செவ்வாய், 26 மே, 2015

ஈ.எஸ்.பி. உண்மையா?

அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி, E.S.P (Extra Sensory Perception) என்பது உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?
பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் ஒருவித எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.
பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி (Telepathy) எனப்படுகிறது.
எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு – Precognition என்று பெயர்.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர்.
ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல் மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர்.
ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.
இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி. அதே சமயம் விஞ்ஞானிகளால் இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதை அவர்கள் நம்பினாலும் விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Para-Psychology மற்றும் Para Normal என்ற வகையில் இதனை உள்ளடக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.
ஆதிசங்கரர் சன்யாசம் ஏற்கும் தறுவாயில் அன்னை ஆர்யாம்பாள், தனது அந்திமக்காலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள், சங்கரரும் அதற்குச் சம்மதிக்க, பல ஆண்டுகள் கழித்து ஆர்யாம்பாள் நோய் வாய்ப்பட்ட போது மகன் சங்கரரை நினைக்க, உடனே பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த போதும் சங்கரர் அன்னையின் அழைப்பை உணர்ந்து, இறுதித் தறுவாயில் உடன் இருப்பதற்காக விரைந்து வந்தார். இந்தத் தகவல் பரிமாற்றம் தான் ’டெலிபதி’ எனப்படுகிறது.
நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான். ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவது Retrocognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான்.
ஒருமுறை பகவான் ரமணரை கேரளாவின் புகழ் பெற்ற நாராயண குரு சந்திக்க வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வெகு நேரம் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர். ஆனால் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பின் இறுதியாக “அங்ஙனே ஆவட்டே…” என்று கூறி நாராயண குரு விடை பெற்றார். ரமணரும் தலைசயைத்தார். அதன் பின்னர்தான் பக்தர்களுக்கு அவர்கள் இருவரும் பேசாமலே பேசிக் கொண்டது – தங்கள் எண்ணங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டது – புரிந்தது. இதைத் தான் ஆன்மப் பரிமாற்றம் என்பர். இது கூட ஒருவிதத்தில் ஈ.எஸ்.யைச் சேர்ந்ததுதான். இதே போன்ற சம்பவங்கள் சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், யோகி ராம்சுரத்குமார், மாயம்மா என பல ஞானிகளது வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
உலகெங்கிலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் மிக்கவர் பலர் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முன் அவர்கள் தங்கள் ஈ.எஸ்.பி ஆற்றலை நிரூபித்தும் காட்டியுள்ளனர். தமிழகத்திலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உள்ள பலர் இருந்திருக்கின்றனர். இன்னமும் இருக்கின்றனர்
முதன் முதலில் ஈ.எஸ்.பி. பற்றிய ஆய்வுகள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தொடங்கின. 1923ல் சிகாகோவில் டெலிபதி சோதனைகள் Zenith Broad Casting Company உதவியுடன் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வியப்பைத் தந்தன. 20 பேர்களில் குறைந்த பட்சம் ஒருவருக்காவது ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் இருப்பது தெரிய வந்தது.
1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் இது போன்ற ஆற்றல்கள் இருப்பதாகக் கூறப்படும் சிலரை ஆய்வு செய்த போது அவர்கள் அனைவரும் ஆல்ஃபா என்னும் அலைவரிசையில் இருப்பதைக் கண்டறிந்தார். அதன் பின்னர் மூளையின் ஒருவிதமான திறன் மிக்க அந்தச் செயல்பாடு நிலைக்கு ‘ஆல்பா’ நிலை என்று பெயரிட்டனர். இத்தகைய ஆழ்மன ஆற்றல்களை வளர்ப்பதற்கு பிற்காலத்தில் ஆல்பா தியானமுறை புழக்கத்திற்கு வந்தது. இதை மேலும் ஆராய்ச்சி செய்த வில்லியம் க்ரூக்ஸ் என்பவர், மூளையில் ஏற்படும் ஒருவித ரசாயன மாற்றமே இவ்வகை ஈ.எஸ்.பி. ஆற்றல்களுக்குக் காரணமாகிறது என்பதைக் கண்டறிந்தார். டாக்டர் சேரெய்ல்ன் என்பவர் இது குறித்து விரிவாக ஆராய்ந்தார். அவர் தனது ஆய்வு முடிவில், ”மூளையில் பீனியல் சுரப்பி, பிட்யுடரி சுரப்பி என்று இரண்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் மாற்றங்களால், அதிர்வுகளால் பல்வேறு மாற்றங்கள் மனித உடலிலும் எண்ணங்களிலும் எழுகின்றன. குறிப்பாக பீனியல் சுரப்பி அதிகமாகச் சுரப்பின் ஈ.எஸ்.பி., டெலிபதி, வருங்காலம் உரைத்த போன்ற ஆற்றல்கள் பெருகக் காரணமாகின்றன” என்று கூறினார்.
இந்த பீனியல் சுரப்பியின் உற்பத்தி நமது நெற்றியின் புருவ மையத்தைத் தூண்டினால் அதிகமாகிறது என்பதும், அதனாலேயே நமது இந்திய யோகிகள் அந்தப் புருவ மத்தியாகிய ஆக்ஞா சக்கரத்தை மையமாக வைத்து தியானம், யோகம் போன்றவற்றைச் செய்து வந்தார்கள் என்பதும் மிக முக்கியமான விஷயமாகும். நாம் நமது மூளையில் சுமார் 8% பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறோம். மீதிப் பகுதிகளையும் தூண்டி, நாம் பயன்படுத்த ஆரம்பித்தோமானால் ஈ.எஸ்.பி மட்டுமில்லாமல், பல்வேறு ஆற்றல்களும் கைவரப் பெற்றவர்களாவோம் என்பது உண்மை.
இனி ஒரு ஈ. எஸ். பி. சம்பவத்தைப் பார்ப்போம்.
