புதன், 21 நவம்பர், 2018

தனுசு ராசி காரத்துவங்கள்



பலன்கள். நெருப்பு ராசி உபயராசி ஆண் ராசி குருவின் வீடு பள்ளி கல்லூரி கோவில் ஆன்மீக மையங்கள் நீதிமன்றம் மரங்கள் செடிகள் நிறைந்த இடம் காலத்துக்கு 9  ம்வீடு பிரயாணம் கல்வியில் ஆர்வம் டிரஸ்ட்கள் சட்டம் கடவுள் நம்பிக்கை ஆராய்ச்சி திறன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்.  மூலம் பூராடம் உத்திராடம்  நட்சத்திரம் கொண்டது. மூலம் கேது. உடலில் அதிக அமிலத்தன்மை. பூராடம் நீர்த்தன்மை நிறைந்த உடல். இருக்கும் உத்ராடம் கால்ஷியம் சத்து மிகுந்த உறுதியான உடல் இருக்கும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு.
தனுசு ராசி மற்றும் லக்னத்திற்கு சந்திரன் அஸ்டமாதிபதியாக வருவதால் தேய்பிறை நாட்கள் இவர்களுக்கு சிறப்பு.. மேலும் 6,8,12 இல் சந்திரன் மறைவதும் கூட ஒரு வகையில் நல்லதே..
தனுசு  உபதேச ராசி  கல்லூரிகள், கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள்  நீதி துறை, நிதி துறை  பிடிவாத ராசி  நம்பிக்கையானவர்கள்  திடீர் அதிர்ஷ்டம் உண்டு  விசுவாசிகள் உடனிருப்பார்கள் அதனாலும் வெற்றி பெறுவார்கள்  மணவாழ்க்கை பிரச்சனை தரும்
ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு, புத்திர தோஷ வீடு, தீ விபத்து உண்டு
தனுசு ராசிக்குள் கோட்சார சனி வரும் போது கல்வி துறை மற்றும் கோவில்கள் தொடர்பான விஷயங்களில் சர்ச்சை ஏற்பட்டு, நீதி கிடைக்கும்.. நேர்மையாக நடப்பவர்களுக்கு நியாயம் கேட்டு போராடி வெற்றி கிடைக்கும். போலியான மத குருமார்கள் , சட்டத்தை ஏமாற்றி பிழைப்பவர்கள் சிக்குவார்கள்.. நிதி , நீதி தொடர்பாக புதிய சட்டம் வெளிவரும்.. தனுசுராசிக்குள் சனி நுழைந்தால் காட்டுப்பகுதியில் தீபிடிக்கும் கோவில்களுக்கும் இது பொருந்தும்..
தனுசு ராசியின் தன்மைகள் :
உபய ராசி
ராசியின் அதிபதி : குரு
ராசியின் சின்னம் : கீழே குதிரை மேல் வீல் பிடித்த மனிதன்
நெருப்பு ராசி
ஆண் ராசி
கிழக்கு ராசி
தர்ம ராசி
ராசியின் இடம் : போர்களம்
ராசியின் காலம் : மாலை
ராசியின் குணம் : முன்கோபம்
ராசியின் செயல் : முடிவு
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் : மூலம் 1,2,3,4 பூராடம் 1,2,3,4 உத்திராடம் 1
ராசி குறிப்பிடும் உடல் உறுப்புகள் : தொடை
இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமும் நீசமும் பகையும் இல்லை
 தனுசுராசி குழந்தைகளால் செலவுகள் உண்டு
தனுசு ராசியின் காரத்துவங்கள் :

காட்டுப் பிரதேசம், ஆயுத உற்பத்திச்சாலை, வில் வித்தை, தொடை, வளமான பகுதி, இராணுவத் தளம், பூஜை செய்யும் அறை, கஜானா, மரவியாபாரம், ஆன்மீகத் துறை, சட்டம் மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, போர்ப் பயிற்சி, தர்மஸ்தாபனம் நடத்துதல்.
தனுசுக்குத் திரிகோண ராசிகளாக தீ ராசிகள் வருவதால் தீப் பொறி வசனங்கள்  உண்டு
தர்மம் லக்னம்
பித்த லக்னம்
கிழக்கு லக்னம்
க்ஷத்ரிய லக்னம்
ஆண் லக்னம்
ஒற்றை லக்னம்

 
தனுசு ராசியின் தன்மைகள்
1 நெருப்பு ராசி
2 உபய ராசி
3. விரைவில் புரிந்து கொல்லாமை
4. மாடி வீடு
5 கோபமுடையது
6. மரம், செடி, கொடி நிறைந்த இடம்
7 ஆயுத கிடங்கு
8 பள்ளி கல்லூரிகள்
9. ஆலயங்கள்
10. நிதிமன்றங்கள்
11. சந்து
12. இரவுப் பொழுது
13. வறண்ட மலட்டு ராசி
14. மார்கழி மாதம்
15. சிவப்பு பொன் நிறம்
16. ஊருக்கு ஒதுக்குபுறம்
17. போர்க்களம்
தோற்றங்கள்
1 நல்ல கட்டுமஸ்தான தேகம்
2 கண்புருவங்கள் உயர்ந்து அடர்ந்திருப்பது
3 நீண்ட முக்கு
4. அகன்ற கண்கள்
5 வசீகரத் தோற்றம்
6 கருணையுள்ள பார்வை
7 சிவந்த தோற்றம்
8 அழகு
தனுசு ராசியின் குணங்கள்
1 திடம்
2 தைரியம்
3. முற்போக்கு
4. முயற்சி
5. பேராசை
6. உணவில் விருப்பம்
7 நேர்மையான வாதம்
8. எப்போதும் அச்சப்படாமை
9. துணிவு
10. சுய நம்பிக்கை
11. வல்லமை
12. ஆவேசம்
13. மன வலிமை
14. ஊக்கம்
15. விசுவாசம்
16. நேர்மை
17. உண்மை
18 தெய்வ பயம்                                                                                                                                              நோய்கள்                                                                                                                                                                                1. தோல் நோய்கள்
2 விரைவில் குணமடைதல்
3. வாத வலி
4. இடுப்பு நோய்
5 இடுப்பில் முறிவு
6 கீழ் வாதம்
7. ஈசனே பிலியா
8 சுவாசப்பைக் கோளாறு
9 . எலும்பு முறிவு
10. நீரிழிவு
தனுசு ராசியின் இடங்கள்
1 ராணுவ தளம்
2 போர்க்களம்
3 ஆயுத கிடங்கு
4. காவல் நிலையம்
5 அரசு ஆவணங்கனை வைக்கு மிடம்
6 நீதிமன்றம்
7கோயில்கள் நிறைந்த இடம்
8 வேத பாடச் சாலை
9. குதிரை லாயம்
10. மேட்டு நிலம்
11. கருவூலம்
12 காட்டு பகுதி
13. மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இடங்கன்
14. வளமான பகுதி
15 பூஜை செய்யும் அறை
16. ஊரை அடுத்த கொல்லை
தனுசுவின் தொழில்கள்
1 காட்டி லாக்கா துறை
2 மர வியாபரம்
3. ஆன்மீகத் துறை
4. வங்கித் தொழில்
5 சட்டம் மற்றும் நீதித்துறை
6. அறநிலைய துறை
7 நீதித்துறை
8 கல்வித்துறை
9. சமுக சேவை
10. சமுக சேவை
11. போர் பயிற்சி
12. ஆயுத தயாரித்தல்
13. தர்மஸ்தாபனங்கள் நடத்துதல்
தனுசுவின் காரகத்துவங்கள்
1 உருவம் = வில்
2 ஆண்
3 அமைதியான குணம்
4 . நெருப்பு
5 இளம் மஞ்சள்
6. தொடை
7. இரட்டை வேஷம்
8 குதிரை
9 கிழங்கு
10. காப்பீடு
11. அணு ஆயுதங்கள்
தனுசு ராசியின் நிலப்பரப்பு விளையும் பொருட்கள்
1 மேட்டு நிலம்
2 மிருகங்கள் கட்டி வைக்கும் இடம்
3 குன்று
4. மலை தோட்டப் பயிர்கள்
5. வறண்ட பகுதி
6 . ரப்பர்
7 வெற்றிலை
8. அரச மரம்
9 எலுமிச்சை
10. தென்னை
11. மஞ்சள்
12. கரும்பு
13. கொண்டக்கடலை
14. சீரகம்
15. தேன்
16. காப்பி
17. தேயிலை
தமிழ்நாட்டில் உள்ள தனுசு ராசியின் பகுதிகள்
1 கோவை மாவட்டத்தின் வடகிழக்கு பகுதி
2 ஈரோடு மாவட்டத்தின் மத்திய பகுதி
உலகத்தில் உள்ள தனுசு ராசியின் பகுதிகள்
1 அரபு நாடுகள்
2. மத்திய ஐரோப்பா
3 ஆஸ்திரேலியா
4 ஸ்பெயின்
5 ஹங்கேரி
தனுசு ராசி/லக்கினம்  பாட்டன் சொத்து குடுப்பினை தடை இருக்கும்
குழந்தையிடம் இவர்களின் எந்த எதிர் பார்ப்பும் கிடைக்காது
குழந்தையிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் குழந்தையிடம் நட்பு உறவு நன்றாக இருக்கும்
ஆஞ்சநேயர் முலம்  பீஸ்மர் பூராடம்   ஊருக்கு உழைக்க பிறந்தவர்கள் இவர்களுக்கு என்று வாழ்க்கை இல்லை
இவர்கள் தன்னலம் இல்லாமல் வாழ்ந்தால் மட்டும் வாழ்க்கை நன்றாக இருக்கும்
அடுத்தவர்களுக்கு உதவிசெய்து கொன்டே இருக்கனும்
சொந்தங்கள் மூலம் எந்த எதிர் பார்ப்பும் கூடாது. எதிர்பார்ப்பும் கிடைக்காது                                                                                                                                                              தனுசு
தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும்,பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும். இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும்,பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால் ,இந்தராசிக்காரர்கள் தங்களுடைய மிருக குணங்களிலிருந்து விடுபட்டு மனித தன்மையை வளர்த்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முடிந்தவரை தங்கள் குறைகளை திருத்திக்கொல்வதற்கு தயாராகவே இருப்பார்கள். இந்த ராசி உருவம் வில்லேந்தி குறி பார்ப்பது போல் உள்ளது ,இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனேயே நடத்திசெல்வார்கள் எனக்கூறப்படுகிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில் வீரன் சரியாக குறிபார்க்க முடியும், இதன் காரணத்தால் தனுசுராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும். தர்மர்த்தை நிலை நாட்ட ஸ்ரீராமன் வில்லேந்தினான் என்பர், இதனால் வில் தர்மத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காக போராடுவார்கள்.

