புதன், 21 நவம்பர், 2018

மகரம் ராசி காரகத்துவம்

    ராசி மண்டலத்தில் வான் மண்டலத்தில் பத்தாவது பகுதியாக மகரம் அமைந்துள்ளது.
இது கணிதப்படி 270 பாகை முதல் 300 பாகை வரை வியாபித்துள்ளது.
மகர ராசியில் முதல் 10 பாகை மகரத்திற்கு அஷ்டமாதிபதியான சூரிய பகவானின் நட்சத்திரம் உத்திராடம் அமைந்துள்ளது. அடுத்து களஸ்திர ஸ்தானாதிபதியான சந்திர பகவானின் நட்சத்திரம் திருவோணம்  13. பாகை 20 கலை அமைந்துள்ளது  அடுத்து மகரத்திற்கு சுக ஸ்தான அதிபதி மற்றும் பாதக ஸ்தான அதிபதி செவ்வாய் பகவானின் நட்சத்திரமான அவிட்டம் 6  பாகை ,40 கலை வரை வியாபித்துள்ளது
மகர ராசி சூரிய பாகத்தில் சனி பகவானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாகம் சனி பகவானின் ஆட்சி வீடு. பாதக ஸ்தான அதிபதியான செவ்வாய்  உச்சமடைகிறார். வீரிய ஸ்தானாதிபதி விரையாதிபதி ஆனா குரு பகவான் இங்கு பலவீனம் ஆகின்றார். சனி பகவான் துலா ராசியில் உச்சம் அடைகிறார்
இந்த ராசிக்கு வண்ணான் துறை என்ற பெயரும் உள்ளது கழிவுகளை நீக்கும் இடம். மகரம் சர ராசி. இதற்கு மாரக ஸ்தானம் ரெண்டு ஏழு அதாவது கும்பமும் கடகராசியும். சனியும் சந்திரனும் மாரகாதிபதிகள். லாபாதிபதி செவ்வாய் இதற்கு பாதக அதிபதி ஆவார்,                                                                                  மகரம் பூமிராசி சரராசி. பாதி பயன் தரும் ராசி பிறர் மீது அன்பும் பாசமும் காட்டும் ராசி விரைவாக புரிந்து கொள்ளும் திறன் தற்பெருமை ஒதுக்கு புறமான பகுதிகள் குடிசை பகுதி அசுத்தமான மானது நெருக்கடி நிறைந்த பகுதிகள் கல்லறைகள் மருத்துவமனை கசாப்புக்கடை குகைகள் பள்ளங்கள் காலபுருஷனின் தொழில் ஸ்தானம் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள்                                           மகர ராசியின் தன்மைகள்
1 பூமி ராசி
2 சர ராசி
3 பாதி பயன் தரும் ராசி
4. மூட்டு, முழங்கால், கணுக்கால்                                                                                                                        5 . பந்த பாசமுடையது
6. விரைவில் புரிந்து கொள்ளல்
7 குடிசைப் பகுதி
8 தனித்த இடங்கள்
9 மருத்துவமனை
10. சுடுகாடு
11. ஜெயில்
12. பிண அறை
13. மாட்டுத் தொழுவம்
14. குகை
15. குழிகள்
16. நெருக்கமான இடங்கள்
17. குப்பை மேடு
18. தாழ்வான வீடுகள்
19 தெரு
20.பெண் ராசி
21.கடல் குதிரை வடிவம்
22. .கோழைத்தனம்
23 தற்பெருமை
24.சுயநலம்
25. போகத்தில் அதிக நாட்டம்
26. அதிகாலை பொழுது
27. தை மாதம்
28. இரட்டை ராசி
29. கடல் பகுதி                                                                                                                                     30. சுபர்   : புதன், சுக்கிரன்,  பாவி: சந்திரன், குருயோகன் : சுக்கிரன்                                        மகர ராசியின் இடங்கள்
1. சேற்று நிலம்
2 தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதி
3. ஆறு
4. ஏரி
5 குளம்
6 மிருககாட்சி சாலை
7 கடற்கரை
8 நதிக்கரை
9. குடிசைப் பகுதிகள்
10. சிறைச்சாலை
11. மசூதிகள் நிறைந்த பகுதி
12 தாழ்ந்த பிரதேசங்கள்
13. காவலர் குடியிருப்பு
மகர ராசியின் தோற்றங்கள்
1 மெலிந்த
2 பலமற்ற
3 வளர்ச்சி குறைந்த .
4. வளைந்த நிண்ட முக்கு
5 ஆழ்ந்த கண்கள்
6 மிருதுவற்ற முடி
மகர ராசியின் குணாதிசயங்கள்
1 சிக்கனம்
2 விவேகம்
3. நியாயம்
4. சிந்தனையுடைமை
5. அனுபவ எண்ணம்
6 ஒழக்கம்
7 வருந்தி முடித்தல்
8. விடா முயற்சி
9 சகிப்புடன் வேலை செய்தல்
10. விரைவாகச் செய்து முடித்தல்
11. எச்சரிக்கையான தீர்ப்பு
12. நம்பிக்கை
13. பொறுமை
14.திடம்
15. அடக்கம்
16. ஏளனத்துக்கு அஞ்சுதல்
17. நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகுதல்
18 பெருந்தன்மை
19. நம்பிக்கை
20. உண்மை
21. நம்பிக்கை
22 சுயநலம்
23. உணவில் பெரும் விருப்பம்
மகர ராசியின் ஆரோக்கியமும் நோயும்
1 வாத நோய்
2 கிழ்வாதம்
3 அக்கி
4 குஷ்டம்
5 செரியாமை
6 மனநோய்
7 நரம்பு வலி
8 முழங்கால் எலும்பு முறிவு
9. சொறி
10. கரப்பான்
1 பழைய பண்பாடுகளைப் பேணுதல்
2. லாபமடைதல்
3 புகழும் பணச் சகாயமும்
4. மனதை ஒரு வழிப்படுத்துதல்
5 நிரந்தரமான இடத்தில் முதலிடு
6. கைத்தொழில் ஈடுபடல்
7 வீண் விரயமில்லை
8. ஓய்வில்லை
9. அன்புடனிருத்தல் ஆனால் வெளிக்காட்டுவதில்லை
10. மன எழச்சி
11. மெதுவாக தேர்ந்து எடுத்தல்
12. எச்சரிக்கையாய் இருத்தல் முர்க்கமடைவதேயில்லை
13. உண்மையும் விசுவாசம்
14. துணிவு கொள்வதேயில்லை
15. பிறரின் சம்மதத்துக்காகாத்திருத்தல்
1. உருவம் : முதலை
2. சரம்
3 கோபம்
4. நிலத் தத்துவம்
5 . தெற்கு திசை
6. வாதம்
7. வெளிர் சிவப்பு நிறம்
8 முழங்கால்
9. தாமசம் குணம்
10. வண்ணான் ஐn தி
11. இரும்பு
12 எண்ணெய்
13.. எண்ணெய் கிணறு
14. மண்ணிலிருந்து எடுக்கபடும் நகைக் கல் முதலியன
15. இயற்கை வாயுவின் உபயோகம்
16. கண்ணடி., உலோகங்கள்
17. ஈயம்
18. கரி வகைகள்
19. சுரங்க நீர்.
20. உரங்கள், விவாசயக் கருவிகள்
மகர ராசியின் தொழில்கள்
|1. உணவு விடுதி
2 உணவு பொருட்கள்
3 உர வியாபரம்
4. எண்ணெய் வியாபரம்
5 சுரங்க தொழில்
6 திரவப் பொருட்கள் விற்பனை
7. கழிவு பொருட்கள்
8 தோல் வியாபரம்
9. இரும்பு வியாபரம்
10. விவாசயம்
11. கட்டிட வேலை
12. மர வியாபரம் .
13. மண் வியாபரம்
14. கடினமான வேலைகள்
15.கிழ் மட்ட ஊழியம்
தமிழ்நாட்டில் உள்ள இடங்கள்
1 நீலகிரி மாவட்டம்
2. ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதி
3 சேலம் மாவட்டத்தின் வடமேற்கு பகுதி
4 .தர்மபுரி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி
உலகத்தில் உள்ள மகர ராசி பகுதி
1. அல்பேனியா
2 .பல்கோரி யா
3 கிரிஸ்
மகர ராசி காட்டும் நிலப்பகுதி மற்றும் விளையும் பொருட்கள்
1. கரிசல் மண்
2. கச்சல் மண்
3. களிமண்
4 மாட்டுப் பட்டி
5 களஞ்சீயம்
6 முட்புதர்
7. Store Room
8 தாழ்ந்த பிரதேசம்
9. சதுப்பு நிலம்
10. சேற்றுப் பகுதி
11. சிறு தானியங்கள் விளையும் இடம்
12. ஆமணக்கு
13. எள்
14. கடுகு
10. கனி தரும் மரங்கள்
11. பச்சைதானியங்கள்
12 கரும்பு
13 . நெல்
14. கடலை
15.கேழ்வரகு
மகரம்
1. வண்ணான் வீடு
2. எலி, கழுதை வீடு
3 கூட பிறந்த பிறப்பு ஓருவர் இறந்து இருப்பார் or  ஒருத்தருக்கு மனநிலை பாதிப்பு
4. மகர லக்கினம் or  ராசி  எதையாவது தேடி கொண்டு இருக்கும்
5 வீட்டுக்கு அருகில் அயர்ன் கடை தெரு End க்குள் இருக்கும்
6 இவர்கள் வீடு மசூதி அருகில் or  சுடுகாடு போகும் வழியில் அமையும்
7 மகரத்தில் குரு இருந்தால் பால் உள்ள மரம்
8 மகரத்தில் சனி இருந்தால் பட்டு போன மரம்
9. வீடு கட்ட கூடாது, பழைய வீடு வாங்கலாம்
10. கஜேந்திர மோட்சம் படம் வீட்டில் வைப்பது, கஜேந்திர மோட்ச மந்திரம் கேட்பது நல்லது                                                                                                                                           மகரத்துக்கு கும்பம் தனம் வாக்கு குடும்பம் ஸ்தானம்  ஆகும். இது காற்று ராசி ஸ்திர ராசி எனவே மகர லக்னத்தார் தங்கள் பேச்சில் பிடிவாதமும் விட்டு குடுக்காத தன்மை  இருக்கும். பணம் பற்றிய சிந்தனை இருக்கும். தங்கள் பேச்சு திறமையால் பணம் சம்பாதிப்பார்கள்  பணம் விஷயங்களில் தெளிவாக பேசுவது மதிப்பு மிக்க பொருட்கள் பத்திரங்கள் விலையுயர்ந்த பொருட்களை நிரந்தரமாக வைத்து இருப்பார்கள்   புத்திசாலி தனமாக பேசுதல் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் பொருளாதார லாபங்களுக்காக தன்னையே மாற்றிக் கொள்வது சேமிப்பு ரகசிய திட்டம் புதையல் மூலம் அடைதல் போன்றவை அடங்கும்
மகரம்
மகர ராசியின் உருவம் முதலையாகும். முதலை தன் இரைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக்கிடக்கும் குணமுடையவை,இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்கள் காரியங்களை நடத்தி செல்வதில் வல்லவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். முதலைகள் போல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள். தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள், ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வார்கள். வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள்,கிடக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வார்கள். பொறுமை இவர்களுக்கு அதிகம்.