இங்கிலாந்து நகரத்தில் உள்ளது லங்காஷயர் விகான் என்ற பகுதி. இங்குள்ள சிறப்பு பொருந்திய நகரம் ஆதர்டன். இங்கு ஜெம்மா – லியேனே ஹூட்டன் என்ற இரட்டைச் சகோதரிகள் வசித்து வந்தனர். இருவரும் ஒருவர் மீது மிகுந்த அன்பு உடையவர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வார்கள், வருவார்கள்.
இரட்டைச் சகோதரிகள்
அது மார்ச் மாதம், 2009ம் ஆண்டின் ஒருநாள்… மாடியறையில் குளித்துக் கொண்டிருந்தாள் லியானே. வீட்டின் கீழ்ப்பகுதியில் ஏதோ வேலையாக இருந்தாள் ஜெம்மா. அப்போது ஜெம்மாவுக்கு திடீரென ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது – ”லியானே ஏதோ பெரிய ஆபத்தில் இருக்கிறாள். உடனடியாகச் சென்று அவளைக் காப்பாற்ற வேண்டும்“ என்ற குரல் தன் மனதுக்குள் ஒலிப்பதாகத் தோன்றியது.
பதட்டத்துடன் மாடியை நோக்கி ஓடினாள் ஜெம்மா. உள்ளே லியானே நீர்த் தொட்டிக்குள் விழுந்து, தன்ணீரில் மூழ்கியபடி மயக்கமாகக் கிடந்தாள். அவள் உடல் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது.
லியானேவுக்கு வலிப்பு நோய் உண்டு. அது அவ்வப்போது தலை காட்டும். அதனால்தான் இப்போதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்த ஜெம்மா, உடனடியாக அவளை நீரிலிருந்து எடுத்து, தனக்குத் தெரிந்த ஆரம்ப கட்ட முதலுதவிகளைச் செய்து பின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாள். டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கண் விழித்தாள் லியானே.
ஜெம்மா மட்டும் சரியான சமயத்திற்கு அவளுக்கு முதலுதவி அளித்து இங்கே அழைத்து வராவிட்டால் லியானேவைக் காப்பாற்றியிருக்கஏ முடியாது என்கிறார் சிகிச்சை அளித்த டாக்டர் ஸ்டீவ் பியர்சன்.
”ஆம். எனக்குள் ஏதோ ஓர் குரல் ஒலித்தது. ’லியானேவுக்கு ஆபத்து. அவள் உன் உதவியை எதிர்பார்க்கிறாள்’ என்று. சந்தேகப்பட்டு நான் சென்று பார்த்தபோது தொட்டியில் தண்ணீருக்குள் மூழ்கியபடி அவள் இருந்தாள். முதலில் அவள் தலையை அலசிக் கொண்டிருக்கிறாள் அல்லது ஏதேனும் விளையாட்டு செய்து கொண்டிருக்கிறாள் என்று தான் நான் நினைத்தேன். ஆனால் உடலில் எந்த அசைவுமில்லை. மெல்ல மெல்ல உடலும் நீல நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. மிக மிக ஆபத்தான நிலையில் அவள் இருந்தாள் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. எப்படியோ விரைந்து செயல்பட்டு இறைவன் அருளால் அவளைக் காப்பாற்ற முடிந்தது” என்கிறாள் ஜெம்மா.
இது போன்ற சம்பவங்களை ஆராய்ந்து வரும் டாக்டர் லின்னே செர்காஸ் கூறுகிறார். “டெலிபதி எனப்படும் இவ்வித உள்ளுணர்வு இரட்டைப் பிறவிகளிடம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இவர்களில் பல பேருக்கு உள்ளுணர்வுகள் ஒத்துப் போகின்றன. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க முடியாமல் எங்கோ வெகு தொலைவில் இருந்தாலும் இந்த டெலிபதி உள்ளுணர்வு மிக தீவிரமாகச் செயல்படுகிறது. அதில் எந்தத் தடையும் இருப்பதில்லை” என்கிறார்.
இரட்டைப் பிறவிகளில் ஒருவர் நோயுற்றால் மற்றவருக்கும் நோய் வருவதும், ஒருவர் உள்ளம் சோர்ந்தால் மற்றவரும் அது போன்று சோர்வடைவதும் இது போன்ற காரணங்களினால் தான் இருக்கும் என்கின்றனர், சில ஆராய்ச்சியாளர்கள்.
Lyon Playfair என்ற ஆராய்ச்சியாளர் இது பற்றி ஆய்வு செய்து, Twin Telepathy: The Psychic Connection என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் இது பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார்.
அதுசரி, உங்களுக்கு ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் இருக்கிறதா?

வியாழன், 7 மே, 2015

பிரச்சனம் ஜோதிடம்

தாம்பூலம் பிரச்சனம்
பிரச்சனம் என்றால் என்ன?
கேள்வி கேட்டு பதில் சொல்வது பிரச்சனம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க பிரசன்னம் மூலம் தீர்வு காணலாம்.
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரச்சனைகளை வரும் நேரத்தின் அடிப்படையில் லக்கினம் கணித்து கிரக நிலைகளைக் குறித்து பலன் கூறுவார்கள்.
சிலர் சோழிகளை பயன்படுத்தி பிரசன்னம் கூறுவார்கள்.
சிலர் 108க்குள் ஒரு எண்ணைக் கூறி அதன் அடிப்படையில் பிரசன்னம் கூறுவார்கள்.
சில சோதிடர் வரும் நேரத்தில் உள்ள பஞ்சபட்சி அடிப்படையில் பலன் கூறுவார்கள்.
சில ஜோதிடர்கள் சந்திரக்கலை,சூரியகலை என நாடியின் அடிப்படையில் பலன் கூறுவார்கள்.
இவைகள் எல்லாம் கூறுவதற்கு மிகமிக ஜோதிட அறிவு வேண்டும். ஆனால் எளிமையாக மக்கள் புரியும்படி பலன் கூறுவது தாம்பூல பிரசன்னம். இது கேரளாவில் பிரபலமானது. அடிக்கடி பயன்படுத்தி பலன் கூறுவார்கள்.