தனுசு
வில்லானது ஒரு வகையான ஆயுதமாகும். எனவே ஆயுத உற்பத்தி செய்யுமிடம்,ஆயுத கிடங்கு,போர்க்களம்,ராமர் கோவில்,வேடர் குடியிருப்பு,ஆதிவாசிகள் குடியிருப்பு போன்றவை தனுசு ராசியின் வசிப்பிடங்களாகும்.

தனுசு ராசியில் ஆட்சி பெறும் கிரகம் குரு
தனுசு ராசியில் எந்த கிரகமும் உச்சம் நீசம் அடைவதில்லை
தனுசு ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
மூலம் 1,2,3,4
பூராடம் 1,2,3,4
உத்திராடம் 1
குரு

கிரகங்களில் உருவத்தில் மிகப்பெரியது குருவாகும். இந்த கிரகம் அதிவேகமும் இல்லாமல் மந்த வேகமும் இல்லாமல் மித வேகத்தில் நகர்ந்து செல்லும் கிரகமாகும். குருவின் நிறம் மஞ்சளாகும். குருவிலிருந்து வரும் மஞ்சள் நிறக்கதிர்களே சூரியனின் வெப்பத்தை குறைத்து பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு வழி வகை செய்கிறது. இதன் காரணத்தால் குருவை ஜோதிடத்தில் ஜீவக்காரகன் அல்லது உயிர்க்காரகன் என அழைக்கிறார்கள். முட்டையை உடைத்துப்பார்த்தால் அதன் உட்கரு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறம் குருவினுடையது. இதன் மூலம் உயிர்கள் தோன்றுவதில் குருவிற்கு முக்கிய பங்கினை புரிந்துகொள்ளலாம்.
குருவானது உருவத்தில் பெரிய கிரகம் என்பதால் மனிதர்களில் முழுமையாக வளர்ச்சி பெற்ற மனிதர்களை குறிக்கிறது. அதாவது நடு வயதில் உள்ள மனிதர்களை குறிக்கிறது.
குரு உருவத்தில் பெரியதாக இருப்பதால் மற்ற கிரகங்களின் தாக்கம் குருவின் முன்னால் தோற்றுப்போய்விடுகின்றன. இதனால்தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுகிறார்கள். அதாவது சிறிய காந்த துண்டுகளை பெரிய காந்த துண்டுகள் கவர்ந்து இழுத்துக்கொள்ளும். கிரகங்கள் எல்லாம் பூமியைப்போல் காந்த துண்டுகளே.
உடல் பருமன் என்பது உடலில் அதிகம் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது. பெரிய உருவம் கொண்டது குரு , எனவே கொழுப்புக்கு அதிபதி குருவாகும். மேலும் கொழுப்பு சத்துள்ள நெய், வெண்ணெய் போன்ற பதார்த்தங்கள் குருவிற்கு உரியவையாகும்.
ஒரு மனிதனை உயிரோடு வைத்திருப்பது பிராண சக்தி என்னும் மூச்சுக்காற்றாகும்.உயிர்க்காரகம் பெற்ற குரு ,பிராண சக்தியை குறிக்கிறார். பிராண சக்தி மூக்கின் வழியே சுவாசிப்பதன் மூலம் கிடைக்கிறது. எனவே மூக்கை குறிக்கும் கிரகம் குருவாகும்.
உருவத்தில் பெரிய கிரகம் குரு என்பதால் உடல் உறுப்புகளில் பெரியவை குருவுக்கு உரியனவாகும். உடல் வெளி உறுப்புகளில் மிகவும் பெரியது தொடையாகும். தொடையில்தான் அதிகம் கொழுப்பு தங்கியிருக்கும். உடல் உள்ளுறுப்புகளில் பெரியது கல்லீரலாகும். எனவே தொடை மற்றும் கல்லீரலை குறிப்பது குருவாகும்.
குரு மஞ்சள் நிறமுடையது என்பதால் மஞ்சள் நிற உலோகமான தங்கம், மஞ்சள் நிற ரத்தினமான புஷ்பராகம், மஞ்சள் நிற மலரான முல்லை ஆகியவை குருவிற்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.
உருவத்தில் பெரியதும், நீண்ட சுவாசத்தை  உடையதும், நிதானமான நடையுடையதுமான யானை குருவிற்குரிய விலங்காகும்.
உருவத்தில் பெரியதாகவும், அதிகப்படியாக பிராண சக்தியை வெளியிடும் மரங்களான ஆல மரம், அரச மரம் போன்றவை குருவிற்குரியவையாகும்.
குருவின் நிறமும் மஞ்சள் , தீபம் மற்றும் ஹோமத்தீயின் நிறமும் மஞ்சள். தீபம் இல்லாத இறை வழிபாடு கிடையாது. மஞ்சள் பொடி, மஞ்சள் கனியான எலுமிச்சை, வாழப்பழம் போன்றவை இறை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. எனவே இறை வழிபாட்டைக்குறிக்கும் கிரகம் குருவாகும்.
குருவின்  நிறம் மஞ்சள்  தீ நெருப்பை ஒத்திருக்கிறது. தீபங்களும், தீப்பந்தங்களும்  இருட்டை விலக்கும் வேலையை செய்கின்றன. குரு என்ற சொல்லின் பொருளும் இருட்டை நீக்குவது என்பதுதான். குருவும் உருவ பலத்தால் அனைத்து கிரக தோசங்களையும் நீக்கும் வலிமையுடையது. எனவே குருவை வழிகாட்டி, ஆசிரியர், குரு நாதர், நலம் விரும்பி என அழைக்கிறார்கள்.
மனிதனுக்கு இயற்கையாக பூமியில் அதிக பிராண சக்தியும்,காந்த சக்தியும் வட கிழக்கு திசையிலிருந்து கிடைக்கிறது. இதானால் வாஸ்து சாஸ்திரத்தில் வட கிழக்கு மூலையை குரு மூலை அல்லது ஈசான்ய மூலை என அழைக்கிறார்கள். மூக்கை அடைத்துவிட்டால் மனிதன் சுவாசிக்க முடியாமல் இறந்து விடுவான் , அது போல் வீட்டில் ஈசான்ய மூலையை முழுவதுமாக மூடிவிட்டால் வீட்டில் இறப்புகள் நிகழும், சந்ததிகள் வளராது.