மகரம்
மகர ராசியின் உருவம் முதலையாகும். சதுப்பு நிலக்காடுகள்,சேற்றுப்பகுதி இவைகளில் முதலைகள் வசிக்கும். எனவே சேற்று நிலமான வயலும்,வயல் சார்ந்த இடங்களையும்,சதுப்பு நிலக்காடுகளையும் மகர ராசி குறிக்கும்.

மகர ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
உத்திராடம் 2,3,4
திருவோணம் 1,2,3,4
அவிட்டம் 1,2

மகர ராசியில் ஆட்சி பெறும் கிரகம் சனி

உச்சமடையும் கிரகம் செவ்வாய்

நீசமடையும் கிரகம் குரு
சனி
சூரியனுக்கு வெகு தலைவில் உள்ள கிரகம் சனியாகும். இதனால் இந்த கிரகத்தில் வெப்பமும், வெளிச்சமும் குறைந்து , குளிர்ச்சியும், இருளும் நிறைந்து காணப்படுகிறது. நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லும் கிரகம் சனியாகும். இதன் சுற்றுப்பாதை மற்ற எல்லா கிரகங்களை விடவும் பெரியதாகும். சனியின் நிறம் கருப்பு  கரு நீல நிறமாகும். இந்த கிரகத்தை சுற்றி வளையம் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன.
மனிதர்களில் உடல் ஒளி குறைந்து, நடை தளர்ந்து  போனவர்கள் முதியவர்களாகும். சனியும் ஒளி குறந்த , நடை தளர்ந்த கிரகம் என்பதால், முதியவர், உடல் ஊனமுற்றவர், நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர்களைக்குறிப்பது சனியாகும்.  சனியின் சுற்றுப்பாதையும் பெரியது, முதியவர்களின் அனுபவமும் பெரியது, எனவே அனுபசாலிகளை குறிப்பது சனியாகும். சனி மெதுவாக நகர்வது போல் வயது முதிர்ந்தவர்களும், உடல் ஊனமுற்றவர்களும், நோயாளிகளும் மெதுவாக நடப்பர், அதனால் வயது முதிர்ந்தவர்களை குறிப்பது சனியாகும்.
சனி ஒரு குளிர்ச்சியான கிரகமாகும் , குளிர்ச்சியை மருத்துவ சாஸ்திரத்தில் கபம் அல்லது சிலேத்துமம் என்பர். கபம் மீறினால் மரணம் என்கிறது மருத்துவ சாஸ்திரம். அதாவது வாதம், பித்தம், கபம் என்னும் முத்தோசங்களில் கபம் என்னும் தோசம் அதிகரிப்பதினாலேயே மரணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தினால் ஜோதிடத்தில் சனியை ஆயுள் காரகன் என அழைக்கிறார்கள்.
கிரகங்களில் அதிக சூரிய வெளிச்சம் விழாத கிரகம் சனி, அது போல் மனித உடலில் அதிக வெளிச்சம் விழாத உடல் உறுப்பு கால்களாகும். கால்களில் குறிப்பாக மூட்டு, முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகிய பகுதிகளில் இயற்கையிலேயே அதிக வெளிச்சம் படாது , மேலும் செயற்கையாகவும் கால்களில் சூரிய ஒளி விழாமல் மனிதர்களால் மறைக்கப்படுகிறது. எனவே மூட்டு, முழங்கால், கணுக்கால் ஆகிய உறுப்புகளை குறிப்பது சனியாகும். முகத்தில் அதிக வெளிச்சம் விழாத உறுப்பு தாடையாகும். எனவே தாடையை குறிப்பது சனியாகும்.
சனியின் நிறம் கருப்பு என்பதால் , பூமியில் கருப்பு  நிறத்தில் உள்ளவை எல்லாம் சனியின் ஆதிக்கத்தில் உள்ளவையாகும். கருப்பு நிற காகம், கருப்பு நிற எருமை, கருப்பு நிற தானியமான எள்,கடுகு, கருப்பு நிற உலோகமான இரும்பு, அடுப்புக்கரி, நிலக்கரி, கரு நீல நிறம் கொண்ட நீலக்கல் போன்றவை சனியின் ஆதிக்கத்தில் உள்ளவையாகும்.
சனியின் நிறமும் கருப்பு அல்லது இருட்டு, மனிதர்களின் விதியும் ஒரு வகையான இருட்டுதான். இருட்டுக்குள் ஒழிந்திருப்பதை காண்பதும் கடினம், விதியை முன்கூட்டியே அறிந்துகொள்வதும் கடினமாகும். இதனால் சனியை விதிக்காரகன் என அழைக்கிறார்கள். அனைத்து பொருட்களையும் மொத்தமாக கவ்விக்கொள்ளும் தன்மை இருட்டுக்கு உண்டு. எனவே எதையும் வெளிக்காட்டாமல் தனக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும் தன்மை சனிக்கு உண்டு. வெளிப்படையாக பேசாமல் விசயங்களை மறைத்து பேசுவது அல்லது பொய் பேசுவதை குறிக்கும் கிரகம் சனியாகும். ரகசியங்களை குறிக்கும் கிரகம் சனியேயாகும்.
இருட்டறை, பிணவறை, சேமிப்பு கிடங்கு , நிலக்கரி சுரங்கங்கள், சுரங்கப்பாதைகள், குகைகள் போன்ற இடங்களில் இருள் நிறைந்து இருக்கும். இத்தகைய இடங்கள் சனியின் ஆளுகைக்குள் வரும்.
இருட்டுக்குள் நடப்பதை பிறர் அறிய முடியாது , இருட்டுக்குள்தான் அதிகம் திருட்டு  நடக்கிறது , இதனால் இருட்டுக்கிரகமான சனியை சோரக்காரகன் (திருட்டு) என அழைக்கிறார்கள்.
மனிதர்களுக்கு நோய் வந்தால் விரைவில் குணமாகிவிடும், நோய் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருந்தால் அது நாள் பட்ட வியாதிகளாகும். மெதுவாக குணமாகும் நாள்ப்பட்ட வியாதிகளை குறிப்பது சனியாகும். சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால் எதிலும் தாமதத்தை ஏற்படுத்தும் கிரகம் சனியாகும்.
சோம்பேறிகள் சுறுசுறுப்பாக இருக்கமாட்டார்கள், சனியைப்போல் மிகவும் மெதுவாக செயல்படுவார்கள். எனவே சோம்பேறித்தனத்தை குறிப்பது சனியாகும்.
மனிதனுக்கு தூக்கம் என்பது இருள் சூழ்ந்து, குளிச்சி அதிகமுள்ள இரவு நேரத்தில்தான் வருகிறது. எனவே தூக்கத்திற்கு அதிபதி சனியாகும்.
மனிதர்களில் ஏழை எளியவர்களின் வாழ்க்கை எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்கிறது. அவர்களுக்கு எதுவும் சீக்கிரத்தில் கிடைப்பதில்லை, எனவே ஏழை எளியவர்களை குறிப்பது சனியாகும்.
வாழ்க்கையில் ஒரு சில மனிதர்களைத்தவிர பெரும்பான்மையான மக்கள் வெளிச்சத்திற்கு வந்து புகழடைவதில்லை. அவர்களின் வாழ்க்கை இருண்ட வாழ்க்கையாகவே அமைந்துவிகிறது. எனவே வெகு ஜனங்களை அல்லது பொது மக்களை குறிப்பது சனியாகும்.
உலகத்தில் உள்ள கடின உழைப்பாளிகள் எல்லாம் கருப்பு நிறத்தில் உள்ளனர். உடல் உழைப்பு இல்லாத சமூகத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. எனவே உழைப்பாளர் வர்கத்தினரை குறிப்பவர் சனியாகும்.