தாம்பூல பிரசன்னம்:
அமர கோசம் நூலின் கருத்துப்படி தாம்பூலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை கொடி நாகலோகத்தில் உண்டானது அதற்கு நாகவல்லி என்று பெயர்.அது மகா லட்சுமி அம்சமாகும்.
தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் இவை இரண்டும் சிவபெருமனைக் குறிக்கும்.
வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனைக் குறிக்கும்.
ஜோதிட வல்லுநர்கள் 6 அங்குல நீளம் 2 அங்குல உள்ள வெற்றிலையின் அடிப்படையில் பிரச்சனைக்கு உரிய பதிலைக் கூறுகிறார்கள்.
தாம்பூல பிரசன்னம் பார்க்கும் விதம்:
முதலில் பிரசன்னம் பார்க்க வருபவரிடம் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கற்பூரம் ஊதுபத்தி வாங்கிவரும்படி கூறவும்.
குறிப்பு : வெற்றிலை வாங்கிவரும்பொழுது 12 வெற்றிலைக்கு மேல் வேண்டும். எனவே ஜோதிடர் வெற்றிலையின் விலையை அறிந்து வாங்கி வரும்படி கூறவும்.
1) இவைளை வாங்கி வந்தவுடனே பிரசன்னம் பார்க்க வந்தவரிடம் அவருடைய குலதெய்வம், வண்ங்கும் தெய்வத்தை வணங்கிக் கொள்ளும்படி கூறவும்.
2) பிறகு ஜாதகர் கொண்டுவந்த வந்த வெற்றிலையின் எண்ணிக்கையை முதலில் இரண்டால் பெருக்க வேண்டும்.
3) பெருக்கி வந்த தொகையை 5ஆல் பெருக்க வேண்டும்.
4) பெருக்கி வந்த தொகையுடன் 1யை கூட்டிக் கொள்ள வேண்டும்.
5) வரும் மொத்த தொகையை 7ஆல் வகுக்க வேண்டும். வரும் மீதி……….
1 எனில் சூரியன்
2 எனில் சந்திரன்
3 எனில் செவ்வாய்
4 எனில் புதன்
5 எனில் குரு
6 எனில் சுக்கிரன்
7 எனில் சனி எனக்கொள்ள வேண்டும்.
இது என்ன சித்திர குப்தர் கணக்கு என யோசிக்கிறீர்களா?
(வெற்றிலையின் எண்ணிக்கை) எண்ணை 2ஆல் பெருக்க வேண்டும். பின்பு அத்தொகையுடன் 1யை கூட்ட வேண்டும்.இதுஏன்? என வாசகர்கள் மனதில் ஐயம் ஏற்படும். அதற்கான பதில் இதோ.
ஒரு குழந்தை பிறக்க, தாய், தந்தை ஆகிய இருவர் இணைய வேண்டும். எனவே தான் பிரசன்னம் பார்ப்பவர் கொண்டுவரும் வெற்றிலையின் எண்ணிக்கையை 2ஆல் பெருக்கிறோம்.
பின்பு இந்த உடல் 5 பூதங்களால் ஆனது என்பதைக் குறிக்க 5ஆல் பெருக்குகிறோம்.
பின்பு இந்த உடல் ஆண், பெண் இணைந்து பஞ்ச பூதங்களால் ஆன பின்பு மனிதனாக பிறக்கிறது என்பதைக் குறிக்க 1யைகூட்டுகிறோம்.
பிறகு, அந்த மொத்த எண்ணிக்கையை ஏழு கிரகங்களைக் குறிக்கும் எண்ணாகிய 7ஆல் வகுக்கிறோம். வரும் மீதியானது பிறந்த குழந்தையின் ஆத்மா கிரகமாகும். அது உள்ள இடமே லக்னம் அல்லது தாம்பூல லக்னம் ஆகும். அவ்வாறு மொத்த எண்ணிக்கையை 7ஆல் வகுத்து வரும் மீதி, தாம்பூல கிரகமாகும்.
சூரியன் என்றால் துக்கமும், சந்திரன் எனில் சுகமும், செவ்வாய் எனில் கலகமும், புதன் & குரு எனில் பணமும்;(புதன்-செய்யும் தொழிலின் மூலம் பணமும் குரு-ஞானம், ஆன்மீகப் பணி மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும்).
சுக்கிரன் எனில் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
சனி எனில் கண்டங்கள், தடங்கல்கள் ஏற்படும் .மாந்தியுடன் சேர்தால் மரணம் எற்படும்.
அடுத்து இந்த தாம்பூலம் கிரகம் உள்ள இடமே தாம்பூல லக்னம் எனப்படும். அதை எப்படி அறிவது?
பிரசன்னம் பார்க்க வந்தவர், வந்த நேரத்தில் பஞ்சாங்கத்தின் உதவியால் கிரகங்களைஉள்ள நிலையை கட்டத்தில் குறித்துக் கொள்ளலாம். பிரசன்னம் பார்க்க வந்தவர் நேரத்தின் அடிப்படையில் ராசிக்கட்டத்தில் கிரகங்களை குறித்துவிட்டோம். இனி பலன்கள் கூற வேண்டும். அதை எவ்வாறு செய்வது எனக் காண்போம்.
தாம்பூல பிரசன்ன பலன் கூறும் முறை:
1. பிரசன்னம் கேட்க வரும் நேரத்தில் அடிப்படையில் வெற்றிலையை எடுத்து பலன்கள் கூறுவோம்.
2. பிரசன்னம் கேட்க வரும் நாளில் சூரிய உதயம் + சூரிய அஸ்தமனம்= வரும் மொத்த நேரத்தை 2ஆல் வகுத்தால் கிடைப்பது அந்த நாளில் மத்திய பாகம் ஆகும்.
எடுத்துகாட்டு:
` கிருஷணகிரியில் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 11 மணிக்கு ஒருவர் பிரசன்னம் பார்க்க வருகிறார்.
