புதன், 21 நவம்பர், 2018

மீனம் ராசி காரகத்துவம்


                மீனம் ராசி. ராசி மண்டலத்தில் பன்னிரண்டாவது பகுதி முன்னூற்றி முப்பது பாகை முதல் 360 பாகை வரையிலும் வியாபித்துள்ளது ராசி மண்டலத்தில் இதுவே கடைசி பகுதி இதில் ராசி அதிபதி குருவின் நட்சத்திரம் பூரட்டாதி 3 பாகை 20 கலை விரையாதிபதி சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி 13 பாகை 20 கலை மீனத்துக்கு சுகஸ்தானாதிபதி களத்திர ஸ்தானாதிபதி ஆன புதனின் நட்சத்திரமான ரேவதி 13 பாகை 20 கலை உள்ளது
இந்த வீடு குருவின் ஆட்சி வீடு தாய் கிரகமான சந்திரன் பாகத்தில் குரு பகவானுக்கு ஒதுக்கப்பட்ட வீடு மீனம் குருவுக்கு ஆட்சி வீடு என்றால் சூரிய பாகத்தில் உள்ள மற்றொரு வீடான தனுசு கர்ம ஸ்தானம் மீனம் உபய ராசி பலன் அளிக்கும் ராசி செவ்வாய் பகவான் புத பகவானும் மாரகாதிபதிகள் பாதக அதிபதியும் புத பகவானே 7 க்குடையவன் இரட்டை ராசியில் நின்றால் 2 திருமணங்களுக்கு அமைப்பு உள்ளது மீனம் உடல் உறுப்பில் பாதங்களை குறிக்கும் மீனத்தின் வேறு பெயர்கள் மீன் கயல் சேல் ஏன
மீனம் எதிர்மறை அல்லது பெண்தன்மை ராசி சேட்டை இல்லாதது கவுரவம் ஆனது காக்கும் தன்மை உடையது நிலையானது பலன் அளிக்கும் ராசி
இந்த ராசிக்காரர்கள் கற்பனை வளம் உள்ளவர்கள் அதே சமயம் கொஞ்சம் கோழைத்தனமும் உள்ளவர்கள் ஊக்கம் இல்லாதவர்கள் மீனத்தில் சுக்கிரன் உச்சம். புதன் நீச்சம்  மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும். மீன்கள் எப்பொழுதும் தன்னையும்,தன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கும். இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்று புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருப்பவை, இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்,இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிப்பதை பெரிதும் விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும். மீன்கள் வசிக்குமிடங்களை மீன ராசி குறிக்கும். எனவே ஆறு, ஏரி,குளம்,சமுத்திரம்,வாய்க்கால் போன்றவை மீன ராசியின் வசிப்பிடங்களாகும்.
மீன ராசியில்  ஆட்சி பெறும் கிரகம் குரு   உச்சம் பெறும் கிரகம் சுக்கிரன் நீசம் பெறும் கிரகம் புதன்  மீனம் மௌனமானது  அறிவு  உடையது எதையும் விருத்தி செய்யும் ஆற்றல்
கடல், குட்டைகள், மீன் பிடி இடங்கள், தோல் பதனிடும் இடங்கள் உப்பளங்கள், ஜெயில், பாழும் கிணறு சேறு நிறைந்த இடங்கள் பெண்ராசி, இரட்டை குணம்,  தெய்வ குணம், பற்று அற்ற நிலை, ஞானத்தன்மை உள்ள பேச்சு சூழலுக்கு தக்கபடி மாறி கொள்ளுதல், கலைகளில் மேதை, நீர் சம்பந்தமான உபாதைகள், தெய்வ நம்பிக்கை உள்ள துணைவி,
நீர் நிலைகளில் விபத்து,  போதனையாளர், கப்பலில் பயணம் செய்வார்கள்  கிணறு உள்ள வீடு தந்தையின் மூலம் வருமானம், வாடகை வருமானம் உண்டு,  மந்திர ஜெபம், சகோதரன் இல்லை, பிறந்த ஊரில் மனைவி பெயரில் சொத்து,  குழந்தைகளால் கடன்  அபராதம், அரசு தண்டம் உண்டு, வெளிநாட்டு நண்பர்கள், வருமானம் உண்டு மீன ராசி கால புருஷனின் விரய பாவம் ஆகும் இது ஒரு ஜலராசி உபய ராசி பெண் ராசி. பலன் அளிக்கும் ராசி உயிருள்ள ராசி கீழ்ப்படிதல் அமைதி இயல்பாகவே தாராளம் புத்திசாலித்தனம் ஆகிய குணங்களை கொண்டது இந்த ராசி எதையும் முன்னேற்றி மேம்படுத்தும் ராசி சமுத்திரம் கடல் மீன்கள் எண்ணெய் கிணறுகள் உப்பளங்கள் துறைமுகங்கள் சிறைச்சாலைகள் தோல் பதனிடும் இடம் கால புருஷனின் பன்னிரண்டாம் வீடு குரு பகவான் மீனத்திற்கு 1 . 10 வீடுகளுக்கு அதிபதியாக அமைவதால் இந்த லக்கனத்தில் பிறந்தவர்கள் சுயநல சிந்தனைகளையும் தங்கள் சக்தியை வெளிக்காட்ட விரும்புவர்களாகவும் தங்கள் விருப்பப்படி எதையும் செய்ய விரும்புவராகவும் இருப்பார்கள்   அந்தஸ்து கௌரவம் பெயர் கௌரவப்பதவிகள் வகிப்பவர்களாகவும் பொறுப்புமிக்க ஆலோசகர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருப்பார்கள் சனியின் நட்சத்திரம்   இங்கு அமைந்தால் சோம்பேறித்தனம் சந்தேக குணம் எதிர்மறை சிந்தனைகள் தாழ்வுமனப்பான்மை இருக்கும்  ஆராய்ச்சி திறனுடையவர்களாகவும் இருப்பார்கள் சனி பகவான் மீன ராசிக்கு 11 .12 க்கு அதிபதி எனவே இவர்கள் சுயநலமும் பேராசையும் உடையவர்களாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சாதனைகளை புரிவதற்கும் சாதகமான வாய்ப்புகளை பெறுபவர்களாகவும் மற்றவர்களுடன் வளைந்து கொடுத்து செல்பவர்களாகவும் இருப்பார்கள் இரகசிய நடவடிக்கைகள் உடையவர்களாகவும் அடிக்கடி தோல்விகளையும் பிரச்சினைகளையும்  சந்திப்பவராக இருப்பார்கள்
மீன ராசியில்  புதனுடைய ரேவதி நட்சத்திரம் அமைந்தால் புத்திசாலித்தனம் நகைச்சுவையாகப் பேசுவது சூழ்நிலைகளை பற்றி புரிந்துகொண்டு விரைவாக முடிவெடுக்கும் திறனுடையவர்களாகவும் அழகான உடலமைப்பு கொண்டவர்களாகவும் கணித மூளை உடையவர்களாகவும் எதற்கும் முன் இருமுறை சிந்திப்பவர்களாகவும் சில நேரங்களில் தந்திர குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
கால புருஷனின் முதல் வீடாகிய மேஷம் மீனத்திற்கு இரண்டாம் வீடாக அமைவதால் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் முரட்டுத் தனமான பேச்சு உடையவர்களாகவும் பிறரை அடக்கியாளும் குணமும் அடிக்கடி தங்கள் மேல் அதிகாரிகள் மீது குற்றம் குறைகள் கூறுபவர்களாகவும் தங்கள் பக்க நியாயத்தை பேசியே நிலை நாட்டுவதற்காகவும் தங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களை நிலைதடுமாற செய்து விடுபவர்களாக இருப்பார்கள். மேஷம் ஒரு நெருப்பு ராசி எனவே மீன லக்னத்தில் பிறந்தவர்கள் நெருப்பு போன்ற பேச்சுவன்மையும் தங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தி விடுவார்கள் மேஷ ராசி சர ராசி செவ்வாயின் வீடு.
கால புருஷனின் இரண்டாம் வீடாகிய ரிஷபம் மீனத்திற்கு மூன்றாம் வீடாகும் மீன லக்னத்தில் பிறந்தவர்கள் பணத்தைப் பற்றிய சிந்தனை உடையவர்கள் பணத்துக்காக இவர்கள் மனம் மாறிக்கொண்டே இருக்கும் இவர்களுடைய பொருளாதார நிலையை பயன்படுத்தி தங்களை முன்னிலைப்படுத்தி கொள்பவர்களாக இருப்பார்கள் ரிஷபம் ஒரு பூமி ராசி எனவே மீனத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கோழைகளாக இருப்பார்கள் ரிஷபம் ஓரு ஸ்திர ராசி. எனவே தன்னம்பிக்கை தைரியம் தகவல் தொடர்பு திறன் இடமாறுதல்கள் புத்திசாலித்தனம் போன்றவை பெரும்பாலும் நிலைத்த தன்மையுடன் இருக்கும் ரிஷபம் சுக்கிரனின் வீடு எனவே இவர்கள் பெண்கள் மூலம் அவ மரியாதைகளையும் சோதனைகளையும் சந்திப்பார்கள் சுக்கிரன் இவர்களுக்கு 3, 8 க்கு உடையவர். எனவே இவர்கள் சந்தோஷமான சுமுகமான தகவல் தொடர்புகள் ஒப்பந்தங்கள் மற்றும் பொது தொடர்புகளை உடையவர்கள் கதை கட்டுரை கவிதை எழுதுபவர்கள் ஆகும் திரைப்படங்களுக்கு கதை வசனகர்த்தா எடிட்டர் ஆகும் அமைப்பு இருக்கும் ஆர்வமும் இருக்கும்  மற்றவர்களை மகிழ்விப்பதில் ஆர்வமும் இருக்கும்  கமிஷன் வருமானம் பெறுபவர்களாகவும் இருப்பார்கள் ஆறுக்குடைய சூரியன் மூன்றாம் பாவத்தோடு சம்பந்தப்படுவதால் இவர்கள் மருந்து மருத்துவ உபகரணங்களின் விற்பனையாளர் வாடகை வசூலிப்பவர் தபால்காரர் மருத்துவ ஆலோசகர் பத்திரங்களை வைத்து பணத்தை கடனாக கொடுப்பவர்கள் வீட்டை பராமரிப்பவர்கள் கொண்டவர்களாகவும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள் மூன்றாம் பாவத்தில் சந்திரனின் நட்சத்திரம் அமைந்தால் இவர்கள் தகவல் தொடர்புகளில் மிகவும் விரைவாகவும் குறுகிய பயணங்களை மேற்கொள்பவர்கள் ஆகவும் கற்பனை வளமிக்க கதைகள் எழுதுபவராகவும் வர்ணனையாளராகவும் இருப்பார்கள் மீனத்திற்கு செவ்வாய் ரெண்டு 9- க்குடையவர் எனவே இவர்கள் அலுவலகத்தில் உயர் பதவிகளை பெறுபவர்களாகவும் வெளிநாட்டவர் மீது பாசத்துடன் இருப்பவர்களாகவும் சட்ட அலுவலகங்களில் குமாஸ்தா பழமையான நினைவுச் சின்னங்களை பாதுகாப்பவர் அரசு தொடர்புடன் மத விவகாரங்களிலும் சேவைகளிலும் ஈடுபடுபவர் மாற்று உறுப்பு சிகிச்சைகளில் பணிபுரிபவர்கள் கோவில் சொத்துக்களை லீஸ் எடுப்பவர்கள் ஆக இருப்பார்கள்
