புதன், 21 நவம்பர், 2018

விருச்சிகம் ராசி காரகத்துவம்



விருச்சிகம் ஸ்திர ராசி. ‌ஜலராசி. காலபுருஷனின் எட்டாம் இடம் இங்கு குருபகவான் சனிபகவான் புதன்பகவான்   நட்சத்திரம்  உண்டு. நீர் ராசி, தேங்கிய நீர்,  கருவாட்டு கடை, சாக்கடை, குளம், குட்டை  சுடுகாடு, சவக்கிடங்கு,  ஆம்புலன்ஸ்,  தந்தைக்கு ஆகாத ராசி,  பிரிந்து வாழ்வார்கள்,  ஊமை ராசி,
மனதிற்குள் ஆயிரம் இருந்தாலும் 1 பங்கு கஷ்டத்தை மட்டுமே வெளியில் சொல்வார்கள்
விஷ பூச்சிகள், தேள், வவ்வால் வரும்  கோவிலுக்கு அருகில் வீடு, சந்து, பொந்து வீடு  விருட்சக ராசி/லக்கினம் சூது விளையாட்டு கூடாதூ சகுனி  கேட்டை இது   கடன் வாங்க கூடாது அப்படி வாங்கினால் இவர்களுக்கு பயன்படாது கடன் அடையவும் அடையாது
எதையாவது விற்றுத்தான் கடன் அடைத்து வெளியே வர முடியும்
எந்த விஷயமும் முன்னாடி செய்ய மாட்டார்கள் தேள் பின்னாடி தான் விஷம் இருக்கும் இது போல தான் இவர்கள் செயல் பாடுகள் இருக்கும்
எடுத்தோம் செய்தோம் அடி உதை செய்ய மாட்டார்கள் பின்னாடி அதை யோசித்து அடிப்பார்கள் இவர்கள்
விருச்சிகம் என்றால் . இவர்களிடம் பக்குவமாக பேசவேண்டும் இது செவ்வாய் வீடு எதற்கும் போராடும் குணம் உள்ளவர்கள் இங்கு மனோகாரகர் சந்திரன் நீசம். சந்திரன் நிற்கும் நிலைவைத்து உடல் வளம் அமையும் இவருக்கு. சுய கௌரவம் உடையவர்கள் சந்தேகம் இருக்கும் சலனபுத்தி இருக்கும் குடும்பம் சிக்கல் உடையவர்கள்.
விருச்சிக ராசியின் தன்மைகள்
1. நீர் ராசி
2. ஸ்திர தன்மை
3 மர்ம ஸ்தானம்
4. மெளனமான ராசி
5 அறிவுடைய ராசி
6. எதையும் விரைவில் கிரகிக்கும் ஆற்றல்
7 கற்றதை தெளிவாக உரைத்தல்
8 அதிகாரம்
9. கெளரவம்.
10. ஜீவராசி
11. நீண்டது
12. பாழ்கிணறு
13. சாக்கடை
14. சேறு நிறைந்த இடம்
15. கழிவு அறை
16. தோல் பதனிடும் இடங்கள்
17. ஆட்டு தொட்டி
18 இறைச்சி மார்க்கெட்                                                                                                               19. ஆபிரேஷன் தியேட்டர்
20 சுடுகாடு
21. இரும்புக் கிடங்கு
22. ரசாயண பரிசோதனைக் கூடம்
23. பல கால் ராசி
24. முழபயனை தரும் ராசி
25. பெண் ராசி
26.காம்பௌண்டு
27. நண்பகல்
28. கருப்பு நிறம்
29. கிணறு
30. வடமேற்கு திசை
31. சுரங்கம்
32. கட்டுமான வேலைகள்
33. அரசு ஓப்பந்தம்
34. துப்பரவு தொழிலாளிகள்
35. கள்ள கடத்தல்
36. தொழிற்சங்கங்கள்
37. உலோக வர்க்கங்கள்
38. வெளிநாட்டு மருத்துவம்
39 அறுவை சிகிச்சை
40. ஆயுதங்கள்
41. கருத்தடை
42. கருத்தடை உபகரணங்கள்
43. யுத்தம்
44. பாக்கு
45. கரும்பு
தோற்றங்கள்
1 நன்கு பிரமானமுள்ள தேகம்
2. நிண்ட முக்கு
3 சராசரி உயரம்
4. அகன்றமுகம்
5 அதிகாரத்தோற்றம்
6. கட்டையும் சுருட்டையுமான உடல்                                                                                    7 பலமான தேகம்
8. நல்ல ஆண்மை
விருச்சிக ராசியின் குணாதிசயங்கள்
1 மிகவும் புத்திசாலித்தனம்
2 கடின உழைப்பு
3 மிதமிஞ்சிய முற்போக்கு
4 - துணிவு
5 எப்போதும் நிறைவின்மை
6. தடைகளை எப்போதும் கவனியாமை
7. நல்ல கற்பனை
8. கூர்மையான அறிவு
9. உக்கிர உணர்ச்சி
10. சகாயத்தன்மை
11. திவிரசெய்கை
12. திருப்தியான உடன்படிக்கை
13. சுதந்திரம்
14. மன ஊக்கம்
15. விருப்பும், வெறுப்பும்
16. நேர்மை
17. யதார்த்தம்
18 பழி திர்த்தல்
19. ஓழங்கான இயற்கையான உணர்வு
20. குறுக்கிய இடங்கள்
1 வாய்க்கால்கள்
2 .வடிகால்கள்
3 குளிக்கும் தொட்டிகள்
4. சேற்று நிலப்பகுதிகள்
5 சலவை செய்யும் இடங்கள்
6 குப்பை கொட்டும் இடங்கள்
7 சாக்கடை நீர் பாயும் இடம்
8 சாராயம் காய்ச்சும் இடம்
9 . விஷ ஜந்துகள் வாழும் பகுதி
10 . பாம்பு புற்றுகள் நிறைந்த பகுதி
விருச்சிக ராசியின் இடங்களில் விளையும் பொருட்கள்
1 கரும்பு
2 . தென்னை மரம்
3 வெற்றிலை கொடிக்கால்
4. பாக்கு மரம்
5 வாழைமரம்
6. கரையோர மரங்கள்
7 கிழங்கு வகைகள்
8 நெல்
9. முள்ளங்கி
10 பூக்கள், கிரை வகைகள்
விருச்சிக ராசி காட்டும் தொழில்கள்
1 இரும்பு மற்றும் நெருப்பு சம்மந்தமான தொழில்கள்
2 பொறியியல் துறை
3. சுரங்க தொழில்கள்
4. விவாசயம்
5 மின்னியல் துறை
6. மாந்திரிகம்
7 ஜோதிடம்
8ஆன்மிகம்
9. பூமித் தொழில்
10. தாது பொருட்கள் சம்பந்தமான தொழில்
விருச்சிக ராசி காட்டும் தமிழகத்தின் பகுதிகள்
1 தேனி மாவட்டத்தின் வடக்கு பகுதி
2 திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதி
3 கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதி
4 . ஈரோடு மாவட்டத்தின் தெற்கு பகுதிகள்                                                                      1. துர்நாற்றம் அடைக்க கூடிய . டாய்லெட் அருகில் வீடு
2 . குப்பை கொட்டுமிடத்திற்கு அருகில் வீடு
3 தகப்பனுக்கு ஆகாத ராசி
4. கஷ்டங்களை அடுத்தவரிடம் சொல்லாத ராசி
5. Spen Cers பண்ண ஆள் இருந்தால் மேலே வந்து விடுவார்கள்
6 . விஷ பூச்சி தொல்லை இருக்கும்
7 வெட்டி கிளி, பட்டாம்  பூச்சி வரும்
8 விருச்சிகத்தில் புதன் சந்திரன் இருந்தால் அவர்கள் விட்டில் பெரிய கிணறு or  பெரிய Sump  இருக்கும்
விருச்சிகம்
அமானுசிய வீடு
 1 . 6 உடையவர் செவ்வாய். இதுவே காலத்துக்கு 1. 8 ஆக வரும். செவ்வாய் ஆதிக்கம் நிறைந்தவர். மண் ஆளபிறந்தவர்கள். ஒருவர் சாதாரண நிலையில் பிறந்தால் கூட அவர் லக்னம் விருச்சிகம் ஆகி  அந்த இடத்தை செவ்வாய் பார்வை செய்தால் சொத்துக்கள் நிறைய சம்பாதித்து ஆளுவார். இவர் பொறுமை கடைபிடித்தால் உயரலாம். குருவின் விசாகம் இருப்பதால் குரு 2. க்கு  5  க்கு உடையவர். தனம் சந்தானம் பாக்கியம் தரும்  3.க்கு  4. க்கு சனிபகவான் மத்திமபலன் இருக்கும் 8 , க்கு  11, க்கு புதன் எதிர் பார்த்தளவு நல்ல பலன் தராது. உடல் உறுப்புகள் : பிறப்புறுப்பு, மலத்துவாரம்  இந்த ராசியில் சந்திரன் பகவான் நீசம் அடைகிறார்.
விருச்சிக ராசியின் காரத்துவங்கள் :

முட்கள், கற்கள் நிறைந்த பகுதி, விஷ ஜந்துகள் வாழும் பகுதி, கிராமம், பள்ளத்தாக்கு, தொழிற்சாலைப் பகுதி, குப்பை கொட்டும் பகுதி, சுரங்கம், ஆண் மற்றும் பெண்களின் மர்ம உறுப்புகள், கறுப்பும் சிவப்பும் கலந்த நிறம், இரும்பு, நெருப்பு சம்பந்தமான தொழில், மின்னியல் துறை, மாந்திரிகம், சோதிடம், ஆன்மீகம், ஆராய்ச்சி செய்தல், தாதுப்பொருட்கள் சம்பந்தமான தொழில்.
சவகிடங்கு
விருச்சிக லக்கின சுபர் அசுபர் :

யோககாரகர்கள்: குரு, சந்திரன்

யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

விருச்சிக லக்னம்:

விருச்சிக லக்கினத்திற்கு இரு சுபர்கள் அதாவது சூரியனும் சந்திரனும், குபேரனென்று சொல்லப்படும் குருவும் யோகாதிபதிகள் ஆவார்.