ஆகஸ்ட் 21 சனி சூரிய உதயம் காலை 6.09 மணி
சூரிய அஸ்தமனம் (அதாவது மாலை 6.31) 18.31 மணி
மொத்தம் 24.40 மணி
மத்திய பகுதி (24.40/2)=12.20 மணி
எனவே, காலை 11 மணிக்கு பிரசன்னம் பார்க்க வருபவரிடம் கொண்டு வந்த வெற்றிலையின் மேல்பகுதியிலிருத்து முதல் 12 வெற்றிலையின் அடிப்படையின் 12 பாவங்கட்கும் பலன்கள் கூற வேண்டும்.
வருபவர் மாலை 3 மணிக்கு வந்தால் அடிப்பகுதியிலிருந்து 1,2,3…………………….12 என ஒவ்வொரு வெற்றிலைகளாக எடுத்து பலன்கள் கூற வேண்டும்.
ஏன் 12 வெற்றிலையை வைத்து மட்டும் பலன் கூறுகிறோம்?
ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளதால் 12 வெற்றிலையின் அடிப்படையில் ஜாதகப்பலன்கள் கூறுகிறோம். அந்த பாவங்கள் 12ம் எதைக் குறிக்கிறது என அறிந்தால் தான் பலன்களை எளிதாக கூற இயலும்
வெற்றிலையை ஆராய்ந்து பலன் கூறும் விதம்:
1. வெற்றிலையின் மொத்த எண்ணிக்கை 24க்கு மேல் எனில்,பூர்வீக இடத்தை விட்டு வந்து இங்கு 2 தலைமுறையாக வாழ்கிறார்கள்.
2. அடிப்பாகம் பெரிய நரம்பு உள்ள பகுதி துவாரம் :கர்ப்பிணி பெண் மரணம்.
3. நடுவில் துவாரம் : துர்மரணம் அடைந்த பிரேத தோஷம் உண்டு.
4. தாம்பூலம் கிழிந்து இருந்தால் : பூர்வ புண்ணியம் தோஷம் உண்டு. இறந்த பிரேத தோஷம் – சர்ப்ப தோஷம்.
5. நுனிப்பகுதி கிழிந்திருந்தல் : தோஷம் அப்பகுதிக்கு
6. பலன் கூறும்பொழுது பாதகாதிபதி தொடர்பு எந்த பாவத்திற்கு வருகிறதோ அது பாதிக்கும்.
சர ராசிகளான பாதக இடம்
மேஷம் கும்பம்
கடகம் ரிஷபம்
துலாம் சிம்மம்
மகரம் விருச்சிகம்
11ம் இடம். பாதகமாகும்
7.ஸ்திர ராசிகட்கு 9 ம் இடம் பாதகமாகும்
ராசி பாதக இடம்
ரிஷபம் மகரம்
சிம்மம் மேஷம்
விருச்சிகம் கடகம்
கும்பம் துலாம்
8.உபய ராசிகட்கு 7ம் பாதக இடம்
ராசி பாதக இடம்
மிதுனம் தனுசு
கன்னி மீனம்
தனுசு மிதுனம்
மீனம் கன்னி
எடுத்துகாட்டு:
7-2-2004ம் தேதி காலையில் ஒருவர் 17 வெற்றிலைகளைக் கொண்டு வந்து தந்தார்.
மொத்த வெற்றிலையின் எண்ணிக்கை : 17
பெற்றோரைக் குறிக்கும் 2ஆல் பெருக்க : 17*2=34
பஞ்சபூதத்தைக் குறிக்கும் 5ஆல் பெருக்க :34*5=170
ஆன்மா 1யைக் கூட்ட : 170+1=171
7 கிரகங்களுக்கு பங்கிட :171/7=24 ஈவு, மீதி 3
மீதி 3க்கு உரிய கிரகம் :செவ்வாய்
அது உள்ள ராசி மேஷம்.எனவே பிரசன்ன தாம்பூல ஆருட லக்கினம் செவ்வாய் உள்ள வீடு மேஷம் ஆகும்.
அன்றைய கிரக நிலைகள்:
பிரசன்னம் கேட்பவர் காலையில் வந்ததால் மேல் உள்ளா வெற்றிலையை எடுக்க
முதல் பாவம் :உடல், வாக்கு, உருவம், சுபாவம், சுகதுக்கங்களைக் குறிக்கும்.
முதல் வெற்றிலை நிலை : சிறியது – அடியில் கறுப்பு – ஓட்டை.
எனவே, ஜாதகர் உடல் நிலை பாதிக்கலாம். ஜாதகப்படி லக்னத்த்பில் அதிபதி செவ்வாய் ராகுவுடன். எனவே பாதிப்பு இல்லை. ஏன்? குரு பார்வையால் அது போகும்.
2ம் பாவம் : தனம், குடும்பம், வாக்கு, வித்தை அதில் ஓட்டை, அழுக்கு,எனவே தோஷம் உண்டு.
2ம் வீட்டு அதிபதி 12ல் உள்ளார். அவரை 11ம் அதிபதி பாதகாதிபதி சனி பார்க்கிறார்.மேலும் சனி வீட்டில் –மாந்தி 11ல்.எனவே,பிரேத தோஷம் உண்டு. மனைவியால் சுகம் இல்லை. கல்விக்கு விரயம். இடமாற்றம்.
3ம் பாவம் : சகோதரம், வீரம், பாக்கியம், சிறிய பயணம்
வெற்றிலையில் ஓட்டை. நல்ல பலன் இல்லை. எப்படி? மேஷத்திற்கு 11ம் அதிபதி சனி 3ல் உள்ளார். எனவே சகோதரர்களால் நன்மை இல்லை.
4ம் பாவம்: மாதா, சுகம், வாகனம், மன நிம்மதி.
4வது வெற்றிலையில் ஓட்டை நல்ல பலன் இல்லை. ஏன்?
