புதன், 15 பிப்ரவரி, 2017

நல்ல காரியங்கள் செய்ய கடைபிடிக்கப்படும் ஹோரை..!!!

ஹோரை :

✿ ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரம் அந்த கிரகத்தின் ஹோரை என்று அழைக்கப்படும். ஹோரை என்பதை ஓரை என்றும் அழைப்பர். நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கும் ஹோரை குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் துவங்கும் போது எந்த கிரகத்தின் ஹோரையுடன் துவங்குகிறது என்றும் வரையறுத்து வைத்திருக்கின்றனர். அதன் படியே அந்த நாளின் மற்ற ஹோரைகள் கணக்கிடப்படுகிறது.

➤ ஞாயிறு - சூரியன் ஹோரை

➤ திங்கள் - சந்திரன் ஹோரை

➤ செவ்வாய் - செவ்வாய் ஹோரை

➤ புதன் - புதன் ஹோரை

➤ வியாழன் - குரு ஹோரை

➤ வெள்ளி - சுக்கிரன் ஹோரை

➤ சனி - சனி ஹோரை

மொத்தத்தில் சுப ஓரையில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாம். அசுப ஓரையில் முடிந்த வரை நல்ல விஷயத்தை தவிர்ப்பது நல்லது.

எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றிக் காணலாம்.

சூரிய ஓரை:

✿ விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.

சந்திர ஓரை:

✿ திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி, கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.

செவ்வாய் ஓரை:

✿ போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தல், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

புதன் ஓரை:

✿ ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருட்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.

குரு ஓரை:

✿ புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.

சுக்கிர ஓரை:

✿ கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.

சனி ஓரை:

✿ உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்

 நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நவகிரகங்களே காரணமாக இருக்கிறது. நவகிரகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருப்பது சனியாகும். இவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தையும் தருபவராக திகழ்கிறார். மேலும் தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார்.

சனி ஆதிக்கம் :

🌺 சனி பகவான் தடைகளை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம் என அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். முட்டாளைக்கூட மிகப்பெரிய பதவியில் அமர வைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார்.

சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை :

🌺 சனி கிரகம் பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்ததாகும். ஒருவருக்கு தசா புக்தி சரியில்லாமலும், சனி பார்வை சரி இல்லாமலும் இருந்து கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் யு கிக்கும் முன்பே எல்லா காரியங்களும் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு. எனவே தான் 'சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை", 'சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்றும் கூறப்படுகிறது.

ஏழரைச் சனியில் சுபம் :

🌺 சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம் எல்லாம் அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச் சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார்.

தீமைச் செயல்கள் :

🌺 வாக்கு ஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை கரிநாக்கு என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். அதே நேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.

🌺 ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பு  தோஷம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஒரு சிலருக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். இன்னொரு வகையில் உள்ளவர்களுக்கு எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும்.

சனியின் அம்சங்கள் :

கிழமை - சனி

தேதிகள் - 8, 17, 26

நட்சத்திரம் - பு சம், அனுஷம், உத்திரட்டாதி

ராசி - மகரம், கும்பம்

நிறம் - கருப்பு

ரத்தினம் - நீலமணி

தானியம் - எள்

உச்ச வீடு - துலாம்

வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்

வாகனம் - காகம்

திசை - மேற்கு

மலர் - கருங்குவளை மற்றும் வன்னி

சமித்து - வன்னி

பரிகார தலங்கள் - திருநள்ளாறு, குச்சனு}ர், திருக்கொள்ளிக்காடு

உலோகம் - இரும்பு

ஒருவருக்கு கண்டகச் சனி, ஏழரைச்சனி,

அஷ்டமச்சனி  இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமம்,

சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம்.

அஷ்டமத்தில் சனி இருக்கும்போது சிவபெருமானே பிச்சை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

சீதைக்கு ஜென்மத்தில் சனி இருந்தபோதுதான் ராவணன் இலங்கைக்கு அவரைக் கவர்ந்துகொண்டு போனான்.

அரிச்சந்திரனும், நளனும் அஷ்டமத்தில் சனி இருந்து ஆட்டிப் படைத்தபோதுதான் நாடு, மனைவி, மக்கள் என சகலத்தையும் இழந்து நிர்க்கதியாக நின்றார்கள் என்றெல்லாம் வரலாறுகள் கூறுகின்றன.

ஆனாலும் இவ்வளவு துன்பங்களைத் தருபவராக இருந்தாலும், சனிபகவான் இளகிய மனம் படைத்தவர்.

சனி பகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவ நாடியாகும்.

எனவே சனிபகவானே ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார்.

இப்படிப்பட்ட சனிபகவான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் கோயிலில் யந்திர வடிவில் அமைந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார்.

அவருடன், அவரது அன்னை சாயாதேவியும் யந்திர வடிவில் அருள்பாலிக்கிறார்.

சனீஸ்வர பகவானின் பார்வை, அவருடைய மனைவியின் சாபத்தினால் வக்கிரமாக அமைந்தது.

இதனால் சனீஸ்வரரின் தாய் சாயாதேவி சனீஸ்வரரைத் தன் அருகிலேயே வைத்திருக்கிறார்.

தாய் அருகிலேயே இருப்பதால் சனீஸ்வரர் எப்போதும் சாந்தமாகவே இருப்பார்.

யந்திர அமைப்பு:

இங்கு சனீஸ்வர பகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில்  அமைந்துள்ளார்.

அதன் ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.

யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் உள்ளனர்.

அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது.

இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.

வரலாறு:

1535ம் ஆண்டு ஏரிக்குப்பம் பகுதியை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னரின் படைத்தளபதியாக விளங்கியவர் வையாபுரி.

இவர் இவ்வழியாக குதிரையில் சென்று கொண்டிருந்தார்.

காரணம் ஏதுமின்றி, திடீரென ஓடும் குதிரையிலிருந்து கீழே விழுந்த வையாபுரிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது.

குதிரையும் நிலைதடுமாறி விழுந்ததால், அதற்கும் பலத்த அடி.

அச்சமயம் ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்புமாறும், சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொல்லி, மேலும் அதனால், வையாபுரியின் உடல்நலம் தேறும் என்றது.

அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி யந்திர வடிவிலான சனீஸ்வரன் சிலையை அமைத்து 4கால பூஜைகளை செய்து வந்தார்.

கால வெள்ளத்தில் கோயில் சிதைவுற்றது.

யந்திர சிலை முட்புதர்களால் மூடப்பட்டது.