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுதுஎன்று சொல்லி திட்டுவார்கள்.

உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும்.

வழிபாடு பரிகாரம்

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு                                                                                                                                                                            மகர ராசியின் தன்மைகள் :

சர ராசி
ராசியின் அதிபதி : சனி பகவான்
நில ராசி
பெண் ராசி
தெற்கு ராசி
கர்ம ராசி
ராசியின் இடம் : நதிகள்
ராசியின் காலம் : காலை
ராசியின் குணம் : அமைதி
மகர ராசியின் காரத்துவங்கள் :

1. வீட்டுப் பொருள் வைக்கும் பகுதி
2. அணைக்கட்டுப் பகுதி
3. கடற்கரை சேறு நிரம்பிய பகுதி
4. காவலர் குடியிருப்பு
5. தொழிற்சாலை நிரம்பிய பகுதி
6. உணவு விடுதி
7. உர வியாபாரம்
8. எண்ணெய் வியாபாரம்
9. சுரங்கத் தொழில்
10. திரவப் பொருள் விற்பனை
11. கழிவுப் பொருட்கள் விற்பனை
12. தோல், இரும்பு வியாபாரம்
13. கட்டிட வேலை
14. கடினமான வேலை
15.கீழ்மட்ட ஊழியம்
16.முழங்கால்

ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்.

