செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்

பலன்கள்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.

கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும்.  ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.

செவ்வாய் குணமும் கிரகங்களின் சேர்க்கை ஆய்வு பகுதி

செயல்காரகன் "செவ்வாய்":

காலபுருசனின் லக்னமும் பூமியை ஒத்த காரகத்துவமும் கொண்ட செவ்வாய், குசன் என்று அழைக்கபடுகிறார் . குஜன் என்றால் சமஸ்கிருதத்தில் "பூமியின் மகன்" (அ) "நிலமகன்" என பொருள். செவ்வாய் ஒரு ஆண் கிரகம் ஆவார். இவர் மேஷம் மற்றும் விருச்சகத்தை ஆட்சி செய்கிறார். இங்கே ஆட்சி என்பது சொந்த வீடு என்பதை விட, செவ்வாய் தன் கதிர்களை பூமிக்கு சரிவிகிதத்தில் கொடுக்குமிடம் என்பதே சரியானது.

செவ்வாய் பற்றிய அறிவியல் விளக்கம்

தற்கால அறிவியல்படி, பூமியின் அளவை மற்றும் கட்டமைப்பை ஒத்த கிரகம் செவ்வாய் ஆகும். எனவே இவரை கால புருசனின் லக்னமாக முன்னோர்கள் வைத்தனர். சூரியனை சுற்ற செவ்வாய் கிட்டத்தட்ட பூமியை விட ஒரு ஆண்டு அதிகமாக எடுத்து கொள்கிறது. விண்வெளியில் சுற்றிவரும் மாசு மற்றும் விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திர தாக்குதல்களில் இருந்து பூமியை காப்பதால், இவரை "தளபதி" என்று முன்னோர்கள் வர்ணிக்கின்றனர்.

உடலின் சக்திக்கு காரகம் வகிப்பதும் செவ்வாய். அது போலவே இயற்கையாக, செவ்வாய் மனிதரின் இரத்தத்திற்கு காரகம் வகிக்கிறார். இரத்தம் என்பது எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகும் திரவம் ஆகும். இதுவே கிரியா சக்தியை வெப்ப ஆற்றல் மூலம் உடலெங்கும் வெளிபடுத்தும் தன்மை கொண்டது.
கால புருசனின் ஒன்றாம் வீடான மேஷத்தில் செவ்வாய் அதிக வெப்ப ஆற்றலை வெளிபடுத்தும் தன்மையும், விருச்சகம் என்னும் எட்டாம் இடத்தில் சற்று குறைவான இயக்க தன்மையும் கொண்டு இருக்கிறார்.

சூரியன் நெருப்பு கிரகம் எனில், செவ்வாய் இயற்கையில் ஒரு அனல் கிரகம். சூரியன் நெருப்பை உண்டாகும் தன்மை கொண்டு இருந்தாலும், அந்த வெப்பத்தை கிரியா சக்தியாக மற்றும் கிரகம் செவ்வாய் ஆகும். இதனை நம் உடலின் செய்பாடுகளில் கவனித்து பார்க்க எளிதில் புலப்படும், சூரியனில் இருந்து கிடைக்கும் வெப்ப கதிர்கள் மூலம் பெரும் ஆற்றலை சேமிக்கும் தாவரங்களை உண்ணும் போது, உணவில் இருக்கும் சக்தி இரத்தத்தில் (செவ்வாய்) கலந்து, மனிதனுக்கு இயக்க சக்தியை (கிரியா) கொடுக்கிறது.

செவ்வாய் இரத்தத்தை குறிப்பதால், இவர் நமது ரத்த சமந்தமான உறவான "சகோதர உறவை" குறிக்கிறார். மேலும் செவ்வாய் பூமியின் நிலப்பரப்பை ஒத்த நிலப்பரப்பை கொண்டதால், செவ்வாய் காலி நிலத்தையும் குறிக்கிறார்.
செவ்வாய் ஒரு இயற்கை அசுப கிரகம். இவரின் காரக ஒவ்வாமை கொடுக்கும் கிரகங்களான சனி, புதன், ராகு மற்றும் கேது ஆகும். சுக்கிரன் பகவான் செவ்வாய் பகவான் காரகதுவதை சம அளவில் பாதிக்கிறார். இங்கே காரக ஒவ்வாமை என்பது பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கே என்பதை நினைவில் கொள்ளவும்.

கேந்திரத்தில் செவ்வாய்

செவ்வாய் கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெரும் போது ருச்ச யோகம் ஏற்படுதிகிறார். ருச்ச என்றால் "கூர்மையான" (அ) " பிரகாசமான" என்று பொருள். லக்ன கேந்திரத்தில் செவ்வாய் அட்சி அல்லது உச்சம் பெற்று, அவரின் திரிகோணத்தில் குரு, சூரியன் அல்லது சந்திரன் இருக்க, ஜாதகர் தீர்க்கமான முடிவெடுத்து, ஒரு குழுவை அல்லது ஒரு சமூகத்தை காக்கும் மற்றும் வழி நடத்தி செல்லும் தளபதி போன்ற ஆற்றல் பெறுவார்.
செவ்வாய் பிற கிரகங்களுடன் சேர்க்கை

குருவுடன் செவ்வாய் :

செவ்வாய் குருவின் தொடர்பை பெற, செவ்வாயின் முரட்டு தனம் விலகி சாந்தம் பெறுகிறார். இங்கே குரு மனித மூளை எனவும், செவ்வாய் (இயக்கம்) மூளையின் கட்டுபாட்டில் இருக்கும் போது, அவசரமில்லா திடமான முடிவெடுத்து அதனை செயல் படுத்தும் நிலையை ஜாதகர் அடைவார். குருவுடன் சேர்க்கை அல்லது கேந்திரத்தில் செவ்வாய் இருக்க குரு மங்கள யோகம் ஏற்படுகிறது, இதனால் குருவின் காரகமான பொன் சேருதல் மற்றும் செவ்வாய் காரகமான நிலபுலண்கள் வாங்கும் தன்மை கொடுக்கிறார்.

