திங்கள், 30 ஜூலை, 2018

குரு லக்கினத்தில் இருந்தால் மற்றும் குரு லக்கினத்தை பார்த்தால் பலன்கள்


லக்னத்தில் குரு கௌரவமானவர்.  ஆசிரியர். அரசு தொடர்பு இருக்கலாம். லக்னத்தை குரு பார்த்தால் வீடு கோவில் அருகே இருக்கும்.  தந்தைமகன்உறவு நல்ல இருக்கும்.  கலர் மஞ்சள் நிறம். தங்கம்.  பணம் புழங்கும் இடம்.லக்னத்தில் இருக்கும் சந்திரனை குரு பார்வை செய்தால் குரு சந்திர யோகம் உண்டு. அழகானவர். லக்னத்தை குரு நிதானம் இருக்கும்  பிறருக்கு உதவி செய்யும் மனம்இருக்கும். பொது ஜன சேவை செய்பவர்.      அரசியல் தொடர்பு உண்டு.  நேர்மை இருக்கும். லக்னகுரு திக்பலம்உண்டு.  குரு லக்னத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் உடையவர். சாஸ்திரங்கள் கல்வி  ஞானம் சிறப்பாக இருக்கும். திடமான சரீரம் இருக்கும். வாய்வு தேகம்.
வாக்கு வன்மை மிக்கவர்கள்.வாதம் புரிவதில் வல்லவர்கள் சாஸ்திரம்
பயிற்சி இருக்கும்
இனிப்பான பானங்கள் விரும்புவார்கள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் பொன் சேரும் மஞ்சள் நிறம் இவர்களுக்கு ராசியாக இருக்கும் புத்தி கூர்மை இருக்கும் விருதுகள் வந்து சேரும் கபம் வயிற்று நோய்
நடுத்தர உயரம் இருக்கும் சாத்வீக குணம் தெய்வ நம்பிக்கை. மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஆசிரியராக இருப்பவர்கள்
கௌரவமான தொழில்கள் வழிநடத்தும் தொழில்கள் வக்கீல் நிர்வாக பொறுப்பு உடைய தொழில்கள் ஜோதிடமும் வரும்
வாயுத்தொல்லை மஞ்சள்காமாலை  எளிதில் தாக்கும்
குரு பார்வை இருந்தால் நல்ல மனைவி களத்திரம் நல்ல குழந்தை நல்ல வாகனம் நல்ல வாழ்க்கை நல்ல கல்வி அமையும்
நல்ல பலமான குருவின் பார்வை இருந்தால் தர்மசிந்தனை இறை உணர்வு உடையவர் மேலும் தர்மங்கள் கோவில் குளம் அனாதை காப்பகங்கள் போன்றவை நற்பணிகள் செய்வார். பரோபகாரியாக இருப்பார்.. நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும்.. களத்திரம் சந்தானம் பாக்கியம் சிறந்திருக்கும். பலசாஸ்திரங்கள்
அறிந்தவர்.அறிவாளி.
பலரும்போற்றும்
நிலையைஉடையவர்.
நல்லவர்.சுகமாகவாழக்
கூடியவர்.குருவின்
அருள்பெற்றவர்.
தீர்க்காயுள்உடையவரே.. .. தனவந்தர், தனக்காரகர், நேர்மை, ஒழுக்கம், அந்தணர் வசிக்கும் இடம், பால்வாடி, நகைக்கடை, குல தெய்வம், மஞ்சள், நீதிபதி, அர்ச்சகர், வங்கி, பணப்புழக்கம் உள்ள இடம்
. குரு,நீச்சமாகி நீச்சபங்கம்ராஜயோகம்,ஆனால் நிறைந்த கல்வி.அந்த ஜாகதர் சொல்வதை( Advice) குறைந்த்து 25 பேர் கேட்பார்கள். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.