வாசி யோகம் என்னும் பிராணயாம பயிற்சி ஆன்மீகத்தோடு தொடர்புடையது. இது மூக்கை பிடித்து பயிலும் கலை என்பதால் , மூக்குக்கு காரகனான குருவே இந்த கலைக்கும் அதிபதியாகும்.

                குரு கடகராசியில் 5 பாகையில் உச்சமடைகிறான். கடக ராசியில் 5 வது பாகை பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும். கடக ராசியின் அதிபதி சந்திரனாகும். பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனியாகும். குரு ஒரு ஆன்மீக கிரகமாகும். குருவை ஜீவாத்மா என்றும் அழைக்கிறார்கள். சனி, சூன்யத்தைக் குறிப்பவனாகும். சூன்ய நிலை என்பது சமாதி நிலையாகும். பொதுவாக சந்திரன், மனச்சஞ்சலம், காம இச்சை, மற்றும் சுகபோகங்களில் நாட்டத்தை உண்டாக்குவான். முனதில் எந்தவித இச்சைகளும் இல்லாத ஆன்மாவே சமாதி நிலையை அடைய முடியும், அதாவது மனம் அழிந்தால் மட்டுமே சமாதி நிலை கைகூடும். ஆகவே ஜீவாத்மாவான குரு கடக ராசியில் உச்சமடைவதே சிறப்பாகும்.
காட்டுப் பகுதி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும்.   இடங்கள் வளமான பகுதி .  ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடம்  ராணுவத்தளம்.   அரசு ஆவணங்களை வைக்கும் இடம்.   வீரன் குழவி மீது அமர்ந்திருப்பது போன்ற தோற்றம்.   தனுசு தர்ம திரிகோண ராசிகளில் உபய ராசி நெருப்பு தத்துவம்.   வில் அம்பு சின்னம் .  கால புருஷ தத்துவ 9-ஆம் இடம் குருவின் ஆட்சித்தலம். வழக்கறிஞர் விளையாட்டு வீரர் நேரடி வியாபாரம் இல்லாவிடினும் எதிலும் லாபம் காணும் ஆவல் உண்டு.   சட்ட ஆலோசகர் ஆசிரியர்   பாதிரியார்    புரோகிதர்   மேடைப் பேச்சாளர்   அரசியல்வாதி   வங்கி வேலை கல்வி இலாகா   பத்திரிகைத்துறை   சிவில் இன்ஜினியர் அயல்நாட்டு தொடர்பு   மர வியாபாரம்  நீதித்துறை   ஆயுதப்பயிற்சி சமூகசேவை   தர்ம ஸ்தாபனங்கள் நடத்துவார்.
தனுசு :
குருவுக்கு ஆட்சி வீடு.
மூலத்திரிகோண வீடு.
குருவின் பலம் நிறைந்த வீடு. சின்னம் வில் அம்பு.
எனவே இவர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட  அம்பு போல வேகமாக  இருப்பார்கள். எதிலும் போராடி வெற்றி பெறுவர்.தனுசு ஒரு  குரு வளையம்.
 மங்களகரமான மஞ்சள் நிறத்தை குறிக்கின்ற கோதண்ட ராசி என்னும் தனுசில் பிறந்தவர்கள்  எப்போதும் மங்களகரமான காரியத்தை விரும்பக் கூடியவராகவும் நியாத்திற்காக போராடுபவர்களாகவும் இருப்பர்.
ஒரு வில்..ஒரு இல்..ஒரு சொல்..அறிந்து கொண்டதோ கோதண்டம்    தனுசு ராசி: வில்அம்பு  பாதிமனிதன் பாதி மிருகம். உபயராசி நெருப்புராசி எதிலும் வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும்.பொறுமையாக இருப்பார். உயர்ந்த குறிக்கோளுடன் இருப்பார்கள்.. இவர்களை சீண்டும் போது தன்னுடைய  குணத்தை மாற்றிக்  கொள்வார்கள். போராடும் குணம். குதிரை ஓடக்கூடிய  நிலையில் ஒரே  நேரத்தில் இரு வகை  செயல்கள் செய்யக் கூடியவர்கள். இருபாலின வீடு. கோதண்ட வீடு. பாரதபோர் புரிந்தவீடு. சட்ட வல்லுனர்கள்.  குரங்குவீடு.பழிபீடம். கோர்ட்.மற்றவர்கள்  உதவி இல்லை என்று சொல்லும் ராசி. தீ விபத்து உண்டு. மத நூல்கள் உண்டு. குருமார்களின் தீட்சை கிடைக்கும். இவர்களுக்குபெண்கள் என்றால் ஆகவேஆகாது வீட்டின் அருகில்வக்கீல் நீதிபதி சீட்டு கம்பெனி அரசு ஆபீஸ் எல்லாம்  இருக்கும் அல்லது  தொடர்பு வரும். சிம்மம் தனுசில் ஒரு  கிரகம் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது.முதல் தரமான ராசி என்று சொல்லலாம்  வீட்டின் வெளியே சங்கு சக்கரம்படங்கள்  அல்லது சங்கு சக்கரம்  வைத்தால் சிறப்பு. கல்லறை சர்ச் மத கோவில்கள் அருகில் வீடு அமையும். பள்ளி காலேஜ் இருக்கும். யுத்த பூமி பிணங்கள் மாண்டது  உபதேச ராசி.ஆசிரியர் வீடு. ஆயுதபயிற்ச்சி கராத்தே கும்ப்பூ ஜிம் உடற் பயிற்ச்சி வட்டிக்கடை பைனான்ஸ் அருகில் இருக்கும்.. ஊருக்குள் காடு அடந்து இருக்கும். மலையில் இருந்தால் அது சிம்மம்.  பலி இடும் இடம். கசாப்புக்கடை  இருக்கும் பள்ளிக்கூடத்தில்  குலதெய்வ கோவில் இருக்கும். வர்மக்கலை நீவுதல் வரும்.
தனுசு ராசிகாரர்கள் எந்த விஷயத்தையும் யோசித்து செயல்படுவர். மிகவும் முன் எச்சரிக்கை உடையவர்கள். கண்டிப்புடன் கூடிய அன்பை உடையவர்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் கொண்டு அதை அடைய பாடுபடுவார்கள்   மூலம்:மணவாழ்க்கை  பாதிப்பு   உள்ள நட்சத்திரம் பிரிந்தவர்கள். சொல்லும்
நெருப்பு சம்மந்தமான  விபத்து இருக்கும். விசுவாசமானது  பெரியவர்களை அண்டி இருப்பார்கள். வெற்றி நட்சத்திரம் மூலம் கூட  இருந்தால்  வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை உருவாக்குவதில் மூலம் தான் பெஸ்ட். மூலத்தில் ஒருகிரகம் நின்றால் உறவில் திருமணம் இல்லாமல் பிரிவு நடந்தவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். தனுசு தனித்து வாழக் கூடாது.பெரியவர்களிடம் சேர்ந்து வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். கமப்யூட்டர் சிறப்பு. குடும்பம் சரிஇல்லை. ஒருபெண் மூலத்தில் இருந்தால் இல்லறம் நல்லா இருக்காது. நிரந்தர நண்பரும் இல்லை.எதிரியும் இல்லை. துளசி மாடம் வைக்கலாம்  மெளனவிரதம் இருப்பது நல்லது. தினமும் தவம் செய்யலாம்.
அனுமார் வழிபாடு ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.
