சனி, 23 ஜூலை, 2016

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும்  சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள்  சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

விரதம் சரி... அது என்ன கதை? எதற்காக அதைச் சொல்ல வேண்டும்? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க  அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை  மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது.  அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன  அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன்  இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை  இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன  இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர்.  அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. அரற்றினாள்..  தவித்தாள்.. தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது  அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன்  வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.  மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம்  உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும்,  அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் இது என்பது  நம்பிக்கையாக உள்ளது. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே  அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து  தன் சூட்டைத் தணித்துக் கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப்பெயர் வந்தது. அக்னி நீராடிய  கடலில் நீராடுவோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில்  நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.

தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்: ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம்.  இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும்  கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே.  மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல என்றொரு சொல்வழக்கு  ஒன்றுண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.  சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட  பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் அக்னிதீர்த்தம் எனப்படுகிறது. இங்கு  ஆடிமாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது. தீர்த்த நீராடலுக்கு  பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாக  இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.

தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை,  தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை  நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது  ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு  மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப்  படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை  வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து,  நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம். அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்... குருஷேத்ர  யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன். போரில்  வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்... எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும்,  உண்மையின் இருப்பிடமான சகாதேவன், பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி... என்றார். துரியோதனனும்,  அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு  குளக்கரையில் அமர்ந்து,  அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப்பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர். நாங்கள்  இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா? என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை... என, சமயோசிதமாக  பதில் சொல்லி விட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்  விட்டது. இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம்  செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே  நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை.  இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர்  தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து  கொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் பிடித்து, சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர்  லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தூரத்தில்  பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து, 4 கி.மீ., தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம்.  கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில், சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை  மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த  தலங்களுக்கும் சென்று வாருங்கள்.

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி  அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது.  ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே, ஆடி மாதம் சுப காரியங்கள் தவிர்க்கப்படும் மாதம். என்றாலும், ஆடி அமாவாசைக்குப் பிறகு சுப காரியங்கள்  செய்யலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனெனில், சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதத்தைக்  கணக்கிடும்போது, ஆடி அமாவாசையோடு ஆஷாட மாதம் முடிந்து, அதன்பிறகு மங்களகரமான காலமாகக் கூறப்படுகிறது. அப்போது  நல்ல காரியங்களைச் செய்யலாம்.

ஆடி அமாவாசை அற்புதக்காட்சி: அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும்  பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன்  கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம்  என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு  ஆண்டும் ஆடிஅமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு.  கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக்  கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர்.  இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற  நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை  எதிரொலிப்பதைக் காணலாம்.

ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும். ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன அதிலும் ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு  தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமாரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும் அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள். தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டார்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர். ஆடி அமாவாசையன்று , தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள்  தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம் ராகு - கேது தோஷம் சர்ப்ப தோஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குள வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சவுபாக்கியங்களுடன் வாழ்வர்.

ஆடி அமாவாசை: பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில்  தொன்றுதொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல்  மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன  காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில்  அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர்  உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து  காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்து குதிரைகள்  பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும் போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து  ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு  செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பவுர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து  முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் அமை என்ற ஒற்றைக்  கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது. பித்ருக்களான முன்னோர்களில் சவுமியர், பர்ஹிஷதர்,  அக்னிஷ் வர்த்தர் என்ற மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும்  போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி  அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச்  சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார், அப்பொழுது  இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும் என்று  ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும் என்று கூறி, ரிஷிகளின்  கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன்  காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக  முனிவரின் உறுதியான தவத்திணைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி  விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார், முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும்  கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின்  தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள்  நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில்  கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக  ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருகண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர்  தூரத்தில் உள்ளது.

