ஞாயிறு, 11 ஜனவரி, 2015

நட்சத்திரத்திற்குரிய வழிபாட்டுத் தலங்கள்

திருத்தலங்களைப்  பற்றி    இங்கே   கொடுத்துள்ளோம். இங்குள்ள  ஸ்தலங்கள் அனைத்தும்   பலப்பல யுகங்கள்  வரலாறு கொண்டவை.  இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி  பிம்பங்களாய்  தன்னையே புதுப்பித்துக்  கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷpகளும், தேவர்களும் வழிபட்ட இன்றளவும் நல்ல ஆன்மீக  அதிர்வுகளைக்  கொண்டு, தரிசிக்க  வரும் பக்தர்களுக்கு  அருள் பாலிப்பவை.
நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள், சூட்சும ரீதியாக இங்கே  தினமும் ஒரு  தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று  வழிபாடு  செய்கின்றன. மனிதராய்    பிறந்த  அனைவர்க்கும், அவரவர்  கர்மவினையே   லக்கினமாகவும், ஜென்ம  நட்சத்திரமாகவும்,  பனிரெண்டு   வீடுகளில்    நவக்கிரகங்கள்  அமர்ந்து, பெற்றெடுக்கும்      பெற்றோர்களையும்,      பிறக்கும்     ஊரையும்,      வாழ்க்கை துணையையும், வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
கீழே  கொடுக்கப்பட்டுள்ள  அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை உங்கள் ஜென்ம  நட்சத்திரம்    வரும்  தினத்தன்று, ஆத்ம  சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டு  வாருங்கள்.  அதன்   பிறகு  உங்கள்   வாழ்வில் நிச்சயம்   ஒரு    புது வெளிச்சம் பிறக்கும்.
1.நட்சத்திரம்           : அஸ்வினி
ஆலயம்  : அருள்மிகு  பிறவி மருந்தீஸ்வரர்  திருக்கோயில்.
இருப்பிடம்       :   திருவாரூரில்  இருந்து  30  கி.மீ   தூரத்தில்   திருத்துறைப்பூண்டி
உள்ளது. பேருந்து  நிலையத்தில் இருந்து  ஒரு  கி.மீ தூரத்தில்  கோயில் உள்ளது.
2.நட்சத்திரம்           : பரணி
ஆலயம்  : அருள்மிகு  அக்னீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :    மயிலாடுதுறையிலிருந்து  15  கி.மீ    நெடுங்காடு  வழியாக
காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும்  ஊரில் உள்ளது.
 
3.நட்சத்திரம்           : கார்த்திகை
ஆலயம்  : அருள்மிகு  காத்ர  சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார்  செல்லும் வழியில்  8 கி.மீ
தூரத்தில்  கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின்  ரோட்டிலிருந்து பிரியும்  ரோட்டில்
அரை கி.மீ சென்றால் கோயிலை அடையலாம்
4.நட்சத்திரம்           : ரோஹிணி
ஆலயம்  : அருள்மிகு  பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்                :    காஞ்சிபுரம் ஏகாம்  பரேஸ்வரர்   கோயில்  எதிரில் உள்ள
சாலையில் கோயில் அமைந்துள்ளது.
5.நட்சத்திரம்           : மிருகசீரிஷம்
ஆலயம்  : அருள்மிகு  ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்                :   தஞ்சாவூரிலிருந்து திருவாரூர்  செல்லும்  வழியில்   50  கி.மீ
தூரத்தில்   முகூந்தனூர்  உள்ளது  இந்த ஸ்டாப்பில்   இருந்து  ஒரு   கி.மீ   தூரம்
சென்றால் கோயிலை அடையலாம்.
6.நட்சத்திரம்           : திருவாதிரை
ஆலயம்  : அருள்மிகு  அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               : தஞ்சாவூரில்  இருந்து 70 கி.மீ  தூரத்திலுள்ள பட்டுக்கோட்டை
சென்று   அங்கிருந்து    12  கி.மீ    சென்றால்   அதிராம்பட்டினத்தில்   உள்ள  இந்த
ஆலயத்தை அடையலாம்.