இவர்கள் ஒருவருக்கொருவர் எங்கு இணைந்திருப்பினும் யோகத்தை தரக்கூடியவர்கள்.

லக்கினாதிபதியான செவ்வாய் 6 – க்குடைய ஆதிபத்தியமும் பெற்றதனால் அசுபராகிறார்.

8-11 – க்குடைய புதன் மாரகராகிறார்.
7-12 – க்குடைய சுக்கிரனும் மாரகஸ்தானத்தை வகிப்பதால்,

புதன் சுக்கிரன் எங்கிருப்பினும்  அவர்களின் தசாபுத்தி காலங்களில் கண்டம் மாரகம் கணவன் ( அ ) மனைவி பிரிவினை, தொழில்பாதிப்பு போன்றவைகளைத் தருகிறார்கள். இவர்களோடு செவ்வாய்-ராகு-கேது சேர்க்கை பெறின் பாதிப்புகள் உறுதியாக நடைபெறுமென கூறலாம்.
இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை. இந்த சனியோடு புதன் குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒருவகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வபலம் ஆகியவை சிறந்து விளங்கும்படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம்.

விருச்சிக லக்கினத்திற்கு 2-5-க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார். இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன்-சந்திரன்ஆகிய இருவரும் ஆதிபத்திய காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள். நடைமுறையில் ஆய்வு செய்யும் போது சூரியன் சந்திரன்-குரு ஆகியவர்களின் தொடர்பை எவ்விதத்திலாயினும் பெற்ற இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் அரசாங்க தொடர்புள்ள தொழில் நிறுவனங்கள் பொதுத்தொண்டு போன்றவைகளில் சிறப்பான அங்கம் வகிப்பவர்களாக இருப்பார்கள். அனேகர் பொதுமக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்பதவிகளை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். ஞானம், அறிவு, யுக்தி மிகுந்தவர்களாகவும் எழுத்தாற்றல் பெற்றவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.
செவ்வாய்-சுக்கிரன்-சனி-ராகு-கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம் மது மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு. இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், கொலை பாதகம், ராகு கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக் கொண்ட அமைப்பு இருக்கும்                                                                                                                                  

குரு, புதன் சேர்க்கை புத்திர நாசத்தையும், குடும்பம் பாதிப்படைதலும் மூடத்தனமாக காரியங்கள் செய்வதையும் முரட்டு சுபாவத்தையும், நாத்திகத்தன்மையையும் தருகிறார்கள்.
இவரோடு சம்பந்தப்பட்ட சந்திரன் செவ்வாய் தீராத உடல் வியாதிகளையும், இனம் புரியாத மனபயம் காம இச்சை அதிகரித்தல் மூலம்  சில பல பாதிப்புகளையும் தருவார். தன் உடல்நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளும் மனோபாவத்தையும் தருவார்கள்.

இந்த விருச்சிக லக்கினக்காரர்களுக்கு குரு திசை சுபத்தைத் தருகிறது. குற்றங்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது. செவ்வாய் . சுக்கிரன் ராகு கேது சேர்க்கை வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைத் தருகிறது.
உன்னதமான லக்கினம் என்று புகழ்ந்து சொல்லப்படும் விருச்சிகத்தை லக்கினமாகக் கொண்டவர்களுக்கு சூரியன் சந்திரன் குரு ஆகியோரின் தொடர்புகள் ஜாதகத்தில் நன்கு இருப்பின் ஒருவரப் பிரசாதமே ‘. இந்தலக்கினத்திற்கு புதன் சனி சேர்க்கை 5, 9, 11 – ல் இருப்பின் எவ்வகையிலும் குறைவில்லா வாழ்க்கையைத் தருகிறார்கள். ஆனால், இல்லறத்தில் மட்டும் தீராத குழப்பம் காணும்- சூரியன் குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும்.

சூரியன்- புதன்சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும், குடும்ப சூழ்நிலையும், மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது.

சூரியன் சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும்.

குரு சந்திரகேந்திரயோகம். கஜகேசரி யோகம், நன்மையைச் செய்கிறது. குரு, செவ்வாய் தொடர்பான குருமங்கள யோகமும் நற்பலனைத் தருகிறது. விருச்சிகத்தில் செவ்வாய், ரிசபத்தில் சந்திரன் அமைந்த சந்திரமங்கள் யோகம் நன்கு பிரகாசிக்கிறது.
விருச்சிகம் ராசி யில் சந்திரன் நீசம் எனவே இவர்கள் தாயாரை பிரிந்து வாழும் போது வளர்ச்சி இருக்கும்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தான் செய்ய நினைப்பதை நன்கு திட்டமிட்ட பின்பே செய்வார்கள் .
மன தைரியம் மிக்கவர்கள்.  உடல் பலம் உடையவர்கள்.  சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை சாதிப்பார்.  பண்பு மிக்கவர்கள். ஆடம்பரப் பிரியர்கள்.
புகழ்ச்சியை விரும்புவர்.  சண்டைக்குப் போக மாட்டார்கள் . ஆனால் வந்த சண்டையை விடவும் மாட்டார்கள்.
விருச்சிகம் என்றால் தேள்.  இவர்களிடம் பக்குவமாக பழக வேண்டும். பக்குவம் தவறினால் கட்டிவிடுவார்கள். இது செவ்வாய் வீடாகவும் சொளமிய ராசியாகவும் இருப்பதால்  இவர்கள் நியாத்திற்காக தைரியமாக போராடுகிற குணம் படைத்தவர்கள். 
இது சந்திரன் நீசமாகும் ராசி.  எனவே உடல் இருக்கும் அளவு போதிய பலம் இருக்காது. சந்திரன்  இருக்கும்  இடத்தை பொறுத்து உடல் வளம் இருக்கும்.
விருச்சிகத்தில் தீய கிரகங்கள் இருந்து விட்டால் இந்த  இடத்தில்  ஏதேனும் நோய் பாதிப்பு  ஏற்படலாம். பொதுவாக இந்த லக்கனத்தில் பிறந்தவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டம்  உடையவர்கள்.
லக்கினாதிபதி செவ்வாய்  பலம் பெற்றால் பூமிக்காரகன்  என்பதால் பூமி ஆளும் யோகம்  ஏற்படும். இவர்கள் சந்தேகம் உடையவர்கள். சலனபுத்தி உடையவர்கள்.
இந்த லக்கினத்திற்கு ஒளி கிரகமான சூரியனும் சந்திரனும் தர்மகர்மாதிபதிகளாக அமைவதால் ஏதோ ஒரு வழியில் நாலுபேருக்குத் தெரிந்த பிரகாசமானவர்களாக இருப்பார்கள். சுயகௌரவம் உடையவர்கள்.
அதிக பேச்சும் உரத்த குரலும் உடையவர்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்  உடையவர்கள். இது வடக்கு திசையை குறிப்பதால்  ஊரின் வடக்கு பக்கம்  அல்லது வடக்கு பார்த்த வாசல் உள்ள வீடுகளில் வசிப்பது சிறப்பு.
கால புருஷனுக்கு 9 ம் இடம் தனுசு  இவர்களுக்கு தனஸ்தானம். இது நெருப்பு ராசி உபயராசி. குரு வீடு இவர் வருமானம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும் இரண்டில்  கேது  அமைந்தால் கஞ்சா அபின் இவைகளை வைத்திருப் பார்கள் சட்ட விரோதமாக செயல் மூலம் பணம் சம்பாதிப்பது மருத்துவமனை விபத்து பிரிவுகள் சவகிடங்கு போன்ற வற்றில் லஞ்சம் வாங்குவது காப்பீடு நிறுவனங்கள் உயில் மூலம் வருமானம் பெறுவது இருக்கும்.    இரண்டாம் இடம்  தனுசு இரண்டில் சுக்கிரன் இருந்தால்  சுக்கிரன் 7. க்கு 12 . க்கு  உரியவர் சமூக தொடர்பு தொழில் கூட்டாளி மனைவி மூலம் லாபம் உண்டு. சூரியன் உத்திராடம் என்றால் அரசு ஸ்டாம்ப் பத்திரங்கள் கருவூரும் போன்ற நிதி நிறுவனங்கள் மூலம் லாபம் சூரியன் விருச்சிகத்திற்கு 10 க்கு   அதிபதி. எனவே இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கௌரவப்பதவி பொறுப்பு மிக்கபதவி மூலமும் தலைமை பண்பு பெயர் புகழ் நிர்வாகம் திறன் ஆலோசனை வழங்குதல் போன்ற வற்றின் மூலம் லாபம் அடைய பெறுவார்கள்
பாக்கியாதிபதியே பாதகாதிபதியாக வருவதால்  இவர்கள் சேர்த்து வைக்கும் சொத்துக்களை மற்றவர்கள்தான் அனுபவிப்பார்கள்.  எனவே வயிற்றை கட்டி வாயை கட்டி அதிகம் சேமிக்காமல் இருப்பது நல்லது                                         விருச்சிகராசி விஸ நீர் ராசி
கால புருஷனுக்கு எட்டாமிடம். நெஞ்சழுத்தமான ராசி   போர் குணம் கொண்டராசி   கொட்டும்ராசி
கால புருஷனுக்கு 10 ம் பாவம்  மகரம்  இவர்களுக்கு மூன்றாம் இடமாகும். இவர் தைரியமாக தொழில் மேற்கொள்வார்கள்.  மகரம் பூமிராசி. சரராசி. தொழில் நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் மேற் கொள்வார்கள். விரைவான தகவல்தொடர்பு உடையவர். மூன்றாம் பாவம் சூரியன் அமைந்தால் அரசு தகவல்தொடர்பு அரசுபத்திரங்களை கையாள்பவர்பவர்களாக இருப்பார்கள். சந்திரன் திருவோணத்தில் அமைந்தால் சிறந்த சிந்தனையாளர் எழுதுவதில் கற்பனை வளம் இருக்கும் சந்திரன் விருச்சிகத்துக்கு 9  ம் அதிபதி எனவே ஒப்பந்தம் பண்டமாற்றம் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவார். ஆராய்ச்சி துறைகளில் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வார்கள். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி ஆக இருப்பது சட்டத்துறை குமாஸ்தா ஆடிட்டர் தலைமைபொறுபேற்க உத்திரவுகளை பெறுபவர்களாக இருப்பார்கள். மகரத்தில் செவ்வாய் இருந்தால் தைரியம் ஆனதுணிச்சலான ஒப்பந்தங்களை கொண்டவர் பேச்சு வார்த்தைகளில் தங்கள் உடல் வலிமையை காண்பித்து முன்னிலைபெற முயற்சி செய்பவர்கள் ஆக இருப்பார்கள்
சீவகசிந்தாமணி என்ற காப்பியத்தில் வரும் கட்டியங்காரன் என்ற  தளபதிபோல  நெஞ்சழுத்தம் கொண்டோர் விருச்சிகத்தார்
விருச்சிகத்தை பொறுத்த வரை சூரியன், சந்திரன் ,குரு மூன்றும் மிக முக்கியமான கிரகங்கள்.
தேளினிற் செனித்தோற் இரு சுடரோடுந் தேவர்கட் கிறைவனுகஞ் சுபராய் கோளாறு சேய் மாலு சனனு மதர் குபேரனுமினணயும் யோகர் கேளுடன் கூடி ராஜயோகமாம் " என்கிறது யௌவன காவியம்..
ஆக இரு சுபர்கள்  என்று கூறக்கூடிய சூரியனும் சந்திரனும் யோகாதிபதிகள். அடுத்து குபேரன்  என்று சொல்லப்படும் 2 , 6 க்குடைய குருவும் யோகாதிபதி ஆவார். இவர்கள்  எங்கு இனணந்து  இருந்தாலும் யோகத்தையே தருவார்கள். நெருங்கார். நெருங்கிய பின் வெறுக்கார்  நெருங்கிப் பின் வெறுத்து விட்டால் ஓரங்கட்டவும் தயங்கார். விருச்சிகத்திற்கு குரு யோகம் தரும் கிரகமாக  இருந்தாலும்
சூரியன் +குரு
சூரியன் +சந்திரன் +குரு
குரு+புதன்  ..இது போன்ற கிரகக் கூட்டில் இருக்கும் போது நல்ல யோகங்களை தந்துவிடுவார். ஆனால் தனித்த குரு 10 ல் நின்றால் யோகம் தராது. மாறாக யோகபங்கம் செய்யும்.
இந்த விருச்சிகத்தாருக்கு சந்திரன் விருச்சிகத்தில் இருந்தால் அடிக்கடி சளித்தொந்தரவு சிறுநீர்க்கல் அடைப்பு   தாயுடன் கருத்து  வேறுபாடு  உண்டு குரு எட்டில் இருந்தால் இல்வாழ்வு பிரச்னைகள் உண்டு
வயலூர் முருகனிடம்
அனைவருக்கும் வாக்குப் பலிதம் கொடுத்து வாழ்வாங்கு வாழ வைக்கும்படி வேண்டி நின்றேன்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிக ராசியின் ராசியாதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு  பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.

