ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அதிர்ஷ்ட கல் மோதிரம் கிடைக்கும்

கற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கறகள்தான். ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே.

ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும். எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும்.

ஒரு சிலருக்கு சரியான ஜாதகமே இருக்காது. பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் இருந்தாலும் லக்னம், நட்சத்திரம், ராசி எல்லாம் கூட மாறுபடும்.

எனவே ரேகையைப் பார்த்து அதிர்ஷ்டக் கல்லை தேர்ந்தெடுக்கிறோம்.

ஒரு சிலருக்கு புதன் நல்ல நிலையில் இருக்கிறது என்றால் கையில் புதன் மேடு நன்றாக இருக்கிறதா என்று பார்த்து அதற்குரிய கல்லான மரகத பச்சையைத் (எமரால்டு) தேர்வு செய்கிறோம்.

மரகதப் பச்சைக் கல்லை வாங்க முடியாதவர்களுக்கு அதே குணத்தில் உள்ள மற்றொருக் கல்லை பரிந்துரைக்கிறோம்.

புதன் நன்றாக இருக்கும். ஆனால் சுக்கிரன் பலவீனமாக இருக்கும். சுக்கிரன்தான் அதிர்ஷ்டக் கற்களுக்குரியவன். சுக்கிரன் பலவீனமாக இருப்பவர்களுக்கு ஜாதிக் கற்கள் அதாவது உண்மையான அதிர்ஷ்டக் கல்லைப் போடாமல், அதே வகையில் இருக்கும் கற்களைப் போடச் சொல்கிறோம்.

சிலர் எல்லாம் பணம் இருக்கிறது என்பதற்காக அதிர்ஷ்டக் கற்களை இஷ்டம் போல் வாங்கிப் போட்டுக் கொள்வார்கள். அதனால்தான் திடீர் விபத்து, மரணம் போன்றவை ஏற்படுகிறது.

எனவே அதிர்ஷ்டக் கல்லை சரியாக பார்த்து தேர்வு செய்து போட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.


ஒவ்வொரு ராசிக்கல்லிலும் பல கனிம, தாது உப்புக்கள் உள்ளன. அந்த கனிம, தாது உப்புக்களின் தன்மையை வைத்துத்தான் கல்லை தேர்வு செய்கிறோம்.

தற்போதெல்லாம் உண்மையான அதிர்ஷ்டக் கற்கள் கிடைப்பது அரிதாகிறது. ஆனால் உண்மையான அதிர்ஷ்டக் கற்களைப் போட்டால்தான் அதற்குரிய பலன் கிட்டும்.

ரூபி கல் இருக்கிறது. அதாவது மாணிக்கக் கல். அதில் என்ன தாதுக்கள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதில் அலுமினிய ஆக்ஸைட் தான் அதிகமாக இருக்கிறது. ஏ எல் 2 ஓ 3. அதை அடிப்படையாக வைத்து நம்முடைய உடம்பில் என்னென்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

நம்முடைய உடம்பில் இரும்புச் சத்து, கால்சியம் அளவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.


ஜோதிடப்படி இதையெல்லாம் எப்படி பார்ப்பீர்கள்?

அதாவது செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தால் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். சிலருக்கு நாங்களே சொல்லி அனுப்புவோம். அவர்களும் மருத்துவரிடம் போய் ரத்த பரிசோதன¨ செய்துவிட்டு பிறகு போன் செய்வார்கள். ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று டானிக் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.

சிலதெல்லாம் ஜோதிடத்திலேயே பார்த்துவிடலாம். ரத்தினங்களுக்கு மருத்துவக் குணங்கள் நிறைய இருக்கிறது. இந்த மருத்துவ குணங்களோடு நமது உடல் நிலை ஒத்து இருக்கிறதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும்.

சும்மா ஒரு நகைக் கடைக்குப் போனோம் அங்கே பலகையில் எழுதப்பட்டிருந்தது.


மேஷத்திற்கு பவளம், ரிஷபத்திற்கு வைரம், மிதுனத்திற்கு மரகதம், கடகத்திற்கு முத்து, சிம்மத்திற்கு மாணிக்கம் இப்படியெல்லாம் போடவேக் கூடாது. இதெல்லாம் பொதுவானவை.

நாம் எந்த ராசியில் பிறந்தாலும் உள்ளுக்குள் நமது ஜாதக அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் வாங்க வேண்டும்.

கற்கள் என்பவை ரசாயனங்களின் கூட்டினால் உருவாகுபவை. மனித உடல் என்று பார்த்தால் அதுவும் பல ரசாயனங்களின் கூட்டுத்தான்.

நமது உடலுக்குப் பொருந்தி வராத கற்களைப் போடும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படுவதெல்லாம் உண்டு.

டயானா இறக்கும் முன்பு முத்து மாலை அணிந்தார்கள். அதில் இருந்துதான் அவர்களுக்கு பிரச்சினை தொடங்கியது என்று அங்குள்ள பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. அவர்களுடைய ஜாதகத்திற்கு அது பொருந்தாமல் போய் இருக்கலாம்.

சூரிய ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்ட முத்து மாலையை அணியக் கூடாது. அப்படி அணிந்தால் அது தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தவறான சிந்தனை, தவறான அணுகுமுறை, தவறான பாதையில் செல்லுதல், தவறான நண்பர்கள் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

இப்போதெல்லாம் உண்மையான கற்கள் கிடைப்பது மிக மிக அரிதாகிவிட்டது. இங்கு நகைக் கடைகளில் வைத்திருப்பது எல்லாமே... கற்களைப் பட்டைத் தீட்டும்போது தெறித்து விழும் கண்ணாடித் துகள்களை எடுத்து வைத்துக் கொண்டு அதிர்ஷ்டக் கற்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே அதிர்ஷ்டக் கற்களை வாங்கும்போது அதற்குள் நீரோட்டம் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

முன்பெல்லாம் அதிர்ஷ்டக் கற்களை வாங்கியதும் உடனே போட்டுக் கொள்ள சொல்ல மாட்டார்கள். முதலில் பாக்கெட்டில் வைத்துப் பாருங்கள். 10 நாட்களுக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்த பின்பு விரலில் போட்டுக் கொள்ளச் சொல்வார்கள். இது மிகவும் நல்ல வழி முறை.

ஆனால் இப்போதிருக்கும் அவசர யுகத்தில் அப்படி எல்லாம் யாரும் செய்வதில்லை.

ஜாதகத்தைப் பார்த்து பின்பு வாங்கி அணிந்து கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனாலும் ஜாதகத்தில் தெளிவற்ற நிலை இருக்கும்போது மேற்கூறிய வழிமுறை சிறந்ததே.

ஒரு சில கடைகளில் மூன்று அதிர்ஷ்டக் கற்களை ஒரே மோதிரத்தில் வைத்துத் தருவார்கள். இதெல்லாம் மிக மிக தவறு.

ஒரு ரா‌சி‌யி‌ல் செ‌வ்வா‌ய் ந‌ன்றாக இரு‌ந்தா‌ல் நவர‌த்‌தின‌ம் அ‌ணியலா‌ம். ஆனா‌ல் மூ‌ன்று க‌ற்க‌ள் எ‌ல்லா‌ம் ‌எ‌ப்போது‌ம் பொரு‌ந்தாது.

மேஷ‌ம், ‌விரு‌ட்‌சிக‌ம் எ‌ல்லா‌ம் செ‌வ்வா‌யி‌ன் ரா‌சி. கடக‌ம், ‌சி‌ம்ம‌ம் செ‌வ்வாயை யோகா‌திப‌தியாக‌க் கொ‌ண்ட ரா‌சிக‌ள். இவ‌ர்க‌ள் எ‌ல்லா‌ம் நவர‌த்‌தின‌ம் அ‌ணியலா‌ம். ஆனா‌ல் செ‌வ்வா‌ய் ந‌ன்றாக இரு‌க்க வே‌ண்டு‌ம். பாவ ‌கிரக‌ங்க‌ளி‌ன் சே‌ர்‌க்கை, பா‌ர்வை எ‌ல்லா‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

ஆனா‌ல் ஒ‌ன்பது ர‌த்‌தின‌த்தையே வடிவமை‌க்க வே‌ண்டு‌ம். அ‌தை அ‌ப்படியே சதுரமாக போ‌ட்டு‌க் கொ‌ள்ள‌க் கூடாது. அறுகோண‌ம், மு‌க்கோண‌ம் போ‌ன்ற வடிவ‌ங்க‌ளி‌ல் வடிவமை‌க்க வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ளி‌ன் ஜாதக அமை‌ப்பை‌ப் பா‌ர்‌த்து அதனை வடிவமை‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அ‌ந்த க‌ற்க‌ள் த‌ங்களது க‌தி‌ர்களை ச‌ரியான ‌வி‌கித‌த்‌தி‌ல் உடலு‌க்கு அனு‌ப்பு‌ம்.

