செவ்வாய், 25 நவம்பர், 2014

மந்திரம்

                                             1.கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட:
எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு “ஓம் சிவசிவ ஓம்”மனதார ஜெபித்து வெண் பூசணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும்.                                                                                                                                                     --------------------------------------------------------------------------------                                                                                           2.நவக்கிரக தோஷம் விலக:
வீட்டில் நவதானியங்களை கொண்டு முளைப்பாரி போட்டு வளர்த்து அதனை ஏதாவது ஒரு வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் பூஜை செய்து ‘ஓம் அரி ஓம்” என்று 1008 உரு அருகம்புல் கொண்டு ஜெபித்து தண்ணீரில் முளைப்பாரியை கரைத்து விட உடனே நவக்கிரக தோஷம் விலகும்.
செவ்வாய் தோஷம் விலக :
செவ்வாய்தோஷம் பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை பூவை வைத்து மல்லிகை பூவை கொண்டு 1008 உரு ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை விட்டு விட உடனே செவ்வாய்தோஷம் விலகும்.                                                                                                                                      3.
செய்வினை, ஏவல் பாதிப்பு விலக:
தினசரி விநாயகர் அகவல் படித்து, பிரண்டை துவையல் சாப்பிட்டு வரவும்
தேனில் “ஓம் அரி ஒம்”; மந்திரத்தை ஜெபித்து, தேனை சாப்பிட்டு வர செய்வினை, ஏவல் பாதிப்புகள் விலகும்.                                                                                                                               -------------------------------------------------------------------------------                                                             4.குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட 
குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை திருத்த விரும்பும் பெண்கள் புவனேஸ்வரி படம் வாங்கி அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் கணவன் படத்தினை உள்ளே வைத்து பிரேம் செய்து அந்த படத்தினை கன்னி மூலையில் வைத்து மல்லிகைப்பூ கொண்டு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று 1008 உரு வீதம் 90 நாட்கள் ஜெபித்து பின்பு தினசரி 300 உரு ஜெபிக்க கட்டாயம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்                                                       --------------------------------------------------------------------------------                                                 5.கணவன், மனைவி ஒற்றுமை ஏற்பட:
ராகவேந்திரர் படத்திற்கு மல்லிகைப்பூ மாலை போட்டு அவரை குருவாக ஏற்று வணங்கி பின்பு அந்த படத்திற்கு முன்பு பட்டுத் துணியில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று தினசரி 300 உரு ஜெபிக்க கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படும்.                                             --------------------------------------------------------------------------------                                                                        6.கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!
ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். 

இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது.

காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.

அப்பெண்ணை கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார்.

அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள்,

இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.

அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
அனந்த பூமா மமரோக ராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ                                                                                               --------------------------------------------------------------------------------                                                                  7.
வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட:
(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் 

ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும். 48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.                          --------------------------------------------------------------------------------                                                                    8.பாவகர்மாக்களில் இருந்து விடுபட:
இளநீரில் உள்ள தண்ணீரில் கல்கண்டு சேர்த்து அதில் 1008முறை “ஓம் சிவசிவ ஓம்” என்று தர்ப்பைப்புல் கொண்டு ஜெபித்து தினசரி சூரிய உதயத்திற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்பு இளநீரை குடிக்க வேண்டும். பின்பு, சிவபுராணம் படிக்க வேண்டும். இதனால் முன்ஜென்ம பாவ கர்மாக்கள் படிப்படியாக குறையும்.                                                 --------------------------------------------------------------------------------                                                              9.காசி, கயா தரிசன பலன் கிட்டும் ஸ்லோகம்
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம் 
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம் 
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம் கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்

பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.

காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால்,
உன்னைச் சேரும்                                                                                                                                    --------------------------------------------------------------------------------                                                             10. 
ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க
ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’ அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்
வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு
கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்

-இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.