வியாழன், 21 ஜூலை, 2016

வியாபார விருத்தி உண்டாக


பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.
வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து பெளர்ணமி நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும்.
பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும்,
பின்பு -பெளர்ணமி நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும்,குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீண் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குல விருத்தி அடையும்.

மந்திரித்த முடிகயிறும் அதன் மகத்துவமும்:



நமது கைகளில் உள்ள நாடியில் தான் உடலில் உள்ள வாதம்,பித்தம், கபம் போன்றவற்றை அறிய முடியும்.மேலும் நாடியில் கிரகங்கள் சூரியன்,சந்திரன் மற்றும் குரு அமைந்துள்ளன. ஆகவே சிகப்பு,வெள்ளை, மஞ்சள் போன்ற முடிக்கயிறுகள் நம் நாடியில் பட்டு வர பல்வேறு பலன்கள் உண்டாகும்.
சிகப்பு அனுமனுக்கும் உகந்தது,மேலும் உடல் கோளாறுகள், மன கோளாறுகள் நீக்குவதிலும் இது சிறந்த பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட வண்ணத்தை குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து தேவையான பீஜ மந்திரங்களை குறிப்பிட்ட
எண்ணிக்கையில் உச்சரித்தவாறேமுடி போடுதல் தான் முடிக்கயிறு.
இதன் மூலம் பல காரியங்களை செய்ய முடியும். கருப்பு நிற கயிறு திருஷ்டி, குழந்தைகளின் தோஷங்கள், கிரக தோஷங்கள் மற்றும் செய்வினை போன்றவற்றிற்கும், சிவப்பு நிற கயிறு பல வித சித்து,வசியம் மற்றும் அதிர்ஷ்டத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.
தெய்வீக சக்திகளை பெற, சுபமுண்டாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கயிரும்,வெள்ளை உடலில் சக்திகள் விரயமாகாமல் தடுப்பதற்கும் பயன் படுத்த வேண்டும்.
சித்தர்கள், மாமுனிகள் பல முன்னோர்கள் புஜத்தில், கழுத்தில் மற்றும் கணுக்காலில் முடிக்கயிறுகள் உபயோகித்து வந்ததை நாம் யாவரும் அறிந்திருப்போம். 36,108,1008 என பல்வேறு எண்ணிக்கையில் முடிக்கயிறு இடலாம். இவற்றின் சக்தி குறிப்பிட்ட கால அளவே இருக்கும்.பின்பு மாற்றி விட வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முன் விடிகாலையில் சுத்தத்துடன் கட்டுபவரும், கட்டப்படுபவரும் வடக்கு முகமாக நின்று கட்ட சக்தி மிகும்.கிரகங்களுக்காக கட்டி கொள்வதென்றால் ஞாயிறு சிகப்பும், திங்கள் கிழமை வெள்ளையும்,வியாழக்கிழமை மஞ்சளும் நாமே கட்டி கொள்ளலாம்.பலன் தரும். இது போன்று விபூதி, குங்குமம் போன்றவற்றில் சக்திகள் ஏற்றி கொடுப்பதும் முறையில் உள்ளன.

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள்

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1) பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.
பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2) பிரேத சாபம் :
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.
பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3) பிரம்ம சாபம்:
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,
இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.
பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
4) சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,
சர்ப்ப சாபம்
உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
5) பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப
வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம்
பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
6) கோ சாபம்:
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7) பூமி சாபம்:
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.
பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
8) கங்கா சாபம்:
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9) விருட்ச சாபம்:
பச்சை மரத்தை
வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.
விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10) தேவ சாபம்:
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
11) ரிஷி சாபம்:
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
12) முனி சாபம்:
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.
முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
13) குலதெய்வ சாபம் :
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.
குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.
ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.
தீயவர்களை அழிக்கும்.
எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.
ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.

தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு

மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு,
நிலைக்கவும் செய்யும்.
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்!!!

