சனி, 11 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டு பலன்கள்

அனைத்து ராசிகாரருக்கும் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு,
தீமை அதிகம் இருக்கும் ராசிகள் கவலைபடவேண்டாம், இது ராசி பலன் தான் இதன் பின் நட்சத்திரம்,இலக்கணம் , அவர் அவர் பிறந்த ஜாதக 
பலன்  இருக்கிறது மற்றும் தசா புத்தி பலன்கள் இருக்கிறது , ஆதலால்  எதற்கும் கவலை படாமல் கடவுள்  நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.  எல்லாம் வெற்றிதான்.                                                                                                                                    மேஷம் ராசி அன்பர்களே!
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய)
 மேஷ ராசிக்காரர்களே!
   கம்பீரமான தோற்றமும்  நடுத்தர உயரமும் கொண்டவர்களாக இருப்பீர்கள்.  மனோதைரியமும், அஞ்சாநெஞ்சமும் கொண்டவர்கள். நீரையும், பாலையும் தனியாகப் பிரிக்கும் அன்னப் பறவையைப்போல் நட்பு கண்டு பழகுபவர்கள் நீங்கள்.
    உங்களது தலை அல்லது முகத்தில் மச்சம், தழும்பு அல்லது வெட்டுக்காயம் போன்ற வடு அல்லது இயற்கைக் குறியீடுகள்  இயற்கையிலே அமைந்திருக்கும். உலக விஷயம் எதுவானலும் சரி; வீட்டு  விஷயம் எதுவானலும் சரி எல்லா விஷயத்திலும் பொது அறிவு உங்களுக்கு நிரம்பவே இருக்கும். எந்த விஷயத்தைப் பற்றி யார் கேள்வி கேட்டாலும் உடனேயே பதில் சொல்லும் முன்யோசனை உடையவர்கள்.
  நீங்கள் எந்த  ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் பலரிடமும் ஆலோசனை கேட்பீர்கள். நூறு பேரிடம் யோசனை கேட்டாலும் உங்கள் முடிவே உன்னதமானது. மாறாக  முகத்தில் அறைந்தாற்போல நேருக்கு நேர் கூறும் சுபாவமுடையவர்கள். இதனால் பல பேருடைய வெறுப்புகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாவீர்கள். மற்றவர்களின் வெறுப்புகளைப் பற்றி ஒரு பொழுதும் நீங்கள் கவலைப்படமாட்டீர்கள்.  உங்களிடம் யார்  அன்பு காட்டுகிறார்களோ அவர்களுக்காக, எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டு வாதாடி, போராடி சாதனை படைக்கத் தயங்கமாட்டீர்கள். எந்த ஒரு காரியத்தையும் உங்களைநம்பி ஒப்படைக்கலாம். எவ்வளவு பெரிய வேலைகளையும்  எளிமையாகச்  செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள்! தேவைப்பட்டால் தெய்வத்தைத் தேடித்தேடி வணங்குவீர்கள். மற்ற சமயங்களில் சாமி  கும்பிட்டால் காரியமாகாது என்று வீராப்பு பேசுவீர்கள். உங்களுக்கு பூர்வ புண்ணிய பூமி, சொத்துக்களை அனுபவிக்கும் யோகம் நிறைய உண்டு. எப்போதும்  ஏதாவது சிந்தனைகளிலே மூழ்கியிருப்பீர்கள் சிலசமயம் அதிக டென்ஷனுக்கு ஆளாவீர்கள்.
     உங்கள் வார்த்தை மிகவும் இனிமையாக இருக்கும். பண விஷயங்களில்  ரொம்பவும் கறார் பேர்வழிகளாக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறவினர்களைவிட வெளிவட்டாரத்தில் செல்வாக்கு பழக்க வழக்கம் அதிகமாக இருக்கும்.  உங்கள் குடும்ப  சொந்தபந்தங்கள் பெயரளவுக்குதான் உதவி செய்வார்கள்.  தாய் - தகப்பனார் சகோதர வகைகளுக்கு நீங்கள் அதிகமாக  உதவிகளும் உபகாரங்களும் உபசரிப்பும் செய்வீர்கள். ஆனால் பிரதிபலனை எதிர்பார்க்கவோ விரும்பவோ மாட்டீர்கள்.
 கல்வித் துறையிலும் விளையாட்டுத்துறையிலும் முதலிடம் பிடிக்க அரும்பாடுபடுவீர்கள்.  அடிமைத் தொழில் செய்தாலும்கூட சொந்தத் தொழிலாகவே எண்ணி மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஜலத்தைக் கண்டால் உங்களுக்கு பய உணர்வு வரும்.
  5-7-2015  வரையிலும்  மேஷ ராசி அன்பர்கள் பெரும்பாலானோர் சிரமத்தை அடைய நேரிடும். தீய வாழ்க்கை வாழ்பவர்கள் ஏதாவது ஒரு  பிரச்சினைக்காக சொந்த இருப்பிடத்தை விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். சிலருக்கு பழைய  பிரச்சனைகள் தலை தூக்கும்.
   மேஷ ராசி அன்பர்கள் குரு 4ல் உள்ள இந்த காலகட்டத்தில் வேறு நகரம் செல்வார்கள். ஒரு   சிலர் நூதன தொழில் துவங்குவார்கள். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள்.  குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களில் வேகமாக செல்லக்கூடாது.  சிறு விபத்தி சந்திப்பீர்கள். பொதுவாக  மேஸ்த ராசி அனப்ர்கள் காரியங்களில் சற்று யோசித்துச் செயல்படவேண்டும். தேவையற்றவர்களின் நட்பை சற்று நீங்கள் உதறிட வேண்டும். தட்சிணாமூர்த்தியை தினசரி வணங்கிவர நன்மையுண்டு.
    குரு பகவான் 5-07-2015 முதல் கடக் ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான சிம்ம ராசிக்குச் செல்வார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வருகிறார். பூற்வீக சொத்தில் புதிய வீடு கட்டுவார்கள். ஒரு சிலர் பூர்வீக வீட்டை மராமட்து செய்வார்கள்.   குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.  குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள்.   ஒருசிலர்  அரசு மானியத்துடன் வநிக் கடன்  பெறுவார்கள்.
 சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை  வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும்.  இளைய சகோதர சகோதரிகள்  நல்ல லாபத்தை அடைவீர்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.  உயர்பதவிக்கான தேர்வு எழுதியவர்கள் வெற்றிபெறுவார்கள். சிம்மத்தில் குரு பகவான் வரும் காலம் நன்மை கிடைக்கும். 5ஆம் இடத்துப் பார்வையும் 7ஆம் இடத்துப்  பார்வையும் சாதகமாக அமையும். 5ஆம் இடத்துப் பார்வை உங்கள்  ராசிக்கு 9ஆம் வீடான தனுசுகளில் விழும். அதன்மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
   சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ல் உள்ளார். அஷ்டமத்துச் சனியால் நன்மைகள் செய்ய முடியாது. அவர் உங்கள்   முயற்சியில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும்.  எடுத்தேன் கவித்தேன் என்றில்லாமல் மிகவும்  நிதானமாகச் செயல்பட வேண்டும்.
   சனி பகவான் 8ல் உள்ள இந்த காலகட்டத்தில் சிலருக்கு உடல்  ஆரோக்கியம் பாதித்து பிறகு மருத்துவ உதவியால் நலம்பெறுவார். எந்த ஒரு வருவாயும் இல்லாமல் தவிக்க நேரும். இரவு நேரத்தில் தூக்கம் வராது. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். அதேபோல பதவி உஅய்ர்வும் வந்துசேரும். இப்போது நீங்கள் முக்கியமான கடன்களை அடைப்பீர்கள்.
   8-01-2016 முதல் ராகு பகவான் கன்னி ராசியிலிருந்து இடம் பெஉஅர்ந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். அலைச்சல் அதிகரிக்கும் ராகு ஒரு சிலருக்கு குடியிருக்கும் ஊரையோ, வீட்டையோ மாற்றுவார். 8-1-2016  முதல் புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்  வெளிநாட்டில் வேலை செய்கிறவர்கள் நல்ல சம்பளத்தையும் லாபத்தையும் பெறுவார்கள். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலைமாறும்.  எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களாலும் நன்மையுண்டு. உங்களை ஏமாற்றியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.
   கேது பகவான் உங்கள் ராசிக்கு 12ல் இருப்பார். பொதுவாக 12ல் உள்ள கேது தேசாந்திரியாக்குவார் ஒருபொழுதும் விடியாத பிரச்சினைகளோடு வாழ வைப்பார். பொருள் விரயத்தையும் பகைவர்கள் தொல்லையையும் தருவார். 8-1-206ல் அவர் இடம்பெயர்ந்து உங்கள் ராசிக்கு 11ல் வருகிறார். இப்போது நீங்கள் நிதானமாகச் செயல்பட வேண்டும். முயற்சிகளில் தடைவரலாம்.  இதற்கெல்லாம் காரணம் உங்களிடம் உள்ள தீய பழக்களே என்பதை நீங்கள் உணர்வீர்கள். தவறை திருத்திக் கொண்டவர்கள் கெடுபலங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவர் நீண்ட ஆயுளைப் பெறுவர்.
 கேது பகவான் உங்கள் ராசிக்கு 11ல் இருக்கும்போது உங்கள் செயல்களில் திட்டமிடுதல் இருக்க வேண்டும். ஜாமீன் கெயேழுத்து  போடக்கூடாது. விலையுயர்ந்த பொருட்களை  மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். *சகோதர சகோதரிகளிடையே பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மேஷ ராசி அன்பர்கள் கேது பகவான் தங்கள் ராசிக்கு 11ல் இருக்கும் வரை அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மன்மத வருடம் உங்களுக்கு நல்ல  திருப்பத்தை உண்டாக்கும்.
பெண்கள்
   குரு பகவானின் 7ஆம்  பார்வை  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகத்தைக் கொடுக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நகை, பணம் சேரும்.  வேலை செய்யும் பெண்கள் 5-7-2015-க்கு பிறகு அரசு சலுகைகளை எதிர்பார்க்கலாம். உடன் பிறந்த்தோரிடையே இருந்து வந்த பிணக்குகள் கிட்டும். நீங்கள் ஆசைப்பட்ட பொன்,பொருட்களை வாங்கிச்  சேர்ப்பீர்கள்.
தொழிலதிபர்கள்,  வியாபாரிகள்
   தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்துக்கு குறைவராது.  சிலர் வியாபார வ்ஷயமாக வெளிநாட்டுக்குச் ஹ்கெல்லும் வாய்ப்பு கிட்டும்.  அரசு வகையில் இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். அனுகூலமான போக்கு காணப்படும். மற்ற வியாபாரம் செய்கிறவர்கள் சராசரியான வருமானத்தைப் பெறுவார்கள் போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.
மாணவர்கள்
    5-7-2015  முதல் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார். எனவே நீங்கள் கல்வியில் உயர்வீர்கள். நீங்கள் விரும்பிய மேற்படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைக்கும்.
 அஸ்வினி  நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி மாதம் வரை 4 பங்கு லாபம் வருகின்றது. கூடுதல்  வருவாய் உள்ள நேரம்,  அனைத்து நிலைகளிலும் நீங்கள் உயர்வீர்கள்.
  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 2 பங்கு லாபம் வருகின்றது. கடன்பட மாட்டீர்கள்.  நிதானமாகச் செய்ய வேண்டும்.
  மார்கழி முதல் பங்குனி வரை 2 பங்கு லாபமுண்டு. நிதானித்துச் செயல்பட வேண்டும்.
பரணி நட்சத்திரகாரர்களுக்கு
     சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை 7 பங்கு லாபம் வருகிறது. நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றியுண்டு.
     ஆவணி மாதம் முதல் கார்த்திகை வரை வருமானம் குறைவாக உள்ளது. மார்கழி மாதம் முதல் பங்குனி வரை 2 பங்கு லாபம் வருகிறது.
கார்த்திகை (1ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
      சித்திரை முதல் ஆடி வரை 2 பங்கு வரை லாபம் உண்டு. கஷ்ட ஜீவனம் வராது.
       மார்கழி மாதம் முதல் பங்குனி வரை வருமானக் குறைவு உள்ளது. சேமிப்பே உங்களுக்குக் கைகொடுக்கும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
    மாதம்தோறும் மூல நட்சத்தில் ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை போட்டுவர நன்மையுண்டு . முடியாதவர்கள் அன்றைய தினம் குரங்குகளுக்கு தயிர்சாதம் கொடுக்கலாம்.  சனிக்கிழமைகளில் காக்கையை அழைக்காமல் வடகிழக்கு திசையில் சாதம் வைத்துவர அன்றுமுழுவதும் நல்ல பலன் கிடைக்கும். மன்மத வருஷத்தில் வளம் பெருகும்.
வாழ்க வளமுடன்                                                                                ரிஷபம்ராசி அன்பர்களே!
   (கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2 ஆம் பாதம்  முடிய)
ரிஷபராசி நேயர்களே!
        வட்ட முகமும் வசீகரத் தோற்றமும் வார்த்தை ஜாலமும் அழகான நடையும், பருத்த தொடைகளும் உடையவர்கள்.  திட்டம் போட்டு வட்டத்திற்குள் வாழாமல் வசதியாக வாழ்வதே லட்சியம் என நம்புபவர்கள்.  முகம் அல்லது முதுகுப் பக்கத்தில்  லேசான வளைவு அல்லது வடு அல்லது தழும்பு கொண்டவர்கள். மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த நினைப்பீர்கள். உங்கள் தயாள குணம் அதத்தடுத்து நிறுத்திவிடும்.
       எப்பொழுதுமே சொந்தங்களையும் பந்தங்களையும் அடிக்கடி கண்காணித்து நல்லவர், தீயவர், துரோகிகளை   ஒருபொழுதும் வெளியில் சொல்லமாட்டீர்கள். ஈவு, இரக்கம், சாந்தம், சமாதானத்தை நீங்கள் அதிகமாகவே விரும்புவீர்கள்.  வாலிப வாழ்க்கையிலும் சரி, வயோதிக  வாழ்க்கையிலும் சரி நீங்கள் என்றும் பதினாறாக மார்க்கண்டேயனைப் போலவே வாழ ஆசைப்படுவீர்கள்.