கால புருஷனின் மூன்றாம் வீடாகிய மிதுனம் மீன லக்னத்திற்கு நான்காம் வீடாக அமைவதால் இவர்கள் அடிக்கடி இடமாற்றங்கள் உடையவராக இருப்பார்கள் மிதுனம் ஒரு காற்று ராசி உபய ராசி தங்களுடைய கல்வி முயற்சிகளில் அடிக்கடி தொல்லைகளை அனுபவிப்பார்கள் தகவல் தொடர்புத் துறைகளில் கல்வி பயில்வார்கள் இவர்கள் காற்றோட்டமிக்க பகுதிகளில் வகிப்பவராக இருப்பார் இவர்களுடைய சொத்துக்கள் வீடுகள் நிலம் வாகனங்கள் போன்றவை நிலையான வகையில் அமைந்திராது
கால புருஷனின் நான்காம் வீடாகிய கடகம் மீனத்துக்கு ஐந்தாம் வீடு ஆகும் எனவே இவர்கள் கலைப் பொருட்களையும் அலங்காரப் பொருட்களையும் கற்பனை வளத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்களையும் உருவாக்கும் எண்ணம் கொண்டவர் இவர்கள் கலைத்துறையில் உச்சத்தை அடைவார்கள் ஐந்தாம் பாவத்தில் ஒன்று 10-க்குடைய குரு பகவான்  நட்சத்திரம் இருப்பதால் கடவுள் நம்பிக்கை ஆழ்ந்த சிந்தனை தொடர்புகள் மத நிறுவனங்களின் மத சேவை புரிபவர்களாகவும் இருப்பார்கள் பங்குச் சந்தை ஈடுபாடு விளையாட்டுகளில் ஆர்வமுடையவர்களாகவும் அரசியல் கலைகளில் ஈடுபடுபவர்களாகவும் புதுமையாக கலைப் பொருட்களை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள் நாலு ஏழுக்குடைய புதன் நட்சத்திரம் இருப்பதால் கலைஞர்களுக்கான அரசு குடியிருப்பில் வசிப்பவராகவும் கூட்டுத் தொழில் ஈடுபவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்பவராக இருப்பார் சமூகத்தில் நல்ல உறவு வைத்திருப்பார்கள்                                                                                                                                மீனம் : 1. காலப்புருசனுக்கு 12 மோட்ச வீடு-உபய நீர் (சமுத்திரம், கடல்)
2.குரு ஆட்சி
3.சுக்ரன் உச்சம்
4.புதன் நீசம்
5.இலக்ன சுபர் : சந்திரன்-செவ்வாய்- குரு
6.இலக்ன பாவர்: சுக்ரன்- புதன்- சனி
7.இலக்ன மாரகர் :புதன்- சுக்ரன்-சனி
8.இலக்ன சமர் :சூரியன்
9.இலக்ன உருவம் :அளவான உயரம் அல்லது குறைந்த உயரம் - பெரிய தலை, சிறுகண்கள்-ஒழுங்கற்ற அல்லது எடுப்பான பல்வரிசை - தலை, புருவங்களில் அடர்த்தியான ரோமம் - தசைப்பிடிப்பு, தொந்தி -பகட்டான தோற்றம் - முகத்தில் தழும்புகள், மச்சங்கள் - தன் தோற்றம் பேச்சால் மற்றவர்களை கவர்வார்கள் - நிதான நடை - அவசர செயல்திறன் - மற்றவர்கள் விரும்பாத பணியை தொடர்ந்து செய்வார்கள்                                          10.இலக்ன குணம் : இரக்கமுள்ளவர் - முன்கோபிகள் - சாஸ்திரம் அறிந்தவர்கள் - வைராக்கியம் உள்ளவர் - கடமையுணர்வு உள்ளவர் - உறவினர்கள் நண்பர்களை ஆதரிப்பவர்கள் - உல்லாசப்பிரியர்- பொய்யை மெய்யாகவும் மெய்யை பொய்யாகவும் மாற்றுவார்கள்.
11.      2, 9-ம் அதிபதி செவ்வாய் வாக்குபலம் உள்ளவர்கள் - கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள்.
12. 2-ம் அதிபதி செவ்வாய், 12-ம் அதிபதி சனி வரவும் செலவும் சேர்ந்தே இருக்கும்.
13.           3,8-ம் அதிபதி சுக்ரன் நிறைய சகோதர சகோதரிகள் இருந்தாலும் பிற்காலத்தில் அவர்களால் நன்மை இருக்காது.
14.அரசியல், கலைத்துறை, ஜவுளி, வங்கிப்பணி, நூல்-சரிகை, தன் கீழ்ப்படிந்தவர்களிடம் இலாவகமாக பணி வாங்குவார்கள்.
15.தாமத திருமணம் - புத்திசாலி மனைவி - பொதுவாக இருதார யோகம்
16.குழந்தைகள் அதிகம்
17.பயணத்தில் ஆர்வம்
18.புதிது புதிதாக எதிரிகள் வந்து கொண்டு இருப்பார்கள்
19.அம்மை - பல்வலி - அஜீரணம் - சர்க்கரை - காமாலை - கண் பாதிப்பு - கட்டிகள் வரலாம்.
20.வெங்கடேச பெருமாள், மீனாட்சி அம்மன் வழிபாடு சிறப்பு.
21.உலக நாடுகள் : எகிப்து - சகாரா - போர்ச்சுகல் - இலங்கை
22.இந்தியா : மதுரை மாவட்டம், கரூர் மாவட்டம் தெற்கு, திருச்சி மாவட்டம் தெற்கு, திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு
23.பூரட்டாதி - உத்திரட்டாதி : மால்வா வடக்கு - காஷ்மீர் - கைலாசம் - குரோஞ்சதேசம் - நேருகிரி - கைதேகதேசம்
24.ரேவதி :காஷ்மீர் - திபெத் - சீனா - கந்தார் - நேபாளம் - சிக்கிம் - பூடான் - பிரம்மபுத்திரா சமவெளி - வடகிழக்கு இந்திய பகுதி
25.கல்வித்துறை - ஆன்மீகம் - மருத்துவம் - நீதித்துறை - தூதரகம் - வங்கி - கடற்படை - நீர்நிலைகளில் பணி - ஆலயப்பணி-மதபோதனை
26.கடற்கரை - நதிக்கரை - மீன்தொட்டி - குளக்கரை
27.முத்து - வைரம் - எண்ணெய் - மீன்கள் - நெய் - அத்தர் - சங்கு - பவளம் - புஷ்பராகம் - பசு - எருமை - ஆமணக்கு
28.திரைப்படம் - கெமிக்கல் பொருள் - விஞ்ஞான வளர்ச்சி - விச ஜந்துக்கள் - கொசு - மதுபானம் – மதுவிற்பனை                                                                                                            1 நீர் ராசி
2 .கால் பாதம்
3 மெளனமானது
4. அறிவுடையது
5 உபய தன்மை
6 எதையும் விருத்தி செய்யும் ஆற்றல்
7. கடல்
8. குட்டைகள்
9. மின் பிடிக்கும் இடங்கள்                                                                                                                           10 இரட்டை மின் உருவம் கொண்டது
11. தோல் பதனிடும் இடங்கள்
12 உப்பளங்கள்
13. ஜெயில்
14.பாழ் கிணறு
15. சேறு நிறைந்த இடங்கள்
16. எண்ணை வயல்கள்
17. துறைமுகம்
18 பரந்த மனபான்மை
19. இரு கால் ராசி
20. பெண் ராசி
21. இரட்டை குணம்
22. பங்குனி
23. இரவு பொழது
24 சாம்பல் நிறம்
25. வடகிழக்கு
மின ராசியின் தொழில்கள்
1 கல்வி துறை
2 ஆன்மீகம்
3 மருத்துவம்
 4. நிதித்துறை
5 தூதரகம்
6. வங்கியில் பணி செய்தல்
7. கடற்படை
8 நீர் நிலைகளில் வேலை செய்தல்
9. ஆலய பணி
10. மதப் போதனை
மின ராசியில் விளையும் பொருட்கள்
1 தென்னை மரம்
2. வெற்றிலை
3. அரச மரம்
4. எலுமிச்சை மரம்
5 .மஞ்சள்
6. கரும்பு
7 வாழை
8 நெல்
மினத்தின் தமிழ்நாட்டில் உள்ள பகுதி
1. மதுரை மாவட்டம்
2. திருச்சி மாவட்டத்தின் தெற்கு பகுதி
3 கருர் மாவட்டத்தின் தெற்கு பகுதி.                                                                                                     4. திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதி                                                                                          
