புதன், 21 நவம்பர், 2018

கன்னி ராசி காரகத்துவம்


        
கன்னி ராசி உருவம் கன்னிப் பெண்  பெண் ராசி இரட்டை ராசி  உபய ராசி  குணம் அமைதி  தத்துவம் நிலம்  திசை தெற்கு
கன்னி ராசியின் தன்மைகள்
1. பூமி ராசி
2. நிலையில்லாத் தன்மை
3. வயிற்றுப் பகுதி
4. அமைதியான
5. பாசமுடையது
6. பாதி பயனளிக்கும் ராசி
7- மலட்டு ராசி
8 .மனித குணம்
9. குறுகியது
10. இரவு பொழுது
11.வைத்தியசாலை
12. மருந்து கலக்குமிடம்
13. துணிகள்
14. உணவு வகைகள்
15. கிழங்கு வகைகள்
16. நிபுணத்தன்மை
17. முதலுதவிப் பெட்டி
18. நூல் நிலையங்கள்
19. புரட்டாசி மாதம்
20 நகரம்
சுபர் புதன் சுக்கிரன்  பாவி செவ்வாய், சந்திரன், குரு பாதகாதிபதி குரு

கன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான  காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.
கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும், பத்திரங்கள் வாங்கவும், அவற்றைதமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு  தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது  ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய சதயம், பூரட்டாதி, ஆயில்யம், பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும்  விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும்.  வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய, வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய, அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க,
திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த திருவோணம், அவிட்டம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டியு நட்சத்திரங்கள் அசுவனி, மகம், பரணி, பூரம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, பரணி, பூரம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும், உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் தொடங்க,தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும் தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவிலியிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும் தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
கன்னியின் மனநிலை (Mental Tencies )
1 சுறுசுறுப்பான மனநிலை உடையவர்கள்
2 கலைகள் இசையை விரும்புவர்கள்
3. எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்
4 நிலையற்ற தன்மையுடையவர்
5. தன்னம்பிக்கை குறைவு
6. கணக்கில் புலி, மேதைகளாக இருப்பார்கள்
குணாதிசயங்கள்
1 எப்போதும் மாறத் தன்மை
2 வியாபாரத்துக்குள்ள இயற்கையான ஆற்றல்
3. மிக ஊக்கமுடைமை
4. மிக விரைவு
5. நேர்மை
6 பகுத்தறிவு
7. யோசனையுடைமை
8. மிதமிஞ்சிய எச்சரிக்கை
9. சுகாதார அறிவு
10. தோட்டம் போட விருப்பம்
கன்னி ராசி காட்டும் நிலப்பகுதி
1 தானிய நிலங்கள்
2. தோட்டம்
3 நகரப் பகுதி..
4.பெருநகரங்கள்
5.வியாபர சந்தைகள்
6 கல்வி கூடங்கள்
7. இயற்கை காட்சிகள் நிறைந்த இடம்
8 பூங்காவனம்
9. நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள்
10. விளையாட்டு மைதானம்
கன்னி ராசி தொழில்கள்
1 கணக்கர்
2. தணிக்கையாளர்
3 பலவிதமான வியாபாரம் செய்தல்
4. ஆசிரியர்
5. சில்லறை வியாபாரம்
1.வாழ்க்கை வாழ்வதற்கே என நம்புகிறவர்கள்
2. உன்னதமான மனிதர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு மகிழ்வுடன் ஊழியம் செய்வார்கள்
3. பொதுவாக பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள்
4 பிறரைக் கவரும் வண்ணம் ஆடை அணிந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பர்கள்
5. இவர்களுடைய மதக் கோட்பாடுகள் தெளிவாக இருக்கும்
6. தர்மம் செய்தலில் விருப்பம் உள்ளவர்கள்
7 ஒரே நேரத்தில் பல வேலைகளை திறம்பட செய்தல்
8. கவிபாடும் வல்லமை கொண்டவர்கள்
9 தெய்வீக வழியில் நடப்பதில் விருப்பம் உள்ளவர்கள்
10. பிறரை இவர்கள் விரும்புவர்கள். எல்லோரும் இவரை விரும்புவர்கள்
11. சங்கீதத்திலும் நடன கலையிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள்
12. பிறந்த இடத்தை விட்டு மற்ற இடங்களில் வசிக்க விரும்புவார்கள் பொதுவாக மண வாழ்க்கையில் முரண்பாடுகள் உண்டு
கன்னி ராசி - பூந்தோட்டம், கல்விக்கூடங்கள், வியாபார இடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை ராசி வசிப்பிடம்.
புதன் தகவல் தொடர்பு என்பதாலோ என்னவோ மிக வேகமாக பதிவு வருகிறது
தொழில்கள் - கணிதம், பச்சை நிறப்பொருட்கள், ஆலோசகர், கமிஷன், தொலைத் தொடர்பு
தங்களை பகட்டாக காட்டிக் கொள்வர். கன்னி வாழை. தோப்பு வீடு. கன்னி நஞ்சை குஞ்சை வீடு, கன்னி  நாய், வீடு கன்னி புத்திர தாமதம் கன்னி, வியாபார அறிவு கன்னி,  காதல் வீடு கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக,இளமையாக,கவர்ச்சியாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக,கவர்ச்சியாக,இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக்கூறப்படுகிறது.கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். எனவே கன்னிப்பெண்கள் கூடுமிடங்களை கன்னி ராசி குறிக்கும். அலங்கார அறை,ஆற்றங்கரை,குளக்கரை,கிணற்றடி போன்றவை கன்னிப்பெண்கள் கூடுமிடங்களாகும். இவ்விடங்களே கன்னி ராசியின் வசிப்பிடங்களாகும்.(கிராமம்)
கன்னி ராசியில் புதன் ஆட்சி உச்சம் அடைகிறது
சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் அடைகிறது
கன்னி ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
உத்திரம் 2,3,4
அஸ்தம் 1,2,3,4
சித்திரை 1,2
புதன்
கிரகங்களில் உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதனாகும். புதனின் நிறம் பச்சையாகும். புதன் ராசி சக்கரத்தில் நகர்ந்து செல்லும்போது சூரியனுக்கு முன்னும் பின்னும் 28 பாகைகளுக்கு மேல் விலகிச்செல்லாது. இதனால் இந்த கிரகத்திற்கு அடிக்கடி வக்கிர கதி மற்றும் அஸ்தங்க கதி ஏற்படுகிறது. ஜோதிடத்தில் கிரக காரகங்கள் அனைத்தும் வானத்தில் உள்ள கிரகங்களையும் பூமியில் உள்ள பொருட்களையும் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளன.
கிரகங்களில் புதன் வேகமாக நகர்வதைப்போல் மனிதர்களில் இளைஞர்கள் மிகவும் வேகமாக செயல்படுவார்கள். கிரகங்களில் மிகச்சிறிய கிரகம் புதன் , இது முழுமையாக வளர்ச்ச்சி பெறாததை குறிக்கிறது. இது போல் மனிதர்களில் சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் முழுமையாக வளர்ச்சி பெறாதவர்களாகும். எனவே சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்களை குறிக்கும் கிரகம் புதனாகும்.
புதன் எப்பொழுதும் சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பதால், இதை துணை தேடும் கிரகம் எங்கிறார்கள். தனித்திருப்பது என்பது புதனுக்கு சாத்தியமில்லை. மனிதர்களில் இரண்டு பேர் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள் அல்லது காதலர்களாக இருப்பார்கள். எனவே புதனை நட்பு கிரகம், காதல் கிரகம் என அழைக்கிறார்கள். இரண்டு பேர் சேர்ந்தால் அவர்களிடையே ஒரு கருத்துப்பரிமாற்றம் நிகழும். இதன் அடிப்படையில் புதனை பேச்சுக்காரகன், தகவல் பரிமாற்றக்காரகன், தூதன், விவகாரகாரகன் என அழைக்கிறார்கள்.
கல்வி கண் போன்றது என்பார்கள், கண்ணுக்கு பார்வை என்பது சூரிய வெளிச்சத்தால் கிடைக்கிறது. வெளிச்சம் இல்லை என்றால் கண்ணுக்கு பார்வை கிடையாது. சூரியனுக்கு மிக அருகாமையில் இருந்து சூரிய வெளிச்சத்தை அதிக அளவில் நேரடியாக பெறும் கிரகம் புதனாகும். எனவே புதனை கல்விக்காரகன் என்கிறார்கள். வெளிச்சத்தில்தான் எதையும் தெளிவாக பார்க்கமுடியும். புத்தியால்தான் எதையும் தெளிவாக உணரமுடியும், இந்த அடிப்படையில் புதனை புத்திக்காரகன் எனவும் அழைக்கிறார்கள்.
புதன் எப்பொழுதும் சூரியனுடன் இணைந்தே இருக்கும் என்று பார்த்தோம். எனவே இணைப்பைக்குறிக்கும் கிரகம் புதனாகும். மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இணைப்பின் அடையாளமாக ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொள்வர். உடல் உறுப்புகளில் இணைந்தே இருப்பவை விரல்களாகும்,  எனவே கைகள் மற்றும் கை விரல்களைக்குறிப்பது புதனாகும். உடலில் தலைப்பகுதியையும் உடல் பகுதியையையும் இணைப்பது கழுத்தாகும் எனவே கழுத்தை குறிப்பது புதனாகும்.
வாக்கு என்பது நாக்கில் பிறக்கிறது என்றாலும்,நாக்கானது வாய்க்குள் பிற உறுப்புகளுடன் இணைந்தே செயல்படுவதாலேயே வார்த்தைகள் பிறக்கின்றன. பிறருடன் இணைந்தே செயல்படுவது புதனின் குணமாகும். எனவே புதன் வாக்குக்காரகன் எனப்படுகிறான். நாக்கை குறிக்கும் கிரகம் புதனாகும். கிரகங்களில் அடிக்கடி வக்கிர கதி, அஸ்தங்க கதி அடைவது புதனாகும். நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பார்கள். எனவே நாக்கு புதனுக்கு ஒப்பிடப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் சூரிய ஒளியை நேரடியாக முதலில் பெறும் கிரகம் புதனாகும். இது போல் மனித உடம்பில் சூரிய ஒளி தோல் மீது நேரடியாக படுகிறது. எனவே புதன் தோலுக்கு அதிபதியாகும். மனித உடம்பில் உடல் முழுவதும் சூரிய ஒளி விழுந்தாலும் , அதிகப்படியான சூரிய ஒளி நெற்றியின் மீதுதான் விழுகிறது. எனவே நெற்றியைக்குறிக்கும் கிரகம் புதனாலும். 
புதன் இணைப்பை குறிக்கும் கிரகம் என்று பார்த்தோம். இதன்படி மனிதர் எங்கெல்லாம் இணைகிறார்களோ அல்லது கூடி இருக்கிறார்களோ அந்த இடங்கள் அனைத்தும் புதனுக்குரிய இடங்களாகும். பள்ளிக்கூடம், கல்லூரி, விளையாட்டு மைதானம், திருமண மண்டபம், பூங்கா, நூலகம் போன்றவை மனிதர்கள் கூடும் இடங்களாகும். இந்த இடங்கள் அனைத்தும் புதனின் ஆதிக்கத்தில் வருபவையாகும்.
புதன் ஒரு தகவல் பறிமாற்றக்கிரகம் என்பதால் தகவல் தொடர்பு சார்ந்த பொருட்கள் அனைத்தும் புதனின் ஆதிக்கத்தில் வந்துவிடும். புத்தகம், பத்திரிக்கை, பிற ஊடகங்கள், எழுது பொருட்கள், கணணி, இணையம், தபால், தந்தி, தொலை பேசி, அலை பேசி, தொலைக்காட்சி, வானொலி போன்றவை புதனின் அதிக்கத்தில் இருப்பவையாகும். வியாபாரம் என்பது இரண்டு பேர்களுக்கு நடுவே நடப்பதாகும். எனவே வியாபாரத்தை குறிப்பது புதனாகும்.
புதனின் நிறம் பச்சை என்பதால் பூமியில் பச்சை நிறத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் புதனுக்குரியவையாகும். மரகதக்கல் பச்சை நிறமுடையது என்பதால் ,அது புதனின் ரத்தினக்கல்லாக கூறப்படுகிறது. பச்சைக்கீரை வகைகள் மற்றும் பசுமையான தோட்டங்களை குறிப்பது புதனாகும்.
புதன் கிரகத்தின் ஒரு பகுதி எப்பொழுதும் வெளிச்சமாகவும், மற்றொரு பகுதி இருட்டாகவும் இருக்கும். இதனால் இந்த கிரகத்தை இரட்டைத்தன்மையுடைய கிரகமாக பாவிக்கிறார்கள். புதனின் வெளிச்சப்பாகத்தை ஆணாகவும், இருண்ட பாகத்தை பெண்ணாகவும்                     பாவிக்கிறார்கள். இதனால் புதனை அலிக்கிரகம் என்கிறார்கள். மேலும் இரட்டைத்தன்மை உள்ளவைகள் அனைத்தும் புதனாக பாவிக்கப்படுகிறது. இதன் படி திருநங்கைகளை குறிப்பது புதனாகும். தெய்வங்களில் அம்சங்களில் சங்கர நாராயணர், ஹரிஹரன், ஐயப்பன் போன்றவை புதன் அம்சமாகும்.
புதனை ஏன் அலிக்கிரகம் என்கிறார்கள் என்றால், புதன் உருவத்தில் மிக சிறிய கிரகம், எனவே மனிதர்களில் முழுமையாக வளர்ச்சியடையாதவர்களை குறிக்கிறது. இதன் படி வயதிற்கு வராத ,பருவமடையாத ஆண்,பெண்களை புதன் குறிக்கிறான். பருவமடையாத ஆண், பெண்கள் கலவியில் ஈடுபட முடியாது. இதன் அடிப்படையிலேயே புதனை அலிக்கிரகம் என்கிறார்கள்.
பறவைகளில் பச்சை நிறமுடைய கிளி மனிதர்களைப்போல் பேசும் ஆற்றல் உடையது. மேலும் கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள் கிளியை பயன்படுத்துகிறார்கள். எனவே பறவைகளில் கிளியை குறிப்பது புதனாகும்.

