புதன், 21 நவம்பர், 2018

துலாம் ராசிகாரகத்துவம்


   துலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்  துலாம்(சித்திரை 3,4, ம் பாதம். சுவாதி, விசாகம் 1,2 3ம் பாதம்)
துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிர பகவானாவார். கால புருஷனின் 7.வது சரராசியாகும். சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,23 பாதங்களிலும்   பிறந்தவர்கள் துலாராசியாக  கருதப்படுவார்கள். இது ஒரு சுப ராசியாகும். துலா ராசி பகலில் வலுப்பெற்றதாக இருக்கும்.
உடலமைப்பு,
துலா ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அழகுடையவர்களாக இருந்தாலும் அத்துடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள். ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதிலும் அலாதி பிரியம் கொண்டவர்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். சிரித்தால் இருபுறங்களிலும் அழகாக குழி விழும். இவர்களுக்கு சிறுவயதில் சிறு சிறு கண்டங்கள் ஏற்பட்டாலும் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார்கள். மூக்கும் முழியுமாக அழகாக தோற்றமளிப்பார்கள். உதடுகள் அழகாக அமைந்திருக்கும்.
குண அமைப்பு,
நேர்மையே குறிக்கோளாக கொண்டவர்கள் துலா ராசிகார்கள். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறயதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை  போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப்பார்கள். வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். கொடுத்த வாக்குறுதி¬யினை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவார்கள். வாக்கு சாதுர்யம் கொண்ட இவர்களிடம் பேசி ஜெயிப்பதென்பது இயலாத காரியமாகும். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் சரளமாக பேசும் இவர்கள் வீட்டில் ஒன்றுமே தெரியாதவர் போல இருப்பார்கள். எதற்கும் சலைக்காமல் பாடுபட்டவர்கள் என்பதால் தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டார்கள்.
மணவாழ்க்கை,
துலா ராசிக்காரர்களின் மண வாழ்க்கையான  திருமணத்திற்குப் பின் சுபிட்சம் நிறைந்ததாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் எப்பாடுபட்டாவது சுயகௌரவத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் நல்ல அறிவாற்றலுடன் அமைதியான குணத்துடனும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத பண்புடனும் அமையும். இவர்களுடைய தேவைகளை முன்கூட்டியே அறிந்து வரவுக் கேற்றவாறு குடும்பம் நடத்தி சிக்கனமாக நடந்துகொள்வார்கள். காலமறிந்து உணவளிப்பது எவ்வளவு மனகுறைகள் ஏற்படினும் அனுசரித்து  நடப்பது, ஒருவர் கோபப்பட்டால் ஒருவர் அமைதி காப்பது போன்றவற்றால் குடும்ப சூழல் மிகவும் சிறப்பாக அமையும். மன வேற்றுமையோ,  வெறுப்போ ஏற்படாமல் நடந்து கொள்வார்கள். விருப்பத்திற்கேற்றவாறே வாழ்க்கை துணையும் அமைவதால் பிரச்சினைகளற்ற வாழ்க்கை அமையும்.
பொருளாதார நிலை,
துலா ராசியில் பிறந்தவர்களுக்கு பண வரவுகள் ஏற்றத்தாழ்வுடையதாகத்தான் இருக்கும். கையில் பணம் வருவதற்கு முன்பே செலவுகள் வாயிற் கதவை தட்டும்.  குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருப்பதால் சேமிக்க முடியாமல் போகும். என்றாலும் இவர்களின் தேவைக்கேற்றபடி பணவரவுகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஏழை, எளியவர்களுக்கு இல்லை என்று வருபவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். சிறு வயதில் கஷ்டங்களை  சந்திதிருந்தாலும் பின்னர் தன்னுடைய வசதிக்காகவும், குடும்பத்தினருக்காகவும்  வீடு, மனை, வண்டி வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். நடு வயது வரை இவர்களது  வாழ்க்கை போராட்ட கரமானதாகதான் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்தால் மற்றவர்களுக்காக கடன் வாங்குவதையும் அதற்காக வட்டி கட்டுவதையும் தவிர்க்கலாம். நல்ல பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதால் பொது நல சேவைகளுக்காக நிறைய செலவுகளை செய்வார்கள். அடிக்கடி வெளியூர் பயணங்கள் தெய்வீக யாத்திரைகள் செய்யும் வாய்ப்புகள் அமையும் என்பதால் பயண செலவுகளும் அதிகமாக இருக்கும். நிரந்தரமான வருவாய் இருக்கும். நிரந்தரமான வருவாய் இவர்களுக்கு இருக்கும் என்பதால் சம்பாதித்து சேமித்து சந்ததியினருக்கு சேமித்து வைக்க தவறமாட்டார்கள்.
புத்திர பாக்கியம்,
துலா ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும். அப்படி இருந்தாலும் பெண் குழந்தைகள் யோகமே  இருக்கும். பிள்ளைகளால் இவர்களுக்கு மருத்துவ செலவுகளும் கடன்களும் ஏற்படும் பின்பு சரியாகும்.
தொழில்,
துலா ராசியில் பிற்ந்தவர்களுக்கு அரசியல் அல்லது அரசு தொடர்புடைய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம். போலீஸ் துறை , இராணுவத்துறை , பதிப்பாசிரியர்கள், பத்திரிகைதத் துறை, ஓட்டல், தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு வெகு சீக்கிரத்தில் உயர்ந்த அந்தஸ்தினை பெறுவார்கள். இவர்கள் லாப நஷ்ட கணக்கு பார்த்த பின்னரே எதிலும் ஈடு படுவார்கள். என்றாலும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடும்போது கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பார்கள். மற்றவர்களின் கைகிபிடித்து கால் பிடித்து முன்னேறுவது பிடிக்காது. தன் சொந்த முயற்சியாலேயே  முன்னேறி விடுவார்கள். தொழில், வியாபாரம் செய்வதற்காக கடன்கள் வாங்க நேரிட்டாலும் கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கொடுத்து உதவுவார்கள். இவர்களும் சலுகைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி கடன்களையும் அடைத்து விடுவார்கள்.
உணவு வகைகள்,
துலா ராசியில் பிறந்தவர்கள் நிறைய காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கொழுப்பு பொருட்கள், எண்ணெய் வஸ்துகள் போன்றவற்றை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை                                                                                                                                             , எண் - 4,5,6,7,8
 நிறம் - வெள்ளை, பச்சை
கிழமை - வெள்ளி, புதன்
திசை -தென் கிழக்கு
கல் -வைரம்
தெய்வம் – லக்ஷ்மி                                                                                                                                   துலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திர பகவானாவார். இவர் ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு,தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

 சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9,12 க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12 ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில், உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்திய நாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும்.  குரு, சந்ஙதிரன் ஆட்சி உச்சம் பெற்று 10 ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த  பணிகளில் உயர் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு சந்திரன் பலம் பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும்,துலாம் லக்னத்திற்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகனாகிய சனி பலம் பெற்று அமைந்திருந்தாலும்,அரசாங்க அதிகாரியாகவும், அரசுத் துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். அதுபோல சந்திரனுக்கு நட்பு கிரகங்களாகிய சூரியனும்குருவும் பலம் பெற்று அமைந்தாலும் அரசுத் துறையில் பணியுரியக்கூடிய வாய்ப்பு அமையும். 

