ஞாயிறு, 11 ஜனவரி, 2015

தசவதாரமும் நவக்கிரஹமும்

ஸ்ரீ மத் பாகவதத்தில், மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்து இருக்கிறார். அதில் மக்கள் அதிகம் தெரிந்துகொண்டது பத்து அவதாரம் மட்டுமே. இந்த அவதாரமும், ஆதி பராசக்தி ராஜராஜேஸ்வரி அன்னையின் கையில் உள்ள பத்து விரல்களும், பத்து அவதாரமாக மகாவிஷ்ணு அவதாரம். அதேபோல் நவகிரகங்களும்,மாந்தி என்கிற குளிகனும் சேர்ந்து பத்து ஆகிறது.ஆகவே, அந்த அம்சமும் இங்கே சொல்லப்படுகிறது. தெரிந்துகொள்ளுங்கள் அன்பர்களே.இதற்க்கு ஒரே தீர்வு என்ன என்றால்,உங்களின் தசா புக்தி அந்தரம் சூஷ்மம் இவைகளுக்கு ராமாயணத்திலே பரிகாரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.அதன்படி இது ஆகும் அன்பர்களே
தசவதாரமும் நவக்கிரஹமும்
அவதாரம் - அதிபதி
1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் - கேது
2) ஸ்ரீகூர்ம அவதாரம் - சனி
3) ஸ்ரீவராஹ அவதாரம் - ராகு
4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் - செவ்வாய்
5) ஸ்ரீவாமன அவதாரம் - குரு
6) ஸ்ரீபரசுராம அவதாரம் - சுக்கிரன்
7) ஸ்ரீராம அவதாரம் - சூரியன்
8) ஸ்ரீபலராம அவதாரம் - குளிகன்
9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் - சந்திரன்
10 ஸ்ரீகல்கி அவதாரம் - புதன்
கிரகங்களின் தெசா புக்தி காலங்களில் அந்த அந்த தசவதார தெய்வத்தை வணங்க நற்பலன் ஏற்படும்.
உயிரினங்களின் பரினாம வளர்ச்சியை பகவானின் தசவதாரத்தில் காணலாம். ( உயிரினங்களின் பரினாம வளர்ச்சியை கண்டறிந்தவர்கள் நம் இந்தியர்கள்)
1) ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் - மீன் ( உயிரினங்கள் நீரிலிருந்து தொன்றின) 4வது அறிவு - நீர் வாழ்வன -முட்டை இட்டு குஞ்சு பொறிப்பன.
2) ஸ்ரீகூர்ம அவதாரம் - ஆமை - 4 வது அறிவு - நீர்+நிலத்தில் வாழ்வன -முட்டை இட்டு குஞ்சு பொறிப்பன.
3) ஸ்ரீவராஹ அவதாரம் - பன்றி - மிருகம்- 5 வது அறிவு - நிலதில் வாழ்வன - குட்டிபொட்டு பாலூட்டுபவை.
4) ஸ்ரீநாரசிம்ம அவதாரம் - பாதி மனிதன் பாதி மிருகம் - 5 வது அறிவு - நிலதில் வாழ்வன - குட்டிபொட்டு பாலூட்டுபவை.
5) ஸ்ரீவாமன அவதாரம் - பாதி வளர்ச்சி அடைந்த மனிதன். 6 வது அறிவு (பாதி) - மனிதன்.
6) ஸ்ரீபரசுராம அவதாரம் - மனிதன் - 6 வது அறிவு (முக்கால்) - காட்டில் மிருகங்களுக்கு இடையில் வேட்டையாடி வாழ்ந்த காட்டு மனிதன்.
7) ஸ்ரீராம அவதாரம் - முழுமையான ஒழுக்கமான மனிதன். 6 வது அறிவு (முழுமை) நகரத்தில் வாழும் மனிதன்.
8) ஸ்ரீபலராம அவதாரம் - முழுமையான மனிதன் -6 வது அறிவு (முழுமை) - தனக்கு தேவையான உணவை தானே விளைவிக்க தெரிந்தவன்.
9) ஸ்ரீகிருஷ்ண அவதாரம் - முழுமையான மனிதன் -7 வது அறிவு (முழுமை) - அன்பும், பாசமும் உருவாக்கி, தீயதை அழித்து நல்லதை நிலை நாட்டும் பொது நலம் உள்ள மனித தெய்வம்.
10 ஸ்ரீகல்கி அவதாரம் - 8 வது அறிவு, தேவர்கள் - தீயதை அழித்து நல்லதை நிலை நாட்டும் தேவர்கள். பஞ்சகார்த்தாக்கள்.
இதில் நாம் கடந்து வந்த பரிநாம வளர்ச்சியே பகவானின் தசவதரம். ஒம் நமோ நாராயணாய.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...