தனுசு ராசியின் நாடுகள் ஆஸ்திரேலியா இத்தாலி. குரங்கு கங்காரு  தனுசின் மிருகம்.   பூராடம் நட்சத்திரம்: நரம்பு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். ஒரு பெரிய பொருளாதார பிரச்சனை இழப்பு இருக்கும். 40 வயதுக்குள். காலி இடம் பத்திரம் இதில் கவனமாக இருக்கவேண்டும். போலி செக் கொடுப்பது இவர்கள் தான். அல்லது பூர்த்தி செய்யாமல் கொடுப்பது மணவாழ்க்கை கசப்பு பிறபெண்களுடன்  தொடர்பு இருக்கும். கூட்டுத்தொழில்  ஆகாது. நண்பர்கள் ஆகாது. அறிவாளி  திருமணத்திற்கு பின் ஒரு காதல். காதல் திருமணம் இருக்கும். வக்கீல் ஆடிட்டர். பெண்களை வேலைக்கு சேர்க்கக்கூடாது. வழிபாடு:காமதேனு கிருஷ்ணர் சபரி மலை. உத்திராடம் நட்சத்திரம்: புத்திரதோசம் உள்ள நட்சத்திரம். ட்ரஸ்ட் ஈடுபாடு. இரட்டை நட்சத்திரம். ஆபரணம் பிறரிடம் வாங்கவோ  கொடுக்கவோகூடாது. அரசாங்க அரசியல் ஈடுபாடுஅதிகமாக இருக்கும். தந்தை வழிசொத்தை அனுபவிக்க முடியாது. பூர்வீக சொத்துகிடைப்பதில் தடை ஏற்படும். பூர்வீகத்தில் இருக்க முடியாது.வெளியே வந்துவிடுவார்கள். தந்தைக்கு கெட்டபெயர் வாங்கிகொடுப்பார்கள். தனுசு ராசியின் வீட்டின் பின் புறம்இரண்டு தெரு ஆசாரிகள் பூணூல் போட்டவர்கள்  இருப்பார்கள். மதம் சார்ந்த கோவில். ஆசிரியர் இருப்பார். ஆசிரியர் வீடு.டீச்சிங் மதபோதகர் சாமியார் வீடு. வெட்டை ராசி. கால் வலி நரம்பு வலி இருக்கும். வழிபாடு:அரச மர விநாயகர் வழிபாடு. துர்க்காதேவி. பிள்ளையார் பட்டி. தனுசு ராசிக்கு  பெரிய ஹோமங்கள் பூஜைகள் செய்வது கலந்து கொள்வது மிகசிறப்பாக இருக்கும். தனுசு மூங்கில் ராசி இவர்கள் வீட்டில் மூங்கில் மரம் இருக்கும். அல்லது வைப்பது நல்லது. மூலநட்சத்திரம் மாமிசம் சாப்பிடக்கூடாது இவர்கள் கழுத்தில் ஆஞ்சநேயர் அல்லது தண்டாயுதம் போட்ட டாலர் அணிவது சிறப்பு. வீட்டில் கோதண்டராமன் படம் வைத்துக்கொள்வது நல்லது.
மிகுந்த முன்னேற்றத்தை தருகின்ற ராசி. மனித சுதந்திரத்தை எதிர்பார்க்கின்ற ராசி. நல்ல சிந்தனைகளைக் கொடுக்கின்ற ராசி. பாதி மனிதன் வில், அம்புடன் பாதி குதிரை மேல் இருப்பது போன்ற உருவத்தைக் கொண்டுள்ள ராசி. இதனுடைய சின்னம் அம்பு. இதன் குறியீடு I. இடுப்பு, தொடைகள் மற்றும் கணையத்தைக் குறிப்பது இந்த ராசி. இது ஒரு இரட்டை ராசி. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இங்கிருந்தால், நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சனி, சுக்கிரன், புதன் ஆகியவை இங்கிருந்தால், எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுமுறை உண்டு  போராடி வெற்றி பெறுவார் தனுசுராசிக்கு  1 க்குடை யவரே  4 க்குடையவராக குரு வருவதால் இயற்கையிலேயே கேந்திர ஆதிபத்திய தோசம். 4 மிட வண்டி வீடு வாகனம் சுகம் சொத்து இந்த விசயத்தில் திருப்த்தி இருக்காது. 4 மிடம் ஆறு ஓடை அதனால் தண்ணீரில் கண்டம் இருக்கும். வயது முதிர்ந்த பின் படிப்பார்கள்.இதில் குரு நீர் ராசியில் இருந்து இன்னொரு நீர் ராசிகிரகத்தை பார்த்தாலோ 6:8:12ல் திதி சூன்ய ராசி  இவையெல்லாம் பார்த்து முடிவுசெய்ய வேண்டும். 2.க்குடையவரே  3 க்குடையவர் சனி கண் பல் உபாதைகள் பெரும் பாலும் வரும். 20 வயதில் இருந்து  30 வயதுக்குள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் காது சம்மந்தமான பிரச்சனை இருக்கும். 5 க்குடையவரே 12 க்குடையவர் செவ்வாய் வருவதால் ஒருகஷ்டம் இருக்கும் .5 மிடத்தை பற்றி பேசாத தனுசுவே கிடையாது. 5 மிடம் குழந்தை பூர்வீகம் பற்றி தான் பேசிக்கொண்டே   இருப்பார்கள். குலதெய்வத்தைபற்றியும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகளால்  விரையம் இருக்கும். வெட்டி செலவு இருக்கும் தாத்தா வழியில் ஒரு ஊனம் உண்டு. கோவிலுக்கு தானதர்மம் செய்பவர்களாக  இருப்பார்கள். ஆன்மீகபற்று நிறைய உண்டு.
காலத்துக்கு  தனுசு 10 ம்வீடு தனுசுக்கு 2 ம்வீடு.  மகரம் சர  ராசி பூமி ராசி. இவர் தனநிலை நாளுக்கு நாள் வளரும் சனி வீடு சற்று நிதானமாக உயரும். காலத்துக்கு  5 ஆம் அதிபதி சூரியன் மகரம் இங்கு. அதனால் இவருக்கு அரசுவழி வருமானம் கிடைக்கும் 9 ம்அதிபதி. சூரியன் பூர்வீகம் சொத்து தலைமைபண்பு  ஆராய்ச்சி ஆன்மீக தொண்டு தர்மஸ்தாபனங்கள் மூலம் வருமானம் இருக்கும்.    8 ஆம் அதிபதி  சந்திரன் இங்கே. இருந்தால் அதனால் இவர்கள் சட்டவிரோத செயல்கள் மூலம் வருமானம் கிடைக்கும். 5.12 ஆம் அதிபதி செவ்வாய் இங்கு இருந்தால்.  கலை புத்திசாலி தனம் காதல் மூலம் பொருளாதார வளர்ச்சி இருக்கும். ரகசிய நடவடிக்கை பதுக்கல் மூலம் தனலாபம் வரும் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபருடன் மீண்டும் சேர்வதில் திறமை பெற்றவர்கள் இவர்கள்
காலத்துக்கு 11ம் வீடு கும்பம்  தனுசுக்கு 3 ம் பாவம் கும்பம் ஆகும். தகவல் தொடர்பு ஒப்பந்தம் மூலம் மகிழ்ச்சி அடைவார்கள். கும்பம் காற்று ராசி எளிதில் உணர்ச்சி வசப்பட்டு குழப்பம் சந்திப்பார்கள்.   5ஆம். 12. ஆம்  அதிபதி செவ்வாய்  இருந்தால் அதனால் பத்திரம் இழப்பு ரகசியம் வழியாக தகவல் குடுப்பது தங்கள் குடும்ப உறுப்பினரை‌ நிரந்தரமாக பிரிவது இருக்கும்.   சதயம்   என்றால் தூதரகங்கள் குமாஸ்தா வேலை வெளிநாட்டு தொடர்புகள் அவர்களுடன் ஒப்பந்தம் போடுவது இப்படி இருக்கும்.  குருவானால் பத்திரங்கள் சட்டபூர்வமான ஒப்பந்தம் இருக்கும் பணவிஷயங் களில் உண்மையான சரியான முறையில் தகவல் பெறுவது இருக்கும். குரு 1.ஆம் . 4.ஆம் அதிபதி  கல்வியறிவு இருக்கும் பழம் காய்கறிகள் கால்நடை நிலங்கள் பலசரக்கு போன்ற வியாபாரம் செய்பவர்கள் ஆக இருப்பார்கள் குளம் குட்டை பாலம் ஒப்பந்ததாரர்கள் ஆகவும் இருப்பார்கள்
மேஷம் இவருக்கு 5 ம்வீடு அதனால் காதல் விவகாரம் சண்டை சச்சரவு இருக்கும் பிறக்கும் முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறக்கும். கரு களைப்பு செய்வது இருக்கும் கலைத்துறையில் கௌரவபதவி ஜோதிடம் அரசியல் சிறந்து விளங்குவார்கள்
ரிஷபம் தனுசுக்கு 6 ம்வீடு. சுக்கிரன் வீடு ஸ்திர ராசி பூமி ராசி இவர்கள் நிதித்துறை தங்கம்வெள்ளி அடகு கடைகள்  வழக்குகள் போன்ற வகையில் பணி இருக்கும். துணி நெய்தல் அலங்கார பொருட்கள் கண்ணாடி பொருட்கள் பட்டு ஜவுளி இனிப்பு பலகாரங்கள் கடை இவற்றில் வேலை இருக்கும். இங்கு சூரியன் நட்சத்திரம் உள்ளது இவர்களுக்கு அரசு கடன் இருக்கும் அரசு சார்ந்த வழக்கு இருக்கும் அரசு வழங்கும் சீருடை பெறுவது கால்நடை வளர்ப்பு விவசாயம் சுகாதாரம் போன்ற துறைகளிலும் வேலை இருக்கும். சூரியன் தனுசுக்கு 9 அதிபதி ஆவார். தர்மஸ்தாபனங்கள் நீதிமன்றம் மனிதவளத்துறை பஞ்சாயத்து அலுவலகம் ஆராய்ச்சி மையம் டிரஸ்ட்கள். போன்றவையும் அமையும்.  ரோகிணி என்றால் நீர்நிலைகள் கப்பல் தானியம்  வயல்  தண்ணீர்  குழாய் வேலை போன்ற வற்றில் தினக்கூலி யாக இருப்பர். மேலும் நீர் மூலம் வரும் நோய்களால் உடல் சக்தி இழப்பு ஏற்படும். தனுசுக்கு அஷ்டமாதி சந்திரன். கடினமான போராட்டம் இருக்கும் மிகவும் மோசமான சூழலில் பணி இருக்கும் இவருக்கு அறுவை சிகிச்சை நோய் இருக்கும்.  செவ்வாய் என்றால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். 5, 12.ஆம் அதிபதி  செவ்வாய். ரகசிய திட்டம் மூலம் கடன் வரும் மருத்துவ  மனையில் மருத்துவர்களாக பணி. இருக்கும். களத்திரம் மற்றும் கூட்டாளியால் வழக்கை  சந்திப்பார்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள்.
