வேண்டும். சரி! குருவானவர் 12- வீட்டில் இருக்கிறார் எனக் கொள்வோம். 6-ம் வீடும் 12-ம் வீடும் கணவன்-மனைவி பிரிதலைக் குறிக்கிறது. ஆக குருபுக்தியில் கணவன்-மனைவி பிரிந்து இர்ப்பார்கள். ஏன் இது Divorce வரை கூடப் போகலாம்.

 

சரி! குரு 12-ம் வீட்டிற்குப் பதிலாக 11-ம் வீட்டில் இருக்கிரார் எனக் கொள்ளுங்கள். இப்போது 6, 7, 11-ம் வீட்டின் பலன்கள் நடைபெறும். சரி! இவர் பதவி உயர்வுக்கோ அல்லது வேறு எதற்கோ போட்டி போடுகிறார் எனக் கொள்ளுங்கள். அல்லது தேர்தலுக்கோ போட்டி இடுகிறார் எனக் கொள்ளுங்கள். இவர் அந்தப் போட்டியில் வெற்றி பெறுவார். 7-ம் இடம் போட்டி போடுபவரையும், 6-ம் இடம் அவருடைய தோல்வியையும் 11-ம் வீடு இந்த ஜாதகருடைய வெற்றியையும் குறிக்கிறது. ஆக சனிதசை, குரு புக்தியில் அவர் போட்டியில் வெற்றி பெறுவார்.

 

சரி! சனிதசை சனி புக்தி. சனியானவர் 12-ம் வீட்டில்; இப்போது என்ன பலன் கிட்டும்? சனி 5-ம் வீட்டிற்கும், 6-ம் வீட்டிற்கும் அதிபதி. 12-ம் வீட்டில் இருக்கிறார். 6-ம் வீடு உங்கள் வேலையாளர்களைக் குறிக்கிறது. 12-ம் வீடு உங்களுக்கு நஷ்டம். ஆக உங்கள் வேலையாளர்கள் உங்களுக்குப் பண நஷ்ட்டத்தைக் கொடுக்கலாம். அல்லது 5-ம் வீடு உங்க குழந்தைகளைக் குறிப்பதனால் குழந்தைகள் மூலமாகச் செலவு இருக்கலாம்.

  நாம் ஜீவனபாவமான 10-ம் வீட்டைப் பற்றி எழுதி கொண்டு இருக்கிறோம். ஜீவனம் என்றால் வேலைதான் பார்க்க வேண்டுமென்பதில்லை. வியாபாரமும் செய்யலாம். வியாபாரம் செய்வதென்றால் ஒருவரிடமிருந்து பொருளை வாங்கி மற்றோருவரிடம் விற்க வேண்டும். விற்பதிலே லாபம் வர வேண்டும். இதுதான் வியாபாரம். நாம் சாமான் வாங்குபவரையும், விற்பவரையும் குறிப்பது 7-ம் வீடு. (7th house indicates the persons with whom one is transacting). அதாவது 7-ம் வீடு வியாபாரத்தைக் குறிக்கிறது. நாம் வங்கியில் கடனுக்கு மனுச் செய்துள்ளோம் எனக் கொள்ளுங்கள். அந்த வங்கியைக் குறிப்பது 7-ம் வீடு. கல்லூரியில் படிக்கும் மாணவன் கல்லூரியில் Scholarship எதிர்பார்க்கிறான் எனக் கொள்ளுங்கள். அந்தக் கல்லூரியைக் குறிப்பது 7-ம் வீடு. ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணைக் குறிப்பது 7-ம் வீடு. இவ்வாறாக நாம் யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளோமோ அவர்களை எல்லாம் குறிப்பது 7-ம் வீடு. சரி! நமது வியாபாரத்திற்கு வருவோம்.

 

கிரகங்களிலே வியாபாரத்திக் குறிப்பது புதன். இவர் 7-ம் வீட்டில் இருப்பரேயாகில் வியாபாரம் நல்லவிதமாக நடக்கும். புதன் இருந்தால் விற்பனை அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்கு அனுகூலமில்லாத கிரகம் சனியாகும். அவர் இருப்பாரேயாகில் வியாபாரம் மந்தமாகும். 7-ல் சனி இருக்கப் பிறந்தவர் வியாபாரம் செய்யமலே இருத்தல் நல்லது ஆகும். பொதுவாக சுபகிரகங்கள் 7-ம் வீட்டில் இருத்தல் வியாபார அபிவிருத்தியைக் கொடுக்கும்.

 

அடுத்து தற்போது நடக்கும் தசா, புக்திக் காலங்களையும் மனத்தில் கொள்ள வேண்டும். 5, 12-ம் வீட்டைக் குறிக்கும் தசா, புக்திக் காலங்களில் வியாபாரத்தில் நஷ்டம்தான் இருக்கும். லாபம் இருக்காது. ஏன்? 5-ம் வீடன்பது 7-ம் வீட்டிற்குப் 11-ம் வீடு. 7-ம் வீடன்பது உங்களுடன் Transaction செய்பவரைக் குறிக்கிறது என்று மேலே கூறி இருக்கின்றோம். ஆக அவர்களுக்கு லாபம் என்றால் இந்த ஜாதகருக்கு நஷ்டம்தானே. 12-ம் வீடென்பது ஜாதகரின் நஷ்டத்திக் குறிக்கும் வீடு. ஆக 5, 12-ம் வீட்டைக் குறிக்கும் தசா, புக்திக் காலங்களில் ஒருவருக்கு வியாபா ரத்தில் லாபம் கிடைப்பது கடினம். அதேபோன்று 6, 11-ம் வீட்டைக் குறிக்கும் தசா, புக்திகாலங்களில் ஒருவருக்கு லாபம் கிடைக்கும். 6-ம் வீடென்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா? 11-ம் வீடென்பது ஜாதகரின் லாபத்தைக் குறிக்கும் வீடல்லவா. ஆக 6, 11 வீடுகளிக் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் ஒருவருக்கு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி:

 

இலக்கினம் விருச்சிகம்;

இலக்கினத்தில் சனி, கேது, சூரியன்;

2-ம் வீட்டில் சுக்கிரன்;

5-ம் வீட்டில் சந்திரன்;

6-ல் குரு;

7-ல் ராகு;

8-ல் செவ்வாய்; 12-ல் புதன்;

 

நவாம்சம்:-

 

கும்ப இலக்கினம்; இலக்கினத்தில் சனி, செவ்வாய்;

மீனத்தில் ராகு;

ரிஷபத்தில் புதன்;

மிதுனத்தில் குரு;

சிம்மத்தில் சுக்கிரன்;

கன்னியில் சூரியன், கேது;

மகரத்தில் சந்திரன்;

  இவர் சூரிய தசை நடக்கும்போது வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். சூரியன் லாபாதிபதி. இலக்கினத்தில் அமர்ந்து 7-ம் வீட்டை பார்க்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தது. வியாபாரமும் நல்லபடியாக நடந்து வந்தது. சந்திரதசை ஆரம்பித்தது. சந்திரன் மீனத்தில் புதனுடைய நட்சத்திரமான ரேவதியில் இருக்கிறார். புதன் 12-ம் வீட்டில் இருக்கிறார் அல்லவா? ஆக சந்திரன் தான் இருக்கும் வீடான 5-ம் வீட்டின் பலனையும், 12-ம் வீட்டில் உள்ள புதனின் பலனையும் கொடுத்து விட்டார். ஆக வியாபாரத்தில் பெருத்த நஷ்டம். சூரியதசையில் சேர்த்ததையெல்லாம் சந்திர தசையில் விட்டுவிட்டார்.

 

மற்றும் ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : மிதுன இலக்கினம்;

இலக்கினத்தில் சனி;

2-ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய்;

3-ல் ராகு, புதன்;

5-ல் குரு;

9-ல் கேது;

 

இந்த ஜாதகர் சுக்கிர தசை ஆரம்பமான உடன் தான் வேலை செய்த கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்றார். பின் வியாபரம் செய்ய எண்ணினார். வியாபாரத்தைத் தொடங்கினார். சுக்கிரன் 5, 12 வீடுகளுக்கு அதிபதியல்லவா? வியாபாரத்தில் நஷ்டத்தைக் கொடுத்து விட்டார்.

 

ராசிகளில் நிலராசிகள் என்று சொல்லக் கூடிய ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் வியாபாரத்திற்கு உதவாதவை. அங்கு இருக்கும் கிரகங்களும் வியாபாரத்திற்கு அனுகூலமாக இருக்காது.

 

வியாபாரம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு தைரியம் வேண்டும். தைரியம் இருந்தால்தான் வியாபாரம் செய்ய முடியும். தைரியத்தைக் கொடுப்பவர் செவ்வாய் அல்லவா? அவர் தசாநாதனுடனாவது அல்லது புக்தினாதனுடனாவது சம்மந்தப்பட வேண்டும். அப்போதுதான் ஒருவர் வியாபாரம் செய்ய முடியும்.

  10-ம் இடத்தைக் கர்மஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது தாய், தந்தையருக்கு ஒருவர் செய்யக் கூடிய கடைசிக் காலக் கருமங்களிக் குறிப்பது இந்த இடம்தானாகும். 4-ம் இடம் என்பது தாயாரைக் குறிக்கிறது அல்லவா! 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடு பாதகஸ்தானம் அல்லவா? ஆக 10-ம் வீடு தாயாரின் மரணத்தைக் குறிக்கிறது அல்லவா? அதேபோன்று 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் இடம் என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு அதாவது மரணத்தைக் குறிக்கும் வீடல்லவா? அதனால்தான் 10-ம் இடம் என்பது கர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 10-ம் வீட்டு அதிபதியின் தசையோ அல்லது 10-ல் உள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும்போது அவருடைய தாயோ அல்லது தந்தையோ மரணமடையக்கூடும். ஒருவருக்குக் கருமத்திற்குக் காலம் வந்துவிட்டது என்பதை 10-ம் வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

 

ஒருவரின் மனைவிக்கு ஸ்திர சொத்துக்கள், வாகனங்கள், மனைவியின்கல்வி ஆகியவற்றைக் குறிப்பதும் இந்தப் 10-ம் வீடுதான். ஏனெனில் 7-க்கு 4-ம் வீடு இந்த வீடுதானே. இத்துடன் இந்த வீட்டைப் பற்றி நிறுத்திக் கொள்வோம்.

 

அடுத்த பாடத்தில் 11-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.

  ஜோதிட குடும்பத்திற்கு வணக்கம். இன்றைய ஆய்வு சாதகம் சீனிவாசன் . வயது 38 முடிந்து 4 மாதம் 6 நாள் ஆகின்றது.

2. சாதகருக்கு லக்னத்தில் சூரியன். அதிக கோபம் உள்ளவர்.

3.2 ம் இடத்தில் சுக்ரன் புதன் சேர்க்கை மனைவியால் வருமானம்.

 

3ல் ராகு சகோதரனால் நன்மை இல்லை.

4.4க்கு உடையவர் லக்னத்தில் சுகம் உண்டு. 4ல் குரு, அங்சனி சேர்ந்து இருப்பதால் தாய் கடின உழைப்பாளி. ஆன்மீகவாதி.

5.5 க்கு உடைய புதன் 2ல் ராகு சாரம் இவர் தத்துப்பிள்ளையை வளர்ப்பார். சுக்ரன் cவ) மாகி கரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகி உள்ளதால் சாதகருக்கு குழந்தை இல்லை.

6.2க்கு உடையவர் ஆட்சி. திருவாதிரை நட்சத்திரம் Soசாதகர் ராகு திசை ராகு புத்தியில் மீடியாவில் வேலை செய்கிறார்.சாதகர் குரல் வளம் மிக்கவர். அறிவாளி

7 ச ந்திரன் 3 க்கு உடையவர் ஆகி 7, 12க்கு உடையவன் வீட்டில் 1,6 க்கு உடையவன் சாரம் சந்திரன் திசை சுக்கிர புத்தியில் வெளிநாட்டு வருமானம் கிடைத்தது.

87 க்கு உடையவன் சூரியன் வீட்டில் . மனைவி வழியில் அரசாங்க வேலை உண்டு. 2,5க்கு உடையவர் ஒருவரே . மனைவியின் அப்பா ஆசிரியர்

9.7க்கு உடையவன் 11ம் அதிபதி, சனியுடன் சேர்க்கை சாத கர் மனைவி மூத்தவர்.

10. மேசத்தில் உள்ள  கிரகம் பயன்படாது. 3 க்கு 2 டையவன் அங்கே.சகோதர உறவு பயன்பட வில்லை.

11. சூரி, சுக்(வ) அஸ்தமனம் ஆவதால் சாதகருக்கு காம ஈடுபாடு இல்லை.

12. செவ் சனி கும்பத்தை ஒரே பார்வையில் பார்க்கிறது.சாதகருக்கு விபத்தில் முழங்கால் அடிபட்டு, காயம் .

13.9ல் கேது இருப்பதால் ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டு.

14. முகத்தை குறிக்கும் பாவத்தில் சுக், புதன் சாதகர் அழகானவர்.

15. 12ல் சந்திரன் அம்மா Uயன் இல்லை.

16. சந்திரன் பாணியில் சாதகரின் அம்மா அப்பாவுக்கு 2 ம் தாரம்.

17.9க்கு உடையவரே 10க்கு உடையவர் மகரம் திதிகன்யம் சாதகருக்கு கருமம் செய்ய குழந்தை இல்லை.

18. சரி. இனி சாதகர் எப்படி இருப்பார்.

19.40 வயதில் இருந்து 50 வயது வரை நல்ல வருமானம் உண்டு.

20. சாதகர் இந்த கால கட்டத்தில் புகழ் பெறுவார்.

21. ராகு திசை  சனி புத்தியில் தந்தை மரணம் அடையக்கூடும்.

22. லக்னம் ரோஹிணியில் உள்ளது. பல பெண்களிடம் friendship உண்டு. பெண்கள் தான் எதிரி இவருக்கு .

23-இவர் ராகு திசை சூரிய புத்தியில் வெப்பம், மூலம் சம்பந்தப்பட்ட நோய் வரலாம்.

24.40 to 50 வயது வரை வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12  வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை

 

👆   மேஷம்

   ரிஷபம்

   மிதுனம்

   கடகம்

💪   சிம்மம்

👋   கன்னி

👍   துலாம்

👇   விருச்சிகம்

   தனுசு

👌   மகரம்

👏   கும்பம்

👊   மீனம்

 

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

👆  மேஷம் :

 

1.  வைராக்கியம்  (Assertiveness)

2.  தேசநலன் (Citizenship)

3.  நிறைவேற்றுதல் (Chivalry)

4.  துணிச்சல்  (Courage)

5.  கீழ்படிதல்  (Obedience)

6.  வெளிப்படையாக  (Openness)

7.  ஒழுங்குமுறை  (Order)

8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)

9.  ஆன்மிகம்  (Spirituality)

 

🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

 

  ரிஷபம் :

 

1.  கருணை  (Mercy)

2.  இரக்கம் (Compassion)

3.  காரணம் அறிதல் (Consideration)

4.  அக்கறையுடன்  (Mindfulness)

5.  பெருந்தன்மை (Endurance)

6.  பண்புடைமை (Piety)

7.  அஹிம்சை  (Non violence)

8.  துணையாக  (Subsidiarity)

9.  சகிப்புத்தன்மை (Tolerance)

 

🎯  ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

 

  மிதுனம் :

 

1.  ஆர்வம் (Curiosity)

2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)

3.  நகைச்சுவை (Humor)

4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)

5.  வழிமுறை  (Logic)

6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)

7.  காரணம்  (Reason)

8.  தந்திரமாக  (Tactfulness)

9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)

 

🎯  மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

  கடகம் :

 

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )

2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)

3.  அறம் (Charity)

4.  உதவுகின்ற  (Helpfulness)

5.  தயாராக  இருப்பது  (Readiness)

6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)

7.  தொண்டு செய்தல்  (Service)

8.  ஞாபகசக்தி  (Tenacity)

9.  மன்னித்தல்  (Forgiveness)

 

🎯  கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

💪 சிம்மம் :

 

1.  வாக்குறுதி  (Commitment)

2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)

3.  சுதந்திரம்  (Freedom)

4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)

5.  பொறுப்பு (Responsibility)

6.  ஒற்றுமை  (Unity)

7.  தயாள குணம் (Generosity)

8.  இனிமை  (Kindness)

9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

 

🎯  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

👋 கன்னி :

 

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)

2.  அருள் (Charisma)

3.  தனித்திருத்தல்  (Detachment)

4.  சுதந்திரமான நிலை (Independent)

5.  தனிநபர் உரிமை (Individualism)

6.  தூய்மை  (Purity)

7.  உண்மையாக  (Sincerity)

8.  ஸ்திரத்தன்மை  (Stability)

9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)

 

🎯  கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

👍 துலாம் :

 

1.  சமநிலை காத்தல் (Balance)

2.  பாரபட்சமின்மை (Candor)

3.  மனஉணர்வு (Conscientiousness)

4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)

5.  நியாயம் (Fairness)

6.  நடுநிலையாக  (Impartiality)

7.  நீதி (Justice)

8.  நன்னெறி  (Morality)

9.  நேர்மை  (Honesty)

 

🎯  துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

👇  விருச்சிகம் :

 

1.  கவனமாக இருத்தல்(Attention)

2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)

3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)

4.  சீரிய யோசனை (Consideration)

5.  பகுத்தரிதல்  (Discernment)

6.  உள் உணர்வு  (Intuition)

7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)

8.  கண்காணிப்பு  (Vigilence)

9.  அறிவுநுட்பம் (Wisdom)

 

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

  தனுசு :

 

1.  லட்சியம்  (Ambition)

2.  திடமான நோக்கம்  (Determination)

3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)

4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)

5.  விடாமுயற்சி  (Persistence)

6.  சாத்தியமாகின்ற  (Potential)

7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)

8.  உறுதி (Confidence)

9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

 

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

👌 மகரம்:

 

1.  கண்ணியம்  (Diginity)

2.  சாந்த குணம் (Gentleness)

3.  அடக்கம்  (Moderation)

4.  அமைதி (Peacefulness)

5.  சாதுவான  (Meekness)

6.  மீளும் தன்மை  (Resilience)

7.  மௌனம் (Silence)

8.  பொறுமை (Patience)

9.  செழுமை  (Wealth)

 

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

👏  கும்பம் :

 

1.  சுய அதிகாரம் (Autonomy)

2.  திருப்தி (Contentment)

3.  மரியாதை (Honor)

4.  மதிப்புமிக்க  (Respectfulness)

5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)

6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)

7.  புலனடக்கம்  (Chasity)

8.  தற்சார்பு  (Self Reliance)

9.  சுயமரியாதை  (Self-Respect)

 

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

👊 மீனம் :

 

1.  உருவாக்கும் கலை (Creativity)

2.  சார்ந்திருத்தல்  (Dependability)

3.  முன்னறிவு  (Foresight)

4.  நற்குணம் (Goodness)

5.  சந்தோஷம்  (Happiness)

6.  ஞானம் (Knowledge)

7.  நேர்மறை சிந்தனை  (Optimism)

8.  முன்யோசனை  (Prudence)

9.  விருந்தோம்பல் (Hospitality)

 

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

சிவ.சு.பெரியகாளியப்பன்

  11-ம் இடம் லாபஸ்தானம் எனப்படும். ஒருவர் சம்பாதியத்தில் செலவு போக மீதம் உள்ளத்தைத்தான் இந்த வீடு குறிக்கிறது. இலக்கினம் என்பது ஒருவரின் சொந்த முயற்சியில், உடல் உழைப்பிலிருந்து சம்பாத்தியம் செய்வதைக் குறிக்கிறது. 2-ம் வீடு என்பது ஒருவர் சம்பாதித்த பணவரவைக் குறிக்கிறது. மூன்றாம் வீடென்பது ஏஜென்சித் தொழில், இளைய சகோதரத்தின் மூலம் வரவு, சிறு கதைகள், கட்டுரைகள் மூலம் எழுதிச் சம்பாதிப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. 4-ம் வீடு ஸ்திரசொத் துக்கள் மூலம் வரவு, தாயார் மூலம் வரவு, வாகனங்கள் மூலம் வரவு ஆகியவற்றைக் குறிக்கிறது. 5-ம் வீடென்பது லாட்டரி மூலம் பண வரவு, குழந்தைகள் மூலம் பணவரவு, லாட்டரி, ரேஸ் மூலம் பணவரவு ஆகியவற்றைக் குறிக்கிறது. 6-ம் வீடு என்பது கடன் மூலம் வரும் பணத்தைக் குறிப்பது, செல்லப் பிராணிகள் மூலம் பணம் சம்பாதிப்பது, வேலை செய்து பணம் சம்பாதிப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. வியாபாரம் மூலமான பண வரவு, மனைவி மூலமான பண வரவு ஆகியவற்றைக் குறிப்பது 7-ம் வீடு. 8-ம் வீடென்பது பரம்பரைச் சொத்து மூலம் வரும் பணம், P.F., Insuranace ஆகியவற்றின் மூலம் வரும் பணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அயல் நாட்டுத் தொடர்பு மூலம் வரவு, அந்நியர் மூலம் பண வரவு, தகப்பனார் மூலம் பண வரவு, ஆகியவற்றை 9-ம் வீடு குறிக்கிறது. ஒருவர் தன் தொழில் மூலம் சம்பாதிப்பதை 10-ம் வீடு குறிக்கிறது. ஆக முதல் 10 வீடுகள் மூலமாக ஒருவர் சம்பாதிக்கிறார். 12-ம் வீடு என்பது செய்யும் செலவைக் குறிக்கிறது. ஆக 12-ம் வீட்டின் மூலமாகச் செலவு செய்கிறார். வரவில் செலவுபோக மீதமுள்ளதைக் குறிப்பது 11-ம் வீடு. இந்தப் 11-ம் வீடுதான் ஒருவர் வாழ்க்கையில் என்ன சேமிக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.

 

தவிரவும் 11-ம் வீடு என்பது ஒருவருடைய ஆசைகள் நிறைவேறும் வீடாக இருக்கிறது. ஒருவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமா? குழந்தை பிறக்குமா? ஒருவர் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? இது போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் 11-ம் வீட்டை வைத்துத்தான் பதில் சொல்ல முடியும். அதாவது எந்த ஆசை ஒருவருக்கு இருந்தாலும் அந்த ஆசை நிறைவேறுமா என்பதை 11-ம் வீட்டைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.

  11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது. நண்பர்கள் நல்லவர்கள்தானா, அவர்களை நம்பலாமா என்பதையும் 11-ம் வீட்டை வைத்துக் கூற வேண்டும். ஒருவர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமணம் என்பது ஒரு சட்டபூர்வமான உறவு. அதைக் குறிப்பது 7-ம் வீடு; மனைவியிடம் வைத்திருக்கும் உறவு என்பதை 7-ம் வீடும் 11-ம் வீடும் குறிக்கின்றன. அவ்வாறு இல்லாமல் மனைவி என்ற உறவு இல்லாமல், ஒரு பெண்ணிடம் வைத்திருக்கும் உறவைக் குறிக்கும் வீடு 11-ம் வீடுதான்.

 

11-ம் வீடு மூத்த சகோதரத்தைக் குறிக்கிறது. 11-ம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பார்களேயானல் மூத்த சகோதரம் நல்ல விதமாக அமையும். உதவி செய்யும் மனப்பான்மையுடனான மூத்த சகோதரம் அமையும். சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருந்தால் மூத்த சகோதரத்தால் பயன் ஒன்றும் இல்லை.

 

ஒரு பெண்ணிணுக்குக் குழந்தை இல்லையெனக் கொள்ளுங்கள். அந்த ஜாதகத்தில்

5-ம் வீடென்பது அந்தப் பெண்ணின் புத்திரபாவத்தைக் குறிக்கிறது. 11-ம் வீடென்பது

அவள் கணவனின் புத்திர பாவத்தைக் குறிக்கிறது. எப்படி? 7-ம் வீடு கணவனைக்

 

 

குறிக்கிறது அல்லவா? அவனுடைய புத்திர ஸ்தானம் 7-க்கு 5-ம் வீடல்லவா? அது 11-ம் வீடல்லவா? 5-ம் வீடு பாதிக்கப்பட்டு இருந்தால் அந்தப் பெண் குழந்தை பெற முடியாதவளென்றும், 11-ம் வீடு பாதிக்கப் பட்டு இருந்தால் அவள் கணவன் குழந்தையைப் பெற முடியாதவனென்றும் கூற வேண்டும். எப்படி பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமென்பதை பின்பு விளக்குகின்றோம். சில நாட்களுக்கு முன்புநமக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு பெண் பேசினார். தான் தன்கணவனுடன் Divorce-க்கு apply செய்திருப்பதாகவும், தனியாக வாழ்வதாகவும் கூறினார். தனக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அதற்கு வழி இருக்கிறதா? எனக்கேட்டார். கணவனுடன் வாழாத பெண்ணிற்கு எப்படிக் குழந்தை பிறக்க முடியும்? எனப் திருப்பிக் கேட்டோம். அவர் தனக்கு மறுமணம் நடக்குமா? எனக் கேட்டார். நாம் மறுநாள் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு தொலைபேசியைக் கீழே வைத்து விட்டோம். இந்தப் பெண் ஜாதகம் எதுவும் கொடுக்க வில்லை. கணவனின் ஜாதகமும் கிடையாது. நாம் உடனே ஆரூடம் மூலமாக ஜாதகம் கணித்தோம். (ஆரூடம் என்பது நாம் பலன் சொல்ல நினைக்கும் நேரத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து ஜாதகம் கணிப்பது.) ஆராய்ந்து பார்த்ததில் மறுமணம் இல்லை என்ற பதில்கிடைத்தது. கணவனுக்கும் புத்திர பாக்கியம் இல்லை என பதில் கிடைத்தது. அதாவது ஆரூட ஜாதகத்தில் 11-ம் இடத்தைப் பார்த்தபோது புத்திரம் இல்லை எனத் தெரிந்தது. ஆனால் அந்தப் பென்ணின் 5-ம் பாவம் நன்றாக புத்திரபாக்கியத்துடன் இருந்தது. ஆக அந்தப் பெண்ணிற்கு புத்திரம் கிடைக்கும்.

  மறுநாள் அந்தப்பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது "உங்களுக்கு புத்திர பாக்கியம்கிருக்கிறது. உங்கள் கணவருக்கு அந்த பாக்கியம் இல்லை. மறு மணத்திற்கும் யோகமில்லை. ஆகவே உங்களுக்குக் குழந்தை ஆசை இருந்தால் Test-tube Baby- தான் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கூறினோம். அந்தப் பெண்ணும் அந்த எண்ணம்தான் அவள் மனதில் உள்ளது என்று கூறினார். அதாவது ஒரு ஜாதகத்தில் 11-ம் இடமென்பது கணவனின் புத்திரபாக்கியத்தையும் அவனுக்குக் குழந்தை உண்டா அல்லது இல்லையா என்றும் கூற முடியும் என்பதை விளக்கத்தான் இந்த நிகழ்ச்சியைக் கூறினோம்.

