சனி, 28 மார்ச், 2015

குருவின்அருளை நிறைவாகப்பெற உதவும்சூட்சும இரகசியங்கள் !


குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரைஎன்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்துநான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின்குருவாக மாறினார்.
அத்துடன்திட்டையில்கோயில்கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன்
கிரகம்ராஜகிரகம்என்று அழைக்கப்படுகிறது.
இவர்இடம்பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி,தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன்என பதினெட்டு பெயர்கள்உள்ளன. இவரின்சொந்த வீடுகள்தனுசு மற்றும்மீனம். ஒளிபடைத்த ஞானிகளையும், மேதைகளையும்உருவாக்குபவர்இவர்.
மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின்
அடிப்படையில்தான்அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர் குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல்உண்டு.
அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி”
என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள்எனப்படும்.
பொதுவாக குருபகவான்ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில்சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின்படியும்கோசார பலன்கள்மாறுபடும்.
1ஒவ்வொருவரும் குரு பெயர்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் காரணம் ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற பெருமையும் அந்தஸ்தையும், அதிகாரத்தையும், பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி, வியாழன் என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருந்து போற்றப்படுகிறார்.
திருச்செந்தூரில் சூரனின் வரலாற்றை முருகப்பெருமானிடம் தேவர்கள் சார்பாக எடுத்துக் கூறியவர் குரு பகவான் என்பதாலும், முருகனே குருவிற்கெல்லாம் குருவாக இருப்பதாலும் திருச்செந்தூருக்கு குரு ஸ்தலம் என்கிற பெருமை ஏற்படுகிறது. எவர் ஒருவர் திருச்செந்தூருக்கு வாழ் நாளில் ஒரு முறையேனும் சென்று தரிசனம் செய்கிறாறோ அவருக்கு குரு அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது திண்ணம்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் என்று பார்த்தால் பொருட்செல்வமும், மழலைச் செல்வமும். இந்த இரண்டையும் தரும்
கிரகம் குருபகவான். குரு பலம் வந்துவிட்டதா திருமணம் செய்யலாம் என்று
கேட்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு குருவின் பெருமை உண்டு.
நம் ஜாதகத்தில் குரு பலமாக இருப்பதும் கோட்சார ரீதியாக குரு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் வரும் போது குரு பலம் வந்து விட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.
குருவின் காரகத்துவம் எனப் பார்க்கும் போது உடலில் குடல் பகுதி, மூக்கு,
கொழுப்பு, தொடை, வீட்டில் கடவுள் அறை, நீதிபதி, ஆசிரியர், வழங்குபவர், கல்வி அமைச்சர், மேலாளர், வழக்கறிஞர், கணக்காளர், கணக்காய்வாளர், வேதங்கள், கோயில்கள், தத்துவம், கடவுள், நீதிபதி, மரியாதை, உண்மை, பொறுமை, தன்னடக்கம்.
2
எல்லாவிதமான சுபம். பெரிய அளவிலான பணம். நேர்மை. சிந்தனை. சட்டபடியான ஆணை. பட்டு. பருத்தி. மஞ்சள்தொழில்கள். மிகப்பெரிய நிறுவனங்களின்கூலியாட்கள். கல்லீரல். தசைகள். மதகுருக்கள். தர்மகர்த்தாக்கள். திருப்பனி குழுக்கள். கோயில் ட்ரஸ்டிகள். எல்லாவற்றிலும் கவரவம் பார்ப்பவர்கள். திருப்தியற்ற மனிதர்கள்.
ரகசியமாக பகையை தீர்த்துக்கொள்பவர்கள், சந்தோஷம். குழந்தை. பூர்வீகம்.
ஆச்சார்யன். மதகுரு. விந்து. ஜீவன். பழங்கள். பாரம்பரியமிக்க. உணவுகள்.
வம்சம். முப்பாட்டன். பிராமணன். தங்கம். பட்டாடை ஆண்களுக்கு உயிர். மதம். மதத்தன்மை. எமபயம் நீக்கும். தசைகள். கல்லீரல். புற்று. வயிற்றுப் பகுதி நோய்கள். மஞ்சள்காமாலை. தட்சிணாமூர்த்தி. இருந்தாலும் பார்த்தாலும் சுபம்.
எல்லாவற்றிற்கும்உயிர், என ஒரு நீண்ட பட்டியல் கிடக்கிறது. ஒருவனின் முன்வினைக் கர்மப்படிதான் குரு அவனுடைய ஜாதகத்தில் வந்து அமர்வார். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல சேர்க்கை அல்லது பார்வை
பெற்றிருந்தாலும், அத்துடன் அஷ்டகவர்கத்தில் அதிகப்பரல்களைப் பெற்றிருந்தாலும், அவனுடைய முன்வினைகளில்குறைகள்ஏதும்இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
ஓராண்டு கால சஞ்சாரத்தில்! இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல
தசாபுத்திகள் நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.
இந்த குரு கவசத்தை வியாழன் தோரும் பாராயணம் செய்து உங்கள் ராசிக்கு
சொல்லியுள்ள பரிகாரங்களைக் கடை பிடித்து வந்தால் இந்த குரு பெயர்ச்சி நிச்சய நல்ன்களைத் தரும்.
குரு கவசம்
1.வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே! உன்னை தேனான
சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன் காணாத இன்பம்
யாவும் காண நீவழி வகுப்பாய் மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடதாகும்!
2.பொன்னிற முல்லையொடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய் மரத்தினில் அரசை ஏற்றாய்!
எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்! மண்ணினில்
3.பதினாறு ஆண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!
சுண்டல் நைவேத்யதால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ!
கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!
4. பொருளோடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம்ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும் !
5. பேரருள் கூட்ட வேண்டும்! அருள்மிகு குருவே உன்னை
அடிப்பணிந்து வணங்குகின்றேன்!
வருடம் ஓர் ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே தருகிற
பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுகொள்வோம் ! வருகிற நாட்கள்
எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே அருள்தரும் உனது பார்வை
அனுதினம் எமக்கு வேண்டும்!
6. குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்!
பொருள் வகை பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!
அருள் தர வேண்டி உன்னை அன்போடு துதிகின்றோமே!
ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின்அருளைப் பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை வழிபடுவதன்மூலம்குருவின்அருளைப்பெறலாம்.
· வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும்,
ஏழைகளுக்கும்தானம்செய்வதாலும், குரு பகவானின்அருளைப்பெறலாம்.
· ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.
· தாங்கள் படித்த பள்ளியின்ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின்அருளைப்பெறலாம்.
· வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக
உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில்அமைதியை நிலவச்செய்வார்.
· சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !
• மடப்புரம் தட்சிணா மூர்த்தி சுவாமிகளின் சமாதியில் வழிபாடு செய்தாலும்
குருவின் அருள் கிடைக்கும்.
• பெருவள நல்லூரில் (லால்குடி அருகில்) உள்ள நந்தி அடிகள் சமாதியில்
வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்.
• மந்திராலயம் ராகவேந்திரர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
அருள் கிடைக்கும்.
• ஷீரடி சாய் பாபா சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின் அருள்
கிடைக்கும்
• திருவண்ணாமலை ஸ்ரீ ஷேசாத்ரி சுவாமிகள் சமாதியில் வழிபாடு
செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்
• திருவண்ணாமலை ஸ்ரீ ரமணர் சமாதியில் வழிபாடு செய்தாலும் குருவின்
அருள் கிடைக்கும்
• வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு
வழிபாடு செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்
• திருவான்மியூரில் உள்ள ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சமாதியை வழிபாடு
செய்தாலும் குருவின் அருள் கிடைக்கும்
குரு வார விரதம்:
வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்தால்
எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும். ஏழ்மையில் இருப்பவர்களும்,
திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை
இல்லாதவர்களும் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை
வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள்.
நாம் வியாழன் தோறும் விரதம் இருந்து நமது பிரச்சனைகளை முன் வைத்து
சாயிபாபாவிற்க்கு விரதம் இருந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது
சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை
முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை
அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை
ஆரம்பித்து செய்யவேண்டும்.
தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது
ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள்,
அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப்
பயன்படுத்தலாம்.
ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ
ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை
நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில்மவுன விரதம்இருப்பது மிகவும்சிறந்ததாகும்.
குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின்ஆசிகள்ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.
முக்கியமாக வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், பிரியமுடனும் இருப்பது
பிரகஸ்பதியான, குருவான, பொன்னன் எனப்படும் வியாழனுக்கு உகந்ததாகும்.
அதன்மூலம்கிடைக்கும்ஆசீர்வாத பலம்விலைமதிப்பற்ற சொத்தாகும்.
மகேஸ்வர பூஜை:
திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்
மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க வைக்கும்
என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து அன்னதானம்
செய்து மகேஸ்வர காலமான 12 முதல் 1 மணிக்குள் சிவ பெருமானுக்கு
எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே சிவனடியார்களுக்குச்
செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை அறியாதார் யாரும் இல்லை.
ஆனால் சிவனடியார்களை அமர வைத்து அவர்களை சிவனாகவே பாவித்து
செய்யப்படும் அன்னதானத்தின் மகிமையை அனுபவித்து பார்த்தல்தான்
தெரியும். எந்த ஒரு லாப நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த
பூஜை செய்யப்படுகிறது. இது எல்லாப் பரிகாரங்களையும் விட மேலான
பரிகாரம் என்று எனது குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர்
சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள்.
அத்துடன் அடியேனிடம் இருக்கும் ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி அருள் வாக்கிலும் அடிக்கடி மகேஸ்வர பூஜையைப் பற்றி வருகிறது. எந்த காரியம் தடையாக இருந்தாலும், எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் இந்த மகேஸ்வர பூஜை நிவர்த்தி செய்து விடுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். யாருக்கு பிராப்தம் இருக்குமோ அவர்களே இதைப் படிக்க முடியும், பூஜையும் செய்ய முடியும்.
ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

