செவ்வாய், 7 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி பலன்கள் (06.07.15 முதல் 01.08.16 வரை)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) 100/75 (அள்ளித்தர வாராரு ஐந்தாமிடத்து குரு)
குரு பகவான் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து சிரமங்களைத் தந்திருப்பார். குடும்பத்தில் பல
பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு ஏற்பட்டு இருக்கும். இப்போது குரு பகவான் ராசிக்கு 5-ம் இடத்துக்கு வருவதால் நன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் கூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2015 டிச.20ல் குரு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும்.
சனிபகவான் 2015 ஜூன் 12ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். இது சனியின் பொதுவான பலன்கள். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். நல்ல பணவரவு இருந்து கொண்டே இருக்கும். எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் சற்று முயற்சி செய்தால் வீடு, மனை வாங்கலாம். இதற்காக கடன் வாங்க நேரிடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கும். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோக வாய்ப்புண்டாகும். திருமணம் போன்ற சுப விஷயப் பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். புது மணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.
பணி சிறப்படையும். வேலைப்பளு பெருமளவில் குறையும். விருப்பமான இட, பணி மாற்றத்தைப் பெறலாம். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தடையின்றி கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள
மற்றவர்கள் பெயரில் தொடங்கவும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்கும்.
மாணவர்கள் முன்னேற்ற பலனைக் காணலாம். கடந்த கல்வி ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கப்பெறலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன்தரும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு குறையாது.
விவசாயத்தில் வளர்ச்சி காணலாம். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதுஇருக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் குதூகலமான பலனைக் காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உணவு
சாப்பிடுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
தடையை முறியடித்து வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 100/60 (நான்காம் இடமானாலும் நல்லதைச் செய்வார்)
குருபகவான் இதுவரை 3-ம் இடத்தில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும்போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம்.
ஏனெனில், டிசம்பர் 20-ந் தேதி குருபகவான் கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம். அவர்
குடும்பத்தில் முன்னேற்றம், பொருளாதாரத்தில் வளர்ச்சி, மனநிம்மதி ஆகிய நற்பலன்களைத் தருவார். மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக அமையும். சனிபகவான் ஜூன் 12 அன்று வக்கிரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். வக்கிரம் அடைந்து 6-ம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்வார். குறிப்பாக, முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. நல்ல பணப்புழக்கம் இருக்கும். பகைவர்களின் தொல்லை இருக்காது. எனவே எடுத்த எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்த்தால் கெடுபலன்கள் அறவே இருக்காது.குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். உறவினர் வகைகளில் விரோதம் ஏற்படலாம். எனவே, அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். கணவன், மனைவி விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்பட்டு விலகலாம்.
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இருக்காது. நீங்கள் சென்ற இடமெல்லாம் காரிய அனுகூலம் ஏற்படும். பொருள் விரயம் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். நல்ல வருமானம் காணலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதம் ஆகலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றல் ஆகலாம். அது கூட எதிர்காலத்துக்கு நல்லதாக அமையலாம்.
கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதே நேரம் பொருளாதார நிலையில் எந்த பிற்போக்கான நிலையும் இருக்காது.
சமூக நல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் காணப்படுவர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைப்பதில் சிரமம் இருக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். விரும்பிய பாடம் கிடைக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
விவசாயத்தில் நல்ல லாபம் காணலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான
மகசூலை பெறுவர். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. கால்நடை செல்வம் பெருகும்.
பெண்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். பொன்,பொருள் வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உடல்நலம் சுமாராகவே இருக்கும். ராகுவால் மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி இருந்தால்
திருச்செந்தூர், அல்லது ஆலங்குடி சென்று வரலாம். ஏழைகள் படிக்க உதவுங்கள்.