திங்கள், 18 ஜூலை, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016 to 2017

குரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. கன்னி ராசிக்கு மாறும் குரு உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறார் அதனால் உங்கள் ராசிப்படி உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் தீமைகளை பார்ப்போம்... அதிக ஆதாயம் அடையும் ராசியினர் -ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம் இவர்கள் ராசிக்கு குரு 2,5,7,9,11 என முழு சுப பார்வை செலுத்துவதால் இந்த ராசியினருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்... .............மேசம் ; அசுவினி,பரணி,கிருத்திக நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு ஆறாம் இடம் ருண ,ரோக ,சத்ரு ஸ்தானத்தில் மாறுகிறார் ..இது நோய்,கடன் குறிக்கும் இடம்.ராசிக்கு 6ல் குரு செல்வது மறைவு ஸ்தானமாகும்..குரு என்பது செல்வாக்கை மதிப்பு ,மரியாதையை குறிக்கும்.. செல்வாக்கு மறைந்தாலும்,10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறையும்..ராசிக்கு இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானம் குறையாது..அதே சமயம் செலவுகள் அதிகமாகவே காணப்படும்.மருத்துவ செலவுகள் அதிகம் காணப்படும். வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை..பிறர் விசயங்களில் தலையிடுவதால் வீண் பகை உண்டாகும் காலம் இது..சிறு குழந்தைகள் மேச ராசியாக இருப்பின் கீழே விழுதல் ,அடிபடுதல் உண்டாக்கும்.திக பிடிவாதம் செய்வார்கள் ...படிப்பில் நாட்டம் குறைக்கும்.பெற்றோர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்...புதிய முய்ற்சிகளை ,முதலீடுகளை தவிர்க்கவும்,கடன் வாங்குதலை முடிந்தளவு தவிர்க்கவும். ...............................ரிசபம் ; கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.சேமிப்பு உயரும்,தங்கம் சேரும்.கடன் அடைபடும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமண தடைகள் விலகும்.ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும்..வசீகரம் உண்டாகும்...5ஆம் பார்வையால் பாக்யத்தை பார்ப்பதால் குலதெய்வம் அருள் உண்டாகும்..குலதெய்வ கோயிலில் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். தந்தையால் லாபம் கிடைக்கும்..நீண்ட நாள் அசைகள் நிறைவேறும்.லாபத்தை குரு பார்க்கும்போது நஷ்டம் உண்டாக வாய்ப்பே இல்லை. ..............................மிதுனம்; மிருகசிரீடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களை சார்ந்த மிதுனம் ராசி அன்பர்களே, இதுவரை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தில் மறைந்து இருந்த குரு பகவான் இப்போது சுகஸ்தானத்திற்கு வந்திருக்கிறார்..சுகத்திற்காக செலவு வைக்கப்போகிறார்....மருத்துவ செலவு வைப்பாரா அல்லது வாகனம்,நிலம்,சொத்து வாங்க வைத்து சுப செலவாக வைப்பாரா என்பது திசாபுத்தி அடைப்படையில் மாறும் என்றாலும்...உங்க ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஒரே அதிபதி புதன் தான் என்பதால் நல்ல செலவையே வைப்பார்... வேறு ஊர்,நகரம்,மாநிலம் தொழிலுக்காக இடம் விட்டு இடம் மாறுவார்கள் - அதிக வாய்ப்பு உள்ளது. 10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தொழிலில் நிரைய நல்ல மாறுதல்கள் உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். ...............................கடகம் ; புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களை சார்ந்த உங்களுக்கு இதுவரை இரண்டில் குரு பகவான் குரு பலமாக இருந்து வந்தார் .இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் மறைகிறார்..இது நல்ல பலன் கொடுக்கும் ஸ்தானம் அல்ல.குரு மறைவது செல்வாக்கை குறைக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது..அதிக விரய செலவுகள் உண்டாக்கும்.