ஞாயிறு, 15 ஜூன், 2014

திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தலம் மிகவும் விசேஷமானது

திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தலம் மிகவும் விசேஷமானது. இந்த அம்மனை சென்னை மாநகரத்தினுடைய ஈசானியக்காளி என்று சொல்லலாம். அந்தக் காலத்தில் சோழர்கள் ஒவ்வொரு திக்கிலும் காளியை வைத்து வழிபடுவார்கள். சோழ சாம்பிராஜ்ஜியத்தினுடைய ஒரு திசையில் இருக்கக்கூடிய காளிதான் திருவக்கரை வக்கிரக்காளி. திண்டிவனம் பக்கத்தில் இருக்கிறது. அதோடு சோழ சாம்பிராஜ்ஜியம் முடிந்தது. அதன்பிறகு, அவர்கள் பல்லவ சாம்பிராஜ்ஜியத்தைப் பிடிப்பதற்காக அந்தக் காளியை அங்கு பிரதிஷ்டை செய்தார்கள். அதன்பிறகுதான் போர் தொடுத்தார்கள். அதன்பிறகுதான் சோழர்களுக்கு முழு வெற்றியும் கிடைத்தது. 

அந்தக் காலத்தில் மன்னர்கள் அஷ்ட திக்குகளிலும் கோயில்களை எழுப்புவார்கள். அதில் வன தெய்வங்களுக்கு அவர்கள் முக்கியத்தும் தருவார்கள். அந்தக் காளியினுடைய பார்வை, பாவிக்கிறார்களே அதனை கொஞ்சம் குறுக்காக எதிரியின் எல்லையை நோக்கியது போல் வைப்பார்கள். நேரடியாக வட திசையையோ, கிழக்கு திசையையோ நோக்கி முகத்தை வைக்காமல், கொஞ்சம் கோணத்தை மாற்றி வைப்பார்கள். அதுபோன்று இருக்கும் அம்மனுக்கு சம்கார குணம் அதிகமாக இருக்கும். அதுபோன்ற சம்கார குணம் மற்றும் சாத்வீக குணம் இரண்டும் அமைந்ததுதான் திருவொற்றியூர் வடிவடை அம்மன். அதைச் சுற்றிலும் பட்டிணத்தடிகளார் ஜீவ சமாதி எல்லாம் அமைந்திருக்கிறது. 

சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு. இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு ம‌ற்று‌ம் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு ஊருக்கும் எல்லைத் தெய்வம் உண்டு. அதுபோல, சென்னை நகரத்தினுடைய ஈசானி எல்லை, அதாவது வடகிழக்குப் பகுதி எல்லைத் தெய்வமாக திருவொற்றியூர் வடிவுடை அம்மன் இருக்கிறார். 

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது, அங்கு ஈசானி லிங்கம் என்று ஒன்று உண்டு. அதுபோன்றுதான் ஈசானிய அம்மன், ஈசானிய காளி. இந்த ஈசானிய அம்மனை வழிபட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும்.

சைவத் திருத்தலங்கள் 274 - திருவொற்றியூர் 3/274

 