சமீபத்தில் தொல்பொருள் துறையினரால் அகழ்வாராய்ச்சி செய்யும் போது மீண்டும் கண்டெடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

பரிகாரம்:

கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘பாஸ்கர தீர்த்தம்‘ என்ற குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டால் திருமண வரம், குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லட்சுமி கடாட்சம், சனீஸ்வர தோஷம் மற்றும் சகல தோஷம் போன்றவை நிறைவேறுவதாகவும், எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றினால் வேண்டும் வரம் கிடைப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.

சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜை, ஒவ்வொரு வருடம் காணும் பொங்கல் அன்று பால்குட அபிஷேகம் சனிப்பெயர்ச்சியன்று சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.

வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சந்தவாசலில் இறங்கி அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது.

அங்கிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் ஆரணி, போளூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.

குரு (வியாழன்) பார்க்க கோடி நன்மை

🌿 பூமியில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய அனைத்து நல்லது, கெட்டதிற்கும் அவனுடைய ஜாதகத்தில் பிறக்கின்ற நேரத்தில் ராசி மண்டலத்தில் எந்த இடத்தில், எந்த கிரகம் சஞ்சரிக்கின்றதோ அதைப் பொறுத்தே வாழ்வில் நன்மையையும், தீமையையும் மாறி மாறி அனுபவிக்கின்றனர்.

🌿 நவகிரகங்களில் ஐந்தாவதாக இடம் வகிப்பவர் குரு (வியாழன்) பகவான். இவருக்கு வியாழ பகவான், பிரகஸ்பதி என்ற வேறு பெயர்களும் உண்டு. தேவ குருவாக இந்திர சபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர். பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கிரச முனிவருக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான்.

வாக்கிற்கும், அறிவுக்கும் அதிதேவதையான குருபகவான் :

🌿 எங்கும் பிரகாசமாய், ஆனந்த பூர்த்தியாய், அணுவிற்கு அணுவாய், ஜோதிப் பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் அவர்களின் முன் வினைகளுக்கேற்ப சுகங்களையும், துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடான ஒரு உண்மையாகும். வாழ்வில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை நிறைந்திட வேண்டும்.

🌿 ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராய்ச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாகும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும்.

🌿 அதிதேவதையான குரு உச்ச வீடாகிய கடகராசியில் இருக்கப் பிறந்த ஜாதகன் என்றுமே சுகமான வாழ்வு வாழ்வான் என்பது ஜோதிடசாஸ்த்திரம். மேலும், சுவாதி, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையில் அமைந்தால் அன்றைய நாள் குருபகவான் வழிபாட்டிற்கு மேன்மேலும் சிறப்புடையதாகும்.

🌿 வியாழ பகவான் தங்க நிறம் கொண்ட திருமேனி படைத்தவர். நான்கு திருக்கரங்களையும், அவற்றில் கமண்டலம், அட்சமாலை, யோக தண்டம், அபயம் என ஏந்தி இருப்பார். மேலும் கிழக்கு நோக்கி தலையில் மகுடம் தாங்கிய திருமேனி கொண்ட இவர் பொன்னிறச் சந்தனம் பூசி, பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாடை, பொற்குடை, பொன்னிறக்கொடி, பொன் தேர் ஆகியவற்றைக் கொண்டவர்.

🌿 தன்னைப் பணிந்து விரதமிருந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து, குற்றங்களைக் களைத்து ஆபத்துக்களைப் போக்கி, நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும், கௌரவத்தையும், நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திர பாக்கியத்தையும் தருபவர்.

குருபகவான் திருநாமங்கள் :

🌿 இவருக்கு சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹhரகர், சௌம்யமூர்த்தி என பல்வேறு திருநாமங்கள் உண்டு.

🌿 வியாழ பகவான் தன் மனைவி தாரையோடும் பரத்துவாசர்-எமகண்டன்-கசன் என்னும் பிள்ளைகளோடும் எழுந்தருளி இருப்பார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர், வியாழ பகவானைத் துதித்து கீர்த்தனை எழுதியிருக்கிறார். வியாழ பகவான் மிகுந்த வலிமை உடையவர்.

🌿 நாமும் விரதமிருந்து ஆலயம் சென்று குருபகவானையும் தட்சணாமூர்த்தியையும், இஷ்ட தெய்வங்களையும், குல தெய்வங்களையும் வணங்கி வழிபட்டு குருபார்வை பெற்று சகல தோஷங்களும் நீங்கி மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக!...

சிவனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்

☀ திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரை" என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம் தான். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

☀ ஆகவே மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும், நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாகும். நடராஜரின் ஆருத்ரா தரிசனம், அவரது ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே நடத்தப்பட்டு வருகிறது.

☀ ஒரு நாள் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ஆகா! அற்புதம்! அற்புதமான காட்சி! என்று மனமுருகி சத்தம் போட்டார். அவரது இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமி தேவியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், தங்களின் சந்தேகத்தை ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர். 'சுவாமி! என்றும் இல்லாத திருநாளாக இன்று நீங்கள் மனமுருக அற்புதம் என்று கூறியதன் பொருள் என்ன?" என்றனர்.

☀ 'திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால் தான் அவ்வாறு கூறினேன்" என்றார் மகாவிஷ்ணு. மேலும் அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்லச் சொல்ல ஆதிசேஷனுக்கும் கூட உடல் சிலிர்த்தது. ஆதிசேஷனின் பரவசத்தை கண்ணுற்ற மகாவிஷ்ணு, 'ஆதிசேஷா! உனது ஆசை எனக்குப் புரிகிறது. நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூவுலகில் பிறந்து, தவம் இருக்க வேண்டும். அப்போது அந்த அற்புத நடனத்தை நீ காணலாம். இப்போதே புறப்பட்டு போய் வா!" என்று கூறி விடை கொடுத்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பலகாலம் தவம் இருந்து வந்ததன் காரணமாக, ஒரு நாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும்.

☀ திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி படைப்பார்கள். களி என்பது ஆனந்தம் என்று பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன் வியாக்ரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில், கும்பகோணம்

சாரங்கபாணி சுவாமி கோவில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோவில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது.

✻ மூலவர் - சாரங்கபாணி, ஆராவமுதன்

✻ தாயார் - கோமளவல்லி

✻ தீர்த்தம் - ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு

✻ பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்

சிறப்பு :

✻ இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பு ஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

தல வரலாறு :

✻ ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது.

✻ லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும் என்றார். லட்சுமி தாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பு லோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி பிருகு, புண்ணிய பு மியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், சாரங்கபாணி எனப்பட்டார். இவ்வு ரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

பிரார்த்தனை :

✻ கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்து நடக்கும் என்பது ஐதீகம்.

✻ பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

திருவிழா :

✻ இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக் கோவிலின் பெரிய தேர் சித்திரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும்.

✻ தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மகத் தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.