திங்கள், 23 மார்ச், 2015

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்க ளானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.
இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.
ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.
குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.
வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம். நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே.
.நன்றி…. -

பிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங்க வழிபாடு

கர்மவினைகளாலோ பிறரின் சூழ்ச்சியாலோ பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர வாழ்க்கையில் ஒரு சிறுமுன்னேற்றம் கூட இல்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஒரு பரிகாரம் உள்ளது.நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளை நமக்கு அறிமுகமான ஜோதிடரிடம் ஒரு வருடத்திற்கு எழுதி வாங்கிக் கொள்ளவேண்டும். ஒரு தமிழ் மாதத்திற்கு ஒருமுறை நமது பிறந்த நட்சத்திரம் வரும்; சில மாதங்களில் இரண்டு முறை வரும்.நமது பிறந்த நட்சத்திரம் வரும் தினத்தன்று அது ஒரு முழு நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதாவது பூராடம்நட்சத்திரம் நமது பிறந்த நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது இன்று காலையில் இருந்து நாளை காலை வரைஇருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது; இன்று மதியம் ஆரம்பித்து நாளை மதியம் வரை இருக்கும். அல்லது இன்று மாலைஆரம்பித்து நாளை மாலை வரை கூட இருக்கலாம்.எப்படி இருந்தாலும் நமது நட்சத்திரம் இருக்கும் நாளில் நமக்கு வசதியான நேரத்தில் திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவிலுக்கு பால் மற்றும் ஐந்து முகருத்ராட்சம் ஒன்று(வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று 27 நட்சத்திரலிங்கங்கள் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமதுநட்சத்திரத்துக்கு உரிய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ஐந்துமுக ருத்ராட்சத்தை வைக்க வேண்டும்.பால் அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம்நமச்சிவாயநம என்று ஜபிக்க வேண்டும். அபிஷேகம் முடிந்தப் பின்னர் நமதுநட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்றி எட்டு முறை ஓம் நமச்சிவாய நம என்று ஜபிக்க வேண்டும். பிறகு நேராக நமதுவீட்டிற்கு வந்து விட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு பிறந்த நட்சத்திர நாள் வீதம் ஏழு மாதங்கள் விடாமல் வழிபாடு செய்ய வேண்டும். அப்படிசெய்து முடித்த நூறு நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும். வாழ்க்கையில் ஒரு சிறுமுன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம் கிடைக்க ஆரம்பிக்கும்.ஆனால், இந்த சுயபரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்; நமதுபிறந்த நட்சத்திர நாள் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை வரும்; மாதம் ஒரு நாள் வீதம் ஏழு மாதத்திற்கு விடாமல் செய்துமுடிக்க வேண்டும். இவ்வாறு பின்பற்றினால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும்.
கர்மவினைகளாலோ பிறரின் சூழ்ச்சியாலோ பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஒரு பரிகாரம் உள்ளது.
நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளை நமக்கு அறிமுகமான ஜோதிடரிடம் ஒரு வருடத்திற்கு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு தமிழ் மாதத்திற்கு ஒருமுறை நமது பிறந்த நட்சத்திரம் வரும்; சில மாதங்களில் இரண்டு முறை வரும்.
நமது பிறந்த நட்சத்திரம் வரும் தினத்தன்று அது ஒரு முழு நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதாவது பூராடம்
நட்சத்திரம் நமது பிறந்த நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது இன்று காலையில் இருந்து நாளை காலை வரை
இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது;
இன்று மதியம் ஆரம்பித்து நாளை மதியம் வரை இருக்கும். அல்லது இன்று மாலை
ஆரம்பித்து நாளை மாலை வரை கூட இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் நமது நட்சத்திரம் இருக்கும் நாளில் நமக்கு வசதியான நேரத்தில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பால் மற்றும் ஐந்து முகருத்ராட்சம் ஒன்று(வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று 27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திரத்துக்கு உரிய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.
அபிஷேகம் செய்யும் போது அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ஐந்துமுக ருத்ராட்சத்தை வைக்க வேண்டும்.
பால் அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம்நமச்சிவாயநம என்று ஜபிக்க வேண்டும்.
அபிஷேகம் முடிந்தப் பின்னர் நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்றி எட்டு முறை ஓம் நமச்சிவாய நம என்று ஜபிக்க வேண்டும். பிறகு நேராக நமது வீட்டிற்கு வந்து விட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு பிறந்த நட்சத்திர நாள் வீதம் ஏழு மாதங்கள் விடாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி
செய்து முடித்த நூறு நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும். வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம் கிடைக்க ஆரம்பிக்கும்.
ஆனால், இந்த சுயபரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்;
நமது
பிறந்த நட்சத்திர நாள் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை வரும்; மாதம் ஒரு நாள் வீதம் ஏழு மாதத்திற்கு விடாமல் செய்து
முடிக்க வேண்டும். இவ்வாறு பின்பற்றினால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும்.