அ‌ந்த க‌‌ல்‌லி‌‌ன் எடை, த‌ங்க‌ம் அ‌ல்லது வெ‌ள்‌ளி‌யி‌ன் எடை போ‌ன்றவ‌ற்றையு‌ம், வடிவ‌த்தையு‌ம், ‌அடி‌ப்பாக‌ம் ‌திற‌ந்த ‌நிலை‌‌யி‌ல் போடுவது போ‌ன்று பலவ‌ற்றையு‌ம் ‌ச‌ரியாக‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

இதை‌ப் ப‌ற்‌றியெ‌ல்லா‌ம் யாரும் கவலைப்படுவதில்லை. வசதிக்கேற்றவாறு போட்டுக் கொள்கிறார்கள். அது தவறு

எல்லாவற்றையும் பார்த்து போட வேண்டும். வாங்கி அணியும் கல் உண்மையானதா என்பதையும் பார்க்க வேண்டும்.

மேலும், அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்ட உடனே எல்லாமே நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அது ஒரு சதவீதம்தான். நல்ல பலன்களை ஓரளவிற்குத்தான் கொடுக்கும். அதற்குத் தகுந்த மாதிரி நாம் பலவற்றை செய்ய வேண்டும்.

அப்போதுதான் நல்ல பலன்களைக் காண முடியும்.                       அதிர்ஷ்ட  கல்  மோதிரம்  தேவை  படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்   ஒரிஜினல்  இரத்தின மோதிரம் 2+ காரட்  வெள்ளி மோதிரத்தின் விலை  மாணிக்கம் 5000 ரூபாய் முத்து 4500 ரூபாய் கனகபுஷ்பரகம் 5000 ரூபாய் மரகதம் 5000 ரூபாய் ஓஹிட் ஜீர்கன் 4500 ரூபாய் நீலம் 5000 ரூபாய் பவளம் 7500 ரூபாய் கோமேதகம் & வைடுரியம் இரண்டும் ஒரே  மோதிரமாக  5500 ரூபாய்கள் இவை அனைத்தும் முறையாக 100008 முறை மந்திர உரு ஏற்றப்பட்ட இரத்தின மோதிரங்கள் ஆகும்  நீங்கள் பணம் அணுப்பிய தேதியில் இருந்து 10 நாள்களில் உங்களுக்கு உங்கள் மோதிரம் கிடைக்கும்
 

புதன், 17 செப்டம்பர், 2014

ஜோதிட பலன்

ஜோதிட பலன்

உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்டுமா?
தங்களை பற்றிய ஜோதிட பலனை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணெம் பலருக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. ஜோதிடம்  நம்பாதவர்கள் கூட ,” எங்கே எங்கள் பலனை சொல்லுங்கள்  பார்ப்போம்” என கூறி எதிர்கால பலனை தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பு
உங்களுகான  பலன்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். SSSJN2412@GMAIL.COM
அதில் பின்வரும் வடிவில் தகவல்கள்  இருக்கட்டும்.
பெயர் :
பிறந்த தேதி :
பிறந்த நேரம் :
 இரவு/பகல்:
பிறந்த இடம் :
கட்டணம் RS.500  உங்களுக்கு தேவையான முக்கியமான  கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். கேள்விகள் தமிழில் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் எங்களால் எளிதாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியும்

