வெள்ளி, 6 மே, 2016

வேதா பூஜை வசிய முறை

மந்திரம் உரு ஏற்றும் காலத்தில் நிர்ணயித்த நாள் வரை பூஜைகளை ஒழுங்காக முடிக்க வேண்டும், தங்கள் கவனம் எல்லாம் அதிலேதான் இருக்க வேண்டும், எது நடந்தாலும் அதை பற்றி கவலைபட கூடாது , இடையில் சோதித்தும் பார்க்க கூடாது , நிர்ணயித்த நாள் பின்னர்தான் அருள் கிடைக்கும் , மந்திர உரு உங்களுக்கு வரமாக கிடைக்கும் . முறையாக பூஜை செய்யும் நாட்களில் மனோதிடத்தை வளர்த்து கொள்ள வேண்டும், நமக்கு அருள் கிடைத்திருக்குமோ. தெய்வம் வந்திருக்குமா. வரம் கொடுக்குமா. எப்படி சோதனை செய்து பார்ப்பது போன்ற எண்ணம் எதற்கும் இடம் தர வேண்டாம் . உங்களுக்கு தேவதைகள் சில சோதனைகள் எல்லாம் தருவார்கள், அதை முதலில் சமாளிக்க வேண்டும், அதற்குத்தான் மனோதிடத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும், சோதனைகள் எவ்வாறு இருக்குமெனில் எந்த தேவதையை நாம் பிரயோகம் செய்தாலும் அந்தந்த தேவதைக்கு உபதேவதைகள் இருப்பார்கள் அவர்கள் நம்மை சோதிப்பார்கள், முதலில் போதிய பக்குவம் இருக்கிறதா நியமன முறைகளை உள்அன்போடு செய்கிறீரா என சோதிக்கும், உதாரணமாக முதல் நாள் நான்கு மணிக்கு எழுந்து பூஜை செய்கிறோம் என்றால் மறுநாளும் அதே மணிக்குத்தான் செய்ய வேண்டும், இது நியமிப்பது என்று சொல்வார்கள், இதை அந்த தேவதை தடுக்கும் தூக்கத்தை கொடுக்கும் நேரத்தை தவற வைக்கும், சோம்பேறி குணத்தை கொடுக்கும், பணி செய்பவராக இருந்தால் வேலைச் சுமையை அதிகமாக்கி சிந்தனையை மாற்றச் செய்யும், சிலருக்கு கடன் சுமையை உண்டாக்கும், வீட்டில் நம் பூஜைக்கு இடையூறு உண்டாக்கும் வண்ணம் குடும்பத்தாரின் செயல் அமையும், நமக்கே வேண்டா வெறுப்பை கொடுக்கும், இந்த சோதனைகள் எல்லாம் அந்த தேவதை ஏன் செய்கிறது என்றால் நம் பக்குவத்தையும் தெய்வத்தின் மீதுள்ள பாசத்தையும் அளவிடவே அவ்வாறு செய்யும் . அடுத்த தேவதை நம் மனஉறுதியை சோதிக்கும் எவ்வாறெனில் காதல் எண்ணங்களை கொடுக்கும், கற்பனையில் வேறொருவரை நினைத்து வாழ வைக்கும், காமத்தின் எண்ணங்களை அதிகமாக்கும், யாராவது நம்மை பூஜை செய்வதால் காவி உடை அணிந்துள்ளதால் அசிங்கமாக எண்ணுவார்களா என்று எண்ண தோன்றும், அசைவ கார உணவு மேல் திடீரென அலாதி பிரியம் உண்டாகும், திடீர் என நமக்கு பசியை உண்டாக்கி அப்போதைக்கு கிடைக்க கூடிய பத்து பட்ட சாப்பாட்டை சாப்பிட வைக்க பார்க்கும் அல்லது பசி தாங்காமல் வீட்டில் உள்ளவர்கள் மேல் கோபப்பட்டு பேச வைக்கும் திடீர் எரிச்சலை நமக்கு கொடுத்து பூஜையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் போ. என பேச வைக்கும், அகத்தியமாக நம் மேல் யாராவது வீண் பழி போட வருவார்கள் . திடீர் என விபத்து உண்டாக்கும் அதிலிருந்து தப்பிக்கவைக்கும் , பூஜை செய்வதால் இவ்வாறு நடக்கிறதோ ஏதாவது குறை வைத்து விட்டோமோ இன்னும் ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோ என்றெல்லாம் குழப்பத்தை உண்டாக்கி மன உறுதியை குலைக்க பார்க்கும் . இதையும் கடந்தால் அடுத்த தேவதையும் ஒரு சோதனையை வைக்கும், எவ்வாறெனில் பாம்பு