மிதுனம் தனுசுக்கு 7 ம்வீடு இது காற்று ராசி உபயராசி. இது புதன் வீடு வரும் வாழ்க்கை துணை நகைச்சுவை மிக்கவர் ஆக இருப்பார். செவ்வாய் ஆனால் மனைவி கூட்டாளி மூலம் கஷ்டம் அனுபவிப்பார்கள்.இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் சிறுநீரகம் கருப்பை அடிவயிறு பிரச்சினை வரும் தங்கள் உறவினர்களுடன் வசித்தல் நெருங்கிய உறவில் திருமணம் தங்கள் சொத்தை பராமரிப்பவர்களை அடிக்கடி சந்திப்பார்கள்
தனுசு ராசி பொன்னிற மஞ்சள் நிறமுடைய ஆண் ராசியாகும். ராசி மண்டலத்தில் 9 வது ராசியாகும். தனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். உடல் நிறமும் எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். முட்டை வடிவ முகத்தோற்றம் கொண்டவர்கள். கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். நீண்ட கழுத்து அமைந்திருக்கும். சிரித்த முகம், கவர்ச்சியான தோற்றம் கொண்ட உங்களின் பேச்சு அனைவரையும் எளிதில் வசீகரிக்கும்.
புத்திசாலிகள்
தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்ட ஏகலைவனைப் போல பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் புத்திசாலிகளாகவும் விளங்குவீர்கள்.
சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வீர்கள்.
அறிவுச் சுரங்கமான பிரகஸ்பதியின் ஆளுமைத்திறன் அதிகமுள்ள தனுசு ராசியில் பிறந்த நீங்கள் ஊர்ப் பிரச்னை, உலகப் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைப்பார்கள். வீட்டுப் பிரச்னை என்று வரும்போது, இவரது ஆலோசனைகளை யாரும் ஏற்பதில்லையே என்று வருந்துவார்கள்.  பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள்.
ராசிநாதனான குருவும், பத்துக்குரியவனான புதனும் பகையாளிகளாக இருப்பதால் ஆரம்பத்தில் எந்த வேலையிலும் விருப்பம் இல்லாமலேயே இருப்பீர்கள். படிப்பது ஒன்றாகவும், பார்க்கும் வேலை வேறொன்றாகவும் இருக்கும். பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
பணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழியில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை, கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.  செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். உத்ராடம் நட்சத்திரம் வண்ணான் சம்பந்தப்பட்ட star  கால புருஷனுக்கு 9 10 ல் இந்த நட்சத்திரம் வரும். மற்ற நட்சத்திரத்திற்கு கூறாததை இதற்கு கூறி இருக்கிறார்கள். இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் வீட்டின் அருகே வண்ணார் இருப்பார்கள். இது முற்றிலும் உண்மை.
   பணத்தின் பின்னால் ஓடமாட்டார்கள். பணத்தைவிட மானம்தான் பெரிதாக இருக்கும்.
சிறு வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் தடையின்றி அமையும்.  வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்
6 க்குடையவரே 11 க்குடையவர் சுக்கிரன். உத்தியோகம் ரொம்ப சிறப்பாக இருக்கும். பெண்கள் தான் இவர்களுக்கு எதிரி. பெண்களால் தொல்லை உண்டு. சிறு நீரக பிரச்சனை இருக்கும். பெண் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள் எதை செய்யக்கூடாது என்று சொன்னால் அதை தான்அதிகம் செய்வார்கள். பெண்களை கூட வைத்துக்கொள்ளக் கூடாது.   7.க்குடையவரே,10.க்குடையவர் புதன். கூட்டுத்தொழில்உண்டு திருமணத்தில் பெரிய குழப்பத்தை செய்வார்கள்  கூட்டாளியிடம் தொழிலை கொடுத்து விட்டு இவர்கள் வெளியே வந்து விடுவார்கள். நண்பர்கள் இரண்டு பேர் உண்டு. ஏனா 7. மிடம்  புதன் வீடு வருவதால் இரட்டை. கேந்திர ஆதிபத்திய தோசம் உண்டு. 8 க்குடையவர் சந்திரன் அதனால்.நீர் இருக்கும் இடம்.மழை நேரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வழக்கு இருந்தால் அதை போக்க வாய்பேச முடியாதவர்களுக்கு   உதவி செய்தால் அந்த வழக்கு வெற்றி தரும். 9 மிடம் சூரியன். பெரியகுடும்பம்  சார்ந்தவர்கள். அரசாங்க உதவி அரசியல் தந்தை வழியில் இருக்கும். தந்தை வழியில் கோவில் நிர்வாகம் பார்த்தவர்கள்
இருப்பார்கள்.
காலத்துக்கு நான்காம் வீடு தனுசுக்கு அஷ்டமாதி ஆகிறார் இது ஜலராசி  அதனால் இவர்கள் தாயார்  வீடு வாகனம்சொத்துகள் நிலங்கள் விபத்து மூலம் பிரச்சினை அனுபவிப்பார்கள். குளிர்ச்சியான பொருட்கள் திரவப் பொருள் மூலமும் அவதிப்படுபவார்கள். நீர்நிலைகளில் விபத்து இருக்கும் நீர் மூலம் பரவும் நோயால் துன்பம் இருக்கும் வலி வேதனை அவமரியாதை சண்டை மூலம் தொடர்ந்து தொல்லைகள் இருக்கும்  கடகத்தில்  புதன் நட்சத்திரம்  ஆயில்யம் உள்ளது அதனால் தொழில் கூட்டாளியால் ஏமாற்றம் அவமானம் இருக்கும் திருமணவாழ்க்கையிலும் ஏமாற்றம் இருக்கும். தொழிலில் அவமானம் பணியில் பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது போன்றவையும் அடங்கும்
தனுசு என்னும் கோதண்டராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுடைய யோகமே தனி இவர்கள் எதிலும் பூரண வெற்றியே பெறக்கூடியவர்களாகி திகழ்வார்கள் இவர்களை எதிர்க்கக்கூடிய வல்லமை எவருக்கும் இல்லை என்றே கூறலாம் அத்தனை அவசியமும் முகராசியும் உடையவர்கள் என்பது இவர்களின் குணமாகும்

சுப கோள்களின் தலைமைக் கோளான குருவின் ஆட்சி வீடே தனுசு லக்னம் இந்த வீடு குருவின் ஏகபோக ஆட்சி வீடும்,மூலத் திரிகோண வீடுமாகும் இதில் எந்த கிரகத்திற்கும் பகைகிடையாது
சிம்மம் தனுசுக்கு பாக்கியம் ஸ்தானம். இது நெருப்பு ராசி ஸ்திர ராசி ஆகும் இதில் லக்னத்தில் நாட்டுத் தலைவர்கள் நீதிபதிகள் அரசு நிதித்துறை பன்னாட்டு தூதரகங்கள் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் இவர்கள். பூரம் நட்சத்திரம் இருப்பதால் கலை கலாச்சாரம் உயர் கல்வி போக்குவரத்து ஆகியவற்றில் ஆராய்ச்சி யாளர்களாக இருப்பார்கள்.