சந்திரனுடன் செவ்வாய் :

சந்திரன் வீட்டில் கடகத்தில் நீசம் பெறும் செவ்வாய் தன் பலத்தை இழக்கிறார். எனவே செவ்வாய் காரகதுவங்களான வீரம், தைரியம், போர்குணம், வழிநடத்தி செல்லுதல்மற்றும் சகோதரம் போன்றவை குறைவாகவும் அல்லது இல்லாமலும் இருக்கும். நீச செவ்வாயின் கேந்திரத்தில் இருக்குன் சந்திரன் செவ்வாயின் நீச்சதை பங்கம் செய்து, குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, தன் காரகதுவதை ஜாதகரிடம் வெளிபடுத்துவார். மேலும் சந்திரனின் கேந்திரத்தில் செவ்வாய் இருக்க சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தின் பயனாக, தெளிவான மனமும், நல்ல எண்ணங்களும் ஏற்படும், ஏற்ற்றுமதி இறக்குமதி தொழில் பிரகாசிக்கும் ஆற்றலும் ஏற்படும். விவசாயம், பால் பண்ணை, கலை தொழில் சிறக்கும். இதில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று இருக்க, மக்கள் முன்னிலையில் நல்ல பெயரை சம்பாதிக்கும் நிலையை தருகிறது.

சனியுடன் செவ்வாய் :

சனியுடன் சேரும் செவ்வாய் அல்லது சம சப்த பார்வை பெறும் செவ்வாய், அதன் காரகத்துவம் முடுக்கபட்டு, விபத்துகளை, அறுவை சிகிச்சைகளை மற்றும் இயக்கி சீற்றங்களை உருவாகுகிறார். அது போலவே சனியின் காரகத்துவம் பாதிக்கப்பட்டு, வறுமை, நாத்திக தன்மை, தொழிலாளர் போராட்டம், விஷத்தன்மை கொண்ட நோய்கள், தீவிரவாத மற்றும் நாத்திக சதி செயல்கள் அரங்கேறுவார். இந்த சேர்க்கையுடன் சுக்கிரன் சமந்தபட, தவறான அல்லது முறையற்ற காதல் மற்றும் காம எண்ணங்களில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.

ராகுவுடன் செவ்வாய் :

செவ்வாய் ராகுவுடன் சேரும் போது, விபத்து தைரியம் குறைதல், உடல் மெலிதல், ரத்த புற்று மற்றும் சகோதர பங்கம் ஏற்படுத்துகிறார். குருவின் பார்வை அல்லது செவ்வாய் பாவக மாற்றம் சுபத்தை தரும்.

கேதுவுடன் செவ்வாய் :

செவ்வாய் கேதுவுடன் சேரும் போது நில தகராறு மற்றும் வழக்கு, இரத்த சோகை, சகோதர கருத்து வேற்றுமை உண்டு பண்ணுகிறார். தீர்க்க முடிவில்லாமல் ஒரு செயலில் இறங்கி பிரச்சனைகளை சந்திக்கும் நிலையை இவ்வமைப்பு ஏற்படுகிறது.

புதனுடன் செவ்வாய் :

செவ்வாய் புதனுடன் சேர்ந்து சிந்தையில் குழப்பத்தையும், கல்வி தடை மற்றும் விதண்டாவாதம் செய்தல் மற்றும் பொய் பேசும் குணத்தை கொடுக்கிறது. புதன் பலம் குறைந்து செவ்வாய் உடன் சேர, தீவிரவாத இயக்கங்களில் சேரும் நிலையும் ஏற்படுத்திவிடுகிறது.

சுக்கிரனுடன் செவ்வாய் :

செவ்வாய் சுக்கிரனுடன் சேர, அங்கு செவ்வாய் அல்லது சுக்கிரன் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு பெற, பிருகு மங்கள யோகம் உருவாகிறது. இது பல அடுக்கு மாடி கட்டடங்களுக்கு சொந்தகாரரகவும், பங்களா மற்றும் கார் போன்றவை கொடுத்து, சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்கிறது. சுக்கிரன் மற்றும் செவ்வாய் சந்திரன் அல்லது சூரியன் தொடர்பை பெற, அதீத காம உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

சூரியனுடன் செவ்வாய் :

சூரியனுடன் சேரும் செவ்வாய் அஸ்தங்கம் பெறாமல் இருக்க, ஆளுமை தன்மை மற்றும் செயல் திறன் அதிகரிக்க செய்கிறார். செவ்வாய் அஸ்தங்கம் அடைந்தால், அறுவை சிகிச்சை மற்றும் ரத்த இழப்பு கொடுக்கிறார்.

செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3, 6, 11ல் தனித்து இருக்க சுபத்தையும். கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று, குரு, சந்திரன் மற்றும் சூரியன் தொடர்பை பெற நற்செயலும் செய்கிறார். செவ்வாய் பதில் திக்பலம் பெறுகிறார். அவ்வாறு இருக்கும் ஜாதக அமைப்பு, அரசியல் அல்லது அரசாங்க தொடர்ப்பை ஜாதகருக்கு ஏற்படுத்தி கொடுக்கும்.

செவ்வாய் தாக்கத்தை போக்கும் எளிய பரிகாரங்கள்

செவ்வாய் காரகம் பாதிக்கபட்டவர்கள், செவ்வாய் கிழமை முருக வழிபாடும், கந்த சஷ்டி கவசம் பாடுதலும் அல்லது கேட்பதும், சிவ வழிபாடும்,ஞாயிற்று கிழமை  பைரவர் வழிபாடு, மேலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்தலும் மிகுந்த பலனளிக்கும்

குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.17 முதல் 2.10.18 வரை)

மேஷம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                        சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப் படுத்த வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பண வரவும் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும்.


குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் லாப வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். 9-ம் பார்வையால் 3-ம் இடத்தைப் பார்ப்பதால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கைக் கூடும். கடன் பிரச்னைகள் தீரும். 
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசியாதிபதியும் அஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் திடீர் யோகம்  உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் பயணங்களும் இருந்துகொண்டே இருக்கும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால் மனதில் இனம் தெரியாத கவலை ஏற்படும். தம்பதியர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். 
உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான், தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 4.7.18 வரை சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணியை முடித்து கிரக பிரவேசம் செய்வீர்கள்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் ராசிக்கு 8-ம் இடத்தில் செல்வதால் செலவுகள் ஏற்படும். வேலைச் சுமையால் மனதில் சோர்வு ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, வழக்கால் நிம்மதியின்மை வந்து செல்லும்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். காலத்துக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அனுபவம்மிக்க வேலையாட் களைப் பணியில் அமர்த்துவீர்கள். வேலைச்சுமை குறையும். தடைப்பட்ட பணிகள் முடியும். ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் பாராட்டப்படும். 
மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்பு களால் புகழ் அடைவீர்கள். விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். வர வேண்டிய சம்பளப் பாக்கி வந்து சேரும்.
இந்த குருப்பெயர்ச்சி பட்டுப்போன உங்கள் வாழ்க்கையைப் பசுமையாக மாற்றி, எங்கும் புகழைப் பெற்றுத் தரும்.
பரிகாரம்:
திருவாதிரை நட்சத்திரத்தன்று  மயிலாடுதுறைக்குச் சென்று, ஸ்ரீவதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்; தேவைகள் பூர்த்தியாகும்                                                                  . ரிஷபம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                        முயற்சியை எப்போதும் கைவிடாத அன்பர்களே! 
2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் பிரவேசிக்க இருக்கிறார். சகட குரு கலக்கத்தைத் தருவாரே என்று அச்சப்பட வேண்டாம். சின்னச் சின்னப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. செலவுகளும் துரத்தும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதிகள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். கடன்கள் கவலை தரும். புதியவர்களை நம்பி முடிவு எடுக்க வேண்டாம். 


குரு பகவானின் பார்வை குரு பகவான் தனது 5-ம் பார்வையால் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு பகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு விசா கிடைக்கும். காணாமல் போன முக்கியமான ஆவணம் திரும்பக் கிடைக்கும். குரு பகவான் தன்னுடைய 9-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 2.9.17 முதல் 5.10.17 வரை உங்கள் ராசிக்கு 7 மற்றும் 12 ஆகிய வீடுகளுக்கு உரிய செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் செல்வதால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். 
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால் பிரச்னைகளைப் போராடி சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகமாகும். பண  விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் மனதில் இனம் தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். விளையாட்டுப் போட்டிகளில் அடிபடக்கூடும் என்பதால் எச்சரிக்கை யாக இருக்கவும்.
கலைத்துறையினர்களே! புதிய வாய்ப்புகளை அலைந்து திரிந்துதான் பெறவேண்டி இருக்கும். மூத்த கலைஞர்கள் உதவி செய்வார்கள்.
இந்த குருப்பெயர்ச்சி அவ்வப்போது சுகவீனங்களையும் தோல்விகளையும் தந்தாலும், ஆராய்ந்து செயல்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அமையும்.
பரிகாரம்:
அமாவாசை தினத்தன்று தென்குடித்திட்டை திருத்தலத்துக்குச் சென்று, பசுபதிநாதரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும்  வணங்கி வாருங்கள்; முயற்சிகள் பலிதமாகும்.                                                                                              மிதுனம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                      மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!
உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ம் வீட்டில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர இருக்கிறார். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கு சாதகமாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.


குரு பகவானின் பார்வை  குரு பகவான் 5-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.  வெளிநாட்டுப் பயணம் அமையும். குரு பகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் உங்கள் லாப வீடான 11-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ், கௌரவம் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு வாங்கி கிரக பிரவேசம் செய்வீர்கள். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் ராசியைப் பார்ப்ப தால் எவரையும் வசீகரிப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 6 மற்றும் 11-ம் வீட்டுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தாலும் அஞ்ச வேண்டாம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். உறவினர் களுடன் அளவோடு பழகவும்.

உங்களின் ராசிக்கு 7 மற்றும் 10-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். வாழ்க்கைத் துணை உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். 

