வெள்ளி, 7 மார்ச், 2014

திருமணத்திற்கு தடையாக இருக்கும் ராகு - கேது தோஷம்

மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சில தோஷங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான மற்றும் பிரச்சனைக்குரியதாக கருதப்படும் தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோஷங்களாகும்.

பிதூர் தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷம், புத்திர தோஷம் போன்ற முக்கிய தோஷங்களுக்கு ராகு, கேதுக்களே காரணமாகின்றனர். ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்து விடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள்.

ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் பரிகாரம் செய்வது நல்லது. திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.

மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம். ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.

அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம்.

பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.

இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன்,பாட்டி-தகப்பன் வழிபட்டன்,பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும். காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...