   குழந்தைச் செல்வங்களால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிமழை பொழிந்து கொண்டேயிருக்கும்.  உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் உங்களைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி வருவார்கள்.  எந்த நிலையிலும் உங்கள் மனதில் முதலாளி என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.  எந்த வாதத்தையும் நயம்பட பேசி வெற்றிகாண்பதில் நீங்கள் கில்லாடிகள் நேர்மை, நீதி, நாணயத்துக்காக நீங்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள்.
  உங்களைவிட வயதில் மூத்தவர்கள் கூட உங்களிடம் யோசனை  கேட்க அடிக்கடி உங்களைத் தேடி வருவார்கள்.
    தன் வைத்தியம் தனக்கு பலிக்காததுபோல, உங்கள் யோகமும், ராசியும் உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு மட்டுமே பயன்தரும்.
   சிக்கனம் என்றால் என்ன ? சேமிப்பு என்ன செய்யும் என்று  உங்களிடமிருந்து தான் மற்றவர்கள் படிக்க முடியும். அதனால் வரும் நன்மைகள் என்ன என்பதை உங்களிடமிருந்து படித்துக் கொள்ளலாம். யாராக இருந்தாலும் உண்மையாக உழைத்தால்தான் உயர்வு என்ற உண்மையை உணர்ந்தவர்கள்  நீங்கள். ஒருசில சமயங்களில் மற்றவர்களை செலவு செய்யவைத்து அதன்மூலம்  ஆனந்தமும் அடைவீர்கள். பொன்,பொருள், ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் போன்ற சுகமான வாழ்க்கைக்கு ஒரு போதும் உங்களுக்கு குறைவே இருக்காது.
      உங்கள் ராசிநாதன்  சுக்கிரன் பல்வேறு முன்னேற்றத்துக்கு அடித்தளம் வகுத்துக்கொடுப்பார்.  கடந்த ஆண்டு எண்ணற்ற  பிரச்சனைகளை நீங்கள் சந்திருப்பீர்கள். குறிப்பாக முயற்சிகளில் தடை ஏற்பட்டிருக்கும்.  குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திருப்பீர்கள். 16-12-2014  முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7ல் விருச்சிகத்தில் உள்ளார். கண்டச்சனி நடக்கும்.  எனவே எதிலும்  நிதானித்துச் செல்ல வேண்டும்.  சனி பகவான்  மன்மத வருடம் ஆரம்பம் முதல் ஜீலை 29 வரையிலும் வக்ரம் அடைகிறார்.  அவர் வக்ரமாக உள்ள காலங்களில் கெடுபலன்களைத் தரமாட்டார். கொடுக்கல் - வாங்கல் தொழில் செய்பவர்கள் நிதானித்துச் செயல்பட வேண்டும்.
 குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 3ல் உள்ளார்.
5-7-2015ல் அவர் சிம்ம ராசியில் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்கிறார். அங்கு அமரும் குரு பகவான் 5ம் பார்வையாக தன் சொந்த வீட்டைப் பார்க்கிறார்.  குரு 4ல் உள்ள படியால் ஒருசிலர்  வேறு நகரம் செல்வார்கள். எனவே உறவினர்களிடம் தள்ளிநின்று பழகிவரவேண்டும். கிட்ட உறவு முட்டப் பகையாக மாறிவிடும்.
    இந்த   மன்மத வருடத்தில் 8-1-2016  வரையிலும் சாயாகிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் இருப்பார். அதன்பிறகு ராசிக்கு 4ல்  வருவார். அதேபோல 8-1-2016 வரையிலும் உங்கள் ராசிக்கு 11ல் இருந்த கேது அதன்பின் 10ல் அமர்வார்.
  14-04-2015  முதல் 12-06-2015  வரை குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகம் ஏற்படும்.  ஒருசிலருக்கு சொத்து வாங்கி  அதனால் வில்லங்கம் உண்டாகலாம். இதனால் மன நிம்மதிக் குறைவு ஏற்படும்.  ஒருசிலர் மனைவிக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் உண்டாகலாம்.
    13-06-2015 முதல் 02-12-2015 வரை பிள்ளைகள் மீது கவனம் கொள்ள வேண்டும். அவர்களின் கல்வியில் வீண் தடைகளும் அதிகமாக செலவும் ஏற்படும்.  எந்த ஒரு காரியத்திலும் பாதுகாப்புடன் செயல்பட்டால் நல்ல பலன்களை அடையலாம்.
3-12-2015  முதல் 21-12-2015 வரையிலும் லாபங்கள் அதிகமாகும். 22-12-2015  முதல் எதிலும் நிதானித்துச் செயல்பட வேண்டும். பழைய பாக்கிகள் தொந்தரவு கொடுக்கும்.  எனவே கடனை திரும்பச் செலுத்திவிட்டு, புதிய கடன் பெறாமல் இருப்பது உத்தமம். 1-2-2016 முதல் 13-4-2016 வரையிலும்  உங்களுக்கு யோகமான காலம்.  புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்துசேரும்.  பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மையுண்டு. தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள்  வந்துசேரும். ஒருசிலருக்கு மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்பு கிட்டும்.
பெண்கள்  
 குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிடித்தமானவர்களாகத் திகழ்வீர்கள். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கூடும்.  குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
     ஆண்டுத் தொடக்கத்தில் நல்ல பொருளாதார வளம் இருக்கும்.  புதிய தொழில் தொடங்க தொழிலாளர்கள் உதவியாக இருப்பார்கள்.  தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிட்டும்.
மாணவர்கள்  
     மன்மத ஆண்டில் மாணவர்கள் படித்து நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.  கல்வியோடு விளையாட்டு கலைத்துறையிலும் ஆர்வம் கொள்வார்கள்.
கார்த்திகை (2,3,4 ஆம் பாதம்)  நட்சத்திரக்காரர்களுக்கு
        சித்திரை முதல் ஆடி வரை 2 பங்கு லாபம் உண்டு. கஷ்ட ஜீவனம் வராது.
 மார்கழி மாதம் முதல்  பங்குனி வரை வருமானக் குறைவு உள்ளது சேமிப்பே உங்களுக்குக் கைகொடுக்கும்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு
       சித்திரை முதல் ஆடி வரை 5 பங்கு லாபமுண்டு. செளபாக்கியத்துடன் எதிர்காலத்துக்கு வேண்டிய  சேமிப்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.
 மிருகசீரிட(1,2-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரை வருமானம் குறைவாக உள்ளது. வரவைவிட செலவுகள் கூடுதலாகும்.
  மார்கழி மாதம் முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் இருக்கும். கடன்  வாங்க நேரலாம்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
       ஆண்டுமுழுவதும் ஏகாதாசி திதியன்று பெருமாள் ஆலயம் சென்று நெய்விளக்கு ஏற்றி 18 முறை வலம்வந்தால் நல்ல பலன்களை  அடையலாம்.  கிருஷ்ணர் அருள் கிடைக்கும்.  முடியாதவர்கள் மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில் பசுவுக்கு மஞ்சள், குங்குமம்  தடவி வாலைத் தொட்டு வணங்கினால் நன்மையுண்டு. ஆண்டு முழுவதும் பெருமாள்  உங்களுக்கு துணைநிற்பார்.

வாழ்க வளமுடன்                                                                          மிதுனம் ராசி அன்பர்களே!
     (மிருகசீரிஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய)

மிதுனராசி நேயர்களே!
       வேத  சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அடுத்தவர்களுடைய எண்ணங்களையும், நோக்கங்களையும் எதிராளிகளின் முகத்தைக் கண்டு குறிப்பறியக்கூடியவர்கள்.  மிதுனமென்றாலே அறிவு, தெளிவு, ஆற்றல் புத்திக்கூர்மை விவேகம், முன்யோசனை என்று பல அர்த்தங்கள் உண்டு. அப்படிப்பட்ட மிதுன ராசிக்காரர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
   ஆடல், பாடல், சங்கீதம், வேடிக்கை, வினோதமென்று எப்பொழுதும் மனம் இன்பத்தை நாடிக்கொண்டே இருக்கும். உங்கள் மனம் கோபத்திலும்கூட இன்பத்தைத்  தேடிப்போகுமென்றால் ஆச்சரியமில்லை.
   உங்கள் வார்த்தையில் கேலியும், கிண்டலும் மலிந்திருக்கும்.கவர்ச்சியாகவும், தந்திரமாகவும், வஞ்சகமாகவும் பேசி உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
   உங்கள் மனதில் எப்பொழுதுமே நடிப்புச் சிந்தனைகள் மேலோங்கிக் கொண்டேயிருக்கும். கலையுலகத்தில் பிரகாசிக்க வேண்டும்.  எந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்தாலும் அதில் ஒரு புதுமையிருக்கும் உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பெரியதொரு வித்தியாசமே இருக்கும்.
     உங்களுடைய மனம்  எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் உங்கள் செயல்பாடுகள் நீண்ட காலதாமதத்தை ஏற்படுத்தும். “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம்” என்ற பாடல் வரிகள்  உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்குமென்றால் அது மிகையில்லை.
    உங்கள் உடல்நலத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள அரும்பாடுபடுவீர்கள். உங்களுக்குக் கோபம் வந்தால்கூட அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்து காரியத்தைச் சாதித்துக்கொள்வீர்கள். உங்கள் மனம் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதால் உங்கள் வாழ்க்கை நீண்ட ஆயுள் உடையதாக இருக்கும்.
   மிதுன ராசிக்காரர்கள் சிலர் சுயநலவாதிகள். பணவிஷயங்களில் சாதுரியமாக  சம்பாதித்து கணக்குவழக்கு விஷயங்களில் திறமையாக இருப்பவர்கள்.
  அடுத்தவர் சொல்லுக்கு செவிசாய்க்காமல் முரட்டுப் பிடிவாதத்தால் பல நல்ல முன்னேற்றங்களைத் தடுப்பவர்களும் மிதுன ராசிக்காரர்களே!
          நவகிரகங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான நற்பலன்களையும்  தீய பலன்களையும் வழங்கும் கிரகங்கள் குரு, சனி, ராகு - கேது  இந்த மூன்று கிரகங்களும் மற்ற கிரகங்களைவிட கூடுதலான நல்ல பலன்களைத் தருகின்றன.  எனவே நீங்கள் 5-7-2015 வரையிலும் குரு பகவான் அருளால் அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள்.
     இரு சாரரும் நல்ல வரன்கள் அமைந்து சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். மூடிக்கிடந்த முல்லைத் திறந்துள்ள  முதலாளிகள் 5-7-2015 வரை எதிர்பாராத கூடுதல்  லாபத்தைப் பெறுவார்கள். மருத்துவமனை நடத்துபவர்கள் மேலும் விரிவாக்கம் செய்வார்கள். ஒருசில மருத்துவர்கள் வெளிநாடு சென்று தொழில் செய்வார்கள்.
  இது மாதிரியான நற்பலன்களை வழங்கிய குரு பகவான்
5-7-5015ல் உங்கள் ராசிக்கு 3ல் மாறுகிறார்.  குரு பகவான் சிம்மத்தில் அமர்ந்துள்ள காலங்களில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுவிடாதீர்கள். விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர்களில் ஒரு சிலர் மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாவார்கள். உடன் பிறந்தவர்களால் சுபகாரிய பங்கம் ஏற்படும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். சகோதர- சகோதரிகளிடையே  பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். எனவே  குருப்பெயர்ச்சிக்குப்பின் அடுத்த குருப்பெயர்ச்சி வரை மிதுன ராசி அன்பர்கள் மிகவும் கவனத்துடன்  செயல்பட வேண்டும். எந்தக் காரியத்தையும் பிறரிடம் ஆலோசித்துச் செயல்பட வேண்டும். மேலதிகாரியாக உள்ள ஒருசிலர்  காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்பட  நேரிடலாம். உங்களுக்கு ஜால்ரா  போடுபவர்களிடம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
    நீங்கள் 20-6-2015 வரை மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். ஒவ்வாமை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஒருசிலர் ஆட்படக்  கூடும். எனவே ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.  ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4லும் கேது பகவான் 10லும் உலா வருவர். கேது பகவான் 10ல் அமர்ந்து அதிகமான லாபத்தை உங்களுக்கு வழங்குவார். கேது பகவானால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செயலில் வெற்றியும் கிடைக்கும்.
   ஆண்டின் முற்பகுதியில் அதாவது 20-6-2015 வரை ராகு பகவான் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார்.  ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4ல் வருவதால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீங்களும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டீர்கள்.  ரத்த சம்பந்தமான நோய்கள் வரலாம். எனவே சற்று கவனத்துடன் உடலைப்  கவனமாக பார்க்க  வேண்டும். உங்கள் உடன்பிறந்த மூத்த சகோதரி சகோதரர் மூலம் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு  காதுவலி  வரும்.
    5-7-2015  முதல் 2-12-2015 வரையிலும், உங்கள் உடன் பிறந்தவர்களுக்காக பொருளாதார உதவிசெய்து அதனால் உங்களுக்கு புதிய கடன் வந்துசேரும்.
    3-12-2015  முதல் 21-12-2015 வரையிலும்  வாழ்க்கையில் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் பலவழிகளில் ஏமாற்றம் உண்டாகும்.  மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
   22-12-2015 முதல் 4-7-2016 வரை கைப்பொருட்களை மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பொருட்கள் களவுபோக வாய்ப்புகள் அதிகமுள்ளது. போலீஸ், வழக்கு ஏற்பட்டு அதிக அளவில் செலவு செய்து வழக்கில் வெற்றிபெற நேரும்.
       சனி பகவான் 16-12-2014 முதல் உங்கள் ராசிக்கு 6ல் உள்ளார்.  இக்காலகட்டத்தில் உங்களுடைய  பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனினும் குடும்பத்தில் தனபாக்கியம்  மற்றும் லட்சுமி கடாட்சம் ஏற்படும். சனி ஒருவரே ராஜயோகத்தை தர உள்ளவர். எனவேதான் ரிஷப லக்னாமாக உள்ள அன்பர்கள் அதிகமான நற்பலன்களை அடைவார்கள்.