லட்சுமி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
கண்ணியமுடன் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 100/65 (விருந்துக்கு குறைவில்லை விழாக்களுக்கு பஞ்சமில்லை)
குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ல் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டிருக்கும். பகைவர்களின் சதி தவிடு பொடியாகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து சாதனை படைத்திருப்பீர்கள். பொருளாதார வளம் சேமிக்கும் விதத்தில் கைகொடுத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் முதலிடம் வகித்திருப்பீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மன நிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். வீடு, மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான சிம்மத்துக்கு வருகிறார். இதனால், முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள் தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குரு பார்வையால் கோடி நன்மை உண்டாகும். எந்த இடையூறையும் அவரின் பார்வை பலத்தால் தகர்த்தெறிவீர்கள். மொத்தத்தில் சிம்மகுரு நன்மை  தர காத்திருக்கிறார். அதோடு மற்ற கிரகங்களின் நிலையையும் கொண்டு பலனை கணக்கிட வேண்டும். டிச.20ல் குரு, கன்னிராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவர் உறவினர்கள் வகையில் பிரச்னை, வீண்விரோதம் ஏற்படலாம். சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். 5-ம் இடத்தில் சனிபகவான் இருக்கும் போது, பல்வேறு இடையூறுகளைத் தரலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை உருவாகும். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தர மாட்டார். 2015 செப். 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனி பகவான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அப்போது வழங்குவார்.  மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். செலவுகள் அதிகரித்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் வருமானமும் புதிய வழிகளில் வந்து சேரும். உறவினர் மத்தியில் மரியாதை சுமாராக இருக்கும். வீண் விரோதத்தைத் தவிர்க்கவும்.
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். புதிய தொழில் முயற்சி ஓரளவு கை கொடுக்கும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும், எளிதில் முறியடிப்பீர்கள். தொழில் விஷயமாக வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் உருவாகும். வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. அனுசரித்து போவது
நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். பணிச்சுமை, அலைச்சல் ஏற்படலாம். தீவிர முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாராட்டை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள்.
மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பர். குறிப்பாக நெல், சோளம், கேழ்வரகு போன்ற பயிர் வகைகள் மூலம் அதிக வருவாய் காணலாம். சிலர் புதிதாகச் சொத்து வாங்குவர்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வர். மனம் போல புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு
விளக்கேற்றுங்கள். ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுங்கள். ராகு
காலத்தில் காளிக்கு தீபமிடுங்கள். முருகன் கோவிலில் தரிசனம் செய்து வாருங்கள்.

அதிகாரத்திற்கு அடிபணிய மறுக்கும் கடக ராசி அன்பர்களே!
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) 100/75 (கிளம்பிட்டார் ஜென்ம குரு தொட்டதெல்லாம் தூள்)
இந்த குரு பெயர்ச்சி உங்களை மேலும் உயர்த்தும். இது வரை குருபகவான் உங்கள் ராசியில் இருந்து சிற்சில சிரமங்களைக் கொடுத்திருப்பார். குறிப்பாக, குடும்பத்தில் குழப்பமும், பிரச்னைகளும் வந்திருக்கும். தொழில், வேலையில் ஏதேனும் ஒரு  பிரச்னையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில், குருபகவான் 2-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்ப்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். இனி தொட்டதெல்லாம் தூள் பறக்கும். 2015 டிசம்பர் 20ல், குரு 3-ம் இடமான கன்னி ராசிக்கு வக்ரமாகி செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.
குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும்.சனிபகவான் 2015 ஜூன் 12 அன்று, வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். வக்கிரம் அடைந்து 4-ம் இடத்தில் இருக்கும் சனிபகவான் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம். ஆனால், வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்கள் குறைந்தே இருக்கும். மேற்கண்ட கிரக நிலையின் அடிப்படையில் ஒட்டு மொத்த பலனைப் பார்ப்போம்.
பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தை வெளியூர் மாற்ற வேண்டியது இருக்கும். புதிய வீடு
வாகனம் வாங்கலாம்.
தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வருமானம் அதிகரிக்கும்.  எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவைப் பயன்படுத்தி வருமானத்தை காணலாம்.
பணியாளர்களுக்கு வேலையில் திருப்திகரமான நிலை இருக்கும். பல்வேறு அனுகூலங்களைப் பெறலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் பக்கத் தொழில் செய்து, வருவாயை அதிகரிக்கச் செய்வர். எதிர்பாராத மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வக்கீல்கள், ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். நல்ல வளத்தையும் அடைவர்.