ராம ராம ஹரே ராம்’

என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.                                                                                                     --------------------------------------------------------------------------------                                                                 11.
திக்குவாய் சரியாக மந்திர தந்திரம்
1.உளுந்து 10 கிராம் ,கொள்ளு 10 கிராம் எடுத்து வெள்ளைத்துணியில் முடிந்து தலையணைக்கடியில் வைத்து 90 நாட்கள் உறங்கி வர வேண்டும்.90 நாள் கழிந்ததும் அதை கோவில் குளங்களில் போட்டு விடவும்.

2.செம்புத்தட்டில் தேன் ஊற்றி அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதி பின் கீழ்க்கண்ட மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து அந்த தேனை அவர்கள் நாக்கில் தடவி விட்டு வரலாம்.இதை வளர்பிறை புதன்கிழமை புதன் ஹோரையில் தொடங்கவும்.பின் தினமோ அல்லது புதன்கிழமைகளிலோ செய்து வரலாம்.

மந்திரம்

1.ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹ.

இம்மந்திரத்தை முறை108 ஜபித்து வந்தால் திக்குவாய் சரியாகும்                                             --------------------------------------------------------------------------------                                                   12.
கருட தரிசன பலன்கள்
கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். மனக்குழப்பம் நீங்கும், பாவங்கள் தொடராது.

திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும். குடும்பம் செழித்தோங்கும்.

செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். தைரியம் உண்டாகும்.

புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும். வைப்பு சூன்யம் நீங்கும்

வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.

வெள்ளி கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.தங்க ஆபரணங்கள் சேரும், அஷ்ட ஐஸ்வர்யமும் நிலைக்கும்

சனி – கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் முக்தி பெறலாம் ஞானம் உண்டாகும்.                                                                                                                                              --------------------------------------------------------------------------------                                                                13.
வசிய மருந்து,(இடுமருந்து ) நீங்கிட
100 மி.லி.பசும்பால்,100 மி.லி.தேங்காய்ப்பால்,100 மி.லி.வெண்பூசணி என்ற தடியங்காய் பால் எடுத்து,சரிசமமாக கலந்து ஐந்துமிளகு இடித்துப்போட்டு,கொதிக்க வைத்து,பின் இறக்கி வைத்து,இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் ஒருநாள் விட்டு ஒரு நாள் என 3 முறை குடிக்க வேண்டும்.இதனால்,இடுமருந்து நீங்கிவிடும்.

அநேகர்களுக்கு,இடுமருந்து முறிவதற்கு,மனக்குழப்பத்திற்கு இந்த முப்பாலை பனங்கற்கண்டு சேர்த்தும்,நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இனிப்பு சேர்க்காமலும் கொடுப்பதால் குணமாகும்.

ஹோமியோ மருத்துவத்தில்

நக்ஸ்வாமிகா என்னும் மருந்தை 30 ஓ வீரியத்தில் ஒரு முறை,ஒரு டோஸ் கொடுத்தால் போதும்.இடுமருந்து முறிந்துவிடும்.                                                                         --------------------------------------------------------------------------------                                                                14. 
எல்லோரையும் மோகிக்க செய்யும் சக்தியும் உண்டாக உயர்ந்த பதவி, அதிகாரம் பெற
மந்திரம்

ஸ்மித ஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந-சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா
அதஸ்தே ஸீதாம்ஸோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா
--------------------------------------------------------------------------------
பொருள்: அம்பிகையே! உன்னுடைய முகமாகிய சந்திரன் பொழியும் புன்சிரிப்பாகிய அமுதம் போன்ற நிலவொளியை அளவின்றிப் பருகும் சகோர பக்ஷிகள், அதன் மிகையான தித்திப்பால் தங்கள் அலகுகள் உணர்விழந்தனவாக ஆகிவிட்டன எனக் கருதி, மாற்று ரஸமாகப் புளிப்பை விரும்பி சந்திரனின் கிரணங்களான அமுதப் பெருக்கை, புளித்த கஞ்சியாக எண்ணி வேண்டியவரை ஒவ்வோர் இரவிலும் அதைத் திருப்தியாகப் பருகி மகிழ்கின்றன.

ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 30,000 தடவை ஜபித்து வந்தால், உயர்ந்த பதவியையும், அதிகாரத்தையும் பெறலாம். இவ்வுலகில் எல்லோரையும் மோகிக்கச் செய்யும் சக்தியும் உண்டாகும்                                                                                                                                              
--------------------------------------------------------------------------------                                                           15.வீடு, வாகனம், மனை, மனைவி முதலான ஸகல சுகங்களும் உண்டாக சுபிட்சம் ஏற்பட
மந்திரம்

த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித-நீலோத்பல-ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர:
----------------------------------------------------------------------------
பொருள்: சகல மங்களங்களையும் அளிப்பவளே! உன் கடைக்கண் பார்வை சற்றே மலர்ந்த கருநெய்தல் புஷ்பம் போல் விளங்குகின்றது. காது வரை நீண்டுள்ளது. உன்னை நெருங்காமல் உள்ள இந்த ஏழையை அந்தப் பார்வையால் தயவு செய்து ஸ்நானம் செய்துவை. அதனால் நான் புண்ணியமும் செல்வமும் பெறுவேன். இதனால் உனக்கு எந்தக் குறையும் இல்லை. சந்திரன்; காட்டிலும், அரண்மனையிலும் பாரபட்சமின்றி ஒரே விதமாகத்தானே காய்கின்றான்?

ஜபமுறையும் பலனும்

6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், வீடு, வாகனம், மனை, மனைவி முதலான ஸகல சுகங்களும் உண்டாகும். நாட்டில் சுபிட்சம் ஏற்படும்                                                
 --------------------------------------------------------------------------------                     16. தனவசியம் உண்டாக தரித்திரங்களை விரட்டும் 
குபேர மந்திரம்
ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய 
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்வ்ருத்திம்மே தேகி தேகி தாபய ஸ்வாஹா''

இம்மந்திரத்தை 32 வீதம் தினம் ஜெபித்து வர பணக்கஷ்டமே வராது.                                      --------------------------------------------------------------------------------                                          17.
பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மாந்திரீக தாந்திரீக ரகசியம்.

(share) செய்யுங்கள்) .....

கணவன் மனைவி .இதை மனைவிதான் செய்ய வேண்டும்.அதாவது பிரிந்து வாழும் மனைவிதான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.அவரது சார்பாக வேறு எவரும் செய்யக்கூடாது.

தட்டு ஒன்றில் குங்குமத்தைப் பரப்பி, அதில் தன் கணவரின் பெயரை எழுதி கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு

ஜபம் முடிந்ததும் அந்த தட்டை பூஜிக்க வேண்டும்.அதாவது தீபாராதனை செய்ய வேண்டும்.பிறகு அந்தகுங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்.(பூஜைக்கு முன்பு எப்போதும் போல் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்)

மறுநாள், இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்).

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை ஜபித்துவர பலன் நிச்சயம்                                                        
--------------------------------------------------------------------------------                                                    18.ஆன்மிகம் கூறும் நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?
நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான்.

சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை தினம் ஒன்றில் தான் அம்பிகையைப் போற்றி கனகதாரா துதியினைப் பாடி தங்க நெல்லிக்கனி மழையைப் பொழியச் செய்தாராம் ஆதிசங்கர மகான். நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து உறைவதாகச் சொல்கின்றன புராணங்கள். ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.

நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது. அங்கே துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும். நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர். அமாவாசை தினங்களிலும், இரவு நேரத்திலும் நெல்லிக்கனியை உண்பது கூடாது.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம் குறைந்து விடும்.
                                                                                   --------------------------------------------------------------------------------                                                           19.    விருட்ச சாஸ்திரம் ...
அரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும்,

வேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும்,

மாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும்,

விடதாழை மரம் - சனி தோஷம் போக்கும்,

பின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும்,

ஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்,

பாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும்,

பும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்,

அரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்,

குறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்,

கொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும்,

ஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்,

கருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்,

நத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,


கல்லால மரம் - உலகத்திலுள்ள செல்வங்களை ஈர்த்து தரும்
                                                   --------------------------------------------------------------------------------                                                  20.வீட்டு மூலையில் 24 மணி நேரமும் 0 வாட்ஸ் பல்பு எப்போதும் எரியும்படி செய்து பாருங்கள். பணத்தட்டுப்பாடே வராது.