துலாம் லக்னத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அந்த வீட்டதிபதியான சந்திரன் தனித்து ஆட்சிப் பெற்று பலமாக அமைந்திருந்தால் ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவுசம்பந்தப்பட்ட தொழில், ஹோட்டல் தொழில் போன்றவற்ல் நல்ல லாபம் அமையும். மேலே குறிப்பிட்டது போல சந்திரன் ஜல காரகன் என்பதால், கடல் சார்ந்த துறைகளில்கூட பணி புரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.  சூரியன்,செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன் உண்டாகும். குரு 10ல் பலம் பெற்றிருந்தால் சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடிய வாய்ப்பு, தொழில் ரீதியாக முன்னேற்றம்,வாக்கால் பேச்சால் சம்பாதிக்கக்கூடிய யோகம், வக்கில் பணி, ஆசிரியர் பணி போன்றவை உண்டாகும்.  சுக்கிரன் பலம் பெற்று உடன் சந்திரன் 10ல் அமையப் பெற்றால் கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமையப் பெற்றால் கலை, இசை,சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல்  அமைந்தால் பூமி,மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
புதன் பலம் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை இருக்குமேயானால் கணக்கு, கம்ப்யூட்டர், தொழில் மற்றும் வணிக தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்க முடியும். புதன், சந்திரன் சேர்க்கை பெற்று 10ல் கேது சந்திரன் சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல் தொடர்புடைய தொழில் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று  சுபர்சேர்க்கையுடன்அமைந்து 10ம் வீட்டிற்கும் குரு பார்வை இருந்தால் நிலையான வருமானம் உண்டாகும். அதுவே சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில்  செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி பார்வை 10 ம் வீட்டிற்குஇருந்தாலும், சந்திரனுக்கு இருந்தாலும் தொழில்  ரீதியாக நிறைய போரட்டங்களைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையானதொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும்                                                                                    , 7 மிடமென்பது களத்திரம் இருவரும் சமம்  கணவன் மனைவி, கடைவீதிகளுக்கு அருகில் உள்ளவீட்டில் இருந்து தான் வாழும் வீட்டிற்கு மேற்கே இருந்து மனைவி                                                                                                                       துலாம்:
துலாத்தாள் எவ்விடத்திலும் தோளான் என்ற சிறப்பை பெற்ற இவர்கள் கைராசி மிக்கவர்களாகவும், கடமை தவறாதவர்களாகவும், இரக்க சுபாவமும், அரக்க சுபாவமும் கலந்த மனோபாவம் பெற்றிருப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். குசேலரும் குபேரர் ஆகும் வாய்ப்பை வழங்குபவர் இவர்கள் ராசி நாதன். எனவே சுகபோகங்களையும் அனுபவிப்பா
ர்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் மனிதருள் மாணிக்கம். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். மற்றவர்கள் தொடங்கும் புதுத் தொழிலுக்கு கைராசி மிக்கவர்கள் இவர்கள் என்ற முறையில் குத்துவிளக்கு ஏற்றவும் புது கணக்கு போடவும் இவர்களை அழைப்பர். இவர்கள் தொழிலுக்கு இவர்களே புதுகணக்கு போட்டால் உயர்வான லாபம் ஏற்படும். மனைவி மக்கள் பேரில் இவர்கள் தொழில் செய்யும்போது மகத்தான பலன்களைக் காண்பார்கள்                                                             கணவன் மனைவி சமம்  குடும்பம் தொழில் அல்லது வேலை சமம் குழந்தைகள் பெற்றோர்கள் சமம்  நாடும் மக்களும் சமம்  எல்லோரும் எல்லாமும் சமம்
சிறிது விலகினாலும் விதி சதி செய்து விடும் இதை விவரிப்பதே காலபுருஷ ஏழாம் வீடு அதன் சின்னம் .இவர்கள் வீடு அருகில் சந்தைகள் கூடும் பொதுஜனங்கள் கூடும்  அரசு அலுவலகங்கள் பெட்ரோல்பங்க் எடைமேடை நீதத்துறையில் பணிபுரிபவர்கள் உண்டு இதைத்தாண்டியும் வீடு செல்லநேரும் (இன்று பார்த்த ஜாதகத்தில் இது இருந்தது) மனைவி அமையும் திசை
ஒரு ஜாதகத்தில், ராசி சக்கரத்திலுள்ள 7- ஆம் இடம் எந்த திசைக்குரியது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். பொதுவாக ஒரு ஜாதகருக்கு இந்த திசையில் தான் கணவன் அல்லது மனைவி அமையப்பெறும்.
அதாவது லக்னத்திற்கு 7- ஆம் இடம்
மேஷம், சிம்மம், தனுசு - கிழக்கு
ரிஷபம், கன்னி,மகரம் - தெற்கு
மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு
கடகம், விருச்சிகம், மீனம் - வடக்கு
என்ற திசைகள் கணவன், மனைவி அமையும் திசைகளாகும். இன்னுமொரு அமைப்பின் மூலம் களத்திரம் திசையை துல்லியமாக கணக்கிடலாம்.
7-ஆம் இடத்து அதிபதி எந்த திசைக்குரியவரோ அந்த திசையிலிருந்து தான் ஒரு ஜாதகருக்கு கணவன் அல்லது மனைவி அமையும். 7- ஆம் இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவர்களுக்கு உரிய திசை எதுவோ அத்திசையிலிருந்து தான் களத்திரம் அமையும்                                                                                    துலா லக்ன ஜாதகருக்கு தொழிலில் மனைவியால் மனைவியின் பேச்சால் நிச்சயம் பிரச்சினை வரும் ஏனென்றால் ரெண்டு ஏழு குண்டான செவ்வாய் பத்தில் நீச்சம் அடைவதால்
 கிரகங்களில் மந்தம், அடிமைத்தனம், வேலை, சுமை, தாமதம், என்ற சனிக்கிரகம் உட்சம் பெறுவது காற்று ராசியான துலாத்தில்
வியாபார சின்னமான தராசு இன்ப துன்பங்களின் அடையாளமாக விளங்குகிறது உலக வாழ்க்கையின் தத்துவங்களை பேசும் ஞானிகள் ஆகவும் இருக்கிறார்கள்,
செய்திகளை சேகரிப்பவர்கள், அதை உணர்வு பூர்வமாக பரப்புவர்களும் இவர்களே                                                                                                                                     துலாம்  இராசிக் காரர்கள் ஆண்/பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். ரசனையான ஆட்கள், புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள் இவர்கள்
துலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காரணம் சுக்கிரனின் அதிபதி காதலை உற்சாகப்படுத்துவார். இந்த ராசிக்காரர்கள் மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லதே நடக்கும். மனைவியின் ஆலோசனையை கேட்டல் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். இவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வாய்ப்பும், காதல் தோல்வி ஏற்படவும் வாய்ப்புள்ளது
துலாம் லக்னக்காரர்கள் லக்கினத்தில் சந்திரன் இருக்க அவர்கள் நூறு பேரிடம் யோசனை கேட்பார்கள் ஆனால் அதை எதையும் செயல்படுத்தாமல் அவர்கள் முடிவு செய்து வைத்திருப்பதை செயல்படுத்துவார்கள் மேலும் தராசைப் போல நேர்மையாக இருப்பார்கள் என்றாலும் ஒருபுறம் தராசுத் தட்டு போல அவர்கள் மனம் நிலையில்லாமல் மேலும் கீழும் அசைந்து கொண்டே இருக்கும் அதாவது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க மாட்டார்கள்
பெரும்பாலும் இவர்களுக்கு தொழிலில் போட்டி மற்றும் எதிரிகள் அதிகம் இருப்பார்கள்
துலாம் ராசி:  இவர்கள் அனைத்து விஷயங்களிலும் சமநிலை உடையவர்களாகத் திகழ்வர். தனது தரப்பில் தவறுகள் இருந்தாலும் ஒப்புக்கொள்வர். தவறு செய்தாலும் நடுநிலை தவற மாட்டார்கள்                      துலாம் ராசியினர் அடுத்தவரை எடை போடுவதில் வல்லவர்கள் சந்திரன் செவ்வாய் நட்சத்திரத்தில் இருந்தால் சிவப்பு  குடும்பப்பொறுப்பு  ராகு சாரம் எனில் சீறும் தன்மை கறுப்பு வைரம்  குருசாரம் எனில் சற்றுத்தடித்தஉடம்பு    துலாம் ரசிகர்கள் எந்த விஷயத்திலும் தொழிலிலும் நேர்மையாக இருப்பார்கள் இவர்கள் மனமானது தராசு முள்போல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு எதிரிகள் அனைவரும் இருந்தாலும் அந்த எதிரிகளை பேசி சமாளிக்கும் திறனும் இவர்களுக்கு உண்டு சனிபகவான் துலாம் ராசியில் உச்சமாக இருப்பதால் சிறந்த உழைப்பாளிகளாகவும் நல்ல நம்பிக்கை உள்ள தொழிலாளர்களை கொண்டவர்களாகவும் தொழிலாளர்கள் மத்தியில் இவர்களுக்கு பெருமதிப்பும் தொழிலாக தலைவராகும் வாய்ப்பு உண்டு
துலா ராசியின்  2ம் திரேகாணம் லக்னமாக அமைந்து அது பாவர் சேர்க்கை  பார்வை இருந்தால் அந்த ஜாதகருக்கு பறவைகளால் துன்பம் வரும்                                                                                                                                        துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். இந்த உலகில் இவர்களுக்கு வாய்க்கும் அனைத்தையும் அனுபவித்து, ரசித்து வாழ்வார்கள். உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ராசிக் காரர்கள்….இவர்கள் ஒரு பெரிய நிறுவனத்தையோ அல்லது தொழிற்சாலையோ நடத்தினால் இவர்கள் தானாக முடிவெடுக்காமல் ஒரு சிறந்த நிர்வாகியை வைத்து நிர்வகித்தால் நல்லது ஏனென்றால் துலா லக்னத்தில் சனி உச்சம் கவனமாக இல்லையென்றால் பெண்களாலும் சுகம் மற்றும் போகத்தாலும் சோம்பேறித்தனத்தால் பின்னடைவு ஏற்படும் லக்னாதிபதி பனிரெண்டில் நீசம் இவர்களுக்கு இவர்களே எதிரி சில சமயங்களில் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே
வாய் சாதுரியத்தால் காய் நகர்த்துவதில் வல்லவர்கள் செவ்வாய் இந்த ராசியில் இருந்தாலோ பார்த்தாலோ  காதல்வரவாய்ப்புண்டு காற்று ராசி, பிரபஞ்ச ராசி, ஜோதிடர்களுக்கு காற்று ராசியில் ஒரு கிரகமாவது இருக்கவேண்டும்
  மூன்று எழுத்து பெயர் அல்லது இரட்டை பெயர் அல்லது பெயர் மாற்றும் இருக்கும்,  கூட்டு சேரும் ராசி  மந்திரம் தந்திரம், கயிறு கட்டுவது, இவற்றில் ஈடுபாடு,  பெண் நண்பர்கள் அதிகம்,  10 சந்திரன் வீடு நீர் சூழ்ந்த இடம், வயல் சார்ந்த இடங்கள்,  அதிக கற்பனை, மலை பிரதேசங்கள் விருப்பம்,
துலாம், சர ராசி இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள். சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள், வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது  குளிரானாலும் இவர்களுக்குப் பேன் காற்று வேண்டும் கார மசால் உணவுவகைகள் பிரியம்
இவர்களுக்கு இவர்கள் வாழ்வில் முன்னேற இவரது தாய் மிகவும் உறுதுணையாக இருப்பார்
தந்தைசொத்தை விற்பர் தாய் சொத்தைத் தேடி கண்டுபிடிப்பர்
இவர்கள் பழைய வண்டி வாகனங்கள் வாங்குவது மிகவும் சிறப்பு
துலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம். கனவு அதிகம் வரும். ஒரு குழந்தை பெற வாய்ப்புள்ளது.
ஆனால் துணைவியின் ஆலோசனையை கேட்டல் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். இவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வாய்ப்பும், காதல் தோல்வி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
வீடு  இவர்கள் பழைய வீடாக வாங்கி ஆல்ட்டா் செய்ய நன்று
துலா ராசி துலா லக்கின ஜாதகருக்கு இரண்டு பெயர் இருக்கும் அல்லது வைத்த பெயர் 1 கூப்பிடும் பெயர் வேறொன்றாக இருக்கும் களத்திரம் என்றுமே சிங்க வாகினி  துலாம் ஏழாமிடமானால் மனைவியின் கையில் சாவிக் கொத்து கணவன்மார்க்கு அதனால் வரும் கெத்து                                                                                                                                           துலாம் லக்ன காரர்கள் மனைவியை நேசிப்பார்கள், ஆனால் சன்டை சச்சரவு எப்போதும் உண்டு  துலாம் சூரி- நிர்வாக குளறுபடி உண்டு
துலாம் செ- கோபகார வாழ்க்கை துணை
துலாம்- குரு ஜாதகர் கணக்கு பார்த்து செலவு செய்பவர்
துலாம் - சுக்- Attractive ஆன வாதுணை
துலாம் சனி- திராசு வைத்து தொழில்கள் Best
துலாத்தார் கையில் எப்பவும் காசு புரளும்
அடுத்தவராவது கொடுத்து எண்ணச் சொல்வர்
துலாம் ராகு- வா துணை ஆணவ குணம்                                                                                         .துலாம் கேது - வா.துணை ஆன்மீக ஈடுபாடு…..துலாம் லக்னம் அல்லது ராசி

துலாம் ராசி பலன்கள்

 ஆங்கிலத்தில் இந்த ராசியை லிப்ரா (LIBRA) என்று அழைப்பர். இது ஒரு சரராசியாகும். பஞ்சபூத தத்துவங்களில் இது இரண்டாவது காற்று ராசியாகும். அதனால் இது அசையும் சரராசி என்றும் அழைக்கப்படும். மேலும் இது ஆண் ராசி என்றும் அழைக்கப்படும். மேலும் இது நகரும் தன்மையுடைய ராசியாகும். மேலும் இது நீண்ட ராசி என்றும் உயிரற்றது என்றும் அழைக்கப்படும். இரவும் பகலும் சமமாக இருக்கும் ராசியாகும் இது அதிகாலைப் பொழுதைக் குறிக்கும் ராசியாகும். மேலும் நடந்து கொண்டிருக்கிற ஒரு செயலைக் குறிக்கும் ராசியாகும். இது இருகால் ராசி என்றும் அழைக்கப்படும்.

தராசை கையில் ஏந்திய வியாபாரியை இந்த ராசி உருவ அமைப்பாக கொண்டுள்ளது. அதனால் இதை வியாபார ராசி என்றும் குறிப்பர். சுக்ரன் ஆட்சி செய்யும் ராசியாகும். அதனால் இந்த ராசியின் அதிபதியாகச் சுக்ரன் குறிக்கப்படுகிறார். அதனால் தான் இந்த ராசி ஒரு சரிசமமாக்கும் ராசி என்று அழைக்கப்படுகிறது.