  குரு பகவான் அருளாலும் சனி பகவான் அருளாலும்,  முயற்சிகளில் வெற்றி கைகூடும். புதிய நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். 
 பெண்கள்
        மன்மத வருடத்தில் குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.  பெண்களுக்கு பல ஆண்டுகளாக தடைப்பட்டுவந்த திருமணம் இனிதே நிறைவேறும்.  நல்ல வரனாக அமையும்.  நீண்ட காலமாகப் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.  காதல்வசப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்  பேச்சுக்கு மதிப்புக்கொடுத்து காதலைக் கைவிடுவார்கள். 

 
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
       தொழிலதிபர்கள் உற்பத்தியைப்  பெருக்கி ஆதாயத்தை அதிகரிக்க  முயற்சி செய்வார்கள்.   தொழில் ரீதியாக ஒருசிலர் அடிக்கடி வெளியூர், வெளிநாடு  பயணம் சென்று வருவார்கள்.
  மாணவர்கள்
     5-7-2015 முதல் கல்வியாண்டு முடியும் வரை  அதிகமான சிரத்தை எடுத்து படித்து முன்னேறவேண்டும். கல்வியில் தடைவராது. உயர்கல்வியிலும் சிலர் கேம்பஸ் செலக்ஷனில்   தேர்வு பெறுவார்கள். ஒருசில மாணவர்கள் அலட்சியப்போக்கால் குறைந்த மதிப்பெண் பெறலாம்.  எச்சரிக்கையாகப் படிக்க வேண்டும்.
 மிருகசீரிட (3,4, ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
      சித்திரை முதல் ஆடி வரை வருமானம் புதிய கடன் ஏற்படலாம்.  செலவுகள் கூடுதலாகும். கவனம் தேவை. ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் புதிய கடன் ஏற்படலாம்.    
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு
            ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 1 பங்கு லாபம் உள்ளது.  சித்திரை முதல்  ஆடி வரை 3 பங்கு லாபம் உள்ளது.
    மார்கழி முதல் பங்குனி வரையிலும் 4 பங்கு லாபம் உள்ளது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆலய வழிபாடுகள் சிறக்கும்.
புனர்பூச (1,2,3 ஆம் பாதம் ) நட்சத்திரக்காரர்களுக்கு
      சித்திரை முதல் ஆடி வரை 6 பங்கு லாபம் வருகிறது. இது உங்களுக்கு வசந்த காலம் சேமிப்பை உயர்த்துவீர்கள். ஆவணி முதல் கார்த்திகை வரை 2 பங்கு லாபம் சேமிப்பு குறையும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
     ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்றும் விநாயகருக்கு பன்னீர், சந்தனம், விபூதி கொண்டு பூஜை செய்து வணங்கி வர வேண்டும்.  திங்கள்கிழமை அன்று பச்சரிசி  மாவினால் சிவ பெருமானுக்கு அபிஷேகம்  செய்யலாம்.  மேலும் அஷ்டமி திதிகளில் காலபைரவரை  வணங்கி, அவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்கிட வருடம் முழுவதும் நல்ல பலன்கள் அமையும்.
வாழ்க வளமுடன்                                                                                  கடகம் ராசி அன்பர்களே!
  (புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம், முடிய)
     கடக ராசி அன்பர்களே!
     வாழ்க்கையில் சுனாமியே வந்தாலும், கோடை இடிபோல முழக்கம் வந்தாலும், பூகம்பமே வந்தாலும் கவலைப்படாதவர்கள்.  உங்களின் மன உறுதியைக் கண்டு பொறாமைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகமிக அதிகமாக ஆசை கொண்டவர்கள். சுறுசுறுப்பு  குறைந்தாலும் கல்வி, கேள்வி விஷயங்களில் அதிக அளவு திறமை கொண்டவர்களாகவும் வீரியம் மிக்கவர்களாகவும் காணப்படுவீர்கள். மனதில் உறுதியான  ஸ்திரமான நிலையான எண்ணங்கள் இல்லாவிட்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அதிகமான செல்வங்களுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
    இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு போதனைசெய்வதை விரும்புவார்கள். ஆனால் மற்றவர்கள் இவர்களுக்கு அறிவோ, புத்தி மதியோ, முன்யோசனையோ சொல்லக்கூடாது. மேலும் இவர்களிடம் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். ஒருசிலர் உயர்ந்த பத்திரிகையாளர்,  எழுத்தாளர், கவிஞர், கலைஞர்களாக இருப்பர்.  ஒருசிலர் நாத்திகம் பேசிக்கொண்டு விதண்டாவாதம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அது அவரவர் சுய ஜாதக பலாபலனைப் பொறுத்தது.  உணவு சம்பந்தப்பட்ட விஷயம் பெண்கள், சம்பந்தப்பட்ட படிப்பு, கடல் ஊராக அலைந்து பார்க்கும் தொழிலில் அழகு சம்பந்தப்பட்ட துறைகளில் மிகவும் முன்னேறி பெயரும், புகழும் எடுப்பவர்கள் கடக ராசிக்காரர்களே!
     கடக ராசிக்காரர்கள் அடிக்கடி ஊர் சுற்றிப்பார்க்க விரும்புவார்கள். ஊர் ஊராக அலைந்து பார்க்கும் தொழிலில் இறங்கி உலக  விஷயங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். ஆனால் எதுவுமே தெரியாததுபோல அமைதியாக  இருந்து தன்னலம் பாதுகாத்துக் கொள்வார்கள்.
     ஆண்டு துவக்கத்தில்  குருபகவான் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார்.  அவர் 4-7-2015  வரையில் அமர்ந்திருப்பார். அதுவரை செய்யும் முயற்சியில் தடை தாமதங்கள் அதிகம் ஏற்படும். சிலருக்கு கணவன் - மனைவி  உறவில் பிரச்சனைகள் வரக்கூடும். இப்போது  மனைவி மக்கள் தேவையைப் பூர்த்திசெய்வதில் தடை தாமதங்கள் வந்து நீங்கும்.  எனவே   நன்கு  தெரிந்தவர்களைத் தவிர மற்றவர்களை வீட்டினுள்  அனுமதிக்காதீர்கள்.  அரசுப் பணியில் உள்ளவர்கள் மாறுதல் கேட்பதை 5-7-2015 வரை தள்ளிப்போட வேண்டும்.  மறதியைத் தவிர்க்க சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். ஒருசில அரசு ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் போன்ற தண்டனைகளை அடையலாம்.
      5-7-2015ல் குரு பகவான் உங்கள் ராசியான கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்து சேரும். வேலை தேடும் இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மத்திய, மாநில அரசுகளில் உத்தரவை எதிர்பார்த்து இருப்போருக்கு உத்தரவு வந்துசேரும்.
     5-07-2015  முதல் அடுத்த ஆண்டு பிற்பகுதி வரையிலும் குரு பகவான் அள்ளித்தரப்போகிறார். இனிப்பு, ஜவுளி, கண்ணாடி ரசாயனம், மருந்து ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் லாபம் கிட்டும். நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்.  புத்திர பத்திரிகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு சிலர் அயல்நாடு சென்று கல்விபயில்வார்கள். எதிர்காலம் நல்ல நிலையில் உள்ளது. ராஜயோகத்தை அடைவார்கள்.
     குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும்.  அரசுப் பணி வராதா என்று ஏங்கிய ஒருசிலர் உயர்பதவிக்கான உத்தரவுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட பாக்கியங்களை அள்ளிப்பருகுவீர்கள்.
    ஒருசிலர் புதிய வீடு, மனை வாங்கிக் குவிப்பார்கள். உடன்பிறந்தோர், மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். சொத்து பிரச்சனைகளில் சுமூக முடிவு ஏற்படும்.  ஒருசில இளைஞர்களுக்கு வேறு மாநிலத்தில் அரசுப் பணி வரும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும்.  வீண் சிக்கலையும், சிரமத்தையும் தவிர்க்க அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
   சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். 2017 வரையிலும் அவர் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் தான் இருப்பார். உங்கள் பிள்ளைகள் சம்பந்தமாகவும் தொல்லைகளை அனுபவித்திருப்பீர்கள்.
29-7-2015 வரை சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். மற்ற கிரகங்களின்  தாக்கத்தினால்  நன்மைகள் உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் பொன், பொருள், கிடைக்கும். மகிழ்ச்சி மனதில் அதிகரிக்கும். பெண்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
   மற்றொரு நிழல் கிரகமான கேது பகவான் உங்கள் ராசிக்கு 9ல் மீனத்தில் உள்ளார். அவரும் 7-1-2016 வரை நல்ல பொருளாதார வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பார்.  8-1-2016ல் 8ஆம் இடமான கும்ப ராசிக்குச் செல்கிறார். சிலரது வீட்டில் பொருட்கள்  களவுபோகவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் விழிப்போடு செயல்படுங்கள்.
     உடன்பிறப்புகளாலும், அவரது மனைவியாலும் வீண் பிரச்சனைகள் உருவாகும்.  5-7-2015 முதல் குரு அருளால் நினைத்த காரியம்  நடக்கும். ஒருசிலருக்கு செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றம் இலாகா மாற்றம் உண்டாகும்.
3-12-2015 முதல் 22-12-2015 வரை தைரியமும், விவேகமும் சற்று குறையும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி வாய்ப்பை அடைவது கஷ்டமாகும். தூரதேசப் பயணம் சிலருக்கு பாதகமாக இருக்கும்.  ஒருசிலருக்கு  உஷ்ண சம்பந்தமான நோய் கடுமையாக பாதிக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ரசவர்க்கம், இனிப்பு, புளி வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனை அடைவார்கள்.
 பெண்கள்
   பெண்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்து சென்ற பெண்கள் கணவரரோடு  சேர்ந்துவாழ்வார்கள்.  நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
 தொழிலதிபர்கள், வியாபாரிகள்
    தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலர் தங்கள் தொழிலை வங்கி உதவியுடன் விரிவாக்கம் பெருக்குவீர்கள்.  எதிரிகளால்  தொல்லைகள் ஏற்பட்டாலும் அதனை  முறியடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள்.  கொள்முதலைவிட கூடுதல் லாபத்துக்கு அனைத்து சரக்குகளையும் விற்பனை செய்வார்கள். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.
மாணவர்கள்
  குரு ராசியில் உள்ளதால் மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் படிப்பில் மிகவும் கவனத்துடன் படிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் குரு பகவான் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளார். எனவே கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
புனர்பூச (4ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
  சித்திரை முதல் ஆடி வரை 6 பங்கு லாபம் வருகிறது. ஆவணி முதல் கார்த்திகை வரை  2 பங்கு லாபம் சேமிப்பு குறையும். புதிய கடன் வாங்கமாட்டீர்கள்.
பூச நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரை 1 பங்கு லாபம் வருகிறது. எனவே வாழ்க்கையில் செளபாக்கியமும் தனலாபமும் எதிர்கால யோகமும் கிடைக்கும்.
ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரை 4 பங்கு லாபம் வருகிறது. எனவே திட்டமிட்டபடி நீங்கள் அனைத்துப்பொருட்களையும் வாங்குவீர்கள்.
   ஆவணி முதல் கார்த்திகை வரை 1 பங்கு லாபம் மட்டும் வருகிறது. எனவே சிக்கனமாக இருக்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
      ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு எலுமிச்சைப் பழ தீபமேற்றி வரவும். ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முடிந்த வரை பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.  ஒவ்வொரு நாளும் சூரிய நமஸ்காரம் செய்திட வேண்டும். அல்லது ஆதித்ய ஹிருதய மந்திரத்தை தினமும் ஜெபிக்க வேண்டும். குரு பகவானையும் ஆஞ்சனேயரையும் வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்ய வேண்டும்.
வாழ்க வளமுடன்  
on faceboo                   சிம்மம்                  (மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய)
                                                             .                              சிம்ம ராசி அன்பர்களே!
    எங்கும், எதிலும் எந்தக் காரியத்திலும் எப்போதும் முன்னணியில் நிற்க வேண்டுமென்ற எண்ணமும் முனைப்பும் கொண்டு எண்ணத்தைச் செயலாக்கி சாதனையாக மாற்றி வருபவர்கள்.
     எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் மற்றவர்கள் உங்களை முன்னிலைப்படுத்துவார்கள். ஆனந்தக் குளியலான அருவிக் குளியல், அதிவேக நீச்சல், பல்டி அடித்துக் குளித்தல் போன்ற வீரதீர சாகசங்கள் செய்வதற்கு மிகவும் ஆசைப்படுவீர்கள்.
      எந்த நிலையிலும் நீங்கள் மற்றவர்களுக்கு பணிந்து நடக்கமாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில்  எவ்வளவு துன்பம் வந்தாலும் பயப்படமாட்டீர்கள். முரட்டுத்தைரியம், துணிச்சல், வாய்சாமர்த்தியம் வாதாடி ஜெயித்தல் போன்றவை உங்களுக்கு கைவந்த கலை என்னதான்  கோபம் இருந்தாலும் நகைச்சுவை உணர்வு அதிகமாகவே  இருக்கும்.  தீர்த்தயாத்திரை சிவன் ஆலயங்களில் உழவாரப் பணிகள் போன்ற ஆலயப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன்  கலந்து கொள்வீர்கள்.
  சகல கலைகளிலும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.  நீங்கள் செய்யும் தொழிலில் பலவிதமான புதுமைகளைக்  கையாள்வீர்கள்.
   சிம்ம ராசிக்காரர்களிடம் சூரியனைப்போன்ற  பிரகாசம் இருக்கும். சந்திரனைப்போன்ற வாக்கு சாதுர்யமும் செவ்வாயைப் போன்ற வாக்கு வண்மையும் இருக்கும். செல்வம் செல்வாக்கு, சொல்வாக்கு நிலையான புகழுடன் உயர்ந்த பதவியில் சிறப்பாக விளங்குவார்கள்.   தன்னுடைய அந்தஸ்துக்குக் கீழானவர்களிடம் மிகுந்த அலட்சியத்துடனும் அதிகாரத்துடனும் சிறிது கர்வம் கொண்டவர்களைப்போல நடந்துக் கொள்வார்கள்.  
