வியாழன், 12 நவம்பர், 2015

உங்களுக்கான அதிர்ஷ்ட இரத்தின மோதிரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்

எங்களிடம் உங்கள் ஜாதக குறிப்பை சொல்லி  உங்களுக்கான அதிர்ஷ்ட இரத்தின  மோதிரங்களை  பெற்றுக்கொள்ளுங்கள்  அதிர்ஷ்ட  கல்  மோதிரம்  தேவை  படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் cell.9380531339   ஒரிஜினல்  இரத்தின மோதிரம் 2+ காரட்  வெள்ளி மோதிரத்தின் விலை 1. மாணிக்கம் 5000 ரூபாய் 2. முத்து 4500 ரூபாய் 3. கனகபுஷ்பரகம் 5000 ரூபாய் 4..மரகதம் 5000 ரூபாய்  5.  ஓஹிட் ஜீர்கன் 4500 ரூபாய்              6. நீலம் 5000 ரூபாய் 7. பவளம் 10000 ரூபாய் 8. கோமேதகம் & வைடுரியம் இரண்டும் ஒரே  மோதிரமாக  5500 ரூபாய்கள் இவை அனைத்தும் முறையாக 100008 முறை மந்திர உரு ஏற்றப்பட்ட இரத்தின மோதிரங்கள் ஆகும்  நீங்கள் பணம் அணுப்பிய தேதியில் இருந்து 12 நாள்களில் உங்களுக்கு உங்கள் மோதிரம் கிடைக்கும்...................                                                                9. நவரத்தின கல்  மோதிரம்  யாருமே போடகூடாது . ஏன் என்றால் ஒருவர் பிறந்த  ஜாதகத்தில்  9 கிரகங்களும் சாதகமான  சூழ் நிலையில்  இருக்காது .அதனால் நவரத்தின கல் அணிவதை தவிர்ப்பது நல்லது . அவரவர்  ஜாதகத்தை  ஆராய்ந்து  அணிவது மிக   சிறப்பு                                                                  எங்களிடம் உங்கள் ஜாதக குறிப்பை சொல்லி  உங்களுக்கான அதிர்ஷ்ட இரத்தின  மோதிரங்களை  பெற்றுக்கொள்ளுங்கள்
மேஷ ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மேஷராசி  காரர்கள்  பவளம்  மோதிரம்  அணியும்போது  கவனிக்கவேண்டியது . மேஷராசிக்கு  செவ்வாய்  பகவான்  1மற்றும்  8ம்  இடத்துக்கு  உரியவர் செவ்வாய் கேந்திரம்திரிகோணம்அடைந்தால்  நன்மைமேலும்  நட்பு  சாரம்பெற்றால்  நல்லபலன்களும்அம்சத்தில்  கெட்டுவிட்டாலும் , பிறந்த நட்சத்திரத்தில்  இருந்து , 3,5,7,12.14,16,21,23,25. நட்சரத்தில் இருந்தால்  பலன் கிடைக்காது . லக்னத்தின்  அடிப்படையில்  யோககாரர் யார்  என்பதை  ஜாதகத்தில்  அறிந்து  கொண்டு  ராசிமோதிரம்  அணிவது  மிகுந்த பலன்  கொடுக்கும் .
ரிஷப ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
ரிஷபம் ராசிகார்கள் நிறையபேர் வைரம் மோதிரம் அணி...
ரிஷபம் ராசிகார்கள் நிறையபேர் வைரம் மோதிரம் அணி...: ரிஷப  ராசிகாரகர்கள்  சுக்கரனை  அதிபதியாக  கொண்டவர்கள் . சுக்கிரன்  ரிஷப  ராசிக்கு  1ம்  மற்றும்  6ம் வீட்டுக்கு  உடையவர் . லக்னத்தை  அடிபடையாக வைத்து போடலாம்
ரிஷப  ராசிகாரகர்கள்  சுக்கரனை  அதிபதியாக  கொண்டவர்கள் .
சுக்கிரன்  ரிஷப  ராசிக்கு  1ம்  மற்றும்  6ம் வீட்டுக்கு  உடையவர் . லக்னத்தை  அடிபடையாக  வைத்து  பார்ப்பது  மிகவும்  சிறப்பானது .