 

பொதுவாக 11-ம் இடத்தை உபஜெயஸ்தானம் என்று கூறுவார்கள். 3, 6, 10, 11 ஆகிய வீடுகள் உபஜெயஸ்தானம் என்றழைக்கப் படுகின்றன. அதில் பாப கிரகங்கள் இருந்தாலும் நன்மையையே செய்யும் என்று கூறுகிறது ஜோதிட உலகம். ஜாதக தத்வம் என்ற நூல் கீழ்வருமாறு கூறுகிறது. 11-ல் நல்ல கிரகம் இருந்தால் அவைகள் தங்கள் தசா, புக்திக் காலங்களில் நேர்மையான வழியில் சம்பாதிக்க வைப்பர்கள். தீயகிரகங்கள் இருந்தால் நேர்மையற்ற வழிகளில் சம்பாதிக்கும்படி செய்வார்கள்.

 

அடுத்ததாக மிக முக்கியமான விஷயம் 11-ம் வீட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். சர இலக்கினங்களுக்கு 11-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதி என்றழைக்கப்படுகிறார். அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சர இலக்கினக்காரர் களுக்கு 11-ம் வீட்டின் அதிபதி மாரகாதிபதியாகிறார். இவர் மாரகாதிபதியானதால் கெடுதல்தான் செய்வார் என்று ஒருசிலர் கருதுகின்றனர். அது மிகவும் தவறான கருத்தாகும். அதாவது இவர் தசா, புக்தி, அல்லது அந்திரத்தில் மரணம் சம்பவிக்கும். அவ்வளவே. மற்ற காலங்களில் 11-ம் வீட்டின் காரகத்துவப்படி நல்லதே செய்வார். நல்லதே நடக்கும். மாரகாதிபதியான காரணத்தால் ஆயுள் முழுவதும் கெடுதலே செய்ய மாட்டார். இது அனுபவபூர்வமான உண்மை.

  11-ம் வீட்டில் உள்ள கிரகங்கள் என்ன பலன் கொடுக்கின்றன என்பதைப் பார்ப்போம். சூரியன் இருந்தால் உயர்ந்த லட்சியம் உள்ளவராகவும் அவைகளை அடைவதற்குப் பாடுபடுவர் எனவும் கொள்ளலாம். நல்ல உயர்ந்த பதவியிலுள்ளவர்கள் நண்பர்களாக அமைவர். ஆகையால் அத்தகைய நண்பர்களிடமிருந்து பயன் பெறுவர். பொது வாழ்விலும் பெறுமை பெறுவர்.

 

சந்திரன் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். சந்திரன் நிலையற்றவர் என்றும் அடிக்கடி மாறும் சுபாவம் உள்ளவர் எனறும் உங்களுக்குத் தெரியும். ஆகவே அடிக்கடி நண்பர்களை மாற்றிக் கொண்டிருக்கும் சுபாவம் உள்ளவராக இருப்பார். சந்திரன் ஸ்திர ராசியில் இருந்தாலோ அல்லது ஸ்திர ராசியிலுள்ள கிரகத்தால் பார்க்கப் பட்டாலோ இவ்வாறு அடிக்கடி மாற்றும் சுபாவம் இருக்காது. சந்திரன் பெண் கிரகமல்லவா? ஆகவே 11-ல் சந்திரன் உள்ள ஜாதகருக்கு பெண் நண்பர்கள் இருப்பார்கள்.

 

செவ்வாய் ஒரு தைரியமுள்ள கிரகம். அதை ஒரு முரட்டு கிரகம் என்று கூடச்சொல்லலாம். சுபரின் (குரு, புதன், சுக்கிரன்) பார்வை இருந்தால் நண்பர்களுடன் ஒத்துப் போகும் சுபாவம் இருக்கும். இல்லையென்றால் அவர்களுடன் சண்டைதான் மிஞ்சும்.

 

புதனும் ஒரு நிலையில்லாத கிரகம். அடிக்கடி மாறும் குணமுள்ளது. புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும் கிரகம். ஆகவே படித்த, புத்திசாலியான நண்பர்களை இந்த ஜாதகர் பெற்றிடுவர். தீய கிரகங்கள் பார்வை இருப்பின் நண்பர்களால் துன்பம் உண்டாகும்.

 

குரு 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பண வசதியுள்ள தயாள குணமுள்ள நண்பர்கள் கிடைப்பார்கள். பல வழிகளிலும் உதவும் நண்பர்களைப் பெற்றிடலாம் குருவின் மூலமாக.

 

அடுத்தது சுக்கிரன். அவர் இங்கு இருந்தால் பெண் நண்பர்கள் அதிகமிருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்கும். கலையார்வமிக்க நண்பர்கள் இருப்பார்கள். சுக்கிரன் பொது வாழ்க்கையைக் குறிக்கிறார். சுக்கிரன் 11-ல் இருக்கப் பிறந்தவர்கள் பொதுவாழ்வில் வெற்றி பெறுவர்.

 

சனியானவர் 11-ல் இருக்கப் பிறந்தவருக்கு அவரை விட மூத்தவயதினர் நண்பர்க ளாக இருப்பர். அல்லது அவரைவிட சமூக அந்தஸ்தில் கீழாக உள்ளவரை நண்பர்களாகப் பெறுவர். சனி சில நண்பர்களைக் கொடுப்பர்; ஆனால் குருவானவர் அதிக அளவு நண்பர்களைக் கொடுப்பார். சனியானவர் பாபகிரகங்களின் சம்மந்தப்பட்டால் இந்த ஜாதகர் நண்பர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏமாற்றப்படுவர். 11-ம் இடமென்பது ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றும் இடமாகையால் அங்கு சனி இருப்பது அவ்வளவு விரும்பத்தக்கது அல்ல; அவரின் ஆசைகள்

  மெதுவாகத்தான் நிறைவேறும். முழுமையாகவும் நிறைவேறாது.

 

பொதுவாக சர இலக்கினங்களுக்கு (அதாவது மேஷம், கடகம், துலாம் மகரம்) 11-ம் வீடு பாதகஸ்தானம் என்றும் அதன் அதிபதி பாதகாதிபதி என்றும் அழைக்கப்படும். ஆகவே 11-ம் வீட்டு அதிபர் கெடுதல்தான் செய்வர், நல்லதே செய்ய மாட்டர் என்ற கருத்து சிலரிடையே நிலவுகிறது. அது மிகவும் தவறான கருத்தாகும். பாதகாதிபதி என்றால் மரணத்தைக் கொடுப்பவர் என்றுதான் பொருள். எப்போது ஆயுள் முடிகிறதோ அப்போதுதான் அவர் மரணத்தைக் கொடுப்பார். மற்ற காலங்களில் ஆயுள் முழுவதும் அவர் நல்லதையேதான் செய்வர். இது அனுபவபூர்வமான உண்மை. இத்துடன் 11-ம் வீட்டை முடித்துக் கொள்வோம்.

 

இனி நாம் அடுத்த வீடான 12-ம் வீட்டைப் பற்றி இனி பார்ப்போம்.

 

பொதுவாக 12-ம் வீட்டை துஸ்தானமென்றும், அதில் உள்ள கிரகங்களோ அல்லது அதன் அதிபரோ நன்மை செய்ய மாட்டார்களென்றும் கூறுவார்கள். அது சரியான வாதமல்ல. 12-ம் வீடு பாபர்களால் பாதிக்கப் பட்டால்தான் கெடுதலைச் செய்ய முடியும்.

 

இது செலவுகள், நஷ்டங்கள், ஏமாற்றம், துக்கங்கள், முதலீடு செய்தல், வாங்கிய கடனைத் திருப்ப ¢த்தருதல், சிறைத் தண்டனை, வெளி நாடுகளில் குடியேறுதல், மருத்துவமனையில் சிகிச்சை, தருமங்கள், ஆன்மீக சம்மந்தமான விஷயங்களுக்கு தர்மம் செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. 6-ம் வீடென்பது செல்லப் பிராணிகளைக் குறிப்பதுபோல் 12-ம் வீடு மிருகங்களைக் குறிக்கிறது.

 

உதாரணமாக கன்னியா இலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

  12-ம் வீட்டின் அதிபதி சூரியன் ஆவார். அவர் 2-ம் வீடான தனஸ்தானத்தில் சுக்கிரனுடன் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். நாம் உடனே"12-ம் வீட்டின் அதிபதி விரயத்தைக் கொடுப்பார். ஆக்வே சூரிய தசா, புக்திகளில் கஷ்டப் படுவீர்கள்" என்று பலன் சொன்னால் பொருத்தமாக இருக்காது. 12-ம் வீட்டின் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கும் காரணத்தால் அப்போது நகைகள், ஆடம்பரப் பொருள் வாங்குவது சம்மந்தமான செலவு இருக்கும் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். சுக்கிரன் நகைகள், ஆடம்பரமான பொருள்களுக்கு அதிபதி அல்லவா. 12-ம் இடம் செலவையும், 2-ம் இடம் பொருள் சேர்க்கையைக் குறிக்கிறது அல்லவா? ஆக சூரியனின் தசா, புக்தி காலங்களில் ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்குமென்று கூறினால் பொருத்தமாக இருக்கும் அல்லவா? 3-ம் வீடும் 12-ம் வீட்டு அதிபனும் சம்மநதப் பட்டால் பலன் எப்படி இருக்கும்? 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது. 3-ம் வீடு சிறு பயணங்களைக் குறிக்கிறது. 3-ம் வீடு சிறுகதை எழுதுவதையும், புத்தகங்கள் வெளியிடுதலையும் குறிக்கிறது. ஆக செலவைக் குறிக்கும் 12-ம் வீடுடன் சம்மந்தப்படுவதினால் மேற்கூறிய காரகத்துவம் சம்மந்தமான செலவுகள் இருக்கும். சரி! 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் எப்படி இருக்கும்? 4-ம் இடத்தின் காரகத்துவம் என்ன? தாயார், வீடு, வாசல் போன்ற சொத்துக்கள், வாகனம் வாங்குதல் போன்றவற்றைக் குறிக்கிறது. அப்போது ஒருவர் வீடுவாங்கலாம். வாகனம் வாங்கலாம். தாயாருக்காக செலவு செய்யலாம். ஆகவே இதுபோன்ற செலவுகள் இருக்கும். ஒருவரின் தாயார் வெளி நாடு செல்கிறார் எனக் கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது 4-ம் வீட்டிற்கு 9-ம் வீட்டைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணம், நீண்ட பயணம் ஆகியவற்றைக் குறிக்கிறது அல்லவா? ஆக அப்போது அவரின் தாயார் வெளிநாடு செல்வார். அதற்காக அவர் பணம் செலவழிப்பார்.

 

5-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் என்ன பலன்? 5-ம் வீடு குழந்தைகளைக் குறிக்கிறது. ஆக குழந்தைகள் சம்மந்தமான செலவுகள் இருக்கும். 5-ம் வீடு ஸ்பெகுலேஷன் (Speculation) துறையைக் குறிக்கிறது அல்லவா? ஆக ஸ்பெகுலேஷனில் பண நஷ்டப் படுவார். 5-ம் வீடு சினிமா, டிராமா போன்ற கலைத்துறையினைக் குறிக்கிறது அல்லவா? இதுபோன்ற துறைகளில் பணத்தைக் கோட்டை விடுவார் எனவும் கொள்ளலாம். 6-ம் வீடு கடன், ரோகம், ரணத்தைக் குறிக்கிறது அல்லவா? 12-ம் வீடு 1-ம் வீடு , 6-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருந்தால் உடல் ஆரோக்கி யமின்மை காரணமாக மருத்துச் செலவு, மருத்துவமனை சம்மந்தமான செலவுகள் செய்வார். 6-ம் வீட்டுடன் மட்டும் சம்மந்தப் பட்டால் கடன் தொல்லையால் அவதிப்படுவார்.

 

7-ம் வீடு மனை, மற்றும் வியாபாரத்தைக் குறிக்கிறது அல்லவா? 7-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் மனைவி மூலமாகச் செலவு செய்வர். வியாபரம் செய்பவராக இருந்தால் வியாபாரத்தில் நஷ்டப்படுவர். 8-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அவமானகரமான காரியங்கள் நிகழும். கடன் தொல்லை காரணமாக அவமானப்பட நேரிடும். ஜெயில் தண்டனையும் கிட்டக் கூடும். 9-ம் வீடு தகப்பனாரையும், நீண்ட பயணத்தையும் குறிக்கிறது அல்லவா? தகப்பனாருக்கக ஒருவர் செலவு செய்யக் கூடும். அல்லது வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடும்.

 

10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் தொழில் சம்மந்தமான செலவுகள் இருக்கும். இவ்வாறாக 12-ம் வீட்டை வைத்துப் மேற்கண்டவறு பலன் சொல்ல வேண்டும்.

  ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.

  12-ம் வீடு ஒருவருக்கு பயம், தாழ்வு மனப்பான்மையை, சந்தேகம் ஆகியவற்றையெல்லாம் கொடுக்கக் கூடிய வீடு.

 

அதேபோன்று 12-ம் வீடு என்பது மனித குலத்திற்கு ஒருவர் செய்யும் சேவையையும் குறிக்கும் வீடாகும். தெரெஸா போன்றவர்கள் மனித குலத்திற்குச் செய்யும் சேவையைக் குறிக்கும் வீடு அது. 6-வது வீடு என்பது நாம் செய்யும் அடிமைத் தொழிலைக் குறிப்பது போல், 12-ம் வீடு ஒருவர் தன்னலமில்லாது செய்யும் சேவையைக் குறிக்கிறது. ஆறாம் வீட்டிற்கும் 12-ம் வீடிற்கும் பல ஒற்றுமை, வேற்றுமைகள் உண்டு. 6-ம் வீடு ஒருவர் செய்யும் தொழிலைக் குறித்தால் 12-ம் வீடு ஒருவரின் தன்னலமில்லாத சேவையைக் குறிக்கிறது. 6-ம் வீடு நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளைக் குறித்தால் 12-ம் வீடு காட்டு மிருகங்களைக் குறிக்கிறது. 6-ம் வீடு கடன் வாங்குவதைக் குறித்தால் 12-ம் வீடு கடன் கொடுப்பதைக் குறிக்கிறது. 6-ம் வீடு நம்மோடு கொடுக்கல், வாங்கலில் இருப்போருக்கு நஷ்டத்தைக் கொடுத்தால், 12-ம் வீடு நமக்கு நஷ்டத்தைக் கொடுக்கிறது. 6-ம் வீடு நமக்கு இருக்கும் எதிரிகளைக் குறித்தால் 12-ம் வீடு நமக்கு உள்ள மறைமுகமான எதிரிகளைக் குறிக்கிறது.

 

இனி 12-ம் வீட்டில் உள்ள கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம். சூரியன் இங்கு இருப்பாரேயாகில் இவர்களின் எதிரிகளுக்கு இவர் எமனாக விளங்குவார். சூரியன் 10-ம் வீட்டுக்கு அதிபதியாகி 12-ம் வீட்டில் இருப்பாரேயாகில் அவருக்கு ஜெயில் சம்மந்தமான உத்தியோகம் கிடைக்கும் என்று கூறலாம். ஏனெனில் 12-ம் வீடு ஜெயிலையும், சூரியன் அரசாங்கத்தையும் குறிக்கிறது அல்லவா! சூரியன் தன்வந்திரி என்று அழைக்கப் படுகிறார் அல்லவா. 12-ம் வீடு மருத்துவமனையைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே மருத்துவ மனையில் மருத்துவராகப் பணிபுரியும் வாய்ப்பும் இருக்கிறது. சரி! சூரியன் 12-ல் இருந்து பாபருடன் கூடியிருந்தாலோ அல்லது பாபரால் பார்க்கப்பட்டாலோ, பெரிய மனிதர்களின் பகை வந்து சேரும். தனிமைப்பட்டு வாழ நேரிடும்.

 

சரி! அடுத்த கிரகமான சந்திரனைப் பற்றிப் பார்ப்போம். சந்திரன் ஒரு நீர்க் கிரகம். அவர் 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டு 12-ம் வீட்டில் இருப்பாரேயாகில் கடல், கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார். நீர் சம்மநதப் பட்ட தொழில் அமையும்.

 

பொதுவாக செவ்வாய் இந்த இடத்தில் இருப்பது நல்லது அல்ல; 12-ல் செவ்வாய் இருந்து சனியால் பார்க்கப்பட்டாலோ அல்லது சனியுடன் சேர்ந்து இருந்தாலோ ஒருவருக்கு ஜெயில் தண்டனை கூடக் கிடைக்கலாம். இல்லையென்றால் தீவீரமாக நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாள் இருக்க வேண்டியதுவரும். 12-ம் இடம் மறைமுக எதிரிகளைக் குறிக்கும் இடம்மென்று கூறி இருந்தோம். செவ்வாய் அங்கிருந்து பாபர்களின் சேர்க்கை பெற்றால் எதிரிகள் மூலமாக காயம், ரணம் ஆகியவை ஏற்படும். மிருகளைகளைக் குறிபதும் 12-ம் வீடு என எழுதி இருந்தோம். மிருகங்களின் மூலமாக உடலில் ரணங்கள் ஏற்படக்கூடும்.

  இதுவரையில் 11-வீடுகளைப் பார்த்தீர்கள். இப்போது 12-வது வீட்டைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக 12-ம் வீட்டை துஸ்தானமென்று கூறுவார்கள். அதாவது 12-ம் வீட்டு அதிபதியும் நல்லது செய்ய மாட்டார். 12-ம் வீட்டிலுள்ள கிரகங்களும் நல்லவை செய்யா. 12-ம் வீடு மறைவு ஸ்தானம் ஆவதால் அதிலுள்ளகிரகங்களும் மறைந்து விடுகின்றன. ஆகையால் நன்மை செய்ய முடியாது அந்த கிரகங்களால்; இதுதான் பொதுவாக ஜோதிடர்களின் வாதம்.

 

பொதுவாகவே நாம் எந்த வீட்டையும் அவ்வாறு ஒதுக்கிவிட முடியாது. 12-ம் வீட்டால் பல நன்மைகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்தப் பாடத்தில் தெரிந்து கொள்வோம். எந்தவீடும் நன்மை ஒன்றையே செய்வது இல்லை; அதைப் போல் எந்த வீடும் கெடுதலையே செய்வதும் இல்லை; இரண்டும் கலந்துதான் இருக்கும். 5-ம் வீட்டையும் 9-ம் வீட்டையும் திரிகோண ஸ்தானமென்பார்கள்.திரிகோண ஸ்தானம் மிக உயர்வாக ஜோதிட உலகம் கருதுகிறது. அதன் அதிபர்களும், அதிலுள்ள கிரகங்களும் நன்மையே செய்வார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் அவர்கள் தசா, புக்திக் காலங்களில் ஒருவர் தன் உத்தியோகத்தை இழக்க நேரிடும் என்று அந்த பாவங்களைப் பற்றி எழுதும் போது கூறி இருந்தோம். இதுதான் உண்மை. அதேபோல் 8-ம் வீட்டு அதிபர் கெடுதலைச் செய்ய வேண்டிய அவசியமில்லை;அவர் தசாபுக்திக் காலங்களில் ஒருவருக்குப் பிதுராஜித சொத்துக்கள் கிடைக்கலாம்; அல்லது வெகு நாளாக வரவேண்டிய P.F., Gratuity, Superannuation போன்றவை கிடைக்கலாம். ஆகவே 8-ம் வீடு என்பது கெடுதலை மட்டும் செய்யாது. நம்மைகளையும் செய்யும். சரி! நாம் இப்போது 12-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.

 

12-ம் வீடென்பது செலவுகள், நஷ்டங்கள், முதலீடுகள், நன்கொடைகள், தர்மங்கள், ஆகியவற்றைக் குறிக்கிறது. நாம் வாங்கும் பொருள்களையும் இந்த 12-ம் வீடு குறிக்கின்றது. ஒருவர் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். அவருக்கு 12-ம் வீட்டின் அதிபதியான சூரியனின் தசை நடக்கிறது எனக் கொள்ளுங்கள். சூரியன் 2-ம் வீட்டில் இருக்கிறதெனவும் கொள்ளுங்கள். இரண்டாம் வீடென்பது நகை, ஆபரணம், முதலீடு ஆகியவற்றைக் குறிக்கிறது அல்லவா? சூரிய தசையில் அவர் நகை, ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்கலாம். அல்லது Shares, அரசாங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். சரி! 2-ம் வீட்டிற்குப் பதிலாக 3-ம் வீட்டில் இருக்க ¢றார் எனக் கொள்ளுங்கள். 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே இளைய சகோதரத்திற்காக அவர் செலவு செய்ய வேண்டியது வரும். அல்லது 3-ம் இடம் சிறிய பயணங்களைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே பயணங்களுக்காகச் செலவு செய்ய வேண்டியது வரும். 3-ம் வீடென்பது 4-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா? ஆக தாயாரின் மருத்துவமனைச் செலவுகள் செய்ய வேண்டியதுவரும். இல்லையென்றால் தாயாரின் ஈமக் கடன்களுக்காகச் செலவு செய்ய வேண்டியது வரும். இதில் வேடிக்கையைப் பாருங்கள். 2-ம் வீட்டில் இருக்கின்றபோது சுபச்செலவுகளைக் கொடுத்தார். 3-ம் வீட்டில் அசுபச் செலவுகளைக் கொடுத்து விட்டார். சரி! 5-ம் வீட்டில் சூரியன் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 5-ம் வீடு புத்திர ஸ்தானம் அல்லவா? ஆகக் குழந்தைகள் சம்மந்தமாகச் செலவு செய்ய வேண்டியதுவரும். அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். எப்படி? 7-ம் வீடு வியாபாரத்தையும் அதாவது உங்களிடமிருந்து பொருள்கள் வாங்குவோர் அல்லது விற்போரையும் குறிக்கிறது. 5-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்கு லாபத்தைக் கொடுக்கும் வீடல்லவா? ஆக உங்களோடு வாங்கி விற்போருக்கு லாபம் என்றால் உங்களுக்கு நஷ்டம்தானே. ஆக 5-ம் வீட்டோடு 12-ம் வீட்டின் அதிபதி சம்மந்தப் பட்டால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். இவ்வாறாக 12-ம் வீடு எந்த வீட்டுடன் சம்மந்தப்பட்டுள்ளார் எனப்பார்த்துப் பலன் சொல்ல வேண்டும்.

  12-ம் வீடு நாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் வீடாகும்.ஒருவர் கடனாளியாக இருக்கிறார். அவர் " என்னால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியுமா? அல்லது நான் கடனாளியாகவேஇருப்பேனா?"எனக் கேட்க்கலாம். அவர் ஜாதகத்தில் 12-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகம் 8-ம் வீட்டிலோ அல்லது 5-ம் வீட்டிலோ இருக்குமேயானால் அவர் நிச்சயமாகக் கடனைத் திருப்பிக் கொடுப்பார் எனக் கொள்ளலாம். எப்படி? 7-ம் வீடென்பது கடன் கொடுத்தவரைக் குறிக்கிறது. 12-ம் வீடு ஒருவர் கடன் திருப்பிக் கொடுப்பதைக் குறிக்கிறது. 8-ம் வீடு கடன் கொடுத்த வரின் தனஸ்தானத்தையும், 5-ம் வீடு அவரின் லாபஸ்தானத்தையும் குறிப்பதால் 12-ம் வீட்டு அதிபதி இந்த இரண்டு வீடுகளில் ஒன்றில் இருந்தால் கொடுத்தவருக்குப் பணம் திருப்பிக் கிடைக்கும் என்ற உறுதியை இந்த கிரக நிலைகள் அளிக்கின்றன.

 

12-ம் வீட்டில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் போன்றவை இருக்குமேயாகில் சுபச் செலவுகள் இருக்குமெனக் கொள்ளலாம். திருமணச் செலவுகள், உயர்படிப்பிற்காகச் செலவு, வெளிநாட்டுப் பயணத்திற்காகச் செலவு செய்வது ஆகியவை சுபச் செலவாகும். அதேபோல் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்ற பாப கிரகங்கள் இருப்பது அசுபச் செலவைக் கொடுக்கும்.

 

12-ம் வீடென்பது ஒருவருக்குத் தனியையாக வாழும் வாழ்க்கையைக் கொடுக்கும் வீடாகும். ஒருவருக்கு ஜெயில் தண்டனையைக் கொடுக்கும் வீடும் அதேவீடாகும். 3-ம் வீடு, 8-ம் வீடு, 12-ம் வீடும் சேர்ந்தாற்போல் ஜெயில் தண்டனையைக் கொடுக்கும் வீடுகளாகும். இதைச் சற்று விபரமாக விளக்குவோம். 4-ம் வீடென்பது ஒருவர் ஸ்திரமாக வாழும் வீட்டைக் குறிக்கிறது. ஜெயில் தண்டனையென்றால் தன் சொந்த வீட்டை, தன் சுற்றத்தாரையெல்லாம் விட்டு வாழவேண்டுமல்லவா? 4-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 3-ம் வீடு ஸ்திரமாகவாழும் வீட்டை விட்டு வெளியேறுதலைக் குறிக்கிறது. ஜெயில் தண்டனையென்றால் ஒருவருக்கு அவமானகரமான சம்பவம் அல்லவா? அந்த அவமானத்தைக் கொடுப்பது 8-ம் வீடாகும். 12-ம் வீடென்பது தனிமையில் வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது. ஆக 3, 8, 12-ம் வீடுகளைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் ஒருவர் ஜெயில் தண்டனையை அனுபவிக்க நேரிடும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : இலக்கினம்- மகரம்; 5-ம் வீட்டில் கேது; 7-ம் வீட்டில் குரு; 8-ம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், 10-ம் வீட்டில் சனி; 11-ல் ராகு; சந்திரன் இலக்கினத்தில்

 

நவாம்சம் : சிம்ம இலக்கினம்; 2-ம் வீட்டில் கேது; 7-ல் குரு; 8-ல் சந்திரன், சனி, ராகு, புதன்; 1-ல் செவ்வாய்; 12-ல் சூரியன், சுக்கிரன்

  இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். ராகுதசை, குரு புக்தியில் பாலில் தண்ணீர் கலந்த குற்றத்திற்காக 6-மாதம் ஜெயில் தண்டனை விதித்து விட்டார்கள். சரி! எப்படி ராகு தசை, குரு புக்தியில் ஜெயில் தண்டனை கிடைத்தது என்பதைப் பார்ப்போம். 11-ல் ராகு; அவர் நல்லதையே செய்ய வேண்டும். செய்யவில்லை. அதற்கு மாறாக ஜெயில் தண்டனையைக் கொடுத்து விட்டார். ராகு 11-ல் இருந்தாலும் அவர் இருப்பது புதனின் நட்சத்திரமான கேட்டையில்; புதன் இருப்பது 8-ம் வீட்டில்; ஆக 8-ம் வீட்டின் பலனையும் கொடுக்கும் அதிகாரம் ராகுவிற்கு கிடைத்து விடுகிறது. அடுத்ததாக குரு 7-ம் வீட்டில் உச்சத்தில்; இருப்பினும் அவர் 3, 12-ம் வீடுகளுக்கு அதிபதி; ஆகவே 3, 8, 12 வீடுகள் கொடுக்கும் ஜெயில் தண்டனை இவருக்கும் கிடைத்து விட்டது. உச்சனாக இருப்பதால் நல்லதையே செய்ய வேண்டும் என்ற நியதி இல்லையென்பதைப் பாருங்கள். ஒருவர் House Arest என்கிற வீட்டுக் காவலில் வைக்கப் படுகிறார் எனக் கொள்ளுங்கள். அவர் வீட்டிலேயே இருப்பதால் 3ம் வீட்டிற்குப் பதிலாக 4-ம் வீடு சம்மந்தப் பட்டு இருக்கும். அதாவது 4, 8, 12-ம் வீடுகள் சம்மந்தப் பட்டு இருக்கும்.