வாஸ்துகலை.சமையலறை

ஒருவர் எத்தனை பெரிய கோடீஸ்வராக நிகழ்ந்தாலும், பசி வந்து வாட்டினால் யாசகனை போல, கிடைப்பதை உண்டு மகிழ்வார். அது ஸ்டார் ஓட்டலா அல்லது சாலையோர ஓட்டலா? என்றெல்லாம் பசி எவரையும் சிந்திக்க விடுவதில்லை. ஒவ்வொரு அணுவுக்கும் இறைவன் ஏதேனும் ஆற்றலை தந்திருக்கும் போது உயிர் வாழ உறுதுணையாக இருக்கும் உணவு மட்டும் சாஸ்திர ரீதியாக சக்தி இல்லாமலா போகும்? உணவு சமைக்கும் போது நல்ல எண்ணத்துடனும் மகிழ்ச்சியான மனதுடனும் சமைக்க வேண்டும். துக்கம், துயரம், அழுகையோடு சமைக்கிற உணவு தோஷத்தையே தரும். இதனை ‘அன்னதோஷம்` என்கிறது சாஸ்திரம். ஆக இப்படி – சமைக்கப்படும் உணவுக்கே இத்தகைய முக்கியதுவம் என்றால், அந்த உணவு சமைக்கப்படுகிற இடம் எந்தளவு முக்கியத்துவம் பெற்றதாக இருக்க வேண்டும்.?
 இதற்கு வாஸ்துகலையில் நமக்கு பதில் கிடைக்கிறது. ஒரு மனையின் நான்கு திசைக்கும் அதன் நான்கு மூலைகளுக்கும் ஒவ்வோரு அதிபதிகள் ஆட்சி புரிகிறார்கள். வடகிழக்குக்கு ஈசான்யம், தென்கிழக்குக்கு அக்னிதேவன், வடமேற்குக்கு வாயுதேவன், தென்மேற்கில் நிருதிதேவன் ஆக இதனை மேலோட்டமாக பார்த்தாலே சமையலறைக்கு சிறப்பான இடம் எது என விளங்கும். அது – அக்னிதேவன் நிலைத்திருக்கும் தென்கிழக்கே சமையலறைக்கு ஏற்ற இடம் என்று. கிழக்கு பார்த்த மனை அல்லது வீடு, வடக்கு பார்த்த வீடு, மேற்கு பார்த்த வீடு இவைகளுக்கு அக்னிமூலை எனப்படும் தென்கிழக்கு மூலையை சமையலறைக்கென்று தேர்வு செய்யலாம். ஆனாலும் தெற்கு பார்த்த வீட்டுக்கு அக்னி மூலை சமையலறை சாத்தியமாகாது. தனி வீடு என்றால் எப்படியோ கட்ட வடிவமைப்பில் அக்னி மூலையில் சமையலறையாக அமைத்திடலாம். ஆனால் தெற்கு பார்த்த அடுக்கு மாடி வீட்டுக்கு அக்னி மூலை சமையலறை அமைக்க முடியாது. அப்படியே அமைத்துவிட்டாலும் தலைவாசல் தோஷமான இடத்தில் அமைந்துவிடும். இதனால் என்ன செய்யலாம்? தெற்கு பார்த்த வீட்டுக்கு என்று இல்லாமல் பொதுவாக அக்னி மூலையில் சமையலறை வைக்க இயலாவிட்டால் அதற்கென்று இருக்கும் மாற்று இடம் எங்கே? என்கிற கேள்விக்கு வாயுமூலை எனப்படும் வடமேற்கு மூலை, சமையலறைக்கு ஏற்ற இடமாக அமையும் என்று பதிலுரைக்கிறது வாஸ்துகலை. இருந்தாலும் - தென்கிழக்கு மூலையில் அமைக்கிற சமையலறைக்கும், வடமேற்கு மூலையில் அமைக்கிற சமையலறைக்கும் வேறுபாடு – தனித்தன்மை போன்றவை இருக்கிறதா? எனக் கேட்டால் நிச்சயமாக இருக்கிறது. அக்னி மூலையில் அமைக்கின்ற சமையலறையில் ஒரு சில சிறப்புகள், வாயுமூலை சமையலறையில் கிடைக்காது. வாயுமூலையில் அமைக்கின்ற சமையலறையின் ஒரு சில சிறப்புகள் அக்னிமூலை சமையலறையில் கிடைக்காது.   அது என்ன-ஏன்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். மனையடி சாஸ்திரம் – வாஸ்துகலை என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்த கட்டிட சாஸ்திர கலையானது நேற்றோ இன்றோ அல்லது பல வருடங்களுக்கு முன்போ தோன்றியதில்லை. இது மனித நாகரீகம் பிறந்த போது, அவன் தனக்கென்று ஒரு இடத்தினை  தேர்வு செய்யும் போதே அது எப்படி அமைந்தால் வம்சவளர்ச்சிக்கு உதவும் என்று சிந்தித்து இறை அருளால் உருவாக்கிய சாஸ்திரம். இது யுகங்களை கடந்த ஒரு அற்புத கலை. அப்படி பார்க்கும் போது ஒரு சில காலங்களுக்கு முன்பு வாஸ்து என்ற இந்த சாஸ்திரத்தை, கட்டடத்தை வடிவமைப்பவர்கள் மட்டும் அறிந்து வைத்திருந்தனர். அன்று அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் அமையப்பெற்றிருந்த சமையலறை, அநேகமாக கிழக்கு திசையில் இருக்கும். காரணம்  சமைக்கப்படும் உணவில் சூரிய கதிரின் ரேடியேஷன்(தாக்கம்) உடலுக்கு நன்மை என்று அறிந்திருந்தார்கள். ஆனாலும் அந்த ரேடியேஷனில் கூட நல்லவை-தீயவை என்கிற இருவேறு நிலைகள் இருக்கிறது. காலையில் வாக்கிங் சென்றால் உடலுக்கு நல்லது. அதுவே உச்சி வெயிலில் நடந்தால்? அதே சூரியன்தான் அதே வாக்கிங்தான். ஆனாலும் கதிரவனின் தாக்கம் மாறுபட்டால் பாதிப்பு உண்டாகிறது. அதுபோல. அன்றைய கட்டட சாஸ்திர வல்லுனர்கள், கிழக்கு திசையில் சமையலறை நல்லது என அறிந்து, அந்த கிழக்கு திசையிலேயே வடகிழக்கு-கிழக்கு மையம் அல்லது தென்கிழக்கு என வசதிக்கேற்ப அமைத்து விட்டார்கள். அதனால் – நான் சொன்னதைபோல ஒரே சூரியன்தான், இருந்தாலும் சமையலறை அமைக்கப்படுகிற பகுதிகள் மாறுப்படுகிறது. பலன்களும் வேறுப்படுகிறது. இதில் தென்கிழக்கில் சமையலறையாக அமையப்பெற்றவர்கள் நல்ல பலன்களை பெற்றிருப்பார்கள். கிழக்கு மையத்தில் அமையப்பெற்றவர்கள் சுமாரான பலன்களை பெற்றிருப்பார்கள். வடகிழக்கில் சமையலறையாக அமையப்பெற்றவர்கள் சோதனையான பலன்களை பெற்றிருப்பார்கள். இதே அணுகுமுறை தொடர தொடர பிறகு ஒரு சமயம் ”கிழக்கு திசை சமையலறை நல்லது என்றார்கள் ஆனால் எந்த பலனும் இல்லையே” என புலம்பி, இந்த சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இழந்து தங்கள் மனப்போக்கின்படி இல்லம் அமைத்தார்கள். அதில் சிலருக்கு அவர்களை அறியாமலே சாஸ்திர சிறப்புடன் அமைந்துவிடும். சிலருக்கு இருந்ததும் போன கதையாகும். இது அவர்களின் தவறான வாஸ்து அணுகுமுறையால் வந்த வினையே தவிர கட்டட சாஸ்திரத்தின் மீது குற்றம் சொல்வது சரியாகாது. ஒருவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்தான் நீங்களும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் அவரை விட உங்களுக்கு கம்ப்யூட்டரின் நுணுக்கங்கள் தெளிவாக தெரிந்திருக்கிறது. அதனால் நல்ல வேலை வாய்ப்பும் பயனும் பெறுகிறீர்கள். அந்த நுணுக்கங்கள் சிலருக்கு தெரியாததால் ஒட்டு மொத்தமாக கம்ப்யூட்டர் கல்வியே வீணானது என்று புலம்புவது எப்படி சரியாகும்.? மனையடி சாஸ்திரத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் “ஈசான்யம் என்னும் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் மன்னருக்கு இணையான வாழ்க்கை அமையும் என்றும், பாக்கியங்கள் பல சேரும்” என்றும் அதன் பொருள் சொல்கிறது. இது மட்டுமல்ல இதைபோன்ற பல கட்டடகலை சாஸ்திர விஷயங்கள் செய்யுள் வடிவில் நூல்களாக வெளிவந்திருக்கிறது. அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்றில்லை. அனுபவ ரீதீயாக ஆராய்ந்தும் சிலர் திருத்தி உள்ளனர். ஆனால் அன்றைய காலத்தில் புதிய திருத்தங்களை ஏற்றுகொள்ளாமல் அனுபவப்படி ஆராய்ந்து செய்யாமல் கடைப்பிடித்து வந்தனர். அவ்வளவு ஏன், மயன் நூலிலேயே வடகிழக்கில் சமையலறை வைக்கலாம் என சொல்லி இருக்கிறார். ஆகவே வீட்டை கட்டுபவர்கள் அங்கேதான் சமையலறை வைக்கவேண்டும் என்பார்கள். ஆனால் வடகிழக்கில் சமையலறை அமைப்பது முற்றிலும் தவறு.

நல்ல காரியங்கள் செய்ய

நல்ல காரியங்கள் செய்ய சுப முகூர்த்தம் பார்ப்பது மிகவும் நல்லது .எந்த ஒரு செயலிலும் நல்லதும்  இருக்கும் கேட்டதும் இருக்கும் .நாம் நல்ல நேரம் நல்ல நாள் பார்த்து தொழில்,திருமணம்,புது வீடு வாங்குதல் இது மாதரி செய்தால் பெரும்பாலும் நல்லதே நடக்கும் தீய சக்திகள் மற்றும் செயல்களில் இருந்து விடுபடலாம்.

எந்தெந்த விஷயங்களுக்கு சுப முகூர்த்தம் பார்ப்பது மிகவும் முக்கியம் என்பதை கீழ் காணவும் .

திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் பார்ப்பதற்காக.

புது மனை விழாவிற்காக (கிரப்பிரவேஷம்).

புதிய தொழில் தொடங்குவதற்காக.

புதிய இடம்,புதிய வீடு,புதிய வாகனம்,புதிய பொருள் வாங்குவதற்காக .

நெடுந்தூரம் பயணத்திற்காக .

புதிய வழக்குகள் பதிவு செய்வதற்கு.

அறுவை சிகிச்சை .

புதிய வேலையில் சேருவதற்காக .

பங்கு சந்தையில் முதலிடு செய்வதற்காக .

மற்றும் பல முக்கியமான விஷேசங்களுக்கு.

சுப முகூர்த்தம் பார்த்து ஒரு வேலையை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது .அந்த சுப முகூர்த்த நேரங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரங்களாக கருதப்படுகிறது .அப்படி செய்யப்படும் தொழில்,திருமணம் மிகவும் நல்லபடியாகவும் எந்த பிரச்சனைகளும் வராமலும் சந்தோஷகரமாகவும் திருப்திகரமாகவும் செயல்படும்.இதனால் உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கை மன நிம்மதி கிடைக்கும்.

