செவ்வாய், 5 ஜூலை, 2016

பைரவர்

காலத்தை தனது சுவாசத்தினால் இயக்கிவருபவரே காலபுருஷன்! (இவரது சுவாசமே வாக்கிய கணிதப் பஞ்சாங்கமாகவும்,திருக்கணிதப் பஞ்சாங்கமாகவும்,எபிமரிஸ் பஞ்சாங்கமாகவும் விரிவடைகின்றது)இந்த காலபுருஷனின் இன்னொரு பெயர் தான் மஹா கால பைரவப் பெருமான்!! ஈசனாகிய சிவன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தனது சக்தியின் ஒருபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி வெளிப்பட்ட சக்திகளில் முதன்மையானதும்,முக்கியமானதுமே மஹாகாலபைரவப் பெருமான்!!!(மற்ற சக்திகள்:ஆறுமுகக் கடவுள்,வீரபத்திரர்) யார் ஒருவர் கடந்த மூன்று பிறவிகள் முழுவதும் சித்தர் ஒருவரின் சீடராக இருந்தார்களோ அவரே இப்பிறவியில் மஹாகாலபைரவப் பெருமானை தினமும் வழிபடமுடியும்; அல்லது யார் ஒருவர் கடந்த மூன்று பிறவிகளிலும் பழுத்த சிவனடியாராக இருந்தார்களோ,அவரே இப்பிறவியில் தொடர்ந்து மஹாகால பைரவப் பெருமானை வழிபடமுடியும்;என்பது சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் அவர்களின் சித்தர் உபதேசமொழி! மனிதர்களின் செயல்களை எட்டுவகைகளாகப் பிரிக்கலாம்;ஆமாம்!ஒவ்வொரு மனிதனும் செய்யும் அனைத்து செயல்களையும் எட்டுவிதங்களுக்குள் வகைப்படுத்தலாம்;அதனால் தான் மஹா கால பைரவப் பெருமான் அஷ்ட பைரவர்களாக வடிவம் எடுத்தார்;எடுத்து ஒவ்வொரு செயலையும் செய்வதை கட்டுப்படுத்தும் தெய்வீக சூட்சும சக்தியாக இயங்க ஆரம்பித்தார்கள்;இந்த எட்டு பைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த சிவபடைப்புதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமான்! இவரே சூரியனின் ப்ராண தேவதை;இவரே பூமியில் இருக்கும் தந்தைகளின் பிராண தெய்வம்;இவரே மனிதர்கள் அனைவரது மூளைக்குள் இருந்து இயக்குபவர்;இவரே செல்வத்தின் மூல முதற் கடவுள்!!! மனிதர்கள் செய்யும் எட்டுவிதமான செயல்களின் மூலமாக 64 விதமான பாவவிளைவுகள் அல்லது 64 விதமான புண்ணிய விளைவுகள் பிறருக்கு ஏற்படும்;எனவே,இந்த அஷ்ட பைரவர்கள் ஒவ்வொருவரும் தலா எட்டு விதவடிவங்களாக துணை வடிவங்கள் எடுத்து 64 பைரவர்களாக அவதாரம் எடுத்தனர்;அஷ்ட பைரவர்களே அஷ்டகர்மா எனப்படும் மாந்திரீகத்திற்குள் ஆதிபிதாக்கள் ஆவர்;(வசியம்,மோகனம்,ஸ்தம்பனம்,ஆகர்ஷணம்,பேதனம், வித்வேஷணம்,மாரணம்) அரசியலில் கிச்சன் கேபினெட் என்று கேள்விப்பட்டிருப்போம்;என்னதான் முதலமைச்சர், மந்திரிகள் என்று இருந்தாலும் முதலமைச்சரின் மனைவியானவர் தமது எண்ணங்களை முதலமைச்சரின் ‘மூடு’ பார்த்து சொல்லி,அதன் மூலமாக அரசாங்கத்தையே இயக்கிக் கொண்டிருப்பதற்கு கிச்சன் கேபினெட் என்று கிண்டலாகச் சொல்வது வழக்கம்;இந்த சூழ்நிலை இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் மட்டுமல்ல;உலகம் முழுவதும் பல நாடுகளில் பல கால கட்டங்களில் இந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் பல அரசுகள் இயங்கி