  புதன். புதன் இங்கு தனியாக இருந்தால் எதாவது சிறிய துக்கங்களுக்காக கவலைப்படுபவராக இருப்பார். புதன் எழுத்துத் துறைகளுக்கும் காரகனல்லவா? ஏதாவது தவறுதலாக எழுதி அதனால் பல பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியவராக இருப்பார்.சனி, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள்பார்வை பெற்றால் பணம் கையாடல், தஸ்தாவேஜுகளைத்திருத்துதல் போன்ற தவறான செய்கைகளில் ஈடுபடுவர். 12-ம் இடம் மறைவுஸ்தானம் எனப்படும் அல்லவா? மறைந்து இருக்கும் உண்மைகளைக் கண்டறியும் திறமை பெற்றிருப்பர். சுறுக்கமாகச் சொல்லப்போனால் C.I.D. போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாகப் பணிபுரிவர்.

 

அடுத்தது குரு. மிகவும் ஆன்மீக சிந்தனை உள்ள கிரகம். இங்கு தீயவர் சம்மந்தப் படாமல் இருந்தால் சத்சங்கங்களிலோ, அனாதை ஆசிரமங்களிலோ, தர்மத்தைப் பரப்பும் ஸ்தாபனங்களிலோ தங்கள் காலத்தைக் கழிப்பர். ஆன்மீகத்துறையில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். தங்கள் விரோதிகளை வெற்றி காண்பர். பெரும் பணம் படைத்தோர் தர்மஸ்தாபனங்களுக்குப் பெறும் பொருளுதவி செய்வர்.

 

அடுத்த கிரகம் சுக்கிரன். 12-ம் வீட்டை அயன், சயன, போகஸ்தானம் என்று கூறுவார்கள். சுக்கிரன் இங்கு இருப்பது சிற்றின்பத்தில் அதிக நாட்டம் கொடுக்கும். சுபகிரகங்கள் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருப்பவர் வேலி தாண்டிச் செல்ல மாட்டார். செவ்வாய் சேர்ந்திருப்பின் பிற பெண்களிடம் நாட்டம் கொண்டு மனம் செல்கின்றபடியெல்லம் செல்வர். சுக்கிரனும், சனியும் சேர்ந்து இங்கு இருப்பின் மனைவியை விட்டுப் பிரியும் நிலை இவருக்கு உண்டாகும்.

 

சனி. சிலர் தனிமையை விரும்பலாம். சிலர் தனிமையான இடத்தில் வாழ வேண்டும் என விரும்ம்புவார்கள். சனி 12-ல் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அத்தகைய வாழ்க்கை கிடைக்கும். சனி 6-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு 12-ம் வீட்டில் இருந்தால் மிகவும் நாள்பட்டு குணம் ஆகின்ற வியாதியால் மருத்துவமனையில் அவதிப்படுவர்.

  நம்மிடம் பலர் ஜோதிட சம்மநதமான பிரச்சனைகளுக்கு வருவர். "நான் அதிகக் கடனில் இருக்கிறேன். என்னால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியுமா?" இந்தக்கேள்வி பலர் கேட்க்கின்றனர். அவற்றிற்கு நாம் பதில் அளிக்க வேண்டாமா? 12-ம் வீடு என்பது நாம் பட்ட கடனைத் திருப்பி அளிக்கும் வீடு. 8-ம் வீடு என்பது நமக்குக் கடன் கொடுத்தவரின் தனஸ்தானம். நாம் பணம் கொடுத்தால் அவருடைய பணம் கையிருப்பு அதிகரிக்கிறது அல்லவா? ஆக 12-ம் வீடும் 8-ம் வீடும் சம்மந்தப்பட்டால் ஒருவர் தான் வாங்கிய கடனைத் திருப்பி அளிக்க முடியும்.

 

12-ம் இடத்திற்கு மோட்சஸ்தானம் என்று பெயர். அதாவது ஒருவருக்கு மரணத்தைக் கொடுக்கக் கூடிய வீடும் இதுதான். 12-ம் வீட்டைக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் அவருக்கு ஆயுள் முடிந்து விட்டல் மரணம் சம்பவிக்கும்.

 

மற்றும் இடது கண், பாதங்கள், ஆகியவற்றையும் 12-ம் பாவம் குறிக்கிறது. பாவ கிரகங்கள் இருப்பின் இந்த உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். நாம் இத்துடன் 12-ம் பாவத்தை முடித்துக் கொள்வோம்.

  விதியை வெல்ல முடியாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.

ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337 பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவீனமானால் கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.

உதாரணமாக

12ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம் செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி. இந்த விதியை எப்படி மதியால் வெல்லலாம் என்று பார்ப்போம்.

செலவு என்பது என்ன? எதிர்காலத்திற்கு பயன்படாத ஆனால் நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய ஒன்று. விரயம் என்பது நம்மையறியாமலே நடக்கக்கூடிய செலவு. நட்டம் என்பது எதிர்பார்த்த அளவு பயன் கொடுக்காமல் இருப்பது.

மொத்தத்தில் கையில் உள்ள பணம் வெளியே போய்விடுவது.

நீங்கள் செலவு செய்யாமல் சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் இந்த செலவு நாளைய சொத்தாக மாறிவிடும்  அதற்கு உங்கள் ஜாதகத்தில் சொத்தது வாங்கும் யோகம் இருப்பின்.

இல்லையென்றால். புண்ணிய காரியத்திற்கு செலவு செய்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு நல்ல திசா காலங்களில் பயன் படும்.

தொழில் உள்ளவர்கள் விற்காத சரக்கை மிகக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் இலாபம் அடையலாம்.

பணம் மட்டுமே விரயம் என்பதில்லை. நோய்கள் விபத்துகள் வீண் அலைச்சலகள் மூலம் கூட நமக்கு 12ம் இடம் பாதிப்பைத் தரலாம். அதற்கு என்ன செய்வது.

1. வாகனங்களை முறையாக பராமரிப்பது. அதுவும் செலவுதான் விபத்தைத் தவிர்க்க உதவும்.

2. ரத்த தானம் செய்வது ரத்தம் வெளியேறுவதற்குச் சமம் தான்.

3. அடிக்கடி மருத்துவமனைகள் சென்று நோயாளிகளுக்கு உதவுவது. உங்கள் பணம் நோய்க்கு செலவிடப்படுகிறது.

4. அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவம் எடுத்துக் கொள்வதற்குச் சமம் தான்.

மொத்தத்தில் நீங்கள் உங்களுக்கு விதிக்கப்பட்டதை அனுபவிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் விருப்படி அமைகிறது. உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு தான் மதி. அந்த மதி உங்களின் விதியை மாற்றுகிறது எனக் கூறலாம். உண்மையில் உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் உணரும் போது அதற்கான விடைகளைத் தேடும் போது அது நடைபெறுகிறது.

இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு நம்மிடம் உண்டு. ஆனால் நம் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் எது நல்ல கிரகம் எந்த செயலை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

ஆனால் எல்லாராலும் ஏன் இது சாத்தியப்படவில்லை. ஏன் ? அவர்களுக்கு மனோகாரகன் சரியில்லை அதாவது மதி வேலை செய்யவில்லை. அவர்கள் ஜோதிடத்தை உணரவில்லை என்பது தான்.

 

 

பரிகாரங்கள்

 

பரிகாரங்கள், நேர்த்திக் கடன்கள் போன்றவை  எந்தக் காலத்திலும் வீண்போகாது. பகவானுக்காக செலவழிக்கும் பணமும் நேரமும் நிச்சயம் பலன்  தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. சிலருக்கு சிறிது தாமதமாகிறது. இதற்குக் காரணம் அவர்களின் பூர்வகர்ம வினைப்படி அமைந்த  ஜாதக அம்சம்தான்.

 

 

ஜோதிடத்தில் பரிகாரங்கள் என்பவற்றிற்கு இடமுண்டு என்றாலும் எல்லோருக்கும் பரிகாரங்களால் நன்மை விளையாது. நம்மால் ஓரளவிற்குத் தான் கர்ம வினைகளின் செயலாற்றலைக் குறைக்க முடியும். முற்றிலுமாகக் கர்மாவை மாற்றி அமைக்க இயலாது. கர்மவினைகளை அனுபவித்துக் கழித்து அதனை 0 ஆக்குவதே சிறந்தது. அது மிகக் கடுமையானதாக இருந்தபோதும் கூட. ஆனால் எல்லோராலும் கர்மவினைகளை அப்படி அனுபவித்திட இயலுமா என்ற கேள்வி எழும் போது, அங்கே விதி என்பதும், விதியை மதியால் வெல்லலாம் என்ற கோட்பாடும் உதவிக்கு வருகிறது. விதியை மதியால் வெல்லலாம்தான் ஆனால் அதற்கும் விதி இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதாவது கர்ம வினைகளைக் குறைத்துக் கொள்ள, அல்லது மாற்ற ஜாதகத்தில் இடமிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பலனளிக்காது. அதற்குத் தேவை குருவருள்.

 

 

 

பரிகாரம் என்றதும் நிறைய பணம் செலவு செய்து செய்வது என்று பொருள் அல்ல. இறைவனை மனதால் நினைத்து வணங்குவது, மற்றவர்களுக்கு உதவுவது, பிறர் துன்பம் போகும் வகையில் நற்ச்செயல்களை செய்வது தான்.

 

குறிப்பாக இந்த பூஜை, வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், பரிகாரங்கள் பலன் தர வேண்டும் என்றால், நாம் பரிகாரம் செய்ய ஆரம்பிக்கின்ற நாள்  நல்ல சுப நாளாக இருக்க வேண்டும். எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்கிறோமோ அந்த கிரகம் நீசம், வக்ரம் அடையாமல் இருக்க வேண்டும். நம்  ஜாதகப்படி நல்ல தசா புக்திகள் நடைபெற வேண்டும். ஹோமம், யாகம் செய்யும் நாளில் நல்ல லக்னத்தில், நல்ல சுபகிரக பார்வை உள்ள நேரத் தில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

  ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் தசா, புக்தி நாதனுக்கோ குருவின் பார்வை, அல்லது தர்மஸ்தானமான 9 - ம் அதிபதியின் பார்வையோ இருந்தால்தான் அவர்களுக்குப் பரிகாரத்தினால் பலன் உடனடியாகக் கிடைக்கும். இல்லையெனில் பலன் கிடைக்க தாமதம் ஆகும்

 

குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும்.  ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும்.  என்று பலர் நம்புகிறார்கள்.  இது தவறான எதிர்பார்ப்பாகும்.  எனவே கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.  3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  கீதாசாரமும் ஜோதிடமும்

எது நடந்ததோ, அது நன்றாகவே, நடந்தது

 

எது நடக்கிறதோ, அது நன்றாகவே, நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்

 

உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

 

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்

 

 

ஜோதிடம் ஓர் அறிமுகம்:

ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் போது

ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்

வர்ததினி குல ஸம்பதாம்

பதவி பூர்வ புண்ணியானாம்

லிக்கியதே ஜன்ம பத்திரிகா.

முன் வினைப் பயனில் தான் பிறப்பு ஏற்படுகிறது. முன்வினைப் பயனில் தான் பிழைப்பு ஏற்படுகிறது. நம்முடைய பூர்வ புன்னியம் தான் இப்பிறவியல் நாம் அனுபவிக்கிற சுக துக்கங்களுக்கு காரணமாய் அமைகிறது. நாம் செய்கின்ற வினைகளே நமக்கு அடுத்தப் பிறவியைத் தோற்றவிக்கிறது என்பதனை இதன் மூலம் அறிகிறோம்.

  ஜோதிடம் பொதுவானது. யாருக்கும் சொந்தமானதில்லை. ஒவ்வொருவரும் ஜோதிட நூல்களைப் படித்து, எழுதினால் தவறில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது இந்த ஜோதிடக்கலை. இன்று அண்ணாமலை பல்கலைகழகம்,மதுரை காமராஜர் பலகலைகழகம் போன்றவையும் ஜோதிடத்துக்கு என்று பட்டயம் வழங்கி பாடம் சொல்லி தருகின்றன.இவர்கள் நடத்தும் பாடங்கள் மிக நுணுக்கமாகவும் ,பழம்பெருமையும் ,கிரக கணக்கீடுகள் துல்லியமாகவும் இருக்கின்றன.ஜோதிடம் என்பதே கணக்குதான்.அறிவுகிரகம் புதன் வலுத்தவர்களும்,ஆன்மீக உணர்வை தருகிற ,பிறருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வைக்கும் குருவும் ,வலுத்தவர்களும் தான் இக்கலையில் பிரகாசிக்க முடியும்.அதே போல மன திடம் தருகிற சந்திரனும் நன்கு அமைய வேண்டும்.இவை லக்னத்தில் இருந்து வாக்கு ஸ்தானம்,பத்தாமிடம் எனும் தொழில் ஸ்தானம் போன்றவற்றில் சிறப்பாக அமைய வேண்டும்.அவர்கள்தான் இதை படிக்க முடியும்.தொழிலாக செய்ய முடியும்

 

 

1,4,7,10 போன்ற கேந்திர ஸ்தானத்திலோ அல்லது வாக்கு ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டிலோ புதன் இருந்து ,புதன் கெட்டு போகாமல் இருந்து குருவின் பார்வையும் கிட்டிவிட்டால் அவன் மிக சிறந்த ஜோதிடனாக உருவெடுப்பான்

  ஜோதிடத்தில் புலமை பெரும் ஜாதக அமைப்புகள் ;

 

தஸாம்ஸத்தில், நவாம்சத்தில், அல்லது இராசியில் ;

 

1)எந்த லக்கினத்திற்கு 1,5,9,அதிபதிகள் .அல்லது 10,11,அதிபதிகள் சம்பந்தம் பெற்று ரிஷப இராசியில் இருப்பது .

 

2)லக்கினத்திற்கு இரண்டாம் அதிபதியும் புதன்பகவானும் பலம் பெற்று கேந்திரத்தில் இருப்பது அல்லது 3,6,10,11. இருப்பது.

 

3) லக்கினாதிபதியுடன் சுக்கிரபகவான் பலம் பெற்று சம்பந்தம் பெறுவது.

அல்லது சுக்கிரன்பகவான...் இரண்டாம் பாவத்தில் பலம் பெற்று இருப்பது.

ஐந்தாம் ஆறாம் அதிபதிகள் இணைந்து இருப்பது .

 

பத்தாம் அதிபதியும் பதின்னொனம் அதிபதியும் இணைந்து இருப்பது.

 

சூரியபகவானுக்கும் , சந்திரபகவானுக்கும் , லக்கினத்திற்கும் இதில் ஒன்று மேலே குரிப்பிட்டதுப்போல் அமையுமானால் ஜோதிடத்தில் புலமை தரும் .

 

4)அந்தணன் எனும் குருபகவானும் சேய் எனும் செவ்வாய்பகவானும் கூடி வலிமையான இடங்களில் அமர்ந்திருந்தால் ஜாதகன் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும் ஜாதகன் நற் குணங்கள் உடையவன் கவித் திறமையுடையவன் ஜோதிடத்தில் கணிதத்தில் திறமையுடையவன் .

 

5)சேய் எனும் செவ்வாய்பகவானும் மதிமகன் எனும் புதன்பகவானும் கூடி வலிமையுடன் சுபஸ்தானங்களில் அமையுப் பெற்ற ஜாதகன் செல்வந்தர்களால் மதிக்கப்படுவான் பண்டிதன் செல்வமுடையவன் புகழ் பெறுபவன் பிறர்மதிக்கும் அறிவாற்றலும் உடையவன் .

 

6)ஜனன ஜாதகத்தில் சேய் எனும் செவ்வாய்பகவானும் வெள்ளி எனும் சுக்கிரபகவானும் சேர்ந்து சுப ஸ்தானங்களில் இருந்தால் ஜாதகன் அசட்டுத்தனமான பிடிவாதமுடையவன் முட்டாள்தனமான வாதம் செய்து துன்பப்படுபவன் .

 

7)கதிர் எனும் சூரியபகவானும் மதிமகன் எனும் புதன்பகவானும் சேர்ந்து சுப ஸ்தானங்களில் அமைந்துள்ள ஜாதகன் பிறந்த லக்கினம் எதுவாக இருந்தாலும் சொந்த வீடுஉடையவன் செல்வ வசதிபெறுபவன் பலவித பாக்கியங்களை அடைவான்

  யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும்.  ஜாதக யோகங்கள் 100க்கும் மேல் இருக்கிறது. அவற்றில் சில முக்கியத்துவம் வாய்ந்தவற்றைப் பார்ப்போம்.

 

 

 

குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்

  1) அஷ்டலக்ஷ்மி யோகம்

 

யோகங்களில் சிறப்பான யோகமாக இந்த அஷ்டலக்ஷ்மி யோகத்தை கொள்ளலாம். ராகு ஆறாமிடத்தில் நின்று குரு லக்ன கேந்திரம் அடைந்து நிற்பது அஷ்டலக்ஷ்மி யோகம் எனப்படும். பொதுவாக ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் போன்ற இயற்கை பாப கிரகங்கள் ஆறாமிடத்தில் நிற்பது நன்மையே செய்யும். ருண ரோக சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் நிற்பது அந்த இடத்தை நசிந்து போக செய்யும். அதனால் எதிர்ப்பு இல்லாத ஒரு வாழ்கையை அவர் அனுபவிப்பார், அதையும் மீறி எதிரிகள் வருவாரானால் அவர்களுக்கு அது சற்றேறக்குறைய அது அந்திம காலமாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல. குரு பகவானானவர் கேந்திரத்தில் நிற்பது தனித்த குருவாக இல்லாமல் இருப்பதே நல்லதாகும். குரு தனித்து இருந்தால் கிரந்தங்கள் கூறுவது

அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு "

 

என்பதேயாகும். இதிலிருந்து குரு தனித்து நிற்பது என்பது சுபமல்ல என்பது விளங்கும். இந்த குருவும் கேந்திரத்தில் நின்று ஆறாமிடத்தில் ராகு நிற்பது அஷ்டலஷ்மி யோகம் என்பதே!! இதன் பலன் மிகுந்த தனப்ரப்தம் உண்டு என்பது வெள்ளிடை. ஒருவன் தனம் பெற்றாலே மற்ற அனைத்துமே அவன் கைவரப்பெறும். இதனால் புகழ், சொத்து, செல்வாக்கு, சம்பத்து, ஆயுள், தோட்டம், வீடுகள் நில புலன்கள் போன்றவை கிடைக்கும். இதனால் இம்மாதிரியான ஜாதகர்கள் பெயரை சொன்னாலே அனைவருக்கும் தெரியுமளவுக்கு செல்வாக்கான வாழ்கையை பெறுவார்கள். இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு வெகுஜன தொடர்பு, தேக காந்தி ஆகியவைகள் தானாகவே வரும்.

  2) சுப கத்திரி யோகம்

 

லக்னத்திற்கு இருபுறமும் அதாவது பன்னிரெண்டாம் வீடு அல்லது இரண்டாவது வீட்டில் சுப கிரகமான குரு, வளர் பிறை சந்திரன், சுபரோடு சேர்ந்த புதன், போன்ற கிரகங்கள் இருந்தால் அது சுப கத்திரி யோகம் எனப்படும். இது மிகுந்த செல்வாக்கை தரக்கூடிய அமைப்பாகும். இந்த யோகமானது வாழ்வில் சிறிதளவேனும் சிரமம் இல்லாமல் வாழ்கையை அனுபவிக்ககூடிய அமைப்பாகும். ஒரு சிலர் தமது கடுமையான உடல் உழைப்பால் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவர். ஆனால் சிலர் தனது புத்திசாலித்தனத்தால் உடல் உழைப்பு இல்லாமலே புத்தியால் தனத்தை இயற்றுவர். இதையே கிராமப்புறங்களில் " வாயிலேயே அபிஷேகம் செய்கிறான் " என்று கூறுவதுண்டு. இதையே புத்திமான் பலவான் என்றும் அழைப்பர் . சுப கத்திரி யோகம் பெற்றவர்கள் அடுத்தவருக்கு யோசனை சொல்வது மாதிரியான தொழில்களையே செய்வார்கள். கன்சல்டன்சி போன்ற வேலைகளிலேயே இவர்களால் நிலையாக இருக்க முடியும். மற்றபடி உழைப்பால் உடல் வருத்தும் தொழில்கள் இவர்களுக்கு அமையாது. படிப்பறிவு இல்லாவிட்டாலும் இவர்களுடைய திறமைகள் பல் துறைகளில் பளிச்சிடும்.

  3) புதாத்திய யோகம்

 

ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருப்பது புதாத்திய யோகம் எனப்படும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். பொதுவாக இந்த புதாத்திய யோகம் மற்ற பாப கிரகங்கள் பார்க்காவிட்டால் இந்த யோகமானது விரிவாக செயல்படும். புதன் கிரகமானது நவ கிரகங்களில் மிக வலிமை குன்றியது ஆகும். அதனால்தான் புதன் சுபரோடு சேர்ந்தால் சுபராகவும் பாபரோடு சேர்ந்தால் பாபராகவும் செயல்படும். எனவேதான் மற்ற பாப கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் இந்த யோகம் முழுமையாக செயல்படும். புதன் மற்ற கிரகங்களின் பார்வையில் படும்போது அவர்களுடைய பலன்களை செய்யுமே தவிர தனது பலன்களை செய்ய முடியாமல் போய்விடும்.

 

புதன் மற்றெந்த கிரகங்களின் பார்வையை பெறாமல் இருந்தால் நல்ல பலன்களை செய்யும். பொதுவாக புதன் விதியா காரகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வித்யா காரகன் சூரியனுடன் சேரும்போது அதிபலம் பெற்று சிறந்த கல்வியையும், கல்வியால் சிறந்த முன்னேற்றத்தையும் கொடுத்துவிடும் என்றால் அது மிகையல்ல. பட்ட படிப்பு படிப்பதற்கும் பல்கலைகழகங்கள் செல்வதற்கும் இந்த புதாத்திய யோகம் மிக அவசியமான ஒன்று. இவர்கள் கல்விக்காக எவ்வளவு தூரமாகினும் சென்று கல்வி பெறுவர். சிறந்த நாவன்மையும் இவர்களிடம் ஒருங்கே அமையபெற்று இருக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது இதனால்தான். எதையும் ஆராய்ந்து அறிதுகொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த அமைப்பானது நிச்சயமாக இருக்கும், இந்த புதாத்திய யோகத்தில் புதனாவது சுரியனாவது உச்சமாகவோ அல்லது ஆச்சியாகவோ இருந்தால் அவர்களே பல நாடுகளும் அறியும் சிறந்த அறிவாளிகளாக வருவர். அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த அமைப்பு உறுதியாக உண்டு.

  கஜகேசரியோகம்

 

இந்த கஜகேசரியோகம் என்பது ஜோதிடத்தில் ஒரு சிறப்பான யோகமாகும். மற்ற யோகங்களில் தலையானது என்று கூட சொல்லலாம். இந்த ஒரு யோகம் இருந்தால் மற்ற எந்த யோகமும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். மேலும் ஒரு ஜாதகத்தில் இருக்கும் யோகத்திற்கு தகுந்தமாதிரி அந்த சாதகனின் யோகம் விளங்கும். இது அவ யோகமாக இருந்தாலும் பொருத்தும். ஆனால் இந்த யோகம் இருந்தால் மற்றெந்த தோஷங்களும் அந்த ஜாதகனை ஒன்றும் செய்வது இல்லை. மற்ற தோஷங்களையும் யோகங்களையும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த யோகத்திற்கு உண்டு. இஃது எவ்வாறெனில் ஒரு ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் இருந்தால் மற்ற தோஷங்கள் எல்லாம் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும். இந்த யோகத்தைப்பற்றி கீரனூர் நடராஜர் அருளிச்செய்த சாதக அலங்காரம் என்ற கிரந்தம் கூறும் கருத்தை பார்ப்போம்.

 

சந்திரனின் கேந்திரத்தில் குரு பகவான் நிற்க, அந்த குருவினுடைய கேந்திரத்தில் சந்திரன் நிற்க அதாவது குருவும் சந்திரனும் கேந்திரத்தில் நின்றால் அது கஜ கேசரி யோகம் எனப்படும். இந்த கிரக அமைப்பானது ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த சாதகன் வேறு எந்த தோஷங்கள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை, ஏனெனில் கஜம் என்றால் யானை என்றும் கேசரி என்றால் சிங்கம் என்றும் பொருள்படும். ஒரு யானை கூட்டத்தில் ஒரே ஒரு சிங்கம் சென்றால் எவ்வாறு அந்த யானை கூட்டமே சிதறி ஓடுமோ அதுபோல இந்த கஜ கேசரி யோகம் என்ற ஒன்று மட்டும் இருந்தால் மற்ற தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். இந்த கிரக நிலை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் மற்றெந்த தோஷதிர்க்கும் பரிகாரம் செய்ய வேண்டியது இல்லை. இது செவ்வாய் தோஷதிர்க்கும் பொருந்தும்.

  தர்மகர்மாதிபதி யோகம்

 

இந்த யோகத்தின் பெயரிலேயே அதனுடைய கிரக அடைவு உள்ளது தர்ம ஸ்தானம் என்பது ஒன்பதாமிடமாகும், கர்ம ஸ்தானம் என்பது பத்தாமிடமாகும். ஜாதகருடைய பூர்வ புண்ணிய பலன்களை அறியும் இடமாக இருப்பது ஐந்தாமிடமாகும் இதனால்தான் புத்திரர்களை ஐந்தாமிடதைக்கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள். ஒருவர் பெரும் குழந்தை செல்வம் புத்திர பாக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்கியம் உண்டா இல்லையா என்பதை ஐந்தமிடதைக்கொண்டே நிர்ணயிக்க முடியும். இந்த ஐந்தாமிடத்தில் பாப கிரகங்கள் இருக்கும் பட்சத்தில் ஐந்தாமிடதிர்க்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிடத்தை கொண்டே ஒருவருடைய புத்திர பாக்கியத்தை அறிய முடியும். இந்த ஒன்பதாமிடமானது ஒருவர் வாழும் வாழ்கை வசதியானதா அல்லது வறுமையானதா என்பதை தீர்மானிக்கும். சாதகனின் வாகன வசதி சொந்த வீடு போன்றவற்றை இந்த ஒன்பதாமிடமே தீர்மானிக்கும். இதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கைதரம் சமூகத்தில் அவர் பெற்றுள்ள அந்தஸ்து போன்றவற்றை கண்டுனறலாம். இந்த ஒன்பதாமிடத்ததிபதி கர்ம ஸ்தானம் என்னும் பத்தாமிடதோனுடன் கூடி இருப்பது தர்ம கர்மாதி யோகம் எனப்படும். இந்த யோகமானது அமைய பெற்றவர்கள் நிச்சியமாக ஒரு தொழில் அதிபராகவோ அல்லது மிக்க அதிகாரம் பெற்ற ஒரு பதவியிலோ இருப்பர்.

  சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது,

 

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.

 

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

 

கீழே கொடுத்துள்ளேன்.

 

ஞாயிற்றுக்கிழமை: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்

திங்கட்கிழமை: சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்

செவ்வாய்க் கிழமை: உத்திரம், மூலம்

புதன் கிழமை: உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்

வியாழக்கிழமை: சுவாதி, மூலம்

வெள்ளிக்கிழமை: அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்

சனிக்கிழமை: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி

 

மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று அமிர்தயோகம்.

 

அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம்.

  சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

 

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

 

கீழே கொடுத்துள்ளேன்.

 

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை

திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்

செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை

புதன் கிழமை: ஹஸ்தம்

வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை

வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்

சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்

 

மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.

 

மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

 

செய்தால் என்ன ஆகும்?

 

ஊற்றிக்கொண்டு விடும்!

 

அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.

 

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம் மாட்டிக் கொண்டுவிடும்.

 

மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.

 

சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.

 

பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

 

மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும்

 

ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

 

சரி, அன்று என்னதான் செய்யலாம்?

 

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

 

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

  நீங்கள் இது வரையில் 12 வீடுகளைப் பற்றியும், அதில் எந்தெந்த கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்பதையும் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் மாந்தியைப்பற்றித் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக கேரள மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த மாந்திக்கு குளிகன் என்ற மற்றொறு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் Titan- என்றழைப்பர்கள். அதாவது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உப கிரகமுண்டு. பூமிக்கு, சந்திரன் உப கிரகமாக இருப்பதுபோல் சனிக்கு இந்த மாந்தி உப கிரகம். சனிக்கு மொத்தம் 10 உப கிரகங்களுண்டு. இந்தப் 10-ல் ஒன்றுதான் மாந்தி என்றழைக்கப்படும் குளிகனாகும். இது சனிக்கு உபகிரகமாக இருப்பதனால் தானோ என்னமோ இதை சனியின் பிள்ளை என்று நமது பெரியவர்கள் அழைத்தனர். இந்த மாந்தியை எப்படி ஜாதகத்தில் குறிப்பது என்று பார்ப்போம்.

 

மாந்தி ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உதயமாவார். இதை நாம் நாழிகையில் கீழே கொடுத்துள்ளோம்.

 

மாந்தி உதயம்   பகல்(நாழிகை)   இரவு (நாழிகை)

ஞாயிறு   26           10

திங்கள்    22           06

செவ்வாய்  18           02

புதன் 14           26

வியாழன்  10           22

வெள்ளி   06           18

சனி  02           14

 

 

ஞாயிற்றுக்கிழமை பகலில் சூரிய உதயத்திலிருந்து 26 நாழிகைக்கு மாந்தி என்கின்ற குளிகன் உதயமாகும். இரவில் ஒரு குழந்தை பிறந்தால் சூரிய அஸ்தமனத்தி லிருந்து 10 நாழிகைக்குக் மாந்தி உதயமாகும். இரவில் குறிப்பிட்டுள்ள நாழிகைகளெல்லாம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எனக் கொள்ள வேண்டும். இதைப்போல் ஒவ்வொரு கிழமைக்கும் எந்தெந்த நாழிகையில் மாந்தி உதயமாகிறது எனக்கண்டு மாந்தியை ஜாதகத்தில் கணிக்க வேண்டும்.

  பொதுவாக மாந்தியானவர் அசுபப் பலன்களைத்தான் கொடுக்கின்றார். 10, 11-ம் வீடுகளைத் தவிர வேறு எந்த வீட்டில் இருந்தாலும் அவர் அசுப பலனைத்தான் கொடுக்கின்றார்.

 

முதல் வீடான இலக்கினம் : இங்கு மாந்தி இருந்தால் முகத்தில் வசீகரமும் அழகும் குறைவாக இருக்கும். எப்போதும் வாட்டத்துடன் காணப்படுவர். நற்குணங்கள் குறைவாக இருக்கும். சிலருக்கு உடலில் நோய் இருந்து கொண்டே இருக்கும்.

 

2-ம் வீடு : பணப் புழக்கம், ஆபரண யோகம், வாக்கு சுத்தம் ஆகியவை குறைவாக இருக்கும். கண் பார்வை கூட சிலருக்குக் குறையும். குடும்பத்தில் அமைதி குறையும். குடும்ப ஒற்றுமையும் குறையும்.

 

3-ம் வீடு : சகோதரத்தால் உபயோகமில்லை. தைரியம் குறைவாக இருக்கும். பொதுவாக 3-ம் பாவத்தைக் குறிக்கும் காரகத்துவங்கள் பாதிக்கப்படும்.

 

4-ம் வீடு : கல்வியில் தடை உண்டாகும். தாயால் அனுகூலங்கள் குறைவாக இருக்கும். வாகன யோகம் குறைவாக இருக்கும்.

 

5-ம் வீடு : இது புத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.முற்பிறவியில் செய்த தீவினைகளுக்கு இப்பிறவியில் பலன் அனுபவிக்க நேரிடும்.

 

6-ம் வீடு : உறவினர்களைப் பிரிய நேரிடும். கடன் வந்து சேரும். தாய் மாமன் உறவு உதட்டளவில்தான் இருக்கும்.

 

7-ம் வீடு : களத்திரஸ்தானத்தில் மாந்தி நிற்க களத்திர தோஷத்தைக் கொடுக்கும். 7-ம் வீடு வியாபாரத்தையும் குறிக்கிறது அல்லவா? வியாபாரம் மந்தமாகும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல கூட்டாளி அமைய மாட்டார்.

 

8-ம் வீடு : விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உண்டு. பிதுராஜித சொத்துக்களில் வியாஜ்யம் இருந்து வரும். பெண்களாக இருந்தால் மாங்கல்ய பாக்கியம் குறைவு.

 

9-ம் வீடு : தந்தையால் அனுகூலங்கள் குறைவு. தருமம் செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.

 

10-ம் வீடு : இங்கு மாந்தி சுப பலன்களைக் கொடுக்கிறார். தொழில் நல்ல விதமாக அமையும். வாழ்வில் நல்ல உயர் பதவிக்கு வர முடியும். நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.

 

11-ம் வீடு : தன லாபம் உண்டு. மூத்த சகோதரர்கள் நல்ல விதமாக அமைவர். எடுத்த காரியங்களில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.

 

12-ம் வீடு : தன விரயங்கள் இருக்கும். நிம்மதியான உறக்கம் இருக்காது. அலைச்சல்கள் மிகுந்து நிம்மதியான வாழ்க்கை இருக்காது.

 

இவைகளெல்லாம் மாந்தியின் பொதுப் பலன்கள். பொதுவாக 10-ம் வீடு, 11-ம் வீடு தவிர மற்ற வீடுகளில் நல்ல பலன் தருவது இல்லை."மாந்தியின் கெடுபலன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் செய்யலாமா?" என்றால் பரிகாரங்கள் எதுவும் நம் நூல்களில் சொல்லப்படவில்லை. நவகிரகங்களுக்குப் பரிகாரம் இருப்பதுபோல் மாந்திக்குக் கோவில் கிடையாது. கேரளாவில் மட்டும் கோவில் உண்டு.

 

மாந்திக்குப் பார்வை எதுவும் கிடையாது. தான் இருக்கும் வீட்டிற்குத்தான் பலன் கொடுப்பார். அதேபோல் கேந்திர ஸ்தானங்கள், திரிகோண ஸ்தானங்கள் ஆகிய வற்றில் இருந்தாலும் பலன்கள் மாறுவது இல்லை. கோட்ச்சார பலன்கள் எதுவும் மாந்திக்குக் கிடையாது. கோட்ச்சாரபலன் என்பது கிரகங்களின் தற்போதைய நிலை. மாந்திக்கு நட்சத்திரங்களோ, வீடுகளோ இல்லையாதலால் அது தசா, புக்திகளிலும் இடம்பெறவில்லை. ஆகவேதான் பொதுவாக மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

  சந்திர மங்கள யோகம்:- செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து இருத்தல்; அதாவது ஒரு ஜாதகத்தில் செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து இருப்பார்களேயாகில் இந்த யோகம் உண்டாகிறது. இதன் பலன்கள்: முறையற்ற காரியங்கள் மூலம் பணம் சம்பாதிப்பர். தன் தாயரைக் கடின சொற்கள் மூலம் கடிந்து கொள்வர். அதேபோல் செவ்வாயும் சந்திரனும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டாலும் இந்த யோகம் உண்டாகிறது. இந்த சந்திரமங்கள யோகம் இருப்பவர்கள் சற்று முன் கோபிகளாக இருப்பதை நாம் அனுபவத்தில் பார்த்து இருக்கிறோம்.

 

சுனபா யோகம்:- சந்திரன் இருக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் சூரியனைத் தவிர வேறு ஏதாவது கிரகங்கள் இருத்தல்; இவ்வாறு இருந்தால் அது சுனபா யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள்: சுயமாகச் சொத்துச் சேர்க்கமுடியும். நல்ல பெயருடனும், புகழுடனும் வாழ முடியும். நாம் நம் அனுபவத்தில் பார்க்கும்போது சந்திரனுக்கு அடுத்த வீட்டில் ஏதாவது கிரகம் இருந்தால் ஒருவர் சொத்துக்கள் சேர்த்து முன்னுக்கு வந்துவிடுவது இல்லை. ஆகவே இந்த யோகத்தை அப்படியே எடுத்துக் கொண்டு பலன் சொல்ல வேண்டாம். நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும்.

 

அனபாயோகம்:- சந்திரனுக்குப் 12-ம் வீட்டில் சூரியனைத்தவிர ஏதாவது கிரகம் இருத்தல்; நல்ல புகழுடன் கூடிய வாழ்க்கை கிடைக்கும். இந்த யோகமும் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது சரியாக வரவில்லை; இருப்பினும் வாசகர் களுக்குத் தெரிந்து இருக்கட்டுமேயென்று எழுதினோம். சந்திரனுக்குப் பக்கத்து வீட்டில் கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமென்றும், அனபாயோகமென்றும் பார்த்தோம். கிரகங்களே இல்லாமல் தனித்து இருந்தால்? அதற்குக் "கேமத்திரும யோகம் " என்று பெயர். இந்த யோகமுள்ளவர் ஏழ்மை நிலையில் இருப்பர். நற்காரியங்களில் ஈடுபடமாட்டார். பணத்தைக் கையாடல் செய்பவர்; இப்படியெல்லாம் ஜோதிட உலகம் கூறுகிறது.

 

அதி யோகம்:- குரு, புதன், சுக்கிரன் இவைகளெல்லாம் சுப கிரகங்கள். இவைகள் சந்திரனுக்கு 6, 7, 8 -ம் வீடுகளில் இருந்தால் அதற்கு அதியோகமென்று பெயர். இந்த மூன்று கிரகங்களும் ஏதாவது ஒரு வீட்டில் இருக்கலாம்; அல்லது இரண்டு வீடுகளில் இருக்கலாம்; அல்லது மூன்று வீடுகளிலும் இருக்கலாம். மூன்று கிரகங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது இரண்டு கிரகங்களாவது இருந்தாலும் அதுவும் அதியோ கம்தான். இதற்குப் பலன் என்ன? அந்த ஜாதகர் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வர். நீண்ட ஆயுளுடன், தன்னை எதிர்த்தவர்களை வென்று நல் வாழ்க்கை வாழ்வர். இந்தப் பலன்கள் சரியாக வருகின்றனவாவென்று ஜாதகத்தைப் பரிசோதித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

சகட யோகம்:- சந்திரனுக்கு 6, 8, 12-ம் வீடுகளில் குரு இருந்தால் இதற்குச் சகட யோகமென்று பெயர். இந்த மாதிரி அமைப்புடையவர் அதிர்ஷ்டமில்லாதவர். கஷ்ட ஜீவனமுள்ளவர்; மிகவும் பிடிவாதகுணமுள்ளவர்; அதனால் பலராலும் வெறுக்கப்படுபவர்.

  அமல யோகம்:- இலக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ பத்தாம் வீட்டில் ஒரு சுபகிரகமிருந்தால் அதற்கு அமல யோகமென்று பெயர். இதற்குப் பலன் என்னவென்றால் நல்ல பெயருடனும், புகழுடனும் வாழ்க்கை அமையும்.

 

ஹம்ச யோகம்:- குருவானவர் கேந்திர ஸ்தானங்களில் இருந்து அது அவரின் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருக்குமேயாகில் அது ஹம்ஸ யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகமுள்ளவர் நற்குணங்களோடு நல்வாழ்வு வாழ்வர். நல்ல அழகுள்ள சரீரத்தை உடையவராக இருப்பர்.

 

மாளவியா யோகம்:- குருவைப்போல் சுக்கிரனும் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருந்தால் அது கேந்திர ஸ்தானமாக இருந்தால் இந்த யோகத்தைக் கொடுக்கிறது. நல்ல அழகிய உருவ அமைப்பையும், வாகன யோகத்தையும், நல் மனைவியையும் கொடுக்கும். அதாவது சுக்கிரன் காரகத்துவம் வகிக்கின்றவைகளெல் லாம் நன்றாக அமையும்.

  சச யோகம்:-சனி கேந்திரத்தில் இருந்து அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் இந்த யோகத்தைக் கொடுக்கும். இந்த அமைப்புள்ளவர் களுக்கு நல்ல வேலைக்காரர்கள் அமைவர். மற்றவர்கள் சொத்தை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.

 

ருசக யோகம்:- செவ்வாய் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருந்து அது கேந்திர ஸ்தானமாக இருந்தால் இந்த யோகம் ஏற்படும். நல்ல உடல்வாகு உள்ளவராக இருப்பார். நல்ல பணவளம் உள்ளவராக இருப்பார். எதிலும் தலைமை தாங்கும் திறமை கொண்டவராக இருப்பார். பத்ர யோகம்:- புதன் கேந்திர ஸ்தானங்களிலிருந்து அது புதனின் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாக இருந்தால் அது பத்ர யோகமெனப் படும்.மிகவும் கெட்டிக் காரத்தனம் உள்ளவராக இருப்பார். சாதுர்யமாக நடந்து கொள்வர். புதன் காரகத்துவம் வகிக்கின்றவைகளெல்லாம் சிறந்து விளங்கும்.

 

புத-ஆதித்ய யோகம்:- புதனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அதற்கு புத ஆதித்ய யோகமென்று பெயர். மிகவும் கெட்டிக்காரத்தனம் கொண்டவராக இருப்பார். எந்தக் காரியம் செய்தாலும் புத்திசாலித்தனம் அதில் இருக்கும்.

 

தர்ம, கர்மாதிபதி யோகம்:- 9-ம் வீட்டின் அதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதற்கு தர்ம - கர்மாதிபதி யோகம்என்று பெயர். 9-ம் வீட்டிற்கு தர்ம ஸ்தானமென்றும், 10- ம் வீடிற்கு கர்ம ஸ்தானம் என்றும் பெயரல் லவா? ஆகையால்தான் அதற்கு தர்ம-கர்மாதிபதி யோகமென்று பெயர். இந்த யோகமிருந்தால் நல் வாழ்க்கை அமையும். யோகங்களைக் கொடுக்கும்.

 

மாலிகா யோகம்:- ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகமென்று பெயர். அதாவது 7 கிர கங்களும் வரிசையாக ஒவ்வொரு வீட்டில் இருக்க வேண்டும். 7 கிரகங்களும் இலக்கினத்திலிருந்து ஆரம்பித்து வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் இலக்கின மாலிகா யோகமெனப் பெயர். வாழ்க்கையில் உயர்ந்த பதவி வகிப்பர். பண வசதி நன்றாக இருக்கும்.

 

2-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்குத் தன மாலிகா யோகமெனப் பெயர். இந்த யோகமிருந்தால் பண வசதி நன்றாக இருக்கும்.

 

3-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் விக்கிரம மாலிகா யோகமெனப் பெயர். மிக்க தைரியசாலியாக இருப்பர். தலைமை தாங்கும் குணம் உள்ளவராக இருப்பர்.

 

4-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் தர்ம சிந்தனை உள்ளவராக இருப்பர். வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பார். இதற்கு சுக மாலிகா யோகமெனப் பெயர்.

 

5-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் மிகவும் தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பர். புகழ் வாய்ந்தவராகவும் இருப்பர். இதற்குப் புத்திர மாலிகா யோகமெனப் பெயர்.

 

6-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் பேராசை மிகுந்தவராக இருப்பர். பணத்திற்குக் கஷ்டப் படுபவராகவும் இருப்பார். சத்ரு மாலிகா யோகமென அழைக்கப் படும்.

 

7-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் அதற்கு களத்திர மாலிகா யோகமெனப் பெயர். பெண்மோகமிருக்கும். பதவிமேலும் மோகமிருக்கும்.

 

8-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் மிகவும் ஏழ்மையானவராக இருப்பார். மனைவிக்குக் கீழ்ப்படிந்தவராகவும் இருப்பார்.

 

9-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் பாக்கிய மாலிகா யோகமெனப் பெயர். மிகவும் வசதியான வாழ்க்கை கிடைக்கும். தெய்வ நம்பிக்கை இருக்கும்.

 

10-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் கர்ம மாலிகா யோகமெனப் பெயர். நல்ல மதிப்புள்ள வாழ்க்கை அமையும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.

 

11-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் லாப மாலிகா யோகமெனப் பெயர். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

 

12-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் விரய மாலிகா யோகமெனப் பெயர். வாங்கும் பொருள்களை லாபமான விலைக்கு வாங்குவர். நல்ல விதத்தில் பணத்தை முதலீடு செய்வர்.

 

இந்த கிரக மாலிகா யோகம் இலக்கினத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஆரம்பித்து முதல் 5-லிருந்து 9-வீட்டுக்குள் முடிய வேண்டுமென்ற கருத்துமுண்டு. முதல் 5-வீட்டிற்குள் முடிந்தால் ஒருவீட்டிற்கு ஒரு கிரகம் என்ற நிலைமை மாறி சில வீடுகளில் 2 கிரகங்கள் கூட இருக்கும்.

  தரித்திர யோகம்:- 11-ம் வீட்டு அதிபதி 6 அல்லது 8 அல்லது 12 -ம் வீட்டில் இருந் தால் அதற்குத் தரித்திர யோகமனப் பெயர். இந்த ஜாதகர் கடனாளியாக இருப்பார். ஏழ்மை மிகுந்து இருக்கும். நியாயமற்ற செயல்களைச் செய்யவும் தயங்க மாட்டார்.

 

சரஸ்வதி யோகம்:- குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் 1, 2, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளில் தனித்தோ அல்லது சேர்ந்தோ இருத்தல்; குருவுக்கு அந்த வீடு சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோஅல்லது நட்பு வீடாகவோ இருத்தல் வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு சரஸ்வதி யோகமெனப் பெயர். இந்த ஜாதகருக்கு சரஸ்வதி கடாஷ்ஷம் இருக்கும். அத்துடன் நல் மனைவியும், நற் புத்திரர்களும் வாய்த்திடுவர்.

 

சர்ப கண்ட யோகம்:- ராகுவும், மாந்தியும் 2-ன் வீட்டில் இருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. இவர்களுக்கு பாம்புக்கடி ஏற்படக் கூடும்.

 

உத்தம கிரக யோகம்:- 4-ம் வீட்டின் அதிபதி கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருத்தல்; அத்துடன் சுபகிரகங்கள் பார்வையோ அல்லது சேர்க்கையோ இருப்பின் நல்ல வீடு அமையும். 4-ம் வீட்டின் அதிபதியும், 10-ம் வீட்டின் அதிபதியும் சேர்ந்து செவ்வாயுடனும், சனியுடனும் இருந்தால் பல வீடுகள் இருக்குமெனக் கூறப்படுகிறது.

 

நாம் மேலே சில யோகங்களைக் குறிப்பிட்டோம். இன்னும் 100-க் கணக்கான யோகங்கள் பற்றி நமது முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அவைகளையெல்லாம் கூற வேண்டுமானால் நாம் அதற்குத் தனிப் புத்தகமே எழுத வேண்டியது இருக்கும். அது சாத்தியமாகாது.

  ஜோதிடத்தைப் பற்றி ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது பலன் எப்படிச் சொல்வது என்று பார்ப்போம். பொதுவாகப் பல ஜோதிடர்கள் கிரகங்களின் ஆதிபத்தியத்தை மட்டுமே வைத்துக் கொண்டு பலன் சொல்லுவர்.

 

உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். அவருக்கு செவ்வாய் தசை நடக்கிறது எனக்கொள்ளுங்கள். உடனே கன்னியா இலக்கினத்திற்கு செவ்வாயானவர் 3, 8 -ம் வீடுகளுக்கு அதிபதி. ஆகவே அவர் நல்லதையே செய்ய மாட்டார் எனக் கூறுவார்கள். செவ்வாய் எங்கு இருக்கிறார் எனவும், எந்த நட்சத்திரச் சாரத்திலிருக்கிறார் எனவும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆதிபத்தியத்தை வைத்தே பலனைக் கூறுவார்கள். சிலர் வெறும் கோச்சாரத்தை மட்டும் வைத்தே பலனைக் கூறுவார்கள். தற்போது உங்களுக்கு ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, என்று பல நிகழ்வுகளுக்கும்அவற்றைக் கையைக் காட்டுவார்கள். தற்போது மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி நடைபெற்று வருகிறது. என்ன பிரச்சனை அவர்களுக்கு வந்தாலும் கோட்ச்சாரத்தையே காரணம் காட்டுவார்கள். அதே மிதுன ராசியில் பிறந்த மற்றொருவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாது இருக்கும். அவருக்கு ஏன் அந்தப் பிரச்னை வரவில்லை எனப் பார்க்க மாட்டார்கள். இவ்வாறு பலரும் பலவிதமாகப் பலன் கூறி வருகின்றார்கள். நாம் நமது வாசகர் களுக்கு ஓர் எளிய வழி முறையக் கற்றுக் கொடுப்போம். உதாரணத்திற்கு ஓர் ஜாதகத்தைப் பார்ப்போம். இதுவும் கன்னியா இலக்கின ஜாதகம்தான். இவருக்கு செவ்வாய் தசை எப்படி இருந்தது எனப் பார்க்கப் போகிறோம். கன்னியா இலக்கினத்திற்கு 3, 8-ம் வீட்டிற்கு உடையவரல்லவா? செவ்வாய் கஷ்டத்தையல்லவா கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. பல நம்மைகளைச் செய்து விட்டார். கஷ்டங்கள் எதுவும் செய்ய வில்லை.

 

ராசி

 

இலக்கினம் : கன்னி

4ம் வீட்டில் : சந்திரன், புதன், சுக்கிரன்

5ம் வீட்டில் : சூரியன், கேது

9ம் வீட்டில் : செவ்வாய், சனி (வ)

11ம் வீட்டில் : ராகு

12ம் வீட்டில் : குரு (வ)

 

நவாம்சம்

 

இலக்கினம் : மீனம்

இலக்கினத்தில் சூரியன்

2ம் வீட்டில் : சுக்கிரன், செவ்வாய், குரு

3ம் வீட்டில் : கேது

5ம் வீட்டில் : சந்திரன்

6ம் வீட்டில் : புதன்

7ம் வீட்டில் : சனி

9ம் வீட்டில் : ராகு

  இவருக்கு செவ்வாய் தசை ஆரம்பமாகியது. எல்லோரும் கூறியது போல் செவ்வாய் பல கஷ்டங்களைக் கொடுக்கும் என எதிர்பார்த் தார். என்ன நடந்தது எனப் பார்ப்போம்?முதலில் ஒரு பதவி உயர்வு பெற்றார். அலுவலகத்தில் அவர் செய்த வேலைக்கு முக்கியத்துவம் கிடைத்தது. மிகத் திறமைமையானவர் என அலுவலகத்தில் மதிக்கப்பட்டு முக்கியமான பொறுப்புக்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. வீடு ஒன்று கட்டி முடித்தார். இவ்வாறு பல நல்ல காரியங்கள் அந்த செவ்வாய் தசையில் நடந்தது.

 

இதற்குக் காரணம் என்ன? 3, 8-க் குடையவர் கஷ்டத்தைக் கொடுப்பதற்கு பதில் பல நன்மைகளைச் செய்யக் காரணம் என்ன?

 

சரி! முதலில் ஒரு கிரகம் எப்படிப் பலன் அளிக்கிறது எனப் பார்ப்போம். ஒருகிரகம் எந்த நட்சத்திரச் சாரத்தில் இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். அதை எப்படிப் பார்ப்பது? மேற் கூறிய ஜாதகத்தில் செவ்வாய் ரிஷபத்தில் இருக்கிறார். ரிஷபத்தில் என்னென்ன நட்சத் திரங்கள் இருக்கின்றன? கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள், மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள். இதில் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்கிறது எனப் பாருங்கள். மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாயானவர் ரோகிணியின் சாரத்தில் இருக்கிறார். ரோகிணி முதல் பாதத்தில் இருக்கிறார். அதனால்தான் செவ்வாயை நவாம்சத்தில் மேஷத்தில் போட்டிருக்கிறோம்.

 

ரோகிணியின் அதிபதி யார்? சந்திரனல்லவா? ஆகவே செவ்வாய் சந்திரன்கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுத்து விட்டார். சந்திரன் இந்த ஜாதகத்தில் 11-ம் வீட்டிற்கு அதிபதியல்லவா? அவர் 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக 4, 11-ம் வீட்டுப் பலன்களைசெவ்வாய் கொடுத்து விட்டார். 4-ம் வீடு என்பது ஸ்திர சொத்துக்களைக் குறிக்கும் வீடல்லவா? ? 11-ம் வீடு என்பது நமது ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வீடல்லவா? ஆக செவ்வாய் இவருடைய ஆசையான சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற கனவைப் பூர்த்தி செய்து விட்டது.

 

1. ஒரு கிரகம் முதலில் தான் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்கிறதோ அதன் அதிபதி கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுப்பார். மேற்கண்ட உதாரணத்தில் செவ்வாய் சந்திரனின் சாரத்தில் இருக்கிறார். சந்திரன் 11-ம் வீட்டிற்கு அதிபதியாகி 4-ம் வீட்டில் இருக்கிறார் அல்லவா. சந்திரன் 4, 11வீடுகளின் பலனைக் கொடுக்க வேண்டும். ஆக அவர் கொடுக்க வேண்டிய பலன்களை அவர் சாரத்தில் இருக்கும் செவ்வாய் கொடுத்து விட்டார்.

 

அதற்கு அடுத்தபடியாக தன் ஆதிபத்தியமுள்ள வீடுகளின் பலனைக் கொடுப்பார். இந்த ஜாதகத்தில் மூன்றாம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் 9-ம் வீட்டில் இருக்கிறார். ஆக 3, 8, 9-ம் வீட்டின் பலன்களையும் கொடுக்க வேண்டும். அப்படி என்ன அந்த வீடுகளின் பலனைக் கொடுத்தார் எனப் பார்ப்போம். 3-ம் வீடு என்பது குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு என்பது நீண்ட பயணத்தையும் குறிக்கிறது அல்லவா? இவர் செவ்வாய் தசையின் போது பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. ஆக 3, 9 -ம் வீட்டுப் பலன்களையும் அனுபவித்தார்.