ரிஷப லக்னத்துக்கு  1,2 ,4,6,7.9,10,11. இந்த  இடங்களில்  நட்பு  சாரம்
பெற்று  இருந்தால்  வைரம் மோதிரம்  அணிவது  சிறப்பு  பலன்களை
கொடுக்கும் . மேலும்  அம்சத்திலும்  நல்ல  இடத்தில்  இருக்கவேண்டும் . மேலும்  6ம்  இடத்தில  ஆட்சி  பெற்று  இருந்தால்  வியாதியை
கொடுக்கும் . கெட்ட கிரங்களின்  சேர்கை  பெறகூடாது .பிறந்த
நட்சத்திரத்தில்  இருந்து 3,5,7,12,14,16,17,21,25. இந்த நட்சத்திரத்தில்
இருந்தால்  வைரமோதிரம்  அணிவது  சிறப்பல்ல . மேலும்  ரிஷப
லக்னத்துக்கு  புதன்  யோகாதிபதி . ஜாதகத்தில்  அவர்  இருக்கும் இடம்
அறிந்து  மரகத பச்சை  அணிவது  முதல் தர  பலன்  கொடுக்கும் .
மிதுன ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மிதுன ராசி , மிதுன லக்ன காரர்கள்  , என்ன ராசிகல்   போடலாம் ? இது சற்று யோசிக்க வேண்டிய  விசியம் . இந்த  லக்ன , ராசி காரர்களுக்கு , புதன் , சுக்கிரன் , சனி , மூவரும்  யோகம் கொடுக்க கூடியவர்கள் . புதன்  லக்னத்துக்கு  1ம் . 4ம் வீட்டுக்கு  உடையவர் . சுக்கிரன்  5ம் மற்றும்  12ம் வீட்டுக்கு  உடையவர் . சனி பகவான் 8,9 ம்  வீட்டை  உடையவர் . இந்த  லக்ன ,ராசிகாரர்களுக்கு  இந்த மூவரும்  கெடக்கூடாது . மேலும்  இந்த  மூவரும்  ராசி மற்றும்  அம்சத்தில்  கெடக்கூடாது . இந்த லக்ன , ராசிகாரர்களுக்கு  புதனுக்கு  உரிய மரகத பச்சை கல் சிறந்தது . இந்த மூன்று கிரகங்களும்  ஜாதகர்
 பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில் இருக்க கூடாது .
கடக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கடக ராசிக்காரர்கள் . மற்றும்  கடக லக்ன காரர்களுக்கு  , செவ்வாய்  பகவான் முழு யோகத்தை  கொடுக்க கூடியவர் . இந்த  லக்ன,  ராசிகார்களுக்கு , செவ்வாய்  5ம் மற்றும்  10ம்  வீட்டுக்கு உடையவர் . செவ்வாய்  இந்த  லக்ன ,ராசிகாரர்களுக்கு  , கேந்திரம் , திரிகோணம் ( 1,4,5,7,10,11) இடத்தில இருந்தால் மிக சிறந்த பலன்களை  வாரி வழங்குவார் . மேலும்  செவ்வாய் பகவான்  ராசி ,மற்றும்  அம்சத்தில்  கெடகூடாது . மற்றும்  சனி பார்வை , சேர்க்கை இருக்ககூடாது . இந்த மாதிரி  அமைப்புஉடையவர்கள்  பவள கல் மிக சிறந்த பலன் கொடுக்கும் . ஜாதகத்தில்  பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,15 ,21,23,25, இந்த நட்சத்திரங்களில்  செவ்வாய் பகவான் இருக்க கூடாது .
சிம்ம ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
சிம்ம ராசிகாரர்கள் . சிம்ம லக்னகாரர்கள் , பவளகள்  அணிவது
சம்பந்தமாக  ஜாதகத்தை  ஆராய்ந்து அணிவது  நல்லது .
என்னவென்றால்  , ஸ்திர லக்ன , ராசிகார்களுக்கு  9ம் இடம் பாதகமான
இடம் . அதனால்தான்  ஆராய்ந்து  அணிவது நல்லது .  இந்த லக்ன
,ராசிகார்களுக்கு . குரு பகவான் 5ம் மற்றும் 8ம் வீட்டுக்கு உடையவர் .
