சனி, 29 ஏப்ரல், 2017

அதிஷ்டக் கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு?



பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்.

நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.

அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.

அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; எமது உடலுக்கு நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடிய "நவரத்தின கற்களை" கண்டறிந்து அதனைப் பாவிப்பதன் மூலம் எமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்றும் அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒரே சூழ்நிலையில் வாழும் ஒவ்வொருவருக்கும் வாழ்கையில் பல வித்தியாசங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.

விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளியின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.

அதிஷ்டக் கற்கள் பாவிப்பதற்கான காரணங்கள்:
ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, எமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் நல்ல கதிர்கள் குறைவாக காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிகளுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம். நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிகளை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை. அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது. அதிஷ்டக் கற்களை பாவிக்கும் போது அந்தக் கற்களின் குவியம் எமது உடம்பின் ஒரு பகுதியில் முட்டும்படியாக அணிந்து கொள்வதனால் அவ்வொளி எம்மீதுபட்டு வாழ்கை பிரகாசிக்கும் என்பது சோதிடர்கள் நம்பிக்கை. தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.

மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. அதனை மாற்றிவிட முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான அதிஷ்டக் கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிவீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் எனறும் கூறலாம்.

இராசிகளின் பிரகாரம் ஒருவருக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய நவரத்தின கற்கள்;

மேஷம் - பவளம்:

மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் - வைரம் (Diamond):

ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் - மரகதம்:

மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

கடகம் - முத்து:

கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

சிம்மம் - மாணிக்கம் (Ruby):

சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி - மரகதம்:

கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது

துலாம் - வைரம் (Diamond):

துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம் - பவளம்:

விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):

தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மகரம் - நீலக்கல் (Blue Shappire):

மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

கும்பம் - நீலக்கல் (Blue Shappire):

கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம்,

முத்து (pearl)


முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்கு உண்டு.

வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும். பேய்களை விரட்டும். முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும் தடைகளை முத்து போக்கும். விலகிசென்ற நட்புகளையும், உறவுகளையும் சேர்த்து வைக்கும்.

முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.

யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம்.
ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.
எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும், பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.
மேலும், 7,16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.


வைரம் (diamond)

உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.

யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6, 15. 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் மற்றும் விதி எண் 6, 15, 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!

வைடூரியம் (cat's eye)


இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது  நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.

சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .

வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும், 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண், பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!

மாணிக்கம் (ruby)


இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .

பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .

மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.

மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .

யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம். எண்கணித படி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும், பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.

மரகத பச்சை (emerald)


ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.

பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.

மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.

யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்

புஷ்பராகம் (topaz)


இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.

புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.

யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்

பவழம் (coral)


இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.

யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.

இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

நீலம் (sappihire)


ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.

தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.

நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.

யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்; எண் கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.

மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்

கோமேதகம் (hessonits)


புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.

உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.

யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?

திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். மற்றும் எண்கணித படி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.

எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?

ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!

அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!

ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்

திங்கள் : முத்து, வைடூரியம்

செவ்வாய் : பவழம்

புதன் : மரகதம்

வியாழன் : புஷ்பராகம்

வெள்ளி : வைரம்

சனி : நீலம்


நவரத்தின கற்களை விட அதிஷ்டமும் நன்மையும் தரக்கூடிய மலிவான கற்களும் தற்பொழுது பாவனையில் உள்ளது.

சந்திர காந்தகற்கள் (moon stone), சூரிய காந்தகற்கள்( sun stone)

சந்திர காந்த கற்கள்
இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். ஜலகண்டதில் இருந்து காக்கும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்
தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.

சூரிய காந்த கற்கள்
இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.

யாரெல்லாம் அணியலாம் ..?

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம்.

நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்---
 யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு கண்ணோட்டம்

செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து. மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம். நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும். தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும். இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை

மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும். பிறகு கடிகார சுற்றுபடி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.

நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின 9-கற்கள் பதித்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம். எதிலும் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும். உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?

மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.

அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!

மாணிக்கம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல்

முத்து : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல், மோதிர விரல்

புஷ்பராகம், கனக புஷ்பராகம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல்

கோமேதகம் : இணைக்கும் உலோகம் - வெள்ளி அல்லது தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல், நடு விரல்

மரகதம் : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் - சுண்டு விரல், மோதிர விரல்

உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்ட இரத்தினம் எது..?

ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம். ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.

புஷ்பராகம் : கல்வித்துறை. கலைத்துறை, எழுத்து துறை, பொருளாதார துறை, சமய துறை, அற நிலைய துறை

வைரம் : விவசாயம், நிர்வாகம், கோழிப்பண்ணை, பால் பண்ணை, பழ மரங்கள் பயிரிடுவோர்

கோமேதகம் : ஜோதிடர், கைரேகை நிபுணர், அரசியல் விமர்சகர்
இரத்தின மோதிரம் தேவை படுபவர்கள் என்னை போனில் தொடர்பு கொள்ளவும்  கொரியர் மூலம் மோதிரம் அனுப்பிவைக்கப்படும்                                  ( இந்தியா மட்டும்) 

உங்களுக்கு நல்ல துணை அமைய வேண்டுமா?



✤ பிள்ளைகளை பெற்று, அவர்களை கல்வியில் உயர வைத்து, நல்ல பதவியிலும் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் பெற்றோர்கள். அந்தப் பிள்ளைகளும் வெளி மாநிலம், வெளிநாடு சென்று கை நிறைய சம்பாத்தியம் செய்வார்கள். பெற்றோர்கள் வீடு, வாசல், நிலபுலன்கள் என்றும், பொன்னும் பொருளும் வாங்கிச் சேர்ப்பார்கள்.

✤ மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் அவர்கள் திருமணத்திற்கு பெண் அல்லது மணமகன் தேடும்போது திருமணப் பொருத்தம் உள்ளதா என்று மேலோட்டமாக பார்ப்பார்கள், மணமகன் அல்லது மணமகள் ஜாதக் கட்டத்தில் குறைபாடுகள் உள்ளதா-இந்த ஜாதகத்தை இணைத்தால் சிறப்பாக இருக்குமா என்று பலர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

✤ பணம், நகை, அழகு இந்த மூன்றின் அடிப்படையில் மட்டுமே சிலர் மணமகளை தேர்வு செய்கின்றனர். ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை காணத் தவறிவிடுகின்றனர். எப்படிப்பட்ட ஜாதகங்களை இணைக்கக் கூடாது என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

✤ ஒரு ஜாதகத்தில் குருபகவான் சமசப்தமப் பார்வையாக அமையக் கூடாது. குரு, சுக்கிரன், செவ்வாய் இணைவு இருக்கக்கூடாது. குருபகவானும் சுக்கிரபகவானும் இணைந்து இருந்திட, அதற்குக் கேந்திரத்தில் செவ்வாய் இருக்குமேயானால், அந்த ஜாதகர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.

✤ மணமக்களின் ஜாதகத்தில் சனி, ராகு இணைந்தோ அல்லது சம்சப்தமப் பார்வை பெற்றோ இருக்கக் கூடாது. லக்கனத்துக்கு 7ஆம் வீட்டின் அதிபதி 7ஆம் வீட்டிற்கு 6,8,12-ல் அமையக் கூடாது. அதே நேரத்தில், 8ஆம் அதிபது 6,8,12-ல் இருந்தாலும், நீசம், அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு 1,7,8-ஆம் வீடுகளில் பலம் பொருந்தியதாக உள்ள ஜாதகங்களைதான் இணைக்க வேண்டும். இப்படிப்பட்ட வகையில் உள்ள ஜாதகங்களை இணைத்தால் தம்பதிகள் வாழ்க்கை வளமாக அமையும்.

பரிகாரம் :

➠ ஜாதகத்தை நல்ல முறையில் தேர்வு செய்யாமல் திருமணம் செய்தவர்கள் மணவாழ்க்கை சிறப்பாக இல்லயே என்று வருந்தலாம். அப்படிப்பட்டவர்கள் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசித்துவர மணவாழ்க்கை சிறப்பாகும். குறிப்பு :


மனிதனை ஆட்டிப்படைக்கும் நவகிரகங்கள்!

✵ கிரஹம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு துகள்களை காந்தம் எப்படி தன்னிடம் இழுக்கின்றதோ, அவ்வாறே நவகிரஹங்களும் தங்களுக்கே உரிதான இழுக்கின்ற சக்தியின் வாயிலாக வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய சுக துக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள மனிதனின் மனநிலையை அதற்கு ஏற்றவாறு செயல்புரியச் செய்கின்றன.

கிரகங்கள் என்பவை யாவை?