சுப முகூர்த்தம் பார்ப்பது பொதுவாக பார்ப்பது மட்டுமல்ல .உங்கள் ராசிக்கு நட்சத்திர அடிப்படையில் எந்த நட்சத்திரம்  லக்னம் நல்லது என்பதை பார்த்து ஆராய்ந்து  மற்றும் உங்கள் அதிர்ஷ்ட எண்கள்,நிறம்,திசைகள் இப்படி பல வித அனுகூலங்கள் உங்களுக்கு தருகிறோம்.
(ஈமெயில்  மூலமாக மட்டுமே உங்கள் ஜாதக விபரம் அனுப்பப்படும் கட்டணம் - Rs 300

இராஜ யோகம்

கிரகங்கள் கூட்டு யோகமாகும் .யோகம் என்பது சுப/அசுப பலன்களைத் தர வல்லது .ஒருவன் பிச்சை எடுப்பதிற்கு ஒரு யோகம் (கிரக கூட்டு) வேண்டும் . இதுவும் ஒரு வகை யோகமே .
இராஜ யோகம் என்பது சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவது ,அனுபவிப்பது ,பணப்புழக்கம் அதிகம் இருப்பது ,உயர் நிலையில் இருப்பது மேலும் கலெக்டர் ,பெரிய வர்த்தகம் செய்பவர் ,டாக்டர் ,எஞ்சினியர் ,உலகமறிந்த விளையாட்டு வீரர் ,விரும்பப்படுகிற சினிமா நடிகர் / நடிகை ,மதத் தலைவர் போன்றவர்களுக்கு எல்லாம் சுப பலனை தரக்கூடிய கிரக கூட்டு இருப்பதே காரணம் .
இராஜ யோகங்களை தரக்கூடிய சில கிரக கூட்டுகள் பற்றி காண்போம் .
1. 5,9 ம் வீட்டு அதிபதிகளுடன் 1,4,7,10 ம் வீட்டு அதிபதிகள் சொந்த வீட்டில் அமர்வது சுப யோகம் ஆகும் . அது மேலும் லக்னமாகி சூரியன் ,சந்திரன் சேர்ந்து தங்களது சொந்த வீட்டில் அமர்வது அல்லது இருவரும் 1,4,5,9,10 ல் அமர்வது இராஜயோகம் ஆகும் .இந்த அமைவு பெற்று ஜாதகர்க்கு இராஜயோகத்துடன் இருப்பார் .
2. ரிஷபம் லக்னமாகி 9,10 ம் ஆதியாகிய சனி 5 ம் வீட்டதிபதி புதனோடு கேந்திரத்திலே ,திரிகோணத்திலே இருப்பது .
3. மிதுனம் லக்னமாகி 1,4 க்குடைய புதன் 10 ம் ஆதி குரு அல்லது 5 ம் ஆதி சுக்கிரனோடு இணைவது .
4. கடகம் லக்னமாகி சந்திரன் 5,10 ம் ஆதி செவ்வாயோடு 11,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
5. சிம்மம் லக்னமாகி சூரியன் 4,9 ம் ஆதி செவ்வாயோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
6. கன்னி லக்னமாகி 1,10 ம் ஆதி புதன் , 4,7 க்குரிய குரு அல்லது 2 , 9 க்குரிய சுக்கிரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
மேலும் புதன் ,சுக்கிரன் 3 ல் இணைந்து 9 ம் வீட்டைப் பார்ப்பதும் இராஜயோகமாகும்.
7. துலாம் லக்னமாகி 4, 5 க்குடைய சனி, 2 ,7 க்குரிய செவ்வாய் அல்லது 9 க்குரிய புதன் அல்லது 10 க்குரிய சந்திரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
8. விருச்சகம் லக்னமாகி 5 க்குரிய சந்திரன் அல்லது 10 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
9. தனுசு லக்னமாகி 1 ,4 க்குரிய குரு 5 க்குரிய செவ்வாய் அல்லது 10 க்குரிய புதன் அல்லது 9 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
10. மகரம் லக்னமாகி சனி 5,10 க்குரிய சுக்கிரனோடு இணைவது .
11. கும்பம் லக்னமாகி சனி 4,9 க்குரிய சுக்கிரனோடு இணைவது .
12. மீனம் லக்னமாகி 1,10 க்குரிய குரு 4,7 க்குரிய புதனோடு அல்லது 9 க்குரிய செவ்வாயோடு இணைவது
மேலும் 4 வகையான இராஜயோகம் கிழ்க்கண்ட வழிவகைகளில் உருவாகிறது
1. 1,5,9 ம் ஆதிகள் இணைவது
2. 2,6,10 ம் ஆதிகள் இணைவது
3. 3,7,11 ம் ஆதிகள் இணைவது
4. 4,8,12 ம் ஆதிகள் இணைவது
1, 5, 9 :
1. இந்த வகை இணைவு ஜாதகரை சமுதாயத்தில் பெரிய மனிதராகவும் தலைவராகவும் அல்லது விஞ்ஞானி ,மகான் நிலைக்கு கொண்டு செல்லும் .
2, 6,10:
2. இவர்கள் வெளிநாடு சென்று அதிக வருவாய் ஈட்டும் நிலைக்குக் கொண்டு செல்லும் .இவர்கள் குடும்பமே பெரிய வர்த்தகர்களாகவும் ,அரசாங்கத்தால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்கள் .
3, 6,11:
3. மிகவும் தைரியசாலிகளாகவும் தன் உழைப்பால் முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள் .
4, 8,12:
4. இவர்கள் மறைமுக நடவடிக்கை மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவும்,கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்களாகவும் சொத்தின் மேல் பற்றுடையவர்களாகவும் இருப்பார்கள் .
2. கால சர்ப்ப யோகம் .
ராகு,கேதுகளுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் அமைவது .பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த அமைவு கெடு பலனைத் தரும் என்று கூறுகிறார்கள் .ஆனால் இது அப்படியல்ல .இவ்வமைப்பு உள்ளவர்கள் இயற்கையிலேயே தைரியசாலிகளாகவும் ,தன்னை வெளிக்கொணர்வதில் ,நிலை நாட்டுவதில் குறிக்கோள் உடையவர்களாகவும் ,மிக விரைவில் பிரபலம் அடைபவர்களாகவும் இருப்பவர்கள் .குறிப்பாக 10 ம் அதிபதி ரகுவுடன் தொடர்பு அல்லது ராகு 3 அல்லது 5 ல் அமைவது இத்தகைய யோகத்தைத் கண்டிப்பாக கொடுக்கும் .
3. திருமணப் பொருத்ததில் சில நுணுக்கங்கள் .
ஒரு ஆணின் ஜாதகமும் ,பல பெண்களின் ஜாதகமும் ஒரே நேரத்தில் பொருத்தம் பார்க்க வந்தால் எப்படிப் பொருத்தம் பார்ப்பது ?
1. ஆணின் ஜாதகத்தில் 10 மிடம் அல்லது 10 ம் அதிபதி அமர்ந்த இராசி எதுவோ அதுவே அவர் மனைவின் ராசியாகும் .
உதாரணமாக ஒரு சிம்ம லக்னம் ஆணிற்கு 10 மிடம் ரிஷபம் .அந்த சுக்கிரன் கடகத்தில் .இந்த அமைப்பில் உள்ள ஒரு வரனுக்கு 50 பெண்களின் ஜாதகம் பொருத்தம் பார்க்க வருமானால் அந்த 50 ஜாதகங்களில் ரிஷபம்,கடகம் ,துலாம் இந்த ராசியுடைய பெண்களின் ஜாதகம் மட்டும் எடுத்து பொருத்தம் பார்ப்பது நலம் .
2. மற்றொரு வகை .வரணின் ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி அல்லது அந்த ராகுக்கு இடம் கொடுத்தவர் அமர்ந்த ராசி எதுவோ அது பெண்ணின் ராசியாக இருக்கும் .
3. ஆணின் ஜாதகத்தில் உள்ள ராகு ,கேதுகளுக்கு ,1,5,9, ல் பெண்ணின் ராகு ,கேதுவோ அல்லது கேது,ராகுவோ அமைந்து இருக்கும் ஜாதகம் பொருந்தும் .
4. காணாமல் போன பொருள் கிடைக்க .
ஆருடம் :
ஜாதகர் ஒரு பொருளை இழந்து விட்டு வந்து நம்மிடம் ஆருடம் கேட்க வந்தால் :
அன்றைய கோச்சார கிரகத்தை ராசிக்கட்டத்தில் அமைத்து வந்த நேரத்தில் உதய லக்னம் பிடிக்கவும் .
1. இந்த லக்னத்திற்கு 6 ல் பாவ கிரகங்கள் இருந்து 6 ம் அதிபதி லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பார்த்தல் பொருள் களவு போயிற்று.மேலும் லக்னாதிபதி 6 ல் இருந்தால் களவு போனது உறுதி .
2. லக்னாதிபதி12 ல் இருந்தால் பொருளை மறதியாக எங்கோ வைத்து விட்டார் .
தீர்வு :
1. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ சுப கிரகங்கள் பார்த்தால் பறிபோன பொருள் ,கை நழுவிய பொருள் ,மறதியாக வைத்த பொருள் ,திரும்பக் கிடைக்கும் .
2. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பாவ கிரகங்கள் மட்டும் பார்த்தால் பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்பில்லை .
5. மற்றும் சில...
1. ஜெனன காலத்தில் சனியை குரு பார்த்திருந்தாலும் சனியுடன் குரு சேர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் இரண்டொரு முறை கடல் கடந்து வெளிநாடு சென்று தொழில் துறையில் பெரும் பணத்தை சம்பாதிப்பதுடன் எதிர்காலத்திலும் உயர்வான வாழ்க்கை அமைந்திடும் .
2. 9 ல் புதன் இருந்தாலும் அல்லது 9 க்குடையவர் 8 ல் இருந்தாலும் ,அல்லது ராகு 9 லிலோ அல்லது 5 லோ இருந்தால் அடிக்கடி செலவும் ,பொருளாதாரத்தில் சரிவும் ஏற்படும் .
3. திக் பலம் :
புதன் ,குரு -கிழக்கிலும் -அது லக்னத்திலும்
சூரியன் ,செவ்வாய் ,தெற்கிலும் -அது 10 லும்
சனி -மேற்கில் -அது 7 ல் ,
சந்திரன் ,சுக்கிரன் -வடக்கிலும் -அது 4 லும் ,
திக் பலம் உள்ளவர்கள் .
4 . (1) லக்னாதிபதிக்கு 10 ல் புதன் பலன் பெற்றிருந்து ,7 ம் அதிபதிக்கு 3 ல் சந்திரன் இருப்பதால் ஜாதகர் பலரோடு சரீர சம்பந்தப்படுவார் .
(2) 2,12 க்குடையார் 3 லிருந்து குருவினால் பார்க்கப்பட்டோ அல்லது 9 க்குடையரால் பார்க்கபட்டாலோ மேற்கூறிய பலனே .
(3) 3,7,11 க்குடையவர்கள் சேர்ந்திருந்தாலும் ,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் ,பலம் பெற்று திரிகோணத்திலிந்தாலும்,மேற்கூறிய பலனே .
(4) பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு தொடும் காலக் கட்டம் -வீடு ,வண்டி ,வாகனம் வாங்கும் கால கட்டமாகும் .
(5)அட்டமாதிபதிக்கு 1,5,9 ல் சனி வரும் கால கட்டம் ஜாதகருக்கு கண்டம் அல்லது கண்டத்திற்கு ஒப்பான கால கட்டம் .
(6) 2,4,12 ம் ஆதிகளில் எத்தனை பேர் கோந்திரங்களில் இருக்கிறார்களோ அத்தனை வீடு ஜாதகருக்கு அமையும் .
4. கடன் :
(1) 2 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர்கள் புத்தியில் கடன்பட வேண்டும் .
(2) 11 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர் புத்தியில் கடன்பட வேண்டும் .
(3) 6 க்குடையவர் திசையில் 8,12 க்குடையவர் புத்தி ,
(4) 12 க்குரியவர் திசை 6,12 க்குரியவர் புத்தி ,
(5) 12 க்குரியவர் திசை 6,8 க்குரியவர் புத்தி ,
(6) எந்த வீட்டுக்குரிய கிரகமாக இருந்தாலும் , 6,8,12 க்குடைய வீட்டில் இருந்தால் அந்த தசா புத்தி காலங்களில் கடன்பட வேண்டும் .
6.கடன் தீர்வு :
(1) 5,9 க்குடைய புத்திகள் நடைமுறையில் இருந்தால் (இவர்கள் 6,8,12 ல் இருந்தாலும் ) இவர்களே கடனை ஏற்படுத்தினாலும் அவர்கள் புத்திலேயே கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும் .
(2) ஆட்சி பெற்ற 2, 11 க்குடையவர்கள் புத்தி நடைமுறையில் கடன் பிரச்சனை தீரும் . 7. 7 ல் சுக்கிரனும் ,செவ்வாயும் இருந்தால் விதவையை மணம் புரிவார் .
8. சுக்கிரன் ,செவ்வாய் ,சனி மூவரும் 7 ல் இருந்து இவர்களில் ஒருவர் ஆட்சி பெற்றிருந்தாலும் வாழ்வில் வழி தவறிய பெண்களுக்கு வாழ்வு கொடுப்பார் .
9. ராகு காலம் நன்மை :
ஒருவர் ஜாதகத்தில் ராகு 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் , ஜாதகர் இராகு காலத்தில் எதைச் செய்தாலும் நன்மையாகும் .
10. எமகண்டம் நன்மை :
சனி 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கபட்டால் இவர்கள் செய்யும் காரியம் எமகண்டமாக இருந்தாலும் வெற்றிகரமாக முடியும் .காரணம் சனிக்கு அதிதேவதை எமன் .
11. 7 க்குடையவர் 7 மிடதிற்கு 3,6,10,11 ல் சுக்கிரன் இருந்தால் விவாஹ்த்திற்கு பிறகு பாக்ய விருத்தி உண்டாகும் .
12. சனி ,சூரியனைப் பார்த்தால் (தொடர்பு)ஜாதகர் பரம்பரத் தொழிலைச் செய்வார் .