  நீங்கள் இப்போது நிதானமான போக்குடன் செயல்பட வேண்டும். குழந்தை இல்லாத தம்பதியர் ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாய் - தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே தக்க நேரத்தில் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இப்போது சினிமா கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அந்த பதவியை அடைவார்கள்.
    பொதுவாக எந்த காரியத்திலும் நிதானித்துச் செயல்படுபவர்கள் கூடுதல் லாபத்தை அடைவார்கள்.  உறவினர் மூலம் காரிய சித்தி ஏற்படும். சிம்ம ராசி அன்பர்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலைச் செய்வார்கள். புதிய வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.  கடன் பாக்கிகள் வசூலாகும்.  பெண்கள் புன்னகையோடும்  பொன்நகையோடும்   சுபகாரியங்களில்  கலந்துகொண்டு உற்சாகம் அடைவார்கள்.
    8-1-2016ல் ராகு பகவான் சிம்ம ராசிக்கு வருகிறார்.  அதுவரை ராசிக்கு 2ல் கன்னி வீட்டில் உள்ள ராகு பகவான் எப்போதும் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தருவார்.   நல்ல வாய்ப்புகள் வாயிற் கதவைத்தட்டும்.  சிலர் பெரிய தொழிற்சாலைகளைத் துவக்கி நல்ல தொழிலாளர்களையும், பெற்று பொருளாதாரத்தில் உயர்வார்கள். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் பொருள்வளம் பெருகும்.  அயல்நாட்டு வணிகம் உற்பத்தி அனைத்திலும் கூடுதலான லாபம் வரும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை  கூடும். நண்பர்கள் கூட்டாளிகளுடன் நீங்கள் செய்துவரும் தொழில் உயரும். வருமானம் இரட்டிப்பாகும் அரசாங்கம், அரசியல்வாதிகளின், ஆதரவால் நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும்.
    ஒரு சிலருக்கு 5-7-2015க்கு பிறகு நிரந்தரப் பணி ஏற்படும்.    பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வந்த சொத்துக்களும் கைக்கு வந்து சேரும்.
  குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த நிலை மாறும். உங்களிடம் பெரும் தொகையை வாங்கிக் கொண்டு கொடுக்காமல் இருந்தவர்கள் வலியவந்து தொகையைத் திருப்பித்தருவார்கள். இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
    5-7-2015  முதல் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் வாழவேண்டும். வீண் பழி ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். விவசாயத்தை நவீன முறையில் செய்து சிலர் நல்ல லாபமும் அதிக மகசூலும் பெறுவார்கள்.
    3-12-2015 முதல் 21-12-2015 வரை யோககாலமாகும் . சுபநிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கும். லாரி, டிராக்டர், இயந்திர வகைகளால் எப்போதும் நல்ல லாபத்தை  அடைவீர்கள்.
   1-1-2016  முதல் 14-1-2016 வரை சிம்ம ராசி அன்பர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் வாகனத்தில் மிகவும் எச்சரிக்கையாக பார்த்துச் செல்ல வேண்டும்.  எனவே இந்த கால கட்டம் கவனமாக இருக்க வேண்டும்.

 பெண்கள்
          இந்த மன்மத வருடத்தில் பெண்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் தம்பதிகள் இருவரும் உடனுக்குடன் விட்டுக் கொடுத்து சுமூக வாழ்வு வாழ்வார்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழிலில் எதிர்வரும் குறுகீடுகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் தேவைகளையறிந்து பூர்த்தி செய்வார்கள். உழைப்புகேற்ற ஆதாயம் கிடைக்கும். எதிர்களினால் தொல்லைகள் ஏற்படும். ஜூன் 2015 முதல் லாபங்கள் படிப்படியாக உயரும்.
மாணவர்கள்
    மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அதிகமான முயற்சியெடுத்து படிக்க வேண்டியிருக்கும். கலையிலும், விளையாட்டுத் துறையிலும், ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.  படிப்பை முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்க விடாமுயற்சி செய்ய வேண்டும்.
 மகம் நட்சத்திரக்காரர்களுக்கு
  சித்திரை முதல் ஆடி வரை செளபாக்கியத்தோடும், தனலாபத்தோடும், எதிர்கால யோகத்தோடும் வாழ்வீர்கள். ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது.
    மார்கழி முதல் பங்குனி வரை காரியபங்கம் ஏற்படலாம். எனவே அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.  எனவே புதிய காரியங்களை செய்தல் கூடாது.
பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு லாபம் வருகிறது.  குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
   ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 2 பங்கு லாபம் உண்டு. பொருளாதார நிலை உயரும். தேவையான ஆடம்பரப்  பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
உத்திர (1 ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரை 5 பங்கு லாபம் வருகிறது. ஆவணி முதல் கார்த்திகை வரை 1 பங்கு லாபம் மட்டும் வருகிறது. எனவே உயரும், சேமிப்பு உங்களுக்கு கைகொடுக்கும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
      ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு பச்சரிசி மாவு அபிஷேகம் செய்துவந்தால் நல்ல பலனை அடையலாம்.  கந்த சஷ்டி கவசம் சிறப்பு தரும். ராகு - கேதுவுடன்  கூடிய விநாயகரை அன்றாடம் தரிசனம் செய்துவர நன்மையுண்டு.
வாழ்க வளமுடன்                                                                                   கன்னி ராசி அன்பர்களே!
   (உத்திரம் 2ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய)
கன்னி ராசி அன்பர்களே!
       புத்தி கூர்மையை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி காண்பவர்கள்  நீங்கள்.  இவர்கள் புகழ்பெற்ற குடும்பத்தில் தான் பிறப்பார்கள். தரித்திரத்தையும் வறுமையையும் சந்தித்த பிறகுதான் வெற்றிகொண்டு சாதிக்க வேண்டுமென்பது இவர்களது ஊழ்வினையின் விதி!
    தெய்வீக வழிபாடுகளில் சிறந்துவிளங்கும் அடியார்களாகவும் ஆச்சார அனுஷ்டான சிலர்களாகவும் நீதி, நேர்மை, பண்புடன் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
      தங்களது இளமைக்காலத்தில் வறுமையிலும், கஷ்டத்திலும் உழன்றாலும், எதிர்காலத்தில் வசதி வாய்ப்புகளோடும் செல்வச் செழிப்போடும் திகழ்வார்கள்.  எந்த நிலையிலும் தன்னடக்கத்தோடும் வாழ்பவர்கள் உண்மையைப் பேச அஞ்சமாட்டார்கள். வேதங்கள் வேதசாஸ்திரங்கள், ஆடல், பாடல், நடனம், நாடகம், நடிப்பு இசை, இலக்கணம், இலக்கியக் கூட்டம், பட்டிமன்றம் சொற்பொழிவு உபன்யாசம் போன்ற இடங்களிலெல்லாம் கன்னி ராசிக்காரர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கும்.
      நல்ல பழக்க வழக்கங்கள் ஒழுக்கநெறியான வாழ்க்கை  வாழவிரும்புவார்கள். அழகான முகமும்,வசீகரத் தோற்றமும் வார்த்தை ஜாலமும் வசீகரப் பேச்சும், இனிமையான குரலும் கொண்டவர்கள்.
   எவ்வளவு துன்பம் வந்தாலும் எவ்வளவு இன்பம் வந்தாலும் அதை ஒருபோதும்  வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். வறுமையிலும், செழுமையிலும் ஒரே மாதிரியாக  இருப்பவர்கள் கன்னி  ராசிக்காரர்கள்.
   இவர்கள் உழைப்பு எப்பொழுதுமே மூளை, அறிவு சார்ந்த உழைப்பாகவே இருக்கும். உடல்  சார்ந்த – தேகம் சார்ந்த உழைப்பு எப்பொழுதுமே குறைவாகவே இருக்கும்.
  இவர்கள்  வாழ்க்கை முழுவதும் சம்பாதிக்க ஆசைப்படுவார்கள். வீடு, வாசல், வண்டி, வாகனம் போன்ற எல்லா யோகமும் இவர்களின்  சொந்த சம்பாத்தியமாகவே அமையுமென்றால் அதில் ஆச்சரியமில்லை.
     இவர்களை யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. பழைய சாமான்கள் பழங்காலத்து நாணயங்கள் புராதனப் பொருட்களை சேகரித்து பாதுகாத்து வைத்துக்கொள்ளும் ஆர்வம் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
  குரு பகவான் 4-7-2015 வரையிலும் உங்கள் ராசிக்கு 11ல் அதாவது  கடக  வீட்டில் இருப்பார்.  எனவே நீங்கள் 
4-7-2015 வரையிலும் நல்ல பலன்களை அடைவீர்கள்.  இதற்கு முன்னர் உங்களுக்கு இருந்துவந்த ஞாபக மறதி, அலைச்சல், நிம்மதியின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
 புதிய முயற்சிகள் யாவும்  சிறப்பு தரும் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு  நல்ல வரன் அமையும். திருமணமாகி நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள்.  பொருளாதார வளம் மேம்படும். ஒருசிலருக்கு உத்தியோகம் சிறப்படைந்து நல்ல பதவி கிடைக்கும்.
    சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து சேர்வார்கள்.  நீண்ட காலமாக  வெளிநாட்டில் வாழ்ந்து வரும் பிள்ளைகளில் சிலர் இப்போது தங்கள் தாய் - தந்தையரை காணவருவார்கள். சகோதரிகள் தங்கள் உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள்.
      குரு பகவான் 5-7-2015 முதல் உங்கள் ராசிக்கு 12ல் வருகிறார். அச்சமயம் நீங்கள் குரு பகவானை வியாழந்தோறும்  தரிசித்து வருவது உத்தமம். குரு 12ல் இருக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவதால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.  தொழிலாளர்களின் போக்கில் தவறு கண்டாலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மென்மையான போக்கை கடைபிடித்தால் அவர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்கிறவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் வரும். எனவே கணக்கு கேட்பதிலும், பார்ப்பதிலும் நிதானமாக போக்கை கடைப்பிடிக்க வேண்டும். கடன் தொந்தரவுக்காக ஒருசிலர் பூர்வீக சொத்துகளை விற்க வேண்டிய நிலை வரும்.  மனதில் இனம்புரியாத உளைச்சல் உண்டாகும். குருவின் 5ஆம் பார்வையால் ஓரளவு நன்மை உண்டாகும். தந்தை சொத்தின் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
    16-12-2014 முதல் சனி  பகவான் உங்கள் ராசிக்கு 3ல் உள்ளார். 3ஆம் இடமென்பது சகோதர ஸ்தானம் .  இந்த மன்மத வருடத்தில் சனி பகவான் அவரவர் வயதுக்கேற்ப நல்ல பலங்களையே வழங்குவார்.  வேலைவாய்ப்பு,  திருமணம், தூரதேசப் பயணம் பிரிந்தவர்கள்   ஒன்றுசேர்தல், வழக்குகளில் வெற்றி, மருத்துவச் செலவுகள் குறைதல் போன்ற நல்ல பலன்கள்  ஏற்படும். 5ஆம் இடம் குலதெய்வம் மற்றும் குழந்தை பாக்கியத்தை தெரிந்து கொள்ளும் இடம். சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து 3ஆம் பார்வையாக ராசிக்கு 5ஆம் வீடான மகரத்தைப் பார்க்கிறார்.  நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். தந்தை சொத்துக்களை அடைவதில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
        பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல  மகசூலைப் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் தொழில் செய்கிறவர்கள் நிதானமாகச் செய்ய வேண்டும்.
     8-1-2016  முதல் ராகு பகவான் உங்களது ராசிக்கு 12ல் அமர்வார்.  ஒருசிலர் வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். நிலம், புதிய வீடு, வாங்குதல் போன்ற நல்ல பலன்களை அடைவார்கள்.  இதுவரை எட்டாக் கனியாய் இருந்துவந்த அரசுப்பணி ஒருசிலருக்கு வந்து சேரும். சொந்தமாக தொழில் செய்து சிலர் முன்னேறுவார்கள்.  அரசு நிதி உதவி போன்றவை தடையின்றிக் கிடைக்கும்.
    8-1-2016  முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ல் கும்ப வீட்டில் வருகிறார். வாகனங்களில் மிகவும் நிதானமாகச் செல்ல வேண்டும்.  காரைத் தவிர்த்து  பேருந்து அல்லது ரயிலில் செல்வது உத்தமம்  நல்லவர்கள் நட்புண்டு.  அரசாங்க  உதவியை  எதிர்பார்த்திருக்கும் தொழிலதிபர்கள் எண்ணம் கைக்கூடும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் உயர்கல்வி பயில்வதில் இருந்துவந்த தடைகள்  அகலும். இதுவரை வீட்டில் இருந்துவந்த பிள்ளைகள் சிலர் மத்திய அரசின் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
     6ல் கேது பகவான் இருப்பதால் மனதுக்குள் எப்போதும் பயம் இருந்துகொண்டே இருக்கும். மனசாட்சிக்கு பயப்படுபவர்களை கேது பகவான் கெடுக்க மாட்டார்.
பெண்கள்
      உங்களின் நிதானமான செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு மேம்படும்.   திருமணமாகாத பெண்களுக்கு 4-7-2015க்குள் திருமணம் முடியும்.  விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள்.   மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கும். அடுத்த கல்வியாண்டில் அக்கறை எடுத்து படிக்க வேண்டியது வரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
    தொழில் மற்றும் வியாபாரத்தில் விறுவிறுப்பாகச் செயல்படுவீர்கள்.   புதிய தொழில் முயற்சியில் கால்பதித்து சாதனை படைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 4-7-2015க்குப் பிறகு நன்மைகள் குறையத்தொடங்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மைகள்  தாமதமாகும்.  கேது 6ல் சாதகமற்ற நிலையில் உள்ளதால் நிர்வாகச் செலவுகள் கூடும்.
மாணவர்கள்
      இந்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் – பெற்றொர்கள், ஆசிரியர் வழிகாட்டுதலைப் பின்பற்றி கல்வியில் உயர்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி காண்பீர்கள்.  