சித்திரை நட்சத்திரத்தின் 3,4 பாதங்களும் சுவாதி நட்சத்திரத்தின் 1,2,3,4, பாதங்களும் விசாக நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்களும் இந்த ராசியில் அடங்கியுள்ளன. ராசி மண்டலத்தில் 180 டிகிரி முதல் 210 டிகிரி வரை இந்த ராசி வியாபித்திருக்கிறது.

இந்த ராசியை சுக்ரன் ஆள்வதால் சுக்ரன் இந்த ராசியில் ஆட்சியாகவும் தொழில் மற்றும் ஆயுள்காரகனான சனிபகவான் இந்த ராசியில் உச்சமாகவும் சனியின் தந்தையான சூரிய பகவான் இந்த ராசியில் நீச்சமாகவும் தேவர்களுக்கெல்லாம் அதிபதியான அல்லது குருவான குருபகவான் இந்த ராசியில் பகை பெற்றும் மற்ற கிரகங்கள் சமமாகவும் நட்பாகவும் அமையப்பெற்றுள்ளன.

உடலமைப்பு 
இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல அழகான உருவமும் நல்ல அழகிய கண்களையும் உடையவர்கள். நீண்ட உயரமான உருவமும் உடையவர்கள். எப்பொழுதும் கண்கள் அலைபாய்ந்து கொண்டும் புன்னகை மாறாமல் சிரித்த முகத்துடன் விளங்குவர். நல்ல வசீகரமான புன்னகையும் ஒழுங்கான பல்வரிசையும் அகன்ற புஜங்களும் மிருதுவான கைகளையும் உடையவர்கள். கவர்ச்சியும் அழகும் உள்ள இவர்களின் இடை சிறுத்தும் மெலிந்தும் அழகாகவும் இருக்கும் உருவ அமைப்பு உடையவர்கள்.

குணநலன்கள் 
நீதி தேவதையின் கையில் உள்ள தராசை இந்த ராசி குறிப்பிடுவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நீதி, நேர்மையுடன் நடந்து கொள்வர். தர்மநியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள், மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் கட்டுபட்டவர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்த்து பகுத்தாய்ந்து நல்லது எது தீயது எது என ஆராய்ந்து முடிவு செய்வதில் வல்லவர்கள். ஒரு நல்ல தீர்ப்பு வழங்கும் நீதிமானாக இந்த ராசிக்காரர்கள் விளங்குவார்கள். எவ்வளவு விலை கொடுத்தாலும் விலை போகாது தர்மத்திற்கும் மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் பயந்து வாழ்வார்கள்.

எப்பொழுதும் அமைதியை விரும்புவர் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமலும் மற்றவர்களின் விஷயங்களில் அக்கறையில்லாமலும் இருப்பர். தனக்கு சரி எனப்பட்டதைச் சொல்வதிலும் பேசுவதிலும் எழுதுவதிலும் தனித்துவம் மிக்கவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்கமாட்டார்கள். மேலும் எப்பொழுதும் வாழ்க்கையில் நன்றி மறவாமலும் நல்ல ஒழுக்கத்துடனும் விளங்குவர். எப்பொழுதும் தவறான பழக்கத்திற்கு அடிமையாக இருக்கமாட்டார்கள்.

எப்பொழுதும் கலை, இசை, நடனம், நாட்டியம், நாடகம், சினிமா, இவற்றில் அதிக ஈடுபாடு மிக்கவர்கள். கலைத்துறையில் அதிக ஆர்வமும் பற்றும் மிக்கவர்கள். கதை, கவிதை எழுதுவதிலும் படம் வரைவதிலும் விருப்பம் உடையவர்கள். நல்ல ஆடை, ஆபரணங்களை அணிவதில் எப்பொழுதும் விருப்பமும் மகிழ்ச்சியும் உடையவர்கள். மற்றவர்கள் செய்த நன்மைகளை மறக்காமல் அவர்களுக்கு ஏதாவது ஒரு சமயத்தில் உதவி செய்வதில் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். எப்பொழுதும் இரக்க சிந்தனையும் தயாள குணமும் உடையவர்கள். தங்களுடைய சுகதுக்கங்களைக் கூட மறந்து மற்றவர்களுக்கு உதவிபுரிவதில் முன்னிலை வகிப்பார்கள். அதனால் மற்றவர்களால் எப்பொழுதும் விரும்பப்படுபவர்களாக விளங்குவார்கள். நல்ல கற்பனைத்திறன் உடையவர்கள். அதே சமயம் நல்ல குரல் வளம் உடையவர்கள்.

எப்பொழுதும் திட்டமிட்டு காரியம் ஆற்றும் இவர்கள் ஆன்மீக விஷ்யங்களில் எப்பொழுதும் நம்பிக்கையும் ஈடுபாடும் உடையவர்கள். அதனால் மற்றவர்கள் செய்யும் தவறுகளை உடனடியாக மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் தந்திரமாகக் கையாளும் திறன் உடையவர்கள். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்குமாறு செய்வார்கள். தங்களுடைய பொருள்களையே பெரிதாக விரும்பி போற்றுவார்கள். மேலும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் அதிக கவனம் செலுத்துவர். குறிப்பாக சமுதாயச் சிந்தனையில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

பொருளாதாரம் 
பொருளாதார நிலைமை எப்பொழுதும் நல்ல முறையில் இருக்கும், பணங்கள் வந்து போய்க் கொண்டேயிருக்கும், பண விஷயங்களில் இவர்கள் தாராளாமாகச் செலவு செய்வார்கள். செலவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத இவர்கள் பகட்டுக்காகவும் படோடோபத்துக்காகவும் பெரிய அளவில் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பணம் கடன் கேட்டால் உடனே கொடுக்கும் எண்ணம் உடைய இவர்கள் கொடுத்தப் பணத்தைப் திரும்ப கேட்பதில் தயக்கம் உள்ளவர்கள். சொந்த வீடு வண்டி வாகனங்கள் அமையும், எப்பொழுதும் வசதியான வீட்டில் வாழ வாய்ப்புகள் ஏற்படும் கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டேயிருக்கும்.

திருமணம் 
இந்த ராசிக்காரர்கள் உண்மையான அன்புள்ளவர்களாதலால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரித்துக் காணப்படும். மேலும் அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடியவரதலால் எதிர்பாலரை ஈர்ப்பதில் ஆர்வம் உடையவர்கள். மேலும் காதல் விஷயங்களில் ஆண், பெண், இருபாலரும் ஈடுபட்டு எல்லை மீறுவார்கள். இவர்களது மணவாழ்வு மகிச்ச்சிகரமாகவும் இன்பகரமாகவும் விளங்கும். இவர்கள் மற்றவர்களுடன் ஒத்துப் போவதால் மணவாழ்வில் பெரிய அளவில் பிரிவு பிரச்சினைகள் வர வாய்ப்பு குறைவு. இந்த ராசிக்காரர்கள் சுகமாக வாழ்க்கையை விரும்புவார்கள். ஒத்த குணமுடைய கணவன் மனைவி அமைய வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இவர்களுக்குள் பெரிய அளவில் பிரிவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனெனில் இந்த ராசிக்கு 2வது ராசியாக செவ்வாய் ஆகவும் 7 வது ராசியும் செவ்வாய் ஆகவும் வருவதால் கவனமுடன் மனைவி பேசிப் பழகுதல் வேண்டும். 7 ம் இடம் என்பது கணவன் அல்லது மனைவி ஆகும். 2 ம் இடம் என்பது பேச்சு ஆகும். செவ்வாய் என்பது கடுமையான கடுஞ்செற்களை வெளிப்படுத்துவதைக் குறிப்பதால் தம்பதியர்கள் வார்த்தையை அளந்து பேசிப்பழகினால் மணவாழ்க்கையில் பிரச்சினைகளும் மனவருத்தங்களும் குறையும். வன் சொற்கைளைப் பயன்படுத்தாமல் இனிய பேச்சுகளைப் பேசி குடும்ப ஒற்றுமையை இருவரும் காத்தல் வேண்டும். இல்லையெல் மணவாழ்வு திருப்தியற்றதாகவே இருக்கும்.

நோய்      கடன் 
இந்த ராசிக்கு 6வது வீடாக குருபகவான் வீடு மீன ராசியாக வருவதால் உடலில் வயிறு, குடல், இரப்பை, கல்லீரல் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் உடல்பருமன், உடலில் கட்டி, தேம்பல், அடிவயிற்றில் வலி இவைகள் ஏற்படும். மேலும் பித்தப்பை, நீர் சுரப்பிகள், கனையம் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குறிப்பாக வயிறு, கண், இவற்றில் பிரச்சினைகளும் மூலம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளும் கால், கால் பாதங்களில் பிரச்சினைகள். எற்பட்டு விலகும்.

இந்த ராசிக்காரர்களுக்கு குருபகவான் 6ம் வீடமாக வருவதால் பெரிய அளவில் கடன்களும் இருந்து கொண்டேயிருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும். பண விஷயங்களில் ஜாமின் கையெழுத்திப் போடுவது. இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த துன்பத்தையும் வருத்தத்தையும் அதிகரிக்கும். எனவேகொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.

வேலைஅல்லது தொழில் 
இந்த ராசிக்கு 10வது ராசியாக கடக ராசியாக வருவதால் கடல், உப்பு, நீர், திரவ சம்பந்தமாக துறைகளில் வேலை மற்றும் தொழில்கள் அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் 6ம் வீடாக குரு பகவான் வருவதால் குரு சார்ந்த வேலை அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆசிரியர் வேலை, பள்ளி கல்லூரி, பலகலைக்கழகங்களில் வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. நீதி, நீத்துறை, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படும். 7வது ராசியாக செவ்வாய் வீடு வருவதால் செவ்வாய் சம்பந்தமான தொழில்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள் மெக்கானிக் சம்பந்தமான சுயதொழில்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இங்கு வேலை அல்லது தொழில் என்று பொதுப்படையாக மட்டுமே குறிப்பிட முடியுமேயொழிய இப்படித்தான் வேலை அல்லது தொழில் என்று குறிப்பிடமுடியாது. காரணம் ஒவ்வொரு ஜாதகமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது ஆகும். இது அவரவர்களுடைய சொந்த ஜாதகத்தைக் வைத்தும் நடப்பு தசாபுத்திகளை வைத்தும் கணக்கிட்டு வேலை அல்லது தொழிலைக் குறிப்பிட முடியும். மேலும் வேலை, தொழில் என்பது இன்று பல கிளைகளாகப் பல்கிப் பெருகியுள்ளதால் ஒருவரது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்துத்தான் பலன் அறிய முடியும்.
துலாம் என்பது தராசு எல்லோரையும் சமமாக பாவிக்க கூடியவர்கள் அயராது உழைப்பவர்கள் ஆண் பெண் என்றெல்லாம் பார்க்காமல் அனைவரையும் எந்தவித பாகுபாடுமின்றி நேசிப்பார்கள் பிரச்சினைகள் ஏதேனும் வந்தால் முடிந்த அளவு சமாளிக்க பார்ப்பார்கள் சமாளிக்க முடியவில்லை என்றால் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து பின்வாங்கி அதிலும் கெட்டிக்காரத்தனமாக பின்வாங்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் கெட்டிக்காரர்கள் என்னதான் கவலைகள் வந்தாலும் நிதானம் தவறாமல் செயல்படுவார்கள் நீதிக்கு கட்டுப்படுவார்கள் கோபம் கட்டுக்கடங்காமல் வரும் ஆனாலும் நிதானம் தவறாமல் சமாளித்து விடுவார்கள் சுக்கிரன் ஆதிபத்தியம் ஆகவே கலைகளில் பேரோடும் புகழோடும் திகழ்வார்கள் இயற்கையிலேயே துலாம்ராசிக்காரர்களுக்கு கலை ஆர்வம் மிகுதியாக இருக்கும் துலாம்ராசிக்காரர்களுக்கு திருமணத்திற்கு பிறகு வண்டி வாகனங்கள் சொத்துக்கள் வந்து சேரும் .அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள்.

thulam
நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான்.

உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச் சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள்.

பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் நீங்கள் சமர்த்தர்.

6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும்.

astrology

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள்.

சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள். ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி…..துலா ராசிக்காரர்
வீட்டின் மேலே நின்று
திட்டம் போடுவது
யோசனை செய்வது
கூடாது.ஏன்  சுக்கிரன் காலப்புருசனுக்கு 12ல் உச்சம்
12ம் இடம் அயன சயனஸ்தானம் அதுதான் இந்த இரவில்கூட அவர் உச்சத்தை பார்க்க முடிகிறது                                                                                                                    துலாம் மா- வா துனை க்கு மந்த புத்தி , செயல் திறன் இன்மை உண்டுசித்திரை 3ஆம் பாதம் சுவாதி நான்கு பாதங்களும் விசாகம் 3ஆம் பாதம் வரை உள்ளவர்கள் துலாம் ராசியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்கள் ரிஷப ராசி சுக்கிரனின் ஆதி பத்தியத்தில் வரக்கூடிய ராசி அந்த ரிஷப ராசிக்கு 6-ஆம் இடம் துலாம் ராசி நாம் ஆறாம் பாவத்தை செய்து நோய் எதிரிகள் கடன் மற்றும் பேய் பிசாசு போன்றவற்றை தெரிந்து கொள்ளுவோம்
துலாத்திற்கு எட்டாம் இடம் ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு ஆகவே நன்மை என்று சொல்வதற்கு இல்லை ரிஷபம் சிம்மம் விருச்சிகம்
போன்ற ராசிகளில் சுக்கிரன் சூரியன் அல்லது குருவுடன் நினைவுடன் இருந்தால் எதிரிகளால் கஷ்டம் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் ஏவல் பில்லி சூனிய தொல்லைகள் போன்றவைகள் ஏற்படக்கூடும் துலாம் ராசியில் சூரியன் சந்திரன் ஆகிய இருவரும் கூடி இருந்தால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வாத நோய்கள் இரத்த சம்பந்தமான தொந்தரவுகள் ஆகியவை  இந்த துலாம் ராசியினரை தாக்கும்.
குரு ராகு இருவரும் பலம் இழந்து துலாம் ராசியில் இருந்தால் வயிற்றில் நோய்கள் பிரச்சினையைக் கொடுக்கும்
செவ்வாயும் கேதுவும் சுக்கிரன் பலமிழந்து துலாமில் இருந்தால் ரத்த சம்பந்தமாகவும் வாத சம்பந்தமான நோய்கள் பாதிக்கும்
சுக்கிரன் சனி ராகு போன்றவர்களுடன் நீசமாகவோ பகை வீடுகளில் இருந்தால் அத ஜாதகருக்கு அரசு தண்டனைகள் கிடைக்கும்                                          துலாம் சனி - பொது ஜன தொடர்பு உள்ளவர்
துலாம் ராசியில் ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் நின்று சுக்கிரன் பலமாக இருந்தால் எதிரிகளால் தொல்லையும் நோய் தொல்லைகளும் தீராது,,,,,,,, துலாமில் இயற்கை பாபிகள் - பணம் Savings பன்ன முடியாது,,,,,, துலா ராசிக்காரர்கள் பொதுவாக வயிற்று உபாதைகள் இரணியா போட்டோ காய்கள் பாதிக்கக்கூடியவராகள்                                                                                                                               துலாம் ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சந்தோஷம் நிறைந்தது என்று கூற முடியாது மன சஞ்சலங்கள் சந்தேகங்கள் போன்றவைகளால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும்
துலாம் சூரியனுக்கு நீச்ச வீடு குருவுக்கு பகை வீடு சனிக்கு உச்சவீடு சுக்கிரனுக்கு ஆட்சி வீடு ராகு கேது புதன் ஆகியோருக்கு நட்பு வீடு சந்திரன் செவ்வாய் இருவருக்கும் சமம் மிகுந்தது நிறம் வெண்மை உதயம் உதயம் கடந்த காலத்தில் குறிக்கக்கூடியது சுக்கிரன் .
சுக்கிரன் புளிப்பு மற்றும் செயற்கை இனிப்பு குறைக்கக்கூடியது
துலாம் சர ராசி வன்முறை இதன் குணம்
துலாம் லக்னக்காரர்கள் அறிவு வல்லமை புத்திக்கூர்மை புகழ் தன விருத்தி சுகவாசி சுகங்களை நாடிச் சென்று அனுபவிக்கக்கூடியவர்கள்
துலாம் ராசி காரர்கள் எளிதில் பயப்பட கூடியவர்கள்பீதி அடையக் கூடியவர்கள்.
துலாம் லக்னக்காரர்களுக்கு சந்திரனும் புதனும் யோகக்காரர்கள் சந்திரனும் புதனும் இணைந்து வளம் மிகுந்து இருந்தால் இவர்களுக்கு செல்வாக்கு புகழ் தேடிவரும்
துலாம் லக்னகாரர்களுக்கு புதன் சுக்கிரன் சனி சுபர்கள்
சூரியனும் குருவும் மாரகாதிபதிகள்
சூரியன் பாதகாதிபதியாகவும் இருப்பார்
துலாம் ராசியினருக்கு மேஷ ராசியினர் கும்ப ராசியின் உதவிகள் செய்வார்கள் மகர ராசியினர் ஏமாற்றுவார்கள் கடக ராசியினர் வேலைகளில் உதவி செய்வார்கள்.
மேஷ ராசியினருக்கு ஏழாம் இடமான துலாம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ஏழாமிடமான மேஷ ராசியினர் வருவதால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்புடன் இருப்பார்கள் மேஷ ராசியினர் கேட்பதை துலாம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு கேட்பதை மேஷ ராசிக்கு வரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்வார்கள் நட்புடன் இருப்பார்கள்
மேஷ ராசியினருக்கு மிதுன ராசிக்காரர்கள் சிறந்த செகரட்டரியாக இருப்பார்கள்
துலாம் ராசியினரின் வீட்டுக்கு மேற்கில் நீர்நிலைகள் கிணறு அல்லது குளம் அல்லது ஆறு போன்றவை இருக்கும்
துலாம் ராசி நேயர்களின் வாழ்க்கை துணைவர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாக இருக்கக்கூடியவர்கள் செவ்வாய் இருந்தால் வாழ்க்கைத் துணைவர்கள் அன்பு பாசம் நிரம்பியவர்களாக இருப்பார்கள் செவ்வாயும் குருவும் சேர்ந்து இருந்து துலா ராசியில் சுக்கிரன் அசுபர்களுடன் இருந்தால் அவர்கள் அந்நியர் மனைவியுடன் கூடா நட்பு கொள்வார்
துலாம் ராசியினருக்கு சுக்கிரன் பலமாக இருந்தால் ஆடை ஆபரணங்கள் அலங்காரங்கள் ஆகியவற்றின் மீது நாட்டம் அதிகமாக இருக்கும்
கலைத்துறை சினிமாத்துறை அரசியல் நகைக்கடை ஏ கமிஷன் ஏஜெண்டுகள் ஆடம்பர பொருள் வியாபாரங்கள் போன்றவற்றில் வருமானம் இவருக்கு கிடைக்கும்                                                                                                                                                             துலா ராசியினர் உறுதியான கோட்பாடு உடையவர்கள். யாருக்காகவும் எதற்காகவும் தன் கோட்பாட்டை மாற்றாதவர்.  எதையும் நன்கு சிந்தித்து  ஒரு முடிவுக்கு வரக் கூடியவர். தான் பிறந்த குலத்தின் மேல்  அபிமானம் உடையவர் . அதிக நேரம் கற்பனையில் முழ்குபவர். மலர்கள், வாசனைப் பொருட்கள் மேல் அதிக விருப்பம் உடையவர். பிறரை கவரக்கூடிய தோற்றம் உடையவர். வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு பொருட்கள் மீது ஆர்வம் உடையவர்                                                                                                                                            துலா ராசிக் காரா்களுக்கு வாசனைத்திரவியங்கள்
மேல் தீராத ஆசைகள் உண்டு துலாராசியினர் சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள விரும்புவர் பத்தாமிடம் ஏழுக்கு நான்கு ஆவதால் கணவர் வீடு அருகில் நீர் நிலைகள் உண்டு எடுப்பானதோற்றம் மிடுக்கானநடை அனைவரையும் கவருந்தன்மை உண்டு
நகைகள் மேல்  ஆடம்பரப் பொருட்கள் மேல் அலாதி விருப்பம்
காலபுருஷனுக்கு 7 வது வீடு துலாம் ராசி குடும்பத்தொடு அடிக்கடி பயனங்கள் இருந்துகொண்டெ இருக்கும்.
கலைநயமிக்க பொருட்கள் உண்டு என்றால் அது துலாத்தார் வீடு துலாத்தார்க்குப் பத்தாமிடம் சரராசி  ஆவதால் பயணம் செய்து செய்கின்ற வேலை நன்று ராசிகளிலே காஸ்ட்லியானராசி பலன் கொடுக்கும் வருடமும் அதிகம் அந்தராசியை பயன்படவைக்கும் வைரத்தின் விலையும் அதிகம்.
துலாம் ராசியின் தன்மைகள் :
சர ராசி
ராசியின் அதிபதி : சுக்கிரன்
ராசியின் சின்னம் : தாரசு
காற்று ராசி
ஆண் ராசி
மேற்கு ராசி
காமம் ராசி
ராசியின் இடம் : நகரம்
ராசியின் காலம் : காலை
ராசியின் குணம் : ஆணவம்
ராசியின் செயல் : ஆரம்பம்
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் : சித்திரை 3,4 சுவாதி 1,2,3,4 விசாகம் 1,2,3
ராசி குறிப்பிடும் உடல் உறுப்புகள் : கருப்பை, சிறுநீரகம், ஜீரண உறுப்புகள்
இந்த ராசியில் சூரியன் நீசமும் சனி பகவான் உச்சமும் அடைகிறார்.
: துலாம் ராசியின் காரத்துவங்கள் :

வியாபார வீதி, பணம் வைக்கும் இடம், பெண்கள் குழுமியுள்ள இடம், மனிதன் துலாக்கோலைப் பிடித்து இழுக்கும் தோற்றம், பலதரப்பட்ட நிறம், அடி வயிற்றுக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதி.
துலா லக்கின சுபர் அசுபர் :