மாரக அதிபதி: செவ்வாய்
மகரம் உத்திராடம் ரெண்டு மூணு நாலு பாதங்கள் திருவோணம் 4 பாதங்களும் அவிட்டம் 1, 2 பாதங்கள் உடையவர்கள் மகரத்தில் வருவார்கள் பொதுவாக இந்த ராசிக்காரர்கள் சுயமாக சம்பாதித்து வாழ விரும்புவார்கள் திடபுத்தி உடையவர்கள் சுயநலமிக்கவர்கள் தங்களை மதித்து வருபவர்களுக்கு உதவி செய்ய தயங்காதவர்கள் சுகந்த திரவியங்கள் மீது நாட்டம் உடையவர்கள் ஆன்மீகத்தில் புராணங்களில் விசுவாசம் உடையவர்கள் அதை கற்றுக் கொள்ள விரும்புவார்கள் மரபு வழியை பின்பற்ற நினைப்பவர்கள் உபயோகப் படுத்திக் கொள்வார்கள் இவர்களுக்கு அந்தஸ்து புகழ் அனைத்தும் வாய்க்கும் கொண்ட கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள் கவலைகள் சந்தோஷங்கள் எதுவானாலும் வெளியே காட்டி கொள்ள மாட்டார்கள் இவர்கள் அமுக்கிணிகள் என்று பேர் வாங்குவார்கள்.
தாய் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருப்பார்கள் விடாமுயற்சி கொண்டவர்கள் நாணயம் நம்பிக்கை மிக்கவர்கள் தாயிடம் போலவே மனைவியிடம் மிகுந்த பாசம் காரர்களாக இருப்பார்கள்  குரு சந்திரன் மாரகர்கள். இவர்கள் மாரக ஸ்தானம் ஆகிய 2,3,7,8,12 ல் இருந்தால் கண்டத்தை கொடுப்பார்கள் மகரம் ராசிக்கு உரியவை கருமை நிறம் பிரவுன் நிறம் கிரே நேவி ப்ளூ  மாதம் தை வடக்கு திசை கடந்த காலம் வாசனை திரவியங்கள் நாட்டம் இரவில் பலம் உள்ள ராசிசூரியன் பகை ராசி, சந்திரன் புதன் சமம்செவ்வாய் உச்சம்குரு நீச்சம்சனி ஆட்சிராகு கேது சுக்கிரன் நட்பு
மகர ராசியினருக்கு சொந்த ஊரை விட வெளி ஊர்களில் வசித்து வர தொழில் செய்து வர சுபிட்சம் உண்டாகும்
மகர ராசியினருக்கு நல்ல குணவதி மனைவியாக வருவார் மகரத்தில் சனி கடகத்தில் சந்திரன் சுபகிரகங்களுடன் இருந்தாலும் சுபகிரக பார்வை இருந்தாலும் இளமையில் திருமணம்
மகரத்தில் குரு இருக்க அதற்கு ஏழாம் இடமான கடகத்தில் சுக்கிரன் இருந்து பார்வை பெற்றால் பார்த்தால் இவருக்கு மனைவியால் இறுதிக்காலத்தில் பிரச்னைகள்தான்
மகரத்தில் ராகு கேது அவர்கள் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது
பெண்களுக்கு மகரத்தில் கேது இருந்தால் 22 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
மகரத்தில் ராகு இருந்தால் ஆண்கள் தாமத திருமணம் நன்று
காலப்புருஸனுக்கு பத்தாம் இடம் மகரம் ரத்தம் சிந்தி உழைத்தால் உழைப்பால் உயரலாம்  என்ற தத்துவம் த்தை உணர்த்தும் ராசி அபிஜித் நட்சத்திரம் உள்ள ராசி  தெற்குப் பகுதியின்   பாதிகடல் ராசி  தொழில் கல்விபடிப்புநன்று  கண்டிப்பாக உபதொழில் செய்வர்  அடுத்தவர்க்கு உழைப்பதில் ஆர்வம் தொழிற்சங்க வாதிகள் இரவுப்பணி நன்று தனிமை வரும் பி இனிமை காண்பா்  தையற்கலைஆர்வம்  கொண்டகருத்துக்களில் உறுதியுண்டு  குருதிததானமும் உண்டு  இந்த ராசியினர் உழைத்துக்கொண்டும் படிப்பா்  படித்துக்கொண்டும் உழைப்பா்
மகர ராசிகாரர்கள் எந்த இடத்திலும் இடத்திற்கேற்ப தன்னை மாற்றி அமைத்து கொள்வார்கள். நல்ல உழைப்பாளிகள்.
மகர ராசியில் பிறந்தவர்கள் கல்வி கலை, கேள்விகளில் மேன்மையானவர்களாகவும், உயர்ந்த எண்ணங்களை உடையவர்களாகவும்தெய்வபக்தி மிக்கவர்களாகவும்அந்தஸ்துக்கு ஏற்றவர்களோடு  நட்பும்பெரியவர்களின் அன்பும் ஆதரவும் உள்ளவர்களாகவும்நேர்மையான பேச்சும்மதிப்பான வாழ்வும் கொண்டவர்களாக இருந்தாலும்குடும்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் உண்டாகி கலங்குபவராக இருப்பார்கள். தன்னை மதிக்காதவரை மதிக்காத, இவர்கள் செய்ய நினைப்பவற்றை  செய்து முடித்த பின்பே வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்.  செல்வம் செல்வாக்குடன் வாழ்வார்கள்                                                                                                                                                           மகர ராசிக்காரர்கள் ரிஷபம் ராசிக்காரர்களுடன் கூட்டு வைத்தால் தொழில் சிறக்கும் மேஷராசிக்காரர்களுக்கு இவர்களுக்கும் ஆகாது பிரச்சினைகள் உண்டாகும் துலாம் ராசிகாரர்களும் கடக ராசிக்காரர்கள் உதவுவார்கள்
மகர ராசி காரர்கள் ரிஷபம் விருச்சிகம் மகரம் கன்னி ராசிக்காரர்களே உதவியாளர்களாக வைத்துக் கொண்டால் வெற்றி பெறலாம்
கட்டட உபகரணங்கள் வியாபாரம் இரும்பு பாத்திர வியாபாரம் தோல் பொருட்கள் பெயிண்டுகள் காலணிகள் தோட்டக்கலை சம்பந்தமானவை சிவில் இன்ஜினியர்களுக்கு எஞ்சினியர்கள் புகைப்படத் தொழில் மரம் காடுகள் சம்பந்தப்பட்ட தொழில்கள் பண்ணைகள் ஆகியவற்றில் லாபம் சம்பாதிக்கலாம்                                                                                                                                                       மீனராசி காலபுருஷனின் விரயம் மகரத்துக்கு   3. 12 ஆகும் ஜலராசி உபயராசி இவர் உடன் பிறந்தவர்கள் மூலம் நிறைய இழப்பு ஏற்படும். நம்பிக்கை அடிப்படையில் ஏமாற்றம் மேலும் காண்டிராக்ட் மூலம் இழப்பு இருக்கும் காலபுருஷனின் விரயம். இந்த இடம். 5, 10 சுக்கிரன் உச்சம்  இங்கு எந்த நிலையிலும் தனக்கு குடுக்க பட்ட கர்மாவை  தொழிலை மற்றவர்கள் பாராட்டும் வகையில் முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். காலத்துக்கு 3, 6 புதன் இங்கே. நீசம்  மாமன் மூலம் எந்த பலனும் இவர்களுக்கு கிடைக்காது. மற்றவருடன் இணக்கமாக குண நலத்தோடு ஒன்றினாலும் விரைவில் விரோதம் கண்டு விலகி விடுவார்கள்.