உடலமைப்பு,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.

குண அமைப்பு,

விருச்சிக ராசிகாரர்கள் நியாய  அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.

மணவாழ்க்கை,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.

பொருளாதார நிலை,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள்……..[8:07 AM, 9/8/2018] K. S. kuppu Sami:  சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது  மற்றவர்களின் சொத்தாக  இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு  செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று  சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.

புத்திர பாக்கியம்,

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.

தொழில்

சிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.

உணவு வகைகள்,

உணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 1,2,3,9,10,11
நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை - செவ்வாய், வியாழன்
திசை -தெற்கு
கல் - பவளம்
தெய்வம் - முருகன்
காலத்துக்கு 11 ம் வீடு இவருக்கு நான்காவது வீடாகும். இவர் தாங்கள் விரும்பும் துறையில் கல்வி கற்பார்கள். காற்று ராசி விஞ்ஞானம் கணிதம் ஆர்வம் உடையவர்கள். சனிபகவான் வீடு தடைகள் மீறியே கல்விமுடிப்பார்கள்.  இவர் வீடு தெருவில் மையத்தில் இருக்கும். நல்ல காற்றோட்டம் உள்ள வீடுகளில் வசிப்பது.  பூமிராசி.    சொத்து ஸ்திரமாக இருக்கும்.  இங்கு அவிட்டம் அமைந்தால் வாகனங்கள் இயந்திரங்கள் கால்நடை விவசாயம் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் இருக்கும். ராகு சத்யம் எனில்   சிறைச்சாலை கல்லறைக்கு அருகில் வசிக்கும் படிஅமையும்.  தூதரகங்கள் பழைமையான அரண்மனை யில்பணிபுரியும் அமையும். குரு. பூரட்டாதி என்றால் பெரிய தொழிற்சாலைஇளைபோன்ற சட்ட பூர்வ மாகவைத் திருப்பார்கள். கல்வி நிறுவனங்கள் சொந்தமாக நடத்துவார்கள் குரு 2 5 ஆவதால் விளையாட்டு துறைபயிற்சி யாளர்ஆக இருப்பது.
காலத்துக்கு 12 இவருக்கு 5. ம்வீடு. ஜலராசி. ஆராய்ச்சிதுறையில் மிகுந்த பலன் கள் நிறைந்த முடிவுகள் பெறுவார்கள். உபயராசி. கலை மததுறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
காலத்துக்கு முதல் வீடு விருச்சிகம் லக்னத்துக்கு 6ம் வீடு. இவர் பொறுப்பு மிக்க பதவிவகிப் பார்கள்.இராணுவம் போலீஸ் தீயணைப்பு தொழிற்சாலைகள் போன்ற வற்றில் வேலை இருக்கும். மேஷம் நெருப்பு ராசி இவர்கள் நெருப்பு சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்க்கும் அமைப்பு இருக்கும் சரராசிஇந்த இடம். இவருக்கு கடன்களும் வழக்குகளும் வளர்ந்து கொண்டே இருக்கும். கடின உடல் உழைப்பு மிகவும் கஷ்டமான வேலைசூழல் அசுத்தமான இடங்களில் பணிசெய்வது அதிகமான வேலைப்பளு போன்ற வைஇருக்கும் இங்கு சனிபகவான் நீசம்.      காலத்துக்கு 2 ,7 சுக்கிரன்பரணி ஆகவே கூட்டாளிமூலம் போடப்பட்ட வழக்கை சந்திப்பார்கள் நோய் வாய் படுவதால் உடல் செயல்பாடு இழத்தல் போன்றவை அடங்கும். சூரியன் கார்த்திகை என்றால் அரசு வழி கடன் இருக்கும் சூரியன் 10ம்அதிபதி பதவி உயர்வு களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் அந்தஸ்துமிக்க நிலையான நிர்வாகம் திறன் உடைய அரசுவேலை அமைய பெறுவார்கள்
விருச்சிக லக்னத்திற்கு இருபுறமும் சுப கோள்கள் நின்றால் ஜாதகருக்கு நல்ல ராஜயோகம் பலன் உண்டு
விருச்சிக இலக்னம் அல்லது ராசி
விசாகம் 4 ஆம் பாதம் அனுஷம் கேட்டை நான்கு பாதங்களும்
விருச்சிகம் என்ற ரகசியத்தை மனதில் போட்டு வைக்கக் கூடியவர்கள் தேர் போல எப்போதும் வார்த்தைகளால் கொட்டிக் கொண்டு இருப்பவர்கள்
இவர்களை கண்டாலே விசேஷங்களை பார்ப்பது போல மற்றவர்கள் பார்த்து உங்க கூடிய நபர்கள் ஆனால் உண்மையில் இவர்கள் இரக்கம் கனிவு உடையவர்கள்
இவர்கள் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் அல்ல ஆனால் அப்படிப் பெயர் எடுத்திருப்பார்கள் திறமைசாலிகள் தைரியம் மிக்கவர்கள் செவ்வாய் வீடாக இருப்பதால்.
இவர்கள் ஞானம் அறிவு கடவுள் பக்தி பரிசுத்த மனது பிறந்தது முதல் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தேடிக்கொண்டே இருப்பவர்கள்.
முன்கோபம் மன சஞ்சலம் சந்தேக குணம் சிக்கனம் இவர்களிடம் இருக்கும் எந்த ரகசியத்தையும் மனதில் புதைத்து வைத்து இருப்பார்கள்
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மீனம் மகரம் கடகம் ராசிக்காரர்கள் உதவுவார்கள்
ராசிக்காரர்கள் மனைவியிடத்தில் அதிக பிரியமுள்ளவர்கள் இவர்களுக்கு செவ்வாய் பலமாக இருந்தால் காயங்கள் அறுவை சிகிச்சைகள் உடலில் தழும்புகள் கண்டிப்பாக இருக்கும்
சூரியன் சந்திரன் குரு சுபர்கள் செவ்வாய் புதன் சுக்கிரன் பாவிகள் சந்திரனும் சூரியனும் யோகக்காரர்கள் புதன் சுக்கிரன் பாடகர்கள் புதன் சுக்கிரன் மாறாக சாதனங்களில் இருந்தால் மாரகம் ஒப்பான கண்டத்தை கொடுப்பார்கள்
சூரியன் குரு நட்பு ராசிகள் ராகு சந்திரன் மேஷ ராசி செவ்வாய் ஆட்சி கேது உச்சம் சனி பகை புதனும் சுக்கிரனும் செம ராசிகள்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பலவீன
ஆரோக்கியம் உடையவர்கள் பெண்கள் என்றால் கருப்பை மாதவிடாய் கோளாறுகள் இருக்கும் ஆண்களுக்கு சிறுநீரக பாதிப்பு முழங்கால் வலிகள் இருக்கும் ஜலதோஷம் நீர் சம்பந்த ஆரோக்கிய குறிப்புகள் இவர்களுக்கு வந்து வந்து மறையும்
விருச்சிகத்திற்கு களத்திர ஸ்தானம்ரிஷபம்.
நல்ல மனைவி நல்ல குடும்பம் அமையும் தாமத திருமணம் சுக்கிரன் இருந்தால் மனைவியுடன் பிரியமாக இருப்பார்கள் விருச்சிகத்தில் ராகு கேது இருந்தால் தாமத திருமணம் விருச்சிகத்தில் சுக்கிரன் சூரியன் இணைவு என்றால் இருதாரம்
விருச்சிக ராசியினருக்கு ரிஷபம் மீனம் சிம்மம் மிதுனம் ஆகியோர் கூட்டாளிகள் கூட்டுத்தொழில் செய்ய ஏற்றவர்கள்
கும்பத்து காரர்கள் வம்பு செய்வார்கள்
விருச்சிகம் அதிபதி செவ்வாய்
உருவம் தேள்
பெண் ராசி
இரட்டை ராசி
ஸ்திர ராசி
குணம் கோபம்
தத்துவம் நீர்
திசை வடக்கு
நோய் பித்தம்
நிறம் மஞ்சள்
உறுப்பு மர்ம உறுப்பு
கடவுள் ஐயப்பன்