4ம் வீட்டை செவ்வாய் பார்க்கின்றார்.3,6க்குடைய புதன் 4ம் வீட்டை பார்க்கின்றார்.5ம் வீட்டின் அதிபதி சூரியன் 4ம் விட்டை பார்க்கின்றார்.4ம் அதிபதி சந்திரனை பாதகாதிபதி சனி பார்க்கின்றார்.
மாந்திக்கு 2,7,12 பார்வை உண்டு.
எனவே,மாதாவால் கடன் உண்டு. அலைச்சல் உண்டு.
5ம் பாவம்: புத்தி – அறிவு – விவேகம் – பூர்வ புண்ணியம் – குழந்தை – பங்கு மார்க்கெட் – காதல்
வெற்றிலையில் நுனி இல்லை – அப்பளம் போல் உள்ளது.
எனவே 5ம் அதிபதி 10ல் பகை வேட்டில் 3ம்ற்றும் 6க்கு உடைய புதன் உடன்.எனவே புதல்வர்களால் பலன் இல்லை.ஆனால் 9,12க்குரிய குரு இருப்பதால் விரய செலவு உண்டு.
6ம் பாவம்: ரோகம் – கடன் – சத்ரு
வெற்றிலை நன்றாக உள்ளது.
6ம் அதிபதி சனி வீட்டில் சூரியனுடன் தொழில் செய்ய கடன்பட்டிருப்பார்.
நண்பர்களுக்காக கடன்பட்டிருப்பார்.
தாய்மாமனுக்கு கடன்பட்டிருப்பார்.
7ம் பாவம் : மனைவி
7ல் கேது வெற்றிலையில் கரும்புள்ளி. மனைவியால் சுகம் இல்லை.மனச்சங்கடம்.
8ல் பாவம்: ஆயுள் – நஷ்டம் – விபத்தைக் குறிக்கும்.
வெற்றிலையில் கரும்புள்ளி .எனவே நோய்ப்படுவான்.விபத்து உண்டு – சாக மாட்டான்.ஏன்? 8ன் அதிபதி செவ்வாய் ஆட்சி 9ம் அதிபதி – பூர்வபுண்ணிய அதிபதி – குரு பார்வை உள்ளது.
9ம் பாவம்: பாக்கியம் – தருமம் – புண்ணிய காரியங்கள் – தந்தை நிலை.
வெற்றிலை நிலை : மத்தியில் ஓட்டை
கிரக நிலைகள் :சனி,குரு பார்வை. குரு பார்வை நன்று.ஆனால் பாதகாதிபதி சனி நல்லதை செய்யமாட்டார்.எனவே தந்தையால் உதவி இல்லை.மேலும் பாதகாதிபதி வீட்டில் மாந்தி.பிரேத தோஷம் உண்டு.
10ம் பாவம் : தொழிலைக் குறிப்பது.
வெற்றிலை நிலை : அடியில் ஓட்டை – 3ஓட்டைகள் – கிழிசல்.
கிரக நிலைகள் : பாதகாதிபதி சனி. அவரது வீட்டில் 6,3 வீட்டு அதிபதி புதன்.5ம் வீட்டு சூரியன் சனிக்கு பகை.அவர் 10ல். எனவே,கடன்ப்ட்டு வணிகம் செய்து இழப்பு.
கிழிதல் : பணத்திற்கு சண்டை ஏற்படும்.சனி வீட்டில் மாந்தி.பிதுர்வகை பிரேத
தோஷம் உண்டு.ஏன்? குளிகன் அல்லது மாந்திக்கு 12ம் பார்வை 10ல் படுகிறது. எனவே பாட்டன்களுக்கு கர்மம் செய்யவில்லை. அதனால் தோஷம்.
11ம் பாவம் : குறிப்பது லாபம் – மூத்த சகோதரர் – ஆசைகள் நிறைவேறல்.
வெற்றிலை நிலை : வளைந்து உள்ளது. ஓட்டை உண்டு.
பலன் : கெட்டது. லாபம் இல்லை. ஆசைகள் நிறைவேறாது.
கிரக நிலை : 11ல் மாந்தி. 11க்கு உரியவர் 3ல் உள்ளார்.
11ல் மாந்தி : பிரேத தோஷம். யாருடைய பிரேதம்? சகோதரர். உடையது. ஏன்? 3ல் 11க்கு உடையவர் உள்ளார். 3ல் மறைகிறார். எனவே ஒரு சகோதரர் பிரேதம் தோஷம் உண்டு.
12ம் பாவம் : குறிப்பன மோட்சம். இடது கண், குடும்ப செலவு, மருத்துவ செலவு.
வெற்றிலை நிலை : ஓட்டை, கிழிதல்
பலன் : அளவுக்கு மேல் குடும்ப செலவு – மருத்துவ செலவு.
கிரக நிலை : 12ல் 2க்குரிய சுக்கிரன். 3ல் உள்ள சனி பார்வை. எனவே மனைவிக்கு மருத்துவ செலவு. சகோதரர்களுக்கு செலவு. தொழில் செய்ய செலவு ஏற்படும்.
குறிப்பு : வெற்றிலையை வாங்கி வரும் நேரத்திற்கு ஏற்ப பலனை உடனே அறியலாம்.
எடுத்துகாட்டு : குரு ஓரை, சனி அந்தரம். குரு மகனை குறிப்பவர். சூரியன் தந்தை. எனவே சனி அந்தரம் – மகன்களால் தொல்லை ஏற்படும்.
(எ.கா) சுக்கிரன் ஓரை – சூரிய அந்தரம்.
மனைவியால் அவமானப்படல்
என்ன வாசகர்களே ! வெற்றிலை பிரசன்னம் எளிது தானே !
இதில் மாந்தியை குறிக்க வேண்டும்.
மற்ற கிரகங்களையும், சந்திரனையும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக் குறிக்கலாம்.