மகரம் ராசி நட்சத்திர பலன் உத்திராடம் நேர்மை கம்பீரமாக தாய் தந்தை பாசம் அதிக செல்வம் செல்வாக்கு ஒரு துறையிலகெட்டிக்கார் கவிஞர்கள் பண்டிதர்  மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் மந்திரி  அரசியல் ஞானம் பெற்றவர்கள்  மகர ராசி:  உருவம் முதலையின்   உடலும்  வெள்ளாட்டின் தலையும்  இணைந்த உருவம். சரராசி. பார்க்க  அப்பாவி  போன்றும் கடுமையான  குணமும் கொண்டவர்.  ஒரு தொழில் செய்யும்  நபராக இருப்பார். கடினமான உள்ளம்  கொண்டவர். கடினமான வேலையும் செய்யக்கூடியவர். பொருமையாக சாதிக்கும் தன்மை  இருக்கும். எல்லா இடங்களிலும்  வலம் வரக்கூடியவர். எல்லாத்தையும் தெரிய வேண்டும் என்று ஆசை படுபவர். மண்ணை  தோண்டி எடுக்கும்ராசி  கொசு எலி கழுதை சுடுகாடு பன்றி வீடு இதெல்லாம் மகரராசியை குறிக்கும். இவர்கள் வராகர் சுவாமி படம் வைப்பது நல்லது. கஜேந்திர  மோட்ச்ச படம்  வைக்கலாம் தாய் தந்தையை  பிரிந்து பிரிந்து வாழும் ராசி. இருதாரம் உடையது. இது மெட்டல் வீடு. உடன் பிறந்தவர்கள் குறைந்த வயதில்  இறந்திருப்பார்.  மேடு பள்ளமான இடம். புறம்போக்கு நிலம் அருகில் இருக்கும்.  நண்பர்களிடம் வண்டி கொடுக்ககூடாது கொடுத்தால் திரும்பி வராது. சொத்து எப்ப அமையும் என்ற கேள்வி  இருந்து கொண்டே இருக்கும். வெளிநாட்டு ராசி. குத்தகை வீடு.இவர்கள் ஒரு வீட்டுக்கு குத்தகைக்கு போனால் அந்த வீட்டையோ  அல்லது சொந்த வீடு  அமையும் தன்மை உள்ளது.மகரராசிக்  காரர்கள் சொந்தவீடு  இல்லை என்றால்  குத்தகைக்கு போங்க  வீடு  அமையும் என்று  சொல்லவேண்டூம்.  குடும்பத்தில் குழந்தை  இல்லாதவர்கள்  இருப்பார்கள். சுகபோக வாழ்க்கை பெரும்பாலும் இவர்களுக்கு இருக்காது.  வண்டி வீடு வாகனம் ஒரு தொல்லையை தராமல் இருக்காது. 1 0ம்அதிபதி லக்னத்தில்  இருப்பது சிறப்பு இல்லை.மூட்டு வலி நரம்பு பிரச்சனை  இருக்கும்.இவர்கள்  பேசினால் அளந்து தான் பேசுவார்கள்.  வீட்டின் பக்கத்தில்  சாக்கடை ஓடும்.  வீட்டின் பின்புறம்  ஆசாரி பூணூல் போட்டவர்கள் இருப்பார்கள்.இவர்கள் வீட்டின் வழியாகத்தான் பிரேதம் போகும்.மூத்தவர்கள் இருந்தால் அவர்கள்  வாழ்க்கை சரியில்லாமல் இருக்கும்.இரும்பு  சம்மந்தப்பட்ட தொழில்  செய்வார்கள். ஆறு ஏரி குளம் வீட்டின் அருகே இருக்கும். மரங்கள்:கருவேழாமரம்  கடம்பு இழந்தை மரம் புளிய மரம் நாரத்தங்காய். பால் இல்லாத மரங்கள். சதை பற்று இல்லாத மரங்கள்.இவர்கள்  நாரத்தங்காய் ஊறுகாய்  விரும்பி சுவைப்பார்கள். மகரம் திருவோணம்  நட்சத்திரம் அமைதி யான குணம் தாய் பாசம்ஆடை அலங்காரம் வாசனை பொருட்கள் மீது விருப்பம் ஆன்மீக துறையில் நாட்டம் சாஸ்திரம் புராணம்  தெய்வம் காரியம்  ஈடுபாடு உண்டு மனைவி வழி உறவினர்கள் நன்மை  உண்டு மகரம் அவிட்டம் 2 பாதம் நல்ல புத்திசாலி அதிக முன்கோபம் மனோதிடம்  அதிக தூணிசசல்  கட்ட்ட கலை காவல்துறை வீர தீர விளையாட்டு சகோதரர் பாசம் தாய் பாசம்  தொழில் நுட்பம்  அறிந்துவர்கள்   மகரம் பாதி நீர், பாதி நிலம், வெளிநாட்டு ராசி,  எலி வீடு, வீட்டில் கண்டிப்பாக எலி வலை இருக்கும், தெற்கு பகுதி,   மேடு, பள்ளமாக இருக்கும், இடம் வாங்கினால் நிறைய லோடு மணல் போட்டுத்தான் சமப்படுத்த முடியும்,   சலவைக்காரர் அருகில் இருப்பார், சலூன், லாண்ட்ரி அருகில் இருக்கும்,  உடன் பிறந்தவர் ஒருவர் இளவயதில் இறந்திருக்கலாம் அல்லது திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருக்கும் அல்லது திருமணம் தடை அல்லது குழந்தை இல்லாமல் இருக்கும்
எல்லாவேலைகளையும் தானே செய்தால் தான் திருப்தி, அதனால் அடுத்தவர்களுக்கு இவர்களுக்கு வேலை தருவார்கள்,
பாத்திர கடை, மெட்டல் தொழில், சனி இருந்தாலும் பார்த்தாலும் இயன் பாக்ஸில் சூடு படும்
திருவோணம்
சுக போகத்தை விரும்பாது கிடைக்காது யூரின் பிரச்சனை உண்டு, வயிறு சம்பந்தமான தொல்லைகள் இருக்கும், ஆசிரியர், ஜோதிடர், உளவு துறை
அவிட்டம்
ஆயுள் குறைபாடு உள்ளவர்கள், இசை ஈடுபாடு, இசை கலைஞர்கள், சொத்து உண்டு, சொத்துடன் பிரச்சனையும் உண்டு
லக்கினாதிபதியே வாக்குக்கு அதிபதி அதிகம் பேசுவார்கள் பேசியே சம்பாதிப்பார்கள்
கால புருஷனுக்கு பத்தாவது ராசி மகரம். நட்சத்திரங்கள் உத்திராடம் 2 3 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள். எழுத்துக்கள் உத்திராடம் பே போ ஜ ஜி திருவோணம் கி கு கே கோ அவிட்டம் க கி கு கே. இவர்கள் மிகவும் பொறுமைசாலி. எடுத்த வேலையை முடிக்கும் வரை கண்ணும் கருத்துமாக இருப்பார். மகர ராசியில் பிறந்தவர்கள் பொய்கை ஆழ்வார் ரஜினிகாந்த் பாடகி எஸ் ஜானகி அப்பல்லோ நிர்வாக இயக்குனர் பிரீதா ரெட்டி. விளம்பரப் பிரியர்கள். எங்கும் தனக்கே முதலிடம் கிடைக்க வேண்டும் என நினைப்பார். கூட்டத்தில் குரலை உயர்த்தி பேசுவார். அங்கு தன்னை முன்னிலை படுத்த முயற்சி செய்வார். கையில் காசு இல்லை என்றாலும் சொகுசாக வாழ்வது போல் காட்டிக் கொள்வார்கள். அனைவருடனும் கலகலப்பாக பேசுவார். ஆண்களுக்கு பெண்கள் மீது அளவற்ற ஈடுபாடு உண்டு. இளகிய மனதுடையவர். மற்றவரை ஈர்க்கக் கூடியவர். தன்னைப் பற்றி மற்றவர் புகழ்ந்து பேச வேண்டும் என ஆசைப்படுவார். அதற்காக தன்னை பிரபலப்படுத்திக் கொள்வார். தான் எப்போதும் உற்சாகம் இருப்பது போல் காட்டிக் கொள்வார். இயல்பை மீறி சில சமயங்களில் மற்றவரை புண்படுத்தி விடுவார். வெளியில் தைரியமானவராக காட்டிக் கொண்டாலும் மனதுக்குள் ஒரு அச்சம் இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்துக்காக நினைப்பதை கடமையாகக் கொண்டவர். குடும்பப் பொறுப்புகளை தன்னுடன் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை துணையை விரும்புவார். சமூக அந்தஸ்துக்கு முன்னுரிமை கொடுப்பார். கண்ணியமாக உடை அணிவதை விரும்புவார். அவ்வாறு இல்லாதவரை ஒதுக்கி வைப்பார். இவர்கள் அகராதியில் போதும் என்ற சொல் இல்லை. தன் இலக்கை அடைய மற்றவரை துன்புறுத்த மாட்டார். பொறுமை மற்றும் கடின உழைப்புடன் இலக்கை அடைவர்.