உத்திர  (2,3,4 ஆம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடிவரை 5 பங்கு லாபம் வருகிறது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
   ஆவணி முதல் கார்த்திகை வரை 1 பங்கு லாபம் மட்டும் வருகிறது. எனவே சிக்கனமாகச் செயல்பட வேண்டும்.
 அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு
      சித்திரை முதல்  ஆடி வரையில் லாபம் எதுவுமில்லைஅதிக செலவுசெய்யாது நிம்மதியாக வாழ்வீர்கள்காரியத் தடைகள் வராது. ஆவணி  முதல்கார்த்திகை வரை 2 பங்கு  லாபம் உள்ளது.
 சித்திரை (1,2-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரையிலும் 3 பங்கு லாபம் வருகிறது. குடும்பம் சீராகச் செல்லும். ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இல்லை. எனவே இப்போது உங்களுக்கு சேமிப்பே கைகொடுக்கும். எதிலும் நிதானமாகச் செய்து கொள்ளலாம்.
  ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
   ஒவ்வொரு ஞாயிறும் காளியம்மனுக்கு எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.  முடிந்த வரை ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்துவர ஆண்டு முழுவதும் நன்மையான பலன்களை அடையலாம்.
வாழ்க வளமுடன்                                                                                  துலாம் ராசி அன்பர்களே!
  (சித்திரை 3ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய)
     துலாராசி நேயர்களே!
          நீதி நேர்மை, வாக்குத் தவறாமை போன்ற விஷயங்களால் உலகமக்களின் இதயத்தில் இடம்பிடிப்பவர்கள். எல்லாவிதமான யோகங்களும் அஷ்டலட்சுமி கடாட்சமும் நல்ல ஐஸ்வரியமும் கொண்டவர்களாக இருப்பார்கள். பூமியோகம், செல்வவளம், வண்டி,வாகனம்  ஆளடிமை போன்ற பல யோகங்களோடு இருப்பவர்கள்.
      பசு, பால், பாக்கியம்  யானைப்படை, குதிரைப்படை என்றெல்லாம் சொல்கிறோமே, அது துலா ராசிக்குத்தான் பொருத்தமாக இருக்கும். துலா ராசியில் பிறந்தவர்களின் பேச்சில் எப்பொழுதும் தீப்பொறி பறந்துகொண்டேயிருக்கும். பலரது பேச்சு எப்பொழுதும் சுயநலம் கொண்டதாகவும் வியாபார நோக்கம் கொண்டதாகவே இருக்கும்.
       மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள். இவர்களது வாழ்க்கை மற்றவர்களுக்குத்தான் அதிகமாகப் பயன்படும். மலர்ந்த முகமென்று சொல்வார்களே, அது இவர்களாகத்தான் இருக்கமுடியும்.
     உங்கள் சம்பாத்தியத்தில்  வரவு செலவு சரியாகவே இருக்கும். பணத்தை சேமித்துவைக்க அரும்பாடுபடுவீர்கள்.  வயிறு சம்பந்தமான கோளாறும், அஜீரணம், வாயு, புளியேப்பம், போன்றவையும் ஏற்பட்டு விலகும்.
 உங்கள் வாழ்க்கையில் அதிகமான ரகசியங்கள் புதைந்துகிடக்கும். முன்கோபமும் உங்களுக்கு அதிகமாகவே உண்டு. தெய்வபக்தி கொண்டவர்கள். பெரியவர்கள் மீது எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.
     புத்தகங்கள் வாயிலாக பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். உங்களது வீட்டில்  ஒரு புத்தகசாலையே இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்களை விரும்பிச் செய்வீர்கள்.
     4-7-2015  வரையிலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ஆவது ஸ்தானத்தில் இருப்பார்.  இப்போது குரு 10ல் இருப்பது சிறப்பில்லை. என்றாலும் உங்கள் சுயஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இடம்பெற்றிருந்தால் அதிகமான கஷ்டங்கள் வராது. புதிய கடன் வாங்கநேரும்.  வரவுக்குள் செலவு செய்து  புதிதாக கடன்படுவதைத் தவிர்க்கலாம்.
   குரு பகவான் 5-7-2015ல் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு வருகிறார். சிம்மம் உங்கள் ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானமாகும். தொழில் செய்பவர்களும் வணிகம் செய்பவர்களும்  மிகவும் விழிப்பாகச் செயல்பட வேண்டும்.  பணப்பிரச்சினைகளை நீங்களே நேரடியாகக் கண்காணிப்பது நல்லது.  உடன்பிறந்தவர்கள் மத்தியில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம்கிடைக்கும். புத்திர, புத்திரிகளால் நல்ல முன்னேற்றம் காணப்படும்.  இப்போது நீங்கள் புதிய கடன் பெற்று தொழில்  துவங்குவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும் ஒரு சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
   9ம் இடத்து பார்வையால் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆடம்பர வசதி மேலோங்கும்.
      சனி உங்கள்  ராசிக்கு 11ஆம் வீடான சூரியன் வீட்டை 10ஆம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே உடன் பிறந்தோர்களிடையே உறவுகள் சுமூகமாக இருக்காது.  மூத்த சகோதர - சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இல்லை.  திருமணமாகி, கணவன் வீட்டிலுள்ள துலா ராசிப் பெண்கள் கணவன் மனம்  கோணாமல் நடக்க வேண்டும்.  சில சோதனைகளுக்கு பின்பு சனி பகவான் கோபுர உச்சி அளவுக்கு நன்மைகளையும் செய்வார். எனவே  நீங்கள் எப்போதும் நிதானமுடன் செயல்பட வேண்டும்.
     ராசிக்கு 5ஆம் இடம் குலதெய்வம் மற்றும் குழந்தை பாக்கியத்தை தெரிந்துகொள்ளும்.  ஒருசிலர்  குழந்தை பாக்கியமே கிட்டாதென்று இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்  பிறக்கும்.  ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். விவசாயத் தொழிலில் உள்ளவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள்.  
   ராசிக்கு 12-ல் உள்ள ராகுவால் அதிகமான அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இப்போது நீங்கள் நினைத்தபடி அனைத்து காரியங்களிலும் வெற்றியையும், பொருளாதார உயர்வையும் பெறுவீர்கள்.  உங்கள் ஜாதகத்தில் 10க்குரியவர் 6ல் வந்தாலும் 6க்குரியவர் 10ல் வந்தாலும் கூட்டாளிகளை                                        நம்பக்கூடாது. ராகு பகவான் 12ல் உள்ள இந்தக் காலகட்டத்தில் பயணங்கள் அதிகரிக்கும்.  அரசு ஊழியர்கள் ஒருசிலருக்கு இடமாற்றம் வரும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்பதவியில்  உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரும். குலதெய்வத்தை வழிபட்டு எந்த காரியத்தியும் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வரும். ஒருசிலர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசித்துவந்து  நல்ல பலன்களை அடைவார்கள்.
    6ல் உள்ள கேது பகவான் சந்தோஷ செய்திகளையே வழங்குவார்.  ஒருசிலர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வார்கள். முக்கிய நபர்கள் உங்கள் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு நடத்திவைப்பார்கள். எப்போதும் குடும்பத்தில் சுபச் செலவுகளே நடக்கும்.  ஆன்மிகப் பயணம் ஆன்மிக பேச்சுகளில்  அதிக  ஈடுபாடு ஏற்படும். சமூகத்தில் நல்ல  அந்தஸ்தும், கீர்த்தியும் உருவாகும். எதையும் சாதிக்கும் வல்லமை ஏற்படும்.  ஒருசிலருக்கு  கெளரவ பதவியும், அதிக லாபமும் கூடி வரும். குடும்பத்தில் கல்வி உயர்வு,  திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்குக் குறைவிருக்காது.
பெண்கள்
       பிள்ளைகளால் அவ்வப்போது சிரமம் ஏற்பட்டாலும் அவர்களின் வளர்ச்சிகண்டு சந்தோஷம் காண்பீர்கள். கணவர் வீட்டாரின் ஆதரவு  சீராகக் கிடைக்கும்.  ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணம் வாங்கிச் சேர்ப்பார்கள். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் வரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைபட்டாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.  தொழிலாளர்களின் ஒத்துழைப்பு  சீராகக்கிடைக்கும்.  தொழில் வியாபாரரீதியான வெளியூர் வெளிநாட்டுப்பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி ஆகியவற்றை 5-7- க்குப் பிறகு 11ல் வரும்போது மேற்கொள்ள வேண்டும் .     இந்த ஆண்டு 5-7-2015 முதல் உங்களுக்குப் பொற்காலம். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வசந்த காலம்.
மாணவர்கள்
     இந்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். மாணவர் - பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டுதலைப்  பின்பற்றி கல்வியில் உயர்வார்கள்.   
 சித்திரை (3,4-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரையிலும் 3 பங்கு லாபம் வருகிறது.  குடும்பம்  சீராகச் செல்லும்.
    ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இல்லை. எனவே இப்போது உங்களுக்கு சேமிப்பு கைகொடுக்கும். எதிலும் நிதானமாகச் செல்ல வேண்டும்.
      மார்கழி முதல் பங்குனி வரையிலும் 3 பங்கு லாபம் வருகிறது.  இப்போது நீங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம். குடும்பத்  தேவைகள் அனித்தும் பூர்த்தியாகும்.
 சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு
       இந்த ஆண்டு சித்திரை முதல் ஆடி  வரையிலும் 6 பங்கு லாபம் உள்ளது.
  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 1 பங்கு வருமானம் வரும்.  நினைத்த பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். இந்த காலகட்டத்தில் செளபாக்கியம் உண்டு.
      மார்கழி முதல் பங்குனி வரையிலும் வருமானம் சீராக இல்லை. எனவே, அதிக செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.  நிதானித்துச் செலவிடாவிடில் அதிக கஷ்டம் வரும். காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும்.
விசாக (1,2,3 ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும்  1 பங்கு லாபம் உண்டு. காரிய வெற்றி உண்டு.
   ஆவணி முதல் கார்த்திகை  வரையிலும்  வருமானம் சுமாராக உள்ளது. எனவே தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும்.
      மார்கழி முதல் பங்குனி வரையிலும் 4 பங்கு ஆதாயம் உண்டு. செளபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகத்தோடு இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும்.   
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
      தேய்பிறை அஷ்டமி திதியில்  காலபைரவருக்கு வெள்ளைப்  பூசணியில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவேண்டும்.  தேய்பிறை அஷ்டமி திதியில் நாட்டு நாய்க்கு சாதம் வைத்துவர கஷ்டம் குறையும். வளர்பிறை ஏகாதசி  திதியில் பெருமாளை தரிசித்துவர  மேலும் சிறப்புண்டு.
வாழ்க வளமுடன்                                                                                  விருச்சிகம் ராசி அன்பர்களே!
       (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
 விருச்சிக ராசி அன்பர்களே!
      உலகத்தின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்துவைத்திருப்பவர்கள் நீங்கள்! எப்பொழுதும் சுறுசுறுப்பும், ஊக்கமும், மனதை தைரியமும் கொண்டவர்கள். எடுத்த காரியங்களை அரும்பாடுபட்டாவது முடிக்க வேண்டும்.  யாருக்கும் எப்பொழுதும் அடங்கி நடக்க விரும்பாதவர்கள்.
    கல்வியில் திறமையும் அதிக புத்திக்கூர்மையும் தந்திர வித்தையும்,  இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.  யாருக்கும் எப்பொழுதும் பயப்பட மாட்டீர்கள். உங்களுடைய ஆர்வம் எப்பொழுதும் பெளர்ணமிபோல ஆரம்பிக்கும். முடிவில் தேய்ந்து அமாவாசை நிலவுபோல் ஆகிவிடும்.  சோம்பல் தன்மை உங்களிடம் குடிகொண்டிருக்கும்.
    எவ்வித கஷ்ட நஷ்ட இடையூறு இடைஞ்சல்கள், இன்னல்கள் வந்தாலும் உங்கள் கொள்கையை ஒருபோதும் நீங்கள் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள். இது உங்கள் பிறவிக்குணம்.
உங்களது விதிப்படி  தாய்  தகப்பனார் சம்பாதித்துவைத்த சொத்துகளை அனுபவிக்கும் யோகம் உண்டு. தகப்பனார் வழி சொத்துக்களை நீங்கள்  பாதுகாக்கமாட்டீர்கள்.
     உங்களது சுயசம்பாத்தியத்தில் மாட மாளிகை கூட கோபுரபோன்ற அழகான வீடுகட்டி குடியேறுவீர்கள். தஞ்சை புஞ்சை வயல் வெளிகள் தோட்டங்கள் என்று வாங்குவீர்கள்.
        உங்களுடைய கல்வி தொழில் சம்பந்தப்பட்ட கல்வியாகவே இருக்க வாய்ப்புண்டு. உங்கள் நலத்தைப் பொறுத்தவரை எப்பொழுதும் ஆரோக்கியமாகவே காணப்படுவீர்கள்.
         உடலில் வெட்டுக்காயம் தீப்புண் காயங்கள், உஷ்ணக் கட்டி போன்றவை வந்து மறையும்.  எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அதைப்பற்றி எள்ளளவும் கவலையோ, கலக்கமோ பீதியோ பயமோ, இல்லாமல் சிந்தித்துப் பார்த்து தீர்க்கமாக ஆராய்ந்து சுலபமாக முடிவெடுத்து பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவீர்கள்.
 சகல கலைகளையும் அறிந்து தெரிந்து வல்லவராக இருப்பீர்கள். எதையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உங்களிடம் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சால்  மற்றவர்களை எளிதில்  துன்பப்படுத்திவிடுவீர்கள்.  விவேகம் உலகை ஆளும் என்ற வித்தை தெரிந்தவர்கள்.
4-7-2015 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ல் இருப்பார். அதுவரையிலும் வாழ்க்கையில் வசந்த காலம் புதன் பகவான் வீட்டிலிருக்கும் அவர் தன் சொந்த வீட்டை 7ஆம் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தொழில்வகையில் ஏற்பட்ட விரோதம் நீங்கி ஒற்றுமை நிலவும்.  இதுவரையில் இருந்து வந்த  தடை நீங்கும். வயது வந்த பிள்ளைகளிடம் கோபமாகப் பேசக்கூடாது. திருமண வயதுவந்த ஆண் பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும்.  அவர்கள் காதல் திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.