எந்த லக்னம் ஆனாலும், நீச்ச குரு மேல்(மகரம்) கோச்சார குரு பயணம் செய்தால்,குடும்பம், அந்தஸ்து பாதிகப்படும்.( குழந்தைகளால்).          நல்ல வழியில் வரக்கூடிய பொன் பொருள் சேர்க்கை க்கு சொந்தக்காரர்
. குரு- சிம்மத்தில் இருந்தால்- ஜாதகரை அவருடைய  பெண் நன்கு கவனித்துக்கொள்வாள்.
இதே ஆண்  குழந்தை இருந்தால் ,அந்த ஆண் மகவால் பிரயோசணம் இல்லை.. நவ கிரகங்களில் முதன்மை பங்கு வகிப்பவராகவும் சுப கிரகமாகவும் குரு பகவானை குறிப்பிடுகிறோம். யோகங்களை கொடுப்பதிலும், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். கெஜகேசரி யோகம், ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடையோகம் உள்ளிட்ட பல யோகங்கள் குரு இருக்கும் இடத்தைப் பொருத்தும் கோள்கள் சேர்க்கை, பார்வை பொருத்தும் அமைகிறது.                                                    நாடாளும் யோகம்
ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்
லக்னாதிபதி யோகம்
ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8ல் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் உண்டாகிறது. இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.
கோடீஸ்வர யோகம்,
கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.
ராஜயோக பலன்
குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம
: கலைத்துறையில் யோகம்
ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, திரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சி
கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.
ஹம்ச யோகம்,
ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
குரு மங்கள யோகம்,
ஒருவரின் குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
திர யோகம்
யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன. ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள். கல்வியில் சாதனை
ஒருவரின் ஜாதகத்தில் குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.

சந்திராதிபதி யோகம்
ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும். நாடியில் 1.சூரியன் குரு புதன் கோடிஸ்வர யோகம்  2.சூரியன் குரு ராகு  அடுத்து 3.சூரியன் குரு சுக்கிரன்  இந்த கிரகங்கள் இனைந்து இருந்தாலும் இந்த மூன்று கிரகங்கள் தொடர்பு வரிசை இருந்தாலும் கோடிஸ்வர யோகம் உண்டாகும். வசுமதி யோகம்
ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.

சண்டாள யோகம்,
ஜாதகத்தில் குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

சகடையோகம்,
சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் எதுவும் ஏற்படாது.


சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே 
க்ருணீ ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும். குருவான பிரஹஸ்பதி. நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.


குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:
நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும். 

குருவின் பலம்:
குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும். 
தெய்வ அனுக்கிரம் உள்ளவன் புண்ணியவான் பெரியோர்களின் ஆசி அன்பு இருக்கும் தான தர்மங்கள் செய்வான்
நெய்தோசை.
: லக்னத்தில் குரு பெரிய வளர்ச்சி இல்லை ஆனால் பாரவை வளர்ச்சி கொடுக்கும்
: எழுத்து  அழகாக இருக்கும்
மதிப்பு தானக தேடி வரும்
கடவுள்  நம்பிக்கை  உண்டு
ஜோதிட புலமை உண்டு
ஆசிரியராக வருவார்
குரு +சனி லக்னம் இவருக்கு அனைத்தும் தேடிவரும்.
இடத்திற்கு ஏற்றார் போல் வளைந்து செயல்படுவார்
லக்னத்தில் குரு மரியாதைமிக்கவர். பணத்தை விட கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஆசிரியராக இருக்க தகுதி உள்ளவர்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை அதிகம் கூறுவர்.
மூளை பலம் மிக்கவர். உடல் உழைப்பு கம்மி.
தெய்வ படம்  கையில்  வைத்திருப்பார்
கடவுள்  அலங்காரம் செய்வது  பிடிக்கும்
சிந்தனை திறம் அதிகம்
சில விசயங்களில் சுயநலம் இருக்கும்
: மனித நேயம்  உண்டு
நீதி வழங்குவார்
தத்துவம்  பேசுவார்கள்
: தேன்  பிடிக்கும்
தொப்பை போடும்
விநாயகர்  வழிபடுவர்
மற்றவர்களுக்கு அழகாக கொடுப்பார் தான் கடைபிடிப்பது கஷ்டம்
தீர்க்க ஆயுள்
திடமான தேகம்
நல்ல குணம்
அமைதியானவர்
தைரியமானவர்
மூக்கு  பெரிதாக அழகாக இருக்கும்
ஞானம் , நற்குணம் , பக்தி , சுகம்
யோகா  ஆசிரியர்
மத பற்று உண்டு
அறிவுரை  தந்தால் பிறர்  ஓடும் அளவு  தருவார்
இப்படியுமா
உருளைக்கிழங்கு .பிடிக்கும்
சக்கரைவள்ளி பிடிக்கும்
ஜீவன்.வேதம்.பக்தி.
ஒழுக்கம்.கோவில்.
வழக்கறிஞர்.நீதிபதி.
உயர்குலம்.ஆசிரியர்.
கெளரவம்.சாந்தகுணம்.
தெற்கு.சதை.தொடை.
பூஜைஅறை.பசு.அமைச்சர்.நிர்வாகி.மூக்கு.
கரும்பு.வாழை.ஜோதிடம்.நீதித்துறை.தட்சிணா
மூர்த்தி.
கிழங்கு  வகை பிடிக்கும்
: மஞ்சள் நிறம் , பெருத்த கண்கள் , புத்தரின்
கல்லீரல் காரகம்
சமாதான பேச்சு உடையவர்
பேங்க்
கஜானா
வேர் கடலை உண்பவர்கள்
காது
மஞ்சள்.புண்ணிய
ஸ்தலங்கள்.கல்வித்துறை.மதபோதகர்கள்.
ஆலயப்பணி.புனிதயாத்திரை.
திருமணக்காரகன்.
புத்திரக்காரகன்.
நல்ல அறிவானகுழந்தை அமையும் தந்தையின் அனுகூலம் கிடைக்கும்
இவர் பார்க்கும் இடம் யோகம்
கொண்டைக்கடலை
: ஜாதகர் கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர்
: இவர்கள் குழந்தைகள், தொட்டை சம்பந்தமான டாக்டர் திருமண புரோக்கர் திருமண தகவல் நிலையம் போன்ற தொழில் தொடர்பு இருக்கும்
: ஆன்மீக நாட்டம் உள்ளவர்
: குரு லக்னத்தில் இருந்தால் ஒழுக்கம்,
பக்தி , நேர்மை சாஸ்த்திரங்கள் மீது நம்பிக்கை பற்று இருக்கும்
: குழந்தைகளின் மேல் அக்கறை உள்ளவர்
: குழந்தைகளும் இவர் பேச்சை கேட்பர்
இவர் பார்வை
திசா புத்தி அந்தரம் ஏதேனும் ஒரு வகையில் ஜோதிட துறையில் நுழைய காரணமானவர்
பருத்த உடல் தொப்பை உண்டு
குரு லக்னத்தில் இருந்தால் இவரது நியாய தர்மம் மற்றவர்க்கு புரிவது கடினம்...
குரு லக்னத்தில் இருந்தால் வேதத்தை மதிப்பவர்கள்.