7.நட்சத்திரம்           : புணர்பூசம்
ஆலயம்  : அருள்மிகு  அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   வேலூரிலிருந்து  கிருஷ;ணகிரி   செல்லும்  வழியில்  67 கி.மீ
தூரத்தில்   வாணியம்பாடி  உள்ளது. பஸ்  ஸ்டாண்டிலிருந்து 3  கி.மீ   தூரத்தில்
உள்ள பழைய வாணியம்பாடியில் கோயில் உள்ளது.
8.நட்சத்திரம்           : பூசம்
ஆலயம்  : அருள்மிகு  அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :   பட்டுக்கோட்டையிலிருந்து  ராமேஸ்வரம் செல்லும்  கிழக்கு
கடற்கரை சாலையில் 30 கி.மீ  சென்றால் விளங்குளம்  விலக்கு வரும். அங்கிருந்து
தெற்கே  2 கி.மீ  சென்றால்  கோயிலை அடையலாம்.  புதுக்கோட்டையில் இருந்து
பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
9.நட்சத்திரம்           : ஆயில்யம்
ஆலயம்  : அருள்மிகு  கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :   கும்பகோணத்தில்  இருந்து  சூரியனார்  கோவில்   செல்லும்
ரோட்டில் 11 கி.மீ  தூரத்தில்  உள்ள திருவிசநல்லூர்  சென்று  அங்கிருந்து   பிரியும்
ரோட்டில் 2 கி.மீ சென்றால் கோயிலை அடையலாம்.
10.நட்சத்திரம்         : மகம்
ஆலயம்  : அருள்மிகு  மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ
தூரத்தில்    விராலிப்பட்டி  விலக்கு  உள்ளது.  இங்கிருந்து  2   கி.மீ    சென்றால்
கோயிலை அடையலாம்.
11.நட்சத்திரம்         :  பூரம்
ஆலயம்  : அருள்மிகு  ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை  செல்லும் வழியில்
7 கி.மீ சென்றால் வரும் திருவரங்குளம் என்னும்  ஊரில் ஆலயம் உள்ளது.
12.நட்சத்திரம்         : உத்திரம்
ஆலயம்  : அருள்மிகு  மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                 :     திருச்சி   சத்திரம்    பஸ்   ஸ்டாண்டிலிருந்து 22   கி.மீ
தூரத்திலுள்ள லால்குடி சென்று  அங்கிருந்து  5 கி.மீ  தூரத்திலுள்ள இடையாற்று
மங்கலம் என்னும்  ஊரில் உள்ளது.
13.நட்சத்திரம்         : ஹஸ்தம்
ஆலயம்  : அருள்மிகு  கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை  செல்லும்  வழியில்
உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும்  ரோட்டில் 8 கி.மீ  தூரத்தில்  கோமல்  என்னும்
ஊரில் உள்ளது.
14.நட்சத்திரம்         : சித்திரை
ஆலயம்  : அருள்மிகு  சித்திரரத  வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்                   :        மதுரையில்   இருந்து    23     கி.மீ       தூரத்திலுள்ள
குருவித்துறைக்கு சென்று  அங்கிருந்து  3 கி.மீ தூரத்தில்  கோயில் உள்ளது.
15.நட்சத்திரம்         : சுவாதி
ஆலயம்  : அருள்மிகு  தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு
செல்லும்   வழியில்   8   கி.மீ    தூரத்தில்    சித்துக்காடு  என்ற   ஊரில்   இத்தலம்
உள்ளது.
16.நட்சத்திரம்         : விசாகம்
ஆலயம்  : அருள்மிகு  முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம்               :  செங்கோட்டை சென்று  அங்கிருந்து   7 கி.மீ  தூரத்திலுள்ள
திருமலைக்கோவிலை அடையலாம்.
17.நட்சத்திரம்         : அனுஷம்
ஆலயம்  : அருள்மிகு  மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   மயிலாடுதுறையில்  இருந்து சீர்காழி  செல்லும்  வழியில்  7
கி.மீ தூரத்தில்  திரு நின்றியூர் என்னும்  ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
18.நட்சத்திரம்         : கேட்டை
ஆலயம்  : அருள்மிகு  வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்               :  தஞ்சாவூரில்   இருந்து கும்பகோணம்  செல்லும் வழியில்  13
கி.மீ    தூரத்திலுள்ள  பசுபதிகோயில்   பஸ்  ஸ்டாப்பில்   இருந்து  அரை  கி.மீ
தூரத்தில்  கோயில் உள்ளது.