கலைஞர்கள் புகழும், பாராட்டும் பெறலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும் எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல வருவாயோடு மகிழ்வுடன் இருப்பர். மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதியசொத்து வாங்கலாம். கால்நடைத்தொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பம் உங்களால் சிறப்பு அடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள், சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஆனால், மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி அளியுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். இதன் மூலம் தடையின்றி முன்னேற்றம் அடையலாம்.
எந்த செயலிலும் முத்திரை பதிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!  
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) 100/55 (ஜென்மகுரு என்றாலும் ஜெயம் உங்களுக்கே)
குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்திருப்பார். பொருளாதார சிரமமும் ஏற்பட்டிருக்கும். ஆனால், தற்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இதுவும் சிறப்பானது இல்லை என்றாலும், அவர் 12-ம் இடத்தில் இருந்தது போல கெடுபலனைத் தர மாட்டார். “ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் என்று ஜோதிடத்தில் வாக்கு உண்டு. அதாவது ராமருக்கு ஜென்மகுருகாலத்தில் வன வாசம் செல்ல நேரிட்டது என்று கூறுவர். அந்த நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின் ஜாதகம் வேறு; உங்களுடைய கிரக நிலை வேறு. அவர் தெய்வ அவதாரம். நாம் மனிதர்கள். குரு 1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு. ஆனாலும் கவலைப்பட வேண்டாம். சாதகமற்று இருந்தாலும், குருவின் 5,7,9 ஆகிய மூன்று சுப பார்வை பலமாக உள்ளது. இதனால், வாழ்வில் எதிலும் ஜெயம் அடைவீர்கள்.
குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. அவர் அதிக நாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். டிச. 20ல் இடம் பெயர்ந்து 2-ம் இடமான கன்னிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். அதன்பின் துன்பம் அனைத்தும் இடம் தெரியாமல் மறையும்.குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். சனிபகவான் ஜூன் 12றற அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.  3ல் இருக்கும் இக்கால கட்டத்தில் சனி பல்வேறு நன்மைகளை செய்வார். செயல்களில் வெற்றியும், பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும்,  தொழில் அபிவிருத்தியும் உண்டாகும். சனிபகவான் செப். 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து 4-ம் இடத்தில்  இருக்கும்போது  சில பிரச்னைகளை தருவார். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் பார்வை சிறப்பான இடத்தில் விழுகிறது. இது சாதகமானதாகும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.குடும்பத்தில் மந்த நிலை உருவாகும்.கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலை உருவாகலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுபவிஷயம் குறித்த பேச்சில் தாமதம் ஆகலாம். இதுவும் நன்மைக்கே என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு தக்க அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த முயல்வீர்கள்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உண்டாகும். வரவு, செலவு கணக்கைச் சரியாக வைத்துக் கொள்ளவும். முதலீட்டை அதிகப்படுத்தாமல் இருப்பதைக் கொண்டு முன்னேறுவது நல்லது. பங்குதாரர்களின் கருத்தை ஏற்று நடப்பீர்கள். எதிரியால் உருவாகும் பிரச்னையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.
பணியாளர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, புகழை விட பொருளாதார மேம்பாடு காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்க பொறுமை தேவைப்படும்.
மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சக மாணவர்களின் உதவி கிடைக்கும். டிசம்பருக்கு பிறகு முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயத்தில் திருப்திகரமான வருவாயைக் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து வாங்கும்
யோகமுண்டு. கால்நடை செல்வம் பெருகும். கூலி வேலை செய்பவர்கள் செல்வாக்கோடு காணப்படுவர்.
பெண்கள், தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்வர். குடும்ப மேம்பாட்டுக்காக கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பரிகாரம்: வியாழனன்று குருவுக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரை வழிபட்டு வாருங்கள். சனியன்று பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுங்கள்.
நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!  
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 100/65 (ஆரம்பத்தை சமாளிச்சுட்டா அப்புறம் சந்தோஷம் தான்)
உங்களுக்கு குரு பகவான் இதுவரை 11ல் இருந்து நன்மைகளை வாரி வழங்கினார். பதவி, சம்பள உயர்வு பெற்று மகிழ்ந்திருப்பீர்கள். வேலையில் திருப்தி இருந்திருக்கும். கையில் பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பீர்கள். இப்படி நன்மை அளித்த குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. பொருள் விரயமாகலாம். மனக்குழப்பம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உருவாகலாம். குரு பகவான் கெடு பலனை செய்யும் போது, அது பிரச்னையில் ஆரம்பித்தாலும், இறுதியில் சந்தோஷத்தில் முடியும். ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே குரு பகவான் செயல்பாடும் அமையும். டிசம்பர் 20ல் குரு பகவான் உங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதனால் மந்த நிலை உருவாகும். குருபகவான் சாதகமற்று இருந்தாலும், அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டாகும்.
சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். ஆனால் அவரது 10ம் பார்வை சிறப்பாக இருப்பதால், அதற்கான தீர்வு கிடைக்கும். வாழ்வில் பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். செப்டம்பர் 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து, விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி இருந்தாலும், திடீர் செலவுகளைத் தவிர்க்க முடியாது. எந்த ஒரு விஷயத்திலும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கம். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். தேவையற்ற வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தேவைகள் நல்ல முறையில் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு மலரும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உருவாகும். பிள்ளைகளாலும் பிரச்னையைச் சந்திக்கலாம். அதிக முயற்சி எடுத்தால் புதியமனை வாங்கவோ, வீடு கட்டவோ முடியும். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும்.
தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதேநேரம் நிர்வாகச் செலவு அதிகரிக்க நேரிடும். செப்டம்பர் வரை தொழிலில் பிரச்னை உருவாகலாம். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உண்டாகும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். விரிவாக்கப்பணி, புதிய முயற்சி ஏதும் தற்போது வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை சிறக்கும்.
பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இட, பணி மாற்றத்தைச் சந்திப்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் நாளடைவில் நன்மையாக மாறும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு வர வேண்டிய விருது போன்றவை தட்டி பறிக்கப்படலாம். அதே நேரம் பண விஷயத்தில் எந்த பின்னடைவும் உண்டாகாது.
அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். பொருளாதார வளம் சிறக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைக்காது.
மாணவர்கள் இந்த ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மையளிக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர விடாமுயற்சி தேவைப்படும்.
விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். ஆனால், அதிக உடல் உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். அதிக பணச்செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். கூலி வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வழக்கு, விவகாரத்தில் எதிர்பார்த்தது நடக்க வாய்ப்பில்லை.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அதே நேரம் குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நவக்கிரக வழிபாடு செய்யவும். ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். ராமநாமத்தை ஜெபியுங்கள். கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள்.
நல்ல மனம், உயர்ந்த குணம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!  
துலாம்: (சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1,2,3) 100/75 (பணமோ பணம் சுகமோ சுகம்)
குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கடகத்தில் இருந்து, பிரச்னைகளை தந்து கொண்டிருந்தார். அவரால் பொருள் இழப்பும், பண நெருக்கடியும் உருவாகியிருக்கும். சிலர் பதவி இழக்கும் நிலைக்கும் ஆளாகி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு பகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரப் போகிறார். இது சிறப்பான இடம் என்பதால் அவரால் வாழ்வின் எல்லா நிலையிலும் வெற்றிஉண்டாகும். தொழிலில் அமோக லாபத்தை வாரி வழங்குவார். அதன் பின் டிசம்பர் 20ல் குரு சிம்மத்தில் இருந்து 12-ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானதல்ல. பொருள் விரயத்தை உருவாக்கலாம்.  சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து உங்கள் ராசிக்கு மீண்டும் மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். பொதுவாக சனிபகவானால் நன்மை தர இயலாது. அவரால் உடல் உபாதை ஏற்படலாம்.
வெளியூரில் வசிக்க நேரிடும். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன் தர மாட்டார்.   மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.  குருபகவான் மட்டுமின்றி கேதுவின் பலத்தால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தேவை அனைத்தும் நல்லமுறையில் நிறைவேறும். வருமானம் உயர்வதால் சேமிக்கவும் வாய்ப்புண்டு. உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். புதிய இடம், வீடுமனை வாங்கும் யோகமுண்டாகும்.  குடும்பத்தில் இதற்கு முன்பிருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வீட்டில் நிலவிய குழப்பம் அனைத்தும் மறையும். கேதுவால் வாழ்க்கை வசதி பெருகும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, மீண்டும் ஒன்று சேருவர். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரலாம். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் குதூகல பலனைக் காணலாம். லாபம் நாளுக்குநாள் அதிகரிக்கும்.
