வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஸ்படிகமணி பயன்கள் நன்மைகள்

அன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ? கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூம்புகார் போன்ற விற்பனை நிலையங்களிலும் ஸ்படிகமணி மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது ? அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால் என்ன பயன் ? அதனை ஏன் அணிய வேண்டும் ? பார்க்கலாம். படிகாரம் என்பதும் ஸ்படிகம் என்பதும் வேறு வேறு. சிறு சிறு காயங்கள் படும் இடத்தில் படிகாரத்தை நீரில் தொட்டு லேசாக தடவினால் காயமான இடம் செப்டிக் ஆகாமல் தடுக்கப்படும். இதனை பெரும்பாலும் சலூன்களில் பயன்படுத்துவதை பார்க்கலாம். சில இடங்களில் படிகாரத்தை திருஷ்டிக்காக கருப்பு கயிற்றில் கட்டி வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். மேலும் சில சித்த வைத்திய தேவைகளுக்கும் படிகாரம் பயன்படுத்தப்படுகிறது . ஆனால் ஸ்படிகம் முற்றிலுமாக மாறுபட்டது. பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதில் உள்ளே அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் , உருண்டையாகவும் , பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு மாலையாக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஸ்படிக மாலை எனப்படுகிறது. இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் . இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது , நீரோடு நீராக ஒன்றி இருக்கும் , தனியாக தெரியாது. முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தரமாலை 108 மணிகளைக் கொண்டது சுமாரான அளவு உள்ளது ரூ.1000 முதல் கிடைக்கிறது. அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும் , முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது. பூம்புகார் , காதி கிராப்ட் , மற்றும் சில கடைகள் நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக சாதாரணமான ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள். அது நல்லதல்ல. துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும். அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில் ? மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா? சராசரியாக 21,600 மூச்சாகும். நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 மூச்சு விடுவோம். ஆனால் இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால் ஆயுள் குறையும்). இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது. அதனால் என்ன ? தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும். மேலும் .. ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு , அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது , அதனால் அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர் கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த சோகமான செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும். (இது உபாசகர்களுக்கு பொருந்தும்.) இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே பொருந்தும். ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது .(ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்) கீழே உள்ளது போல் அணிவது தவறு. கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது. கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான பலன் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...