ஜாதகத்தில் லட்சுமி யோகம் யாருக்கு?

🌀 ஒருவர் பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் இறக்கும் போது கோடீஸ்வரனாக இருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார்.

🌀 வெள்ளிக்கிழமைக்கு உரிய அதிகாரி என ஜோதிடத்தில் குறிப்பிடபடுபவர் சுக்கிரன் ஆவார். சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீசுக்ராச்சாரியார். இவர்தான் நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன் என்ற கிரகம். இந்த வெள்ளி என்ற சுக்கிரனுக்கும் ஸ்ரீமகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு.

🌀 ஒருவன் வாழ்வில் முக்கியமான மூன்று செல்வம், வலிமை, அறிவு ஆகும். இவற்றை பெற வேண்டுமானால் முப்பெரும் தேவியரின் யோகம் குறித்தவன் ஜாதகத்தில் சிறப்புற்று இருக்க வேண்டும்.

🌀 அவ்வாறு, முப்பெரும் தேவிகளின் (லட்சுமி யோகம், கௌரி யோகம், சரஸ்வதி யோகம்) பெயரில் அமைந்துள்ள சிறப்பு யோகங்களான லட்சுமி யோகம் பற்றிய சிறப்புகளை சில இங்கு காண்போம்.

🌀 பொன் மட்டுமல்ல வெள்ளி எனும் உலோகமும் மகாலட்சுமிக்குப் பிரியமான பொருளாகிறது. எனவே வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றுவதை மகான்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள்.

மகாலட்சுமி யோகம் :

🌀 வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே ஆகும். செல்வங்களின் தேவதையாக விளங்குபவர். மகாலட்சுமி. அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் அவர்தான். திருமகள் யாகத்தில் தக்ஷ்ணருபியாகவும், தாமரையில் தேஜோருபியாகவும், சந்திரனில் சந்திரிகையாகவும், சூரியனில் சுடராகவும் விளங்குகிறாள். எங்கும் எவ்விடத்திலும் சுகமும் சந்தோஷமும் விளங்க இவளே காரணமாகும்.

செல்வத்திற்கு அதிபதி :

🌀 லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் காட்சி தருகிறாள். இத்தகைய லட்சுமியை விஷ்ணு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார்.

🌀 இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன், பொருள், ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.

லட்சுமி யோகப் பலன்கள் :

🌀 இந்த யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான். நற்குணங்கள் உடையவராகவும், அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.

பரிகார பூஜைகள் :

🌀 மாங்காடு தலத்தில் தவமிருக்கும் பார்வதியை பார்க்க ஈசன் அங்கு வருவார், அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறுவாய் என்று திருமால் கூறியுள்ளார். அங்கு சிவலிங்கத்தை தினமும் பூஜித்த சுக்கிராச்சாரியாருக்கு அங்கு வந்த சிவபெருமான் பார்வை திறனை கொடுத்தார்.

🌀 சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும் சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாங்காடு வெள்ளீஸ்வரரை தரிசித்து பார்வை திறனை பெறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அருகே தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றும் வழிபடலாம்.

சாபங்கள் நீங்க வேண்டுமா?

❋ ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது அவனது முன்ஜென்ம வினை, அவனது முன்னோர்களின் வினை பொறுத்தே அமைகிறது. முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால் இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு.

❋ ஒரு சாதாரண மனிதன் இன்னொரு மனிதனால் தேவையற்ற முறையில் அல்லது அதர்ம வழியில் தாக்கப்படும் போது தன்னையும் மீறிய சோகத்திற்கு ஆட்படுகிறான். அந்த நேரம் அவன் மனது நிகழ்ந்த நிகழ்ச்சியிலேயே நிலைத்து விடுகிறது. சுற்றுப் புறச் சூழல்கள் அனைத்தும் மறந்து தனக்கு ஏற்பட்ட அநியாயத்தை மட்டுமே நினைத்து நினைத்து மனம் உருகி ஒருநிலைப் பட்டுவிடுகிறது. அப்போது அவனிடமிருந்து வருகின்ற வார்த்தை அடிவயிற்றில் இருந்து ஒரு ஓநாயின் ஓலம் போல வெளிப்பட்டு எதிராளியை தாக்குகிறது. எதிரியை மட்டும் அல்ல எதிரியின் வம்சத்தை கூட தாக்குகின்ற அளவிற்கு அந்த வார்த்தை சக்தி மிகுந்த சாபமாகி விடுகிறது. இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாத சோதனைகளைச் சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.

❋ ஒரு சிலருக்கு வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது. அவர்களுக்கு முன்னோர்கள் சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யாருடைய சாபமோ என்று சொல்வர். ஒரு சிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர்.

❋ கற்றறிந்த பெரியவர்கள், வயோதிகர்கள் விடும் சாபம் சிலரை பாதிக்கலாம். எனவே தான் பிறர் கோபப்படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். அங்ஙனம் ஏற்படும் சாபங்கள் விலக இறை வழிபாடுதான் தீர்வு. தந்தையின் சாபம் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்யவேண்டும்.

❋ தாயின் சாபம் விலக, ஏகாதசி திதியில் ஏகாம்பரேஸ்வரரை முறையாக வழிபாடு செய்ய வேண்டும். சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களின் சாபம் விலக, அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

சாபம் நீங்க செல்ல வேண்டிய கோவில்கள் :

➽ கோகிலேஸ்வரர் - திருக்கோழம்பியம் (தஞ்சாவூர்)
➽ தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு (புதுச்சேரி)

விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி

தென்காசி, காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும், தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.


மூலவர் : விஸ்வநாதர்.

சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.

அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.

தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.

தலவிருட்சம் : செண்பக மரம்.

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.

ஊர் : தென்காசி.

மாவட்டம் : திருநெல்வேலி.

தல வரலாறு :

🍄 சுமார் 700 வருடங்களுக்கு முன்பு தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான்.

🍄 மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார். இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விஸ்வநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான்.

🍄 ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருவதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோவில் அமைத்து வழிபடும்படி கூறினார்.

🍄 நான் இருக்குமிடத்தை நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார். மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும், நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான்.

🍄 அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான்.

தல சிறப்பு :

🍄 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

🍄 கோவில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

🍄 இந்த கோவில் கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும். கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.

🍄 மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

🍄 இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம். நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.

பிரார்த்தனை :

🍄 இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.