புதன் ஆட்சி வீடு
மிதுனம் கன்னி
உச்சம் பெறும் வீடு கன்னி
நீசம் பெறும் வீடு மீனம்
புதன்
                புதன் தன்னுடைய சொந்த வீடான கன்னியில் 15வது பாகையில் உச்சமடைகிறான். கன்னி ராசியில் 15வது பாகை அஸ்தம் நட்சத்திரத்தைக் குறிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆகும். புத்திக்கு காரகன் புதனாகும். மனதில் தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும் குறிப்பவன் சந்திரனாகும். பொதுவாக புத்தி என்னும் அறிவு, உணர்ச்சிகளோடு இணைந்து செயல்படுவதில்லை. உணர்ச்சிகளோடு இணைந்து அறிவு செயல்படுமானால், அதைவிட உயர்ந்த நிலை வேறு எதுவுமில்லை என்று கூறலாம். புத்தியை நல்ல வழியிலும் செலுத்தலாம், தீய வழயிலும் செலுத்தலாம். ஆனால் புத்தியை நல்ல வழியில் செலுத்தும்போதுதான மிகப்பெரிய நன்மைகளை அடைய முடியும். உதாரணமாக அணசக்தியை அழிவு காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். ஆக்க காரியங்களுக்கு பயன்படும் போதுதான் அது சிறப்படைகிறது. புதன் தன் சொந்த ராசியில் உச்சமடைவதால் புத்தி கூர்மை சிறந்து விறங்கும். அதே சமயத்தில் உணர்ச்சிகளோடும் ஒத்துப்போகும். ஆகவே புதன் தன் சொந்த வீடான கன்னியில் சந்திரனின் நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தில் உச்சமடைவதே சிறப்பாகும்.
கன்னி தானிய கிடங்கு கன்னி தாய் வழியில் மனைவி  உள்ளூரில் மனைவி கன்னி ராசி  வறண்ட ராசி  புத்திர தாமதம்  தொழிலுக்காக, ஜீவனத்திற்காக வெளியூர், வெளிநாடு சென்றால் முன்னேற்றம்  ஆடு, மாட்டு பண்ணை,  நூலகம், உணவு கிடங்கு  கன்னிக்கு 4ல் செவ்வாய் வீட்டிற்கு அருகில் ரேஷன் கடை  ஜோதிட அறிவு  நாய், முயல் வீடு  நஞ்சை, புஞ்சை நிலம்  4க்கு உடையவன் காம திரிகோணமான 3, 7, 11 குரு பார்த்தாலும் தொடர்பு கொண்டாலும்  காமதேனுவை வணங்கலாம்,  இவர்களின் பெயரில் காம என்ற வார்த்தை சேர்க்கலாம்,  அஸ்தம் காதல் திருமணம் இரு தார யோகம் புத்திர தோஷம் சித்திரை சொத்து உண்டு கோவில் அருகில் வீடு பிரிந்து சேரக்கூடிய நட்சத்திரம் இயற்கையிலேயே வாக்கு பலம் ஆன்மீக பேச்சு
ஒருவனின் கல்வி, தாய்மாமன், இரண்டாவது மனைவி, வியாபாரம், நண்பர்களின் கூட்டு, வாக்கு சாதுர்யம் ஆகியவைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வித்யா காண்டம் பார்க்க வேண்டும்.

இது புதன் இருக்குமிடத்தையும் இதனோடு சேரும் மற்ற கிரகங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது ஆகும்.

ஒரு ஜாதகன் கௌரவம், அவனுக்குக் கிடைக்கின்ற இறையருள், அவனால் செய்யப்படும் நற்காரியங்கள், உத்தியோகம் மற்றும் தொழீல் அமைப்புகள், திருமணம், மனநிம்மதி ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜீவகாண்டம் பார்க்கவேண்டும்

இது குருவையும் அதைச் சார்ந்துள்ள கிரகங்களையும் அடிப்படையகாக் கொண்டு கணிப்பது ஆகும்..