முட்களும், கற்களும் நிறைந்த பகுதி,விஷ ஜந்துக்கள் வாழும் பகுதி,குறுகிய பகுதி,காட்டுப் பகுதி,கிராமங்கள்,பள்ளத்தாக்குகள்,பாதாளங்கள்
தொழில்
இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில்,பொறியியல்துறை,சுரங்கத்தொழில்,விவசாயம்,மின்னியல் துறை,மாந்திரீகம்,ஜோதிடம்,ஆன்மிகம்,பூமித்தொழில், தாது பொருட்கள் சம்பந்தமான தொழில்,ஆராய்ச்சி செய்தல்,உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில்.
விருச்சிக லக்னகாரர்கள் அதிக உள்ளுணர்வு உணரும் தன்மையுடையவர்கள். எல்லா விஷயங்களிலும் அதிக ஆர்வம் உடையவர்கள். ஆராய்ந்து அறியும் தன்மை உடையவர்கள். சட்டென உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
விருச்சிக ராசி நீர் ராசி. இதன் திரிகோண ராசிகளும் அவ்வாறே..எனவே, இவர்கள் நீர் நிலைகள் அருகே உள்ள முருகன், சித்தர் கோயில், மற்றும் அம்பிகை ஆலயங்களை தரிசித்து , பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்விக்க வாழ்கையில் விரைவில் முன்னேற்றம் உண்டாகும்..
இது ஒரு நீர் ராசி; ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். இதனுடைய சின்னம் H.  இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர். இந்த ராசிக்கு 6-ம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும்.
பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஒல்லியான தேகம் கொண்டவர்கள். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும். எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தசைமூடியிருக்கும். சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான காணப்படுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். எதுவுமே தெரியாத அப்பாவிகள் போல பார்ப்பவர்களுக்கு தெரிவார்கள்
துலாம் ராசி காரகத்துவம் மறு பதிவு
எட்டாம் ராசி விருச்சிகம்.  விசாகம் 4ஆம் பாதம் அனுஷம் கேட்டை நட்சத்திரங்கள். துணிச்சலாக செயல்படுவார் உறுதியான நெஞ்சம் உடையவர் சவால்களை சந்தித்து வெற்றி கொள்ளும் மனநிலை உள்ளவர். விருச்சிகத்தில் பிறந்தவர்கள் காஞ்சிப்பெரியவர் பெரியநம்பி நாதமுனிகள் நரேந்திர மோடி எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கிரண் பேடி நடிகை சரோஜாதேவி. ராசி எழுத்துக்கள் ந நி நு நே நோ ய இ பூ தோ. அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். நல்ல பேச்சாளர்கள் செயலாளர்கள். இவர்கள் உணர்ச்சிவசப்பட்டால் மிகவும் ஆபத்தானவர்கள். எதிலும் ஒரு தனித்துவம் இருக்கும். மிகவும் அன்பானவர்கள். ஆனால் அவர்கள் வெறுப்பில் கூறும் ஒரு வார்த்தை ஆனாலும் அது தேள் கொட்டுவதுபோல் இருக்கும். அன்பான பேச்சுக்கும் அதிரவைக்கும் பேச்சுக்கும் உரியவர்கள். உறவினர் மேல் அக்கறை செலுத்துவர். தனக்கு மட்டுமே பாராட்டு கிடைக்க வேண்டும் என நினைப்பார். இவர்களுக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் உண்டு. பழிவாங்கும் குணம் உள்ளவர். இவர்களைப் பகைத்துக் கொண்டால் அதன் விளைவை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மிகவும் கண்டிப்பானவர் மற்றவரின் தவறுகளை எளிதில் மன்னிக்க மாட்டார். இவர் ரிஸ்க் எடுக்க தயங்காதவர். வந்தால் மலை போனால் முடி என்பது இவர்கள் கொள்கை. அன்புடன் ஆலோசனை கூறுவதில் அக்கறை உள்ளவர். ஈகோ அதிகம் உள்ளவர்கள். எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓய மாட்டார். அனைத்தும்  தன் தலைமையில் நடைபெறவேண்டும் என நினைப்பவர். சந்தேகப்படுவார். காவல்துறை அதிகாரி போல கேள்வி கேட்பார். இவர்களின் அன்புக்காக மற்றவர்கள் இவரின் கடுஞ்சொல்லை பொறுத்துக் கொள்வார்கள். விருந்துகளில் உறவினர் நண்பர்களை நன்றாக உபசரிப்பார்கள் ஆனால் அனாவசியமாக பேசமாட்டார்கள். இவர்கள் விருந்துக்குச் சென்றால் அங்கே குறை கண்டு பிடிப்பார். திட்டமிடாமல் அனைத்துப் பணிகளையும் ஏற்றுக் கொண்டு திண்டாடுவார். அன்பும் கண்டிப்பும் நிறைந்த ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் எதிர் வீடு பேஸ்மட்டம் உயா்வாக இருக்கும்
.
விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாக உறுதியான உள்ளத்துடன் இருப்பார்கள். இவர்கள் பிடிவாத குணத்துடன் நிச்சயமான குணத்துடனும் அடக்கத்துடனும் மௌனமாக மற்றும் நையாண்டி செய்யும் எண்ணத்துடன் இருப்பார்கள் .  இவர்கள் ரகசியமான காரியங்களை செய்வார்கள்..                                                       விருச்சக ராசிக்காரர்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும் .  ஏனெனில் இவர்கள் அடங்காப்பிடாரிகளாகவும் இருப்பார்கள். இவருடைய தைரியம் சில சமயம் அவர்கள் அவர்களை குறும்பான காரியங்களைச் செய்யத் தூண்டும்.  இவர்கள் புதியதாக ஏதாவது கண்டுபிடிக்கும் எண்ணம் உடையவர்கள் .இதை பெற்றோர்கள் ஊக்குவிக்கவேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த மருத்துவராகவும் வக்கீல்களாகவும் மருத்துவர்களாகவும் அல்லது இன்ஜினியரியர் ஆக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.   இவர்கள் நீர் நிலையங்களுக்கு அருகில் வசிப்பதற்கு மிகவும் விரும்புவார்கள. இவர்கள் விரதம் இருப்பதற்கு விரும்புவார்கள்.
.
கால புருஷனுக்கு  2  ம் வீடு ரிஷபம்  விருச்சிகத்திற்கு  7. ம் வீடு   ரிஷபம் பூமி ராசி அதிபதி சுக்கிரன். அதனால் அழகான வாழ்க்கை துணையை பெறுவது இருக்கும். ரிஷபத்தில் சூரியன் எனில்அந்தஸ்து மிக்க மனிதர்கள் தொழிலாளர் சங்கம் தலைவர் விற்பனை பிரதிநிதி இவர்களை சந்தித்து பேசுவார். ரோகிணி என்றால் சலன எண்ணம் கொண்ட களத்திரம் நிலையில்லாத வாடிக்கையாளர்களையும் சுறுசுறுப்பாக இருக்கும் கூட்டாளிகளை உடையவர்கள் செவ்வாய் என்றால் சண்டை கோழி களத்திரம். அமையும். தங்களுடைய அதீதமான சுறுசுறுபால் தேவையில்லாமல் எதிர்ப்பு சந்திப்பார்கள் சுயமாக முடிவெடுக்க முடியாமல் போகும் சிறுநீரகம் கருப்பை அடி வயிறு பிரச்சனை போன்றவை இருக்கும் இந்த  ராசிக்கு.                                 பணம் கடன் குடுத்தவர் நோயாளிகள் வழக்கறிஞர்கள் உணவு வழங்குபவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இந்த ராசிக்கு.இருக்கும்                                                                                                                                  காலத்துக்கு 3 ம்  இடம் விருச்சிகத்திற்கு 8 ம்இடம்.  