✵ படைத்தல், காத்தல், அழித்தல் என பரம்பொருள் இருக்க, நவகிரகங்களுக்கு அவசியம் என்ன? மனித சரீரம் என்ற தேசத்திற்கு சகலோக நாயகரான பரம்பொருளே தலைவர் எனினும், அந்தச் சரீரத்திலுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அவர் அதிகாரியாக நியமித்து இருக்கிறார்.

✵ அவ்வாறு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் கிரகங்கள் அந்தந்த மனிதன் முன் ஜென்மங்களில் செய்த வினையை அனுசரித்து அதற்கு தகுந்த பலன்களைத் தத்தம் தசாபுத்திகள் நடக்கும் போது கொடுத்து வருகின்றன.

சூரியன் ➨ தந்தை (ஆத்மா, எலும்பு).

சந்திரன் ➨ தாய் (மனம், இரத்தம்).

செவ்வாய் மற்றும் ராகு ➨ சகோதரர்கள் (பலம், மஜ்ஜை).

புதன் ➨ தாய்மாமன் (வாக்கு, தோல்).

குரு ➨ புத்திரக்காரன் (ஞானம், தசை, மாமிசம்).

சுக்கிரன் ➨ களத்திரக்காரகன் (காமம், இந்திரியம்).

சனி, கேது ➨ ஆயுள் (துக்கம், நரம்புத் தசை).

✵ ஒரு மனிதன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா, அவன் எலும்பு பலம் உள்ளதா, தந்தை எப்படிப்பட்டவர், அவர் ஆயுள் எப்படி என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் அவனுடைய சூரியன் இருக்கும் நிலையை அறிந்து சொல்ல முடியும். அதாவது கிரகங்கள் எல்லாம் நம் உடலில் குடி கொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும்.

✵ நமது உடலோடுதொடர்பு கொண்டு உள்ள கிரகங்களைத் திருப்தி செய்யவும், உடலில் அந்தந்த பாகங்களை வலிமைப்படுத்தவும், அந்தந்த கிரகங்களுக்குரிய தானியங்களான நெல், துவரை, எள் போன்றவற்றை உபயோகித்து வருகிறோம். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனிக்கிரஹத்தைத் திருப்தி செய்யும் முறையாக நல்லெண்ணைய் ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் மூலம் நீண்ட ஆயுளை அடைய சனி நீராடு என்பது பெரியவர்களின் வாக்கு ஆகும்.

✵ இந்த செயல்கள் அனைத்தையும் நன்கு கண்டுணர்ந்தால் உடை, உணவு, செயல், சேவைகள் போன்ற எல்லாவற்றையும் நம்மை அறியாமலே கிரகங்களின் பிரிதிக்காக நாம் செய்து வருகிறோம். இவ்வாறாக கிரகங்கள் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் ஒன்றி செயல்படுகின்றன என்பது கண்கூடாகும்.

பாசமான இராசிகள் விளக்கம்!

பெற்றவர்களாயினும், உடன் பிறந்தோராயினும், மனைவி மக்கள் ஆயினும் உயிர் தோற்றத்தின் விளைவு இயற்கையான பாச உணர்வு கொண்டதாக அமைகின்றது. ஜீவராசிகள் எதுவாயினும் அதற்கு தன்னுடைய இன ரீதியான பாசம் என்பது இயற்கை உணர்வுகள் பிரதிபலிப்பாக அமையும். அப்படி நோக்கும்போது ரிஷபம், சிம்மம், மகரம், மீனம் தான் சார்ந்த அல்லது தன்னை சார்ந்த உயிர்களிடத்து பாசத்தை வெளிப்படுத்தும்.

ரிஷபம் :

💮 ரிஷபம் இயல்பாக பு மித் தத்துவமாகையால் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும் அவர்கள் முன்னேற்றத்திலும், நலனினும் உணர்வுப்பு ர்வமான அக்கறையோடு பாசத்தை வெளிப்படுத்தும். அதேநேரம் அதற்குரிய பிரதிபலனை எதிர்பார்க்கும் போது சில வேளைகளில் ஏமாற்றம் அடைவது உண்டு. பு மிக்கு கொடுக்கத் தெரியும். பிரதி பலன் எதிர்பாராமல் கொடுப்பது பு மி மட்டுமே.