ஒரு ஜாதகனின் மனைவி மற்றும் கணவனைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், சொந்த வாழ்க்கையில் ஏற்படும் சுகதுக்கங்கள் மனை மற்றும் நிலங்கள், ஆடை ஆபரணங்கள், செல்வ வளம், வாகன யோகம் ஆகியவைகளை அறிய இல்லற (களஸ்திர) காண்டம் பார்க்க வேண்டும்.
கன்னிராசி காலப்புருஸனுக்கு ஆறாம் வீடு 150.01to180டிகிரி வரை உள்ளது. நிலராசி  உபயராசி. உத்ரம்2'3;4;பாதங்கள் அஸ்தம் நான்கு பாதங்கள் மிருகசீரிசம் முதல் இரண்டு பாதங்களை உள்ளடக்கியது
புதன் ஆட்சி உச்சம்  சுக்ரன் நீசம் இரு கன்னிப் பெண்கள் உருவம் கொண்டது
இவர்கள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள்.ஏன் எனில் காலப்புருஸனுக்கு
ஒன்று எட்டின் செவ்வாய் நான்கின் சந்திரன் அஞ்சின் சூரியன் நட்சத்திரங்களை உள் அடக்கியது
பெரும்பாலும் அடுத்தவர்க்காக உழைப்பதிலும் வல்லவர்கள் தன்காரியப்புலிகள். அடுத்தவர்க்கு ஆலோசனைகள் அடுத்தவரிடம் எப்படி காரியம் சாதிப்பது என்ற வழிமுறைகள் அறிந்தவர்கள் சிரிக்க சிந்திக்கப் பேசுவர் எடுத்தகாரியத்தை உடனே முடிப்பர் கணவருடன் வெளிநாட்டில் சிறிது காலம் வசிப்பர் தந்தையுடன் கருத்து வேறுபாடும் உண்டு கணவனிடம் காதலுமுண்டு கண்டிப்பும் உண்டு இவர்கள் வீடு அருகே கோயில் அர்ச்சகர்கள்  நிதி நிறுவனர் வீடு கோயில் கள் உண்டு. மசாலா உணவுப்பொருட்கள் விருப்பம் உடல் அலங்கார உடைகள் விருப்பம் பரதநாட்டியம் அறிவர்
கன்னி பெண்கள் எப்போதும் தங்களை அழகாகவும்  இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்ளவும் விரும்புவார்கள்.
அதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
புதனுடை வீடு  என்பதால் சிரித்த முகத்தோடும் நகைச்சுவை  உணர்வுடன் பேசக் கூடியவர்களாக இருப்பர். கூர்மையான  அறிவு,  ஆழமான கருத்துக்களை உடையவர்கள்.
பெண்கள் விஷயத்தில் சபலம் உடையவர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் சிரித்து மயக்கி , சிந்தையை கெடுத்து பெண் சுகம் அனுபவித்து விடுவர்.
கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கும்  எண்ணம் இவர்களுக்கு  இருக்காது.
இரட்டை தன்மை.  புத்தக  அலமாரி.  கல்வி கூடங்கள். விளையாட்டு மைதானம். அறிஞர்கள் கூடுமிடம். சந்தேகப்படும் நிலை. பத்திர  அலுவலகம். ஊர் விட்டு  ஊர் பிழைப்பதற்காக செல்வது. ஊர், நிலங்கள், தோரணங்கள்.அடிவயிறு ஆஸ்பத்திரி.  இவைகள் எல்லாம் காரகத்துவங்கள்.
எதையும் ஆராயும் குணமும் புன்னகை பூக்கும் முகமும் கன்னிக்கு உண்டு.. 4ஆம் அதிபதியே பாதகாதிபதி யாக  வருவதால் திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் தாயாரால் ஒற்றுமை நிலைநாட்டுவது கடினம்.. பசுமை நிறைந்த தோட்டம், பூக்கள், மரம், செடி, கொடி, மூலிகைகள் மேல் ஆர்வம் இருக்கும்.. எதையும் குறிப்பு எடுத்து கொள்ள விரும்புவர். மேலும், எங்கு சென்றாலும் ஏதாவது செய்தித்தாள் அல்லது புத்தகம் இருக்குமா என்று தேடி கண்டுபிடித்து படிக்க துடிப்பார் கள்.
கன்னிக்கு 5 ம் வீடு சனி வீடாக இருப்பதால்,  அங்கு புத்திரக்காரகன் குரு நீசம் பெற்று நின்றால், ஜாதகருக்கு  புத்திரம் வழியில் திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும்.
அதேபோல அஷ்டமாதிபதி செவ்வாயாக இருப்பதால். ..செவ்வாய்  அஷ்டமத்தில் நிற்க ஜாதகருக்கு சகோதர வழியில் திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும்.
தருமசிந்தனை உடையவர் .மனசஞ்சலம் உடையவர்  நடுத்தமான உயரம் கொண்டவர்  நளினமான , அழகுடைய இளமையான தோற்றம் உடையவர். சிலருக்கு பெண்களின் சுபாவம் அதிகம் இருக்கும். கலை, இலக்கியம், ஜோதிடம், விஞ்ஞானம், கணிதம், மருத்துவம்,சொற்பொழிவு, பத்திரப்பதிவு, ஷேர் மார்க்கெட் போன்றதுறைகளில் ஈடுபாடு கொண்டவர்.
ஒரு கையில் அரிவாலும் மற்றொரு கையில் நெற்கதிர் கொண்ட பருவப் பெண். கன்னி ராசி. உபயராசி உழைக்க கூடியவர்கள். இளமையாக இருக்க கூடியவர்கள். ஆடை அலங்காரம் அணிகலன்கள் அதிகமாக விரும்பக் கூடியவர்கள். அன்பு இறக்ககுணம் வரவேற்க்கும் குணம் தன்மை.பயந்த சுபாவம்.நல்லது  நடப்பதற்க்கும் தீயதை விலக்கி வைப்பதற்கும் தயங்க மாட்டார்கள். உழைப்புக்குகேற்ற பலன் கிடைக்க நினைப்பவர்கள். ஒருவிஷயத்தில் பலன் ஆதாயம் இல்லாமல் வேலை செய்யமாட்டார்கள். காலபுருஷனுக்கு6வது ராசியாக வருவதால் அதிக கடன் வாங்க தயங்கமாட்டார்கள். அதிக எதிர்ப்புகளுடன் வாழக்கூடியவர்கள். பொறாமை குணம்  உள்ளவர்கள். வியாபார ராசி. வறண்ட ராசி. சந்தேகபேர்வழிகள். தாமதபுத்திரம் சொல்லும்ராசி.ஒரு குழந்தை இறந்ததை சொல்லும் ராசி. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடைவெளி இருக்கும். ஊர்விட்டு ஊர்போய் பிழைப்பது கன்னி. காரகத்துவம் பால் பண்ணை நூல்நிலையம் .அறிஞர்கள் கூடும் இடம்.  அறிவை தேடுவது கன்னி.தானியக்கிடங்கு ரேசன்கடை.மண்டி. நஞ்சை புஞ்சை நிலங்கள்.பரதேச ஜீவனம்  உள்ளூரில் முன்னேற்றம் இருக்காது  படிப்பிற்க்காக  வெளியில் செல்லுதல். பால்பண்ணை நூலகம் அருகில் இருக்கும். ஜோதிடஅறிவுஇருக்கும் காதல்ராசி.பெரிய வியாபாரம் செய்வார். இடத்தில் தானியக்கிடங்கு இருக்கும்.வயிற்றுவலி முதுகு வலி வரும். அஸ்தம் நட்சத்திரம் காதல் திருமணம் உறவில்திருமணம் அல்லது முதல் திருமணம்பாதித்தவர்கள் உண்டு. தாமத குழந்தை. அஸ்தத்தில் ஒருகிரகம்  இருந்தால் பாதிப்பு அஸ்தத்தில் 3க்குடையவன் இருந்தால் சகோதரருக்கு இந்த பிரச்சனை. 9 க்குடையன் சூரியன் இருந்தால் தந்தைக்கு பாதிப்பு. 4க்குடையவன் சந்திரன் இருந்தால் தாயாருக்கு பிரச்சனை.இப்படியே அனைத்து கிரகத்துக்கும்சொல்லும் அஸ்தம் இருதார யோகத்தை சொல்லும் கல்விக்கு நல்லது. ஜவுளிவியாபாரம் நல்லது.வாழ்வில் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம். பலன் பாராமல் வாழக் கூடியவர்கள். கைரேகை ஜோதிடம் நல்லா இருக்கும். அஸ்தம் உத்திராடம் மிருகசீரிடம் இந்த மூன்று நட்சத்திரங்களும் புத்திரதோசத்தை உடையது. அஸ்தம் இது எருமை பத்திரக்கோழி இதில் ஒருகிரகம்  இருந்தால் ஒருபெண் கர்ப்பு தவறுவால். அஸ்தத்தில் 3ம்அதிபதி  கேது இணைவு இருந்தால் ஒருபெண்ணுக்கு இரண்டுதடவை மூக்கு குத்துவார்கள் காது குத்துவார்கள். கன்னி ராசி மூக்குத்தி ராசியாகும். சித்திரை நட்சத்திரம். சுகபோகம் குறைவு வீட்டின் அருகேகோவில் இருக்கும்.சொத்து பிரச்சனையை சொல்லும்.சித்திரை ஆணுக்கு நல்லதல்ல வட்டிதொழில்நல்லது. கட்டிடம்கட்டிவிற்பது. மாடலிங்.ஆடைதைத்து விற்பது. குடும்பம் அல்லது தொழில் இரண்டில் ஒன்றுதான் சிறப்பாக இருக்கும்இன்னொன்று கெட்டுவிடும். தந்தையை பிரிந்து வெளியூரில் வாழ்வார்கள் .இருப்பார்கள். 1க்குடையவரே 10 க்கு டையவர் புதன்சொந்த தொழில்செய்யும் எண்ணம்அதிகமாக இருக்கும்.தொழிலில் திருப்த்தி இருக்காது. ஜீவனகுறைவேஇல்லை சித்திரை .2 க்குடையவரே 9க்குடையவர் சுக்ரன் வருவதால் உறவில் திருமணம் திருமணத்திற்கு பின் வருமானம் சிறப்பு. யாருக்காவது உபதேசம் செய்துகொண்டே இருப்பார்கள்.வாக்கு பலம் இருக்கும். பொருளாதாரம் சிறப்பு. பேச்சால் தான் தொழில். வாக்கால் நல்ல வரவு. தந்தை வழியில் நல்ல ஆதாயம் கிடைக்கும். 3 க்குடையவரே 8க்குடையவர் செவ்வாய் திருமணத்திற்கு பின் உயர்வு.E.N.T.பிரச்சனை  உண்டு.விரலில்காயம் இருக்கும்.இவர்கள்L.I.C. பண்ணலாம் ஆனால் போடக்கூடாது.சீட்டு ஆகாது.சகோதரனால் ஒருஅவச்சொல் உண்டு. சகோதரன் இல்லை. இருந்தால் கருத்து வேறுபாடு வரும்.                                                                                                                             கன்னி ராசியின் தன்மைகள் :
 உபய ராசி
ராசியின் அதிபதி : புதன்
நில ராசி
பெண் ராசி
மேற்கு ராசி
இரட்டை ராசி
கர்ம ராசி
ராசியின் இடம் : ஊர்
ராசியின் காலம் : மாலை
ராசியின் குணம் : அமைதி
ராசியின் செயல் : முடிவு
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் : உத்திரம் 2,3,4 ஹஸ்தம் 1,2,3,4 சித்திரை 1,2
ராசியின் சின்னம் : கன்னி பெண்
ராசியின் அதிபதி புதனுக்கு இதுவே உச்ச மூலதிரிகோண வீடாகும்
கன்னி ராசியின் காரத்துவங்கள் :