இந்த இடம் மன உளைச்சலுகள்  நிறைய சுமந்திருப்பார்கள்.  இவர்கள் குறுகிய பயணம் மூலம் விபத்தை சந்திப்பார்கள்  மிதுனம் காற்று ராசி உபயராசி. எனவே பிரச்சினை மனக்குழப்பம் விரைவில் மறைந்து விடும்   புதன் வீடாததால் திடீர் மகிழ்ச்சி எதிர்பாராத இன்பம் அனுபவிக்க முடியும் அதேநேரம் ஜாமீன் போடுவது பத்திரங்கள் ஒப்பந்தம் மூலம் பிரச்சினை அனுபவிப்பார்கள்.  இது காற்று ராசி ஆகவே இவர்கள் காற்றழுத்தம் இயற்கை சீற்றங்கள் வெடிவிபத்து போன்ற விபத்தில் சிக்குவார்கள்.. இவர்கள் காசோலை பிரச்சினை  மின்  இனைப்பு துண்டிப்பு தகவல் பரிமாற்றம்  பிரச்சினை .அனுபவிப்பார்கள்.   உடலில் நரம்பு மண்டலம் பாதிப்பு போன்ற தொல்லை அனுபவிப்பார்கள் இந்த  லக்னம்.     செவ்வாய் நட்சத்திரம் அமைப்பு கலவரம் போராட்டம் தீவிரவாதம் கோரமான விபத்து கற்பழிப்பு மோசடி ஏமாற்ற படுதல் இவற்றால் தொல்லை இருக்கும். அடுத்து  ராகு என்றால்  சிறைத்தண்டனை வெளிநாட்டில் தண்டிக்கபடுதல் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதுமாக இருப்பார்.  அடுத்து  2, க்கு  5 க்கு. குரு புனர்பூசம். பேச்சால் பிரச்சினை வரும்
காலத்துக்கு 4 ம்  வீடு  கடகம் விருச்சிகத்திற்கு  9  ம் வீடு. கடகம். இது ஜலராசி மற்றும்  சரராசி. உயர் கல்வி சிறப்பு தரும் இளம் வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் இருப்பார்.  வயது கூடினபெண் தொடர்பு இருக்கும்.  சொந்தமாக ஆராய்ச்சி மையம் நடத்துபவர் புதிய விஷயங்களை கண்டறிதல் சமயோசிதபுத்தி கூர்மையும் ஆய்வுதிறனும் உடையவர்கள் . குரு ஆசிரியர் உயர் கல்வி இருக்கும் மத போதகர் பேராசிரியர் கோயில் தர்மகர்த்தா தூதுவர் போன்றவர்களாக இருப்பார்.   சனிபகவான் பூசம் . இவருக்கு 3.க்கு           4.க்கு  அதிபதி ஆகவே விஞ்ஞான கல்வி  விபத்து பற்றிய ஆய்வுகள் எண்ணெய் கிணறு சொந்தமாக இருத்தல் வாகனபிரிவில் தன்னை ஈடுபடுத்துதல் இருக்கும்.  புதன் ஆயில்யம்  என்றால் கணித வல்லுனர்கள் கருவூலம் கணக்காளர்கள் தகவல்தொடர்பு பிரதிநிதிகள் ஆக இருப்பார்கள். இந்த ஆயில்யத்தில் ஒரு கிரகம் இருந்தால் விருச்சிகத்துக்கு புதன் அஷ்டமாதி ஆதலால் கண்டிப்பாக ஜலத்தில் கண்டம் இருக்கும்.
இதே சனிபகவான் பலவீனமால் ஆயுள் கண்டம் இருக்கும்
ஸ்திர லக்னங்களிலே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் இவர்கள் .
வீடு,மனை,சொத்து.சுகம் என்று எல்லாமே விரைவில் கிடைத்துவிடும்.
இவர்கள் வாழ்க்கை கோலங்களையும் , வசதி வாய்ப்புகளையும், பயணங்களின் இலக்கையும் நிர்ணயிப்பார் லக்னாதிபதியான வெவ்வாய்.
காலத்துக்கு 5 ம்வீடு விருச்சிகத்துக்கு 10 ஆகும். அதன்  அதிபதி சூரியன் ஸ்திர ராசி நெருப்பு ராசி.  அரசு பணிபுரிபவர்கள்  ஆக இருப்பார். காலத்துக்கு 5  மிடமாததால் கலை விளையாட்டு துறைகளில் பணிபுரியும் அமைப்பு இருக்கும். ஜோதிடம் வரும்  மருத்துவம் தொழில் வரும்   சுக்கிரன் நட்சத்திரம் வருவதால் சமூக சேவை மையம் திருமண புரோக்கர் தொழில்கள் இருக்கும்    அடுத்து சூரியன் நட்சத்திரம் கௌரவம் அந்தஸ்து மிகுந்த பதவியில் இருப்பர் சுங்க இலாகா வருமான வரி மற்றும் விற்பனை வரி போன்ற துறைகளில் பணிபுரியும் அமைப்பு இருக்கும்
விருச்சிகராசி: குட்டை குளம் தேங்கிய நீர்கழிவுநீர் புளு பூச்சி சாக்கடை
துர்நாற்றம் மிகுந்தபகுதிகள் சுடுகாடு கோமாநிலை கிணறு பயன்படுத்தாத கிணறு சவக்கிடங்கு விருச்சிகத்தில் 4 கிரகங்கள் இருந்தால்  சவக்கிடங்குபோனவர்கள் இருப்பார்கள் .பிணஅறை.  தகப்னாருக்கு ஆகாத ராசி.9 ம் இடம் கடகம்  பாதகம் இங்கு நீசம். தாய் தந்தையை  பிரிந்து  வாழும் ராசி. இழுந்து.  புத்திரதோசம் சொல்வதில் வல்லமை மிக்கராசி.குழந்தை  இல்லை என்றுசொல்லும்ராசி. ஊமைராசி.திக்குவாய் மெளனமான ராசி. மனதில் ஒன்றுவைத்து அதை வெளிப்படுத்தாத ராசி.கடன்அதிகமாக வாங்குவார்கள். 8ல்ஒருபங்கு கஷ்டம். வயது மீறியகாமம்  வயது வித்தியாசம் இல்லாமல். 5 மிடஅதிபதியும் புத்திரக்காரகன் குருவும் விருச்சிகராசியில் இருப்பது நல்லதல்ல. விருச்சிகத்தில்குரு துலாத்தில் சனி இருந்தால் திருமணம் தாமதம்.வெளிநாட்டு ராசி.காதல்ராசி. கோவிலுக்கு அருகில் வீடு இருக்கும். இயற்கை  சீற்றத்தை சொல்லும் ராசி. விருட்சிக தனித்த சனி- ஜாதகரின் மரணம் விமர்சிக்கப்படும்
கலைகளையும், இசையையும் ரசிப்பவர்கள். எந்த திட்டம் என்றாலும் ரகசியமாக தன்னகத்தை வைத்துக்கொள்வார்கள். எதிரிகளை எளிதில் வெல்வார்கள். தன்னம்பிக்கையானவர்கள். மிகவும், தாராள மனப்பான்மையும், மகிழ்ச்சியும் கொண்டவர்கள். தனக்குப் போகத்தான் தான தர்மம் செய்வார்கள்.
சத்தான சுவையான உணவுகளையே உண்பார். உணவுக்காக அதிக கவனம் செலுத்துவார். ஆரோக்கியமான உணவுகளையே தேடி சுவைப்பார்கள். உணவுக்கு கவனம் செலுத்துவது போல உடை விசயத்திலும் கவனம் செலுத்துவார். சுக்கிரன் 12ஆம் இடத்திற்கு அதிபதி என்பதால் சுகவாசி. சிகப்பு, மஞ்சள் நிறம் அதிர்ஷ்ட நிறம். கறுப்பு, நீலம் ஆகாத நிறம்.
விருச்சிகத்தை செவ்வாய் ஆள்கிறார். மேஷத்தில் ராஜதந்திரியாக இருக்கும் செவ்வாய், விருச்சிகத்தில் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கிறார். அதனால் ஊழல், அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மதிப்பவர்களை மதிக்கும் நீங்கள், மிதிப்பவர்களை மிதிக்கத் தவற மாட்டார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் உருவம் தேள் ஆகும். தேள்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும்.மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை. இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக வெளிப்படையாக நடந்துகொள்ளமாட்டார்கள். இவர்களை புரிந்துகொள்வது சிரமமாகவே  இருக்கும். இரண்டு தேள்கள் ஒரே இடத்தில் வசிக்காது. அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்து போகும். இதனால் விருச்சிக ராசிக்காரர்களிடம் போட்டி,பொறாமை போன்ற குணங்கள் காணப்படும். பெண் தேளானது குஞ்சி பொறித்தால் தாய்த்தேள் இறந்துவிடும்,இதனால் விருச்சிக ராசியினர் சிலருக்காக  எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் உருவம் தேள் ஆகும். தேள் பெரும்பாலும் செங்கல் சூளை,மண் வீடு,குயவன் வீடு,ஓட்டு வீடு,மரக்கடை ஆகிய இடங்களில் வசிக்கும்.எனவே விருச்சிக ராசி விச ஜந்துக்கள் நிறைந்த இடங்களைக்குறிக்கும். மேற்குறிப்பிட்ட இடங்கள் விருச்சிக ராசியின் வசிப்பிடங்களாகும். (கிராமம்)