   05-07-2015   முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ல் சிம்மத்தில் வருகிறார். ராசிக்கு 10ஆம் இடம் என்பது ஜீவனஸ்தானம் குரு 10ல் வருவது சிறப்பில்லை என்றாலும் உங்கள் சுயஜாதகத்தில் நல்ல இடத்தில் இடம்பெற்றிருந்தால் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கமாட்டீர்கள்.
    5-7-2015  முதல்  எதிலும் சிக்கனத்தைக் கையாள வேண்டும். வருமானம் முன்புபோல்  இல்லாமல் சற்று குறையும்.  மளிகைக் கடை நடத்துபவர்கள் இந்த ஆண்டில் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.  குருபகவான் பொருள் விரயம் ஏற்படலாம்.இழைப்பையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமையும். அதன்மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். 
   சனி பகவான் உங்கள் ராசியில்  உள்ளார். அவரால் ஒருசிலருக்கு உடல் உபாதைகள் வரலாம். சனி பகவான் தான் நிற்கும்  இடத்திலிருந்து 3,7,10ம் இடங்களைப் பார்க்கிறார்.   அதன் மூலம்  பொருளாதார வளத்தைப் பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. இது உங்களுக்கு சாதகம் மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்புண்டு.
        சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக உள்ள  இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதால் கருத்து வேறுபாடுகள் வராமல் தவிர்க்கலாம். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக கொடுத்த வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது.  இந்தக் காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்க வேண்டும்.  பெண்கள் சனி பகவானை வழிபட்டால் கணவருக்கு நல்ல  திருப்பங்கள் வரும் 17-05-2015க்குள் உங்கள் வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடரும்.  உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்ச்சிபெற்று   உடனடியாக வேலைவாய்ப்பையும், பெறுவார்கள்.  வியாபார முடக்கம் நீங்கி வருமானம் கூடும். பழைய கடன்கள்  பைசலாகும்.  விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.
   7-1-2016 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ல் உலா வருகிறார்.  பொதுவான விதி 11ல் ராகு வந்தால் உங்கள் சுய ஜாதகத்தையும் குடும்ப லாபம் தரும்.  ஒருசிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வந்துசேரும்.  பொன் நகைகளை வாங்கிச் சேர்க்கலாம். அல்லது காலி மனையில் முதலீடு செய்யலாம். உழைத்துச் சேர்க்கும் பணம் விரயச் செலவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருசிலருக்கு மலச்சிக்கல் போன்ற பிணிகள் வரும்.  தானுண்டு தன் வேலையுண்டு என்று செல்ல வேண்டும். உடன் பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழக வேண்டும்.
   7-1-2016 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 5ல் வருவதால் யோகம், உண்டாகும்.  5ல் கேது உள்ள இந்த நேரத்தில் நண்பர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவர். உங்கள் அருகில் உள்ளவர்களிடம் மிகவும் அனுசரணையாகச் செல்ல வேண்டும். 
   புதிய ஒப்பந்தங்கள் புதிய முயற்சிகள் செய்யும்போது அந்த அலுவலகத்தில் சரியான வழிமுறைகளை எழுதிவாங்கி பின்பு செயல்பட வேண்டும்.  கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். ஒருசிலர் வெளிநாடுகளில் அதிக லாபத்துடன் கூடிய தொழிலைச் செய்வார்கள்.
பொதுவாக 5ல் உள்ள கேது, நாம் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்தால்தான் கெடுதல் செய்வார்.  திருமணம் முடியாதவர்களுக்கு வரன் வந்துசேரும்.  தொல்லை கொடுத்த வழக்குகள் சாதகமாகச் செல்லும்.
பெண்கள்
   4-7-2015  வரை வீட்டுச் செலவுக்குரிய பணம் தடையின்றிக் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். மனதில் பட்டதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
     தொழிலதிபர்களும், வியாபாரிகளும் சிறப்பான பலனை  அடைவார்கள்.  தற்போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்று வருகிறது.  அதிக முதலீடு போடக்கூடாது. அரசுவகையில் எதிர்பார்த்த சலுகைகள் 4-7-2015 க்குள் கிடைக்கும். கடுமையான போட்டி இருக்கும்.
மாணவர்கள் 
     மாணவர்கள் இந்தக் கல்வியாண்டியில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அடுத்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குருவின் பார்வைகளால் உங்கள் விடாமுயற்சிக்குத் தகுந்த மதிபெண்களைப் பெறலாம்.
விசாக (4 ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் 1 பங்கு லாபம் உண்டு.  சேமிப்பு நிலை உயரும். தக்க நேரத்தில் அது பயன்படும்.
     ஆவணி முதல் கார்த்திகை  வரையிலும் 4 பங்கு ஆதாயம் உண்டு. எதிர்காலம் யோகத்தோடு இருக்கும். 
 மார்கழி முதல் பங்குனி வரையிலும் 4 பங்கு ஆதாயம் உண்டு.  தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகத்தோடு இருக்கும்.
அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும்  கூடுதல் வருமானம் 4 பங்கு வரும். சேமிப்பை உயர்த்துவீர்கள். வேண்டியது கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.   
    ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் சீராக  உள்ளது. எனவே சிக்கனமாகச் செலவுகள்  செய்ய வேண்டும்.
   மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் 2 பங்கு உள்ளது. எனவே எதிலும் நிதானித்துச் செயல்பட வேண்டும்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு வருமானம் உள்ளது.  எனவே நிதானமாகச் செலவுகள் செய்வதால் சேமிப்பு உயரும்.
        ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் கூடுதல்  வருமானம் வரும். புதிய தொழில்கள் உங்களுக்கு லாபமாக அமையும்.
      மார்கழி முதல் பங்குனி  வரையிலும் செலவுகள் உண்டாகும். செளபாக்கியம் உங்களுக்கு  ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகமாக அமையும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
     பிரதோஷ காலங்களில் நந்தி பகவானை தரிசித்து உங்கள் குறையைச் சொல்லி வேண்டி வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். சனிக்கிழமையன்று காக்கைக்கு சாதம் வைப்பதுடன், சனீஸ்வரர் ஆலயம் சென்றுவருவது சிறப்பு தரும்.
வாழ்க வளமுடன்.                                                                                   தனுசு ராசி அன்பர்களே!
 (மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய)
     தனுசு ராசி அன்பர்களே!
     உலகத்திலுள்ள சாஸ்திர சம்பிரதாய விஷயங்களை முழுவதும் அறிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள் நீங்கள்.  எழுத்துவித்தை  உங்களிடம் அதிகமாகவே இருக்கும்.  எதையும் வெளிகாட்டி கொள்ள மாட்டீர்கள்.
     எந்தவொரு காரியத்தையும் திறமையாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுப்பீர்கள். எல்லாரிடத்திலும் சிறிய குழந்தையைப்போல கள்ளம்  கபடமின்றி எளிமையாகவும் இனிமையாகவும் பழகுவீர்கள்.
        உங்கள் மனதில் எந்த ரகசியமும் தங்காது. உடனேயே  யாரிடமாவது சொன்னால்தான் உங்களுக்கு தூக்கமே வரும்.
    உண்மையில் ஆத்மார்த்தமான ஆழமான பக்தியுடையவர்கள் கோபத்தில் உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை முள்போல  தைத்து மாறாத வடுவை ஏற்படுத்தும்.
   தீயவர்களிடமோ கெட்டவர்களிடமோ சகவாசம் வைக்கமாட்டீர்கள். பிடிவாதம் இருக்கும். அது உங்கள் குடும்பத்தினரிடம் மட்டும்தான்!உங்களது உடல்நலத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சி செய்வீர்கள்.
   பட்டிமன்றம் வழக்காடுமன்றம் போன்ற கூட்டங்களில் முன்னணியில் நின்று நகைச்சுவை ததும்ப பேசுவோர்    பெரும்பாலும் தனுசு ராசிக்காரர்களே! இளம்வயது முதலே உங்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் அதிகமாகவேயிருக்கும். எதையும் விளையாட்டுத் தனமாகவும் போக்கிரித்தனமாகவும் எடுத்துக்கொள்வதால் உங்கள் முயற்சியில் அவ்வப்பொழுது தடை வந்து விலகும்.
     குறைந்த உழைப்பில் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை உங்களிடம் அதிகமாகவே இருக்கும். ஏட்டுக்கல்வியைவிட்டு பொது அறிவும் பட்டறிவும், கேள்வி ஞானமும் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் சொந்தத்திலேயே  திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். குலத்தொழில், பரம்பரைத் தொழில், கைத்தொழில், மரபு சார்ந்த தொழில், போன்றவற்றை அதிகம் செய்பவர்கள் தனுசு ராசிக்காரர்களாகவே இருப்பார்கள்.
    தாய்ப்பாசம் அதிகம், சகோதரப்பாசம் குறைவு, உயர்கல்வி யோகம் இருந்தாலும் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது அரிது.  எந்த நிலையிலும் சட்ட விரோதமான காரியங்களை  ஒருபோதும் செய்யமாட்டீர்கள். நாட்டின் நீதித்துறை மருத்துவத்துறையில்  பணிபுரியும் வாய்ப்ப்பைப் பெற்றிருப்பீர்கள்.
         தற்போது குரு பகவான் உள்ள இடம் 8ஆம் இடமாகும். எனவே 4-7-2015 வரையிலும் நீங்கள் அமைதிகாக்க வேண்டும்.  8ல் உள்ள குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகியிருக்கும் பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டு, அறங்காவலர் பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் குடும்பத்தில் குழப்பம் வரலாம்.  சமூகத்தில் சிலர் வீணான கெட்ட பெயரெடுப்பார்கள். ஒருசில அரசு ஊழியர்கள் திடீர்                     இடமாற்றத்தைச் சந்திப்பார்கள்.  இன்னும் சிலர் கையூட்டுபெற்று காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள்.  சிலருக்கு சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து அவமானம் ஏற்படும். அதுவரை புதிய யுக்திகளைக் கையாள வேண்டும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கிவர வேண்டும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தை 5-7-2015 வரை சற்று தள்ளிவைக்க வேண்டும்.
  5-7-2015  முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9ல் வரும்போது உங்கள் வாழ்வில் வசந்த காலம், துவங்குகிறது.  குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்தில் சூரியன் வீட்டில் சிம்மத்தில் வருகிறார். தனது சொந்த வீடான   தனுசை 5ஆம் பார்வையால் பார்ப்பது விசேஷம்.
    வியாபாரிகள் நல்ல லாபத்தைக்காண்பார்கள். ஒருசிலர் புதிய வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். மாணவர்கள்  கல்வியில் உயர்வார்கள் இது வரையில்  வாழ்க்கையில் இருந்துவந்த தடை தாமதங்கள் நீங்கும்.  அவர்கள் காதல் திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.
     சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். சனி பகவானின் மூன்றாம் பார்வை அவரின் முதல் வீடான மகரத்தில் விழுகிறது. மேலும் சனி 29-7-2015 வரையிலும்  வக்ரம் அடைகிறார். இந்தக் காலகட்டத்தில் நன்மையே நடக்கும்.
      16-12-2014 முதல்  விரயச்சனி நடைபெற்று வருவதால் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும். ஒரு சில அரசியல்  பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். ஒருசிலர் கோர்ட், கேஸ் என அலையக்கூடும்.
     இப்போது கூட்டுத் தொழில் செய்கிறவர்கள் கவனமுடனிருப்பது  நல்லது.  உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துப் பேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.  உடல்நிலையில் அதிக பாதிப்புகளைக் கொடுக்க மாட்டார். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.  பழைய கடன்கள்  பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவரும்.
      ராகு பகவான் 21-6-2014  முதல் உங்கள் ராசிக்கு 10ல் கன்னி வீட்டில் இருக்கிறார். எப்போதுமே 10ல் உள்ள ராகு பகவான் வருமானத்தை அதிகரிப்பார். ஒருசிலர் வெளிநாடு சென்று அதிக லாபத்தைப் பெறுவார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்களே முடிவு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள். திடீர் பணக்காரர்கள் ஆவார்கள்.  சொத்துப்பிரச்சனைகளில் சமூகமான முடிவுகள் வரும். பங்காளிகள் சண்டை  தீர்ந்து  ஒற்றுமை கூடும். தடைப்பட்டுவந்த மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
    உங்கள் கூட்டாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கிவிடாதீர்கள். புதிய கூட்டாளிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள்.  குடும்பத்தில் காணாமல்போன பொருட்கள் யாவும் கிடைக்கும். தொலைபேசியில் நல்ல செய்திகள் வந்து சேரும். மனைவி மக்கள் கேட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொடுப்பீர்கள்.  தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள்  நல்ல முடிவுக்கு வரும்.
   கேது உங்கள் ராசிக்கு 4ல் உள்ளார். எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பக்குவத்துடன் செயல்படுவீர்கள். படித்து வேலைதேடும் உங்கள் பிள்ளைகள் இந்த ஆண்டில் நல்ல வேலைகளைப் பெறுவார்கள். ஒருசிலர்  மத்திய அரசு  வேலைகளுக்குச் செல்வார்கள்.
   வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.  வீடு, மனை வாங்க  போட்ட திட்டம் நிறைவேறும்.  பூர்வீக சொத்துக்களில் பங்காளிகளின் மத்தியில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். ஒரு சிலரின் பூர்வீக சொத்துகளில் வம்பு, வழக்கு ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். கொடுக்கல் - வாங்கலில் ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சீராகும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள்.
      அரசுப் பணீயாளர்கள் தங்களின் நியாயமான செயல்களால் மட்டும் பணியிட மாற்றத்தில் நல்ல இடத்தைப் பெற முடியும். வெளிநாட்டிலிருக்கும் அன்பர்கள்   வேறுநாடு சென்று தொழில் செய்ய போட்ட திட்டம் நிறைவேறும்.
   இதுவரை  சில தீய சக்திகள் செயல்பட்டுவந்தன. அவை விலகிச் செல்லும் சமுதாயத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஒருசிலர் செல்வவளம் பெற்று முக்கியஸ்தர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள்.