எப்படி பிறந்தார் செவ்வாய்

ரிஷிகளில் ஒருவரான பரத்வாச முனிவர் நர்மதை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தார். ஒருநாள் அவர் நதியில் நீராடச் சென்ற சமயம் அழகிய தேவமாது ஒருத்தி தன் தோழிகளுடன் நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகினைக் கண்ட பரத்வாசர் மோகம் கொண்டார். அவர் தம் நிலையையும் மறந்து தேவமாதைக் கட்டி அணைத்தார்.

அவருடைய மோகம் தணிந்ததும் தேவமாதை விட்டுச் சென்றார். தேவமாது ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். அக்குழந்தையை நதிக்கரையிலே விட்டு தேவலோகம் சென்றாள். பெற்றோரால் கைவிடப்பட்ட அக்குழந்தைதான் அங்காரகன் அவனை பூமாதேவி தன் குழந்தைபோல் வளர்த்து வந்தாள். குழந்தை பெரியவனானதும் தன்னுடைய தந்தையைக் குறித்துக் கேட்டான்.

பூமாதேவி குழந்தையிடம் விவரத்தைச் சொன்னதுடன் அவனை பரத்வாச முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள். செவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. பழனி தண்டாயுதபாணி செவ்வாய் கிரக தேவதையாகக் கருதப்படுகிறார். அங்காரகன் பிறப்புக்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது.

சிவபெருமான் உமாதேவியைப் பிரிந்து தனித்துக் கல்லால மரத்தின் கீழ் யோகம் புரிந்தபோது அவரது நெற்றிக் கண்ணிலிருந்து நீர்த்துளி ஒன்று பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியிலிருந்து பிறந்தவர் அங்காரகர். அதனால் அவர் பூமியின் மகன் (குஜன்) என்று அழைக்கப்படுகிறார் என்கிறார்கள்.

வீரபத்திரர் தக்கனின் யாகத்தை அழித்த பிறகு தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிக் கோபம் தணிந்து அங்காரவடிவம் பெற்றார் என்றும் கூறுகின்றனர். அங்காரகர் பாரத்வாச கோத்திரத்தை சேர்ந்தவர். சிவப்பு நிறமானவர். மாலினி, சுசீலினி என்ற இரண்டு மனைவிகளை உடையவர்.

முக்குணங்களிலே ராஜச குணத்தவர். ரத்த சம்பந்தமுடைய சகோதரகாரகர், பூமி காரகர், பெருந்தன்மை கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் முதலியவற்றைக் கொடுப்பவர், தற்பெருமைக்காரர். பழனி சுப்பிரமணியரை வழிபடுவதாலும், பவள மாலை, பவள மோதிரம் அணிவதாலும், சிவப்பு நிற ஆடை உடுப்பதாலும், சிவப்புநிறக் காளையைத் தானம் செய்வதாலும் துவரைத் தானியத்தைத் தானம் கொடுப்பதாலும், கார்த்திகை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதாலும் அங்காரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

செவ்வாய் பகவான் நெருப்பு, தம்பி, தங்கைகள், உடல் வலிமை, எலும்பின் நடுவில் உள்ள தாது, ரத்தம், வஞ்சம், வைராக்கியம், பொய் பேசுதல், மற்றவர் மனம் புண்படும் வகையில் பேசுதல் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குகிறார். அவர் உடலில் காயங்கள், கடுமையான புண்களை ஏற்படுத்துவார். உற்சாகத்தைக் கொடுத்து வீர சாகசங்களைச் செய்ய வைப்பார்.