புத்திசாலித்தனம், கூர்மையான அறிவு, பெரிய வியாபார ஸ்தலம், படரும் கொடிகள், கல்விச் சாலை, சாம்பல் நிறம், இடுப்பு, பூந்தோட்டம், நகரம், கணக்கர், தணிக்கையாளர், பலவித வியாபாரம், ஆசிரியர், எழுத்தர், மளிகைக்கடை, தானிய சேமிப்புக் கிடங்கு.
கன்னி ராசி :
 ராசி சக்கரத்தில் ஆறாவது ராசி கன்னி. ஆளும் பாவம் கடன், நோய், எதிரி இவற்றைக் குறிக்கும். கன்னி ராசியின் சின்னம் கன்னிப்பெண் ஆகும். கன்னிப் பெண்களைக் காணும்போது ஆண்களுக்கு இயற்கையாகவே ஒரு வகையான ஈர்ப்பு ஏற்பட்டு பெண்களுக்காக எதை வேண்டுமானாலும் விற்றுச் செலவு செய்வதைக் கண்கூடாகக் காணலாம். பெண் மோகத்தால் கடன்பட்டு கஷ்டப்படுபவர்கள் உலகில் அதிகம்.

எனவே கடன், நோய், பகை ஆகியவற்றைக் குறிக்கும் ஆளும் பாவத்திற்கு கன்னிப்பெண் சின்னமாகத் தரப்பட்டிருக்கிறது.
சித்திரை.பெரும்பாலும் இவர்கள் வீட்டில் கடை குட்டி தான். 4க்குடையவரே7க்குடையவராக குரு வருவதால் கேந்திர ஆதிபத்திய தோசம்.தாய் அன்பு இல்லை.அல்லது பிறந்த வீட்டு சொத்து இல்லை பிரச்சனை சொத்து வாங்கினால் மனைவி அல்லது கணவன் பெயரில் வாங்கவேண்டும். இவர்கள் பெயரில் இருக்ககூடாது. அல்லது ஜாய்ண்ட்டு அக்கவுண்டு. நண்பர்களிடம் சொத்து வண்டி கொடுக்கக் கூடாது.கொடுத்தால் பிரச்சனை வரும். தாய்வழி உறவில் வரன் வரும்.40கீ.மீ. சுற்றளவில் அமையும். திருமணத்தின்போது மழை வரும். சொத்து இருந்தால் பிரச்சனை இருக்கும். 5க்குடையவரே 6க்குடையவர் 80%பெண்தன்மை இருக்கும்.20%ஆண்தன்மை இருக்கும்.(சனி) குலதெய்வத்தில் அதிக குழப்பம் இருக்கும்.படிக்கும்போதே  திருமணபேச்சு வரும்.படித்து முடித்வுடன் வேலை கிடைக்கும். குழந்தை தாமதம் அல்லதுமருத்துவ செலவு வரும். 6வயது வரை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். பூர்வீகசொத்தில் தடை ஏற்படும்.சித்தியின் மணவாழ்க்கை சரியாக இருக்காது. 1 க்குடையவரே10க்கு டையவர் அதனால் இவர் பிறந்தவுடன் வீட்டில் ஒருகர்மம் நடக்கும்.மற்றும் குடும்ப நபர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். மருத்துவத்திற்கு கைராசி.மார்க்கெட்டிங். இன்ஸ்டன் யூ பிஸ்னஸ் நல்லது.
அஸ்வினி சதயம் ரேவதி இந்த நட்சத்திரத்தில் போய் மருத்துவரை பார்த்து வைத்தியம் எடுத்துக்கொண்டால் நல்லது. கன்னி ராசி மரம். தென்னை வாழை துத்தி வெள்ளருக்கு பாக்கு மரம்.நெல்லிக் காய்.மருதாணி. கரும்பு.
கன்னியில் பிறந்தவர்கள் தன்வந்திரி பகவான் கூரத்தாழ்வார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தமிழ்வாணன் எழுத்தாளர் சுபா
ஆறாவது ராசி கன்னி. திறம் இரண்டு மூன்று மற்றும் நான்காம் பாதம் அஸ்தம் சித்திரை ஒன்று மற்றும் இரண்டாம் பாதங்கள். உத்திரம் நட்சத்திரம் எழுத்துக்கள் டே டோ ப பி   அஸ்தம் பு ஷ ண ட  சித்திரை பே போ ர ரி
கன்னி ராசிக்கு. நெய் பிடிக்கும். சேமியா கிச்சடி  பிடிக்கும். கார் மேல் மோகம் இருக்கும்.முதலில் சிரிப்பு பின்புதான் பேச்சு.சந்திரன் புதன் சாரத்திலோஅல்லது புதன் சந்திரன் சாரத்திலோ அல்லது லக்னம் லக்னாதிபதி சந்திரன் புதன் சாரத்தில் இருக்கும் பட்சாத்தில் ஜாதகர் பொலம்பி தள்ளி விடுவார்கள். எந்த குறையும் இருக்காது ஆனால். ஒரு குறையைபற்றி பேசி க்கொண்டே இருப்பார்கள். மனக்கவலையில்தான் இருப்பார்கள். புதன் இரட்டை
உணர்ச்சி வசப்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்தி மறைக்கும் புத்திசாலித்தனம் உடையவர்கள். மற்றவர் உணர்வை புரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்த மாட்டார்கள். சிந்திக்க வைக்கும் நகைச்சுவையை மட்டுமே ரசிப்பர். தனக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே மற்றவர்களிடம் வழியே சென்று பேசுவார்கள். தன் கருத்தை மற்றவர் ஏற்றுக் கொள்ளும்வரை விட மாட்டார். பிரச்சனைகளை எளிதில் தீர்த்து வைப்பார். சில நேரங்களில் வெறும் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருக்கும். தோற்றத்தை வைத்து கன்னி ராசி காரரை எடை போட முடியாது உதாரணம் மைக்கேல் ஜாக்சன் இந்தி நடிகர் அக்ஷய்குமார். குடும்ப வாழ்க்கையை விட வேலையில் அதிக நேரம் செலவழிக்ககூடியவர். இவர்கள் காரியத்தில் கண்ணாக இருப்பர். தன்னைப் பற்றியே அதிகம் சிந்திப்பார். திட்டமிட்டு வாழ்பவர்கள். அடுத்தவரை குறைகூறும் குணமுடையவர்.
கன்னி ராசிக்காரர்கள் பொருத்தவரை வீடு என்பது சாப்பிடவும் தூங்கவும் மட்டுமே. உத்திரம் 2,3,4பாதம்  கன்னி ராசிக்காரர்கள்  விதவிதமாய் ச் சுவைகளில் உணவை ரசித்து உண்பா் தாய் மாமன் உறவு சரியிருக்காது தாய்க்கு வரும் சொத்துக்களை தாய் மாமனே தடுப்பார்
காலத்துக்கு 10ம் இடம் தொழில். கன்னி லக்னத்திற்கு 5மிடமான புகழ். இவர்கள் தான் செய்யும் தொழிலில் பேர் புகழ் அடைவார்கள். குழந்தை பிறந்த பிறகு தொழில் மேன்மை இருக்கும். இவர்களுக்கு கூட்டுத் தொழில் சரியாக இருக்காது. இந்த இடத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய்🌟 உள்ளது. தொழிலில் மறைமுக எதிரிகள் இருப்பார்கள். கன்னி பூமிராசி. தன் சுய உழைப்பு மூலம் வீடு வாகனம் வாங்கும் அமைப்பு இருக்கும். சகோதர வழியில் பிரச்சினை சந்திப்பார்கள் காலத்துக்கு 8செவ்வாய் இங்கே. தொழிலில் சங்கடங்கள் இருக்கும்