யோககாரகர்கள்: சனி, புதன்

யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு

நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி : செவ்வாய்
துலாம்  : லக்னக்காரர்களுக்குப் புதன் 9-12-ஆம் அதிபதி, சூரியன் 11 ஆம் அதிபதியாகவும், அதேநேரத்தில் பாதகாதியாகவும் ஆகிறார். பாதகாதிபதியுன் கூடியிக்கும் புதன் எவ்வித நன்மையை ஜாதகருக்கு  உண்டு பண்ண முடியும்? என்றாலும் 9-11-ஆம் வீட்டுக்குடையவர்கள் ஒன்று கூடி இருந்தால் இந்த நிலையைக் கவனிக்கும்போது இச்சேர்க்கையால் ஒரளவு நற்பலன்கள் கிட்டும் வாய்ப்புள்ளது. இச்சேர்க்கை 7-9-11-ஆம் இடங்களில் அமையப்பெறுவது நல்லது 4-ல் சூரியன் இருந்தால் பலம் குறையும் நற்பலன் கிட்டாது. 8-ல் புதன் சூரியன் இணைந்து இருந்தால்  நற்பலன்கள் ஏற்படாது.
    3-6-10-ல் அமைந்தால் ஆதித்ய யோகம் அமைந்தால் நன்மைகள் அதிகம் ஏற்ப்படும். வெற்றியும், சிறந்த அந்தஸ்தும்  கிட்டும்                                                      துலாம் ராசியின் தன்மைகள்
1. காற்றுராசி
2. சரத் தன்மை
3. கிட்னி
4. கர்ப்பபை
5. குரலோசை மிக்கது
6 .அறிவுடையது
7. எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது
8. காற்றேட்டமான இடங்கள்
9. உயர்வானது
10. நகரும் தன்மை
11. உயிரற்ற து
1 2 .நீண்டது
13. ஆண் ராசி
14. பாதி பலன் தரும் ராசி
15. மெயின் விதி
16 .அதிகாலை பொழது
17. பெரிய மனிதர்கள்
18. இயல், இசை, நாடகம், கலைத்துறைகள்
19. ஆராய்ச்சி
20. ஐப்பசி
21. பொன்னிறம்
22. மேற்கு
23. கடை விதி சுபர் சனி புதன் பாவி செவ்வாய், சூரியன் குரு பாதகா திபதி சூரியன் தோற்றங்கள்
1. உயரம்
2 நல்ல பிரமானமுள்ள தேகம்
3 பலமற்ற தேகம்
4. உறுதியான
5 இனிய புன்சிரிப்பு
6 அருள் நிறைந்த தோற்றம்
7. வசீகரமான முகம்.
8. அழகிய கண்புருவங்கள்
9 கிளி முக்கு
குணாதிசயங்கள்
1 சமதலைமை
2. கலங்கா நிலை
3.குரோத மின்மை
4. ஓப்பு நோக்குதலும்
5 உடன்பாடுதல்
6. மிக முயற்சியுடைமை
7 பிறருக்கு உதவுதல்
8 பிரபலம்
9. ராஜதந்திரம்
10. செழிப்பான கற்பனை
11.ஆச்சிரியப்படும் அழகு
12. மகிழ்ச்சியான இயல்பு
13. வசிரிக்கும் தன்மை
14. எதிர்பாலரின் மேல் விருப்பம்
15.வாயாடித்தனம் துலாம் ராசியின் நிலப்பகுதி
1.மலையுச்சி
2. குன்றின் சரிவு
3. நல்ல காற்றேட்டமான இடம்
4. குளிர்பிரதேசம்
5 உயர்ந்த மரங்கள்
6 வளர்ந்த பகுதி
7. வனம்
8 பெருங்காடு
9. பெண்கள் கூடும் இடம்
10. தங்கும் விடுதிகள் நிறைந்த இடம் துலாம் ராசி நில பகுதியில் விளையும் பொருட்கள்
1 கடுகு
2. மாமரம்
3 புளியமரம்
4. திராட்சை பழம்
5 அன்னாசி பழம்
6. உளுந்து
7 தக்காளி பழம்
8 கடுக்காய்
9. மொச்சை
10. நெல்லிக்காய்
11. ரப்பர் மரம்
12 .பலாமரம்
13. தேக்கு மரம்
14. உயர்ந்த மரங்கள் வளரும் பகுதி
துலாம் ராசி தொழில்கள்
1. பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபரம்
2 அழகு பொருட்கள், கலை பொருட்கள், சொகுசு ப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்தல்
3. வட்டித் தொழில்
4. வங்கியில் பணி செய்தல்
5 நிதி நிறுவனங்களில் பணி செய்தல்
6. நீதித்துறை
7. தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி
8 அழகு நிலையங்கள் நடத்துதல்
9. இயல்.இசை. நாடகம், நடிப்பு மற்றும் பாட்டு தொழில்கள்
10. தரகு தொழில்
1 துலாம் ராசி சேர்ந்தவர்கள் 2 பெயர் உடையவர்கள்
2 பெயரை மாற்றுபவர்கள் துலாம் ராசியை சேர்ந்தவர்கள்
3 பெயர் மாற்றுவதை பற்றி கேள்வி
4. பூர்விகத்தில் வாழ ஆசை
5. நிர்வாகத்தை பார்க்க கூடாது
6. பாதி பலன் தரக்கூடிய ராசி
7. சுவாதி தன்னுடைய காரியத்திற்கா எதையும் இழக்க தயாரக இருக்கும்
8 காரியம் முடிந்தவுடன் நழுவி விடும்
9 தொடை ராசி (கால் மேல் கால் போட்டு அமர்வார்கள் )
துலாம் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை முழுமையாக மாறும்  உலகத்தை புரிந்து, தெளிந்து வாழ தொடங்குவார்கள்  அதனால் வாழ்க்கையில் மாற்றம் உறவுகளில் மாற்றம்  தொழிலில் மாற்றம் என முழுமையாக மாறிவிடுவார்கள்,  கட்டுப்பாடுகளுக்கு இணங்கா தன்மை,  பேசியே மயக்குவது,  எதிரிகளையும், எதிர்க்கும் உறவுகளையும் நேசிக்கும் தன்மை,  கொண்ட கொள்கையில் தீவிரம்,  மற்றவர்களுக்கு உதவுதல், உதவி கெட்ட பெயர் வாங்குவதும்,  இருந்தாலும் ஊர்க்கு உதவும் இயல்பு கொண்டவர்கள்                       துலாம் லக்னத்தில் பாவி இருக்க சூரியன் பார்த்தால் பிறந்த சில நாட்களில் உயிர் கண்டம்
துலாம் :
சர ராசி
காற்று ராசி
துலாம் ராசி துலாம் லக்னம் 10அதிபதி சந் லக்னதில் தனவிருத்தி பிடிவாதம் தாய் மீதுபாசம் பெண் மோகத்தில் அதிக பணம் செலவு அதிகம் வசதி வாய்ப்புகள் உண்டு இல்வாழ்க்கை நன்றாக இருக்கும்
துலாம் ராசிகாரர்கள் நியாயம் நீதி வழி நடப்பர். சட்டதிட்டங்களை மீற மாட்டார்கள். எல்லா விஷயங்களிலும் கணக்கு பார்ப்பார்கள
துலாம் ராசி விருச்சிக லக்னம் 12ல்சநதிரன்இவர்களுக்குஏரளாமானபணம் விரயம் தாய் தந்தை விரோதம் தொல்லை அதிகம்
துலாம் ராசி தனுசு லக்னம்    11 ல்சந்திரன் நல்ல யோக பலன் உண்டு தொழில் மேனமை தனவிருத்தி மாதுர்  செளக்யம
துலாம் ராசி மகரம் லக்னம் லகனதுக்கு 10 சந் களத்திர செளக்யம தொழில் மேன்மை வியாபாரம் விருத்தி வாகன வசதி  துலாம் சந் ராகு கேது தொழில் முடக்கம் பணவிரயம் நோய் தீய பலன் உண்டு
துலாம் லக்னத்தில் சனி இருக்க பிள்ளைகளுக்கு அழிவு ஏனெனில் ஒரு கிரகம் நிற்கும் வீட்டிற்கு 7ல் திக் பலம் பெறும்  அதற்கு 7ல் நிஷ்பலமாகும்
துலாம் - தராசு
மற்றவர்களை சரியாக  எடை போடுவதில் கெட்டிக்காரர்கள்.
தராசு ஒரு பக்கத்தின்று மறு பக்கம்  எந்த நேரத்திலும்  ஏற்றத் தாழ்வுகள் பெறக்கூடியது. எனவே இவர்கள் சொந்த விஷயத்தில்  ஒரு முடிவு  எடுப்பதில் உறுதியாக  இருக்க மாட்டார்கள்.  இவர்கள் முடிவு  எந்த நேரத்திலும் மாற்றம் பெறக்கூடியது.
இவர்கள்  அழகான  அமைதியான முகத்தோற்றத்தை பெற்றவர்கள்.
சிரித்து பேசும் தன்மை உடையவர்கள்.  அன்பு பாசம் அறிவு பரிவு  அத்தனையும் உடையவர்கள்.
அவசர புத்திரக்காரகள்.இவர்கள் மனைவியை தேர்ந்தெடுப்பதில் அவசரப்படக் கூடாது.  அவரசரப்பட்டால் நல்ல மனைவி  அமையாமல் போகலாம்.
துலாம் :
இவர்களுக்கு அடிமை தொழிலை விட  சுய தொழில் சிறப்பு.
துலாம் மேற்கு ராசி என்பதால்  இவர்கள் மேற்கு பகுதி/ மேற்கு பார்த்த வீட்டில் வசிப்பது சிறப்பு.
வியாபார சின்னமான தராசை குறிப்பதால் பெரும்பாலும் கடைத்தெருவில்  அல்லது  ஊரின் முக்கிய வீதிகளில் வசிக்க நேரிடும்.
இந்த ராசிகளில் பாவக்கிரக சேர்க்கை  அதிகம்  இருந்தால் சிறுநீரக கோளாறு எளிதில்  ஏற்படும்.
சுபக்கிரக சேர்க்கை  இருந்தால் நல்ல பெண் சுகத்தை  அனுபவிப்பார்கள்.
துலாம் ராசி கும்பம் லக்னம் 9 லசந் சத்ரு ஜெயம் கடன் நிவாரணம் பூர்வீக  சொத்து சனி சுக்கிரன் சேர்ககை யோகம் ராகு கேது சூரியன் சேர்க்கைகாரியதடை நோய் கடன் தீய பலன்
துலாம் ராசி மீனம் லக்னம் 8 ல்சந்திரன் கர்ப்பம் சிதைவு  புத்தி மந்தம் மதூர்விரோதம் துலாம் எடை போட்டு பழகுவர் துலாம் கடின உழைப்பாளி துலாம் பொம்மை வீடு  டாலிவீடு துலாம் பெயர்  ஸ் / ஷ் என்று துவங்கும் அல்லது முடியும்
துலாம் ராசி மேசம் லக்னம் 7 ல்சந்திரன்
வாகன விருத்தி மனைவிக்கு யோகம்
தாய் வழி உறவினர்கள் நன்மைகள்  சுபர் சேர்கைநல்ல பலன்
சித்திரை நக்ஷத்திரம் 3,4, பாதங்கள், சுவாதி,விசாகம், 1,2,3,பாதங்களில் பிறந்த துலாராசிக்காரர்கள் செல்வம் மிகுந்தகுடும்பத்தில் செல்வாக்குடன் இருப்பார்கள்.நல்ல ஜசுவரியமும்,தனதான்யங்களும்,பூமி காணி வீடு போன்ற சொத்துக்களையும் வண்டி வாகனங்களையும்,மாடு கன்றுகளுடன் பால் பாக்யத்தையும் பெற்று இருப்பார்கள்.