சிம்மம் :

💮 சிம்மம் நெருப்பு இராசியாக இருந்தாலும் தன்னிடம் மரியாதை கொண்டவர்கள் மீது நம்பிக்கையும், அன்பும் செலுத்தும் போக்கு காணப்படும். இதிலும் பிரதி அனுகூலம் கிடையாது. உயர்ந்த இடத்தில் இருக்கும் சிம்மம் ஏங்குவது இல்வாழ்க்கையில் இருக்கக்கூடிய பாச உணர்வுக்கும் ஒற்றுமைக்கும். ஆனால் அன்னிய உயிரினங்கள் இதன் மீது மரியாதை கலந்த பாசம் கொண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மகரம் :

💮 மகரம் இந்த இராசி ஓரளவு மறைவின்றி எதையும் வெளிக்காட்டும் என்பதோடு, இதனிடமிருந்து பாசத்தைக் காட்டி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சலிக்காமல் செய்யும் மனப்போக்குடையது. இதற்கு ஏமாற்றம் என்பது மட்டும் பிடிக்காது. உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் மீது பாசத்தை எதிர்பார்க்கும் போக்கு இதற்கு உண்டு.

மீனம் :

💮 மீனம் இயற்கையான உணர்வுகளுடன் கூடிய பாசம் இதில் காணப்படும். இருப்பது என்ன, எடுத்தது என்ன என்பதை கணக்கு பார்க்காமல் காலத்தால் செய்யும் போக்கு உடையது. எல்லா உயிர்களிடத்தும் இயல்பான பாசம் காட்டும் போக்கு உடையது.

யார் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்?

✜ 'பணம்" அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அதிசய கண்டுபிடிப்பு. மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாறுதல்களையும் சோர்வடைய வைக்கும் சோகங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை கொண்ட முதல்தரமான அடிப்படைத்தேவை என்றே கூறலாம்.

✜ ஜோதிடத்தின் இன்றைய பதிவில் எந்த மாதிரியான கிரக அமைப்புகளை கொண்ட ஜாதகர்கள் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பணம் சம்பாதிப்பார்கள் என்று பார்க்கலாம்.

✜ பின்வரும் கிரக அமைப்புகள் கொண்ட ஜாதகர்கள் குறிப்பிட்ட திசாபுத்தி காலங்களில் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பணம் சம்பாதிப்பார்கள். மற்றபடி அவர்கள் வாழ்க்கையில் பணத்தட்டுப்பாடு என்பது நிரந்தரமாக ஒருபோதும் இருக்கவே இருக்காது.

கிரக அமைப்புகள் :

✫ ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டின் அதிபர் லக்னத்தில் தனித்து அல்லது சுபகிரக சேர்க்கைஃபார்வை பெற்றோ இருந்தால் அந்த கிரகத்தின் திசாபுத்தி காலத்தில் ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார்.

✫ ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டின் அதிபர் இரண்டாம் இடத்தில் சுபகிரக சேர்க்கை அல்லது பார்வையுடன் ஆட்சி பெற்றிருப்பது மாபெரும் யோகமாகும். இவர் செலவழிக்க செலவழிக்க பணம் வந்துகொண்டே இருக்கும். எப்பொழுதும் அவர் பாக்கெட்டில் பணம் இருந்துகொண்டே இருக்கும். இந்த கிரகத்தின் திசாபுத்தி காலத்தில் பணவரவு மிகமிக அதிகமாக இருக்கும் என்பது உறுதி.

✫ ஜாதகத்தில் இரண்டாம் வீட்டின் அதிபர் நான்காம் இடத்தில் தனித்து அல்லது சுபகிரக சேர்க்கைஃபார்வை பெற்றோ இருந்தாலும் பணவரவு அதிகமாக இருக்கும். இந்த கிரகத்தின் திசாபுத்தி காலத்தில் சொந்தங்களில் தாய்வழி உறவினர்கள் மூலமாகவும், வியாபாரத்தின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.

✫ ஜாதகத்தில் இரண்டாம் வீட்டின் அதிபர் ஐந்தாம் இடத்தில் தனித்து அல்லது சுபகிரக சேர்க்கைஃபார்வை பெற்றோ இருந்தால் அந்த திசாபுத்தி காலத்தில் பிள்ளைகள் மூலம் பணவரவு இருக்கும், அல்லது சொந்த ஊரில் செய்யும் தொழில் மூலமாகவோ, அரசாங்கவேலை கிடைப்பதன் மூலமாகவோ பணவரவு அதிகமாக இருக்கும்.

✫ இரண்டாம் வீட்டின் அதிபர் ஏழாம் இடத்தில் தனித்து அல்லது சுபகிரக சேர்க்கைஃபார்வை பெற்றோ இருந்தால் திருமணம் மூலம் பணவரவு அதிகமாக இருக்கும். திருமணத்திற்கு பின் வருமானம் பெருகும்.