குடும்பத்திற்காக உழைப்பதை கடமையாக கொண்டவர்                                திருவோணம்:இந்த  நட்சததி்ரத்தில் ஒரு கிரகம் இருந்தால்  ஆசிரியர் உண்டு. ரகசியத்தை சேமிப்பார்கள் சுகபோகத்தை  விரும்பாது சுகபோகத்தைவிட்டுக் விட்டுக்கொடுத்தால்  ஜெயிப்பார்கள்.  அன்பானது போல நடிப்பார்கள். ஏமாற்றும் நட்சத்திரம்  ஆள்மயக்கி. அறிவாளி  பெண்களாக இருந்தால் மாதவிடாய் வயிறு பிரச்சனை இருக்கும்.  பாசத்துக்கு ஏங்குவார்கள்.C.I.D .வேலை.  விஷ்ணு சங்கு சக்கரம்  ஸ்ரீரங்கம் ஆண்டாள்  திருப்பாவை வழிபாடு. திருவோணத்தில் ஒரு கிரகம் இருந்தாலே  ஆண்டாள் திருப்பாவை  மார்கழி மாதம்  பாராயணம் செய்யலாம்  ராபத்து பகல் பத்து கேட்கலாம்.துளசிமாடம்  வைக்கலாம். ஜெயின் கோவிலுக்கு போகலாம்.
ஆயுள்காரகனான சனியின் மகர லக்னத்தில் பிறந்தவன் பலம் மிகுந்தவன்.
கிரகிக்கப் பெற்ற வார்த்தையை உடையவன் .
மந்தன்,இழிந்த வயதான பெண்களிடம் பிரியமுள்ளவன், கபட வேடன், எங்கும் திரிந்து கொண்டிருப்பவன்.
பாக்யமுடையவன் வாத ரோகம் கொண்டவன். இந்த ராசியை சேர்ந்தவர்கள் சர வெடியை போல் வெடிப்பார்கள் .
சனி எப்போதும் நீதிமான். முடிந்த வரையில் பேசி பார்ப்பார்கள் . அதற்கும் பணியவில்லையெனில் அதிரடியாக இறங்குவார்கள்.
வாழ்க்கையில் அதலபாதாளத்திறக்கு சென்றாலும் மீண்டும் எழுந்துவிடுவார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற தியாகம் செய்யக் கூடியவர். தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாதவர். ஆடம்பரம் மிக்கவர்கள். விருந்தாளிகளை பார்த்துப் பார்த்து கவனிப்பார். தான் விருந்துக்கு செல்லும் இடத்தில் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்றால் முகத்துக்கு நேராக கூறிவிடுவார். இவர் விருந்துக்கு வந்ததை மற்றவர் பெரிதாக நினைக்கவேண்டும்.  சாப்பாட்டுப் பிரியரான இவர் பிடித்த உணவுக்காக நட்சத்திர ஓட்டலாக இருந்தாலும் தெருவோர கடையாக இருந்தாலும் விடமாட்டார். இவருக்குப் பிடித்த உணவைக் கொண்டு இவரை திருப்திப் படுத்த முடியும். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்                                                                                                                                         அவிட்டம்: இந்த நட்சத்திரம் ஆயுள்  குறைபாடு உள்ளவர்களை சுட்டிக் காட்டும்.இசை கலைஞர்கள் பறை  தோல் கருவி. மேளம் வாத்தியம்  ட்ரம்ஸ் அடித்தால் அங்கு  ஓடிவிடுவார்கள்.  உத்தியோகம் சிறப்பு.  குத்தகை வீடு.  வீடு குத்தகை போகியம் லீசு இதற்கு போனால் இவர்கள் அந்த வீட்டையும் இடத்தையும் சொந்தமாக வாங்கி விடுவார்கள். கண் பல் பிரச்சனை இருக்கும்.கால் உழைச்சல் அதிகமாகஇருக்கும். சொத்து பிரச்சனை இருக்கும்.சகோதரர்  சம்மந்தமானபிரச்சனை  விரையம் இருக்கும் சகோதரர் வெளிநாடு  செல்வதற்காக விரையம் இருக்கும். முருகன் வழிபாடு மயில் மகரராசி :டோபி  சலவைக்கூடம். சுடுகாடு ஜெயில்பகுதி  ஜெயில்ரோடு அந்த மாதிரியான தொழில்  அமையும். அல்லது அந்தமாதிரியான  இடத்தில் வீடு இருக்கும்.  மகரவீடுக்கு எலிபொந்து இருக்கும்  வராஹ அவதாரம்  எடுத்த வீடு. வீட்டை  சுற்றி பன்றிகள்  கழுதைகள் இருக்கும்.  இவர்களுக்கு காய்ச்சல் வந்தால் பன்றிகாய்ச்சல்  எலிக்காய்ச்சல் தான் வரும்.இரும்பு வீடு பாத்திரக்கடை.  காக்கா வீடு. மெயின்ரோட்டில் இடம் வாங்கக்கூடாது. தலைவலி உள்ளவர்கள்  கண்ணாடி போடுவார். பழைய மாத்திரை வீட்டில் இருக்கும். மோசன் பிரச்சனை  இருக்கும்பொருளாதாரம் சிறப்பு இல்லை.  அதிகம் பேசிக்கொண்டே  இருப்பார்கள். சொத்தை பல் இல்லாத  மகரமே இல்லை.  திருவோணம்:  கணவன் மனைவி  பேசாமல் இருக்கக் கூடியவர்கள். பெண்களுக்கு மெண்டல் பிராப்பளம்  இருக்கும்.இடது கை பழக்கம் இருக்கும். மகரப்பெண்:கம்மல் மூக்குத்தி சரியாக  இருக்காது.உறவில்  தாய் தந்தை லவ்மேரேஜ்  தாய்பால் இல்லை   மாற்றாந்தாய் பிள்ளை. இவர்களுடைய சொத்து  அண்ணன் நண்பர்  பொறுப்பில்  இருக்கும். முதல் குழந்தை   கர்ப்பத்தில் பிரச்சனை  குழந்தைக்கு 1 வயது  முடிவதற்க்குள் தாத்தா  இறப்பு                                                                                                                                                                     மகர ராசியினர் அனைத்தும் அறிவார்கள்.  அறிந்ததை ஆய்வார்கள் ஆய்ந்து தெரிந்தை  அடுத்தவர்க்குச்சொல்லுவார்கள்  1 க்குடையவரே  2  க்குடையவர் சனி  பொருளாதாரம் சிறப்பு  இல்லை.வாக்கால்  தொழில் அமையும்.  வங்கி தொழிலில்  இருப்பார்கள். அதிகமாக பேசவேண்டும் என்று நினைப்பவர்கள். வாய் கொஞ்சம்  ஜாஸ்தியாக இருக்கும்.  வரவு செலவுகளை  தானே பார்க்க வேண்டும் என்று எண்ணம் யாரையும்  நம்பாமல் தன்கைக்குள்  வைத்துக்கொள்வார்கள் சின்ன வயதில் பல்லைகுடைபவர் . 3  க்குடையவரே  12 க்கு டையவர் குரு சகோதரன் வெளிநாட்டில் இருப்பார். பிரிவினை.இயந்திரத்தில் வேலைசெய்யக்  கூடாது.E.N.T.ப்ராப்ளம் இருக்கும். 3 மிடம் சம்மந்தமான பிரச்சனை இருக்கும்.  விரையம் இருக்கும். 4 க்குடையவரே  11 க்குடையவர் செவ்வாய். தாய் மூத்தவர்.அல்லது 4 வது குழந்தை. சொந்தத்தில்திருமணம்  அல்லது காதல்  திருமணம் தாய் தந்தை. வண்டி வீடு வாகனம்  உண்டு.இடம் சொத்தில்  கவனம் தேவை.
சந்திரன் 7  ம்வீட்டு அதிபதியானதால் எப்போதுமே ஒரு கூட்டாளியை வைத்துக்கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் மனச் சோர்வுடன் இருப்பர்