குடும்பத்தில் அதிகமான நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு அதிகாரம் உயர்பதவி கொண்டவர்களாகளின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.தார்மீக குணங்களும், தெய்வ வழிபாடுகளும் நிறைந்து விளங்கும்.ஆசார அனுஷ்டானங்களைச செய்து வருவார்கள்.

துலா ராசியில் பிறந்தவர்கள் பேச்சில் ஆணித்தரமாகவும், வியாபார நோக்ங்கள் கொண்ட பேச்சாகவும் பேசுவார்கள்.அதிகமாக மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். தங்கள் குடும்பத்தைவிட்டு மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள். துலா ராசியில் பிறந்த ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம்.

சுபகிரஹங்கள் பார்வையுடனும்,பலங்களுடனும், பிறந்த துலாராசிக்காரர்கள் ஆயுள் பாவம் 85 ஆண்டுகளுடன் சுக செளகர்யங்கள் நிரம்பப் பெற்று விளங்குவார்கள்.
துலாம் ராசி ரிஷபம் லக்னம்6ல சந்திரன்
சத்ரு தொல்லை கடன் நோய் சகோதரர் விரோதம்
துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய உத்திரட்டாதி, ரேவதி, மகம், பூரம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
2. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள இரத்தினக் கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும் பத்திரங்கள் வாங்கவும் அவற்றை தமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், அனுசம், கேட்டை, பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
3. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி, செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய, ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
4. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, திருவோணம், ரோகிணி, அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
5. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள், மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க, நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை; செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, சுவாதி, சதயம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள் உண்டாகும்.
6. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன்; வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல் எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
7. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க, திருமணத்திற்க்குவரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த சதயம், பூரட்டாதி, மகம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
8. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் ரோகிணி, மிருகசீரிஷம்
9. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும் உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் செய்ய தொடங்கவும், தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
10. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும், தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவியிலிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும் தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். உத்திரட்டாதி, பூசம், ரேவதி, கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
11. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை நியமித்து கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று சந்தித்து தனக்கு அதரவு பெறவும்,தான் எடுத்த காரியங்களில் குறைந்த முயற்சியில் வெற்றிபெறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும், தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன் சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள், சபைகள் சங்கங்கள் ஆரம்பிக்க, முன் காரியங்கள் செய்ய தொடங்க மிகவும் உகந்த நட்சத்திரங்கள் - மூலம், மகம், பூரம், பூராடம் ஆகியவை. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில், மேல் கூறிய காரியங்கள் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
12. துலாம் லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டிய நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிஷம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
துலாம் ராசி மிதுனம் லக்னம் 5 லசந்திரன் தனாதிபதி 5ல்புத்திர  விருத்தி தனவிருத்தி வாகன விருத்தி  பல வித்தைகள் கலை இலக்கிய தேர்ச்சி பெரிய மனிதர்கள் நேசம் நல்ல தெய்வ  பக்தி
துலாம் ராசி கடகம் லக்னம்4ல சந்திரன் கல்வி மேன்மை வாகன சேர்க்கை தாய் வழி நன்மை பயக்கும் வீடு நிலம் வாஙகுவார்
துலாம் ராசி  அதிகமாக முருகனை வழிபட்டால் வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலைக்கு வருவார்கள்
துலாம் ராசி சிம்ம லக்னம் 3 ல் சந்திரன் மத்திம பலன் 
துலாம் சந்திரன் சுக்கிரன் சனி குரு கூடினால் நல்ல பலனை அடைய முடியும்
துலாம் ராசி கன்னி லக்னம் ல2 ல்சநதிரன்
சுபபலன் நடக்கும்
சநதிரன் குரு சனி சுக்கிரன் சேர்கை பணம் வரும் வாகன வசதி
தொழில் மேன்மை
எடுத்த காரியம் நிறைவேறும் புகழ் கெளரவம் அந்தஸ்து உயரும்
துலாம் ராசியில் கால தேவனின் ஒரு சூக்ஷமம் உண்டு. 
கால புருஷனின் ஏழாம் வீடு. சூரிய பகவானின் அவரோகண பாதையின் முடிவு.  ஜாதக கர்மாவை தீர்மானிக்கும் சனி பகவான் உச்சம்.  சுகத்தையும் சந்தோஷத்தையும் தரும் சுக்ரன் ஆட்சி.
செவ்வாயின் முயற்ச்சியில் உழைப்பின்
சனியின் பலத்தை சர்ப்பமான ஸ்வாதியில் பெருக்கி
ஆணவம் எனும் சூரியன் குணத்தை தாழ்த்தி உயர்ந்தால்
ஏழு எனும் சமுதாயத்தில் உயர்ந்து தர்ம சிந்தனையில் விசாகத்தின் குருவாகி நிற்பான்.
ராசி சசக்கரத்தின் கூட்டு நக்ஷத்திர வடிவம் தராசு.
எந்த பக்கம் அதிக எடையால் சாய்கிறதோ சுக்ரன் தரும் சந்தோஷம் போய்விடும்.
நமக்கு இடப்பக்கம் கோபத்தின் எடை அதிகமாகி சாய்ந்தால் களத்திரம் மறையும். நம் கிரஹ சந்தோஷம் போய்விடும்
நமக்கு வலப்பக்கம் கர்வத்தால் எடை அதிகமாகி சாய்ந்தால் களத்திரம் நோய்வாய்பட்டு நீச்சமாகும். சுகமில்லை.
சமமாக நின்றால் சந்தோஷமே என கர்மகாரகன் உச்சமாகி நீதி தேவனாய் நின்று உணர்த்தும் ததத்துவம்.
வலப்பக்கம் தன்னையே நீச்சமாக்கி
இடப்பக்கம் குடும்ப பாசத்தை நீச்சமாக்கி
தன்னில் ஆத்மாவையே நீச்சமாக்கி
உச்சமான கர்மாவை தவிர உலகில் நிரந்தரமானது எதுவுமில்லை
என நீதி தேவன் உணர்த்தும் இடம் துலாம்                                                                             
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
அது நீதிதேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும்அவன் சாட்சி
இதுதான் துலதராசியின் குறீயீட்டுக் காட்சி
துலாராசியின்
எப்போதும் தனது முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பவர்.
சதைப்பற்றுள்ள தேகம்
நல்லபுத்தி,குணம்,அறிவு , பொறுமை உடைநவர்.
தராசு லக்னத்தில் பிறந்துள்ள இவர் யாரிடமும் எடைப்போட்டு பழக்க்கடியவர்                                    .                                                                                                                                                                                        துலாம் ராசி: உருவம் சமநிலையில் உள்ள தராசு. சர ராசி.நடு நிலையிடைய தன்மை. பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல ஆடைஉடுத்துவார்கள்.மற்றவர்கள் எப்படி பட்டவர்கள் என்று கணிக்கும்தன்மை இருக்கும்.கூர்ந்து நோக்கும்பார்வை உடையவர்கள். தலைமைபொறுப்பு. தீர்க்கமானபேச்சு  உண்மை நிலையை கண்டறியும் தன்மை இருக்கும்.மற்றவர்களோடு சேர்ந்து செயல்படும் தன்மை உடைய வர்கள்.கருத்து வேறு பாடு இன்றி மற்றவர்களை மதிப்பதும் அளவாக பழகுவதும்.பேசுவதும்  என்ற தன்மைஉள்ளவர்கள்.மற்றவர்களிடம்  உதவி அணுகுமுறை எதிர்பார்த்தல் தன்மை  உள்ளவர்கள். துலாராசி கடைவீதியை குறிக்கும். வியாபார ஸ்தலம்.காற்றோட்த்தை குறிக்கும்ராசி. பாதி பலன் தரும் ராசி. சொந்த தொழில் செய்ய ஆசைப்பட்டால் இவர்கள் நிர்வாகம் பார்க்ககூடாது. மந்திர தந்திர ஈடுபாடு அதிர்ஷ்டத்தில் அதிக ஈடுபாடு இருக்கும் குலதெய்வம் பிடிமண் எடுத்து வந்து கோவில் கட்டிஇருப்பார்கள். இவர்கள் வர்க்கத்தில் இரண்டு திருமணம் உண்டு.சிறுநீரகம் கிட்னி கர்ப்பபை காதல் இவையெல்லாம்  பிரச்சனை தான். பெண்கள் இவர்களிடம் தேடிவந்து பேசுவார்கள். பெரும்பாலும் மூன்று எழுத்து பெயர்இருக்கும் ஒரு புனைபெயரும் இருக்கும்.