பண முடக்கம் உண்டாகும் காலம் என்பதால் வருமானத்தை சிக்கனமாக செலவழிப்பது நல்லது. பேச்சில் நிதானம் அவசியம்.தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் சில அசமயம் அதிகாரமாக பேசுவது உங்களை சுற்றி இருப்பவரை விலக செய்யும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.கடன் கொடுத்தாலும் சிக்கல் கடன் வாங்கினாலும் சிக்கல்.தொழிலில் முக்கிய முடிவு எடுக்கும்போது நன்கு யோசித்து செயல்படவும். மருத்துவ செலவு உண்டாகும் காலம் என்பதால் வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.தாய்க்கு மருத்துவ செலவு உண்டு..இட மாறுதல் உண்டாகும்.உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.தந்தையால் வருமானம் . ராசிக்கு லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரய செலவுகள் இருந்தாலும் வருமானத்துக்கு தடையில்லை.ஏதேனும் ஒரு வழியில் வருமானம் வந்து சேரும் .........................சிம்மம் : மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களை கொண்ட சிம்ம ராசியினருக்கு இதுவரை ஜென்மத்தில் குரு இருந்து படாத பாடு படுத்தினார் குரு ஜென்மத்தில் இருந்தபோது ஶ்ரீராம்பிரான் வனவாசம் சென்றார்கள். ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு வந்தால் பணம் பெருகும்.லாபம் குவியும்..வருமானம் பல மடங்காகும்..நல்லதெல்லாம் நடக்கும் கெட்டதெல்லாம் ஒழியும்...ஆசைப்பட்டது தானாக நடக்கும்.மதிப்பும்,மரியாதையும்,செல்வாக்கும் உயரும்.திருமண முயற்சிகள் கைகூடும்..தங்கம் சேரும்,.கடன்கள் அடையும்..பிரிந்தவர் ஒன்று சேர்வர். பதவி உயர்வு கிடைக்கும்.வீடு கட்டலாம்..வழக்கு சாதகமாக முடியும்.குழந்தை பாக்யம் உண்டாகும். ராசிக்கு 6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன்கள் குறையும்.ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் தண்ட செலவுகள் வராது வட்டி கட்டும் நிலை இனி இருக்காது.அதிர்ஷ்டம் உண்டாகி, எதிர்பாராத வசூலாகாத பணம் வசூல் ஆகும். ................................கன்னி : உத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார் ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே என அதிர்ச்சியாக வேண்டாம்..ஏழரை சனி முடிந்து விட்டது இந்த ஜென்ம குரு அதை விட பெருசா பாதிக்காது...ராசிக்கு ஜென்மத்தில் வந்து உட்காரும்போது தலையில் பாரம் இருப்பது போல அதிக சுமை உங்களை அழுத்தும்.பண நெருக்கடி,தொழில் நெருக்கடி,குடும்ப நெருக்கடி மூன்றும அதிக மன உளைச்சலை கொடுக்கும் காலம் என்பதால் ஜென்ம குரு பற்றி கெடுதலாக சொல்லப்பட்டிருக்கிறது... ராசியில் குரு அமர்ந்தால் ராஜயோகம் என ஜோதிட விதி சொல்கிறது செல்வாக்கு உயர்ந்து அதன் மூலம் வரும் நெருக்கடி யாகவும் இருக்கலாம்...பெரிய பதவி கொடுத்து அதிக வேலைப்பளு கொடுப்பது போல இருக்கும்.வருமானமும் உண்டு. அதிக செலவினமும் உண்டு.குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும்..கோபம்,பிடிவாதம் விசயத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பகையை விலக்கலாம்..வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.புதிய முதலீடு செய்கையில் கவனம் தேவை. ராசிக்கு 5,7,9ஆம் இடங்களை குரு பார்வை செய்வது நன்மையை வாரி வழங்கும் கடும் நெருக்கடிகள் ஏற்படாது அப்படி ஏற்படினும் பிப்ரவர் 2017 முதல் நான்கு மாதங்களுக்கு வக்ர குரு உங்கள் சோதனைகளை நிவர்த்தி செய்து வெற்றி தரும். ...............................துலாம் : சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களை கொண்ட துலாம் ராசியினருக்கு இதுவரை லாபத்தில் இருந்து வந்த குரு ராசிக்கு 12ல் மறைகிறார்....துலாம் ராசிக்கு குரு கெட்டவர் அவர் மறைந்தால் நல்ல பலனையே கொடுப்பார் என சில நூல்கள் சொல்கின்றன...அப்படி அன்று சற்று கண்டிப்புடன் நடந்து கோள்வார்,ஒரு தந்தை போல,.. இருப்பினும் செல்வாக்கு,சொல்வாக்கு,பெரிய மனிதர்கள் ஆதரவு பெற்ற குரு மறைவது சுமாரான பலனையே கொடுக்க செய்யும் அதிக விரய செலவுகளை கொடுப்பார்.