வெள்ளி, 7 நவம்பர், 2014

குழந்தை பாக்கியம்


திருமணம் நடந்துமுடிந்த 3 மாதத்திலிருந்து அனைவரும் எதிர்பார்க்கும் விஷயம் குழந்தை பாக்கியம்.
அதில் தடையோ,தாமதமோ ஆனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே.சோ இந்த பிரச்சனை வராமல் தடுப்பது எப்படி?என்ற கேள்விக்கு தீர்வை தேடியே யாம் இவ்விஷயத்தை கையில் எடுத்துள்ளோம்.அதற்கு கீழ் கண்ட கேள்விகளுக்கு நாம் விடை கான வேண்டும்.

1.குழந்தை பாக்கியத்தில் திருமணப் பொருத்தத்தின் பங்கு என்ன?

2.ஜாதகரீதியாக குழந்தை பெற்றுக்கொள்வதில் யாருக்கு பிரச்சனை வரலாம்?

இக்கேள்விகளுக்கு தீவிர ஆராய்ச்சி செய்து
நம்மால் ஆன உதவியை சமுதாயத்திற்கு செய்வதே எங்கள் நோக்கம்.

"பொருத்தம்பாத்துதான், நாள் நட்சத்திரம் பாத்துதான் எல்லாம் பன்னோம்.ஆச்சி 5 வருஷம் இன்னும் அவ (மருமகள்) வயித்துல ஒரு புழு பூச்சிய கூட கானும்"
என்று புலம்புபவர்களின் வேதனையையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது.
அதற்கு தீர்வை தேடித்தான் நான் பயணம் புறப்பட்டுள்ளேன்.
தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி.
எனவே வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு இன்றி என்னால் எதுவும் செய்யமுடியாது.

நீங்கள் செய்யவேண்டியது:

1.திருமணம் நடந்து 2வருடத்திற்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகளின்
பிறந்த தேதி,நேரம்,பிறந்த ஊர் ,பெயர் போன்றவைகளை எமக்கு அனுப்பவும்.
அத்துடன் ஏதேனும் கருக்கலைவு ,கரு சிதைவு ஏற்பட்டுள்ளதா என்ற கூடுதல் விபரமும் தேவை.

3.அதற்கு பிரதி உபகாரமாக இவ்விஷயம் தொடர்பாக அவர்கள் ஜாதகரீதியில் 10நாட்களில் அவருக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் இதை எந்த தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் செய்யவில்லை.முழுக்க முழுக்க பொதுநலன் கருதியே செய்யப்படுவதால் உண்மை தகவல்களை மட்டுமே கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் .

சுருக்கமாக சொன்னால்
இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களை திருமணத்திற்கு முன்பே ஜோதிடர்கள் இனம் கண்டு அதை அந்த ஜாதகருக்கு புரியவைத்து ,அவரும் அதற்கான மருத்துவ சிகிச்சை செய்து திருமணம் செய்துகொண்டால் திருமணத்திற்கு பிறகு அவர்கள் அக வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

இது சம்மந்தமாக கனவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு,சண்டை,ஈகோ, இரண்டாவது திருமணம் போன்ற விஷயங்களை தவிர்க்கமுடியும்

எனவே தயவுசெய்து அனைவரும் உண்மைத்தகவலை மட்டும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்கள்,அக்கம் பக்கம் விசாரித்து இதுபோன்ற ஜாதகங்களை வாங்கித்தாருங்கள்.
பிறந்த நேரம் மிக மிக மிக முக்கியம்.

.ஜாதகங்களை அனுப்பவேண்டிய இமெயில்- SSSJN2412@GMAIL.COM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...