கன்னி ராசிக்காரர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அதிக பற்றும் பாசமும் கொண்டிருப்பார்கள் .  கன்னி ராசிக்காரர்கள் மனசஞ்சலம் உடையவர்களாகவும் சீல குணமுடையவர்களாகவும் தமிழ் சொந்தங்களிடம் பிரியமாக இருப்பார்கள். இவர்களுக்கு ஜோதிடம் மற்றும் நவீன கலைகள் கற்கும் ஆர்வமும் இருக்கும். இவர்கள் பட்டாடை அணிய விரும்புவார்கள். இவர்களுக்கு இனிமையான குரலும் பழகுவதற்கு இனிமையான வராகவும் இருப்பார்கள. ் இவர்கள் மனைவிக்கு பயந்தவர்களாகவும் சுறுசுறுப்பாகவும் எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பார்கள.  ் இவர்கள் தங்களிடம் இருக்கும் குறைகளை கண்டு அவைகளை நீக்கி விட முயற்சிப்பார்கள்.   இவர்கள் சுறுசுறுப்பான மற்றும் மூளை சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் பிரியத்துடன் செய்வார்கள் .  இவர்கள் எதையும் தாங்கும் பொறுமையுடன் இருப்பார்கள.  ் இவர்கள் தங்களின் வயதை மற்றவர்களுக்கு கூறமாட்டார்கள்.   குழந்தைகளுக்கு பொறுமை பெரிய மற்றும் எல்லாவற்றுக்கும் சரியான விளக்கத்தையும் கொடுத்து பழக்க வேண்டும்.   இவர்கள் பொதுவாக அமைதியாகவும் உணர்ச்சியுடனும் குற்றம் கண்டுபிடிப்பவர்களுக்கு ஆராய்ந்து பார்க்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள.் இவர்கள் இன்னொரு எதிர்மறையான குணாதிசயம் என்னவென்றால் சந்தேகம் கேலி செய்தல் மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இதனால் இவர்களுடைய உடல்நலம் பாதிக்கப்படும் .
கன்னி ராசி புதனுக்கு ஆட்சி வீடு உச்ச வீடு மூலதிரிகோண வீடு ஒருங்கே பெற்ற சிறப்பான ராசியாகும் உபய ராசி கன்னியில் பிறந்தவர்கள் பொதுவாக நளினமான நபர்களாகவும் எந்த சூழ்நிலைக்கும் அனுசரித்து செல்பவர்களாகவும் இருப்பார்கள் கன்னி ராசி புத்திர தோஷத்தை தரும் ராசி லக்னாதிபதியே பத்தாம் அதிபதி எனவே ஜீவனத்திற்கு குறை இருக்காது இவர்கள் கலை இலக்கியம் எழுத்து சார்ந்த பணிகளில் அல்லது அவை சார்ந்த விஷயங்களில் விருப்பம் இருக்கும் ஜோதிடப் புலமை உண்டு 3 எட்டுக்கு அதிபதி செவ்வாய் ஆவதால் சகோதர்கள் வர்க்கத்தில் அதிகமாக நினைப்பு இருக்காது நாலாம் வீடு தனுசு பண்ணைகள் தோட்டங்கள் விவசாய நிலங்கள் இவற்றில் ஜாதகருக்கு நாட்டம் அதிகம் இருக்கும் தாய் சற்று கண்டிப்பானவராக இருப்பார் குழந்தைகளால் இவர்களுக்கு சற்று திருப்தி குறைவு இருக்கும் ஐந்தாம் அதிபதி சனியே ஆறாம் அதிபதியாக வருவதால் கடன் வாங்க தயங்க மாட்டார்கள் பெண் நண்பர்கள் அதிகம் அதேபோல் பெண்களால் அவமானமும் ஏற்படும் மனைவி நன்கு படித்தவர் அல்லது ஆசிரியப் பணியில் இருப்பார் திருமணத்திற்கு பின் செல்வம் சேரும் இவருக்கு சொத்து சேர்ப்பது மனைவியாலும் தாயாராலும் இவருடைய சித்தப்பாவால் இவர் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் தந்தை வர்க்கத்தால் தொல்லைகள் வழக்குகள் வந்தாலும் இவர் அதை வெற்றிக்கொள்வார் வருமானங்கள் வசதிகள் இவரைத் தேடி வரும் இவர் தேடிச் செல்ல வேண்டியதில்லை கன்னியில் ஒரு பெண் பிறந்தாள் அதுவும் சித்திரை நட்சத்திரமாக இருந்தால் நிச்சயம் காண்போரை மற்றொரு முறை திரும்பிப் பார்க்க வைப்பார் வாதம் செய்வதில் வல்லவர்கள் சற்று பொறாமை கொண்டவர்களாக இருப்பார்கள் வழி காண்பிக்க மாட்டார்கள் பொதுவான உடல் அமைப்பாக இருக்கும் இவர்களுக்கு எந்த வியாதி வந்தாலும் விரைவில் குணமடையும் மனைவி வந்தவுடன் இவர் மதிப்பு உயரும் சொத்தும் உயரும் கணக்குப் பார்த்து செலவழிப்பார்
லக்னத்தில் சனி இருப்பின் இவர் பிறந்தவுடன் அல்லது ஒரு வருடத்துக்குள் வீட்டில் ஒரு கர்மம் நடந்திருக்கும் இவர்களுக்கு சிறியதாக ஏதேனும் ஓர் நோய் வந்தாலே அதை மிகவும் பெரிதுபடுத்தி கவலைப்படுவார்கள்
கன்னிக்குச் சுக்ரன் சனி சேர்ந்திருந்தாலோ பார்த்தாலோ
உடன் வேலை செய்பவரால் பிரச்னைகள் சந்திக்கநேரும் கணவன் பாவத்துக்கு  விரைய பாவமாக ஆறின் சனி கணவன் சுகஸ்தானத்துக்கு ஒன்பதாம் பாவகமாக வருவதால் கணவர் வீட்டுக்குச் சுபச்செலவுகள்  செயவர்
கன்னி லக்னம்
1:சாந்தமானவர்
2:உண்மையானவர்
3:இளமையில் அறிவும் நினைவாற்றலும்  உடையவர்
4:கலையார்வம்
5கைத்தொழில் ஆர்வம்
6:பெண்களுடன் இணைந்து செயல்படுவார்கள்
7:சமசார்ப்பு
8:கல்வியாளர்
9:பார்த்தவுடன் செய்திகளை விளக்கும் தன்மை உடையவர்
10:ராஜதந்திரி
11:சிக்கனம்
12:கொடுக்கல், வாங்கல் தன்மை உடையவர்
13:நுண்கலை பிரியம்
14:இசையில் ஆர்வம்
15:பிரசித்தி பெற்றவர்
16:செல்வாக்குடையவர்
17:சிலருக்கு இளம் வயதில் வழுக்கை
18:உயரமானவர்
19:விரைவாக நடக்கும் இயல்புடையவர்
20:கருமையான கண்கள் மற்றும் ரோமம் உடையவர்
21:புருவங்கள்  வளைந்தும் அடர்ந்த ரோமங்களை கொண்டிருப்பார்கள்
22:மெலிந்த உடலினை கொண்டிருப்பார்கள்
23:குரல்மெலிந்து கீச்சுக்குரலாகவும் இருக்கும்
24:இவர்கள் கண்கள்  கண்ணியமானவர் என்று கூறும்
25:வெளிநாட்டில் பிறந்த கன்னி லக்னத்தார் நீல நிற கண்களை உடையவர்(2ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் )
26:எப்பொழுதும் சஞ்சல புத்தியுண்டு
27:மாறுதலை விரும்புதல்
28:அடிக்கடி குடியிருப்புகளை மாற்றுவதில் விருப்பம்
29:கடமையுணர்வு அதிகம்
30:வியாபார சம்பந்தமான உள்ளுணர்வு
31:சுறுசுறுப்பு
32:செயல்பாடுகளில் வேகம்
33:மூக்கு நேராக இருக்கும்
34:அபார அறிவாற்றல்
35:சிந்தனையாளர்
36:ஆராய்ச்சி மனம்
37:எதையும் விரைவாக புரிந்து கொள்வார்கள்
38:திறமையாகப் பேசும் ஆற்றல் 
39:எழுத்தற்றல்
40:தொழில் மற்றும் வியாபாரகளில் நூதனம் மற்றும் சாமர்த்தியம் பெற்றிருத்தல்