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!!

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!!
நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு
உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து
வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள்பாவக் கதிர்களை
கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சிலமரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் கண்படும் இடங்களில், உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லைஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும் அந்த மரக்கன்றையும் அவரதுபிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிகநன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டுஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கை மலரும் அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும் .கர்ம வினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம் ’இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்
அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்.
சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்றபாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.
மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல
விருட்சங்கள் உண்டு.அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள்
அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள். உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு. உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..
விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :
அஸ்வதி – எட்டி
பரணி -- நெல்லி
கார்த்திகை – அத்தி
ரோகிணி --- நாவல்
மிருகசீரிஷம் --- கருங்காலி
திருவாதிரை - செங்காலி
புனர்பூசம் - மூங்கில்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - புரசு
உத்திரம் - இலந்தை
அஸ்தம் - மகாவில்வம்
சுவாதி - மருதம்
சித்திரை - அகண்ட வில்வம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழம்
கேட்டை - பராய்
மூலம் - மரா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூரட்டாதி -- மா
உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை
ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும்.
வருஷாதி விருட்சங்கள்
பிரபவ - கருங்காலி மரம்
விபவ - அக்ரூட்மரம்
சுக்ல - அசோக மரம்
4.ப்ரமோதூத
பிரஜோர்பத்தி - பேயத்தி மரம்
ஆங்கீரஸ் - அரசுமரம்
திருமுக - அரைநெல்லி
பவ - அலயாத்தி
யுவ - அழிஞ்சில் மரம்
தாது - ஆச்சாமரம்
ஈஸ்வர - ஆலமரம்
வெகுதான்ய - இலந்தை மரம்
பிரமாதி - தாளைபனைமரம்
விக்ரம - இலுப்பை மரம்
விஷு - ருத்திராட்சம்
சித்ரபானு - எட்டி மரம்
யுவபானு - ஒதியம்
தாரண - கடுக்காய் மரம்
பார்த்திவ - கருங்காலி மரம்
வியய - கருவேலமரம்
சர்வஜித் - பரம்பை மரம்
சர்வதாரி - குல்மோகூர்மரம்
விரோதி - கூந்தல் பனை
விக்ருதி - சரக்கொன்றை
கர - வாகை மரம்
நந்தன - செண்பகம்
விஜய - சந்தனம்
ஜய - சிறுநாகப்பூ
மன்மத - தூங்குமூஞசி மரம்
துன்முகி - நஞ்சுகண்டாமரம்
ஏவிம்பி - நந்தியாவட்டை
32.விளம்பி
விகாரி - நாவல்
சார்வரி - நுணாமரம்
பிலவ - நெல்லி மரம்
சுபகிருது - பலா மரம்
சோபாகிருது - பவழமல்லி மரம்
குரோதி - புங்கம் மரம்
விசுவாவக - புத்திரசீவிமரம்
பராபவ - புரசுமரம்
பிலவங்க - புளிய மரம்
கீலக - புன்னை மரம்
சவுமிய - பூவரசு மரம்
சாதாரண - மகிழமரம்
விரோதிகிருத - டம்பை
பரீதாபி - மராமரம்
பிரமாதீச - மருதமரம்
ஆனந்த - மலைவேம்பு
ராட்சஸ - மாமரம்
நள - முசுக்கொட்டை மரம்
பிங்கள - முந்திரி
காளயுக்தி - கொழுக்கட்டை மந்தாரை
ஸித்தார்த்தி - தேவதாரு
ரவுத்ரி - பனை மரம்
துன்மதி - ராமன்சீதா
துந்துபி - மஞ்சள் கொன்றை
ருத்ரோத்காரி- சிம்சுபா
ரக்தாக்ஷி
குரோதன - சிவப்புமந்தாரை
அட்சய - வெண்தேக்கு