மீன ராசியின் காரத்துவங்கள் :
1. கிணறு
2. நீர் நிறைந்த தொட்டி
3. கடற்கரை
4. நதிக்கரை
5. புண்ணிய ஸ்தலங்கள்
6. கல்வித் துறை
7. மருத்துவம்
8. நீதித்துறை
9. கடற்படை
10. ஆலயப் பணி
11. மத போதகர்கள்
12. புனித யாத்திரை
13. பாதங்கள்
மீன லக்கின சுபர் அசுபர் :யோககாரகர்கள்: செவ்வாய், குரு.. யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கைமாரக அதிபதி: சனி, புதன்   மீன லக்னம்: லக்கினாதிபதியான குரு கேந்திராதிபதி என்ற நிலையில் அவயோகத்திற்கு வழிவகுக்கும் இவர் 5,9 ல் இருப்பது விசேஷமாக தெரிகிறது. 4, 7 –10 ல் இருந்து புதன் சுக்கிரன் தொடர்பு பெற்றுவிட்டால் பெரும் பதிப்புக்கு ஆளாக்கிவிடுகிறார். முழுப்                  ………………………………. பாவத்தன்மை பெற்று விடுகிறார். மாரகம், ஆயுள்பயம் கண்ட தோஷங்களைத் தர தயங்குவதில்லை.
2, 9 – க்குரிய செவ்வாய் முழு சுபனாகி யோகாதிபதி ஒன்றாலும் தனித்த செவ்வாய் போக பலனைத் தருவதில்லை. குரு சந்திரன் உடன் சேரும்போது அவரின் தொடர்பு பெறும்போது நல்ல பலன்களைத் தருகிறார். இந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம். சந்திரமங்கள யோகம். குரு மங்கள யோகம். பிரகாசிக்கின்றது. இது ஜாதகரை உயர்த்துகிறது. இவரோடு சேர்ந்த ராகு, கேது நன்மைகளையே தருகின்றனர். 3, 8 – க்குரிய சுக்கிரன் அசுபத்தன்மை பெற்று பாபியானாலும் இவரோடு சனி, ராகு, கேது, புதன், சூரியன், இணைவு பெரும்போது பீதி பலம் நீடித்த உபாதைகள் சோகமான நிலைகளை உண்டாக்குவதில் தவறுவதில்லை. தனித்த சுக்கிரன் பெரும்பாதிப்புகளைத் தருவதில்லை.
4, 7 – க்குரிய புதன் சுக்கிரன் சூரியனோடு தொடர்பு பெறும்போது சோதனையான பலன்களையே தருகிறார். தனித்த புதன் நன்மை செய்கிறார். செவ்வாய், சந்திரனோடு சேரும்போது மாறுப்பட்ட பலனைத் தருகிறார். இவரோடு சேர்ந்த ராகு, கேதுக்கள் பாதிப்பையே செய்கின்றனர். 5 – க்குரிய சந்திரன் யாருடன் சேர்ந்தாலும் தனது தசாபுத்தி காலத்தில் பெரும் தவறுகளே செய்வதில்லை. 6 – க்குரிய சூரியன், புதன், சனி, சுக்கிரனோடு சேர்ந்தால் பாதிப்போ. இவர் தனித்து 3, 6, 11, 12 – ல் இருந்தால் நல்ல பலன்களைத் தருகிறார்.
இந்த லக்கினத்திற்கு குரு, சந்தி, செவ் போன்றவர்கள் தனித்து இருந்தாகளேயானால் அவர்களின் முழுபலனை தருவதில்லை. அவர்களின் காரக பலன்கள் கெட்டுவிடுகிறது.
மீன லக்கின நபர்கள் தன்னையும், தன்னை சுற்றியுள்ளவற்றை சுத்தமாக வைத்து கொள்வார், ஒற்றுமையுடன் வாழும் தன்மை,கூட்டமாக வாழ நினைப்பவர்கள் ,தன் இருப்பிடத்தை விட்டு வெளியே போக நினைக்க மாட்டார்கள்  காதல் உணர்வு இருக்கும்  பகல், இரவு இரண்டிலும் பலன் தரும் ராசி     ஊமை ராசி   நீர் நிலைகள்  வெளிநாட்டு ராசி   ஏற்றுமதி இறக்குமதி  பதப்படுத்தும் தொழில்  மருத்துவம்  ஜோதிட ராசி  துறை முக பகுதி  மரங்கள் புங்கை பூவரசு இலுப்பை செம்பருத்தி உத்திரட்டாதி  மருத்துவ குணம் உள்ள நட்சத்திரம் சொந்த தொழில் செய்யும் என்னம் மனநிலை பாதித்தவர்களை கூறும் வீசிங் தொந்தரவு இருக்கும் தாயார் ஆதிக்கம் உள்ள ராசி  ஏமாற்றம் உண்டு  வம்சாவளியில் காதல் திருமணம் இருக்கும்  ரேவதி  கிணறு உள்ள வீடு  தாய் தந்தையை பிரிந்து வாழ்வது சிறு வயதில் மருத்துவ செலவு  மருத்துவ நட்சத்திரம்    ஜோதிட நட்சத்திரம்  IP கொடுக்கும் நட்சத்திரம்
1 க்குடையவரே  10  க்குடையவர்  ஜாதகர் பிறந்த போது ஒரு கர்மம் உண்டு கர்மம் செய்யும் யோகம் உண்டு  2  க்குடையவரே  9 க்குடையவர் பொருளாதாரம் சிறப்பு  வாக்கு பலிதம்  தந்தை மூலம் வருமானம் உண்டு பணம் இவரை தேடி வரும்  வாடகை வருமானம் உண்டு  மந்திர ஜெபம் சொல்லிக்கொன்டே இருப்பார்கள்  3 க்குடையவரே 8 க்குடையவர் ENT  பிரச்சினை உண்டு விரல்களில் பிரச்சினை உண்டு  காதில் சிறு தொந்தரவு சகோதரர் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள்  அப்படி இருந்திருந்தாலும் கருத்து வேறுபாடு இருக்கும்  4 க்குடையவரே  7 க்குடையவர்  பிறந்த ஊரிலே மனைவி அமைவார் மனைவி பேரில் சொத்து இருக்கும்  ஜாய்ன்ட் அக்கவுண்ட் இருக்கும்  5 க்குடைவர் சந்திரன் கடன் உண்டு  குழந்தைகளால் செலவு உண்டு  பூர்வீகத்தை விட்டு வெளியே செல்வது நல்லது  பூர்வீகத்தில் வயல்கள் இருக்கும்  6 க்குடையவர் சூரியன்  நிர்வாக திறமை  அரசு வேலை  அபராதம் உண்டு  11 க்குடையவரே  12 க்குடையவர்  வரவு செலவு  சமமாக இருக்கும்  நன்பர்களால் விரையம் நெருங்கிய நண்பர்  வெளிநாட்டில் இருப்பார்கள்  குரட்டை விடாத  மீனமே கிடையாது                                                                                                                                          மீனலக்னத்திற்கு தன/ பாக்கியாதிபதியாக செவ்வாய் அமைகின்ற காரணத்தால் செவ்வாய் பலம்பெற்று லக்ன/ கர்மாதிபதியாகிய குரு தொடர்பு ஏற்பட்டு செவ்வாய் திசை காலத்தில் தான் இரத்ததானம்செய்வதோடல்லாமல் மற்றவர்களையும் தானம் செய்ய ஊக்குவிக்கும்,  உடல் உறுப்புக்களையே தானம் செய்கின்றனர் இந்த மீனலக்னத்தார்
மீனராசியில் பிறந்தவர்கள் மனதுக்குள் திட்டமிட்டு ரகசியமாக தனது காரியங்களை பார்ப்பார்கள். பின் தான் செய்த செயல்களை கூறி பெருமைப்படுவார்கள். நண்பர்களின் சேர்க்கை குறைவாக இருக்கும்.  சொன்ன பேச்சின்படி வாழமாட்டார்கள்.  சொன்னவற்றை உடனே மறந்து இன்னொன்றை சொல்வார்கள்.  பணம் பொருள் ஆடை ஆபரணங்களில் பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள்.  முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள்                                                                                 
இனம் பிராமணம் நீர் தத்துவம்  உதயம் பிரஷ்டோதயம்  திசை வடக்கு பெரிய ஏரி நீர் நிலைகள் சார்ந்த இடங்கள் நீரில் உற்பத்தியாகும் பண்டங்கள்
ஞானிகள் பெரியோர்கள் போன்றவர்களிடம் பக்தி விசுவாசம் உடையவர்கள் உண்மை பேசுபவர் வாசனை திரவியங்கள் பிரியம் உள்ளவர் செலவாளி முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள்  இயற்கையிலேயே இறக்கம் இருக்கும் இவர்களுக்கு காது சம்பந்தமான வியாதிகள் வரக்கூடும் மற்றவரிடம் அன்பு பாசம் மிக்கவர்கள் பழகுவதற்கு இனியவர் சாஸ்திரங்களை கற்று கொள்ள ஆசைப்படுபவர்கள் மனைவி மீது பிரியம் உள்ளவர்கள்   இசை கவிதை ஆன்மீகம் மதம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்கள் இளம் வயதில் சிறிது மந்தமாக இருந்தாலும் பிற்காலத்தில் பெரிய வளர்ச்சி வெற்றிகள் காணக் கூடியவர்கள் மற்றவர்கள் சுபிட்சமாக இருப்பதை பார்த்து சந்தோஷம் படுபவர்கள் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்கக்கூடியவர்கள் புதிய எண்ணங்களை யோசனைகளை பிறருக்கு சொல்லத்தயங்கக்கூடிய கூச்ச சுபாவம் உடையவர்கள்                                                                                                   தனகாரகனான குருவை ராசியாதிபதியாக கொண்ட ஜல ராசியான மீனத்தை லக்னமானக கொண்டவன் மிதமிஞ்சிய ஜல பானம். ஜலத்தில் உண்டான   பானசுகத்தை அனுபவிப்பான் அருந்துவான்                                                                     சிறந்த வித்துவானாவன். செய்நன்றி மறவாதவன்.தன் எதிரிகளை அவமானப்படுத்துவான். சுப்ப்பார்வை உடையவன். பாக்கியமுடையவன் ஆவான்.