நமச்சிவய சனி பரிகாரம்



1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.

3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.

4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.

5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.

6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.

7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை.

8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.

9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.

10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.

11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
தீமை தரும் சனி பார்வை

12. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.

13. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.

14. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.

15. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.

16. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

17. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.

18. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.

19. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.

20. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.

21. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.

22. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

புகைப்படம்: சனி  பரிகாரம்

(share) செய்யுங்கள்) 

1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.

3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.

4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.

5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.

6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.

7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை.

8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.

9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.

10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.

11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
தீமை தரும் சனி பார்வை

12. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.

13. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.

14. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.

15. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.

16. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

17. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.

18. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.

19. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.

20. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.

21. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.

22. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

திங்கள், 24 நவம்பர், 2014

கடன் பட்டிருந்தால்…


“கடனானதற்குப் பிறகு சிலர், இப்படியாகி விட்டதே, நான் என்ன பாவம் செய்தேனோ’ என்று புலம்பிக் கொண்டிருப்பர்.
இன்னும் சிலர் ‘இப்படி செய்திருக்க வேண்டும் இப்படி செய்திருக்கக் கூடாது, இப்படி செய்ததால் தான் இப்படி ஆனது’ என்று பழைய சம்பவ ஆராய்ச்சிகளிலேயே மீண்டும் மீண்டும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பர்.