மாந்தி உதயமாகும் நேரம் பஞ்சாங்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய சூரிய உதயம் மணி முதல் கீழ் கானும் நேரங்களைக் கூட்டிக்கொள்ள வேண்டும்
திங்கள் 22 நாழிகை அல்லது 8 மணி 48 நிமிடங்கள்
செவ்வாய் 18 நாழிகை அல்லது 7 மணி 12 நிமிடங்கள்
புதன் 14 நாழிகை அல்லது 5 மணி 36 நிமிடங்கள்
வியாழன் 10 நாழிகை அல்லது 4 மணி 00 நிமிடங்கள்
வெள்ளி 6 நாழிகை அல்லது 2 மணி 24 நிமிடங்கள்
சனி 2 நாழிகை அல்லது 00 மணி48 நிமிடங்கள்
இரவுக்கு அன்றைய பகலின் உதய நாழிகை (மணி) 5வது நாள் இரவுக்கு வரும்.
எடுத்துகாட்டு :
ஞாயிறு பகலில் மாந்தி உதயமாகும் நேரம் 26 நாழிகை (10 மணி 24 நிமிடங்கள்) இரவுக்கு ஞாயிறுவின் 5வது நாள் வியாழனுடைய 10 நாழிகை (4 மணி) வரும்.
எளிய முறை :
சூரிய ஸ்புடம் + மாந்தி உதய நாழிகை * 6 எடுத்துக்காட்டு.
சூரிய ஸ்புடம் = 160.15
சனிக்கிழமை மாந்தி உதயம் = 2 நாழிகை
எனவே மாந்தி உதயம் = 6 * 2 =12 நாழிகை
சூரிய ஸ்புடம் + மாந்தி உதயம் = 160.15+12 =172.15 தான் மாந்தி பகலில் . உள்ள இடம்
இத்துடன் 30 யைக் கூட்டினால் மாந்தி இரவில் உள்ள ராசி ஆகும்.
எனவே, இவ்வாறு தாம்பூல பிரசன்னம் மூலம் பலன்களை அறியவும்.
தாம்பூல பிரசன்னம் மூலம் கீழ்கண்ட செய்திகளை எளிதாக அறியலாம்.
வெளிநாடு போக :
1. 4க்கு உடையவர் சர ராசியில் இருக்க வேண்டும்.
2. 4க்கு உரியவர் ஜல ராசியில் இருக்க வேண்டும்.
3. 10,4க்கு உடையவர் சம்பந்தம் இல்லையா? ஊரை விட்டு போவார்.
இதே போல் நவாம்சம் பார்க்க வேண்டும்.
திருமணம்
7ம் இடம் சுக்கிரன் நிலையைப் பார்.
வீடு கட்ட
4 & 7 க்கு உடையவர் னிலை
வேலை
10க்கு உரியவர் நிலை
காரகர் : குரு, சனி, சூரியன், செவ்வாய் நிலை.
பணம் கிடைக்குமா?
2 & 1ம் இடம்
7ம் இடம் நிவர்த்தி ஸ்தானம்
பரிகார பலன் அறிய : 10ம் இடம்
7ம் இட அதிபதி நன்கு இருந்தால் :வெற்றி
பிரிவினை : 7 & 8 சந்திரன் நிலை
தாம்பூல பிரசன்னம் மூலம் கோவில் செய்திகள் அறிதல்
30.07.2004 வெள்ளி ஆடி 17 அன்று மதுரை அருகே ஒரு கோவிலில் தாம்பூல பிரசன்னம் போடப்பட்டது. அன்று கிரக நிலைகள் அருகே உள்ளவாறு இருந்தன.
கொண்டு வந்த தாம்பூலத்தின் எண்ணிக்கை 10
எனவே 10 * 2 = 20
பஞ்சபூதங்கள் 5ஆல் பெருக்க = 20 * 5 =100
ஆன்மா 1யை கூட்ட = 100 + 1 = 101
அதை நவக்கிரகங்கள் 7ல் வகுக்க = 101/7 =14 3/7 =மீதி 3.
எனவே,
தாம்பூல கிரகம் 3ம் எண்ணுக்குரியவர் செவ்வாய். செவ்வாய் உள்ள ராசி கடகம். எனவே கடகம் தாம்பூல லக்னம் ஆகும்.
கோவில் பிரசன்னத்தின் பலன்கள் :
கோவில் பிரசன்னத்தின் முதல் பாவம் குறிப்பது :
கோவில் பூர்வீகம் – சிலை - வடிவம்
வெற்றிலை தந்த நேரம் :
காலை 11.26 மணி. எனவே, மேல் இருந்து வெற்றிலையை எடுத்தார்.
வெற்றிலை நிலை :
சில ஓட்டைகள் காணப்பட்டன.
கிரக நிலைப்படி பலன்கள் :
ஆருட லக்னத்தில் சூரிய பகவான் சிவனை குறிப்பவர். ஆனால் சூரியனுடன் செவ்வாய் நீசம். கடக ராசி, நீர் ராசி, செவ்வாய் 5 மற்றும் 10ம் உரியவர். சூரியன் மேஷத்தில் உச்சமாவார்.
எனவே இங்கு பூர்வீகத்தில் ஓர் அம்மன் கோவில் இருந்தது எனக் கூறியவுடனே மக்கள், “ஆம், இருந்தது” எனக் கூறினார்கள்.
அது தென்கிழக்கு எல்லையில் இருந்தது. ஆற்று பக்கம், கிணறு, குளம் இருந்து மூடப்பட்டது.
லக்னத்தில் செவ்வாய். எனவே ஆரம்பத்திலிருத்து இந்த கோவிலுக்காக சண்டை, தகராறு, கோஷ்டி பூசல் இருந்த்து. செவ்வாய் 5ம் வீட்டிற்கு அதிபதி. அவர் நீசம். எனவே ஆதியில் இருந்த மூலஸ்தானம் மாற்றப்பட்டதா?
மக்களின் பதில் :
முதலில் சிவன் கோவில் இருந்தது. இறைவன் பெயர்
திருமேனிநாதன். பின்பு அம்மன் கோவில் ஆனது. அது 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.