  அடுத்ததாக ஒரு கிரகம் எந்த கிரகத்துடன் கூடி இருக்கிறதோ, அல்லது பார்க்கப் படுகிறதோ அதன் பலனையும் கொடுப்பார். இந்த ஜாதகத்தில் செவ்வாயானவர் சனியுடன் சேர்ந்து இருக்கிறார். சனி 5, 6-ம் வீடுகளுக்கு அதிபதியல்லவா? 6-ம் வீடென்பது என்ன? 6-ம் வீடு செய்யும் தொழிலைக் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீடும் 11-ம் வீடும் தொழிலில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆக இந்த செவ்யாயின் தசையில் உத்தியோகத்தில் பதவி உயர்வைப் பெற்றார். இந்த ஜாதகத்தில் செவ்வாய் யாராலும் பார்க்கப் படவில்லை. ஆகையால் பார்க்கும் கிரகத்தின் பலனை அவரால் கொடுக்க இயலவில்லை. இப்போது ஒருகிரகம் எப்படிப்பலன் அளிக்கிறது எனத் தெரிந்து கொண்டீர்கள். சரி! சூரியன் தனது தசையில் எப்படிப் பலன் அளித்து இருப்பார் எனக் கூறுங்கள் பார்ப்போம்.

 

சூரியன் 12-ம் வீட்டின் அதிபதி. 5-ல் இருக்கிறார். அவர் இருப்பது சொந்த நட்சத்திரமான உத்திராடத்தில். சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் அவர் இருக்கும் வீடான 5-ம் வீட்டுப் பலனை முதன்மையாக வழங்குவார். 5-ம் வீடு என்பது குழந்தைகளைக் குறிக்கும் வீடு. அவருக்குத் திருமணம் அப்போது ஆகவில்லையாதலால் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. 5-ம் வீடென்பது பதவி உயர்வைத்தடுக்கும் வீடு. அவருக்குப் பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை; அவை கை. சூரியன் கேதுவுடன் சேர்ந்திருக்கிறார். கேதுவிற்கு சொந்த வீடுகள் கிடையாது. கேது சனியின் வீட்டில் இருப்பதால் சனிகொடுக்கக்கூடிய பலன்களைக் கொடுத்தாக வேண்டும். சனி 5, 6 ம்வீட்டிற்கு அதிபதியாகி 9-ம் வீட்டில் இருப்பதால் 5, 6, 9-ம் வீட்டின் பலன்களைக் கொடுத்தாக வேண்டும். அந்த சனியின் வீட்டில் கேது இருப்பதால் கேது சனியின் பலன்களைக் கொடுப்பார். கேதுவுடன் சூரியன் சேர்ந்திருப்பதால் சூரியன் கேது கொடுக்கக் கூடிய 6-ம் வீட்டுப் பலன்களையும் கொடுத்து விட்டார். இவருக்கு சூரிய தசை சுய புக்தியில்தான் வேலை கிடைத்தது. ஆகவே சூரியன் எப்படி வேலையைக் கொடுத்தார் பாருங்கள்.

 

இதே போன்று ஒவ்வொரு கிரகமும் எந்தக்கிரகத்தின் சாரத்தில் இருக்கிறது என்று பார்த்து, எதனுடன் சேர்ந்திருக்கிறது என்று பார்த்தும், யாரால் பார்க்கப்படுகிறது என்று பார்த்தும் பலன் சொல்ல வேண்டும். நாம் உதாரணத்திற்குப் பல ஜாதகங்களைப் பார்ப்போம். அதற்குப்பின் எல்லாம் உங்களுக்கு விளங்கிவிடும்.

 

நீங்கள் ப்ரச்சன ஜோதிடம்பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. உதாரணமாக உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கொள்ளுங்கள். ஜாதகமும் இல்லை. எப்படிப் பலன் கூறுவது? இந்த மாதிரி சமயங்களில்தான் இந்தப் ப்ரச்சன ஜோதிடம் உதவுகிறது. நீங்கள் ஜோதிடரிடம் செல்லும் நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர் பலன் சொல்லுவார். அது சரியாக வரும். உங்களுக்கு எப்போது பிரச்சனை இருக்கிறதோ அப்போது உங்களை ஆள்கின்ற கிரகங்கள் உங்களுக்குப் பலன் சொல்லும். உங்கள் எதிர்காலத்தைக் காட்டும். இந்த கிரகங்களுக்கு ஆளும் கிரகங்கள்எனப் பெயர். இந்த ஆளுக் கிரகங்கள் உதவி ப்ரச்சன ஜோதிடத்திற்கு மட்டுமன்றி ஜாதகம் இருப்பவர்களுக்கும் பலன் சொல்லப் பயன்படும். வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது ஆகும்? நான் எப்போது வெளி நாடு செல்வேன்? போன்ற கேள்விகளுக்கும் இந்த ஆள்கின்ற கிரகத்தின் மூலமாகப் பதில் கூற முடியும்.

  ஆளும் கிரகம் என்றால் நாம் ஒரு ஜாதகத்தைப் பற்றிப் பலன் சொல்ல எப்போது எடுத்துக் கொள்கிறோமோ அப்போது உள்ள கிரக நிலைகள்தான் ஆளும் கிரகங்கள். சரி! ஒரு உதாரணம் எழுதுகிறேன்.

 

ஒருவருக்கு எப்போது திருமணம் ஆகும் என ஒரு ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள். பொதுவாக அநேக ஜோதிடர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?

 

ஜாதகத்தில் சந்திரன் எங்கே இருக்கிறது எனப்பார்ப்பார்கள். தனுசில் இருக்கிறது எனக் கொள்வோம். தற்போது குரு எங்கு இருக்கிறார் எனப்பார்ப்பார்கள். தற்போது கன்னியிலே கோட்ச்சாரரீதியாக குரு பகவான் இருக்கிறார். அதாவது ஜென்ம ராசிக்குப் 10-ல் குரு இருக்கிறார். ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் வீடுகளில் குரு சஞ்சாரம் செய்யும் போது திருமணம் ஆகும் என்று நம்பிக்கை. ஆகவே அவர் கோட்ச்சா ரத்திக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது 10-ல் குரு இருக்கிறார். அடுத்த ஆண்டு 11-ம் வீட்டிற்கு குரு பெயர்வார். ஆகவே அடுத்த ஆண்டு திருமணம் ஆகும்எனக் கூறுவார்கள். இவர்கள் வாக்கின்படிப் பார்த்தால் யாருக்கெல்லாம் ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் குரு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் திருமணம் ஆகவேண்டும். இன்னும் சுறுக்கமாகச் சொல்லப்போனால் இந்த 5 ரசிக்காரர்களுக்குத்த்தான் ஒரு ஆண்டில் திருமணம் ஆக வேண்டும். மற்றவர்களுக்கு ஆகக் கூடாது. ஆனால் அனுபவப்பூர்வமாகப் பார்க்கும்போது 12 ராசிக் காரகளுக்கும் ஒரு ஆண்டில் திருமணம் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட ராசியினருக்கு மட்டும் திருமணம் ஆவதில்லை. சரி! எப்படித்தான் பலன் சொல்லுவது? கீழே படியுங்கள் பார்ப்போம்.

 

பலன் கூற ஆளும் கிரகங்கள் மிகமுக்கியம் என எழுதி இருந்தோம். சரி! ஆளும் கிரகங்கள் எவைகள்? நீங்கள் 08-04-2005 அன்று வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிக்கு ஒரு ஜாதகத்திற்குப் பலன் சொல்லுகிறீர்களெனக் கொள்வோம். அதாவது ஒரு பெண்ணுக்கு எப்போது திருமணம் ஆகும்?” என்றுதான் நீங்கள் பார்க்கிறீர்கள் எனக் கொள்வோம். ஆளும் கிரகங்கள் எவை? காலை 9.00 மணிக்கு.

 

உள்ள கிரகங்கள்தான் ஆளும் கிரகங்கள். அவை பின்வறுமாறு:

 

1. அன்றைய கிழமையின் அதிபதி. அன்று வெள்ளிக் கிழமை. வெள்ளிக்கிழமைக்கு அதிபதி சுக்கிரன். ஆக சுக்கிரன் ஒரு ஆள்கின்ற கிரகம்.

 

2. அன்றைய ராசியின் அதிபதி. அப்போது நடப்பு உத்திரட்டாதி. மீன ராசி. மீன ராசிக்கு குரு. ஆக குரு ஒரு ஆள்கின்ற கிரகம்.

 

3. அன்றைய நட்சத்திர அதிபதி. அன்று உத்திரட்டாதி நட்சத்திரமல் லவா? அதற்கு அதிபதி சனி. ஆக சனியும் ஒரு ஆளும் கிரகம்.

 

4. அப்போதைய இலக்கின அதிபதி. அப்போது ரிஷப இலக்கினம். அதன் அதிபதி. சுக்கிரன். அவரும் ஒரு ஆளும் கிரகம்.

 

5. இலக்கின நட்சத்திர அதிபதி. ரிஷபத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் அப்போது இலக்கினம் இருந்தது. ரோகிணிக்கு அதிபதியான சந்திரனும் ஒரு ஆளும் கிரகம்தான்.

  இந்த ஐவரும்தான் ஆளும் கிரகங்கள். இந்த ஐந்து பேருடைய தசா, புக்தி காலங்களில்தான் திருமணம் நடக்க வேண்டும். இந்த ஆளூம் கிரகங்கள்தான் எதிர்காலத்தைக் காட்டும் வழிகாட்டிகள். இந்த வழி காட்டிகள் இல்லாது எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூற முடியாது. ஆகவே எப்போது பலன் சொல்ல ஆரம்பித்தாலும் இந்த ஆளும் கிரகங்களைத் தனியாகக் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. அவை களையும் தற்போது நடக்கும் தசா, புக்திகளையும் ஒப்பிட்டுப் பலன் கூற வேண்டும். ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம்.

 

இது ஒரு பெண்ணின் ஜாதகம்.

 

பிறந்த தேதி: 14-04-1972

பிறந்த ஊர்: சென்னை

பிறந்த நேரம் காலை 08:50

 

ராசி :

 

ரிஷப இலக்கினம்

இலக்கினத்தில் : சனி, செவ், சுக்

3ம் வீட்டில் : கேது

8ம் வீட்டில் : குரு

9ம் வீட்டில் : ராகு

11ம் வீட்டில் : புதன்

12ம் வீட்டில் : சந், சூரி

 

நவாம்சம் :

 

ரிஷப இலக்கினம்

இலக்கினத்தில் : சந், சுக்

2ம் வீட்டில் : செவ்

4ம் வீட்டில் : குரு

5ம் வீட்டில் : கேது

6ம் வீட்டில் : புதன்

11ம் வீட்டில் : ராகு

12ம் வீட்டில் : சூரி, சனி

 

ஜெனன காலத்தில் கேது தசை இருப்பு 4 வரு - 05 மாதம்- 06 நாள். இதுதான் அந்தப் பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணிற்குத் திருமணம் எப்போது ஆகும்? இதுதான் கேள்வி.

 

நாம் திருமணமென்றால் என்னெவென்று ஏற்கனெவே எழுதியுள்ளோம். திருமணமென்பது ஒரு சட்டபூர்வமான பிணைப்பு. கணவன் - மனைவி என்ற பிணைப்பு திருமணத்தின் மூலம் ஏற்படுகிறது. இந்தப் பிணைப்பைக் குறிப்பது 7-ம் வீடு.

 

அடுத்தது திருமணத்தின்மூலம் வீட்டில் ஒரு நபர் அதிகமாகிறார். ஒருவராயிருந்தவர் இப்போது இருவர் ஆகி விட்டனர். அதாவது குடும்பத்தில் ஒரு நபர் அதிகமாகி விட்டார். இதைக் குறிப்பது 2-ம் வீடு என்ற குடும்பஸ்தானம் ஆகும்.

 

இந்தத் திருமணத்தின் மூலம் அவர்களுக்குத் தாம்பத்திய உறவு கிடைக்கிறது. இந்தத் தாம்பத்திய உறவினைக் குறிப்பது 11-ம் வீடு. ஆக இந்த 2 , 7, 11, -ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசை, புக்தி, அந்தரங்களில்தான் ஒருவருக்குத் திருமணம் நடைபெறும்.

  நாம் இந்த ஜாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு திருமணம் எப்போது ஆகும்?” என்று பார்த்த தினம் 04-08-2003 இரவு 8.30 மணிக்கு. அப்போது இருந்த ஆளும் கிரகங்கள்:

 

1. கிழமையின் அதிபதி : சந்திரன்

 

2. ராசியதிபதி : அன்று ஸ்வாதி நட்சத்திரம் துலா ராசி - அதிபதி சுக்கிரன்.

 

3. நட்சத்திரம் : ஸ்வாதி - ராகுவின் நட்சத்திரம் -ஆக ராகு நட்சட்த்திர அதிபதியாகி ஒரு ஆளும் கிரகமாகி விட்டார்.

 

4. இலக்கினாதிபதி : அப்போது இலக்கினம்: கும்பம். அதன் அதிபதி சனி. அவரும் ஒரு ஆளும் கிரகம்.

 

5. இலக்கின நட்சத்திர அதிபதி - இலக்கினம் அப்போது பூரட்டாதியில் சென்று கொண்டிருந்தது. ஆக குருவும் ஒரு ஆளும் கிரகமாகிறார்.

 

ஆக தற்போது கிடைத்துள்ள ஆளும் கிரகங்கள்

 

1. சந்திரன்

2. சுக்கிரன்

3. ராகு

4. சனி

5. குரு

 

நாம் அந்தப் பெண்ணின் ஜாதகத்தைப் பரிசீலித்தபோது சந்திர தசை, செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்தது. சந்திரன் திருமணத்தைக் கொடுப்பாரா? அவர் 3-ம் வீட்டிற்கு அதிபதி. 12-ம் வீட்டில் உள்ளார். திருமணத்திக் கொடுக்கின்ற வீடுகளுடன் அவர் எப்படி சம்மந்தப் படுகிறார். அவர் 11-ம் வீட்டதிபதியான குருவால் பார்க்கப் படுகிறார். ஆக அவர் 11-ம் வீடு கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுக்கிறார். சந்திரன் ஒரு ஆளும் கிரகமாக வருகிறது. ஆக சந்திரன் தசையில் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

 

அடுத்தது புக்தியைத் தேர்வு செய்தாக வேண்டும். தற்போது நடப்பது செவ்வாய் புக்தி. செவ்வாய் 7-ம் வீட்டின் அதிபதி. திருமணத்திக் கொடுக்க சகல அதிகாரமும் அவருக்கு இருக்கிறது. இருப்பினும் ஆளும் கிரகத்தின் பட்டியலில் செவ்வாய் இல்லை. ஆக செவ்வாய் புக்தியில் திருமணம் நடைபெறாது. அவர் திருமணத்தைக் கொடுக்கும் சக்தி இல்லாதவராக இருக்கிறார்.

 

அடுத்த புக்தி ராகு. ராகு 9-ம் வீட்டில் இருக்கிறார். உத்திராட நட்சத்திரத்தில் இருக்கிறார். உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் கொடுக்கும் பலன்களை ராகு கொடுப்பதற்கு சகல அதிகாரமும் இருக்கிறது. சூரியன் 12-ல் இருப்பதுபோல் தோன்றினாலும் பாவத்தில் 11-ம் வீட்டிற்குப் போய் விடுகிறார். அதாவது சூரியன் 11-ம் வீட்டில் இருக்கிறார். ஆக 11-ம் வீட்டின் பலனை சூரியன் கொடுக்கிறார். சூரியன் சாரத்தில் ராகு இருப்பதால் சூரியன் கொடுக்க வேண்டிய பலன்களை ராகு கொடுத்து விடுவார். ராகு ஒரு ஆளும் கிரகமாக இருப்பதாலும், ராகு 11-ம் வீட்டின் பலனைக் கொடுக்க இருப்பதாலும் ராகு புக்தியில் திருமணம் நடக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ராகு புக்தியில் திருமணம் நடக் கும் என்று கூறிவிட்டால் போதுமா? ராகு புக்தி 18 மாதங்கள் நடைபெறும். அடுத்து அந்திரத்தையும் பார்க்க வேண்டாமா.

 

ஆளும் கிரகங்களில் கிழமையின் அதிபதியைக் காட்டிலும் ராசி அதிபதி வலுவானவர். ராசியதிபதியைக் காட்டிலும் நட்சத்திர அதிபதி வலுவானவர். நட்சத்திர அதிபதியைவிட இலக்கினாதிபதி வலுவானவர். இலக்கினாதிபதியை விட இலக்கின நட்சத்திர அதிபதி வலுவானவர். நமக்கு இலக்கின நட்சத்திர அதிபதி குரு. அவர் 11-ம் வீட்டின் அதிபதியாக இருந்தாலும் அவர் 7-ம் வீட்டின் அதிபதி செவ்வாயால் பார்க்கப் படுகிறார். ஆக அவர் 7 மற்றும் 11-ம் வீட்டுப் பலன்களைக் கொடுக்கும் அதிகாரம் கிடைத்து விடுகிறது. ஆகவே குரு அந்திரத்தில் திருமணம் ஆகும் என்ற முடிவுக்கு வந்தோம். அதையே அந்தப் பெண்ணின் பெற்றோர்களுடமும் கூறி இருந்தோம்.

 

அந்தப் பெண்ணுக்கு சந்திர தசை, ராகு புக்தி, குரு அந்தரத்தில் திருமணம் நடந்தது. அதாவது அந்தப் பெண்ணிற்கு 14-07-2004 அன்று திருமணம் நடந்தது. நாம் பலன் கூற மேற்கண்ட முறையைத் தான் பின் பற்றி வந்து பலன் கூறுகிறோம்.

 

நமது வாசகர்களுக்கு எல்லாம் புரிந்து இருக்கும். ஆனால் பாவத்தைப் பற்றி மேலே கூறி இருந்தோம். அது சிலருக்குப் புரியாமல் இருந்து இருக்கும். நாம் இதுவரையில் பாவத்தைப் பற்றி எழுதவில்லை. அது எப்படிப் போடுவது என்றும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஒரு கிரகம் ராசியில் 5-ம் வீட்டில் இருக்கிறது எனக் கொள்வோம். அது பாவம் போட்டால் 4-ம் வீட்டில் இருக்கலாம். அந்த கிரகம் 5-ம் வீட்டின் பலனைக் கொடுப்பதற்கு பதிலாக 4-ம் வீட்டின் பலனைத்தான் கொடுக்கும். ஆக பலன் சொல்லும்போது ராசியை மட்டும் பார்க்காது பாவத்தையும் வைத்துப் பலன் சொன்னால் இன்னும் அதிக அளவில் சரியான பலனைக் கூறலாம். கம்ப்யூட்டர் ஜாதகங்களில் ராசியைப் போடும்போது பாவமும் போட்டுக் கொடுப்பார்கள். தற்போது இவ்வாறு உபயோகித்து வாருங்கள்.

  எனக்கு லாட்டரியில் பரிசு கிடைக்குமா ?

 

லாட்டரியில் பரிசு என்பது எந்த சிரமும் இல்லாது கிடைக்கும் பணமாகும். அவ்வாறு சிரமமின்றி பரிசு கிடைத்தலைக் குறிப்பது 5-ம் வீடாகும். 5-ம் வீடு 2-ம் வீட்டுடனோ அல்லது 11-ம் வீட்டுடனோ சம்மந்தப் பட்டால் அத்தகைய பரிசு கிடைக்கும். 2-ம் வீடு பணவரவையும், 11-ம் வீடு லாபத்தையும் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீட்டதிபர் 2-லோ அல்லது 11-லோ இருக்குமேயாகில் அத்தகைய பணவரவு அந்த ஜாதகருக்கும் கிடைக்கும். இந்த மூன்று வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் கிடைக்கும். ஆளும் கிரகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பலன் சொல்வது சரியாக இருக்கும்.

 

பிரிந்த தம்பதியினர் கூடுவார்களா ?

 

தம்பதியருக்குள் கருத்து வேற்றுமை ஏற்படுவது சகஜம்தான். சில தம்பதியினர் மன வேற்றுமையுடன் தங்கள் காலத்தைத் தள்ளுவார்கள். சிலர் அப்படியல்ல; கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்தே போய்விடுவர். அத்தகைய தம்பதியினர் திரும்பவும் சேர்வார்களா ? என்பதுதான் நமது கேள்வி. 2, 5, 7, 11-ம் வீட்டைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் அவர்கள் ஒன்று சேர்வார்கள். 2-ம் இடம் குடும்பஸ்தானம் அல்லவா? 5-ம் இடம் என்பது 7-ம் வீட்டிற்குப் 11-ம் இடமல்லவா? 7-ம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். ஆகவே அதையும் சேர்த்துக் கொண்டுள்ளோம். 11-ம் ஜாதகரின் லாபஸ்தானம் அல்லவா ? ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஆகவே இந்த நான்கு வீடுகளையும் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் பிரிந்த தம்பதியினர் கூடுவர்.

 

நோய் எப்போது தீரும் ?

 

6-ம் இடம் ஒருவருக்கு வரும் நோயைக் குறிக்கிறது. 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 5-ம் வீடு நோய் குணமாகுதலைக் குறிக்கிறது. 11-ம் வீடு வழக்கம் போல் ஜாதகரின் நலனைக் குறிக்கிறது ஆக 5, 11-ம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் அவருக்கு குணமாகும். இங்கு முதலில் நோயி.ன் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதரணமான, காய்ச்சலாக இருப்பின் சில நாட்களில் குணம் தெரியும். காமாலை, டைபாய்டு போன்றவைகள் சில வாரங்கள் ஆகலாம். சில நோய்கள் வந்தால் சில மாதங்கள் ஆகலாம். ஆக நோயின் தன்மைக்கு ஏற்ப ஆளும் கிரகத்தின் உதவியுடன் எப்போது குணமாகும் என்று கூற வேண்டும். இதெல்லாம் படிப்பதற்கு மிக எளியதாக இருக்கும். ஆனால் அனுபவரீதி யாகப் பார்க்கும் போது அதில் உள்ள சிரமங்கள் தெரியும். அனுபவமதான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

  வீடு, வாசல் எப்போது கட்ட முடியும் ?

 

முதலில் வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். 4-ம் வீட்டுடன் செவ்வாய் சம்மந்தப்பட்டால் வீடு கட்டும் யோகம் இருக்கிறதென்றும், சுக்கிரன் சம்மந்தப்பட்டால் வாகன யோகம் இருக்கிறதென்றும் கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு எப்போது வாங்க முடியும் எனப் பார்ப்போம். 4-ம் வீடு ஸ்திர சொத்துக்க ளையும் 12-ம் வீடு Investment என்கிற முதலீட்டையும் குறிப்பதால் இந்த வீடுகளுடன் 11-ம் வீட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வீடுகளிக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் ஒருவர் ஸ்திரசொத்துக்கள் வாங்க முடியும்.

 

வாகனமும் அவ்வாறே. ஆனால் சிலர் நான் இரு சக்கர வாகனம் வாங்குவேனா ?

 

அல்லது நாலு சக்கர வாகனம் வாங்வேனா? எனக் கேட்ப்பார்கள். அதற்கும் நாம் பதில் சொல்ல வேண்டுமல்லவா? வாகன யோகம் இருந்து சுக்கிரன் நாலு கால் ராசிகளான மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம், தனுசின் பிற்பாதி ஆகியவைகளுடன் சம்மந்தப் பட்டால் அவர் நாலுகால் வாகனமான கார் வாங்குவார் எனக் கொள்ளலாம். அதை விடுத்து மிதுனம், மீனம், தனுசின் முற்பாதியுடன் சம்மந்தப் படால் இரு சக்கர வாகனம் வாங்குவர் எனக் கொள்ளலாம். இந்த ராசிகள் இரட்ட்டை ராசிகள் அல்லவா! மிதுனம் ஒரு ஆண், பெண்ணை சின்னமாகக் கொண்டிருக்கிறது அல்லவா? மீனம் இரட்டை மீன்களை சின்னமாகவும், தனுசு வில், அம்பை சின்னமாகவும் கொண்டுள்ள தால் இவை இரட்டை ராசிகளென்று அழைக்கப்படுகின்றன.

 

சில முக்கியமான கேள்விகளுக்கு எந்தெந்த வீட்டை வைத்துப் பார்க்க வேண்டுமென எழுதியுள்ளோம். இதை அடிப்படியாக வைத்துப் பலன் சொல்லி வாருங்கள். நீங்கள் புரியும் தவறுகள் உங்களுக்கே தெரிய வரும். தவறைத் திருத்திக் கொண்டால் ஒரு நம்பகரமான ஜோதிராகப் பரிமளிக்க முடியும்.

 

நமது பாரமபரிய ஜோதிடத்தில் கிரகங்களின் பலத்தைக் கணிக்க ஷட்பலம்என்ற முறையைக் கையாளுகின்றனர். இது மிகவும் கடினமானதும், துல்லியமான கணிதத்தைக் கொண்டதுமாகும். இது நடைமுறைக்குக் சிரம்மானதுமென்றும் கூறலாம். இதைப் பற்றி நாம் அதிகம் எழுதப் போவது இல்லை. இருப்பினும் இது என்னவென்று தெரிந்து கொள்வோம். ஷட்பலமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

1. ஸ்தான பலம்

2. கால பலம்

3. அயன பலம், கிரக யுத்த பலம்

4. நைசிர்கிக பலம்

5. திக்குப் பலம்

6. சேஷ்டாபலம்.

  இந்த ஸ்தான பலம் என்பது பலவிதமான பலங்கள் உள்ளடங்கியது. அதேபோல் ஒவ்வொரு பலமும் ஒவ்வொரு விதமான பலங்களை உள்ளடக்கியது ஆகும். அவற்றைக் கீழே பார்ப்போம்.

 

I.ஸ்தான பலம்:-

 

அ. உச்ச பலம்.

ஆ கேந்திராதி பலம்

இ. திரேஷ்காண பலம்.

ஈ. யுக்மா, யுக்ம பலம்.

உ. சப்த வர்க்கஜ பலம்

 

இந்த சப்த வர்கஜ பலம் மேலும்பலவித பலங்களை உள்ளடக்கியது.

 

1. இராசி வர்க்க பலம்

2. நவாம்சை வர்க்க பலம்

3. திரேஷ்காண வர்க்க பலம்

4. துவாதசாம்ச வர்க்க பலம்

5. சப்தாம்ச வர்க்க பலம்

6. ஒரா வர்க்க பலம்

7. திரிசாம்ச வர்க்க பலம்

 

II கால பலம்:-

 

இது பல பலங்களை உள்ளடக்கியது:-

 

1. நத உன்னத பலம்

2. தின ராத்திரி திரிபாக பலன்

3. தின பலம்

4. மாத பலம்

5. வருஷபலம்

6. ஒரா பலம்

7. பட்ச பலம்

 

III அயன பலம், கிரக யுத்த பலம்

 

IV நைசர்கிக பலம்

V திக் பலம்

VI சேஷ்டா பலம்

 

இவ்வளவு பலம்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டுமென்று சொல்கிறது நமது ஜோதிட சாஸ்த்திரம்.

 

அதேபோல் ராசி, நவாம்ச சக்கிரத்தைத் தவிர பின்வரும் சக்கிரங்களையும் கணிக்க வேண்டும்.