மீனத்திற்கு சூரியன் செவ்வாய் ராகு கேது நட்பு சந்திரன் சனி சமம் புதன் நீச்சம் சுக்கிரன் உச்சம் குரு ஆட்சி
இவர்கள் சஞ்சல புத்தி உடையவர்கள் குழப்பம் அடைபவர்கள் அடிக்கடி தேவையற்ற மன மாற்றங்கள் குழப்பங்கள் எதிலும் ஒரு முடிவுக்கு உடனடியாக வர இயலாதவர்கள் தாமத குணம் தாமதமாக முடிவு எடுக்கக் கூடியவர்கள் இவர்களுக்கு பாதங்களில் நோய்கள் வரக்கூடும் இவர்களுக்கு உகந்த உலோகம் பித்தளை நிறம் பச்சை. இவர்களுக்கு நீலம் ஆகாது.
மீனராசியினர் கடகம் துலாம் ராசியினர் உதவி கிடைக்கும். மிதுன ராசி  இவர்களுக்கு ஒத்துவராது.
தனுசு ராசியினர் உதவுவார்கள் வடதிசை  நன்மை தரும்
இவர்களுக்கு தோல் நோய் கண்களில் உபாதை தாடைகளில் பிரச்சனைகள் பாதங்களில் பிரச்சினைகள் வரும் டென்ஷன் அலர்ஜி போன்றவர்கள் தாக்கும் நரம்புகளில் பிரச்சனைகள் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் குளிர்ச்சி சம்பந்தமான ஜலதோஷம் போன்ற நோய்கள் வந்து வந்து போகும் கோளாறுகளும் இவர்களுக்கு வரும்
மற்றவர்களை இவர்கள் நம்ப மாட்டார்கள் அதுவே அவர்களுக்கு பாதிப்பாக முடியும் ஏற்றுமதி இறக்குமதி டிராவல்ஸ் ஹோட்டல் கடல் சம்பந்தமான வியாபாரங்கள் வங்கி தொழில்கள் இசை கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் வெற்றி அடைவார்கள்
அழகிய வாழ்க்கைத் துணை அமையும் கன்னியில் குரு இருந்து சுபர் பார்வை இருந்தால் இளமையில் திருமணம் குரு சுக்கிரன் மீனத்தில் இருந்தாலும் ரிஷபத்தில் இருந்தாலும் துலாத்தில் இருந்தாலும் இளமையில் திருமணம் குரு புதன் தொடர்பு இருந்தாலும் இளமையில் திருமணம் சுக்கிர தசை புதன் தசை ஆகியவற்றில் புதன் புத்தியில் திருமணம் நடைபெறும் செவ்வாய் சூரியன் புதன் மூவரும் ஒன்றாக இருக்க சுக்கிரன் ஏதேனும் ஒரு பாவத்தை பாபருடன் கூடியிருந்தால் இவர்களுக்கு   மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்                                                                             மீனத்தானை விடேல் விடேல் என்பது பழமொழி. அவ்வளவு நல்லவர்களாக இவர்கள் உலகில் திகழ்வார்கள். மீனராசியில் பிறந்தவர்கள் பொதுவாக அன்பாகவும் தன்மையுடனும் பிராணிகளிடம் இடத்தில் அன்பு காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் பணி புரியும் தொழிலில் சிறப்பும் புகழும் பெறுவார்கள் .  இவர்கள் எதையும் முழுமையாக திறமையாக செய்வார்கள்  மீன ராசிக்காரர்கள் மற்றவர்கள் செய்த வேலைகளை மாற்றம் செய்து அதற்கு மேல் நன்றாக செய்து  விடுவார்கள் இவர்கள் பொறுமைசாலிகள் சமுதாயத்திற்கு உழைக்கும் பணியில் இருப்பார்கள்.   இவர்கள் கல்வி கற்பதில் சிறந்து விளங்குவார்கள் . பொருள்,கணிதம், மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் குள்ளமாகவும் குண்டாகவும் இருப்பார்கள். மஞ்சள் நிறத்தை விரும்புபவர்கள் .இவர்களுக்கு பித்தம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும.  இவர்கள் புஷ்பராகக்கல் மீது விருப்பம் உடையவர்கள். இவர்கள் ( ) கடலையை விரும்பி சாப்பிடுவார்கள்                                                                                                                                 மீனம் குருவின் ராசி..இந்த ராசியில் தான் சுக்கிரன் உச்சம் ஆகிறார் அதனால் வசியத்துக்கும் சுகத்துக்கும் குறைவில்லாதவர்கள்...அதனாலேயே பிரச்சினைகளையும் சந்திக்கக்கூடியவர்கள்..நிறைய அன்பும்,அறிவும் உடையவர்கள்.இரண்டாம்  வீடு மேசமாக இருப்பதால் பணம் வந்தவுடனே செலவாகிறது...சுபர் அங்கு இருந்தால் கட்டுப்படும்.சுக்கிரன் உச்சம் பெறுவதால் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள்..உத்திரட்டாதி,ரேவதி போன்ற சுபகாரியம் செய்ய உத்தமமான நட்சத்திரங்கள் இவர்கள் ராசியில் இருப்பதால் மிகவும் ராசியானவர்கள்,முகவசியம்,கைராசி என புகழடைவார்கள்.. இவர்கள்  நம்பிக்கைக்கு  பாத்திரமாக  விளங்குவார்கள்,  எதையும் திட்டமிட்டுஆற,  அமர  யோசித்துச்  செய்வார்கள்.  ஆகவே  தான்  எடுத்த  காரியத்தை     எளிதில்  கச்சிதமாக  முடிக்கும்  வாய்ப்பு  அமையும்.  தன்னடகத்திற்கு  சொந்தக்காரர்கள். மறதி என்பது  இவர்களிடம் எள்ளளவும்  இருக்காது.  பேச்சைக் காட்டிலும்  செயலுக்கு  முக்கியத்துவம்  அளிப்பார்கள்.  சிக்கனம்  இவர்களது  உடன் பிற்ப்பாக  இருக்கும்.  பொது  பணத்தை  கையாளுவதில்  அதிகமான    கவனம்  செலுத்துவார்கள்.  நாணய  பாதிப்பு  ஏற்படாமல்  நடந்து கொள்வதிலகெட்டிக்காரர்.  செலவு  செய்யும்  முன்  நியாமான  செலவா  என  யோசித்து  செயல் படுவார்கள். பணவசதி  தேவைக்கேற்ற  விதத்தில்  தேவைக்கேற்ற  நேரத்தில் வந்து    கொண்டேயிருக்கும்
பொது  பதவிகளுக்கு  இவர்  பெயர்  இடம்  பெறும்.  பொதுவாக  சண்டைக்கு  போக  மாட்டார்  ஆனால்  வந்த  சண்டையை  விட  மாட்டார்.  உடல்  உழைப்பு இல்லாத  தொழிலில்  ஈடுபடுவார்.  தீர்க்த  யாத்திரைகளிலும்          பயணங்களிலும்  அதிகம்  பிரியம்  உடையவர்.  குழந்தைகளை  அதிகம்    நேசிக்கும்  குணம்உடையவர்.  மற்றாவர்களுக்கு  நல்ல  அறிவுரைகளை  சொல்லுவதில்     வல்லவர்.  பிறரை  தன்வசமாக்கிக்  கொள்வதில் கெட்டிக்காரர்கள்.  விட்டுக்  கொடுப்பது  போல்  செயல்பட்டு  பிறகு எதிரிகளை  தன்  வழிக்கே  கொண்டு  வருவார்.சத்துவ  குணம்  உடையவர்  தத்துவ  ஞானம்,  சன்மார்க்க  சிந்தனை  உயர்ந்த  ஒழுக்கம்,  உண்மையானவர்.   மதநம்பிக்கை.  தெய்வபக்தி உடையவர்.  ஆன்மீக  ஆற்றல்  உடையவர்.  உள்ளுணர்வால்அறியப்படுவர். சுத்தமாகவும் தூய  ஆடைகளை  அணியக்  கூடுயவர்.  வாழ்க்கையை  விளையாட்டாக      எடுத்துக்  கொள்ளக்  கூடியவர்.மிகவும்  தயாள  குணமுடையவர்.  பின்னால்  வரப்போவதை  முன்பாகவே நிதானித்து  அறியக்கூடியவர். சில சமயங்களில்மூர்க்க  குணம் உடையவர். தை ரியசாலி,  செல்வம்  அதிகமாக  இருக்கும்.      பந்துக்களிடம்  பாசம் உடையவர்.தன்  குடும்ப  உறுப்பினர்களின்சொற்களுக்கு  மதிப்பும்  மரியதையும்,அளிப்பார்.  குடும்ப  பெருமையைக்     காப்பாற்றும்   தன்மை  உண்டு.  எல்லாக்  காரியங்களிலும்  தான்  முன்பாக   இருக்க  வேண்டும் என்று  விரைந்து  செல்பவர்.   இவருக்கு  உடன்  பிறப்புகள்  அதிகம்  இருப்பார்கள்.  உடன்   பிறப்புகளால்  இவருக்கு  நல்ல  முன்னேற்றம் கிடைக்கும்.  பெண்  சகோதிரிகள்  இவருக்கு  தக்க  சமயத்தில்  கை கொடுத்து  உதவுவார்கள்.சகுனம்  பார்ப்பது  போன்ற    நம்பிக்கை  .  பழைய  கோட்பாடுகள்,  நம்பிக்கைகள்  எல்லாவற்றையும்   மிக  உறுதியாக  பற்றிக்  கொண்டு  இருப்பார்கள்.  வேறு  எதை  வேண்டுமானலும்    விட்டு  விடுவார்களே  தவிர  பழமைப்  பற்றை  மாத்திரம்   விட மாட்டார்.