பெண்கள்
   பெண்கள்  இந்த ஆண்டும்  எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  திருமணமாகாத பெண்களுக்கு நல்லவரன் அமைந்து திருமணம் நடக்கும்.  ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம்  கிட்டும்.  புதிய நகைகள் வாங்கலாம். 
 தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழிலதிபர்கள், வியாபாரிகள், அதிகமாக உழைக்கவேண்டும். உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதை தவிர்க்க  வேண்டும். பண விஷயத்தில் எந்த கஷ்டமும்  வராது. அதே நேரத்தில் ஒருசிலர் வியாபாரத்தில் சில விரயங்களைச் சந்திப்பீர்கள்.
மாணவர்கள்
       மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வியில் உள்ள மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷ்னில்  தேர்வு அடைவார்கள்.   ஜீன் வரை கவனச்சிதறல் கூடாது. நண்பர்களுடன்  அரட்டை, பொழுது போக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  மூல நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரையிலும் 2 பங்கு லாபம் உண்டு. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் 2 பங்கு லாபம் உண்டு. மார்கழி முதல் பங்குனி வரையிலும் வருமானம் சீராக இருக்கும்.  சேமிப்புகள் உயரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் லாபத்தைப் பெறுவீர்கள்.
  பூராட நட்சத்திரக்காரர்களுக்கு
   சித்திரை முதல் ஆடி வரையிலும் உங்களுக்கு 5 பங்கு லாபம் வரும். இது உங்களுக்கு பொற்காலம். வீடு நகை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
    மார்கழி முதல் பங்குனி வரையிலும் ஓரளவு வருமானம் உண்டு. சிக்கனமாக செயல்பட வேண்டும்.
 உத்திராட (1ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும்  லாபம் குறைவு வருமானம் குறைவு. ஆவணி முதல் கார்த்திகை வரை லாபம்  வருகிறது.
 மார்கழி முதல் பங்குனி வரை லாபம் உள்ளது. நினைத்த காரியங்கள் கைகூடும்.  லாபம் பெருகும். குடும்பத்தில் நிம்மதிபெருகும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
     சனிக்கிழமைகளில் நரசிம்மரை வணங்கிவந்தால் நலம்பெறலாம். ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாளை வணங்கிவந்தால் சிரமம் குறையும். சனிக்கிழமைகளில் வில்வமரத்திற்கு சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து தெளித்து மரத்தை ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும்.  முடியாதவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
வாழ்க வளமுடன்                                                                                   மகரம் ராசி அன்பர்களே! 
   (உத்திராடம், 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய)
  மகர  ராசி அன்பர்களே!
        தனக்கு நிகர் யாரும் இல்லையென அடிக்கடி  கூறிக்கொண்டே இருப்பவர்கள். வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதில் அளவில்லாத பிரியமுடையவர்கள்.
     புகழ், கீர்த்தி, அந்தஸ்துடன் விளங்கும். மனைவிமேல் அளவிக்கு அதிகமான பாசம்வைத்திருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள். அடிக்கடி வீட்டை மாற்றிக்கொள்ள ஆசைப்படுவார்கள். சொல்லில் ஒருவிதமான உறுதிப்பாடு தெரியும். இசை என்ற இன்ப வெள்ளத்தில் அடிக்கடி நீந்திக்கொண்டே இருப்பீர்கள்.  யாரிடமிருந்தும் டன் வாங்கி வாழவும் கூடாது என்ற பிடிவாதம் உங்களிடம் இருக்கும்.
      தாய்ப்பாசம் அதிகமாக இருக்கும். ஆனால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுக்கு எதாவது ஒரு நோய் வாட்டிக்கொண்டேயிருக்கும்.  இருப்பதைக் கொண்டு  சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவர்கள். பொதுவாக உயர்கல்வி அமையும் பாக்கியமுண்டு. உங்கள் இல்வாழ்கையில் மனைவி ஒரு புத்திசாலி மந்திரியாகவே அமைவார். பெண்  குழந்தைகளே அதிகம் பிறக்கும்.
     உங்கள் குழந்தைகளால் நீங்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்களது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தனியொரு மனிதனாக இருந்தாலும்  உங்கள் முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் ஒரு பெரிய உற்றார்-உறவினர் கூட்டத்தையே சேர்த்துவிடுவீர்கள்.
     உங்களது  அவசரபுத்தியால் பல நல்ல சந்தர்ப்பங்களையும், முன்னேற்றங்களையும் நழுவவிட்டிருப்பீர்கள். ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். எதையும் பெரிய  அளவில் செய்யும் திறமைகொண்டவர்கள். ஆடை  விஷயங்களில் விலையுயர்ந்த ஆடம்பரமான ஆடைகளையே உடுத்துவீர்கள். நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு சரியான அளவில் சாப்பிடுபவர்கள்.
    எதிரிகளை மன்னிக்கும் குணம் உங்களிடம் கிடையாது. பழிவாங்கும் எண்ணமே அதிகமாக இருக்கும்.
  குரு பகவான் 4-7-2015 வரை 7ல் அமர்ந்து நல்ல பலன்களை வழங்குவார். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார வளம் மேம்படும். வீடு, மனை வாங்கலாம்.
     இந்தக் காலகட்டத்தில் ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கிறவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து அதன்மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். தனியார் துறையில் வேலையிழந்து வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு கம்பெனிகளில் புதிய பொறுப்புகளில் அமர்வார்கள்.  ஒருசிலர்  புதிதாக நெல் அறுவடை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்களை வாங்குவார்கள்.  நீண்டகாலமாக குடும்பத்தில் தடைப்பட்டு வந்த  சுபகாரியம் நடந்து முடியும். அரசாங்க கடன்களை அடைத்து நிவர்த்தி பெறுவீர்கள்.  ஒருசிலர் அடகுவைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள்.
    4-7-2015  வரையிலும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 7ல் நின்று மேற்கண்டவாறு நல்ல பலன்களை வழங்குவார்.
   5-7-2015 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8ல் அமர்வார். அவர் சிம்மத்தில் அமர்ந்து சொந்த வீட்டை 5ம் பார்வையாகப் பார்ப்பதால் கூடுதல் உழைப்பையும், லாபத்தையும், தருவார்.  சிம்மத்தில் குரு பகவான் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வீணான மனக்குழப்பம் உண்டாகும்.
     குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு எனவே குரு 8ஆம் இடத்தில்  சாதகமற்று இருக்கிறாரே என்று நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அது உங்களுக்கு பாடம்புகட்டுவது போலதான் இருக்குமேயன்றி தண்டனை கொடுப்பதாக அமையாது.
   ஒருசிலர் தேர்தலில் வெற்றிபெற்று, அமைச்சர் பொறுப்புக்கும் வர வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.  27 கறுப்பு கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து எப்போதும் பர்சில் வைத்துக் கொள்ள அனைத்தும் சாதகமாக நடக்கும்.
   சனி பகவான் அருளால் தடை, தாமதங்கள் அனைத்தும் மாறும் ஒருசிலருக்கு மாமியார் வீட்டு சொத்து வந்துசேரும்.  ஒருசிலருக்கு எதிர்பாரத யோகமுண்டு. சிலருக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கும். நீண்டகால திட்டங்களும், ஆசைகளும், நிறைவேறும். குடும்பத்தில் இதுவரை  நடந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கடந்த காலத்தில் உங்கள் அனுபவத்தில் நிறைய இழப்புகளை அடைந்திருப்பீர்கள்.
    உங்கள் ஆரோக்கியத்தை பேணிகாக்க  வேண்டும் ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். நிழல் கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ல் கன்னி வீட்டில் உள்ளார். அதே நேரம் அவரால் பொன், பொருள், கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் கூடும்.  பூமி, பொருள், அழியாச் செல்வம் வரும். வீட்டுக்கு பயன்தராமலிருந்த  உங்கள் பிள்ளைகள் இனி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
      ராகு 9ல் உள்ள இந்தக் காலகட்டத்தில் இயந்திரங்களைக் கையாள்வோர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். வயல்வெளி, காட்டுப்பகுதியில் வேலைசெய்பவர்கள், பாம்புகளால் ஆபத்து வராதபடி எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.
      புதியவர்களை தொழில் கூட்டாளிகளாக சேர்க்கும்போது அவர்கள் ஜாதகத்தைப் பார்த்து சேர்க்க வேண்டும்.  குடும்பத்தில் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் கைகூடும்,
   கேது பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான மீனத்தில் உள்ளார். ஆனால் உங்கள் கூட்டாளிகள் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்துநீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
     நீங்கள் பெருமையாகவும், உதவியாகவும் நினைத்த தாய்வழி உறவுகள் இப்போது கெடுதலாகத் தோன்றும். வீடு, மனை, வாசல், விருத்தி ஏற்படும். குடும்பத்திலும் சுற்றத்திலும் இருந்துவந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
   செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு வர உறவில் பகை வராது. அரசுப்  பணியில் உள்ளவர்களுக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். ஒருசிலர் பதவி உயர்வோடு மாறுதலில் செல்வார்கள்.
 பெண்கள்
     ஆண்டின் ஆரம்பத்தில் பணத்திற்கு எந்த குறையும் இல்லை. பின்னாட்களில் சிறிது சிரமம் வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு 4-7-2015 க்குள் திருமணம் முடிவுக்கு வரும். உடன்பிறந்தோரிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும்.  விலகிச் சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  லாபம் அதிகரிக்கும். அனுகூலமான போக்கு காணப்படும். அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவித்தொகை 4-7-2015 க்குள்  கிடைக்கும். ஒருசிலர் தீய நண்பர்களின் சேர்க்கைக்கு ஆளாகி அவதியடைய வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.
மாணவர்கள்
     இந்த கல்வியாண்டில் நடைபெறும் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அடுத்த கல்வியாண்டில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
உத்திராட (2,3,4ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும் சீரான வருமானம் இல்லை.  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் குறைவில்லை. செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல பலன்களே  உருவாகும். அனைத்து காரியத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
    மார்கழி முதல் பங்குனி வரையிலும் எப்பொழுதுமுள்ள வருமானத்துடன் உதிரி லாபங்கள் கிடைக்கும். இப்போது நீங்கள் மனச் சோர்வு இல்லாமல் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள்.
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் கூடுதலான லாபத்தையும், உதிரி வருமானங்களையும் பெறுவீர்கள். அது உங்களுக்குக் கைகொடுக்கும்.
  ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது.  எனவே நீங்கள்  சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  புதிய கடன்கள்  வாங்காமல் தள்ளிப்போட வேண்டும்.
அவிட்ட (1,2ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரை 6 பங்கு லாபம் உள்ளது. ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் குறைவாக உள்ளது.
    மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சிறப்பாக இல்லை. எனவே சிக்கனத்தைக் கடைப்பிடித்து சீராக வாழவேண்டும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
    ஒவ்வொரு திங்கள் கிழமையிலும்  சிவபெருமானுக்கு ரோஜா பூக்களால் அர்ச்சனைசெய்து நன்மைபெறலாம். ருத்ராபுஷேகம் செய்துவந்தால் சகல செளகரியமும் கிடைக்கும். பச்சரிசி அபிஷேகம் செய்வது சிறப்பு. அப்படி செய்துவர சிவபெருமான் உங்களுக்கு நன்மையே செய்வார்.
வாழ்க வளமுடன்                                                                                  கும்பம்   ராசி அன்பர்களே!        
 (அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய)
 கும்ப ராசி அன்பர்களே!
          செய்யும் தொழிலே தெய்வம்; இயற்கையே இறைவன் தர்மமே தவம் என்ற கொள்கையுடையவர்கள் நீங்கள்.
  ஊருக்கு உழைத்திடல் யோகம் என்பதற்கேற்ப பொது நலத்தொண்டு  புரிபவர்கள்  பெரும்பாலும் கும்ப ராசிக்காரர்களாகவே இருப்பர்.  மற்றவர்களுக்கு போதனை செய்வது வழிகாட்டுவது பொதுநல சேவை  சம்பந்தமான தொழில்துறை அமையும். நல்ல பொறுமைசாலிகள் மற்றவர்களைப் பார்த்தவுடன் அவரைப்பற்றி எடை போட்டு துல்லியமாக ஆருடம் சொல்பவர்கள்.
   சொந்த வேலைகளில் அதிகமாக ஆர்வம் இருந்துகொண்டே இருக்கும். வீண் பிடிவாதம் முரட்டுக் குணம், வரட்டுக் கெளரவம் முட்டாள் தனமான யோசனையால் இவர்களைத் தேடி வந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் தொலைத்துவிடுவர். இவர்கள் வாழ்க்கையில் கடன் பிரச்சனையோ, கடன் தொல்லையோ இருக்க வாய்ப்பு குறைவு பழமையான விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.  சித்த வைத்தியம் ஆயிர்வேதம் வர்மக் கலை, மாந்தீரிகம், புதையல் எனத் தேடித்தேடி அலைபவர்கள் அலைந்து அலைந்து ஒன்றும் கிடைக்காமல் முடிவில் நாத்திகம் பேசுபவர்களும் கும்ம ராசிக்காரர்களே.
   குரு பகவான் ராசிக்கு 6ல் 4-7-2015 வரை இருப்பார். அதுவரை மனநிம்மதியை இழக்கச் செய்வார். தடுமாற்றத்தை ஏற்படுத்துவார். இருந்தாலும் அவர் இருக்கும் இடத்திலிருந்து 7ஆம் பார்வையாக தன் சொந்த வீட்டைப் பார்க்கிறார்.   ராசிக்கு 6ல் உள்ள குருவால் அதிக துன்பங்கள் ஏற்படாது. அரசுப் பணியிலுள்ளவர்கள் தங்கள் பணியை மிகவும் எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும்.  இதனால் கோர்ட், கேஸ் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
      குரு பகவான் 6ல் உள்ள காலகட்டத்தில் வாகனங்களில்  மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும்.  கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேர்வதில் தாமதம் ஏற்படும்.
   5-7-2015  குரு பகவான் 7ஆம் இடத்தில் சிம்மத்தில் அமர்வது சிறப்பு ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கின்றவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள்.