காதல் ராசி பலன் காதலிப்பவர்களுக்கும் மட்டும்

பொதுவாக ஜோதிடம் காதலுக்கு எதிரியாக பார்க்கிறார்கள் , இது உண்மை அல்ல , ஜோதிடம் உண்மையை தான் சொல்லும்  உங்கள் உண்மையான காதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், உங்கள் தாய் , தந்தை சம்மதத்துடன் உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
காதலிப்பவர்கள் முதலில் சரியானவரை காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும் வரும். 3 வருட காதல் முடிந்து போவதும் உண்டு. 30 வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக ஏழரை சனி வரும்போதுதான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி வரும்போது காதலிக்கிறார்கள்.
பொதுவாக தசா புக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில்தான் காதலிக்கிறார்கள். சரி இல்லாத தசா புக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது. சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும். அதன்பிறகு ஒரு தெளிவு வரும். மோசமான தசா புக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும். அந்தக் காதல் தான் கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் கணவன் – மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசி வரை அதே காதலோடு வாழ்ந்து காட்டுகிறார்கள். இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியாக கனியாது.
அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து காதல் நீடிக்குமா? நீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும். காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு, கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கக் கூடப் பிடிக்காமல் விலகிப் போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம். எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப் பார்த்து அந்தக் காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.
உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?.
மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்
கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.
துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.
தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்
மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்

காதல் ஜோதிடம்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடி அசைந்ததா? முதலில் வந்தது முட்டையா.. கோழியா? என்பது போல காதலிலும் ஒரு சந்தேகம் தீரா கேள்வி. காதல் வந்ததால் மனித குலம் தோன்றியதா.. மனித குலம் தோன்றிய பிறகு காதல் வந்ததா? ஆகமொத்தம்.. எதிர்ப்புகள் இருந்தாலும் மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. ஜோதிட கலையை, ஜோதிட சாஸ்திரத்தை மிகப்பெரிய கடலுக்கு ஒப்பாக
சொல்வார்கள். எந்த விஷயத்துக்கும் அசைக்க முடியாத தீர்வுகள் இந்த கலையில் இருக்கின்றன.

ஏதோ ராசிபலன், நாள், நட்சத்திரம், பொருத்தம், தோஷம் என்ற அளவில்தான் சாதாரண மக்களுக்கு இந்த கலை பரிச்சயம். ஆனால் மகரிஷிகள், யோகீஸ்வரர்கள் எழுதி வைத்து நமக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளின்படி தனி மனிதனின் யோக அவயோகங்களை பற்றி மட்டுமின்றி, உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் தன்மைகள், செயல்பாடுகளையும் நாம் ஜோதிடம் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். மனித வாழ்க்கை என்பதே சுகத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஐம்புலன்களுக்கும் ஒவ்வொரு வகையில் சுகம் கிடைக்கிறது. தொடுதல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், ரசித்தல் என எல்லாமே ஒருவகை சுகம்தான்.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உணர்ச்சியும், சுகமும் உள்ளது. அந்த வகையில் மனிதனுக்கு இந்த உணர்ச்சி, சுகம், காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது. அதையும் கருத்தில் கொண்டே திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என பார்க்கலாம். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், அமைப்புகள் ஆகியவை பொதுப் பலன்களாகும். பண்டைய நூல்கள் பலவற்றில் கூறப்பட்ட கருத்துகளின் சாராம்சமே இங்கு கூறப்பட்டுள்ளது. சிலருக்கு ஒத்துப்போகும். சிலருக்கு ஒத்துப்போகாமலும் இருக்கலாம்.

காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.

குரு:

ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

சுக்கிரன்:

இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய்:

இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன்:

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

சந்திரன்:

மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

காமத்தை நிர்ணயிக்கும் வீடுகள்

ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12-ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

அதிரடி காதலர்கள்

மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12-ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.

உஷார் லவ்வர்.. உஷார்!

நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் இனிக்குமா?

ஏழாம் இடம்: இந்த இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும்.

ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

காதல் சொதப்பும்!

12-ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.

விவகாரமான சனி-சந்திரன்

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது, ஏழாம் வீட்டில் ராகு-சனி, சுக்கிரன்-கேது இருப்பது. நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும், சனி வீட்டில் சுக்கிரனும் இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள் மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக இருக்கிறது. நன்மை, தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம். ஒருவருக்கு கிடைக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள். இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம் இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம். அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள் ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம், சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

சுக்கிரன் – செவ்வாய்

ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.

சுக்கிரனும், செவ்வாயும்

கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்.. காதலுக்கு உகந்த இடம் எது?

பள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது.  இளம் வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால் அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது. கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால், அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை. ஓரளவு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான் அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது. இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி, கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5-ம் எண் அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல் போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின் அனுக்கிரகத்தால் நீங்கள் பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால் காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

செவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா? சந்தோஷமா?

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகு-கேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12-ல் இருந்தால் தோஷம். ராகு-கேது லக்னம், 2, 7, 8-ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8-ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8-ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

ராகு-கேது விஷயத்திலும் அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல் ராகு-கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு?

 நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் புண்ணியம் என்பது நிச்சயம் உள்ளது. அதில் என்ன என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு அந்த புண்ணியம் போய் சேரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

👉 அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 முன்னோர்களுக்கு திதிபு ஜை செய்தல் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பித்ருகளுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 புனித நதிகளில் நீராடினால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

முடிந்தவரை நல்ல காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்!...⁠⁠⁠⁠

எந்த இராசிக்கு என்ன தொழில் செய்தால் சிறப்பு!

🌀 கால நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் வழக்கு மொழியாகும். நாட்டில் எத்தனையோ பேர் தொழில் செய்கின்றனர். தொழில் அதிபர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் புகழ் பெற்ற தொழில் அதிபர்களாக ஆகமுடியாது.

🌀 வேலையா, தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்? ஜாதகப்படி தொழில் அல்லது வேலை எப்படி அமையும்? இதை தெரிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரப்படி தொழில் மற்றும் வியாபாரம் யோகம் காட்டும் பத்தாம் இடத்தை தான் ஆராய வேண்டும்.

வியாபார ஸ்தானமும் கிரகங்களும் :

🌀 ஜாதகக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பலன், அமைப்பு உண்டு. அந்த வகையில் வியாபார ஸ்தானம் என்பது லக்னத்திற்கு தசம கேந்திரமான பத்தாம் இடமாகும். இந்த இடமும் இந்த வீட்டின் கிரகமும்தான் ஒருவர் தொழிலோ, வியாபாரமோ செய்ய முக்கிய காரணம்.

🌀 இதில் வியாபார கிரகமும் வித்தைக்கு அதிபதியுமான புதனுடைய பலம் அவசியமாகும். வியாபாரத்திற்கு தனம் எனும் பணத்தை நமக்கு கொடுக்கக்கூடியவை, இரண்டாம் இடமும் லாபத்தை தரும் பதினொன்றாம் இடமுமாகும்.