 

1. பாவம்

2. திரேக்காணம்

3. துவாதசாமச சக்கிரம்

4. ஓரை

5. திரிசாமசம்

6. சப்தாம்சம்

 

இவ்வளவு சக்கரங்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டும். இவைகளெல்லாம் அனுபவரீதியாகப் பார்க்கும்போது கடினமான செயல். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

  பொதுவாக ஜோதிடர்கள் உதவி மிகத் தேவைப்படுவது திருமணத்தின்போது தான். திருமணம் எப்போது ஆகும் என்பது முதல் கேள்வி. அடுத்தது ஜாதகப் பொருத்தம் உள்ளதா ? என பார்க்க வேண்டும்.

 முதலில் இருவர் ஜாதகத்தையும் தனித்தனியாக இலக்கினம், சந்திரன், முதலியன கெடாமல் இருக்கின்றனவா? எனப் பார்க்க வேண்டும். இருவருக்கும் ஆயுள் பாவம் நன்றாக உள்ளதா? எனப் பார்க்க வேண்டும். அதைப் போன்று புத்திரபாவம் நன்றாக உள்ளதா எனவும், நோய்நொடியின்றி வாழ்வார்களா ? எனவும் பார்க்க வேண்டும். பின்பு தொழில், வரும் தசைகள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் பார்க்காமல் வெறும் 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்த்துச் செய்யும் திருமணங்கள் நாம் எதிர்பார்ப்பதுபோல் இருப்பதில்லை. நாம் கீழே ஒர் உதாரண ஜாதகத்தைக் கொடுத்துள்ளோம்.

 

இது ஒரு பெண்ணின் ஜாதகம்:-

 

ராசி

 

துலா இலக்கினம்

மேஷம் : சூரியன், கேது

துலாம் : குரு, ராகு

தனுசு : சந்திரன், சனி

கும்பம் : செவ்வாய்

மீனம் : புதன், சுக்கிரன்

 

நவாம்சம்

 

தனுசு இலக்கினம்

மேஷம் : சனி

மிதுனம் : கேது

சிம்மம் : சந்திரன்

கன்னி : சுக்கிரன்

துலாம் : சூரியன், குரு

தனுசு : ராகு

கும்பம் : செவ்வாய்

மீனம் : புதன்

 

ஜனன கால இருப்பு தசை:- சுக்கிரன் - வருஷம் 15 மாதம் 6 நாள் 22.

  ஜன்ம நடத்திரம்:- பூராடம்.

 

அவள் கணவனின் ஜாதகம்:

 

ராசி

 

சிம்ம இலக்கினம்

மிதுனம் : கேது

கடகம் : குரு

கன்னி : சூரியன், சந்திரன்

துலாம் : புதன், சனி, சுக்கிரன்

தனுசு : செவ்வாய், ராகு

 

ஜென்ம நட்சத்திரம்: உத்திரம் 4 ம்-பாதம்

 

இவர்களுக்கு நாம் தசப் பொருத்தத்தைப் பார்ப்போம்.

 

1. தினப் பொருத்தம்:- தினப் பொருத்தம் இருந்தால் அவர்கள் நோய், நொடியின்றி நீண்ட காலம் வாழ்வார்கள். இதில் தினப் பொருத்தம் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் நோய் நொடியின்றி இருக்கின்றார்களா என்றால் அதுதான் இல்லை. அந்தப் பெண் பலவித நோய்களால் பீடிக்கப் பட்டு எப்பொழுதும் தொல்லைதான்.திருமணமாகி சுமார் 25 ஆண்டுகள் ஓடி விட்டன. இந்தப் பெண் பல சமயங்களில் மன நோய்க்கும் ஆளாகிறார். இதை ஜாதக ரீதியாகப் பார்ப்போமேயானால் இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டுக்காரனான குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதைக் காணலாம். உடலாகிய இலக்கினம் 6-ம் வீட்டுக்காரனாகைய குருவால் பாதிக்கப் பட்டு இருக்கிறார். மனமாகிய சந்திரன், சனியின் சேர்க்கையால் பாதிக்கப் பட்டுள்ளார். சந்திரனும் 6-ம் வீட்டிலுள்ள சுக்கிரனின் சாரத்தில் உள்ளார். ஆகவே இந்தப் பெண்ணிற்கு உடல், உள்ளம் சம்மந்தமான நோய் வருகிறது. தினப்பொருத்தம் மட்டும் பார்த்தால் சரியாக வரவில்லை பார்த்தீர்களா !

 

2. கணப் பொருத்தம்:- இது இருந்தால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும் எனக்கூறப் படுகிறது. இவர்களுக்குக் கணப் பொருத்தம் உள்ளது. ஆனால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைந்துள்ளதா என்றால் அதுதான் இல்லை. தினசரி வாழ்க்கையே போராட்டம்தான். ஆகவே கணப் பொருத்தம் அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கவில்லை.

  3. மாகேந்திரப் பொருத்தம்:- இந்தப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தம்பதியருக்கு மாகேந்திரப் பொருத்தம் இல்லை; ஆகவே சந்தான பாக்கியம் இல்லையோ என்று எண்ண வேண்டாம். இப்பொருத்தம் இல்லா விட்டாலும் இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உள்ளது.

 

இவ்வாறாகப் பொருத்தத்திற்கும் இவர்கள் வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லாது இருக்கிறது பாருங்கள். சரி! இவர்கள் ஜாதகத்தைச் சற்றுப் பார்ப்போம்.

 

பெண்ணுக்கு இலக்கினத்தில் 6-ம் வீட்டிற்குடைய குரு இருக்கிறார். அவர் 7-ம் பார்வையாக களத்திர ஸ்தானத்தைப் பார்க்கிறார் அல்லவா? 6-ம் வீடு 7-ம் வீட்டிற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் அல்லவா? ஆக இருவருக்கும் எப்போதும் சண்டை. மனக் கசப்பு. விவாக ரத்து ஒன்றுதான் ஆகவில்லை. பல தடவை அவர் நான் விவாக ரத்துச் செய்து விடுகிறேன் என்று கூறிவிட்டார். பெண்ணுக்கு இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டின் அதிபதியும் பரிவர்த்தனை. 6-ம் வீடும் இலக்கினமும் சம்மந்தப் பட்டால் உடல் வியாதிதான் என்று நாம் எழுதி வந்திருக்கிறோம். அதன்படி இந்தப் பெண் உடல்நலம், மன நலம் கெட்டு வாழ்கிறார். பொதுவாக இலக்கினத்தில் ராகு இருக்கும் பெண்கள் அடங்கி நடப்பது இல்லை. இப் பெண்ணும் இதற்கு விதி விலக்கு இல்லை. ஜாதகத்தில் இவ்வளவு குறைபாடுகள் இருக்கும்போது வெறும் தசப் பொருத்தம் மட்டும் பார்த்து இணைப்பது சரியல்லவே

!

நாம் தசப்பொருத்தங்களைப் பற்றிக் குறை கூறுவதாக யாரும் எண்ன வேண்டாம். அடிப்படை ஜாதகங்களிலேயே குறைபாடுகள் இருக்குமேயானால் அந்த ஜாதகங்களைப் 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்த்து இணைப்பதில் பொருள் எதுவும் இல்லை என்பதுதான் நமது வாதம்.

  வாய்பாடுகள்

 

1 நாள் = 60 நாழிகை = 24 மணி

1 நாழிகை = 60 விநாழிகை = 24 நிமிடம்

1 விநாழிகை = 60 தற்பரை = 24 வினாடி

 

ராசி மண்டலம் = 360 பாகைகள் = 12 ராசிகள்

1 ராசி = 30 பாகைகள்= 2 ¼ நட்சத்திரங்கள்

1 நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்

1 பாதம் = 3 பாகை 20 கலை

 

1 பாகை = 60 கலை

1 கலை = 60 விகலை

  மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம்  அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி, வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும்.

 

சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி வணிகம், வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டு  தொடர்புடையவைகளாலும், கொடுக்கல், வாங்கல், ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குருபகவானுக்கு 10ம்  வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம் பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்று புதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக பணியுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும்.

 

மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10ல் அமைந்து உச்சம், திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில்  சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல் செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும்.

 

சனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நிலை, அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

  ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது தான்.

அப்படி இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?

உண்மையில்... செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.

தோஷம் என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது. சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.

ஒருவர் ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம் உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.

உண்மையில், முன்காலத்தில் சுக்கிரனுக்கும், செவ்வாய் தோஷம் பார்க்கப்பட்டு வந்தது. அப்படி சுக்கிரனுக்கும் சேர்த்து பார்க்கப்படும் பட்சத்தில் இங்கு ஒருவருடைய ஜாதகம் கூட, செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கவே முடியாது.

காலப்போக்கில் சுக்கிரனுக்கு... செவ்வாய் தோஷம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது லக்னம் மற்றும் ராசிக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.

சாபம் என்றால் சாப விமோசனம் இருப்பது போல், தோஷம் என்றால் தோஷ நிவர்த்தி அல்லது விமோசனம் கண்டிப்பாக உண்டு.

நாம் ஏற்கனவே கூறியபடி லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாகசொல்லிவிட முடியாது.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மிதுனம், கன்னி லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள் உண்டு.

  வாழ்க்கையில் ஒரே தோஷம்தான்... அது சந்தோஷம்!

· செவ்வாய் தோஷம்.

· ராகு-கேது தோஷம்.

· சனி தோஷம்.

· ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

இதுமட்டுமல்ல. இன்னும் இன்னும் பல தோஷங்கள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும். அதாவது, புத்திர தோஷம், களத்திர தோஷம், சயன தோஷம் என்று தோஷங்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் எந்த வகையில் அணுகுவது, இவற்றில் இருந்து எப்படியெல்லாம் மீள்வது என்பதை முழுமையாக அறிவதே முதன்மையான விஷயம்.

அறிவதிலும் உணர்வதிலும்தான் இருக்கிறது புரிதல். தோஷங்களைப் புரிந்து கொண்டால், தோஷங்களில் இருந்து நிவர்த்தியாவதும் மிக மிக எளிதாகிவிடும்.

இப்போது செவ்வாய் தோஷம் குறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு எனச் சொல்லியிருந்தேன். உண்மையில், இந்த ஐந்து லக்கினம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் வேலையே செய்யாது.

மிதுனம் கன்னிக்கு மட்டுமே தோஷம் உண்டு. அதற்கும் சில விதிவிலக்குகள், தோஷ நிவர்த்தியாதல் என இருக்கின்றன. அப்படியென்றால், விடுபட்டிருக்கும் மற்றவையான ரிஷபம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு உண்டா என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.

இங்கே ஒரு விஷயம்... இந்த ஐந்து ராசிக்கும் லக்னத்துக்கும் செவ்வாய், நட்பு கிரகம். எனவே செவ்வாய் தோஷ விலக்கு உண்டு. இதைத்தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

தோஷம் தருகின்ற செவ்வாயை குரு பார்த்தாலோ சேர்ந்தாலோ, சனி பார்த்தாலோ சேர்ந்தாலோ செவ்வாய் தோஷம் ஒருபோதும் வேலை செய்வதில்லை.

மேலும், கேதுவோடு இணைந்தாலும், செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை

அதுமட்டுமா? செவ்வாய் திசை கடந்தவர்கள் அல்லது செவ்வாய் திசையை இனியும் அனுபவிக்க முடியாதவர்களுக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

அதாவது, செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள், பிறக்கும் போதே செவ்வாய் திசையில்தான் பிறக்கிறார்கள். அதாவது எந்த வருடமோ, எந்த நாளோ, எந்தக் கிழமையோ... இந்த வருஷமோ... அடுத்த வருடமோ... எப்போது பிறந்தாலும் இந்த நட்சத்திரக்காரர்கள், செவ்வாய் திசையில்தான் பிறப்பார்கள், பிறக்கிறார்கள் என்பதே ஜோதிட சாஸ்திரக் கணக்கு!

ஆக, பிறக்கும்போதே செவ்வாய் திசை இருப்பதால், அவர்கள் செவ்வாய் திசையைப் பார்க்கவே மாட்டார்கள். எனவே அவர்களுக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்யவே செய்யாது.

அதுமட்டுமல்ல, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், திருமண வயதிற்கு முன்பே செவ்வாய் திசையைக் கடந்து விடுவதால் அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி, சதயம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்தவர்கள், செவ்வாய் திசையை எதிர்கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

இவ்வளவு தோஷ நிவர்த்திகள் இருக்கும்போது, செவ்வாய் தோஷத்திற்கு யாரும் முக்கியத்துவம் தரத் தேவையே இல்லை என்பதே உண்மை.

நான் அறிந்த வகையில், செவ்வாய் தோஷம் என்பது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இருக்கிற தம்பதி, சுமார் ஆயிரம் பேரைப் பார்த்தால் கூட, அதாவது ஒருவருக்கு செவ்வாய் தோஷம், இன்னொருவருக்கு (கணவன் அல்லது மனைவி) இல்லை எனும் வகையில் பார்த்த போது, எந்த பாதிப்பும் இல்லாமல், ஒரு பிரச்சினை கூட இல்லாமல், அந்நியோன்யமாகவும் பேரன், பேத்திகளோடு நீண்ட ஆயுளுடனும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  குஜன், பௌமன், அங்காரகன் என்று அழைக்கப்படும் மங்கலகாரகன் செவ்வாய் பகவான்).

இவர் தீமைகளை அழிப்பதற்காகப் படைக்கப்பட்டவர், எனவே இவர் அழிக்கும் நெருப்பு. அதாவது,

சூரியன்ஆக்கும் நெருப்பு

செவ்வாய்அழிக்கும் நெருப்பு

கேது தெய்வீக நெருப்பு ( தீபம், கற்பூரம், யாகம், ஹோமம் முதலானவற்றைச் சொல்லலாம்)

தீய சக்தி எனும் குப்பைகள் எரிக்கபட்டால்தான் நாம் நலமாக இருக்க முடியும், எனவே செவ்வாயைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை, அவர் மங்கலகாரகன், சுபத்தை மட்டுமே செய்வார்.

இவர் அசுரர்களை அழித்தாரா? சுக்ராச்சார்யரை வதம் செய்தாரா? நவக்கிரகத்தில் எப்படி இடம் பெற்றார்? இதையெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்.

இப்படி அசுரர்களை அழிக்க சூரியனால் படைக்கப்பட்ட செவ்வாய், அசுரர்களை வதம் செய்த இடம் மகர ராசி. அந்த மகர ராசியில்தான் செவ்வாய் உச்சம் எனும் உயரிய அந்தஸ்தை அடைகிறார்,

அதாவது ஆட்சி வீட்டில் ( மேஷம், விருச்சிகம் ) 100 சதவிகித பலம், உச்ச வீடான மகரத்தில் 200 சதவிகித பலம் என அடைகிறார்,

அசுரர்களை அழித்த செவ்வாய், அசுர குருவான சுக்கிராச்சார்யர் என்ற சுக்கிரனை அழிக்க முற்படும் போது சுக்கிரன், செவ்வாயோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.

அதாவது மனிதர்களின் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களைத் தர நவகிரகங்கள் உருவாக்க பட இருக்கிறார்கள். அதில் உம்மையும் ( செவ்வாயை) ஒரு கிரகமாக நான் அங்கீகரிக்கிறேன். எனவே என்னை ஒன்றும் செய்துவிடாதே என கேட்டுக்கொள்கிறார் சுக்கிர பகவான்.

அதை ஏற்று செவ்வாய் பகவான், சுக்கிரனை வதம் செய்யாமல் விட்டு விடுகிறார்.

இதனால் செவ்வாய், சுக்கிரன் வெளிப்பார்வைக்கு ஒருவருக்கொருவர் பகை போல் தெரிந்தாலும் இருவருக்கும் ரகசிய நட்பு உள்ளது.

இதை நம் ஜாதகத்தில் எப்படி உணர முடியும்?

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ, கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு.

(ஆனால் இதை அறிந்த ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அதிபதியான சூரியன், தான் படைத்த செவ்வாயை நட்பு கிரகமாக ஏற்காமல் சமம் என்ற பத்தோடு ஒன்று, இத்தோடு இதுவும் ஒன்று என சற்று விலகியே இருக்கிறார்.)

எனவேதான் சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னக் காரர்களுக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

இனி 12 ராசிகளுக்கும் சுருக்கமாக ஒரு வரியில் ஏன் செவ்வாய் தோஷம் பாதிப்பதில்லை எனப் பார்ப்போமா?

  மேஷம்: விருச்சிகம்:- இது செவ்வாயின் ஆட்சி( சொந்த வீடு). தன் வீட்டுக்கே யாராவது கெடுதல் செய்வார்களா? எனவே தோஷம் இல்லை.

ரிஷபம்- துலாம்: சுக்கிரனின் சொந்த வீடு. இருவருக்கும் ரகசிய நட்பு இருக்கிறது அல்லவா. எனவே செவ்வாய் தோஷம் இல்லை,

கடகம்- சிம்மம் : நவக்கிரகங்களின் தலைவன் சூரியன். எனவே சூரியனோடு சேர்ந்த செவ்வாய் ஒருபோதும் தோஷத்தைத் தருவதில்லை.

மேலும் சந்திரன் தாய் எனும் அந்தஸ்தை உடையதாலும் 12 ராசிகளிலும், ராகு கேது தவிர்த்து மற்ற கிரகங்களை தொடர்பு கொண்டு இருப்பதாலும் தோஷம் இல்லை. மேலும் சந்திரன், செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கல யோகத்தைத் தருமே தவிர, தோஷத்தை தருவதில்லை.

தனுசு- மீனம்: குருபகவானின் சொந்தவீடு. இவர் தேவகுரு, எனவே குருவோடு சேர்ந்த அல்லது குரு பார்வை பெற்ற செவ்வாய், குரு மங்கல யோகத்தைத்தான் தருவாரே தவிர, தோஷத்தை எப்போதும் தரமாட்டார்,

மகரம்: சனிபகவானின் ஆட்சி வீடு. எனவே இந்த வீட்டில்தான் செவ்வாய் பகவான் உச்சம் அடைகிறார். ஆகவே இங்கு அமர்ந்த செவ்வாய், தோஷத்தை தருவதில்லை,

கும்பம்: இதுவும் சனி பகவானின் ஆட்சி வீடு. நாம் ஏற்கெனவே விளக்கியபடி சனிபகவான் தொடர்பு பெற்ற செவ்வாய் பகவான் தோஷத்தைத் தரமாட்டார்.

நான் ஏன் மிதுனம் , கன்னி ராசியை கடைசியாக எடுத்துக்கொண்டேன் என்றால் இந்த இரண்டு லக்ன மற்றும் ராசிகளுக்கு மட்டுமே செவ்வாய் தோஷத்தின் வீரிய அளவு பார்க்கபட வேண்டும்,

இந்த ராசிகளுக்கு செவ்வாய் கடுமையான எதிரி.

எனவே இதற்கு மட்டுமே விதிவிலக்கு என்ன( நாம் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டபடி) என்பதை ஆராய்ந்தால் போதும், 90 சதவிகிதம் செவ்வாய் தோஷ விலக்கு ஏற்படும்.

எனவே, செவ்வாய் தோஷத்திற்கு இதுவரை தந்த விளக்கங்கள் உங்களுக்குப் பயன் உள்ளதாகவும் இருக்கும்; பயம் போக்குவதாகவும் இருக்கும் என நம்புகிறேன்,

எனவே, தோஷத்தைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை. ஜாதக ரீதியான பொருத்தங்களை ஆராய்ந்து மணவாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன். மங்கலகரமான வாழ்வு நிச்சயம். மங்காத செல்வமும் பிள்ளைச் செல்வமும் கிடைத்து நல்ல அன்பான வாழ்க்கைத் துணையும் அமைந்து சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்!

எம்பெருமான் முருகன் துணை இருப்பான்.

  நம் உடலில் உள்ள ரத்தம், செவ்வாயைக் குறிக்கும்.

திருமணப் பொருத்தத்தின் போது செவ்வாய் தோஷம் ஏன் பார்க்கப்படுகிறது தெரியுமா. அறிவியல் ரீதியாக ஒவ்வொருவரின் ரத்தமும் வேறுபட்ட வகையில் ( Blood group) இருக்கும்.

இந்த வகை ரத்தம், இந்த வகைக்கு மட்டுமே சேரும் என்பது பொது விதி.

உதாரணமாக:ஆணுக்கு A குரூப் என்றால், பெண்ணுக்கு A அல்லது AB யாக இருக்க வேண்டும்,

ஆணுக்கு B குருப் என்றால், பெண்ணுக்கு B அல்லது AB வகை ரத்தம் இருக்க வேண்டும்.

மாறாக, ஆணுக்கு A வகை என்றால், பெண்ணுக்கு O - B யாக இருக்கக்கூடாது,

ஆணுக்கு B வகை என்றால், பெண்ணுக்கு O- A ஆக இருக்கக்கூடும் கூடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது,

அதாவது இணைய வேண்டிய ரத்தங்கள் இணையும் போது பிறக்கும் குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறக்கும்; வளரும்.

மாறாக இணையக்கூடாத ரத்தங்கள் இணையும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் போகவும் அல்லது பாதிப்புள்ள குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் உங்களுக்கு வர இருக்கும் ரத்த வகை அறிந்து மணம் முடித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான, மன நிறைவான வாழ்க்கையை அதன் மூலம் அமைத்துக்கொள்ளுங்கள்.

இன்னும் சில பரிகாரங்கள்:-

ஜாதகத்தில் செவ்வாய் பலம் இழந்தவர்கள், முடிந்த அளவு ரத்ததானம் தாருங்கள், அற்புதமான பலன்களைக் காண்பீர்கள்.

செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் தருவது. உங்கள் கிரகத்துக்கும் அதன் மூலமாக உங்களுக்கும் பலம் கொடுக்கும். பலன் பெறுவீர்கள்!

உங்கள் சகோதர உறவுகளுக்கு பிரதிபலன் பாராமல் உதவி செய்யுங்கள். சகோதர பந்தத்தை நாம ஒரே ரத்தம்என்று சொல்லுகிறோம், இல்லையா. ஆகவே சகோதர உறவுக்குச் செய்யப்படும் உதவி, உங்கள் வாழ்வை இன்னும் வளரச் செய்யும்; மலரச் செய்யும்!

சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களிலெல்லாம், சிவப்புநிற ஆடைகளை தானம் தாருங்கள்,

அம்மன் ஆலயங்களில் ( சக்தி வடிவான தெய்வம்)

குங்கும அர்ச்சனை செய்யுங்கள். முடிந்த அளவு ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் செய்து வாருங்கள், செவ்வாயால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகும்,

வீட்டு வாசலில் சிவப்பு மிளகாய், எலுமிச்சை பழத்தோடு சேர்த்து கட்டி வையுங்கள். திருஷ்டியும் விலகும். தீயசக்தியும் அண்டாது. தோஷங்களும் விலகும்!

இவை அனைத்தும் நல்ல நல்ல பலன்களை வாரி வழங்குவது உறுதி!

இன்னொரு விஷயம்...

பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாய், எனவே செவ்வாய் பலம் அடைந்தால் கணவன் பலம் அடைவதாக அர்த்தம்.

  பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாய்.

எனவே கணவர் நலமாகவும் வளமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ செவ்வாய் சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து செய்தாலே போதும், நீங்கள் நினைத்தது நடக்கும்.

முதலில் செவ்வாயின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்,

செவ்வாய்:

நிறம் அடர் சிவப்பு ( மெரூன்)

குணம் ராஜஸம்( கோப குணம்)

மலர்——-செண்பகம்

ரத்தினம்—- பவளம்

தானியம்——- துவரை( துவரம் பருப்பு)

பெண்கள் தங்கள் நெற்றியில் இடும் குங்குமம் -சிவப்பு

அந்தக் காலத்திலும், தற்போதும் பெண்கள் தாலியில் பவளமணிகளை கோர்த்துக் கொள்வது செவ்வாய் என்னும் கணவருக்காகத்தான்,

சிவப்பு நிற மலர்கள் சூடிக்கொள்வதும், செவ்வாயின் ஆளுமையே! மல்லிகையைதானே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என கேட்கலாம் மல்லிகையின் மணம் சுக்கிரன் சம்பந்தப்பட்டது,

துவரை நாம் அதிகமாக உபயோகப்படுத்தும் உணவு என்பது நம் எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள்.

பொதுவாக நமது உடலில் பஞ்சபூதங்களும் அடக்கம்,

நவகிரகங்களும் அடக்கம்,

சூரியன்- உடலில் உள்ள எலும்பு, முதுகெலும்பு, இதயம், வலதுகண் இவற்றைக் குறிக்கும்.

சந்திரன்- உடலில் உள்ள ரத்த ஓட்டத்தைக் குறிக்கும். இங்கே கவனிக்கவும்... ரத்தம் அல்ல, ரத்த ஓட்டம்.

மனம், எண்ணம், நீர்ச்சத்து, இடது கண் ஆகியவை ஆகும்.

புதன்- தோல்( skin), பச்சை நரம்புகள்,( veins)

குருமூளை, வயிறு

சுக்கிரன்- உடலில் உள்ள சுரப்பிகள், கணையம், விந்து மற்றும் கருப்பை

சனி- ஜீரண உறுப்புகள், முதுகு, மூட்டுக்கள்

ராகு- நவ துவாரங்கள், ( பிளந்த அமைப்புகள்)

கேது- குடல், ஆசனவாய்,

செவ்வாய் ரத்தம், ரத்தம் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜை, பற்கள், நகம், புருவம் ...

இதில் பெண்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன தெரியுமா?

உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

நகத்தில் அழுக்கு சேராமலும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் புருவத்தை அழகு படுத்துகிறேன் என்று ஐப்ரோ எனும் திரெட்டிங் என்கிற சீர்படுத்துவதைச் செய்யாதீர்கள்.

நீங்கள் அப்படி செய்பவர் எனில், நன்றாக கவனியுங்கள்... நீங்கள் புருவத்தை சீர் செய்யும் போதெல்லாம் உங்கள் கணவருக்கு ஒன்று உடல்நலம் கெட்டு போகும் அல்லது ஒரு புதிய பிரச்சினை வந்து சேரும்.

நான் சொல்வது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் இதுவே உண்மை,

நிதானமாக யோசித்துப்பாருங்கள்... அல்லது சோதித்துப் பாருங்கள், “ஆம் உண்மைதான் எல்லாம்இல்லை தவறு என்றாலும் உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள்,

 வேலை

பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில் நல்ல வேலை யாருக்கு

 

பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில் குரு ஜாதகரை குறிக்கும்.

சனி ஜாதகரின் கர்மத்தை குறிக்கும். குருவின் நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் சனி ஆகும். துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சனி உச்சமடைகின்றார். அதேபோல சனியின் நட்சத்திரத்தில் குரு உச்சமடைகின்றார். அதாவது கடக ராசி பூச நட்சத்திரத்தில் குரு உச்சமடைகின்றார்.