விருச்சிக ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
விசாகம் 4
அனுசம் 1,2,3,4
கேட்டை 1,2,3,4

விருச்சிக ராசியில் ஆட்சி பெறும் கிரகம் செவ்வாய்
 நீசமடையும் கிரகம் சந்திரன்
 உச்சமடையும் கிரகம் கேது

விருச்சிக ராசியில் ராகு நீசம் : இதில் கடகம் விருச்சிகம் மகரம் மீனம் குளியல் சோப்பு மாற்றம் செய்வார்கள்
விருச்சகத்தில்  சந்திரன்+சனி+செவ்வாய்+சுக்கிரன்+ராகு  சைக்கோ கில்லர்
செவ்வாய்
சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகாமையில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம் செவ்வாயாகும். இந்த கிரகம் பூமியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கிரகமாக சூரியனை சுற்றி வருவதாக கூறப்படுகிறது. பூமி என்னும் நாம் வசிக்கும் மண் கோள் இரண்டாக உடைந்து , அதிலிருந்து தோன்றியதுதான் செவ்வாய் என்கிறார்கள். பொதுவாக மண் உருண்டை உடைந்தால் அது சுக்கு நூறாகவும் போகலாம், அல்லது சரி  சமமாக இரண்டாகவும் உடையலாம். இங்கே பூமி உடைந்து சுக்கு நூறாக சிதறிப்போகாமல், இரண்டாக உடைந்து ஒரு பகுதி பூமியாகவும் , இன்னொரு உடைந்த பகுதி செவ்வாயாகவும் தனித்தனி சுற்றுப்பாதைகளில் சூரியனை சுற்றி வருகின்றன.  ஒரு மண் உருண்டை இரண்டாக உடைந்தால் , அந்த அரை உருண்டைகள் கடினமான பாறைகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்த உடை பட்ட அரை உருண்டைகளின் விழிம்புகள் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். எனவே இந்த செவ்வாய் கிரகம் கடினமான , கூர்மையான பாறைகளை கொண்டதாகும். பூமியிலிருந்து பார்க்கும்போது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் பூமியில் ஜீவ ராசிகள் வசிப்பதுபோல் செவ்வாயிலும் ஜீவ ராசிகள் வசிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
பூமியிலிருந்து பிரிந்த கிரகம் என்பதால் செவ்வாய்க்கு பூமகன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பூமி, நிலம் போன்ற காரகம் செவ்வாய்க்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.
பூமியில் வசிக்கும் நாம் பூமியை பூமித்தாய் என்கிறோம். அதாவது நாம் பூமியிலிருந்து தோன்றுவதால் பூ புத்திரர்கள் எனப்படுகிறோம். செவ்வாயும் பூமியிலிருந்து தோன்றியதுதான், ஆகவே செவ்வாய் நமக்கு சகோதர உறவு, மற்றும் நம் ரத்த சொந்தமாகும். இதன் அடிப்படையில் செவ்வாயை சகோதரக்காரகன் என்கிறார்கள். ரத்த சம்பந்தமான உறவுகளை குறிப்பதும் செவ்வாயாகும்.
ஆதி காலத்தில் மனிதன் கூரிய கற்களையே ஆயுதமாக பயன்படுத்தினான். கூர்மையான கடினமான பாறைகளை கொண்டது செவ்வாய் என்பதால் செவ்வாயை ஆயுதக்காரகன் என்கிறார்கள். ஆகவே அனைத்து விதமான ஆயுதங்களைக்குறிப்பது செவ்வாயாகும். ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவர்களாகும். பூமியில் உள்ள கூர்மையான பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியதாகும். இதன் அடிப்படையில் கூர்மையான பற்களையும் , கொம்புகளையும் கொண்ட மிருகங்களும் , கூரிய முட்களைக்கொண்ட தாவரங்களும் செவ்வாய்க்கு உரியவையாகும்.
ஆதி காலத்தில் மனிதன் கற்களிலிருந்துதான் நெருப்பை உருவாகினான். ஆகவே கற்களைக்குறிக்கும் செவ்வாயே நெருப்பையும் குறிப்பான். மனிதன் பயன்படுத்தும் கடினமான பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியதாகும். உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் பொன்ற கல் பொருட்கள் செவ்வாய்க்கு உரியனவாகும்.
மனித உடம்பில் கடினமானதும் கூர்மையானதுமான உறுப்பு பற்களாகும். எனவே பஏற்களைக்குறிப்பவன் செவ்வாயாகும். உடல் எழும்புக்கு வலு சேர்ப்பவை எழும்பு மஜ்ஜையாகும். எனவே எலும்பு மஜ்ஜையை குறிப்பது செவ்வாயாகும். உடலில் செவ்வாயைப்போல் வலுவானதாகவும் சிவப்பு நிறமாகவும் காணப்படுவது தசைகளாகும். எனவே தசைகளுக்கு அதிபதி செவ்வாயாகும்.
உடலில் கூர்மையாகாவும் , விரைப்பாகவும் மாறி பெண்ணின் கன்னித்திரையை ஒரு ஆயுதம் போல் கிழித்து செல்லும் உறுப்பு ஆண் உறுப்பாகும். எனவே ஆண் குறியை குறிப்பது செவ்வாயாகும். ஆண் குறியில் பாயும் அதிக அளவு ரத்தமே அது விரைப்பு அடைவதற்கு காரணமாகும். ஆகவே ரத்தக்காரகனான செவ்வாயே வீர்யக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறான். உடலில் பாய்ந்தோடும் ரத்தம் சிவப்பு நிறத்தில் உள்ளதால் , அது செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பூமியில் சிவப்பு நிறத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியவையாகும். சிவப்பு நிறத்தில் உள்ள செம்பு உலோகம், பவள ரத்தினம், செம்பருத்தி மலர் போன்றவை செவ்வாய்க்கு உரியவையாகும்.
பூமியிலிருந்து பிரிந்து வந்த கிரகமான செவ்வாயை  பூமித்தாயின் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தவனாகப்பாவிக்கிறார்கள். அதாவது தாயின் வயிற்றில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டு வந்தவன் என்பதால் உடலில் ஏற்படும் ரத்தக்காயம், புண் மற்றும் உடம்பில் உள்ள தழும்புகளுக்கு காரணமானவன் செவ்வாயாகும். பூமித்தாயின் வயிற்றையே கிழித்துக்கொண்டு வந்த கிரகம் என்பதால், செவ்வாயை கொடூரன், இரக்கமற்றவன் என்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கும் குரு கிரகத்திற்கும் நடுவே நிறைய விண் கற்கள் சுற்றி வருகின்றன. இந்த வின் கற்களை போர்வீரர்களாகவும், செவ்வாயை போர்ப்படை தளபதியாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தெய்வங்களில் முருகன் சேனாதிபதியாக உருவகப்படுத்தபட்டுள்ளான். ஆகவே செவ்வாய்க்கு அதி தேவதை முருகனாகும். 
மண்ணிலிருந்து பிரிந்து மண்ணை அள்ளிச்சென்ற கிரகம் என்பதால் மண்ணாசையை தரும் கிரகம் செவ்வாயாகும். உலகத்தில் நடக்கும் அத்தனை போர்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கு

ம், பங்காளி சண்டைகளுக்கும் மண்ணாசையே காரணமாகும். ஆகவே சண்டை சச்சரவுகளைக்குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் யுத்த களத்தில்தான் ஆயுதங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. யுத்த களத்தில் ரத்தம் சிந்தப்படுகிறது.
ஆயுதக்காரகன் செவ்வாய் என்பதால் ஆயுதங்கள் பயன்படுத்தும் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் வந்துவிடுவார்கள். நாவிதர்,கசாப்புக்கடைக்காரர், கொலைகாரர், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், காவலர், ராணுவத்தினர் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவர்களாகும்.
நெருப்புக்காரகன் செவ்வாய் என்பதால் நெருப்பை பயன்படுத்துபவர்கள் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர். கொல்லர், சமையல்காரர் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர்.
மண் கிரகம் செவ்வாய் என்பதால் மண்ணில் வேலை செய்யும் விவசாயி, செங்கல் சூளைக்காரன், மண் பாண்டக்காரன்,கல் உடைப்போன் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர். மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்குரியதாகும். செங்கல்,மண் பானை,மண்ஓடு ,மண் அடுப்பு, மண் பொம்மைகள் போன்றவை செவ்வாய்க்குரியவையாகும்.