🌀 பத்தில் ஒரு கிரகமாவது இருந்தால் தான் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படி 10ல் இல்லா விட்டாலும் 4ம் வீட்டில் இருந்தால் அவை கண்டிப்பாக 10ம் வீட்டை பார்க்கும். இந்த மாதிரி இருந்தாலும் நல்லது தான். இதனாலும் தொழில் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும், வியாபாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும்.

🌀 10ல் கேது இருந்தால் பல தொழில் யோகம், பல வியாபாரம் வளர்ச்சியடையும். பத்தில் ராகு சூரியன் இருந்தால் வியாபார, தொழில் விருத்தி பெற யோகம் அமைகிறது.

🌀 பத்தாம் அதிபதி எந்த கிரகமாக இருந்தாலும், அந்த கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அதற்கேற்ப தொழில் வியாபாரம் அமையும்.

மேஷம், விருச்சிகம் : நெருப்பு சம்பந்தமான தொழில்களான செங்கல் சூளை, தங்கம், வெள்ளி உருக்கும் கடை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், டீ, ஹோட்டல், பேக்கரி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், சினிமாத்துறை போன்றவை அமையும்.

ரிஷபம், துலாம் : பெண்கள் ஆடைகள், உள்ளாடைகள், பேன்ஸி ஸ்டோர், அணிகலன்கள், வெள்ளி வியாபாரம், பெரிய ஷோரூம், சீரியல் படம் தயாரித்தல், சூப்பர் மார்க்கெட், ஏஜென்ஸி போன்றவை அமையும்.

மிதுனம், கன்னி : பல தொழில் செய்யும் யோகம் உண்டு. மார்க்கெட்டிங், ஏஜென்ஸி, கமிஷன், காண்ட்ராக்ட், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், பல்பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம், பதிப்பகம், பிரிண்டிங் போன்றவை அமையும்.

கடகம் : தண்ணீர் சம்பந்தமான தொழில், பழக்கடை, பழமண்டி, காய், கனி, பூ வியாபாரம், பாஸ்ட்ஃபுட், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கெமிக்கல், ஜாம், ஊறுகாய், அப்பளம் போன்றவை அமையும்.

சிம்மம் : ஹோட்டல், பேக்கரி, அரசாங்க காண்ட்ராக்ட், கேண்டீன், நகைக்கடை, ஜவுளிக்கடை, மருத்துவ தொழில், நெருப்பு சம்பந்தமான தொழில் அமையும்.

தனுசு, மீனம் : தங்க வியாபாரம், நவரத்தின வியாபாரம், துணிக்கடை, மளிகைக் கடை, ரெடிமேட் கடை, ஹோட்டல் போன்றவை அமையும்.

மகரம், கும்பம் : எண்ணெய் சம்பந்தமான தொழில், இரும்பு, கட்டுமான தொழில் ஹhர்ட்வேர் வியாபாரம், பழைய-புதிய வாகன விற்பனைத் தொழில், ஸ்கிராப், அச்சகம், பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவை அமையும்.

உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்

உப்பிலியப்பன் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவு ர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.

மூலவர் - உப்பிலியப்பன்

உற்சவர் - பொன்னப்பன்

அம்மன் - பு மா தேவி

பழமை - 1000 - 2000 வருடங்கள்

ஊர் - திருநாகேஸ்வரம்

மாவட்டம் - தஞ்சாவு ர்

தல வரலாறு :

🌠 மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பு மாதேவி, விஷ்ணுவிடம், எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள், என்று கேட்டாள்.

🌠 மகாவிஷ்ணு அவளிடம், நீ பு லோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய், என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார்.

🌠 லட்சுமியின் அம்சமான பு மாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சு ட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை.

🌠 மேலும், சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார்.

🌠 தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள்.

தல சிறப்பு :

🌿 மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

🌿 உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

பிரார்த்தனை :

👉 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது. திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார்.

👉 இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.

எந்த இராசிகாரர்கள் வீட்டை மிகவும் அழகாக்குபவர்?

 மேஷ ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருப்பவர்கள். வீட்டை பராமரிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. எந்த இடத்தையும் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்பவர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் :

இவர்களுக்கு வீட்டை பராமரிப்பதில் ஆர்வம் இருக்காது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். அடிக்கடி வீட்டை மாற்றுபவர்கள்.

மிதுன ராசிக்காரர்கள் :

இவர்கள் வேலை ஆட்களை வைத்து வீட்டை அழகாக பராமரிப்பவர்கள். இவர்களின் வீடு வாசனை புகைகளுடன் இருக்கும். வீட்டில் தனித்து இருக்கவே பெரிதும் விரும்புவார்கள்.

கடக ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை அழகாக பராமரிப்பார்கள். வீடு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். இவர்களின் வீடு வாசனை புகைகளுடன் இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பார்கள். வீட்டை அலங்காரம் செய்வதில் அதிகம் செலவு செய்வார்கள். இவர்கள் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் குடியிருக்க விரும்புவார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை பக்தியுடனும், மிகவும் அழகாகவும் பராமரிப்பார்கள். ஆன்மீக பொருட்களைக் கொண்டு வீட்டை அழகாக பராமரிப்பார்கள். இவர்கள் வீட்டில் தனித்து இருக்கவே விரும்புவார்கள்.

துலாம் ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை பராமரிப்பதை தன் கடமையாக நினைப்பவர். இவர்களின் வீடு வாசனை புகைகளுடன் இருக்கும். இவர்கள் வீட்டில் தனித்து இருக்கவே விரும்புவார்கள்.

விருச்சக ராசிக்காரர்கள் :

இவர்கள் மற்றவர்களை காட்டிலும் வீட்டை மிகவும் அழகாக பராமரிப்பார்கள். வீடு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வீடு வாசனையுடன் இருக்கும்.

தனுசு ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை பராமரிப்பதில் வல்லவர்கள். மற்றவர் பொருளை சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால் இவர்கள் அப்பொருளை எடுத்து சரியான இடத்தில் வைப்பவர்கள். இவர்கள் எதிலும் ஒழுக்கத்துடன் இருப்பவர்கள்.

மகர ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை பராமரிப்பத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். எடுத்த பொருளை எங்கு வைத்தோம் எனத் தெரியாமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்பவர்கள்.

கும்ப ராசிக்காரர்கள் :

இவர்கள் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் பராமரிப்பவர்கள். தான் குடியிருக்கும் வாடகை வீட்டை சொந்தவீடு போல நினைத்து பராமரிப்பவர்கள். மற்றவர்கள் உதாரணம் சொல்வது போல தன் வீட்டை மிகவும் அழகாக பராமரிப்பார்கள்.