வங்கியில் சேமிப்பும் கூடும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலகட்டம். ஆனால், ஏழரை சனி காலம் என்பதால் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். எதிரிகளின் தொல்லை உங்களிடம் எடுபடாமல் போகும். அரசிடம் எதிர்பார்த்த உதவி நல்ல முறையில் கிடைக்கும். இரும்பு தொடர்பான வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சிரமம் அனைத்தும் மறையும். வேலைப்பளு நீங்கி மனநிம்மதி காண்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க யோகமுண்டு. வேலையை விட்டு விலகியவர் கூட,அதே வேலையை மீண்டும் கிடைக்கப் பெறுவர். படித்து முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கலைஞர்கள் இதுவரை திறமைக்கு ஏற்ற மதிப்போ, பாராட்டோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். இனி, இந்த பின்தங்கிய நிலை மாறும். வருமானம் உயரும். ரசிகர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் மளமளவென கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். தேர்வில் சாதனை புரிவர். விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க யோகமுண்டாகும். விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை சோளம், மொச்சை, கரும்பு, எள், பனைத் தொழிலில் நல்ல வளர்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். வழக்கு விவகார முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன சொத்து மீண்டும் வர வாய்ப்புண்டு.
பெண்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். மனம் போல ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.
கணவரிடம் இணக்கம் உருவாகும். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: சனி, ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபடுங்கள். காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு செல்லுங்கள். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
செய்த நன்றியை ஒரு நாளும் மறவாத விருச்சிக ராசி அன்பர்களே!
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) 100/60 (பத்தாமிடம் வருகிறார் தொழிலில் பத்திரம்)
இதுவரை குரு பகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக, எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். இப்போது 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களைத் தர முடியாது. பத்தாம் இட குரு பற்றி, ஜோதிடத்தில் “”பத்தாமிட குரு பதவிக்கு இடர் என்பர். அதாவது அவரவர் தொழில், வேலையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய சமயம் இது.  இதனால்  சஞ்சலம் கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது 5-ம் இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். டிசம்பர் 20-ந்தேதி 11-ம் இடமான கன்னி ராசிக்கு குரு அதிசாரம் ஆகிறார். இது மிகவும் சிறப்பான இடம்.
அப்போது, அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதார வளம் காணச் செய்வார். சனி பகவான் 2015 ஜூன் 12 அன்று, வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். அவரால், பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது என்பதால், குருவின் பார்வை இழந்ததை திரும்பத்தந்து விடும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.குரு பெயர்ச்சியால் சுமாரான பலனை காணலாம். செலவு அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும், அதை சாமர்த்தியமாக முறியடித்து வெற்றி காணலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். ஆனாலும், சற்று சிரத்தை எடுத்தால் கைகூடும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். சிலரது குடும்பத்தில் தற்காலிகமாக பிரியும் நிலைகூட உருவாகிறது. எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அல்லது வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சற்று கவனம் தேவை. வீடு-மனை வாங்கும் எண்ணத்தை ஒத்தி போடுங்கள்.
தொழிலதிபர்களும், வியாபாரிகளும் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்காமல் போகாது. எனினும், பணவிஷயத்தில்
கவனம் தேவை.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால், உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வுதாமதம் ஆகலாம். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். சிலர் பதவியை விட்டு விலகும் எண்ணம் தோன்றும். எனினும், குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.
கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புகழ், கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள், சுமாரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பது சிரமம்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயத்தில் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பவர்களும் நல்ல பலனைக் காணலாம்.
பெண்கள் சீரான நிலையில் இருப்பர். குடும்ப ஒற்றுமைக்காக கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். முருகன் வழிபாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வழிபடுங்கள்.
