செவ்வாய், 25 அக்டோபர், 2016

பசு வழிபாடு

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும்புண்ணியமாக
கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.பசுவின் உடலில்
ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர் களும் இருப்பதாக கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில்
இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன.
அவைநந்தா, பத்திரை, சுரபி,
சுசீலை, சுமனை ஆகியவை. . இவைபொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம்கொண்டிருந்தன.
இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில்நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில்இருந்துவரும் கோமயம்(சாணம்), 
மூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகியஐந்தும் புனித
மானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில்கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது.
இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால்  முன் ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத்  தொழுவத்தில் காண்பது சுபசகுனம்.
தெருக்களில் கூட்டமாகப்
பார்த்தால்இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த
ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து
அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால்
கோலோகத்தை அடையும் பாக்கியம்உண்டாகும். வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின்வாசஸ்தலம்.
வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவதுகோலோகம்.
கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும்தெய்வங்களும்
1. முகம் மத்தியில்                      
சிவன்
2. வலக் கண்                              
சூரியன்
3. இடக் கண்                              
சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                    
ராகு
8. கழுத்து கீழ்புறம்                       
கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால்                         பைரவர்       
12. முன் இடக்கால்                        ஹனுமார்
13. பின்னங்கால்கள்                      ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி             நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்               
கங்கை
16. பிட்டம் - மேல்புறம்               
லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                           பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி   
18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                     நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                           
வீமன்
22. இடக்கொம்பு                         இந்திரன்
23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை
24. முன்இடக்குளம்பு                      இமயமலை
25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை
26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை
27. பால்மடி                                      அமுதக்கடல்
பசு வழிபாடு வகை
வழிபாடு இரண்டு வகைப்படும்.
1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனைவிக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபடமுடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்துவழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தைமட்டும் வைத்து  வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்.
2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடாவிட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே.
இரண்டாம் வகை பராமரிப்புவழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடுநடக்க முடியும்.கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன்பின் புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக  ஐதீகம்.
எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவைமுன்புறமாக
தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும்.
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில்
சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும்.
எனவேதான், அதிகாலையில்
சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வதுபராசக்திக்கு பூஜை செய்வதற்குச்சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலானமும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம்
என்றொருதெய்வம் உண்டு.
சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்திஇருக்கிறார்.
இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாகமனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்திஇருக்கிறாள். இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,
உயிர்கள்என அனைத்தையும் படைத்து,காத்து, ரட்சிப்பவளாக இருக்கிறாள்.
இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே, முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்டவசுக்களும், நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன.
கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்தஜாதி,மதம், மொழியும் தடையாக இராது.
(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)
கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும்;
குழந்தைபாக்கியம் உண்டாகும். கெட்டசக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள்நீங்கிவிடும்.

களத்திர தோசம்: திருமண தாமதம்

களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே.
அதற்கான சில விதிகள் இதோ.
1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.
2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.
3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.
4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.
5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.
6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.
7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.
8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

குருவும் கிரகங்களின் சேர்க்கை

குரு – சூரியன்:
பெரியவர்களிடம் பக்தி சிரத்தை உடையவர்களாகவும், கல்வியில் திறமை கொண்டவர்களாகவும், தெய்வபக்தி மிகுந்தவர்களாகவும், பூஜை வழிபாடுகளில் சிரத்தை கொண்டவர்களாகவும் தார்மிக சிந்தனை உடையவர்களாகவும் திகழ்வார்கள். செல்வச் செழிப்புடன் இருக்கும் இவர்கள், படித்த பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருப்பர். ஆசானாகவும், புத்திசாலியாகவும் இருப்பர். சண்டையிடுவதில் விருப்பம் கொண்ட வர்களாக இவர்கள் இருப்பதால், ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருப்பர். செய்நன்றி மறவாத குணம் கொண்டிருப்பர்.
குரு – சந்திரன்:
சிவந்த மேனியுடன் திகழும் இவர்கள் அழகான, அகன்ற கண்களைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் ஓரளவு நம்பிக்கை உடையவராக இருப்பர். கவலைகளை மறந்து சதா சிரித்துப் பேசும் குணமுடையவர். உறவினர்களாலும் நண்பர்களாலும் புகழ், பெருமைகளைப் பெற்றவராகவும், சாமர்த்தியசாலியாகவும் திகழும் இவர்கள் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகுவார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களாகவும், எடுத்த காரியத்தை முடிக்கும் சுபாவம் கொண்டவர்களாகவும்் இருப்பார்கள். மனதுக்குள் கோபம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
குரு – செவ்வாய்:
சிவந்த கண்களுடனும், கல்வி பயில்வதிலும், சாஸ்திர ஆராய்ச்சியிலும் திறமை வாய்ந்தவராகவும், தரும சிந்தனை, பரோபகாரம் ஆகிய குணங்களுடன் அழகாகவும், செல்வந்தர் களாகவும் விளங்கும் இவர்கள், தங்க நகைகளி னால் பொருள் ஈட்டுவதில் ஆர்வம் கொண்டிருப்பர். தெய்விக சிந்தை உடைய இவர்கள், ஆலய வழிபாடுகளில் அதிக ஈடுபாடு் கொண்டிருப்பர். கோயில் கட்டுதல் போன்ற சமூக நலம் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். மற்றவர்களால் பெரிய மனிதராக மதிக்கப்படுவர்.
குரு – புதன்:
ஆசார சீலராகவும், மன தைரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நல்ல குணங்களுடன் நீதி நேர்மையைக் கடைப்பிடிக்கும் இவர்கள், புத்திக்கூர்மையுடன் வியாபார நுணுக்கங்களை அறிந்தவர்களாகவும் இருப்பர். கீர்த்தியுடன் திகழும் இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. நல்ல குணங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். சரும வியாதிகள் தோன்றக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். மற்றவர்களை  வசியப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய திறமையைப் பெற்றிருப்பார்கள்.  மதுரமான வார்த்தைகளைப் பேசுபவராகவும் இருப்பர்.
குரு – சுக்ரன்:
குரு-சுக்ரன் சேர்க்கையானது அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்த சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் கோபம், அகங்காரம் கொண்டவர்களாகவும், மற்றவர்களால் தூற்றப்படுபவர்களாகவும், நன்றி மறப்பவர்களாகவும் இருப்பார்கள். தான் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டாலும் மற்றவர்களுக்கு நியாயத்தை உபதேசிப்பதில் தயங்கமாட்டார்கள்.
குரு – சனி:
இந்த சேர்க்கையும்கூட அவ்வளவு சிலாக்கியமில்லை. அசைவ உணவில் விருப்பம் கொண்டிருப்பர். இவர்களின் வாழ்க்கையில் ஏழ்மையும் வறுமையுமே நிறைந்திருக்கும்.தைரியசாலிகளான இவர்கள், அலட்சியமாகவும் தற்பெருமையாகவும் பேசுவார்கள்.இவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. எப்பொழுதும் வெளியில் சுற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இவர்களிடம் உண்மையான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், எதிர்பாராத வகையில் இவர்களுக்கு பண வரவும், சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும்.
குரு – ராகு:
கல்வியில் ஊக்கம், வியாபார நுணுக்கங்களை துல்லியமாக அறியும் திறன் கொண்ட இவர்கள், ஜோதிட சாஸ்திரம் நன்கு அறிந்தவராகவும் பலன் கூறுபவராகவும் இருப்பார்கள். சங்கீதத்தில் பிரியமும், சாத்தியம் இல்லாத காரியங்களைக்கூட  சாதிக்க முயற்சி செய்பவராகவும் இருப்பார்கள். சாஸ்திரங்களைக் கற்பதுடன் பிறருக்கும் உபதேசித்து தானும் கடைப்பிடிப்பர். பேச்சு சாமர்த்தியமும் மற்றவர்களின் குணமறிந்து பழகும் தன்மையும் பெற்றிருப்பர்.
குரு – கேது:
ஆசார சீலர்களாகவும், வேதம் சாஸ்திரங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும், பல புத்்தக ஆராய்ச்சிகளைச் செய்பவர்களாகவும், உயர் பதவி, அந்தஸ்து, நேர்மை, வாக்கு நாணயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உறவினர், நண்பர்களை ரட்சிக்கும் மனம் பெற்றிருப்பர். திறமைசாலியாகவும் அழகாகவும், திகழும் இவர்கள் சங்கீதத்தில் பிரியமும் யாத்திரை செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். புத்திர ப்ராப்தி இல்லை என்றே சொல்லலாம். மாடு, ஆடுகளை வளர்ப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். பிறருடைய வேலைகளில் தலையிட்டு, தானே முன்னின்று செய்து முடிப்பவராகவும் இருப்பர்.

கல்வி ஜோதிடம்


இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு தன்னுடைய ஜீவனத்தித்ற்கு , சுக போக எதிர்கால வாழ்விற்கு, சமூகத்தில் மதிப்புடன் வாழ மற்றும் நல்ல குணநலன்களை பெற்று வாழ்கையில் திருப்புமுனையாக அமைத்து கொடுப்பது இந்த கல்வி ஆகும். எனவே தற்போது இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய குழந்தைகளை முன்னணியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல லட்சம் செலவழித்து படிக்க வைக்கின்றனர்.
ஆனால் இதெல்லாம் எதற்கு? தன் குழந்தைகளை DOCTOR, ENGGINEER, PROFESSIONAL மற்றும் இதர துறைகளில் படித்தவுடன் CAMPUS INTERVIEW ல் வேலை கிடைக்கவேண்டும் என்றா நோக்கத்தில் தான். ஆனால் இதெல்லாம் நடக்கிறதா? பலருக்கு தோல்வி ஏற்படுகிறது இதற்கு காரணம் பல உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் ஜாதகரின் திறமைகளை அறியாமல் செய்யப்படும் முடிவும் ஒன்று ஆகும்.
எனவே PRE KG சேர்க்கும் முதலே குழந்தைகளின் ஜாதகத்தினை ஆராய்ந்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, நல்ல நாள் பார்த்து ஆரம்ப கல்வியை கல்வி நிறுவனத்தில் ஆரம்பிப்பது, இதெல்லாம் கணக்கில் கொண்டு பெற்றோர்கள் செயல் படும் போது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படுகிறது
அதற்கு ஜாதகத்தில் ஆராயவேண்டியவைகள் :
• 2 மிடம் ஜாதகரின் ஆரம்ப கல்வியை குறிக்கிறது
• 4 மிடம் பட்டப்படிப்பையும்
• 8 மிடம் தொழில் நுணுக்கக் கல்வியையும்
• 9 மிடம் உயர் கல்வி – PG COURSE
• 12 மிடம் ஆராய்ச்சி கல்வி
• 5 மிடம் திறமை,புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறிக்கும்
• மேலும் கல்வி காரகன் புதனின் நிலை, மனோ காரகன் சந்திரனையும், மூளை காரகன் குருவையும் ஆராய்ந்து பலன் உரைக்க வேண்டும்
• புதன் நீசமாக கூடாது. அந்த நீசா புதனை பாவ கிரகத்தின் பார்வை இருக்க கூடாது. 2ல் நீசக்கிரகம் இருக்ககூடாது
• புதன் நீசமானாலும் சில கிரக அமைப்பினால் கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் உதாரணம் : மீனத்தில் புதன் நீசமடைந்து அங்கு குரு பகவான் ஆட்சி பெறும் போது நீசபங்கம் ஆகி புதன் பலம் பெற்று கல்வியை அளித்து விடுவார்.
• புதன் 2 மிடத்தில் இருப்பது கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்பது விதி. புதனுடன் சூரியன் அல்லது குரு சேர்ந்து இருந்தால் நல்ல கல்வியை ஏற்படுத்தி விடும். ஆனால் தீய கிரகங்கள் தொடர்பு கல்வியை கெடுத்து விடும் அல்லது தடங்கல்களை ஏற்படுத்திவிடும்.
• எந்த லக்கனமாக இருந்தாலும் புதன் கன்னியில் இருந்தால் கல்வியில் உயர்வு உண்டு ஆனால் பாவக சக்கரத்தில் மாறாமல் இருந்து பரலின் எண்ணிக்கை 24 க்கு குறையாமல் இருந்து பாவ கிரகத்தின் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும்
• பாவகர்த்தாரி தோஷத்தில் புதன் இருக்ககூடாது
• காரகன் பலமாக இருந்தாலும் காரகத்தின் வீடுகள் கெட்டுவிடக்கூடாது.
எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஜாதகரின் கல்வி நிலையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கல்வி நல்ல சிறப்பையும் அதற்கு உண்டான உத்தியோகம் / தொழிலை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்க்கை சுமை இல்லாமல் சுமூகமாக சிறக்க வழிவகை செய்யும்

ராகு-கேது பரிகார தலங்கள்.


ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம்.
* சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.
* காரைக்குடியில் செஞ்சை பகுதியில் நடராஜ் தியேட்டர் கீழ்புறம் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.
* பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம்.
* திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம்.
* சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம்.
* செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும். இங்கு வழிப்படலாம்.
* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.
* ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோவில் (வழி) தண்ணீர்பந்தல் பாளையம் போஸ்ட், தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில் ராகு- கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும்.
* மன்னார்குடி அருகில் பாமினியில் உள்ள சிவாலயம் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம் உள்ளது.
* திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி- விசுவாமித்திரர் தவம் இருந்த பூமி தில்லைக்காளியும் உண்டு.
* நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் (ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம்)
* மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.
* கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும் பணம் கட்டினால் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள்.
* கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார ஸ்தலம், பிரார்த்தனை ஸ்தலம்.
* ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி- அதற்காக பயப்படத் தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு- கேதுப் பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.
* சோளிங்கரிலிருந்து 12 கி.மீ.ë தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.
*கொடு முடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவர்.
* காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.
* ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.
* சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.
* நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
* விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.
* சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு- கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.
* திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் ராகு-கேது சிக்கல் விலகி சுபீட்சம் காண்பீர்கள்.
* திருவாலங்காடு சென்று முஞ்சிகேசமுனிவரும், கார்கோடகனும் வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர ராகு, கேது தோஷம் நீங்கி வளம் பெருகும்.
* மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மாங்குடிக்கு அருகில் திருச்சிறுபுலியூர் உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கிருபாசமுத்திர பெருமாளையும், ஸ்ரீதயாநாயகி தாயரையும் வணங்கினால் வழக்கில் வெற்றி, பூர்வீக சொத்து பிரச்சினை தீருதல், செல்வம் சேருதல் ஆகியன கிட்டும்.
* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாக நாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள 5 தலை நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்.
* திருவாரூர்- கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள தலம் மணக்கால். இங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கி ஸ்ரீஆதிசேஷன் விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம். ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கினால் அரசு தொடர்பான வேலைகள் வெற்றி அடையும், நல்ல வேலை கிடைக்கும்.
* நாகர்களுக்கு எதிரான யாகங்கள் நடந்தபோது லட்சக்கணக்கான நாகங்கள் யாக நெருப்பில் விழுந்து மடிந்தன. இதனை காப்பாற்ற நினைத்து நாகராஜனான ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள்பெற்ற திருத்தலமே நாகூர். இங்கு கோவில் பிரகாரத்தில் ஸ்ரீஆதிகேஷன் சிவபெருமானை பூஜை செய்ததற்கான சாட்சிகள் உள்ளன. இங்குள்ள ஈசனை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகி பெரிய பதவிகள் கிடைக்கும்.
* தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் கத்தரிநத்தம். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது.
இத்தலம் ராகு, கேது பரிகார ஸ்தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி பத்ரம் (இலை) ஆகியவை சார்த்தி, ஸ்தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு கேது தோஷம் யாவும் விலகும்.
* குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் சுமார் 850 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இக்கோயில் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.கால சர்ப்ப தோசம் என்பது ஜாதகத்தில் முக்கிய தோசம் ஆகும். ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழக்கும் பெரிய தோசம் அது. இத்தோசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோச நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.
* ராகு, கேது தோஷ முள்ளவர்கள் ரமேசுவரம் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் அமைந்திருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுகிறது.
* மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள இலுப்பட்டு தலம் நாக வழிபாட்டில் சிறப்பு வாய்ந்தது. நளமகராஜன் விஷக்கடியில் நிறமாறியிருந்தான். அந்த நிறம் மாறி தன் இயல்பான வடிவை அங்கே தான் அடைந்தான் என்று அத்தல வரலாறு பேசும். சிவபெருமானே தமது கண்டத்தில் விஷமருந்திய இறையைக் காட்டி அருளியபதியும் அதுவே தான்.
* கும்பகோணம் நாகநாதர், திருநாகேசுவரம் நாகநாதர், திருமருதூரில் குடிகொண்டுள்ள நாகநாதர், கொழுவூர் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நாகை நாகதாதர், திருப்பாரம்பரம், திருப்பாமணி, திருக்காளகத்தி, திருக்களர், திருப்பேரை, நாகர்கோயில் நாகமலை என்னும் திருச்செங்கோடு, திருத்தென்குடி திட்டை, திருவகீந்திரபுரம் என்று பாம்பரசர்களோடு தொடர்புடையதான தலங்களை எவ்வளவு விவரித்தாலும் தகும்.
* ஐந்தலை நாகம் குடைப்பிடிக்க விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களுள் நாகப்பட்டினமும், தஞ்சை பாபநாசமும் சிறப்புக்குரிய தலங்களாகும்.
* திருபுவனம் திருக்கோவிலில் எல்லா காலமும் சரபமூர்த்தி வழிபாடு அருள் நலம் பொலிய நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் சரப மூர்த்தியை வழிபாடு செய்வதன் வாயிலாக ராகு-கேதுக்களைப் பிரீதி செய்வதுடன் நடுக்கம் தீர்த்த பெருமான், அறம் வளர்த்த நாயகி, சரபர் இவர்களது அருளுக்கும் பாத்திரர் ஆகலாம்.
* தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கிய பெருமை குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில் தான் எனப்படுகிறது. இங்கே நாள் தோறும் ராகு கால பூஜை நடைபெற்று வருவது சிறப்பு.
* காமதேனுவின் கால் பதிந்த தலம் தான் மாடம்பாக்கம். இங்கு தேனுபுரீசுவரர் கோவிலுக்குள் சென்றதும் முன் மண்டபமும் மண்டபத்துக்கு இடப்புறம் காணப்பெறும் தூண் ஒன்றில் சரப மூர்த்தியின் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. ஆர்த்தெழுந்த சரபத்தைக் கண்டு நரசிம்மன் அஞ்சி ஓடியிருப்பார்.
சரபப் பறவையும் விடாமல் நரசிம்மத்தை தாவி பிடித்திருக்கும். அவ்விதம் தாவும் தகைமையைத்தான் சிற்பி கற்தூணில் இங்கு நிலை பெறச் செய்திருக்கிறார். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் மக்கள் பெருமளவில் வந்து இந்த சரப மூர்த்தியை வழிபட்டு செல்கிறார்கள்.
மேலும், நவகிரஹா ப்ரீத்தி அல்லது எந்த ஒரு பரிகாரம் செய்யும் முன் அது சம்பந்தப் பட்டவர்களிடம் ஆலோசனைப் பெற்று செய்வது உச்சிதம்.