இருக்கின்றன;தற்போதும் இயங்கிவருகின்றன;எதிர்காலத்திலும் இயங்கும்; நிஜவாழ்க்கையில் எந்த ஒரு ஆண் மகனும் தான் யார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பேச்சை கேட்கிறாரே(அந்தப் பெண் அந்த ஆணின் கள்ளக் காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை;மகளாக இருக்கலாம்;அம்மாவாக இருக்கலாம்;மனைவியாகவும் இருக்கலாம்;செகரட்டரியாக இருக்கலாம்;மந்திரப் பாதுகாப்பு வழங்கி வரும் பெண் ஜோதிடராக இருக்கலாம்;பெண் மந்திரவாதியாகவும் இருக்கலாம்) அவரே பொது வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவார்;(ஆனால்,ஆணின் ஈகோ மிகவும் வலிமை மிக்கது;பிறரின் பேச்சைக் கேட்டாலும்,அதை பரமரகசியமாக வைத்துக் கொண்டு தானாகவே ஒவ்வொரு முடிவையும் எடுப்பதாகத் தான் காட்டிக் கொள்வர்) இது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமான ஒரு மனோதத்துவ ஆராய்ச்சியை மேல்நாடுகளில் பல ஆயிரம் தம்பதிகளிடம் மேற்கொண்டார்கள்;அதன் முடிவாக ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்;கடந்த 60 ஆண்டுகளில் 50,00,000 பிரதிகள் விற்று இன்றும் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது; இந்த புத்தகத்தை சாதிக்க விரும்பும் ஒவ்வொரு ஆணும் பலமுறை வாசிக்க வேண்டும்;அதே போல,சாதிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வாசிக்க வேண்டும்;இந்த நூல் தமிழில் வெளிவந்திருக்கின்றது:அதுவே கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மனம் தரும் பணம்! ஆங்கிலத்தில் Think & Grow Rich என்று வெளிவந்துள்ளது; அதே போல,கடவுள்களிலும் பெரும்பாலான ஆண்கடவுள்களுக்கு சூட்சுமமான சக்தியாக இருந்து வழிநடத்துவது பெண் கடவுள்களே! பிரம்மா என்ற அயன் கடவுளை சரஸ்வதி என்ற கலைவாணியும்; விஷ்ணு என்ற பெருமாள் கடவுளை மஹாலட்சுமி என்ற பெண் கடவுளும்; ருத்ரன் என்ற மகேஸ்வரன் கடவுளை ருத்ரி என்ற மகேஸ்வரியும்; காலபைரவப் பெருமானை காலபைரவியும்; ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை அஜாமிளை என்ற சொர்ணதா தேவியும்; உன்மத்த பைரவப் பெருமானை உன்மத்த பைரவி என்ற வராகியும்; சதாசிவன் என்ற சிவபெருமானை சதாவராகி என்ற ஆதி வராகியும் இயக்கிவருகின்றனர்;மனோதத்துவ ரீதியாக இந்த பூமியில் எந்த ஒரு ஆணும் அனாதை அல்ல;எந்த ஒரு பெண்ணும் அனாதை அல்ல;அப்படி இறைசக்தி எந்த ஒரு உயிரையும் படைக்கவில்லை;ப்ரம்மச்சாரி கடவுள்களான பிள்ளையாருக்கும்,ஆஞ்சநேயருக்கும் கூட வாழ்க்கைத் துணை உண்டு;இதன் சூட்சும அர்த்தம் என்ன? எந்த ஒரு ஆணும் பெண் இல்லாமல் தனித்து இயங்க முடியாது; எந்த ஒரு பெண்ணும் ஆண் இல்லாமல் தனித்து இயங்குவது இயலாது; (விதிவிலக்குகளாக சில மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் வாழத்தான் செய்கின்றார்கள்;அவர்களின் அந்தரங்கத்தைத் துருவிப் பார்த்தால் அந்த தனித்து வாழும் ஆணுக்கும் ஒரு பெண்ணின் துணை நிச்சயமாக இருக்கும்;தனித்து வாழ்ந்து