சனி, 21 மார்ச், 2015

காசி யாத்திரை

காசிக்கு தம்பதியராகத்தான் போக வேண்டுமா?
தம்பதியராகப் போவது தான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இராமேசுவரத்தில் இராமபிரான் ஈசனை வணங்கிய இடத்தில் மண்ணை எடுத்துக் கொண்டு பிரயாகைக்குப் போய் கரைத்துவிட்டு,அங்கிருந்து கங்கை நீரை எடுத்துக்கொண்டு காசிக்குப்போய் விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, காயவில் பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய கர்மாக்களைச் செய்து முடித்துவிட்டு இராமேசுவரத்துக்குத் திரும்பி வந்து, கொண்டு வந்த கங்கை நீரால் இராமேசுவர நாத சுவாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு, ஊருக்குத் திரும்புவது. இதுதான் முழுமையான காசி யாத்திரை என்பது.
காசி என்ற பெயருக்கு ஒளி தரும் இடம் என்று பொருள் கூறுவார்கள். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக நான்கு மைல்கள். இதில் 64 நீராடும் கட்டங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் மிக முக்கியமானவை 5. இவற்றுக்கெல்லாம் காரணப் பெயர்களே வைக்கப்பட்டு இருக்கின்றன. சிலவற்றுக்கு, அருகில் உள்ள ஆலயம், கட்டிடத்தின் பெயரையே கொடுத்திருக்கிறார்கள். அஸி நதி இங்குதான் வந்து கங்கையில் சங்கமம் ஆகிறது. தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகங்களைச் செய்த பலன் கிடைக்கக்கூடிய கட்டம்;வருணா கட்டம் ஖
வருணா நதி சங்கமாகும் காசியின் மறுமுனையில் உள்ள கட்டம்; பஞ்சகங்கார கட்டம்- ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமமாகும் இடத்தில் உள்ள கட்டம். மணிகர்ணிகா கட்டம் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரதான நீராடும் கட்டம். ஐமுட் கட்டகளிலும் கங்கையில் நீராடவேண்டும். இங்கு பித்ருகளுக்கு காரியம் செய்யப்படுகிறது. காலை ஐந்து மணிக்கு தொடங்கினால், ஐந்து கட்டகளிலும், கங்கையிலும் நீராடி பித்ரு காரியம் செய்வதற்கு பிற்பகல் இரண்டு மணியாகும். பிற்பகலில் ஓய்வெடுத்து மாலையில் காசி விசுவநாதரை தரிசிக்கலாம்.மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டி மண்டபம் இருக்கிறது. இங்கே நீராடி இந்த மண்டபத்தில் அமர்ந்துதான், முக்கியமான பித்ரு கர்மாக்களைச் செய்கிறார்கள்.
இதை ஒட்டி அமைந்துள்ள அரிச்சந்திர காட் மிகப் பழைமையானது.இங்குதான் சந்திரமதி தனது மகன் லோகிதாசனைத் தீ மூட்டி எரிக்க வந்தாள். அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து மனைவியும், மகனையும் பார்த்தான். உண்மைக்குக் கிடைத்த உயர்வைத் தேவர்கள் இங்கேதான் அறிந்து கொண்டார்கள். அரிச்சந்திரா காட்டில் உடல் எரிக்கப்படுகிறது..இந்துக்களிடையே மிகவும் பெருமை தரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.
அரிச்சந்திரன் வைத்துப் பூஜித்த மைசானேசுவரர்ஒஒ என்ற சிவலிங்கம் இன்றும் அங்கே இருக்கிறது. மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி மறைபவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம். மணிகர்ணிகாஷ்டகஒஒத்தில் ஆதிசங்கரர் இந்த கட்டத்தைப் பற்றி மிகச்சிறப்பாக கூறி இருக்கிறார். இங்கே நீராடியபின் மறைபவர்கள் இந்திரனும் சூரிய தேவனும் கை நீட்டி அழைத்துச் சென்று சொர்க்கத்தில் சேர்ப்பார்கள் என்பது நம்பிக்கை.
மணிகர்ணிகா கட்டத்தின் அருகில் ஒரு குளம் இருக்கிறது. முதலில் கங்கையில் நீராடி விட்டுப் பிறகு இதிலும் நீராடினால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். சக்கரதீர்த்தம் என்ற இந்தக் குளம் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம். மகாவிஷ்ணுவ தனது கையில் உள்ள சக்கராஆயுதத்தினால் இந்தக்குளத்தைத் தோற்றுவித்தாகவும்,கங்கையில் மூழ்கி எழுந்த அவருடைய திருமேனியிலிருந்து வடிந்த புனித நீர் இந்தத் திருக்குளத்தை நிறைந்ததாகவும் சொல்லுகிறார்கள். இந்தக் குளத்தில் நீராடப் பார்வதியும், பரமேசுவரனும் வந்தார்களாம். அப்்படி நீராடியதும் ஈசன் ஆனந்த நடனம் ஆடத்தொடங்கி விட்டாராம். அப்போது அவர் காதில் அணிந்திருந்த குண்டலாபரணம் தெறித்து, முடியிலிருந்த மணியுடன் கங்கையில் விழுந்துவிட்டதாம்.பார்வதி தேவியின் கர்ண புஷ்பம்,விசுவநாதரின் [1] முடிமணி இரண்டும் சங்கமமான இடம் என்பதனால் அந்த நீராடும் கட்டத்துக்குத் தனி மகிமை இருக்கிறது.
இந்த மணிகர்ணிகா கட்டத்தில் நீராடியபின் சக்கர தீர்த்தத்தில் குளித்து,சிரார்த்தம் செய்யவேண்டும். இங்கு பலவகை தானங்கள் செய்வதைப் பார்க்கலாம். வசதியுள்ளவர்கள் பசுவை வாங்கி தானம் செய்கிறார்கள். மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டித் தாரகேசுவரர் ஆலயமும்,மேலே துர்க்கையின் கோயிலும் இருக்கின்றன. இவற்றை வலம் வந்து உள்ளே போய் சுவாமியைத் தொட்டுப் பூஜிக்கலாம்.கங்கை நீரை எடுத்து அபிஷேகம் செய்யலாம். மலர் மாலைகளைச் சார்த்தலாம்.பக்தர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.தாரகேசுவரர் தரிசனம் முடித்துக்கொண்ட பிறகுதான் காசி விசுவநாதரை தரிசிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்.கையில் கங்கை நீரை எடுத்துச் சென்று விசுவநாதருக்கு அபிஷேகம் செய்யலாம்.
காசிவிசுவநாதர் ஆலயம் குறுகலான ஒரு சந்தில் இருக்கிறது. உள்ளே பிராகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் கட்டப்பட்டது. நீராடிவிட்டு வருபவர்கள்கவனமாக வரவேண்டும்.மையத்தில் காசிவிசுவநாதரின் கருவறை இருக்கிறது. கங்கை நீராலும்,பாலாலும்,வில்வ இலைகளாலும் அர்சித்து, அபிஷேகம் செய்யலாம். மலர்களை, மலர் மாலைகளை சாத்தி மகிழலாம்.
இரவு வேளையில் இங்கே மகேசுவர பூஜை நடக்கிறது. ஒரு மணி நேரம் பூஜை செய்கிறார்கள்.
சிவ தோத்திரம் சொல்லுகிறார்கள். படிப்படியாகச் சுவாமியை அலங்கரிக்கிறார்கள். முதலில் கங்கை நீர், பிறகு பால், தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். நாகாபரணம் சிவலிங்கத்தின் முடியை அலங்கரிக்கிறது. ஐந்து முக தீபம் காட்டி அர்ச்சனை முடிக்கிறார்கள். ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலைகளையும், பஞ்சமுக விளக்குகள் [தீபம்]ஐம்புலன்களையும் உணர்த்துவதாக விளக்கம் கூறுகிறார்கள்.
இந்த இரண்டையும் பயன்படுத்தி ஈசனை வழிபட வேண்டும் என்பது தத்துவம் ஆகும்.
காசிவிசுவநாதர் ஆலயத்தில் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. இந்த ஆலயத்தை அகல்யாபாய் என்ற ராணி முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள். கோயிலில் இருபத்தியிரண்டு மணங்கு நிறையுள்ள தங்கத் தகடுகள் உபயோகிக்கப்பட்டதாம். அதனால் இன்றும் காசிவிசுவநாதர் ஆலயம் தங்க ஆலயம் என்றே குறிப்பிடுகிறார்கள். காசிவிசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள அதே தெரு சற்றே தூரத்தில் மாதா அன்னபூரணியின் கோயிலும் அமைந்திருக்கிறது. காசிவிசுவநாதருக்கு தேவி உணவு அளித்த இடம். அதனால் காசியில் பசிப்பிணி இல்லை என்று சொல்லுகிறார்கள். இதை நிரூப்பதைப் போலவே இங்கு வரும் யாத்திரீகர்கள் அன்னதான் உற்சவம் நடத்துகிறார்கள்.