செவ்வாய் க்கு ஆட்சி வீடு
மேசம் விருச்சிகம்

உச்ச வீடு மகரம்
 நீச வீடு  கடகம்
மன  அழுத்தம் உள்ளவர் கள்.இவர்கள் தொழில் செய்யும் இடம் வீட்டின் அருகே சாக்கடை டாஸ்மார்க்  இவைகள் இருக்கும். மரங்கள்:எலந்தைச்செடி கல்லிச்செடி பருத்தி வெள்ளிச்செடி  ஆதாரச்செடி
எலுமிச்சைசெடி.
கால புருஷனுக்கு எட்டாவது ராசி பல கால் ராசி ஊமை ராசி பிரளய ராசி காதல் ராசி அனுஷ நட்சத்திரத்தில் இருந்தால் மருத்துவ குணம் உண்டு பொருந்தாக் காதல் உண்டு நட்புக்காக இயங்கும் லக்னாதிபதி ஆறாம் அதிபதி எனவே உத்தியோக மிகவும் சிறப்பு கடன் வழக்கு நோய் உண்டு வாக்கு பலிதம் உண்டு பொருளாதாரம் நன்றாக இருக்கும் வெற்றி பெறுவார்கள் தீர்க்க முடியாத வழக்கை தீர்த்து வைப்பார்கள் கூட்டுத்தொழில் ஆகாது மனைவியால் வரையும்
மனைவியால் விரயம்  காலபுருஷராசிக்கு 8 வது ராசி விருச்சிகம் தேள் ஸ்திர ராசி பல கால் ராசி பல  செயல்களைசெய்யும்  தன்மை உள்ளவர்கள் தனித்து இயங்குவார்கள் தன் இருப்பிடத்தை  காட்டிக்கொள்ள  மாட்டார்கள். சண்டையிடும் குணம் இருக்கும்.திருப்பி தாக்கும் தன்மை  இருக்கும்.கோபம் ஆக்ரோசம் அதிகமாக இருக்கும்.தியாககுணம் இருக்கும்.பிறருக்கு உதவும் தன்மைஇருக்கும் இவர்களுக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கும்.விரக்தி மனபான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆபத்து வரும்பொழுது அவர்களே தன்னை அழித்துக்கொள்வார்கள்                                            விருச்சிக ராசி
1 ஸ்திர ராசி
2 பெண் ராசி
3 தகப்பனுக்கு கஷ்டம் தரும் ராசி
4 கிணறு
5 மனதில் இருப்பதை வெளிப்படுத்தாதவர்
6.  வயது மீறிய காதல்
7.  குடும்ப பற்றற்றவர்கள்
8.  மெளனம்
9 கழிவறைகள்
10.  பொந்துகள்
11.  ஆபரேஷன் தியேட்டர்
12. இரசாயன பரிசோதனை கூடம்
13.  சாக்கடை
14.  ஜீவன்களை சித்திரவதை செய்தல்
15.  அதிக செலவாளி
16. கடனால் கவலை
17. இன்சூரன்ஸ்
18. புதையல்
19.  எதிர்பாராத தனம்
20. குள்ளமானவர்கள்
21.  வலது புறத்தில் தழும்புகள்
22.  இந்த ராசி ஊர்வன மற்றும் நகர்வனவற்றை குறிப்பவை
23.  சீதனம்
24.  வட தென் முக ராசி
25.  நீர் ராசி
26.  சீற்றமுள்ள ராசி
27.  அதிக துணிச்சல் உடையவர்கள்
28.  நிலையற்ற மனம் உடையவர்கள்
29. சுருட்டை முடி உடையவர்கள்
30. பலமான தேகம்
31.  எப்போதும் நிறைவின்மை
32. உக்கிர உணர்ச்சி
33. நேர்மை
34. மந்த புத்தி
35.  பழி தீர்த்தல்
36. சுதந்திரம்
  37. கர்ப்பபை
38.  முகப்பரு
39. மூலநோய்
40.  இரக்கம் குறைவானவர்கள்
41.  அதிகமாய் சேமிக்கும் எண்ணம் இல்லாதவர்கள்
42. உறுதியின்மை
43.  வாழ்க்கை துணையிடம் பாராட்டு எதிர்ப்பார்த்தல்
44.  சண்டை பிடிப்பதில் விருப்பம்
சந்தர்ப்பவாதம்
46.  போர்வீரர்கள்
47.  கசாப்பு காரர்கள்
48. திருடர்கள்
49.  சலவை செய்யும் இடங்கள்
50. குப்பை கொட்டும் இடங்கள்
51. மூழ்கி போகுதல்
52. விருச்சிகத்தில் சுக் இருந்தால் விலங்குகளால் விஷ கடி
53.  ஜாமீன்
54.  காவல்துறை இராணுவத்தில் வேலை
  55. தீயணைப்பு துறையில் வேலை
காலத்துக்கு 7ம்வீடுவிருச்சிகத்துக்குவிரயமாகும். இதுகாற்றுராசி சரராசி. ஆதலால் பெண்கள் தொழில் கூட்டாளி எதிரிகள் போன்றவர்களால் தொல்லை இருக்கும் விருச்சிக லக்னத்தார் ரகசிய துப்பறியும் வேலை தொல்லியல் துறையில் ஈடுபாடு இருக்கும் சுக்கிரன் வீடாததால் காதல் விஷயத்தில் ரகசிய நடவடிக்கை மற்றும் ரகசிய திருமணம் செய்வது பதுக்கல் போன்ற தொழிலில் ஈடுபாடு கொண்டவர் ஆக இருப்பார்கள்.   இங்கு செவ்வாய்🌟இருப்பதால் இவர்கள் பிணம் பரிசோதனை பிரிவுகள் சிறைச்சாலைகள் அரசு சுகாதாரதுறை சொத்து பறிமுதல் செய்யும் துறை சுங்கம் எக்ஸைஸ் இலாகா போன்ற வற்றில் பணிபுரியும் அமைப்பு இருக்கும்.  ராகுவின் சுவாதி ஆனால் அணுசக்தி வெடிமருந்து மயக்கம் மருந்து சிறைச்சாலைகள் விமானங்கள் கடத்தல் போன்ற வற்றில் பணிபுரியும் அமைப்பு இருக்கும்.  2 5 குரு🌟 விசாகம் என்றால் இரகசிய மான வருமானம் வழிகள் உள்ளதாக இருப்பார்கள். விலையுயர்ந்த பொருட்களில் மூலதனம் செய்வார்கள்
ஒற்றுமையாக இருப்பார்கள் அதே சமயம் ஒத்து வரவில்லை என்றால்
ஒதுக்கிவிடுவார்கள் அதிகமாக தன்னை வெளிபடுத்திகொள்ள மாட்டார்கள். சிலசமயங்களில் பாவசெயல்செய்யக் கூடியவர்கள் விருச்சிக பெண்கள் தன் கஷ்டத்தை வெளியில் மாட்டார்கள்.\ கேட்டையும் கிணத்தடியும் ஒருதலை சுற்றை சொல்லும்  என்ற பழமொழி உண்டு கேட்டையில் ஒருகிரகம் இருந்தால் அந்தகிரக காரகத்துவத்தை பற்றி மனசுக்குள் ஒருரகசியம் இருக்கும். கணவனை விட மனைவிக்கு வயது அதிகம்.வயது மூத்த காமம். 5 மிடஅதிபதி விருச்சிகத் தில் இருந்தால் முதல் குழந்தை கருக்கலைப்பு இருக்கும். 5 மிடஅதிபதியும் குருவும் விருச்சிகத்தில் இருந்தால் ஒருகொலை பழி வரும்.அல்லது குழந்தை இறந்ததை சொல்லும். 8 ல் ஒருபங்கு கஷ்டத்தை மட்டும் தான்வெளியில் சொல்வார்கள்.
 விசபூச்சிஉள்ளவீடு. இந்தராசியில்உள்ள கிரகம் புத்திரதோசத்தை சொல்வதில் வல்லமைமிக்கது .ரகசியத்துறை அகல்வாராய்ச்சி கம்னிக்கேசன் செய்வினை பில்லி சூன்யம் ஏவல்.இந்த ராசி சொல்லும். பிரளய ராசி. கோமா ஸ்டேஜ் மார்ச்சுரி வீடு இந்த வீடுசொல்லும். வவ்வால் வீடு ஆட்டுதொட்டி மாட்டுத்தொட்டி ராசியைக்குறிக்கும். இவங்க வீட்டிற்கு போகும்வழி  குப்பைமேடு சாக்கடை சேறு இதையெல்லாம் தாண்டித்தான் போக வேண்டும். கேட்டையில் லக்னமோ ராசியோ அமைந்தால் திடீர் வளர்ச்சி உண்டு. இவர்கள் வீட்டில்  சிவன் படம்வைக்கலாம்  மயில் தோகை வைக்கலாம் கேட்டை:டாக்மெண்ட் அதிகமாகஇருக்கும். பவராபட்டா கொடுப்பது பவர் கொடுப்பது. அடுத்தவர்கள் கொடுப்பார்கள் பத்திரம் பத்திரமாக இருக்கவேண்டும் என்று.அடுத்தவர்களுடைய சொத்து இருக்கும். கிணறு உள்ளவீடு கிணறு பூட்டிஇருக்கும் கேட்டையில் ஒரு கிரகம் இருந்தால் பூட்டியகிணறுஅல்லது மூடியகிணற்றின்மீது வீடுகட்டுவார்கள். ஆசிரியர் உள்ளவீடு. ஒரு ஊனம் இருக்கும். எதிர்பாராத தனலாபம்  இருக்கும். வழிபாடு:விஷ்ணு வழிபாடு. கன்னிமார் கோவில். கேட்டையில் சந்திரன் இருந்தால் தாய் ஆதிக்கம் உள்ளவீடு. மனநிலை பாதித்தவர்கள் இருப்பார்கள். வீட்டில் தற்கொலை இருக்கும்.இவர்கள் பணத்தை சேர்த்தினால் அதை வைத்துக் கொள்ளமாட்டார்கள் அதை பத்திரம் சொத்து என்று மாற்றிவிடுவார் கள். ஆயில்யம் கேட்டை  சுவாதி இந்தமூன்றும் தாய் தந்தையை பிரிந்து வாழும்  நட்சத்திரங்கள். இவர்கள் பிறந்தவீட்டில் அல்லது பக்கத்து வீட்டில் கிணறுஇருக்கும் அனுசம்: சொந்ததொழில் செய்யும் எண்ணம் அதிகமாகஇருக்கும். கள்ளகாதல்இருக்கும். சினிமாவைவிரும்பு வார்கள்.உறவுகளை  தெரிந்துகொள்ள அனுசத்தை மிஞ்சின ஆளே கிடையாது. உறவுக்காரர்களை எப்படி என்று தெரிந்து கொள்வார்கள். நட்புக்காக அதிகமாக ஏங்குவார்கள். பெண்களை வேலைக்கு வைக்ககூடாது. இவர்களை பெண்கள் வீழ்த்தி விடுவார்கள். கவனமாகஇருக்க வேண்டும். தந்தைவழிசொத்தை அனுபவிக்கமுடியாது. மருத்துவகுணம் உள்ளது.வீட்டில் மருத்துவர் இருக்க வாய்ப்புள்ளது. இருதாரம் உடையது. பெட்ரோல் பங்க் எண்ணெய் வியாபாரம் இருக்கும். இவர்களுக்கு இட்லி கடையில் தான்காதல் வரும்.தொழில் நன்றாக இருந்தால் பெரிய பெரிய மனிதர்கள். வழிபாடு:பாம்புபுற்று உள்ளகோவில். பழமரத்து கோவில். சனிப்பிரதோசம்.நன்று.