41:இரண்டு, ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் மற்றும் லக்கன,பத்தாம் அதிபதி புதன் வருவதால் இந்த கன்னி லக்கனர் பெரும்பாலும் செல்வ செழிப்பில் அபாரமாக இருப்பர்
42:வெளியூரில் சென்று தொழில் செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
43:எழுத்தாளர்
44:கவிஞர்
45:பாடகர்
46:டைப்பிஸ்ட்
47:ஸ்டென்னோ
48:விவசாயம்
49:ஆடிட்டர்
50:ஆய்வாளர்
51:வருமானதுறை அதிகாரிகள்
52:பரிசோதகர்
53: 2,6,10 அதிபதி  கன்னியில் அமர்ந்நு சூரியனின் சுப பார்வை பெற்றால் மருத்துவராக வாய்ப்பு உள்ளது
54:சுகாதாரத்துறை அதிகாரிகள்
55:ஆசிரியர்கள்
56:பொறியாளர்
57:கணக்கு தணிக்கைத்துறை
58:2,6,10 அதிபதி கன்னியில் அமர்ந்து செவ்வாயின் சுப பார்வை பெற்றால் சொந்த  மருத்துவமனை  வைக்கலாம்
59:அறிவியல் கருவிகள் விற்பனை
60:வீட்டு உபயோகபொருட்கள் வியாபாரம் 61:2,6,10 அதிபதி கன்னியில் அமர்ந்து  சந்திரன் சுப பார்வை கிடைத்தால்  கப்பல் தொகுதி பணி
62:கடற்படையில் பணி
63:கணக்கு பிரிவில் வேலை
64:பெட்ரோல் உற்பத்தி பணி
65:பாதரஸம் போன்ற அமில பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பணி
66:ஜவுளி துறை
67:இங்க்
68:இங்க் ஸ்டேண்டு
69:பேனாஉற்பத்தி
70:செவ்வாய் நற்பார்வைகிடைத்தால் அச்சக பதிப்பு ஆசிரியர்
71:தொழிற்சாலை எழுத்தர்
72:ராணுவ இலாக்கா வேலை
73:அறுவைச் சிகிச்சையாளர்
74:எஃகு உற்பத்தி
75:உரம் உற்பத்தி
76:விவசாய கருவியுற்பத்தி
77:செவ்வாயின் அசுப பார்வை பெற்றால்  உடன் இருப்பவர் பிளாக் மெயில் செய்து துன்பபடுத்துவர்
78:புதனின் நற்பார்வைகிடைத்தால் கணக்கு ஆசிரியர்
79:தரகர்
80:வக்கீல்
81:கணக்குகளை பராமரிப்பவர்
82:மருத்துவர்
83:அனேக புத்தகங்களின் ஆசிரியர்
84:செய்தி சேகரிப்பு
85:பத்திரிக்கை ஆசிரியர்
86:பதிவாளர்
87:மொழிபெயர்பாளர்
88:திட்டம் திட்டுவதில் வல்லவர்கள்
89:குருவின் நற்பார்வைகிடைத்தால்  பேராசிரியர்
90:மதம்
91:சட்டம்
92:ஆயுள் பாதுகாப்பீட்டு கழகம்
93:இலக்கியம்
94:அறிவியல்
95:புத்தி கூர்மை
96:முதலீடு தொழில்
97:பங்கு சந்தை
98:சமய அறநிலையத்துறை
99:நீதிமன்றம்
100:வங்கிகள்
101:தூதரக பணி
102:சுக்கிரனின் சுபபார்வை பெற்றால் நல்ல நடிகர்
103:வண்ணம் தீட்டுபவர்
104:சங்கீத துறையில் இருப்பவர்
105:அழகு சாதனப் பொருள் விற்பனை
106:மகளிர் ஆடை தைய்ப்பவர்
107:மிட்டாய் கடை
108:உணவுக்கடை
109:தங்கும் விடுதி
110:வாசனை பொருட்கள் விற்பனை
111:சனிபகவானின் நற்பார்வைகிடைத்தால்  புள்ளி விவரங்கள் துறை
112:பௌதிகத்துறை
113:வேகத்தை போதிக்கும் பாட பிரிவு
114:சுரங்கப் பொருட்கள் ஏற்றுமதி
115:செவ்வாய் பார்வை பெற்றால் ரேகை பிரிவு
116:மேலும் கன்னி லக்னத்தினர் மின்துறை
117:தேர்தல் ஆணையம்
118:சத்துணவு
119:நிதியமைச்சர்
120:வருமானதுறை அமைச்சர்
121:மக்கள் தொகை கணக்கெடுப்பு
122:விமான பயணத்தில் பணி
123:தேயிலை உற்பத்தி
124:கப்பல் வியாபார ஏற்றுமதி,இறக்குமதி
125:நோய்கள் ஜீரண  சக்தி குறைவு
126:குடல் பாதிப்பு
127:சீதபேதி
128:டைபாய்டு
129:பித்தபைக்கல்
130:நரம்பு நோய்
131:காய்ச்சல்
132:அர்த்தமற்ற மனகவலை
133:மனகுழப்பம்
134:சிறுசிறு விபத்துகள்
135:கன்னி ராசிகுரிய இடங்களும், பொருட்களும் தோட்டங்கள்
136:உணவு விடுதிகள்
137:களஞ்சியங்கள்
138:தங்குமிடம்
139:நஞ்சை,புஞ்சை நிலம்
140:புத்தக அலமாரி
141:காய்கறி வைக்கும் இடம்
142:முதலுதவி பெட்டி
143:பால் பண்ணை
144:வைத்திய பெட்டி
145:படிக்கும் அறைகள்
146:பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் வைக்கும்  அறை
147:கன்னி ராசி குறிக்கும் நாடுகள் துருக்கி
148:க்ரோஷியா
149:மெசாபீடாமியர்
150:பாபிலோன்
151:ஆஸ்திரியா
152:திபெத்திற்கும் யூப்ரடீஸ்ஸிக்கும் மத்தியில் உள்ள இடம்
156:கிரீஸ்
157:தெஸ்ஸாலி
158:ஸ்வீட்சர்லாந்து
159:கிழசைலீஷியர்
160:பிரேசில்
161:வரிஜ்னியா
162:மேற்கு இந்தியத்தீவு
163:கன்னிராசி குறிக்கும் நகரங்கள் ஜெருசலம்
164:பாரிஸ்
165:படூவா
166:ரீடிங்
167:லயோன்ஸ்
168:பாஸ்டன்
169:லாஸ் ஏஞ்சல்ஸ்
170:நார்விச்
171:செல்டன்ஹாம்
172:பாக்தாத்
173:தொட்மோர்டக்
174:காரிநத்
175:பிரிஸ்டிஸ்
கால புருச தத்வ படி புதன் 3.6க் குடையவர் கன்னி உபயம் ராசி புதன் ஆட்சி வீடு மூலத்திரிகோணம் அதுவே சூரியன் சமம் சந்திரன் நட்பு செவ்வாய் பகை குரு பகை சுக்கிரன் நீச்சம் சனி நட்பு ராகு நட்பு கேது நட்பு இதில் சுக்கிரன் நீச்சம்  நட்சத்திரம் சித்திரை, சுக்கிரன் கன்னியில் இருந்தால் மாமனார் வீட்டு  பகுதியில் அல்லது அதன் வீதியில்  மருமகன் வீடு மாறி இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் சூரியன் நட்சத்திரம் உத்திரம் எருது  2.3.4பாதம்,சந்திரன்  நட்சத்திரம் ஹஸ்தம் பெண் எருமை 1.2.3.4பாதம்,செவ்வாய் நட்சத்திரம் சித்திரை ஆண் சிங்கம் 1.2பாதம்  கையில் விளக்கு ஏந்திய கன்னி பெண் உருவம் கன்னியில் சூரியன் புதன் இருந்தால் ஜோதிடர் அல்லது ஜோதிடத்தை தெரிந்து வைத்து இருப்பார்கள்
கன்னி ராசி மேய்ச்சல் பூமி பள்ளியறை பள்ளிக்கூடம் மருத்துவமனை மருத்துவப் பொருள்கள் உள்ள இடம் ஆகியவற்றை குறிக்கும். வெண்மை நிறம் கொண்டது பெண் உருவத்தை கொண்டது. கன்னியின் அதிபதி புதன் பெரும்பாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் சஞ்சாரம் செய்யும். புதன் பகவானை காலியிடம் காதல் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பேசுவார்கள்
கன்னி ராசி  வேறு பெயர்கள். ஹரி. மலைமா. சீயம். புலி கடுவன் மாது தையல் சேடிப்பெண் மற்றும் என