அதனால்  இவர்கள்  புஷ்பராகம் கல்  அணிவது  நல்லது .குருபகவான்
நல்ல இடத்தில் அமர்ந்து , கெட்ட கிரகங்கள்  பார்வை இல்லாமல்
,அம்சத்தில் கெடாமல் . இருந்தால்  புஷ்பராகம்  அணிவது நல்லது
.மேலும் ஜாதகத்தில்  பிறந்த நட்சத்திரத்தில் இருந்து
3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில்  யோகம்  தரக்கூடிய  கிரகம்
இருந்தால்  நன்மை இல்லை .
கன்னி ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கன்னி ராசி, லக்னகாரர்கள் ,சனி பகவானின்  நீல கல் மோதிரம் அணியலாம் .சனி பகவான்  பஞ்சமா ஸ்தானாதிபதி , கன்னி ராசி ,லக்ன காரர்களுக்கு யோகம்  கொடுக்க கூடியவர் .மேலும்  சனி பகவான்  நீசம் அடைந்தாலோ , அம்சத்தில்  கெட்டுவிட்டலோ , நீலக்கல்  மோதிரம்  அணிவதை தவிர்க்கவும் .கன்னிராசி , லக்னகார்களுக்கு  சனி பகவான்  , ஜாதகத்தில் பிறந்த  நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,14,16,21,23,25. இந்த நட்சத்திரத்தில் இருக்க கூடாது . அப்படி இருந்தால்  நீல கல் மோதிரம் அணிவதை தவிர்க்கவும் .
துலாம் ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
துலாம்  ராசி , லக்ன காரர்கள் , வைர மோதிரம் அணிவதை விட  சனி பகவானின்  நீலக்கல் மோதிரம் சிறந்தது . ஏன் என்றால் , துலாம் லக்ன காரர்களுக்கு  சுக்கிர பகவான் 1ம் மற்றும்  8ம்  வீட்டுக்கு  உடையவர் .8ம் இட ஆதிபத்தியம்  பெற்றுள்ளதால் வைர மோதிரம்  அணியக்கூடாது . சனி பகவான் 4ம் மற்றும் 5ம் வீட்டுக்கு  உடையவர் . அதனால் நீலக்கல் மோதிரம் சிறந்தது .மேலும்  துலாம் ராசி ,லக்ன காரர்களுக்கு பிறந்த  ஜாதகத்தில்  சனி பகவான் கெடகூடாது . அம்சத்திலும்  நல்ல இடத்தில இருக்க வேண்டும் . சனி பகவன்  ஜாதகத்தில்  பிறந்த நட்சதிரதிலிருந்து 3,5,7,12, 14 ,16, 21,23, 25 இந்த நட்சத்திரத்தில் இருக்ககூடாது . ஜாதகத்தில்  லக்னத்தின்  அடிபடையாக  கொண்டு மோதிரம்  அணிவது சிறப்பு .
விருச்சிக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
விருச்சிக ராசி ,லக்னகாரர்கள் , குரு பகவானின்  புஷ்பராகம்  அணிவது நல்லது ஏன் என்றால் .குரு பகவான்  2ம் மற்றும் 5ம் வீட்டுக்கு உடையவர் , யோகாதிபதி ,அதனால்தான் புஷ்பராகம் அணியவேண்டும் .மேலும்  சந்திர பகவான்  9ம் இடத்துக்கு  உடையவர் , சில பேர்  முத்து மோதிரம்  அணியலாம்  என்று சொல்வார்கள் ,ஆனால்  அணியக்கூடாது , ஏன் என்றால்  சந்திர பகவான்  விருச்சிக ராசி , லக்ன காரர்களுக்கு  பாதாகாதிபதி  அதனால்  அணியக்கூடாது . மேலும் இந்த லக்ன ராசிகாரகளுக்கு , குருபகவான்  ஒருவரே யோகம் செய்யக்கூடியவர் . குருபகவான்  ஜாதகத்தில்  பிறந்த நட்சதிரதிலிருது,3,5,7,12,14,16,21,23,25  நட்சத்திரத்தில்  இருக்ககூடாது .
தனுசு ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