தனக்கு மேலான அல்லது தனக்கு சமமான அந்தஸ்து கொண்டவர்களிடம் விரும்பி பழகும் மனப்பான்மை இருக்கும்.தனக்கு கீழ் உள்ளவர்களிடம் அவ்வளவு நட்பு வைத்து கொள்ளமாட்டார்.
துலா ராசி:கடைவீதியை குறிக்கும்.அதனால் இவர்கள் வீடு ஒரு கடை வீதியை தாண்டி செல்லவேண்டும். துலாத்தில் 4அதிபதியோ செவ்வாய்யோ இருந்தால்இவர்கள் ஒருகடைவீதியை தாண்டி வீட்டுக்கு போவார்கள்.மக்கள் நடமாடும் இடம் அதே மாதிரி அதிக மக்கள் இருக்கும் இடத்தை தாண்டி தான் வீட்டுக்கு போகவேண்டும். பூக்கடை கிப்ட்கடை  காதல் ராசி.
எப்போதும் நியாயத்தையும் தர்மத்தையும் உணர்த்தும் தராசு சின்னத்தை போன்றவர்கள் .
துலா ராசி அல்லது லக்னத்திஞ பிறந்தவர்கள் எதையும் ஆராய்ந்து சாதக பாதகங்களை பார்த்த பின்னரே ஒரு செயலை செய்வார்கள்.
செய் தொழிலோடு ஏதாவது இணைதொழிலையும் தொடங்கி சம்பாதிப்பார்கள்
துலாம் ராசியில் சூரியன் இருந்தால் கடன் மற்றும் எதிரிகளால் உறவினர்களால் தொல்லை உஷ்ண சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்படும் ஏனென்றால் சூரியன் நீச்சம் ஆகிறார் நீச சூரியன சுபர்கள் ஞான குரு புதன் போன்றோர் பார்த்தால் அல்லது இணைந்தால் தீய பலன்கள் குறையும்
துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அவருடன்  சனி பலம் பெற்று இருந்தால் தொழில் வளர்ச்சி கண்டிப்பாக உண்டு கடன் நோய்கள் இருக்காது
சர ராசியில் துலா ராசியில் மட்டுமே தனித்து தொழில் செய்ய இயலும்
உழைத்து அதன்பின் தான் சம்பளம் வாங்கு வார்கள்.அதற்கு முன் சம்பளம் வாங்கமாட்டார்கள்.இவர்கள் தொழில் அதிபராக இருந்தால் நிர்வாககோளாறு இருக்கும்.இவர்கள் மண்டை ஒடையாதஆளேகிடையாது. தலையில்தான் அடிபடும் மாத்திரைகளைபார்த்து வாங்கவேண்டும்.ஏனா காலாவதியான மாத்திரைகளை வாங்கிவிடுவார்கள். துலாம் ஆற்றுபடுகை இவர்கள் பிறந்தஊரில் ஒரு ஆறு இருக்கும். அடிக்கடி பெயர் மாற்றம்செய்வார்கள். பிரபஞ்சராசி. இவர்கள் குடும்பத்தில் (ஸ்)என்ற எழுத்துபெயர் முடியும் நபர்இருப்பார். காளீஸ்.கணேஷ். பிரகாஷ்.விக்னேஷ். வியாபாரம் சிறப்பு. கூட்டுசேரும்ராசி. பெண்நண்பர்கள் இருப்பார்கள். நீண்ட நாள் மரம்ஆகாது தந்தைவழி தாத்தாவழியில் இரண்டு திருமணம் முடித்தவர்கள் இருப்பார்கள்.மரம்:மாதுளைஆப்பிள் ஆரஞ்சுமாஞ்செடி துலாராசிக்கு ஆகாது.
துலாராசி:லக்னத்தில் சூரியன் இருந்தால்  நல்லது. நீசம்  இல்லா . இருந்தால் நன்று.  துலா லக்னத்தில் 2:7 க் குடையசெவ்வாய்  இருந்தால் வீட்டு வாடகை மூலம்  வருமானம் வரும். திருமணத்திற்குபிறகு நல்லா இருக்கும். பொருளாதாரம் நன்று. திருமணம் செய்தால் தான் சிறப்பு. 1க்குடையவரே8க்குடையவர் சுக்ரன் வருவதால் வம்பு வழக்கு இவர்களை தேடிவரும். 2:7க்குடையவர் செவ்வாய் சிறுவயதில் வருமானம். வாக்கால் தொழில் அமையும்.சம்பளத்தை மனைவியிடம் கொடுத்தால் நல்ல 3க்குடையவரே 6க்குடையவர் கம்னிக்கேசன் கவன மாகவைத்துகொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்காக வேலை செய்வார்கள். திடீர் பயணம்  பாகவிரிவினை கமிசன் பத்திரம் இவையெல்லாம்  பிரச்சனையாக இருக்கும். பக்கத்து வீட்டுபிரச்சனை இருக்கும்.E.N.T. பிரச்சனைஇருக்கும். வீட்டில் புத்தகம் அதிகமாக இருக்கும். மார்க்கெட்டிங்தொழில் நல்லது.இவர்கள்யாரையும் நம்பி சீட்டுபோடக்கூடாது.எதிலும் அவசரத்தில் ஒரு முடிவு செய்தால் அது இழப்பு தான்தரும்.இவர்களுக்கு சகோதரன் இல்லை.அப்படியே இருந்தால் வேதனைதான். 4க்குடையவரே5க்குடயவர் இடம் வாங்கினால் தாமதமாகத்தான்வீடு கட்டுவார்கள். கல்விதாமதம். 4:5க்குடையவர் சனி. தாய்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.பெரும்பாலும் மாடியில் உயரமான இடத்தில் உட்கார்ந்து ஒருமுடிவு எடுக்கக்கூடாது.அப்படி முடிவு எடுத்தால் மலை மலை சார்ந்த பகுதியில் இருந்து பிரச்சனை கண்டிப்பாக வரும்.
துலாத்தார் அரசு வங்கிகளில்கடன் வாங்கினால் கட்டுவது சிரமம்
தனியார்வங்கிகள் என்றால் சுலபம் 9க்குடையவரே12க்குடையவர்.புதன்  தந்தையை விரையம் செய்பவராக இரூப்பார். அல்லது தந்தையால் இவருக்கு அதிக விரையம்ஆகும். தந்தைக்கு விவசாய நிலங்கள் அதிகம்இருக்கும்.தந்தை தாத்தா கோவிலுக்கு இடம் கொடுத்தவராகவும் கோவில் திருபணி செய்திருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் தந்தை தாத்தாநீண்ட தூரம் யாத்திரை செய்தவர்கள் உண்டூ. தந்தை வழியில்ஒரு ஊனம் உண்டூ. சாமிக்கு நிறைய அபிஷேகம் செய்வார்கள்.10ம்வீடு சந்திரன் வீடு நீர் சூழ்ந்த இடம்  வயல் சார்ந்தஇடம் பிடிக்கும் இவர்களுக்கு. தொழில் வந்து பெண்களிடம் வாங்கியதாக இருக்கும். 11க்குடையவன் சூரியன் கற்பனைதிறன் இருக்கும்.மலைசார்ந்த பகுதிகளுக்குபோகவேண்டும் என்றவிருப்பம் இருக்கும்.
துலாம் ராசி காரர்கள் மற்றவர்கள் ரசிக்கும் படி பேசுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். துலாமில் பிறந்தவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் கருட பகவான் நடிகர் விஜயகாந்த் ராமசாமி உடையார். கால புருஷனுக்கு ஏழாவது ராசி துலாம். சித்திரை 3,4 பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள். எழுத்துக்கள்  ர ரி ரு ரே த தி து தே. துலாம் ராசிக்காரர்கள் சகல ஐஸ்வரியங்கள் தனம் தானியம் பூமி வாணி வீடு வாகனம் பசுக்கள் ஆகியவற்றை பெறும் பாக்கியம் கொண்டவர்கள். தராசை குறியீடாக கொண்ட ராசி. மற்றவரைப் புண்படுத்தாதவர். நீதி நேர்மை உள்ளவர். ஆன்மீக நாட்டம் உடையவர். எந்த வேலையையும் முழு ஈடுபாட்டோடு செய்வார்கள். துலாம் ராசிக்காரர்களை கோபித்துக்கொள்ள மற்றவர்கள் யோசிப்பார்கள்.  துலாம் ராசிகாரர் அதிகம் கோபப்பட மாட்டார்கள். அதனால் இவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். இவர்கள் ஒரு விஷயத்தில் பிரச்சனை ஏற்படும் என தோன்றினால் அந்த சூழ்நிலையை ஆராய்ந்து எடை போடாமல் வேலையில் இறங்க மாட்டார்கள். விளையாட்டில் கூட நேர்மையை விரும்புவர்.    சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு ஆடை அணிவார்கள். சாதிப்பதற்கு பெரிய பட்டியலே உடையவர்கள். எதையும் கணக்கிட்டு வேலை செய்வார்கள். வேடிக்கையாகவும் உற்சாகமுடன் பேசிக்கொண்டே வேலை பார்ப்பார். இவர்களிடம் ஈகோ அதிகம் இருக்காது. ஆனால் சுயமரியாதை எதிர்பார்ப்பார். வாழ்க்கையின் நல்லது கெட்டதை ஆராய்ந்து நடக்க்ககூடிய பக்குவம் இருக்கும். சந்தேக புத்தி உண்டு. எதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். வாழ்க்கையில் நெருக்கடி ஏற்படும்போது முதலில் கொஞ்சம் கஷ்டமாக உணர்வார்கள்.  பின்பு அதை புரிந்துகொண்டு அதிலிருந்து மீள திட்டமிட்டு கடினமாக பாடுபடுவார்கள். ருசியான உணவை விரும்புவார்கள் அதேபோல் விருந்துக்கு அழைத்தவர் நன்றாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார். தவறு யார் பக்கம் இருந்தாலும் எதிரி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பார். நண்பர்கள் உதவி கேட்டால் அவர்களால் முடியாது என்றாலும் வாக்குறுதி அளிப்பார். இவர்கள் மூடுக்கு ஏற்ற மாதிரி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.  வேலையை தட்டிக்கழிக்கும் போக்கு உண்டு. வாழ்க்கையை  எப்படி அனுபவிப்பது என்று சிந்திப்பார்கள் அதை செயல்படுத்த குழப்பம் இருக்கும். எதையும் தராசு போல் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பதில்வல்லவர்கள்.
சுவாதி நட்சத்திரம்:ராகு. இவர்கள் கொஞ்ச வயதில் சிறுவயதில் இறந்தவர்களை சுட்டிக்காட்டும். இவர்கள் குடும்பத்தில் திடீர் மரணம் ஏற்பட்டிருக்கும்.உயர இருந்து கீழேவிழுவது சுவாதி. இதில் சந்திரன் சுவாதியில் ராகு நட்சத்திரத்தில். சந்திரன்+ராகுஇணைவு என்று எடுத்துஎந்தகிரகம் பார்க்கிறது எந்த சேர்கிறது என்று பார்த்து சொல்ல வேண்டும்.
தராசு, மற்றவர்களின் குணத்தை எடை போடுவார், எதிலும் வியாபார நோக்கத்துடன் பழகுபவர், பிறர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கில்லாடி.                                  இது ஒரு காற்று ராசி, சர ராசி, சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்களைக் கொண்டது. கால புருஷனுக்கு 7 வது ராசி. இதில் சூரியன் நீசம், சனி உச்சமும், சுக்கிரன் ஆட்சியும் பெற்றுள்ளார்.