அழகான சித்திர வேலைப்பாடுகள் அமைந்த அன்னபூரணியின் கோயில் மராத்திய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் அமைந்திருக்கிறது. அதைப் பன்னிராண்டு கல்தூண்கள் தாங்குகின்றன. அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள சலவைகள் தளத்தில் பக்தர்கள் அமர்ந்து பஜனை செய்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.
கர்ப்பக்கிருகத்தில் உள்ள அன்னபூரணியைத் துவாரங்கள் செதுக்கிய பலகணியின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகம் மட்டுமே தரிசனத்துக்குக் கிட்டுகிறது. அன்னபூரணியின் அழகான அலங்காரத்துடன்,கீழே ஸ்ரீ சக்ரமேரு யந்திரம் இருக்கிறது.இடக்கரத்தில் தங்கக் கிண்ணம்,வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன், பிச்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் அன்னபூரணி.
அம்பாள் தனியாக அமர்ந்திருப்பதில்லை.இருபுறமும் ஸ்ரீ தேவியும்,பூதேவியும் கொலுவிருந்து,கையை தூக்கி ஆசீர்வதித்து அருளுகிறார்கள். இவையும் பொன்னால் ஆனது.விசுவேசுவரரின் உருவம் மட்டும் வெள்ளியால் ஆனது.அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷம். அன்னபூரணி ஆலயம் அருகில் விசாலாட்சியின் ஆலயம் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் இந்த ஆலயம் தமிழ் நாட்டு பாணியில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான இந்த கோயில் நாட்டுக் கோட்டை செட்டியார் அமைப்பு பராமரித்து வருகிறது.
குத்து விளக்கின் ஒளியில் கோயில் கர்ப்பக்கிருகத்தில் தேவியைத் தரிசிக்கலாம். சிவலிங்கம், தண்டாயுதபாணி, விநாயகர், சண்டிகேசுவரர் ஆகியோர் சந்நிதிகளுடன் நவக்கிரங்களும் உண்டு. தமிழ் நாட்டு ஆலய அமைப்பிலேயே உள்ளது.
இங்கு நவராத்தியும்,சிவராத்திரியும் விசேஷமானது. காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய மூன்று ஆலயங்களிலுமே நாதசுர இசை உண்டு. தமிழ் நாட்டின் முத்திரையை அங்கே மனம் குளிரப் பார்த்து காது குளிர கேட்கலாம்.
விசுவேசம் - மாதவம் துண்டியும் - தண்டபாணிஞ்ச பைரவம்
வந்தே காசிம் குஹாம் கங்காம் பவானிம் மணிகர்ணியம்.
இது காசியில் உள்ள முக்கியமான மூர்த்திகள்.
காசியில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு தெருவுக்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு படித்துறையும் ஒரு புராணத்தின் அங்கமாக விளங்குகிறது. ஑ஒகங்காஒஒ என்றால் ஓடிக்கொண்டு இருப்பவள் என்று பொருளாம்.இந்து மதத்தின் பிரயாணத்தை ஓடிக்கொண்டே கவனிக்கும் புனித நதி கங்கை. அதன் கரையில் அமைந்திருக்கும் மூன்று கோயில்கள்.
மாதவம் :-- திருவேணி சங்கமத்தில் வேணிமாதவர்,காசியில் பிந்துமாதவர்,இரமேசுவரத்தில் சேதுமாதவர் ஆகிய மூன்று மூர்த்திகளின் தரிசனமும்,காசி யாத்திரையில் முக்கியமானது.காசியில் பிந்துமாதவர் ஆலயம் பஞ்ச கங்கா கட்டத்தில் அமைந்திருக்கிறது.கார்த்திகை மாதம் முப்பது நாட்களும் பெண்கள் பஞ்சகங்க கட்டத்தில் கங்கையில் நீராடி விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள்.அகல் விளக்கு ஏற்றி சிறு கூடையில் வைத்து,மூங்கில் நுனியில் அந்தக் கூடையைத் தொங்க விடுகிறார்கள்.இதை ஆகாச தீபம் என்று வணங்குகிறார்கள்.
பஞ்ச கட்டத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து படிகள் மேலே போனால் பிந்து மாதவர் ஆலயத்தை அடையலாம். இங்கே உள்ள மூர்த்தி நாராணயன் சங்கு,சக்கர,கதா பதம சொரூபராகப் பெருமாள் நிற்கிறார்.
மண்டபத்தின் வலது புறம் ஜகஜீவனேசுவர் என்ற சிவலிங்கமும் பூஜைக்கு உரியதாக அமைந்திருக்கிறது. சிலாவடிவான பிந்து மாதவரின் இரண்டு பாதங்களை வெளியே காணப்படுகின்றன.அங்கு கங்கை நீரை அபிஷேகம் செய்வித்து,மலர்களைப் போடுகிறார்கள். கங்கா நீர், மலர் பிரசாதம் கிடைக்கிறது.
துண்டிம் :-- இது செந்தூர நிறத்தில் உள்ள விநாயகர் கோயில். நாம் சாலை ஓரத்தில் அமைத்து
வணங்கும் சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே, விநாயகர் அமர்ந்திருக்கிற கோலத்தில் காட்சி தருகிறார். விநாயகருக்குச் செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். விநாயகரின் வடிவம் பூரணமாக இல்லை.துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வழிபடுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் கணபதி மகராஜிடம் உத்தரவு பெறாமல் போககூடாது என்று சம்பிரதாயம் இருக்கிறது.
தண்டபாணி :-- கேதாரேசுவரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் தண்டபாணியின் சிறு ஆலயம் அமைந்துள்ளது. இது முழுவதும் சலவைக் கல்லால் இழைக்கப்பட்டிருக்கிறது. முழுங்காலுக்கு நேரே இரு கைகளிலும் ஒரு தண்டத்தைப் பிடித்துக்கொண்டு,சுவாமி குத்திட்டு அமர்ந்திருக்கிறார். கழுத்திலும், தலைச்சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு செய்கின்றன.சிவகணங்களில் ஒருவர் என்று இங்கு வழிபடுகிறார்கள். சிவபெருமானை ஆராதித்துப் பெருமை பெற்ற தண்டநாயகன் இந்தத் தொண்டருக்குக் காசிக்கு வரும் பக்தர்கள் வணக்கம் செலுத்திவிட்டுப் போகிறார்கள்.
பைரவர் :-- காலபைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்துக்கு ஒரு மைல் வடக்கே உள்ளது.காசிப் பட்டணத்துக்கே இவர்தாம் காவல்காரர் என்று சொல்லுகிறார்கள்.கோயில் வாயிலில் காசிக்கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டுகிறார்கள். அது உடல் நலத்திற்கும்,வாழ்க்கை வளத்துக்கும் காப்பாக அமையும் என்று சொல்லுகிறார்கள். பைரவருக்கு நாய்தான் வாகனம்.காசிக்கு வருபவர்கள் பைரவர்க்கு கணக்குச் சொல்லி விடைபெற்று செல்லவேண்டும் என்பது ஐதீகம்.
காசி:-- இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதிகாசி.இது ஒருசிறு கோயில்.. இங்கு லிங்கமும், சிவமூர்த்தியும் இருக்கின்றன.கங்கை நீரையை சுவாமி மீது பொழிந்து மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.
குஹாம் :- இது சிறு வாயிற்படி கொண்ட குகை.இந்த குகையின் வாயிலில் ஜைகிஷ்வ்யர் என்ற முனிவர்க்கு சிவபெருமான் தரிசனம் கொடுத்து மோட்ச பதவி அளித்ததாகக் கூறுமிறார்கள்.இந்த குகை வழியாகச் சென்று கைலாசத்தை அடையலாம் என்று ஒரு சம்பிரதாயக் கதையும் கூறுகிறார்கள்.விசேஷ பூஜை எதுவும் இல்லை.தரிசனம் மட்டும்தான் கிடைக்கிறது.
கங்காம் :- இது ஆதிகங்கை இருந்த இடம்.பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான் என்பது புராணம். இங்கே கங்கையைத் தடாகமாக, நீர் நிலையாகக் கொலுவிருக்கச் செய்திருக்கிறார்கள் ஆதிகங்கையின் நீரைப் புரோட்சணம் செய்து கொண்டால்தான் கங்கை குளியல் பலன் முழுமையாகும்.