 

இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் காலப்புருஷ லக்னத்திற்கு 10ஆம் அதிபதியான கர்மகாரகன் சனி தன்வீட்டிற்கு 10 இல் உச்சமடைகின்றார். சனி உச்சமடையும் இராசிக்கு 10ஆம் இடத்தில் குரு உச்சமடைகின்றார். எனவே குரு சனி சேர்க்கை நல்ல சிறப்பான உத்தியோகத்தை அமைத்து தரும்.

 

குருவும் சனியும் காலபுருஷ லக்னத்திற்கு 9 ,10 ஆம் அதிபதிகளாக வருவதால் குரு சனி சேர்க்கை உள்ளவர்களுக்கு தர்மகர்மாதிபதி யோகமும் ஏற்படுகின்றது

  நவகிரக தோசம் போக்கும் சில

எளிதான வழிமுறைகள்.

 

     *காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

    

 

*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

    

 

*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

    

 

*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

   

 

*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

    

 

*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

   

 

* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும்.

 (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

    

 

*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

    

 

*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

    

*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

    

 

*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

   

 

*16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

    

 

*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

    

 

*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

    

 

*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

    

 

*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

  ஜோதிட (கிழமை) பழமொழிகள்.

 

ஞாயிறு (பயணம்) நாய் பட்ட பாடு.

திங்கள் பயணம் திரும்பாப் பயணம்.

திரும்பிப் பார்த்தல் திங்கட்கிழமை.

செவ்வாயோ வெறும்வாயோ !

செவ்வாயோ,வருவாயோ !

கேட்டை,மூட்டை , செவ்வாய் கிழமை.

பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது.

புற்றில் இருக்கும் பாம்பும் புதனில் புறப்படாது.

சனிப்பிணம் தனிப் போகாது.

ஸ்திர வார காரியம் (சனி வாரம் ) ஸ்திரமானது.

·  பத்தில் குரு பதவிக்கு இடர் !

·  பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் !

·  மறைந்த புதன் நிறைந்த கல்வி !

·  பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும் !

·  ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு

·  எட்டில் சனி நீண்ட ஆயுள்

 

 

 

·  குரு பார்க்க கோடி நன்மை !

·  குரு நின்ற இடம் பாழ்

·  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது !

·  விதி போகும் வழியே மதி போகும். !

·  குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?

 

·  சனி பார்த்த இடம் பாழ் !

·  சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது !

·  சனி நீராடு !

·  சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை

·  அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி

·  சனி பார்க்கும் இடம் பாழ்.

 

·  இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே !

·  நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை !

·  வைத்தியன் கையை பிடிப்பான். ஜோதிடன் காலை பிடிப்பான் !

·  ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க !

 

 

·  கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் !

·  கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும் !

·  மேஷ ராகு மேன்மையை கொடுக்கும் !

·  துலா கேது தொல்லை தீர்க்கும் !

 

·  சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் !

·  சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும் !

·  சித்திரை அப்பன் தெருவிலே !

 

· பரணி தரணி ஆளும் !

·  மகத்துப் பெண் பூரத்துப் புருஷன் !

· மகத்துப் பெண் ஜெகத்தினை ஆளுவாள் !

·  சுவாதி சுக்ரன் ஓயா மழை !

·  அவிட்டம் , தவிட்டுப் பானையிலே பணம் !

· கேட்டை கோட்டை கட்டி ஆளும் !

· ஆனி மூலம் அரசாளும் கன்னி மூலம் நிர்மூலம் !

· பூராடம் போராடும் !

· பூராடம் நூலாடாது !

· உத்திரத்தில் ஓர் பிள்ளையும் ஊர் கோடியில் காணி நிலமும்   போதும்

  திதிகளின் தெய்வங்கள் !

 

சுக்லபட்சம்

 

1. பிரதமை   குபேரன் மற்றும் பிரம்மா

2. துவதியை பிரம்மா

3. திரிதியை சிவன் மற்றும் கெளரி மாதா

4. சதுர்த்தி   எமன் மற்றும் விநாயகர்

5. பஞ்சமி திரிபுர சுந்தரி

6. ஷஷ்டி செவ்வாய்

7. ஸப்தமி ரிஷி மற்றும் இந்திரன்

8. அஷ்டமி   காலபைரவர்

9. நவமி   சரஸ்வதி

10. தசமி வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்

11. ஏகாதசி மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12. துவாதசி மகா விஷ்ணு

13. திரயோதசி மன்மதன்

14. சதுர்த்தசி   காளி

15. பவுர்ணமி லலிதாம்பிகை

 

 

கிருஷ்ணபட்சம்

 

1. பிரதமை   துர்க்கை

2. துவதியை வாயு

3. திரிதியை – akni

4. சதுர்த்தி   எமன் மற்றும் விநாயகர்

5. பஞ்சமி நாகதேவதை

6. ஷஷ்டி முருகன்

7. ஸப்தமி சூரியன்

8. அஷ்டமி   மஹாருத்ரன் மற்றும் துர்க்கை

9. நவமி   சரஸ்வதி

10. தசமி எமன் மற்றும் துர்கை

11. ஏகாதசி மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12. துவாதசி சுக்ரன்

13. திரயோதசி நந்தி

14. சதுர்த்தசி   ருத்ரர்

15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி

  சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் ஆகும். சந்திர மாதத்தைக் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு முறையில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொண்டு மாதங்கள் பிறக்கின்றன இம்முறைக்கு அமாந்த முறை என்றும் , பூரண சந்திரனை மாதத் தொடக்க மாகக் கொள்வதை பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது.

 

 

சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.

 

சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்.

சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் -

விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் -

கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்..

ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்-

அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம்.

ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்-

திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்-

உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம்.

ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்-

அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

கார்த்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்-

கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்-

மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் -

பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

 மாசி மாதம்: என்னும் மக மாதம்-

மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-

பல்குணி  நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.

திதி சூனியம் என்றால் என்ன?   ஒரு கிரகத்திற்கோ அல்லது ஒரு ராசிக்கோ நாம் பிறந்துள்ள திதியின் அடிப்படையில் திதி சூன்யம் உண்டாகும். திதி சூன்யம் என்பது ஜாதக அமைப்பில் முக்கியத்துவம் பெறும் விஷயம் என்றாலும் திதி சூன்யம் பெறும் ராசிகளில் முகூர்த்தம் வைப்பதை தவிர்க்க வேண்டும். திதி சூன்யம் பெறும் ராசிகளின் அதிபதிகளில் நட்சத்திரங்களும் கூட வலுவிழக்கும் என்பதால் அந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டியதாகும். அத்துடன் திதி சூன்யம் பெற்ற ராசிகளில் உள்ள கிரகங்களும் வலுவிழந்துவிடும். திதி சூன்யத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்குகளைப் பார்ப்போம். திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் அசுபர் வீட்டில் இருந்தாலும் அசுபர் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் அவர்கள் இருக்குமிடங்களில் மறைவு ஸ்தானங்களான 3,6 ஆம் இடங்களாக அமைந்து இருந்தாலும் திதி சூன்ய தோஷம் அடிபட்டுவிடும். திதி சூன்ய ராசிகளில் உள்ள கிரகங்கள் மற்றும் திதி சூன்யம் அடைந்த ராசிகளின் அதிபதிகள் வக்கிரம், அஸ்தமனம், வக்கிராஸ்தமனம் (அதாவது வக்கிரமும் அடைந்து அஸ்தமனமும் ஆகியிருக்கும் நிலை) ஆகிய நிலைகளில் இருந்தால், திதி சூன்ய தோஷம் நீங்கிவிடும். அந்த கிரகங்களின் நட்சத்திரங்களுக்கும் திதிசூன்ய தோஷம் நீங்கிவிடும்.

 திதிகள்               சூன்ய ராசிகள்                         அதிபதிகள்

 1. பிரதமை   -துலாம், மகரம்                               (சுக், சனி)

 2. துவிதியை - தனுசு,மீனம்                                      (குரு)

 3. திருதியை   -சிம்மம்,  மகரம்                          (சூரி, சனி)

 4. சதுர்த்தி  -ரிஷபம், கும்பம்                          (சுக், சனி)

 5. பஞ்சமி  -மிதுனம், கன்னி                                 (புதன்)

 6. சஷ்டி    -மேஷம், சிம்மம்                          (செவ், சூரி)

 7. சப்தமி    - கடகம், தனுசு                                  (சந், குரு)

 8. அஷ்டமி   - மிதுனம், கன்னி                                  (புதன்)

 9,10 நவமி, தசமி -சிம்மம்,   விருச்சிகம்             ( சூரி, செவ்)

 11. ஏகாதசி - தனுசு, மீனம்                                            (குரு)

 12. துவாதசி  -துலாம், மகரம்                                   (சுக், சனி)

 13. திரயோதசி -   ரிஷபம், சிம்மம்            ( சுக், சூரி)

 14. சதுர்த்தசி   -மிதுனம், கன்னி, தனுசு, மீனம்     (புதன், குரு)

 15 அமாவாசை / பௌர்ணமி - திதி சூன்ய ராசி இல்லை

🙏🙏🙏🙏🙏🙏🙏

சிவ.சு.பெரியகாளியப்பன்

  கும்பம் ராசிக்காரர்கள் மீன் சாப்பிடலாமா?

  அய்யா, 2, 11 க்கு உடையவர் குரு. மீனத்தின் அதிபதி.மீனம் ராசி சின்னம் மீன். இவர்கள் மீன் சாப்பிட்டால் பொருளாதார தடை, பண நஷ்டம், பணக்கஷ்டம் வரும். விரும்பியதை அடைய முடியாது. 2ம் இடம் வாக்கு, வாய் அதுவும் பாதிக்கப்படும். சொல்லுங்கள் சகோதர, சகோதரிகளே கும்பம் மீன் சாப்பிடலாமா?

  யோகி அனுயோகி அவயோகி இவர்கள் யார் ?

ஜெனன ஜாதகத்தில் உள்ள

சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை 20 கலை = யோகி

இந்த மூன்றையும் கூட்டி வரும் ஸ்புடம் மேஷம் முதல் கணக்கிட

எந்த நட்ச்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்ச்சத்திர அதிபதி யோகி

அந்த ராசியின் அதிபதி அனுயோகி

யோக ஸ்புடம் எந்த நட்ச்சத்திரத்தில் வந்ததோ அதில் இருந்து

ஆறாவது நட்ச்சத்திர அதிபதி அவயோகி

யோகி 3/6/8/12 ம் அதிபதியாக இருந்தாலும் நன்மை செய்வார்

அவயோகி யாராக இருந்தாலும் கெடுதல் செய்வார்

எடுத்துக்காட்டாக 5/9 ம் அதிபதி அல்லது ஆத்மகாரகன் ஆனாலும் கெடுதல் செய்வார்

ஜெனன ஜாதகத்தில் யோகி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே யோக பலனை தருவார்

யோகி நல்ல நிலையில் உள்ள ஜாதகங்களே யோக ஜாதகங்கள்

இனி யோகி என்ன செய்வார் அவயோகி என்ன செய்வார் என பார்போம்

யோகி அனுயோகி அவயோகி இவர்கள் திசை / புத்திகளுக்கு அப்பாற்பட்டவர்கள்

திசை/புத்தி , 7 ½ சனி அஷ்டம சனி இவை அனைத்தும் மாறும்! ஆனால் ஆயுள் முழுக்க யோகி அனுயோகி அவயோகி இவர்களின் பலன் தொடர்ந்துவரும்

யோகியின் காரகத்துவ பலன்கள் சுபமாகவும்

அவயோகியின் காரகத்துவ பலன்கள் அசுபமாகவும் அமையும்

உதாரணம் புதன் யோகி எனில் புதனின் காரகத்துவ பலன்களான ஜோதிடம், கணக்கு, தணிக்கை, பச்சை நிறம், தாய் மாமன், புதன் கிழமை இது போன்ற இன்னும் பல காரகத்துவ பலன்கள் சுபமாகவும்

உதாரணம் செவ்வாய் அவயோகி எனில் இளைய ஆண் சகோதரம் முலம் தொந்தரவு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் சிவப்பு நிறம் செவ்வாய் கிழமை இது போன்ற இன்னும் பல காரகத்துவ பலன்கள்

அசுபமாகவும்

இவையெல்லாம் பிறப்பு மூதல் இறப்பு வரை மாறாது

 யோகிஅவயோகி:

 

யோகி அவயோகியை பற்றி

தமிழகத்தில் உள்ள ஜோதிடர்களில் சிலருக்கு மட்டுமே இதன் முக்கியத்துவம் பற்றி தெரியும்.

 

 தற்போது நடைபைறும் தசாபுத்திநாதர்கள் யோகி அல்லது அவயோகி நட்சத்திரத்தில் இருக்கிறார்களா என்பதை கணக்கிடுவார்கள்.

யோகி, அவயோகி சூட்சுமத்தை தெரிந்த சில ஜோதிடர்களும் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் நமக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களை மறைத்துவைக்க

வைக்க புதன் கொஞ்சம்சிரமத்தைதருகிறது

 ஆச்சரியமான இல்லை இல்லை அதிகமான சூட்சும கிரகம்தான்புதன்

 

ஒரு குற்றம் நடந்திருக்கும்போது புதன் வக்கிரமானால் அவ்வக்கிரகாலம் முடிந்த பிறகே துப்பு துலங்கும் என்றால் பாருங்களேன். பஞ்சபூத காற்று, பிரபஞ்ச ரகசியம் உள்ள கிரகம்.

பஞ்சாங்கம்:

நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இந்த ஐந்தும் கொண்டதுதான் பஞ்சாங்கம்.

இதில் பெரும்பலோனோருக்கு பிறந்த நட்சத்திரமும், நாளும்தான் தெரியும்.

இதில் உள்ள யோகம் தெரியாது

மொத்தம் 27 நித்திய நாமயோகங்கள் உள்ளன. அந்த 27 யோகங்கள் என்னவென்றும், அதற்கு யார் யோகி கிரகம் என்றும் ,யார் அவயோகி கிரகம் என்றும் கீழே கொடுத்துள்ளேன்.( அட்டவணை).

இது எவ்வாறு கணக்கிடுவது?

மேசம் முதல் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளாக மொத்தப் 360 பாகை கொண்ட 12 ராசிகளாக ராசிமண்டலத் பிரிக்கப்பட்டுள்ள அடிப்படை கணித்த்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அதாவது

மேசம்0° to 30°

ரிசபம் 30° to 60° ,

மிதுனம் 60° to 90°,

கடகம் 90° to 120° ,

சிம்மம் 120°to 150°,

கன்னி 150° to 180°,

துலாம் 180° to 210°,

விருச்சிகம் 210° to 240°,

தனுசு 240° to 270°,

மகரம் 270° to 300°,

கும்பம் 300°to 330° ,

மீனம் 330° to 360°

 என 360 பாகை கொண்ட 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதிலேயே 13 பாகை 20 கலை அளவுள்ள 27 நட்சத்திர தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன.( 13.20 ×27=360).

இனி யோகி பாகையை கணக்கிட மேஷத்தில் இருந்து சூரியன் இருக்கும் பாகை+ மேசத்திலிருந்து சந்திரன் இருக்கும் பாகை + 93.20 பாகை கூட்டினால் யோகி பாகை கிடைத்துவிடும்.அதை கணக்கிட்டுதான் ரெடிமேடாக நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என குறித்து அதற்கு ஒவ்வொரு பெயரையும் சூட்டியுள்ளனர் ஞானிகள்.

இப்போ பலன்களை பார்ப்போம்.

யோகி பாகை எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி. அந்த நட்சத்திராதிபதியின் மூன்று நட்சத்திரங்களுமே யோகி நட்சத்திரங்களே!

அதாவது ஒருவருக்கு யோகி பாகை 223 பாகயில் விழுந்தால் சனியின் நட்சத்திரமான அனுச நட்சத்திரத்தில் விருட்சிக ராசியாக வரும். இந்த நட்சத்திர யோகம் கண்ட யோகம் ஆகும்.இப்போது சனியே யோகியாவார். சனிதசா சனி கெடுதல் செய்யும் ராசியில் இருந்தாலும் யோகமே செய்யும். அதுமட்டுமின்றி சனியின் நட்சத்திரங்களான பூசம் ,அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் எந்த மோசமான கிரகம் நின்று தசா நடத்தினாலும் யோகம் செய்யும்.

அவயோகி:

யோகியின் நட்சத்திரபாகையிலிருந்து 186 பாகையிலுள்ள நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம். அவயோகியாக வரும் கிரகமும் அவயோகி நட்சத்திர பாதம் நின்ற கிரகங்களும் தனது தசா, புத்தி காலங்களில் மிக மோசமான பலன்களை தருவார்கள்.அவயோகியை மற்றொரு குறுக்கு வழியில் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது யோகி நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி.

1. சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி.

2.சூரியன் யோகியென்றால் சனி அவயோகி.

3. சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி.

4. புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி.

5. குரு யோகியென்றால் சூரியன் அவயோகி.

6. சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி.

7. ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி.

8. கேது யோகியென்றால் ராகு அவயோகி.

9. செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி.

இப்போது நீங்கள் உங்களது ஜாதகத்தை கணித்து என்ன யோகம் மற்றும் திதி மற்றும் கரணத்தில் பிறந்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அந்த யோகத்திற்கு யார் யோகி யார் அவயோகி என்று நான் கீழே இணைத்துள்ள அட்டவணை மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள்.

இனி யோகி அவயோகியின் முக்கியத்துவத்தை பார்ப்போம் .

எந்த நிலையிலும் யோகியும், யோகி நட்சத்திரத்திலும் அமர்ந்த கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் யோகத்தையே வழங்குவார்கள்.

எந்த நிலையிலும் அவயோகியும் ,அவயோகி நட்சத்திர சாரங்களில் அமர்ந்த கிரகங்களும் தனது தசாபுத்தி காலங்களில் கெடுதலையும், வீழ்ச்சியையும், தீங்கையும்தான் தருவார்கள்.

உங்கள் ஜாதகங்களில் இதுவரை நடந்த தசாபுத்தி காலங்களில் இவர்களது காலங்களில் என்ன நடந்த்து என்று ஆராய்ந்து பாருங்கள். தசா வராவிட்டாலும் இவர்களது தொடர்புடைய புத்தி காலங்களை ஆராய்ந்து பாருங்கள்.

 

சுலபமாக

#யோகிகிரகம்Toஆறாவதுகிரகம்

அவயோகி

இதில்வேறுசூட்சுமமும்உண்டு

  யோகி                          அவயோகி

 

சூரியன்                        சனி

சந்திரன்                       புதன்

செவ்வாய்                  கேது

புதன்                            செவ்வாய்

குரு                              சூரியன்

சுக்கிரன்                     குரு

சனி                              சந்திரன்

ராகு                             சுக்கிரன்

கேது                            ராகு

 

மூன்று கிரக அணிகள்

1) கேது சந்திரன் குரு

2) சுக்கிரன் செவ்வாய் சனி

3) சூரியன் ராகு புதன்

 

இந்த அணியில் ஒரு கிரகம் யோகியாக இருந்தலும் மற்ற இரு கிரகங்களும் யோகியை போன்றே செயல்படும்

 

இதே போல் மனிதர்களையும் மூன்று பிரிவாக கிரக அணிகளை கொண்டு பிரிக்கலாம்

 

1) கேது சந்திரன் குரு யோகியாக உள்ளவர்கள் என்றும்

எதிலும் முழு நிறைவு அடையமாட்டார்கள்

2) சுக்கிரன் செவ்வாய் சனி யோகியாக உள்ளவர்கள் என்றும்

(மெட்டிரியல்) பொருளாதார வாழ்க்கை மட்டும்

வாழ்பவர்கள்

3) சூரியன் ராகு புதன் யோகியாக உள்ளவர்கள் என்றும்

சேவை (சர்வீஸ்)மனப்பான்மையுடன் வாழ்க்கை

வாழ்பவர்கள்

 

மேற்கூறிய கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கூறிய பலன் ஏற்படும்

 

குறிப்பாக கேது யோகியாக உள்ளவர்கள் அதிக அளவு மனரீதியான போராட்டங்களை வாழ்க்கை முழுவதும் சந்திக்கின்றனர்

  D1 என்பது 30 பாகை அளவு கொண்ட ராசிச்சக்கரம்

 

D2 என்பது 30/2 = 15 பாகை

ஆண் ராசியில் முதல் 15 பாகை சூரிய ஹோரா அடுத்த 15 பாகை சந்திர ஹோரா

பெண் ராசியில் முதல் 15 பாகை சந்திர ஹோரா அடுத்த 15 பாகை சூரிய ஹோரா

 

D3 என்பது திரேகானம் 30/3 = 10 பாகை

முதல் 10 பாகை அதே ராசியிலும்

இரண்டாவது 10 பாகை அதில் இருந்து 5வது ராசியிலும்

மூன்றாவது 10 பாகை அதில் இருந்து 9 வது ராசியிலும் வரும்

 

D4 என்பது சதுர்தாம்சம் 30/4 = 7.30 பாகை

முதல் 7.30 பாகை அதே ராசியிலும்

இரண்டாவது 7.30 பாகை அதில் இருந்து 4 வது ராசியிலும்

மூன்றாவது 7.30 பாகை அதில் இருந்து 7 வது ராசியிலும் வரும்

நாங்காவது 7.30 பாகை அதில் இருந்து 10 வது ராசியிலும் வரும்

 

D5 என்பது பஞ்சாம்ஸ்சம் 30/5 = 6 பாகை

சர ராசிகள் அந்த ராசியில் இருந்தும்

ஸ்திர ராசிகள் அதில் இருந்து 5மிடத்தில் இருந்தும்

உபய ராசிகள் அதில் இருந்து 9 மிடத்தில் இருந்தும் துவங்கும்

 

D6 என்பது சஷ்டியாம்சம் 30/6 = 5 பாகை (ரோகம்சம் நோய் )

ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்

பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்

  D7 என்பது சப்தாம்சம் 30/7 = 4பாகை17கலை

ஆண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்தும்

பெண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்து 7வது ராசி முதலும் துவங்கும்

 

D8 என்பது அஷ்டாம்சம் 30/8 = 3பாகை 45கலை

சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்

ஸ்திர ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும்

உபய ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும் துவங்கும்

 

D9 என்பது நவாம்சம் 30/8 = 3பாகை 20கலை

சர ராசிகளில் வருபவை அதில் இருந்தும்

ஸ்திர ராசிகளில் வருபவை அதில் இருந்து 9 மிடத்தில் இருந்தும்

உபய ராசிகளில் வருபவை அதில் இருந்து 5 மிடத்தில் இருந்தும் துவங்கும்

 

D10 என்பது சஷ்டியாம்சம் 30/10 = 10பாகை

ஆண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்தும்

பெண் ராசிகளில் வருபவை அந்த ராசியில் இருந்து 9 வது ராசி முதலும் துவங்கும்

 

D11 என்பது லாபாம்சம் 30/11 = 2பாகை 43கலை 38 விகலை

மேஷம் முதல் எதிர் சுற்றில் வரும் ரிஷபத்தில் கிரகம் வராது

 

D12 துவாதசாம்சம் 30/12 = 2பாகை 30கலை

அனைத்தும் அந்தஅந்த ராசிகளில் இருந்தே துவங்கும்

  D16 என்பது சோடசாம்சம் 30/16  = 1பாகை  52கலை30

சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்

ஸ்திர ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும்

உபய ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும் துவங்கும்

 

D20 என்பது விம்சாம்சம் 30/20  = 1பாகை  30கலை

சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்

ஸ்திர ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும்

உபய ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும் துவங்கும்

 

D24  என்பது சதுர்விம்சாம்சம் 30/24  = 1  பாகை 15கலை

 

ஆண் ராசிகளில் வருபவை சிம்மம் முதலும்

பெண் ராசிகளில் வருபவை கடகம் முதலும் துவங்கும்

 

D30 என்பது திரிம்சாம்சம்

ஆண் ராசிகளில் வருபவை

0 – 5       மேஷம்

5 – 10   கும்பம்

10 – 18   தனுசு

18 – 25   மிதுனம்

25 – 30    துலாம்

பெண் ராசிகளில் வருபவை

0 – 5    ரிஷபம்

5 – 12   கன்னி

12 – 20  மீனம்

20 – 25  மகரம்

25 – 30   விருச்சிகம்

சிம்மம் கடகத்தில் கிரகங்கள் வராது

 

D40  என்பது கவோடாம்சம் 30/40  = 45கலை

 

ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்

பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்

 

D45 என்பது அக்சவேதாம்சம் 30/45  = 40கலை

 

சர ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்

ஸ்திர ராசிகளில் வருபவை சிம்மத்தில் இருந்தும்

உபய ராசிகளில் வருபவை தனுசில் இருந்தும் துவங்கும்

  D27 என்பது பாம்சம் 30/20  = 1பாகை  6கலை40விகலை

அக்னி ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்

பூமி ராசிகளில் வருபவை கடகத்தில் இருந்தும்

வாயு ராசிகளில் வருபவை துலாமில் இருந்தும்

நீர் ராசிகளில் வருபவை மகரத்தில் இருந்தும் துவங்கும்

 

D60 என்பது சஷ்டியாம்சம் 30/ 60 =  30கலை

அனைத்தும் அந்தஅந்த ராசிகளில் இருந்தே துவங்கும்

 

இனி வர்கச்சக்கரம் எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

 

எந்த வர்க்கமாக இருந்தாலும் வர்க்க லக்னாதிபதி 3/6/8/12 ல் மறைய கூடாது மேலும் அந்த வர்க்கம் தொடர்பான கராக கிரகமும் 3/6/8/12 ல் மறைய கூடாது

 

3மிடம் ஜாதகனால் ஏற்படும் இழப்பு

6மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் கடன் வழக்கு நோய்

8மிடம் அந்த வர்கத்தின் அழிவு

12 மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் அலைச்சல் வீண்செலவுகள்

 

எந்த வர்க்க லக்னமும் ஜென்ம(D1) லக்னத்தில் இருந்து 6/8/12 ல் மறைய கூடாது

 

கராக கிரகம்  குறிப்பிட்ட வர்க்க லக்னத்தில் இருந்தால் அது காரகோ பாவநாஸ்தி

உதா குரு D7 எனப்படும் சப்தாம்ச வர்க்க லக்னத்தில் இருந்தால் குழந்தைகளுக்கு நாசங்களை உண்டு பண்ணும்

 

இது போல் மற்ற வர்க்கங்களிலும் பார்க்கவும்

 

ஆனால் அனைத்து வர்க்கங்களிலும்

1) செவ்வாய் 6ல் நல்லது

2) புதன் D4 எனும் சதுர்தம்ச வர்கத்தில் 8ல் நல்லது (அனாமத்து    சொத்து கிடைக்கும்)

3) சனி D8 எனும் அஷ்டாம்ச வர்க லக்னத்தில் நல்லது (தீர்காயுள்)

 

திசை / புத்தியை நடத்தும் கிரகங்கள் வர்கத்தில் 3/6/8/12 ல் மறைய கூடாது

 

அப்படி மறைந்தால் அந்த கிரகங்களின் திசா புத்தி காலங்களில் அந்த வர்கச்சக்கரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்

  திருமண பொருத்தம் பார்க்கும்போது நவாம்சம் மிகவும் முக்கியமான ஒன்று

நட்ச்சத்திர பொருத்தம் முக்கியம் அல்ல இது நிரூபிக்கப்பட்ட உண்மை

 

இனி நவாம்சம் எப்படி பார்ப்பது

பொருத்தம் பார்பதற்கு முன் ஒருவருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் இதற்கு நவாம்சம் மிக முக்கியம்

ஆண் ஜாதகம் எனில் நவாம்சம் ஆண் ராசியில் வரவேண்டும்

பெண் ஜாதகம் எனில் நவாம்சம் பெண் ராசியில் வரவேண்டும்

இது 80% வரை பொருந்தும்

 

நவாம்ச லக்னம் சரியாக வரவில்லை எனில்  4 நிமிடம் வரை பிறந்த நேரத்தை சரி செய்யவும்

 

இனி முக்கியமான விசயத்திற்கு வருவோம்

 

நவாம்சம் எப்படி பார்ப்பது

எந்த ஜாதகமாக இருந்தாலும் நவாம்ச லக்னாதிபதி நவாம்ச லக்னத்தில் இருந்து 3/6/8/12ல் மறைய கூடாது

 

ஆண் ஜாதகம் எனில் சுக்கிரன் நவாம்சத்தில் 1/3/6/8/12ல் இருக்க கூடாது

பெண் ஜாதகம் எனில் குரு நவாம்சத்தில்  3/6/8/12ல் இருக்க கூடாது 

 

மேலும் எந்த ஜாதகமாக இருந்தாலும் ஜென்ம லக்னத்திற்கு நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது

 

மேலும் பெண்கள் ஜாதகத்தில் உள்ள நவாம்சதில் இருந்து ஆணின் நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது

 

மிக மிக முக்கியமானது ராசி சக்கரதில் பலவீனம் அடைந்த கிரகத்தின் வீட்டில் நவாம்ச சக்கரம் வந்தால் எந்த பலனும் இல்லை

 

நவாம்சத்தில் மூன்று அல்லது எட்டில் நிற்கும் கிரக திசையில் வாழ்கை துணைக்கு மரணம் அல்லது வாழ்கை துணையை பிரியவேண்டிவரும் ஆறில் நிற்கும் கிரகம் சம்பந்தப்பட்ட நோய் வாழ்கை துணைக்கு வரும்  12ல் நிற்கும் கிரக திசை/புத்தியில் வாழ்கை துணையை விட்டு வெகு தொலைவுக்கு செல்ல வேண்டி வரும்

 

நவாம்ச லக்னாதிபதி 6ல் இருந்தால் வாழ்க்கை முழுவதும் சண்டை சச்சச்சரவு தான்

 

நவாம்சத்தில் இரண்டாம் இடத்தில உள்ள கிரக எண்ணிக்கை கொண்டு ஜாதகனின் இரகசிய தொடர்பை கூறலாம் .