வரும் பெண்ணுக்கும் அதே நிலைதான்!) எப்போதுமே ஆணுக்கு பெண் தெய்வம் வெகுவிரைவாக வரம் தரும்; அதே போல,பெண்ணுக்கு ஆண் தெய்வம் சீக்கிரம் அருள் புரியும்;மீராவுக்கு கண்ணனின் அருள் ஏன் கிட்டியது என்பது புரிகின்றதா? ஆண்டாளுக்கு அரங்கநாதப் பெருமாளின் ஆசி ஏன் விரைவாகக் கிட்டியது என்பது இப்போது உணர்கிறீர்களா? புனரபி மரணம்;புனரபி ஜனனம் என்று ஜோதிடக் கலை சொல்கின்றது;இதற்கு அர்த்தம் என்ன? மீண்டும் இந்த பூமியில் பிறக்கின்றோம்;பிறந்து வாழ்ந்துவிட்டு இறக்கின்றோம்;இந்த பிறப்பு இறப்புச் சுழல் லட்சக்கணக்கான முறை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது;இதில் இருந்து மீண்டு இந்த பூமிக்கும்,வேறு எந்த பூமியிலும் பிறக்காமலும் இருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடுதான் பைரவ வழிபாடும்,வராகி வழிபாடும்!!! ஒவ்வொரு ஆணும் அன்னை வராகியை வழிபடவேண்டும்; ஒவ்வொரு பெண்ணும் பைரவப் பெருமானைச் சரணடைய வேண்டும்; வராகியில் மூன்று வித வராகிகள் இருப்பதாக இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்; முதல் வராகி:உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் என்று அனைவருக்கும் தலைமை பெண் தெய்வம் லலிதா பரமேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி என்ற ஆதி சக்தி என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி! இந்த அன்னை லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைமைத் தளபதி! இந்த அன்னையின் பிறப்பினை அறிந்த கொள்ள விரும்புவோர் பிரும்மாண்ட புராணம் என்ற நூலை வாசிக்க வேண்டும்; இரண்டாம் வராகி:மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பது நவக்கிரகங்கள்; நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்; பஞ்சபூதங்களை கட்டுப்படுத்துவது ப்ரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகள்;(சிவன் அல்ல ருத்ரன்!) இந்த மும்மூர்த்திகளையும் இயக்குவது பரசிவம்; பரசிவத்தை பராமரிப்பது சிவசிவம்; சிவசிவத்தை விட சக்தி வாய்ந்த தெய்வம் ஆதி சிவம்; ஆதிசிவத்தை இயக்குவது சதாசிவம் என்ற அண்ணாமலையார்; இந்த சதாசிவத்தின் சக்தியே வராகி என்ற அபிதகுஜலாம்பாள் என்ற உண்ணாமுலை;(தற்காலத்தில் உண்ணாமலை என்பது பழக்கத்தில் அழைக்கின்றோம்) பிரபஞ்ச அன்னை வராகியைச் சரணடைவது மிகவும் எளிது; பின்வரும் அன்னையின் 12 பெயர்களை காலையில் 4.30 முதல் 6 மணிக்குள் ஒரு மாதம் வரை தினமும் 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;மாலை 6 மணிக்கு மேல் இரவு தூங்குவதற்கு முன்பு அதே போல 15 நிமிடம் ஜபிக்க வேண்டும்; இரண்டாம் மாதத்தில் காலையில் 30 நிமிடம் வரையும்;இரவில் 30 நிமிடம் வரையும் ஜபித்து வரவேண்டும்; ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா பஞ்சமீ தண்டநாதா சங்கேதா சமேஸ்வரி சமயசங்கேதா வராகி போத்ரிணி சிவை வார்த்தாளி மகாசேனா ஆக்ஞாசக்ரேஸ்வரி