அனுசத்தில் சந்திரன் நின்றால் தொழில்பாவகத்தின் விரையாதிபதி தொழில்பாவத்தின்  ஆறாம் அதிபதி ராசியில் உள்ளதால் முதலாளி இவர்களிடம்  அதிக வேலை வாங்குவார்கள் தடை தாண்டிய பயணம்
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் வீடு சந்தில் சென்று தான் அடைய வேண்டும்  விருச்சிகராசி: 1 க்குடையவனே 6 க்குடையவன் உத்தியோகம் நன்று.கடன் நோய் வம்பு வழக்கு இருக்கும். ஒரு நாளாவது சிறு விபத்து சந்திக்காமஇருக்க மாட்டாங்க. 2 க்குடையவனே5க்குடையவன் குரு பொருளாதாரம் நன்று. ஜோதிடம்.ஆசிரியர் வட்டிக்கடை வாக்கு பலிதம் வரும். பணம் தேடி வர வேண்டும் என்று நினைப்பார்கள். 3 க்குடையவரே 4 க்குடையவர் சனி சகோதரர் பிறந்தவர்களால்  இருந்தால் வறுமையாக இருக்கும்.எந்தமுயற்ச்சி எடுத்தாலும் மெதுவாகத் தான் எடுப்பார்காள். விருச்சிகாத்துக்கு 3 ம்பாவம் கெடக்கூடாது வண்டி வீடு வாகனம் மெதுவாகத்தான் கிடைக்கும் ஆனால் நிரந்தரமாக இருக்கும்.
பொதுவாகவே விருச்சிகத்தில் என்ன கிரஹம் உள்ளதோ அல்லது எதன் பார்வை உள்ளதோ அதை சார்ந்தே ஒருவரின் தொழில் அமையும் வாய்ப்பு உண்டு. 7 க்குடையவரே12க்கு டையவர் சுக்ரன் மனைவியால்பணம் விரையம் ஆகும். கூட்டுத்தொழில் ஆகாது வெளிநாடு  வெளி மாநிலம்வருமானம் உண்டு. போலி விசா  போலி பாஸ்போர்ட் இருக்கும் பயணங்களில் இதை துழைத்து விடுவார்கள் 8 க்குடையவரே11க்கு டையவர் புதன் எந்த வழக்கு போட்டாலும் ஜெயிப்பாங்க  L.I.C.இன்ஸ்சூரன்ஸ் ஆதாயம் கிடைக்கும். 12 ம் அதிபதி 2 ல் இருந்தால் கொஞ்சம் விரையம் செய்தால் நல்ல லாபம்கிடைக்கும். விருச்சிக ராசிக்கு சாக்கடை டாஸ்மார்க் சகதி இவைகள் இருக்கும் இடத்தில் தொழில் செய்வது சிறப்பாக இருக்கும். சூரியன் சனி ராகு இணைவு  தந்தை முகம் காணாத குழந்தை.இத்துடன் ஒரு சுப கிரகம் இருந்தால் சிறு வயதில் 2 வயது முடிவதற்குள் தந்தையை இழப்பார். முதல் மனைவி பிரிவு அல்லது இறப்பு. மனைவி விரையம் மனைவியால் விரையம்  விருச்சிக லக்னத்தில் பிறந்தவருக்கு லக்னாதிபதியே 6க்குடையவர் ஆவதால் ஜாதகரே உடம்பை கெடுத்து கொள்வார் விருச்சிக ராசிக்காரர் எதிலும் திருப்தி இல்லாமல் இருப்பார்கள் மன அமைதி இருக்காது மனம் அலைபாயும்  எவ்வளவு கொடுத்தாலும்  இருந்தாலும் போதாது  என்ற மனம் உள்ளவர்கள்.மனோக்காரகன் சந்திரன் நீசமாகும் வீடு அதனால் அதைசார்ந்த பிரச்சனைகள் இருக்கும்
விருச்சிகம் : கால புருஷனுக்கு 8 வது ராசி, இதில் சந்திரன் நீசம் பெறுவதால் இவர்களை புரிந்து கொள்ள முடியாது. எளிதில் உணர்ச்சி பட கூடியவர். எளிதில் திருப்தி அடையமாட்டார். பிடிவாத குணம் இருக்கும். மற்றவரை பிடித்து விட்டால் தானாக முன்வந்து உதவுவார். எதிர் மறையான குணம் இருக்கும்.
விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய பரணி, கார்த்திகை, அஸ்தம், உத்திரம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
2. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும் பத்திரங்கள் வாங்கவும், அவற்றை தமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், பூரம், பூராடம், உத்திராடம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
3. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி, செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய, வீட்டுக்கு மின் இணைப்பு குறித்துவிண்ணப்பம்செய்ய திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
4. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, சுவாதி, சதயம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
5. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள், மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, அனுசம், உத்திரட்டாதி, கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள் உண்டாகும்.
6. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல் வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, அசுவனி,பரணி ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
7. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க, திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண் மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த உத்திரட்டாதி, ரேவதி, அஸ்தம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
8. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் திருவாதிரை, புனர்பூசம்.
9. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத்துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும் உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் செய்ய தொடங்கவும், தர்மகாரியங்கள் செய்ய துவங்கவும், பூசம், அனுசம், ஆயில்யம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
10. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும் தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவியிலிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும் தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். அசுவனி, பரணி, பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
11. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை நியமித்து கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று சந்தித்து தனக்கு அதரவு பெறவும்,தான் எடுத்த காரியங்களில் குறைந்த முயற்சியில் வெற்றி பெறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும், தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன் சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள், சபைகள்சங்கங்கள் ஆரம்பிக்க, முன் காரியங்கள் செய்ய தொடங்க மிகவும் உகந்த நட்சத்திரங்கள் - திருவோணம், அவிட்டம், அஸ்தம், சித்திரை ஆகியவை. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில், மேல் கூறிய காரியங்கள் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
12. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டிய நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, புனர்பூசம், விசாகம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும். தனுசு லக்னம் பலன்கள். நெருப்பு ராசி உபயராசி ஆண் ராசி குருவின் வீடு பள்ளி கல்லூரி கோவில் ஆன்மீக மையங்கள் நீதிமன்றம் மரங்கள் செடிகள் நிறைந்த இடம் காலத்துக்கு 9ம்வீடு பிரயாணம் கல்வியில் ஆர்வம் டிரஸ்ட்கள் சட்டம் கடவுள் நம்பிக்கை ஆராய்ச்சி திறன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்.  மூலம் பூராடம் உத்திராடம் கொண்டது. மூலம் கேது. உடலில் அதிக அமிலத்தன்மை. பூராடம் நீர்த்தன்மை நிறைந்த உடல். இருக்கும் உத்ராடம் கால்ஷியம் சத்து மிகுந்த உறுதியான உடல் இருக்கும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...