5 க்குடையவரே 10 க்குடையவர் சுக்ரன். முதல் குழந்தைபிறந்தவுடன் ஒரு கர்மம்  உண்டு அதன் பின் தொழில் வளர்ச்சி.தாத்தா வழியில் அன்னதானம் செய்தவர்கள் உண்டு. 6 க்குடையவரே 9 க்குடையவர் புதன். தந்தையுடன் கருத்து  வேறுபாடு  அல்லது   பிரிந்து வாழ்ந்திருப்பார் தந்தை அல்லது தாத்தா இரண்டு திருமணம். கடன் தேடி வரும். உணவுக்கு தட்டுப்பாடு இல்லை. திருவிழாவின்  போது அதிக டென்ஷன் இருக்கும்.ஒரு நிகழ்ச்சி சுப நிகழ்ச்சியின் போது அதற்கு எல்லாம் இவர்கள் செட்டாக மாட்டார்கள்.அதுக்கு  சரிப்பட்டு வரமாட்டாங்க தந்தை வழி சொத்தில்  வழக்கு உண்டு.தடை.  7 க்குடையவன் சந்திரன்  மனைவி அல்லது  கணவன் கொஞ்சம் அழகாக இருப்பாங்க. திருமணம் முடிந்தவுடன்  இடமாற்றம் இருக்கும். திருமணத்தன்று மழைவரும்.வந்திருக்கும்.  8  க்குடையவன் சூரியன் மெயின் ரோட்டில் இடம் வாங்கக்கூடாது அப்படி இருந்தால்அதை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். மாத்திரைகளை பார்த்து  வாங்கவேண்டும்.
மகரம்
1:சரம்
2:பெண்
3:அதிபதி-சனி பகவான்
4:உச்சம்  -செவ்வாய்
5:நீச்சம்   -குரு
6:திசை   -தெற்கு மேற்கு
7:ஒற்றைப் படை ராசி
8:நிலராசி(சகதி நிலம்)
9:தாது
10:அர்த்தம்
11:இரவில் பலம்
12:இரவில் செவிடு
13:சௌம்யம்
14:சுறா
15:முதலை
16:மங்களான நிறம்
17:ராஜராஜேஸ்வரி
18:முழங்கால்
19:பாதி பலன்
20:மண் ராசி
21:நான்கு கால் ராசி
22:மாதம்-தை மாதம்  மகர லக்கனம்
23:சுயசிந்தனை
24:கமுக்கன்
25:சமயப பற்று உள்ளது போல் நடிப்பான் ஆனால் சமய பற்று அற்றவன்
26:தந்திரன்
27:தீவிரச் சிந்தனை
28:சூழ்நிலைக் கேற்றவாறு மாறிக் கொள்வான்
29:இரக்கம்
30:பெருந்தன்மை
31:மக்களுக்கு சேவை செய்யதல்
32:அரட்டை குணம்
33:நாவடக்கமின்மை
34:உழைப்பு
35:திடமான முடிவு
36:பணிவு
37:தான் தோன்றி தனம்
38:பழிவாங்கும் குணம்
39:ஊழியர்களை பகைத்தல்
40:பங்காளியிடம் பகைமை
41:கொடூரத்தனம்
42:வெட்கமறியாதவன்
43:நடையில் ஆர்வம்
44:கவிதை எழுதுதல்
45:வலிமையான உடல்
46:கால்கள் வலிமை குறைவு
47:சம  உயரம்
48:விதண்ட வாதிகள்
49:மூத்தபெண் தொடர்பு
50:தனக்கு தானே எதிரி
51:தன்னம்பிக்கை இன்மை
52:தவறு செய்யத் துண்டும் ஆசை
53:கூடுதலான செலவு
54:துன்பப்படுதல்
55:இலக்கிய ஆர்வம்
56:மற்றவர் ஆலோசனையை கேட்பது
57:வணிகத்தில் நேர்மை
58:சுக,துக்கத்தை ஒன்றாக கருதுவர்
59:விஞ்ஞான ஆர்வம்
60:சிலச்சமயம்  திடமற்ற நிலை
61:கல்வியில் ஆர்வம்
62:மூடத்தனமான வெறிகுணம்
63:சிலச்சமயம் மனைவி,குழந்தையை ஏமாற்றுதல்
64:பழிவாங்கும் குணம்
65:குரோதம்
66:மெலிந்த தேகம்
67:மெதுவாக வளர்வதை காட்டுவான்
68:உலர்ந்த மேல்தோல்
69:மறைமுக அங்கங்களில் மச்சம்
70:நீளமான உருண்டு திரண்ட விழிகள்
71:வாசம் வீசும் பூக்களின் மீது நாட்டம்
72:உறுதியான சிந்தனை
73:மனிதநேயம்  மிக்கவன்
74:சௌக்கிய தேகம் பெற்றிருப்பான்
75:செந்நிற மேனியன்
76:இல்லாளுக்குப் பிரியமானவன்
77:தொந்தரவு செய்யும் பறவைகளை வேட்டையாடுவான்
78:மெலிந்த,பலமற்ற, வளர்ச்சிக்குறைந்த, வளைந்த உடல்
79:நீண்ட மூக்கு
80:ஆழ்ந்த கண்
81:மிருதுவற்ற முடி
82:கிழவயதில் கூன் முதுகு
83:சிக்கனம்
84:விவேகம்
85:நியாயம்
86:அனுபவ எண்ணம்
87:வருந்திமுடித்தல்
88:விடாமுயற்சி
89:சகிப்புடன் வேலை செய்தல்
90:விரைவாக செய்து முடிப்பவன்
91:எச்சரிக்கையான தீர்ப்பு
92:பொறுமை
93:திடம்
94:அடக்கம்
95:ஏளனத்துக்கு அஞ்சுதல்
96:நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
97:பெருந்தன்மை
98:உண்மை
99:நம்பிக்கை
100:சுயநலம்
101:நேர்மையின்மை
102:உணவில் பெரும் விருப்பம்
103:லோபத்தன்மை
104:பழம் பண்பாடுகளைப் பேணுதல்
105:லாபமடைதல்
106:புகழும் பணச்சகாயமும் உண்டு
107:மனதை ஒருவழிப்படுத்துதல்
108:விசாரணை இன்மை
109:நிரந்தரமான இடத்தில் முதலீடு
110:கைத்தொழிலில் ஈடுப்படல்
111:ஓய்வில்லை
112:வீண் விரயமில்லை
113:பணம்  சம்பாதிப்பு
114:காதலில் அன்புடனிருத்தல்
115:அன்பை வெளி காட்டுவதில்லை
116:மனயெழுச்சி
117:துணிவு கொள்வதில்லை
118:தேர்ந்தெடுப்பதில் மெதுவும் எச்சரிக்கையுமாய் இருத்தல்
119:மூர்க்கமடைவது  இல்லை
120:பிறரின் சம்மதத்துக்காக காத்திருத்தல்
121:உண்மையும் விசுவாசமுடன் இருத்தல்
122:கலக புத்தி
123:திருட்டுத்தனம்
124:எத்தொழிலையும் நஷ்டம் இல்லாமல் செய்யகூடியவர்
125:பொறுமையாக உழைத்து முன்னேறுவர்
126:திட்டமிட்டு செயல்படுவார்கள்
127:கட்டுபாடு மிக்கவர்
128:இரகசியவாதி
129:கடுகடுப்பானவர்
130:சந்தேகக் குணமுடையவர்
131:தயக்கம் உடையவர்
132:இரகசிய ஒழுக்கம்
133:இறுமாப்பு உடையவர்
134:தன்னலம்
135:குற்றம் புரிய தயக்கமில்லை
136:ஒரு வேலை செய்ய மற்றவர் துண்டி விடவேண்டும்                                          137:சோர்வு உள்ளவர்
138:அதிருப்தி  உடையவர்
139:கவலை உள்ளவர்
140:குழப்பமானவர்
141:ஒழுக்கம்  கெடுதல்,                                                                                                     மகரம்  குறிக்கும்  நோய்கள்
142:வலிப்பு நோய்
143:வாயுபிடிப்பு
144:முழங்கால் முட்டியில் காயம்
ஏற்பட்டும்
145:சொரி
146:சிரங்கு
147:ஜலதோஷம்
148:நுரையீரல் பாதிப்பு
149:வாயுதொல்லை
150:அசுப கிரகம் மகரத்தில் இருந்தால் இதய நோய்
151:ஜுரம்
152:கபவாதம்
153:ரணங்கள்
154:எலும்பு முறிவு
155:நரம்பு தளர்ச்சி
156:முழங்கால் பிடிப்பு
157:சுளுக்கு
மகரம்  குறிக்கும்  தொழில்கள்
158:தோல்பதனிடும் தொழிற்சாலையில் வேலை
159:இரும்பு சம்பந்தப்பட்ட வேலை
160:இன்ஜினியரிங்
161:பெட்ரோல் பங்கு
162:டிரைவிங்
163:லாரி
164:ஆட்டோ மோபைல்