உறவினர்களைப் பகைவர்களாக்குவார். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரமொன்றில் பிறந்தவருக்கு செவ்வாய் தசை ஆரம்பமாக வரும். பன்னிரு லக்னத்தாரில் கடகம், சிம்மம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்னத்தாருக்கு செவ்வாய் ஆதிபத்ய அடிப்படையில் யோகமளிக்க வல்லவன்.

அதனால் இந்த லக்னத்தாருக்கு செவ்வாய் பலம் பெற்றிருந்தால் அவனால் ஏற்படும் யோகப் பலன்கள் நடக்கும். அவ்வாறின்றி பலம் குன்றி இருக்க நேர்ந்தால் யோகப் பலன்கள் நடக்காது. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், கும்பம், விருச்சிகம் ஆகிய லக்னத்தாருக்கு ஆதிபத்ய அடிப்படையில் கொடியவனாகிறான்.

அதனால் இந்த லக்னத்தாருக்கு கெடு பலன்களையே அளிப்பான். அதிலும் இவன் பலத்துடன் வீற்றிருந்தால் இவனால் ஏற்படும் கெடுபலன்கள் அதிகமாக இருக்கும். அதுவே பலம் குன்றி இருக்க நேர்ந்தால் இவனால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். மாறாக நற்பலன்களும் நடக்க வாய்ப்புண்டு. கிரகங்களில் செவ்வாய் அசுபன் ஆவான்.

அதனால் சுப ஸ்தானங்களில் நிற்பது நல்ல பலன்களுக்கு கேடாகும். அந்த பாவத்திற்குரிய பலன்களும் பாழ்பட்டு விடும். அதனால் அசுப கிரகமான செவ்வாய் தனக்குரிய சுபாவத்திற்கேற்ப மூன்று, ஆறு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய பாவங்களில் நின்று தசை நடத்தினால் யோகமாக இருக்கும்.

செவ்வாய் யோகமளிக்க வல்லவனாக இருந்து தனக்கு கந்த ஸ்தானத்தில் வலு பெற்றிருந்தால் வீடு, நிலம் போன்றவற்றால் லாபம் உண்டாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பும் அவர்களினால் ஆதாயமும் கிடைக்கும். மனைவி மக்கள் உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் அவர்களால் பலவகை நன்மைகளும் உண்டாகும்.

பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். விவசாயத்தில் மேன்மை உண்டாகும். செவ்வாய் கிரகம் நவக்கிரகங்களில் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றது. இது ஒரு வேகமான கிரகம். இந்த கிரகம் சூரியனைப் போல் ஓரளவு வெப்பத்தை அடக்கிக் கொண்டிருக்கிறது. செவ்வாயின் வேறு பெயர்கள் அங்காரகன், குஜன், பவுமன், பூமி புத்ரன் என்பனவாகும்.

செவ்வாய்க்கு தனி க்ஷேத்ரமுண்டு. அதுதான் தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்கு அடுத்தள்ள வைத்தீஸ்வரன் கோவில். ஊரின் பெயரே கோவிலில் வீற்றிருக்கும் ஈஸ்வரனின் பெயராகும், வைத்தீஸ்வரன் எனப்பெயர். இக்கோவிலுக்கு அருகில் புண்ணிய தீர்த்தம் ஒன்று உண்டு. இதில் ஸ்நானம் செய்து ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் சகல நோய்களும் நீங்கும்.

அதனால்தான் இந்த ஈஸ்வரனை வைத்தீஸ்வரன் என்கிறோம். செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான். ருணம் என்று சொல்லப்படும் கடனுக்கும் செவ்வாய்தான் அதிபதி. சகோதரர்களுக்கும் அவன்தான் காரகம் வகிக்கிறான்.

விபத்து மற்றும் அடிதடியால் ஏற்படும் காயம், ரணம், கட்டி முதலியவற்றிற்கும் அவனே காரகம் வகிக்கிறான். செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

செவ்வாயின் தலங்கள்......

செவ்வாய் தமிழ்நாட்டுக்குடைய கிரகம். எனவே செவ்வாயால் திருமணம் தடைபட்டிருப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவில், பழனி ஆகிய கோவில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளைப் புரிந்து பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.

ரோம் நகரத்தினர் செவ்வாயைப் போர்க் கடவுளாக வணங்குகிறார்கள். செவ்வாய்க்கு பல கோவில்களையும் ரோமாபுரியில் கட்டியிருக்கிறார்கள். செவ்வாயை தளபதியாக ஏற்றுக் கொண்டால் யுத்தத்தில் வெற்றி என நம்புகிறார்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கலாம். துவரை சேர்ந்த பலகாரம், பட்சணம், துவர்ப்பு, பச்சடி, துவையல் ஆகியவற்றுடன் வெண்ணெய் சேர்ந்த சாதம், பழம், பாக்கு, வெற்றிலை ஒரு தட்டில் வைக்கவும். செவ்வாய்க்கிரகத்தை மனதில் நினைத்து வானத்தை நோக்கி நைவேத்தியம், சூடம் சாம்பிராணி காட்டவும். நவக்கிரக் கட்டம் இருந்தால் அதை வைத்து பூஜிக்கலாம். செவ்வாயின் பூஜைக்கு சிவந்த மலர்களே உகந்தது.

திங்கள், 15 செப்டம்பர், 2014

எண் கணிதம்,பெயரியல்

எண் கணிதம்,பெயரியல் என்பது பெயரை ஆங்கிலத்தில் எழுத எண் கணித ஜோதிட வியலை பயன்படுத்துவதாகும் .உங்கள் குழந்தை பிறந்த உடன் பெயர் எப்படி வைப்பது ,அதிர்ஷ்ட பெயர் வைப்பது ,எண் கணித முறைப்படி பெயர் வைப்பது .இப்படி பல விஷயங்களை யோசிப்பீர்கள். இவை அனைத்திற்கும் விடை நாங்கள் தருகிறோம்.

எண் கணித அதிர்ஷ்ட பெயர் என்பது நாம் பிறந்த தேதிக்கும் ,நம் பெயருக்கும் ,நாம் பிறந்த நட்சத்திரத்திற்கும் கண்டிப்பாக தொடர்பு உள்ளது .

நாங்கள் உங்கள் குழந்தையின் பிறந்த தேதி மற்றும் ஜாதகத்தை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயர் தருவோம் .அது உங்கள் குழந்தை வளர்ச்சி ,உடல் நிலை மற்றும் அதிர்ஷ்டமானவராகவும் அமைக்கும்.

பெயர் வைத்தவர்களுக்கும் பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்படும்.
அதிர்ஷ்டமான பெயர் வைத்து நல வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
(ஈமெயில்  மூலமாக மட்டுமே உங்கள் ஜாதக விபரம் அனுப்பப்படும்
கட்டணம் - Rs 500
 கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக  72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும்

ஜாதகம் பார்த்து பரிகாரம்

அனைவரும் வீடு வாகன சொத்துபத்துக்கள் வாங்கும் ஆசை இருக்கும். அது என் ஜாதகத்தில் இருக்கிறதா? எப்பொழுது வாங்குவேன், எப்படி என்ற கேள்விகளுக்கு உங்கள் ஜாதகத்தை பார்த்து மிகவும் துல்லியமாக சொல்லப்படும்...
கீழ்கானும் வினாக்கள் உங்களுக்கு பொருந்துமா?
  1. எப்பொழுது நான் வீடு/வாகனம் வாங்குவேன்?
  2. வீடு/வாகனம் வாங்குவதற்கு என் பொருளாதாரம் எப்பொழுது உயரும்?
  3. வாகனத்தை எந்த கலரில் வாங்கலாம்?
  4. கடன் மூலமாக வீடு/வாகனம் வாங்கலாமா?
  5. கடை/தொழிற்சாலை வாங்கலாமா? அல்லது வீடு தான் வாங்க வேண்டுமா?
  6. என் இடத்தில் இப்பொழுது வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?
  7. இப்பொழுது என் சொத்துகளை விற்க வேண்டிய நிலை வருமா? அல்லது சாமளித்து விடலாமா?
  8. வீடு/வாகனம் ஏதேனும் பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளதா?
  9. என் சொத்தில் பிரச்சனை இருக்கிறது, எப்பொழுது சரியாகும்?
  10. என் பூர்வீக சொத்து எப்பொழுது கிடைக்கும்?
  11. என் பழைய வீட்டை விற்று, புதிய வீடு எப்பொழுது வாங்குவேன்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் மற்றும் உங்கள் சொந்த கேள்விகளுக்கு எங்கள் ஜோதிடர்கள் தெளிவாக பதிலளிப்பார்கள். அதனை கேட்டு நலம்பெற வாழ்த்துகிறோம்.
 