இன்னும் சிலர் “கோபம், டென்சனாகி யார் இவ்வாறு நடக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் திட்டிக் கொண்டும், சபித்துக் கொண்டும் இருப்பர்.
இன்னும் சிலர், கவலைப்பட்டுக் கவலைப்பட்டு கடன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக வேண்டாத பழக்கங்களில் ஈடுபடுவர்.
நண்பர்களே! கடந்தவை கடந்தவைதான். அவற்றிலிருந்து பாடங்களை எடுத்துக் கொள்க. இந்த அனுபவத்தை வைத்து மீண்டும் தொடர்ந்து செயல்பட்டால் கடன்களிலிருந்து மீளமுடியும். செல்வம் குவிக்க முடியும். அந்த ஆற்றல் எல்லோரிடமும் இருக்கிறது. இதை உணருங்கள்.
கடனுக்குக் காரணமானவரையும் ஏமாற்றியவரையும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், எதிர்மறைஎண்ணங்கள் அதிகமாகும். மனச்சக்தி வீணாகும். அது உங்கள் ஆக்க அறிவு செயல்படுவதைத் தடை செய்யும்.
கடன் நினைவுகள் வரும்பொழுதெல்லாம், அதை ஒரு சவாலாக மாற்றுங்கள். எழுந்து நில்லுங்கள். உங்களால் ஜெயிக்க முடியும்!
(என்னுடைய “தோல்வியிலிருந்து வெற்றிக்கு’ நூலில் இன்னும் பல விளக்கங்கள் உள்ளன)
கடன் அதிகமாய் இருந்தால், வட்டி அதிகம் கட்ட வேண்டியது வந்தால், உங்களது சொத்துக்களை விற்றும் கட்டுங்கள். சமுதாய அந்தஸ்து என்றபோலி கௌரவம் பார்க்க வேண்டாம். கடன்களைக் கட்டியபிறகு மனச்சிக்கல் இல்லாமல் உற்சாகமாகத் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள். பணம் வந்துவிட்டால் எல்லா மதிப்பும் தானே வந்துவிடும்.
கடன் பட்டதற்குப் பிறகு சிலர் கடன் கொடுத்தவர்களை சந்திக்கப் பயந்து கொள்வர். “சொன்ன தவணைக்கு கொடுக்க முடியுமோ, முடியாதோ, என்னாகுமோ’ என்ற மன உளைச்சலில் இருப்பர்.
நீங்கள் 5ஆம் தேதி பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லி, 5ம் தேதி உங்களால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுமானால், 4ம் தேதியே கடன் கொடுத்தவரைச் சந்தித்து நிலையை விளக்கி விடுங்கள். மீண்டும் திருப்பிக் கொடுக்க சற்று அவகாசம் வாங்கி வாருங்கள். இதனால் கடன் கொடுத்தவர் சற்று சங்கடப் பட்டாலும் அது பிரச்சனையாகாது.
ஆனால் 5ம் தேதி பணம் இல்லை என்று பிரச்சனையில் போகாவிட்டால், அவர் 6ம் தேதி உங்களை சந்திக்க வந்தால் வரும்போது எப்படி வருவார்? அது உங்களுக்கே தெரியும்.
ஆகவே, சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தியுங்கள்.
மீண்டும், மீண்டும் எண்ணுங்கள். “பணத்தை சம்பாதித்துக் கடனைக் கட்டியே தீருவேன்’ என்று செயல்படுங்கள். உங்களால் முடியும்!
கடனிலிருந்து விடுபடும் பயிற்சி
‘Think Yourself Rich’ என்றநூலில் டாக்டர் ஜோசப் மர்ஃபி கூறுகிறார்.
அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள். பணம் உங்களுக்கு நிறையக் கிடைப்பது போலவும், அதை எடுத்துச் சென்று கடன் கொடுத்தவரிடம் கொடுப்பது போலவும், அவர் மகிழ்ச்சியாக பெற்றுக் கொள்வதைப் போலவும், நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு, நிம்மதி சந்தோசத்துடன் வீடு திரும்புவது போலவும் போன்ற காட்சிகளை மனத்திரையில் பாருங்கள். இப்பொழுது கண்களை விழித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பயிற்சியைக் காலையிலும், மாலையிலும் செய்து வரவர இந்தக் காட்சிகள் மேல் மனதிலிருந்து உள் மனத்தில் பதிந்து வெற்றியாக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.
கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனைகளைச் செய்து விட்டுத் தொடர்ந்து செயல் புரியுங்கள்.
வாழ்த்துக்கள்!
கடனை வசூலிக்கும் முறைகள்
1.    கடன் பெற்றபணத்தை என்றைக்குத் திருப்பித் தருகிறார்கள் என்று கேட்டு நாளைக் குறித்துக் கொள்ளவும். அந்த நாளில் சரியாக அவர்களிடம் கேட்கவும். மாறாக, இந்தப் பணம் வராது, இவர் திருப்பிக் கொடுக்க மாட்டார் என்றஅனுமானத்தில்கேட்காமல் விடக்கூடாது.
ஒருமுறைT.V. பேட்டியில் ஒரு Finance சொன்னார், நம் முன்னோர்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பது பற்றி பழமொழி ஒன்றைக் கூறியுள்ளார்கள். “கறக்காத பாலும், கேட்காத கடனும் திரும்ப வராது’ அதேபோலக் கொடுத்த கடனைக் கேட்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பணம் திரும்பி வரும்’.
2.    “இப்படிக் கடனை வாங்கித் திரும்பக் கொடுக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக் கிறார்களே, இப்படி இருந்து கொண்டிருக் கிறார்களே’ என்று எரிச்சலடையாமல் அவரை சபிக்காமல் கீழ்க் கண்டவாறு அவர்களை வாழ்த்த வேண்டும்.
நம்மிடம் பணம் வாங்கியவரை மனதில் கொண்டு வந்து “அவரிடம் செல்வம் பெருக வேண்டும். அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கும் நிலையை அடைய வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும்’ என்று தினமும் வாழ்த்துங்கள். இந்த வாழ்த்து எண்ண அலைகள் அவருடைய மனதில் பதிந்து, பணம் சம்பாதிக்கும் எண்ணங்களைத் தூண்டி செயல்படுத்த வைத்து, பணத்தைத் திருப்பிக் கொடுக்க வைக்கும். நல்ல எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.