அரிக்நி மூன்றாம் மாதத்தில் இருந்து காலையில் 30 நிமிடம் வரை இந்த 12 பெயர்களை ஜபித்துவிட்டு,வராகி பரணியை ஒருமுறை மனதுக்குள் பாடவேண்டும்;அதே போல,இரவில் 30 நிமிடம் வரை இந்த 12 பெயர்களை ஜபித்துவிட்டு,வராகி பரணியை ஒரு முறை மனதுக்குள் பாடவேண்டும்; பச்சைத் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி விட்டு,தரமான பத்தி அல்லது சாம்பிராணி அல்லது குங்கிலிய தூபம் ஏற்றி வைத்து விட்டு தினமும் ஜபித்து வரவேண்டும்; வராகி பரணி என்பதும் வராகி மாலை என்பதும் வராகி அந்தாதி என்பதும் ஒன்றே தான்;ஒரு பாடல் நான்கு வரிகள் வீதம் 32 பாடல்களாக சில நூற்றாண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு அருகில் அமைந்திருக்கும் வீரசோழனில் திரு.பண்டித கவிராயர் இயற்றியது; யார் தினமும் இருமுறை வராகி பரணியை அவர்கள் இருப்பிடத்தில் பாடிவருகின்றார்களோ,அவர்களுக்கு எந்த விதமான மாந்திரீக பாதிப்பும் ஏற்படாது;ஏற்கனவே,பிறரின் பொறாமையால் மாந்திரீக பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அது விலகி ஓடிவிடும்; அப்படி ஒடுவதற்கு ஒரு நாளுக்கு இரண்டுமுறை வீதம் குறைந்த பட்சம் 90 நாட்கள் தினமும் ஜபித்திருக்க வேண்டும்;அதிகபட்சமாக 1008 நாட்கள் ஜபித்துவிட்டால்,அதன்பிறகு,இப்பிறவி முழுவதும்(ஆயுள் முழுக்க) எப்போதும் எந்த வித மாந்திரீக பாதிப்பும் சிறிதும் ஏற்படாது; அஷ்டகர்மாக்களில் பெரும்பாலானவர்களுக்கு வசியமும்,ஸ்தம்பனமும் மட்டுமே கைகூடும்;இந்த இரண்டை மட்டும் கற்றுக் கொண்டு தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்,தம்மைப் பாதுகாப்பதற்காக துஷ்ட சக்திகளில் ஏதாவது ஒன்றை அல்லது சிறு/குறு தெய்வங்களை தம்முடன் வைத்து ஆன்மீக சேவை செய்து வருகின்றனர்;இந்த துஷ்ட சக்திகள் மற்றும் சிறு/குறு தெய்வங்களின் பட்டியலை எடுத்தால் அது மிகவும் பெரியது;எமக்குத் தெரிந்ததை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;சுடலை மாடன்;இசக்கி,முனி,எட்சிணி,ஜின்,கருப்பசாமி,அதர்வண காளி,மயானகாளி,ஆஞ்சனேயர்,குரளி,காட்டேரி,குட்டிச் சாத்தான் மற்றும் இஸ்லாமிய,கிறிஸ்தவ சிறு தெய்வீக மற்றும் துஷ்ட சக்திகள்! விநாயகர்களில் எப்படி 33 விதமான விநாயக அவதாரங்கள் உண்டோ,அதே போல காளியிலும் 30/40/50 விதமான காளிகள் உண்டு;எட்சிணிகளில் ஆயிரக்கணக்கான எட்சிணிகள் இருக்கின்றன; அஷ்டகர்மா என்பதே மாந்திரீகம் ஆகும்;அஷ்ட கர்மங்களும் ஒருவருக்கு கைகூடிவிட்டால்,அந்த மந்திரங்கள் சித்தி அடைந்ததைக் கொண்டு ஆன்மீக முன்னேற்றத்தில் அடுத்த லெவலுக்குப் போக வேண்டும்;ஒட்டு மொத்த 130 கோடி இந்தியர்களில் 100 பேர்களுக்கு மட்டுமே அஷ்டகர்மாக்கள் கைகூடியிருக்கும்;மற்றவர்கள் அஷ்டகர்ம ஞானி என்றோ அல்லது அஷ்டகர்ம ஆசான் என்றோ தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்டு தம்மைத் தேடி வருபவர்களுக்கு ஆன்மீக அல்லது ஜோதிட வழிகாட்டுதல் செய்து