திங்கள், 24 அக்டோபர், 2016

ராசி லக்னப்படி தொழில் அமைப்பு எப்படி

ஜாதக அடிப்படையில் ஒரு மனிதன் இந்த தொழிலுக்கு / வியாபாரத்திற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிர்ணயிப்பது பின்வரும் காரணிகள் தான். ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை போருந்தியிருகின்றதோ அதர்க்கேற்பவே அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது. ஒருவனின் உத்தியோகம் சம்மந்தம்பட்ட விஷயங்கள் வலிமையாக அமைய ஜாதகனின் ஜென்ம லக்னம் வலிமை வாய்ந்ததாக அமைய வேண்டும். இந்த லக்னதைப் பெற்றவர்களுக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும். லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும். பத்தாம் இடதில் இருகின்ற கிரகத்தின் வலிமையையும், அதன் காரகங்களையும் முக்கியமாக தொழில் சம்மந்தப்பட்ட காரகங்களை அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் இடதின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் இடதின் அதிபதி தங்கி இருக்கின்ற வீட்டின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பத்தாம் வீட்டை யார் யார் பார்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. கால், அரை, முக்கால் மற்றும் முழு பார்வை என்று ஜாதகத்தில் உள்ளது. எந்த கிரகம் எந்த பார்வையில் பத்தாம் வீட்டைப் பார்கின்றது என்று அறிந்து அந்த கிரகத்தின் வலிமையையும், காரகதுவமங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலே சொன்ன காரணிகளை ஆராய்ந்து அணைத்து தொழில் காரகங்களையும் பட்டியலிட்டுக் கொண்ட பிறகு, ஜாதகரின் மனது எந்தெந்த தொழில்களில் ஈடுபாடு கொள்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜாதகர் ஏற்கெனெவே சில காலம் தொழில்/வியாபாரம் செய்திருப்பாரேயானால் அவற்றில் எவ்வேவ்வற்றில் அதிகம் சோபித்தார் என்றும் அறிந்து கொள்ள வேண்டும். இறுதியாக எந்த கிரகம் அல்லது கிரகங்கள் தொழிலுக்கு உகந்ததாக வலிமை பெற்று இருகின்றன என்று உறுதி செய்து அந்த கிரகத்தின் தொழில் காரகங்களை பரிந்துரைக்க வேண்டும். ஒவ்வொரு கிரகத்தின் காரகமும் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்றது. சூரியனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். அரசியலில் ஈடுபடலாம் அரசாங்க வேலை மாணிக்க வியாபாரி ஆகலாம் சிவப்பு வண்ண கற்களை விற்கலாம் தங்க ஆபரணங்களை தாயாரிக்கலாம், விற்பனை செய்யலாம். தர்க்கம் செய்வதில் வல்லவராகலாம் மாந்த்ரீகத்தில் ஈடுபடலாம் நூற்பாலை சம்பந்தப் பட்ட வேலைகள் செய்யலாம் கட்டுமான துறைகளில் ஈடுபடலாம் மிளகாய் வியாபாரம் வெங்காய வியாபாரம் புகையிலை வியாபாரம் மர வியாபாரம் காகிதம் வியாபாரம் விபூதி வியாபாரம் தாவர பொருட்கள் வியாபாரம் கற்பூரம் வியாபாரம் மருந்து வியாபாரம் இரசாயன வியாபாரம் வழக்கரிஞ்சர் சந்திரனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். ஒரு மனிதனின் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்க்குரியவனாக சந்திரனோ, பத்தாம் இடத்திற்கு உரியவன் உள்ள இடமானது சந்திரனின் வீட்டுக்கு உரியதாகவோ அமைந்திருந்தது என்றால் அது சந்திரனின் காரகத்துவத்தை பெற்றது என்று கூறலாம். சந்திரன் வெண்மையானவன். எனவே வெள்ளை நிறமுடைய பொருட்களை கொண்டு எந்த வியாபாரம் செய்தாலும் அது வெற்றியாக அமையும். முத்து வியாபாரம் உப்பு வியாபாரம் சுண்ணாம்பு வியாபாரம் சங்கு வியாபாரம் மீன் பிடித்தல் பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம் படகு, பரிசல் டிராவல் ஏஜென்சி வேளாண்மை நீர்பாசன துறை வேலைகள் ஈரப்பசையுள்ள பழவகை வியாபாரம் பெண்கள் விருப்பப்படும் எந்த தொழிலையும் செயாலாம். பேன்சி ஸ்டோர் தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள் சீட்டு பிடிகலாம் அரசாங்க துறையில் வேலை கிடைக்கும், முயன்றால் பெறலாம் டாக்டர் ஆகலாம் புகழ்பெற்ற நடிகர்கள் ஆகலாம் ஜோதிடம் கற்று தொழில் செய்யலாம் எழுத்தாளர், பாடலாசிரியர் ஆகலாம் எதற்கும் தகுதியற்றவராக கருதபடகூடியர் கூட சில பணக்கார வீடுகளில் அவ்வீட்டின் பெண்கள் இடக்கூடிய வேலைகளை செய்யக் கூடிய வேலைக்காரர்களாக ஆகின்றனர். செவ்வாயின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். செவ்வாய் காரகத்துவம் பெற்ற கிரகமாக இருக்குமேயாயின், அவர்கள் பின்வரும் தொழில் செய்ய ஏற்றவர்களாக மாறுகின்றனர். ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்தது. வீடுகள், நிலபுலன்கள் விற்பனை செய்து வருமானம் பெறலாம். எங்கெங்கு நெருப்பின் துணை அவசியமோ அங்கெல்லாம் இவர்கள் உண்டு. உதாரணமாக செங்கல் சூளை, கொள்ளுப்பட்டறைகள், மின் வாரியங்கள், பயங்கர கருவிகள் தயார் செய்யும் இடங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது இவர்களே அவ்வேலையை செய்வார்கள். இவர்களில் மிகப்ப்ரும்பாலோர்க்கு சமையல் தொழில் செய்யத் தெரியும். ஹோட்டல் துறை இவர்களுக்கு வாய்க்கும் குயவர்கள் ஆகலாம் சிற்பிகள் ஆகலாம் ஓவியர் ஆகலாம் காவல்துறை / இராணுவத்தில் பனி கிடைக்கும் விளையாட்டு வீரர்கள் ஆகலாம். சிலம்பம், குத்துசண்டை வீரர் ஆகலாம். பவள வியாபாரம் மாயாஜாலம், ஏவல், பில்லி, சூன்யம் எல்லாம் சர்வ சதாரணமாக அமையும் சர்கஸில் வேலை கிடைக்கும் பெரிய தோப்புகள் மூலம் லாபம் பெறலாம் விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை குத்தகைக்கு விடுவதாலும், துவரைப்பயிரிடுவதாலும் நன்மை அடையலாம். புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு பத்திரிகை துறை ஏற்றது. நிருபராகவோ, துணை ஆசிரியர், ஆசிரியர் ஆகா பணி ஆற்றலாம் ஜோதிடத்தில் வல்லவர்களாக இருப்பார்கள் இன்சூரன்ஸ் துறை சிறந்தது இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ஆதலால் கல்வித்துறை சம்மந்தமாக வேலை கிடைக்கும். புதன் காரகதுவம் பெற்றவர்கள் புகழ் பெற்ற ஏழுத்தாளர்களாக வருவார்கள். பட்டிமன்றம், கதா காலோட்சபம், சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர்கள் வழக்கரிஞ்சர் ஆகலாம் அக்ககௌடன்சி எனப்படும் கணக்குப் பதிவியல் துறை மிக சிறந்தது. அமைச்சர்களுக்கு ஆலோசகராகவோ, அயல் நாட்டு தூதராகவோ ஆகலாம். மென்போருள் துறை மிக ஏற்றது. ரேடியோ, தொலைக்காட்சி துறைகளில் நல்ல வேலை கிடைக்கும் கடவுள் மேல் பக்தி உள்ளவர்கள் வேத சாஸ்திரங்களை கற்று அர்ச்சகர் ஆகலாம். வியாபாரியாக ஆகா விரும்புவோர்கள் இலைகள் பச்சை பயிறு போன்றவற்றை கொள்முதல் செய்து விற்றால் அதிக லாபம் பெறலாம். தபால் துறையில் வேலை கிடைக்கும் ஆசிரியர் ஆகலாம் கணித மேதைகளாக மாறலாம். குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். ஆன்மீக துறையில் நாட்டம் கொண்டு அதன் வாயிலாக சிலருக்கு ஜீவனம் அமையும். சிலர் மாகத்துமாவாக மாறி பிறர் மூலம் காப்பாற்றப்படுகின்றனர். நகை வியாபாரமும், புஸ்பராக வியாபாரமும் ஏற்றது. எலுமிச்சை, ஊதுவத்தி, தென்னை, பாக்கு, கரும்பு வெல்லம் வியாபாரம் ஏற்றது பொதுவாக யாகங்கள், புரோகித தொழிலில் ஈடுபடுதல், கதா கலோட்சபம் செய்தல், தெய்வீக காரியங்களில் ஈடுபடுதல், மதப் பிரசாரம் செய்தல், ஆலயங்களில் மதப் பிரச்சாரம் செய்தல், ஆலயங்களில் அறங்காவல் துறையில் ஈடுபடுதல், மடங்களில் இருத்தல், தொண்டு செய்தல், ஆலய குருக்களாக இருத்தல் போன்ற முழுவதுமான ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப் பெருகிக் கொள்ளலாம். வேறு சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை நடத்துவர். இன்சுரன்சு துறை ஏற்றது எங்கெங்கு காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும். இவர்கள் தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ கூட ஆகலாம். இவர்களில் பலருக்கு வக்கீலாகவும், நீதிபதி ஆகவும் தகுதி உண்டு அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பொது, அந்த விசாரணை கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள். இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட முடியும். மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக சிலர் விளங்குவார்கள். தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு வாய்க்கும். தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர் சுக்ரன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். தங்க கடை வைக்கலாம் வெள்ளி நகைகளை தயாரித்து விற்கலாம் வெண்கல வியாபராம் செய்யலாம் செயற்கை