வெள்ளி, 6 மே, 2016

பாிகாரம்

சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வரவேண்டும். அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை. . *விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும் போது, மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள். அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விட வேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம். *கர்ப்பமான பெண்ணும் சரி, அவள் கணவனும் சரி, எந்த வேண்டுதலாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை சிதறு தேங்காய் உடைக்க வேண்டாம் . *மாலையில் பெண்கள் விளக்கேற்றி வைத்த பின் வெளியே செல்லக் கூடாது. *எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அஷ்டமி, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை ஆகிய திதிகளில் குளிக்க கூடாது. *உங்கள் ஜாதகத்தில் பாதக திசை நடந்தால், அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி நடந்தால் அல்லது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 , 12 ம் இடங்களில் சஞ்சாரம் செய்தால், கிழக்கு நோக்கி தீப முகம் இருந்தால் கிரக தோஷங்களும், சகல பீடைகளும் விலகும். *அளவுக்கு அதிகமான கடன் தொல்லையா, வாரம் தோறும் வைத்தியர் வீட்டுக்கு போகிற மாதிரி நோய் தொல்லையா, பங்காளி பகையா எதுவாக இருந்தாலும் மேற்கு நோக்கிதீபம் ஏற்றினால் மாறும். *வாலிபம் கடந்தும் வரன் அமைய வில்லையா? கொள்ளும் எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடிய வில்லையா, வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் விலகும். *தெற்கு திசை நோக்கி தீப முகம் இருந்தால் தடைகள், தாமதங்கள், அபசகுனங்கள் , அமங்கலங்கள் ஏற்படும். *மனதில் அமைதி இல்லையா, எப்ப பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா, ஏகாதசி விரதம் இருங்கோ சரியாகும். *தொட்டது எல்லாம் தோல்வியா? எந்த காரியத்தை தொட்டாலும் இழுபறியா. தடை, தாமதம், தள்ளிவைப்பு, அலைகழிப்பு என்று அல்லல் படுகிறிர்களா. மாத சிவராத்திரி விரதம் இருந்தால் மாறும். *எதிர் பாராத விபத்து, எதிரிகளால் ஆபத்து, நோய் தொல்லைகள் இவற்றில் இருந்து விடுபட சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்தால் சரியாகும். *வேலை வாய்ப்பில் பிரச்சசனை, வேலை இல்லாத பிரச்சனை என அன்றாடம் அல்லல் படுகிறவர்கள் சதுர்த்தி விரதம் இருந்தால் விலகும். *பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை கோளாறுகள் நீங்கவும், தீராத வியாதிகள் தீரவும் கிருத்திகை விரதம் இருப்பது சிறப்பு. *வீட்டில் ஆஞ்சநேயர் படம் அல்லது சிலை இருந்தால் பூமாலைகள் பயன்படுத்த வேண்டாம். துளசி மாலை மட்டும் அணிவித்து வழிபட்டால் நல்லது. *கோவிலின் பிரதான கதவுகள் முடி இருக்கும் போது, வெளியில் நின்று வணங்க கூடாது. *கோவிலில் அணைந்த விளக்கை ஏற்றலாம், ஏற்றிய விளக்கை அணைக்க கூடாது. *கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்த பிறகு குளிக்க கூடாது. வீட்டில் சிலை வைத்து வழிபடும் பழக்கம் இருந்தால், ஒரே சாமி சிலையை ஒன்றுக்கு மேல் வைத்து வழிபடகூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...