கன்னிராசி தனுசுக்கு தொழில்பாவம் ஆகும். இதுபூமிராசி உபயராசி. அதனால் தொழில் வேலைகள் கௌரவம் ஏற்றத் தாழ்வுகளை உடையவர்கள். புதன் வீடு. எழுதும்பொருள் போட்டு புஸ்தகம் நுண்ணிய கருவிகள் கணினி போன்ற துறைகளில் வியாபாரம் ஈடுபாடு கொண்டவர் இவர்கள். 9க்கு உடைய சூரியன் சம்பந்தம் அரசு அதிகாரிகளுடன் ஒப்பந்தம் நீதிபதிகள் கௌரவ அதிகாரிகள் தர்மஸ் தாபனங்கள் கல்வி நிறுவனங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்வெளி ஆய்வு மையம் அரசியல் கட்சி போன்ற பணிகள் இருக்கும். அஷ்டமாதி சந்திரன் சம்பந்தம் சட்ட விரோதமாக செயலால் பாதிப்பு ஏற்படும் தொழில் முறை குற்றவாளிகளாக இருப்பது இருக்கும். 5 ,12 செவ்வாய் சம்பந்தம் ரகசிய தொடர்பு மூலம் வியாபாரம் இரண்டு வித துறையில் பணிபுரியும் அமைப்பு தொழிலில் ரகசிய முதலீடுகள் செய்வதன் மூலம் கிடைக்கும்
தனுசு ராசி கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடு பாக்கியம் உபய ராசி குருபகவான் மட்டுமே ஆட்சி பெரும் வீடு நவகிரகங்களில் வேறு எவரும் அங்கு நீச்சம் பெறாத வீடு ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமும் தளராத தர்மமும் தரும் ராசி சூரிய பகவான் மார்கழி மாதம் முழுவதும் எழுந்தருளும் புனிதமான ராசி நற்குணங்கள் அதிகம் கொண்டவர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்க்கை வாழ்வார்கள் தனக்கு விட பிறருக்கு நன்மை தரும் செயல்கள் அதிகம் செய்வார்கள் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அவர்கள் வீட்டில் ஏதேனும் ஒரு மதநூல் இருக்கும் பெரியோர்கள் குருமார்கள் ஆசீர்வாதம் இவர்களுக்கு உண்டு பயிற்சிக் கூடம் தற்காப்புக் கலைகள் பயிலும் இடம் மூலம் பூராடம் உத்திராடம்   நட்சத்திரங்களை உள்ளடக்கிய ராசி மூலத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்தார் அவர்கள் சிரமேற்கொண்டு செய்து முடிப்பார்கள் ராமபிரானுக்கு அந்த அனுமன் போல் அதிக பொறுப்பேற்று பணியை செய்து முடிப்பார்கள் விசுவாசம் மிக்கவர்கள் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு காரியம் செய்து கொடுப்பார்கள் பூராடம் அறிவாளி நண்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் உத்திராடம் இரட்டைப் பிறவி நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரம் சாப்பாட்டுப் பிரியர்கள் மற்றவர் பொருளுக்கு ஆசைப்படமாட்டார்கள் நல்ல மற்றவர்கள் பெண்களுக்குப் பிடிக்கும் குழந்தை பிறந்து பின்னர் ஜாதகர் அதிர்ஷ்டம் அடைவார் இவரது மனைவி அறிவு புத்திசாலித்தனம் இளமை அழகு நிறைந்தவராக இருப்பார் ஏழாம் அதிபதி புதன் கூட்டுத் தொழில் அமையும் ஏழு பத்தாம் அதிபதி புதன் திடீர் என குடும்பத்தில் ஏற்படும் கானா இழப்புகளை ஜாதகர் சந்திப்பார் லக்னாதிபதி இரண்டில் நீச்சம் இவர் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வார் பஞ்சாயத்து பண்ணுவார் நாட்டாமை படம் விளங்குவார் ஆனால் இவருக்கு யாரேனும் சொன்னாள் ஏற்றுக்கொள்ள மாட்டார் சற்று கர்வத்துடன் நடந்து கொள்வார்கள் தனக்கு நிகர் தானே என்றும் எல்லாம் தெரியும் என்றும் அவர்கள் செயல் இருக்கும் வீடு வாகனம் போன்றவற்றை இவர்கள் அமைத்துக்கொள்வார்கள் ஒன்று நாலாம் அதிபதி குரு கடன் வாங்கி ஆடம்பரமான வீடு ஆடம்பரமான வாகனம் இவைகளை கூட தனதாக்கிக் கொள்வார்கள் ஆறாம் அதிபதி சுக்கிரன் நாலு லட்சம் தந்தை புகழ்மிக்கவராகவும் பெயர் சொல்லக்கூடிய அளவிலும் இருப்பார் பெண்களால் வீண்வம்பு வழக்குகளைத் சந்திக்க நேரிடும் தாயார் வழியில் உறவுகள் பாதிக்கும் குழந்தைகள் முன்கோபக்காரராகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி சூரியன் உச்சம் ஆசிரியப்பணி போதனைகள் செய்தல் வக்கீல் ஆடிட்டிங் அவை சார்ந்த பணிகள் அமையும் அவ்வாறு அமைந்தால் சிறப்பாய் இருக்கும் பெரிய தொழிலதிபர்களாகவும் தொழிற்சாலைகளை அமைத்து அதில் அதிக வேலையாட்களை கொண்டிருப்பார்கள்                                                                                                                                           துலாம் தனுசு க்கு 11ம்வீடாகும் சரராசிகாற்றுராசி.  இவர்கள் தங்கள் வாழ்க்கைதுனை மற்றும்தொழில் கூட்டாளிகள் மூலம் அவர்கள்கள் விருப்பம் நிறைவேறும்  இது சுக்கிரன் வீடு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மூத்த சகோதரம் மருமகன் மருமகள் உடன் நல்ல இணக்கமான நட்புறவு வைத்து இருப்பார்கள்
விருச்சிகம் தனுசு க்கு விரயபாவம்.  இந்த இடம்  ஜலராசி ஸ்திரராசி. இவர்கள் மூலதனத்தை இழந்து விடுவார்கள் நஷ்டம் ஏற்படும். திரவப் பொருளில் இவர் மூலதனம் இருக்கும். ஆராய்ச்சி மூலம் நீர் ஆதாரங்களை கண்டறியும் திறன் மிக்கவர். ரகசிய நடவடிக்கையில் நிலையான தொடர்பு இருக்கும். கலப்படம் பதுக்கல் கடத்தல் போன்ற சட்ட விரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்பவர்கள் போன்ற பணி இருக்கும். குரு சம்பந்தம் இருக்கிறது. அதனால் சிறந்த வாகனங்கள் இருக்கும் தங்கள் உடைமைகளை ரகசிய மாக பத்திரப் படுத்துவது இருக்கும்.  சனிபகவான் சம்பந்தம்ரகசியமாக பழிவாங்கும் குணம்.இருக்கும். 7 10 புதன் ஆயில்யம் உள்ளது. ரகசிய ஆராய்ச்சி மூலம் நுண்ணிய கருவிகள் கண்டுபிடிப்புகள். கணக்கு வழக்கு பத்திரம் வைத்திருப்பது. ரகசிய ஒப்பந்தம் போடுவது இருக்கும். அதிக வேலைப்பளு உள்ள பணிகள் இருக்கும். தொலைபேசி இனைப்பாளர்+வரவேற்பார்கள் இவ்வாறு இரட்டை தன்மை கொண்ட பணிகளை மேற்கொள்வார்கள்  ஜாதகத்தில் குரு கேந்திராபதி தோஷம் அடைந்திருந்தால் மாற்றாந்தாய் வளர்ப்பில் வளர வேண்டியிருக்கும் .
சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வபுண்யாதிபதியாகவும் வருகிறார் .