 

ஆண் /பெண் இருவருக்கும் இது பொருந்தும்

 

(பலம் பெற்ற குருவின் பார்வை இதை மாற்றும் )

  பாலாரிஷ்டம்

இதை D6 & D8& D12 & D30எனும் வர்கச்சக்கரம் மூலம் கணிக்க வேண்டும்

ஒரு குழந்தை பிறந்தபின் அதன் ஆயுள் நிலை மற்றும் அந்த குழந்தையால் பெற்றோர்களின் நிலை

இதை D6 & D8& D12 & D30எனும் வர்கச்சக்கரம் மூலம் கணிக்க வேண்டும் இவை அனைத்திலும் கேடு பலன்கள் வரும் எனில் இந்த குழந்தையை கண்டிப்பாக தத்து கொடுக்க வேண்டும் சரி எப்படி தத்து கொடுப்பது எங்கு தத்து கொடுப்பது

குழந்தையை கண்டிப்பாக தத்து கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் என்ற ஊரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மடவிளாகம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில் தத்து கொடுப்பது நலம் இந்த பெருமாள் கோவிலில் சிவன் சன்னதியும் உண்டு

குழந்தையை பெருமாள் சன்னதியில் தத்து கொடுத்து சிவன் சன்னதியில் திரும்ப பெறவேண்டும் மிகவும் சிறப்பு மிக்க ஆலயம் இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து

பாலாரிஷ்டம் மற்றும் ஆடிஷம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்து கொடுத்து பின் பெற்று செல்கின்றன

  ரோகாம்சம் எனும் D 6 எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்

 

D6 என்பது ரோகாம்சம் 30/6  = 5 பாகை (ரோகாம்சம் நோய் )

 

ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்

பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்

 

D 6 லக்னத்தில் உள்ள கிரக காரகம் தொட்டு நோய் வரும்

உதா D 6 லக்னம் துலாம் அதில் ராகு/கேது இருந்தால் மூலம்(பைல்ஸ்) நோய் வரும்

D 6 லக்னம் கன்னி அதில் செவ்வாய் இருந்தால் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு வரும்

இது போல் மற்ற கிரக காரகதத்துவம் பார்க்கவும்

 

மேலும் D 6 லக்னம் உள்ள ராசி குறித்த பஞ்ச பூத தத்துவம் கொண்ட வியாதி வரும்

மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவ நோயயை எளிதில் குணப்படுத்த முடியாது

 

மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவம் தொடர்பான மருத்துவம் பலன் அளிக்காது

 

உதா சூரியன் எனில் ஆங்கில மருத்துவம்

சந்திரன் எனில் ஹோமியோபதி மருத்துவம்

இது போல் மற்றவை பார்க்கவும்

 

D 6 ல் வரும் நோயை குணப்படுத்த முடியுமா என பார்க்க D 30 ல் பார்க்க வேண்டும்

  குருவும்

 

இரண்டில் குருவும் இரண்டாம் அதிபதியும் இணைந்திருக்க, இரன்டாம் அதிபதி குருவின் வீட்டில் இருந்தாலும் ஜாதகர்/ஜாதகியர் அனைவராலும், வணங்கத்தக்கவர்கள்,உயர்வன நல்ல இனிமையாகப் பேசுவர்கள்.

 

   2-5-12-குரு இருக்க, 2-ஆம் அதிபதி 10-ல் இருக்க, அல்லது லக்கினத்தில் குரு இருக்க ஜாதகர்      ஜாதகியர் ஆணவமற்றவர்கள், இனிமையாகப் பேசுவர்கள்.

 

  3-ல் குரு இருக்க, 4-ஆம் அதிபதி 3-ல் இருக்க, செவ்வாய் 4-7-10-ல் இருந்தால் ஜாதகர்/ஜாதகியர் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பார்கள்.மக்களை காப்பர்கள்.  

 

  2-ல் குரு,2-ஆம் அதிபதியுடன் இருக்க புதனும், சுக்கிரனும் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர்/ஜாதகியர் மக்ககளை காப்பர்கள்.  

 

இரண்டாம் அதிபதியை குரு பார்த்தாலும் ஜாதகர் /ஜாதகியர் வாழ்வில் நலமே கிட்டும். மக்களை காப்பர்கள். 

 

உபய லக்கினங்களுக்கும் மிதுனம் ,கன்னி,தனுசு, மீனம் லக்கினத்திற்கு மூன்று/ஆறு/எட்டில் குரு இருந்தால் வாழ்வில் வளமை கிட்டுடிடும்..

 

ஸ்திர லக்கினங்களுக்கும் ரிஷபம்   சிம்மம்,விருச்சிகம், கும்பம் லக்கினத்திற்கு குரு மறைந்திருந்தால் வாழ்வில் வளமை கிடைக்கும்.

  முகூர்த்த நாள்

 

 

திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது . மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார்.

 

நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும்.

 

குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது.

 

குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும்.

 

5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.

 

7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள். 

 

9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும்,

 

11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும். குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது.

 

குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது.

 

சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும்.

 

மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு அஷ்டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும். குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு தேர்வு செய்யலாம்.

 

1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள்.

 

3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.

 

4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.

 

5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது உத்தமம்.

 

6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேஷம் முகூர்த்த லக்னமாக இல்லாது இருப்பது.

 

7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல் இருப்பது.

 

8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம் சந்தோஷத்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாமேவொழிய இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.

 

9. உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.

 

10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோஅமையாமல் இருப்பது மிக நல்லது.

 

11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் மூடம் என்கின்றஅஸ்தங்க தோஷம் அடைந்திருக்க கூடவே கூடாது.

 

12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற விஷ நேரங்களை ஒதுக்க வேண்டும். குளிகைகாலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது. காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள்திரும்பவும் செய்ய நேரிடலாம்.

  13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும்.

 

சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி

 

முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.

 

14. “பஞ்சகம்என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். பஞ்சகமுறையில் பார்த்தால் வருடத்திற்க்கு மிக குறைந்த முகூர்த்த நாட்களே வரும்.எனவே இதற்கு பரிகாரமாக இரத்தினம், சந்தனம், எலுமிச்சை, தீபம் மற்றும் தானியம்முதலியவைகளை துணிமணிகளுடன் சேர்த்து தானம் செய்யவேண்டும்.

 

15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம்.ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.

 

16. திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல தெய்வத்திற்கு பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து பிறகு முன்னோர்களை தியானித்துஅனுமதி பெறவேண்டும்.

 

இப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்.

  பெயர் எண்:   1

 

பெயர் எண் கூட்டுத்தொகை :  10 

 

10ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் கண்ணியமும், கீர்த்தியும் உடையவர்கள். வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ஷ்ட மாற்றங்கள் ஏற்படும். எளிதாகப் பிரபலம் அடைவர். எனவே, இவர்களுடைய நடவடிக்கைகள் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. ஒருநாளும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது.

 

 

 

பெயர் எண் கூட்டுத்தொகை :  19

 

19ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து மேன்மை அடைந்துகொண்டே இருக்கும். பதவி, கௌரவம், மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் எல்லாம் அதிகரித்துக்கொண்டே போகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வயோதிகத்திலும் இளைஞர்களைப் போலச் சுறுசுறுப்பாக இருப்பர். இவர்களுடைய நேர்மையே இவர்களுக்கு வெற்றி அளிக்கும்.

 

பெயர் எண் கூட்டுத்தொகை :  28

 

28ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் போட்டியும் சிரமமும் அதிகரிக்கும். வாழ்க்கையைத் திரும்பத் திரும்பத் தொடங்க நேரும். பலர் மிக வேகமாக முன்னேறுவர்; ஆனால், கடைசியில் எல்லாவற்றையும் இழக்க நேரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடனை வசூலிப்பது கடினம். கஷ்டப்பட்டுச் சேர்த்த பொருள்களையெல்லாம் எதிர்பாராமல் இழக்கநேரும்.

 

பெயர் எண் கூட்டுத்தொகை :  37

 

37ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் வசீகரத்தையும், காதலில் வெற்றியையும் பெறுவர். தங்களுடைய அந்தஸ்திற்கு மேற்பட்டவர்களால் விரும்பப்படுவர். ஆண்களுக்குப் பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் அதிக உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் முன்னேற்றம், வியாபாரத்தில் அதிர்ஷ்டம். பலவித முயற்சிகளால் பொருள் சேர்க்கை. கலைகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். கவர்ச்சியான நடை, உடை, பாவனைகளும், வாக்குச் சாதுர்யமும் உண்டாக்கும்.

 

பெயர் எண் கூட்டுத்தொகை : 46

 

46ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைவர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களும் அரசாளும் பதவிக்கு உயர வாய்ப்பு உண்டு. வயது ஏற, ஏற செல்வமும், அந்தஸ்தும் அதிகரிக்கும். இவர்களுடைய நடவடிக்கைகளில் நேர்மை இருக்க வேண்டியது அவசியம்.

 

 பெயர் எண் கூட்டுத்தொகை : 55

 

பெயர் கூட்டு எண் 55 ஆனால் ஒருவர் அறிவினால் பிரமிக்கச் செய்து எல்லோரையும் வெற்றி கொள்ளுவார். இவர்கள் அறிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளப்படுவர். மேதா விலாசம் உண்டாகும். அறிவு மின்னல்போல ஒளிவீசும். சரியான வழியில் பயன்படுத்தப்படாவிட்டால், இவர்களுடைய அறிவு இவர்களுக்கே எதிரியாகிவிடக்கூடும்.

  பெயர் எண் கூட்டுத்தொகை : 64

 

64 என்னும் எண் சம அளவில் நண்பர்களையும், எதிரிகளையும் உண்டு பண்ணக்கூடியது. வாழ்க்கையில் எதிர்ப்பு இருக்கும். அதிக மனவலிமையையும், சாமர்த்தியத்தையும், அறிவையும் தரும். செயற்கரிய செயல்கள் புரியச் செய்து கீர்த்தியை உண்டாக்கும். பெரிய அரசாங்கப் பதவிகள் தரும். அனைவரும் பிரமித்து வணங்கும் படியான பதவியையும் தரும். இந்த எண்காரர்களுக்கு வலிமைமிக்க வாக்கு உண்டாகும்.

 

பெயர் எண் கூட்டுத்தொகை : 73

 

பெயர் கூட்டு எண் 73 ஆனால் மனோசக்திகள் பலமடையும். புகழும், செல்வமும், அதிகாரமும் படிப்படியாக உயரும். சுக வாழ்க்கையே குறிக்கோளாக இருக்கும். ரகசியமாகக் காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் சமர்த்தர்களாக இருப்பர். அரசு ஆதரவு உண்டு. போகவஸ்துகள் நிறைய உண்டாகும். நேர்மை இல்லாவிட்டால் புகழ்மங்கும். தெய்வ பக்தியுடன் சுத்தமான இதயமும், மேன்மையான எண்ணங்களும் இருந்தால் சாந்தியுடன் பிரபுவாக வாழ்வர்.

 

பெயர் எண் கூட்டுத்தொகை : 82

 

82 என்னும் எண் சக்தி வாய்ந்தது. சாதாரண மனிதனையும் சக்ரவர்த்தி ஆக்கக்கூடியது. இந்த எண்ணுக்குரியவர்கள் கடுமையான உழைப்பாலும், கடமை தவறாத பண்பாலும் மேன்மை அடைவர். பெரும் புகழை அடைவர். காதலில் சிக்கல் ஏற்படும். பிடிவாதம் அதிகமாக இருக்கும். கண்களில் காந்த சக்தி உண்டாகும்.

 

பெயர் எண் கூட்டுத்தொகை : 91

 

91 என்றும் என் வைராக்கியத்தையும், அதிக சஞ்சாரத்தையும் குறிக்கிறது. இவர்கள் அதிகமாகப் பயணம் செய்வர். படகு மற்றும் கப்பல் மூலம் செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் சேரும். சுகமான வாழ்க்கை அமையும்.

 

பெயர் எண் கூட்டுத்தொகை : 100

 

100 என்னும் எண் முயற்சிகளில் வெற்றியைத் தரக்கூடியது. ஆனால், வாழ்க்கையில் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படாது. பணம் நிறைய இருக்கும். முக்கியமான சம்பவங்கள் இல்லாத நீண்ட சுக வாழ்க்கை அமையும்.

  தசாபுத்தி பலன்கள்

லக்கினாதிபன் தசை /புத்தி

 

 

லக்கினாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலமும் பிரகாசமும் மகிழ்ச்சியும் உண்டாகும் மனத்திற்கு உற்காக மளிக்கத்தக்க நன்மைகளும் சுபகாரியங்களும் நடைபெறும், புகழும் பெருமையும் உண்டாகும் நினைத்த காரியங்கள் நன்மை பெறும் லக்கினாதிபனுடைய பலத்திற்குத் தகுந்தபடி செல்வமும், வசதியும் உடைய வாழ்க்கை அமையும்.

 

 

லக்கினாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் யோகம் உண்டாகும்.  குடும்ப சுகம் பெருகும் நல்வாக்கும், கௌரவமும் வாக்கினால் இலாபங்களும் உண்டாகும்.

 

 

லக்கினாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால்  சகோதரர்களால் நன்மையும் தனக்கு வேண்டிய காரியங்களை செய்வதற்குத் தக்க துணைவர்கள் மற்றும் உதவியாட்கள் தாமாகவே உண்டாவதும் தமது மனோ தைரியத்தால் வெற்றியும் புகழும் அமைவதும் யோக சுகத்தில் லயிப்பும் சகோரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.

 

 

லக்கினாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாயால் அல்லது மாமன் வர்க்கத்தாரால் நன்மைகளும் வித்தையும்  வீடுவாகனங்கள் சேர்வதும் அவற்றால் இலாபங்கள் உண்டாவதும் தன் சகோதரர்களுக்குப் பொருள் இலாபங்கள் ஏற்பட்டு அதனால் தானும் லாபங்கள் அடைதலும் வியாபார விருத்தியும்  தொடர்ந்து மேன்மைகளும் உண்டாகும்.

 

 

லக்கினாதிபன் ஐந்தாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திரர்களால் லாபங்களும் தன் புத்தியாலும் வித்தைகளாலும் மேலான புகழ் இவற்றை அடைவதும் மற்றும் உபதேசம் பெறுவது வீடு வாகனங்களால் லாபங்கள் உண்டாவதும் ஆகும்.  லக்கினாதிபன் ஐந்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தசை ஆரம்பத்தில் புத்திரசோகம் ஏற்படும் என்பது சிலர் கருத்து.

 

 

லக்கினாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அக்காலத்தில் பகை, வம்புகுகள், கடன்கள் நோய்கள் முதலியவற்றால் பலவிதமான கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.  மனைவியை இழக்க நேரிடும்.  தன் மக்களின் சம்பாத்தியத்தால் வாழ்க்கை நடத்த நேரிடும் தாயாதிகளால் குடும்ப சிக்கல்கள் பாகப் பிரிவினை போன்ற தொல்லைகளும் உண்டாகும்.  கோயில் சொத்துக்களை அனுபவிக்கவும் அவ்வழியாகவே நஷ்டங்களை அடையவும் நேரிடும்.

  லக்கினாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் திருமணம் மகப்பேறு போன்ற நன்மைகள் உண்டாகும் அல்லது தன் மகளுக்கு மணம் செய்து கொடுத்து பேரப்பிள்ளைகளை அடைவதும் கூடும்.  கூட்டு வியாபாரம் அமையும்.  வழக்குகளில் வெற்றி பெற்று தன் பகைவரின் சொத்துக்களை அடையவும் கூடும் பிராயணங்களால் இலாபங்கள் உண்டாகும்.

 

 

லக்கினாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மரண பயம் அல்லது அதற்குச் சமமான கண்டங்கள் உண்டாகும்.  கடனால் அவமானங்கள் ஏற்படும்.  திருடர்களுடன் சம்பந்தம் எற்படும்.  அதனால் சிறை தண்டனைகள் அனுபவிக்கும் படியாகவும் நேரலாம்.  பலவிதமான கஷ்ட நஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும்.

 

 

லக்கினாதிபன் ஒன்பதாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும்.  மனைவியால் பாக்கிய விருத்தியும் சொத்துச் சேர்க்கையும் உண்டாகும்.  சகல விதங்களிலும் மேலான சுகங்கள் நிறைந்த வாழ்க்கை உண்டாகம் தன் சகோதரனுக்கும் நன்மை உண்டாகும்.

 

 

லக்கினாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேன்மை வியாபார விருத்தி தன் பெயர் நாலாதிசைகளிலும் பரவுதல், அந்நிய நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகள் ஏற்படல்,  வியாபார நிமித்தமாகவும் தீர்த்தயாத்திரை ஸ்தல தரிசனம் போன்ற காரியங்களுக்காவும் பிரயாணங்கள் முதலியவை ஏற்படும்.

 

 

லக்கினாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதங்களிலும் பொருள் லாபம் ஏற்படும்.  தன் மூத்த சகோதரர்ருக்கு லாபங்கள் சுகபாக்கிய விருத்திகளும் உண்டாகும்.  தன் பிள்ளைகளுக்கு திருமண பாக்கியம் மகப்பேறு முதலியன உண்டாகும்.  பெண் தொடர்பு ஏற்படும்,   தாய்க்கு மரணம் ஏற்படும்.

 

 

லக்கினாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சொத்துக்களை துறந்து பற்றற்ற வாழ்க்கையும் மோட்ச மார்க்கத்தில் மனம் செல்வதும் மந்திர வித்தைகள் இரகசியமான விஷயங்கள் மற்றும் பிறவிக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் அறிய முற்படுதலும்  போன்ற பலன்கள் உண்டாகும்.  பக்தி சிரத்தை அதிகமாகும்.  லக்கினாதிபன் கெட்டுப்போயிருந்தால் கஞ்சத்தனமும் பெரும் சூது, கபடத்தனம் முதலானவற்றின் மூலம் பணம் சேர்க்க முயற்சியும் அதனால் சில தோல்விகளும் நஷ்டங்களும் அன்னியர் மனைவியின் சேர்க்கையும் அதனால் அவமானம் பொருட்செலவுகளும் உண்டாகும்.

 

 

மேற்படி பலன்களை மற்ற திசைகளில் லக்கினாதிபனுடைய புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்துத் பலன் அறிந்து கொள்ள வேண்டும்.  ஒரு கிரகத்திற்கு இரண்டு ஆதிபத்தியம் ஏற்பட்டால் அந்த இரண்டில் எந்த வீட்டில் அமைந்துள்ளதோ அதற்குரிய பலனையே விசேஷமாக செய்யும் அப்படித் தன் சொந்த வீடுகளில் ஒன்றியிருக்காமல் வேறு வீடுகளில் இருக்கும்போது லக்கினத்தை எண்ணும்போது முதலாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை தன் திசை அல்லது புத்தி நடைபெறும் காலத்தில் பாதிவரையிலும் நடத்திப் பிறகு இரண்டாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை நடத்துவார்.  லக்கினாதிபன் அஷ்டமாதிபதியாகவும் ஆகும் பொழுது (மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், துலாலக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்) தன் திசையின் பிற்பகுதியிலும் லக்கினாதிபனுக்குரிய யோக பலன்களை நடத்துவர்.

  27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்:

 

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

 

பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

 

கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

 

ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)

 

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

 

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

 

புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு)

 

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

 

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

 

மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

 

பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி

 

உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி

 

ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

 

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

 

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

 

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்

 

அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்

 

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

 

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

 

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

 

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்

 

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)

 

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

 

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

 

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

 

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

 

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

 

அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  இரண்டாமாதிபன் தசை/புத்தி

 

 

இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் போன்றவற்றை நிர்வாகம் செய்வது போன்ற பொறுப்புகள் உண்டாகும்.

 

 

இரண்டாமாதிபன் இரண்டில் இருந்து திசை நடைபெற்றால் பலவிதமான தனலாபங்களும் இரண்டு அல்லது மூன்று செயல்பாடுகளை மேற்கொள்வதும், குடும்பங்கள் உண்டாவதும் தன் வாக்கினால் தொல்லை உண்டாவதும் ஏற்படும்.

 

 

இரண்டாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியரின் சொத்துக்கள் மனைவியர் முதலான அனுபவித்தலும் தெய்வ நிந்தை செய்வதும் சகோதரர்களுக்கு பொருட் செலவும் மற்றும் ஜாதகருக்கு தைரிய குறைவும் உண்டாகும். மேற்படி இரண்டாமாதிபன் சுபனாக இருந்தால் அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பொது நன்மைக்காக பாடுபடுவார். இரண்டாமாதிபன் செவ்வாயாக இருந்து மூன்றாம் இடத்தில் பாவரோடு சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டு இருந்தால் தைரியமிக்க கொள்ளைக்காரனாவான்.

 

 

இரண்டாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆசிரியத் தொழில் அல்லது வாகனத் தொழில் மூலம் தன லாபங்கள் உண்டாகும். தாயாரின் சொத்தை அடைவான். குடும்ப சுகமும் நன்மைகளும் உண்டாகும். தன் சகோரர்களை ஆதரிக்க வேண்டியதாக அல்லது அவர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியதாக ஏற்படும்.

 

 

இரண்டாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்தி லாபம், வீட்டிலிருந்தே தொழில் நடத்தி அமோகமான சம்பாத்தியம் அடைதல், லாட்டரி பந்தயம் போன்றவற்றில் வெற்றிகள், தன் காலத்திலேயே தன் பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுதிவைத்தல் அல்லது அவர்களை மேலான நிலைமைக்கு கொண்டு வருதல் போன்ற பலன்கள் ஏற்படும்.

 

 

இரண்டாமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் கடனாளியாக இருப்பதும் கடன்களால் தொல்லைகளும் வழக்குகளும் உண்டாவதும் தாய் மாமனால் சகாயமும் உண்டாகும். பகைவரால் பொருட் சேதமும் நஷ்டங்களும் உண்டாகும். முழங்கால்கள் தொடைகளில் வாத ரோகங்கள் அல்லது வேறு விதமான நோய்களும் உண்டாகும்.

 

 

இரண்டாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அந்நியரால் தன லாபங்களும் மனைவியால் சம்பாத்தியமும் உண்டாகும். வைத்தியத் தொழிலில் அல்லது வியாபாரப்பிரதிநிதிப் போன்ற உத்தியோகங்களில் பிரயாணம் செய்வதன் மூலமாக சம்பாத்தியம் ஏற்படும். மனைவிக்கும் தாய்க்கும் அபவாதங்கள் உண்டாகும்.

 

 

இரண்டாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் வீடு வாசல் முதலான சொத்துக்கள் நஷ்டமும் தரித்திர வாழ்க்கையும் வெறும் வாய் சாமர்த்தியத்தாலேயே பிழைக்க நேர்வதும், குடும்ப சுகம் கெடுவதும், பின் சகோதரர்களுக்குப் பொருள் விரயமும் கஷ்டங்களும் உண்டாகும்.

 

 

இரண்டாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான வழிகளிலும் தனலாபங்களும் சுகசௌக்கியங்களும் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் விருத்தியாகும். தன் சகோதரர்களுக்கு உதவியும் நன்மையும் செய்ய நேரிடும்.

 

 

இரண்டாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் அமோகமான தனலாபங்களும் புது சொத்துக்களில் நிர்வாகம் தன் கைக்கு வருவதும் அதிகமான காம வேட்கையும் அதன் காரணமாக செலவுகளும் ஒன்றிரண்டு புத்திர சோகங்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் குறைவு என்றும் சொல்வார்கள்.

 

 

இரண்டாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் முதல் இல்லாமலேயே வியாபாரம் நடத்தி அதிகமான இலாபங்களை அடைவதும், பந்தய சூதாட்ட வியாபாரங்கள், பணத்தை வட்டிக்கு விடல் போன்றவற்றில் அதிகமான இலாபங்களும், தன் வாக்கினாலேயே லாபம் அடையும்படியான எழுத்து பேச்சுத் துறைகளால் அதிகமான செல்வப்பெருக்கும் உன்னதமான நிலைமையும் உண்டாகும்.

 

 

இரண்டாமாதிபன் பனிரெண்டில் இருந்து தசை /புத்தி நடத்தினால் செல்வம் யாவற்றையும் இழந்து தேசாந்திரம் போக நேர்வதும் அந்நியரின் பராமரிப்பில் இருப்பதும் அல்லது சிறையில் இருக்க நேர்வதும் தன் மூத்த மகனுக்கு நோயின் கஷ்டங்களும் உண்டாகும்.

 

 

மேற்படி பலன்களை மற்ற திசைகளில் இரண்டாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன்களை அறியவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...