165:கடலுக்குள் குதிப்பவர்
166:சுரங்கத்தொழில் செய்யபவர்
167:வில்லங்கம் இல்லாத சொத்துகளில் முதலீடு
168:சனிபகவானின் நற்பார்வை கிடைத்தால்
அரசுதன்மை சார்ந்த தொழில்
169:நகராட்சி
170:மாநகராட்சி
171:ஸ்தாபனங்கள்
172:அரசு சுரங்கங்கள்
173:பெரிய நிறுவனத்தில் வேலை
174:நிர்வாகம்
175:தன் நிலம் அல்லது கட்டுமானத்தை அரசு உபயோகத்தாற்கு வாடகை விடுதல்
176:மொத்த வியாபாரத்திலும் பணமுதலீடு
177:சந்திரன் நற்பார்வை கிடைத்தால் மண்ணெண்ணெய் வியாபாரம்
178:நிலங்கள்
179:கால்நடைகள் வணிகம்
180:வெற்றிகரமான விவசாயிகள்
181:கிணறு தோண்டுவது
182:குளங்கள் கட்டுதல்
183:ஏரிகளின் தரைகளை உறுதிப்படுத்தும் ஒப்பந்தகாரர்
184:செவ்வாயின் நற்பார்வை கிடைத்தால்
உலோக தகடு மேல் சித்திரம் செதுக்குபவர்
185:கொல்லர்
186:பொறியாளர்
187:நிலத்தை அளவிடுபவர்
188:செங்கல் சூளை
189:கைரேகை
190:சூரியன் நற்பார்வை கிடைத்தால் அறுவைச் சிகிச்சை மருத்துவர்
191:புதன் நற்பார்வை கிடைத்தால் பொறியாளர்
192:துப்பறியும்  நாவல்கள் எழுதுவர்
193:ஆழ்ந்து யோசனை செய்பவர்
194:கணக்கு ஆசிரியர்
195:பௌதிகம் அறிவியல் சார்ந்த  கருவிகளின் வியாபாரம்
196:குற்றப்புலனாய்வுத்துறை
197:பொய் கையெழுத்து கண்டுபிடிக்கும் நிபுணர்
198:குருவின் நற்பார்வை கிடைத்தால் வக்கீல்
199:மருத்துவர்
200:விஞ்ஞானி
201:மக்கள் சங்கத்தால் லாபம்
202:பெரிய கம்பெனி நிர்வாகிகள்
203:இந்துமத நன்கொடைக்கழகத்தில் வேலை
204:நிலதின் மூலம்  லாபம்
205:சுரங்கப்பொருட்களால் ஆதாயம்
206:அரசுதுறை பணிகள்
207:கல்விதுறை பணி
208:நிதித்துறை
209:சட்டத்துறை
210:நீண்டகால குத்தகை ஒப்பந்தம் காரர்
211:சுக்கிரன் நற்பார்வை கிடைத்தால்  சிமெண்ட் உற்பத்தி செய்பவர்
212:ரசாயனம் துறை
213:சுரங்கபத்தாது
214:தோல்பதனிடும் தொழில்
215:கசாப்பு கடைகாரர்
216:தோட்டத்தில் முதலீடு
217:மயானங்களில் வேலை
218:நிலத்தில் முதலீடு
219:சுக்கிரன்+குரு நற்பார்வைகிடைத்தால்  சுபநிகழ்ச்சி புரோகிதர்
220:சுக்கிரன் +சனி நற்பார்வைகிடைத்தால்  இறுதி சடங்கு செய்யும் புரோகிதர் மகர ராசியில் உள்ள இடங்கள் குறிப்பவை
221:உத்திராடம் கடவுள் பக்தர்
223:சிப்பாய்கள்
224:அசையா சொத்துள்ளவர்
225:மொத்த வியாபாரம்
226:மாநகராட்சி
227:நகராட்சி
228:திருவோணம்
ஊக்கமுள்ள மனிதர்கள்
229:உண்மையான யோக்கியமுள்ளவர்
230:வித்தைகாட்டுபவர்
231:விஷ்ணு பக்தர்
232:பூமிக்குள் இருக்கும்  திரவங்கள்
233:நீர்மூழ்கி கப்பல்
234:விவசாயம்
235:கால்நடைகள்
236:அவிட்டம்  ஆணவம் இல்லாதவர்
237:மனைவிக்கு வேண்டப்படாத கணவன்
238:அலிகள்
239:பணக்காரர்கள்
240:அமைதியை விலைகொடுத்து பெறுபவர்
241:பரிவு உடைய ஆண்மகன்
242:நிலைப்பாடு அற்ற நட்பு
243:கொல்லர்
245:கொத்தனார்
246:கட்டிடம் கட்டுபவர்
247:நில அளவீடு செய்பவர்
248:பொறியாளர்
249:ஐஸ் பெட்டி
250:தோல்காலணிகள்
251:மரக்கட்டைகள்
251:சவப்பெட்டி
252:சிமெண்ட் கலவை
253:செங்கல்
254:பனிக்கட்டி
255:எலும்புக் கூடு
மகரம்  குறிக்கும்  இடம்                                                                                                                                 256:பாதுகாப்பு  பெட்டகம்
257:பாதுகாப்பு அறை
258:தனிமையான மருத்துவமனை
259:அகதிகள் முகாம்
260:சிறைச்சாலை
261:பிணம் புதைக்கும்  இடம்
262:கல்லறைகள்
263:சவக்கிடங்குகள்
264:மாட்டு தொழுவம்
265:வறண்ட நிலம்
266:சந்துகள்
267:குழிகள்
268:தனிக்கட்டிடங்கள்
269:நெருக்கடியுள்ள இடங்கள்
270:வெளிச்சம்அற்ற இருட்டறை
271:பழையகட்டிடம்
272:குளங்கள்
273:கோயில்
274:குகைகள்
275:அடர்ந்த  காடுகள்
276:ஆயுத சாலை
277:கழிவுசாமான் அறை
278:சாமான்கள் அறை
279:சாணக்குவியல்கள்
280:தாழ்ந்த வீடுகள்
281:மாட்டுப்பட்டி
282:பழம்
283:பாண்டமிடும் அறை
284:களஞ்சிய அறை
285:முள்ளான இடம்
286:தாழ்ந்த பிரதேசம்
  மகரம் குறிக்கும்  நகரங்களும்,நாடுகளும்           
287:பஞ்சாப்
288:பழனி
289:துங்க பத்ரா  ஆறு
290:இந்தியா
291:சிர்க்காராம்
292:மாசிடோனியா
293:மேசிகன் இல்லிரயா
294:பல்கேரியா
295:ஆக்ஸ்போர்டு
296:டொரேண்டோ
297:சிரியா
298:ஆப்கானிஸ்தான்
299:ஒர்க்னி தீவு
300:சாலிஸ்பெரி
 6 க்கு உடையவரே 9  க்கும் உரியவர் புதன். 6  மிதுனம் காற்று ராசி அதனால் மகர லக்னத் தாருக்கு சுவாச கோளாறுகளால் அவதி இருக்கும் வானொலி விமான படை ஆராய்ச்சி மையத்தில் வேலை இவற்றில் பணிபுரிபவர்கள் ஆக இருப்பார்கள். கணினி தொழில் நரம்பியல் மருத்துவர்கள் கணக்காளர்கள்.  செவிலியர்கள். மருந்து அளிப்பது பணியாளர் ஒப்பந்ததாரர்கள். தவனைமுறையில் கடன் குடுப்பவர்கள் வணிக மையங்களால் பணிபுரிபவர்கள் ஆக இருப்பார்கள். 4, 11, க்குடைய செவ்வாய் இருப்பதால் தொழிற்சாலைகளில் பணி இருக்கும் உடலில் அதிக.  உஷ்ணம் இருக்கும் தசைவலியால் அவதிகள் படுவார்கள். இசை மற்றும் நாடகம் நிகழ்ச்சிகளுக்கு மேடை அமைப்பாளராக இருத்தல் போன்றதொழில் அமையும். 3, 12 க்கு  உடைய குரு  இருப்பதால் வங்கிபணி வழக்கறிஞர்கள்.  சட்டம் அலுவலகத்தில் பணி  புகழ் மிக்க மனிதர்கள் மூலம் கடன் பெறுவது  வங்கியில் காசாளர்கள். இவ்வாறு இருக்கும். இரகசிய திட்டம் மூலம் கடன் பெறுபவர் இவர்கள். வேலைக்கான ஒப்பந்ததாரர்களை ஏற்படுத்திக் கொள்பவராகவும் இருப்பார்கள் காலபுருஷனுக்கு 4 ம் வீடு கடகம் மகரத்துக்கு  7  ம் வீடு.ஜலராசி சரராசி.  இவருக்கு வரும் வாழ்க்கை துணை மற்றும் தொழில் கூட்டாளிகளுடன் கொண்டு இருக்கும் நல்லுறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் சலனம் கொண்ட மனம் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...