தனது குருவை உயிரினும் மேலாக மதிப்பவர்கள்.

குரு லக்னத்தில் இவர் அடுத்தவருக்காக செய்யும் செயல்கள் வெற்றி.


நியாயத்திற்காக போராட தயங்கமாட்டார்
ஆலயங்களுக்கு அடிக்கடி செல்வார்.
குரு லக்னத்தை 5ம் பார்வையாக பார்த்தால், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றிருப்பவர்.
கட்டுப்பாடு.பெரியப்பா.
நீதி.நேர்மை.ஆலோசனைவழங்குதல்.
தெய்வநம்பிக்கை.
தர்மசிந்தனை.
மிகபெரியஇடம்.
கோவில்.ட்ரஸ்ட்.
ஆன்மீகம்.பட்டு.பருத்தி.
மதகுரு.அர்ச்சகர்.பூஜாரி
தங்கம்.கல்லீரல்.
பெரியஉடல்.கொழுப்பு
சத்து.வழுக்கைதலை.
பூர்வீகம்.பாரம்பரியம்.
புரோகிதர்.கருவூலம்.
யானை.சட்டம்.கடமை
உணர்வு.பரந்தமனப்
பான்மை.தொந்தி.
ரிசர்வ்வங்கி.முதலீடு
நிறுவனங்கள்.
வைப்புநிதி.பங்கு
மார்க்கெட்.பங்குசந்தை.
ஊக்கத்தொகை.
வடக்குதிசை.விந்து.
நினைவாற்றல்.
அஷ்டமாசித்து.
அரசுசேவை.வெகுமானம்.அரசமரம்.கால்நடை
அமைச்சர்.மந்திரி.
சங்கீதம்.சாஸ்திரஞானம்.ஞானி.தெய்வம்.
கர்ப்பகிரகம்.
தெய்வத்தின்சன்னி
தானம்.பூஜாமுறைகள்.
பிரசாதக்குறைபாடு.
வாழைப்பழம்
கோவில்நிலம்.
தர்மகர்த்தா.ராஜ
கோபுரம்.துவஜஸ்தம்பம்
உற்சவங்கள்.ஸர்வ
ஸாதகர்.பாரிசாரகர்.
தளிகைதயாரிப்பவர்.
ஒழுக்கம் தூய்மையை தான் கடைப்பிடிப்பதுடன் மற்றவருக்கும் கற்பிப்பார்
லக்ன குரு முகத்தில் மரு அல்லது மச்சம்.
தன்னை சுத்தமாக வைத்துக கொள்வார்.
கோயில் திருப்பணி ஈடுபாடு.