இவர்களுக்கு   திருமண  வாழ்க்கைப்  பிறகு  செல்வ  நிலை மேலோங்குவதோடு  செல்வாக்கும்  உயரும்.   மாமன்,  மைத்துனர்  வழி ஒத்துழைப்பில்      மகத்தான  பலனைக்  காண்பர்.  இவருக்கு  தாயின்  ஆதரவு அதிகம்  இருக்கும் குடும்பத்தில்  செல்லப்  பிள்ளையாக  வளருவர்.  அவர்  வளர,  வளர  தாயின்  உடல்  நலத்தில்  குறைபாடுகள்  வந்து  கொண்டே  இருக்கும்.  கவலையற்ற  வாழ்க்கை  தான்  லட்சியமாக  இருக்கும்.

சிறு  வயதில்  இருந்தே  நவீன  வசதிகளுடன்  கூடிய  அழகிய  வீடு  கட்ட   வேண்டுமென்று  ஆர்வம்  இருக்கும்.  மற்றவர்கள்  ஆச்சர்யப்படும்   விதமான  வாகன  வசதிகள்   வைத்துக்  கொள்ள  ஆசைப்படுவார். வீடு,  இடம்,தோட்டம்போன்றவைகளை  வாங்கி  அதன்  மூலம்  செல்வத்தை சேமிப்பார்.  புகழ்,  செல்வாக்கு,  அந்தஸ்து,  கவுரவம்  அனைத்தும்  கடைசி வரை  இருக்கும்.  இவர்களுக்கு  அரசு  வழி  தொல்லைகள்  உருவாகும்.  அடுத்தவர்களுக்கா  வாங்கி  கொடுத்த  தொகைக்காக  பிரச்சினைகள் உருவாகும்.
ஒரளவு  பிடிவாத  குணம்  உடையவர்கள்.  ஆனாலும்  மற்றவர்கள்  ஏதாவது  சொல்லி  விடுவார்களோ  என  நினைப்பார்கள்.   எதைப்பற்றியும்   அவராகவேஒரு முடிவைச்  செய்துக்  கொண்டு  அப்படித்தான்  நடக்கும்  என்று நினைத்துக்  கொண்டு  செயல்படுவார்கள்.  எப்போழுதும்  தங்களுடைய  கல்வி  மற்றும்  திறமைகள்  பற்றி  ஒரு  அசாதரணமாக தன்னம்பப் கை  இருக்கும்.  ஆனால்  மிகவும்  உண்மையான  நண்பர்களாக இருப்பாகள்.  வாசனை  திரவியங்கள்  மேல்  ஆசையுடையவர்.  போஜனப் பிரியர்.