துலாத்தாக்கு செவ்வாய் ராகுவின்நட்சத்திரம் அல்லது ராகு செவ்வாய் நட்சத்திரம் ஏறினால் உடன் பிறப்புகளால் நல்ல முன்னேற்றம் வசீகரமான பேச்சு. பேச்சினால் மற்றவர்களை கவரும் தன்மை.அறிவாளி வெளிநாடு போனால் நல்லா இருக்கும். ராகுவெளிநாடு. சுவாதியில் பிறந்தவர்கள்கொஞ்சம் அழகாகஇருப்பார்கள் இவர்கள் வீட்டில் ஒரு தீ விபத்து கண்டிப்பாக நடந்திருக்கும்.சுவாதியின் அதிதேவதை சரஸ்வதி என்பதால் இவர்கள் வீட்டில் ஒருஆசிரியர் இருக்கவாய்ப்புண்டு. குடும்பத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் உண்டு. காணாமல் போனவர் பற்றி சுவாதி சொல்லும்.மாந்திரீகம் ஜோதிடம் இதன் மேல் அதிக ஈடுபாடு இருக்கும். வெளிநாட்டு நட்சத்திரம் வெளிநாட்டுவருமானம் இருக்கும். இவர்களுக்கு சொத்தோ இடமோ ஒருபிரச்சனையை தராமல் இருக்காது. பரிகாரம்:நரசிம்மர் விஷ்ணுவின் பாதம். எங்கு உள்ளதோஅங்கு வழிபாடு செய்யலாம்.
விசாகம்:குருவுடைய நட்சத்திரம் இரட்டை பிறவியை சொல்லும். நாய் கடி பட்டவரையும் சொல்லும்.இவர்கள் வீட்டில் ஆசிரியர் வக்கீல் இருப்பார்கள். மீண்டும் மீண்டும் திரும்ப செய்யும் வேலையைசெய்வார்கள்.அறிவுக்கு மரியாதை கொடுப்பார்காள்.வயது மூத்தகாமம் டீச்சர் மாணவனை காதலிப்பது.பெரிய அதிகாரி டீச்சரை காதலிப்பது. இந்த நட்சத்திரத்தில் கரகம் இருப்பதையும் 3க்குடையவன்7க்குடை யவனை பார்த்து தான் சொல்ல வேண்டும். உதா:ரிசபலக்னம் 7க்குடையவன் 8ல் மறைமுக குடும்பம் இருக்கும்.
விசாகம்:காலைவாரும் நட்சத்திரம் இவர்களுக்கு பிடித்திருந்தால் வைத்துக்கொள்வார்கள் இல்லையென்றால் காலை வாறிவிடுவார்கள்.ஒரு விசயத்தை மாறி மாறி பேசுவார்கள் செய்வார்கள். இரண்டு முறை பல் தேய்ப்பது இவர்கள் தான்.துலாராசிக்கும் பொருந்தும். சன்னியாசி.அல்லது சாமியாராக போய் விடலாம் என்றஎண்ணம் இருக்கும். குருநட்சத்திரம் அதி புத்திசாலிகள் சேருவாருடன் சேர்ந்து அதிகஅறிவு வளர்த்துக் கொள்வதற்காக போய்கெட்டு விடுவார்கள். பரிகாரம்:தெய்வம் திருச்செந்தூர் வள்ளிகுகை ரத்தின கிரி கந்தக்கோட்டை
முருகன் வழிபாடுசிறப்பு துலா ராசி சர ராசி இந்த ராசி அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக பரபரவென்று இயங்குவார்கள் மேலும் இவர்கள் கருப்பான நிறத்தில் இருந்தாலும் முகம் பிரகாசமாக இருக்கும் இரண்டாம் அதிபதி செவ்வாய் இது சித்திரை சுவாதி விசாகம் மூன்று நட்சத்திரங்களை உள்ளடக்கியது சில சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மணவாழ்வு திருப்தி அளிப்பது இல்லை சுவாதி நட்சத்திரக்காரர்கள் தேனீயைப் போல எப்பொழுதும் சுற்றி சுழன்று கொண்டே இருப்பார்கள் சித்திரை நட்சத்திரக்காரர்கள் பிறருக்கு உதவி செய்வதிலும் தனக்கிட்ட பணியை காலம் நேரம் கடத்தாமல் செவ்வனே சிறப்பாக செய்வார்கள் அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி அலுவலக வேலையாக இருந்தாலும் சரி விசாகம் ஒன்றை சொல்லிக் கொடுப்பதில் முனைப்பாக இருக்கும் ஆசிரியர் பணி அமைந்தால் திருத்தமாக செய்யும் இல்லையெனில் வேறு துறையில் பணிபுரிந்தாலும் புரியாவிட்டாலும் வீட்டிலாவது 10 மாணவ மாணவியருக்கு டியூசன் சொல்லித் தருவார்கள் விசாக நட்சத்திரக்காரர்கள் ஒன்று நினைத்தால் அல்லது ஒருவருக்காக அது நட்போ காதலோ எதை வேண்டுமானாலும் செய்வார்கள் எவ்வளவு தூரம் வேண்டுமாலும் இறங்கி போவார்கள் அதே அவர்கள் தான் விரும்பிய நட்போ காதலோ பிடிக்கவில்லையென்றால் அவர்களை விளக்குவதற்கும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் இவர் சீட்டு போடக்கூடாது ஜாமின் கையெழுத்து போடக்கூடாது சகோதரனால் கடன் ஏற்படும் குறுகிய தூர பயணங்கள் அடிக்கடி திட்டமிடாமல் ஏற்படும் இவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தால் தகவல் தொடர்பால் ஏதேனும் வில்லங்கம் பிரச்சனை ஏற்படும்
இவர்கள் மனைவியின் இளைய சகோதரி வழியில் அல்லது அவரால் ஒரு பிரச்சனை சந்தித்திருப்பார்கள்                                                                                                             துலாம் ராசியில் பிறந்தவர்கள் சகல வசதிகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.  பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.  ஏற்பட்டாலும் சிலர் வலிய வந்து உதவுவார்கள். பெரிய மனிதரின் உதவியும் ஒத்தாசையும் இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.  குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள் . தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் உறுதியான மனமும் உறுதியான பேச்சு கண்ணியமான போக்கும் கொண்டவர்களாகவும் அடுத்தவர்களின் விஷயத்தில் தலைவர்களாகவும் தனது கருங்களில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழகு ராசி அலங்கார ராசி  காதல் ராசி  துலாம்  லக்னம்
1:உயர்ந்த குறிக்கோள்
2:சமயோசித புத்தி
3:பழிவாங்கும் தன்மை
4:வேகமுடையவர்
5:மனித நேயத்தை புரிந்து கொள்பவர்
6:காமமுடையவர்
7:எதிர்கால முடிவுகளை தனது சிந்தனையின் மூலம் அறிந்து  கொள்வார்கள்
8:நீதி,அமைதி,ஒழுக்கம் போன்றவையில் நாட்டம்
9:அனைவராலும் கொள்ளப்படுதல்
10:அறிவு
11:தூய்மை
12:சுறுசுறுப்பு
13:கடவுள் மற்றும் அந்தணர்களிடம் மரியாதை
14:பேராசை
15:தீர்க்கமான எண்ணமுடையவர்
16:அற்ப சிந்தனைக்கு இடம் கொடுக்காமை
17:மற்றவர் மேல் இரக்க சிந்தனை
18:இயற்கைக்கு ஒவ்வாத வகையில் கற்பனையில் வாழ்தல்
19:பொருட்களை வாங்க, விற்பதில் திறமை
20:மத்தியஸ்தம்
21:மற்றவர்களின் குறைவான பேச்சுகளை பொருட்படுத்தாமை
22:அரசியல்வாதி,
சமய சீர்திருத்தவாதியாக இருந்து பெரிய தாக்கத்தை  மக்கள் முன்னிலையில்
 உருவாக்குபவர்கள்
23:பிறர்மேல் தன் கருத்துக்களை திணித்து அதனால் ஏற்படும் தீயவிளைவுகளால் பாதிக்கப்படுவர்
24:நேர்மையானவர்
25:சுதந்திரத்திற்காவும் தன் வாழ்வை அர்ப்பணித்தல்
26:இசையில் ஆர்வம்
27:நம்பிக்கை மிகுதி
28:நேர்மையில் நாட்டம்
30:நல்ல உயரம்
31:உயரத்திற்கு ஏற்ப பருமன்
32:கிளியின் மூக்கு போல் நுனி சிறிது வளைந்திருக்கும்
33:இனிய சுபாவம்
34:பழகுவதற்கு  அருமையானவர்
35:அறிவாற்றல் நிரம்பப் பெற்றவர்
36:நியாயமான உணர்ச்சி  மிகுதியாக உடையவர்
37:சுகபோக உல்லாச வாழ்க்கையை அனுபவிக்க விருப்பம்
38:பல தொழில்களைச் செய்து சம்பாதிக்க ஆசை உள்ளவர்
39:பலவகைகளிலும் பணத்தை தாராளமாகச் செலவு செய்பவர்
40:தொழில் மற்றும் வியாபாரத்தை அடிக்கடி  மாற்ற முயல்வர்
41:சொத்து கிடைக்கும்
42:சிலக்குக் குழந்தை தாமதமாகும்
43:வயது முதிர்ந்த  பின் பின்தலை பகுதியில் வழுக்கை
44:முகவசிகரமுடையவர்
45:கண்,புருவங்கள் அழகாக இருக்கும்
46:இசைத்துறை
47:ஓவியக்கலை
48:பேன்சி ஸ்டோர்
49:ஜவுளிக்கடை
50:ஸ்வீட் ஸ்டால்
51:லாரி,பஸ் நடத்துதல்
52:பழக்கடை
53:அழகு சாதன நிலையம்
54:அத்திர் வியாபாரம்
55:வைசியர்
56:சரிகை வேலை செய்தல்
57:தோட்டம் அமைத்தல்
58:போட்டோ பிடித்தல்
59:கூட்டு வியாபாரம்
60:தொலைநோக்கில் முடிவு எடுப்பவர்
61:கடகம் தொழில் ஸ்தானமாக அமைவதால் திரவ பொருட்களைக் கொண்ட தொழில் அமையும்
62:மருந்து கடை
63:வேதியியல் நிபுணர்கள்
64:வர்ணபூச்சு செய்பவர்
65:நீர்மின்விசைப் பொறியாளர்
66:போக்குவரத்து பிரிவு
67:கடற்படை
68:உணவு தயாரிப்பாளர்
69:பால் வணிகம்
70:பழரசம் வியாபாரம்
71:2,6,10இடத்தில் சுக்கிரன் இருந்தால் கதை எழுதுபவர்
72:பின்னணிப்பாடகர்
73:சங்கீதத்துறை
74:கட்டிடம் கட்டுபவர்
75:காற்றாலை
76:ஆகாயவிமானம் துறையில் பணி
77:துலாம் காட்டும் பொருள்கள் பருத்தி
78:பட்டு
79:செயற்கை பட்டு
80:கம்பளம்
81:நைலான்
82:கோதுமை
83:சணல்
84:கரும்பு போன்ற தானியங்களின் விலையை குறிக்கும்
85:ஜவுளிகளின் விலையை குறிக்கும்
86:வாள் அறுக்கும் குழிகள்
87:காற்றாடி ஆலைகள் அருகில் உள்ள இடங்கள்
88:வீட்டின் வளாகத்திலேயே உள்ள  வீடுகள்
89:குன்றுப் பக்கங்கள்
90:சுத்தமான வெறுமையான மெல்லிய காற்று உள்ள இடங்கள்
91:மலை உச்சிகள்
92:தராசு
93:துலாம் ராசி குறிக்கும் நகரங்கள்
ஆண்ட்வெர்ப்
94:நாட்டிங்ஹாம்
95:வீட்ஸ்
96:பிராங்க்பர்ட்
97:லிஸ்பன்
98:வியன்னா
99:சார்லஸ்டவுன்
100:பெட்ரோகிராட்
101:கோபன்ஹகன்
103:ஸ்பிரின்
104:பிளேயினா
105:பிரைபாக்
106:சூயெஸ்ஸா
107:ஜொஹான்ஸ்பர்க் கெயிட்டர்
நாடுகள்
108:வட இந்திய மாநிலங்கள்
109:பர்மா
110:இந்தோசைனா
111:சீனா
112:அர்ஜன்டினா குடியரசு
113:திபெத்தின் பாகங்கள்
114:ஈஜிப்டின் மேற்பகுதி
115:லிபியா உஸ்பெக்
116:சவாய்
117:ஆஸ்திரியா
118:பாக்ட்ரியன்னா
119:லிவோனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...