  தனியார் துறையில் வேலைபார்த்து தற்சமயம் வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு கம்பெனியில் புதிய பொறுப்புகளில்  அமர்வார்கள்.
      ஒருசிலர்  புதிதாக நெல் அறுவடை எந்திரம், ஜே.சி.பி போன்ற எந்திரங்களை வாங்கி கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள்.  அரசாங்க கடன்களை கட்டி நிவர்த்தி பெறுவீர்கள். ஒருசிலர் அடகுவைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள். நீண்ட காலமாக குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் .
  இக்கால  கட்டத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
     இந்த மன்மத வருடத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10ல் விருச்சிகத்தில் இருக்கிறார். உங்கள் சுயஜாதகத்தை ஒருமுறை பார்த்துக்கொள்ள வேண்டும். சுயஜாதகத்தில் 10க்குரியவர் 6ல் வந்தால் கூட்டுத் தொழிலில் ஏமாற்றம் வரும். தீய பழக்க வழக்கத்தால் அளவுக்கு அதிகமாக கடன்பட நேரிடும். சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.   சிலர் திட்டமிட்டபடி  வெளிநாடு செல்வார்கள். லாகிரி வஸ்துக்கள் விற்பனை செய்கின்றவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசுப் பணியாளர்களில் நல்ல நடத்தை உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணிமாற்றமும் பதவி உயர்வும் வந்து சேரும்.
      தற்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் உலாவருகிறார்.  ராகு பகவான் தடை, தாமதப்படும் அனைத்து காரியங்களையும் வெற்றியாக உன்னதமாக மாற்றித்தருவார்.  நல்ல நண்பர்களின் ஒத்துழைப்போடு பல நல்ல காரியங்களை நடத்திமுடிப்பீர்கள். பொன் பொருள், வாங்க போட்ட திட்டம் தடையுடன் நிறைவேறும்.  திருமணமாகாதவர்களுக்கு  வருமானமும் பெருமையும் வந்துசேரும்.  மூதாதையர்கள் சொத்துப் பிரிவினையில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.
    கணவன் - மனைவி பேச்சில் கடுமை கூடும். வீட்டில் இதுவரை தடைப்பட்டுவந்த திருமண பேச்சுக்கள் நல்லபடியாய் நடக்கும். ஒருசிலர் மத்திய அரசில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். வீட்டில் சுபச் செலவுகள் நடக்கும். தொல்லைக்கொடுத்த வியாபாரிகள் விலகிச் செல்வதால் வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள்.
    உங்கள் ராசிக்கு 2ல் கேது உள்ளார்.  பொதுவாக 2ஆம் இடத்தில் கேது வந்தால் வாழ்க்கை வசந்த காலமாகும். கேட்ட இடத்தில் உதவிகள் உடனே கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிகிறவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் கூடுதல் லாபத்தை அடையலாம்.
இதுவரை உங்களைக் கண்டுகொள்ளாத உறவுகளும், உடன்பிறப்புகளும் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். வீடு கட்ட  போட்ட திட்டம் நிறைவேறும். கட்டிய வீட்டை வாங்க நினைப்பவர்களும் வாங்கலாம்.  படித்த பிள்ளைகள், இளைஞர்கள், வீட்டு நிலையை உணர்ந்து வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள்.  ஒருசிலர் விசா செலவு கூட இல்லாமல், வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இப்போது இறைவன் உங்கள் பக்கம் உள்ளார்.
 பெண்கள்
        வேலைக்குப் போகும் பெண்கள் சலுகைகளைப் பெறுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் வந்து சேரும்.  எல்லா பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் தடைப்பட்டுவந்த அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
 தொழிலதிபர்கள், வியாபாரிகள்
     தொழில் வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும்.  ஆண்டின் முற்பகுதியில் பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.  நீங்கள் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  5-7-2015 முதல் லாபம் அதிகரிக்கும்.
மாணவர்கள்
      இந்தக் கல்வியாண்டில் நடைபெறும் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அடுத்த கல்வியாண்டில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே மெரிட்டில் பாஸ் செய்ய முடியும்.
 அவிட்ட  (3,4ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
      ஆவணி முதல் கார்த்திகை வரை சீரான வரவு உள்ளது. வறுமை நிலை வராது. பொருளாதாரம் உயரும். புதிய வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
      மார்கழி முதல் பங்குனி வரை வருமானத்திற்கு குறைவு வராது.
 சதய நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும் 1 பங்கு லாபம் உண்டு. ஆவணி முதல் கார்த்திகை வரை சீரான வரவு உள்ளது. 
  மார்கழி முதல் பங்குனி வரை வருமானத்திற்கு குறைவுவராது. செளபாக்கியமும் தனலாபமும் ஏற்படும். எதிர்காலம் யோகம் தரும்.  
 பூரட்டாதி (1,2,3ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் 4 பங்கு லாபம் உள்ளது. இது கூடுதலான வருமானத்துக்கான அடையலாம்.  பின்னாளில் அது உங்களுக்குக் கைகொடுக்கும் புதிய பொருட்கள் வாங்கலாம். ஆனால் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது தேவை தானா என்று யோசித்து வாங்க வேண்டும்.
    ஆவணி முதல் கார்த்திகை மாதம் வரையிலும் வருமானக் குறைவு உள்ளது.  இப்போது கஷ்ட ஜீவனம் வருவது தெரியும். எனவே தேவைகளை மட்டும் வாங்க வேண்டும்.
      மார்கழி முதல் பங்குனி வரையிலும் சீரான வருமானம் இல்லை. காரியபங்கம் ஏற்படும். அலைச்சல் ஏற்படும். எனவே நீங்கள்  எதிலும் நிதானித்து, தேவையான செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும்.
 ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
       பெளர்ணமி திதியில் அருகிலுள்ள அம்மனை வழிபட்டு வரவேண்டும். பசுமாட்டுக்கு அகத்திக் கீரை கொடுத்துவரலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு  அன்னதானம் செய்யலாம். முடியாதவர்கள் மாதம்தோறும் 27 வேப்பிலையை வீட்டில் வைத்து வணங்கி பின்பு, அதனை ஏரியில் அல்லது குளத்தில் போட வேண்டும். வேண்டியது கிடைக்கும். (கிணற்றில் போடக்கூடாது).
வாழ்க வளமுடன்.                                                                                   மீனம்  ராசி அன்பர்களே!  
    பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
 மீன ராசி அன்பர்களே!
      இறைநம்பிக்கையும் ஆன்மிக பலமும் நிறைந்தவர்கள் நீங்கள் உறுதியான மனமும், திடமான நம்பிக்கையும்,  தன்னடக்கமும் ஒருங்கே கொண்டவர்கள்.
     எந்த ஒரு விஷயமும் முழுமையாகத் தெரியாமல் எல்லாம் தெரிந்ததைப் போல  பேசுபவர்கள். இவர்களுக்கு     யாராவது  புத்திமதி சொன்னால் பிடிக்காது. இவர்கள்  எப்பொழுதும் மற்றவர்களுக்கு போதனை செய்வதையே விரும்புவார்கள்.
      தரம், அந்தஸ்து தகுதி பார்த்தே பழகுவார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அப்படி  நடந்து கொள்ள மாட்டார்கள். உணவின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புளிப்புச் சுவையின் மீது அதிக ஈடுபாடு இருக்கும்.
       மனதில் நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உலக விஷயத்தில் பலர் எப்பொழுதுமே கிணற்றுத் தவளைதான். அதை ஒருக்காலும்  ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள்.  உங்கள் சிந்தனை ஓட்டம் எப்போதுமே தாய்வீடு, தாய்ப்பாசம்  தம்பி, தங்கைகள்   என்றே இருக்கும். அதிக  கனவுத் தொல்லைகளால் அவதிப்படுவீர்கள்.
     இந்த மன்மத ஆண்டில் குரு பகவான் 4-7-2015 வரை உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் உள்ளார்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்திவைப்பார்.  பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார்.
    குரு பகவான் சஞ்சரிக்கும் 5ஆம் இடம் உங்கள் ராசிக்கு பூர்வ  புண்ணிய ஸ்தானம்.  குலதெய்வத்தின் அருளும், குருவின் அருளும் கிடைக்கும்.  ஒருசிலர் பூர்வீகத்தில் புதிய வீடு கட்டுவார்கள்.  பிரிந்து  சென்ற தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள் வழக்குகளை விலக்கிக் கொண்டு ஒன்று  சேர்வார்கள்.
     வங்கிக்கடனை அரசு மானியத்துடன் பெறுவார்கள்.  அரசியல் பிரமுகர்களுக்கு எட்டாக் கனியாக இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும்.  சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும்.  பழைய கடன்பாக்கிகள் பைசலாகும்.  தேர்வில்  வெற்றியடைந்து, உயர்பதவிக்கான உத்தரவையும் பெறுவீர்கள்.
      உங்கள் ராசிக்கு 6ல் சிம்ம வீட்டில் குரு பகவான் 5-7-2015க்குப்பின் சஞ்சரிக்கிறார். ஏனெனில் அவர் 5ஆம் பார்வையாக தன் சொந்த வீட்டைப்  பார்க்கிறார். குரு ஒரு ராசியில் அமர்ந்து தன் சொந்த வீட்டைப் பார்த்தால் அவர் 12 ராசிக்காரர்களையும் அதிகமாக பாதிக்கமாட்டார்.    
    குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள்.  ஒருசிலர் அரசு  மானியத்துடன் வங்கிக்கடனைப் பெறுவார்கள்.  சமூகத்தில்  நல்ல அந்தஸ்தும், மரியாதையும் உருவாகும்.  பழைய  கடன்பாக்கிகள் பைசலாகும். 
        குரு பகவான் 5-7-2015க்குப்பின் உங்கள் ராசிக்கு 6ல் சிம்ம வீட்டில் சஞ்சரிக்கிறார்.  குரு 6ல் உள்ள காலம் வாகனங்களின் மிகவும் எச்சரிக்கையாகச்  செல்ல வேண்டும். ஒருசிலருக்கு கை,  கால்களில் பந்தனம் ஏற்படும். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
   சனி பகவான் உங்கள் ராசிக்கு சாதகமற்ற நிலையிலுள்ளார் என்றாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும்.  அவர் விருச்சிக ராசியில் அமர்ந்து 3,7,10ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.  7ஆம் இடத்துப் பார்வையால் காரிய  அனுகூலமும் பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் ஏற்படும். 10ஆம் இடத்துப்பார்வையால் பகைவர்களின் சக்தியை முறியடிப்பீர்கள். உங்களது ஆற்றல் மேம்படும். உங்களுக்கு பலவகையிலும் மதிப்பும்,  மரியாதையும் கூடும்.
      ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7ல் உள்ளார். இப்போது நீங்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் உள்ளவர்கள் ஓரளவு நன்மைகளை அடைவார்கள்.
 பொதுவாக 7ல் உள்ள ராகு அளவில்லாத பொருட்செல்வத்தை தருவார். ஆண் - பெண்   இருபாலருக்கும் நல்ல வரன்கள் அமையும். அரசுப் பணியில் உள்ளவர்கள் நினைத்த இடத்திற்கு பணப்புழக்கம் கூடும்.
   தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள்.  தீயவர்கள் உங்கள்  சேமிப்புகளை லாபமில்லாத வகையில் முடக்கப்பார்ப்பார்கள்.  அரசுப் பணியில் உள்ளவர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலில் செல்வார்கள்.  ஏற்கெனவே வெளிநாடு சென்றுள்ளவர்கள் இன்னும் அதிகமான சம்பளத்துடன் கூடிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
பெண்கள்
     பெண்கள் மிகவும் நிதானமாகவும் சிக்கனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். கணவருடன் கருத்து வேறுபாடு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.  குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம்  கிட்டும். பொன், பொருள் நகை வாங்கிச்சேர்ப்பீர்கள். வேலைக்குப்போகும் பெண்கள் அதிக சலுகைகளை அடைவார்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள்
      தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 4-7-2015க்குள் புதிய தொழில் துவங்க அனுகூலம் உண்டு. கடல் வாணிகம், டீசல், பெட்ரோல், வாசனை திரவிங்கள், பாதரசம் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மாணவர்கள்
     மாணவர்கள் 5-7-2015க்கு முன்பு நடக்கும் இந்த கல்வியாண்டில் அதிக மதிபெண்களைப் பெறுவார்கள். அதன்பிறகு கல்வியில் மிகவும் கவனம் தேவை.
பூரட்டாதி (4-ஆம் பாதம்) நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு வருமானம் உள்ளது.
   ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் சிறப்பாக இல்லை. எனவே மிகவும் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். கடந்த காலத்தில் சேமித்தது இப்போது உங்களுக்குக் கைகொடுக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு
     சித்திரை முதல் ஆடி வரையிலும் 7 பங்கு வருமானம் உள்ளது.  குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
    ஆவணி முதல் கார்த்திகை வரையிலும் வருமானம் சிறப்பாக இல்லை. எனவே மிகவும் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும்.
   மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உண்டு. கூடுதல் வருவாயைப் பெற சிறப்பாக உழைக்க வேண்டும்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு
    சித்திரை முதல் ஆடிவரையிலும் 2 பங்கு லாபம் உண்டு.  குடும்பத்தில் வருமானம் சேமிப்பு கூடும். பொருள் வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும்.
   ஆவணி  முதல் கார்த்திகை வரை வருமானத்திற்கு குறைவில்லை. எப்போதும் போல குடும்பச் செலவுகள் இருக்கும்.
    மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உள்ளது. கடந்த காலங்களில் உள்ள சேமிப்பு இப்போது உங்களுக்கு கைகொடுக்கும். எதிர்காலம் நல்ல பலன்களைத் தரும். தனலாபம் உண்டு.
ஆண்டு  முழுவதும் நற்பலன் பெற்றிட பரிகாரம்
   தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவருவது நல்லது. மேலும் 27 கறுப்பு  கொண்டைக்கடலை எடுத்து அதனை மஞ்சள் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து இந்த ஆண்டு முழுவதும் வணங்க நல்ல பலன்களை அடைவீர்கள்.
வாழ்க வளமுடன்

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...