இந்தப் பயிற்சி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித குலத்திற்கு அளித்த மாபெரும் பரிசு.
வசூல் செய்யும் மனக்காட்சிப் பயிற்சி ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்க. ஒவ்வொரு முறையும் வசூல் செய்யப் போகும் முன்பும் இந்தப் பயிற்சியைக் செய்துவிட்டுப் போகவும்.
அமைதியாக அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்க. மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்க. 10லிருந்து 1 வரை தலைகீழாக எண்ணிக்கொள்க. இப்பொழுது மனக்காட்சியில் உங்களிடம் கடன் வாங்கியவருடைய உருவத்தைக் கொண்டு வருக.
நீங்கள் அவரிடம் செல்வது போலவும், அவரிடம் பணம் கேட்பது போலவும், அவர் சந்தோசமாக பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவது போலவும், நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாழ்த்துச் சொல்லி திரும்புதல் போலவும் காட்சிகளை மனத்திரையில் பார்க்கவும். பின் மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளவும்.
இந்தப் பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, ஆழ்மனத்தில் பதிந்து அது நடைமுறையில் சாத்தியமாகும் சூழ்நிலை உருவாகும்.
இன்னொன்று எதை எதிர்பார்க் கிறோமோ அதுவே நடக்கிறது. எதிர்பார்ப்பு விதி (Law of Expectation) அதைத்தான் சொல்லுகிறது.
கொடுத்தது திரும்பிவரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் பொழுது அந்தப்பணம் திரும்பி வரும். இப்பொழுது செய்த மனக் காட்சிப் பயிற்சி அந்த நம்பிக்கையை பலப்படுத்தும்.
பணத்தைக் கேட்கும் முறை
கொடுத்த பணத்தைக் கேட்கப் போகும் பொழுது, பணம் வசூலாகாத பட்சத்தில் திரும்பி வருவதற்கு முன்பு சிலர் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர்.
“எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு, நீ கொடுக்க மாட்டே, இந்தப் பணம் போனது போனதுதான். இனிமேல் எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லை. நீ அநியாயமா ஏமாத்தற, இப்படியெல்லாம் செய்தால் நீ உருப்பட மாட்ட….’இவ்வாறு சொல்லக்கூடாது. ஆனால் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
‘உங்களை நம்பித்தான் கொடுத்தேன். அடிப்படையில் நீங்கள் ரொம்ப நல்லவர். அடுத்தவர் காசை ஏமாற்றும் எண்ணம் உங்களுக்குக் கிடையாது. அது எனக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு உங்கள் தேவைக்கு உதவத்தான் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது பணம் எனக்கு மிக அவசரத் தேவையாக இருக்கிறது. பணத்தை வாங்கிய உங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது, நாணயம் காப்பாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆகவே, இதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் நிச்சயம் சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள் என்று 100% நம்பிக்கைக் கொண்டு எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன். நீங்கள் திருப்பிக் கொடுக்கும் நிலைமைக்கு பணம் உங்களுக்கு வருவதற்கு நல்வாழ்த்துக்கள்!
ஆகவே, நண்பர்களே! இவ்வாறு கடனைக் கேட்டுவிட்டுத் திரும்பிவரும் போது சொல்கிறசொற்கள் உடன்பாட்டுச் சொற்களாக நல்ல எதிர்பார்ப்புடன் சொல்லிவிட்டு வரவேண்டும்.
“யாரை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே ஆகிறார்கள்’. நாம் இவ்வாறு பெருந்தன்மையுடன் நடத்தும்பொழுது பணம் அவர்களுக்கு வருகிறகால கட்டத்தில் முதலில் நமக்குக் கொடுப்பார்கள்.
பணம் வசூலாகாவிட்டால்…
மேற்கூறிய பணத்தை வசூலிக்கும் முறைகள் அனைத்தையும் உபயோகித்தும் பணம் வசூலாகாவிட்டால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உழைத்துச் சம்பாதித்து சேர்த்த பணம் வீண் போகாது. வேறொரு ஏதேனும் ஒரு ரூபத் திலோ, தொழில் வாய்ப்பாகவோ திரும்பி விடும்.
ஏனென்றால் சில அடிப்படைப் பிரபஞ்ச நியதிகளின் படி இந்த உலகம் இயங்குகிறது. ஒருவர் உழைத்த உழைப்பினால் சேர்த்த பணம் எந்த வகையிலும் வீண் போகாது. பணமாக வராவிட்டாலும், அது வேறு ஏதேனும் நன்மையாகவாவது மாறும். ஓர் உதாரணத்திற்கு உங்கள் உடல் நலம் அல்லது சந்ததியாருக்கு நன்மை இப்படி ஏதேனும் ஒருவகையில் திரும்பக் கிடைக்கும். ஆகவே, இழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் அதையே எண்ணி மனம் சோர்வடையாமல் தொடர்ந்து அவர்களுக்குத் திரும்பச் செலுத்த போதிய அவகாசம் கொடுங்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். இழந்தது 5 இலட்சம், ஆனால் 50 இலட்சம் சம்பாதிப்பேன். அது என்னால் முடியும் என்று இழந்த நினைவு வரும்போதெல்லாம், ஏமாற்றப்பட்ட நினைவு வரும் போதெல்லாம் அதைச் சவாலாக மாற்றுங்கள். வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்!