இவர்கள்  மிகப்பெரிய  அதிகாரியாகவும்,  ஆராய்ச்சியாளராகவும்போதிக்கக்   கூடியவராகவும்,   கல்வித்  துறை  மற்றும்  வழக்கறிஞர் துறையைத்  தேர்ந்தெடுக்கக்  கூடியவர்களாகவும்   இருப்பார்கள்.  அரசு  வழி  அலுவலர்கள்,  நிதி  சேமிப்பு  நிலையங்கள்,  கணக்கு  பார்க்கும்  பணிகள்,  பேச்சாளர்கள்  போன்ற  துறைகளிலும்  தேர்ந்தெடுத்து  அதில்  ஈடுபட்டால்  வெற்றி   காணலாம்.

இவர்களுக்கு  இயற்கையிலேயே  குருவருளும்,  திருவருளும்  துணையாக இருக்கும்.  இருப்பினும்  வியாழக்கிழமை  தோறும்  விநாயக  பெருமானையும்,  குரு  தெட்சிணாமூர்த்தியையும்  வழிபட  வேண்டும்.  குரு  கவசம்  படி  வழி பட்டால்  குறைகள்  நிவர்த்தியாகும்.             
மீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீனராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக்கொண்டே தானிருக்கும்.

உடலமைப்பு, மீனராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள். நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள். பேசுவது கூட மெல்லிய குரலில் தானிருக்கும். …. நடக்கும் போது கைகள் இரண்டையும் வீசி உடல் குலுங்கும்படி நடப்பார்கள்.

குணஅமைப்பு, மீனராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள் என்று சொன்னால் அது மிகயாகாது. மனத் தெளிவுடன் இருக்கும்போது தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். தன்னிடமுள்ள எந்த ரகசியத்தையும் மறைக்க தெரியாது. சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் கொண்டவர்களாதலால் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும்  செய்வார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்களாதலால் இவர்களை நம்பி எந்த காரித்திலுமே இறங்க முடியாது. மீன ராசிக்காரர்கள் தமக்கு தாமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள். வீண் விவாகரங்களில்அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இதனால் இவர்கள் வசிக்கும் இருப்பிடத்தை கூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள். இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால் இவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சமயம் பார்த்து காலை வாரிவிடுவார்கள்.

மண வாழ்க்கை மீன ராசியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கையையே விரும்புவார்கள். இவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணமும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் உற்றார் உறவினர்களால்  தேவையற்ற மன  சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் வந்து சேரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது. வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து அமைதியும் குறையும். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் இருப்பதால் ஆன்மீக, தெய்வீக காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

பொருளாதாரநிலை, மீனராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவர்களாகவே இருப்பார்கள். சிறு வயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும்  பண வரவில் தட்டுப்பாடு இருக்காது.   பண வரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில்தான் செல்வத்தை  சேர்ப்பார்கள். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் பூமி, வீடு, மனை, வண்டி, வாகனங்களை அமைத்துக் கொள்வார்கள். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள்.  நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்களாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.

புத்திர பாக்கியம், மீன ராசியில் பிறந்த அனேகருக்கு புத்திர பாக்கியம் இருப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். வரக்கூடிய வாழ்க்கை துணையால் சர்புத்திர பாக்கியமான ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கொரு ஆண் என பிறக்கும். அவர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஜல சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். உதாரணமாக கப்பல், படகு, தோணி, போன்றவற்றில் அடிக்கடி பிராணயம் செய்பவர்களாகவும, மீன்பிடி தொழிலில் வல்லவராகவும் இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். பால், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களாலும் லாபம் உண்டாகும்.                         ……………………………………………………………………………………………………………… எத்தொழிலில் ஈடுபட்டாலும் அத்தொழில் முதன்மை வகிக்கும் ஆற்றலை இவர்கள் பெற்றிருப்பார்கள்.

உணவு வகைகள், மீன ராசியில் பிறந்தவர்கள் நேரம் தவறாமல் சூடான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது நல்லது. பசலைகீரை, கீரை வகைகள், முட்டை கோஸ், வெள்ளரிக்காய், பச்சை பட்டாணி, கேரட், முழு கோதுமை ரொட்டி, பார்லி, கேழ்வரகு போன்றவற்றை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