சூரியன் கிட்டத்தட்ட உங்களுக்கு கிடைக்கவேண்டிய சகலபாக்கியங்களையும் கிடைக்கச்செய்வார்..
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன,வாக்கு, குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதியும், மூன்றாம் வீடு, தைரியஸதானம்,சகோதர ஸ்தானபதிற்கு அதிபதியும் சனிபகவான் ஆவார் .சனியின் நட்பை குரு விரும்பமாட்டார். ஆனால் கிடைக்கும் நன்மைகளை பயன்படுத்திக்கொள்வர்.
குடும்ப வாழ்க்கை , இளம்பருவம் பேச்சை தீர்மானிக்கும் முக்கியமானவராக சனி உள்ளதால் 65%  நன்மையானபலன்களையும், 35% தீமையான பலன்களையும் தரவல்லார்                                                                                                                                      மூலம் பூராடம் உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த தனுர்ராசிக்காரர்கள் ப்ருஹஸ்பதி கிரஹமாகிய குருபகவான் வீட்டில் ஜெனனமாவதால், சிறு வயதிலுருந்தே கல்வி, ஞானம். கொண்டவர்களாகவும் நல்ல சகவாசங்களையும், நீதி நேர்மை பண்பு ஆகிய நல்லொழுக்கங்களைக் கொண்டவர்களாகவும் வளர ஆரம்பிப்பார்கள். தெய்வீக வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள், பெரியவர்களிடம் பக்தி, விசுவாசகங்களுடன் கூடினவர்களாக இருப்பார்கள்.தனக்கு சமமாகவும், உயர் அந்தஸ்து,பதவி, செல்வாக்கு படைத்தவர்களிடம் நட்பைக் கொள்ளுவார்கள்.கீழோரிடம் வெறுப்பைக் கொள்ளுவார்கள். அதிகமாக வெளியே சுற்றும் பழக்கம் இருக்கும்.

தனிர் ராசியில் பிறந்தவர்கள் தங்களது கல்வி, அறிவு திறமைகளால் உயர் பத்வியை அரசாங்கத்தில் பெறுவார்கள். அதிகாரங்களுடனும், அந்தஸ்துடனும் இருப்பார்கள். பிறருடைய குற்றங்களை, குணங்களை,வெகு எளிதில் கண்டு கொள்வார்கள்.துர்குணம்,கொலை செய்பவர்கள்,திருடுபவர்கள் இவர்களை வெகு கலகமாகக் கண்டிபிடிப்பார்கள்.


கிரஹ பலங்களுடன் கூடின தனுர்ராசிக்காரர்கள் அடிமை வாழ்வைப் பெறாமல் 80 ஆண்டுகள் ஆயுள் பாவத்துடன் திடகாத்திர திரேகத்துடன் இருப்பார்கள்
தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
தனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும். பொன்னிற மஞ்சள் நிறமுடைய இந்த ராசி ஆண் ராசியாகும். இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.
உடலமைப்பு,
தனுசு ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். உடல் நிறமும் எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் வாழ்வார்கள்.
குண அமைப்பு,
தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.
மணவாழ்க்கை,
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். ஆண்களாக இருந்தால் மண வாழ்க்கைக்குப் பின் மற்றொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகும். மனைவியால் தனசு ராசிக்காரர்களுக்கு துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும்.
பொருளாதார நிலை,
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறுவ வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் இவர்களுக்கு தடையின்றி அமையும். புதிய வீடு மனை வாங்குவதிலும் பழுது பார்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டாலும் அதனால் கடன் வாங்கவும் நேரிடும். தங்களுடைய வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். சுகபோக வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் தங்கள் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வெகுதூரம் நடப்பது கூட இவர்களுக்கு சிரமம் என்பதால் அதற்கேற்றவாறு வண்டி, வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வார்கள்.
புத்திர பாக்கியம்,
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு பிறந்ததாலும் அவர்களால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள்.
தொழில்
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
பணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழியில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை, கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவற்றை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். கூட்டுத் தொழில் இவர்களுக்கு அவ்வளவு சாதகப் பலனை தராது என்றாலும் வியாபாரிகளாக இருந்தால் சர்க்கரை, வெல்லம், பழவகைகள் முதலியவற்றை விற்று லாபம் பெறுவார்கள். பெரிய, பெரிய நிறுவனங்களில் காரியதரிசியாகவோ, மேற்பார்வையாளராகவோ, கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிலோ நன்றாக சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். சிலருக்கு வர்ணம் தீட்டுதல், சிலை வடித்தல், சித்திரம் வரைதல் போன்றவற்றினாலும் லாபம் கிட்டும்.
உணவுவகைகள்,
தனுசு ராசிகாரர்கள் பசலை கீரை, கேரட், முட்டை கோஸ், பச்சை பட்டாணி, பாதாம், பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்த கொள்வதும் ஜில்லென்று சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் - 1,2,3,9,10,11,12
கிழமை - வியாழன், திங்கள்
திசை -வடகிழக்கு
நிறம் - மஞ்சள், பச்சை
கல் - புஷ்ப ராகம்
தெய்வம் - தட்சிணா மூர்த்தி,                                                                                            தனுசு லக்னம்
1:எப்பொழுதும் வேலையில் இருத்தல்
2:தத்துவத்தில் ஆர்வம்
3:மறைமுகக் கலையில் புலமைப் பெறுதல்
4:வேகமாக பேசுதல்
5:மற்றவர்களின் தவறான புரிதலுக்கு ஆளாதல்
6:மற்றவர் வளர்ச்சியைத் தடுக்காமல் இருத்தல்
7:வெளிபுறப் பகட்டை வெறுப்பவர்
8:கடவுள் பக்தி
9:நேர்மை
10:பணிவு உடையவர்
11:போலித் தன்மை இல்லாதவர்
12:அறிவாளி
13:கவர்ச்சியானவர்
14:எளிதில் பழகக் கூடியவர்
15:தூய இதயமுடையவர்
16:உரையாடலில் நாட்டம் உடையவர்
17:சில சமயம் காரிய நாட்டமும் உண்டு
18:உணர்ச்சியற்ற தன்மை
19:ஆர்வமுள்ளவர்
20:பழமையான விஷயங்களைக்
 கடைபிடிப்பவர்
21:சரியான நேரத்தில் தன் வேலைகளை முடிப்பவர்
22:அதிக எதிர்ப்பார்ப்பு
23:அதிக பரபரப்பு
24:மனித நேயம்
25:கடின உழைப்பு
26:இரக்கம்
27:அன்புடைமை
28:தொலைநோக்கு சிந்தனை
29:பேச்சாற்றல்
30:சமயப் பற்றுள்ளவர்
31:மற்றவருக்காக தியாகம் செய்பவர்
32:உறவினர் பகை
33:கட்டாயப் படுத்திக் காரியம் செய்ய வைக்க முடியாது
34:எதிரிகளை வீழ்த்துவர்
35:மனதை கவரும் காரியங்களை செய்பவர்
36:உயரமானவர்
37:பருமனாக இருப்பவர்
38:நீண்ட முகம்
39:முன் நெற்றி வழுக்கை
40:அஞ்சா நெஞ்சன்
41:உயர்ந்த லட்சியம்
