திங்கள், 22 டிசம்பர், 2014

யோகங்கள்



தற்போது ஒரு ஜாதகத்தைப் பார்த்து என்ன யோகங்கள் இருக்கிறது? அந்த யோகங்கள் கொடுக்கும் பலன் என்ன? என்பதை தற்போது தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.
ஒருவருடைய ஜாதகத்தில் யோகங்கள் நிறை இருக்கலாம். ஆனல் அந்த யோகத்தைக் கொடுக்கக்கூடிய திசாபுத்தி வந்தால் தான் அந்த யோகங்களின் நற்பலனை பெற முடியும்.
சில ஜாதகங்களில் எண்ணற்ற ராஜயோகங்கள் இருக்கும். ஆனல் அந்த யோகங்கள் கொடுக்கின்ற கிரஹங்கள் பலவீனம் அடைந்து, கெட்டு கெட்டவர்கள் சேர்க்கைப் பெற்றுக் காணப்பட்டால் யோகங்கள் பலவீனம் பெற்று விடுகிறது.
காலசர்ப்பதோஷம் போன்று அமையப்பெற்று பிரதான கிரஹங்கள் ராகு, கேது பிடியிலோ, அல்லது ராகு கேது நட்சத்திர சாரத்திலோ இருந்தால் அந்த ஜாதகங்களில் கூட யோகங்கள் பங்கம் ஏற்பட்டு சிறப்பான பலங்களை உண்டாக்குவதில்லை.
மூன்று கிரஹங்கள் உச்சம் பெற்றல் அரசனுக்கு சமமான யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. ஆனல் உச்சம் பெற்ற கிரஹங்கள் ஒன்றோடு ஒன்று பார்வை செய்யும்போது உச்சப்பலன் போய் நீசபலம் ஏற்படுகிறது.
அதுபோல ஒரு ஜாதகத்தில் கிரஹங்கள் நீசம்பெற்று இருக்கிறதே இதனல் அந்த ஜாதகம் பலவீனம் அடைந்து விடுமா? என்று நீங்கள் அச்சம் அடையலாம். ஆனல் நீசம் பெற்ற கிரஹங்கள் ஒன்றேடு ஒன்று பார்வைஸ் செய்யும்போது நீசபலம் போய் உச்சபலம் உண்டாகிறது.
"நீசன் நீசனைப்பார்த்தால் நினைத்ததை முடிப்பான்" என்று ஒரு பழமொழியும் உண்டு. சரி, பொதுவாக ஜாதகங்களில் என்ன யோகங்கள் உள்ளது? அதனல் ஏற்படும் பலன்கள் யாது? என்பதைப் பற்றி இங்கே குறிப்பிட்ட விரும்புகிறேன். 300-க்கு மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட நூட்கள் கூறுகின்றன. அதில் முக்கியமான யோகங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1 . தர்ம கர்மாதிபதி யோகம் :
ஒருவருடைய ஜாதகத்தில் 9, 10-க்கு அதிபதிகள் இணைந்து ஒருவீட்டில் அமையப்பெற்றல் "தர்ம கர்மாதிபதி யோகம்" உண்டாகிறது. இது யோகங்களிலேயே மிகச்சிறந்த யோகமாக கருதப்படுகிறது.
இது யோகம் அமையப்பெற்றவர்கள் செல்வம் செல்வாக்கு சேரும் அமைப்பு, உயர்ந்த பதவி, தொழிலில் மேலும் மேலும் உயர்வு, கடல் கடந்து வெளிநாடு செல்லும் அமைப்பு தெய்வீக ஆண்மீக ஈடுபாடு உண்டாகும். நிலையாவும் அமையப்பெறும். (உதாரணமாக ஒருவர் தனுசு லக்கினத்தில் பிறந்தார் என்றல், அவருடைய 9-ம் அதிபதி சூரியனும், 10-ம் அதிபதி புதன் இணைந்து ஒருவீட்டில் காணப்பட்டால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அவர்கள் அமர்கின்ற இடம் சிம்மமாகவோ அல்லது கன்னியாகவோ இருந்துவிட்டால் அந்த யோகத்தின் நற்பலன்கள் கூடுகிறது. அதாவது யோகம் கொடுக்கும் கிரஹங்கள் ஆட்சி உச்சம் பெற்று காணப்பட்டால் அந்த யோகத்தின் நற்பலன்கள் அதிகமாகிறது.
2 . கெஜகேசரியோகம் :
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு 4, 7, 10 போன்ற கேந்திரங்களில் குரு அமையப் பெற்றுக் காணப்பட்டால் "கெஜகேசசி யோகம்" உண்டாகிறது. கெஜம் என்றல் யானை. கேசரி என்றல் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் ஒரு சங்கம் போல் இந்த யோகம் பெற்றவர்கள் வலிமை உள்ளவர்களாக திகழ்வார்கள். வீடு, வாகனம், உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு, போன்ற ஏற்றமான நற்பலங்கள் அமையப்பெற்று சந்தோஷமான வாழ்வு பெற வேண்டும்.
3 . பரிவர்த்தனை யோகம் :
இரண்டு கிரஹங்கள் இடம் மாறி அமையப்பெறுவது பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக விருச்சிக லக்கினத்தில் ஒருவர் பிறந்தார் என்றல் அவருக்கு லக்கினதிபதி செவ்வாய் இரண்டில் அமையப்பெற்று, இரண்டாம் வீட்டிற்கு அதிபதி குரு லக்கினத்தில் அமையப்பெற்று இருப்பது பரிவர்த்தனை யோகம் ஆகும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள், செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை பெற்றவர்களாக திகழ்கிறர்கள். பரிவர்த்தனை அடையப் பெற்ற கிரஹங்களின் திசாபுத்தி வரும்போது யோகத்தின் நற்பலன்கள் கூடுகிறது. ( மறைந்த பிரதமர் இந்திராகாந்தி ஜாதகத்தில் 6 கிரஹங்கள் பரிவர்த்தனைப் பெற்று இருந்தது. ஒரு கிரஹம் கூட ஆட்சியோ (அ) உச்சமோ பெறவில்லை. 6 கிரஹங்கள் பரிவர்த்தனை யோகம் பெற்ற ஒரே காரணத்தால் இவர் உலகப்புகழ் பெற்றர். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...