கற்கள் விற்பனை செய்யலாம் ஆடைகள் வியாபாரியாகலாம் மணல் லோடு ஏற்றி வந்துசப்ளை செய்யலாம் பால் பண்ணை அமைக்கலாம் லாண்டரி நடத்தலாம் தறி போட்டு நெய்யும் தொழிலை செய்யலாம் படங்களுக்கு கண்ணாடி சட்டமிட்டு தரும் கடையினை வைக்கலாம் முகம் பார்க்கும் கண்ணாடி கடை நடத்தலாம். கோயில் வாசலில் தேங்காய், பூ, பழம் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம். தனியாக வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம் பூ வியாபாரம் செய்யலாம் சந்தன வியாபாரம் செய்யலாம் புளி மண்டி வைக்கலாம் கரும்பை விளைவித்து விற்கலாம் மணிலாவை பயிர் செய்து விற்பனை செய்யலாம் தோட்டங்கள் இட்டு இலாபம் அடையலாம் விறகு கடை நடத்தலாம் பலகார கடை நடத்தலாம் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வியாபாரம் செய்யலாம். பாத்திர வியாபாரம் செய்யலாம். சங்கீதம் சம்பந்தப்பட்ட மேள, தாளங்களை விற்பனை செய்யும் கடை வைக்கலாம். இலவம் பஞ்சு வியாபாரம் செய்யலாம் கட்டில், மெத்தை வியாபாரம் செய்யலாம் பால், தயிர் போன்றவற்றை விற்பனை செய்யலாம் கால் நடை பண்ணை வைக்கலாம் சென்ட் வியாபாரம் செய்யலாம் வாகனங்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம் இசை அமைக்கலாம் கலைஞ்சர்கள் ஆகலாம் பின்னணி பாடலாம் கவிஞர்களாக ஆகலாம். பொதுவாக கலைத்துறையில் இவர்கள் பெரிதாக சாதிக்கலாம் கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு கேளிகைகளின் மூலமே வாழ்க்கையானது நடை பெரும் சனி காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். இரும்பு, இரும்பு சம்மந்தப் பட்ட தொழில்களில் தான் இவர்கள் வல்லுனர்கள் ஆக இருப்பார்கள். கடினமாக உழைக்க வல்ல இவர்களுக்கு அம்மாதிரியேதொழில் அமையும். இவர்கள் நீல வண்ணமுடைய சரக்குகளை விற்பனை செய்தால் இலாபம் உண்டு தோல் வியாபாரம் செய்யலாம் எண்ணெய் வியாபாரி ஆகலாம் எள் பயிரிட்டு விற்பனை செய்யலாம் தரகர்களாக தொழில் நடத்தலாம் மர வியாபாரம் செய்யல்லாம் இரும்பு வியாபாரம் ஏற்றது அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம் கசாப்பு கடை நடத்தலாம் கால்நடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து இலாபம் பெறலாம் காவல் துறை ரகசியப்பிரிவில், உளவுத்துறையில் பணியாற்றலாம் மர வேலைசெய்யலாம் விவசாயம் செய்யலாம் கூலி வேலை செய்யலாம் மறு சுழற்சி தொழில்களில் ஈடுபடலாம் தண்டல், வரி வசூல் செய்யல்லாம் மருந்தாளுனராகலாம் அகழ்வாராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம் பொறியியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உண்டு வெடி குண்டு தயாரிப்பு கிடங்குகளில் வேலை கிடைக்கும் ராகு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். இவர்கள் உளவுத் துறையில் இரகசிய கண்காணிப்பாளராக விளங்ககூடிய பதவிகளைப் பெற்றிருப்பார்கள் மிக சிறந்த மத போதகம் செய்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பார்கள் பழைய கிழிந்து போன ஆடைகளை வாங்கி, விற்று வியாபாரம் செய்யல்லாம் அடகு வியாபாரம் செய்யலாம் மாணிக்கம், கோமேதகம் போன்ற கற்களை விற்பனை செய்யலாம் ஈய வியாபாரம் செய்யலாம் கேப்பை, உளுந்து போன்ற தானியங்களை உற்பத்திசெய்து விற்கலாம் ஒயின் ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தலாம் மருந்து கடை நடத்தலாம் தரகர் ஆகலாம் மூங்கில், கருங்கல் வியாபாரம் செய்யலாம் கடலில் இருந்து எடுக்கப்படும் எப்பொருளையும் கொண்டு வியாபாரம் செய்யலாம் தையல்காரர் ஆகலாம் எருமை மாட்டின் மூலம் வியாபாரம் செய்யலாம் தறி நெய்து தொழில் செய்யலாம் கப்பல் படை, விமானப்படையில் வேலை கிடைக்கும் மந்திரவாதம் கற்றுக் கொள்ளலாம் கேது காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள். ஆன்மீகத் துறையில் ஈடுபடலாம் அறிவியல் துறையில் ஈடுபடலாம் ஜோதிடத்தில் ஈடுபடலாம் தொழில் நுட்பங்களை பிறருக்கு செய்வதன் மூலம் பலன் பெறலாம் அலுமினிய பாத்திரங்கள் விற்கலாம் ஈயம், தகரம் வியாபாரம் செய்யலாம் தரகு வியாபாரம் செய்யலாம் கோமேதகம், மாணிக்கம் விற்பனை செய்யலாம் நீல நிற சரக்குகளாக வங்கி விற்கலாம் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடலாம் லாகிரி வஸ்துகளை கொண்டு வியாபாரம் செய்யலாம் ஒயின் ஷாப் நடத்தலாம் மீன் பிடிக்கலாம் தூர் வாரலாம் முத்துக் குளிக்கலாம் கசாப்புகடை வைக்கலாம் ரசவாதம் செய்யலாம் மந்திரவாத தொழில் செய்து அதன் மூலம் பொருளை சம்பாதிக்கலாம் இந்தக் காரகத்துவம் பெற்றவர்கள் திருட்டில் வல்லவர்களாக இருப்பார்கள். கொலை செய்வதில் அஞ்சாதவர்களாக இருப்பார்கள் ஆண்டிப் பண்டாரமாகவும் மாற வாய்ப்பு உண்டு மதப் பிரசாரம் செய்வார்கள் பிறந்த லக்னத்தின் அடிப்படையில் தொழில் அமையக்கூடிய வாய்புகள் மேஷ லக்னத்தைப் பெற்றவர்கள் ஒரு மனிதன் மேஷ ராசியை தனது ஜென்ம லகினமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான். இந்த மேஷத்திற்கு பத்தாம் இடம் மகரம். பத்னோன்றாமிடம் கும்பம். இந்த இரண்டு வீடுகளையும் தனது வீடுகளாக கொண்டு சனி திகழ்கின்றார். ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி, பதினொன்றுக்குடைய இலாபாதிபதி சனி. சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். இரும்பு சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணி கிடைக்கும் விவசாயிகளாகவும் மாறலாம் நெருப்பினால் எவை எல்லாம் இயங்குகின்றதோ அந்த இடங்களில் எல்லாம் எளிதில் வேலை கிடைக்கும். பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்களான தங்கம், வெள்ளி, கனிம பொருட்கள், நிலக்கரி, தாது உப்புகள் ஆகிய தொழிற்சாலைகளில் பணி கிடைக்கலாம். மருத்துவ துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இராணுவத்திற்கு முயற்சி செய்தால் அதில் உத்தியோகம் பெறலாம் காவல் துறையில் வேலை கிடைக்கும் பொதுவாக பத்துக்கு உரியவர் சனியாக இருக்கும் பட்சத்தில் எத்தொழிலை செய்த போதிலும் அதில் கடினமான உழைப்பை செய்ய வேண்டியது வரும். பத்துக்குடைய சனி சரியான இடத்தில் அமர்ந்திருந்தாரேயானால் அவர்கள் பிறரிடம் அடிமைஉத்தியோகம் செய்யாமல் தங்களாகவே சொந்த தொழிலை செய்வார்கள். ரிஷப லக்னத்தைப் பெற்றவர்கள் ஒரு மனிதன் ரிஷப லக்னத்தை தனது ஜென்ம லக்னமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக சுக்ரன் திகழ்கின்றான். ரிஷபத்திற்கு பத்தாம் இடம் கும்பம், பதினொன்றாம் இடம் மீனம். இந்த இரண்டு வீடுகளில் கும்பத்தை தனது சொந்த வீடாக கொண்டவர் சனி. மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி. பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு. சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். உணவு விடுதி வைத்து நடத்தலாம் சினிமா, நாடகம் போன்ற கலை துறைகளில் ஈடுபடலாம் அழகு சாதன பொருகள் சம்மந்தப்பட்ட துறைகளில் ஈடுபடலாம் பெண்கள் விரும்பக்கூடிய ஆடைகள், ஆபரணங்கள், கற்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் மிதுன லக்னத்தைப் பெற்றவர்கள் மிதுன லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான். மிதுனத்திற்கு பத்தாம் இடம் மீனம். பதினொன்றாம் இடம் மேஷம். மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய். சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். கம்ப்யூட்டர் துறை இவர்களுக்க்கு மிகவும் ஏற்றது. பொறியியல் துறை ஏற்றது விமான துறை பிரிவுகளில் வேலை தேடலாம் பதிப்பகத் துறையில் நூல் வெளியீடு செய்வது நல்ல பலன் தரும் ரேடியோ, தொலைகாட்சி போன்ற துறைகளில் வேலை கிடைக்கும் செய்தி ஸ்தாபனங்களில் பணி புரியலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி கிடைக்கும் எங்கெங்கு பணம் புலங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாகஇருக்க வாய்ப்பு கிட்டும். கணக்காளராக பணி கிடைக்கும் கடக லக்னத்தைப் பெற்றவர்கள் கடக லக்னத்திற்கு உரியவனாக சந்திரன் திகழ்கின்றான். கடகத்திற்கு பத்தாம் இடம் மேஷம். பதினொன்றாம் இடம் ரிஷபம். மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் சுக்கிரன். சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த தொழிலும் இந்த லக்னத்திற்கு நல்லது. கப்பல் போக்குவரத்து துறையில் வேலை கிடைக்கும் மீன் பிடி தொழில் ஏற்றது. உப்பு வியாபாரம் ஏற்றது இராணுவத்தில் வேலை கிடைக்கும் காவல் துறையில் வேலை கிடைக்கும் ஜவுளி வியாபாரம் பலன் தரும் கடக லக்னத்தைப் பெற்றவர்கள் சிம்ம லக்னத்திற்கு உரியவனாக சூரியன் திகழ்கின்றான். சிம்மத்திற்கு பத்தாம் இடம் ரிஷபம், பதினொன்றாம் இடம் மிதுனம். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் (ஜீவனாதிபதி) சுக்கிரன். மிதுனத்தை சொந்த வீடாக கொண்டவர் (லாபாதிபதி) புதன், சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். போலிஸ், செக்யுரிட்டி முதலான காவல் பணி கிடைக்கும். வனத்துறை பணிகள் கிடைக்கும் கணினி துறையில் வேலை கிடைக்கும். குறிப்பாக சிஸ்டம் அட்மினிஸ்டிரேடர், நெட்வொர்க் அட்மினிஸ்டிரேடர் போன்ற பணிகள் சுலபமாக கிடைக்கும். அரசாங்க துறையில் எளிதில் வேலை கிடைக்கும் அரசியலில் இவர்கள் ஈடுபட்டால் வெகு விரைவில் முன்னுக்கு வருவர் நிலத்துக்குக் அடியில் உள்ள நன்நீரை வரவழைத்தல், சுரங்கம் தோண்டுதல், அகழ்வாராய்ச்சி பணிகள் முதலானவை கிடைக்கும் கன்னி லக்னத்தைப் பெற்றவர்கள் கன்னி லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான். பத்துக்குடைய ஜீவானாதிபதி புதன், பதினோன்ருகுடைய லாபாதிபதி சந்திரன். சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். லக்னத்திற்கும், பத்திற்கும் உரியவனாக இரு வீட்டு ஆதிபத்தியம் பெற்ற புதன் முழுவதுமாக பிறரை அதிகாரப்படுத்தும் தொழிலையே பெற்றவனாகின்றான். எனவே மற்றவர்களை அதிகாரபடுத்தி வேலை வாங்கும் எத்தொழிலும் இவர்களுக்கு ஏற்றதாக அமைகின்றது. மேலும் நுண்மையான கலைதொடர்புடைய பணிகள் பலவற்றைச் செய்யலாம். இசை பாடியோ, பயிற்றுவித்தோ வாழ்க்கை நடத்தலாம். எழுத்தாளர்கள் ஆகலாம் நாட்டியம் ஆடுவதன் மூலம் ஜீவனம் செய்யலாம் கலை சம்மந்தப்பட்ட தொழில்களை செய்யலாம் கல்வி சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளிலும் இவர்கள் ஈடுபடலாம். துலாம் லக்னத்தைப் பெற்றவர்கள் துலாம் லக்னத்திற்கு உரியவனாக சுக்கிரன் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் கடகம். பதினொன்றாம் இடம் சிம்மம். பத்துக்குடைய ஜீவனாதிபதி சந்திரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சூரியன். சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். பெண்கள் எவை எல்லாம் விரும்புகின்றார்களோ, அத்தகைய பொருட்களை வியாபாரம் செய்யலாம். பேன்சி ஸ்டோர் வைக்கலாம். வீட்டுக்கு உபயோகமான அரிசி, பருப்பு, புளி விற்கும் மளிகை வியாபாரம் செய்யலாம். காய்கறி, பூ வியாபாரம் செய்யலாம் மாட்டின் மூலம் கிடைக்க கூடிய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்பனை செய்யலாம். வெள்ளை நிறமுள்ள பொருட்களை விற்பனை செய்யலாம். விருச்சிக லக்னத்தை பெற்றவர்கள் விருசிக லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் சிம்மம். பதினோன்றாம் இடம் கன்னி. பத்துக்குடைய ஜீவனாதிபதி சூரியன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி புதன். சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். ஜோதிடம் சொல்லி இவர்கள் சம்பாதிக்கலாம் மந்திரவாதங்கள் செய்து, மந்திரவாதிகள் என்று புகழ் பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம் செப்படி வித்தை, மாயா ஜாலம், கண்கட்டு வித்தைகள் ஆகியவற்றை செய்தும் வருமானம் பண்ணலாம். நீதி துறையில் இவர்களுக்கு வேலை கிடைக்கும் மக்களுக்கு பயன்படும் எதையாவது கண்டுபிடித்து புகழ் அடைந்து அதன் மூலம் பலன் பெறுவர். ரசாயன துறைகளில் ஈடுபடுவர். மருத்துவ துறையில் இவர்களில் பலர் ஈடுபடுபவர். தனுசு லக்னத்தை பெற்றவர்கள் தனுசு லக்னத்திற்கு உரியவனாக குரு திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் கன்னி ஆகும். பதினோன்றாம் இடம் துலாம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி புதன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சுக்ரன். சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். இவர்கள் மரத்தினாலான பொருட்களை இலாபகரமான முறையில் விற்பனை செய்யலாம். ரசாயான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.மருத்துவ சம்மந்தபட்ட தொழிலில் பணியாற்றலாம். கட்டடம் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடலாம், கட்டடம் சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடலாம். மகர லக்னத்தை பெற்றவர்கள் மகர லக்னத்திற்கு உரியவனாக சனி திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் துலாம் ஆகும். பதினோன்றாம் இடம் விருசிகம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி சுக்ரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி செவ்வாய். சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். இவர்கள் இரசாயன சம்மந்தப் பட்ட துறைகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள் சட்டத்தால் குற்றம் என்று ஒதுக்கப்படும் பலவித பணிகளை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் தண்ணீர், திரவம் போன்ற பொருட்களினால் தங்கள் நடத்தலாம். இவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு உண்டு. கும்ப லக்னத்தை பெற்றவர்கள் கும்ப லக்னத்திற்கு உரியவானக சனி திகழ்கின்றான். லக்னதிற்கு பத்தாம் இடம் விருசிகம் ஆகும். பதினோன்றாம் இடம் தனுசு ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி செவ்வாய். பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு. சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதன் மூலமாக பொருள் குவிப்பர். காவல் துறையில் உத்தியோகம் கிடைகின்றது. இராணுவத்தில் சேர முயற்சித்தால் பலன் கிடைக்கும். குத்து சண்டை முதலான பல்வேறு சண்டைகளின் மூலம் பலன் கிடைக்கும். முரட்டுத் தனத்தின் மூலம் வருவாயை பெறக் கூடிய பாக்கியத்தை இவர்கள் அடைகின்றனர். மின லக்னத்தை பெற்றவர்கள் மீன லக்னதிறகு உரியவனாக குரு திகழ்கின்றார், லக்னதிற்கு பத்தாம் இடம் தனுசு ஆகும். பதினோன்றாம் இடம் மகரம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி குரு. பதினோன்றுக்குடைய லாபாதிபதி சனி. சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம். இவர்கள் எத்தொழில் செய்தாலும், மற்றவர்கள் கௌரவமாக கருதும் தொழிலாகவே அது அமையும். ஆசிரியர்களாக இருக்கலாம் மதபோதனையாளராக இருக்கலாம் பிறரை வழிகாட்டி செல்லலாம் ஆன்மீக துறையில் செல்லலாம் இவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாகவே வாழ்க்கை நடத்துவார்கள். புனிதமான வேலையே கிடைக்கும் பத்தாம் இடதில் கிரகங்கள் நிற்கும் பலன் சூரியன் நிற்கில் :- வேந்தனாய், தனாவானாய், தேவப் பிராம்மண பக்தி விசுவாசமுள்ளவனாயிருப்பார். தாய்க்கு வியாதியால் தொந்தரவு. சந்திரன் நிற்கில் :- புத்திமான், சூரன், சுகித்து வாழ்வான். புண்ணிய காரியங்களில் சிந்தை, பந்துக்களால் சுகம், ராசமூலதனம், ப்ராப்தி, தாய்க்கு தோஷி, தீர்த்த யாத்திரை செய்வான். எடுத்த காரியம் முடிப்பார். செவ்வாய் நிற்கில் :- பூமியை ஆளுவான், பிரதானி, சூரன், சுகவான், பராகிரமம், சகல காரியசித்தி, சிப்பந்திகளை வைத்து ஆளுவான். அயிஸ்வரியன், வெகுஜன பூஜிதன், ஆயுத அக்கினியால் பயமுள்ளவனாம். புதன் நிற்ககில் :- சிற்ப வித்தை அறிவான். ஞானமறிவார், சத்திவாசகர், காவிய கணித மறிந்தவன். குசல வித்தை அறிந்தவர், வினோத வஸ்திர அலங்காரன், ஆசார சீலன், மிதமான வார்தையுரைபான். குரு நிற்கில் :- செல்வமுடையவன், அபிமானி, குல வித்தை, [பறிக்கும் குணம் உள்ளவன், ராஜ சேவை, பிரதாப முடையவன், சபையில் புகழ் பெற்றவர். விசேச தனத்தை சேகரிப்பான். புதிரகளிடத்தில் அற்பது வேஷம். சுக்ரன் நிற்கில் :- சூரன், அபிமானி, கீர்திவான், புதியுள்ளவன், நாளுக்கு நாள் விருத்தியடைவார், தனவான், பிரதாப சீலன், சுகமனுபவிபவன், சந்தான விருத்தியில்லை, நீதி, குணம், கல்வி, ஸ்திரி, மூலதன லாபமுடையவன். சனி நிற்கில் :- தன்வான், சூரன், பிரபு செவையுடையவன், பக்திவைராக்கிய முள்ளவன். தனம் தேடுவதில் சமர்த்தன். தாய்க்கு கண்டம். அற்பகுணம், பரஹிம்சை செய்வார். ராகு நிற்கில் :- நீச கர்மத்தை செய்வான். புத்திர சுகமில்லான். குரூர குணத்தால் அதிக ஆசை. அற்பசுகம். அஜாகிரதையால் தன நஷ்டம். நடன சங்கீதங்களில் ஆர்வம். சபையில் கர்வ குணமுடையவன். கேது நிற்கில் :- உற்சாகமுள்ளவான். ஞானப்பெருஞ்செல்வன், சௌக்கிய குறைவு, துக்கம், பிதாவுக்கு வறுமை. ரிசபம், மேஷம், கன்னி, விருசிகம் இதில் ஒன்று லக்கினத்திற்கு பத்தாம் இடம் ஆனால் சத்துரு ஜெயம்; விரோதியிஸ்தன்