இதில் பிறந்தவர்கள் சாஸ்திரம் சிற்பம் தேவாலயம் நுட்பமான திறமைகள் இருக்கும்.
பிறந்தவர்களுக்கு சுகஸ்தான அதிபதி குரு. தனா பாக்கிய காரனான சுக்கிரன் கூடி லக்னத்துக்கு 4. நாளில் அதாவது தனுசில் இருந்தால் இவளுடைய திசையில் விசேஷ யோகம் வரும்.
கன்னியில் பிறந்த ஜாதகர்கள் 9-க்குடைய சுக்கிரன் லாபாதிபதி சந்திரன் இணைந்து ஏழில் இருந்தால் ஏழுக்கு உடையவன் பதினொன்றில் இருந்தால் வாழ்க்கையில் சுகபோகமாக இருப்பார்
(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்). * கன்னி (VIRGO) இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது. இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
மிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.

kanni
புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.

பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.

11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.

astrology

உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும், நீங்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும் ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள். அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் சித்தத்தில் நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
கன்னி:
கன்னி மகனை கைவிடேல் என்ற பழமொழிக்கு உட்பட்ட இவர்கள் மற்றவர்களின் பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் இவர்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒருவரைப் பார்த்தால், பார்த்த உடனேயே இவர்கள் இப்படித்தான் என்று கணித்து விடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் வாழ்வில் நடுப்பங்கில் புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். கன்னியர்களை தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் போது கவனமாகப் பொருத்தம் பார்த்து செய்தால் புகழோடும், பொருளோடும் வாழ இயலும்.
கன்னி கால புருஷனின் ஆறாவது வீடு இந்த வீட்டின் அதிபதி புதன் பகவான் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆகும் உபய ராசி தன்மை கொண்டதாகவும் தீர்கமான செயலை கொண்ட  தத்துவத்தையும்  குறிக்கிறது பயிர் வகைகளில் செடியாகவும் ஜீவனுள்ள ராசியாகவும் மூலத்தையும் மக்கள் வாழும் பகுதியையும் இயல்பான நடையையும் நிறத்தில் கருப்பும் அதேநேரம் வெளிர் மஞ்சள் நிறத்தையும் குறிக்கிறது பெண் ராசியாகவும் உள்ளது கன்னி ராசியின் குண நலன்கள் பொறுமையோடு கூடிய ஆர்வமும் உழைப்பும் உயர்வும் எதற்காகவும் யாருக்காகவும் மாறாத தன்மையும்  இளகிய மனமும் வளைந்து கொடுக்காத தன்மையும்  சுயநலத்துடன் கூடிய பொது நல நோக்கத்துடன் செயல்பட்டு காரியசித்தி அடைவதும் தயக்கம்  இல்லாத செயல்பாடும் அண்டினோரை ஆதரிப்பதும்  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவதும் புரியாததை  அறிந்து தெரிந்து  பிறகு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதும்  அனைத்தும்  அறிந்து தெளிந்த பின்பு மற்றவர்களுக்கு விளக்கும் தன்மையும் கடமை உணர்வும் காரியசித்தி ஊக்கமான  சோம்பல் இல்லாமல்  எந்த சூழ்நிலையையும் தன்னை மாற்றிக் கொள்ளாத நிலையில் வேகமான விவேகத்துடன் கூடிய செயலையும் நிதானத்துடன் கூடிய பழக்கவழக்கமும் நேர்மையை பின்பற்றும் போக்கும் ஒழுக்கம் உயர்ந்த குணமும் தர்ம குணமும்  உயர்ந்தவர்கள் இடத்தில் நட்பும்  பொருள்மீது ஆசை யும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத தன்மையும் பழக்கத்திற்கு நட்பும் நட்புக்கு மரியாதை கொடுக்கும் அமைப்பும்  பணத்தை பாதுகாப்பதும் பலமுறை யோசித்து முடிவெடுக்கும் தன்மை தன்  முடிவுக்கு தானே கட்டுப்படுதலும் எப்போதும் எச்சரிக்கையுடன் பழகுவதும்  செயல்படுவதும் தன் மீது கலங்கம் இல்லா வாழ்க்கைக்கு பாடுபடுவதும் பு ஒழுக்கத்தை பழக்கவழக்கத்தில்  சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்வை விரும்புவதும்  புதியவைகளை அனுபவத்தின் மூலம் தெரிய வைக்கும் போக்கு நேசிக்கும் தன்மை பழிவாங்கும் தன்மை தாய் தந்தையை நேசிக்கும் அமைப்பு  மரியாதையுடன் வாழ்வதும் செல்வத்தில் விருப்பமும் நாட்டம்  பேச்சு வாதத்திற்கும் சூழ்ச்சியை முறியடிக்கும் அனுபவம்  தாய் தந்தையரை தெய்வமாக வணங்கும் அமைப்பு தனக்கு பின்வரும் சந்ததியினருக்கு தன்னால் முடிந்ததை  சேர்த்து வைத்தல் வாழும் காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்து புகழை நிலை நாட்டுவதும் இயல்பான குணமாக அமையும்                                             கன்னி லக்கினத்தில் பிறந்தவர்
1.            கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய சதயம், பூரட்டாதி, ஆயில்யம், பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.

2.            கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும், பத்திரங்கள் வாங்கவும், அவற்றைதமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.


3.            கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய, வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய, அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

4.            கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, பரணி, பூரம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.


5.            கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள்,மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, திருவோணம், ரோகிணி, அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள் உண்டாகும்.

6.            கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.


7. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க,
திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த திருவோணம், அவிட்டம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

8. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் அசுவனி, பரணி, கார்த்திகை.

9. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும், உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் தொடங்க,தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.

10. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும் தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவிலியிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும் தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

11. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை நியமித்து கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று சந்தித்து தனக்கு அதரவு பெறவும், தான் எடுத்த காரியங்களில் குறைந்த முயற்சியில் வெற்றி பெறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும், தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன் சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள், சபைகள், சங்கங்கள் ஆரம்பிக்க, முன் காரியங்கள் செய்ய தொடங்க மிகவும் உகந்த நட்சத்திரங்கள் - அனுசம், பூசம், ஆயில்யம், கேட்டை ஆகியவை. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேல் கூறிய காரியங்கள் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

12. கன்னி லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டியு நட்சத்திரங்கள் அசுவனி, மகம், பரணி, பூரம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
அஸ்தத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் செய்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது , முதல் திருமணம் பாதிக்கிறது , 2 ம் திருமணத்திற்கு நிறைய வாய்ப்புள்ளது இவர் இல்லையெனில் உறவில் தாய் தந்தை இவரோ இவர் குடுத்பத்தில் காதல் திருமணம் செய்திருப்பார்கள் ...

அஸ்தத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் செய்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது , முதல் திருமணம் பாதிக்கிறது , 2ம் திருமணத்திற்கு நிறைய வாய்ப்புள்ளது இவர் இல்லையெனில் உறவில் தாய் தந்தை இவரோ இவர் குடுத்பத்தில் காதல் திருமணம் செய்திருப்பார்கள் ...
கன்னி : ஜோதிட ஞானம், அறிவை மதிப்பவர், நஞ்சை, புஞ்சை நிலத்தை குறிக்கும். வெளியூர் சென்று புகழ் பெறுவது.      2, 9 க்குடையவர் சுக்கிரன் : தந்தையின் வருமானம் கிடைக்கும், இயற்கையாகவே வாக்கு பலிக்கும்.                                   3, 8க்குடையவர் செவ்வாய் : காது, மூக்கு, தொண்டை பிரச்சினை இருக்கும், தகவல் தொடர்பில் பிரச்சினை, பாகபிரிவினை, சகோதரர்களிடம் கருத்துவேறுபாடு இருக்கும். 4,7க்குடையவர் குரு :  மனைவியால் சொத்து உண்டு, நல்ல ஆடை, வாகனயோகம் உண்டு.       5,6 க்கு உடையவர் சனி : மறதி, குல தெய்வத்தில் குழப்பம், பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாமை. 1,10 க்குடையவர் புதன் :  நல்ல தொழில், நல்ல பதவி, ஜீவனத்திற்கு குறைவு இருக்காது. அன்ன தானம் செய்வார், சொந்தமாக தொழில் செய்ய விருப்பம்.  11 க்குடையவர் சந்திரன் : பிரயாணங்கள் அதிகம், திடீர் பிரயாணங்கள் ஏற்படும்.                                     12க்குடையவர் சூரியன் : பகல் தூக்கம் ஆசை, மலை சார்ந்த பகுதிகள், உயரமான இடங்களை விரும்புவார், காலில் பித்த வெடிப்பு இருக்கும்.
கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்
கன்னி (உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
கன்னிராசியின் அதிபதி கிரகங்களின் இளவசரனான புதன் பகவானாவார். கன்னி ராசி பல வர்ணங்கள் கொண்டதும், சீதளசுபாவம் கொண்டதுமான இரண்டாவது உபய ராசியாகும். கன்னி ராசி பகல் நேரத்தில் வலுப்பெற்றதாக இருக்கும். உத்திரம் 2,3,4 பாதங்களிலும் அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களிலும் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள்.