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள்

·   சிவன் சுயம்பு மூர்த்தி - தீண்டாத் திருமேனி
·   சிவன் வடிவம் - பாணலிங்க வடிவம்
·   மூலவர் - படம்பக்க நாதர் - கவச திருமேனி - கார்த்திகை பௌர்ணமி ஒட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் விலக்கப்படும்.
·   அம்பிகை ஞான சக்தி வடிவம்
·   மகிஷாசூரன் அற்ற துர்க்கை
·   அம்மனின் 51வது சக்தி பீடங்களில் இஷூ பீடம்
·   தேவாரப் பாடல் வரிசைகளில் 253வது தலம்
·   சப்த விடத் தலங்களில் ஒன்று
·   கஜ பிருஷ்ட விமானம்
·   பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி
·   சிவனில் வடிவங்களில் ஒன்றான ஏகபாத மூர்த்தி - வெளிப் பிரகாரத்தில்
·   சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட இடம்
·   ஏலேலே சிங்கர் மன்னருக்கு தருவதாக வைத்திருந்த மாணிக்கங்களை காசி சிவ பக்தர்களிக்கு தந்ததால் 'மாணிக்க தியாகர்'
·   உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வாசுகி முக்தி வேண்டி வழிபட்டு முக்தி அடைந்த இடம் - படம்பக்க  நாதர்
·   கண்ணகியின் உக்கிரம் குறைக்க சிவனும் பார்வதியும் தாயம் ஆடி, கட்டைகளை கிணற்றில் இட்டு கண்ணகியை கிணற்றினுள் இட்டு கோபம் குறைத்த இடம்
·   63 நாயன் மார்களில் ஒருவரான கலிய நாயனார் வறுமையின் காரணமாக தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை எடுத்து விளக்கு எரித்து முக்தி அடைந்த தலம்.(குருபூசை நாள்: ஆடி - கேட்டை)
·   63 நாயன் மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடிய தலம்
·   நுனிக் கரும்பை இனிக்க வைத்து பட்டினத்து அடிகளுக்கு முக்தி அளித்த தலம்.
·   நந்திக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடிய இடம்
·   வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைய ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம் செய்த இடம்


தலம்
திருவொற்றியூர்
பிற பெயர்கள்
முக்தி தலம்ஆதிபுரிபூங்கோயில்பூவுலகச் சிவலோகம்
இறைவன்
படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்,
இறைவி
வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம்
மகிழம்அத்தி
தீர்த்தம்
பிரம்மநந்தி தீர்த்தம்
சிறப்புகள்
 சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம்,வைகாசியில் வசந்தோற்ஸவம்சிவராத்திரி,திருக்கார்த்திகைமாசி மகம்.
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் /முகவரி
அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்
திருவொற்றியூர்
சென்னை
PIN – 600019
+91-44 - 2573 3703.  +91-94444-79057
வெள்ளி - காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
பெளர்ணமி -  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மற்ற நாட்கள் - காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை - 4 மணி முதல் இரவு 8 30 மணி வரை
பாடியவர்கள்
சம்பந்தர்நாவுக்கரசர்சுந்தரர்மாணிக்கவாசகர்,
நிர்வாகம்
இந்து அறநிலையத்துறை
இதர குறிப்புகள்
ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன்,, பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் ஆகியவர்கள் வழிபட்ட தலம்.
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார் ஆகியவர்கள் பாடி உள்ளனர்

வடிவுடைஅம்மன்

 



பாடியவர்                      திருநாவுக்கரசர்     
திருமுறை                     4ம் திருமுறை 
பதிக எண்                     45
திருமுறை எண்                7

பாடல்

பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே


கருத்து

மரணம் உடையதும், விரும்பத் தக்காத நாற்றம் உடைய உடலை பாதுகாக்க பைத்தியம் போல் திரிந்து மறுமையைத் தரும் சிற்றின்பத்தை விலக்குக. நீக்குவதற்கு உரித்தான எளிதான வழி நெஞ்சில் உறையும் இறைவனையும் நினைத்தல். அவ்வாறு செய்தால் ஒற்றிவூர் உறையும் அரசனைப் போன்ற ஒற்றியூர்ப் பெருமான் அக்குறைகளை நீக்குவான்.

பாடியவர்                  சுந்தரர்         
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 91          
திருமுறை எண்           9   

பாடல்

பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.

பொருள்

மலையை அசைத்த அரக்கனாகிய இராவணின் உறுப்புகள் ஏதும் இல்லாதவாறு செய்தவர் சிவன். அவர் இதனை அவர் தனது பெரு விரலால் செய்தார். அவர் கடல் சூழ்ந்த இந்த திருவொற்றியூரில் இருந்து வினைகளை நீக்கி அடியவர்களுக்கு அருள் செய்கிறார்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...