புதன், 19 அக்டோபர், 2016

சித்த அஷ்டலக்ஷ்மி ரகசியம்



அகத்தியர், போகர் உரையாடல்
அகத்தியர்: ''நம் ஒவ்வொருவர் உடலிலும்அஷ்டலக்ஷ்மிகள் வசிக்கும்போது, நாம் எப்படி ஏழைகளாவோம்?
போகர்: ''நம் உடலில் அஷ்ட லஷ்மிகள் வசிக்கிறார்களா? மக்கள் அறிய ஆவலாக இருக்கிறார்கள் குருவே!
அகத்தியர்: ''மனிதனுடைய உடலில் வசிக்கும் அஷ்டலக்ஷ்மிகள் மகிமையைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக. முதலாவதாக, நம் பாதங்களில் வசிப்பவள் “ஆதிலக்ஷ்மி” என்று நீ அறிவாயாக
போகர்: “அதனால்தானா குருவே, கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருக்கும்போது கால்கட்டை விரலைச்சூப்பினான்?
அகத்தியர்: “சரியாகச் சொன்னாய் போகா... கிருஷ்ண பரமாத்மா ஒன்றைச் செய்கிறான் என்றால்..... சும்மாவா....? அப்படி அவன் கால்கட்டை விரலைச் சூப்புவதன் மூலம் ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருகிறானாம், ஐயனே....
போகர்: ''ஐயனே! ஆதிலட்சுமி ஒருவனை விட்டு எப்பொழுது விலகுகிறாள்?
அகத்தியர்: ''பிறர் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ நம் கால் படும்போதும், மது, மங்கை, சூதாட்டம்...இவைகளை நாம் நாடும்போதும் ஆதிலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள். ''பிறர் மீது தெரியாமல் கால் பட்டு விட்டால் சிவ சிவ எனக்கூற இலக்குமி விலகமாட்டாள்.
போகர்: ''ஜயனே, கலியுகத்தில் திருமணங்கள் நடக்கும் இடங்களில் கூட சூதாட்டம் மலிந்து விட்டதே... !
அகத்தியர்: “ஜயனே, இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்திதான்... திருமணம் நடக்கும் இடங்களில் சூதாடுவதால் மனமக்களுக்கு ‘சில்மிஷ’ புத்தியோடு கூடிய மக்கள் பிறக்கின்றன. ஆகவே திருமண வைபவங்களில், இரு வீட்டாரும் ஒன்று கூடி, சூதாடுவதைத் தடுத்து நிறுத்த வேணடும்
போகர்: 'சத்குருநாதா, மனிதன் ஆதிலக்ஷ்மியின் ஆசி பெற என்ன செய்ய வேண்டும்?
அகத்தியர்: “நம் தாய் தந்தையர்க்கும், குருவுக்கும், பெரியோர்களுக்கும் பாத பூஜை செய்து வணங்குவதன் மூலம், நாம் ஆதிலக்ஷ்மியின் அருளைப் பெறலாம். அடுத்து, காலை நீட்டியபடி புத்தகத்தை வைத்துக்கொணடு படிப்பதாலும், நெல், அரிசி, தானியம் இவைகளைக் கால்களால் மிதிப்பதாலும் பால் கறக்கும்போது, பசுவினுடைய கால்களைக் கட்டிவிட்டுக் கறப்பதாலும் நம்மை விட்டு முக்கியமான ஒரு லட்சுமி விலகுகிறாள். அவள்தான் “கஜலக்ஷ்மி” ....மனிதனுடைய முழங்கால் பகுதியில் அவள் வசிக்கிறாள்... ''
போகர்: ''ஜயனே, கஜலக்ஷ்மி நம்மிடமிருந்து விலகாமலிருக்க என்ன வழி?
அகத்தியர்: ''நான் முதலில் சொன்ன தவறுகளை செய்யாமலிருப்பதாலும், கணவன், குரு, பெரியவர்கள் ஆகியோருடைய முழங்கால்களை, வலி தீர பிடித்து விடுவதாலும் கஜலக்ஷ்மி நம்மை நாடி வருகிறாள்....அடுத்து வருபவள் வீர்யலக்ஷ்மி
போகர்: ''குருவே, வீர்யலக்ஷ்மி நம் உடலில் எங்கு வசிக்கிறாள்?
அகத்தியர்: ''ஜயனே, மனிதனுடைய இடுப்புக்குக் கீழ் பகுதியில் அவள் வசிக்கிறாள். குடுமி வைத்தவர்களை என்றுமே கேலி செய்யக்கூடாது. அப்படிச் செய்வதால் மனிதன் 'கானப்புரட்டி’ என்ற சாபத்திற்கு ஆளாகிறான். அச்சாபத்தின் மூலம் ஒருவன் எவ்வளவு முயன்று படித்தாலும், அவன் மண்டையில் படிப்பு ஏறாது... குடுமியைக் கேலி செய்வதாலும், சாதுக்களையும் மகான்களையும் கேலி செய்வதாலும், வீர்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்.
போகர்: ''குடுமியில் அப்படி என்ன விசேடம்?
அகத்தியர்: ''சீடனே, குடுமி மகிமையைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், அதற்கு முடிவே கிடையாது.. ஆகவே, ‘குடுமி மகிமை’யைப் பற்றிப் பிறகு பேசுவோம். ஆனால் ஒன்றை மட்டும் நீ தெரிந்து கொள்ள வேண்டுமடா... குடுமி வைத்துள்ள ஒருவன், சாதாரண மனிதனைவிட 100 மடங்கு அதிகமாக, சீலத்தையும், குணத்தையும், நாணயத்தையும் பெற்றிருக்கிறான்...” அவன் தவறு செய்தால் பரிகாரம் கிடையாது. சாபம் உண்டு..... : ''ஜயனே, அடுத்து வருபவள் ''விஜயலக்ஷ்மி அல்லவா?
அகத்தியர்: ''ஆம், ஐயனே! இவள் நம்முடைய இடது தொடையில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக. இடது தொடை எப்பொழுதும் மனைவிக்குதான் சொந்தம். ஆகவே மனைவியை விடுத்து, பிறன்மனை நோக்கினால் நம்மைவிட்டு விஜயலக்ஷ்மி அகன்று விடுகிறாள்.... ''துரியோதனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றதால்தான் அவன் தோல்வியுற்றான்” என்கிறது இருடிகள் பாரதம்.
போகர்: ''ஜயனே, துரியோதனனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றது எதனால்?
அகத்தியர்: ''பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டதில் அனைத்துச் செல்வங்களையும் இழந்து, அதோடு மட்டுமல்லாது திரௌபதியையும் பணயமாக வைத்து இழந்து, சபையில் வாயடைத்து நிற்கிறார்கள்... உடன் திரௌபதியும் நிற்கிறாள்... அப்பொழுது, துரியோதனன் திரௌபதியைப் பார்த்து ‘அமருவாய் என் மடியிலே’,என்று சொல்லித் தன் இடது தொடையைக் கையால் தட்டினான். பிறன் மனைவியைத் தன் மடியில் அமரத் தட்டியதால் விஜயலக்ஷ்மி அவனை விட்டுச் சென்று விட்டாள்... துரியோதனனும் போரில் தோற்றான்.......புரிந்ததா? அடுத்து வருபவள் ‘சந்தானலக்ஷ்மி’ இவள் மனிதனுடைய வலது துடையில் வசிக்கிறாள்
போகர்: ''ஐயனே, சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு எப்போது விலகுகிறாள்?
அகத்தியர்: ''நண்பனே. இங்குதான் திருமண வைபவத்தின்போது கன்னிகாதானம் செய்ய வேண்டிய முறையை பெரியவர்கள் விளக்குகிறார்கள்... கன்னியை அவளது தகப்பன் தானம் செய்து கொடுக்கும்போது அவளைத்தன் வலது துடையில் மட்டுமே அமர்த்திக்கொள்ள வேண்டும்.... இடது துடையிலோ அல்லது இரு துடைகளின் நடுவிலோ மணமகள் அமரக்கூடாது. ஆகவே, கன்னியை முறை மாற்றி தானம் செய்வதால்தான் சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள், புரிந்து கொண்டாயா...?
போகர்: ''புரிந்து கொண்டேன்,சுவாமி, புவிவாழ் மக்களுக்கு இது மிகவும் பயன்படும் அல்லவா?
அகத்தியர்: ''அடுத்து வருபவள் 'தான்யலக்ஷ்மி’. இவள் மனிதனுடைய வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக.
போகர்: ''ஜயனே, தான்யலக்ஷ்மி நம்மை விட்டு, எப்போது அகலுகிறாள்?
அகத்தியர்: ''ஊசிப்போன உணவு, எச்சில் உணவு, கல்லிருக்கும் உணவு இவைகளை ஏழைகளுக்கோ அல்லது கணவன்மார்களுக்கோ பெண்கள் படைத்தால், அவர்களை விட்டுத் தான்யலட்சுமி விலகி விடுகிறாள்... பொதுவாக மற்றவர்கள் வயிற்றில் நாம் அடிக்கும்போது நம்மை விட்டு தான்யலட்சுமி அகன்று விடுகிறாள்.
''ஜயனே, அடுத்து, நம் நெஞ்சுப்பகுதியில் வசிப்பவள் 'தைரியலக்ஷ்மி’ என்று நீ அறிய வேண்டும்... நெஞ்சிலே நஞ்சை வைத்து, பொய்யும், புறமும் பேசித் திரிபவரை விட்டு தைரியலட்சுமி அகன்று விடுகிறாள் பாரேன். ஆகவேதான் பெண்கள் மாங்கல்யம் அணிவதும், அணிந்த மாங்கலயம் நெஞ்சிலே தவழ்வதும் கனவனுடைய 'தைரியத்தை’ வளர்க்கும் என்கிறார்கள் பெரியவர்கள்....புரிந்ததா, போகா?
போகர்: ''புரிந்தது, நாதா!. 'மாங்கல்ய மகிமை’யைப் பற்றித்தான் தாங்கள் விரிவாகக் கூறியுள்ளீர்களே!'' (‘'மாங்கல்ய மகிமை’ என்னும் புத்தகத்தில் காண்க)
அகத்தியர்: “ஆம் ஜயனே, அடுத்து வருபவள் ‘வித்யாலக்ஷ்மி’.... இவள் நம் கழுத்துப்பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக பொதுவாகவே, அனைவரும் கழுத்தில் ருத்திராக்ஷம் அணிந்துதான் தீரவேண்டும். அப்படி அணியவில்லை என்றால் வித்யாலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள்.”
போகர்: ''பெண்களானால் குருவே!
அகத்தியர்: ''பெண்கள் பஞ்ச பூதங்களின் ஆசி பெற்று வந்த தாலிக்கயிற்றை அணிவதே உத்தமம். அடுத்து வருபவளோ, 'சௌபாக்யலக்ஷ்மி’ என்று நீ அறிவாயாக.
போகர்: ''எப்பொழுது குருவே, சௌபாக்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்?”
அகத்தியர்: 'சொல்கிறேன் கேள்....பெண்கள் தங்கள் புருவங்களைச் சிரைக்கக்கூடாது. சிரைத்தால், கணவனுடைய ஆயுள் நிச்சயம் குறையும். அடுத்து, பெண்கள் (sticker) ஒட்டுப்பொட்டு வைக்கக்கூடாது. மேலும், மஞ்சளால் செய்த குங்குமத்தைத்தான் நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும். ஆகவே, மேற்கூறியபடி முகத்தைப் பேணாதவர்களை விட்டு சௌபாக்யலக்ஷ்மி அகன்று விடுகிறாள் என்று உறுதியோடு மக்களுக்கு அறிவிப்பாய் போகா''
போகர்: ''ஐயனே! பெண்கள் புருவத்தைச் சிரைக்கக்கூடாது என்றீர்கள்... ஆண்கள் சிரைத்தால் ...?
அகத்தியர்: ''ஆண்கள் சிரைத்தால்.தந்தைக்கு பிண்டம் போடும் நிலையில் தடங்கல் ஏற்படும். இதனால் சாபம் உண்டு என்று நீ அறிதல் வேண்டும்... இவையெல்லாவற்றிற்கும் காரணம் அறியாமையும், அறிந்த பெரியவர்களை நாடாமையுமே
போகர்: ''ஜயனே. இதைத்தான் 'தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்’ என்றார்களோ பெரியவர்கள்
அகத்தியர்: ''ஆம், ஐயனே! தவறுகளைத் தாராளமாகச் செய்து நம்முள் இருக்கும் லட்சுமிகளை நாமே விரட்டியடித்தபின் நம்மிடம் செல்வங்கள் எப்படிச் சேரும்?

சனி, 15 அக்டோபர், 2016

ஜோதிட ஆலோசனை பெற

ஜோதிட ஆலோசனை  பெற 
ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம் T.V.வெங்கட்ராமஜீ 
எங்களிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள் (பிறந்த தேதி மாதம்  வருடம் , சரியான பிறந்த நேரம், பிறந்த ஊர்) ஆகியவற்றை தெரிவித்து மேலே காணும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் பின் உங்களுக்கான ஆலோசனை நேரம் வழங்கப்படும் அந்த நேரத்தில் எங்களின் செல்பேசிக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.அல்லது வாட்சப் மூலமும் ஜோதிட பலன்கள் தெரிந்து கொள்ளலாம் தமிழ்நாடு மற்றும் பிற நகரங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்தவர்களும்  தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை, தொழில் ", திருமண பொருத்தம், காதல் திருமண பொருத்தம் ஆகிய மற்றும் அணைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஜோதிட ரீதியாக தீர்வுகள்  பலன்கள் அறியலாம் ( தமிழ்மொழி மூலம் )  ஜோதிட பலன்கள் அறியலாம்)
வெளிநாட்டில் உள்ளவர்கள் ஜோதிட பலன்களை அறிய உங்களது பிறப்பு விவரங்களை தெரிவித்து உங்களின் கேள்விகளை  பதிவு செய்து  sssjn2412@gmail.com இந்த மின்னஞ்சல் (E-Mail ID) க்கு அனுப்பலாம் மற்றும் வாட்சப் மூலமும்   அனுப்பலாம்   உங்களுக்குகான எனது ஜோதிட பலன்களை Audio (ஒலி) வடிவில் அனுப்பி வைக்கபடும்.
You Want More Details Please Contact – 93805313398124812470 (Contact IST Time 10 AM to 6 PM)
WhatsApp Number -  8124812470
You Want More Details Send E-Mail - sssjn2412@gmail.com

ஜாதகத்தில் நவகிரகங்களின் ராஜியம் எப்படி

ம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.

சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: ஞாயிறு
கிங் மேக்கர் சூரியன் :
அவர் யோகக்காரர். பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும் சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. இந்த கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள் என்ன, அவரவர் ஜாதகப்படி தரும் பலன்கள் என்ன, ஒவ்வொரு கிரகத்துக்கும் என்ன கிழமை, தேதிகள், எண், நிறம் ஏற்றது என்பதை இனி பார்க்கலாம்.
சூரியன்
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீட

தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.

ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது. 
பிறந்த லக்னமும் சூரியனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி & மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி & பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி & அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி & தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி & நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் & சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம். 
வழிபாடு, பரிகாரம்
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும். 

**********************************************************************************
மன நிம்மதி தரும் சந்திரன் :
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர். ‘சர்வம் சந்திர கலாபிதம்’ என்று சந்திரனை ஜோதிட நூல்களில் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி ‘நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?’ என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்ம ராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும். சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7&ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பவுர்ணமி. 
சந்திரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: திங்கள்
தேதிகள்: 2, 11, 20, 29
நட்சத்திரம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
ராசி: ரிஷபத்தில் உச்சம், கடகத்தில் ஆட்சி.
நிறம்: பால் வெண்மை
ரத்தினம்: முத்து
தானியம்: நெல்
ஆடை: தூய வெள்ளி

அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும்.

சந்திரன் மாதுர்காரகன். அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறியமுடியும். சந்திரன் மனோகாரகனும்கூட. அதாவது மனதை ஆள்பவன். அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத் திறன், கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே. சந்திரன் ஆதிக்கம் உள்ளவர்கள் கதை, கவிதை, இசை, டான்ஸ், அனிமேஷன், கிராபிக்ஸ், வெளிநாட்டு வியாபாரம், தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கடல் சார்ந்த தொழில், கப்பல் துறைகள், கடற்படை, மனோதத்துவம், மனநலம், மனவசியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சந்திரனுக்கு உண்டான தேதிகள், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இத்துறைகளில் ஜொலிப்பார்கள். சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியிலும் ஆட்சிபெறும் கடக ராசியிலும் பிறப்பது மிகவும் சிறப்பு. லக்னத்தில் சந்திரன் இருப்பதும் லக்னத்தை சந்திரன் பார்ப்பதும் நல்ல யோகம்.
பிறந்த லக்னமும் சந்திரனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & நிலபுலன், கல்விச் செல்வம், வெளிநாடு செல்லும் யோகம்
ரிஷப லக்னம்/ராசி & எதிலும் முதன்மை ஸ்தானம்
மிதுன லக்னம்/ராசி & சொல்லாற்றல், கதை, கவிதை, இசை துறைகளில் ஏற்றம்
கடக லக்னம்/ராசி & கற்பனை சக்தி, புகழ், கீர்த்தி, பேச்சாற்றல்
துலா லக்னம்/ராசி & தொழில், வியாபாரத்தில் பெரிய யோகங்கள்
விருச்சிக லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் பெறும் யோகம்
மகர லக்னம்/ராசி & வெளிநாடு வாசம், தண்ணீர் தொடர்பான துறைகளில் ஏற்றம்
மீன லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய அமைப்புகளின்படி யோகம். குழந்தைகளால் செல்வாக்கு.