கொண்டிருக்கின்றனர்;இம்மாதிரியான ஆட்களின் நோக்கம் பெரும்பாலும் பணம் பண்ணுவதே முதன்மையான குறிக்கோளாக இருக்கின்றது;அரிதிலும் அரிதாகவே ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் இருக்கின்றனர்;சிலருக்கு பணம் பண்ணுவதோடு,பிறர் பல ஆண்டுகளாக இறைவழிபாடு,தொடர்ந்த மந்திர ஜபம்,தொடர்ந்த அன்னதானம்,தொடர்ந்த உழவாரப் பணி,தொடர்ந்த ஆன்மீகத் தொண்டு செய்து சேமித்து வைத்திருந்த புண்ணியத்தைத் திருடுவதை தடயம் இல்லாமல் திருடுவும் செய்கின்றனர்; இம்மாதிரியான ஆன்மீகத் துரோகங்கள் நம்மை பாதிக்காமல் இருக்கவே அன்னை வராகியைச் சரணடைவது நமது கடமை ஆகும்;ஒராண்டுக்குக் குறையாமல் அன்னை வராகியைச் சரணைந்து ஒரு நாள் விடாமல் தினமும் அன்னையை ஜபித்து வந்தால்,அடுத்த கட்டமாக சில தெய்வீக பெண் தெய்வ வழிபாடுகள் தேடி வரும்; இந்த ரகசிய பெண் தெய்வ வழிபாடுகள் ஒருபோதும் ஆன்மீக வார இதழ்களில்,மாத இதழ்களில்,தினசரி செய்தித் தாள்களில் வந்ததில்லை;இனி எப்போதும் வரப் போவதுமில்லை;இந்த வழிபாடுகளைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பல பரம ரகசியமாகப் பின்பற்றி எல்லோரையும் ஆட்டிப் படைத்து வருகின்றனர்;அமெரிக்கா,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முக்கியத் தலைமை அதிகாரிகளும்,இந்தியாவை மறைமுகமாக ஆட்டிப் படைப்பவர்களும் இந்த ரகசிய தெய்வங்களை தலைமுறை தலைமுறையாக வழிபட்டே இன்றும் சர்வ சுகபோகங்களுடனும்,எந்த ஒரு தீவினைகள் தாக்காத விதமாகவும் சுபிட்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்; நாடாளும் யோகம் அவர்களுக்கு மட்டும் தான் சொந்தமாக இருக்க வேண்டுமா? நமக்கு இருக்கக் கூடாதா? இல்லை நமக்கு அந்த அருகதை கிடையாதா? ஜோதிடர்களின் குலதெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் இருக்கின்றார்;ஜோதிடத்தின் ஆதி சக்தியாக அன்னை வராகி இருக்கின்றாள்;அன்னையைச் சரணடைந்தோர் தமது பிறப்பின் ரகசியத்தை இப்பிறவியிலேயே அறிந்துவிடுவார்; சாதாரண மனிதர்களுக்கே காம உணர்ச்சி அதிகம்;குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்,குறிப்பிட்ட கிரக சேர்க்கைகள் சேர்ந்திருக்கும் போது பிறந்தவர்களுக்கும்,குறிப்பிட்ட லக்னத்தில்பிறந்தவர்களுக்கும் காம உணர்ச்சி மிக மிக மிக அதிகம்;பிறரின் தலைவிதியை ஜோதிட ஆலோசனையின் மூலமாக மாற்றும் ஜோதிடர்களுக்கு அதன் கர்மவினைகள் தாக்கும் அல்லவா? அதனால் அவர்களுக்கு பிறரை விட அதிகமாகத் தானே இருக்கும்;இந்த மித மிஞ்சிய சிற்றின்பத்தில் இருந்து மீள்வதற்கு 64 வராகி அவதாரங்களில் ஒரு வராகி அவதாரம் இருக்கின்றது;இந்த அன்னையைச் சரணடைந்துவிட்டால்,காமத்தையும் இப்பிறவியிலேயே ஜெயித்துவிடலாம்;(யாருக்கு தீவிரமான தேடல் இருக்கின்றதோ,அவரே இந்த அன்னையின் அருமை பெருமைகளையும்,வழிபாட்டு முறைகளையும் பெற்றிடுவார்) ஓம் வராகி சிவசக்தி ஓம் ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...