உடல் அமைப்பு,
கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு பெண்களிடம் காணப் படு அச்சம், கூச்ச சுபாவம் யாவும் இருக்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. எதையும் கூர்ந்து கவனித்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும் அபார ஞாபக சக்தி கொண்டவர்கள். நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோபம் வருவது அரிது. வந்தாலும் ஒரிரு பேச்சோடு நித்திக் கொள்வார்கள். அழகான இடையும், அடி மேல் அடி வைத்து நடக்கும் இயல்பும் இவர்களுக்கே உரியது. எவ்வளவு அவசரமிருந்தாலும் இவர்களிடத்தில் நிதானமும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது மட்டும் உறுதி,
குண அமைப்பு
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படுவார்கள். நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமான பழகுவார்கள். எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம் பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்க கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவராதலால் இவர்களின் மத்தியஸ்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது உபன்னியாசங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும்பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தும் நற்குணமும் இருக்கும்.
மணவாழ்க்கை
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். கஷ்டங்களும், துன்பங்களும் வந்தாலும் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வாழ்க்கையையும்இவர்கள் நினைத்தவாறே மகிழ்ச்சியுடனேயே வாழ்வார்கள். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கைத் துணையும் எதிலும் விட்டுக்கொடுக்கக்கூடிய பண்பு கொண்டவராதாலால் எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் பிரிந்து தனியாக குடித்தனம் நடத்துவார்கள். என்றாலும் எந்த வொரு காரியத்தையும் குடும்பத்திலுள்ளவர்களை கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள்.
பொருளாதார நிலை,
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுமென்ற அளவிற்கு தன வரவு தாராளமாக அமையும். இவர்களுக்கு ஓய்வாக இருப்பதில் நாட்டம் குறைவு என்பதால் சும்மாயிருக்கும் நேரத்தில் கூட எதிலாவது ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து விடுவார்கள். தனது அறிவு, திறமை, பேச்சாற்றல் ஆகியவற்றால் பணவரவுகள் உண்டாகும். வருமானத்திற்கேற்றவாறு செலவுகள் செய்து கடன்களின்றி வாழ்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஏங்குவதை விட்டு கிடைத்ததை கொண்டு திருப்தியடைவார்கள். என்றாலும் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் அமைத்துக் கொள்வார்கள். பொதுநல பணிகளுக்காகவும் ஓரளவுக்கு செலவு செய்யும் ஆற்றலும் இருக்கும். சம்பாதிக்கும் பணத்தை கட்டி காத்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பழைய பொருட்களையும், புத்தகங்களையும் வாங்கி சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் இவற்றிற்காகவும் நிறைய செலவுகள் செய்வார்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
புத்திர பாக்கியம்,
பிள்ளைகள் விஷயத்தில் கன்னி ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஆசைக்கு ஒருபெண் ஆஸ்திக்கு ஒரு பெண் என புத்திர பாக்கியம் அமைந்தாலும் ஒரு சிலருக்கு பெண் குழந்தைகளே அதிகமிருக்கும். பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்க்கும் பண்பு கொண்டவர்களாகவும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்காதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளால் சாதகமான நற்பலன்களையே அடைவார்கள்.
தொழில்
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தெரியாத கலையே இல்லை என கூறலாம். அதிலும் கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள். ஒரு துறையோடு நிறுத்திக் கொள்ளாமல் இரண்டு முன்று துறைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் லாபமும் காணக்கூடியவர்கள். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர் பணி, பொறியியல் வல்லுநர் பணி, அயல்நாட்டு தூதர், வழக்கறிஞர்மேற்பார்வையாளர், கணக்காளர், எழுத்துத்துறை கதையாசிரியர், சினிமா நடனம், நாடகம், ஓவியம் போன்ற பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். எந்தத் துறையிலிருந்தாலும் வாக்கு சாதுர்யம், திறமை, கலைநுட்பம் போன்ற திறமைகள் வெளிப்படையாக தெரியும். பொதுப்பணிகளிலும் ஓயாது ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றிடுவார்கள். நடைமுறைக்கேற்றவாறு மொழிபெயரப்பது, ஓவியம் தீட்டுவது, கதாகாலட் சேபங்கள் செய்வது போன்ற திறமைகளும் இருக்கும். சிறு பணியில் சேர்ந்தாலும் வயது ஏற ஏற இவர்களது அனுபவ முயற்சியால் புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். உடல் சிரமமில்லாத பணிகளில் ஈடுபட்டு சிக்கனமாக செலவு செய்து சேமிப்பையும் பெருக்கிக் கொள்வார்கள்.
உணவு வகைகள்,
கன்னி ராசிக்காரர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருந்தாலும் எதையும் அளவோடுதான் உண்பார்கள். இவர்கள் உணவில் அடிக்கடி பசும்பால், குரை வகை, பழவகைகள் சாப்பிடுவது நல்லது. உயர்தர உணவு வகைகளில் அதிக விருப்பம் கொள்ளாமல் பசி நேரத்தில் எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் சாப்பிடுவார்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 4,5,6,7,8
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை
திசை - வடக்கு
தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்
உத்திரம் 2ஆம் பாதம் 3,  4. பாதங்கள் ஹஸ்தம் 4 பாதங்களும் சித்திரை 2-ஆம் பாதம் முடிய கன்னி குறியவர்கள்.
கன்னி புதனுடைய ஆட்சி உச்ச வீடு ஆகும் சுக்கிரனுக்கு நீச ராசி உபய ராசி இது பெண் ராசி சூரியனுக்கு சம ராசி ராகு கேது சனி சந்திரன் குரு இவர்களுக்கு நட்பு ராசி செவ்வாய்க்கு பகை ராசி இரவில் பலம் இல்லை பகலில் பலம் உண்டு கன்னி ராசியில் பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர் மென்மையான குணம் உடையவர்கள் நல்ல நடத்தை உடையவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல கல்வி பிற்பகுதியில் அதிக சம்பாத்தியம் பணம் சூரியன் சேர்ந்தால் ஜாதகம் கணிதம் கல்வியில் சிறந்தவர்கள் எடுத்த வேலைகளை கெட்டிக்காரத்தனமாக முடிக்கக்கூடியவர்கள் இரண்டில் புதன் இருந்தால் அல்லது கன்னி ராசி இரண்டாவது ராசியாக வந்தால் அவர்கள் பேச்சில் காரியத்தை சாதிக்க கூடியவர்கள் பேச்சு சம்பந்தமான தொழில் அமையும் எடுத்த காரியத்தை கவனமாக செய்து முடிப்பதில் வல்லவர்கள் வேலையில் தடை ஏற்பட்டால் அதன் காரணத்தை ஆராய்ந்து கண்டுபிடித்து திருத்திக் கொண்டு மறுபடியும் வெற்றியை நோக்கி பயணம் செய்யக் கூடியவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் பெருந்தன்மை மிக்கவர்கள் இவர்களுக்கு என்றும் தாய்மாமன் உறவு ஆதரவு உண்டு கன்னி ராசியில் பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்கள் போல சிறந்த கல்வி உடையவர்கள் இவர்கள் பத்திரிகை துறை விற்பனைத்துறை ஜோதிடம் விஷுவல் கம்யூனிகேஷன் தகவல் தொடர்பு தொடர்புத்துறை ஏற்றுமதி இறக்குமதி தொழிலும் இவர்களுக்கு அமையும் மருத்துவத் தொழில் கம்ப்யூட்டர் தொழில் பிராணிகள் வளர்ப்பு ஆகியவையும் லாபம் தரக்கூடியவை இவர்களுக்குத் துணையாக இருப்பது கடக ராசியினர் பொருத்தமானவர்கள் மகர ராசிக்காரர்கள் ரிஷப ராசிக்காரர்கள் உதவக்கூடியவர்
மஞ்சள் நீலம் கிரே இவர்களுக்கு ஏற்ற நேரங்கள் ஆகும் இவர்களுக்கு வாய்வு தொல்லைகள் அஜீரணக் கோளாறு முழங்கை தோல் சம்பந்த நோய்கள் நரம்பு தளர்ச்சி அலர்ஜி போன்ற நோய்கள் தாக்கும் இவர்களுக்கு தன்வந்திரி பகவான் மகாவிஷ்ணு வெங்கடேச பெருமாள் இவர்களை வணங்கிட எக்காரியமும் ஜெயமேயாகும் இவர்களுக்கு பெரிய ரோடுகளில் பொது ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கோயில்களுக்கு அருகில் கண்டிப்பாக வீடு அமையும்
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் மகிழ்ச்சியடைவார். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...