மற்ற லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சந்திரன் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
பவுர்ணமி விரதம் சிறப்பான பலன் தரும். சத்யநாராயண பூஜை செய்வது நன்மை பயக்கும். அம்மன் கோயில்களில் மாலை நேர வழிபாடு உத்தமம். பக்தர்களுக்கு, ஏழைகளுக்கு நெய்சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம், பழங்கள் கலந்த சாதம் ஆகியவை வழங்கலாம்.

‘ஓம் ஷிர்புத்ராய வித்மஹே
அம்ரித் தத்வாய தீமஹி
தந்நோ சந்த்ர பிரசோதயாத்’
என்ற சந்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் உம் சிவய நம சந்திர தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.

திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் கோயிலில் தாயாருக்கும், பெருமாளுக்கும் மஞ்சள், குங்குமம் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வழங்கலாம். பவுர்ணமி அன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வழிபாடுகள் செய்து சந்திர தரிசனம் செய்யலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகில் உள்ள வரகுணமங்கை, கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் ஆகியவை சந்திர பரிகார ஸ்தலங்கள். சந்திரனுக்கு உண்டான முக்கிய திருத்தலம் திருப்பதி. இங்கு சந்திரனாகவே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார்.
 

***********************************************************************************
பராக்கிரமம் அருளும் செவ்வாய் :
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம். வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங்கள் உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை. 
செவ்வாயின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: செவ்வாய்
தேதிகள்: 9, 18, 27.
நட்சத்திரம்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
ராசி: மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி, மகரத்தில் உச்சம்
நிறம்: சிவப்பு
ரத்தினம்: பவளம்
தானியம்: துவரை
ஆடை: சிவப்பு 

செவ்வாய்க்கு உண்டான எண்கள், கிழமை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவரது ஆதிக்கம் பெற்று விளங்குவார்கள். லக்னம் அல்லது ராசியில் செவ்வாய் இருப்பது யோகம் தரும். பிறந்த லக்னமும் செவ்வாய் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & தலைமை பதவி, அதிகாரம், ஆட்சிபீடம்
ரிஷப லக்னம்/ராசி & மனைவி வழியில், கூட்டுத் தொழில் மூலம் யோகம்
கடக லக்னம்/ராசி & தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு
சிம்ம லக்னம்/ராசி & நிலபுலன்கள், தந்தை வழியில், பூர்வீக சொத்து மூலம், கல்வி செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம்
துலா லக்னம்/ராசி & சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம்
விருச்சிக லக்னம்/ராசி & உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம்
தனுசு லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம். திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம்
மகர லக்னம்/ராசி & தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நிலபுலன்கள், கல்வி செல்வத்தால் யோகம்
மீன லக்னம்/ராசி & பூர்வீக சொத்துகள், தந்தை வழியில், சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம் 

மற்ற லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும். வழிபாடு, பரிகாரம்
எல்லா முருகன் கோயில்களும் செவ்வாய்க்கு உரிய தலங்கள்தான். பழநியில் செவ்வாயாகவே தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் முக்கிய பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளுள் திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலம். சென்னை அடுத்த பூந்தமல்லியில் வைத்தீஸ்வரன் சமேத தையல்நாயகி கோயில் உள்ளது. இது செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். 

‘ஓம் அங்காரகாய வித்மஹே
பூமிபாலாய தீமஹி
தந்நோ குஜப் பிரசோதயாத்’ 
என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் சம் சிவய அங்காரக தேவாய நம’ என 108 முறை சொல்லலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மற்றும் முருகன் துதிப்பாடல்கள் படிக்கலாம். அங்காரகன் எனப்படும் செவ்வாயை வணங்கி வழிபட்டால் கடன் தொல்லை, வறுமை, தோல் சம்பந்தமான நோய்கள் போன்றவை நீங்கி சகல யோகங்களும் வளங்களும் பெருகும். 

**********************************************************************************
அதிக மார்க் எடுக்க அருளும் புதன்! :
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் ‘பொன்’ என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர். கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, ஆடிட்டிங், பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள் இருந்தால் இத்துறைகளில் சிறந்து விளங்கலாம். 
புதனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: புதன்
தேதிகள்: 5, 14, 23.
நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
ராசி: மிதுனத்தில் ஆட்சி & கன்னியில் உச்சம்
நிறம்: பச்சை
ரத்தினம்: பச்சை மரகதம்
தானியம்: பச்சைப்பயறு
ஆடை: பச்சை

புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.
பிறந்த லக்னமும் புதன் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & புதன் முழு பலத்துடன் இருந்தால்தான் நல்ல யோகங்கள் கிடைக்கும். சகோதரர்களால் சாதகங்கள் உண்டு.
ரிஷப லக்னம்/ராசி & சொல்லாற்றல், எழுத்துத்துறை, கலை, இலக்கிய துறைகளில் வெற்றி, குழந்தைகளால் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & கல்வியில் உயர்வு. எல்லா கலைகளிலும் தேர்ச்சி அடையும் யோகம். நிலபுலன்கள், பூர்வீக சொத்துகளால் யோகம். கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைக்கும் வாய்ப்பு.
சிம்ம லக்னம்/ராசி & கலை, இலக்கியம், சொல்லாற்றல் போன்றவற்றில் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை, வித்தைகள், கம்ப்யூட்டர், கணக்கு, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூலமாக அதிர்ஷ்டம்.
துலா லக்னம்/ராசி & கல்வி, ஆராய்ச்சி, பெரிய நிறுவனங்களை நிர்வகித்தல், பெரிய பதவிகள்.
தனுசு லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் யோகம். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முதன்மை பெறும் வாய்ப்பு.
மகர லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் உண்டாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதனை படைப்பீர்கள்.
கும்ப லக்னம்/ராசி & எல்லா துறைகளிலும் ஏற்றம்.
மீன லக்னம்/ராசி & கல்வி, கேள்வி ஞானம் உள்பட சகல விஷயங்களிலும் சிறந்து விளங்குவீர்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் புதன் நீச்சம் பெறாமலும், 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12&ம் அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும். 
வழிபாடு, பரிகாரம்
மதுரையில் மீனாட்சி அம்மன் புதனாகவே அருள்பாலிக்கிறார்.
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கும் திருவெண்காடு புதன் தலமாகும். பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் புத பகவான் காட்சி தருகிறார்.
நவதிருப்பதிகளுள் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.
‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்தோ புத பிரசோதயாத்’

என்ற புத காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் மம் ஹ்ரி உம் சிவ புத தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். பச்சைப் பயறு வேகவைத்து பசுமாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள் கிடைத்தால் கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.  

**********************************************************************************
குழந்தை பாக்யம் தரும் குரு பகவான் :
குழந்தைச் செல்வம், காசு பணம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திரம் இந்த இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். கிரகங்களிலேயே சுப கிரகம் குரு. இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான். சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். 
குருவின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி: தனுசு, மீனம். கடகத்தில் உச்சம்
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: புஷ்பராகம்
தானியம்: கொண்டைக்கடலை
ஆடை: தூய மஞ்சள்

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். 
பிறந்த லக்னமும் குரு தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & பாக்ய ஸ்தான பலன்கள், கல்வியில் உயர் நிலை, நிதி, நீதித்துறையில் பணிபுரியும் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மனைவி வகையில் யோகம், தொழில் மூலம் உயர்வு.
கடக லக்னம்/ராசி & வெளிநாட்டு தொழில் யோகம். பள்ளி, கல்லூரிகள் அமைக்கும் யோகம்.
சிம்ம லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை ஆகியவற்றில் யோகம். வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும்.
விருச்சிக லக்னம்/ராசி & வங்கி, நீதித்துறையில் உயர் பதவிகள். சொந்த நிறுவனம், பைனான்ஸ் கம்பெனி தொடங்கும் யோகம்.
தனுசு லக்னம்/ராசி & கல்வியில் மேன்மை, நிலபுலன்களால் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & சொல்லாற்றல், நிதி, நீதி போன்ற துறைகளில் யோகம்.
மீன லக்னம்/ராசி & கவுரவ பதவிகள். தொழில், வியாபாரத்தால் செல்வச் செழிப்பு, அந்தஸ்து, புகழ் உண்டாகும் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும். வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.

‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ரூணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்’
அல்லது ‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’

என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம். 

**********************************************************************************
செல்வாக்கு தரும் சுக்கிரன் :
எந்த கிரகம் கொடுத்தாலும் சுக்கிரன்தான் கொடுக்கிறார் என்று வழக்கு மொழி உண்டு. ‘அவனுக்கென்னப்பா.. சுக்கிரதிசை’ என்பார்கள். அந்த அளவுக்கு சுக, போகங்களை வாரி வழங்கக்கூடிய கிரகம் சுக்கிரன். பணம், புகழ், ஆள் பலம், சுகபோகங்கள், கலை, ஆடல், பாடல், சங்கீதம், சின்னத்திரை, பெரியதிரை என மேடையேறும் வாய்ப்பு, செல்வாக்கு, ஆடம்பர பங்களா, சொகுசு கார் என்று எண்ணிலடங்கா ஏற்றங்களை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிரனை காதல் கிரகம் என்றழைப்பார்கள். திருமண பந்தத்தில் சுக்கிரனின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக இருந்தவர்கள்கூட திருமணத்துக்கு பிறகு சுக்கிரனின் அமைப்பால் மிகப் பெரிய செல்வச் சீமான்களாக மாறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு யோகத்தை தரக்கூடிய கிரகம். கிரகங்களிலேயே அதிகபட்சமாக 20 ஆண்டுகளை தன் ஆளும் திசையாக பெற்றிருக்கும் கிரகமும் சுக்கிரனே.
சுக்கிரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வெள்ளி
தேதிகள்: 6, 15, 24
நட்சத்திரம்: பரணி, பூரம், பூராடம்
ராசி: ரிஷபம், துலாம்
நிறம்: தூய வெண்மை
ரத்தினம்: வைரம்
தானியம்: மொச்சை
ஆடை: பளபளக்கும் வெண்மை
சுக்கிரனுக்கு உண்டான கிழமை, தேதிகள், நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பல யோகங்களை தரும். ஜாதக கட்டத்தில் யோகமான இடத்தில் அவர் இருப்பதும் சிறப்பாகும். பிறந்த லக்னமும் சுக்கிரன் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சுக்கிரன் தருவார்?
மேஷ லக்னம்/ராசி & சொல்லாற்றல், கதை, கவிதை எழுத்துத்துறைகளால் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி & ஆடல், பாடல், சங்கீதம் போன்றவற்றால் புகழ்.
மிதுன லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம், அரசியல், அதிகார பதவி யோகம்.
கடக லக்னம்/ராசி & வீடு, நிலபுலன்கள், வண்டி, வாகனம், கல்விச் செல்வத்தால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & எல்லா வகையான செல்வங்களாலும் யோகம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம்.
துலா லக்னம்/ராசி & இசை, பேச்சு, சின்னத்திரை, பெரிய திரை போன்றவை மூலம் ராஜயோக பலன்கள்.
மகர லக்னம்/ராசி & பிள்ளைகளால் யோகம், தொழில் தொடங்கும் யோகம், பட்டம், பதவிகள் என சுகபோக வாழ்க்கை.
கும்ப லக்னம்/ராசி & கல்விச் செல்வத்தால், வண்டி நிலபுலன்களால் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும், சுக்கிரன் நீச்சம் பெறாமலும் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருப்பது அவசியம். 
வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் பரிகார ஸ்தலமாகும். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் சுக்கிரனாகவே அருள்புரிகிறார். நவ திருப்பதிகளில் தென் திருப்பேரை சுக்கிர ஸ்தலாகும்.
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்’
அல்லது ‘ஓம் ராஜாதபாய வித்மஹே
ப்ருகு சுதாய தீமஹி