தனுசு ராசி,லக்கினகாரர்களுக்கு , செவ்வாய் பகவானின்  பவள கல்  சிறப்பான பலன் தரும் . இந்த  ராசி லக்கினகார்களுக்கு  செவ்வாய் யோகம்  கொடுக்க கூடியவர் . இந்த, இலக்கின ,ராசிகாரகளுக்கு செவ்வாய்  ஆட்சியோ , உச்சமோ பிறந்த  ஜாதகத்தில்  இருந்தால்  , ரியல் எஸ்டேட் , நிலம் , வீடு , இதன் மூலம் பணம் கொட்டும் . மேலும்  இந்த ராசி , இலக்கின காரகளுக்கு  பிறந்த ஜாதகத்தில்  செவ்வாய் பகவான்    ராசியிலும் ,அம்சத்திலும்  கெட கூடாது . மற்றும்  ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து  3,5,7,12,14,16,21,23,25. இந்த இடங்களில்  செவ்வாய்  இருந்தால்  பலன் கொடுக்காது .
 மகர ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மகர ராசி, இலக்கின காரர்களுக்கு  வைர கல் மோதிரம் அணியலாம் . ஏன் என்றால் , சுக்கிர பகவான்  5ம் மற்றும் 10ம் வீட்டுக்கு  உடையவர் . இவர் ராசி மற்றும்  லக்கினத்துக்கு , 6,8,12. இடங்களில்  மறையகூடாது. மேலும் அம்சத்திலும் கெடக்கூடாது . அதே போல்  ராசியிலும்  , அம்சத்திலும்  நீச்ச வர்கோத்தமம் பெற்றீருந்தால் , சுக்கிர புத்தியோ , சுக்கிரதிசையோ மிக பெரிய யோகம் கொடுக்கும் . மேலும் ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து , 3,5,7,12,14,16,21,23,25, இந்த இடங்களில் இருந்தால் , நன்மை நடக்காது
கும்ப ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
கும்ப ராசி  ,இலக்கின காரர்கள்  வைரம் , மரகத பச்சை கல் மோதிரம் சிறப்பான பலன் தரும் . இந்த இலக்கின , ராசிகார்களுக்கு  , சுக்கிரன்  4ம் ,மற்றும் 9ம் இடத்துக்கு  உரியவர் . மற்றும் புதன்  5ம் மற்றும்  8ம்  இடத்துக்கு  உரியவர் . புதன் மற்றும் சுக்கிரன்  சேர்ந்து இருந்தாலோ , அல்லது ஒன்றை  ஒன்று பார்த்துகொண்டலோ , மிக பெரிய யோகம்  கொடுக்கும் . இவை  , கேந்தரம்,மற்றும்  திரிகோணத்தில்  இருந்தால்  மட்டுமே நல்ல பலன் கொடுக்கும் . மேலும்  அம்சத்தில் கெடகூடாது . ஜாதகத்தில் பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,16,21,23,25. இடங்களில்  இந்த  இரண்டு கிரகங்களும்  இருக்ககூடாது .
மீன ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
மீன ராசி  ,லக்கினகாரகளுக்கு . முத்து மற்றும் பவள கல்  மோதிரம்  நல்ல பலன் கொடுக்கும் . சந்திர பகவான் 5ம்  இடத்துக்கு  உரியவர் . மேலும்  வளர்பிறை  சந்திரனாக  இருந்தால்  மட்டுமே  முத்து  மோதிரம் அணியலாம் . தேய்பிறையாக  இருந்து , குரு  பார்வை பெற்றால் முத்து மோதிரம் அணியலாம் .மற்றும்  செவ்வாய் பகவான்  2ம் மற்றும் 9ம் வீட்டுக்கு  உடையவர் . அதனால்  பவள கல் மோதிரம் அணியலாம் . மேலும் இந்த  இரண்டு கிரகங்களும்  ராசி , அம்சத்தில் , கெட கூடாது . மற்றும் ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14.16,21,23,25. இந்த இடங்களில் இருக்ககூடாது . 