அபூர்வ சக்தி ரசமணி செய்முறை எப்படி??

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதாவது சிவன் சொத்தினை அபகரித்து அனுபவிப்பவர்களது குலம் நாசமாகும் என்பது இதன் பொருளாகும். இது உலகில் பொதுவாழ்வில் சிவன்;கோவில் சொத்தினை அபகரித்து அனுபவிப்பார்களது குலத்தினை நாசம் செய்யும் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
இது சரிதான் என்றாலும், இந்தப் பழமொழியில் உள்ள மறைவான பொருள் வேறு ஒன்றும் உள்ளது. சிவனார் வீரியம், சிவனார் விந்து என்ற பெயர்கள் பாதரசத்திற்கு உண்டு. அத்தகைய பாதரசத்தினை சிவனது சொத்தினை பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதே மறைபொருளாகும். அவர்களது குலம் எப்படி நாசமாகும் என்பதை இந்தப் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.
பாதரசத்தினை மருந்துக்கோ, இரசவாதத்திற்கோ பயன்படுத்தும் முன்பு அதன் தோஷங்களை நீக்குவதும், சட்டை எனப்படும் வேறு உலோகக் கலப்புக்களை நீக்குவதும் அவசியமாகும். பாதரசத்தில் எட்டுவகையான தோஷங்கள் உண்டு. அதேபோல் ஏழுவகையான சட்டைகள் உண்டு.
இவற்றை முறைப்படி நீக்கிய பின்னரே இரசத்தினைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் பலவித தீமைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எட்டுவகையான தோஷங்கள், அவற்றினால் உண்டாகும் நோய்களையும் முதலில் காண்போம்....
எட்டுவிதமான தோஷங்கள்
1. உண்பீனம் - தாங்க இயலாத வயிற்றுநோயினைத் தரக்கூடிய தோஷமாகும் இது.
2. கௌடில்யம் - தலைசம்பந்தமான நோய்கள், தலைக்குத்தல், ஒற்றைத்தலைவலி, மண்டையிடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.
3. அனவர்த்தம் - மூளை சம்பந்தமான நோய்கள், பைத்தியம், மயக்கம், வாய்ப்பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாக்கும்.
4. சண்டத்வம் - சன்னியினால் உண்டாகக்கூடிய உடற்கோளாறுகளை இந்த தோஷம் உண்டாக்கும்.
5. பங்குத்வம் - பெருநோய் என்றழைக்கப்படும் குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் ஏற்படுத்தும்.
6. சங்கரம் - பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மனபாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலிலுள்ள ஏழுவித தாதுக்களையும் பலமிழக்கச் செய்தல், வீரியத்தின் தன்மையை வீணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்துவிடும். ஏழுவித தாதுக்குறைபாடும், வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு – வம்ச வளர்ச்சியை பாதிக்கும். அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கிவிடும். இதைத்தான் பெரியோர் மறைமுகமாக சிவன் சொத்து குலநாசம் (வாரிசு நாசம்) என்று கூறினார்கள்.
7. சமலத்வம் - பலவித சுரங்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாக்கும்.
8. சவிவிஷத்வம் - உடல் நடுக்கம், உடல் இளைத்தல், இரைப்பு நோய் போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும்.
ஏழுவிதமான சட்டைகள்
1. நாகம் - நாகம் எனும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன்படுத்தும்போது அது மூலநோயை உண்டாக்கிவிடும்.
2. வங்கம் - வங்க சட்டை கழற்றாத இரசம் பெருநோய் எனும் குஷ்ட நோயை ஏற்படுத்தும்.
3. அக்கினி – அக்கின சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல்நோயை உண்டுபண்ணும்.
4. மலம் - மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தைப் பயன்படுத்துமபோது அறிவாற்றல் பாதிப்பு ஞாபகமறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாகும்.
5. விடம் - விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த இரசம் மரணத்தை உண்டுபண்ணிவிடும்.
6. கிரி – கிரிசட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்.
7. சபலம் - சபலச்சட்டை கழற்றப்படாத இரசம் உடலின் வீரியத்தில் குறைபாட்டை உண்டாக்கும்.
இந்த குறைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.
இரசத்திலுள்ளகு றைபாடுகளை நீக்குவது உள்ளுக்கு உண்ணக்கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம். உடலில் மணியாக அணிந்து பயன்பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும். அதுமட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். முறைப்படி சுத்தி செய்யாத இரசத்தை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் முன்கண்ட பாதிப்புகள் சிறதுசிறிதாக உடலில், மனத்தில் ஏற்பட்டு மெல்லமெல்ல வளர்ந்து சம்பந்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும். எனவே இரசத்தைக்கொண்டு இரசவாதம் செய்ய நினைப்பவர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாகப் பயின்று இரசவாதத்தில் ஈடுபடவேண்டும்.
எட்டுவகையான தோஷங்களும், ஏழுவகையான சட்டைகளும் சரியானபடி நீக்கப்படாவிட்டால் என்னென்ன விதமான நோய்களை உண்டாக்குமென பார்த்தீர்கள். அவற்றில் ஒருசில நோய்களுக்கு ஒருவர் ஆட்பட்டாலே அவர் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக ஆகிவிடும். அதனால்தான் சிவன்சொத்து குலநாசம் என்று சொல்லப்பட்டது. இதனை முழுமையாக அறியாமல் சிலர் இரசமணி பயிற்சி, இரசவாத பயிற்சி என நடத்தி தான் பெற்ற அறைகுறை அறிவை அதில் மேலும் அறைகுறையாகச் சொல்லித்தந்து
'குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழு மாறே' – என்ற சித்தர் வாக்குப்படி வீணாகிக் கொண்டுள்ளனர். (மற்றவர்களையும் வீணாக்கிக் கொண்டுள்ளனர்).
தன்னிடம் பயிற்சிக்கு வருபவர்கள் மூலமாக தாங்கள் பயிற்சி எடுத்துக் (கற்றுக்) கொள்கிறார்கள். இரசவாதத்தில் ஈடுபட நினைப்பவர்கள் அதன் அவசியத்தை முதலில் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். அத்துடன் மேற்கண்ட நொய் சம்பந்தமான எச்சரிக்கை வழிமுறைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக ஒழுக்கமான, உண்மையான குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். வெறும் வாய் வார்த்தைகளை நம்பாமல் செயல்பாட்டில் உண்மை, ஒழுக்கம் உள்ளதா என கவனித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் பெரியோர் சொன்ன சிவன் சொத்து குலநாசம் என்ற வாக்குப் பலித்துவிடும்.

அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை

மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அற்புத அதிசயங்களை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற மலைகளில் காணலாம். அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர், தேரையார் போன்ற சித்தர்கள் வாசம் செய்த புண்ணிய ஸ்தலமாக திருநெல்வேலி விளங்குகிறது. இதில், ஒன்று 'அத்ரிமலை' எனும் மூலிகை மலை. இதைத்தான், 'பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்' என பாடினர். 'இம்மூலிகை தென்றல் உடலில் பட்டாலே போதும் நோய்கள் விலகியோடும்,' என்பது நம்பிக்கை.
இம்மலையில் அத்ரிமகரிஷி வாசம் செய்தார். சீடர்கள் தியானம் செய்த இடம், மூலிகை மருந்து தயாரித்த இடம் போன்றவை காலத்தால் அழியாத காவியம் போல் இன்றளவும் பசுமையாக காட்சியளிக்கிறது. இயற்கை அன்னையையும் காக்கும் 'சித்து விளையாட்டு' சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம்,
இம்மலைக்கு செல்வதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
கடனா அணை, முண்டந்துறை வன காப்பகம் என எண்ணற்ற ஸ்தலங்களை உள்ளடக்கியது. பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும். அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல், நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்... என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கடனா அணையை (85 அடி உயரம்) அடைய வேண்டும்
அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீ., துாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த
அடிச்சுவடுகளை காணலாம். இப்படி... ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் 'அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம்'அமைந்துள்ளது
கோரக்க சித்தருக்காக... அத்ரிமகரிஷி தோற்றுவித்த 'கங்கா நதி ஊற்று' இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது. இங்கு, அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு, 'சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி, உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது' என்பது நிதர்சனம்.
பொதுவாகவே வேறு எங்கும் பஞ்சம் ஏற்படலாம்; ஆனால், அத்ரிமலையில் மட்டும் ஏற்படாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், இந்த இடம் ஒரு தபோவனமாக இருப்பதுதான். அத்ரி மகரிஷி, தன் பிரதான சீடர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார். அந்த சீடர்களில் கோரக்கர் குறிப்பிடத்தக்கவர். தன் குரு அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்தச் சமயத்தில் தென்பாண்டிச் சீமையில் பல நல்ல நிகழ்வுகளும் கோரக்கரால் நிகழ்ந்தேறின. ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தப் பஞ்சம் தாமிரபரணிக் கரையிலுள்ள நெல்லையப்பர் ஆட்சி செய்யும் திருநெல்வேலி சீமை வரை நீடித்தது. நெல்லுக்கு வேலியிட்டவர் நெல்லையப்பர்; இவர் ஆட்சி புரியும் பகுதியிலேயே பஞ்சமா! அனைவரும் அதிர்ந்தனர்.
இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் அத்ரி மலையிலிருந்த கோரக்கரை நாடினர். மக்களின் குறைகளை கோரக்க முனிவர் கேட்டார். பின்னர், தன்னுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தினையும் அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்னி தேவனும், அவரது வாகனமாகிய ஆடும், சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்ர வடிவில் காட்சி தந்தார். அக்னி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் வாடத் தொடங்கின. நெற்பயிர்களெல்லாம் கருகின. ஆகவே, இந்த இடம் கருங்காடு, கரிக்காதோப்பு என்றழைக்கப்பட்டது.
இதைத் தெரிந்து கொண்ட கோரக்கர், ஒரு யோசனை கூறினார். “தாமிரபரணிக் கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைத்து யாகங்களும் பூஜைகளும் செய்தால் ஈசனின் கோபம் குறையும். அழிந்து வரும் இப்பகுதியும் மீண்டும் புத்துயிர் பெறும்; நாட்டில் நிலவும் பஞ்சமும் நீங்கும்’’ என்று கூறினார். உடனே, அவரும் மக்களின் பிரச்னையை தீர்க்க தாமிரபரணியின் மேற்குக் கரைக்கு வந்தார். அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமி தினத்தன்று யாகங்களை நடத்தத் து வங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவ பெருமான் அக்னி சொரூபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்; தண்ணருளைப் பொழிந்தார். இந்த இடத்தில் அழியாபதி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரில் காட்சி தந்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது. தாமிரபரணிக் கரையின் கீழ்ப்பகுதியில் அக்னீஸ்வரரையும் மேல் பகுதியில் கோரக்கர் அமைத்த அழியாபதீஸ் வரரையும் தற்போதும் காணலாம். இத்தலமும் நெல்லை நகரத்திலுள்ள குறுக்குத்துறைக்கு அருகிலுள்ளது.
சிவலிங்க வழி பாட்டின் பெருமைகளை அளவிட முடியாது. வழிபாடு, ஸ்தோத்திரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப்படி பல விதங்களிலும் மனதையும் உடலையும் சிவனுக்கு அர்ப்பணித்து பக்தியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்றோரையும் அதில் மூழ்கச் செய்பவர்களே சித்தர்கள். இவ்வாறு சித்தர்கள் அமைத்து வழிபட்ட லிங்கத்தை ‘ஆர்ஷ லிங்கம்’ என்பார்கள். இந்த வகையில் கோரக்கர் முனிவர் அமைத்து வழிபட்ட ஆர்ஷ லிங்கம் இதுவே. கோரக்கர் உருவாக்கிய இந்த லிங்கம் குறித்து தாமிரபரணி மகாத்மியம் பெருமைபட பேசுகிறது. சப்த ரிஷிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அண்டம், அகிலங்களையெல்லாம் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவர்கள். சப்த ரிஷிகள்தான் நட்சத்திர மண்டலங்களாக வானில் ஜொலிப்பதாக வடமொழி வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
சித்திர சிகண்டிகள் எனப் பெயர் பெற்ற ஏழு ரிஷிகளில் ஒருவராக திகழ்கிறார் அத்ரி. வேத மந்திரங்களை உலகுக்கு வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரி மகரிஷிதான் தம்முடைய தபோ வலிமையால் ஈர்த்துக் கொடுத்தார். அத்ரி மகரிஷி ஆயுர்வேதம், ஜோதிடம் போன்றவற்றிலும் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். மானுட சரீர ரகசியங்கள், யோகம் போன்றவற்றை பதஞ்சலி ரிஷிக்கு குருவாய் இருந்து கற்றுக் கொடுத்துள்ளார். பிரபஞ்சப் படைப்பை விஸ்தரிப்பதற்காக ஆழ்ந்த பெருங்கடலின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அத்ரி மகரிஷி. அதே வேளையில் அவருக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. உலகிற்கு ஒரே ஒளியாக சூரியன் திகழ்கிறது. இந்த சூரியன் பகலில் மட்டும் வெளிச்சம் தருகிறது. ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாமல் ஜீவராசிகள் துன்பப்படுகின்றன. எனவே, இன்னொரு ஒளியும் உலகிற்கு வேண்டுமென்று நினைத்தார்.அதற்காக ஒரு அற்புதத்தை செய்தார்.
அத்ரிமலை யாத்திரை சுமார் 7 கி.மீ. நடை பயணம்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விரதமிருந்து அத்ரியை மனதில் நினைத்து நடைபயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். நிச்சயம் தனியாக செல்லக்கூடாது, நாலைந்து பேர் சேர்ந்துதான் போக வேண்டும். போகும் வழியில் கூச்சல் போடாமல் செல்ல வேண்டும். கூச்சலைக் கேட்கும் மிருகங்கள் கீழேயிறங்கி வந்து விடக் கூடும். மேலும், அடர்ந்த காட்டுக்குள் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். கவனம் தப்பினால் பாதை மாறிவிடும். காலை உணவை கையில் வைத்துக் கொண்டு, காலை 7 மணிக்கு பயணம் துவங்கினால் ஆற்றை கடக்கும் போது உணவை உண்டுவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தால் மதியத்துக்குள் அத்ரிதபோவனத்துக்கு சென்று விடலாம். அங்கேயே மதிய சாப்பாட்டை சமைத்துக் கொள்ளலாம். பௌர்ணமி, அமாவாசை, கடைசி ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் மேலே அன்னதானம் நடைபெறும். முக்கியமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள்; ரொம்பவும் அவசியமென்றால் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அத்ரி மலையில் எங்கும் போட்டுவிடாமல், யாத்திரை முடிவில் கீழே இறங்கியபின் உரிய குப்பை போடும் பகுதியில் சேர்த்துவிடுங்கள்.
இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரிமலையின் , ஒருமுறையேனும் சென்று பாருங்களேன்!
(இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) .
தொடர்புக்கு, 'அவசியம்' ராமுஜி, 98421 89158.(மினி பஸ் வசதி உள்ளது

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

ஏழரைசனி, அஷ்டம சனி – நடக்கும்போது ,
தலை குப்புற விழுந்த ஒரு உணர்வு எல்லோருக்கும் ஏற்படும்.அதற்கு முந்தைய காலம்வரை ,
வெற்றிமேல் வெற்றி ,
அதனால் ஏற்பட்ட புகழ்போதை, கர்வம்,
ஆணவம் என்று இருக்கும் ஒருவரது ஆட்டத்திற்கு –
டபுள்செக் – வைக்கும் நேரம்தான் ,
இந்த காலகட்டம். இந்த கால கட்டத்தில் நமக்கு என்ன செய்தால் ,
இதை தாங்கும் சக்தி வரும் தெரியுமா?
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,
உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,
நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!.. ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.
உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்பஒற்றுமைவேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.அங்கேவாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்
பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில்நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.
எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்
எமன்மகிழ்வாராம்.எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும்
திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.தந்திரமானகுணம்கொண்டகா
காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே
எனவே,
காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்வாழலாம்