மீன ராசிக்காரர்கள் :

சுத்தம் தான் சிறந்தது என்று இவர்கள் வீட்டை மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிப்பார்கள். இவர்களின் வீடு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனையுடன் இவர்களின் வீடு இருக்கும்.

நமக்கான அதிர்ஷ்ட வீடு என்பது நாம் வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் பராமரிப்பதில் தான் உள்ளது

சூரியனால் ஏற்படும் யோகங்கள்!

நவகிரகங்களில் ஒன்றான சு ரியனால் நமக்கு பல விதமான நன்மைகள் ஏற்படுகிறது. அவ்வாறு சு ரியனால் ஏற்படும் யோகங்களை பற்றி காண்போம்!...

வசி யோகம் :

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு 12-ல் சந்திரன், ராகு, கேதுவைத்தவிர மற்ற ஐவர்களான புதன், குரு, சுக்கிரன், சனி இவர்களில் ஒருவர் இருந்தால் வசியோகத்தில் பிறந்தவர்கள்.

பலன்கள் :

உலகப் புகழ் பெற்றவர்கள். நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அமைச்சர்கள், அரசாங்க உயர் பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.

வெசி யோகம் :

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு, கேதுகள் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் வெசி யோகம்.

பலன்கள் :

அழகானவர், இனிமையாக பேசுவார்கள், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். தந்தையர் புகழ் பெற்றிருப்பர். உறவினருக்கு உதவுவார்கள். இவர்கள் பணத்தை சேமிக்க பழக வேண்டும்.

உபயசர யோகம் :

சூரியனுக்கு முன்னும், பின்னும் பஞ்சமகா புருஷக் கிரகங்கள் தனித்தோ அல்லது இணைந்திருந்தாலோ உபயசர யோகமாகும் (இது சந்திரனின் துருதரா யோகத்தை போன்றது) சுபர்கள் இருந்தால் சுப பலனைத்தரும்.

பலன்கள் :

பேச்சுத் திறமையுள்ளவர்கள். கெட்டிக்காரர்கள், தைரியசாலிகள், உறவினர்களுக்கு உதவி செய்வார்கள். அனைவரும் பாராட்டுவார்கள்.

ரவிச் சந்திர யோகம் (வரிஷ்ட, சம, அதம) :

சு ரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் பரஸ்பர கேந்திரத்தில் இருந்தால் வரிஷ்ட யோகம். திரிகோணத்தில் நின்றால் சம யோகம். உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் அதம யோகம். ரவிச்சந்திர யோகம்.

பலன்கள் :

அரசியல் செல்வாக்கு, லாபங்கள், நுண்ணறிவு, ஞாபகசக்தி, பேச்சுத்திறன், வெற்றி கிட்டும். சம யோகமாக இருந்தால் பலன் குறையும், தீமை தராது.

அதம யோகமானால் குருடு, மன நலம் பாதிப்பு, மூடத்தனம், அவமானம் ஏற்படும்.

பாஸ்கர யோகம் :

சூரியனுக்கு இரண்டில் சந்திரனும் அல்லது லக்கினத்தில் சூரியனும், 2ல் புதனும், 11-ல் சந்திரனும் இருந்தாலும், குரு, சந்திரனுக்கு 4-7-10-ல் இருந்தால் பாஸ்கர யோகம் அமையும்.

பலன்கள் :

தைரியசாலிகளாகவும், உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களாகவும் இருப்பர். சகல சாஸ்திரங்களை அறிந்தவர்கள். மேடைப் பேச்சுள்ளவர்கள். மனமகிழ்ச்சி உள்ளவர்கள். தனது தொழிலை சிறப்புடன் செய்வார்கள்.

திரிலோசன யோகம் :

சூரியன், சந்திரன், செவ்வாய் ஒருவருக்கொருவர் திரிகோணங்களில் இருந்தால் திரிலோசன யோகம் அமையும்.

பலன்கள் :

சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சகோதரர்களுக்கு உதவி செய்வார்கள். பிறரை எளிதில் எடைபோடுவார்கள். அதிக செல்வம் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.

காதலில் வெற்றி தோல்வி யாருக்கு...!

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, மனித குலம் தோன்றிய காலம் முதலே தோன்றியது, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒரு உணர்வு, ஒரு ஆண் மற்றும் பெண் இருவரையும் மனதளவில் இணைய வைக்கக்கூடிய நிகழ்வு ஆனது காதல். அந்த காதலை கொண்டாடும் நாளையே உலகம் முழுவது காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இத்தினத்தன்று பரிசு பொருட்களையும் வாழ்த்துக்களையும், அன்பு முத்தங்களையும் காதல் ஜோடிகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. காதலுக்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன.

காதலும் - ஜோதிட சாஸ்திரமும் :

ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.

குரு :

ஜோதிடத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருக்கும் குரு பகவான் யோக காரகன், புத்திர காரகன் ஆவார். இவர் தான் போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகிய செயல்களுக்கு காரணமானவர்.

சுக்கிரன் :

சுகபோகம், காதல் மற்றும் காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய் :

ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன் - சந்திரன் :

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே. மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

சுக்கிரன் - செவ்வாய் :

ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம், காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்களாம்.

காதல் திருமணம் :

ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம், களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.

காதலில் சொதப்புவது எது?

12ஆம் இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது

இறைவனை ஆலயங்களுக்கு சென்று தான் வழிபட வேண்டுமா?



✫ இறைவனை கோவிலிலும் வழிபடலாம், வீட்டிலேயும் வழிபடலாம். ஆனால் ஞானிகளால் நிறுவப்பட்ட ஆலயம் சென்று வழிபடும்போது பயன் அதிகமாகவும், விரைவிலேயும் கிடைத்து விடும்.

✫ கோயிலில் இறைவனை வழிப்பட்டால் வினைகள் வெந்து எரிந்து கருகி, நீராகி விடுவது போல், மனம் நிம்மதி கொள்ள வாய்ப்புகள் உருவாகிவிடும்.

✫ விஞ்ஞான ரீதியிலும் ஒரு கருத்து அழுத்தமாகவே தெரிவிக்கப்படுகின்றது நன்றாக மின் சக்தியை ஏற்கக்கூடிய பொருட்கள் தான் பூஜை அறையில் பயன்படுத்தபடுகின்றது. வேப்பிலை, மாவிலை, துளசி, எழுமிச்சைபழம் போன்றவைகளுக்கு இந்த ஆற்றல் அதிகம். பிராண வாயு நமது ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பண்பாக கலப்பதற்கு இது உதவுகின்றது. கோயில்களில் - நகரங்களிலும் வெளியிலும் இருப்பதைவிட, பூஜை நடைபெறும் கர்ப்ப கிரகத்தில் இந்த சக்தி அதிகமாகவே கிடைக்கிறது.