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை.இடையில் அழிவு ஏற்பட்டாலும்அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக்கொண்டவை.  எத்தனையோ மகான்களும்ரிஷிகளும்தேவர்களும் வழிபட்ட,இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டுதரிசிக்க வரும் பக்தர்களுக்குஅருள் பாலிப்பவை.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்தநட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒருதடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன

 
மனிதராய் பிறந்த அனைவர்க்கும்அவரவர்  கர்ம வினையே -  லக்கினமாகவும்,ஜென்ம நட்சத்திரமாகவும்பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற்றோர்களையும்பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கைதுணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் ,வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறதுநமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்குநம்மை அறியாமலே நாம்சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறதுஅப்படி நிகழும்போது நம்வாழ்வில் ஏற்படும் பல தடைகளும்தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில்நமக்கு பலமும்மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்மநட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன்நம்பிக்கையுடன் வழிபட்டுவாருங்கள்அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில்கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாகமட்டுப்படும்
ஆலயங்களும்அமைவிடங்களும் :
அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது.        பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீதூரத்தில் கோயில் உள்ளது.
பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்


 
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால்செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

 
கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில்கஞ்சாநகரம் அமைந்துள்ளதுமெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரைகி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி -  அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
 
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில்கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் -  அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
 
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளதுஇந்தஸ்டாப்பில் இருந்துஒரு கி.மீதூரம் சென்றால்கோயிலை அடையலாம்
திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று,அங்கிருந்து 12 கி.மீசென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தைஅடையலாம்.
புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில்வாணியம்பாடி உள்ளதுபஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீதூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைசாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும்அங்கிருந்து தெற்கே 2கி.மீசென்றால் கோயிலை அடையலாம்புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணிவழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
 இருப்பிடம்கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்றுஅங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ.,சென்றால் கோயிலை அடையலாம்திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதிஉண்டு
மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
 

இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில்விராலிப்பட்டி விலக்கு உள்ளதுஇங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால்கோயிலை அடையலாம்ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
  
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ.,சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது
உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீதூரத்திலுள்ளலால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீதூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும்ஊரில் உள்ளது.
ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
  
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளகுத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீதூரத்தில் கோமல் என்னும் ஊரில்உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ்ஆட்டோ வசதி உள்ளது.
சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரைபெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளதுகுருவித்துறையில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் கோயில் உள்ளதுவியாழன்பவுர்ணமி தினங்களில்  கோயில் வரைபஸ்கள் செல்லும்மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
  
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும்வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளதுகுறித்தநேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால்பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில்சென்று திரும்பலாம்.
விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டைசென்றுஅங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும்வேன்களில் அடையலாம்இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களானஆரியங்காவுஅச்சன் கோவில்குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம்மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ.தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ.,தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில்கோயில் உள்ளது.
மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
   
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.)பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம் -  அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்றுஅங்கிருந்துகல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம்.பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம்சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12கி.மீ.,) ஒக்கூர் சென்றுஅங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடிஎன்ற ஊரில் உள்ளதுஆட்டோ உண்டுமதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திருவோணம் -  பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கிஅங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீசென்றால்திருப்பாற் கடலை அடையலாம்ஆற்காடுவாலாஜா விலிருந்தும் பேருந்துகள்உள்ளனஇவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால்பிரசன்னவெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்
அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
 
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ.தூரத்தில் கோயில்அமைந்துள்ளதுகும்பகோணத்திலிருந்து தாராசுரம்முழையூர்வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில்உள்ளது..
சதயம் -  அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம்நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும்வழியில் 10 கி.மீதொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
 
இருப்பிடம்திருவையாறிலிருந்து 17 கி.மீதூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளிசென்றுஅங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீதூரம் சென்றால்ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது
உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ளஆவுடையார்கோவில் சென்றுஅங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள்அறந்தாங்கிசென்றுஅங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர்என்னும் இடத்தில் உள்ளதுதூரம் 120 கி.மீ.
ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்றுஅங்கிருந்து வேறுபஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீசெல்ல வேண்டும்இங்கிருந்து 5கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில்

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...