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக குரு சென்று மறைவதால் ஆரோக்கியம் பற்றிய கவலை வந்து செல்லும். அரசாங்கக் காரியங்கள் தடைப்பட்டு முடியும்.   
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். செலவுகளும் துரத்தும். புதிய நட்பால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.
வியாபாரத்தில் நஷ்டங்களைச் சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். புதிய வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு உண்டு.  மாணவர்கள்  அதிக மதிப்பெண் பெறுவார்கள். விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். 
கலைத்துறையினரே! வதந்திகளி லிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக் கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.
இந்த குருப்பெயர்ச்சி விரக்தியின் விளம்பிலிருந்த உங்களுக்கு புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்துச் சாதனையாளராக மாற்றும்.  
பரிகாரம்: 
பூரம் நட்சத்திரத்தில், மதுரை மாவட்டம் திடியன் மலை எனும் ஊரில் அருளும் ஸ்ரீகயிலாசநாதரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள்; நினைத்தது நிறைவேறும்.                                                                                                      கடகம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                          மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்பவர்களே!
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன் தர இருக்கிறார். பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.


குரு பகவானின் பார்வை குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.  குரு பகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரமாகத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு அமையும். அடகில் இருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். 
வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பிரபல யோகாதிபதி யான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் பாதியில் நின்ற கட்டட வேலையை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம்.
உங்களின் ராசிக்கு 6 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். வழக்கில் நெருக்கடிகள் நீங்கும்.  

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வருமானம் உயரும். கடன்கள் அடைபடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன்னுடைய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பயணிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள்மீது வீண்பழி சுமத்தப்படும். புதிய நபர்களை நம்ப வேண்டாம். எதிலும் மாற்று வழியை யோசிப்பது நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க உதவும். 
  வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் கவனம் தேவை. மாணவர்களே!  படிப்பில் தீவிர கவனம் தேவை.கலைத் துறையினரே! சின்ன படங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். 
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பிரச்னைகளையும், இடப்பெயர்ச்சியையும் தந்தாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
அஸ்தம் நட்சத்திர நாளில், சென்னை திருவலிதாயம்  (பாடி) தலத்துக்குச் சென்று, அங்கே அருள்பாலிக்கும்  குருபகவானை வழிபட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.                                                                                                                 சிம்மம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                         தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே !

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்துகொண்டு பலன் தர இருக்கிறார். சகிப்புத் தன்மை அவசியம்.பணப் பற்றாக்குறை நீடிக்கும். முக்கிய விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.


குரு பகவானின் பார்வை: குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். புது வேலை அமையும். திருமணம் கூடி வரும். குரு பகவான் தன் 7-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சிந்தித்துச் சாதிப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். சொத்துப் பிரச்னை தீரும்.  செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கடன்களைத் தீர்க்க யோசிப்பீர்கள்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வழக்கு சாதகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்  ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். வீட்டை மாற்றியமைக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீர்படும்.  
06.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். வீடு களைகட்டும்.  உங்கள் ராசிக்கு 5 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் பண வரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குரு பகவான் அதிசார வக்கிரமாகச் செல்வதால் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள். 
வியாபாரத்தில் யாரையும் நம்பாமல் நீங்களே முடிவெடுங்கள்.உத்தியோகத் தில் கடினமாக உழைத்தாலும்; யோசித்தே செயல்படவும். 
மாணவர்களே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள். கஷ்டப்பட்டுப் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! விமர்சனங் களும் வதந்திகளும் இருந்துகொண்டு தான் இருக்கும். ஆனாலும், கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பேசப்படும். 
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை சில நேரம் தவிக்க வைத்தாலும், அனுபவ அறிவாலும், கடின உழைப்பாலும் சாதிக்க வைக்கும்.
பரிகாரம்: 
சித்திரை நட்சத்திர நாளில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தலத்துக்குச் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும் வழிபடுங்கள்; துன்பங்கள் தீரும்.                                      கன்னி -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                          சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!
உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.


குரு பகவானின் பார்வை: குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குரு தனது 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திட்டமிட்டுச் செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  புண்ணிய ஸ்தலங் களுக்குச் செல்வீர்கள். குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவாலான காரியங்களையும் செய்வீர்கள். புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணிச் சுமை குறையும். 
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது நல்லது. 
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தாயாருடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியமும் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும். 
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாகச் செல்வதால் முயற்சிகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் வக்கிரகதியில் செல்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைப் பட்டிருந்த நீங்கி திருமணம் கூடிவரும்.

வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வ தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத் தில் முக்கியத்துவம் கிடைக்கும். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.  கலைத்துறையினரே! தடைகளைத் தாண்டி சாதிப்பீர்கள். 
இந்த குருப்பெயர்ச்சி, பொறுப்பு களையும் புதிய அனுபவங்களையும் தருவதோடு, எதிர்பார்த்த பலன்களைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: 
பெளர்ணமி திதியில் தக்கோலம் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீஜலநாதஸ்வரர்,  ஸ்ரீநர்த்தன தட்சிணா மூர்த்தி ஆகிய இருவரையும் வழிபடுங்கள்; 
வளம் பெருகும்.                                                                                                                   துலாம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                          மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர்களே!
குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைச் சுமை அதிகரிக்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம்.  சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.


குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் நல்லபடி நடக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வப் பிரார்த்தனைகளை  நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார். 
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மதிப்பு கூடும். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் பண வரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஆனாலும் வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுப செலவுகள் அதிகரிக்கும்.  ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வசதியான வீட்டுக்குக் குடி புகுவீர்கள். 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:  7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 
வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி களிடம் பணிவாக நடந்துகொள்ளவும்.  
மாணவர்களுக்குத் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டிவரும்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன்மூலம் காரியம் சாதிக்கவைக்கும்.
பரிகாரம்: 
வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.                                                                                                                                விருச்சிகம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!
   உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் துரத்தும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமாகத் தீர்வு காண முயலவும். பணப்பற்றாக் குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.


குரு பகவானின் பார்வை: குரு பகவான் தன் 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். 
உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை குரு பகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புது பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர் கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.  வருமானம் உயரும்.  சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். 
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளும் அதிகரிக்கும்.   
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர் களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். 
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களே!  படிப்பில் அலட்சியம் கூடாது. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். 
இந்த குருப்பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.
பரிகாரம்: 
சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.                         தனுசு -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                           உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17  முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.  


குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  குரு பகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால் மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.  வழக்குகளில் வெற்றி உண்டு.
6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் புகழ் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஏமாந்த தொகை வரும். தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும். 
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னை களால் கலக்கம் உண்டாகும்.  
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய நிலை ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 
வியாபாரம் மேம்படும். உத்தியோகத் தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே! உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுகிடந்த உங்களைச் சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: 
தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமா நல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.                                                                                                                        மகரம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                          உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்வதால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.


குரு பகவானின் பார்வை: குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். 

குரு பகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். செலவுகள் குறையும். 
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி வரும். உங்கள் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எனினும், மனதிலே ஒருவித அச்ச உணர்வு வந்து நீங்கும். பிள்ளை களிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். முன்கோபம் கூடாது. மற்றவர்களுக்காக சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். 
வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.   உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்த படைப்புகளைக் கொடுக்கவும். 
இந்த குரு மாற்றம் உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: 
புனர்பூசம் நட்சத்திர  நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.                                                                        கும்பம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                      மற்றவர்களை கண்டு அஞ்சாதவர்களே!
உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன்  மனைவிக்கு இடையில் அந்நியோன்யம்  அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.


குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக  இருப்பார்கள்.  அதிகாரிகளின் நட்பு  கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். 
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் பயணிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும்.  6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிறமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும்.  உங்களின் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் கூடி வரும்.
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படும். 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும்.
வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். சிலர் சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். 
மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும்  அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
இந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: 
பூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.                                   மீனம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)                                            குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களால் கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகள் சுமுகமாகும்.


குரு பகவானின் பார்வை:  குரு பகவான்  தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். 

குரு பகவானின் சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் பயணிப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லபடி முடியும். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உங்களின் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வங்கிக் கடன் கிடைக்கும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்  நல்லவிதத்தில் முடியும். 
குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் அரசாங்க விஷயம் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர் கள். புதிய வீட்டுக்கு மாறுவீர்கள். 
வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். மாணவர்களே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒருபக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.
பரிகாரம்: 
மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.

பூஜை அறையில் வலம்புரி சங்கை வழிபடும் முறை

கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள்.

சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள். சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரிச்சங்கு எனப்படும்.

ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு. வலம்புரிச் சங்கு, இடம் புரிச்சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும். இந்த வலம்புரிச்சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம் புரிச்சங்கு.

இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் `ஓம்' என்ற சப்தம் கேட்கும். வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும் பலவித நன்மைகள் கிடைக்கும். மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது.

சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

செல்வத்திற்கு அதிதெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்ல பட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்து பால் பாயசம் செய்து பசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

இப்படிச்செய்தால் எல்லா வித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம். ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு,

சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும். இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும். ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

குழந்தைகளுக்கு இதில் பசும் பால் ஊற்றி வைத்துப் பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

வலம்புரிச் சங்கு


வலம்புரிச் சங்கு என்றால் அர்த்தம் ஸ்ரீ மகாலெட்சுமியின் சகோதரி. இது கிடைப்பது மிக மிக அரிது. எந்த வீட்டிலும் மற்றும் வியாபாரியிடமும் இது இருந்தால் அங்கு லெட்சுமி கடாட்சமாக இருக்கும்.
சித்தர்களின் கோட்பாடு படி வலம்புரிச் சங்கு எவ்விடத்தில் இருக்குமோ அவ்விடத்தில் மகாலெட்சுமி வாசம் செய்வாள். அந்த வீட்டில் உள்ளவர்களிடம் சந்தோசம் கானும். இந்தச் சங்கு தங்கத்தில் அல்லது வெள்ளியினால் செய்த பீடத்தில் நெல்லை பரப்பி அதன் மேல் வலம்புரிசங்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சுத்தமாகக் குளித்து பவித்திரமாக சங்கை பால் அல்லது சுத்த நீரினால் கழுவ வேண்டும். வலம்புரிசங்கிற்குள் சில்லரை காசுகள் வைப்பது நலம் தரும்
ஓம் கிரீம் ஸ்ரீநமம்
ஸ்ரீதர் கருஸ்தாயி பயோநிதி ஜதாயி லெட்சுமி சகோதரியாத்சித்திராத் பர்பிரதாமிஸ்ரீதட்சணாருத் சங்கை