1.உங்கள் முழு ஜாதக குறிப்பு.
2.உங்களை பற்றிய முழு விபரம்.
3.வீடு/வாகனம் பற்றிய முழு விபரம்.
4.ஜாதக கட்டங்கள்.
5.உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?
6.தனிபட்ட சிறப்பு பலன்.
7.தசா கட்டங்கள்.
8.தசா புத்தி படி உங்கள் ஜாதகம் தற்பொழுது இருக்கிறது.
9.பரிகாரங்கள் சொல்லப்படும்.
(ஈமெயில்  மூலமாக மட்டுமே உங்கள் ஜாதக விபரம் அனுப்பப்படும்
காதல் செய்பவர்கள் ஜாதகம் பார்த்து காதல் செய்வது முதலில் முடியாது, ஆனால் ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்து கல்யாணம் செய்து கொள்ளலாம் .முதலில் பெற்றோர்கள் தம் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து காதல் திருமணமா அல்லது நிச்சியக்கப்பட்ட திருமணமா என்று பார்த்துகொள்ளவும் அப்படி காதல் திருமணம் என்றால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்
கீழ்காணும் வினாக்கள் உங்களுக்கு பொருந்தும்
  • என் காதல் வெற்றி பெருமா ?
  • என் காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் கிடைக்குமா?
  • அப்படி காதல் செய்தால் எங்களுக்கு எதுவும் ஆபத்து இருக்கா ? 
  • எப்பொழுது எனக்கு காதல் கல்யாணம் நடக்கும் ?
  • பிரிந்த காதல் சேருமா ?
  • நான் காதலிக்கும் காதலன் / காதலி நல்லவர்களா ?
கீழ்காணும் விவரங்களை நாங்கள் தருகிறோம்
  • உங்களின் பிறப்பு சார்ந்தக் கேள்விகளுக்கு
  • உங்களின் தனிப்பட்ட ஜோதிடம்
  • உங்களின் வீடு, தொழில், திருமண வாழ்க்கை பற்றிச் சொல்லப் படும்
  • உங்களின் கிரக நிலைகள் சம்பந்தமான பதில்கள்
  • உங்களின் கட்டங்கள் பற்றிய பதில்கள்
  • உங்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றிச் சொல்லப் படும்
  • காதல், திருமண வாழ்க்கை சம்பந்தமான சிறப்பு பதில்கள் சொல்லப் படும்
  • எந்த காலகட்டத்தில் ஒற்றுமை மற்றும் பிரிவினை பற்றித் தெரிந்து கொள்ள
  • எப்பொழுது உங்களுக்கு குழந்தை பிறக்கும்..?
  • தசா புத்தி பலன்கள் பற்றிச் சொல்லப் படும்
  • தசா கட்டங்கள்
  • கோச்சார பலன்கள்
  • எந்தெந்தக் கோயில்களுக்குச் செல்லலாம்..?
  • (ஈமெயில்  மூலமாக மட்டுமே உங்கள் ஜாதக விபரம் அனுப்பப்படும் உங்கள் முகவரிக்கு அனுப்பட மாட்டாது)
    கட்டணம் - Rs 500                       
     கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக  72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும்

ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.

விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான்
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)
2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).
3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்

4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்
8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்
13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்
14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!
18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்
19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்
20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும
25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது - ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும்
37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.
39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.

40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.
43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:

1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8 ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல

எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்

1. எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்: கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால். கடனிலேயே வாழ வேண்டும். ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை கூடவே இருக்கும் எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வரும். எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை! உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் வறுமையில் வாழ நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பான். விபத்துக்கள் நேரிடும்.
2. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்: கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும். ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான் அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது. அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது. மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
3. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்: உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும். மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
4. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்: தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும். சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது. வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும். ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்

5. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்: பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும். அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின் பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும். அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும். இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால், சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும். இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
6. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்: அற்ப ஆயுள்-(sub-sub test onlty) உடல் ஸ்திரமாக இருக்காது. ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான். சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
7. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்: பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள். இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும் சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.
8. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு: மேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம கடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். சிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். துலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். தனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். எட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும். எட்டாம் அதிபதி (சேர்க்கை அல்லது பார்வையால்) கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார். எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூலம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான். எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்
9. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்: பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும். ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார். இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும். இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!
10. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்: ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும். அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும். அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும். இரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன்கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும். எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
11. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்: மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும். நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான். எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும் இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.
12. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்: தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள். ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும். சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான். எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான்

உங்கள் ஜாதகத்தில் பிதுர் தோஷம் உள்ளதா இல்லையா

உங்கள் ஜாதகத்தில் பிதுர் தோஷம் உள்ளதா இல்லையா காண்டுபிடிக்க?
உங்கள் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை , இப்படி என்று நடைபெற்றால் - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்கள் எற்படுத்தும் தோஷம்...,.
ஜாதகன் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, ஜாதகன் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு அல்லது குடும்பக்தில் உள்ள சிலருக்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது.
விதி:-1 ஜாதகத்தில் - 1 , 5 , 9 எனப்படும் திரிகோண வீடுகளில் - சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் - அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது
விதி:-2 ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் - பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் - பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.
விதி:-3 ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் - பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் - பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள் சிலர் புத்திர தோசமாகும் என்பர்.
உங்கள் ஜாதகத்தில் அவ்வாறு உள்ளதா என்று அறிய பிறப்பு விபரங்களை கொடுத்து தெரிந்து பயன் பெருங்கள்......