✫ கடற்கரையிலும், மலை மீதும் உள்ள ஆலயங்களில் இந்த சக்தி இயற்கையாகவே நிரம்பக் கிடைக்கிறது. மலை அருவிகள் பொழியும் இடங்களிலும் இது நிறைந்துள்ளன. எனவே தான் பழனி, திருப்பரங்குன்றம், திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற மலைகள் மீதும் ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர் போன்ற கடற்கரையிலும் குற்றாலம் போன்ற அருவிகள் கொட்டும் இடங்களிலும் ஆலயங்கள் அமைக்கபட்டுள்ளன.

✫ ஆலயங்களில் ஒலிக்கப்படும் மணியிலிருந்து வரும் அதிர்வு அணு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலைவரிசையைத் தோற்றுவிக்கும். நமது உடலும் உள்ளமும் ஆன்மாவும் அந்த அலைவரிசையினால் மீட்டப்பட்டு, மூளை, இருதயம், செவிப்பறை, முகுளம் போன்றவற்றிக்கு ஊட்டம் அளிக்கின்றது. பின்னர் எரியும் கற்பூரத்திலிருந்து வரும் வெளிச்சம், கண்ணின் ஆடிகளை அகல விரியச் செய்து அதனால் ஏற்படும் அதிர்வுகள் நரம்பு மண்டலத்தையே உறுதி செய்கின்றன.

✫ விஞ்ஞான உலகில் ஆலய தரிசனம் என்பது அன்றாட நடவடிக்கை என்பது இல்லாது போயிற்று. ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பது உண்மை என்றாலும், ஆலயத்தை அவனது இருப்பிடமாக கருதி வழிபடுவதில் ஒரு தனி சுகத்தையே நாம் காண்கின்றோம். ஏனெனில் அனைத்து இடங்களிலும், சூழ்நிலைகளிலும் மனதை ஒரு நிலைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றாகும். ஆனால் ஆண்டவன் குடி கொண்டுள்ள இடம் ஆலயம் எனக் கருதி அங்கே நுழையும் போதே மனம் ஒருவித நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது.

✫ ஆலயத்தின் மணியோசை அங்கு கமழும் தூப, தீப, நைவேத்யங்களின் வாசனை, இறைவன் மீதான பாமாலைகளின் ஒளி, அங்கு குழுமியுள்ள இதர மனிதர்களின் பக்திபரவச நிலை ஆகிய அனைத்தும் சேர்ந்து நம்முடைய இதயங்களையும் வேறு திசைக்குத் திருப்பாமல் பக்திப் பரவசத்தால் நிரப்பிவிடுகின்றன.

✫ வெளியில் பெறமுடியாத இறையுணர்வை, பக்திப் பரவசத்தை ஆலயங்களில் பெற முடிவதால், ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடுவதே சாலச் சிறந்தது ஆகும்.

சோமநாதர் கோவில், மயிலாடுதுறை

சோமநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் நீடூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.

✧ மூலவர் : சோமநாதேஸ்வரர்

✧ அம்பாள் : வேயுறு தோளியம்மை, மகாலட்சுமி, ஆதித்ய அபயப்ரதாம்பிகை

✧ தீர்த்தம் : புஷ்கரணி, செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம், சு ரிய தீர்த்தம்

✧ தலவிருட்சம் : மகிழ மரம்

✧ பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்

தல வரலாறு :

✧ ஒரு சமயம் இந்திரன் பு லோகத்திற்கு வந்தபோது, காலை நேரத்தில் சிவபு ஜை செய்ய விரும்பினான். தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம் ஏதும் தென்படவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலில் ஒரு சிவலிங்கம் செய்து, ஒரு பாடலைப் பாடி, சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான். அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர பகவானுக்கு நடன காட்சி தந்தமையால், கான நர்த்தன சங்கரா எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வணங்கினார். அன்று முதல் இந்த சோமநாதப்பெருமானுக்கு கான நர்த்தன சங்கரன் என்ற பெயர் உண்டாயிற்று. மணலிலால் ஆன இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காணலாம்.

✧ தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் தன்வினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாப விமோச்சனம் வேண்டினார், அவரும் சோமநாதரைச் சரணடைய பணித்தார். நாரதமுனியின் அறிவுரைப்படி சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம் ஐக்கியமானான். நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான துளை இன்றும் சிவ லிங்கத்தில் காணப்படுகின்றது.

✧ பத்ரகாளியம்பிகை இச்சிவனை தொழுதே கைலாயம் சென்றாள் என்பது நம்பிக்கை.

தல சிறப்பு :

✧ சோமநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பு வுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சோமநாத சுவாமி சகல சாபங்களையும், தோஷங்களையும் நீக்க வல்லவர்.

✧ இத்திருத்தலம் காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. சோமநாதசுவாமி கொலுவிருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும்.

✧ சு ரியநாராயணனே இங்கு தங்கி, அப்பனாம் சோமநாதப் பெருமானையும், அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ் மிக்க தலமிது.

✧ இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது. ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, 'ஒன்பது தீர்த்தம்" என்றே போற்றப்படும் புஷ்கரணி இங்குள்ளது.

✧ பல கோவில் சென்று பு ஜைகள் புரிந்து பயனின்றி போனாலும் இத்தலத்தில் ஒன்பது தீர்த்தமெனும் புஷ்கரணியில் நீராடினால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை :

✧ இந்த திவ்யமூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டால், உடம்பில் உள்ள மச்சம், மாறாத வடு, தோலில் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள், கருப்பு புள்ளிகள், தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

✧ திருமணத்தடை, புத்திர தோஷம், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

✧ பிரார்த்தனை செய்தவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.  

என்ன தானம் செய்தால் என்ன பலன்?

தானம் என்பது

தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவது மட்டுமே, தானம்..!

தீப தானம் :

இஷ்ட தெய்வ ஆலயங்களில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். ஏழை மற்றும் பிராமணர்களுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

நெய் தானம் :

பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை), நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அனைத்து விதமான நோய்களும் தீரும்.

ஆடைகள் தானம் :

பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் தானம் :

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

அரிசி தானம் :

பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி-பருத்தி தானம் :

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.

ஐராவதேஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி

 ஐராவதேஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் 1800 வருடம் பழமையான திருகோவில் ஆகும். இரட்டை சன்னிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.

மூலவர் : ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர்.

அம்மன் : காமாட்சி, அகிலாண்டேஸ்வரி.

தீர்த்தம் : எமதீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

பழமை : 500 வருடங்களுக்கு முன்.

ஊர் : அத்திமுகம்.

மாவட்டம் : கிருஷ்ணகிரி.

தல வரலாறு :

 விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள், தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது ஆஸ்தான வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான்.