42:தயங்காது உண்மைப் பேசும் இயல்பு
43:தயாளகுணம்
44:பெருந்தன்மை
45:நாணயம்
46:நம்பிக்கை
47:பத்து பேருக்கு தலைமை தாங்கும் தகுதி
48:நன்கு திட்டமிட்டு வாழ்கையில் முன்னேற்றம்
50:நல்ல நிறம்
51:அழகு
52:மனைவிக்கு சுதந்திரம் அளிப்பவர்
53:கள்ளப்பணம் தேடுவதில்லை
54:நியாயமான சம்பாதியம்
55:அதிக செலவிடல்
56:பந்தயம் பலன் இல்லாது போதல்
57:தப்பான கௌரவம்
58:காதலில் மனமாற்றம்
59:விளையாட்டுகளில் கவனம்
60:சமுக இணக்கம்
61:திருப்தியான சம்பாதியம்
62:குடும்ப வாழ்க்கை முக்கியமின்மை
63:நிறைவானவர்
64:வசீகர தோற்றம்
65:திடம்
66:பேராசை
67:துணிவு
68:தெய்வ பக்தி
69:ஊக்கம்
70:மனவலிமை
71:எப்போதும் அச்சம் அடையாமை
72:உண்மை
73:ஆவேசம்
74:வல்லமை
75:சுயநம்பிக்கை
76:நேர்மையான வாதம்
77:ஆசை கூறுதல்
78:உணவில் விருப்பம் நோய்கள்
79:வாத வலி
80:இடுப்பு முறிவு
81:கீல்வாதம்
82:இடுப்பு நோய்
83:ஈசனோபிலியா
84:சந்து வாதம்
85:சுவாசப்பை கோளாறு
86:எலும்பு முறிவு
87:நீரிழிவு
88:கக்குவான்
89:பிராங்கிடீஸ்
90:காதுகள் பாதிப்பு
91:தொடைப்பிடிப்பு
92:கட்டிகள்
93:சக்தி ஆன்மை
94:ஊமை காயம்
95:ஆஸ்துமா
96:ஜுரம்
97:டி.பி
98:இரத்த குழாய் உடைப்பு
99:பார்வை குறைவு தொழில்கள்
100:ஆசிரியர்கள்
101:மேடை பேச்சாளர்
102:வங்கி ஊழியர்கள்
103:அரசியல்
104:புத்தக பதிப்பு
105:விளம்பரத்தின் மூலம் வருமானம்
106:கணக்கு தணிக்கைத்துறை
107:கம்பெனி சட்ட வல்லுனர்
108:சிவில் இஞ்சினியர்
109:வெளிநாட்டு தூதுரக பணி
110:   2,6,10 ஆம் அதிபதிகளில் ஒருவர் தனுசுவில் அமர்ந்தால் சுரங்கங்களில் பணி
111:போக்குவரத்து பணி
112:பொறியியல்
113:வெளிநாட்டு சம்பந்தப்பட்ட பணி
114:கோயில் சீரமைப்பு தனுசு குறிக்கும்  பொருட்கள்
115:குதிரை லாடம்
116:குன்று
117:மேட்டு நிலம்
118:பூஜை அறை
119:கோயில்
120:பணப்பெட்டி
121:பணப்பை
122:எல்லைக்கு அடுத்துள்ள தோட்டங்கள்
123:போர்களம்
124:மூலமருந்து
125:மருத்துவர்
126:புஷ்பங்கள்
127:கிழங்குகள்
128:கனிகள்
129:விதை
130:பூராடம்மீன்
131:நீர்சம்பந்தபட்ட பிராணிகள்
132:நீர் சம்பந்தபட்ட புஷ்பங்கள்
133:பழங்கள்
134:உத்திராடம்  முதல் பாதம் குதிரைகள்
135:யானைகள்
136:போர்வீரர்கள்
137:அம்புகள்
138:ஈட்டிகள்
139:ஊசிகள்
140:கம்பங்கள்
141:கொம்புகள்
142:பிரம்பு கயிறு
143:பந்தய குதிரை
144:பிக் ஆக்ஸ்
145:கடப்பாறை
146:உளி
147:துளையிடும் கருவி
148:மூலிகைகள்
149:ஆயுர்வேத மருந்துகள்
150:வீடுகளில் உயரமான அறைகள்
151:உலைக்களத்தின் அடுத்த பகுதி
152:கால்நடைத் தொழுவம்
153:ஆயுத சாலை
154:போர் கருவிகள் இருக்குமிடம்
155:மாதா கோயில்
156:பள்ளிகள்
157:கல்லூரி
158:நீதிமன்றம்
159:காடுகள்
160:முட்புதர்
161:கோயில் தீபம் தனுசு ராசிகாரகத்துவம்
162:ஆட்சி-குரு
163:உச்ச,நீச்ச கிரகம் இல்லை
164:திசை-கிழக்கு
165:நெருப்பு
166:தாது
167:தர்மம்
168:இருமடிப்பான ராசி முதல் பாதி மனிதன் இரண்டாம் பாதி மிருகம்
169:ஒற்றை ராசி
170:ஆண்
171:வறண்ட ராசி(மலட்டு)
172:உபயம்
173:இரவில் பலம் தனுசு
குறிக்கும் நாடுகள்
174:ஆஸ்திரேலியா
175:அரேபியா
176:பெலிக்ஸ்
177:பிரான்சில் ஒரு பகுதி
178:மடகாஸ்கர்
179:ஹங்கேரி
180:ஸ்கார்லோனியா
181:டஸ்கனி
182:ஸ்பெயின்
183:இஸ்ட்ரியா
184:டல்மாஷியா
185:இத்தாலி
 தனுசு குறிக்கும் நகரங்கள்
186:கோவை
187:நேபிள்ஸ்
188:நார்போன்
189:ஸ்காட்லாந்து
190:அவிக்னோன்
191:ஷெப்ஃபீல்டு
192:ராட்டன்பர்க்
193:கொலோன்
194:பூடான்
195:பிராட்போர்டு
196:மேற்கு புரோம்விச்
197:டோரவுட்ஸ்
198:டோலிடோ
199:போர்லாந்து
200:நாட்டிங்ஹாம்                                                                                                                       காலபுருஷனுக்கு ஒன்பதாவது ராசி தனுசு. நட்சத்திரங்கள் மூலம் பூராடம் உத்திராடம் 1ஆம் பாதம்.    ராசி எழுத்துக்கள் யே யோ ப பி பு த ட பே போ ஜ ஜி. தனுசில் பிறந்தவர்கள் ஆஞ்சநேயர் திருஞானசம்பந்தர் வேதாந்த தேசிகன் மணவாள மாமுனிகள் மகாகவி பாரதியார் ராகுல் காந்தி பிரணாப் முகர்ஜி சச்சின் டெண்டுல்கர் இந்திராகாந்தி எல். ஆர். ஈஸ்வரி. இவர்களுக்கு அசாத்திய பொறுமை இருக்கும். எதையும் அறிந்து கொள்வதில் குழந்தைத்தனம் இருக்கும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வர். இவர்களுக்கு வயது ஏறினாலும் முதுமை தெரியாது. உலக ஞானம் அதிகம் உள்ளவர். நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து கற்போர். வாதிடுவதில் வல்லவர். அடக்கம் நிறைந்தவர். எதிலும் தீவிரமாக ஈடுபடுவார். முன்கோபம் உண்டு. சிறப்பாக பணி செய்யும் இவர்கள் அதிகம் பேசுவதால் பணியில் தடை உண்டு. தன்னையறியாமல் தேவையற்ற ரிஸ்க் எடுத்து மாட்டிக் கொள்வார். இயல்பான அறிவுத்திறன் மூலம் தப்பிக்க முயற்சிப்பார். மற்றவர்களை எந்த விஷயத்திலும் உடன்பட வைத்துவிடுவார். விற்பனை மார்க்கெட்டிங் தொழிலில் அதிகம் ஈடுபடுவார். எதையும் காசாக்கும் திறமை உண்டு. இவர் கடினமாக உழைத்து வெற்றி பெற்றாலும் அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றதாக மற்றவர் சொல்வார்கள். எதையும் சாதிக்க முடியும் என்பது இவர்களின் தாரக மந்திரம். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பார். நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். நன்றாக சம்பாதித்து சேமிக்கவும் செய்வார்கள் செலவும் செய்வார்கள். எப்படி வேலையை முடிக்க வேண்டும் என்ற கலையை கற்றவர்கள். வேலையை முடிக்க தன் பணியாளர்களை சில நேரம் கசக்கிப் பிழிந்து விடுவார். குறிக்கோள்கள் திட்டமிடுதல் இவர்களிடம் உண்டு. சாப்பாட்டு நேரத்தில் குடும்பத்துடன் இணைந்திருக்க விரும்புவார். அவர்களுடன்அமர்ந்து உண்ண விரும்புவார். தம்மீது அன்பு செலுத்துபவருக்கு அடிமையாக இருப்பார். மனைவியின் குணத்தை புரிந்துகொண்டு அவருக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிக்கு கட்டுப்படுபவரும் உண்டு. குழந்தைகளின் மனமறிந்து விருப்பத்தை பூர்த்தி செய்வார். நண்பர்களின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பார்.   நட்பில் தவறிருந்தால் உடனே முறித்துக் கொள்வார். தனிமையிலும் இனிமை காண்பவர். வாயைப் படைத்தது பேசுவதற்கே என்பவர்கள். புத்தகப் புழுக்கள். புதிதாக தெரிந்து கொள்ள ஆசை உள்ளவர். கருத்தை வெளிப்படுத்த தயங்காதவர். புதிது புதிதாக சவால்களை சந்திப்பார்கள். போர்க் குணம் கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...