நாக தோஷம், அதன் பாதிப்பு, நிவர்த்தி.



ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும்,லக்னம்,சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். 1. லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம். 2. லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளது நாகதோஷமே. இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது. 3 லக்னம் அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேத இருப்பதால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும். 4 லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப் படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜhதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். 5 லக்னம்; அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். 6. லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷமே, இதனாலும் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும்.12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்;லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். நாகதோஷப் பொருத்தமும், திருமணமும் : 1. நாகதோஷம் ஆண்/பெண் இருவர் ஜhதகங்களில் இருந்தாலும் பொருத்தலாம். இல்லாவிட்டாலும்பொருத்தலாம்2. ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது. 3. ஆண், பெண் இருவருக்கும்; சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்கினால் சேர்க்கலாம். ஒருவருக்கு மட்டும் நீங்கினால் போதாது. 4. ஆண் ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8. 12 வது இடங்களில ராகு அல்லது கேது சுபர் பார்வையுடன் இருக்கும்போது, பெண் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்தால் அது மத்யம பலனைக் கொடுக்கும். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். 5. பெண் ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ள அதே இடத்திலேயே ஆண்; ஜாதகத்திலும் இருக்கவேண்டும் என்று ஒரு அபிப்ராயம் ஜோதிடர்களிடையே உள்ளது. அவ்வாறு அமைந்தாலும் நல்லதே. தோஷசாம்யம் ஏற்படும். 6. அசுவினி, மகம், மூலம், நத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்த்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோஅல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது. 7. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்த்திரமாக வரும ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.8. ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.