கனவு காண வைக்கும் அல்லது நிஜமாகவே வீட்டில் வந்து அதை அடிக்கக்கூடிய சூழலை உண்டாக்கும், நம் முன்னோர்கள் கனவில் தத்ரூபமாக உருவாகி இந்த பூஜையெல்லாம் உனக்கு வேண்டாம் என தடுப்பார்கள், மேலும் தெய்வ கனவு. சுபநிகழ்வுகளை கனவில் நிகழும் அதை யாரிடமும் வெளியில் கூற கூடாது, ரகசியமாக வைத்திருக்க வேண்டும், ஆனால் அதை அகத்தியமாக சொல்ல வைக்கும். பெற்றோர்களே நம் மனம் நோகும்படி பேசும் சூழல் அமையும், மேலும் கனவில் தேவதைகள் மனதிற்கு கட்டளையிடும் இந்த கோயிலுக்கு. அந்த கோயிலுக்கு போ என வழிகாட்டும், நாம் விழித்த உடன் அந்த கோயிலுக்கு போய்ட்டு வரனும் என்ற எண்ணம் வலிமையாக இருக்க வேண்டும், முடிந்தால் போய்ட்டும் வரலாம், ஏதோ கனவுதானே என்றெல்லாம் இருக்க கூடாது, இவைகளெல்லாம் நம் பக்குவத்தை சோதிப்பதற்காகவும். உறுதி குலையாமல் ஏமாறாமல் இருக்கிறாரா என்றும். தெய்வ வாக்குகளை ரகசியமாக பாதுகாக்க அருகதை இருக்கிறதா எனவும் சோதிப்பதற்காக இவ்வாறு அந்த தேவதை சோதனை செய்யும் . நான்காவதாக நமக்கு கேட்ட வரம் கொடுக்க ஒரு தேவதை வருவாள் அவரே நம் உபாசனை தெய்வம் இவர் சோதிக்க மாட்டார் என்ன வரம் வேண்டும் என்று கனவிலேயே கேட்பார் நம் ஆத்மா கேட்கும் வரத்தை கொடுத்து செல்லும், நம் ஆத்மா என்ன வரம் கேட்குமோ என குழப்பம் தற்போது உருவாகும் கவலை வேண்டாம், நாம் ஒவ்வொரு நாளும் பூஜை செய்த இறுதியிலும். இரவு தூங்க செல்லும் முன்னும் நாம் எதற்காக இந்த பூஜை செய்ய எத்தணிக்கிறோமோ அதை மட்டும் அந்த ஒரே கோரிக்கை மட்டும் அருளும்படி கேட்டு வணங்கி வரவேண்டும், தேவதையிடம் கோரிக்கை வைக்கும் போது பலதும் கேட்டு குழப்பம் அடைய கூடாது, ஒரே கோரிக்கையாக இருக்க வேண்டும், அதையே மாற்றி மாற்றி சிந்திக்காமல் உறுதியாக ஒன்றையே கேட்க வேண்டும், இவ்வாறு அன்றாடம் ஒரே கோரிக்கையை நம் மனதில் வைக்கும் போது அது வலது பக்க மூலையில் பதிந்து ஆக்ஞா என்னும் நெற்றி பொட்டில் பதிந்து மனதோடு தொடர் கொள்ளும், அது மறக்காமல் தூக்கத்திலும். மயக்க நிலையிலும் நிலையாக இருக்கும், இந்த ஆத்மாவே நம் தெய்வம் வந்தாலும். அந்த வரத்தை மட்டுமே சரியாக கேட்கும், இது தேவ ரகசியமாகும் . அன்றாட வாழ்வில் நடக்கும் பல சம்பவங்களுக்கு இந்த நிகழ்வு முக்கிய செயலாகும், நம் மனதிற்கும். இறைவனுக்கும். எப்பொழுதும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, அதனால்தான் நியமங்களை ஒழுங்காக கடைபிடிக்கும் போது மனம் செம்மையாகும், மனம் செம்மையானால் அதில் இறைவன் நிலையாக குடிகொள்வார் கேட்ட வரம் கொடுப்பார், நமக்காக இருந்தாலும். அடுத்தவருக்காக இருந்தாலும். செயல்களை நம் மனதிற்கு கட்டுபட்டு செய்து கொடுப்பார், நம் மனம் நினைப்பதும் அப்படியே நடக்கும், இவ்வாறாக நம் தேவதைகள் நான்கு பாகமாக பிரிந்து சோதனைகள் செய்து வரமளிப்பார்கள், இதில் நாம் வெற்றிபெற வேண்டியே தடைகளை ஜெயிக்கும் ஸ்ரீவிநாயகரை எப்பொழுதுமே முதல் பூஜையாக கொள்ள வேண்டும், அவர் நம்மை பாதுகாப்பார், கவலை வேண்டாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...