பாத சனி சில மருத்துவ செலவுகளை கொடுக்கும் வேளையில் அதற்கு குருவும் துணை புரிவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..முதலீடுகளை தவிர்க்க வேண்டும்..கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்கையில் எச்சரிக்கை தேவை உறவுகளிடம் கருத்து வேறுபாடு உண்டாக்கும்.. அதிக மனக்குழப்பம் காணப்படும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டை பார்ப்பதால் சொத்து பிரச்சினை தீரும்..தாய் வழி ஆதரவு உறவுகள் ஆதரவு கிடைக்கும். ராசிக்கு 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன்கள் அடைபடும்.வெளிநாடு முயற்சிகள் கைகூடும்.. ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.அது 2017 பிப்ரவரிக்கு மேல் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ..........................விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானத்துக்கு வருகிறார்..இதுவரை குரு 10ல் இருந்து தொழிலை ஆட்டம் காண வைத்தார் ..ஜென்ம சனியும் உடன் சேர்ந்து படுத்தியது , குருபலம் வந்து சேர்வதால் , லாபத்தில் வரும் குரு ,உங்கள் பிரச்சினைகளை பெருமளவில் குறைப்பார்...மருத்துவ செலவுகள் குறையும் நோய் தீரும்.நண்பர்களால் ,மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும், புகழ்,செல்வாக்கு அதிகரிக்கும் உறவுகள்,நண்பர்கள் பகை விலகும்.சந்தோசமான செய்தி தேடி வரும்.நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சினை கட்டுக்குள் வரும்.இளைய சகோதர வகையில் நல்ல செய்தி கிடைக்கும்.மாமனார் வழி ஆதாயம் கிடைக்கும்.வீட்டை புதுப்பிப்பீர்கள் சிலர் இடம்,வீடு வாங்குவார்கள்.ராசிக்கு 5ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகளால் உண்டான கவலைகள் நீங்கும் சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்..ராசிக்கு 7ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும் கூட்டு தொழிலில் ஆதாயம் கிடைக்கும். .............................தனுசு : மூலம்,பூராடம்,உத்திராடம் சார்ந்த உங்களுக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு வருகிறார் ராசிக்கு 10ல் குரு வந்தால் தொழில் சார்ந்த மன உளைச்சல்கள் அதிகரிக்கும் காலம் ...சிலர் இடமாறுதல்கள் அடைவர். சிலர் வேறு பணிக்கு செல்ல முயற்சிப்பர்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்..வேலைப்பளு அதிகரிக்கும் காலம் என்பதால் ,ஏழரை சனிருப்பதால் கூடுதல் அலைச்சலும் இருக்கும்.. குரு ராசிக்கு தனஸ்தானத்தை பார்ப்பதால் வருமானத்துக்கு பங்கம் வராது...பணம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும் அதே அளவில் செலவுகளும் இருக்கும்...ராசிக்கு நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு,வாகனம் சார்ந்த செலவுகள் உண்டாகும் சிலர் புதுப்பிப்பார்கள். சிலர் வாங்குவார்கள் அதன் மூலம் எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை தந்தாலும் தாயார் வழி ஆதரவு இருப்பதால் சமாளிக்கலாம்..உடல்நிலையில் பாதிப்பு இருந்தாலும் 4ல் குரு பார்வை இருப்பதால் சுகம் உண்டாகும்..உறவினர்களுடன் விருந்து ,சுப நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள்.. கடன் நெருக்கடி இருப்போருக்கு குரு ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் நெருக்கடி குறையும்...கடன் சுமை குறையும்..புதிதாக கடன் வாங்க வேண்டாம்...ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள் .நிறைவேற்ற இயலாது.கூட்டாளிகளால் லாபம் உண்டு தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். ................................மகரம் : உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்துக்கு குரு வருகிறார்....