19.நட்சத்திரம்         : மூலம்
ஆலயம்  : அருள்மிகு  சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :   சென்னை கோயம்பேட்டில்   இருந்து தக்கோலம்  செல்லும்
வழியில் 45 கி.மீ  தூரத்தில்  மப்பேடு என்ற ஊரில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து
22 கி.மீ பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.
20.நட்சத்திரம்         : பூராடம்
ஆலயம்  : அருள்மிகு  ஆகாசபுரீஸ்வரர்  திருக்கோயில்
இருப்பிடம்               :   திருவையாறில்  இருந்து கல்லணை செல்லும்  வழியில்  4
கி.மீ   தூரம்  சென்றால்   கடுவெளியை  அடையலாம். பஸ் ஸ்டாப்  அருகிலேயே
கோயில் அமைந்துள்ளது.
21.நட்சத்திரம்         : உத்திராடம்
ஆலயம்  : அருள்மிகு  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில்  12
கி.மீ  தூரத்தில்  ஒக்கூர்  சென்று, அங்கிருந்து  பிரியும்  ரோட்டில் 3 கி.மீ  சென்றால்
பூங்குடி என்ற ஊரில் உள்ளது.
22.நட்சத்திரம்         : திருவோணம்
ஆலயம்  : பிரசன்ன  வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்                :   வேலூரிலிருந்து  சென்னை செல்லும்  வழியில்   20  கி.மீ
தூரத்திலுள்ள  காவேரிப்பாக்கத்தில்   இறங்கி   அங்கிருந்து   பிரியும்   ரோட்டில் 2
கி.மீ   சென்றால்  திருப்பாற்கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு  பெருமாள்
கோயில்கள்  இருப்பதால்    பிரசன்ன    வெங்கடேசப்பெருமாள்   கோயில்   என
கேட்டுச் செல்லவும்.
23.நட்சத்திரம்         : அவிட்டம்
ஆலயம்  : அருள்மிகு  பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4
கி.மீ தூரத்தில்  கொருக்கை என்னும்  இடத்தில் கோயில் அமைந்துள்ளது.
24.நட்சத்திரம்         : சதயம்
ஆலயம்  : அருள்மிகு  அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்               :  திருவாரூர்; மாவட்டம் நன்னிலத்திலிருந்து நாகப்பட்டிணம்
செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் திருப்புகலூர் என்னும்  ஊரில் உள்ளது.
25.நட்சத்திரம்         : பூரட்டாதி
ஆலயம்  : அருள்மிகு  திருவானேஷ;வர் திருக்கோயில்
இருப்பிடம்                 :     திருவையாறிலிருந்து   17   கி.மீ     தூரத்தில்     உள்ள
திருக்காட்டுப்பள்ளி  சென்று  அங்கிருந்து   அகரப்;பேட்டை  செல்லும் ரோட்டில் 2
கி.மீ தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும்  ஊரில் உள்ளது.
26.நட்சத்திரம்         : உத்திரட்டாதி
ஆலயம்  : அருள்மிகு  சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்                :    புதுக்கோட்டையில் இருந்து   40   கி.மீ    தூரத்திலுள்ள
ஆவுடையார்கோவில் சென்று  அங்கிருந்து  திருப்புனவாசல் செல்லும் வழியில் 21
கி.மீ     தூரத்தில்    தீயத்தூர்    உள்ளது.  மதுரையில்  இருந்து   செல்பவர்கள்
அறந்தாங்கி   சென்று    அங்கிருந்து     திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில்
சென்றால் தீயத்தூர் என்னும்  இடத்தில் உள்ளது தூரம் 120  கி.மீ
27.நட்சத்திரம்         : ரேவதி
ஆலயம்  : அருள்மிகு  கைலாசநாதர் திருக்கோயில்
இருப்பிடம்                :   திருச்சியிலிருந்து  முசிறி   40  கி.மீ   சென்று   அங்கிருந்து
தாத்தய்யங்கார் பேட்டை   21  கி.மீ    செல்ல  வேண்டும்.  இங்கிருந்து  5  கி.மீ
தூரத்திலுள்ள காருகுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...