பெரியோர்களிடம் நன்மதிப்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 100/70 (ஒன்பதாம் இட குரு உயர்த்துவார் உங்களை)
குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும்போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டி இருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் குரு தற்போது 9-ம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். குருபகவான் 2015 டிசம்பர் 20-ந் தேதி 10-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொருள் நஷ்டத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில்  இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.சனிபகவான் 2015 ஜூன் 12-ந் தேதி அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். 2015 செப்டம்பர் 5-ந் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அங்கு அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
கடந்த காலத்தைவிட முன்னேற்றம்காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். ஆனால் சிற்சில தடைகளும் வரத்தான் செய்யும். அதை எளிதில் முறியடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் மீதான பொல்லாப்பு மறைந்து, மதிப்பு, மரியாதை சிறப்படையும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். கணவன்-மனைவி இடையே அன்பு சீராக இருக்கும். அதேநேரம் ராகு சிறப்பாக இல்லாததால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறு வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் வளர்ச்சி அடைவர். லாபம் அதிகரிக்கும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்லலாம். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். சம்பள உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர்.
விவசாயிகள் சிறப்பான வருவாயை காணலாம். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். நெல், கோதுமை, கடலை பயிர்கள் நல்ல மகசூல் தரும். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல  மகசூலைத் தரும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்கலாம்.
பெண்கள் உற்சாகமாகக் காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காணலாம். விருந்து, விழா என சென்று வரலாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போக வேண்டும்.
பரிகாரம்: பத்ரகாளிஅம்மனுக்கு தீபம் ஏற்றுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழரை சனிகாலம் என்பதால், சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட மகரராசி அன்பர்களே!
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) 100/55 (இடம் எட்டானாலும் பார்வை ஏழால் பலன்)
இதுவரை, குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அஷ்டம குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். சிரமங்களைத் தருவார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம்.
ஏனெனில், குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்குசாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் . அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும், அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.  இந்த நிலையில் 2015 டிசம்பர் 20ல், குருபகவான் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு வக்ரமாகி செல்கிறார். இது மிகவும் உகந்த நிலை. அங்கு சென்ற பின் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், சுபங்களையும் அள்ளித் தருவார்.
மேலும் அவரது 9-ம் இடத்துப்பார்வையாலும் நன்மை தருவார்.சனிபகவான் 2015 ஜூன் 12 அன்று வக்கிரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் சில சிரமங்கள் வர வேண்டும் என்பது விதி. ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவானால் வரும் கெடுபலன்கள் குறையும்.  கேதுவால் நற்பலன்கள் அதிகமாகவே கிடைக்கும். எந்தச் செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும்.  ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்.வீட்டுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளி போகலாம். ஆனாலும், குருவின் பார்வையால் அதையும் முயற்சியின் பேரில் சாதிக்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் விரோதம்
ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும்.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தொழிலதிபர்களும், வியாபாரிகளும்  எந்த தொழில் செய்தாலும் நல்ல வருமானம் பெறலாம். புதிய வியாபாரம் துவங்க யோகமுண்டு.  இரும்பு வியாபாரம்,  தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிறருக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உருவாகும்.
பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம்.
கலைஞர்கள் விடா முயற்சிஉடன் உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த விருது, பாராட்டு கிடைப்பதில் தாமதமாகும்.
அரசியல்வாதிகள் வளமாகக் காணப்படுவர். மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு போல் இருக்காது. விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
விவசாயத்தில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குதூகல நிலையில் இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியிருக்கும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவும். அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து எந்த வரவையும் எதிர்பார்க்க முடியாது. உடல் நலம் சிறப்படையும். மனதில் ஒரு வித தளர்ச்சி ஏற்படும்.
பரிகாரம்: குரு சாதகமாக இல்லாததால் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
மற்றவர் தயவை எதிர்பார்க்காத கும்ப ராசி அன்பர்களே!
கும்பம்: (அவிட்டம் 3,4,சதயம், பூரட்டாதி 1,2,3) 100/80 (ஏணியாய் இருப்பார் ஏழாமிடத்து குரு)
குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அவர் மன நிம்மதியை
இழக்கச் செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இப்போது குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே, குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். டிசம்பர் 20-ந் தேதி, குரு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம் அல்ல. பொருளாதர சரிவையும், மனவேதனையும், எதிரிகளால் தொல்லையையும் தரலாம். ஆனால், அவரது 7-ம் இடத்துப்பார்வையால், எந்த பிரச்னையையும் முறியடிக்க வாய்ப்பு  கிடைக்கும்.