✫ இரண்டாம் வீட்டின் அதிபர் 6,8,12 போன்ற இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆட்சிஃஉச்சம் பெற்று பலத்துடன் இருந்து திசை நடைபெற்றால் அந்த காலகட்டத்தில் உறுதியாக பணவரவு பன்மடங்கு அதிகரிக்கும்.

✫ ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் 2,11ம் இடங்களுக்கு உரிய கிரகங்கள் சேர்க்கை பெற்று பலத்துடன் அமர்வது தனயோகம் ஆகும். இந்த கிரக அமைப்புக்கு குருவின் பார்வை கிடைப்பது மேலும் சிறப்பாகும்

அமாவாசை வழிபாட்டின் மகத்துவம்!


★ நம்முடைய ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பு ஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பு ஜை செய்யப்படுகிறது.

அமாவாசை அன்று வழிபடக் கூடிய தெய்வங்கள் :

★ விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்தியங்கரா தேவி, ஸ்ரீவாராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசணியம்மன், அங்காளபரமேஸ்வரி.

★ அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பு லோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பு ஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

★ சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

★ நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். அமாவாசை திதி வழிபாடு செய்து கடவுளின் அருளையும், முன்னோர்களின் ஆசிர்வாதமும் பரிபூர்ணமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

★ அன்றைய நாளில் ஒருவருக்காவது அன்னதானமும், முடிந்தால் வஸ்திர தானமும் செய்யலாம்.

★ துஷ்டசக்திகளை விரட்டும் ஆற்றல் ஆத்மாவுக்கு உண்டு. துஷ்டசக்திகள், பித்ருபூஜையை தடையில்லாமல் செய்பவர்களை நெருங்காது. இதன் பிறகுதான் நாம் வணங்கும் குலதெய்வமும், இஷ்டதெய்வமும் நமக்கு நல்வாழ்க்கை தருகிறது.

விஷ்ணு கோவில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்



❖ விஷ்ணு கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலினுள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

❖ கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும்.

❖ கோவிலினுள் பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது.

❖ மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.

❖ கோவிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

❖ கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

❖ கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும்.

❖ கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

வாஸ்து சாஸ்திரம் அறிவோம்!



  வாஸ்து சாஸ்திரத்தில் அடிப்படை விதிகளின் படி தென்கிழக்கு, வடமேற்கு பற்றி பார்ப்போம்....!

🌀 வாஸ்து சாஸ்திரத்தில் அடிப்படை விதிகள் உண்டு, அதில் இன்று தென்கிழக்கு, வடமேற்கு உண்டான அமைப்புகளும் அதற்குரிய நன்மை, தீமைகளையும் பற்றி அறிவோம்.

🌀 நாம் கட்டக்கூடிய கட்டிடங்கள் எப்பொழுதுமே சதுர, செவ்வக வடிவில் இருப்பதே சிறப்பை தரும். கட்டிடத்தின் வெளிப்புற பகுதி எப்பொழுதுமே தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதியின் தரைத்தளம் ஒரே உயரமாகவும் சமமான அளவுகளாகவும் இருப்பது சிறப்பு.

🌀 கட்டிடத்தின் உட்பகுதியிலும் தரையை பொருத்தமட்டில் ஒரே சமமான அமைப்பில் இருப்பது மிக மிக சிறப்பை தரும்.

தென்கிழக்கு பகுதியில் நல்ல அமைப்புகள் :

🌀 இங்கு தென்கிழக்கு பகுதியில் என்ன அமைப்பு இருந்தால் நன்மை என்று பார்ப்போம். அதில் படி அமைப்புகள் உள்பகுதியில் இருப்பதும் சிறப்பு, வெளிப்பகுதியில் இருப்பதும் சிறப்பு. சமையலறை உள்பகுதியில் இருப்பது மிக மிக சிறப்பு. வெளிப்புற பகுதியில் போர்டிக்கோ, மாட்டுத்தொழுவம், கார்பார்க்கிங், உயரம் குறைவான மரங்கள் இவை அனைத்தும் நல்ல அமைப்புகள்.

தவறான அமைப்புகள் :

🌀 செப்டிங் டேங், கிணறு, போர், சம்பு, உயரமான மரங்கள், வாழை போன்ற பழ மரங்கள் தென்கிழக்கு பகுதியில் இருக்காமல் இருப்பது மிக சிறப்பு.