இதுவரை ராசிக்கு எட்டில் அமர்ந்து பல எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வந்த குரு ராசிக்கு பாக்யத்தில் அமர்ந்து இன்பம் தரப்போகிறார்.ஒன்பதாம் இடத்து குரு.பல பிரச்சினைகள் ,நெருக்கடிகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள்... ராசிக்கு குருபலம் வந்துவிட்டதால் பண பலமும் வந்து விடும்..செல்வாக்கு,புகழ் கூடும்...பகையாகிப்போன உறவுகள்,நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நோய் தீரும், கடன் சுமை குறையும். தொழிலில் சுறுசுறுப்பு உண்டாகும்....பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்.. குரு ராசியை பார்ப்பதால் மன இறுக்கம் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குரு ராசிக்கு 3ஆம் வீட்டை பார்ப்பதால் தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கும்..இளைய சகோதரரால் ஆதரவு கிடைக்கும்..வீடு,நிலம் வாங்குவீர்கள்.. ராசிக்கு 5ஆம் இடத்தை பார்ப்பதால் முன்னோர் வழி சொத்து பிரச்சினை தீரும் குலதெய்வ ஆசி உண்டாகும்...தடைகள் எல்லாம் நீங்கி எதிலும் வெற்றி பெறுவீர்கள்...திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்லபடியாக முடியும்.. ராசிக்கு 8ல் ராகு இருப்பதால் விஷப்பூச்சிகளால் கண்டம் உண்டாகலாம், கவனம் தேவை. ...................................கும்பம் : அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு மறைகிறார்.ராசிக்கு குரு மறைவது நல்ல பலன் தர வாய்ப்பில்லை...சில குழப்பங்களை தந்து விட்டே செல்வார்.அஷ்டமத்தில் குரு வர அவதிகள் நிரைய வந்து சேரும் என்ற முது மொழிக்கு ஏற்ப,காரிய தடைகள் நிறைய உண்டாகும்., புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம்..முதலீடுகள் ஆகாது... நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது தொழில் காரணமாக குடும்பத்தை அடிக்கடி பிரிய நேரும்..பண நெருக்கடி அதிகரிக்கும் காலமாக இருக்கிறது தண்ட செலவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்தும்..வாகனங்களில் செல்கையில் அதிக எச்சரிக்கை ,மித வேகம் தேவை. ராசிக்கு 12ஆம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்...விரய செலவுகள் கட்டுப்படும்..ராசிக்கு 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ,வீடு சார்ந்த சுப செலவுகள் உண்டாகும்..ராசிக்கு 2ஆம் விட்டை பார்ப்பதால் பண வரவு நன்ராக இருக்கும்...செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.. பயம்,கவலை,தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.. ...................................மீனம் : பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு குரு வருகிறார் இது குரு பலம் .இதுவரை பண சிக்கல்,தொழில் சிக்கல் என அவதிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிரது.திருமணம் தடையாகி கொண்டிருந்தவர்களுக்கு அருமையான குரு பலம் பிறக்கிறது..தொழில் அபிவிருத்தி ஆகும்..புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும் பல வழிகளிலும் லாபம் வந்து சேரும் கடன்கள் முற்றிலும் அடையும்.கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் தங்கம் சேரும்.கல்வியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவர், ராசிக்கு 11 ஆம் இடம் லாபத்தை குரு பார்ப்பதால் பங்கு வர்த்தகம்,நகைதொழில்,கல்வி துறை,வங்கி துறையில் இருப்போருக்கு நல்ல லாபம், முன்னேற்றம் உண்டு.சேமிப்பு அதிகரிக்கும்.மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்.தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்.பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .ஆரோக்கியம் உண்டாகும்..ராசியை குரு பார்ப்பதால் உற்சாகம் கூடும்.வேகம்,விவேகத்துடன் செயல்படுவீர்கள்...அஷ்டம சனியும் முடிஞ்சு ,குருபலமும் இருப்பதால் இனி தடையேதும் இல்லை...

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...