சனி பகவான், ஜூன் 12-ந் தேதி அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். சனி வக்ரம் அடைந்து 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார்.மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.முன்னேற்றப் பாதைக்கு அடியெடுத்து வைக்கும் காலம். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதிகள் மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் சிரத்தை எடுத்து புதிய வீடு கட்டலாம். அதற்காக கடன்பட வேண்டியதிருக்கும். புதிய வாகனம் வாங்கலாம்.
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். ஆனால், அதற்குத் தகுந்த பலன் ஒன்றுக்கு பத்தாக இருக்கும்.
பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் உயர்வான நிலையை அடைவர். உங்கள் உழைப்புக்கு மதிப்பு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கவுரவத்தை இழக்காவண்ணம் இருப்பர். உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் இந்த கல்விஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயத்தில் நல்ல வளம் காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். தானிய விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை செல்வங்கள் பெருகும். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் முன்னேற்றமான பலன் காண்பர். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர்.உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் நோய் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தவர்கள் குணம் அடைவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: குரு சாதகமாக இருந்தாலும் சனி திருப்தியற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு எள்சோறு படைத்து பரிகாரம் செய்யுங்கள். கிருஷ்ணர் வழிபாடு துணைநிற்கும். ஏழைகளுக்கு ஆடுதானம் செய்யுங்கள்.
உள்ள உறுதியுடன் உழைப்பில் ஈடுபடும் மீனராசி அன்பர்களே!  
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 100/ 55 (தடைகள் தகரும் வெற்றி நிலைக்கும்)
குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் இருந்து நன்மைகளை வாரி வழங்கி வந்தார். அவரால் குடும்ப நலன் மேம்பட்டிருக்கும். கையில் பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் முன்னேற்றம் அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் குரு பகவான் ராசிக்கு 5ல் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமானது அல்ல. 5ல் இருந்தது போல நன்மையை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் பிற்போக்கான பலனை அவர் தர மாட்டார். பொதுவாக 6ல் இருக்கும் போது, உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனத் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு.
குருவின் இடம் சாதகமற்று இருந்தாலும், அவரது 9ம் பார்வை சிறப்பாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் குறுக்கிடும்தடைகளைத் தகர்த்து, வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிப்பீர்கள். டிசம்பர் 20ல் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு அவர் அதிசாரம் ஆகிறார். அப்போது சுபம், செல்வாக்கு, பொருளாதார வளம் மேலோங்கும். சனிபகவான், ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். இவரால் முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்தவகையில் சனியால் கெடுபலன் அதிகம் நேராது. மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணத்தின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம்
குறையும். இருந்தாலும், பணநிலை சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். யாரிடமும் வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது. குடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமண விஷயத்தில் தடை
ஏற்பட்டு விலகும். வீடு, மனை வாங்க சில காலம் பொறுத்திருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது. புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. ஆதாய நோக்கில் வெளியூர் பயணம் அடிக்கடி செல்வீர்கள். குருவின் 9-ம் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால், எக்காரணம் கொண்டும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட மாட்டீர்கள்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு அதிகரித்தாலும், சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதம் ஆகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். வேலையில்  கவனம் செலுத்தி விட்டால், அதிகாரிகள் உங்கள் பக்கம் தலை வைக்க
மாட்டார்கள்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும். எதிர்பார்த்த விருது கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் பலன் கருதாமல் பாடுபட வேண்டியிருக்கும். பணவரவும் சுமார் தான்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடப்பவர்கள்கல்வியில் சிறந்து விளங்குவர்.
விவசாயிகள் உழைப்புக்கு  ஏற்ப நற்பலன் காண்பர். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதம் ஆகும். அப்படி வாங்கினால், வில்லங்கம், பத்திரம் உள்ளிட்டவற்றை கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில்  தீர்ப்பை சாதகமாகப் பெற கடுமையாகப்  போராட வேண்டியிருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆடம்பர செலவைக் குறைப்பது புத்திசாலித்தனம்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். லட்சுமி வழிபாடு வருமானத்திற்கு வழிவகுக்கும். துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றுங்கள். பவுர்ணமியன்று மலைக்கோயிலுக்குச் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...