செவ்வாய், 13 ஜனவரி, 2015

‎ருத்ராட்சம்‬ ‪#‎அணிவதால்‬ ‪#‎ஏற்படும்‬ ‪#‎நன்மைகள்‬!




ருத்ராட்சத்திற்கு தனித்துவமான பல சிறப்புகள் உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டி ருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்கள்புதுஇடங்களு க்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. .. ஆனால் ருத்ராட்சம அணிந்தால் எவ்வித மான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது. மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்தி வட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.
ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல்
ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்த த்தை சீராக்கி மன அமைதியையும் சுறுசுறு ப்பையும் தரும். ஆறுமுகம்கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம் எப்படி . . . . ருத்திராட்சம் தோன்றியது ?ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்து ம் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின.வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள்
பன்னிரண்டும் இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும்
தோன்றின. நெற்றிக்கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப் பட்டன.
தோற்றம். ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை ருத்திராட்சங் கள் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்தி ராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம். சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும் நல்ல வர்ணமுள்ளதுமானருத்திராட்சம் தண்ணீரில் போட்டால் மூழ்குவதும் இரு செப்புதகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியதுமான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை.
கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்க ளும் கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்க ளும் மேல் கையில் பதினாறும் மார்பில்நூற்றி யெட்டும் தரிக்கலாம். ருத்திராட்சமாலையின்
பெருமை என்று சொன்னால் ஏக முக ருத்தி ராட்சத்தின் அதி தேவதையாக பரமசிவனைக்
கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை
அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்தி ராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக்கொன்ற தோஷம் விலகும்.
மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும் மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள்.
ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன்இ மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
.ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதா சிவம் சந்தோஷம் அடைகிறார்.செய்யக் கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகு ம் தோஷம் விலகும். ஆறு முக ருத்திராட்சத் தின் அதிதேவதை சுப்ரமணியராகும இதை அணிவதால் ஆறு முகன் சந்தோஷம்அடைவ துடன் பிரம்ம ஹத்தி தோஷம் விலகும். ஏழு முக ருத்தி ராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணி வதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவது டன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.
எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப்பெருமானாகச் சொல்லப்படுகிறது.
இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன் செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது.
ஒன்பது முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால்என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் வரும் நாக தோஷமும்; பூத-பிரேத பைசாச தோஷங்
களும் விலகும்.பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவ தை பதினோரு ருத்ரர்களாக சொல்லப் பட்டுள்ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேதயாகம் செய்த பலன் களும் பல வாஜபேயயாகம் செய்த பலனும் கிட்டும்.
‪#‎பலன்கள்‬!
ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும் அவர்களால் பிறர் அனைவரு ம் பயன்பெறும் வகையிலும நன்மைகளும் அமையும். ருத்திராட்சம் தாம்அணியாவிட்டா லும் அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும் ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும் புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும் சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.
ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவர ப்பெறும். ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம் ருத்திராட்சம் வரை அணிவத ன் மூலம் பல பலன்களை அடையலாம்.
குணங்கள் சிவ தத்துவத்தில் இருக்கும் முனி வர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித் தால் சங்கு ஜடாமுடி மண்டை ஓடு ருத்ராஷம் மிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள். இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினா லும் செயற்கை என தெரிந்துவிடும். செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனு க்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது.
இயற்கை பொருட்கள் மூலம் மனிதன்
தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுது அதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள்
ஆகும். ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில்ருத்ராஷம் விளைகிறது.
நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ரா ஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை.
ருத்ராஷத்தின் வடிவம் அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும் பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று.சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தி யூட்ட பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவ மாகி உங்களை பிரபஞ்சத்தை கையில்
வைத்திருப்பவராக மாற்றும்.
ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்தவேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப் பட்டவுடன் அதிகவேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும். சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன்எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத் தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம்
தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழு வதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.
ருத்ராக்ஷத்திற்கு என
சில இயல்பு குணங்கள் உண்டு!
சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்ப வர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள்
தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட
உண்மை. இதனால்தான் காடுகளில் தவம் செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.
ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.
நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து
அணிபவ ராக இருந்தால் உங்களுக்கு
ஏற்படும் சுக-துக்க ங்களின வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள் ளாத வேதிப்பொருட் கள் இருந்தால் ருத்ரா க்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக் கொள் ளும்.விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப் பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.
ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு
கட்டுப் பாடும்இல்லை. ஆண்ஃபெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத் திற்கு முக்கியமான ஒன்று. தூய்மையற்ற நிலை யிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன் படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகி றது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான
மரியாதை செலுத்துவது நல்லது.குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்டமந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்று முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும். மந்திர ஜெபம் செய்யா தவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர் களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிரவேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம்
அதில் இல்லை.
ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள் சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும். பயன்படுத்த துவங்கு வதற்கு முன்னால் ஒரு வாரகாலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக
துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவ தும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜை யில்வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். . இந்ததூய்மையாக்கும் முறையை வருட த்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத
சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரிஅன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க
வேண்டும். ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய
இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற
மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமானவிஷய த்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும்.இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை.அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும் உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.
.ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷமணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில்
ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கி றார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள்.
உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது
செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது. நவரத்தின கல் போலஇதனையும்
வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.
ருத்ரக்ஷத்தை தங்கம் தாமிரம் அல்லது பருத்தி நூலில்மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும்பொழுது மட்டும் நெருக்கமா க கோர்த்து அணிய வேண்டும்.
ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள்உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும் சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்த லாம்.
1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம்சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல
வைத்து பூஜை செய்யலாம்.
3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால்கலை நயம்இ சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்கள
ுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.
4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும்
பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்லபலனை அளிக்கும்.
5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன்பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம்
உண்டு.
தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில்சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்டஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம். ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு.இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும்
உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித்
தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக
இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷ த்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது. ருத்ராக்ஷ மணியின்துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால்
ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல
வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மர வகைகள் உண்டு. இதை”பத்ராட்சம் ” என அழைப்பார்கள். இதில் சாயத்தைக்கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.
ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல்அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன்முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக
வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்டருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.
ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும் தொலைக் காட்சிகளிலும்விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் எனபிரச்சாரம் செய்கிறார்கள்.
எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவ தும் ருத்ராக்ஷம் அணியும் எந் சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை.
பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்த விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவ தில்லை என சிந்தித்துப்பார்த்தால் நிதர்சனம் புரியும். ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ் வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லட்சிய த்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்ச த்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.
இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர்
அணிய கூடாது என சொல்லுவார்கள்.ருத்தி ராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க
வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்மனம்
மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படு மோ அங்கெல்லாம் அணியலாம். எப்பொழுது ம் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவ து நல்லது. ஜபிக்கபட்டமந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில்சார்ஜ் செய்து விட்டுஇ வீட்டில் வைத்திருந் தால் என்ன பலன்? ஜபம் செய்ததும் மாலை யை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஆன்மீக குரு ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர் கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்யதுவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம்
மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக
இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது.இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது.அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது.
இரவில் அணிய கூடாது எனசொல்லுவதற்கு காரணம். தாம்பத்தியகாலத்தில் ருத்திராக்ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான்.
உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண
சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால்
அத்தருணத்தில் ருத்திராக்ஷம் செயல் இழக்க
வாய்ப்பு உண்டு.ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது.ஸ்படிகம் முத்து பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
21 முகம் வரை ருத்ராட்சம்.கிடைத்தாலும், ஒரு முக ருத்ராட்சம் கிடைப்பது அரிது.இதை வீட்டில், செம்பு, பித்தளை, வெள்ளி குடங்களி ல் , கண்ணாடி கூண்டில்வைத்து பாதுகாத்து வரலாம். மேலும், கவுரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரிய கலை, சந்திரகலை உள்ளிட்டவடிவங்களிலும், எட்டு அபூர்வ ருத்ராட்சங்க ளும் உள்ளன. நன்றி!
ஓம் நமச்சிவாய!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...