வியாழன், 11 செப்டம்பர், 2014

ராசிக்கல்

தனது ராசிக்கேற்ற ராசிக் கற்களை மோதிரமாக அணிந்து கொள்வது ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளோரிடம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தொலைக்காட்சிகளில் ஜோதிடர்களும், ஜோதிட(!) ஜுவல்லரிகாரர்களும் உங்கள் ராசி அதுவா? இந்தக் கல்லை மோதிரமாக அணியுங்கள்... அந்த ராசியா? ... இந்தக் கல்தான் சரி... உங்களுக்கு புதன் தசை நடக்கிறதா? மரகதப்பச்சை மோதிரம் அணியுங்கள்... குருதசையா? புஷ்பராகம் அணியுங்கள் என்று நீண்ட உரைகளை வாசித்து பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர்.
சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் �ஜோதிட கலா ரத்னா� ஜுவல்லரி பெண்மணி ஒருவர் �சிம்மத்தில் இருக்கும் சூரியனைப் புதன் பார்த்தால் அவர் அரசாங்கத்தில் எழுத்தர் வேலையில் இருப்பார்� என்று பலன் வாசித்துக் கொண்டிருந்தார்...!
நேரடி ஊடகங்கள் வந்த பின் இது போல இருக்கிறது ஜோதிடத்தின் நிலைமை....!
சரி...
தனது ராசிக்கேற்ற கல்லை மோதிரமாக அணிவது சரிதானா? நடக்கும் தசையின் படியும் ராசி மோதிரம் அணியலாமா? போட்டவுடனே அது நல்ல பலனைத் தந்து விடுமா? ஜோதிட சாஸ்திரத்தில் நமது ஞானிகளும், மேதைகளும் இப்படித்தான் நவரத்தினங்களை உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறார்களா என்று யோசித்தால் நமக்கு மயக்கமே வந்து விடும்.
ஜோதிட சாஸ்திரம் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்னங்கள் என்ன?
சூரியனுக்கு மாணிக்கம்
சந்திரனுக்கு முத்து
செவ்வாய்க்கு பவளம்
புதனுக்கு மரகதம்
குருவிற்கு புஷ்பராகம்
சுக்கிரனுக்கு வைரம்
சனிக்கு நீலம்
ராகுவிற்கு
கோமேதகம்
கேதுவிற்கு
வைடூரியம்
ஆகியவை தான்.
இதில் ராசிப்படி மேற்கண்ட கிரகங்களுக்கான கற்களை ஒருவர் அணிவதாக வைத்துக் கொண்டால், அஷ்டமாதிபதியை ராசிநாதனாக கொண்டவர் ராசிப்படி கல் அணியலாமா? உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுன ராசியில் பிறந்தவர் மரகதத்தை மோதிரமாகக் கொள்ளலாமா? கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவளத்தை அணியலாமா?
என்னிடம் ஒருவர் வந்தார். சுயமாக உழைத்து முன்னேறி கோடீசுவரராக ஆனவர். அவருக்கு கடக லக்னம். எட்டில் சனி. சனி தசை ஆரம்பித்த நான்கு வருடங்களில் தொழிலில் பெரும் சரிவு. மனைவி குழந்தைகள் பிரிந்து போய் விட்டனர். அடிமேல் அடி. கையில் நீலக்கல் வைத்து மோதிரம் போட்டிருந்தார். � எதற்காக நீலக்கல்? � என்றதற்கு சனி தசையும் நன்மை செய்வதற்காக ஜுவல்லரிகாரர் போடச் சொன்னார் என்றார்.
எனக்கு குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது என்பதோடு அதே குதிரை மண்ணையும் போட்டு மூடியது என்றுதான் தோன்றியது.
அஷ்டமாதிபதியின் கல்லை அணியக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இன்று அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை.
நவரத்தினங்களில் எதை அணியலாம்? எதை அணியக் கூடாது?
நமது மேலான ஜோதிட சாஸ்திரம் இதைப்பற்றி தெளிவாகச் சொல்வது என்ன?
 லக்னப்படியும், ராசிப்படியும் நல்லது செய்ய விதிக்கப்பட்ட கிரகம் வலிமை குறைந்திருந்தால் அந்தக் கிரகத்திற்குரிய கல்லை அணியலாம்.
 6,8 க்குடையவர்களின் ராசிக் கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. பாதகாதிபதியின் ராசிக் கல்லும் அப்படியே... (பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும், அணியக் கூடாது)
 லக்னாதிபதி வலிமை குறைந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் அவரின் ராசிக்கல்லை வலது கை மோதிரவிரலில் அணிவது நல்லது. அவருக்கு ஆறு, எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால் லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத்திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும்.
 5,9 போன்ற யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது அவர்களின் ராசிக்கல்லை தாராளமாக அணியலாம்.
 2,11,4,7,10 பாவங்களின் அதிபதிகள் சுபராகி அவர்களின் தசை நடந்தால் அவர்கள் இருக்கும் இடத்தின்படி ஆராய்ந்து மோதிரம் அணியலாம்.
 ராகு,கேதுக்களின் தசை நடக்கும் போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி லக்ன சுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு,கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் ராசிக்கல்லை அணியலாம்.
 ராகு,கேதுக்கள் 3,11ல் இருந்தால் மட்டுமே அவர்களின் ராசிக் கற்களை அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
 கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற அதாவது கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்ற குருவும், புதனும் எந்த பாவர் பார்வையும், சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. (லக்னம் கேந்திரத்திற்கும், திரிகோணத்திற்கும் பொதுவானது. லக்னத்தில் இவர்கள் இருந்தால் தோஷம் இல்லை.)
 மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்சலோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்னக்காரர்கள் தங்கத்தில் அணியலாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.
அதாவது ரத்தினங்களை கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது. அவைகளை அணியப் போகிறவரின் பெயர், ராசி, நட்சத்திரப்படியும் என்ன நோக்கத்திற்காக அவர் அணியப் போகிறாரோ அதன்படியும் உச்சாடனம் செய்து மந்திர உருவேற்றிய பின்பே அது மோதிரமாக அணியப்பட வேண்டும்.
குறைந்தது ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்வது நல்லது.
கோவிலின் வெளியே வாசலில் படிகளாக பதிக்கப்பட்டிருக்கும் கற்களும், உள்ளே இருக்கும் நமது தெய்வங்களும் ஒரே கல்லில் செய்யப்பட்டவைதான். ஆனால் நாம் தெய்வங்களாக வணங்கும் நமது சிலைகள் ஆகம முறைப்படி உருவேற்றப்பட்டு, பலப்பல முறைகளின் படி சக்தியூட்டப் பெற்று பின்னரே பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
அதன் பிறகே அந்த தெய்வங்கள் நமக்கு அருள்புரிகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!
உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக "அதிர்ஸ்டக் கற்களை" பாவிக்கும்படி சோதிடர்கள் சிபாரிசு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பரிந்துரைக்கிறோம்..உங்கள் பிறந்த ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் நன்மை செய்யக்கூடிய கிரகத்துக்குண்டான ராசிக்கற்களை வெள்ளி  மோதிரத்தில் அணியும் போது நிச்சயம் நல்ல பலன் உண்டாகும்..இதனை நான் கடந்த 12 வருடமாக சிபாரிசு செய்து பலருக்கும் நல்ல பலன்களை உண்டாக்கி,பிரச்சினைகளை தீர்த்திருக்கிறேன்...மோதிரம் தேவை படும்  நபர் என்னை தொடர்பு  கொள்ளவும்  உங்கள் ஜாதகம்  பார்த்து உங்களுக்கான இரத்தின மோதிரம்  சிபாரிசு  செய்யப்படும்

குளிகை காலம் கடன் வாங்கிடாதீங்க

குளிகை காலம் நம் ஊரில் அதிகம் பயன்படுத்தப்படுவது இறந்தவர்களை இடுகாட்டுக்கு தூக்கும்போது இந்த நேரத்தில் எடுக்ககூடாது என்பதற்காகத்தான்...இந்த நேரத்தில் எடுத்தால் திரும்ப திரும்ப கெட்டது நடக்கும் என ஒரு நம்பிக்கை உண்டு...அதை தவிர வெகுஜன மக்களதிகம் வேறு எதற்கும் இதனை பார்க்க மாட்டார்கள்....எனக்கு தெரிந்த ஒருவர் இந்த குளிகை நேரத்தை நல்ல காரியத்துக்கு அதிகம் பயன்படுத்துவார் குளிகையில் நிலம் சொத்துக்களும் வாங்குவார் ..கேட்டால் அப்பதானே திரும்ப திரும்ப வாங்க முடியும்...இந்த நேரத்தில் கடன் வாங்கிடாதீங்க திரும்ப திரும்ப வாங்கும்படி ஆகிடும்!!

கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

ஞாயிறு = 03.00 - 04.30

திங்கள் = 01.30 - 03.00

செவ்வாய் = 12.00 - 01.30

புதன் = 10.30 - 12.00

வியாழன் = 09.00 - 10.30

வெள்ளி = 07.30 - 09.00

சனி = 06.00 - 07.30

கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்

ஞாயிறு = 09.00 - 10.30

திங்கள் = 07.30 - 09.00

செவ்வாய் = 06.00 - 07.30

புதன் = 03.00 - 04.30

வியாழன் = 01.30 - 03.00

வெள்ளி = 12.00 - 01.30

சனி = 10.30 - 12.00

மகாளயபட்ச அமாவாசை 23.9.2014



வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.

புரட்டாசி மாதம் அமாவாசை மகாளயபட்ச அமாவாசை எனப்படும்...மற்ற அமாவாசையை விட புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்தது...மகாளய காஅம் இன்று முதல் அமாவாசைக்கு அடுத்த நாள் வரை தொடர்கிறது அதாவது 9.9.2014 முதல் 24.9.2014 வரை.புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தங்கள் சந்ததியர்களை காணவருகின்றார்கள்.

இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா
இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம்
அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.

கரிநாள்:

கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம் தேதிகள்

சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19

சந்திராஷ்டமம்


சந்திராஷ்டமம்


நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும்.

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

சனி, 6 செப்டம்பர், 2014

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.

காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளோம்.
எண் - கோயில் - இருப்பிடம் - போன்
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.


காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084.
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.

திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725,
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.

வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.

திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.

கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.

விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919.
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.

நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.

ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.

திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.

திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260.
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455.
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091.
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484.
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.

அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.

கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.

புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212

தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043.
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047.
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332.
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334.
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858.
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237.
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354,
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660.
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138.
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453.
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.

திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343.
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343.
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646.
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146.
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300.
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457.
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416.
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555.
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646.
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707.
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876

நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273.
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634.
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி


சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...