லக்னத்தில் 2ம் அதிபதி சூரியன் உள்ளது. ஜல ராசி. எனவே கீழே விழுந்து தேவதை தலையில் அடிப்பட்டது.
சூரியன் 10ல் மேஷ ராசியில் உச்சம். எனவே, ஒரு காலத்தில் சிறப்பாக கோவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
எனவே, 5,10க்குரிய செவ்வாய் நீசம். உடன் சூரியன், சூரியன் மேஷத்தில் உச்சம். எனவே ஆரம்பத்தில் சிவன் கோவில் – பின்பு செவ்வாய் நீசமானதால் அம்மன் கோவில் – மேஷத்தில் ராகு – அம்மனைக் குறிக்கும்.
2ம் வீடு : கோவில் நிர்வாகம் – வரவு – உண்டியல் – பூமாலை –அலங்காரங்கள்
வெற்றிலை நிலை : ஓட்டை இருக்கிறது. எனவே வரவு இல்லை.
கிரக நிலைப்படி : 2ல் மாந்தி -2ம் அதிபதி சூரியன் 12ல் எனவே வருமானம் இல்லை. சூரியன் அரசை குறிப்பதால் வருமானத்தை அரசு அதிகாரிகள் எடுத்துச் செல்கிறார்கள்.
3ம் வீடு குறிப்பது : நைவேத்தியம் – பாரிகாரகர்கள் –கோவில் நடத்தும் சிப்பந்திகள் மற்றும் சுத்தம் செயிபவர்கள் அதாவது வேலை ஆட்கள்.
வெற்றிலை நிலை : ஓட்டை (அ) துவாரம் உள்ளது. சுவாமிக்கு பிரசாதம், படையல் ஒழுங்காக செய்து படைக்கவில்லை.
கிரக நிலை : 3ம் அதிபதியுடன் மாந்தி உள்ளார்- எனவே நைவேத்திஉயம் இல்லை.3ம் இடம் மடப்பள்ளியில் தயாராகும் நைவேத்தியம் சுத்தம் இல்லை.
4ம் பாவம் : பிரகாரம் – கொடி மரம் – வாகனம் – உப தேவதைகள் மண்டபம் –சாமரம்
வெற்றிலை நிலை : மேல் தூசு படிந்துள்ளது – துவாரம். எனவே உப தேவதைகள் சிறப்பாக இல்லை
கிரக நிலை : 4ல் உள்ள கிரகம் கேது. செவ்வாய் பார்க்கிறார். கேது உள்ளதால் பிரேத தோஷம் உண்டு. பசு, பூனைக்குட்டி இறப்பு உண்டு.
பைரவர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பைரவர் தெற்கு முகமாக இருக்க வேண்டும். ஆனால் வடக்கு முகமாக உள்ளது.
தண்ணீர் – நீர் கிணறு அசுத்தம் உண்டு – குளத்தில் / கிணற்றில் குழந்தை விழுந்து இறந்த்து.
செவ்வாய் 4யை பார்த்தால் சண்டை, சச்சரவு உண்டு.
5ம் பாவம் :
மூல மந்திரங்கள் – சிலை – தேவதைகளைக் குறிக்கும்.
வெற்றிலை நிலை :
பல விக்கரகங்கள் பின்னப்பட்டுள்ளன – விரிசல்கள் உண்டு. மந்திரங்களை பூசாரி தெரியாமல் கூறுகிறார். பூசாரிகளுக்குள் கலகம். வேலைக்காரர்கள் இடையே கலகம்.
6ம் பாவம் : உண்டியல், கோவில் சொத்தை திருடுபவர் – சிலைகளுக்கு தீங்குவிளைப்போர் – கோவிலில் ஏற்பட்டுள்ள அசுத்தம்
வெற்றிலை நிலை:
அங்கங்கு துவாரங்கள் தேவதைக்குரிய நிலங்கள் அபகரிப்பு. திருட்டு ஏற்பட்டுள்ளது.
கிரக நிலை :
குரு பார்வை உள்ளதால் இன்னும் கோவிலுக்கு சொத்து உண்டு.
7ம் பாவம் :
கோவிலுக்கு வாங்கும் நகைகள் – துணிகள் – திருவிழாக்கள் – மக்கள் காணிக்கைகள்.
வெற்றிலை நிலை :
துவாரங்கள். எனவே, திருவிழாக்கள் இல்லை. மக்கள் காணிக்கைகள் இல்லை – வரவு இல்லை
8ம் பாவம் :
நைவேத்தியம் – வாத்தியம் வாசிப்பவர் – கோவில் மேற்பார்வையாளர் செய்யும் செயல்கள் – கோவிலுக்கு வருபவர் மனப்பான்மை.
வெற்றிலை நிலை :
2 துவாரங்கள் உண்டு. 8ம் இடம் கும்பம். அதிபதி சனி லக்னத்திற்கு 12ல். ராசிக்கு 6ம் அதிபதி புதன் தன் ராசிக்கு 12ல்.
ஒரு சித்தர் உபாசனை செய்த வன துர்க்கா தேவி உள்ளது
9ம் பாவம் :
கோவில் அமைப்பு – கோவிலுள்ள கோபுரங்கள் – கோவில் நிலங்கள் – மரம் – வருமானத்தைக் குறிக்கும் – கோவில் வரலாறு.
கிரக நிலை :
9ம் அதிபதி குரு 2ல் மாந்தியுடன். எனவே ஒரு காலத்தில் இந்த கோவிலில் பிராமணர் பூஜை செய்து இருந்தார்கள். குரு, சூரியன் வீட்டில் இருப்பதால் பின்பு அரசாங்கத்திற்கு இக்கோவில் சொந்தமானது. பிராமணரைக் குறிக்கும். குரு மாந்தியுடன் உள்ளதால் பிராமணரிடையே சண்டை ஏற்பட்டு வடக்கு போனார்கள்.