ஆரோக்கியம்,  மீனம் ராசியில் பிறந்தவர்கள் நல்ல நிறமும், கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள். அழகான தோற்றம் கொண்டவர்கள். அவர்களுக்கு மீன் போன்ற கண்கள் இருப்பது கூடுதல் அழகு. புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் காணப்படும் இவர்கள் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள்.
இந்த ராசி குழந்தைகள் வம்பு சண்டைக்கு போக மாட்டார்கள், அதே நேரத்தில் வந்த சண்டையை விட மாட்டார். உடல் உழைப்பு இல்லாத தொழிலில் ஈடுபடுவார். சுற்றுலா செல்வதில் குறிப்பாக ஆலயங்களுக்கு தீர்க்க யாத்திரைகளிலும் பயணங்களிலும் அதிகம் பிரியம் உடையவர். அனைவரையும் நேசிக்கும் குணம் உடையவர்.
வசதியான வாழ்க்கை புகழ், செல்வாக்கு, அந்தஸ்து, கவுரவம் அனைத்தும் கடைசி வரை இருக்கும். சிறு வயதில் இருந்தே நவீன வசதிகளுடன் கூடிய அழகிய வீடு கட்ட வேண்டுமென்று ஆர்வம் இருக்கும். வீடு, இடம், தோட்டம் போன்றவைகளை வாங்கி அதன் மூலம் செல்வத்தை சேமிப்பார்.தன்னம்பிக்கைவாதி ஒரளவு பிடிவாத குணம் உடையவர்கள். ஆனாலும் மற்றவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ என             நினைப்பார்கள். எப்போழுதும் தங்களுடைய கல்வி மற்றும் திறமைகள் பற்றி ஒரு அசாதரணமாக தன்னம்பிகை இருக்கும். ஆனால் மிகவும் உண்மையான நண்பர்களாக இருப்பாகள்.ருசிக்கு அடிமை இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் நேரம் தவறாமல் சூடான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். அம்மாக்கள் ஆறிப்போன உணவை வைத்தால் சாப்பிட யோசிப்பார்கள். போஜனப் பிரியர் என்பதால் எதையும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் மேல் ஆசையுடையவர்.
வாய் சொல்லில் வீரர் இவர்கள் மிகப் பெரிய அதிகாரியாகவும், ஆராய்ச்சியாளராகவும், கல்வித் துறை மற்றும் வழக்கறிஞர் துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அரசு வழி அலுவலர்கள், நிதி சேமிப்பு நிலையங்கள், கணக்கு பார்க்கும் பணிகள், பேச்சாளர்கள் போன்ற துறைகளிலும் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டால் வெற்றி காணலாம். பொறுமைசாலிகள் இந்த ராசி குழந்தைகளிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். மற்றாவர்களுக்கு நல்ல அறிவுரைகளை கூறுவதில் வல்லவர். பிறரை தன் வசமாக்கிக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். எதைப்பற்றியும் அவராகவே ஒரு முடிவைச் செய்துக் கொண்டு அப்படித்தான் நடக்கும் என்று நினைத்துக் கொண்டு செயல்படுவார்கள். நோய் பாதிப்பு மீன ராசியில் சூரியன் இருந்தால், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். இங்கு சந்திரன் இருந்தால் சிலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகக்கூடும். செவ்வாய், இருந்தால், கால்களில் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். புதன் இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு இருந்தால், கால்களில் வீக்கம், அடிவயிற்றில் கட்டிகள் போன்றவை ஏற்படக்கூடும். சனி முடக்குவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.இவர்களுக்கு கண் பார்வைக் கோளாறுகள் மற்றும் கட்டிகள் போன்றவைகள் வரலாம். சுக போகங்களில் அதிக அளவில் ஈடுபாடு காரணமாக நரம்பு தளர்ச்சிகள் சிலருக்கு வரலாம்.
திருவானைக்காவல் ஆலயம் கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் ராசியை குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் சென்று வழிபடலாம்.,                                                                                    திரைகடல் ஓடி திரவியம் தேடுவது மீனராசி, வெளிநாடு போராங்களோ இல்லையோ  தொழிலில் ஒரு அலைச்சல் இருக்கும். அலைந்து திரிந்துதான் வருமானத்தை பெறமுடியும்                                                                       மீன ராசி ஆழ்ந்து சிந்திப்பவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். பிறருக்கு நியாயம் கூறும் இடத்தில் இருப்பார். கூட்டமாக இருக்க விரும்புவார். நுணுக்கமான சிந்தனை கொண்டவர்கள்.கற்பனாவாதிகள். ஏமாளிகள், சுயநலம் என்பது என்ன என்றே தெரியாதவர்கள்  மீனத்தில் ஒரு கிரகம் பெரிய பலனை தருவதில்லை / அனுபவிக்க முடிவதில்லை விதி: இலாபாதிபதியே  விரையாதிபதி  சனி
மீனத்தில் பிறந்தவர்கள் காமதேனு காமராஜர் ஸ்ரீராகவேந்திரர்  எழுத்தாளர் தி.ஜானகிராமன் திரைப்பட இயக்குனர் ஏ.பி.நாகராஜன்   
மீனம் லக்கினத்திற்கு திருமணவாழ்வு
மீனம் ராசி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் சொந்தத்திற்குள் திருமணம் அமையும் வாய்புள்ளது.துணைவர் பலவீனம் சிற்சில நோய்கள் உள்ளவராக இருப்பார் இல்லறத்தில் இ்ரட்டைச் சிந்தனை உடையவர்கள் இவர்களின் கணவன் /மனைவி புரிந்துகொள்வது எளிதாயினும், இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும் சரியாகப் புறிந்து கொள்ளவில்லை என்று கருதும் அப்பாவிகள். இவர்களின் உணர்ச்சிக்கும் கோபத்திற்கு அர்த்தம் இருக்காது. இர்களின் குடும்பம் மற்றும் செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை இவர்கள் பலர் வயது வித்தியாசம் பாராமல் உறவு கொள்வதில் கொள்கை அற்றவர்கள்.மனோ கற்பனையில் சுகம் காணுவதில் மகா சாமார்தியசாலிகள் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இவர்களுக்கு பாலுணர்வு சக்தி குறையும்.
இல்லறத்தை ஒர் லட்சிய நோக்கில்லாமல் நடத்துவார்கள்.தன் வாழ்க்கைத்துணையாளரின் உணர்ச்சிகளை ஒரு நொடிப்பொழுதில் தகர்த்து ஏறிந்துவிட்டு வெளியேறுபவர்கள்.கருத்துக்களை பரிமாற எண்ணுவர்கள் ஆனால் நல்ல கருத்துக்துக்களை இல்லற முன்னேற்றத்திற்கான திட்டங்களை கணவன் /மனையிடம் பேசமுடியாத சூழ்நிலையை சந்திப்பார்கள். மரியாதைக்கொடுத்து மரியாதையைப் பெற்றால் இவர்கள் என்னாலும் இல்லறத்தில் மரியாதைக்குரியவர்கள்தான் ஆனால் அது எத்தனை பேர் வாழ்கையில் சாத்தியாமான்றது. இவரின் உண்மைத்தன்மையை வாழ்க்கைத்து ணையாளர் எப்போதும் உணரப்பேவதில்லை. பொதுவில் இவர்கள் இல்லற வாழ்கையில் ஒளிதரும் விளக்கின் அடிபீடம் போன்றவர்கள்.
லக்கினத்திற்கு எட்டில் சூரியனும், புதனும், சுக்கிரனும் இணைந்திருந்தால் திருமணவாழ்வில் பிரிவினையும், குழப்பம், சட்டை சச்சரவும் ஏற்ப்படும்.
செவ்வாயும், புதனும், சுக்கிரனும் இணைந்து 6-8-12-ல் இருந்தால் திருமண தாமதமும், திருமணத்தில் விருப்பம் இல்லதவர்கள், தனிமை விரும்பிகள்.
சனி நின்ற ராசிக்கு 1-3-7-10-ல் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு திருமணமாவதில் தடையும்,தாமதமும், பிரச்சனைகள், சண்டை ஏற்படும். கட்டாய திருமணவாழ்வு அமையும். லக்கினம் அல்லது 10-ல் செவ்வாய் இருந்தாலும். 3-4-6-7-8-ல் புதன் இருந்தாலும். சனி, செவ்வாய் இணைந்திருந்தாலும் அல்லது பார்த்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்  ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் ஆகும்.
புதன், குரு இணைந்திருந்தாலும். புதனை குரு பாத்தாலும் ஜாதகர் ஜாதகிக்கு மாமனார் மற்று மாமன் குடும்பத்துடன் பாசத்துடன், பிரியத்துடனும் இருப்பர்கள்.
6-ல் செவ்வாய் அல்லது 2-ல் புதனும், சனியும் இருந்தால் மனைவி கணவன் மூலம் சொத்துக்கள் சோர்கை யோகமுன்டாகும்.
2-12 -ல் சனி இருந்தாலும், செவ்வாய்க்கு 1-4-7-8-ல் ஜாதகர் /ஜாதகிக்கு காதலனுபவம் உள்ளவர்கள். சிலர் திருமணம் நடக்கும்.
மீன ராசி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு
ஏழில் சூரியன் " ஏறுக்குமாறான துணைவர்கள் அமைந்தால் கூசாமல் சன்னியாசம் வாங்கிக் கொள் " இருந்தால் மணவாழ்வில் நிம்மதியை எதிர் பார்க்கக்கூடாது.போரட்டம் நிரைந்ததாக அமையும்.
ஏழில் சந்திரன் இருந்தால் மண வாழ்க்கையில் இனிமை கிட்டும்.ஆனால் அவ்வப்பேது தொடர முடியாமல் பிரிவுகளும். பிரச்னைகளும் வேறு வகையில் வந்து தடை செய்யும்.
ஏழில் செவ்வாய் இருந்தால் இல்லறம் இனிமையாகும்.திருமணம் காலதாமகும். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகயிருக்கும். எப்படியிருந்தலும்.இனிமையாக அமையும்.
பெண்களுக்கு இருந்தால் தோஷமில்லை.
ஏழில் புதன் இருந்தால் நல்லதல்ல சுக எண்ணங்கள் லட்சியங்களும் ஏட்டளவில் தான் அமையும். அட்டிபடைப்பார்கள். சோலைவணம் பலைவணமாகும்.
புதனும், சுக்கிரனும் இணைந்தால் மன தடுமாற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு புதன் ஏழில் நல்ல அமைப்பாகும். ஆனால் வாழ்கையில் சில சோகமான சோதனைகள் ஏற்படும்.
புதன் 5-11 ல் இருந்தால் மறுமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குகாளாகக் கூடும்.
ஏழில் குரு இருந்தால் வாழ்க்கை ஏதோ ஒரு வாழ்கையாக அமைந்துவிடும்.
பெண்களுக்கு திருமணம் காலதாமகும். திருப்திற்ற கணவனே கண் கண்ட தெய்வம்.
குரு, புதன் இணைந்திருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சோர்க்கை இருப்பின் தாங்கள் உள்ள பணி /பதவி தொழில் சம்பந்தப்பட்ட்டவரே வாழ்க்கை துணைவர்கள் அமைவர்கள்.
ஏழில் சுக்கிரன் ஆண்களுக்கும் /பெண்களுக்கும் சரி நரம்பறுத்த வீணையை மிட்டுவது போல் தான் இல்லற வாழ்வு அமையும்.
5-11ல் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு திருமணயின் வாழ்வில் மககிழ்ச்சி திருப்தியுடனிருக்க எதேனும் சிற்சில பிரச்சனைகள் குடும்பத்தில் இடைஞ்சல்கள் ஏற்பட்டு மனச் சோர்வு சஞ்சலம் கொள்ள வேண்டிய நிலையினை ஏற்படுத்திவிடும்.
ஏழில் சனி இருந்தால் சுகமன வாழ்க்கைதான் நிரந்தரமானது.
ஏழில் ராகு இருந்தால் அதித காம உணர்வுள்ளவர் பிர்பலர் தொடர்பு ஏற்படும். பெண்களுக்கு இருந்தால் இதை அறிந்து அவர்களின் கணவர் செயல்படுவது நல்லது.துணைவர்களை இகழவும் புறக்கணித்துப் பார்க்க கூடியவர்களாக இருப்பர்கள்.
ஏழில் கேது இருந்தால் திருமணவாழ்வில் சுவை என்பதோ கிடைக்காது.காலப்போக்கில் நாட்டமில்லாத நிலையும் தரும்.துறவு நிலையைத் தரும்.
லக்கினத்திற்கு 2-5-7-ல் ராகு, கேது இருந்தால் சொத்து, சுகம் அதிகமிராது.
மீன லக்னத்தில் பிறந்தவன் மீனுக்கு ஒப்பான கண்களையுடையவன். தோல் சம்பந்தமான நோய் உள்ளவன். கபம், வாதம் இவைகளால் கஷ்டப்படுபவன். பலவிதமான தொழில்கள் மூலம் பணம் சேர்ப்பவன். பெற்றோர்களிடத்தில் பிரியமுள்ளவன். அதனாலேயே சண்டை போடும் மனைவியைப் பெற்றிருப்பவன். ரத்த சம்பந்தமான நோய்களையுடையவன்.
மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். பேச்சால்,வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும்.