அனைவருக்கும் உதவும் குணம்.
லக்னத்தில் குரு இருந்தாலும் அல்லது குரு இருக்கும் இடத்தில் இருந்து 1.5.9. ஆம் பார்வை மூலம் குரு லக்னத்தை பார்த்தாலும் பலன்கள் என்ன இது தான் பாடம் நன்றி
ஜாதகர் பிறந்த பிறகு ஜாதகர் குடும்பம் வளர்ச்சி அடைந்து இருக்கும்  குரு புத்திர காரகன் அதனால் ஜாதகம் பிறந்த பிறகு குடும்பம் வளர்ச்சி இருக்கும்
குரு லக்னத்தில் நல்ல நிலையில் இருக்க ஜாதகரின் பூர்விகம் சிறப்பு
வித்யாபதி.ஆசிரியர்.
பொறுப்பு.வழிநடத்துதல்.
லக்னத்தை குரு 7ம் பார்வையாக பார்த்தால் முக பொலிவு.
9ம் பார்வையாக பார்த்தால் வேதம் பயில்வதில் நாட்டம்.

லக்ன குரு சம்பந்தம் ஜாதகர் ஒரு நல்ல பக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர்.
தன்னை நல்லவர்னு சொன்னவருக்கு எதையும் செய்வார்
அப்போ நான் சொன்ன பலன்கள் சரிதான்
புகழ்ச்சியை விரும்புவார்
வீடு அருகே செடி கொடி மரங்கள் இருக்கும் வழிபாடு மரங்கள் இருக்கும் உதாரணமாக அரச மரம் வேப்பம் மரம் இருக்கும் மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் செடிகள் இருக்கும் அதிகம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு இருப்பார்கள் முகத்தில் வசீகரம் இருக்கும்
அருகில்கோவில்
இருக்கும்.
: வீடு அருகே கோவில் இருக்கும்
சுயநலமற்றவர்
பெரியஇடம்இருக்கும்
.
: லக்ன குரு வீட்டை விடஸவெளிவட்டாரத்தில் நல்ல மரியாதை.

தேவையற்ற கோபம் இவர்களுக்கு மைனஸ் பாயிண்ட்.
மாம்பழம் வாழைப்பழம், பலாச்சுளை பிடிக்கும்
: சிந்திக்கும் தன்மை
ஜாதகர் கௌரவமான நபர் கௌரவம் ஜாதகரை தேடி வரும் ஜாதகர் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் அறிவுரை எப்போதும் சொல்லி கொண்டே இருப்பார்கள் இவர்களின் பார்வை கூட பல சமயங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல்ல பலனை தரும் குரு பகவானின் முழு அம்சங்கள் இவரிடம் இருக்கும் அதனால் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வோம் அதே போல் லக்னத்தில் குரு இருக்கும் ஜாதகரின் பார்வை கூட நல்ல பலனை தரும்
கூட்டுக்குடும்பம்.
மாற்றியோசிக்கும் தன்மைஉண்டு.
இவர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பர்.
தோல்வியைகூட வெற்றி ஆக மாற்றும் திறன். உண்டு
பூர்வீகத்தில் வசிப்பவர், குலதெய்வ அருள் பெற்றவர், தந்தை கௌரவமானவர்,
குலதெய்வம் அருகில் இருக்கலாம்
சந்தான பாக்கியம் கொண்டவர்
: நண்பர்கள் ஆதரவு
உண்டு.உறவினர்கள்
பந்தம்உண்டு.
அரசியல் நண்பர்கள் தொடர்பு இருக்கும் இளம் வயதிலேயே வருமானம் சம்பாதிக்க கூடியவராக இருப்பார் எப்போதும் எதையாவது படித்து கொண்டு இருப்பார்கள் அதுவும் இயற்கை சூழல் நிறைந்த இடங்களில் அமர்ந்து படிப்பார்கள்

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள். 

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில்  புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.                                           குரு...குழந்தைகள்  ஆசிரியர் மதபோதகர் தங்கம் மடாதிபதிகள் புண்யகாரியங்கள் செய்தல்  தர்மகா்த்தா தீர்த்தயாத்திரைகள் நீதிபதிகள் கரு உற்பத்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...