ஸ்ரீகிரீம்நம
ஒவ்வொரு நாளும் பதினைந்து முறை மேலே குறிப்பிட்ட மந்திரத்தைக் கூறவும். இதே போல் வலம்புரி சங்கைப் பூஜை செய்தால் தீய சக்திகள் நம்மை அன்டாமல் சந்தோசமாக வாழலாம்.
பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஆலகால விஷம், கற்பகவிருட்சம், காமதேனு, இது போன்ற பல பொருட்கள் வெளிவந்தன.அப்பொழுது தேவர்களும் அசுரர்களும் இவற்றை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாற்கடலில் இருந்து மகாலெட்சுமியுடன் வலம்புரிசங்கும் வெளிவந்தது மகாலெட்சுமியை மகாவிஷ்னுவும் மகாலெட்சுமியின் கையில் உள்ள வலம்புரி சங்கை அக்கினி தேவனும் எடுத்து கொன்டனர்.
பின்பு மகாவிஷ்னு பிற்காலத்தில் அதை பெற்று கொண்டார்
ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சுனன் இவர்கள் இருவரையும் காண்டவதகனத்திற்காக அக்கினி தேவன் அழைத்தார். அப்பொழுது அவர்கள் இருவரும் வெறும் கையுடன் சென்றனர். இதனால் அதிர்ச்சியுற்ற அக்கினி தேவன்   நீங்கள் இருவரும் என்னை எப்படிக் காப்பாற்றுவீர்கள் என்று வினவினார். இது தான் சந்தர்ப்பம் என்று ஸ்ரீ கிருஷ்ணன் கை நழுவிய வலம்புரிசங்கையும் அர்ச்சுணனுக்கு வில்லையும் தந்திரமாக பெற்று கொண்டனர்.
நமக்கு பல விதமான வலம்புரிச் சங்கு கிடைக்கிறது. தென்னிந்தியாவில் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை கிடைக்கக் கூடியது இது மகாலெட்சுமி சொரூபமானது. மகாலெட்சுமியின் கையில் கிடைத்த சங்கின் வகையைச் சேர்ந்தது.
மகாவிஷ்ணு கையில் இருப்பது புருசம் என்று கூறுவார்கள். இந்தச் சங்கு கிடைப்பது மிக மிக அரிது. புண்ணியம் செய்தவர்களுக்கே புருசம் சங்கு கிடைக்கும் ஏன் என்றால் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒன்று கிடைக்கலாம். இதன் விலை சற்று அதிகம்.
இரண்டாவது ஆப்பிரிக்கன் சங்கு பிரம்ம சிருஷ்டியில் இருக்கும் எல்லாப் பொருளுக்கும் விஸ்வாமித்திரர் பிரதி சிருஷ்டி செய்தார்.

 அந்த சிருஷ்டிகளில் ஒன்று தான் தற்சமயம் நாம் காணும் வலம்புரிச் சங்கு. இந்தச் சங்கை உபயோகப்படுத்தும் முறை.
சிறிதாக உள்ள வலம்புரி சங்கை தனிப்பட்ட ஒரு ஆள் வைத்து கொள்ளலாம். வேண்டும்யென்றால் பயணத்தில் எடுத்துக் கொண்டு போகலாம். மஞ்சள் நனைத்த துணியில் சங்கைச் சுற்றி எடுத்துக் கொண்டு சென்று செல்லும் வழியில் பூஜை செய்து கொள்ளலாம். வீட்டில் பூஜை அறையில் வைத்து தினந்தோறும் பூஜிக்கலாம் கோவில் போன்ற இடத்திற்கு பெரிய அளவிளான வலம்புரி சங்கை வைத்துப் பூஜை செய்யலாம். ஒவ்வொரு நாளும் ஜலத்தில் சுத்தம் செய்து சுவாமி விக்கரகத்திற்கு அபிஷேகம் செய்து பிறகு சங்கை அலங்கரித்து அதில் ஜலம் விட்டு உயரமான பீடத்தில் வைத்துப் பூஜை செய்யலாம். பிறகு சங்கிலுள்ள ஜலத்தைத் தீர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் சங்கைச் சுத்தம் செய்து அந்தப் பீடத்தில் வைத்துவிடவும். கவிழ்த்து வைக்கக் கூடாது. ஏனென்றால் பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதனால் எக்காரணம் கொண்டும் தரையின் மேல் வைக்கக் கூடாது.
இந்த வலம்புரிச் சங்கை மூன்று விதமாக பயன்படுத்தலாம். ஒன்று யாராவது இறந்தால் அவர்களுக்கு இந்த வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி அதில் துளசி இலை சிட்டிகை உப்பு சிட்டிகை சர்க்கரை சிட்டிகை அரிசி போட்ட இந்த பஞ்சாம்ருதத்தை இறந்தவரின் வாயில் ஊற்றினால் அந்த மனிதனுக்குச் சொர்க்கம் கிடைக்கும். அதுமட்டும் அல்லாமல் கொடுப்பவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்.
இரண்டாவது யாருக்காவது தலைவலி இருந்தால் இந்தச் சங்கில் ஜலம் ஊற்றி அதை 15 நாட்கள் அருந்தினால் திரும்பவும் ஒற்றைத் தலைவலி இருக்காது மூன்றாவது நமது வீட்டில்  யாராவது பெண்மணி பிரசவ நேரத்தில் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தால் உடன் இந்தச் சங்கில் ஜலம் விட்டு அதை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சுகப்பிரசவம் தான்.