பின்பு செவ்வாய் லக்னத்தில் உள்ளாதால் படைத்தலைவர்கள், க்ஷத்திரியர்கள் ஆதிக்கத்தில் கோவில் வந்தது. பின்பு நம்பூதிரிகள் வந்து அரசர் அனுமதியுடன் பூஜை செய்தார்கள் ஏன்? லக்னத்தில் குரு உச்ச இடம் ஆவதால்.
10ம் பாவம் :
இது நித்திய பூஜை, உற்சவம், விழாக்களைக் குறிக்கும்.
10ம் வீட்டில் ராகு. 10ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம். எனவே பூஜை செய்ய தெரியாதவர் பூஜை செய்கிறார். திருவிழாக்கள் நடைபெறவில்லை.
வெற்றிலை நிலை : ஒட்டை
11ம் பாவம் :
கோவில் பண வரவு – பூசாரி செய்யும் பூஜை கோளாறு வெற்றிலை இல்லை
11ம் இடம் பாதக இடம் சந்திரன் ஆட்சி. எனவே, ஆரம்பத்தில் பண வரவு இருந்தது.
12ம் பாவம் :
பூஜை செய்பவன் மனநிலை – பண விரயம் – நஷ்டம் – கோவிலுக்கு ஏற்படும் குற்றம் குறைகள்.
12ம் இடம் மிதுனம். அதன் அதிபதி புதன் மாந்தியுடன் உள்ளார்.
12ல் சனி. எனவே, கோவில் சொத்து கோவிலுக்கு வரவில்லை.
தாம்பூல லக்னப்படி பலன்கள்
சூரியன் - அரச உதவி
சந்திரன் - தெய்வம்
செவ்வாய் - வழக்கு, வம்பு
புதன் - காரிய வெற்றி
குரு - தடங்கல், கடவுள் உதவி
சந்திரன் - வெற்றி
சனி - விபத்து
பிரச்சனைகள் தீர்க்க :
1, 5, 9ல் சுபர் ; 4ல் சுக்கிரன் ; 10ல் உள்ள அதிபதி நிலை குரு ஆருட லக்னத்திற்கு வரும்பொழுது பிரச்சனை தீரும்.
வேலை வாய்ப்பு :
10 – தொழில் ; 11 – வழக்கு வெற்றி ; 6 – ஐ.ஏ.எஸ்.அரசு பணி
எப்பொழுது முடியும்
சூரியன் - 30 நாட்கள்
சந்திரன் - 1 வாரம்
செவ்வாய் - 44 நாட்கள்
குரு - 1 மாதம்
சுக்ரன் - 27 நாட்கள்
சனி - 72 நாட்கள்
விதிகள் :
4,10 - சூரியன்
5,9 - குரு
1,4 - சுக்கிரன்
லக்னம் - புதன், சந்திரன்
சனி, செவ்வாய் - சிபாரிசு நிலை
ராகு, கேது - இல்லை
திருமணம் :
7ம் இடம் - விரும்பும் பெண்
4ம் இடம் - வெற்றி
10ம் இடம் - பெண் மணப்பாள்
சுபர் பார்வை - தேர்வு பெறும்
இழந்த பொருள் கிடைக்குமா?
தாம்பூல லக்னம் – அதிபர் உள்ள நிலைப்படி பலன்
வியாதி :
12ம் இடம் - வியாதி
வியாதி - 6
குணமாவாரா? - 10
பரிகாரம் - 5, 9
குழந்தை உண்டா?
யமகண்டன் + குளிகன் = அனுஷம் நட்சத்திரம்
கருக்கலைப்பு
5ம் அதிபதி குருவால் பார்க்கப்பட யமகண்டன் எனில் குழந்தை இல்லை.
யோக ஸ்புடம்
லக்னம் + எமகண்டம்
இது மனித ராசி = குழந்தை
இது ஆண் ராசி = ஆண்
இது பெண் ராசி = பெண்
இது அலி ஆனால் = கரு கலைப்பு (if see அலி)
யோக ஸ்புடம்
12ல் சூரியன்
4ல் சனி
6ல் குரு = குழந்தை
8ல் செவ்வாய்
9ல் கேது
நன்றி: ஜோதிடஅரசு பிப் 2006 இதழின் இனைப்பு:

பணம் வர தாந்திரிக ரகசியங்கள்


வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். நமது
வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும். அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும். வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும். பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான். பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும். பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

உண்மை !!!

மரணமடைந்தவுடன், அந்த
உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால்
கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக்
கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச்
செய்கிறார்கள்?
இறப்பு நேர்கிற நொடியில்
இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன்
பயனுள்ள வகையில்
இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம்
என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள்
சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம்
நெருங்குகிற வினாடியில்,
அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித
சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த
மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய்,
வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள்.
ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள்
இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர்
பிரியாது.
தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது
காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர்
உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண
சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும்
அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர்
உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால்,
உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர்
பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள்
நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச்
சுற்றிக்கொண்டு இருப்பது பயன்
தராது என்று அந்த உயிருக்குத்
தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில்
உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய
முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த
இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும்.
இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல,
வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின்
இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக்
கட்டப்படுவது. பொதுவாகவே மரணம்
நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத்
திறந்துகொள்கின்றன. அந்த நிலையில்
பின்புறத் துவாரம் திறந்திருக்கும்.
எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம்
வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த
உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன்
மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக்
கிரியைகள் செய்வதற்காக நீங்கள்
கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத்
துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும்.
இதையேதான் இறந்தவர்களுக்கும்
செய்கிறார்கள்.
எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த
உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின்
உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும்
முயலக்கூடும். மாந்திரீகப்
பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப்
பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல்
வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால்,
அது பிரிந்து சென்ற ஆன்மாவைப்
பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.
அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார்
என்று தெரிந்ததும் அவரின் கால்
கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக்
கட்டப்படுகின்றன!.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...