தந்நோ சுக்ர பிரசோதயாத்’ என்ற சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம். ‘ஓம் சும் ரீஉம் சுக்ர தேவாய நம’ என்று 108 முறை சொல்லலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம். அம்பாள், ஆண்டாள் ஸ்தலங்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம்.  

***********************************************************************************
கோடீஸ்வர யோகம் தரும் சனீஸ்வர பகவான் :
“உங்களுக்கு நூறு ஆயுசு” & ஒருவரை பற்றி பேசும்போதோ, நினைக்கும்போதோ அவரே வந்துவிட்டால் இப்படி சொல்வோம். நல்ல ஆரோக்கியத்துடன் செல்வச் செழிப்புடன் நீண்ட நாள் வாழவேண்டும் என்பது எல்லாருக்கும் ஆசை. இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். சிவபெருமானைத் தவிர இரண்டு பேருக்குத்தான் ‘ஈஸ்வர’ பட்டம் உண்டு. ஒருவர் விக்னேஸ்வரர். இன்னொருவர் சனீஸ்வரர். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி மட்டுமே. விக்னேஸ்வரர் என்ற விநாயகர் போலவே சனீஸ்வரரும் தடை, தடங்கல்களை அகற்றி வளமான வாழ்வும் நீண்ட ஆயுளும் வழங்குபவர். மனிதனின் ஆயுள் ஸ்தானத்தை தீர்மானிப்பவராக சனி பகவான் திகழ்கிறார்.

உழைப்புக்கு ஆதாரமாக உள்ள கிரகம் சனி. கடும் உழைப்பாளிகளுக்கு சனி பகவானின் அருள்கடாட்சம் என்றும் உண்டு. சாதாரண தொழிலாளியாக இருப்பவர்களுக்கு மேலும் உழைக்கும் ஆற்றலையும் சக்தியையும் கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்களாக்கும் வல்லமை சனி பகவானுக்கு உண்டு. நம் ஜாதகத்தில் சனி பகவான் நன்கு பலமாக இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அதிகாரம், பட்டம், பதவி எல்லாம் தானாக தேடிவரும். ஜாதக அமைப்பை தவிர அவரவர் ராசிக்கு கோசார பலன்களை தருவதிலும் சனீஸ்வரன் வலிமை மிக்கவர். ஏழரை சனி, 4&ல் சனி, 8&ல் சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 வருடங்களுக்குள் இந்த 3 விதமான கோசார பலன்களை தருகிறார். ஜாதகத்தில் சனி பகவான் பலமாக, யோகமாக இருந்தால் எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
சனியின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: சனி
தேதிகள்: 8, 17, 26
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ராசி: மகரம், கும்பம்
நிறம்: கருப்பு
ரத்தினம்: நீலம்
தானியம்: எள்
ஆடை: கருப்பு
சனிக்கு உரிய தேதிகள், கிழமை, நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகம், பட்டம், பதவி, தொழிலதிபர் போன்ற அம்சங்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருப்பதும் அவசியம்.
பிறந்த லக்னமும் சனி தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சனி பகவான் தருவார்?
மேஷ லக்னம்/ராசி & தொழில் துறையால் யோகம். பெரிய பதவியில் அமரும் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி & தர்ம கர்மாதிபதியாக சனி வருவதால் ராஜாங்க யோகம் கிடைக்கும். உயர்பதவி, பட்டம், தொழில், சொத்து, சுகம் என்று சகல பாக்யங்களும் கிடைக்கும்.
மிதுன லக்னம்/ராசி & பூர்வீக சொத்து, கவுரவ பதவிகள், அரசியல் பிரவேசம் என சகல பாக்யங்கள், சகல யோகங்கள்.
கன்னி லக்னம்/ராசி & அஷ்டலட்சுமி யோகம், கோடீஸ்வர யோகம். பிள்ளைகள், மாமன் வகை உறவுகளால் செல்வம், செல்வாக்கு மற்றும் யோகங்கள்.
துலா லக்னம்/ராசி & நிலபுலன்கள், சொத்து சேர்க்கை, தாய் மூலம் யோகம், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், உயர்பதவி.
விருச்சிக லக்னம்/ராசி & கல்வி மேன்மை, அதிகாரங்கள் நிறைந்த பதவி, உயர்பதவிகள், நில புலன் சேர்க்கை, பூர்வீக சொத்துக்கள்.
தனுசு லக்னம்/ராசி & சொல்லாற்றல், குடும்ப பூர்வீக சொத்துக்களால் அதிர்ஷ்டம்.
மகர லக்னம்/ராசி & கவுரவ பதவிகள் தேடிவரும். தொழில் அதிபராகும் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & பல வகையிலும் சம்பத்துக்கள், சொத்துக்கள், செல்வம் வந்து சேரும். பட்டம், பதவி, செல்வாக்கு.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சனி நீச்சம் பெறாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும், 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமலும் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
சனிக்கிழமை விரதம் இருந்து எள் விளக்கேற்றி சனீஸ்வரரை வழிபடலாம். தினமும் காலையில் சாப்பிடும் முன்பு காகத்துக்கு உணவிடலாம்.
‘ஓம் சனைஸ்சராய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்தப் பிரசோதயாத்’
என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் சம்சம் ரீஉம் சனைச்வர தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.

திருநள்ளாறு சனீஸ்வர ஸ்தலத்தில் அன்னதானம் செய்யலாம். நவதிருப்பதிகளுள் பெருங்குளம் சனீஸ்வர ஸ்தலமாகும். கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம். 

***********************************************************************************
ராஜயோகம் தரும் ராகு, கேது :
ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள். ராகு, கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் இருக்கின்றன. அவர்கள் செய்த தவ வேள்விகளுக்கு மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும் நவக்கிரக பரிபாலனத்தில் இடம்பெறும் பாக்யத்தை அவர்களுக்கு தந்தனர்.

ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது இடம்பெறும். இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள். மற்ற 7 கிரகங்கள் போல ராகு, கேதுக்கு சொந்த வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவை கிடையாது. ஆனாலும், இவர்களுக்கு உச்ச வீடு இருப்பதாக சில ஜோதிட நூல்களில் ஊர்ஜிதமாகாத தகவல்கள் உள்ளன. ராகு, கேதுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள். மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும் உண்டு. பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு, கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.

கல்வி, அறிவு தருவதில் ராகு கேது மிக முக்கியமானவர்கள். லக்னத்துக்கு 9&ம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகு அல்லது கேது இருந்தால் ஏட்டுக் கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும் புத்தி சாதுர்யமும் வெளிப்படும். மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள் அவசியம். மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகளில் இடம் கிடைக்க, டாக்டர் துறையில் புகழ் பெற, சிறப்பாக சிகிச்சைகள் மேற்கொள்ள, ஸ்கேன் சென்டர், மெடிக்கல்ஸ் வைக்க, இத்தொழில்கள் சிறப்பாக நடக்க மருத்துவ கிரகமான கேதுவின் அருள் வேண்டும். அவரது அருள்கடாட்சம் இல்லாமல் இந்த துறையில் முன்னேற முடியாது. திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது மிக அவசியம்.

10&ம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற முடியும். கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறைகளில் முன்னேறலாம். செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருந்தால் பல கலைகளில் வித்தகராகலாம். சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற துறைகள் அமையும். இசை துறையில் ஆழ்ந்த அறிவும் பெயரும் புகழும் கிடைக்க இசைஞானி என்று சொல்லக்கூடிய கேதுவின் அருள் வேண்டும். லக்னத்துக்கு 12&ல் கேது இருந்தால் மோட்ச அம்சம் என்பார்கள். அப்படிப்பட்ட ஜாதகருக்கு மறுபிறவி கிடையாது என்று கூறப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது சேர்க்கை மிக முக்கிய அம்சம். இவர்களுக்கு மற்ற கிரக அம்சங்களும் சாதகமாக இருந்தால் பெயர், புகழ், அதிகாரம் அந்தஸ்து என எல்லா நலன்களும் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் எல்லா பக்கம் இருந்தும் குவியும்.
வழிபாடு, பரிகாரம்
ராகு ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (வடக்கு கோவில்) பரிகார ஸ்தலமாகும். சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும். சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது நல்லது. புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோயில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.
‘ஓம் ஸூக்தந்தாய வித்மஹே
உக்ர ரூபாய தீமஹி
தந்நோ ராகு பிரசோதயாத்’
என்ற ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

‘ஓம் காத்யானாய வித்மஹே
கன்யாகுமாரீச திமஹி
தந்நோ துர்க்கே பிரசோதயாத்’
என்ற துர்க்கை காயத்ரி மந்திரத்தை ராகு திசை நடப்பவர்கள் சொல்வது சிறப்பு. கேது கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (தெற்கு கோவில்) பரிகார ஸ்தலமாகும். சிவஸ்தலம் காளஹஸ்தியில் கேதுவுக்கு ஹோம பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.

‘ஓம் சித்ரவர்ணாய வித்மஹே
சர்ப்ப ரூபாய தீமஹி
தந்நோ கேது பிரசோதயாத்’
என்ற கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி பிரசோதயாத்’
என்ற விநாயகர் காயத்ரி மந்திரத்தை கேது திசை நடப்பவர்கள் சொல்வது சிறப்பு. நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்பவர்களுக்கும் தான் மட்டுமல்லாமல் இந்த உலகமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உள்ளம் கொண்டவர்களுக்கும் நற்பயன்கள், பல்வேறு யோகங்கள், அதிர்ஷ்டங்களை வாரிவழங்க நவக்கிரகங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நற்காரியங்களை செய்து அவர்களது அனுக்ரகம் பெறுவோமாக.  

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...