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும்.

நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.

ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.

பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.
வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.

திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார்.

ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள் நம் அன்னை.

திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.

எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

ஞானம் என்பது அறிவு.
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

“சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது.

இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…

“மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”

திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும்.

ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும். ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும் ராகு, கேது
ராகு, கேது இரு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படக் காரணமான கிரகங்களாகும். ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாயாக் கிரகங்கள் எனப்படும். வானவெளியில் இதற்கென மண்டலங்கள் கொடுக்கப்படவில்லை. வானவெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப் பாதையும் வெட்டும் புள்ளிகளே ராகு, கேது என அழைக்கப் படுகிறது. சூரியனுடைய வட்டப் பாதையை சந்திரன் 5 பாகை 9 கலை தூரத்தில் தெற்கு வடக்காக சாய்ந்து நின்று இரண்டு இடங்களில் கடந்து செல்கிறார். சூரியனின் பாதையை சந்திரன் இருமுறை கடந்து செல்லும் இந்த இடமே ராகு, கேது என அழைக்கப்படுகிறது.

சூரிய வட்டப்பாதையை சந்திரன் கடக்கும் இடமானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறாக இருக்கும். சந்திரன் இன்று கடக்கும் இடத்தில் நாளை கடப்பதில்லை. நாளை கடக்கும் இடத்தில் மறுநாள் கடப்பதில்லை. சந்திரன் கடக்கும் இந்த இடமானது ஒரு நாளைக்கு 33 விகலை வீதம் தள்ளிக் கொண்டே வரும். இப்புள்ளியானது ஒரு மாதத்திற்கு 1 பாகை 40 கலை தூரத்திற்கு நகரும். பதினெட்டு மாதத்தில் இது 30 பாகை சென்று விடும். 30 பாகை கொண்டது ஒரு ராசி ஆகும். இதனால்தான் ராகு, கேதுக்கலானது ஒரு ராசியைக் கடக்க 18 மாதங்களாகின்றது. அதாவது 1 1/2 ஆண்டுகளாகின்டறது. பண்ணிரெண்டு ராசிகளையும் ராகு, கேது என்ற வெட்டும் புள்ளி சுற்றிவர பதினெட்டு வருடங்களாகின்றது.

நவக்கிரக தோ‌ஷம்

ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோ‌ஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோ‌ஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.

இப்போது எல்லாம் சின்ன கோவில்களில் கூட, நவக்கிரகங்கள் கொண்ட சன்னிதி பிரதிஷ்டை செய்து விட்டனர். முன்பு கிராமங்களில் அம்மன் கோவில் என்றால் அம்மன் சிலை தான் இருக்கும். இப்போது அங்கும் பரிவார தெய்வங்கள், நவக்கிரக சன்னிதி என்று வைத்து விட்டனர். கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவநாயகர்களின் அருள் கிடைக்கும் என்று அதீத நம்பிக்கை வைத்து உள்ளனர். சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோ‌ஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோ‌ஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அது பற்றி பார்ப்போம்:–

சூரிய தோ‌ஷம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நவக்கிரகங்கள் அமைந்து இருக்கும் திருத்தலத்துக்கு சென்று, அங்குள்ள சூரிய பகவானை மனம் உருகி வழிபட வேண்டும். அப்போது சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் (ஆடை) அணிவித்து, சூரிய மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்யலாம். வெள்ளருக்கு சுள்ளியால் யாகத் தீ வளர்த்து கோதுமை, சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து தீபாராதனை செய்து வழிபட்டால் சூரிய தோ‌ஷத்தில் இருந்து விடுபடலாம்.

சந்திர தோ‌ஷம்

திங்கட்கிழமை தோறும் சந்திரனை வழிபட வேண்டும். வெள்ளை வஸ்திரமும், முத்துமாலை அணிவித்து வழி படலாம். இல்லையெனில் வெள்ளை அரளி, வெள்ளை அல்லிப்பூ ஆகியவற்றை அணிவித்து சந்திர மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். முருங்கை மரக்குச்சிகளை கொண்டு யாகத்தீ வளர்க்க வேண்டும். அதில் பச்சரிசி, பால் சோறு, தயிர்சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சந்திரதோ‌ஷம் நீங்கும்.

செவ்வாய் தோ‌ஷம்

ஒருவருக்கு ஜாதக ரீதியில் செவ்வாய்தோ‌ஷம் இருக் கிறது என்றால் அவரது திருமண காரியங்கள் தள்ளி போகும். அந்த செவ்வாய்தோ‌ஷம் நீங்க பரிகாரம் செய்தால் அந்த அங்காரக பகவானின் அருள் கிடைத்து நாம் மேற்கொண்ட நற்காரியம் கைகூட வழி உண்டு. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தவறாமல் கோவில்களுக்கு சென்று செவ்வாய் கிரகமான அங்காரக பகவானை வழிபட வேண்டும். சிவப்பு வஸ்திரம், பவள மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் செவ்வரளி மாலை அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். கருங்காலி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து துவரம் பருப்புப்பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூரம் காட்டி வழிபட்டால் கிரக தோ‌ஷ பரிகாரம் நீங்கும்.

புதன் தோ‌ஷம்

புதன்கிழமைகளில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம், மரகத மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புதன் மந்திரங்களை சொல்லி வழிபடலாம். நாயுருவி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து, பாசிப்பருப்பு பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி புதன் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் தோ‌ஷம் விலகும்.