வியாழன், 19 மார்ச், 2015

சந்திர கிரஹணம்:-

ஜய ஆண்டு பங்குனி மீ 21-ம் நாள் (04.04.2015) சனிக்கிழமை சைத்ர பௌர்ணமி சந்திர கிரஹணம் அஸ்தம் நட்சத்திரம் 3-ஆம் பாதம் கன்னி இராசியில் ராகு கிரஸ்தம் கிருஷ்ணவர்ணம் உத்ராயணம் ச்சிருதுவில் வடக்கு கோலம் வடமேற்கே சந்திர கிரஹணம் பாதாளத்தில் பூமியில் பௌர்ணமியில் பிடித்து கிழக்கே பிரதமைலேயே விடுகிறது.
கிரஹண ஆரம்ப காலம் பகல் மணி 03.45. மத்திய காலம் 05.30. முடிவு காலம் இரவு 07.15. கிரஹண காலம் 03.3. நிமிடம்.
தோஷகிழமை:-சனிக்கிழமை பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளா வேண்டும். (சந்திர உதயம் 06.18 PM)
தோஷ நட்சத்திரங்கள்:- ரோகிணி, உத்திரம், அஸ்தம், சித்திரை, திருவோணாம் நட்சத்த்தில் பிறந்தவர்கல் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
சந்திர கரஹண திக்கு பலன்:-சிந்து, வடதேசம், இமாலயம் தேசம் பாதிப்பு.
திக்கு பலன்:-அதிகமான புழுதி காற்றுடன் அதிக மழை கிழக்கு பாதிப்பு.
வர்ணப் பலன்:-கெடுதி இராசி பலன்:-கிழ்க்கு, வடகிழ்க்கு திக்கு கெடுதி. விவசாயிகளுக்கு அதிக மழையால் பயிர் நாசம் கெடுதி. பூமி வெடிப்பு, பூமி அதிர்ச்சி, பூமியில் ஒரு சப்தம்.
நட்சத்திரப்பலன்:-எங்கும் விஷக்காய்ச்சல் மற்றும் புதிய நோய் பாதிக்கும்

உத்ராயணம் பலன்:- பிராமணர்களுக்கு, சிற்பிகளுக்கு, விஷ்வ பிராமணர்களுக்கு, சந்நியாசிகளுக்கு, வித்வான்களுக்கு கெடுதி. மாதம்:- சசிருதில் விளையும் மனிலா, புளி, மாங்காய்,துவரை, நவதாண்யம், பயிர்கள் எல்லாம் ந்ன்றாக அறுவடை ஆகும். காலை 09.00 மணிக்குள் போஜனம் செய்ய வேண்டும். பௌர்ணமி சிராத்தம் செய்யலாம். சந்திர கிரஹணம் விட்ட பின் அனைவரும் ஸ்நாணம் செய்ய வேண்டும். மத்திய காலத்தில் பிடிக்கும் போது 05.30-க்கு மாலை தர்பணம் செய்ய வேண்டும்.

கர்ப்பஸ்தீரிகள் கவனிக்க:-
04.04.2015 சனிக்கிழமை கர்ப்ப ஸ்திரிகள் அன்று பகல் 03.40 முதல் இரவு மணி 07.20 மணி வரை சந்திரனை பார்க்க கூடாது. இரவு ஸ்நானம் செய்து 07.30 –க்கு சந்திரனை தரிசிக்கலாம். கர்ப்ப ஸ்திரிகள் கையில் எவ்வித சேஷ்டைகளும் செய்யாது கடவுளை தியானிப்பது நலம்.

பருவத மலையின் சிறப்பம்சம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.
இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.
வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.
சிறப்புகள்:
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.
இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.
இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.
இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.
சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.
அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.
பின் குறிப்பு:
மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.
போக்குவரத்து வசதி::
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்

புதன், 18 மார்ச், 2015

நல்ல நாள் பார்க்க எளிய வழி!



ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம்.


ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?

நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை. செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.

ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.

திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.

வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.

வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.

சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி
திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி

ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.

திதிகள்: திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

நற்பலன் தரும் திதிகள்: ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.

சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்: ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.

வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.

ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி .....

பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.

நட்சத்திர பலன்கள்: பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.

யோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும். அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.

ராகுகாலம்: சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ராகுகாலம் என்று எப்போது?

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்

எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...

கிழமை பகல் நேரம் இரவு நேரம்

ஞாயிறு 12.00-1.30 6.00-7.30

திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00

குளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.

கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம் தேதிகள்

சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19

வாரசூலை: வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர். வாரசூலையை நிருவாணி சூலம் என்றும் களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. பகலில் வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி. வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது. அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். சிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.

தின ஓரையில் பயன்கள்: ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது. உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.

சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.

சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.

செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.

குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.

சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.

சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.

சந்திராஷ்டமம்: நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.

(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)

2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல், மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.

கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?

1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.
5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.
9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

உடம்பின் 99 இரகசியங்கள்

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...
2. நாம் 6
விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25
கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்
தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்...
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை...5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்...
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8
மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்
உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்
தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது...
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
127 நாட்கள் தான் அதன்
பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்
உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
ஆயுட்காலம் 120 நாட்கள்...
8. நம் உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன...
9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விர லில் நக ம்
மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்
பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது...
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும்,
அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது...
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்...
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு...
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்...
15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது...
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது...
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
ு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது...
20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்...
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9
லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும்
போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது...
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது...
24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது...
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4
வயதுக்குள் கிடைத்து விடும்...
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும்
பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம்
கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது...
29. மூளையின்
மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30
அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது...
32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்...
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற
முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்...
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண்
இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்
போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந
்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...
36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன...
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது...
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது...
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...
41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்...
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது...
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே...
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது...
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13
வைட்டமின்கள்...
46. உடலில் ரத்தம் பாயாத
பகுதி கருவிழி மட்டுமே...
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..
.48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள்
இருக்கின்றன...
49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்...
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும்
அறியப்படுகிறது..
.51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்...
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன
சென்டி மீட்டர்...
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000
முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்...
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்
உள்ளன...
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்
வளர்கிறது..
.56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040
தடவை சுவாசிக்கின்றோம்...
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின்
எண்ணிக்கை 46 (23 ஜோடி)..
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்
வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..
.59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்
இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்
வளரும்...
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன...
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
.63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக
குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.
.64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..
65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது...
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள
நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..
69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்..
.71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது...
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்
ஆகும்.
..73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்...
74. தானாக
மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50
லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..
.76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்...
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்
ஆனது..
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்
உள்ளன..80. மனிதனுக்கு 3 வகையான பற்கள்
உண்டு..
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்
9000 உள்ளன..
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்
உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்
தசை நாக்கு..
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்
உருவானது..
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்
தூங்குகிறான்.
.86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½
லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம்
நிரப்பலாம்.
.87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்
375 முறை ஏற் படுகிறது..
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை..
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20
சதுரஅடிகள்.
.91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20
ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.
.93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்..
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல
ஆணி ஒன்று செய்யலாம்..
95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால
் உபரியாக காற்றை உள்வாங்க
கொட்டாவி விடுகிறோம்...
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி...
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்
வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...