10ம் அதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன்,செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் 10ல் சூரியன், செவ்வாய் திக் பலம் பெற்று அமைந்திருந்தாலும் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு, அரசு அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  அதுபோல சூரியன்,செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கௌரவமான பதவிகள் தேடி வரும். குரு,சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பிறந்த ஊரை, விட வெளியூர், வெளிநாடுகள் மூலம்                அனுகூலங்கள், பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். மக்கள் தொடர்புக்கு காரகனான சனி பகவான் 10ல் அமையப் பெற்று குரு, சூரியனும் பலம் பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கு உயர்ந்த பதவிகளை அடைய முடியும். இது மட்டுமின்றி சொந்த தொழில் செய்யக் கூடிய  வாய்ப்பு, இரும்பு, விவசாயம், எண்ணெய், தொடர்புடைய தொழில், பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய்10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 10ல் அமைந்தால் குருவுக்கு சுக்ஙகிரன் பகை கிரகம் என்றாலும் ஆடை, ஆபரணம்,கலை, இசை துறைகளிலும், பெண்கள் உபயோகிக்கக்வடிய பொருட்கள், டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.  ராகு 10ல் இருந்தால் மருந்து,கெமிக்கல் தொடர்புடையவற்றிலும்  10 ல் சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் மருத்துவத் துறையிலும் முன்ன«ற்றம் கொடுக்கும். 10 ல் புதன் அமைந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் மேலே கூறியது போல மனைவி மற்றும் மிக நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது உத்தமம். அதுவே, குரு பகவான் பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும்,அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்யவேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால்                                                       தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.


மீன லக்கனத்தில் பிறந்தவர்கள் பூர்வீக சொத்தை அழித்து விடுவார்கள். அல்லது அதை மாற்றித் தமது பொருளாக ஆக்கிக் கொள்வார்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் எப்படியாவது சிறுக பொருள் வந்து சேர்ந்துவிடும். இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் நாம் அறிந்து கொள்ளமுடியாது. இவர்களுக்குப் பெரும்பாலும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். இவர்களது போக்கை அறிந்து கொள்வதே மிகவும் கடினமாக இருக்கும். தாராள மனப்பான்மை உடையவராய் இருந்த போதிலும் நடைமுறையில் சிறிது கஞ்சத்தனமாக நடந்து கொள்வார்கள். மொத்தத்தில் இவரால் மற்றவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது
மீனம் காலபுருஷனின் கடைசி வீடு பனிரெண்டாம் இடம் இதுதான் இந்த ராசியின் அதிபதி குரு பகவான் இந்த ராசி உபய ராசியாகும் மாதத்தில் பங்குனி மாத கால வேளையில் மாலை பொழுதையும்  குறிப்பதாக உள்ளது பஞ்சபூத தத்துவத்தில் நீர் ஆகவும் உள்ளது பருவகாலத்தில் வெயில் காலமாக உள்ளது  ராசி சர ஆகவும் இரட்டை மீன்   உருவம் கொண்ட ராசியாகவும் மூலத்தில் ஜீவனாகவும்  உள்ளது
குரு  பாதிப்பு விலக: நமக்கு கிரகங்களினால்  பாதிப்பு ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய் முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு  பாதிப்பு அமைந்து விட்டால்.... அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பாகும்.
வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.
தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது. அவரவர் வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.
வியாழன் துதி
குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி                                                                ! குரு

ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
கோவில் தொடர்பு எண்: 04374 -269407.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...