குரு தோ‌ஷம்

ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சிவன்கோவில் களுக்கு செல்லலாம். அங்கு மூலவர் சன்னிதிக்கு வலதுபுறம் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். இல்லையெனில் அருகே உள்ள நவக்கிரகங்கள் கொண்ட திருத்தலத்துக்கு சென்று அங்குள்ள குருபகவானை தரிசிக்கலாம்.

அன்றைய தினம் மஞ்சள்நிற வஸ்திரம், புஷ்பராக மணிமாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்முல்லை மலர் மாலை அணிவித்து, குரு மந்திரங்களை சொல்லி வழிபடலாம். அரச மரக்குச்சிகளால் யாகம் வளர்த்து அதில் கடலைப்பொடி சாதம், எலுமிச்சை சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டால் குருதோ‌ஷம் விலகும்.

சுக்ர தோ‌ஷம்

வெள்ளிக்கிழமைகளில் சுக்ரனுக்கு வெள்ளை வஸ்திரம், வைர மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்தாமரை மலர் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். அத்தி மரக்குச்சிகளால் யாகம் வளர்த்து, மொச்சைப்பொடி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சுக்ரதோ‌ஷம் நீங்கும்.

சனி தோ‌ஷம்

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலக்கல் மாலை அணிவித்து வழி படலாம். இல்லையெனில் டிசம்பர் மாத பூமாலை அணிவித்து வழி படலாம். வன்னிமரக் குச்சிகளால் யாகத்தீ வளர்த்து எள்ளுப்பொடி சாதம், எள் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சனி தோ‌ஷம் நீங்கும்.

ராகு தோ‌ஷம்

ஏதாவது ஒரு நாளில் ராகுபகவானுக்கு நீல வஸ்திரம், கோமேதக மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் இலுப்பைப்பூ மாலை அணிவித்து அருகம்புல்லால் யாகத்தீ வளர்த்து, அதில் உளுந்து, உளுந்துப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டால் ராகு தோ‌ஷம் நீங்கும்.

கேது தோ‌ஷம்

இந்த தோ‌ஷத்தையும் எந்த ஒரு நாளிலும் பரிகாரம் செய்து விடுபட்டு கொள்ளலாம். கேது பகவானுக்கு பல வண்ண ஆடை, வைடூரிய மாலை அணிவித்து வழிபட வேண்டும். இது முடியாதவர்கள் செவ்வரளி பூ அலங்காரம் செய்து தரிசிக்க வேண்டும். தர்ப்பைப் புல்லால் யாகத்தீ வளர்த்து கொள்ளு, கொள்ளுப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து வழிபட்டால் தோ‌ஷம் நிவர்த்தி ஆகும்

மரகத லிங்கத்தின் சிறப்புகள்.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம்.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விடயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர். மன்னர்கள் இந்த வகை லிங்கங்கள் கோவிலில் வைத்து வழிபடுவதையே சிறப்பு என்று கருதினார்கள். மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகதலிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகதலிங்கத்தை வணங்கலாம்.ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலம். தற்போது இந்த இடம் திருவடி சூலம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு சிவலிங்கம் ஒரு சுயம்பு மரகதலிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கின்றது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. புற்றுருவாக இருந்த சுவாமிக்கு அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த தலம் இதுவாகும்.வேலூர் காவிரிப்பாக்கம் அருகே உள்ள சிறுகரும்பூரில் உள்ள சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோயிலில் உள்ள மரகத லிங்கம் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது. இப்போது (கடந்த ஜூலை மாதம்) இது திருடு போனது.திருச்சி அருகிலுள்ள மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலையில் சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு மைசூர் ஒரு சிவன் கோவில். இங்கு மாமன்னர் திப்பு சுல்தான் ஒரு மரகதலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் , உத்தரகோசமங்கையில் உள்ளது மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி கோவில். இக் கோவில் வளாகத்திற்குள்ளே நடராஜருக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கு உலகப் பகழ் பெற்ற பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இக்கோவிலில் உள்ள மரகதலிங்கத்திற்கும், ஸ்படிகலிங்கத்துக்கும் தினசரி அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் நடராசருக்கு அபிஷேகம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தன்று பச்சை மரகதக்கல் நடராசருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்கும் சக்தி இல்லாத மென்மையான பண்புகள் கொண்ட பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் சிலையை சந்தனக் கலவையைப் பூசி பாதுகாத்து வருகின்றனர். திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப் பூச்சு கலைக்கப்படுகிறது.சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

சனி, 19 ஆகஸ்ட், 2017

இரத்தின மோதிரங்கள்

அனைத்து மோதிரமும் ரெடியாக உள்ளது தேவை படும் நபர் என்னை தொடர்பு கொள்ளவும் ஶ்ரீ சிவசக்தி ஜோதிடம் ஜோதிடர் T.V.வெங்கட் ராம்ஜி செல் 8124812470 மோதிரங்கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்       










செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ரசமணிதேவை படுபவர்கள் என்னை போனில் தொடர்பு கொள்ளவும்

 ரசமணிதேவை படுபவர்கள் என்னை போனில் தொடர்பு கொள்ளவும்  கொரியர் மூலம் ரசமணி  அனுப்பிவைக்கப்படும்  ( இந்தியா மட்டும்) விலை 1000  ரூபாய்   1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.






2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.


மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது 

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...