வடமேற்கு பகுதியில் நல்ல அமைப்புகள் :

🌀 வெளிப்புற படி அமைப்பு சிறந்தது, கார்பார்கிங், டாய்லெட், செப்டிக் டேங், வாட்சுமேன் செட், போர்டிக்கோ, மாட்டுத்தொழுவம் ஆகியவை வெளிப்புற நல்ல அமைப்புகளே.

தவறான அமைப்புகள் :

🌀 வடமேற்கு பகுதியின் தவறான அமைப்புகளான, உள்முனை படி அமைப்பு, கிணறு, போர், சம்பு, பையோ கேஸ், வடமேற்கு வாசல், வடமேற்கு பகுதியை வாடகைக்கு விடுதல் போன்றவைகள் தவறான அமைப்புகள்.

🌀 நம்முடைய கட்டிடத்திற்கு காம்பவுண்ட்டை பொருத்தவரை தெற்கு, மேற்கு பகுதிகள் சற்று உயரமானதாகவும், வடக்கு கிழக்கு பகுதி சற்று உயரம் குறைவானதாக இருப்பது மிக மிக சிறப்பை தரும்.

யோகம் சுகம் பாக்யம்

பிறப்பு முதல் ஆயுள் வரை யோகம் சுகம் பாக்யம்  அனுபவிக்கும் யோகம் யாருக்கு

🌠 மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் தன் ஆயுள் உள்ள வரை சுகபோக வாக்கையை வாழ்வதற்கு ஆசைப்படுகிறான். அவ்வாறு பிறந்தது முதல் தள்ளாடும் வயது வரை சுகம் அனுபவிக்கும் யோகமானது யாருக்கு என்பதை பற்றிய ஒரு கண்ணோட்டம்.

🌠 ஜென்ம லக்னாதிபதி தன் சொந்த இராசியின் நவாம்சத்திலோ அல்லது உச்ச இராசியின் நவாம்சத்திலோ இருந்தால் சம்மந்தப்பட்ட ஜாதகர் தள்ளாடும் வயதில் கூட சுகம் அனுபவிப்பார்.

🌠 ஜென்ம இலக்னாதிபதி வர்க்கோத்தமாம்சம் பெற்று அமைந்திருக்குமானால் ஜாதகர் தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் சுகபோகத்திற்கு குறைவில்லாமல் இருப்பார். மேலும் ஜென்ம இலக்னாதிபதி கேந்திரம், திரிகோணங்களில் வலுப் பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும்.

🌠 அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோக அமைப்பு ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில், அந்த ஜாதகரானவர் சுகவாசியாக திகழ்வார்.

ஜாதகத்தி யோக அமைப்புகள் :

🌀 சுகஸ்தானாதிபதியை சுபகிரகமான குரு பார்க்கின்ற போது சுகம் உண்டாகிறது.

🌀 ஜென்ம இலக்கனத்தில் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இவைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையோ இருந்து, ஜென்ம இலக்னாதிபதியும் பலம் பெற்று இலக்கனத்தைச் சுபர் பார்க்கிற தன்மை.

🌀 நான்காம் இடம் எனும் சகஸ்தானத்தில் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இவைகளில் ஏதேனும் ஒரு கிரகம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் அமைந்திருப்பது.

🌀 நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் தாம் தம் சொந்த வீட்டில் அமையப் பெறுவது.

🌀 நான்காம் அதிபதியோடு பலம் பெற்ற குரு இணைந்து இருக்கிற அமைப்பு.

🌀 நான்காம் அதிபதி இருக்கும் வீட்டிற்கு முன்னும் பின்னும் சுபகிரகங்கள் கொண்ட அமைப்பு உள்ள தன்மை.

🌀 நான்காம் அதிபதி சுபக்கிரகங்களோடு இணைந்து கேந்திரம் அல்லது திரிகோணங்களில் அமைந்திருப்பது.

🌀 ஜென்ம இலக்னாதிபதியோடு மிகுந்த பலம் கொண்ட குருபகவான் சேர்ந்து இருப்பது.

🌀 ஜெனன இராசிக்கு பன்னிரெண்டிலும், இரண்டிலும் சுபகிரகங்கள் அமைந்து இருத்தல்.

🌀 இது போன்ற அமைப்புகள் உள்ள ஜாதகர்கள் தங்களுடைய பிறப்பு முதல் ஆயுள் முடியும் வரையிலும் (தள்ளாடும் வயதிலும்) சுகவாசியாகவே திகழ்ந்து சுகவாசியாகவே நல்ல முறையில் சீரும் சிறப்புமாக செல்வார்கள்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...