 இந்திரன் விருத்தாசுரனை கொன்று அழிக்க அவருக்கும் அவரது யானை ஐராவத்திற்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது.

 பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகஸ்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகஸ்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர். ஐராவதத்தின் பக்தியை மெச்சி, சுவாமி சுயம்புவில் யானை முகத்தை பொரித்ததோடு லிங்கத்திற்கு ஐராவதேஸ்வர் என்று பெயரும் இட்டார்.

 ஹஸ்தி என்றால் யானை. யானை இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்" என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி 'அத்திமுகம்" என அழைக்கப்படுகிறது.

தல சிறப்பு :

 ஒரே கோவிலில் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

 சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது. மிக பெரிய பஞ்ச லிங்க சன்னிதி.

 சுயம்பு லிங்கம் யானை முகத்தோடு விளங்குகிறார், அதே கருவறையில் அம்மையும் வீற்றிருக்கின்றார்.

 கோட்டை கோவில், நவ கிரஹங்கள் யோக நிலையில் அமைதியாய் வீற்றிருப்பது அதிசயம்.

 ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.

 காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அருள்பாலிக்கிறார்கள்.

 தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகி பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை தெரிந்து கொள்ளலாம்.

பிரார்த்தனை :

 சுகமான வாழ்க்கை வேண்டுவோர் இந்திரன் வழிபட்ட தலங்களில் வழிபாடு செய்வர், அந்த வகையில் இந்திரன் வழிபட்ட லிங்கம், அதுவும் தோஷங்களில் தலையாய பிரம்மஹத்தி தோஷம் நீக்க பெற்ற ஸ்தலம்.

 சுவாமி காமாட்சி அம்மையுடன் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம், திருமண தடை, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.

தொல்லை தரும் 8ம் மிடம்

பொதுவாக ஒருவரது வாழ்கையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களையும், பிரச்சனைகளையும் அறிய உதவுவது, எட்டாமிடமாகும். எட்டுக்குடயவனின்
 திசா, புக்தி மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் திசா, புக்தி போன்றவை நடைபெறும்போது ஜாதகருக்கு பிரச்சனைகளும், சங்கடங்களும் பெருமளவில் ஏற்படும்

ஜென்ம லக்னத்தில் எட்டுக்குடையவர் இருந்திடப் பிறந்தவருக்குப்  வாழ்க்கையே போராட்டமாக  இருக்கும். மனத தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும்  இருக்கும். ஏதாவது ஒன்று ஏற்பட்டு ஜாதகரது நிம்மதியைக் கெடுத்து, வருத்தப்பட வைத்துவிடும்.

தன் குடும்ப வாக்குஸ்தானம் என்னும் இரண்டாம்பவதில் எட்டுகுரியவர் இருந்தால்,தொழில் அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ஜாதகர் அதை விட்டு விலகி, வேறொரு தொழில் அல்லது உத்தியோகத்துக்கு அலையும்படி நேரும.
 எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாகுறை ஏற்பட்டு பணத்துக்காக அலயநேரிடும். குடும்பத்தில் நிம்மதியிருக்காது.அவரசு பேச்சே
 மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.


மூன்றாமிடத்தில் எட்டுக்குரியவர் இருக்கப் பிறந்தவர் சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இல்லாதபடியும், கடுமையான சொற்க்களைப் பேசி, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் நிலையை
யும் தரும்.

4மிடத்தில் 8 க்குரியவர் இருந்தால் தகப்பனார் தேடி வைத்தசொத்தை அழிப்பவராகவும், குழந்தைகளுடன் கருது வேறுபாடு கொள்பவராகவும்,
 மனை, வீடு, வாகனம் இவைகளில் பிரச்சனை எதிர்கொள்பவராகவும் இருப்பார்

5மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் நிலையில்லாத  புத்தியும், நிதானமில்லாத போக்கும், அரசாங்கத்தால் தொல்லையும், தரம் குறைந்தவர்களுடன் தொடர்பும் அதனால் அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திப்பதுமாக இருக்கும்

6மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் மற்றவர்களுடன் மனக்கசப்பும் , அடிக்கடி சண்டை சச்சரவுக்கு ஆளாகுதலும் நேரிடும்.
எட்டுகுரியவருடன் சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி நோய்ஏற்படும்
7மிடத்தில் 8க்குரியவர் இருந்தால்  ஒழுக்கமில்லாதவர்களுடன் தொடர்பும், ஆசன வாயில் நோய்த் தொல்லையும் வரும். எட்டுக்குரியவர் அசுபர்களுடன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருந்தால் பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். . செவ்வாய் எட்டுக்குரியவருடன் சேர்ந்து இந்த பாவத்தில்  இருந்தால்  ஜாதகர் அமைதியாகவும்  விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவராகவும் இருப்பார்.

 எட்டுக்குரியவர் எட்டிலேயே இருந்தால்  ஜாதகருக்கு நிறைந்த ஆயுளும் அதிகமான நிலபுலன்களும், மற்றவர்களால் அறிய முடியாத ரகசிய விவகாரங்களில் ஈடுபடுபவராகவும் ஜாதகர்  இருப்பார்.

பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் ஜாதகருக்கு தகப்பனாருடன் சுமூகமான  உறவிருக்காது. முன்னோர்களின் சாபம் இவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடும். மனதில்
 எப்போதும் ஏதாவது குழப்பமும், தேவையற்ற பயமும் இருக்கும். இவருடன் நீண்டகாலம் யாரும் பழக மாட்டார்கள். தொழிலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.
 அடிக்கடி தொழில்அல்லது உத்யோகத்தை விட்டு விட்டு வேற தொழில் அல்லது வேலை தேடும் அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

 ஜாதகத்தில் எட்டுக்குரியவர் பத்தாம் பாவத்தில் இருந்தால்
 வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் அவமானங்களும்,
வேலைப்பளு, ஊதியக்குறைவு, மரியாதைக் குறைவு போன்ற அதிருப்தியான பலன்களை அதிகம் சந்திப்பர்.

லாபஸ்தானத்தில் எட்டுக்குரியவர் இருந்தால்  அவர் ஈட்டும் வருமானம் பல வழிகளிலும் கரைந்து காணாமல் போய்விடும். இவரது உழைப்பை பலரும் உறிஞ்சி பயனடைவர். பிள்ளைகளால் மனக்கசப்பும் அதிருப்தியும் இருக்கும்.

பன்னிரண்டாமிடத்தில் எட்டுக்குரியவர் நின்றிட்டால், வேலையில் கெட்டிக்காரனாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல்  வேலை செய்வது, இல்லாவிட்டால் மனம் போனபடி சுற்றுவது அல்லது முடங்கிக் கிடப்பது என்று தன்  விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு காணப்படும்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...