சுக்கிரன் – பொது அறிவியல்


பொதுவாக சுக்கிரன் இல்லற வாழ்க்கையை குறிக்கும் கிரகமாகும். அதனால் தான் அவரை களத்திரகாரகன் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும், சுக்கிரனே ஆடம்பர வாழ்க்கைஆபரணச் சேர்க்கைபங்களா போன்ற பெரிய வீட்டில் வாழும் வாழ்க்கைவண்டிவாகன யோகம் போன்றவற்றிற்கும் அவரே காரகனாகிறார். நவகிரக தசாக்களில் இவருடைய தசா காலமேமிகப்பெரியது ஆகும். அதாவது சுக்கிர தசை 20 வருடங்களாகும்.
சுக்கிரன் – அறிவியல்
 சுக்கிரன் சூரியனிலிருந்து 2 வது கிரகமாகசூரியனை சுமார்224 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. (பூமி 365.25நாட்கள் எடுத்துக் கொள்கிறது). பூமியிலிருந்து பார்க்கும்பொழுதுசந்திரனுக்கு அடுத்தபடியாக பிரகாசமாக இருப்பது சுக்கிரனே. அளவில்அது ஏறக்குறைய பூமியின் அளவேயாகும். புவியீர்ப்பு விசை பூமியை போன்றே இருக்கிறது. 96 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு இருக்கிறது. அதன் மேற்பரப்பில் காணும் வெப்ப நிலை 460டிகிரி செண்டிகிரேட் ஆகும். சுக்கிரனின் மேற்பரப்பில் நின்று பார்த்தோமானால்சூரியன் மேற்கே உதயமாகி,கிழக்கே அஸ்தமனமாகும். மற்ற கிரகங்களைப் போல் அல்லாது இது எதிர் திசையில்தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. ஆனால் சூரியனை மட்டும் நம் பூமியைப் போலவே நேர் வழியில்நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சுக்கிரனின் பகல் பொழுதுபூமியின் கணக்குப் படி பார்த்தால் 117 நாட்களாகும். அதாவதுசுக்கிரனில் ஒரு சூரிய உதயத்திற்கும்மறுநாள் சூரிய உதயத்திற்கும் எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் 243நாட்கள் வரையாகும். அவ்வளவு மெதுவாகத் தன்னைத் தானே சுற்றுகிறது. உண்மையில் இது ஒரு அதிசய கிரகம்தான்.
சுக்கிரன்  காரகத்துவம்
இந்தப் பதிவின் தொடக்கத்தில் உள்ள பத்தியைப் படித்துக்கொள்ளவும். நேரம் கிடைத்தால்காதல் மன்னன் என்ற தலைப்பில் வந்த முந்தையப் பதிவுகளை படிக்கவும்.
சுக்கிர தசா
பரணிபூரம்பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சுக்கிர தசை வரும். சுக்கிரதசை மொத்தம் 20 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 20 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 20 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் கர்ப்பச்செல் என்று குறிப்பிடுவார்கள். சுக்கிர தசையில் சுக்கிரன் காரகத்துவம்என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும்மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பா (Bhava) அடிப்படையில், சுக்கிரன் தரும் பலன்களும் நடைபெறும்.
இனி ஜோதிட ரீதியாக சுக்கிரனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.
சுக்கிரன்– பயோடேட்டா
ஆட்சி பெறும் ராசி
ரிஷபம்துலாம்
உச்சம் பெறும் ராசி
மீனம்
நீச்சம் பெறும் ராசி
கன்னி
நட்பு பெறும் ராசிகள்
மிதுனம்தனுசுமகரம்,கும்பம்
சமம் (நியூட்ரல்)
மேஷம்விருச்சிகம்
பகை பெறும் ராசிகள்
கடகம்சிம்மம்
மூலத்திரிகோணம
துலாம்
சொந்த நட்சத்திரம்
பரணிபூரம்பூராடம்
திசை
கிழக்கு
அதிதேவதை
லட்சுமி
ஜாதி
பிராமணன்
நிறம்
வெள்ளை
வாகனம்
கருடன்
தானியம்
மொச்சை
மலர்
வெந்தாமரை
ஆடை
வெண்பட்டு
இரத்தினம்
வைரம்
செடி / விருட்சம்
அத்தி
உலோகம்
வெள்ளி
இனம்
பெண்
அங்கம்
மர்ம ஸ்தானம்
நட்பு கிரகங்கள்
புதன்சனிஇராகுகேது
பகை கிரகங்கள்
சூரியன்சந்திரன்
சுவை
இனிப்பு
பஞ்ச பூதம்
அப்பு
நாடி
சிலேத்துமம்
மணம்
இலவங்கம்
மொழி
வட மொழிதெலுங்கு
வடிவம்
சம உயரம்
சுக்கிரனுக்குரிய கோயில்
கஞ்சனூர்
சுக்கிரன் போற்றி
சுக்கிர மூர்த்தி சுபமிகு ஈவாய் !
வக்கிரமின்றி வரமிகு தருவாய்! வெள்ளிச்
சுக்கிர வித்தக வேந்தே! அள்ளிக்
கொடுப்பாய் அடியார்க்கருளே !

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...